Showing posts with label corruption. Show all posts
Showing posts with label corruption. Show all posts

Monday, March 27, 2023

CAUGHT OUT ;CRIME,CORRUPTION,CRICKET (2023) -சினிமா விமர்சனம் ( டாக்குமெண்ட்ரி ) @ நெட்ஃபிளிக்ஸ்


கிரிக்கெட்  ரசிகர்கள்  மட்டும்  அல்லாமல்  பத்திரிக்கைத்துறை  மற்றும்  இன்வெஸ்டிகேஷன்  ஜர்னலிசம்ல  ஆர்வம்  உள்ளவர்களும்  பார்க்கத்தகுந்த  இந்த படம்  டாகுமெண்ட்ரி  ஸ்டைலில்  எடுக்கப்பட்ட  ஒரு சின்ன  படம் . படத்தின்  மொத்த  ட்யூரேஷனே  ஒன்றே  கால்  ,மணி  நேரம்  தான். நெட்  ஃபிளிக்ஸ்ல  ரிலீஸ்  ஆகி  உள்ளது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


1990 களில்  கிரிக்கெட்  இந்தியா  மட்டுமல்லாமல்  உலகம்  பூரா  கொண்டாடப்பட்ட  ஒரு  விளையாட்டாக , ஒரு  திருவிழாவாக  இருந்தது . தெஹல்கா  டாட்  காம்  எனும்  பத்திரிக்கை  கிரிக்கெட்டில்  நிகழ்ந்த  ஊழல்  , மேட்ச்  ஃபிக்சிங்  பற்றி  ஆவணங்களை  வெளியிட்டு உலகத்துக்கு  ஊழல்வாதிகளை  வெளிச்சம்  போட்டுக்காட்டியது 


இந்திய  வீரர்களைப்பொறுத்தவரை  மனோஜ்  பிரபாகர் , கபில் தேவ் , அசாருதீன்  ஆகியோர்  மீது  குற்றச்சாட்டு  வைக்கப்ப்ட்டது . இதில்  கபில்  தேவ்  மீது  வைக்கப்பட்ட  குற்றச்சாட்டுகள்  நிரூபிக்கப்படவில்லை.  மீதி  இருவருக்கும்  வாழ்நாள்  தடை  விதிக்க[ப்பட்டது 


 இது  பற்றிய  டாகுமெண்ட்ரி  படம்  தான்  இது 


 இதில் அசாருதீன் , மனோஜ்  பிரபாகர்  ஆகியோரின்  பேட்டிகளும் , கபில்  தேவின்  சிறிய  உரையும்  இணைக்கப்பட்டுள்ளது 


சுப்ரியா சோப்தி  குப்தா  தான்  இதன்   டைரக்டர்



  ரசித்த  வசனங்கள் +  முக்கிய  தகவல்கள் 


1 கிரிக்கெட்  வீரர்களை  ரசிகர்கள்  கடவுளாக  நினைத்தார்கள், ஆனால்  அவர்களும்  மனிதர்கள் தானே? அந்த  பலவீனத்தைக்காட்ட  ஆரம்பித்தார்கள் 

2   1990கள் தான் கிரிக்கெட்  உலகின் உச்சம். கிரிக்கெட்  வீரர்கள் கடவுளாக  கொண்டாடப்பட்டார்கள் 

3  பிரஸ்  பாக்ஸ் ல  உட்கார்ந்திருப்பவர்கள்  புக்கீஸ்  கிட்டே  ஃபோன்ல  பேசக்கூடாது, அது  இல்லீகல் 

4  சூதாடுபவர்கள்  எப்போதும்  ஜெயித்துக்கொண்டே  இருப்பதில்லை , புக்கீஸ்  ஒரு போதும்  தோறபதில்லை

5  நைண்ட்டீஸ்ல  கேபிள்  கனெக்சன்  வந்ததால  கிராமங்கள்  பூரா  கிரிக்கெட்  மேட்ச்  பார்க்க  ஆரம்பிச்சாங்க . பெரும்பாலானவர்களின்  கனவு  இந்தியாவுக்காக கிரிக்கெட்  விளையாடுவது

6  மனோஜ்  பிரபாகர்  ஒரு  வேகப்பந்து  வீச்சாளர், ஆல்ரவுண்டர். ஏழைகளின்  கபில்தேவ்  என  அழைக்கப்ட்டார் 

7   நீங்க  ரொம்ப  கோபக்காரர்னு  சொல்றாங்களே?  

மனோஜ்  பிரபாகர்   -  கிரவுண்ட்ல  கோபத்தைக்காட்டலைன்னா  உங்க  கதை  அங்கேயே  முடிஞ்சிடும் 

8  மனசுல  இருக்கறதை  வெளில  சொல்ல  வாய்ப்பு  இல்லை. அதுக்கு  பயமும்  ஒரு  காரணம் 

9  1997ல்தான்  இது  பற்றிய  நியூஸ்  வெளில  வந்தது

10  பாகிஸ்தானுக்கு  ஆதரவாக  மேட்சை  திருப்பி  விட  அதாவது  நாங்கள்  மோசமாக  விளையாட  25  லட்சம்  ரூபாய் தரப்பட்டது  என  மனோஜ் பிரபாகர்  சொன்னார்

11  ஸ்போர்ட்ஸ்  என்ப்து  எழுதி  வெச்சு  பேசி  வெச்சு  அதன்படி  நடப்பது  கிடையாது . எதிர்பாராத  நேரத்தில்  யாரும்  எதிர்பாராதது  நடப்பதுதான் அழகு

12   1997ல்  புகார்  எழுந்தாலும்  2000ம்  ஆண்டில்  தான்  விஷயம்  வெளில  வந்தது 

13   தென்  ஆப்பிரிக்க  வீரர்  ஆன  ஹான்சி க்ரோஞ்சி  ஒரு  குக்கீஸ்  கிட்டே  பேரம்  பேசிய  டேப்  வெளியானது 

14  தெஹல்கா  டாட்  காம்  பத்திரிக்கையின்  நோக்கம்  ஊழலை  வெளிக்கொண்ருவது. இது  ஒரு  உருது  வார்த்தை . உண்ர்ச்சி  தாக்கம்  பற்றிக்கொண்டு  வெடித்தல்   இதன்  ஸ்லக்  லைன்  நியூஸ்  வியூஸ்  ஆல்   த ஜூஸ் 

15  இந்தியாவிலேயே  முதன்  முறையாக  ஸ்பை  கேமரா  ஹிடன் காமரா  யூஸ்  பண்ணுனது  இந்த  கிரிக்கெட்  மேட்ச்  ஃபிக்சிங்  விவகாரத்தை  வெளிக்கொணர்வதில்தான்

16  ஃபாலன்  ஹீரோஸ்   எனும்  முதல்  டாக்குமெண்ட்ரி  எடுத்தோம்

17  கபில்  தேவ் ,மனோஜ் பிரபாகர்  இருவருக்குமிடையே  இருந்த  தனிப்பட்ட  விரோதம்  காரணமா? 

18  மேட்ச்  ஃபிக்சிங்கில் சம்பந்தப்பட்ட  கிரிக்கெட்  வீரர்களின்  பெயர்  வெளி  வந்தது , ஆனால்  புகீஸ்  பேரு  வர்லை 

19 ஹான்சி க்ரோஞ்சி  =30,000  டாலர்  லஞ்சமா  கொடுத்தாங்க 

20 முகேஷ்  குப்தா  தான்  தானாக  முன்  வந்து  சாட்சி  சொன்னவர்

21 அசாருதினின்  மணீக்கட்டை  கடவுள்  பொறுமையா  அருமையா  படைச்சிருக்கார்னு  தோணும், பவுலரின்  ஈகோவை  உடைக்கும்  வல்லமை  கொண்டது  அவர்  மணிக்கட்டு

22  அசாருதீன்  முதல்  மேட்சிலேயே  சதம்  அடித்தார். 2வது  3 வது  மேட்சிலும்  சதம் அடித்தார்

23   இந்த  கிரிக்கெட்  மேட்ச்  ஃபிக்சிங்கில்  அசார்  பேர்  அடிக்கடி வர  ஆரம்பித்தது

24  அசாருதினின்  கேர்ள்  ஃபிரண்ட்  ஃபெஷன்  ஷோவுக்கு  பணம்  தேவைபபட்டதாக  அஜய்  சர்மாவிடம்  சொல்லி  இருக்கார்

24  டெல்லி  தாஜ்  ஹோட்டல் - எம் கே  குப்தா  - அசார்  மீட்டிங்

25  ஒரு  குக்கிக்கு  மற்ற  வீரர்களை  விட  கேப்டன் தான்  அதிக  ஃபொகஸ்

26  அமெரிக்கா -ஹரோட்ஸ்   ல பர்ச்சேஸ்  பண்ணிய  அசார்  பில்லை  வேற  ஒரு  குக்கி 

27  மேட்ச்  ஃபிக்சிங்  இல்லீகல்  ஆனா  கிரிமினல்  குற்றம்  இல்லை 

28 அசாருதீன்  மனைவி சங்கீதா  வீட்டில்  ரெய்டு


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -     இது  ஒரு  வரலாற்று  ஆவணம்  என்பதால்  நியூஸ்  பேப்பர்  படிக்கும்  ஆர்வம்  உள்ளவர்கள்  பார்க்கலாம்.  போர்  அடிக்காமல்  சுவராஸ்யமான  தகவலுடன்  படம்  நகர்கிறது , ரேட்டிங் 2.5 / 5 

Saturday, June 11, 2011

ஏர்செல் ஊழல் vs தயாநிதி மாறன் -அதிர வைக்கும் உண்மைகள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_w6TudwSeLIi9hyphenhyphenSEvmFijhf7pY6wvm5A1LjOUmLcbQL5KFVstBp2NnWaiQ5hmbtXsN7XDh0Pqr71e1YBFO9nX5hg9dE-9XoRBlz8fnahqSQpRGio93ep2cDltvLmH7XNPpKIFkgQI14/s1600/Aircel+wifi+service.jpgசிக்கவைத்த சிவசங்கரன்... தவிக்கும் தயாநிதி மாறன்!

16 வருடப் பகையின் கதை

சி.பி.ஐ. துருப்புச் சீட்டுக்களில் ஒருவராக மாறி, இன்று தயாநிதி மாறனின் பதவிக்கு வேட்டு வைக்கும் மனிதராகி இருக்கிறார், ஏர்செல் சிவசங்கரன். ஒரு காலத்தில் கருணாநிதி, முரசொலி மாறன்... இருவரின் செல்லப்பிள்ளை. இன்று தயாநிதி மாறனுக்கு கடுமையான எதிரி!

'கடந்த 16 ஆண்டு காலப் பகையின் கதை’ என்று விவரம் அறிந்த வட்டாரங்களால் சொல்லப்படும் கரன்ஸி ஆட்டத்தைப் பற்றிய தகவல்கள் இங்கே...!

'என்னுடைய ஏர்செல் கம்பெனியை மலேசியாவின் மேக்சிஸ் குழுமத்துக்கு விற்கச் சொல்லி தயாநிதி மாறன் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார்!’ என்று சிவசங்கரன் சி.பி.ஐ-யிடம் புகார் சொன்னதாகத் தகவல் வெளியானது. மாறன் இந்தக் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்து, ''சிவசங்கரன் மில்லியனர் இல்லை, அவர் ஒரு மல்டி பில்லியனர். அவரை யாரும் மிரட்ட முடியாது. அப்படியே மிரட்டப்பட்டு இருந்தாலும் அவர் நீதிமன்றத்துக்கு அப்போதே சென்று இருக்கலாம்'' என்று பதில் கூறி இருந்தார். ஆனாலும் இந்த சர்ச்சை அடங்குவதாக இல்லை!


யார் இந்த சிவசங்கரன்?

சென்னையில் வசிக்கும் 54 வயதாகும் சிவசங்கரன், திருவண்ணா மலைக்காரர். பி.இ. (மெக்கானிக்கல்), எம்.பி.ஏ. (ஹார்வர்டு பல்கலைக் கழகம்) படித்தவர். ஸ்டெர்லிங் குரூப் மற்றும் சிவா வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று ஆரம்பித்து, பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர். பின்லாந்து நாட்டில் காற்றாலை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்று கடந்த 30 வருடங்களில் பல்வேறு பிசினஸ்களில் ஈடுபட்டு வந்தாலும், உச்சகட்ட பெரிய டீல் என்றால், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனியிடம் 4,860 கோடிக்கு ஏர்செல் உள்ளிட்ட மூன்று  நிறுவனங்களை விற்று லாபம் பார்த்தது.

 பிறகு, நார்வே நாட்டில் ஷிப்பிங் கம்பெனி, மற்றொரு நாட்டில் மினரல் வாட்டர் பிசினஸிலும் இறங்கினார். மகாராஷ்டிர மாநிலத்தில் ரிசார்ட் பிசினஸ், சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்திலும், தனது பணத்தை முதலீடு செய்தார். லேட்டஸ்ட்டாக, வெளிநாட்டில் படிப்பு முடித்துத் திரும்பிய தனது மகனை ஷிப்பிங் பிசினஸைக் கவனிக்கும்படி பணித்திருக்கிறார்.


கம்ப்யூட்டர் உலகில் நுழைகிறார்!

அது 1983-ம் ஆண்டு. 'கம்ப்யூட்டர்’ என்ற வார்த் தையே பலரை மிரள வைக்கும். அது எப்படி இருக்கும் என்றுகூட அப்போது பலருக்குத் தெரியாது. இனி உலகத்தை இதுதான் ஆட்சி செய்யப் போகிறது என்று மற்ற அத்தனை பேரையும் முந்திக்கொண்டு இனம் கண்டுகொண்ட சிவசங்கரன், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜின் அப்பா நடத்திவந்த ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தை சகாயமான விலைக்கு வாங்கி, அதற்கு ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர்ஸ் என்று புதிய பெயர் சூட்டினார்.

அந்தக் காலகட்டத்தில், கம்ப்யூட்டர் என்றாலே லட்சத்தில் விலை சொன் னார்கள். இவர் வெளிநாடுகளில் இருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, அதைவைத்து இங்கே கம்ப்யூட்டர் உருவாக்கி, ஒவ்வொன்றையும் சுமார் 33,000 என்று விற்பனை செய்தார். தொலைநோக்குப் பார்வை, கடுமையான உழைப்பு, தொழில்நுட்ப மூளை, வியாபார தகிடுதத்தங்கள் என்று அனைத்தையும் சரிவிகிதத்தில் பயன்படுத்தி, ஒரு சில ஆண்டுகளிலேயே மற்ற நிறுவனங்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர் நிறுவனத்தை வளர்த்தார்.

அதன் பிறகு சென்னை டெலிபோன்ஸ் 'எல்லோ பேஜ்’ புத்தகத்தை பிரின்ட் பண்ணும்  டெண்டரைக் கைப்பற்றினார்.  கம்ப்யூட் டரை அடுத்து இன்டர்நெட் அறிமுகமானபோது... 'வந்துவிட்டது, அடுத்த புரட்சி’ என்பதை உணர்ந்து கொண்ட சிவசங்கரன், 'டிஷ்நெட் டிஎஸ்எல்.’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

அதைத் தொடர்ந்து ரயில்வே ஸ்டேஷன்களில் 'பாரீஸ்தா’ ரெஸ்டாரெண்டுகளை ஆரம்பித்தார். இன்னொரு பக்கத்தில் பிட்னெஸ் சென்டர்களும் நடத்தினார். செல்போன் அறிமுகமானதும், அதன் வீச்சு பலமாக இருக்கும் என்பதை எல்லோரையும்விட மிகமிக முன்னதாகவே மோப்பம் பிடித்த சிவசங்கரன், ஏர்செல் நிறுவனத்தை தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு துவக்கினார்.

வேகமாக வளர்ச்சியடைய ஏர்செல் என்ற ஒரு குதிரை போதாது என்பதை உணர்ந்த சிவசங்கரன், 210 கோடி கொடுத்து 'ஆர்பிஜி செல்லுலார்’ என்ற இன்னொரு செல்போன் நிறுவனத்தையும் வாங்கினார்.

சிவசங்கரனின் பாலிசி!

'வியாபாரத்தில் சென்டிமென்ட் பார்க்கக்கூடாது’ என்பது சிவசங்கரனின் தாரக மந்திரம். தான் ஆரம்பித்த டிஷ்நெட் நிறுவனம், எதிர்பார்த்த வளர்ச்சி அடையவில்லை என்றதும், சற்றும் தயங்காமல் 270 கோடிக்கு விற்றுவிட்டார்.

கோடிகளில் புரண்டாலும்... அவரின் எண்ண ஓட்டங்கள் எப்போதும் எளிமையானதுதான். தன் சகாக்களிடம் பேசும்போது விஷயத்தை எளிமையாக புரியவைக்க அவர் பல்வேறு உதாரணங்கள் சொல்வதுண்டு. ''என்னோட மனைவி, பிள்ளைகளைத் தவிர நான் போட்டிருக்கும் சட்டையைக் கூட விற்பேன்!'' என்று அடிக்கடி சொல்வார்.

''சரவணபவனுக்குப் போற எல்லோருமே இட்லியைத்தான் வாங்குறாங்க. சட்னி, சாம்பாரை வாங்குவதில்லை. ஆனால் சட்னியும் சாம்பாரும் கொடுக்கவில்லை என்றால் இட்லி விற்பனை ஆகாது. அதுபோல, நம்மிடம் கம்ப்யூட்டர் வாங்க வருபவர்களுக்கு நாம் பிரின்டரையும் சேர்த்தே கொடுக்க வேண்டும். அப்போதுதான் கம்ப்யூட்டர் விற்பனை அதிகமாகும்!'' என்பது அவரது பிரபலமான உதாரணம்.

''சிவசங்கரன் தொலைநோக்குப் பார்வை கொண்ட கலர்ஃபுல் தொழில் அதிபர்!'' என்று சொல்பவர்களும் உண்டு. ''ஒரு தொழில் இல்லாமல் பல்வேறு தொழில்களை ஆரம்பித்து நடத்தும் அவரை தொடர் தொழில் தொழிலதிபர்!'' என்றும் சொல்கிறார்கள்.

கம்ப்யூட்டரின் பயன்பாடு மெள்ளத் தொடங்க ஆரம்பித்ததுமே எழுத்தாளர் சுஜாதாவை தனக்கு ஆலோசகராக வைத்துக் கொண்டவர் சிவசங்கரன். அப்போது உடன்வேலை பார்க்க வந்தவர்தான் கனிமொழியின் கணவர் அரவிந்தன்!

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் சிறு கட்டடத் தில் அலுவலகம் வைத்திருந்தவர், 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் தேனாம்பேட்டை பகுதியில் 24 கோடி களைக் கொடுத்து, ஹரிகந்த் டவர் என்கிற கட்டத்தை விலைக்கு வாங்கி 'ஸ்டெர்லிங் டவர்’ என்று பெயர் மாற்றி னார். அதில் இருந்து அவரை 'ஸ்டெர்லிங்’ சிவசங்கரன் என்ற அடைமொழியுடன்தான் அழைப்பார்கள்.

 சிவசங்கரனைப் பற்றி அவரது பிசினஸ் நண்பர்களிடம் கேட்டபோது, ''கடந்த 30 வருடங்களில் அவர் சுமார் 25 தொழில்களில் ஈடுபட்டு இருந்தார். எந்த பிசினஸையும் அவர் தொடர்ந்து நடத்தியது இல்லை. ஒரு தொழிலைத் துவக்குவார்; அதை நன்றாக வளர்ப்பார்; ஒரு லெவலுக்கு வந்ததும், அதைப் பல மடங்கு லாபம் வைத்து வேறு யாரிடமாவது விற்றுவிட்டு வேறு பிசினஸுக்குத் தாவிவிடுவார்.

உதாரணத்துக்கு, ரயில்வே ஸ்டேஷன்களில் காபி ஷாப்-களை பிரமாண்டமாகத் துவங்கி, பிறகு அதை அடுத்தவருக்குக் கைமாற்றிவிட்டார். இதுதான் சிவசங்கரனின் ஸ்டைல். ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு அடிக்கடி மாறியதால், பலத்தரப்பட்ட பிசினஸ் பிரமுகர்களுடன் மோதல், விரோதம் அதிகமானது. இதுவே அவருக்கு நிறைய தொழில்முறை எதிரிகளை உருவாக்கிவிட்டது!’' என்று சொல்கிறார்கள்.

கருணாநிதி, முரசொலி மாறன் அறிமுகம்!

1989-ம் ஆண்டில், அப்போதைய முதல்வர் கருணாநிதி, டிட்கோ நிறுவனம் சார்பாக பிரபல தொழில திபர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். திடீரென ஒரு பிரமுகர் எழுந்து, 'நான் ஒரு தொழில் அதிபர். பெயர் சிவசங்கரன். டிட்கோவில் போய்க் கடன் கேட்டால், முதலியாரா? ரெட்டியாரா? என்ன சாதி என்றுதான் கேட்கிறார்கள்.

தொழிற்சாலை துவங்குவது பற்றிக் கேட்காமல், இப்படிக் கேட்பது சரியா?’ என்று துணிச்சலாகக் கேட்க... முதல்வர் ஆச்சர்யத்தோடு திரும்பிப் பார்த்தார். 'யாருப்பா நீ? உனக்கு என்ன உதவி வேணும்?’ என்று கேட்டு விசாரித்து, ஒன்றிரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வழிவகை செய்தார்.

சென்னை டெலிபோன்ஸ் வெளியிடும் எல்லோ பேஜஸ் டெண்டரை பயங்கரப் போட்டியில் குதித்து வாங்கினார். சென்னையைச் சேர்ந்த பிசினஸ் நிருபர்கள் இதன் பிறகுதான், சிவசங்கரனை நெருக்கமாகக்  கவனிக்க ஆரம்பித்தார்கள்.


தமிழகம் முழுக்க சிவசங்கரன் பிரபலம் ஆனது, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பங்குகளை வாங்கியபோதுதான். நாடார் சமூகத்தினர் மத்தியில் பலத்த கொந்தளிப்பைக் கிளப்பியது. 'முரசொலி மாறனின் நண்பரான சிவசங்கரன்தான் இதை வாங்கி இருக்கிறார்’ என்று சொல்லி தி.மு.க-வுக்கு எதிரான பிரச்னையாக மாற்றினார்கள்.

மெர்க்கன்டைல் வங்கி மீட்புக் குழுவினர் ஜெயலலிதாவைப் பார்த்து, அவரது ஆதரவைக் கோரினார். அதன்பிறகு, கணிசமான பங்குகளை மட்டும் நாடார் சமூகத்தவர்களுக்கு கொடுத்தார்.

1995-ம் ஆண்டு தமிழகத்தில் தொலைத் தொடர்புத் துறை லைசென்ஸ் பெற சிவசங்கரன் முயற்சித்தார். 97-98-ல் சென்னையைத் தலைமையகமாகச் கொண்டு ஏர்செல் தொடங்கினார். அப்போது முரசொலி மாறனுக்கும் இவருக்குமான நட்பு அதிகமானது. ஆர்.பி.ஜி. செல் நிறுவனத்தின் பங்குகளை சிவசங்கரன் வாங்க முரசொலி மாறன் உதவி செய்ததாகவும் சொல் கிறார்கள். இந்த நட்பு முரசொலி மாறன் மறைவுக்குப் பிறகு தொடரவில்லை.

சிவசங்கரனை விரட்டிய சம்பவம்!

2006-ம் வருடம் ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில், ஈரோட்டைச் சேர்ந்த ஏ.என்.சண்முகம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் (பூந்தமல்லி கோர்ட்டில் வழக்கின் எண் சி.சி. 191/2006) கொடுத்தார். அதில், ''சென்னை அய்யப்பன்தாங்கலில் எனக்கு 2.43 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வீடுகளைக் கட்டி விற்கும் திட்டத்தைச் செயல் படுத்தலாம் என்று ஸ்டெர்லிங் நிறுவனத் தலைவர் சிவசங்கரன் என்னிடம் கேட்டார்.

அவர் பேச்சை நம்பி, 1.05 ஏக்கர் நிலத்தை மட்டும் பவர் எழுதித் தந்தேன். கொஞ்ச நாட்களுக்குப் பிறகுதான் தெரியவந்தது, அந்த நிலத்தை நான் சிவசங்கரனின் நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிட்டதாக போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப் பதிவு செய்துவிட்டார்!'' என்று சொல்லப்பட்டது. 

இந்தப் புகாரை பதிவு செய்த போலீஸார்,  ஸ்டெர்லிங் நிறுவன அலுவலர்கள் ஆறு பேர்களை கைது செய்தனர். நிறுவனத் தலைவர் சிவசங்கரனை விசாரணைக்காக போலீஸ் தேட... சிவசங்கரன் எங்கே போனார் என்று தெரியவில்லை. தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் படியேறினார் சிவசங்கரன்.

ஆனால், அங்கே இவரது கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. ''இந்த வழக்கைப் பின்னணியில் இருந்து போட வைத்ததே தயாநிதி மாறன்தான்!'' என்று சிவசங்கரன் ஆட்கள் செய்தியைக் கிளப்பினார்கள்.

இரண்டு தனி மனிதர்களுக்கு மத்தியிலான மோதலாகத் தொடங்கி இன்று இந்திய அரசியலையே ஆட்டிப் படைக்க ஆரம்பித்துள்ளது. சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யும் போதுதான் இந்தப் பகை யாரையெல்லாம் காவு வாங்கப் போகிறது என்பதும் தெரியும்!


தெஹல்காவும் தயாநிதியும்!

''ஏர்செல் கம்பெனியின் சார்பாக 14 சர்க்கிள்களில் செயல்பட, நாங்கள் கொடுத்த விண்ணப்பத்தை நொண்டிக் காரணங்களைக் காட்டி, தயாநிதி மாறனின் அமைச்சரகம் தாமதப்படுத்தியது. இது குறித்து, 2005-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதி, அமைச்சராக இருந்த தயாநிதிக்குக் கடிதம் எழுதினேன்.

பலன் எதுவும் இல்லை. அதன்பிறகு, என்னுடைய ஏர்செல் கம்பெனியை, தயாநிதி மாறனின் மலேசிய நண்பரான அனந்தகிருஷ்ணின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்யச் சொல்லி, எனக்குக் கொலை மிரட்டல் வந்தது. அதனால் வேறு வழி இல்லாமல் ஏர்செல் கம்பெனியின் 74 சதவிகித பங்குகளை அனந்தகிருஷ்ணனின் மலேசிய (மேக்சிஸ் குழுமத்தின்) கம்பெனிக்குக் கைமாற்றினேன்.

என் கட்டுப்பாட்டில் ஏர்செல் இருந்தபோது வருடக்கணக்கில் முயன்றும் கிடைக்காத லைசென்ஸ், அனந்தகிருஷ்ணனின் கைகளுக்கு ஏர்செல் சென்ற ஆறே மாதங்களில் கிடைத்தது!

இந்த  உரிமங்களைக் கொடுத்த நான்கே மாதங்களில் சன் டைரக்ட் டி.வி-க்கு சவுத் ஆசியா என்டர்டெயின்மென்ட் ஹோல்டிங் லிமிடெட் என்ற மலேசிய கம்பெனியிடம் இருந்து 600 கோடிகள் முதலீடு வந்திருக்கிறது. இந்த நிறுவனமும் அனந்தகிருஷ்ணனின் நிறுவனம்தான். அதன் பிறகு (அதாவது, பிப்ரவரி 2008-ல் இருந்து ஜூலை 2009 வரை)  சவுத் ஆசியா எஃப்.எம். நிறுவனத்துக்கு அனந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ் குரூப் மேலும் 100 கோடியை முதலீடு செய்து இருக்கிறது...'' என்று சிவசங்கரன் சொன்னதாக 'தெஹல்கா’ செய்தி வெளியிட்டுள்ளது! 


''சிவசங்கரன் ஒரு மல்டி பில்லியனர். அவரை யாரும் மிரட்ட முடியாது. தவிர, மேக்சிஸ் குழுமம் சன் டி.வி-யில் முதலீடு செய்த காலகட்டத்தில் நான் அமைச்சராகவே இல்லை. தவிர சன் டி.வி-யிலும் நான் பங்குதாரர் இல்லை. ஆகையால், என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தியை தெஹல்கா வெளியிட்டு இருக்கிறது'' என்று சொல்லி தயாநிதி மாறன், தெஹல்காவுக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்!


நன்றி - ஜூவி

Thursday, June 02, 2011

தயாநிதி மாறனின் 440 கோடி ஊழல்,ஆதாரம் சிக்கியது,சி பி ஐ அதிர்ச்சி- தினமணி அம்பலம்

 http://www.thehindu.com/multimedia/dynamic/00003/DAYANIDHI_MARAN_AGEND_3888f.jpgநினைத்தாலே அதிர்ச்சிதரத்தக்க துணிகரமான கொள்ளை! தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் 323 தொலைபேசிகளைத் தன்னுடைய வீட்டோடு இணைக்குமாறு பி.எஸ்.என்.எல்.லைப் பணிக்கிறார். இது எங்கே நடந்தது தில்லியிலா, இல்லையில்லை சென்னையிலேயேதான். இந்த 323 இணைப்புகளும் அமைச்சரின் பெயரில் அல்ல சென்னை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரிலேயே இணைக்கப்படுகின்றன.

 இவை வெறும் 323 தொலைபேசி இணைப்புகள் அல்ல - இவை ஒரு தொலைபேசி இணைப்பகமே; இந்த இணைப்பகம் அமைச்சர் குடும்பத்து வியாபார நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக 3.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு பொது வீதியில் "ரகசியமாக' கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து குடும்பத்து வர்த்தக நிறுவனத்துக்கு இணைப்பு தரப்பட்டிருக்கிறது. இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு. 

 பொதுச் சொத்துகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த புத்திசாலியான அமைச்சர் யார்? அலைக்கற்றை ஊழலில் சிக்கி பெயரையும் புகழையும் இழந்திருக்கிறாரே அந்த ஆ. ராசாவா? இல்லையில்லை, இன்னமும் மத்திய அமைச்சராகப் பெயருடனும் புகழுடனும் வலம் வருகிறாரே அந்த தயாநிதி மாறன்தான் அவர். 

ஆ. ராசாவுக்கும் முன்னதாக அந்தத் துறையை வகித்துவந்தார், இப்போது ஜவுளித்துறையில் அமைச்சராக இருக்கிறார்.  அவருடைய இந்த இணைப்பக ஊழலை விசாரித்த மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) இந்த மோசடிக்காக தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்தியத் தகவல் தொடர்புத்துறை செயலருக்கு 10.9.2007-ல் கடிதம் எழுதியது. 

இந்தக் கடிதம் ஒரு பெட்டிச் செய்தியாகவும் சி.பி.ஐ. அறிக்கையின் சாரம் தனிச் செய்தியாகவும் தரப்பட்டுள்ளது. படியுங்கள், படியுங்கள் படித்துக்கொண்டே இருங்கள்.  323 தொலைபேசி இணைப்புகளை தயாநிதி மாறன் பொழுதுபோக்குக்காக வைத்துக் கொள்ளவில்லை. 
http://cdn.wn.com/pd/c7/3d/a1d2a393b9a381f561d57b0e160d_grande.jpg
சென்னையில் தான் வசித்த போட்கிளப் சாலை வீட்டிலிருந்து அண்ணா சாலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள சன் டி.வி. அலுவலகம் வரையிலும் தன்னுடைய குடும்ப நிறுவனத்தின் பயன்பாட்டுக்காகத் தனிப்பட்ட முறையில் தொலைபேசி இணைப்புக் கேபிள்களைப் பதித்துக் கொண்டிருக்கிறார். 

தன்னுடைய வீட்டுடனான 323 தொலைபேசி இணைப்புகளையும் மோசடியாக தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. குழுமத்தின் டி.வி. நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். 

 இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது

.  இவை சாதாரண தொலைபேசி இணைப்புகள் அல்ல; விலைமதிப்புள்ள ஐ.எஸ்.டி.என். இணைப்புகளைக் கொண்டவை. செயற்கைக் கோள்களைவிட அதிக விரைவாக உலகின் எந்தப்பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் செய்திகளையும் படங்களையும் விடியோ காட்சிகளையும் நொடிக்கணக்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும் அதிநவீன தகவல் தொடர்பு இணைப்புகளாகும்.
http://www.hindu.com/gallery/0274/027406.jpg
 டிஜிடல் வழியிலான தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் விடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெகு திறமையாகச் செயல்பட பெரும் பங்காற்றியவை.  இதை சன் குழுமம் தனிப்பட்ட முறையில் வாடகைக்கு அமர்த்தியிருந்தால் கோடிக்கணக்கான ரூபாய்கள் இதற்காகச் செலவிட வேண்டியிருந்திருக்கும்.

ஆனால் அமைச்சரின் அபாரமான உத்தியால் இவை அனைத்தும் நயா பைசா செலவில்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே குடும்ப வியாபாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன.  இது அமைச்சரின் சொந்த உபயோகத்துக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்ட இணைப்பகம் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஒரு சில ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதவண்ணம் மிகமிக ரகசியமாக இது வைக்கப்பட்டிருந்தது என்று இந்த விவகாரத்தை விசாரித்த சி.பி.ஐ. தனது அறிக்கையில் தெரிவிக்கிறது. 

 மேலோட்டமாகப் பார்க்கும்போது பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை அமைச்சர் தன்னுடைய வீட்டில் பயன்படுத்தியதைப்போலத் தோற்றம் அளிக்கும். ஆனால் இந்த இணைப்புகள் அனைத்தும் நீட்டிக்கப்பட்ட கேபிள்கள் வழியாக அமைச்சருடைய குடும்ப நிறுவனத்தின் வர்த்தக நோக்கத்துக்குப் பயன்பட்டன என்று சி.பி.ஐ. சுட்டிக்காட்டியுள்ளது.

 கூகுள் மேப் சேவை மூலம் இந்தத் தொலைவைக் கணக்கிட்டபோது அது மொத்தம் 3.4 கிலோ மீட்டர் என்று காட்டுகிறது. நகரின் மையப் பகுதியில் பெரிய சாலைகள் வழியாக இந்த கேபிள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதை ரகசியமான மோசடி என்று சொல்ல முடியாது, பகிரங்கமாக நடத்தப்பட்ட ரகசிய மோசடி என்றே கருத வேண்டும். 
http://www.cinepicks.com/blog/wp-content/uploads/2009/06/jayam-ravi-marriage-reception-photo-15.jpg
 இதனால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு? மலைக்கவைக்கும் இந்தக் கணக்கையும் சி.பி.ஐ.யே ஒரு மாதிரிக்கு போட்டுக் காட்டியிருக்கிறது. 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக எத்தனை லட்சம் - இல்லையில்லை - கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.  2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. 

ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.ஐ. இதையே சி.பி.ஐ. மதிப்பிடாமல் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கணக்கிட்டால் இன்னமும் துல்லியமாக - ரூ.440 கோடியைவிட - அதிகமாக இருக்கக்கூடும்.

கதை இத்தோடு முடியவில்லை.  இந்த இணைப்புகள் சன் டி.வி. குழுமத்தோடு நிற்கவில்லை; அதன் சகோதர நிறுவனமான தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகப் பதிப்புக்கும் பயன்பட்டிருக்கிறது, அந்த தொலைபேசி இணைப்புகள் குறித்து துல்லியமான விவரங்கள் கிடைக்காவிட்டாலும் பயன்பாடு குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன என்கிறது சி.பி.ஐ. அறிக்கை. 

நன்றி - தினமணி

Sunday, May 29, 2011

ஜெ வின் முதல் தலை வலி - கரூரைக் கலக்கும் உர ஊழல்... பொறுக்கித் தின்ற 'பொறுப்பான' அதிகாரிகள் !

http://tamilnews.ebest.in/images/news/fertibag-d.jpg

கரூரைக் கலக்கும் உர ஊழல்...

பொறுக்கித் தின்ற 'பொறுப்பான' அதிகாரிகள் !
பிரச்னை 


தமிழக அரசால் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரசாயன உரங்களை, கூடுதல் விலைக்கு வெளிமார்க்கெட்டில் விற்று மோசடி செய்த அரசு அதிகாரிகள், அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

'டான்பெட்’ என்றழைக்கப்படும் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், அரசிடம் இருந்து மானிய விலையில் உரங்களைப் பெற்று பல்வேறு கூட்டுறவு அமைப்புகளுக்கு அனுப்பி வருகிறது. அந்த கூட்டுறவு அமைப்புகள், தகுதியுள்ள விவசாயிகளுக்கு உரத்தை மானிய விலையில் வழங்கி வருகின்றன.


இந்த அடிப்படையில் திருச்சியில் உள்ள 'டான்பெட்’ நிறுவனத்திடமிருந்து கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையத்துக்கு வந்த உர மூட்டைகளை வைத்துத்தான் ஊழல் நடந்திருக்கிறது.

இதுகுறித்து, வழக்கை விசாரித்து வரும் கரூர் வணிகவியல் குற்றப் புலனாய்வுப் பிரிவு துணை கண்காணிப்பாளர் சூர்யகலாவிடம் கேட்டபோது, ''தாந்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையம் மூலம் மானிய உரங்களில்  முறைகேடு நடப்பதாக அடிக்கடி தகவல் வந்தது. இதையடுத்து விசாரணை செய்தபோது, 2008 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் சுமார் 1 கோடியே 34 லட்சம் ரூபாய் அளவில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது.

பல இடங்களிலும் பணியாற்றும் உயர்அதிகாரிகள் கூட்டுப்போட்டுக் கொண்டு இந்தக் கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்'' என்றவர் கொஞ்சம் விவரமாக சொல்ல ஆரம்பித்தார். 

''675 டன் யூரியா, 235 டன் டி.ஏ.பி. ஆகக்கூடி 910 டன் உரங்களை, தாந்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மைய தனிஅதிகாரி செல்லமுத்து, கரூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலைக்கும்... சென்னையிலிருக்கும் 'பால்மார் லோரி அண்ட் கோ லிட்’ என்ற நிறுவனத்துக்கும் விற்பனை செய்ததிருப்பதாக ஆவணங்களின் அடிப்படையில் தெரியவந்தது.

அந்த நிறுவனங்கள் விவசாயிகளுக்காக இந்த உரத்தை வாங்கியிருப்பது போல ஆவணங்களில் காட்டப்பட்டுள்ளது. இதற்காக சம்பந்தபட்ட நிறுவனங்களிடமிருந்து பணம் பெறப்பட்டு, தனி அதிகாரி செல்லமுத்து தனியாக துவங்கியிருக்கும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

உண்மையில், இந்த நிறுவனங்களுக்கும் அந்த உரங்கள் செல்லவில்லை. கணக்கு மட்டுமே காட்டி பணத்தை வாங்கிச் சுருட்டிக் கொண்டு, வெளிமார்க்கெட்டில் மொத்த உரத்தையும் விற்றுள்ளனர். இதன் மூலமும் பெரும் பணத்தை சுருட்டியுள்ளனர்.

'டான்பெட்’, வேளாண்துறை, காகித ஆலை, பால்மர் லோரி ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கூட்டுச் சேர்ந்து கொண்டு இந்தக் கொள்ளையை நிகழ்த்தியுள்ளனர்.

தனி அலுவலர் செல்லமுத்து, 'டான்பெட்' துணை மேலாளர் பரமசிவம், உதவி வேளாண் இயக்குநர் மீனாட்சிசுந்தரம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பொதுமேலாளர் (கொள்முதல் பிரிவு) ராஜகோபாலன், த.நா. காகித ஆலையின் உதவிப்பொது மேலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் 'பால்மார் லோரி அண்ட் கோ லிட்’ உயர் அதிகாரிகளான முருகன், அனிமேஷ் சத்தோவ் பாத்யா ஆகிய ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்று சொன்னார் சூர்யகலா.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய, ஐக்கிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வையாபுரி, ''இந்த 910 டன் உர ஊழல் என்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்றதுதான். தமிழ்நாடு முழுவதும் உள்ள பல கூட்டுறவு சங்கங்கள் ஊழலின் உறைவிடமாகத்தான் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரங்கள் மட்டுமல்ல, டிராக்டர்கள் பொக்லைன், போர்வெல் இயந்திரங்கள்கூட விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை தனியார் ரியல் எஸ்டேட் நிலங்களை சமன்படுத்த அதிக வாடகைக்கு விடப்படுகிறது.

கூட்டுறவு என்றாலே, கூடி ஊழல் செய்யும் இடமாக மாறிவிட்டது. பணி ஓய்வு பெறும் காலம் வரை ஒரே இடத்தில் வேலை பார்க்கும் வாய்ப்பு கூட்டுறவுச் சங்க அலுவலர்களுக்கு இருப்பதால்... முறைகேடுகள் முற்றிலும் மறைக்கப்பட்டு விடுகின்றன. புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, அனைத்து கூட்டுறவுச் சங்கங்களையும் ஆய்வு செய்வதுடன், கூட்டுறவுச் சங்கத் தேர்தலையும் உடனடியாக நடத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விவசாயப் பிரதிநிதிகளின் கண்காணிப்பில் சங்கங்கள் செயல்படும்போதுதான் தவறுகள் கண்டுபிடிக்கப்படும்'' என்று சொன்னார்.

அமராவதி உழவர் இயக்க அமைப்பாளர் இரா. முருகானந்தம், ''உர ஊழலில் ஈடுபட்டுள்ள ஏழுபேரும் சாதாரண கடைநிலை ஊழியர்கள் அல்ல. பொறுப்பான அதிகாரிகள். ரசாயன உரம் மட்டுமல்ல, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வேப்பம் பிண்ணாக்கிலும் முறைகேடு நடந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட வேப்பம் பிண்ணாக்கு குறித்து விசாரணை செய்தால், பல முறைகேடுகள் வெளிவரும்'' என்றார்.

பசுமை விகடன் இதழில் விவசாயத்தை வைத்து நடத்தப்படும் ஊழல்களையும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் உர ஊழல் தொடர்பாக பல கட்டுரைகளில் குறிப்பிட்டே வந்திருக்கிறோம். தற்போது, அது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி - பசுமை விகடன்

Monday, December 27, 2010

மந்த்ரா பேடியா?நீரா ராடியா?புதிய ஊழல் வெடியா?

http://cinesouth.com/images/new/25012006-THN15image2.jpg
1. தலைவர் நாத்திகவாதியா இருக்கறதால நமக்கு என்ன பிரச்சனை?

ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணலாம்கறதால ஏழைகள்
சிரிக்கவே முடியாதபடி பண்ணிட்டாரே...

2. தலைவர் 2 G  அலைக்கற்றையை மறு ஏலம் விடனும்கறாரே? ஏன்?

மறுபடியும் ஊழல் பண்ணத்தான்,வேற எதுக்கு?


3.தலைவரே,உங்க தோள்ல கிடக்கற துண்டோட விலை ரூ 600 கோடியா?

ஏன் அப்படி கேக்கறீங்க?

பதவிங்கறது எனக்கு தோள்ல கிடக்கற துண்டு மாதிரின்னு சொன்னீங்களே?

4. தமிழ் தவிர வேற மொழில பேசுனா அபராதம்னு புதுசா ஒரு சட்டம் போடலாமா?

நாசமாப்போச்சு,தலைவரே,அபராதம்கறதே சம்ஸ்கிருத வார்த்தைதான்.

5. இலங்கைல தமிழ் தேசிய கீதம் ரத்து ஆனதை தலைவர் கண்டுக்கவே இல்லையே?

தமிழனுக்கு குத்து விழுந்தப்பவே கண்டுக்காதவர் ஆச்சே?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDuVlJl-9r_GrzZtNHAq_zQ5kaCsjQuknb4M1bOUVHlugEeOQVP-CO-WS3K62zSaV9EnKyhQqsff_gUPKH9QTQlNS7qGZEhddq2xSUhpoCBYAnTelyuz2bUMufewXlTM0YFeNOIgBIeHFb/s1600/Niira-Radia_2.jpg
6.குளிச்சாச்சா?ன்னு தலைவரை கேட்டது தப்பாப்போச்சு.

நீராடினீரா?ன்னு  ஏன் செந்தமிழ்ல கேட்டீங்க?நீரா ராடியாவா?எனக்கும் அவருக்கும் எந்தத்தொடர்பும் இல்லைன்னு பதட்டமா சொல்றாரே?

7. தினமும் காலைல ஆனியன் ரோஸ்ட்தான் சாப்பிடுவேன்.

அடேங்கப்பா,அவ்வளவு  பெரிய பணக்காரனா நீ?

8.தலைவரு சரியான ஜொள்ளு பார்ட்டின்னு எப்படி சொல்றே?

நீரா ராடியா பற்றி என்ன தெரியும்?னு கேட்டதுக்கு அவங்க மந்த்ரா பேடி ஃபேமிலியா?ன்னு சி பி ஐ கிட்டேயே திருப்பி கேட்டாரே?

9. மக்களிடையே வாங்கும் சக்தி அதிகரிச்சிடுச்சுன்னு சொல்றீங்களா?

அது தெரியலை,ஆனா நாட்ல எந்த ஊழல் நடந்தாலும் அதை தாங்கும் சக்தி வேணா மக்களிடையே வளர்ந்துடுச்சு.

10. ஒரு நபர் விசாரணைக்கமிஷன்கறதை தலைவர் தப்பா நினைச்சுட்டாரு

எப்படி சொல்றே?

ஒரு நபரை மட்டும்தானே விசாரிக்கனும்?எதுக்கு ஃபேமிலில இருக்கற எல்லாரையும் விசாரிக்கனும்?னு நியாயம் கேக்கறாரு.