Wednesday, August 04, 2010

ஆனந்தவிகடன் கவுரவித்த 5 வலைபூ எழுத்தாளர்கள்

ஆனந்தவிகடன் பத்திரிக்கை உலகின் ஜாம்பவான் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது.பல எழுத்தாளர்களை அது இலக்கிய உலகிற்கு அளித்துள்ளது.சினிமாத்துறையில் உள்ள ஷங்கர்,மணிரத்னம் போன்ற பெரிய இயக்குனர்கள் கூட விகடனில் சினிமாவிமர்சனம் படிக்கத்தவறுவது இல்லை.
விகடனில் ஒரு படம் 40 மார்க் வாங்கி விட்டால் அந்தப்படம் தேறி விடும் என்று ஒரு பேச்சு திரை உலகில் உண்டு.
உதிரிப்பூக்கள்(65 மார்க்),நாயகன்(60 மார்க்)அஞ்சலி,பசங்க (50 மர்க்) என சொல்லிக்கொண்டே போகலாம்.அவ்வளவு ஏன் அமரர் சுஜாதா கற்றதும் பெற்றதும் கட்டுரையில் ஏழைதாசன் என்ற சிற்றிதழை பற்றி ஒரு வார்த்தை எழுதினார்.அதுவரை 500 பிரதிகள் மட்டும் விற்ற புத்தகம் அந்த வாரம் மட்டும் 2400 பிரதிகள் விற்றது.வாரா வாரம் வியாழன் அன்று வெளியாகும் அது கிட்டத்தட்ட 7 லட்சம் பிரதிகள் வெளீயாகி 10 லட்சம் மக்களை சென்றடைகிறது.
அப்படிப்பட்ட இதழில் நாளை வெளிவரப்போகும் இதழில் சிறந்த 5 வலைப்பூ எழுத்தாளர்கள் பற்றி ஒரு கட்டுரை மினி பேட்டியுடன் வருகிறது.

1.கேபிள் சங்கர்-இயற்பெயர் சங்கரநாராயனன்.இவ்ர் சினி ஃபீல்டில் காலடி எடுத்து வைக்க பிளாக்ஸ்பாட் உத்வி இருப்பதாக பேட்டியில் கூறி உள்ளார்.

2.பரிசல்காரன் -இயற்பெயர் கே.பி.கிருஷ்ணகுமார்.திருப்பூர்.நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவரான இவர் ஆரம்ப காலத்தில் பத்திரிக்கைகளில் முத்திரை பதித்தவர்.

3.விக்னேஷ்வரி -பெண்களுக்கான சரியான உபயோகமான துறை வலைப்பூ என பேட்டியில் தெரிவித்துள்ளார்

4.சுந்தர்ராஜன் - இவர் மக்கள் சட்டம் என்ற வலைப்பூ நடத்தி மக்களுக்கு சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஊட்டி வருகிறார்.

5. தீபா-இவர் தனது பேட்டியில் தனது வலைப்பூ பெயரை குறிப்பிடவில்லை.

ஆனந்த விகடன் கவுரவித்த இவர்களை நாமும் வாழ்த்துவோம்.

Tuesday, August 03, 2010

ஜாக்கிசேகர் அண்ணனுக்கு ஒரு விளக்க கடிதம்

அன்பான ஜாக்கி அண்ணன் அவர்களுக்கு,
நான் 1992 ஆம் ஆண்டிலிருந்து பத்திரிக்கை உலகில் எழுதி வருகிறேன்.18 வருடங்களாக இந்தத்துறையில் எழுதி இப்போதுதான் 20 தினங்களாக பதிவுலகுக்கு வந்துள்ளேன்.என்னைக்கவர்ந்த பதிவுலக படைப்பாளிகளான கேபிள் சங்கர்,கீதப்பிரியன்,உண்மைத்தமிழன்,ஜாக்கிசேகர்,சவுக்கு உட்பட 14 படைப்பாளிகளின் படைப்புகளை அவர்கள் பிளாக் முகவரியோடு பாக்யாவில் எழுதினேன்.

உங்கள் படைப்பை பிரசுரிக்கையில் தவறுதலாக எனது பெயர் வந்து விட்டது.
நன்றி ஜாக்கிசேகர் எனவும் தொகுத்து வழங்கியது சி பி எஸ் எனவும் வர வேண்டியது.இதை நான் உடனடியாக பாக்யா ஆசிரியரிடம் ஃபோன் மூலம் தெரியப்படுத்தி விட்டேன்.நீங்கள் பல முறை மெய்ல் அனுப்பிக்கொண்டே வருவதாக அவரும் சொன்னார்.

நமக்குள் ஃபோன் தொட்ர்பு உண்டு என்பதால் நீங்கள் தாராளமாக என்னிடமே கேட்டிருக்கலாம்.
கொலை செய்த தூக்குத்தண்டனைக்கைதிக்குக்கூட தன் தரப்பு வாதத்தை சொல்ல உரிமை உண்டு.
மற்றவர்கள் படைப்பை திருடும் பழக்கம் எனக்கு இல்லை.அதை சரக்கு இல்லாதவர்கள்தான் செய்வார்கள்.இவ்வளவு பப்ளீக்காக ஒருவர் அடுத்தவர் படைப்பை திருடத்துணிவார்களா?
உங்களுக்கு தெரியாமல் போய் விடுமா?

வருகிற பாக்யா இதழில் இது பற்றிய விளக்கம் வரும் .நன்றி அண்ணே

ரஞ்சிதாவின் புதிய படம்-கோலிவுட் வி ஐ பி கள் கிலி

நடிகை ரஞ்சிதா என்றால் நாடோடித்தென்றல் என்றது ஒரு காலம்.
அமைதிப்படை அல்வாப்பார்ட்டி என்றதும் ஒரு காலம்.
இப்போதெல்லாம் ரஞ்சிதா என்றாலே நமது நினைவுக்கு வருவதே நித்யானந்தாவும்,கேமராவும்தான்.

கோடம்பாக்கத்தில் இப்போது எந்திரன் படத்துக்கு அடுத்தபடியாக பரபரப்பாக பேசப்படுவது அடுத்து ரஞ்சிதா நடித்து வெளி வர உள்ள படமான ஓடும் மேகங்களே படம்தான்.
இந்தப்படம் எடுக்கப்பட்டு பல மாதங்கள் முடிஞ்சுது.வாங்க ஆள் இல்லாம பெட்டிக்குள்ள தூங்கிட்டு இருந்தது.


இப்போ நித்யாமேட்டரால மவுசு கூடிடுச்சு.ராவணன் படத்துல ஐஸ்வர்யாராய்க்குகூட அவ்வளவு கைத்தட்டல் கிடைக்களை.4 நிமிஷம் தலையை மட்டும் காமிச்ச ரஞ்சிதாவுக்கு ஏகப்பட்ட கைத்தட்டல்.பார்த்தாங்க டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்,
இப்போ அதை வாங்க ஒரே அடிதடி.

எப்படியும் படத்தை ஓட்டி விடலாம் என்ற தைரியம்.
சாப்ட்வேர் நிறுவன சேர்மனாக நடித்துள்ளார் ரஞ்சிதா.நாயகனும், நாயகியும் அவரது சாப்ட் வேர் கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள். இவர்களுக்கும் சைபர் கிரைம் கிரிமினல்களுக்கும் நடக்கும் போராட்டமே கதை.இன்டர்நெட் மூலம் நடக்கும் மோசடிகளை அடிப்படையாக வைத்து இந்த படத்தை செழியன் இயக்கியுள்ளார்.

நாயகனாக உதய், நாயகியாக ரோஷினி நடித்துள்ளனர்.
செழியன் என்பவர் இயக்குகிறார்.ஐயாவுக்கு அதிர்ஷ்டம் ஆசிரமத்தை பிய்த்துக்கொண்டு கொட்டப்போகிறது என சினிமா புலிகள் ஆரூடம் சொல்கிறார்கள்.


”பிரான்ஸ், ஜெர்மனி, தமிழ் நாடு என சர்வதேச அளவில் நடக்கும் சைபர் கிரைம் குற்றங்களை வைத்து இந்த படத்தை எடுத்துள்ளோம். ரஞ்சிதா கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்தது. படம் முழுக்க வருகிறார்” என்று படத்தின் டைரக்டர் கூறுகிறார்..


மலையாள பிட் படங்களுக்கு இணையான வசூலை இப்படம் தரும் என கோலிவுட்டில் பரபரப்பும்,எதிர்பார்ப்பும் உள்ளது.ஆனால் ஒரு முக்கிய செய்தி எல்லோரும் எதிர்பார்ப்பது போல் அவர்
கவர்ச்சியாகவோ,கிளாமராகவோ இதில் நடிக்கவில்லை.(சே,என்ன ஒரு பேடு ட்விஸ்ட்)


Monday, August 02, 2010

VEDAM- சினிமா விமர்சனம்

  1. வேதம் என்ற அழகான தெலுங்குத் தலைப்புக்கு தேகம் என கிளுகிளுமொழிபெயர்ப்பு செய்த அந்த தமிழறிஞர் யார் என சரியாகத்தெரியவில்லை.அநேகமாக மழு என்ற மலையாள டைட்டிலுக்கு மாமனாரின் இன்ப வெறி என்றும்,ரதி என்ற  மலையாள டைட்டிலுக்கு பவுர்ணமி ராத்திரியில் ரதிதேவி என்றும் மொழி பெயர்த்த புண்ணியவானின் வழித்தோன்றலாகவும் இருக்கலாம்
  • இப்பவே சொல்லிடறேன்,அஞ்சரைக்குள்ள வண்டி டைப் படம் அல்ல இது.ராக் ஸ்டாராக ஆசைப்படும் மிலிட்டரி குடும்பத்து பெங்களூர்கார இளமை துள்ளும் இளைஞன்,மருமகளின் கிட்னியை விற்க ஹைதராபாத் வரும் ராமுலு,சொந்தமாக தொழில்(!) செய்ய ஆசைப்பட்டு,  ஹைதராபாத் வருகிற. அயிட்டம் அனுஷ்கா,தன் தகுதிக்கு மீறி மிகப்பெரிய பணக்கார பெண்ணை தானும் பணக்காரன் என்று நம்ப வைத்து எப்படியாவது அவளை திருமணம் செய்ய ஆசைப்படும் பேராசைக்காரன்.,ஹைதராபாத்தில் நடந்து ஒரு ஹிந்து ஊர்வலத்தில் தன் நிறைமாத கர்பிணியின் கர்ப்பம் கலைந்து, இனிமேல் இந்தியாவில் இருக்கக்கூடாது என்று முடிவு செய்து துபாய் போக விசா எல்லாம் ரெடியாகி, ஹைதராபாத்திலிருந்து கிளம்ப வருகிற ஒரு முஸ்லிம் இந்த 5 பேரும் ஒரு ஹாஸ்பிடலில் சந்திக்க நேரிடுகிறது.

  • இவர்கள் ஐந்து பேரும் வ்ந்து சேரும் இடமான மருத்துவமனையை, தீவிரவாதிகள் வளைத்து, கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ள,படம் ஒரு ஆக்‌ஷன் படத்துக்கே உரிய ஸ்பீடோடு சூடு பிடிக்கிறது.
  •  
  • சீன் படம் என்று நினைத்து வந்தவர்கள் கூட படத்தோடு ஒன்றி விடும் அளவுக்கு திரைக்கதை செம ஃபாஸ்ட்.. .
  •  
  • இன்னொரு முக்கியத்தகவல்,இந்தப்படத்தைத்தான் சிம்பு நடிக்க வானம் என தயாராகிறது.
  •  
  • நான் ஒரு டிஸ்ட்ரிபியூட்டரிடம் கேட்டேன்,போஸ்டரில் அனுஷ்கா விபச்சார அழகியாக நடிக்கும்னு போட்டு விளம்பரம் பண்ணியதுக்குப்பதிலா ,சிம்புவின் வானம் இதன் ரீமேக்தான் என விளம்பரம் பண்ணி இருக்கலாமே என. அதற்கு அவர் “தம்பி,30 வருஷம் இந்த சினி ஃபீல்டுல பழம் தின்னு கொட்டை போட்டவன் ,எனக்கு தெரியாதா?அனுஷ்கா ரசிகர்களும் வருவாங்க,பிட் பட ரசிகர்களும் வருவாங்க .ஒரே கல்லுல 2 மாங்கா என்றார்.

 
உலகத்திலேயே அனுபவம் குறைவுன்னா அதிக பணம் சம்பாதிகிற்து நம்ம தொழில் தான்” எனறு அனுஷ்கா டயலாக் பேசும்போது கைதட்டல் தியேட்டரை நிரப்பி விடுகிறது. 

அல்லு அர்ஜுன் தான் பணக்காரன் என்று காட்டிக் கொள்ள, அவ்வப்போது சட்சட்டென ப்ரெசென்ஸ் ஆப் மைண்டுடன் பொய் சொல்வதும், பணத்தை திருடப் போகும் போது குறுக்கே அழைக்கும் குழந்தையை கவனிக்காமல் இருப்பவர், பணத்தை திரும்ப திருடிய இடத்திலேயே வைத்தது விட்டு திரும்பி வரும் போது அந்த மழலையிடம் நிம்மதியாக விளையாடும் இடத்தில்  தான் ஒர் சிறந்த நடிகர் என்பதையும் நிருபித்திருக்கிறார்.

மணிரத்னத்தின் திருடா திருடா படத்தில் வருவது போல் எல்லா கேரக்டர்களும் ஓடிக்கொண்டே இருப்ப்து நல்ல ஸ்பீடுக்கான லீட்,

பணத்தை அபகரிக்கும்போது சரண்யாவின் மாமனாரின் நடிப்பு மிக அருமை.


5 கேரக்டர்களும் ஒரே புள்ளியில் சந்திக்கும் வரை சாதாரண ரசிகனுக்கு கொஞ்சம் பொறுமை தேவை.அதற்குப்பிறகு படம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்கிறது.

பாடல் வைக்க பல இடங்களூம் ,வாய்ப்பும் இருந்தும் டைரக்டர் தவிர்த்திருப்பது புத்திசாலித்தனம்.அனுஷ்கா அச்சு அசல் டிக்கெட் மாதிரியே நடித்து (அது எப்படி எனக்கு தெரியும் என சந்தேகம் கூடாது,ஒரு கேள்வி ஞானம்தான்)அப்ளாஸ் பெறுகிறார்.எனக்கு தெரிந்து தனம் பட சங்கீதாவுக்குப்பிறகு இந்த மாதிரி கேரக்டரில் வெளுத்து வாங்குவது நம்ம(!)
அஸ்கா அனுஷ்காதான்.


டிஸ்கி -போஸ்டரில்” என்னை ரிசர்வ் செய்து கொள்ளுங்கள்”  என அனுஷ்கா கூறுவது போல் ஒட்டி இருந்ததுதான் செம காமெடி

Sunday, August 01, 2010

பருத்தி வீரனை படுத்தி எடுத்த பெண்ணிய அமைப்புகள்

நடிகர் கார்த்தி சமீபத்தில் தினத்தந்தி இதழில் ஒரு பேட்டி அளித்தார்.அதில் நடிகை தமனாவுடன் காதலா? என கேட்டதுக்கு இல்லை வீட்டில் பெண் பார்க்கிறார்கள் என்றார்.அத்துடன் விட்டிருந்தால் பிரச்சனையே வந்திருக்காது.
வேலைக்குப்போகாத,வீட்டிலேயே இருக்குற அடக்கமான பெண்ணாக பார்க்கறோம் என்றார்.
அப்படியானால் வேலைக்கு போகிற பெண்கள் அடக்கமில்லாத பெண்களா? எனக்கேட்டு சில பெண்ணிய அமைப்புகளும்,மாதர் சஙங்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அவரது பேட்டியின் தொனி வீட்டிலேயே இருக்கும் பெண்கள் குடும்பத்துக்கு ஏற்றவர்கள்.வேலைக்கு போகிற பெண்கள் அடங்கமாட்டார்கள் என அர்த்தம் வருவதால் மாதர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.


யாகாவராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்கப்பட்டு
 என வள்ளுவர் சொன்னது போல் லைம் லைட்டில் இருப்பவர்கள் சமூகம் தங்களை உற்று கவனிக்கிறது என்பதை உணர்ந்து எந்தக்கருத்தை சொல்வதாக இருந்தாலும் ஒரு முறைக்கு 2 முறை யோசித்து பின் பேசுவது நல்லது.

ஏற்கனவே குஷ்பு கற்பு பிரச்சனையில் சிக்கி கோர்ட் கோர்ட்டாக அலைந்தார்.
வி ஐ பி கள் எப்போதும் ஜாக்கிரதையாக பேசுவது நல்லது.