Showing posts with label kerala. Show all posts
Showing posts with label kerala. Show all posts

Thursday, December 01, 2016

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - 1/12/2016- 6 படங்கள் முன்னோட்டப் பார்வை

1   சைத்தான்
2 மாவீரன் கிட்டு
3 அழகென்ற சொல்லுக்கு அமுதா
4 பழைய வண்ணாரப்பேட்டை
5  3 DAYS TO KILL

6 UNDER WORLD 5 - BLOOD WAR


1   சைத்தான்

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'சைத்தான்' படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படம் ஜுலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'பிச்சைக்காரன்' படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் 'சைத்தான்' திரைப்படம் வெளிவரவுள்ளது. இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

அருந்ததி நாயர், கிட்டி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தில், சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜோ டி க்ரூஸ் நடிகராக அறிமுகமாகிறார்.

விஜய் ஆண்டனி இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, ஒடிசா உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. படத்தின் இறுதி கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 'சைத்தான்' படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஆரா சினிமாஸ் வெளியிடுகிறது. விஜய் ஆண்டனி படங்களில் இந்தப் படமே அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


பட ரிலீஸ் தள்ளிப் போவதால் 'சைத்தான்' பட டீம் ரசிகர்களைக் கவர்வதற்காக ஒரு ஐடியா செய்திருக்கிறது. இதற்கு முன்பு ராஜதந்திரம் படத்தின் 2ம் பாகத்துக்கான முதல் ஆறு நிமிடங்களை வெளியிட்டிருந்தார்கள்.

அதே உத்தியை 'சைத்தான்' படத்துக்கும் செய்திருக்கிறார்கள் படக் குழுவினர். 'சைத்தான்' படத்தின் முதல் ஐந்து நிமிடக் காட்சியை யூ-ட்யூபில் வெளியிட்டிருக்கிறார்கள். அதோடு சேர்த்து படத்தில் இடம் பெறும் ஜெயலக்‌ஷ்மி பாடலையும் வெளியிட்டிருக்கிறார்கள். 

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்த ஐந்து நிமிடக் காட்சியும், ஜெயலக்‌ஷ்மி பாடலும் திரையிடப்பட்டது குறிப்ப்பிடத்தக்கது. இதன் மூலம் டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கும் 'சைத்தான்' படத்துக்கான எதிர்பார்ப்பை தக்க வைக்கலாம் என்ற திட்டத்திலிருக்கிறார்கள்.

இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி கூறியது...
யாரு சைத்தான்? 
நீங்க கேட்ட கேள்வியில் தான் கதையே இருக்கு. விஜய் ஆண்டனி தான் இந்தப் படத்துல சைத்தான், ஆனா பாஸிட்டிவ் ரோல் தான். ஐடி கம்பெனியில் வேலை செய்யும் விஜய் ஆண்டனிக்கு வரும் பிரச்னை என்ன, அதனால் ஏற்படும் விளைவுகள் தான் சைத்தான் படத்தோட ஒன் லைன். படத்துல திரைக்கதை தான் ரொம்ப வலிமையா இருக்கும்.  இடைவேளி வரை ஒரு பேட்டன்லையும், இடைவேளிக்குப் பிறகு இன்னொரு கலர்லையும் படம் நகரும். அதான் இந்தப் படத்தோட ஸ்பெஷல்.  
சைத்தான் எந்தமாதிரியான ஜானர்? 

 சோறு, ஐடி காட்டுனு நம்ம கொத்தடிமையா நடத்தும் கங்காணி தான் ஐடி வேலைகள். அங்கிருந்து தான் ஐடியாவைப் பிடித்தேன். அங்க நடக்குற விஷயங்கள் தான் கதை. இதில் ப்ளாக் மேக்ஜிக்கோ, சைக்கோவோ, சீரியல் கில்லர் படம் மாதிரியோ கிடையாது. ஆனால் திரைக்கதை சைக்கலாஜிக்கள் ஆக்‌ஷன் ட்ராமாவா இருக்கும். கமர்ஷியல் படம் தான், இருந்தாலும் கொஞ்சம் வெரைட்டியா இருக்கும். நான், சலீம் மாதிரி விஜய் ஆண்டனிக்கு பொருந்தும் ஒரு கதாபாத்திரம் தான் சைத்தான். எந்த ஜானருக்குள்ளும் இந்தப் படத்தை அடக்க முடியாது

2 மாவீரன் கிட்டு
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாவீரன் கிட்டு' திரைப்படம், டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி உள்ளிட்ட பலர் நடிக்க சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'மாவீரன் கிட்டு'. வசனம் மற்றும் பாடல்களை யுகபாரதி எழுதி இருக்கிறார். 45 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டது.
இப்படத்தில் 4 கெட்டப்களில் நடித்திருக்கிறார் விஷ்ணு. சில காட்சிகளைத் தவிர, மீதமுள்ள மொத்த படப்பிடிப்பையும் ஒரே கட்டமாக முடித்தது படக்குழு.
அதனைத் தொடர்ந்து மீதமுள்ள காட்சிகளையும் முடித்துவிட்டு, படப்பிடிப்பு நிறைவுற்றதாக படக்குழு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து படத்தின் இதர இறுதிகட்ட பணிகளைத் துரிதப்படுத்தியது படக்குழு.
தற்போது டிசம்பர் 1ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. மேலும், தற்போது தணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறது படக்குழு.
'மாவீரன் கிட்டு' படத்தைத் தொடர்ந்து சந்தீப் கிஷன் - விக்ராந்த் நடிக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் சுசீந்திரன்


3 அழகென்ற சொல்லுக்கு அமுதா

ரால்ப் புரொடக்‌ஷன்ஸ், ரபேல் சல்தானா  தயாரிக்கும் நாகராஜன் இயக்கும்  படம் “அழகென்ற சொல்லுக்கு அமுதா”
ஒரு இளைஞனுடைய காதலில்  நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படமே “அழகென்ற சொல்லுக்கு அமுதா”.
ரிஜன் நாயகனாகவும், அர்ஷிதா  நாயகியாகவும்  நடிக்க, உடன் பட்டிமன்றம் ராஜா, ரேகாசுரேஷ், சுவாமிநாதன், சதுரங்கவேட்டை  வளவன்,  மகாந்தி சங்கர், கலை, நிப்பு இயக்குனர் சரவணசக்தி,  மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்,
கதை, திரைக்கதை, வசனம், எழுதி  நாகராஜன் இயக்குகிறார், இவர் இயக்குனர் சுசீந்திரனிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
இசை: ரஜின்மகாதேவ்
ஒளிப்பதிவு: ஜே.கே. கல்யாணராம்
கலை: ஜேகே
படத்தொகுப்பு: கோபிகிருஷ்ணா
ஸ்டண்ட்: ஓம்பிரகாஷ்,
பாடல்கள்: கவிஞர் சிநேகன், ல்லிதானந்த், பா. முகிலன், மதுரகவி
சென்னை வியாசர்பாடி, பெரம்பூர், தண்டையார்பேட்டை, மற்றும் எண்ணூர் போன்ற பகுதிகளில் படபிடிப்பு 


4 பழைய வண்ணாரப்பேட்டை

தொகுப்பாளராக இருந்து ரசிகர்களை கவர்ந்தவர் பிரஜின். இவர் கதாநாயகனாக ‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்னும் படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக அஸ்மிதா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ரிச்சர்ட், நிஷாந்த், கருணாஸ், ரோபா சங்கர், லொள்ளு சபா ஷேஷூ ஆகியோர் நடித்துள்ளார்கள்.
ஜி.மோகன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜூபின் இசையமைத்துள்ளார். ஸ்ரீ கிருஷ்ணா டாக்கிஸ் பட நிறுவனம் மூலம் பிரகாஷ் இப்படத்தை தயாரித்திருக்கிறார். வட சென்னையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் நீண்ட நாட்களுக்கு முன்பு முடிந்தும் படம் வெளியாகாமல் இருந்தது. பல காரணங்களால் இப்படம் வெளியாவதில் சிக்கல் இருந்து வந்தது.
இந்நிலையில், அனாமிகா பிட்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிட இருக்கிறது. இந்நிறுவனம் வெளியிடும் முதல் படம் இது. இந்நிறுவனத்தின் அறிமுக விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரகனி, இயக்குனர் விஜய் மில்டன், தாமிரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
இதில் தாணு பேசும்போது, ‘இந்த படத்திற்கும் எனக்கும் நிறைய சம்மந்தம் இருக்கிறது. ஏனென்றால், நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் பழைய வண்ணாரப்பேட்டை இடத்தில் தான். அந்த இடத்தை என்னால் மறக்க முடியாது. இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் போது என்னுடைய பழைய ஞாபகங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது. இந்த படம் நிறைய போராடங்களுக்குப் பிறகு வெளியாகிறது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்’ என்றார்.
இயக்குனர் தாமிரா பேசும்போது, ‘காத்திருப்புக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். அந்த வகையில் இப்படம் காத்திருந்து வெளியானாலும் சிறந்த வெற்றி பெறும்’ என்றார்.
இவ்விழாவில் கலந்துக் கொண்ட அனைவரும் படம் வெற்றியடைய வாழ்த்தினார்கள். இப்படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாக இருக்கிறது

5  3 DAYS TO KILL

Dying of brain cancer, a dangerous international spy is determined to give up his high stakes life to finally build a closer relationship with his estranged wife and daughter, whom he's previously kept at arm's length to keep out of danger; but first, he must complete one last mission - even if it means juggling the two toughest assignments yet: hunt down the world's most ruthless terrorist and look after his teenage daughter for the first time in ten years while his wife is out of town. Written by Relativity Media


6 UNDER WORLD 5 - BLOOD WAR

The next installment in the blockbuster franchise, UNDERWORLD: BLOOD WARS follows Vampire death dealer, Selene (Kate Beckinsale) as she fends off brutal attacks from both the Lycan clan and the Vampire faction that betrayed her. With her only allies, David (Theo James) and his father Thomas (Charles Dance), she must stop the eternal war between Lycans and Vampires, even if it means she has to make the ultimate sacrifice.Written by Sony Pictures Entertainment


நன்றி - விகடன் , மாலை மலர் , தினமணி , ஆல் சினி வெப் சைட்ஸ்


Thursday, November 19, 2015

கேரளாவில் அசத்தும் நம்ம ஊர் ஐ.ஏ.எஸ் தம்பதி!


காதலின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து, வாழ்க்கையில் சாதித்துக் கொண்டிருக்கும் 
ஈரோடு கார்த்திகேயன்- சென்னை வாசுகி தம்பதியர், தற்போது கேரளாவின் அன்பிற்குரிய ஐ.ஏ.எஸ் தம்பதியராக அசத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள், தங்களின் வாழ்க்கையில் எதிர்கொண்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்கள் இங்கே...

உங்களின் காதல் எப்போது, எப்படி மலர்ந்தது?

(முதலில் பேச ஆரம்பித்த வாசுகி)" 2003-ல் மெடிக்கல் தரவரிசையில நான் தமிழகத்துலயே முதலாவதாகவும், கார்த்திகேயன் மூன்றாவதாகவும் இடம்பிடித்து, சென்னை மருத்துவக் கல்லூரியில எம்.பி.பி.எஸ் படிக்க ஆரம்பிச்சோம். எங்களுக்கு சமூக சேவையில அதிக ஆர்வம் இருந்ததால, எங்க படிப்பை சமூகத்துக்கு பயனளிக்கும் வகையில மாத்திக்க ஆசைப்பட்டோம். அதன்படி ரெண்டு பேருமே ஃபைனல் இயர் படிக்கும் போது, ஐ.ஏ.எஸ் படிக்கலாம்னு ஒரே வேவ் லென்த்துல முடிவு பண்ணினோம். அந்த டைம்ல எங்க ரெண்டு பேருக்கும், ஒருத்தர் மேல் ஒருத்தருக்கு ஃப்ரெண்ட்ஸ்ங்கிற சர்க்கிளைத்தாண்டி, காதல் வைப்ரேஷன் இருந்துச்சி. அதை முதல்ல கார்த்திதான் சொன்னாரு. கொஞ்ச நாள் கழிச்சி, நானும் சம்மதம் சொன்னேன்."

மருத்துவத்துறையே பொதுமக்களுக்கு சேவை செய்கிற துறைதானே? குறிப்பாக ஐ.ஏ.எஸ் ஆனால்தான் மக்களுக்கு சேவை செய்ய முடியுமா?


"நீங்க சொல்றது சரிதான். மக்களுக்கு எதாவது நோய் வந்த பிறகுதான், மருத்துவரால் சேவை செய்ய முடியும்; சிகிச்சைக் கொடுக்க முடியும்" எனத் தொடர்கிறார், கார்த்திகேயன். ஆனால், 'மக்களின் தேவையை அறிந்து, பிரச்னை வருவதற்கு முன்பாகவே உதவுறதுக்கு, ஆளுமை பதவிகள்ல இருந்தால்தான் செய்ய முடியும். அதனால்தான் ஐ.ஏ.எஸ் ஆக முடிவு செய்தோம்."

உங்க ஐ.ஏ.எஸ் கனவு எப்போ நிறைவேறியது?

"நீங்க ஈஸியா இந்த கேள்வியை கேட்டுட்டீங்க. ஆனா, இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல ஒரு மணி நேரமாவது ஆகுங்க. இருந்தாலும் சுருக்கமா சொல்றேன்" என புன்னகையுடன் பதிலளிக்கிறார், வாசுகி.

"2007-ம் எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு, முழு மூச்சாக நானும், கார்த்தியும் ஐ.ஏ.எஸ் படிக்க ஆரம்பிச்சோம். தேர்வுகளை எழுதி, முதல் முயற்சியிலேயே செலக்ட் ஆனோம். நான் தமிழ்நாட்டுல டாப் 10 மற்றும் கார்த்தி டாப் 20 ரேங்கிற்குள் இடம் பிடிச்சோம். எனக்கு ஐ.ஏ.எஸ் போஸ்டிங் கிடைச்சது. ஆனால் கார்த்திக்குக்கு ஐ.எஃப்.எஸ் போஸ்டிங்தான் கிடைச்சிது.

கார்த்திக் நீங்க எப்போ கலெக்டர் ஆனீங்க... உங்களுக்கு எப்போது திருமணம் நடந்துச்சி?

"எனக்கு ஐ.எஃப்.எஸ் போஸ்டிங் கிடைச்சாலும், எனக்கு ஐ.ஏ.எஸ் ஆகணும்கிறதுதான் ஒரே சாய்ஸா இருந்துச்சி. அதனால, கிடைச்ச ஐ.எஃப்.எஸ் பணியை ராஜினாமா செய்தேன். அடுத்து மறுபடியும் ஐ.ஏ.எஸ்-க்கு ப்ரிப்பேர் பண்ணினேன். ஐ.ஏ.எஸ்-ஆக செலக்ட் ஆன வாசுகி, உத்ரகாண்ட் மாநிலத்துல ட்ரெயினிங்கில் இருந்தாலும், தினமும் ட்ரெயினிங் முடிந்ததும், எனக்காக நோட்ஸ் எடுத்து இரவு நேரத்துல மெயில் பண்ணுவாங்க. மறுபடியும் 2009-ம் ஆண்டுல எக்ஸாம் எழுதினேன். அதுல ஐ.ஆர்.எஸ் பணிதான் கிடச்சிது. 

ஐ.ஆர்.எஸ் பணியில சேர்ந்து, லாங்க லீவ் எடுத்துகிட்டு, மறுபடியும் ஐ.ஏ.எஸ்-க்கு படிக்க ஆரம்பிச்சேன். மறுபடியும் 2010-ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ்தான் கிடைச்சிது. அந்த காலகட்டம் எல்லாம், 'நாங்க எவ்வளவு வேதனையில இருந்தோம் என வார்த்தையில சொல்ல முடியாது.

பொறுத்தது போதும்னு கிடைச்ச ஐ.ஆர்.எஸ் பணிக்கு ஓகே சொல்லி, ட்ரெயினிங்கில கலந்துகிட்டேன். அப்போ வாசுகி மத்திய பிரதேசத்துல சப்-கலெக்டரா இருந்தாங்க. அந்த நேரத்துல ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நாக்பூர்ல ட்ரெய்னிங்கில இருந்துகிட்டே, தொடர்ந்து ஐ.ஏ.எஸ்-க்கு ப்ரிப்பேர் பண்ணிட்டேதான் இருந்தேன். இதனால, 1-2 மாசத்துக்கு ஒரு முறைதான் நாங்க ரெண்டு பேரும் மீட் பண்ணிக்குவோம்.

ஒரு வழியா 2011-ம் ஆண்டு, நான் ஐ.ஏ.எஸ் ஆக செலக்ட் ஆனேன். இந்த இடைப்பட்ட காலத்துல எங்க முதல் பொண்ணு, சையூரி பிறந்தாள். இந்த இடைப்பட்ட காலம் முழுக்க எங்க காதல், பாசம் எல்லாமே போன் மூலமாகத்தான் டெலிவரி ஆச்சி."
 
ரெண்டு பேரும் ஐ.ஏ.எஸ் ஆனீங்க சரி. எப்படி கேரளாவுல சங்கமிச்சீங்க?

"அவருக்கு ஐ.ஏ.எஸ் ட்ரெயினிங் முடிந்து, கேரளாவுல அசிஸ்டெண்ட் கலெக்டராக போஸ்டிங் கிடைச்சுது. அப்போ எனக்கு மத்தியப்பிரதேச மாநிலத்துல சப்-கலெக்டர்ல இருந்து, கலெக்டர் ஃப்ரமோஷன் வாங்குற தருணத்துல இருந்தேன்..ஆனா, கார்த்தி கூடவே இருக்கணும்னு, கேரளாவுக்கு 'கார்டர் சேஞ்ச்'க்கு அப்ளை பண்ணினேன். ஆனா, அப்போதைய-இப்போதைய மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், 'நம்ம வீட்டுப் பொண்ண நாம ஏன் கேரளாவுக்கு அனுப்பனும்; அவருடைய கணவரை இங்க போஸ்டிங் வாங்கிட்டு வரச்சொல்லுங்க'ன்னு சொல்லிட்டார்".

ஒருவழியா, 2012-ம் ஆண்டு கார்டர் சேஞ்ச் வாங்கி, கேரளாவுக்கே போயிட்டேன். 

நீங்க ரெண்டு பேரும், இப்போ எந்தெந்த துறைகளில் பணிபுரியிறீங்க?

"திருவனந்தபுரம் சப்-கலெக்டரா பணியாற்றிட்டு இருக்கும் நான், இன்னும் ஆறு மாசத்துல கலெக்டர் ஆகிடுவேன்" எனத் தொடர்ந்த கார்த்திகேயன், "வாசுகி, 'சுசித்வா மிஷன்' '(Suchitwa Mission) எனப்படும் 'தூய்மை கேரளா' துறையின் எக்ஸிகுடிவ் இயக்குனரா இருக்காங்க" என்றார். 

இந்த குறிப்பிட்ட காலகட்டத்துல நீங்க ரெண்டு பேரும் உங்களுடைய துறைகள்ல சாதித்தவைகள்?


"கிரீன் புரோட்டோகால், சபரிமலையை தூய்மையாக்குவது, கழிவு மேலாண்மை போன்ற பல திட்டங்களை வெற்றிகரமா செயல்படுத்துகிறேன்" எனக் கூறிய வாசுகி, 'வேஸ்ட்?' என்ற புத்தகத்தை எழுதி, அதனை கேரள முதல்வர் உம்மன்சாண்டி வெளியிட்டதாக பெருமிதம் கொள்கிறார். 

தொடந்த கார்த்திகேயன், "சமீபத்தில் வெற்றிகரமாக தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது, ஆக்கிரமிப்பு நீரோடைகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தது போன்ற பல செயல்பாடுகளை செய்து முடித்தேன். தற்போது சப்-கலெக்டர் பதவியுடன், கூடுதலாக ஊரக வளர்ச்சித்துறை மூலமாக, ஏழை மக்களுக்கு இலவச வீடுகளை கட்டிக் கொடுக்கும் திட்டத்தைக் கவனிக்கும் அதிகாரியாகவும் இருக்கிறேன்" என்றார். 

இரண்டு கலெக்டர்களும் வீட்டில் எப்படி?


"நாங்க ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு, பல வருஷம் பொறுத்திருந்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதனால, வீட்டுல ரெண்டு பேருக்கும் ஈக்குவல் ரைட்ஸ்தான்" என ஆரம்பித்தார் கார்த்திகேயன்.
"தினமும் காலையில குழந்தைகள் ரெண்டு பேரையும் ரெடி பண்ணி, ஸ்கூலுக்கு அனுப்பும் வேலை என்னுடையது. மாலையில குழந்தைகளுக்கு ஸ்னேக்ஸ் கொடுத்தும், இரவு சாப்பிட வைத்தும், தூங்க வைக்கிறதும் வாசுகியோட வேலை. இப்படி வீட்டு வேலைகளை சரிசமமாக பிரித்துதான் ரெண்டு பேருமே செய்கிறோம். பெண்களுக்கு சம உரிமை கொடுக்கச் சொல்லும் காலம் இதுங்க. அது வீட்டுக்குள்ள இருந்தே தொடங்கட்டுமே" என ஆச்சர்யப்பட வைக்கிறார்கள், ஐ.ஏ.எஸ் தம்பதியினர்.

இவ்வளவு கஷ்டங்களுக்குப் பிறகு, நீங்க கத்துக்கிட்ட வாழ்க்கைப் பாடம் என்ன?

"எங்களோட காதல்தான், எங்க இலக்குக்கு வழிகாட்டியா இருந்துச்சி. அதனால, காதலுடைய பாதையில, துன்பமும்-இன்பமும் கலந்து பயணிச்சோம். முடிவுல நல்ல பாதை கிடைச்சிது. இப்போ மகிழ்ச்சியாக வாழ்ந்துட்டு இருக்கிறோம். மக்களுக்கு எங்களால் முடிந்த சேவைகளை சிறப்பாக செய்துகிட்டு இருக்கிறோம். ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து போவதுதான், காதலின் உண்மையான அர்த்தமாக நாங்க நினைத்தோம்; வெற்றி பெற்றோம்" என  புன்னகையுடன் முடித்தனர், நம்ம ஊர் ஐ.ஏ.எஸ் தம்பதியர்.

கலக்குங்க கலெக்டர்ஸ்!

thanks vikatan

Wednesday, August 29, 2012

ஓணம் பண்டிகை @ கேரளா - ஒரு பார்வை

http://www.result.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News-Paper_81919062138.jpg 

ஓணம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொண்டாடப்பாடும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும் கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் கொண்டாடப்படுகிறது .


கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதை கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாக கொண்டாடப்படுகிறது. ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளாவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பண்டிகை என (கி.பி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில்) ஓணம் பண்டிகை பற்றிப் பொறிக்கப்பட்டுள்ளது.


ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலெ எழுந்து குளிது வழிபாட்டில் ஈடுபடுவர்.கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவர். வீட்டுப் பெண்கள் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினால் ஆண கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர். நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்து கொண்டாடுகிறார்கள். ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம் , இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும்.

http://tamil.sudarnila.com/wp-content/uploads/2012/08/sabari-300x204.jpg

அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இவ்வுணவினை ஓண சாத்யா என அழைப்பர். ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகை செலுத்துவது இதன் சிறப்பம்சம். ஆறாம் நாள் திருக்கேட்டை(திரிக்கேட்டா) , ஏழாம் நாள் மூலம். எட்டாம் நாள் பூராடம். ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும். பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத்திருவிழா முடிவடைகிறது.



மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். தானம், தருமங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும் போது திருமால் வாமணனாக (குள்ள உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையேக் கொடுத்தான் பலி மகாராஜா.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN7oSt3cE4RS5GjalTbD9xj7-XKxtnpxBldBYvRJT04u67tJvJJMS6hATOzUtesKQSFiGTEVsVQbOFGecVzKp06w1fFVXmiS8fn0MFiPkrlp-Xhpow3MPlmAuRXoZ9-HiSnhkFEbG9BdM/s1600/Onam_Festival_9834_medium.jpg

அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன்தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால். தான் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழும் வரம் வேண்டினான் பலி. அதன்படி, ஒவ்வொரு திருவோணதிருநாள் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகதிற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள் இதனை நினைவு கூர்ந்து, மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்த திருவிழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.


ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும் அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக் கொண்டு வருவர்.



 பூக்கோலத்தில் அதை தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர். முதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருவர்.

http://moonramkonam.com/wp-content/uploads/2012/08/oanam-elephant.jpg

கேரள உணவுகள் என்றதுமே, புட்டு, கிழங்கு, பயறு என்பவை நினைவுக்கு வரும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி ஓண சாத்யா என்ற உணவின் சிறப்பைக் கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சாத்யா" என்ற உணவு தயரிக்கப்படுகிறது.


புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெறுகிறது. இவ்வுணவு எளிதில் செரிமானம் ஆவதற்காக " இஞ்சிக்கறி", "இஞ்சிப்புளி" ஆகியவற்றை உணவுடன் எடுதுக் கொள்வர்.


"புலிக்களி" அல்லது "கடுவக்களி" என்று அழைக்கப்படும் நடனம் ஓணத்திருவிழாவின் நாலாம் ஓணம் எனப்படும் நான்காம் நாளில் கொண்டாடப்படுகிறது. களி என்பது மலையாள மொழியில் நடனத்தைக் குறிக்கும். இந்நாளில் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி வருவர். புலிக்க்ளி நடனம் சுமார் 200 வருடங்களுக்கு முன் கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராம வர்ம சக்தன் தம்புரான் என்ற மன்னனால் ஓனம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டதாகும். இசை ஒலிக்கேற்ப ஒரு வித தாளத்துடன் புலி வேடமிட்டு ஆடுவர்.




ஓணம் பெண்கள் மகிழ்வோடு ஆடும் நடனம் "கைகொட்டுக்களி". கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து பாடல்க்ளைப் பாடியபடி ஆடுவர். பெரும்பாலும் கைகொட்டுக்களி பாடல்கள் மன்னன் மகாபலியைக் குறித்தும் அவரை வரவேற்பதாகவும் அமையும்.




ஒணம் திருவிழாவில் தவறாமல் இடம்பெறும் மற்றொரு சிறப்பு யானைத் திருவிழாவாகும். 10 ஆம் நாளான திருவோணத்தன்று, யானைகளுக்கு விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும் பூ தோரணங்களாலும் அலங்கரித்து அணிவித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். யானைகளுக்கு சிறப்பு உணவுகளும்




ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகள் என 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.


http://www.vikatan.com/news/images/onam.jpg
கேரளாவின் ஓணம் பண்டிகையைப் போன்றே ஒரு பூத்திருவிழா தாய்லாந்து மக்களால் கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள் அணிந்து, வீட்டைப் பூக்களால் அலங்கரித்து பல வகையான உணவு வகைகளை சமைத்து உண்டு மகிழ்வர். பூக்களால் ஆன வண்டிகளில் ஊர்வலம் நடைபெறும்.



நாகர்கோவில்: ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை பூ மார்க்கெட் களைகட்டியுள்ளது.


கேரள மக்கள்  திருவோணம் பண்டிகை கொண்டாடுகின்றனர். ஓணம் அன்று அவர்கள் தங்கள் வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிடுவது வழக்கம். இதனால் ஓணம் என்றாலே பூ விற்பனை சூடுபிடிக்கும். அதிலும் குமரி மாவட்டத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற தோவாளை பூ மார்க்கெட்டில் இருந்து பூ வாங்கிச் செல்ல கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருவார்கள்.



ஓணம் பண்டிகை கொண்டாடவிருப்பதையடுத்து  காலை முதலே தோவாளை பூ மார்க்கெட்டில் திரும்பும் திசையெல்லாம் கேரள வியாபாரிகள் கூட்டம் தான். கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையின்போது தோவாளை மார்க்கெட்டில் பூக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த ஆண்டு அப்படி எதுவும் நடக்காமல் இருக்க தர்மபுரி, சத்தியமங்கலம், ஒசூர் பகுதிகளில் இருந்து ஏராளமான லாரிகளில் பூக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் நேற்று மார்க்கெட்டில் பூக்களுக்கு தட்டுப்பாடில்லாமல் இருந்தது.\

http://tamil.boldsky.com/img/2012/08/28-ela-ada-recipe-300.jpg

கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையின்போது ரூ.2000க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பிச்சிப்பூவின் இன்றைய விலை ரூ.750 ஆகும்.



தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்களின் இன்றைய விலை(1 கிலோ)



மல்லிகைப் பூ - ரூ.700
வாடாமல்லி - ரூ. 50
கேந்தி - ரூ.30
சம்பங்கி - ரூ.200
கோழிப்பூ - ரூ. 25



ஓணம் என்றால் அத்தப்பூக்கோலம் தவிர அறுசுவை விருந்தும் உண்டு. விருந்துக்கு தேவையான காய்கறிகளை கேரள வியாபாரிகள் தமிழகத்தில் இருந்து தான் வாங்கிச் செல்கின்றனர்.



ஓணம் வ்ந்தாலே நாகர்கோவில் அப்டா மார்க்கெட், வடசேரி கனக மூலம் சந்தை, பஞ்சலிங்கபுரம் சந்தை, மார்த்தாண்டம் காய்கறி சந்தை, தக்கலை வாழைத்தார் சந்தை,குலசேகரம் காய்கறி சந்தை ஆகியவற்றில் வியாபாரம் சூடுபிடித்துவிடும். நேற்று காலை முதல் இந்த சந்தைகளுக்கும் கேரள வியாபாரிகள் படையெடுத்தனர்.
http://suriyantv.com/wp-content/uploads/2012/04/4-6-2012-5-the-10-day-annual-festival-of.jpg


கதளி, ரஸ்தாளி, பச்சை வாழை, செவ்வாழை பழத்தார் ஒன்று ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்பனையானது. ஆனால் வாழை இலைக்கு தான் கடும் தட்டுப்பாடாக இருந்தது. அதனால் ஒரு வாழை இலை ரூ.5 முதல் ரூ.10 வரை விற்கப்பட்டது. பண்டிகை அன்று வாழை இலையில் விருந்து உண்பது தான் சிறப்பு என்பதால் அதிக விலை கொடுத்து வாழை இலைகளை வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.



மேலும் வெள்ளரிக்காய், சேனை, பூசணிக்காய், தடியங்காய், சீனி அவரைக்காய், முள்ளங்கி, முட்டைக் கோஸ், காலி பிளவர், உருளைக்கிழங்கு போன்றவையும் இன்று அதிக விலைக்கு விற்கப்பட்டன.


நன்றி - விக்கி பீடியா, கூகுள், அமஸ் மேடம்

Friday, May 06, 2011

கேரளா ஃபிகர்களும்,ஒரு கேனத்தனமான கால்குலேஷனும்

http://www.cinepicks.com/malayalam/actress/roma/malayalam-actress-roma.jpg

1.ஆஃபீஸில் தன் திறமையால் ஆண்கள் 30 % முன்னேறுகையில் தன் இளமையால் பெண்கள் 60% முன்னேறி பிரமோஷன்,இன்கிரீமெண்ட்டில் அமோக வெற்றி பெறுகிறார்கள்

----------------------

2. கோயிலுக்குள் வரும் பெண்கள் எல்லாரும் லட்சுமிகரமாய் இருக்கிறார்கள் . ஆண்கள் இந்திரனாக இருக்கிறார்கள்# சைக்காலஜி

---------------------

3.சுடிதாரை ஆண்கள் வெறுக்க முதல் காரணமே அது பெண்களின் இடை மறைக்கும் உடை என்பதால் தான்#டிரஸ்ஸாலஜி

------------------------
http://1.bp.blogspot.com/_MjCKDkRXAD0/SjJnVH0kIMI/AAAAAAAABqQ/uFkaVvVZI-Y/s400/actress+nayanthara+kerala+saree+stills%2Bactress+nayanthara+kerala++saree+images%2Bactress+nayanthara+kerala+saree+photo+gallery%2Bnayanthara+simple+look%2Bnayanthara+natural+beauty.jpg
4, கூட்ட நெரிசலில் சிக்கி மீளும் பெண்கள் பஸ்ஸை விட்டு இறங்கும்போது குற்ற உணர்வுடனும் ,ஆண்கள் மற்ற உணர்வுடனும் வீடு திருபுகிறார்கள்# பஸ்ஸாலஜி

------------------------

5. உங்க கிட்டே மட்டும் தான் என்னால மனம் விட்டுப்பேச முடியுது என லேடி ஸ்டாஃபிடம் தன் முதல் பொய்யை ஆரம்பிக்கிறார்கள் ஆண்கள் #ஆஃபீஸாலஜி

------------------

6. சிநேகிதியுடனான சம்பாஷணைகளை ஆண் தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறான்.ஆனால் அவள் டைரியில் கூட எழுதுவதில்லை#லேடீஸாலஜி

--------------------
http://www.jeevan4u.com/filmstars/lakshmigopalaswami/Malayalam%20Actress%20Lakshmi%20Gopalaswami%20Photos.jpg
7. கேரளாவில் மட்டுமே 1000 ஆண்களுக்கு 1084 பெண்கள் என்ற விகிதத்தில் பெண்கள் எண்ணிக்கை இருக்கிறது # அப்போ மீதி 84 பேர் என்ன பண்ணுவாங்க?

------------------------

8. குழந்தைக்காக தன் தினசரி வாழ்வில் 16 மணி நேரம் உழைப்பதாக சொல்பவர்கள் குழந்தையுடன் ஒரு மணி நேரம் கூட செலவு செய்வதில்லை # அவசர உலகம்

-------------------------

9. தனக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தியை விட தன் படைப்பு பத்திரிக்கையில் பிரசுரம் என்ற செய்தியே எழுத்தாளனுக்கு குஷி#ரைட்டராலஜி

-------------------------
http://gallery.southdreamz.com/cache/actress/anu/kerala-actress-anu_720.jpg
10. ரொம்ப நாள் யோசித்து காதல் கடித்தத்துக்குபிள்ளையார் சுழி போடும்போது கல்யாணப்பத்திரிக்கையுடன் காலிங்க் பெல்லை அடிக்கிறாள் தோழி # டூ லேட்

----------------------- 

டிஸ்கி - வெளுத்ததெல்லாம் அமலாபால்னு நினைக்கிற அப்பாவியா நீங்க?

Thursday, February 17, 2011

நமீதா- கேரளா - டிஸ்ஸப்பாயிண்ட்மெண்ட்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbQroVVj6k8LXYAuE_9g2t9a5R6Lj1CLv8cuA1as9mCcG2GGQ2_-3aa3SNZpXcNOiRl6rMj3UL1sAFwR-Yjn-gCewJgpy1NqfBZ9qaBN1Op_dG2gnPOxXObAQcs1ghFv9qCIV_17anpVAx/s400/namitha_hot_11.jpg
1.அரசியல் வானில் என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகுதுன்னு யாராலும் சொல்ல முடியாது.

ஏன் முடியாது? நீரா ராடியாவுக்கு ஒரு ஃபோன் போட்டு, கேளுங்க.. ஃபுல் டீட்டெயிலும் தெரிஞ்சுடும்.

-----------------------------------
2. என்னது? திருடுனது ஒரு லேடியா? துரத்திப்பிடிச்சீங்களா?

எஸ் ஸார்,  பிடிச்சேன், மெத் மெத்னு இருந்தது... மயக்கத்துல இருந்தப்ப நழுவி ஓடிட்டா...

----------------------------

3.எதுக்காக பைக்ல 120 கிமீ வேகத்துல போனே..?

என்னைத்துரத்திட்டு வந்த பைக்கோட ஓனர் 140 கி  மீ வேகத்துல வந்தாரு.. அதான்.

---------------------------------

4.நேத்து ஒரு ஃபுல் வாங்கி நானும், என் ஆளும் ஆளுக்கு ஒரு ஆஃப் அடிச்சோம்.


ஓஹோ... நீ பாதி , நான் பாதி கான்செப்டா?


-------------------------------------

5. மோஹனா.. காலைல எந்திரிச்சதும் ஒரு குட்மார்னிங்க் மெசேஜ் அனுப்ப இவ்வளவு நேரமா? நீ எல்லாம் ஒரு லவ்வரா?

அது சரி.. நீங்க பாட்டுக்கு ஈசியா சொல்லீட்டீங்க.. நான் 184 பேருக்கும் அனுப்ப வேண்டாமா?நீங்க 185 வது லவ்வர். குரூப் மெசேஜ் செட்டிங்க்ஸ் வேற கிடையாது. தனித் தனியாதான் அனுப்பனும்.

(வாழ்க உத்தம பத்தினி)

------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz8ggU7CkOLwisrDCz1mDRYgxUdRO_LXOuGoh2hykqE7wNWpTFjO1ZYQ01xaU62WhRpKxzSTLKHoWQi94_ysdLJncGQLnJb3oXsxuecd-ITCk_Tk1XRJZtRpLk1zF40iVorSAfg4gI2URI/s1600/namitha.jpg
6. பழையன கழிதலும் ,புதியன புகுதலும்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே...

அதுக்காக நீ வருஷா வருஷம் லவ்வரை மாத்தறது சரி இல்லை.

--------------------------------------

7.டாக்டர்.. நர்ஸ் நமீதாவை நான் லவ் பண்றேன்..

யோவ்.. கஷ்டப்பட்டு கேரளா போய் நல்ல ஃபிகரா கூட்டிட்டு வந்து அப்பாயிண்ட் பண்றது  நான்... ஈசியா செட் பண்ணி கூட்டிட்டு போய் என்னை டிஸ்ஸப்பாயிண்ட் பண்றது நீயா..?

---------------------

8.பணத்துக்காகவும்,பதவிக்காகவும் அலையற ஆள் நான் கிடையாதுன்னு தலைவர் சொல்றாரே...

ஆமா.. அவர் அலையறதே மகளிர் அணித்தலைவி சொப்பன சுந்தரிக்காகத்தானே...

--------------------------------

9. எந்தக்கட்சியை சேர்ந்தவரா இருந்தாலும் தியாகிகளுக்கு பரிசு உறுதின்னு தலைவர் சொல்றாரே...?

அதாவது ... தான் இருக்கறது எந்தக்கட்சியா இருந்தாலும் அதை உதறிட்டு வந்து தலைவர் கட்சில சேர்ற தியாகிகளுக்குன்னு அர்த்தம்.

--------------------------------------------------

10.நம்ம தலைவர் பெண்களுக்கு நிறைய உதவிகள்  பண்ணி இருக்காராமே..?

ஆமா, அவரோட சின்ன வீட்டுக்குபெங்களூர்ல ஒரு பங்களா,அவரோட ஆசை நாயகிக்கு ஆக்ரால ஒரு இடம்னு வாங்கிப்போட்டிருக்காரே..

----------------------------------

டிஸ்கி - 1 உலக பதிவுலக வரலாற்றிலேயே முதன் முறையாக நமீதாவை பாவாடை தாவணியில் ஸ்டில் வைத்தது அட்ரா சக்க என்றுதான் நினைக்கிறேன். இதற்காக டீசண்ட் மேன் ஃபிரம் டீசண்ட் ஃபேமிலி விருதை எனக்கு யாராவது தருவதாக இருந்தால் அதை எந்த பிகுவும் இல்லாமல் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன்.

 டிஸ்கி 2 - முதல் ஸ்டில் அவரோட “சின்ன” வயசுல எடுத்தது... 2வது ஸ்டில் அவரோட பெரிய வயசுல எடுத்தது... ஹி ஹி ஹி