Saturday, April 02, 2011

கலைஞர் மற்றும் தி மு க வி ஐ பி களின் சொத்து மதிப்பை வெளியிட்ட ஜூனியர் விகடன்,அரசியல் வானில் அதிர்ச்சி அலை

தேர்தல் வந்தால்தான், அரசியல்வாதிகளின் சொத்துப் பட்டியல்கள்
 
http://tamizharivu.files.wordpress.com/2008/10/kalaignar.gif
வெளிச்சத்துக்கு வருகின்றன. 'வேட்பு மனுவோடு சொத்துப் பட்டியலையும் தாக்கல் செய்ய வேண்டும்!’ என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, போன தேர்தலில் கணக்குக் காட்டியவர்கள், இப்போது மீண்டும் சொத்துகளைத் தூசு தட்டி இருக்கிறார்கள்.
 
கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் இவர்களின் சொத்துக் கணக்கு எந்த அளவுக்குக் குவிந்திருக்கும்? ஆடம்பர பங்களா, சொகுசு கார்கள், வெளிநாட்டுப் பயணங்கள், நிலங்கள், தொழிற்சாலைகள் என்று ஏகமாகக் குவித்து இருப்பார்கள். ஆனால், வேட்பு மனுக் கணக்குகளில் இவை எதுவும் இடம் பெறாது. சொத்துக் கணக்கில் இடம்பெறுவது எல்லாமே கண்துடைப்புத்தான்!
 
'ஏன், அடுத்த தேர்தல் வரைக்கும் இவர்கள் காத்திருக்க வேண்டும்? ஒவ்வோர் ஆண்டும் சொத்துக் கணக்கைத் தன்னிச்சையாகவே தாக்கல் செய்யலாமே?’ என்று பலரும் கேட்கத்தான் செய்கிறார்கள். ஜெயலலிதா இது குறித்துக் கேள்வி எழுப்பியதும், கருணாநிதி மட்டும் உடனே தனது சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்தார்.

'சபாநாயகர், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒவ்வோர் ஆண்டும் தங்களது சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் போடப்பட்டு பல ஆண்டுகளாக கும்பகர்ணத் தூக்கத்தில் இருக்கிறது!

அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வரான கருணாநிதி, 1969-ல் ஆகஸ்ட் 27-ம் தேதி, 'சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்துக் கணக்கை வெளி​யிடுதல்’ தொடர்பாக அரசின் தீர்மானத்தை நிறைவேற்றினார்.


''எம்.எல்.ஏ-க்களாகவும், அமைச்சர்களாகவும் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் பொது நலத்துக்காகத்தான் பாடுபட வேண்டும். நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ தாங்கள் நலம் பெறுவதற்காக அந்தப் பதவிகளை வகிக்கவில்லை என்று மக்கள் நம்பிக்கை​கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது!'' என்று சொல்லி  அந்த தீர்மானத்தை முன்மொழிந்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி.

இதன்படி பங்குகள், பங்கிருப்பு, பங்குச் சான்றிதழ்கள், கூட்டு வணிக சொத்து, ஈட்டுறுதி ஆவணங்கள், வங்கி இருப்புகள், மோட்டார் வண்டிகள், பொறுப்புரிமை விவரங்கள், அணிகலன்கள், தங்கம், விலை மதிப்புள்ள கற்கள் என்று ஒவ்வோர் ஆண்டும் எம்.எல்.ஏ-க்கள் தங்கள் சொத்துக் கணக்கை சட்டசபைக்கு அனுப்பிவைக்க வேண்டும்.


தீர்மானம் கொண்டுவரப்பட்ட 1967-69-ம் ஆண்டில் 234 எம்.எல்.ஏ-க்களில் 165 பேர் மட்டுமே சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்தனர். அதிலும், தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் 90 பேர்தான். அதன் பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் அது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது.

1989, 1996, 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும், கருணாநிதி முதல்வராக இருந்தும் அவர் போட்ட தீர்மானத்தை அவரே தூக்கி எறிந்துவிட்டார். 'தேர்தலில் நிற்க முடியாமல் போய்விடுமோ?’ என்று அஞ்சியே இப்போது அனைவரும் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்து இருக்கிறார்களே தவிர, விருப்பத்துடன் அல்ல.


'சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சொத்துக் கணக்கை வெளியிடுதல்’ தீர்மானத்தைக் கருணாநிதி கொண்டுவந்தபோது சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா?

''அனைவரும் நேர்மையான முறையில் கணக்குகளைக் காட்டுகிறோம் என்று உறுதியை அளிக்கிறோம். அதற்கு ஊனம் ஏற்படாமல் எல்லோரும் நடந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது!'' என்று சொன்னார். உபதேசம் மக்களுக்குத்தானோ?



தேர்தல் ஆணையத்தின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர்களின் சொத்துப் பட்டியலில் இருந்து அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் டாப் 1 இடத்தில் முதல்வர் கருணாநிதி இருக்கிறார்.

அவருக்கு அடுத்த இடத்தில் அமைச்சர் நேருவும் அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் பொங்கலூர் பழனிசாமி, பூங்கோதை, உபயதுல்லா, பொன்முடி ஆகியோர் இருக்கிறார்கள்.


கடந்த தேர்தலில் 26.52 கோடியாக இருந்த கருணாநிதியின் குடும்ப சொத்து இந்த தேர்தலில் 44 கோடியாக உயர்ந்திருக்கிறது. 1.50 கோடியாக இருந்த ஸ்டாலின் சொத்து 2.11 கோடியாக ஆகியிருக்கிறது. வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பரிதி இளம்வழுதி, சுப.தங்கவேலன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், சுரேஷ் ராஜன், பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, உபயதுல்லா, மைதீன்கான், வெள்ளக்கோவில் சாமிநாதன், பூங்கோதை, கீதா ஜீவன், தமிழரசி, கே.பி.பி.சாமி, மதிவாணன், ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த தேர்தலில் காட்டிய சொத்து மதிப்பைவிட இரண்டு மடங்குக்கு மேல் இந்த தேர்தலில் காட்டி இருக்கிறார்கள்.

நேரு கடந்த தேர்தலில் 2.83 கோடி ரூபாய் சொத்துக் கணக்கை காட்டியிருந்தார். இந்த தேர்தலில் இது 17.77 கோடியாக உயந்திருக்கிறது. எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தின் சொத்து 1.04 கோடியில் இருந்து 6.14 கோடியாக உயர்ந்திருக்கிறது. 20.78 லட்சமாக இருந்த சுரேஷ் ராஜனின் சொத்து 3.21 கோடியாக அதிகரித்து இருக்கிறது. கடந்த தேர்தலில் 62 லட்சம் சொத்து கணக்கை காட்டிய பரிதி இந்த தேர்தலில் 6.49 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துமதிப்பு காட்டி இருக்கிறார். வெள்ளக்கோவில் சாமிநாதனின் சொத்து 86 லட்சத்தில் இருந்து 4.85 கோடியாகவும் பூங்கோதையின் சொத்து 1.35 கோடியில் இருந்து ஒரேடியாக 15.43 கோடியாகவும் எகிறியது.

ஐஸ்வர்யாராய் தாமினி டீச்சரில் ”அப்படி” நடிச்சது தப்பா?

http://www.aishwaryarai-videos.com/wp-content/uploads/2010/07/Aishwarya-Rai-Shies-Away-From-Camera-With-Her-Dupatta.jpg

1. டியர்...  எனக்கு  வேற  ஒரு  பையனோட  மேரேஜ்  ஃபிக்ஸ்  ஆகிடுச்சு...

“எனக்கு  தெரியும்”

“எப்படி?”

“இனிமே  நம்ம  லவ்வுக்கு  அக்கா  இடைஞ்சலா  இருக்கமாட்டா-னு  உன்  தங்கச்சி  சொன்னா...”

------------------

2. என்  பின்னால  சுத்தாதே...  போய்  பிழைக்கற  வழியைப்  பாரு...

மிஸ்...  லவ்வுக்கு  OK-னு  சொல்லிட்டா  நாம  2  பேரும்  சேர்ந்தே பொழைப்பை  பார்க்கலாம்.

------------------------

3. பாகற்காய்  கூட்டு  சாப்பிட்ட  தலைவர்  இப்போ  கோதுமை  அல்வா  சாப்பிடராரே?

கசப்பான  அனுபவங்கள்  முடிஞ்சு  கூட்டணி  சிக்கல்  சரி  ஆனதை சிம்பாலிக்கா  காட்றாராம்.

---------------------------
http://www.poster.net/rai-aishwarya/rai-aishwarya-photo-aishwarya-rai-6206892.jpg
4. எதுக்காக  ஐஸ்  ஃபேக்டரி  ஓனரை  பார்க்க  வந்திருக்கீங்க?

“கண்ல  அடிபட்டுடுச்சு...  eye's (ஐஸ்) ஸ்பெஷலிஸ்ட்டை  பார்க்க  சொன்னாங்க...”

--------------------

5. டீச்சர்:
“கடல்  நடுவே  ஒரு  மாமரம்  இருக்கு...  அந்த  மாக்கய்களை  எப்படி  பறிப்பே?

மாணவன்: பறவையாய்  மாறி  பறிப்பேன்.

டீச்சர்: பறவை  போல  உன்னை  உன்  தாத்தாவா  மாத்துவார்?

மாணவன்:
கடல்  நடுவுல  மரம்  உங்க  அப்பாவா  வெச்சாரு?

-------------------------

6. ஏய்...  மிஸ்டர்.  யார்  நீ...?  டெய்லி  மிஸ்டுகாலா  குடுக்கறே?

மிஸ்.  உங்ககூட  பேச  ஆசை...  ஆனா  என்  செல்லுல  பேலன்ஸ்  இல்லை...  ஹி.. ஹி..

---------------------------
http://www.aishwaryaraifanclub.net/pictures/data/media/1/aishwarya_rai_41.jpg
7. வாத்தியார்  டி.வி.  பிரியர்  போல...

எப்படி  சொல்றே?

பாடம்  நடத்தறப்பக்  கூட  பாடவரிசை  பத்து-னு  போர்டுல  எழுதிப்  போடறாரே?

--------------------------

8. மன்னா!  ஏன்  குழப்பமாக  இருக்கீர்?

சன்மானமும்  தர்லை.  பாராட்டவும்  இல்லை...  நீர்  என்ன  அம்புட்டு  அப்பா  டேக்கரா?  என  புலவர்  கேட்டார்.  ஒன்றும்  புரியவில்லை  எனக்கு.

------------------------

9. மன்னா!  போருக்குப்  போகனும்.  ஒரு  காயம்  கூட  படாம  திரும்பி  வரனும்.

அப்போ...  மன்னனே  இல்லாத  நாட்டுக்குத்தான்  போருக்கு  போகனும்.

----------------------
http://www.bollylive.com/gallery/actress/aishwarya-rai/aishwarya-rai-hot.jpg
10. என்  இதயத்துல  எப்பவும்  உங்களுக்கு  இடம்  உண்டு...

இந்த  டகால்டி  வேலையெல்லாம்  வேண்டாம்...  எங்க  கட்சிக்கு எத்தனை  சீட்?  ஓப்பனா  சொல்லுங்க....


--------------------------------------------------------

டிஸ்கி 1 - நம்ம ஐஸோட (அபிஷேக் மன்னிப்பாராக) முதல் ஸ்டில்லுல போட்டிருக்கற ஸ்டெட்டோட (கம்மல்)  பேரு சிக்னல் போஸ்ட் ஸ்டெட்.. அதுல மஞ்சள் லைட் எரியுது இப்போ.. கலைஞர் தமிழகத்துக்கு நிரந்தர முதல்வர்னு கட்டியம் கூறுது....

டிஸ்கி 2 - நம்ம ஊர் பொண்ணுங்க தலை வகிடு எடுக்கறப்ப நேர் வகிடு எடுக்காம கொஞ்சம் கோணையா போய்ட்டாளே அட கிறுக்குப்புள்ள மவளேன்னு பெருசுங்க திட்டும்.. இங்கே பாருங்க.. ஐஸ் வகிடு கிராஸ் ( CROSS)ஆக இருந்தாலும் பார்க்கறவங்க மனசு கிரேஸ் (CRAZE) ஆகுதே.....

டிஸ்கி 3 - மொக்கை ஃபிகருங்க எல்லாம் கழுத்து நிறைய நகை போட்டாலும் அது அட்ராக்டிவ்வா இருக்காது.. ஐஸ் மாதிரி இண்டெர்நேஷனல் ஃபிகருங்க கழுத்துல துக்ளியூண்டு செயினும், விரல்ல சின்னதா ஒரு மோதிரமும் மட்டும் போட்டாலும் அழகு தூக்கிக்குது..

டிஸ்கி 4 - கடைசி ஸ்டில் ஐஸ் நடிச்ச தாமினி டீச்சர் படத்துல வர்ற சீன்.. அவங்க கைல பாருங்க... மேட்சே இல்லாத கலர்ல பிரேஸ்லெட் போட்டிருக்கறதை.. ஆனா மனசை கேட்ச் பண்ற மாதிரி இருந்தா போதும் மேட்சுக்கு மேட்ச் தேவை இல்லைங்கற வரலாற்றுத்தத்துவத்தை உணர வைக்கத்தான் இந்த ஸ்டில்லு...ஹி ஹி 

Friday, April 01, 2011

நஞ்சுபுரம் - திக் திக் ஸ்னேக் திக் - சினிமா விமர்சனம்


http://mimg.sulekha.com/tamil/nanjupuram/wallpaper/800-600/nanjupuram-desktop-themes91.jpg
தளபதி,ரோஜா,ராவணன் என்று மணிரத்னம் மட்டும் தான் புராணக்கதைகளை உல்டா பண்ணுவாரா? நாங்களும் செய்வமல்ல என சில கோடம்பாக்கத்து இயக்குநர்கள் கிளம்பி இருக்கிறார்கள்... அதில் ஒரு லோ பட்ஜெட் உல்டா தான் இந்த நஞ்சு புரம்.

முனிவரை அவமானப்படுத்திய பரீட்சித்த மகாராஜா பாம்பால் இறக்கும் சாபம் பெற்று, அதே போல் இறந்தாரே.. அதை அப்படியே கொஞ்சம் உட்டாலக்கடி பண்ணி கிராமத்து பின் புலத்தில் கிளாமருக்கு மோனிகாவை காதலி ஆகி விட்டால் நஞ்சு புரம் ரெடி...

பாம்புகள் அதிகம் உள்ள ஒரு கிராமத்துல ஹீரோ ஒரு பாம்பை அடிச்சுட்டு தப்பிக்க விட்றாரு.. அடி பட்ட பாம்பு 40 நாட்களுக்குள் பழி வாங்க வருமாம்.. ( பாம்பு கூட காலண்டரை மெயிண்டெயின் பண்ணுதோ..? #டவுட்டு)அதனால ஹீரோ ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு மேடை அமைச்சு உயரத்துல தங்கறாரு.. 40 வது நாள் அன்னைக்கு என்ன நடக்குதுங்கறதுதான் க்ளைமாக்ஸ்....







https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivD4XXFYPi2zXxZ6H6qE_7iYCbIOz66bAhezid2SD7s2M7eeyoCbToppr9nwLEq0sYRIwqnQsEdITRULMzTuE6MyW0bLgLYgPjLC6PeJIeX9YgjKdK4da2uVPmT2KGRLGbYYUPtb2gY8I/s1600/Monika-at-Nanjupuram-Audio-Launch+%25281%2529.jpg

தமிழ் சினிமா ஹீரோவோட இலக்கணப்படி இவரும் தலையே சீவாம ஃபங்க் தலையோட சுத்திட்டு இருக்காரு.. நடிப்புக்கு பாஸ் மார்க்...ஹீரோயின் அழகி புகழ் மோனிகா...கிராமத்து கதை என்பதால் இவருக்கு டல் மேக்கப் போட்டது இயக்குநரின் அறியாமையா? மேக்கப் மேனின் அசால்டா தெரிய வில்லை...ரொம்ப நாளுக்குப்பிறகு நடிக்க ஸ்கோப் உள்ள கேரக்டர்.. நிறைவாக செய்து இருக்கிறார்...

இயக்குநரை மெச்ச வைக்கும்  சீன்கள்

1. பாம்பு பிடிக்க பானையை துளை செய்து , பாம்பு நுழைந்த பைப்பில் ஒரு புறம் வைத்து மறு புறம் புகை விடுவது அசல் கிராமத்து பாம்பு பிடிக்கும் முறையின் பதிவு...

2. நடு ராத்திரியில் சட்டையை தண்ணீரில் நனைத்து சேவல் திருடன் சேவலை ஒரே அமுக்காக அமுக்குவது...

3.ஹீரோ, ஹீரோயின் லிப் டூ லிப் கிஸ் சீனை மிக கவுரவமாக காட்டியது.. ( அனுஹாசனின் இந்திரா பாதிப்பு இருந்தாலும்.. )

4.கதைக்களம் கிராமம் என்பதால் ஹீரோயின் உட்பட அனைத்துப்பெண் கேரக்டர்களும் எல்லா சீன்களிலும்  கனகாம்பரப்பூவை அணிந்திருப்பது போல் காண்பித்தது..  ( 2 சீன்ல மட்டும் மல்லிகைப்பூ #கிக்குக்காக)

5. ஹீரோ தாமரைப்பூவை குளத்தில் இறங்கிப்பறித்துத்தந்தார் என்றதும் ஹீரோயின் தன் தாவணியால் ஹீரோவின் தலையை துவட்டியதும், 2வது முறையாக இன்னொரு தாமரையை எடுத்து வந்து மீண்டும் அதே போல் தாவணித்துவட்டலை எதிர்பார்ப்பது...,.

6. ஒரு பாடல் காட்சியில் 7 செகண்டே வரும் சீனுக்காக 2 ஆடுகளுக்கு ஆண், பெண் டிரஸ் போட்டு அழகு பார்ப்பது...

7 ஹீரோயின் சாப்பிடும் லாலிப்பாப்பை லபக்க ஹீரோ போடும் ஐடியா... அதைத்தொடர்ந்து வரும் ஹீரோயினின் வெட்கம் கலந்த முக பாவனைகள் ...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjDBchf69q4ntjkJXtq650SDvKaxDqTGbO80w3VuXTXq-4VShZlfT_1-TRRdOWqaFvBm7piiWf5Syo4pOLgOd-XfbGGpTj1tTtI8UeHgC5_5TTDKruB8UygmMis1UrLlhPXS-A5O20XX8/s640/tamil+movie+nanjupuram+hot+actress++monica+masala+wet+bathing+stills-03.jpg
படத்தில் நெஞ்சில் நின்ற வசனங்கள்

1. அண்ணன் ஏன்  ரொம்ப வெட்கப்படறாரு?

நேத்துத்தானே வயசுக்கு வந்திருக்காரு?

2. ஹீரோயின் - நான் முதன் முதலா வயசுக்கு வந்தப்ப சொந்தக்காரங்க எல்லாம் ஸ்வீட்ஸோட வந்ததைப்பார்த்து மாசாமாசம் வந்தா , இதே சம்பவன் நடந்தா எவ்வளவு நல்லாருக்கும்னு நினைச்சேன்..அதே போல் மாசா மாசம் சம்பவம் நடந்தது.. ஆனா ட்யாரும் வர்லை...

3. ஹீரோயின் - யோவ்.. எனக்கு புத்தியே வேலை செய்யறது இல்லை.. இல்லன்னா உன் கிட்டே போய் மாட்டி இருப்பேனா?

4. ஹீரோ - என்னைப்பார்க்க வந்துட்டு ஏன் ஆகாத கதை எல்லாம் பேசறே.. கிளுகிளுப்பா வேற ஏதாச்சும் பேசேன்...

ஹீரோயின் - வேற ஏதாச்சும் பேசுனா வேற ஏதாவது ஆகிடும்... வம்பு
http://www.freedownloadpond.com/wp-content/uploads/2010/12/Hot-Anushka-Sharma-11.jpg
5. சந்திர கிரஹணம் முடிஞ்சுட்டா அந்த பாம்பு ஒண்ணும் செய்யாது..

அதுக்கும். இதுக்கும் என்ன சம்பந்தம்?

ராகு, கேது 2 பாம்புகளும் சந்திரனை விழுங்கறது தானே சந்திரன கிரஹணம்?


6. இங்கே பார்டி.. உன் பொண்ணை நான் எதுவும் செய்யாம இருக்கனும்னா அவளை அசலூர்க்காரனுக்கு கட்டி வெச்சுடு.. என் பார்வைல படக்கூடாது.. உள்ளூர்க்காரனை மாப்பிள்ளை ஆக்குனா.. அவ்ளவ் தான்....


7.  பரீட்சித்த மகாராஜா செத்துப்போன பாம்பை முனிவர் மேல போட்டாரு..செத்த பிராணியை மேல போடறதை விட பெரிய அவமானம் பிராமணனுக்கு இல்லை...

8.. இந்த ஏற்பாட்டுக்கு என் மக சம்மதிக மாட்டா..

அடி போடி.. கோழியை கேட்டுக்கிட்டா குழம்புக்கு மிளகா அரைப்பாங்க..?

9. ஹீரோயின் - நான் உனக்காக எவ்வளவு தடவை நடு சாமம்னு பார்க்காம காத்துட்டு இருந்தேன்.. நீ ஒரு தடவை கூட என்னைப்பார்க்க வர்லையே.. எனக்கு வீட்ல நிச்சயம் பண்ணீட்டாங்க.... ( இந்த சீனில் மோனிகாவின் நடிப்பு கலக்கல் ரகம்)

மைனா படத்துல குணச்சித்திரம் , காமெடி 2லும் கலக்கிய தம்பி ராமையா இதுல வில்லன் வேடத்துலயும் நல்லா பண்ணி இருக்காரு.. ஹீரோயினின் அம்மாவை அவர் ஆசை நாயகியாக வைத்திருப்பது, பின் ஹீரோயினை அடிய நினைப்பது மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாதது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqtsO18jFaIYRcYIqI48iahD1qN-yc3IPjHAOXSW9NB5OFKEUJ3cBHb6pfp45BItACnaofB9E5ZbSyhjzZZMBkmJL-ynrdjCbxo47N-KpqZxcuweEui-CbeOZyZm74wfndH-atbPrjAOw/s400/Nanjupuram-hot-stills-06.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்

1. படத்தோட ஓப்பனிங்க் சீன்ல ஒரு பொண்ணோட பாதத்துல பாம்பு கொத்திடுது.. 5 நிமிஷம் கழிச்சு அங்கே வர்ற ஹீரோ கடிவாய்க்கு பக்கத்துல கயிற்றால கட்டு போடறார்.. கடி பட்ட அடுத்த செகண்டே கட்டு போட்டா அது ஓக்கே..  5 நிமிஷம் ஆனதால விஷம் கொஞ்சம் ஏறி இருக்குமே.. முழங்கால்ல தானே கட்டு போடனும்?


2.  பாம்பு கொத்தி உயிருக்குப்போராடிட்டிருக்கற பொண்ணை ஹீரோ தூக்கிட்டுப்போய் காப்பாத்தறதை விட்டுட்டு ஊர்ப்பெரிய மனுஷங்க கிட்டே வாதம் பண்ணிட்டு இருக்காரே..  10 நிமிஷம்..அது ஏன்?

3.  உயரமான இடத்தை விட்டு இறங்கக்கூடாது.. 40 நாட்களுக்கு அங்கேயே இருக்கனும்கறதுதான் ஏற்பாடு.. சாப்பாடு ஹீரோவுக்கு அனுப்பறது ஓக்கே.. அவரு குளிக்கறது, பாத்ரூம் போறது இதுக்கு எல்லாம் கீழே வந்துதானே ஆகனும்?அப்போ பாம்பு அவரை போடாதா?

4.  அதே மாதிரி 40 நாட்கள் ஹீரோ எங்கேயும் போகக்கூடாதுன்னு 4 பேர் காவல் காக்கறாங்க.. அவங்க அதுக்குன்னே நேர்ந்து விடப்பட்டவங்களா?வேற வேலையே கிடையாதா? ஆனா அவங்க தண்ணியைப்போட்டுட்டு மப்புலதான் பாதி நேரம் இருக்காங்க.. 

http://3.bp.blogspot.com/_XqT5QI2tKm0/S43i9kahH_I/AAAAAAAABsY/WKLfBg587xs/s1600/Nanjupuram-hot-stills-01.jpg
5. ஹீ ரோ இந்த 40 நாட்கள் ஹீரோயினை 47 தடவை அருவிக்கரைல சந்திக்கறாரு.. ( #கவுண்ட் டவுன் கண்ணாயிரம்)...எதுக்கு ரிஸ்க்.. அந்த உயரமான இடத்துக்கு ஹீரோயினை வரச்சொல்லிட்டா மேட்டர் ஓவர்..  ( # ஐடியா அய்யா சாமி)

6. கல்யாணம் ஆகாத மகளுக்கு அவளோட அம்மா ஒரு சீன்ல நைட் எட்டேகால்க்கு 4 முழம் மல்லிகைப்பூ வாங்கித்தர்றா... எதுக்கு?அவ வாங்கி தலைல வெச்சுக்கிடு படுத்து தூங்கறா.. என கொடுமை சார் இது/ ( எடிட்டிங்க்ல ஏதாவது கில்மா சீன் கட்டா?)

7.இந்த மாதிரி த்ரில் படத்துக்கு பேக் கிரவுண்ட் மியூசிக் ரொம்ப முக்கியம்.. ஆனா சுமார்தான்... எதுக்கு தேவை இல்லாம 4 பாட்டுக்கள்?

8. வில்லன் ஹீரோயினின் அம்மாவை கரெக்ட் பண்றது ஓக்கே.. ஆனா அப்போ ஹீரோயின் அவனுக்கு மக முறை ஆகுமே...அவளையும் க்ரெக்ட் பண்றானே அது ஏன்?  ( பொறாமைல கேட்கலை.. ஒரு ஜெனரல் நாலெட்ஜை வளர்த்துக்க கேட்டேன்,, )

9. பூரான் கடிச்ச பயத்துல ஒருத்தர் பாம்பு கடிச்சதா நினைச்சு சாகறார்.. பயம் தான் ஆளை கொல்லுதுன்னு சொல்ல வர்றிங்க .. ஓக்கே? ஆனா அவன் வாயில நுரை வந்திருக்கே? அது எப்படி? பூரான் கடிச்சா நுரை வராதே?

10. க்ளைமாக்ஸ்ல ஹீரோ, ஹீரோயின் 10 கி மீ தூரம் ஓடறாங்க.. பாம்பும் விடாம துரத்துதே.. நைட் பூரா அதுக்கு களைப்பே வராதா?

11. க்ளைமாக்ஸ்ல ஹீரோ பாம்பு கிட்டே இருந்து தப்பி வில்லனோட ஆட்கள் ஹீரோயினை வெட்ட வர்றப்ப குறுக்கே வந்து கழுத்துல வெட்டு பட்டு விழறாரு.. துப்பாக்கி குண்டுன்னா அது ஓக்கே... அது எப்படி அரிவாள் வெட்டு அப்படி விழும்.. அந்த ஷாட்டை ஏன் லாங்க் ஷாட்ல க்ளியரா காட்டலை?


https://lh3.googleusercontent.com/-wjdGlSrHAnU/TYalySBjP3I/AAAAAAAAKv8/7VJvRO9lRtg/s320/actress+monica+hot+Nanjupuram+Audio+launch+stills+001.jpg
மொத்தத்துல படம் பாம்பு பயம் உள்ளவங்களுக்கு பிடிக்கும்.. படம் முடியறப்ப சீட் கீழே பாம்பு இருக்கா?ன்னு பயத்தோட பார்க்க வேண்டியதா இருக்கு...

ஏ செண்ட்டர்ல 20 நாட்கள் ஓடும். பி , சி செண்ட்டர்ல 30 நாட்கள் ஓடும்.. படம் லோ பட்ஜெட் என்பதால் ஒரு வாரம் ஓடுனாலே போட்ட காசை எடுத்துடுவாங்க.. இந்த படம் ராமநாராயணன் டைரக்‌ஷன் கிடையாது.. அவர்  இந்தப்படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணீ இருக்கார் அவ்வளவுதான்.. யாரும் பயப்பட தேவை இல்லை..

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க்  - 38

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க்  - ஓக்கே

 ஈரோடு சண்டிகா தியேட்டர்ல இந்தப்படம் பார்த்தேன்.. ரொம்ப சின்னப்படம் 2 மணீ நேரம் தான் ஓடுது

கலைஞரை இந்த காய்ச்சு காய்ச்ச என்ன காரணம்? தமிழருவி மணியன் ஆனந்த விகடன் பேட்டி - காமெடி கும்மி

1. ''இந்த சட்டமன்றத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?'' 

''தேர்தல் கமிஷன் கூடுதல் விழிப்புடன் காரியம் ஆற்றினால், கலைஞர் ஆட்சி கவிழக்கூடும்!''

ரொம்ப சிரமம் சார்...மக்கள் விழிப்புடன் இல்லையே...

2. ''கருணாநிதியை இந்தக் காய்ச்சு காய்ச்சுகிறீர்களே... அப்படி என்ன அவர் மேல் கோபம்?'' 

''20 ஆயிரம் ஈழத் தமிழர்கள் முள்ளி வாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட போதும், மூன்று லட்சம் தமிழர்கள் வதை முகாம்களில் சிதைக்கப்பட்டபோதும், தன் மகன், மகள், பேரனுக்கு மத்திய அமைச்சர வையில் இடம் பெறுவதில் காட்டிய முனைப்பை, நம் இனத்தைக் காப்பாற்றுவதில் காட்ட மறந்த சுயநலம் ஒன்றுதான் என் கோபத்துக்கு முக்கியக் காரணம்!''

 தமிழ் இனம் அழிக்கப்படும்போது கடிதம் எழுதியவர் தன் குடும்பத்துக்கு பதவி வேணும்னதும் டெல்லி விரைந்தாரே.. அதை விட்டூட்டீங்க?

'3. 'பல காலம் கட்சி வளர்த்த வைகோ, ராமதாஸ், கம்யூனிஸ்ட்டுகளைப் பின்னுக்குத் தள்ளி, விஜயகாந்த் குறுகிய காலத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' 

''சினிமாவின் வீச்சு + விஜயகாந்த்தின் துணிச்சல்  +தமிழரின் ரசனை = தே.மு.தி.க -வின் வளர்ச்சி!''

மாற்று சக்திக்காக மக்களின் ஏக்கம்?


4. ''அரசியல் தெளிவு பெற நான் படிக்க வேண்டிய 10 நூல்களின் (தமிழில்) பட்டியல்கூறுங்களேன்!'' 

1. ''பிளேட்டோவின் 'குடியரசு’ (ராமானுஜாசாரி)
2. அரிஸ்டாட்டிலின் 'அரசியல்’ (சி.எஸ்.சுப்பிரமணியம்)
3. மார்க்ஸின் 'மூலதனம்’ (க.ரா.ஜமதக்னி)
4. லூயி பிஷரின்  'காந்தி வாழ்க்கை’ (தி.ஜ.ர)
5. 'காந்திஜியின் இறுதி 200 நாட்கள்’ (வி.ராமமூர்த்தி)
6. 'இந்திய அரசமைப்பு’ (ஆ.சந்திரசேகரன்)
7. 'பண்டைய இந்தியா’ (டி.டி.கோசாம்பி - தமிழில் ஆர்.எஸ்.நாராயணன்)
8. ரஜனி பாமிதத் எழுதிய 'இன்றைய இந்தியா’ (எஸ்.ராமகிருஷ்ணன்)
9. 'பெரியார் ஆகஸ்ட் 15’ (எஸ்.வி.ராஜதுரை)
10. 'இன்றைய காந்தி’ (ஜெயமோகன்)


5. ''நீங்கள் உயிருக்கு உயிராக நேசித்த காங்கிரஸ் பேரியக்கத்தைவிட்டு வெளியே வந்தபோது, தங்கள் மனநிலை எப்படி இருந்தது?'' 

 ''நான் உயிர் கசிய நெஞ்சில்வைத்து நேசித்தது காந்தியால் வளர்க்கப்பட்டு, காமராஜரால் வழிநடத்தப்பட்ட காங்கிரஸ்  இயக்கம் காமராஜர் கண் மூடியபோதே, மக்கள் நலனுக்காக இயங்கிய காங்கிரஸ் கல்லறையில் புதைக்கப்பட்டுவிட்டது.

நான் இந்திரா காங்கிரஸை எதிர்த்து உருவான ஜனதா, ஜனதா தளத்தில்தான் என் இளமை முழுவதையும் செலவழித்தேன். மூப்பனார், காங்கிரஸைக் கைவிட்டு தனியாகத் தமிழ் மாநில காங்கிரஸை நடத்தியபோது, 'காமராஜர் ஆட்சி’ அமைக்க விரும்பி எனக்கு அழைப்பு விடுத்தார்.

'சோனியா காங்கிரஸில் கடைசி வரை இணைய மாட்டேன்’ என்று என்னிடம் அவர் உறுதி அளித்த பின்பே த.மா.கா-வில் சேர்ந்து, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினேன்.

அவருடைய மறைவுக்குப் பின், 2001-ல் த.மா.கா, சோனியா காங்கிரஸில் சங்க மித்தது என்னை மீறிய நிகழ்வு.


2009 ஜனவரி வரை எட்டு ஆண்டுகள் நான் தமிழ்நாடு காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும் நீடித்தது, என் பொது வாழ்வில் நேர்ந்துவிட்ட மாறாத களங்கம்.

இன்று நான் சிறையில் இருந்து விடுபட்ட பறவை. அரசியல் வானில் சுயேச்சையாகச் சிறகசைத்துச் சுதந்திரமாகப் பறக்கிறேன். சோனியா காங்கிரஸில் இருந்த பாவத்துக்குப் பரிகாரம்தான்... 'இனி, எந்தக் கட்சியிலும் இணைவது இல்லை. இதயத் துடிப்பு நிற்கும் இறுதி நாள் வரை, எந்த ஆட்சி அதிகாரப் பதவியிலும் அமர்வதும் இல்லை’ என்று நேர்ந்து கொண்ட வைராக்கியம்!''

மரத்துக்கு மரம் தாவும் வானரங்களுக்கு மத்தியில் நீங்கள் தமிழகத்துக்கு கிடைத்த ஒரு வரம்


'6. 'எல்லாரையும் சகட்டுமேனிக்குத் திட்டும் நீங்கள், தற்போதைய நேர்மையான 10 அரசியல்வாதிகளைப் பட்டியலிடுங்கள். அதில் நம் இருவரின் முதல் சாய்ஸ் நல்லகண்ணுவாகத்தான் இருப்பார். மீதி 9 பேரை வரிசைப்படுத்துங்களேன்?'' 

''முதலில் ஒரு திருத்தம். நான் யாரையும் எந்த நிலையிலும் திட்டி, என்னைத் தாழ்த்திக்கொள்வது இல்லை. 'காமம் செப்பாது கண்டது மொழிதல்’ முக்கியம். யாரையும் இச்சகம் பேசி நான் இன்று வரை அடைய விரும்பியது எதுவும் இல்லை. நெஞ்சில் பட்டதை நேர்படப் பேசுவேன்.

அச்சமின்றி உள்ளம் உணர்ந்த உண்மை எழுதுவேன். இதனால் எனக்கு ஏற்படும் இழப்பு, வலி போன்றவற்றை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
போகட்டும். தரவரிசைப்படுத்த என்னிடம் எந்த 'அக்மார்க்’ அளவுகோலும் யாரும் வழங்கவில்லை. அதிகப்பிரசங்கியாக இருக்கவும் நான் விரும்பவில்லை. நானறிந்து மதிக்கும் அரசியல் நேர்மையாளர் நல்லகண்ணு!''

ஆனா அவரை தமிழ் மக்களில் எத்தனை பேருக்கு தெரியும்?நித்யானந்தாவை தெரிந்த அளவு கூட தெரியாது.. ஏன்னா இங்கே பாசிடிவ்வை விட நெகடிவ்க்குத்தான் விளம்பரம் ஜாஸ்தி

'7. 'நீங்கள் கலைஞரோடு சுமுகமாக இருந்த வரைக்கும் அவர் சரியாக இருந்ததாக எண்ணுகிறீர்களா?'' 

''ஐந்தாவது முறை கலைஞர் முதல்வரான பின்பு, அவரிடம் நான் கண்ட அணுகுமுறைகளில் நல்ல மாற்றம் தெரிந்தது. தன்னுடைய வாழ்வின் மாலைப் பொழுதில் அவர் நிறை மனிதராக நல்லாட்சி தரப்போகிறார் என்று நெஞ்சார நம்பினேன்.

வால்மீகியின் ராமாயணத்தை வாசிக்கும்போதும், அருணகிரிநாதரின் திருப்புகழைப் பாடும்போதும் அவர்களுடைய மூலத்தை ஆராய்வது அறிவுடைமை ஆகாது.

நான் உறுப்பினராக இருந்த திட்டக் கமிஷனுக்கும் ஊழலுக்கும் எள்ளளவு தொடர்பும் இருக்க வாய்ப்பு இல்லை. எல்லா அரசியல் வாதிகளும் ஊழலில் ஊறித் திளைப்பதால், அவருடைய ஆட்சியில் அரங்கேறிய ஊழல் நடவடிக்கைகள் எனக்கு வியப்பைத் தர வில்லை.

ஆனால், ஈழத் தமிழரை அவர் கைவிட்ட விதம் என்னை ரணப்படுத்தியதால், பதவியை உதறிவிட்டு விமர்சனக் கணைகளை வீசத் தொடங்கினேன். அவர் என் மீது பொழிந்த அன்பு அதிகம். இன்று என்னை வாடகை வீட்டில் இருந்து ஆயிரக்கணக்கான புத்தகங் களுடன் வீதியில் நிறுத்தும் அளவுக்கு என் மீது உமிழும் வெறுப்பு மிக அதிகம்!''

கலைஞர் எப்பவும் அப்படித்தான்.. இந்த ஒரு விஷயத்தில் அவர் எம் ஜி ஆர் மாதிரி.. தனக்கு எதிரி என தெரிந்தால் ......


8. ''ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங் வாயே திறக்காமல்இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?'' 

''அவர் எந்தப் பிரச்னையிலும் வாய் திறக்காமல் இருப்பதற்கு வழங்கப்பட்டதுதான் பிரதமர் பதவி என்பதை அவர் நன்கு அறிவார்!''

டம்மி பீஸ்களிடம் அவ்வளவுதான் எதிர்பார்க்க முடியும்...

9. ''பேச்சுக் கலையில் உங்கள் முன்னோடி யார்?'' 

'' 'அவர் பொய் சொன்னார் என்று சொல்ல மாட்டேன். உண்மைக்குப் புறம்பாக அவர் பேசியிருக்கிறார்!’ என்று மென்மையான வார்த்தைகளால் மேடை நாகரிகம் காத்த 'சொல்லின் செல்வர்’ ஈ.வே.கி.சம்பத்!''

அப்பவும் உங்க கட்சி ஆளை விட்டுக்கொடுக்காம பேசறீங்களே.. பட் உங்க நேர்மை பிடிச்சிருக்கு சார்.. 

10. ''ஓட்டுக்குப் பணத்தை நான் மறுத்தாலும், வீட்டுக்குள் கவரில் பணத்தை வீசி எறிந்துவிட்டுச் சென்றார்கள் கடந்த தேர்தலின்போது! அந்தப் பணத்தை வீசி எறிய மனம் இல்லாமல் செலவழித்தேன். இப்போதும் பணம் கொடுப்பார்கள் என்கிறார் கள்... நான் என்ன செய்வது?'' 

''தவறான வழியில் வந்த பணத்தைக் கையால் தொடுவதுகூடக் தகாது. உங்களை மீறி யாராவது வீட்டுக்குள் வீசி எறிந்தால், அந்தப் பணத்தை வீதியில் கையேந்தும் ஏழைகள் பசியாறப் பகிர்ந்துகொடுங்கள்.

பாவத்தின் கறை பட்ட பணம் புனிதப்பட அது ஒன்றுதான் வழி. பணம் கொடுத்தவருக்கு வாக்களிக்கும் 'சத்தியவான்கள்’ கழுத்தில், நாளை ஊழல் பாசக் கயிறு விழுந்து இறுக்கும்போது, காப்பாற்ற 'சாவித்திரிகள்’ கிடைக்க மாட்டார்கள்!''

நாளை கிடைக்கும் பலாக்காயை விட இன்று கிடைக்கும் காலாக்காயே மேல் என சிலர் நினைக்கிறார்களே.. ? என்ன செய்வது? 


11. ''உங்களைப் போன்றவர்களால் ஏன் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை?'' 

''ஆட்சியில் பதவியைப் பெறுவதும், பணத்தைப் பெருக்குவதும்தான் வெற்றி என்றால், என்னைப் போன்றவர்கள் தோற்றுவிட்டது உண்மை. 40 ஆண்டு கால அரசியல் வாழ்வில், நான்கு செப்புக் காசுகளைக்கூட நேர்மைக்கு மாறாகவும், அறத்துக்குப் புறம்பாகவும் சேர்க்காத தூய்மைதான் பெருமைக்குரிய வெற்றி என்றால், என்னைப் போன்றவர்கள் வெற்றியாளர்களே!
பதவியை மறுத்து, பணத்தைத் துறந்தவர்... அரசியலில் தோற்றவரா... ஜெயித்தவரா?''

 காமராஜர், ஜீவா,கக்கன் இவங்க எல்லாம் வாழும் காலத்தில் பிழைக்கத்தெரியாதவர்கள் என பேசப்பட்டாலும் இன்று சரித்திரம் அவர்களை போற்றுகிறதே.. அதே போல் உங்களையும் நாளைய சரித்திரம் அடையாளம் கண்டு கொள்ளும் சார்..

12. ''பாரதி என்றதும் தங்கள் நினைவில் வருவது?'' 

'' 'மண்ணில் யார்க்கும் அடிமை செய்யோம்’ என்று வைர வரி. 'அன்பிற் சிறந்த தவமில்லை’ என்ற வேத வாசகம்!''


13. ''நல்ல நோக்கத்துக்காகத் தொடங்கப்பட்ட தலித் அமைப்புகள் அரசியல் லாபத்துக்காகத் தடம் புரள்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?'' 

''சின்னச் சின்ன சுகங்களுக்காக தலித் தலைவர்கள் சமரசங்களுக்கு ஆட்பட்டுவிடுவதற்காக வருந்துகிறேன். காந்தியைக்கூட சிறிதும் சமரசத் துக்கு இடமின்றி எதிர்த்த அம்பேத்கரைப்போல் இவர்களும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!''


'14. 'அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தூக்கிப் போராடும் மாவோயிஸ்ட்டுகள் பற்றி உங்கள் கருத்து?'' 

''அவர்களுடைய இலக்கு புனிதமானது. அதை அடைவதற்கு அவர்கள் தேர்ந்து எடுக்கும் பாதை பயங்கரமானது. வன்முறையில் கட்டப்படும் சமூக மாற்றங்கள் சரிந்து விடும் என்பதுதான் சரித்திரம்!''

15. ''ராகுல் காந்தி பற்றி உங்கள் மதிப்பீடு?'' 

''களை பறிக்காமலேயே விளைச்சலைப் பெருக்க வீண் கனவு காணும் இளம் விவசாயி!''


16. ''மறைந்த அரசியல் தலைவர்களுள் யாரேனும் ஒருவரை உயிர் பிழைக்கவைக்கும் சக்தி உங்களுக்குக் கிடைக்கிறது. யாரைப் பிழைக்கவைப்பீர்கள்?'' 

''மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முழுவதுமாக நிறைவேற்றி முடிக்க நான் உயிர் பிழைக்கவைக்கும் ஒரே மனிதர், பெருந்தலைவர் காமராஜர்!''


'17. 'தி.மு.க,  அ.தி.மு.க இந்த இரண்டு திராவிடக் கட்சிகளையும்விட்டு தமிழக மக்கள் வெளிவரவே முடியாதா?'' 

''நடிப்புச் சுதேசிகளை நம்புவதை விடுங்கள். நல்லது தானே நடக்கும்!''

சாரி சார்.. அது மட்டும் எங்களால முடியாது.. ஏன்னா நிழலை நிஜம் என்றும்,வில்லனை ஹீரோ என்றும் நம்பியே பழக்கப்பட்டு விட்டோம்.. 

காதலி ஓப்பன் டைப்பா? மூடி டைப்பா? என எப்படி கண்டு பிடிக்கறது?

http://www.cinesnacks.in/tamil-movies/actress/Anjali-New-Photos/anjali-actress-stills-157.jpg

1. தலைவருக்கு  842  சீட்  கிடைசிருக்கா?  என்ன  உளர்றே? மொத்தமே  234  சீட்  தானே?

தலைவர்  புதுசா  கட்டி  இருக்கற சினிமா  தியேட்டர்ல்  842  சீட்டாம்.

----------------------

2. ஆஹா...  சமையல்  பிரமாதம்...  உங்க  மனைவியோட  கை பக்குவம்  அருமை...

பாவம்  ஒரு  பக்கம்,  பழி  ஒரு  பக்கமா?  சமைச்சது  மாமியார்.

---------------------------

3. தலைவரோட  அலம்பல்  தாங்கல...

ஏன்?

தினத்தந்தில  கன்னித்தீவு  படக்கதை  சீக்கிரம்  முற்றும்  போடப்பட்டு  கச்சத்தீவு  கதை  ஆரம்பிக்க வேண்டும்கறாரே?

-----------------------------
http://www.stillsindia.com/gallery2/cache/south-actress/anjali/actress-anjali-saree-stills-08_900.jpg
4. வாழ்க்கைல  பல  திருப்பு  முனைகளை  சந்திச்சுத்தான்  இந்த  தியேட்டரை  கட்டினேன்...  ஆனா  ஃபயர்  ஆக்சிடெண்ட்ல  எல்லாம்  எரிஞ்சு  போச்சு...

அடடா...  டர்னிங்  பாய்ண்ட்டா  அமைஞ்சு  தியேட்டர்ல  பர்னிங்  பாய்ண்ட்டா?

---------------------------------

5. ஒரே  ஒரு  சீட்  குடுத்தா  போதும்னு  சொல்லியும்  நம்ம  தலைவரை  எந்த  கட்சியும்  கூட்டணில  சேர்த்துக்கலையே, ஏன்?

அது  சரி...  நம்ம  தலைவர்  கேட்டது  சி.எம்.  சீட்...

---------------------------------

6. தேர்தலுக்கு  முன்னால  தலைவர்  பாரி  வள்ளலா  மாறி  பணத்தை  அள்ளி  இறைக்கறாரே?

தேர்தல்  முடிஞ்ச  பிறகு  பாருங்க.  ஒப்பாரி  வள்ளலா  மாறிடுவார்.

-------------------------------
http://cinegalleries.com/wp-content/uploads/2011/03/Maharaja-Movie-20110326-anjali1.jpg
7. காதலி  ஓப்பன்  டைப்பா?  மூடி  டைப்பா? என  எப்படி  கண்டு  பிடிக்கறது?

சுடிதார்  மட்டும்  போட்டிருந்தா  ஓப்பன்  டைப்; துப்பட்டவும்  போட்டிருந்தா  மூடி  டைப்.

----------------------------------

8. டாக்டர்...  எனக்கு  தூக்கத்துல  நடக்கற  வியாதி  இருக்கு...  என்ன  பண்றது?

ஒண்ணா  தூங்கு...  இல்லைனா  நட...  இரண்டும்  உடம்புக்கு  நல்லதுதான்.

----------------------------------

9. முத்துக்கு  முத்தாக  படத்தை DMK கட்சி  ஆட்கள்  யாரும்  பார்க்கக்  கூடாது-னு  தலைவர்  சொல்லீட்டாரா?  ஏன்?

அம்மா  பாசம்  அதிகமாகி  ஓட்டை  மாற்றி  குத்திட்டா?

-------------------------------
http://mimg.sulekha.com/tapsi/stills/tapsi-stills0309.jpg
10. நடிகை  தப்ஸி (TAPSI)க்கு  இடுப்பு  பிடிச்சிருக்கறாதால  ஹாஸ்பிடல்  போயிருக்காராம்.

அடடா...  எனக்கு  கூட  தப்ஸியோட  இடுப்பு  பிடிச்சிருக்கு... நான் ஹாஸ்பிடல்  போனேனா?