Saturday, December 03, 2011

ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் -ஹை க்ளாஸ் ஃபிகர் ( ஜோக்ஸ்)

رقص سنتي


1. டைரக்டர் சார் , ஹீரோ , ஹீரோயின் எல்லோருமே 16 ஆம் வாய்ப்பாடு ஒப்பிக்கறாங்களே , ஏன்?

இது ஒரு மல்ட்டி லேயர் ஸ்க்ரீன்ப்ளே--ன்னு சொன்னேனே? அதான் மல்ட்டிப்ளிகேஷன் மேட்டர் வருது... 

--------------------------------------

2. சார் , உங்க பட  ஹீரோயினுக்கு ஏன் நடிப்பே வர்லை?

என்னைக்கேட்டா? அதை அவங்க கிட்டே தான் கேட்கணும்..

-------------------------------------------

3. படத்தின் ஆரம்பக்கட்ட காட்சியை காணத்தவறாதீர்கள் -னு விளம்பரம் பண்றீங்களே,, எதுக்கு?

அப்போதானே டைட்டில்ல என் பேரு வருது?

-------------------------------------------

4. படத்துல செகண்ட் ஆஃப் ரொம்ப ஸ்லோவா போகுது சார்..

தியேட்டர் ஆபரேட்டர்கிட்டே சொல்லி இடைவேளைக்குப்பிறகு வேகமா ஓட்ட சொல்லவா?

-----------------------------------------

5. என் படத்துல 3 சூப்பர் ஹிட் பாட்டு இருக்கு.. அதுக்காகவே படம் ஓடிடாது?

லூஸா சார் நீங்க? யூ டியூப்லயே அதை நாங்க பார்த்துக்க மாட்டோமா?

----------------------------------------


Excellent Weekly Shots pictures
سيل

6. டைரக்டர் சார் , உங்க சம்சாரத்துக்கு ஏன் மொட்டை போட்டீங்க?

இல்லையே?

டைட்டில்ல தயாரிப்பு -னு உங்க சம்சாரம் பேருதானே வந்தது?

---------------------------------------------------

7. மேடம் , தமிழ்க்காலாச்சாரத்துக்கு பங்கம் விளைவிக்கற மாதிரி இந்தப்படத்துல நடிச்சிருக்கீங்களே , ஏன்?


அப்டியா? கலாச்சாரம்னா என்ன?

----------------------------------------------------------

8. போராளி பாண்டி-ன்னு தலைவர் பட்டப்பேரு வெச்சுக்கிட்டாரே, ஈழப்போராளியா?

அட நீங்க வேற.. போராளி படத்துல தலைவர் ஒரு சீன்ல வர்றாராம்.. 

----------------------------------------------------------------

9.  சி.பி ஐ இவ்ளவ் கெடுபிடியா இருப்பாங்கன்னு யாரும் எதிர்பார்க்கலை.. 

ஏன்?

டெயிலி ஆஃபீஸ்க்கு 2ஜி பஸ்ல போனவங்களைக்கூட விசாரிக்குதே?

------------------------------------------

10. டாக்டர் .. சீக்கிரம் என்னை டிஸ்சார்ஜ் பண்ணுங்க.. நான் வாயைத்திறந்தா பல பேரு கேஸ்ல மாட்டுவாங்க..

டோண்ட் ஒர்ரி.. ஆபரேஷனுக்குப்பிறகு நீங்க கண்ணையே திறக்க மாட்டீங்க.. 

------------------------------------------

بدون شرح

11.  அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே?

ஓ +VE  ரத்தம் எடுக்கனும், இந்தாங்க ஏ டி எம் கார்டு , போய் எடுத்துட்டு வாங்கங்கறாரே?

-------------------------------------------

12.  டாக்டர்.. எனக்கு நாளம் இல்லா சுரப்பிகள் ஃபெயிலியர் ஆகிடுச்சு..... 

சுத்தம்.. நலம் இல்லா சுரப்பிகளா.. எல்லாமே  ? அவ்வ்வ்

---------------------------------------------------

13.  ஈரோடு ரயில்வே ரிசர்வேஷன் கவுண்ட்டர்ல என்ன கலாட்டா?

லோயர் பர்த் கிடைச்ச பொண்ணு “ நான் ஹை கிளாஸ் ஃபிகர்.. அப்பர் பர்த் -தான் வேணும்” -னு கேட்குதாம்..

--------------------------------------------------

14.  டாக்டர்.. கை முறிஞ்சிடுச்சு-னு மாவுக்கட்டு போட்ட பேஷண்ட்க்கு இப்போ இடுப்பு முறிஞ்சிடுச்சு

அடடா... மாவு கிராக்கி இப்போ சாவு கிராக்கி ஆகிடுச்சா?

-------------------------------------------------------

15. தலைவர் அரிச்சந்திரனோட கொள்ளுப்பேரன் போல.. 

ஏன்?

தனக்குப்பொய்யே பிடிக்காதுங்கறதுனாலதான் டிரைவிங்க் (LIE )லை சென்ஸ் கூட எடுக்கலைன்னு சொல்லி சமாளிக்கறாரே?

-------------------------------------------------


بدون شرح

Friday, December 02, 2011

சசிகலாவின் வளர்ப்பு மகன் நடிகர் கரண் அவர்களே ( ஜோக்ஸ்)



1.  சசிகலாவின் வளர்ப்பு மகன் நடிகர் கரண் அவர்களே!-னு தலைவர் பேசறாரே?

தினகரன் , சுதாகரன் , திவாகரன் ,  பாஸ்கரன் - வரிசையால குழம்பி இருப்பார்..


-----------------------------------------

2. இந்தப்படத்துல  வில்லனுக்கும் செண்டிமெண்ட் சீன் இருக்கு..

எப்படி?

ஹீரோயினை ரேப் பண்ணிட்டு நான் செஞ்சது தப்புன்னா என்னை மன்னிச்சிடுங்கன்னு கதறி அழறாரே?

-------------------------------------------

3.  என் மனைவி  பெட்ரூம்ல குதிரை மாதிரி..

புரியலையே?

யானை படுத்தா குதிரை மட்டம் தானே?

---------------------------------------------

4. ஒன் சைடு லவ் தெரியும்.. அதென்னா ஒன் சைடு சைட்டு?

ஹி ஹி மாப்ளைக்கு ஒரு கண் மட்டும் தான் தெரியும்..

-----------------------------------------------

5.  மாஸ் ஹீரோ தெரியும்.. அதென்னா? மாஸ்க் ஹீரோ?

அவர் முகத்தை காண சகிக்காது.. ஏதாவது மாஸ்க் போட்டுத்தான் நடிப்பாராம்..

-------------------------------------

funny
funny

6.  ஏழு அறை-ன்னு ஒரு படத்துக்கு பூஜை போட்டேன்... என் வீடு வாசல் எல்லாத்தையும் விற்க வேண்டியதா போச்சு...

அடடா... ஏழறையை  ஸ்டார்ட் பண்றதுக்குள்ள ஏழரை ஸ்டார்ட் ஆகிடுச்சா?

--------------------------------------------


7.ஆஃபீசில் ரிசப்ஷனிஸ்ட்டாக ஷோ காட்டும் 48 மார்க் ஃபிகரே, கொஞ்சம் சிரிச்சுத்தொலையேன். ஏன் உம்முன்னே இருக்கே?

-----------------------------------

8. நீங்த ஆபிஸ்க்கெல்லாம் போவிங்களா ?

யோவ், எங்க ஆஃபீஸ்ல 12 ஃபிகர் இருக்கு, போகாம?வேற என்ன வேலை?

------------------------------------


9. மாப்ளை பொண்ணு பார்க்க போறீங்களே, பொண்ணை பற்றி ஒரு முக்கிய மேட்டர்  .. 

ஹி ஹி மேரேஜ் முடிச்சுட்டு அதை கேட்டுக்கறேன் # மாட்னாங்க ஹா ஹா

-------------------------------------




10. மழை வரும் என்று தெரிந்து கொண்டு எங்கள் ஆஃபீசில் இருக்கும்  ஃபிகர்கள் குடையுடன் வந்ததற்கு அகில இந்திய ஜொள்ளர்கள் சங்கம் சார்பாக கண்டனங்கள்

------------------------------------


funny

11. ஆஃபீஸ் டைம் முடிஞ்சிடுச்சு.மழை .. டேமேஜர்ட்ட கார் இருக்கு, ஆனா போக மாட்டார் , பாருங்க எல்லா ஃபிகர்ஸையும் வழியனுப்பிடுதான் போவார் .#நற நற 

--------------------------------


12. பெண்களை விட ஆண்கள் சிறந்த படைப்பாளிகள், ஓவியர்கள் ஆக பரிமளிக்கிறார்கள் என்பது பப்ளிக் டாய்லெட்ஸில் காணக்கிடைக்கிறது # அவதானிப்பு

------------------------------

13. நமது கவுரவம் நாக்கின் நுனியில் , கண்ணியம் விரல் நுனியில் - காதலியுடனான பொழுதுகள்

---------------------------------


14. முள்ளுக்கு பயந்தா ரோஜாவை பறிக்க முடியாது, கடலை போட பம்முனா ஃபிகரை கரெக்ட் பண்ண முடியாது # கேவலமான தத்ஸ் 8975

-------------------------------

15. 95 % பெண்கள் ஆத்திக வாதிகளாகவும் ,  75 % ஆண்கள் நாத்திகவாதிகளாகவும் இருக்கிறார்கள் # பொழப்பத்த ஆராய்ச்சி செய்த பொழுது போகாத பொம்மு

------------------------------------



16. மனைவியின் தங்கை என்பதற்கு கொழுந்தியா என்ற கிளுகிளுப்பான சொல்லை கண்டு பிடித்த தமிழன் வாழ்க!! 

--------------------------------------

17. டேய், எதுக்கு அடங்காதவன் மாதிரி வீட்டுக்குள்ள நடிக்கறே? 

அப்பவாவது என்னை அடக்க ஒரு ஃபிகரை மேரேஜ் பண்ணி வைப்பாங்களா?ன்னு ஒரு நப்பாசைதான்

----------------------------------

18. அனன்யா, ரேவதி, சுஹாசினி இவங்க நடிக்கற படங்கள்ல இவங்களோட நடிப்பை மட்டுமே ரசிக்க முடிகிறது # நெக்ஸ்ட் டோர் கேர்ள் அப்பியரன்ஸ்

--------------------------------

19. மனைவியை டீ போட்டு திட்ட ஆண்களுக்கு கிடைத்த ஒரு சாக்கு, எனவே தான் பாட்டு செம ஹிட்டு #ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி டி

--------------------------------------

20. டேம் 999 படத்தில் தெரியாம நடிச்சுட்டேன்- விமலா ராமன்# ம்க்கும், கண்ல விளக்கெண்ணெய் ஊற்றி பார்த்தாச்சு, எங்களுக்கும் ஒண்ணும் தெரியல. 

--------------------------------------------






டிஸ்கி - மேலே உள்ள குழந்தை படம் ..எனது நண்பர் சாந்த குமார்-ன் வாரிசு. நியூசிலாந்தில் பிறந்த தமிழகத்துப்பூ , பூவின் பெயர் ரேஷ்மி.. ரேஷ்மி என்றால் வெளிச்சம் என்று பொருள்.. பலரது வாழ்வில் ஒளி விளக்காய் வெளிச்சம் கொடுக்கும் அளவு பெரிய ஆளாக வாழ வளர வாழ்த்துகிறேன்.

Thursday, December 01, 2011

போராளி - ஹிட் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRpbiz-544ZRauuqmvEc1mCvHMbNfqb7GojRFnDKzgxEw54PZ9DVRYJ7UzKXx287OPzSk7Y6X9vwj64vjUL_NFqbk_I2MQ0v4F96BTleXQwNqyjL0qQlBkMRKSaRBF9WArEzgw5kXlzA/s1600/02.jpg

எம் சசிகுமார்க்கு சினி ஃபீல்ட்லயும் சரி, தனி மனித வாழ்க்கைலயும் சரி ஒரு நல்ல பேர் இருக்கு.. அது என்னான்னா அவர் நட்புக்கு முக்கியத்துவமும் மரியாதையும் தருவார், இயக்குநர் சமுத்திரக்கனியோட  அவர் கை கோர்த்த சுப்ரமணியபுரம், நாடோடிகள் படங்கள் நட்பை பேஸ் பண்ணுன படங்கள் தான் .இந்தப்படத்துலயும் அதே கருத்துதான், சொந்த பந்தங்களை நம்பாதே, நட்பு தான் கை கொடுக்கும்ங்கறது தான் ஒன் லைன்.. அது எந்த அளவு ஒர்க் அவுட் ஆகி இருக்குன்னு பார்க்கலாம்..

சசிகுமாரும், அல்லாரி நரேஷும் ஒரு அபார்ட்மெண்ட்ல புதுசா குடி வர்றாங்க.. அங்கே குடி இருக்கற எல்லாருக்கும் உதவி செய்யறார் சசி... ஹவுஸ் ஓனரே தன் பெண்ணை கல்யாணம் கட்டிக்குடுக்கற அளவு  க்ளோஸ் ஆகி நல்ல பேர் எடுக்கறார்..அந்த சமயத்துலதான் இவங்க 2 பேரும் பைத்தியங்கன்னு ஒரு குரூப் வந்து சொல்லுது.. 

இப்போ இடைவேளை.. அதுக்குப்பிறகு ஃபிளாஸ்பேக்.. அவங்க 2 பேரும் ஏன் அப்படி ஆனாங்க?கிராமம் , சொந்த பந்தம் , உறவு ,அடிதடி வெட்டு குத்து , துரத்தல் எல்லாம் முடிஞ்ச பின் சுபம்.. உஷ்  அப்பா மூச்சு வாங்குது.. படம் பார்த்த நமக்கே இப்படி மூச்சு வாங்குதே படம் பூரா ஓடிட்டே இருந்த ஆட்களுக்கு எம்புட்டு மூச்சு வாங்கி இருக்கும்?

சமுத்திரக்கனிக்கு ஒரு வார்த்தை முதல்ல உங்க பேட்டர்ன் மாத்துங்க.. ஒரே மாதிரி கதை, ஒரே யூனிட் ஆட்கள் ,சேசிங்க் எல்லாம் எங்களுக்கு மனப்பாடம் ஆகிடுச்சு..

http://www.metromatinee.com/gallery/a3827/large/Nivedita25688.jpg

சசிகுமார் நடிப்பில் நல்ல முன்னேற்றம்.. பொண்ணுங்களை சரியா கண்டுக்காம இருந்தவர் இந்தப்படத்துல கொஞ்சம் கண்டுக்கறார்..அவர் ரெட்டைக்குதிரையில் ஸ்லோமோஷனில் எம் ஜி ஆர் கணக்காய் வருவதெல்லாம் ஓவர்.. ஃபிளாஸ்பேக் கதையில் கொஞ்சம் மனதை தொடும் கதை இருந்தாலும் இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்.. 

சமுத்திரக்கனிக்கு கிராமத்து மணிரத்னம் ஆகலாம்னு ஒரு முடிவோட தான் கிளம்பி இருக்கார் போல.. பாதி படம் இருட்டு தான்.. எனக்கென்ன டவுட்னா நார்மல் வெளிச்சத்துல இயல்பான கிராமத்தை காட்னா யாராவது ஊரை விட்டு ஒதுக்கி வெச்சுடுவாங்களா?

ஸ்வாதி சொல்லவே வேணாம்.. செம ஃபிகர், அவர் சிரிக்கறப்ப அந்த தெத்துப்பல் அழகுக்கே அம்பது ரூபா சரியாப்போச்சு.. ஆரம்பத்துல அநியாயத்துக்கு முறுக்கிட்டு இருக்கற அவர் ஹீரோ கிட்டே காதல் வந்ததும் என்னமோ ரொம்ப அர்ஜெண்ட்டா செவ்வாய் கிரகத்துக்குப்போற கடைசி பஸ்ஸை பிடிக்கற அவசரம் மாதிரி என் ;லவ்வுக்கு பதில் சொல்லுங்க அப்டிங்கறதெல்லாம் ஓவர்.. பெண்களை குறை சொல்லக்கூடாதுங்கற உயர்ந்த (!!!!) லட்சியம் வெச்சிருக்கறதால ஸ்வாதி சில சமயம் தேவையே இல்லாம சிடுமூஞ்சியா வர்றது பற்றிய விமர்சனத்தை அவைக்குறிப்பில இருந்து நீக்கிடறேன் ..

நரேஷ் நடிப்பு செம.. கேவலமான கவிதையை ரெடி பண்ணி ரூட் போடறப்பவும் சரி , செகன்ட் ஆஃப்ல மன நிலை பாதிக்கப்பட்டவரா காட்டும்போதும் சரி செம நடிப்பு..  தன் சொந்த தயாரிப்பா இருந்தாலும் சக நடிகருக்கு இந்த அளவு வாய்ப்பு கொடுத்ததற்கு சசிகுமாரை பாராட்டலாம்.. 

50 புரோட்டா சாப்பிட்ட காமெடியனும், கஞ்சா கறுப்பும் அவங்க பங்குக்கு சிரிக்க வைக்கறாங்க.. அப்புறம் நிவேதா , வசுந்த்ரராக்‌ஷாயப் ( பேரே வாய்ல நுழைய மாட்டேங்குது) 2 பேரும் படத்துல பெரும்பாலும் உம்மணாமூஞ்சியாவே வர்றாங்க .நல்ல ஸ்மைலிங்க் ஃபேஸ் இருந்தும் கோபக்கார பொண்ணா , சிடு சிடு கேரக்டரா அவ்ளவ் தூரம் காட்டி இருக்க தேவை இல்லை

பாடல்கள் பாஸ் ரகம்.. நாடோடிகள் படத்துல வர்ற மாதிரியே ஒரு சேசிங்க் பாட்டு இருக்கு ( ஜகடம் ஜெகடம் ஜெக ஜெகஜம் ஜம் சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ)



http://reviews.in.88db.com/images/Swathi/actress-swathi-saree-photos27.JPG

மனம் கவர்ந்த வசனங்கள்

1.  விலங்குகள் சத்தத்தை வெச்சே அவங்க குணத்தை சொல்லிடலாம்.. ஆனா மனுஷன் எப்போ எந்த குணத்துல  இருப்பான், காட்டுவான்னு சொல்லவே முடியாது.. அப்படிப்பட்ட மனுஷங்களோட வாழ்க்கை நடத்தும் எல்லாருமே போராளிங்கதான்..

2. இந்த உலகத்துலயே  லெட்டர் போட்ட அட்ரஸ்க்கே வந்து அவங்க எழுதுன லெட்டரை பிரிச்சுப்படிக்கற ஒரே ஆள் நீங்க தான்

3.  பேச்சிலர்க்கு வீடு தரமாட்டேன்.. எனக்கு ஒரு பொண்ணு இருக்கு...

வீட்டைத்தானே வாடகைக்கு கேட்டோம், பொண்ணையா கேட்டோம்?

( பாக்யா ஜோக்  2008 வலங்கை மான் நூர்தீன்)

4. அவங்களைப்பார்த்தா உருப்படற மாதிரியே தெரியுது.. ஒரு ஒளிவட்டம் தெரியுது..

5. அவங்க யார்னு தெரியுமா?

சாரிங்க, எனக்கு என் சம்சாரம் சாந்தியைத்தவிர வேற யாரையும் தெரியாது..

6.  போடா.. போ போய் வேலையைப்பாரு.. 

ஹலோ, வேலை கிடைச்சா போய் இருக்க மாட்டோமா? வேலை இல்லாததால தானே இப்படி வெட்டியா சுத்திட்டு இருக்கோம்?

7. படிச்சவனுக்கு ஒரு வேலை, படிக்காதவனுக்கு பல வேலை.. 

8. டேய் பார்த்துடா, படிச்சு கிடிச்சு கலெக்டர் ஆகிடப்போறானுங்க

( சேம் டயலாக் இன் அறைஎண் 305 இல் கடவுள் பை த சேம் பர்சன் கஞ்சா கறுப்பு )

9.  கட்ன பொண்டாட்டி மேலயும், பெத்த பொண்ணு மேலயும் நம்பிக்கை இல்லாதவன் தான் பேச்சிலர்க்கு ரூம் தர யோசிப்பான்

(ம்க்கும், நீங்க கிண்டிக்கிட்டு போய்டுவீங்க)


10. பெட்ரோல் பேங்க் இல் - ஃபிகரு - நீ  செட் செஞ்சியா?


நான் எதும் செட் செய்யலை..

நீ ஏதும் கரெக்ட் செஞ்சியா? 

ம்ஹூம், நான் எதும்  கரெக்ட் செய்யலை.

இந்த டபுள் மினிங்க்ல பேசறது எல்லாம் வேணாம்..


http://3.bp.blogspot.com/-jp0QrkQOIBY/TcqjGQfcYlI/AAAAAAAABGA/Cxkns-UVO3Q/s1600/swathi_in+porali.jpg

11.  என் காதல்  கவிதையை கேளு.. நிலவே நிலவே நீ நில்லு.. என் மனசில நீதான் பாறாங்கல்லு.. எப்பவும் போதையா இருக்கற பனைமரக்கள்ளு.

. ( இந்த மாதிரி கவிதை எழுதுனா செட் ஆகற ஃபிகரும் செட் ஆகாது)

12.  எப்பவோ கிடைக்கற  பால்கோவாவை விட இப்போ கிடைக்கற பப்பர்மெண்ட் மிட்டாய் தான் முக்கியம்..

13. ஆமா ரஜினி படமா ரிலீஸ் ஆகுது? டாஸ்மாக்ல எதுக்கு இவ்ளவ் கூட்டம்?

சம்பாதிக்கற பணத்தை எல்லாம் இங்கே தானே கொண்டுவந்து கொட்றாங்க?

( விக்கி தக்காளீ, லேப்டாப் மனோ கவனிக்க)

14. வேடிக்கை மட்டும் பாருங்க.. ஏதாவது உதவி  கேட்டா ஒதுங்கிடுங்க..அப்புறம் என்ன இதுக்கோசரம்டா இங்கிலீஷ் படிச்சீங்க? 

15.  ஹீரோயின் - சிலோன் புரோட்டா வேணும்..

எனக்கு சிலோனே பிடிக்காது

16. சொந்த பந்தம் எல்லாம் சும்மா.. அவங்கவங்க லைஃபை அவங்கவங்க தான் பார்த்துக்கோனும்..


17. உன்னை நானே தூக்கிட்டு போகட்டா.. அப்படி பார்க்காதே. அண்டாவை தூக்கற ஃபீலிங்க்லதான் உன்னை தூக்குவேன்..


இல்ல, என்னை தூக்கற ஃபீலிங்க்லயே தூக்குங்க..


உன்னை தூக்கறதும் அண்டாவை தூக்கறதும் ஒண்ணுதான்

( பருத்திப்பூ போல் லேசாக இருக்கும் ஸ்வாதியை அண்டா என வர்ணித்ததை அகில இந்திய ஜொள்ளர்கள் சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் ஹி ஹி )

 18.  என்னடி.. அங்கே பார்த்துட்டே ஆர்டர் பண்றே?

போய் ஒரு லிட்டர் இண்டியன் ஆயில் கொண்டு வா..


அது எங்க கம்பெனி நேம்..

சரி பெனாயில் கொண்டு வா,,

19.  உன் முகத்துல 3 புள்ளி.. அப்புரம் ஒரு ஆச்சரியக்குறி...

( 2 கண்கள், உதடு புள்ளீயாம், மூக்கு ! வாம் அய்யோ ஹய்யோ)


20. நாம் விரும்பற கிளியை விட நம்மை விரும்பற குரங்கு மேல்..


http://www.bujjigadu.com/wp-content/uploads/2011/11/allari-naresh-porali300.jpg

21.  டேய் நல்லா பாரு அவன் தான் பெருமாள்..

அப்போ நான் ?

அம்மா தாயே பார்ட்டி ( பிச்சைக்காரனாம்)

22.  ஹீரோயின் - நான் இப்படி எல்லாம் யார் கிட்டேயும் இப்படி வழிஞ்சதில்லை


ஹீரோ - அப்போ நாங்க மட்டும் பார்ட் டைமா இதை பண்ணீட்டிருக்கற ஆளா?

23. மாமா, அக்காட்ட ஐ லவ் யூ சொல்லுங்க..

பாப்பா.. உன் வயசுக்கு இதெல்லாம் நீ பேசக்கூடாது..

அப்போ போய் பாட்டியை அனுப்பட்டா?

24. என்னடா பொண்டாட்டி கிட்டே வழிஞ்சிட்டு? எடுக்கற முடிவை முதல் இரவுக்கு முன்னாலயே எடுங்கடா.. அப்போ விழுந்திடுங்க..  ( ஏப்பா, அங்கே போய் சோலியை பார்ப்பாங்களா? ஆராய்ச்சி பண்ணிட்டு இருப்பாங்களா?)


25.  சுகர் இருந்தா நான் சுகர் பேஷண்ட்-னு பெருமையா சொல்லிக்கறோம், ஆனா  மன ரீதியா ஏதாவது பிரச்சனைன்னா அதை வெளீல சொல்ல கூச்சப்படறோம்

26. தான் மட்டுமே நல்லாருந்தா போதும்னு நினைக்கறவங்களூம் இந்த உலகத்துல இருக்காங்க, தன்னை சுத்தி இருக்கறவங்களூம் நல்லாருக்கனும்னு நினைக்கறவங்களூம் இருக்காங்க.

27.  டேய்.. அதிகமா யோசிக்கக்கூடாது டா. அப்புறம் நம்மை மக்குன்னு வாத்தியார் சொல்லிடுவாரு..

இந்த எழவுக்குத்தாண்டா நான் யோசிக்கறதே இல்ல..

28.  நிலாவுல காலை வெச்சது யாரு?

ஆர்ம்ஸ்ட்ட்ராங்க்

அவர் இடது காலைத்தான் வெச்சாரு.. நான் கேட்டது வலது காலை முதல்ல வெச்சது யாரு?

( அண்ணே, இந்த ஜோக்கை நான் பேச நினைப்பதெல்லாம் கற விக்ரமன் படத்துல விவேக் பேசிட்டாருங்கோவ்)

29. நாங்க எல்லாம் அப்பவே அந்த மாதிரி..

எந்த மாதிரி..?

இப்படி தானா வந்து மாட்டிக்கறதுதான்..

30. முன்னே பின்னே தெரியாதவங்க கூட கை கொடுத்து உதவுவான், ஆனா இந்த சொந்தக்காரங்க இருக்காங்களே.. ( செம கிளாப்ஸ் தியேட்டர்ல)



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSGUktj7hQw9K-AMjO89graKrYz2nzVde28lJfIqGw9-0CpC9ZSoFrqxnnaTabJ9R5E61t5Ki8RpXJ_f9v1LrF0o7xwQJ7gt5EJ5CKv3BNGbI3QVM73KC3B5PHXiSOGjIH_3nFsd5Ozw/s1600/swathi-hot6.jpg

31. நீ இன்னும் உயிரோடவா இருக்கே? ஊர்ல  அத்தனை பஸ் லாரி எத்தனை ஓடுது.. அதுல எல்லாம் சாகாம எப்படி எஸ்கேப் ஆனே? ( எஸ் வி சேகரின்  வண்னக்கோலங்கள் நாடகத்துல வந்த ஜோக்)

32.  உலகம் பூரா இருக்கற எல்லா போலீசும்  இதைத்தானே சொல்றீங்க? இன்னார்தான்னு முதல்லயே சொல்லி இருக்கலாமில்ல?ன்னு எங்கேடா சொல்ல விடறீங்க? அடிச்சுட்டுத்தானே ஆரம்பிக்கறீங்க?

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. பின் பாதி க்ளைமக்ஸில் ஹீரோவை காட்ட வேண்டும் என்ற குறுக்கீடோ நிர்ப்பந்தமோ இன்றி சிறு வயசு காட்சிகளை அதிகம் வைத்தது..

2. டி வி நடிகை சாண்ட்ரா சாந்தியாக வந்து படவா கோபியுடன் அலப்பறை செய்யும் காமெடி காட்சிகள் கலக்கல், கூடவே பொய்யல்ல போட்டுக்குடு பார்ட்டியும் அதகளம் பண்றாங்கப்பா..

3. கஞ்சா கறுப்பு காமெடி காட்சிகளை  திரைக்கதையில் சமயம் பார்த்து புகுத்திய விதம் அழகு..

4. சந்தனம் பூசி வந்த சப்பாத்திக்கள்ளியே பாடல் காட்சியில் நடன அமைப்பு அசத்தல்.. சிம்பிள் மூவ்மெண்ட் தான், ஆனால் வெகுவாக ரசிக்க வைத்தது.

5. பெட்ரோல்பங்கில் வரும் ரெகுலர் பிச்சைக்காரனை டெயிலி டீ வாங்கிக்குடுத்து  நண்பன் ஆக்குவது, அவரை குளிக்க வைத்து ஹேர் கட் பண்ணி விட்டு நிட் டிரஸ் போட வைத்து ஆளையே மாற்ற வைப்பது  எல்லாம் செம ( வசூல்ராஜா எம் பி பி எஸ் சீனை நினைவு படுத்தினாலும்..)



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2RuviPfXlbOCkHdA_VmkkpZekRdQcNMgYe2umPpOGHfTgBtE2wnQFOn-gvef5UE5cF9abc20h-DCkytH8BAhKrB3vFrYusPJINel6HX3KpdrIyt2cXbyh6vSuSohV33Wtv2mQvrrk0shJ/s1600/Swathi__37_.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள் ,லாஜிக் மீறல்கள்

1. பெட்ரோல் பங்குக்களில் பெட்ரோல் அடிக்கும் தொழிலாளர்கள் டியூட்டி டைம் 12 மணி நேரம் தான்// ஒரு இடத்தில் 8 மணி நேர வேலை தானே, ஏதாவது பார்ட் டைம் ஜாப் பண்ணலாமே?னு வசனம் வருது.. ( எந்த பிரைவேட் வேலையும் 8 மணி நேரம் கிடையாது)

2.  அதே போல் பெட்ரோல் அடிக்கும் தொழிலாளர்கள் தினமும் இரவு போறப்பதான் எல்லா வசூல் பணத்தையும் கணக்கு பார்த்து செட்டில் செய்வார்கள், இதில் ஹீரோ ஒரு கார்க்கு பெட்ரோல் அடிச்சுட்டு, அந்த பணத்தை இன்னொரு தொழிலாளரிடம் கொடுத்து இதை மேனேஜர்ட்ட கொடுத்துடுங்கறார்.. அவர் என்ன அவருக்கு பி ஏவா?

3.  ஒரு சீனில் ஹீரோ காரில் போறார், அப்போ வழில ஒரு தம்பதி கைல குழந்தையோட வழில நிக்கறாங்க, பைக் ரிப்பேர்.. உடனே ஹீரோ ஹெல்ப் பண்ணி பைக்கை ஸ்டார்ட் பண்ணி தந்துடறார், அப்புறம் அந்த லேடியை கார்ல வரச்சொல்லிட்டு பைக்ல ஹீரோ வர்றார், டிராப் பண்ற இடம் வந்ததும் அந்த ஜோடி விடை பெறும்போது அந்த மனைவி கைல குழந்தை இல்லை அவ்வ்வ் ஹாயா பின்னால உக்காந்துட்டு போறாங்க..அந்த அட்டுக்குழந்தை டர்க்கு டவல் போர்த்தப்பட்டு முன்னால இருக்கற மாதிரி காட்டி இருக்காங்க

4. வன்முறை, அடிதடி , வெட்டுக்குத்து எல்லாம் ஓவர்.. ஒரு கட்டத்துல போர் அடிச்சிடுது... சீக்கிரம் படத்தை முடிங்கப்பா என சொல்ல வைக்குது..



http://www.chitramala.in/photogallery/d/475712-1/Swathi-hot-Pics003.jpg

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 42




எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - எம் சசிகுமாருக்காக,ஸ்வாதிக்காக ஆண்கள் பார்க்கலாம், பெண்கள் பார்க்கறது சிரமம் தான்.. நாடோடிகளை விட, சுப்ரமணியபுரம் விட ஒரு மாற்று கம்மிதான்

ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள் , பி - 30 , சி - 20 நாட்கள் ஓடலாம்..


கேர்ள்-க்கு பேர் போன இடம் கேரளாவா? ( ஜோக்ஸ்)

common.jpg1. 8 வருஷமா  ஒரு  ஃபிகரை  ட்ரை(try) பண்றேன். லவ்க்கு ok சொல்ல  மாட்டேங்கறா!


TRY WIN (ட்ரைவின்) லைசன்ஸ் எடுத்துட்டியா?


-----------------------------------


2. டியர்! என்  மனசு பூரா நீதான் இருக்கே?


பொய்! ஸ்கேன்  ரிப்போர்ட்  பார்த்தேன்! அதுல நான் இல்லையே?

--------------------------------


3.டியர்! பீச்ல  லவ்வர்ஸ் எல்லாரும்  ஃபேஸ் to ஃபேஸ்  பார்த்தபடிதான்  உட்கார்ந்திருப்பாங்க.  நீ  ஏன் முதுகை  காட்டியபடி திரும்பி உட்கார்றே?


நீங்கதான்  என்னோட மறுபக்கத்தை  தெரிஞ்சுக்க ஆசைப்பட்டீங்க?

--------------------------------------


4. ஊர்ல  உங்க பேரு  கெட்டுடுச்சாமே?

இல்லையே! இன்னும்  என் பேரு நல்ல சாமிதான்.

-------------------------------------


5. பக்கத்து வீட்டு பரிமளா கிட்டே என் இதயத்தை  ஷேர் பண்ணிக்கிட்டேன்.

ஓஹோ! பங்கு ‘பரி’மளா வர்த்தனை?

-----------------------------------


dog.jpg

6. கன்னிப் பெண்கள் யார்  கூடவும்  நான்  பேசக்கூடாதுனு என்  சம்சாரம்  சொல்லிட்டா!


ஏன்?

எனக்கு கன்னி  ராசிங்கறதால அவளுக்கு டவுட்.

---------------------------------

7. கன்னிப் பெண்களிடம்  கவனமாக  நடந்து  கொள்க-னு என் ராசிப்பலன்ல  போட்டிருந்தது.


அதுக்காக  ஆஃபீஸ் லேடி ஸ்டாஃப் கிட்ட  நீங்க  கன்னிப் பெண்ணா?-னு விசாரணை பண்றதா?


----------------------------------


8. என் சம்சாரம் புரளி, வதந்திகளை உடனே நம்பிடுவா. என்னை மாதிரி ஜாலி டைப் கிடையாது.

ஓஹோ...  சென்ஸ்  ஆஃப் ஹியூமர் உனக்கு, சென்ஸ்  ஆஃப் ரூமர்  அவங்களுக்கா?


--------------------------------


9.பக்கத்து வீட்டு ஆண்ட்டி அங்கிளை அடிக்கறாங்க போல “ஒய் திஸ் கொலை வெறிடி?” அப்டினு சத்தம் கேட்குது?

லூஸு...  அது  லேட்டஸ்ட்  பாட்டு  ஹிட்லைன்.

--------------------------------


10. டியர். ஒரு பாக்கெட் சுண்டல் வாங்கித்தந்தாலே முத்தம்  குடுக்கற நீ இப்போ திடீர்னு ஐஸ்க்ரீம்  கேட்கறியே?


பஸ் சார்ஜ் ஏறும்போது கிஸ் சார்ஜ் ஏறக்கூடாதா?

-----------------------------------


11. பாய்க்கு பேர்போன  ஊர் பத்தமடை!


ஓஹோ! அப்போ கேர்ள்-க்கு பேர் போன இடம் கேரளாவா?

--------------------------------------


12. கார் ரேஸ்  வீரரான நீங்க ஃபார்முலா ஒன் கார் பந்தயத்துல ஏன் கலந்துக்கலை?


சின்ன வயசுல இருந்தே கணக்கு, ஃபார்முலா இதுல எல்லாம் நான் கலந்துக்கறதில்லைங்க.


------------------------------------

13. டியர். ஏதோ  ஷாக் ட்ரீட்மெண்ட்-னு சொன்னியே! என்ன?


எனக்கு வேற பக்கம் மேரேஜ் ஃபிக்ஸ்டு. இதுதான் ஷாக் ட்ரீட்மெண்ட். நீ ஏதாவது ஹாஸ்பிடல்ல போய் எடுத்துக்கோ.


------------------------------------


14. கோயில்ல யாருமே பாலாபிஷேகம் பண்ண முன் வரமாட்டேங்கறாங்களே?


நம்ம ஊர்ல எல்லாரும் மிடில் கிளாஸ் மக்கள்தானே? ஜமீந்தாரர்களா இருக்காங்க?


-------------------------------------


15. இப்படி மழை அடித்தால் எப்படி நீ குடை பிடிப்பாய்?


லூஸா நீ? எப்படி மழை அடிச்சாலும் வெயில் அடிச்சாலும் இதோ இப்படித்தான் குடை பிடிப்பேன். இது தெரியாதா? இதுக்கு ஒரு டெமோவா?


---------------------------------------

Sachin Tendulkar Rare Picture & Videos
 



16. உங்க பையனை கண்டிச்சு வைங்க சார்!


ஏன்? உங்க பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்தானா?

ம்ஹீம். என் மனைவிக்கு!!!

-------------------------------------------


17. மழலைச் செல்வங்கள் தலைவர் வீட்ல நிறைய இருக்காம்.



அதுக்காக செல்வச்சீமான் வீட்ல ரெயிடுனு நியூஸ் போடனுமா?

---------------------------------------
18. போராளி-போராலீ எது கரெக்ட்?


ஜெட்லீ, புரூஸ்லீ வரிசைப்படி பார்த்தா போராலீதான் கரெக்ட்

---------------------------------------

19.என் படத்துல ‘மல்ட்டி லேயர் ஸ்க்ரீன்ப்ளே’வை அறிமுகப்படுத்தறேன்.


ஓஹோ... ஹீரோயின் புதுமுகமா? ரொம்ப நீளமான பேரா இருக்கே?


-------------------------------------

20.உங்க படத்துக்கு O.S.THE-னு டைட்டில் வெச்சிருக்கீங்களே? இப்படி ஒரு வார்த்தை இங்கிலீஷ்ல இருக்கா?


அடடா! ஒஸ்தி-ங்க அது!

------------------------------------------

funny

Wednesday, November 30, 2011

குளிரடிக்குதடி ஜங்கன மங்கனஜங்க் -ஜோக்ஸ்

1. டியர்! பீச்க்கு வாக்கிங்ல போலாம்னு சொல்றீங்களே! ஏன்?


பைக்குல பெட்ரோல் போடறதுக்கோ, டவுன் பஸ்ல போற அளவுக்கோ வசதி இல்லை.


--------------------------------------


2. லைப்ரரி மாஸ்டர் ஏன் கடுப்பா இருக்கார்?


ஃபேஸ்புக் வேணும்னு கேட்கறாங்களாம்.


----------------------------------


3.என் கணவர் என் பேர்ல இருந்த வீட்டை, என்கிட்டே இருந்த நகைகளை எல்லாம் வித்து குடிச்சு அழிச்சுட்டாரு!


ஓஹோ! வித்தகன் &வித்தவன்-னு சொல்லுங்க.


------------------------------------


4. நீங்க எடுக்கப் போற படத்தோட கதைல ஒன் லைன் சொல்லுங்க.


மொத்தக் கதையே ஒன் லைன் தான்.


----------------------------------

5. குளிர் காலக் கூட்டத் தொடர்ல தலைவர் என்ன பேசுனாரு?


அவர் எங்கே பேசுனாரு? அடிக்குது குளிரு... குளிரடிக்குதடி ஜங்கன மங்கன ஜங்க் -னு பாட்டுதான் பாடுனாரு.


-----------------------------------



6. மாப்ளைக்கு சொந்த ஊரு மூலனூர்தான். அதுக்காக அவருக்கு மூலம் இருக்குமோ?-னு கேட்கறது நல்லாலை!

---------------------------------


7. ஷார்ட் சர்க்யூட் -பெண்ணின் பொறாமை இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.


என்னது?

வயர் (WIRE) வயிறு எரியுறது.

-------------------------------


8. வயசுக்கு வந்த அழகான ராசா ஒரு சினிமா நடிகர். அவர் யாரு?


மேஜர் சுந்தர்ராஜன்.

--------------------------------

9.காலேஜ் ஸ்டூடண்ட்: ஐ லவ் யூ.


ஃபிகரு: நான் போய் நீ சொன்னதை அப்டியே பிரின்ஸ்பால் கிட்டே சொல்றேன்.

காலேஜ் ஸ்டூடண்ட்: ஏய்... லூஸு  அவருக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகிடுச்சு.


-----------------------------------------


10. ஸாரி டைரக்டர் சார்! ஆடு மேய்க்கற கேரக்டர்ல நடிச்சா என் இமேஜ் போயிடும்!


ஓகே! மாடு மேய்க்கற கேரக்டர் okவா?


------------------------------------------



11. மழலைகள் சந்தோஷ சுரங்கத்தில் இருந்து பெறப்பட்ட வைரங்கள்! அவர்களை தீட்டுங்கள்! திட்டாதீர்கள்!


----------------------------------------


12. டாஸ்மாக் பாரில் பிசியாக இருக்கும் குடிமகன்கள் செல்ஃபோன் ஒலிக்கும்போது அது ஆண்டவனின் அர்ஜெண்ட் கால் என்றாலும் அட்டெண்ட் செய்வதில்லை
-அவதானிப்பு. @ டெடிகேட்டட் டூ விக்கி தக்காளி

--------------------------------------



13. குட்டி தேவதையை ஆட்டோ நெரிசலில் திக்கு முக்காட வைக்கலாமா?
பெற்றோர்களே! உங்கள் மழலைகளை பள்ளிக்கு நீங்களே அழைத்துச் செல்லுங்கள்!

--------------------------------------


14. ஒவ்வொரு பிரச்சனையும் திறக்கமுடியாத ராட்சசக் கதவாய் பிரம்மாண்டமாய் நம் முன் நிற்கிறது. அதற்கான தீர்வாய் ஒரு சாவி நிச்சயம் இருக்கும்.


---------------------------------------


15. இதயம் கொடுத்து உயிரைக் கேட்கும் காதல் உன்னுது! உயிரைக் கொடுத்து இதயம் கேட்கும் அன்பு என்னுது.


--------------------------------



16. கவலை நாளைய பிரச்சனையை தீர்க்கப் போவதில்லை, ஆனால் அது இன்றைய சந்தோஷத்தை அழித்துவிடும்.


----------------------------------


17. எந்த சந்தோஷமும் படாமல் நீ முழுக்க முழுக்க ஒரு நபரை நம்பினால் அவர் வாழ்க்கை முழுக்க நல்ல நண்பராகவும் அமையலாம்! உங்களுக்கே ஒரு படிப்பினையை தருபவராகவும் மாறலாம்.


-------------------------------------


18. பையன் சரக்கடிச்சுட்டு லேட்டா வீட்டுக்கு வர்றான். அப்பா அடிச்சுட்டா என்ன பண்றதுனு அவன் சத்தம் போடாம லேப்டாப் ஓப்பன் பண்ணி ஒர்க் பண்ற மாதிரி நடிக்கறான். அப்போ அப்பா வந்து,

“டேய்! குடிச்சிருக்கியா?”

“நோ டாடி”

“அப்புறம் ஏன் என் சூட்கேஸை திறந்து வெச்சிருக்கே?”

லேப் டாப் மனோவின் சுய சரிதை

------------------------------------


19. காதல் என்பது இரு உள்ளங்கள் பேசும் மொழி! நட்பு என்பது உள்ளங்கள் இருக்கும் அனைவரும் பேசும் மொழி.

--------------------------------------

20. ஒரு யானை ஒரு கிணறை எட்டிப் பார்த்தது. அப்போ ஒரு எறும்பு யானையை கடிச்சிடுது. ஏன்?


ஏன்னா அந்த கிணத்துல எறும்போட ஃபிகர் எறும்பு குளிக்குதாம்.


---------------------------------------


டிஸ்கி - கடைசி படத்துக்கான விளக்கம்.. நாம் வெளில போறப்ப ஆஃபீஸ்க்கு போற மாதிரி இருந்தா அதுக்கு ஏற்ற மாதிரி ஒரு முகத்தையும், ஃபிரண்ட்ஸ் வீட்டுக்கோ, கெஸ்ட் வீட்டுக்கோ போறப்ப ஒரு முகத்தையும் , கில்மா ஃபிகரை பார்க்கப்போறப்ப ஒரு முகத்தையும் ரெடி பண்ணிட்டு போறோம் , அதை சிம்பாலிக்கா, தனுஷாலிக்கா இந்த படம் சொல்லுது..