Friday, August 26, 2011

யுவன் யுவதி - அள்ளும் ஒளிப்பதிவு + துள்ளும் இளமை - சினிமா விமர்சனம்

http://www.ariviththal.net/events/uploads/4811.jpg

காதல் மட்டும் இல்லைன்னா இந்த உலகமே இல்லைங்கறாங்க.. அது உண்மையோ இல்லையோ தமிழ் சினிமா ஃபீல்டே இல்லைன்னு வேணா தாராளமா சொல்லலாம்.100க்கு 96 படங்கள் லவ் சப்ஜெக்ட்ஸ் தானே வருது.. கதா விலாசம் எஸ் . ராமகிருஷ்ணன் சாரோட கதை வசனம்  என்பதாலும் ஹீரோயின்  ரீமா கல்லிங்கல் ( கேரளா ஃபிகரு) 70 மார்க் வாங்கற அளவு கும்முன்னு இருப்பதாலும் ஒரு எதிர்பார்ப்போட (!!!) போனேன்.. 

ஃபாரீன் போக ஆசைப்படும் உசிலம்பட்டி ஹீரோ, அதே ஃபாரீனுக்கு மேரேஜ்க்காக போற ஹீரோயின் இவங்க 2 பேரும் விசா ஆஃபீஸ்ல மீட் பண்றாங்க.. பல குழப்படிகளுக்கு நடுவே  இவங்க 2 பேருக்கும் நடுவே
( அல்லது ஓரமா) எப்படி காதல் மலருது? அது எப்படி நிறைவேறுது என்பது தான் கதை.. 

படத்தோட முதல் பாதி  ராமகிருஷ்ணன் எழுதுன திரைக்கதைப்படி படம் சர சர  ஸ்பீடோட போகுது.. அதுக்குப்பிறகு  காம்ப்ரமைஸ் எனும் இயக்குநரின் தலையீட்டால் திரைக்கதை நொண்டி அடிக்குது.. கதை வசனம் என ராமகிருஷ்ணன் சார் பேர் இருந்தாலும் இடைவேளை வரை அவர் திரைக்கதை என்பது அவர் நாவல், கட்டுரை படிக்கறவங்களுக்கு ஈசியா புரிஞ்சிடும்.. இடைவேளைக்குப்பிறகு இயக்குநர் கை வசம் திரைக்கதை போனதால டல்லடிக்குது..

 http://manju_v.tripod.com/images/rima-kallingal-15.jpg

ஹீரோ பரத் கேவலமான ஹேர் ஸ்டைல்ல வர்றது சகிக்கல.  மாடர்ன் யூத்தாம். டான்ஸ் காட்சிகள்ல அண்ணன் பரத் இ. த விஜய் மாதிரி ஸ்டைல் காட்ட ஆசைப்படறாரு..  எடுபடலை.. ஹீரோயின் கூட பேசும்போது பரத்தோட பாடி லேங்குவேஜ்ல பயங்கர செயற்கை.. ஓவர் அலட்டல்.. இடைவேளைக்குப்பிறகு கொஞ்சம் மெச்சூரிட்டியா நடிச்சிருக்காரு.. 

ஹீரோயின் ரீமா கல்லிங்கல் நல்ல ஃபேஸ்கட், நல்ல லோ கட்  ஹி ஹி படத்துல வர்ற மொத்த சீன்ல 6 சீன் தவிர எல்லா சீன்லயும் பாப்பா ஸ்லீவ்லெஸ், டைட் பனியன்,துக்ளியூண்டு ஷார்ட்ஸ் போட்டுதான் வர்றார்,, அவரோட தாராளமயமாக்கல் கொள்கைக்கு ஒரு சபாஷ்..  நடிப்புன்னு பார்த்தா பாப்பாவுக்கு பாஸ் மார்க் தான்.. அவரோட ஹேர் ஸ்டைல் ஓக்கே.. 

சந்தானம் காமெடி கொஞ்சம் கம்மி தான்.. காமெடி ஸ்கிரிப்ட் அவர் இல்ல..அதனாலயோ என்னவோ அவர் ஸ்கிரிப்ட்ல இருக்கற டயலாக் மட்டும் பேசிட்டு அவர் வேலை முடிஞ்சதுன்னு போட்டாரு.. 

சம்பத்குமார் ஹீரோவுக்கு அப்பா.. நீட்டான ரோல்.. இடைவேளைக்குப்பிறகு ஏகப்பட்ட கேரக்டர்ஸ்..


http://www.cinespot.net/gallery/d/619006-1/Reema+kallingal+photos+_5__003.JPG
மனதில் நின்ற வசனங்கள்

1. இப்போ நாம் எல்லாம் எங்கே போறோம்?

அது வண்டி ஓட்டற டிரைவருக்கே தெரியாது. அப்பா தான் கடைசி வரை எதையும் சொல்றதே இல்லையே? லெஃப்ட் போ, ரைட் போன்னு உயிரை வாங்குவாரு.. 

2. சந்தானம் - நீ கொடுத்து வெச்சவண்டா. உங்கப்பா உனக்காக என்னவெல்லாம் செய்யறார்.. எங்கப்பன் நான் மூணாங்கிளாஸ் படிக்கறப்ப என் வெள்ளி அர்ணாக்கயிரை  அத்துக்கிட்டு ஓடிட்டான்.. 

3. சந்தானம் - என்னது உசிலம்பட்டிக்காரன்னா கேவலமா? டேய்.. சச்சின் டெண்டுல்கரே கேரளா போனாலும் அவரை யாரும் கொச்சின் டெண்டுல்கரேன்னு கூப்பிட மாட்டாங்க.. சச்சின் டெண்டுல்கரேனு தான் கூப்பிடுவாங்க..

4. உன் ஃபிரண்ட் ஒரு மாதிரின்னு சொன்னே! இது மாதிரின்னு சொல்லவே இல்லை?. 

5. என் ஃபிரண்டுக்கு ஒரு பிராப்ளம்.. 

சத்யன் -என்ன? அவ பிரெக்னெண்ட்டா இருக்காளா? நீங்களா பிரெக்னெண்ட் ஆக வேண்டியது.. அப்புறம் பசங்க மேல பழியை போட வேண்டியது.. 

6. சத்யன் -  இந்த மாதிரி பேடு வோர்ட்ஸ் யூஸ் பண்றதால தான் எனக்கு கேர்ள்ஸே பிடிக்க மாட்டேங்குது, ஒன்லி ஐ லைக் பாய்ஸ்.. ( ஓ அவனா நீ!!) வாங்கடி போலாம்.. 

7.  ஆட்டோ! ஏன் கூப்பிட்ட இடத்துல நிறுத்தலே?

மயில்சாமி - கூப்பிட்ட இடத்துல நிறுத்துனா அவன் டிரைவர், கொஞ்சம் தள்ளி நிறுத்துனா  அவன் ஆட்டோ ஓனர்.. 

8. அவன் ஏன் அங்கே போறான்?

சந்தானம் -அங்கே தான் அக்கவுண்ட் இருக்கோ என்னவோ?

மயில்சாமி - மரியாதை ப்ளீஸ்.. 

சந்தானம் -அந்த லூஸூங்க ஏன்ங்க அங்கே போவுதுங்க?

9. மயில்சாமி -  டேய்.. எதுக்குடா என்னை தண்ணி ஊத்தி ஊத்தி அடிக்கறீங்க?

சந்தானம் -சோடா ஊத்தி ஊத்தி அடிக்க நீ என்ன ஃபாரீனராடா?

10. சந்தானம் - என்னதான் கருவாட்டை மினரல் வாட்டர் ல வாஸ் பண்ணினாலும் குழம்பு வைக்கறப்ப அதனோட வாசம் காட்டிக்குடுத்துடும்டா..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwvxM1C32XaN3uOuM0CK_TRuSd80sp2JCfhvBPjVT65_go2dlezFnQcVroxe49Mt-gr9PTmSDYEh6nPEDr1464dxzhL-tRLdBaA931hcRMvOXis5CIukhOAUZJK2RUPJnWraEiJwgsDd7f/s1600/cute_sexy_reema_kallingal01.jpg

11. அழகான பொண்ணுக்கு திமிர் ஜாஸ்தின்னு கேள்விப்பட்டேன், அது உண்மைங்களா?

12. நிறைய பேசற பொண்ணுங்க பசங்களை ரொம்ப அலைய விடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்...

13. டியர்.. சிவப்பாவோ , கறுப்பாவோ இல்லாம பிரவுன் கலர்ல இருக்கற உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு..

ம்.. அதுக்கு காரணம் எங்கம்மா கேரளா... அப்பா குஜராத்..

14. உங்க ஃபோன் நெம்பர் ஏதோ சொன்னீங்களே... 984.......?

நான் சொல்லவே இல்லையே?

சரி.. இப்போ சொல்லுங்க..

15. சந்தானம் - டேய்.. வாய்ல பிராந்தி ஊத்திட்டி இருந்தவனை வலுவனா கூடிட்டு வந்து கைக்கு மெஹந்தி போட வெச்சுட்டியே ஏண்டா?

16.  சந்தானம் -மேடம்.. நீங்க அவரை கூட்டிட்டு ஒரு ரவுண்ட் போய்ட்டு வாங்க, அதுக்குள்ள நான் இங்கே ஒரு ரவுண்ட் முடிச்சுடறேன்..

17.  டேய்.. என்னடா தட்டிட்டு இருக்கே? நல்லா பாரு,.,. லேப் டாப் ஆஃப்ல இருக்கு.. 

18.சந்தானம்  -  டேய்.. போற வழில என்னை துபாய்ல இறக்கி விட்டுட்டு போயிடு.. நான் அங்கே ஒட்டகம் மேய்ச்சாவது பொழப்பை ஓட்டிக்கறேன்..

19. எப்பவும் ஒர் சூப்பர் ஃபிகர் பக்கத்துல 2 அட்டு ஃபிகர்ங்க பக்கத்துலயே இருந்து  அவளை குழப்பி விடறதுக்குன்னே இருப்பாளுங்க..- சந்தானம்

20.  சாயங்காலம் அவ என்னை பார்க்க வர்றதா சொல்லி இருக்கா..  சாயங்காலம் எப்போடா வரும்?

 சந்தானம் - மத்தியானத்துக்கு அப்புறம்..

மத்தியானம் எப்போடா வரும்?

சந்தானம்  -டேய்.. இதாண்டா மத்தியானம்..

 http://www.imgoo.in/pics/apr-11/rima-kallingal-hot-pic-745.jpg

21.  அவளைப்பற்றி தெரியாம லவ் பண்றேன்னு சொல்லலாமா?

சந்தானம் -மத்தவங்க மட்டும் அவ பயோ டேட்டா வாங்கிட்டா லவ் பண்றாங்க?

22.  காதலிக்கற மேட்டரை எவண்டா தைரியமா அப்பா கிட்டே சொல்லி இருக்கான்?

23. சந்தானம்  - தொண்டை கட்டி மாமா , எனக்கு ஃபர்ஸ்ட் ந்நைட் எப்போடா நடக்கும்?

24. பொண்ணுங்களுக்கு ஹெல்ப் பண்ணுனா மிஞ்சறது பிரச்சனைகள் தான்..


25. சந்தானம்  - ஊர்ல அவன் அப்பன் எனக்கு வெச்ச ஆப்பே ஓவர்.. இவன் வேற ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வெச்சு படுத்தறான்..

26.  சந்தானம் -எனக்கு ஒரு டவுட்டுடா.. இந்த ஃபிகருங்க இப்படி அரையும் குறையுமா பீச்ல நடமாடுதே.. இவளுங்க எல்லாம் தீபாவளீக்காவது முழு டிரஸ் போடுவாளுங்களா?

27.  சந்தானம்   - எனக்கு மேரேஜ் ஆகி என்னடா பிரயோஜனம்? இன்னும் ஃபர்ஸ்ட்நைட் நடக்கலை.. என் சம்சாரம் வேற ஊர்ல தனியா இருப்பா..

ஏன் பயப்படறே.. அதான் துணைக்கு உன் அப்பா கூட இருக்காரில்லை?

சந்தானம் -அடப்பாவி.. அங்கே என்ன சிந்து சமவெளி நாகரீகமா நடக்கப்போகுது..?

28. சந்தானம் - இந்த  பொண்ணுங்க இருக்காளூகளே.. அவளுக பின்னே யாரும் அலையத வரை பிஞ்சு போன பேக்கும், காஞ்சு போன டிரஸ்ஸும் போட்டுட்டு அலைவாளூங்க.. நமக்குப்பின்னே ஒரு பையன் சுத்தறான்னு தெரிஞ்ச பின்னால பாருங்க..

29. சந்தானம் -  டேய்.. அடுத்தவன் சோகத்துல ஏண்டா சோறாக்குறீங்க?

30.  சந்தானம்  - ஃபோன்ல என்ன மேட்டரு?

பசு மாடு மாசமா இருக்காம்..


சந்தானம்   - ம் அவங்கம்மா வீட்டுக்கு அனுப்ப சொல்லு..

http://kerala-zone.com/entertainment/actress/current/rima-kallingal/rima-kallingal-101.jpg

31. மாமா, இன்னைக்கு சண்டே.. டி வி ல புரோக்ராம் பார்க்காம எல்லாரும் போர் அடிக்குதுன்னாங்க. அதான் நான் சொன்னேன், என் மாமா இப்போ பேசுவார்.. கேட்கலாம்னு..

சந்தானம்  - அடிப்பாவி.. ஸ்பீக்கர் ஃபோன் போட்டு கேட்க இதென்னா மீட்டிங்கா? புருஷன் பொண்டாட்டி பர்சனலா பேசறதை கூட ...... ஒட்டுக்கேட்கனுமா?

32.  யோவ்.. உன்னை இங்கே கூட்டிட்டு வந்ததே எனக்கு நீ கார் ஓட்டத்தான். அதனால அடக்கி வாசி..

33. படிச்ச பசங்க தான் அம்மா, அப்பா வேணாம், சொந்த பந்தம் வேணாம்னு போயிடறாங்க,படிக்காத பசங்க தான் அம்மா ,அப்பா கூட கடைசி வரை இருக்காங்க..

34.  சார்.. நீங்க  பேசறது ஒண்ணும் புரியல.. கிணத்துக்குள்ளே இருந்து பேசறது மாதிரி இருக்கு.

அய்யோ, இன்ஸ்பெக்டர்,.ல் நிஜமாவே நான் கிணத்துக்குள்ளே இருந்து தான் பேசறேன்.. காப்பாத்துங்க.

http://www.lankafocus.com/cinema/wp-content/uploads/2010/09/Rima-Kallingal4.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  முதல் ஷொட்டு சந்தானத்தை புக் செய்தது, திரைக்கதையின் பின்பாதி லாஜிக் ஓட்டைகளை அவர் சர்வ சாதாரணமாக மறக்க வைக்கிறார்..

2.  ஒரே ஒரு சீன் வந்தாலும் சத்யனின் திருநங்கை காமெடி நடிப்பு கலக்கல்.. 

3. டைட்டில் டிசைன் பக்கா.

4. படத்தின் ஒளிப்பதிவும் , பின்பாதியில் வரும்  சீசெல்ஸ் தீவின் லொக்கேசன் செலக்‌ஷனும் செம..

5. ஓப்பனிங்க் ஷாட்ல சேசிங்க் பரபரப்பு தரும்போதே குளியல் கிளு கிளுப்பு..

அதே போல் ஹீரோயினை முடிஞ்சவரை யூஸ் பண்ணியது..

6. விஜய் ஆன்டனி இசையில் ஓ மை ஏஞ்சல், மயக்க ஊசி, உன்னை மறக்காமல் இருப்பதால் இறக்காமல் இருக்கிறேன், உன் கண்களைப்பார்த்த பிறகு,  என ரசிக்க வைக்கும் பாடல்கள்..


http://www.nakkheeran.in/AllImages/Gallerys/13188_1.jpg
யக்குநரிடம் சில கேள்விகள்

1.  ஃபாரீன்ல ஹீரோயினுக்கு கல்யாணம் 10ந்தேதின்னா கரெக்ட்டா 10ந் தேதியே ஃபிளைட் ஏறுவாங்களா? யாராவது?  அந்த ஃபிளைட் மிஸ் ஆச்சுன்னா ஃபோன் பண்ணி சொல்ல முடியாதா? மேரேஜ் நின்னுடுமா?

2. செகண்ட் ஆஃப்ல ஹீரோவோட ஃபிரண்ட் போட்ல இருந்து கடல் தண்ணில விழறாரு.. நடுக்கடல்.. எப்படி அவருக்கு நெற்றில காயம் ஆகும்?தரைல விழுந்தாத்தானே காயம் ஆகும்?

3. ஹீரோ, ஹீரோயின் 2 பேருக்குமே அமெரிக்கா போகறதுதான் லட்சியம்.. ஆனா சொல்லி வெச்ச மாதிரி 2 பெருமே சீசெல்ஸ் தீவுக்கு போறாங்களே? அது எப்படி?

4.  ஹீரோயின் நிச்சயிக்கப்பட்ட அமெரிக்கா மாப்ளை கூட ஃபெஸ்புக்ல மெயில்ல கடலை போட்டதாவும் , ஃபோன்ல காதல் வளர்த்ததாவும் சொல்றாங்க..  அப்புறம் பரத்தை லவ் பண்ணுனதும் எப்படி அந்த மாப்ளையை கழட்டி விடறாங்க?

5. ஹீரோவுக்கு அவர் கிராமத்துல அவரோட அப்பா ஒரு ஜட்ஜோட பொண்ணை நிச்சயம் பண்றாரு.. அந்த பொண்ணை வீட்டுக்கே கூட்டிட்டு வந்து டராரு.. அந்த பொண்ணு 2 மாசமா அங்கே இருக்கே? ஒரு தடவை கூட மாப்ளை கிட்டே பேசாதா? ஹீரோவுக்கு வேற ஒரு லவ் இருக்கறதும் , தன்னை கட்டிக்க இஷ்டம் இல்லைங்கறதும் தெரிஞ்சுக்காம க்ளைமாக்ஸ்ல தான் தெரிஞ்சுக்கனுமா?

6. ஜட்ஜோட பொண்ணு க்ளைமாக்ஸ்ல எனக்கு பிடிச்ச வாழ்க்கை தான் எனக்கு அமையலை, அவராவது அவருக்கு பிடிச்ச பொண்ணை கட்டி வாழட்டும்ன்னு சொல்றாங்க.. அப்போ அவரு ஹீரோவுக்கு வெட்கப்பட்டுக்கிட்டே காஃபி கொடுக்கிறாரே அது எப்படி?

7. ஹீரோயினின் ஃபாரீன் ஃபிரண்ட் தன்னை ஒருத்தன் 3 வருஷமா லவ்வியதாகவும், பின்னாலயே சுத்தியதாகவும், தனக்கு காதலை வெளீப்படுத்த தைரியம் இல்லாததால் சொல்ல முடியலை, அவன் வேற ஒருத்தனை கட்டிக்கிட்டான்னு சொல்றாங்க..  அது எப்படி? 2 பேரும் வெளீப்படுத்தாம இருந்தா தைரியம் வராது ஓக்கே. ஒன் சைடு ஓப்பண்டு. பாப்பா சொல்ல தயக்கம் ஏன்?

http://img1.dinamalar.com/cini/CinevilaGallery/18005277808.jpg

 ஏ செண்ட்டர்ல 30 நாட்கள், பி செண்ட்டர்ல 20 நாட்கள் , சி செண்ட்டர்ல 10 நாட்கள் ஓடலாம்..

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - ஃபோட்டோகிராஃபி + லொக்கேஷன்க்காக+ ஹீரோயினை ரசிக்கறதுக்காக யூத்துங்க பார்க்கலாம்

வெங்காயம் பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சி.பி க்கு கொடுத்த பல்புகள்!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வெங்காயம் பட விமர்சனத்திற்கு அதன் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பதில் அனுப்பி உள்ளார். அவருக்கு என் நன்றிகள்.... பட விமர்சனம் படிக்க 

வெங்காயம் - நித்யானந்தா வகையறாக்களுக்கு ஆப்பு - சினிமா விமர்சனம்


 http://www.vanakkamnet.com/wp-content/uploads/2011/08/rajkumar-140x140.jpg
வணக்கம் நான் சங்ககிரி ராச்குமார்,நல்ல விமர்சனத்திற்க்கு நன்றி.

பல்பு கம்பனி ஓனர் நண்பர் சிபிக்கு என் பதில்கள்

பல்பு:

1க்கு  முடிந்த அளவுக்கு ப்ளாஸ்பேக் காட்சிகளுக்கு கொசுவத்தி சுருளையே பயன்படுத்தி இருக்கேன்.இன்னும் என்னதான் செய்ய

2:கயிறை அருத்து கிட்டு நேத்தே ஓடிட்டான் இன்னிக்கு நல்லா கட்டுங்க”னு சொல்வாங்க கவனிக்கலயா

3:நம்ம ஊரு வீரப்பன் சத்திரத்து போலீஸ் ஸ்டேசன்ல இருக்கற போலீஸ் எல்லாம் காக்க காக்க சூர்யா மாதிரி வெரப்பா மக்கள பயமுறித்தி கிட்டே தான் இருக்காங்களா நண்பா..போய் பாருங்க நண்பா தமாசா இருப்பாங்க

4: மோப்ப நாய இழுத்து கிட்டே ஓடிகிட்டே இருக்கற போலீச பாத்தே பழகிட்டோம் நண்பா நம்ம ஊரு போலிசுங்க பிரச்சன முடிஞ்ச பிறகு தான வருவாங்க நம்ம ஆளு முன்னாடியே வராரே போதாதா

5:மொரட்டு தாடி வச்சுக்கிட்டு பைப் சிகரெட் வச்சு கிட்டு கண்ண அகல விரிச்சு கட்ட கொரல்ல பேசர கர்சியல் வில்லன் மாதிரியே வேனுமா நண்பா நித்யானந்தா அப்படியா இருக்காரு

6:எல்லா அப்பாவும் சிபி அண்ணான மாதிரி சைக்காலஜி படிக்கலயே .அது உண்மை சம்பவம் நண்பா end title ல விளக்கமா போட்டிருக்கோம் பாருங்க

7:10 அடி தூரத்துல இருக்குற எதோ ஒரு ஆஸ்பத்திரியா இல்ல பல கிலோ மீட்டர் தூரம் இருக்கற ஜி.ஹெச்சானு சிபி அண்ணன் முடிவு பண்ண முடியாது அந்த கூத்தாடி மனனிலைல இருந்து பாருங்க ..புரியும்

8 வது பல்பு நீங்க தர வேண்டாம் அண்ணா அது ஏற்கன்வே என் கிட்ட இருக்கு அது நான் பன்னின தப்பு தான்.ஒரு சில பெண்கள் அந்த காட்சில தியேட்டர விட்டு ஓடிட்டாங்க அதனால கட் பண்ணிட்டேன்.வேனும்னா என் தங்கச்சி ய கூட்டிட்டு போய் பாருங்க அப்போ புரியும்.


சி.பி யின் பதில் - பொதுவாக ஒரு படைப்பாளிக்கு தன் படைப்பு பற்றிய விமர்சனத்தில் கோபம் அதிகம் வரும். ஆனால் பொறுமையாக பதில் அளித்த நண்பருக்கு நன்றி. துக்ளக் இதழில் முதலில் எல்லாம் பட விமர்சனம் போட்டு இயக்குநருக்கு ஒரு கேள்வி என கேட்பார்கள், அதற்கு சம்பந்தப்பட்ட இயக்குநர்கள் பதில் அளிப்பார்கள்.. நாளடைவில் சில இயக்குநர்கள் தங்களை கேள்வி கேட்பதை விரும்பாததால் அந்த பகுதி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.. இவர் பதில் கொடுத்திருப்பது நல்லதொரு ஆரம்பம்.. ஆரோக்கியமான விஷயம்!!!

டிஸ்கி - இயக்குநர் என்னை அண்ணா என அழைத்ததை மட்டும் ஆட்சேபித்து தம்பி என அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ஹி ஹி

Thursday, August 25, 2011

FINAL DESTINATION - 5 - சஸ்பென்ஸ் திரில்லர் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://mutantville.com/blog/wp-content/uploads/2011/08/final-destination-5-2011.jpgமரணபயம் இல்லாத மனிதர்கள் ரொம்ப கம்மி. இறக்கப்போறது முன் கூட்டியே தெரிஞ்சிட்டா அவனோட மனசு என்ன பாடுபடும்?தன் உயிரைக்காப்பாத்த என்ன வெல்லாம் செய்வான்? என்பதுதான் படத்தோட ஒன் லைன்.. சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும் அளவு செம சஸ்பென்ஸோட கதை , திரைக்கதை அமைஞ்சிருக்கறது படத்தோட பிளஸ்..

 ஒரு குரூப் பஸ்ல  ஒரு விழாவுக்கு போறாங்க, ஒரு பாலத்தை கடக்கறப்ப ஹீரோவுக்கு ஒரு உள்ளுணர்வு அல்லது கனவு மாதிரி ,விபத்து ஏற்படற மாதிரியும்  அதுல எல்லாரும் இறப்பது மாதிரியும்.. உடனே அவன் தன்னோட கேர்ள் ஃபிரண்டை கூட்டிட்டு கீழே இறங்கறான், அவன் கூட அவனோட ஃபிரண்ட்சும் இறங்கறாங்க.. என்ன ஆச்சரியம்? அடுத்த நிமிஷமே பாலத்தில் விரிசல் ஏற்பட்டு எல்லாரும் ஸ்பாட் அவுட்.. சாவிலிருந்து தற்காலிகமா தப்பிச்ச  அவங்க எப்படி வரிசையா சாகறாங்க என்பதுதான் பட படக்கும் திரைக்கதை..

எது கிராஃபிக்ஸ், எது நிஜம்னு கண்டு பிடிக்காத அளவு அந்த பால விபத்து 2 வெவ்வேறு சூழல்ல படமாக்கப்பட்டது செம..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVYmDyBDeRqX5RGCqSG2AdV_3WgfunEUSpjhJAWu35M1ZZucpTIv4n7Pss4-SH2Or7uNU06oSOc9MW2ppCwMgRoLLvcCoy2cNbvvDxDpmIjqXcJ-2l99yNWF_7SF0EgbPgNZRHtt2YJCLU/s1600/final-destination-5-3d.jpg

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1.  ஏய்.. செதுக்கி வெச்ச சிலை மாதிரி இருக்காளே!! ஏய், அந்த பர்கரை சாப்பிடாதே.. குண்டாகிடுவே!

2.   உடனே அவ கிட்டே சாரி கேளு.. 

ஏன்? நான் என்ன தப்பு செஞ்சேன்?

நாம தப்பு பண்றமோ இல்லையோ அடிக்கடி லேடீஸ்ட்ட சாரி கேட்கனும்..

3. எந்த விஷயம் போனா திரும்ப வராது? சொல் பார்க்கலாம்?

நேரம்!!!!

4. ஹாய்.. ஸ்வீட்டி.. நான் வெளியூர்ல இருக்கேன், பார்த்துக்கம்மா,, நான் இல்லாதப்ப எவனாவது முழுகி முத்தெடுத்துடப்போறான்.!

5.  என்னது? எனக்கு இவங்க இரங்கல் தீர்மானம் போடறாங்க..? டேய்.. நான் நல்லாத்தான் இருக்கேன்..

சத்தம் போட்டு சொல்லாதே.. பேய்னு நினைச்சுக்கப்போறாங்க..

http://images.wikia.com/finaldestination/images/0/0f/Final-destination-5-movie-photo-01-550x365.jpg

6.  டியர், நான் கூட இருந்தா உன் லட்சியம் செத்துடும்.. எனக்கு உன்னை விட நம்ம காதலை விட உன் லட்சியம் தான் பெரிசு..

7.  ஆஹா. ஃபோட்டோலயே கலக்கறாளே? கடிச்சுத்தின்னுடலாம் போல தோணுதே..

8. போன தடவை நீ என் பிளாட்க்கு  வந்தப்ப என் பர்ஸ் காலி ஆன பின்புதானே என்னை விட்டே?

9.  ஆஹா!!!!!!!! இவளுக்கு என்ன ஒரு நடை, ! இதுக்கே போட்டுத்தரலாம் போல இருக்கே!!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih-Ir1ngZ9TwJxhu1TcUZnx6oTUs1tv1mTrZCfvfu79aAImoXZ471DhZbuNs7Dc7IZheMXtlV1gpJBGzI0Wetc20BsWaIEe194NJdT2wlJNhzN9QLNWjJomSkDIUYecpAPuFPI1feahxiD/s400/Final+Destination+5-2.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  ஜிம்னாஸ்டிக் லேடி பாரில் எக்சசைஸ் பண்ணிக்கொண்டே இருக்கையில் இறக்கும் காட்சு பயங்கர கொடூரம், தியேட்டரில் கை தட்டல் ஒலி அடங்கவே 4 நிமிஷம் ஆகுது யப்பா!!!!!!!!!!

2.  மசாஜ் லேடி யங்கா இருப்பானு பம்மிட்டு ஒருத்தன் போறப்ப வயசான லேடி - அதைப்பார்த்ததும் எஸ்கேப் ஆகப்பார்க்குறான், முடியல.. அக்குபஞ்சர் மாதிரி ஏகப்பட்ட ஊசிகளை குத்தி வைக்க அவன் ஸ்லிப் ஆகி கீழே விழுந்து எல்லா ஊசிகளும் ஏறி இறப்பது த்ரில்...

3. லேசர் சிகிச்சைக்கு டாக்டரிடம் வரும் ஃபிகரை ஆபரேஷன் பொசிஷனுக்கு வைத்து விட்டு வெளியே யாரோ அழைப்பதால் டாக்டர் செல்லும்போதே ஏதோ விபரீதம் நடக்கப்போவது தெரிந்து விடுகிறது.. மார்வலஸ் சீன்..

4.  சக நண்பனையே போட்டுத்தள்ளி அவன் ஆயுளை இவன் எடுத்துக்கொள்ள நினைக்கும் லாஜிக் புதுசு.. .. ( நம்ம ஊருக்கு பழசு.. விட்டலாச்சார்யா, அம்புலிமா உபயத்தில்  )

5. இந்த சீன் ரொம்ப போர்.. அப்டின்னு ஒரு சீன் கூட சொல்ல முடியாத அளவு செம விறு விறுப்பு..


http://www.horror-asylum.com/news/pics/meghan-ory-cast-in-final-destination-5.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. முன் பின் அறிமுகம் இல்லா ஒரு பெண்ணை பஸ்ஸில் தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்றதாக , முயல நினைத்ததாக  வில்லன் ஏன் ஹீரோவிடம் உண்மையை சொல்கிறான்? அவன் உஷார் ஆகி விட மாட்டானா?

2.  தான் இறப்பதை தவிர்க்க வேண்டுமானால் வேறொரு உயிரை கொலை செய்ய வேண்டும் என்ற கான்செப்ட் ஓக்கே, ஆனால் அது நீண்ட ஆயுள் உள்ள உயிரைத்தானே? அல்ப ஆயுசில் ஏற்கனவே நாள் குறிக்கப்பட்ட ஹீரோ உயிரை ஏன் வில்லன் எடுக்க நினைக்கிறான்.. அப்படி எடுத்தா அவனுக்கு மீறி மீறி போனா 10 நாள் ஆயுள் தானே வரும்?

3.  பெரும்பாலும் பஸ் , ரயில் பயணங்களில் தான் மரணம் நிகழ்கிறது. அப்படி இருக்கும்போது ஹீரோ , ஹீரோயின் ஏன் விமானப்பயணம் தேர்ந்தெடுக்கிறார்கள்?

4. ஃபேக்டரியில் தற்செயலாக நடக்கும் நீக்ரோவின் மரணத்துக்கு தான் தான் முழு காரணம் என ஹீரோவின் ஃபிரண்ட் சொல்றானே? அது எப்படி?

5.  காலன் அல்லது எமனின் தூதன் மாதிரி காட்டப்படும் கேரக்டர்  ஒவ்வொரு மரணத்திற்கும் அட்டெண்டென்ஸ் போட வந்துட்டு க்ளை மாக்ஸ் டெத்துக்கு மட்டும் வரவே இல்லையே , எப்படி?

http://moviehitcenter.webs.com/watch-final-destination-5-online-free-5.jpg

படத்தில் ஒளிப்பதிவு, எடிட்டிங்க் கன கச்சிதம்..

ஆங்கிலப்படங்களுக்கு விகடனில் நோ மார்க்..

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே

சி. பி, கமெண்ட் -  கர்ப்பிணிப்பெண்கள், இதய பலஹீனம் உள்ளவர்கள் தவிர அனைவரும் பார்க்கலாம்

ஈரோடு வி எஸ் பி தியேட்டரில் படம் பார்த்தேன்...

http://img.poptower.com/pic-60462/final-destination-5.jpg?d=600

.டியர், நான் பொண்ணு பார்க்க கேரளா போறேன்.!!!!!!!

Before Niel Amstrong

1.டியர், நான் பொண்ணு பார்க்க கேரளா போறேன்.

அப்போ என் கதி?

இதென்ன கேள்வி? அதோ கதி தான்.

-------------------------------

2. நான் அழகா இருக்கேனா? இல்லையா? உண்மையை சொல்லுங்க!!

என்னடி மிரட்டறே? அப்புறம் நான் உண்மையை சொல்லிடுவேன், ஜாக்கிரதை # கலாட்டா கடலை

--------------------------

3. டியர்,உங்க மேலே நம்பிக்கை இல்லைன்னு சொல்றேன், அதிர்ச்சி அடையாம நார்மலா இருக்கீங்க?

விடுடி,பொம்பளைங்க எந்த காலத்துல நல்லவனை நம்பி இருக்காங்க?

--------------------------

4. என் காதலி ஆசை காட்டி மோசம் பண்ணிட்டா.

உன் பாடு தேவலை, என் காதலி எதுவுமே காட்டலை

-------------------------

5. இயற்கைக்கும், பெண்ணுக்கும் அதிக வித்தியாசம் இல்லை,தினம் தினம் பல மாற்றங்களை இயற்கை தருகிறது, பல  ஏமாற்றங்களை  பெண் தருகிறாள்

--------------------------



6. என்னதான் இண்ட்டர்நேஷனல் ஃபிகரா இருந்தாலும் பூப்புநன்னீராட்டு விழாவுல குடிசைல குத்தவெச்சு உக்காந்துதான் ஆகனும், ஃபிலிம் காட்ட முடியாது

-----------------------------

7. மோசமான ஆண்களை ஆராயாமல் அவர்களிடம் ஏமாறுவதும், பாசமான ஆண்களை புரியாமல் சந்தேகப்படுவதும் பெண்களின் தலையில் பிரம்மன் எழுதிவைத்த தலை எழுத்து

------------------------

8. எடுக்கும் முடிவுகளில் உறுதியாய் ,யானையாய் ஆண் இருப்பான், மதில் மேல் பூனையாய் பெண் இருப்பாள்

-------------------------------------

9. எல்லோரிடமும் இனிக்கப்பேசும் நீ என்னிடம் மட்டும் சுடு சொல் வீசுவது ஏன்? என்பதை கணிக்க முடியாத போது என் கண்கள் பனிக்கத்தொடங்குகின்றன

-------------------------

10. நான் அழகா இருக்கேனா? என்று ஒவ்வொரு முறை நீ உதட்டை சுளித்து கேட்கையில் தேவதைகள் பூமியை விட்டு கோபத்தில் வெளி நடப்பு செய்கிறார்கள்

---------------------------


11. கண்ணிப்போயிருக்கும் உன் உதடுகள் சொல்லும் தகவல் தொடர் ஒத்தடங்கள் பெற்று மாறாத தடங்கள்,நேராது தடங்கல்

---------------------------

12. ஓமனா!கேரளா ஃபிகர் எப்படி இருக்கனும்கறதுக்கு நீ தான் நமூனா (முன் மாதிரி).

கிருஷ்ணா!காமனா எல்லா ஃபிகர்ங்க கிட்டேயும் இதே டயலாக் தானா?

--------------------

13. அத்தான்,பக்கத்து வீட்டுல கணவன் மனைவி தகராறு, நீங்க போய் என்ன ஏதுன்னு கேட்கக்கூடாதா?

ஏற்கனவே ஒரு தடவை நான் அங்கே போனதாலதான் சண்டையே!!

----------------------------

14. நாம் நெகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் கூட  மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க நினைப்பதுதான் நகைச்சுவை கலைஞனின் தன்மை 


-----------------------------------
15.  நெருக்கமா இருப்பேன்; ஆனா முத்தம் கொடுக்க மாட்டேன் : ஜீவா!!#உருக்கமா நடிப்பேன், ஆனா சம்பளம் வாங்கிக்கமாட்டேன்னு சொல்வீங்களா?


------------------------


16.  விஜயசாந்தி மீதும் நிலமோசடி புகார்! #சாந்தியை சந்திக்கு இழுத்து வந்தவரு சிரஞ்சீவி ஆளூங்களா?

-------------------------

17. கலைஞர் ஆட்சியில் குட்டி பத்மினியின் ரூ.5 கோடி நிலம் அபகரிப்பு! போலீசில் புகார் # நிலங்கள் ஐந்து வகைப்படும்னு எவன் சொன்னான்?

------------------

18. தேர்தல் முடிவு பற்றி கருத்து: குஷ்பூ மீது வழக்கு தொடர முடிவு! # அப்டியே கார்த்திக்,பிரபு,சுந்தர் சி மேலயும் வழக்கு வருமா?


---------------------------

19. 28ம் தேதி மதுரையில் விஜய்யின் வேலாயுதம் ஆடியோ ரிலீஸ்! #  மதுரைக்கு வந்த சோதனை பாருங்க, இன்னைக்கு பவர்ஸ்டாரின் லத்திகா 150வது நாள் விழா 


------------------------

20. லிப் டூ லிப் காட்சியில் நடித்தால் வீட்டில் சேர்க்க மாட்டார்கள் : அஜ்மல்!! # எந்த வீட்டில்?


--------------------

21. வனயுத்தத்தில் வீரப்பனாக கிஷோர், முத்துலெட்சுமியாக விஜயலெட்சுமி! # அப்போ சீமான் என்ன கேரக்டர்ல நடிப்பாரு?


-------------------

22. நடிகைகளுக்கு கோயில் கட்டுவதெல்லாம் தப்பு : ஹன்சிகா மோத்வானி!! # அப்போ சுடுகாடு கட்டலாமா?


------------

Wednesday, August 24, 2011

வெங்காயம் - நித்யானந்தா வகையறாக்களுக்கு ஆப்பு - சினிமா விமர்சனம்



நாட்ல பல ஜோதிட சிகாமணிகள் அப்பாவி ஜனங்களை ஏமாத்தி தங்களோட வயிற்றுப்பசியையும், உடல் பசியையும், பெண் இச்சைகளையும் தீர்த்துக்கறாங்க,அதே போல சில சாமியார்கள்!!!அவங்களுக்கெல்லாம் சவுக்கடி கொடுக்கற மாதிரியான பெரியாரிச கொள்கைகள் முழங்கும் படம் தான் இந்த லோ பட்ஜெட் படம்..

சிட்டிசன், சாமுராய் ,ரமணா டைப்ல் இதுவும் ஆட்களை கடத்தி வெச்சு சமூகத்தை தன் வசம் திருப்ப யத்தனிக்கற இளைஞர்கள் கதை தான், ஆனா இதுல டிமாண்ட்ஸ் எல்லாம் கிடையாது..  ஜோதிடர்களால், சாமியார்களால் பாதிக்கப்பட்ட  வாரிசுகள் எல்லாருமே பொடுசு அல்லது விடலைப்பசங்க என்பதுதான் படத்தின் பலமும், பலஹீனமும்..

இயக்குநரின் எண்ணம், கதை  KNOT  எதுவும் தப்பில்லை. எங்கே ஸ்லிப் ஆகிட்டார்னா சொல்ல வந்த கதையை தேங்காய் உடைச்ச மாதிரி சொல்லாம  கடத்தல் கேஸை கண்டு பிடிக்க கிராமத்துக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்  கம் ஹீரோ, அவருக்கு ஒரு காதலி ,  அவங்க காதல் எப்படி நிறைவேறுதுன்னு கொஞ்சம் ரூட் மாறிப்போறதால படத்தோட பேசிக் கெட்டுடுது..

அப்புறம் இந்த மாதிரி டகால்டி வேலை பண்ற ஜோதிடர்களை பொடிப்பசங்க எப்படி கடத்தி இருக்க முடியும்?கறதை பார்வையாளனுக்கு சந்தேகமே வராத மாதிரி காட்ட தவறியது திரைக்கதையின் பலஹீனம்..


படத்தில் சாட்டையடி வசனங்கள்

1. ஹீரோ -  ஏய்.. உன் மனசுல என்ன நினைச்சிட்டிருக்கே? நான் PC  தெரியுமில்லை?  (  P C = POLICE)

யோவ்,, நான்  M B C  தெரியுமில்லை ( MOST BACKWARD COMMUNITY)

2. இந்த சாமியார்கள் காணாமப்போனதைப்பற்றி கவர்மெண்ட் ஏன் இவ்வளவு கவலைப்படுது? அவனுங்க என்ன நாட்டுக்கு சுதந்திரமா வாங்கிக்கொடுத்தாங்க? 

3.  பல குடும்பங்களை குட்டிச்சுவர் பண்ணி அந்த காசுல இவனுங்க பங்களா கட்டிக்கிட்டாங்க.. 

4.  நான் ஏன் தான் இவ்வளவு அழகாப்பிறந்தேனோ தெரியல.. 

டேய்.. மேட்டர்க்கு வா!

அவ என்னை லவ் பண்றா - ன்னு நினைக்கறேன்..

5. ரேடியோ நியூஸ் - அவர்களை தீவிரவாதிகள் கடத்திச்சென்றிருக்கலாம் என தெரிகிறது

கடத்தப்பட்ட ஜோதிடர்கள்  -  டேய் டேய்.. நாங்க அந்த அளவெல்லாம் ஒர்த் இல்லைடா.. நல்லா தேடிப்பாருங்கடா. பக்கத்துல தான் எங்கேயாவது இருப்போம்.. 



6.  சாமி கும்பிட்டதா சொன்னே! ஆனா நெற்றில திருநீறே இல்லையே?

அடப்பாவி, உனக்கு மூளையே இல்லையா? இப்படியா என்னை மாட்டி விடுவே?

7.   ஹீரோயின் - எல்லாரும் இருக்கறப்ப திட்டறது, தனிமைல இருக்கறப்ப கொஞ்சறது  இதானே ஆம்பளைங்க புத்தி?

8.  யாருமே இல்லாத இடத்துல பேசிட்டு  இருக்கறது, தன்னைப்போல சிரிக்கறது இதுதான் காதலா?

9.  ஏய்.. இது நீ சுட்ட பணியாரம் மாதிரி தெரில, உங்கம்மா சுட்டதை நீ சுட்டுட்டு வந்துட்டே!!! சரியா ?

10. நீங்க 4 பேரும் பெரிய ஜோசியக்காரங்க தானே? உங்க 4 பேரையும் கடத்திட்டு வந்து வெச்சிருக்கோம்,உங்கள்ல யார் முதல்ல சாகறாங்கன்னு ஜோசியம் பார்த்து சொல்லுங்க பார்ப்போம்..




11. ரத்தத்துக்கும் ஜோசியத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சயின்ஸ் சொல்லுது.. செவ்வாய் தோஷம் இருக்கற ஜாதகப்பையனுக்கு செவ்வாய் தோஷம் உள்ள பொண்ணுதான் கட்டனும்..

12.  நல்ல நேரமா பார்த்து எல்லா குழந்தைகளையும் ஆபரேஷன் பண்ணி  எடுத்திட்டா அப்போ அவங்க வாழ்க்கைல கெட்ட நேரமே வராதா?

13.  ட்வின்ஸ்ல 2 குழந்தைகளும் ஒரே நேரத்துல பிறந்தாலும், அவங்க தலை எழுத்து வேற வேற மாதிரி இருக்கே? அது எப்படி?

14. ஜோசியர்கள் சொல்றபடி எதாவது எதேச்சையா நடந்தாக்கூட  அவங்களை தலையில தூக்கி வெச்சு  கொண்டாடறோம். ஆனா அவங்க சொன்னபடி நடக்கலைன்னா அவங்களை நாம் ஏன் தட்டிக்கேக்கறது இல்லை.. ?

15. செவ்வாய் தோஷமும், நல்ல ஜாதகமும் சேராதுன்னு சொல்றீங்களே எத்தனையோ லவ்வர்ஸ் சேரலையா? அவங்கள்ல எத்தனை பேரு ஜாதகம் பார்த்து சேர்ந்தாங்க?



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 

1. படத்தின் 90% கேரக்டர்கள் புது முகங்கள், கிராமத்து ஆட்களை சரியாக வேலை வாங்குவது..  அழகு

2. கூத்தாடியாக  வருபவரின் நடிப்பு செம..  அவர் ஊரெல்லாம் கிட்டத்தட்ட பிச்சை எடுக்கும் காட்சி உருக்கம். 

3. போலீஸ் இன்ஸ்பெக்டராக வருபவர்  ( அலெக்சாண்டர் )சாதா டிரஸ்ஸில் கிராமத்தானாகவும் , போலீஸ் யூனிஃபார்மில் மிடுக்கு ஏறுவதும் செம க்யூட். 

4. அரைக்கிறுக்கா... உனக்கிருக்கா பாடல் செம மெலோடி.. சூப்பர் ஹிட் பாடலை எடுத்த விதமும் ஓக்கே..  அந்த பாடலில் ஆங்காங்கே ஃப்ரீசிங்க் ஷாட்ஸ் யூஸ் பண்ணியது அழகு.

5. ஹீரோயின்  பவினா மொக்கை ஃபிகராக இருந்தாலும் போகப்போக அவரது முகம் பழகி விடுகிறது. அவரது  எதார்த்தமான நடிப்பும் ஓக்கே.

6. சத்யராஜை ஒரே ஒரு சீனில் நடிக்க வைத்து அவர் தான் பட ஹீரோ என்பது மாதிரி போஸ்டர்களில் செய்த மார்க்கெட்டிங்க் டெக்னிக் .



இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1.  கதை சொல்லும் உத்தியில் இயக்குநர் தடுமாறியது ஏன்? ஃபிளாஸ்பேக் காட்சிகள் ஓவர், சாமான்யன் எது ஃபிளாஸ்பேக்,?  எது இப்போ நடக்கற கதை?ன்னு தெரிஞ்சுக்க ரொம்பவே தடுமாறுகிறான். 

2. கடத்தப்பட்ட 4 பெரை ஒரு கல் தூணில் சாதாரண கயிற்றால் பொடியனுங்க கட்டி வைக்கறானுங்க. .. அந்த கல் கரடு முரடா இருக்கு. அந்த கயிறை  10 டைம் மேலேயும் கீழேயும் தேய்ச்சாலே கயிறு அறுந்துடுமே? கண்காணிக்க ஆள் இல்லாத பட்சத்துல அவங்க ஏன் தப்பிக்க முயற்சி செய்யலை?

3. ஊர்ல போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டேஷன்ல இருக்கற நேரம் கொஞ்சம் தான், முக்காவாசி நேரம் அவர் மொக்கை ஃபிகர் மோஹனா பின்னால தான் சுத்திட்டு இருக்கார்.. இப்படி இருந்தா எப்படி அவர் மேல மக்களுக்கு மரியாதையும், பயமும் வரும்?

4.  இன்வெஸ்டிகேஷன் பண்ண வந்த இன்ஸ்பெக்டர் எந்த துப்பையும் கண்டுபிடிக்கலையே? அவர் என்ன துப்பு கெட்ட மனுஷனா?

5. க்ளைமாக்ஸ்ல ஹீரோயினை கில்மா பண்ண ட்ரை பண்ணும் மந்திரவாதி  கம் பூசாரி ரொம்ப விபரம் இல்லாதவனா இருக்கானே? இம்புட்டு அப்பாவியாவா வில்லன் இருப்பான்?

6. பெற்றோர்களுக்கு தங்கள் பெண்ணின் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் உடனே தெரிஞ்சிடும்.. ஹீரோயின் சாமியார்ட்ட இருந்து கண்ணீரோட வந்து அடம் பண்றா.. அங்கே போக மாட்டேன்னு, அவங்களுக்கு அது கூடவா புரியாது?

7. வெளியூரில் தன் மகனை ஹாஸ்பிடலில் ட்ரீட்மெண்ட்க்கு சேர்த்தும் கூத்தாடிக்கலைஞர் ஏன் ஜி ஹெச்சில் சேர்த்தவில்லை? கைல பணம் இல்லைன்னா அங்கே சேர்க்கலாமே?

8.  நர பலிக்காக சிறுவனை கடத்தும் காட்சியும், அதன் பின் வரும் பலி காட்சியும் இன்னும் ஆழமாக சொல்லப்பட்டிருக்க வேண்டாமா?





எல்லா செண்ட்டர்களிலும் 10 நாட்கள் தான் ஓடும்..

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் விமர்சனம் மார்க் -  39

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் -   பகுத்தறிவாளர்கள், ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் பார்க்கலாம்.

ஈரோடு ஆனூர் தியேட்டரில் படம் பார்த்தேன்