Showing posts with label doctor. Show all posts
Showing posts with label doctor. Show all posts

Thursday, May 10, 2012

கோடை காலத்தில் வரக்கூடிய காய்ச்சல் வகைகள் -தடுப்பது எப்படி?

ன்றிக் காய்ச்சல் பரவுகிறது’ என்று பீதி பரவுகிறது. 'காலரா தாக்குகிறது’ என்று எகிறுகிறது பதற்றம். விநோத வைரஸ் காய்ச்சல் வாரக்கணக்கில் ஆட்களை முடக்கிப்போடுகிறது என்று மறுபுறம் வதந்தி. சாதாரணக் காய்ச்சல்தான்... ஆனால், அசாதாரணப் பாதிப்புகளை உண்டாக்கி விடும் கோடை காலக் காய்ச்சல்கள்.


 கோடை காலத்தில் வரக்கூடிய காய்ச்சல் வகைகள் என்னென்ன; அவை வராமல் பாதுகாத்துக்கொள்வது எப்படி; வந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?


ஸ்டான்லி மருத்துவமனை டீன் கீதாலக்ஷ்மியும் ஓய்வுபெற்ற மாநகராட்சி பொதுமருத்துவர் பஞ்சாட்சரம் செல்வராஜனும் விளக்குகிறார்கள்.


1. வைரஸ் காய்ச்சல்


இன்ஃப்ளூயன்சா வைரஸ் பாதிப்பினால் வரும் காய்ச்சல் இது. நாள் முழுவதும் காய்ச்சல் இருந்துகொண்டே இருக்கும். கடுமையான உடம்பு வலி இருக்கும். தொண்டைக் கரகரப்பு, அடிக்கடி இருமல் ஏற்படலாம். ஆனால், சளிப் பிரச்னை இருக்காது. அதிகபட்சம் மூன்று நாட்கள் வரை பாதிப்பு இருக்கும். சாதாரண பாரசிட்டமால் மாத்திரை போதுமானது.


 ஆனால், ஓய்வு முக்கியம். மருந்து மாத்திரை போட்டுக்கொண்டு வேலை செய்து உடலை வருத்திக்கொள்வதைவிட, ஓய்வு எடுத்தாலே குணமாகிவிடும். நீர்ச் சத்து மிக்க பழங்கள், பழச் சாறு, மோர், தண்ணீர் அடிக்கடி குடிக்க வேண்டும். மிதமான உணவாகச் சாப்பிட வேண்டும்.



2. மலேரியா


மலேரியா நான்கு வகையான வைரஸ் களால் உருவாகிறது. பொதுவாக, தமிழகத்தில் வைவாக்ஸ் என்கிற வைரஸ் மூலமாகவே மலேரியா உருவாகும். இது உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தாது. ஆனால், சமீப காலமாக வட மாநிலப் பயணிகள் மூலம் ஃபால்சிபேரம் என்கிற வைரஸ் மூலம் ஒருவிதக் காய்ச்சல் பரவுகிறது. இது உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தக்கூடியது. 


ஆகையால், அதீத எச்சரிக்கை அவசியம். மலேரியாவுக்கு முக்கியமான காரணம் கொசுக்கள். மலேரியாவைப் பரவச் செய்யும் அனாஃபிலஸ் கொசுக்கள் சுத்தமான தண்ணீரில்தான் வளரும். எனவே, நீர்நிலைகள், வீடுகளில் தண்ணீர்த் தொட்டிகளில் டெமிஃபாஸ் என்கிற மருந்தை வாரத்துக்கு ஒருமுறை தண்ணீரில் தெளிக்கலாம் (இந்தத் தண்ணீரைக் குடிப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது). 


ஆனால், இந்த மருந்து வெளியே கிடைக்காது; உள்ளாட்சி அமைப்புகளிடம் மட்டும்தான் கிடைக்கும். ஆகையால், உங்கள் ஊர்/பகுதி உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் மருந்து தெளிக்க நடவடிக்கை எடுங்கள். இதேபோல, வீட்டி லும் தண்ணீர் நிரம்பிய பாத்திரங்களை மூடிவையுங்கள். தண்ணீரைத் தேங்கவிடாதீர்கள்.



அரை மணி நேரத்துக்கு ஒருமுறை விட்டுவிட்டுத் தாக்கும் கடும் குளிர்க் காய்ச்சலும் கடும் தலைவலியும் இதற்கான அறிகுறிகள். பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர், 'குளோரோக்வைன் ப்ரைமாக்வைன்’ மருந்தை எடுத்துக்கொண்டால், மலேரியா மூன்று, நான்கு நாட்களில் சரியாகும். நீர்ச் சத்து மிக்க, மிதமான உணவாகச் சாப்பிட வேண்டும்.



3. டெங்கு, சிக்குன் குனியா

டெங்கு காய்ச்சலுக்கும் சூத்திரதாரிகள் கொசுக்கள்தான். எய்டெஸ் வகையைச் சேர்ந்த இந்தக் கொசுக்களும் சுத்தமான நீரில்தான் வாழும். சிக்குன் குனியாவுக்கும் இதே கொசுக்கள்தான் காரணம். டெங்கு பாதிப்பு ஏற்பட்டால், மூன்று நாட்கள் வரை நல்ல காய்ச்சல் இருக்கும். இதைத் தொடர்ந்து கண் வலிக்கும். பின்பு கடுமை யான தலைவலி உருவாகும். இது எலும்பு களைப் பாதிப்பதால், மூட்டுப் பகுதிகள் அதிக வலியெடுக்கும்.


 வீரியம் அதிகமா னால், மூக்கில் இருந்து ரத்தம் வெளிப்படும். அதிகபட்சம் மூன்று நான்கு நாட்கள்தான் நீடிக்கும். சிக்குன் குனியாவுக்கும் கிட்டத் தட்ட இதே அறிகுறிகள்தான். முதியவர் களை அதிகம் பாதிக்கும். காய்ச்சல் இரண்டு நாட்களில் சரியாகிவிடும். ஆனால், மூட்டு வலி நான்கு மாதங்கள் வரை நீடிக்கும். இந்த இரு வகைக் காய்ச்சலுக்குமே 'பாரசிட்டமால்’ மாத்திரைதான் வழங்கப்படுகிறது. பெரியவர்களுக்கு ஐஸ் ஒத்தட மும் குழந்தைகளுக்கு மிதமான தண்ணீரில் ஒத்தடமும் கொடுக்கலாம். நீர்ச் சத்து மிக்க, மிதமான உணவாகச் சாப்பிட வேண்டும். நல்ல சத்து மிக்க ஆகாரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.


4. டைஃபாய்டு


சால்மோனெல்லா என்கிற பாக்டீரியாவால் டைஃபாய்டு உருவாகிறது. தமிழில் இதைக் குடல் அம்மை நோய் என்பார்கள். டைஃபாய்டு ஏற்பட்டால், கொஞ்சம் கொஞ்சமாகக் காய்ச்சல் கடுமையாகும். தொடர்ந்து பசியின்மை, உடல் எடை குறைதல், பேதி உருவாகும். காய்ச்சல் வந்து ஒரு வாரம் கழிந்த நிலையில்தான் பரிசோதித்து, அதை உறுதிசெய்துகொள்ள முடியும்.


 இந்த நோயால், பாதிக்கப்பட்ட வர்கள் கார உணவுகளைத் தவிர்த்து, வயிற்றைப் புண்ணாக்காமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறை 'பாரசிட்டமால்’ மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்குத் தடுப்பு ஊசி உண்டு. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இதைப் போட்டுக் கொண்டால், டைஃபாய்டு வராமல் தவிர்க்க முடியும். நீர்ச் சத்து மிக்க, மிதமான உணவாகச் சாப்பிட வேண்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும் உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.


5. சின்ன அம்மை


சின்ன அம்மை 'வேரிசெல்லா’ என்கிற வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடியது. 100 டிகிரிக்கும் மேல் காய்ச்சல் இருக்கும். கண்களில் இருந்து தண்ணீர் கொட்டும். வயிறு, நெஞ்சுப் பகுதிகள் சிவப்பாகி, கை, கால் என்று உடலின் பிற பகுதிகளிலும் சிறு சிறு நீர்க் கட்டிகள் உருவாகும். கடும் அரிப்பை உருவாக்கும். 


அரிப்பு ஏற்பட்டு சிவக்கிற சமயத்தில்தான் இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவும். அதனால் சிவக்கும் சமயத்தில் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும். சுமார் ஒரு வாரம் வரை இந்த நீர்க் கட்டிகள் இருக்கும். பின்பு, அவை தானாகவே காய்ந்து உதிர்ந்துவிடும். நல்ல ஊட்டச் சத்து மிக்க காரம் இல்லாத உணவுகளை உட்கொள்ள வேண்டும். நீர்ச் சத்து மிக்க உணவு, இளநீர், பழச்சாறு அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். நோயாளி இருக்கும் இடம் மிகுந்த சுத்தத்தோடு இருக்க வேண்டும். தடுப்பு ஊசி உண்டு.


6. பன்றிக் காய்ச்சல்


ஹெச்-1 என்-1 என்கிற கிருமி மூலம் பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் முதல் 24 மணி நேரத்துக்குக் காய்ச்சல் குறையாது. இது நுரையீரலைப் பாதிப்பதால், சளிப் பிரச்னையோடு மூச்சுத் திணறலும் இருக்கும். கண்களில் இருந்து தொடர்ந்து நீர் வழியும். இவை தான் அறிகுறிகள். இந்தப் பிரச்னை கள் இருந்தால், உடனடியாக அரசு மருத்துவமனைகளையோ, அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளையோ அணுகி, முதலில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 


பன்றிக் காய்ச்சல்தான் என்று உறுதிப்படுத்தப் பட்டால், உடனடியாக இதற்கென அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பாதிக் கப்பட்டவரை அனுமதிக்க வேண்டும். ஏனெனில், பன்றிக் காய்ச்சலுக்கு எல்லா மருத்துவர்களும் சிகிச்சை அளிக்க முடியாது. மருத்துவமனைகளில் 'ஓஸ்டில் டாமிவிர்’ என்கிற மாத்திரை கொடுக்கப் படுகிறது.


இது காற்றின் மூலமாகப் பரவுவதால், பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தும்மும்போது கைக்குட்டையைக் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். பாதிப்புக்கு உள்ளானவர்கள் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க இரும்புச் சத்து மற்றும் ஊட்டச் சத்து மிக்க உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். 


ஆஸ்துமா, சுவாச மண்டல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், புற்று நோய்க்கான சிகிச்சை பெறுபவர்கள், மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டவர்கள், டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்கள், ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். பன்றிக் காய்ச்சலுக்குத் தடுப்பு ஊசி உண்டு. இதை வருடத்துக்கு ஒரு முறை போட்டுக் கொண்டால், நோய்த் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.



முக்கியமான மூன்று...


கோடைக் காலத்தில் எல்லா வகையான காய்ச்சலில் இருந்தும் தப்பிக்க மூன்று விஷயங்கள்தான். 


1. கொசுக்களை அண்ட விடாதீர்கள்; 


2. தண்ணீர் நிறையக் குடியுங்கள், நீர்ச் சத்து மிக்க, ஊட்டச் சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்ளுங்கள்; 



3.சுற்றுப்புறச் சுகாதாரத்தைப் பேணுங்கள், வெளியில் சாப்பிடுவதைத் தவிருங்கள்!

நன்றி - விகடன்

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள். 

Sunday, May 29, 2011

டியர்.. ஆயில் (OIL) உள்ளவரை உன்னை மறக்க மாட்டேன்.....

http://www.chennaivision.com/userfiles/monica.jpg

''ஆயுளைப் பாதிக்கலாமா ஆயில்?''

'என்னை இந்த அளவுக்கு குண்டாக்கியது எண்ணெய்தான்!’ - பருமனான நண்பர் ஒருவர் சமீபத்தில் சிலேடையாகச் சொன்னது இது.

நவீன நாகரிக உலகில் பல பிரச்னைகளுக்கு நாம் பயன்படுத்தும் அளவுக்கு அதிகமான சமையல் எண்ணெய்தான் காரணம் என்கிறது சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி. எண்ணெய், வயிற்றை மட்டும் அல்ல, வருமானத்தையும் பதம் பார்க்கும் ஒன்றாக மாறிவிட்டது.
பர்ஸை பாதிக்காத அளவுக்கு சிக்கனமாகவும், வயிற்றைப் பாதிக்காத அளவுக்கு பக்குவமாகவும் ஆயிலைப் பயன்படுத்தும் விதம் பற்றி இங்கே விளக்குகிறார் சென்னை விஜயா மருத்துவமனையின் உணவு ஆலோசகர் பி.கிருஷ்ணமூர்த்தி.

''சமையலில் எண்ணெய் சேர்ப்பது சுவைக்காக மட்டுமே என நம்மில் பலரும் நினைக்கிறோம். அது தப்பு. பொதுவாக ஒரு மனிதன் உடல் நலனுடன் இருக்க வேண்டும் என்றால் மாவுச் சத்து, புரதம், கொழுப்பு, விட்டமின் மற்றும் தாது உப்புகள் தேவை. இந்த ஐந்தும் அளவோடு இருந்தால் வளமோடு வாழலாம்.

இதில் கொழுப்பு சத்துதான் ஆயில். தோலின் பளபளப்பு, நோய் எதிர்ப்பு சக்திக்கு எண்ணெய் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு, ஒரு மனிதனுக்குத் தேவையான மொத்த கலோரியில், சுமார் 25-35 சதவிகிதம் ஆயில் மூலம் கிடைத்தால் போதும். இதுவே சர்க்கரை நோயாளிகள் என்றால் 25-30 சதவிகிதமும், இதய நோயாளிகள் என்றால் 25 சதவிகிதமும் இருந்தால் போதும்.
சுமார் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு நம்மவர்களிடையே உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. குடும்பப் பெண்கள் சமையல் தொடங்கி துணி துவைப்பது வரை பெரும்பாலான பணிகளை உடலை வளைத்து நெளித்து செய்தார்கள். இன்றைக்கு எல்லாம் இயந்திரமயமாகி விட்டது. உடல் உழைப்பு என்பது மருந்துக்குக் கூட இல்லை. உடல் உழைப்பு அதிகமாக இருந்த காலத்தில்கூட  மக்கள் எண்ணெய் பதார்த்தங்களை அளவோடுதான் சாப்பிட்டார்கள்.

அந்த காலத்தில் விருந்து என்றால் மூன்று மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ இருக்கும். ஓட்டல்களில் சாப்பிடுவது என்பது அரிதாக இருக்கும். இப்போதோ மாதத்துக்கு குறைந்தது 5-6 விழாக்களில் பங்கேற்று வயிறு முட்ட சாப்பிடுகிறார்கள். அத்தனையும் ஆயில் பதார்த்தமாகவே இருக்கிறது.
நம்மவர்களின் தினசரி உணவுப் பட்டியலில் அதிக ஆயில் இருக்கும் பதார்த்தங்களான பஜ்ஜி, போண்டா, ஃபிரைட் ரைஸ், சில்லி சிக்கன், பர்க்கர் போன்றவற்றில் ஏதாவது ஒன்று நிச்சயம் இடம் பிடித்துவிடுகிறது. பலரும் காலை 11 மணி வாக்கில் அல்லது மாலை 4 மணி வாக்கில் டீ, காபி உடன் பஜ்ஜி அல்லது போண்டாவை சாப்பிடுவதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் வயிற்றை கெடுத்துக் கொள்வதோடு உடலில் தீமை செய்யும் கொலஸ்ட்ராலையும் ஏற்றிக் கொள்கிறார்கள். 
அந்த காலத்தில் உடலுக்கு தீமை செய்யாத நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்யை நம்மவர்கள் அளவோடு உணவில் சேர்த்துக் கொண்டார்கள். ஏதாவது விருந்து விஷேசம் என்றால் மட்டுமே நெய்யை உணவில் சேர்த்துக் கொண்டார்கள். இன்றைக்கு விலைவாசி உச்சத்தில் இருப்பதால் வீட்டு பட்ஜெட்டை குறைக்க பாமாயில் போன்ற உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் எண்ணெய்களை அதிகமாக பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம்.

ஒரு பக்கம் எண்ணெய் செலவை மிச்சப்படுத்துகிறோம் என்று செயல்பட்டு, மறுபுறம் அதற்கும் சேர்த்து மருத்துவத்துக்கு செலவழித்து வருகிறோம். இந்த விஷயத்தில் நம் மக்களிடம் இன்னும் அதிக விழிப்புணர்வு வர வேண்டும்!'' என்றவர் சற்று நிறுத்தி, அதிக ஆயில் எப்படி பிரச்னையாக மாறுகிறது என்பதையும் விளக்கினார்.நாம் சாப்பிடும் ஆயில் அளவு தேவைக்கு அதிகமாகும்போது கொலஸ்ட்ரால் என்கிற கெட்ட கொழுப்பாக மாறி ரத்தத்தில் சேர்கிறது.

இது, ரத்தக் குழாயில் உறையும் அபாயம் இருக்கிறது. இதனால், ரத்த ஓட்டம் தடைபடும். அப்படி நடக்கும்போதுதான் மாரடைப்பு போன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன.
 http://www.koodal.com/cinema/gallery/events/2011/423/vambu-and-bhadra-movie-press-meet-stills_1_165234123.jpg
தற்போது கணவன், மனைவி, இரு குழந்தைகள் உள்ள நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் மாதத்துக்கு மூன்று லிட்டர் ஆயிலை பயன்படுத்துகிறார்கள். இதை பாதிக்குப் பாதியாக ஒன்றரை லிட்டராக குறைப்பது உடல் நலனுக்கும் அவர்கள் பட்ஜெட்டுக்கும் நல்லது. பொதுவாக வயது வந்த பெரியவர்களுக்கு ஒரு மாதத்துக்கு வீட்டில் 400-500 மில்லியும். 14 வயதான சிறுவர்களுக்கு சுமார் 300 மில்லி சமையல் எண்ணெய்யும் செலவழித்தால் போதும். மேலும் உடல் பருமன் உள்ளவர்கள், முகப் பரு உள்ளவர்கள் ஆயிலைக் குறைப்பது அவசியம்.

சாலையோர கடைகளில் விற்கப்படும் வடை, சமோசா, பஜ்ஜி போன்றவை ஆரோக்கியம் குறைந்த கசடு எண்ணெய்யில் பொறிக்கப்படுவதால், அவற்றை தினசரி மற்றும் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

குறைவான விலையில் கிடைக்கிறதே என்று, இவற்றை உண்பதால்தான் பெரிய அளவில் மருத்துவ செலவுக்கு ஆளாக வேண்டிய இக்கட்டு உருவாகிறது!'' -அக்கறையோடு சொல்கிறார் டாக்டர்  கிருஷ்ணமூர்த்தி.

நன்றி - டாக்டர் விகடன்

Saturday, May 07, 2011

சகல கலா டாக்டர் டாக்டர்.. அகில உலக அழகி நர்ஸூ நர்ஸூ

''முதுகு வலிக்கு டாட்டா!''

நம்பிக்கை கொடுக்கும் டாக்டர் டிப்ஸ்..


முதுகு வலி... பைக் ஓட்டுபவர்களைப் பயமுறுத்தும் பூதம். இரண்டு-மூன்று ஆண்டுகள் தொடர்ந்துஅதிக நேரம், அதிக தூரம் பைக் ஓட்டுபவர்களுக்கு, இந்தப் பிரச்னை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. கார், பஸ் ஓட்டும் டிரைவர்களும் முதுகு வலிக்குத் தப்புவது இல்லை!

நம்முடைய முதுகு, வாகனத்தில் உட்காரும் வசதிக்காக உருவானது அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அதனால், தொடர்ந்து பைக் ஓட்டுபவர்களுக்கு முதுகு வலி தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது. 'முதுகு வலியில் இருந்து விடுபட வழியே இல்லையா?’ என்று கேட்பவர்களுக்கு, சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் மூளை மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் கே.ஸ்ரீதர், ஆறுதலாக சில ஐடியாக்கள் வழங்குகிறார்.

''தொடர்ந்து பைக், கார் ஓட்டுபவர்களுக்கு முதுகு வலி பிரச்னைகள் வருவதற்கான சாத்தியம் அதிகம். இதற்குக் காரணம், பைக் மற்றும் கார்கள் அல்ல. நம் ஊர்சாலைகள்தான்! குண்டும் குழியுமான மோசமான சாலைகளில் பயணிக்கும்போது முதுகுத் தண்டில் வலி ஏற்படும். அதிக தூரம் பைக் ஒட்டுவதோடு, கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்கள் என்றால், இந்தப் பிரச்னை இன்னும் அதிகரித்துவிடும். பொதுவாக, ஸ்கூட்டர்கள் ஓட்டுவது (குறைந்த தூரப் பயணங்களுக்கு) ஓரளவுக்கு முதுகு வலித் தொல்லைகளில் இருந்து காப்பாற்றும்.

அதேபோல், புல்லட் போன்ற எடை அதிகமான பைக்குகளை ஓட்டும்போது பைக் அதிர்வுகளும், குதிப்பதும் குறைவாக இருக்கும். இதனால், முதுகு வலி பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு. முதுகு வலிப் பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, எடை அதிகமான பைக்கைப் பயன்படுத்தலாம்.

அடி முதுகுக்கு என்று தனியாக விற்பனை செய்யப்படும் 'லம்பர் சப்போர்ட்’ பெல்ட்டை அணிந்து கொண்டும் பைக் ஓட்டலாம். முதுகு வலி வராமல் தடுப்பதற்கு 'பேக் எக்ஸர்ஸைஸ்’ நிறைய இருக்கின்றன. யோகாவும் செய்யலாம்!'' எனச் சொல்லும் டாக்டர் ஸ்ரீதர், மேற்கொண்டு கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களையும் இங்கே பட்டியல் போடுகிறார்...


பர்ஸைக் கவனியுங்கள்!

பர்ஸில் தேவையில்லாத பல்வேறு விஷயங்களை வைத்துக்கொண்டு தடிமனான பர்ஸோடு பலரும் பயணிக்கிறார்கள். பின் பக்கம் பர்ஸ் கனமாக இருப்பதால், கார் ஓட்டும்போதோ அல்லது பைக் ஓட்டும்போதோ நம்மை அறியாமலேயே பர்ஸ் இருக்கும் பக்கத்துக்கு எதிர்ப் பக்கமாக சாய்ந்து உட்காருவோம். இது நாளடைவில் முதுகு வலியை ஏற்படுத்தும். அதனால், பர்ஸின் தடிமனைக் குறைவாக வைத்துக் கொள்ளுங்கள்.


பெல்ட்டின் இறுக்கத்தைத் தளர்த்துங்கள்!

மிகவும் இறுக்கமான பேன்ட், பெல்ட் அணிந்துகொண்டு பைக் ஓட்டுவதை நிறுத்துங்கள். பேன்டும், பெல்ட்டும் இறுக்கமாக இருக்கும்போது, நம்மால் சரியான பொசிஷனில் உட்கார்ந்து பைக் ஓட்ட முடியாது. இது, முதுகுவலிப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அதனால், நீண்ட தூரப் பயணங்கள் செய்யும் போது, எப்போதுமே இறுக்கமான உடைகள் அணிந்துகொண்டு வாகனம் ஓட்டாதீர்கள். வாகனம் ஓட்டும்போது இடுப்பில் இறுக்கம் இல்லாமல் ரிலாக்ஸாக உட்கார்ந்து ஓட்டப் பழகுங்கள்.

அடி முதுகுக்கு சப்போர்ட் தேவை!

அடி முதுகு (லம்பர்) பகுதிக்கு எப்போதுமே சப்போர்ட் தேவை. லேட்டஸ்ட் கார்களில் 'லம்பர் சப்போர்ட்’ கொண்ட இருக்கைகளே வந்துவிட்டன. அதேபோல், அலுவலகத்தில் உட்காரும்போதும் முதுகுக்குத் தொல்லை தராத, வசதியான இருக்கையில் உட்கார வேண்டியது முக்கியம்.

அடி முதுகுக்கு சப்போர்ட்டாக சின்ன தலையணையைக் கூட பின்பக்கமாக வைத்துக் கொள்ளலாம். அல்லது பெரிய டவலை முக்கோண வடிவில் மடித்து பின் பக்கம் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம்.

பிரேக் வேண்டும்!

தொடர்ந்து பைக் அல்லது கார் ஓட்டுவதை நிறுத்துங்கள். தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் வாகனம் ஓட்டுவது என்பது வாகனத்துக்கும், ஓட்டுபவருக்கும் நல்லதல்ல!

2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாகனத்தை நிறுத்திவிட்டு கை, கால்களை நீட்டி மடக்கி ரிலாக்ஸ் செய்யுங்கள். அதேபோல், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தால், அடிக்கடி கால்களை நீட்டி மடக்குவது நல்லது.

சரியான பாதைகளைத் தேர்ந்தெடுங்கள்!

குண்டும் குழியுமான மோசமான சாலைகள் வழியாகத்தான் பயணிக்கப் போகிறோம் என்றால், முடிந்தவரை அந்த வழியைத் தவிர்த்துவிடுவது நல்லது. குண்டும் குழியுமான சாலைகள்தான் முதுகு வலித் தொல்லைகள் ஏற்பட முக்கியக் காரணம். கார் ஓட்டுபவர்களைப் பொறுத்தவரை டிரைவரின் சரியான உயரத்திற்கேற்ப ஸ்டீயரிங் பொசிஷனை மாற்றி வைத்துக்கொள்வது நல்லது!

உடற்பயிற்சி தேவை!
 
தினமும் அரைமணி நேரம் நடப்பது, முதுகுவலி உள்பட பல்வேறு வலிகள் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ளும். ஸ்டீம் தெரபி, மசாஜ் ஆகியவை முதுகு வலிக்கு நிவாரணமாக அமையும்.  நீச்சல் பயிற்சி செய்வதும் நல்லது!

நன்றி - டாக்டர் விகடன்