Showing posts with label VAIKO. Show all posts
Showing posts with label VAIKO. Show all posts

Tuesday, December 04, 2012

அ.தி.மு.க.வில் இணைந்த நாஞ்சில் சம்பத் - கறுப்பு சரித்திரம்

சென்னை: ம.தி.மு.க.,வின் பிரசார பீரங்கியாக இருந்து வந்த பிரபல நாஞ்சில் சம்பத் இன்று காலையில் முதல்வர் ஜெ.,வை சந்தித்து அ.தி.மு.க.,வில் தன்னை இணைத்து கொண்டார். இவர் தி.மு.க.,பக்கம் சாய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க.,வில் இன்று சேர்ந்தார். இந்த செய்தி ம.தி.மு.க., தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

மனக்கசப்பில் இருந்தார்:

ம.தி.மு.க.,வில் வைகோவுக்கு இணையாக பெரும் திரளாக நாஞ்சில் சம்பத் பேச்சை கேட்க கூட்டம் சேரும். கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக கட்சி பொதுச்செயலர் வைகோவுடன் மனக்கசப்பில் இருந்து வந்த சம்பத் கட்சிப்பணியில் இருந்து விலகி இருந்தார். பிரசாரத்திற்கு எங்குமே செல்லவில்லை.

இந்நிலையில் இவர் அ.தி.மு.க., பொதுசெயலரை நேரில் சந்தித்து தன்னை அ.தி.மு.க.,வில் இணைத்து கொண்டார். இவரது இழப்பு ம.தி.மு.க.,வுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.



மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத், இன்று முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்ததாக தகவல் வெளியானது.


இது குறித்து அதிகார பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை ஆயினும், அவர் முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


சென்னை: ம.தி.மு.க.,வில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு, அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதை முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

நன்றி - தினமல்ர்



ம.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலராக வெகுகாலம் செல்வாக்குடன் இருந்தவர் நாஞ்சில் சம்பத். ஆனால், அண்மைக்காலமாக அவருக்கும் மதிமுக பொதுச் செயலர் வைகோவுக்கும் கருத்து மோதல்கள் இருந்துவந்தன. இதை அடுத்து, மதிமுகவில் ஓரங்கட்டப்பட்டார் நாஞ்சில் சம்பத். அவரை பொதுக்கூட்டங்களுக்கு பேசுவதற்கு அழைக்க வேண்டாம் என்று வைகோ வாய்மொழி உத்தரவு இட்டிருந்ததாக செய்திகள் வந்தன.



இந்நிலையில், நாஞ்சில் சம்பத் திமுகவில் இணையக்  கூடும் என்றும், திமுகவினர் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்ததாகவும் செய்திகள் கசிந்தன. ஆனால், தாம் திமுக பக்கம் போகப் போவதில்லை என்று நாஞ்சில் சம்பத் கூறிவந்தார். இத்தகைய சூழ்நிலையில் இன்று நாஞ்சில் சம்பத் அதிமுக.வில் இணைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


நன்றி - தினமணி

சென்னை: மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான நாஞ்சில் சம்பத் இன்று அதிமுகவில் இணைந்தார்.


மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் பிரபல பேச்சாளராகவும் இருந்தவர் நாஞ்சில் சம்பத். கடந்த சில மாதங்களாக அவருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.


வைகோவும் நாஞ்சில் சம்பத்தை தமது கட்சி ஏடான சங்கொலியில் மறைமுகமாக விமர்சித்தார். வைகோவை நாஞ்சில் சம்பத்தும் கடுமையாக விமர்சித்து வந்தார். இதையடுத்து நாஞ்சில் சம்பத் ஒப்புக் கொண்ட அனைத்துக் கூட்டங்களும் சட்டென ரத்து செய்யப்பட்டன.



ஆனால் அவரை கட்சியை விட்டு வைகோ நீக்கவில்லை. நாஞ்சில் சம்பத்தும் கட்சியை விட்டு நீக்கிப் பாருங்கள் என்றெல்லாம் கொந்தளித்துக் கொண்டிருந்தார். போட்டி மதிமுகவை உருவாக்கப் போவதாகவும் கூட செய்திகள் வலம் வந்தன. திமுகவில் சேருவார் என்றும் பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் இன்று திடீரென அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார்.



சென்னையில் இன்று ஜெயலலிதாவை நேரில் சந்தித்த நாஞ்சில் சம்பத், அதிமுக உறுப்பினராக தம்மை இணைத்துக் கொண்டார்.


இனி நாஞ்சில் சம்பத் அதிமுகவின் பிரச்சார பீரங்கி!


ஒரிஜனல் மதிமுக நாங்களே- உரிமை கோருகிறார் நாஞ்சில் சம்பத்- போட்டி மதிமுக உருவாகிறது!


சென்னை: தமிழக அரசியலில் கட்சிகள் உடையும் அல்லது உடைக்கப்படும் காலம் இது! மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பெரிய கட்சிகள் தங்களுக்கு அடுத்த கட்சிகளை உடைப்பது கால்ந்தோறும் தமிழக அரசியலில் நடைபெற்று வரும் ஒன்றுதான்! அண்மையில்தான் தேமுதிகவை அதிமுக உடைத்து வைத்திருக்கிறது. இந்நிலையில் ஓசையின்றி மதிமுகவும் உடையக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது. உருவாகப் போகும் போட்டி மதிமுகவின் தலைவராக தற்போதைய கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத் இருக்கக் கூடும் என்றே தெரிகிறது.



மதிமுக பொதுசெயலர் வைகோ மற்றும் நாஞ்சில் சம்பத் இடையேயான கருத்து வேறுபாடு உச்சகட்டத்தை அடைந்து வருகிறது. வைகோவோ, நாஞ்சில் சம்பத்தே கட்சியைவிட்டு விலகட்டும் என்று எண்ணுகிறார். ஆனால் நாஞ்சில் சம்பத்தே. வைகோவை விட கட்சிக்காக அனைத்து வகைகளில் அதிகம் உழைத்த நான் ஏன் என் கட்சியைவிட்டு விலகுவேன்... அது நடக்காது.. வேண்டுமானால் நீக்கிப்பாருங்கள்..நடப்பது என்னவென்று தெரியும் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.



இன்று சன் நியூஸ தொலைக்காட்சிக்கு நாஞ்சில் சம்பத் அளித்த சிறப்புப் பேட்டியில் அவரது "போட்டி மதிமுக" மனநிலை வெளிப்படையாகவே வெளிப்பட்டது. அந்தப் பேட்டியில் நாஞ்சில் சம்பத் கூறியிருந்தாவது:



கடந்த 43 நாட்களாக என்னைப் பற்றி ஊடகங்களில் செய்தி வருவது என்பது தானாக வெளியிடப்படுவதல்ல.. யாரோ பற்ற வைத்துவிட வெளிவரும் செய்திகள்தான். என்னை மதிமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று திட்டமிட்டிருப்பவர்களே இப்படி செய்தியை கசியவிட்டிருக்கின்றனர். ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்த என்னை இப்படி பேசவைக்கிறவனாக மாற்றியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.



கருத்து வேறுபாடுகளுக்கு கதவு திறந்து வைக்கிற பழக்கம் என்னிடத்தில் இருந்தது இல்லை. எந்த ஒரு அத்துமீறலையும் நான் செய்ததும் இல்லை. எந்த ஒரு சிபாரிசுக்கும் சென்றது இல்லை. எம்.எல்.ஏ. பதவிக்கோ எம்.பி. பதவிக்கோ கோரிக்கை வைத்ததும் கிடையாது. எனக்கு விதிக்கப்பட்ட கடமையை நான் செவ்வனே செய்து வந்திருக்கிறேன்.


என்னை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று வைகோ நீண்டகாலமாகவே திட்டமிட்டிருக்கிறார். அதற்கான ஒத்திகைதான் தற்போது நடைபெற்று வருகிறது.


கடந்த 43 நாட்களாக சர்ச்சைக்குரிய செய்திகள் வந்த பிறகும் என் மகளின் மீது சத்தியமிட்டு என்னால் எந்தப் பிரச்சனையும் வராது என்று சொன்ன பிறகும் சம்பத்துக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று வைகோ சொல்லாமல் சங்கொலி இதழில் என்னை இழித்தும் பழித்தும் எழுதுகிற வைகோவை ‘சாரைப் பாம்பு' என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?


தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் உட்கட்சி பிரச்சனையில் வெளியேற்றறப்பட்டிருக்கிறார். சிலர் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது என் உருவப்பொம்மையை என் சொந்த ஊரிலேயே கொளுத்தியிருக்கின்றனர். நான் கொளுத்தியவன் மீது குற்றம்சாட்டவில்லை. என் உருவபொம்மையைக் கொளுத்தச் சொல்லியிருக்கிறார்கள். எனக்கு என் சொந்த ஊரில் செல்வாக்கு இல்லை என்பதற்காகவே வைகோ திட்டமிட்டு நடத்திய நாடகம்தான் இது!



வைகோவுக்கு அதிமுக கூட்டணியைவிட்டால் வேறு கதி இல்லை. அதனால்தான் அதிமுக அரசு குறித்து விமர்சிப்பது இல்லை. அவர் அங்குதான் போய்சேருவார். அதற்காகத்தான் நாஞ்சில் சம்பத்துக்கு எம்.பி. பதவி கேட்டார் என்றெல்லாம் பரப்பிவிடுகின்றனர். செப்டம்பர் 7-ந் தேதி மாவட்ட செயலர்கள் கூட்டம் கூட நடைபெற்றது. அப்பொழுது யாரும் இதுபற்றி பேசவில்லையே!



என்னை மதிப்பவர்களை மட்டுமே நான் மதிப்பேன்.. என்னை மதிக்காதவர்களை மதிக்க மனசு வராது. ஒவ்வொரு ஊரிலும் யார் யார் கட்சிக்காக உழைக்கிறவர்கள் என்று வைகோவால் நிச்சயம் அடையாளம் காட்ட முடியாது. என்னால் முடியும். வைகோ பரப்பிவிடுவது போல் மதிமுக மாவட்ட செயலாளர்களை ஓரணியில் திரட்டவெல்லாம் முயற்சிக்கவும் இல்லை.. முயற்சிக்கவும் மாட்டேன். என்னிடத்தில் நாள்தோறும் என் தம்பிமார்கள் ஆதரவு தெரிவித்து பேசினாலும் அவர்களை எனக்கு ஆதரவாக இருக்கச் சொல்லி கேட்பதும் இல்லை.


மதிமுகவுக்காக வைகோவைக் காட்டிலும் கடுமையாக உழைக்கிறேன். அவரைக் காட்டிலும் தொண்டர்களின் அன்பைப் பெறுகிறேன். கட்சி எல்லைகளைக் கடந்து இலக்கியக் கூட்டங்கள், பட்டிமன்றங்களில் பங்கேற்கிறேன். கடல் கடந்து நாடுகளிலெல்லாம் பேசிவருகிறேன். என் இமேஜ் ஏறி வருகிறது. அதை அவரால் பொறுத்துக் கொள்ளவில்லை.


தரம்கெட்ட, அடுத்தவர்களின் இருப்பை ஒத்துக் கொள்ளாத வியாதியின் விளைவுதான் இது. நான் ஒருபோதும் அவருக்கு போட்டியாக என்னைக் கருதியது இல்லை. நான் பிகராக இருப்பதுதான் இப்பொழுது பிரச்சனை.


என்னைப் பொறுத்தவரை என்னை ஆட்கொண்ட தலைவனின் பெருமையைத்தான் பேசுவேனே தவிர அவர்களின் சிறுமையை ஒருபோதும் கோடிட்டுக் காட்டியது கிடையாது. நான் நாகரிகமாக பேசுவேனே தவிர நாலாந்தரமாக பேசமாட்டேன்...


நான் பாலைவிட பரிசுத்தமாவன். நான்குபேர் நகைக்கும்படியாக நடக்கமாட்டேன். நான் அரசியல்வாதியைப் போல் நடந்து கொள்ளமாட்டேன். மனிதனைப் போல் நடந்து கொள்வேன்.


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் நான் வளர்த்த இயக்கம்.. அதில் இருந்து விலகமாட்டேன்.. விலகமாட்டேன்.



நான் வைகோவைக் காட்டிலும் அதிக மேடைகளில் பேசியிருக்கிறேன். அதிக வழக்குகளை சந்தித்திருக்கிறேன். அதிக அளவு பயணம் செய்திருக்கிறேன். ஒரு ஊருக்குப் போய் கூட்டம் நடத்தினால் 10 இளைஞர்களை கட்சிக்கு கொண்டு வந்து கொடுத்திருக்கிறேன். மேடைப் பேச்சு பேசிக் கொண்டு தின்றுவிட்டு உறங்குகிறவன் அல்ல இந்த நாஞ்சில் சம்பத்! நஞ்சு அருந்தச் சொன்னால் முதல் ஆளாக நிற்பவன் நாஞ்சில் சம்பத்!



என்னால் மதிமுகவுக்கு எப்போதும் பிரச்சனை வந்தது. தள்ளாடிய நிலையில் தலைமை எடுத்த முடிவு. அதனால் தத்தளித்தவர் நாங்கள்.


நெஞ்சிலே வக்கிரமத்தை வைத்துக் கொண்டு கருப்பை தேக்கி வைத்துக் கொண்டு என் கொடும்பாவியை கொளுத்தச் சொன்ன மனசாட்சியற்றவர் என்பதை தெரிந்து கொண்டதால்தான் வைகோவை என் மகள் திருமணத்துக்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டேன்.


என்னை கட்சியைவிட்டு வைகோ நீக்கிப் பார்க்கட்டும். அப்போது என் தம்பிமார்கள் அனைவருடனும் சேர்ந்து முடிவெடுப்போம். காலம்தான் அதை தீர்மானிக்கும் என்றார்.


தாம் உருவாக்கிய வளர்த்த மதிமுகவை விட்டு தாம் ஒருபோதும் விலகமாட்டேன் என்றும் தமக்குப் பின்னால் தம்பிமார்கள் இருக்கிறார்கள் என்று மதிமுக தொண்டர்களைக் குறிப்பிட்டு நாஞ்சில் சம்பத் கூறியிருப்பதும் வைகோவைவிட மதிமுகவுக்காக பாடுபட்டவன் நானே என்று பிரகடனம் செய்திருப்பதும் நாஞ்சில் சம்பத் ஒரு தெளிவான முடிவாக அதாவது போட்டி மதிமுகவை உருவாக்கத்தான் போகிறார் என்பதையே வெளிப்படுத்துகிறது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.


இதனை உணர்த்தும்விதமாகத்தான் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், நான் எடுக்கப் போகும் முடிவால் எதிரிகள் அச்சப்படுவர் என்று கூறியிருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாகர்கோவில்: எனது சொந்த ஊரில், அதுவும் என் தாய் பிறந்த ஊரில் எனது கொடும்பாவியை எரித்துள்ளனர். சொந்த ஊரில் எனக்கு செல்வாக்கு இல்லை என்று காட்டுவதற்காக இப்படிச் செய்துள்ளனர். யாருக்கு சொந்த ஊரில் செல்வாக்கு இல்லை என்பதை கலிங்கப்பட்டியில் போய் விசாரித்தால் தெரியும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.
வைகோ, நாஞ்சில் சம்பத் இடையே என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. இந்த நிலையில் நக்கீரன் இதழுக்கு நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டியில், அவரை சாரைப்பாம்பு என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். இந்த நிலையி்ல சம்பத்தின் சொந்த ஊரில் அவரது கொடும்பாவியை மதிமுகவினர் கொளுத்தினர்.


கலிங்கப்பட்டி போய்ப் பார்த்தால் வைகோவின் செல்வாக்கு தெரியும்.. சம்பத் கடும் தாக்கு


இதுகுறித்து ஒரு இதழுக்கு சம்பத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது
நாஞ்சில் சம்பத்தின் சொந்த ஊரில் அவருக்கு செல்வாக்கு இல்லை என்று காட்டுவதற்காக சிலர் நடத்திய நாடகமே எனது கொடும்பாவி கொளுத்தப்பட்ட சம்பவம். இதை கொளுத்த சொன்னவர்களுக்கும், கொளுத்தியவர்களுக்கும் இதனால் மகிழ்ச்சி கிடைக்கும் என்றால் அந்த மகிழ்ச்சிக்கு நான் குறுக்கே நிற்கமாட்டேன்.



ஆனாலும் பிதாவே இவர்களை மன்னியும். இவர்கள் செய்வது என்னவென்று தெரியாமல் செய்கிறார்கள் என்று பிரார்த்தனை செய்வேன்.

மதிமுகவில் இருந்து என்னை புறக்கணிப்பதற்கான காரணத்தை தேடுகிறேன். மதிமுக இயக்கத்தின் வளர்ச்சிக்காக போராடியவன். மதிமுகவில் கொள்கை பிடிப்போடு இருந்ததால் முதலில் கைது செய்யப்பட்டவனும், முதலில் வழக்கை சந்தித்தவனும், முதல் விபத்தில் சிக்கியவனும் நான்.

இப்போது எனக்கு எதிராக கொடும்பாவி கொளுத்தியதன் மூலம் இன்னும் நான் இயக்கத்தில் இருக்கிறேன் என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் என்னை புறக்கணிப்பதற்கான காரணத்தை இதுவரை யாரும் தெரிவிக்கவில்லை.

நான் இதுவரை 4 பேர் நகைக்கும்படி, முகம் சுழிக்கும்படி, பழிச்சொல் பேசும்படி நடந்ததில்லை. கழகத்தின் நிர்வாகத்தில் தலையிட்டதோ, அத்துமீறி நடந்து கொண்டதோ இல்லை. யாருக்காகவும் சிபாரிசுக்கும் போய் நின்றதில்லை. இயக்கத்தை சேதாரமின்றி வழி நடத்த இரவு பகலாக, பகல் இரவாக உழைத்துள்ளேன். இதற்கு பின்பும் நான் புறக்கணிக்கப்படுவதற்கான காரணத்தை தேடிக்கொண்டிருக்கிறேன்.


மதிமுகவில் எனக்கு தொண்டர்கள் ஆதரவு இல்லை என்று காட்டுவதற்காகவே திட்டமிட்டு எனது சொந்த ஊரில், அதுவும் எனது தாய் பிறந்த ஊரில் என் கொடும்பாவி கொளுத்தப்பட்டுள்ளது. இது வைகோ நடத்திய நாடகம். சொந்த ஊரில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறது என்பது பற்றி கலிங்கப்பட்டியில் போய் விசாரித்தால் தெரியும்.

திராவிட இயக்கத்தின் சமகால தமிழக அரசியலில் இதுவரை யாரும் தொடாத உச்சத்தை தொட்டவன் நான். எல்லா கட்சிகளும் என்னை விரும்புவார்கள். ஆனால் இதுபற்றி முடிவு எடுக்க நான் பலமுறை யோசிக்க வேண்டும்.
ஆனால் என்னை விட காலம் முக்கியமானது. காலம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்.

இன்னொன்று, அரசியலில் சேராமலேயே நான் சுடர் விட முடியும். அரசியல் எல்லை தாண்டி நான் இலக்கிய தளத்தில் கொடி பறக்கவிட்டவன். அந்த தளத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினால் என்னால் மேலும் உயர முடியும்.

எனது இல்ல திருமண விழாவில் பங்கேற்க வைகோவை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தேன். இப்போது ஏற்பட்ட நிலைமைக்கு பிறகு அவர் என் வீட்டு திருமண விழாவில் பங்கேற்க வரவேண்டாம் என்று கூறுகிறேன் என்றார் அவர்.

வைகோவை ‘சாரைப் பாம்பு’ என்று கூறிய நாஞ்சில் சம்பத்தின் உருவபொம்மை எரிப்பு

திருவட்டார்: திருவட்டார் அருகே நாஞ்சில் சம்பத்தின் சொந்த ஊரில் அவரின் உருவபொம்மையை மதிமுகவினர் தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


மதிமுகவின் முக்கிய பிரமுகரான நாஞ்சில் சம்பத் கடந்த வாரம் நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டியில், வைகோ சத்தமில்லாமல் கடிக்கிற சாரைப்பாம்பு போல என்னை கடித்து எனக்கு வலியை ஏற்படுத்தி வருகிறார் என்று கூறியிருந்தார்.


இந்த பேட்டி வெளியான உடன் மதிமுக வினர் பலரும் நாஞ்சில் சம்பத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரு அருகே உள்ள வேர்கிளம்பியில் திருவட்டாரு ஒன்றிய செயலாளர் சேம்ராஜ் தலைமையில் கூடிய மதிமுகவினர், நாஞ்சில் சம்பத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மதிமுகவை விட்டு வெளியேறு என்று கூறிய அவர்கள், நாஞ்சில் சம்பத்தின் உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்தினர்.


இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த குமரி மாவட்ட பொறியியல் அணி அமைப்பாளர், சுரேஷ் குமார், தலைவர் வைகோவைப் பற்றி மதிமுக வில் இருந்து கொண்டே அவதூறு பரப்பி வருகிறார் நாஞ்சில் சம்பத் என்று கூறினார்.



அதிமுக ஆட்சிக் காலத்தில் நாஞ்சில் சம்பத்தின் வீட்டினை இடித்து தரைமட்டமாக்கினார்கள். அப்போது பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த வைகோ சங்கொலியில் கடிதம் எழுதினார். இதனை கண்ட மதிமுக தொண்டர்கள் பணம் அனுப்பி நாஞ்சில் சம்பத்திற்கு வீடு கட்டிக் கொடுத்தனர் என்றார். இதனைக் கூட மறந்துவிட்டு அவர் தலைவரைப் பற்றியே அவதூறாக பேசி வருகிறார் என்று கூறினார். இதன் காரணமாகவே அவரது சொந்த ஊருக்கு அருகிலேயே இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளோம் என்றார்.



சென்னை: மலரக்கூடாது என்று மறுக்கப்படுகிற மொட்டாகவும், தாயின் மார்பகத்தில் பால் குடிக்கக் கூடாது என்று விலக்கப்படுற கன்றாகவும் என்னை ஒவ்வொரு நாளும் உதாசீனப்படுத்தி சத்தம் இல்லாமல் கடிக்கிற சாரைப்பாம்பு போல என்னை கடித்து எனக்கு வலியை ஏற்படுத்தி வருகிறார் வைகோ என்று கூறியுள்ளார் மதிமுகவின் முக்கியப் பிரமுகரான நாஞ்சில் சம்பத்.



விரைவில் இவர் மதிமுகவிலிருந்து வெளியேறப் போகிறார் அல்லது வெளியேற்றப்படப் போகிறார் என்று ஒரு பேச்சு நிலவி வரும் நிலையில் 'நக்கீரன்' இதழுக்குப் பரபரப்பான பேட்டியை அளித்துள்ளார் சம்பத். அதன் சில துளிகள்...



என் தரப்பில் நான் குற்றம் நினைக்கவில்லை. இயல்பாகவே எந்தத் தவறும் இழைக்கிற மனோபலம் எனக்கில்லை. வைகோ மனம் சுழிக்கும்படி அவரிடம் நான் எதுவும் கேட்கவும் இல்லை


18 ஆண்டு கால ம.தி.மு.க. பயணத்தில் 3 சட்டமன்றத் தேர்தல், 3 நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து ஒரு நாடறிந்த சொற்பொழிவாளன் என்ற நிலையில் எனக்கு ஒரு தொகுதி தாருங்கள் என்று கேட்கவும் இல்லை என்று கூறியுள்ள நாஞ்சிடம், ஒருவேளை நீங்கள் சீட் கேட்டிருந்தால் வைகோ தந்திருப்பாரா? என்ற கேள்விக்கு, அவர் முடிவை நம்பிக்கையோடு என்னால் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார் நாஞ்சில்.



மேலும் உங்களை வைகோ, கட்சியில் இருந்து நீக்கிவிடுவார் என்ற அரசல் புரசல் செய்திகளை நீங்கள் நம்புகிறீர்களா? என்ற கேள்விக்கு, ஆமாம். 18 ஆண்டுகளாக எதிர்நீச்சல் போடுற மதிமுக கரை சேர வேண்டுமென்று அக்கறையோடு கடமையாற்றிய என்னை வைகோ சங்கொலியில் நான் ஒரு குடிலன் என்றும், விஷ விதை தூற்றுகிறவன் என்றும் மனசாட்சியற்ற முறையில் எழுதியிருக்கிறார்.


இதேபோல மலரக்கூடாது என்று மறுக்கப்படுகிற மொட்டாகவும், தாயின் மார்பகத்தில் பால் குடிக்கக் கூடாது என்று விலக்கப்படுற கன்றாகவும் என்னை ஒவ்வொரு நாளும் உதாசீனப்படுத்தி சத்தம் இல்லாமல் கடிக்கிற சாரைப்பாம்பு போல என்னை கடித்து எனக்கு வலியை ஏற்படுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார்.


நீங்கள் தேமுதிகவில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, நான் தேமுதிகவை ஒரு இயக்கமாகவே நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.



கடைசியாக இரண்டு தலைவர்களுக்கு (கருணாநிதி, வைகோ) தொண்டனாக இருந்திருக்கிறீர்கள். அந்த இரு கட்சிகளுக்குமிடையே உள்ள வேறுபாடு என்ன என்ற கேள்விக்கு, இது விரிவாக எழுத வேண்டிய ஒரு புத்தகம். ஒன்றுமட்டும் சொல்வேன்; கலைஞர் அரை நூற்றாண்டு கால தமிழகத்தின் தலைப்புச் செய்தி என்று கூறியுள்ளார் சம்பத்.



இதன்மூலம் மதிமுகவிலிருந்து விலகினால் அவர் திமுக பக்கம் வரக் கூடும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் அவரை அதிமுகவுக்கு இழுக்கவும் முயற்சி நடக்கிறதாம்.


நன்றி - நக்கீரன் , தட்ஸ் தமிழ்

Monday, November 26, 2012

பிரபாகரன் - ஈழப்போரின் கடைசி நிமிடங்கள்


மாவீரன் அலெக்ஸாண்டர் ,பகத்சிங் மற்றும் நேஜாஜி ,இவ்வுலகில் வாழ்ந்தார்கள் என்று வரலாற்றுப்  பாடப்  புத்தகத்தில் படித்து தெரிந்திருக்கிறோம்  ..

நாம்  வாழும் காலத்திலேயே ,வாழ்ந்த ஒரு மாவீரன்... 
"தலைவன்" என்று சொல்வதற்கு, முழுத்தகுதி உடைய,
தன் குடும்பத்தையே போர்களத்திற்கு அனுப்பிய,  
 "சுயநலம்" என்பதன் அர்த்தம் அறியாத, 
 அண்ணன் பிரபாகரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....
மாவீரன் அலெக்ஸாண்டர் ,பகத்சிங் மற்றும் நேஜாஜி ,இவ்வுலகில் வாழ்ந்தார்கள் என்று வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் படித்து தெரிந்திருக்கிறோம் ..

நாம் வாழும் காலத்திலேயே ,வாழ்ந்த ஒரு மாவீரன்...
"தலைவன்" என்று சொல்வதற்கு, முழுத்தகுதி உடைய,
தன் குடும்பத்தையே போர்களத்திற்கு அனுப்பிய,
"சுயநலம்" என்பதன் அர்த்தம் அறியாத,

அண்ணன் பிரபாகரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...-ஃபேஸ்புக்கில் இருந்து

இலங்கை இறுதிப் போர்: பிப்ரவரி 2009ல் மலேசியாவில் நடந்தது என்ன?: கேபி (பகுதி1)





 Sl War What Happened Feb 09 Kp
Shopping In Sri Lanka
கொழும்பு: இலங்கை இறுதிப் போரில் நார்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் முன்னெடுத்த முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிராகரித்திருக்காவிட்டால் பல தளபதிகள் உயிரோடு இருந்திருப்பார்கள் என்று புலிகளின் சர்வதேச தொடர்பாளர் கேபி என்ற குமரன் பத்மநாபா விவரித்திருக்கிறார்.


இலங்கையில் வெளியாகும் டெய்லி மிர்ரர் நாளேட்டுக்காக அதன் செய்தியாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் எடுத்த கேபியின் பேட்டி:


கேள்வி: பிபிசி ஊடகத்துக்கு பேட்டியளித்திருந்த எரிக் சொல்ஹெய்ம், போரின் இறுதியில் ஐநா உதவியுடனான யுத்த நிறுத்தத்துக்கு முயற்சியை மேற்கொண்டதாக கூறியிருந்தார். அந்த முயற்சியை புலிகளின் தலைவர் தடுத்ததாகவும் தெரிவித்திருந்தார். இதற்காக அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமரான உருத்திரகுமாரனும் சொல்ஹெய்மின் கருத்தை மறுத்திருந்தார். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?



கேபி: எரிக் சொல்ஹெய்மின் கருத்து 100% உண்மையானது. அவர் மேற்கொண்ட முயற்சிகள் விடுதலைப் புலிகளின் தலைவரால் தடுக்கப்பட்டது. அப்படியான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தால் பேரழிவைத் தவிர்த்திருக்கலாம். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல தளபதிகள் இன்று உயிரோடு இருந்திருக்க முடியும்.



கேள்வி: அப்படியெனில் ஏன் அப்படி ஒரு முயற்சியே நடைபெறவில்லை என்று ஏன் உருத்திரகுமாரன் சொல்ல வேண்டும்?


கேபி: உருத்திரகுமாரனைப் பொறுத்தவரையில் 2009- ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்ததை பற்றி பேசுகிறார். பிப்ரவரிக்கு பின்னர் என்ன நடந்தது என்பதைப் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை.


கேள்வி: 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக நியமிக்கப்பட்டீர்கள்.. நீங்களும் யுத்த நிறுத்தம் தொடர்பான முயற்சிகளில் பங்கெடுத்தவர்.. அப்போது என்ன நடந்தது என்பதை விவரிக்க முடியுமா?



கேபி: நிச்சயமாக... 2008-ம் ஆண்டிலேயே புலிகளின் கதை முடிவுக்கு வருகிறது என்பதை பார்வையாளர்கள் பலரும் ஊகித்திருந்தனர். புலிகளின் பதில் தாக்குலுக்கு அப்பாலும் இலங்கை ராணுவம் மெதுவாக ஆனால் முன்னேறிக் கொண்டிருந்தது. ஏ-9 நெடுஞ்சாலையின் மேற்குப் பகுதியில் யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஏ-9 பாதையின் கிழக்குப் பகுதிக்கு ராணுவம் முன்னேறுவதற்கு முன்பாக ஒரு கெளரவமான யுத்த நிறுத்தத்துக்கு வாய்ப்பும் இருந்தது. ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமையும் அதன் வெளிநாட்டு அமைப்புகளும் அதைச் செய்யவிடவில்லை.


2003-ம் ஆண்டின் தொடக்கத்தில் இயக்கம் எனக்கு "ரிடையர்மெண்ட்" கொடுத்து விடுவித்துவிட்டது. நடைமுறையில் நான் விடுதலைப் புலிகளின் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டேன். ஆனால் தொலைவில் இருந்து கள நிலைமைகளை பார்த்து வந்தேன். 2008-ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் என்னுடன் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்க தலைமை தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. அப்போது புலிகளின் தலைவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க யுத்த நிறுத்தம் அவசியம் என்பதை நான் வலியுறுத்தினென். 2008-ம் ஆண்டு டிசம்பரில் பிரபாகரன் என்னை சர்வதேச பொறுப்பாளராக நியமிக்க ஒப்புக்கொண்டார். யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வரவும் ஒப்புக் கொண்டார்.



2008-ம் ஆண்டு டிசம்பரில் அப்படி ஒரு முடிவு எடுத்திருந்தாலும் யுத்த நிறுத்தத்தை நோக்கிய நகர்வுகள் புலிகள் தரப்பில் மிகவும் மெதுவாகவே இருந்தன. புத்தாண்டு பிறந்தபோது ராணுவமானது பரந்தன், கிளிநொச்சி, ஆனையிறவு ஆகியவற்றை கைப்பற்றியிருந்தது.


அப்போதுதான் விடுதலைப் புலிகளின் தலைமை கவலைகொண்டு அதன் வெளிநாட்டு பிரிவுகளை என் தலைமையின் கீழ் இயங்கவும் உத்தரவிட்டது. எனக்கு ஆதரவு தரவும் சொன்னது. ஆனால் வெளிநாட்டுப் பொறுப்பாளராக இருந்த காஸ்ட்ரோ, தமது பிரதிநிதி நெடியவன் மூலமாக எனது செயல்பாடுகளை சீர்குலைத்தார். போதுமான பண உதவி செய்யப்படவில்லை. இருந்தபோதும் ஒரு யுத்த நிறுத்தத்துக்கான தீவிர முயற்சிகளை நான் மேற்கொண்டிருந்தேன். சர்வதேச சமூகத்தின் முக்கிய நபர்களுடன் இந்த விவகாரத்துக்காக தொடர்பு கொண்டிருந்தேன்.


கேள்வி: எப்படி தொடர்பு கொண்டிருந்தீர்கள்? நேரடியாக தொடர்பு வைத்திருந்தீர்களா?


கேபி: நிறைய கடிதங்கள், ஃபேக்ஸ்கள், மின் அஞ்சல்கள் வழியாக தொடர்பு கொண்டிருந்தேன். யாரையெல்லாம் எப்படி தொடர்பு கொள்ள முடியுமோ அதை மேற்கொண்டேன். சிலரை நேரடியாகவும் தொடர்பு கொண்டேன். சில நேரங்களில் எனது பிரதிநிதிகள் சந்தித்தனர்.


கேள்வி: இதில் நார்வேயின் பங்கு என்ன?


கேபி: யுத்த நிறுத்தம் மற்றும் அமைதி முயற்சிகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட நாடு நார்வே. நார்வே மட்டும் குறிப்பிடத்தக்க அர்த்தமுள்ள பணியை ஆற்றியிருக்காவிட்டால் போர் நீண்டு இன்னும் மிக மோசமாக இருந்திருக்கும். ஆகக் கூடுமானவரையில் உயிரிழப்புகளைத் தடுக்கவே நார்வே விரும்பியது. மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் போரை முடிவுக்கு கொண்டுவர விரும்பினர்.


கேள்வி: அதற்காக நார்வே செய்தது என்ன?


கேபி: நார்வேயின் எரிக் சொல்ஹெய்ம் என்னுடன் தொடர்பில் இருந்தார். யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வருவதற்காக ஒரு சந்திப்பை நடத்த நாங்கள் முடிவு செய்தோம். 2009-ம் ஆண்டு பிப்ரவரி இறுதி வாரத்தில் இப்படியான ஒரு ரகசிய சந்திப்பு நடைபெற்றது.


கேள்வி: அந்த சந்திப்பு எங்கு நடைபெற்றது?


கேபி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஹில்டன் ஹோட்டைல் நடைபெற்றது. 2 நாட்கள் அந்த கூட்டம் நடந்தது.


கேள்வி: யார் யார் கலந்து கொண்டனர்? எரிக் சொல்ஹெய்ம் கலந்து கொண்டாரா?


கேபி: இல்லை... நார்வே அமைச்சராக அவர் இருந்ததால் அவர் கலந்து கொள்ளவில்லை. நார்வேயின் முக்கிய அதிகாரி, அவரது பிரதிநிதியாக வந்தார். மேலும் இரு நார்வே அதிகாரிகள் ஆஸ்லோவில் இருந்து வந்திருந்தார். இலங்கைக்கான நார்வே தூதரும் கலந்து கொண்டார்.


கேள்வி: யார் அவர்?


கேபி: கொழும்பில் அப்போது நார்வே தூதராக இருந்த ஹட்ரெம். இப்பொழுது அவர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறார் என நினைக்கிறேன்.


கேள்வி: விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளாக யார் கலந்து கொண்டது?


கேபி: நான், என்னுடைய செயலாளர் "அப்பு", ஜோய் மகேஸ்வரன், உருத்திரகுமாரன். இவர்களுடன் வெளிநாட்டைச் சேர்ந்த சில விடுதலைப் புலி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். அவர்களது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. உருத்திரகுமாரன், ஜோய் மகேஸ்வரன் இருவரும் நார்வே முன்னெடுத்த முந்தைய அமைதிப் பேச்சுவார்த்தைகளில் புலிகளின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டவர்கள்.


கேள்வி: அந்தப் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?


கேபி: யுத்த நிறுத்தம் பற்றியும் பேச்சுவார்த்தை பற்றியும் தெரிவித்தேன். பொதுமக்களின் நிலைமையை கண்ணீர்மல்க எடுத்துக் கூறி அவர்களைக் காப்பாற்ற எப்படியாவது யுத்த நிறுத்தம் அவசியம் என்று நார்வேயிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்.


கேள்வி: அதற்கு என்ன பதில் கிடைத்தது?


கேபி: அது மிகவும் எதிர்பாராதது.... நார்வே தூதர் ஹட்ரம் வெளிப்படையாக கடுமையான குரலில் ஆனால் உண்மைகளை விவரித்தார்.


கேள்வி: அவர் சொன்னது என்ன?


கேபி: யுத்த களத்தின் உண்மை நிலவரத்தை எங்களிடம் விவரித்தார். இலங்கை ராணுவத்தின் கைதான் ஓங்கி இருக்கிறது என்பதை விளக்கினார். சாளையில் 55-வது டிவிசன், விசுவமடுவில் 57 வது டிவிசன், தேவிபுரத்தில் 58-வது டிவிசன், முல்லைத்தீவு நகரில் 59-வது டிவிசன் நிலை கொண்டிருக்கிறது. சிறப்பு படை-2 உடையார்கட்டிலும் சிறப்பு படையணி 3 அம்பகாமமிலும் சிறப்பு படை 4 ஒட்டுசுட்டானிலும் நிற்கிறது என்றார்.



தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு சிறிய நிலப்பரப்பில் அட்டை பெட்டி வடிவத்தில் சுற்றி வளைக்கப்பட்டிருக்கின்றனர் என்று கூறினார். புலிகளை அழிக்க சிறிது காலம்தான் ராணுவத்துக்கு தேவை. அதனால் இலங்கையைப் பொறுத்தவரையில் யுத்த நிறுத்தம் என்பது தேவையில்லாத ஒன்று. ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரையில் புலிகளைத் தோற்கடித்துவிடுவது உறுதி என்றார் அவர்.



மேலும் பொதுமக்களுக்கு விடுதலைப் புலிகள்தான் பொறுப்பு. பொதுமக்களை மனித கேடயங்களாக கட்டாயப்படுத்தி புலிகள் வைத்திருக்கின்றனர். நீங்கள் சிலவற்றை விட்டுக் கொடுத்துதான் சிலவற்றைப் பெற முடியும் என்றும் கூறினார்.



கேள்வி: அது என்ன ஆயுத ஒப்படைப்பா?


கேபி: ஆம். சரியானதே.. விடுதலைப் புலிகள் ஆயுதங்களை சரணடைய ஒப்புக் கொண்டால் நார்வேயும் இதர நாடுகளும் யுத்த நிறுத்தம் குறித்து இலங்கையை கேட்டுக் கொள்ளும் என்றார். விடுதலைப் புலிகளுக்கு இனி வாய்ப்பு என்பதே இல்லை.. நிச்சயமாக இலங்கை ராணுவம் வெற்றி பெறத்தான் போகிறது என்றார். ஆகையால் உயிரிழப்பைக் குறைக்க விரும்பினால் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.


 அப்படி தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட உண்மையாக ஒப்புக் கொண்டால் அமெரிக்கா, இந்தியா, நார்வே போன்ற நாடுகள் யுத்த நிறுத்தத்துக்கு இலங்கையை வலியுறுத்தும் என்றும் கூறினார். அப்படி விடுதலைப் புலிகள் ஒப்புக் கொள்ளவில்லையெனில் யுத்தம் சிறிது காலத்தில் முடிந்துவிடும். அத்துடன் விடுதலைப் புலிகளின் கதையும் முடிந்துவிடும் என்றார்.


இதையடுத்து நாங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தொடர்பு கொண்டு பதில் கேட்கிறோம் என்றோம். இதுதான் அந்த சந்திப்பில் நடந்தது என்று கேபி கூறியுள்ளார்.


2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு என்ன நடந்தது? நார்வே எடுத்த முன் முயற்சி என்ன? பிரபாகரன் நிராகரிக்க காரணம் என்ன?


-அடுத்த பகுதியில்...

2009 பிப்ரவரியில் நார்வே முன்னெடுத்த அமைதி முயற்சிக்கு பிறகு என்ன நடந்தது?: கேபி பேட்டி (பகுதி 2)






 We Have 2 Plans Sl Final Warl Kp
Indian media misquoted me: Sri Lank...
கொழும்பு: இலங்கை இறுதிப் போரின் போது நார்வே முன்னெடுத்த முயற்சிகளைப் பற்றி மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளர் கேபி விவரிக்கும் பேட்டியின் 2-வது பகுதி:



புலிகளை காப்பாற்றும் திட்டம் -1



கேள்வி: நார்வே அதிகாரிகளுடனான 2009-ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற சந்திப்பு சாதகமாக இருக்கவில்லை. 2010-ம் ஆண்டு என்னிடம் நீங்கள் பேசும்போது, பிரபாகரனுக்கு 16 பக்க யுத்த நிறுத்த யோசனை பற்றி அனுப்பியதாகவும் அதனை 3 வார்த்தைகளில் அவர் நிராகரித்துவிட்டதாகவும் கூறினீர்கள். 2009-ம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு என்ன நடந்தது?



பதில்: நார்வேயின் யோசனையை பிரபாகரன் நிராகரித்த பின்னரும்கூட என்னுடைய முயற்சிகளை நிறுத்தவில்லை. நாளுக்குநாள் நிலைமை மோசமடைந்து கொண்டே இருந்தது. இதனால் நார்வே தரப்புடனும் சர்வதேச தலைவர்களுடனும் கூடுதலான முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன்.



இது வாழ்வா? சாவா? என்ற விவகாரம்... எப்படியாவது யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தி பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டும்.. இயக்கத்தை அதன் தலைமையை காப்பாற்ற வேண்டும் என்று கருதினேன். ஐ.நா.வின் உயர் அதிகாரிகள், தூதர்கள், கொள்கை வகுப்பாளர்கள் என பலதரப்போடும் போராடிப் பார்த்தேன். சிலரை நேரில் கூட சந்தித்தேன்.



மார்ச் மாத பிற்பகுதியில் சர்வதேச அனுசரனையுடன் ஐ.நா. பிரதிநிதிகளிடம் ஆயுதங்களை ஒப்படைப்பது என்ற திட்டத்தை உருவாக்கினேன். ஆயுதங்களை "மெளனிக்க" செய்தல் அது தேவைப்பட்டால் 25 முதல் 50 புலிகளின் முக்கிய தளபதிகள் குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவும், நடுத்தர போராளிகள் தடுத்து வைக்கப்பட்ட அவர்களுக்கு குறைந்த தண்டனை வழங்குதல், இளநிலைப் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்தல் என்பதுதான் அத்திட்டம்.



விடுதலைப் புலி தலைவர்களின் குடும்பத்தினருக்கு அடைக்கலம் கொடுக்க 3 நாடுகளுடன் பேசியிருந்தேன். இதில் ஆசிய நாடு ஒன்றும் அடக்கம். மற்றவை ஆப்பிரிக்க நாடுகள்.



இந்தத் திட்டம் நார்வே, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றால் ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்தியாவுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. தேவைப்பட்டால் போர்க் கப்பலை அனுப்பவும் அமெரிக்காவும் தயாராக இருந்தது.


இந்தத் திட்டம் பற்றி தெரிவித்து இதற்கான ஒப்புதலை தெரிவிக்கக் கோரி மார்ச் மாத இறுதியில் பிரபாகரனுக்கு கடிதம் அனுப்பினேன். அவர் செய்யலாம் என்று சொல்லியிருந்தால் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முழு முயற்சிகளில் இறங்கினேன். இதற்காக 16 பக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஃபேக்ஸ் மூலம் அனுப்பியும் வைத்தேன்.


16 பக்கத்துக்கு நான் அனுப்பி இருந்ததை "இதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று மூன்று வார்த்தைகளில் சொல்லிவிட்டார். அதனால் இந்தத் திட்டத்தையே நான் கைவிட்டேன்.


கேள்வி: விடுதலைப் புலிகளின் தலைவரை எப்படி தொடர்பு கொண்டீர்கள் நீங்கள்?



கேபி: சாட்டிலைட் தொலைபேசிகளை பயன்படுத்தினோம். பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக வேலு (குமாரவேல்) என்பவர் மூலமாக தொடர்பு கொண்டோம். அவர்தான் எனது தகவல்களை தலைவருக்கு தெரியப்படுத்தி அவரிடம் இருந்து பதில் பெற்றுத் தருவார்.


அதன் பின்னர் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன், கடற்புலி பொறுப்பாளர் சூசை ஆகியோரும் தலைவருக்கும் எனக்குமான தொடர்பாளர்களாக இருந்தனர்.


கேள்வி: ஐ.நா.வின் தலையீடு என்பது எந்தளவு இருந்தது?


கேபி: நார்வேதான் ஐ.நா.வுடன் இணைந்து செயல்பட்டது.என்னைப் பொறுத்தவரை ஐ.நா. அதிகாரிகளான ஹோல்ம்ஸ், விஜய் நம்பியார், தம்ர சாமுவேல் ஆகியோருடன் தொடர்பில் இருந்தேன்.



பிரபாகரன் நிராகரித்தது ஏன்?



கேள்வி: உங்களது திட்டத்தை பிரபாகரன் நிராகரிக்கக் காரணம் என்ன? உண்மையான களநிலவரம் அவருக்கு தெரியவில்லையா? என்ன நினைக்கிறீர்கள்?


கேபி: அவர் கேணல் தீபன் தலைமையில் ஒரு பதிலடித் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்தார் என்பது பின்னர் தெரிய வந்தது. ஆனந்தபுரம் பகுதியில் இதற்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பிரபாகரனைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய ராணுவ ரீதியான வெற்றியைப் பெற முடியும் என்று நம்பியிருந்திருக்கிறார்.


 இதன் மூலமாக நிலைமையை தலைகீழாக்க முடியும்... ராணுவத்தை சீர்குலைய வைக்க முடியும் என்று நம்பியிருக்கிறார்.


ராணுவம் முதலில் ஆனந்தபுரத்தில் தாக்குதல் நடத்தியது. புலிகளை அட்டைப் பெட்டி வடிவில் சுற்றி வளைத்தது. இதில் தீபன் உள்ளிட்ட ஏராளமான புலிகளின் தளபதிகள் உயிரிழந்தனர். அதன் பின்னர் நிலைமை வேறானது.


புலிகளை காப்பாற்றும் திட்டம் -2


கேள்வி: பிரபாகரன் நிராகரித்த பிறகு என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன?


கேபி: அந்த முயற்சிகளைத்தான் பிபிசி ஊடகத்திடம் எரிக்சொல்ஹெய்ம் விவரித்தது.... அதாவது தற்காலிக யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவிப்பது. அதன் பின்னர் ஐ.நா. அதிகாரிகள், பிரதிநிதிகள் (இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா. ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நார்வே) மற்றும் இந்திய பார்வையாளர்கள் அடங்கிய குழுவினர் வடபகுதிக்கு கப்பலில் செல்வது.


யுத்த முனையில் இருக்கும் புலிகள் மற்றும் பொதுமக்களுடன் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொள்வது.. அதன் பின்னர் இலங்கையின் பாதுகாப்பில் அனைவரையும் முகாம்களுக்கு அனுப்புவது என்பதுதான் எரிக்சொல்ஹெய்ம் சொல்லும் திட்டம்.



அதேபோல் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மெளனிக்க செய்துவிட்டு ஐநாவிடம் அவற்றை ஒப்படைப்பது. மார்ச் மாதம் என்ன திட்டமிடப்பட்டதோ அதன்படி விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களை வெளிநாட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்து அவர்களை கண்காணிப்பது. நடுநிலையான போராளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனையும், மற்றோருக்கு பொதுமன்னிப்பும் கொடுத்தல் என்பதும் அத்திட்டம்.



கேள்வி: இதில் பிரபாகரன்., பொட்டு அம்மான் சேர்க்கப்படவில்லையா?



கேபி: அவர்களும்தான் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவோர் பட்டியலில் இருந்தனர். அதை அவர்கள் ஏற்கவில்லை.


கேள்வி: எரிக்சொல்ஹெய்ம் வேறு மாதிரி சொல்கிறாரே..


கேபி: எனக்கும் தெரியும். எரிக்சொல்ஹெய்ம் வேறு மாதிரியாக சொல்கிறார் என்பது.. அந்தத் திட்டத்தின்படி பிரபாகரனும் பொட்டு அம்மானும் வெளிநாட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.



கேள்வி: ஒருவேளை ராஜிவ் கொலை விவகாரத்தில் பிரபாகரனையும் பொட்டு அம்மானையும் இத்திட்டத்தில் சேர்க்க வேண்டாம் என்று இந்தியா கேட்டுக் கொண்டதா?



பதில்: உண்மையில் என்ன நடந்தது எனத் தெரியவில்லை.. எனக்கே சொல்ஹெய்ம் சொல்வது புதிராக இருக்கிறது.



ஆனால் இந்தத் திட்டம் பிரபாகரனிடம் ஒப்படைக்கப்படவில்லை. ஏனெனில் அவர் இது விஷயமாக வேறு எதுவும் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.



நார்வே முன்னெடுத்த முயற்சிகளுக்கு பிரபாகரன் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் நான் வன்னிப் பகுதிக்கு நேரடியாக சென்று தலைவரை சந்தித்து பேசியிருப்பேன்.. என்றார் கேபி.



யுத்த நிறுத்த முயற்சிகளை பிரபாகரன் நிராகரித்தன் பின்னணியில் இருந்த தமிழக தலைவர்கள் யார்? பிரபாகரன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமல் போனது எப்படி? என்பவற்றை அடுத்த செய்திகள்ல் பார்க்கலாம்..



இலங்கை இறுதிப் போரில் பிரபாகரனுக்கு தவறான நம்பிக்கை கொடுத்த வைகோ-நெடுமாறன் : கேபி பேட்டி(பகுதி 3)

 Vaiko Misled Prabhakaran Kp
Vaiko argues for lifting ban on LTT...
கொழும்பு: இலங்கை இறுதிப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் தவ்றான நம்பிக்கையைக் கொடுத்தனர் என்று புலிகளின் சர்வதேச பொறுப்பளர் கேபி குற்றம்சாட்டியுள்ளார்.



வைகோ- நெடுமாறன்


இலங்கை ஊடகமான டெய்லி மிர்ரரில் வெளியான மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜூக்கு கேபி அளித்த பேட்டியில், பிரபாகரனைப் பொறுத்தவரை சமரசத்துக்கு இடமில்லாமல் போராட வேண்டும் என்ற மனநிலை உடையவர். அவர் எப்போதும் சமரசத்துக்கோ சரணடையவோ விரும்பாத்வர். மேற்குல நாடுகளை சந்தேகக் கண்ணோடு பார்த்தவர். இறுதிப் போரின் போது மேற்குலக நாடுகள் கொடுத்த உறுதி மொழிகள் மீது அவருக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது.


 இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது என நினைக்கிறேன்... தமிழ்நாட்டில் உள்ள வைகோ, நெடுமாறன் ஆகியோர் தவறான நம்பிக்கையை கொடுத்திருக்கின்றனர்.. அதாவது இந்தியாவின் மத்தியில் பாஜக வெற்று பெற்று ஆட்சி அமைக்கும் தமிழகத்தில் ஜெயலலிதா வெற்றி பெறுவார்.. தேர்தலுக்கு பிறகு நிலைமைகள் மாறலாம் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர் என்று கேபி தெரிவித்திருக்கிறார்.


பிரபாகரன் குடும்பத்தைக் காப்பாற்றும் பிளான்


மேலும், பிரபாகரனின் மகன் சார்ளஸ் ஆண்டனி என்னுடன் தொடர்பில் இருந்தார். அவர் தமது குடும்பத்தை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல கேட்டுக் கொண்டார். பிரபாகரன் குடும்பத்தை சிறிய ரக விமானம் மூலம் கள முனையிலிருந்து காப்பாற்றி அழைத்து செல்லத் திட்டமிட்டேன். இதற்கான செலவுத் தொகை 3.5 மில்லியன் டாலர். என்னிடம் அவளவு பணம் இல்லை.. இது தொடர்பாக புலிகளின் வெளிநாட்டு நிதி விவகாரங்களை கவனித்து வந்த நெடியவனிடம் பல முறை உதவி கேட்டேன். ஆனால் நெடியவனோ பணம் கொடுக்கவில்லை என்றும் அதில் கேபி கூறியுள்ளார்.






 நன்றி - தட்ஸ் தமிழ்

Thursday, May 10, 2012

ஜெ , கலைஞர்- இருவரையும் திணற வைக்கும் வை கோவின் கலக்கல் பேட்டி இன் விகடன்

18 ஆம் ஆண்டில் அடி எடுத்துவைக்கும் ம.தி.மு.க-வின் கொடியை வைகோ ஏற்றிய ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த சந்திப்பு இது...

http://rachelchitra.files.wordpress.com/2008/10/vaiko_tn_chiefminister.jpg


 1.''ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து மே 13-ம் தேதியுடன் ஓர் ஆண்டு நிறைவடைகிறது. இந்த ஓர் ஆண்டு காலத்தை எப்படி மதிப்பிடுவீர்கள்?''


''மாற்றம் விரும்பிய மக்களுக்கு ஏமாற்றத்தையே ஜெயலலிதா தந்து இருக்கிறார் என்று, அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாவது மாதமே சொன்னேன். 'ஜெயலலிதா திருந்திவிட்டார்’ என்று சொல்லி வாக்குக் கேட்டவர்கள் அத்தனை பேர் முகத்திலும் கரியைப் பூசிவிட்டார் ஜெயலலிதா.


பால் விலையை ஏற்றிவிட்டார். பஸ் கட்டணத்தை உயர்த்திவிட்டார். மின்சாரம் கொடுக்கத் திட்டமிடாமல் மின் கட்டணத்தை மட்டும் எகிறவைத்துவிட்டார். மளிகைப் பொருட்கள் அனைத்தின் விலையும் ஏறிவிட்டன. யாரெல்லாம் ஜெயலலிதாவை ஆட்சிக்குக் கொண்டுவர வாக்குஅளித்தார்களோ, அவர்கள் அனைவரின் பாக்கெட்டில் இருந்தும் பணத்தைப் பகிரங்கமாக அரசாங்கம் எடுத்துவிட்டது.


 ஏழை, நடுத்தர மக்கள் இதுபற்றிக் கோபப்படுவார்களே என்கிற பயமே ஜெயலலிதாவுக்கு இல்லை. 'இவ்வளவு கட்டணத்தை உயர்த்தியதற்குப் பிறகும் நான்தான் சங்கரன்கோவிலில் வெற்றி பெறுவேன்’ என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் பகிரங்கமாகச் சொன்னார். பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற மமதைதான் இதற்குக் காரணம்.


 திருமங்கலம் ஃபார்முலாவைக் கண்டுபிடித்த கருணாநிதியின் பண பலம்தான்    அவரை பாதாளத் துக்குத் தள்ளிவிட்டது என்பதை ஜெயலலிதா உணர வேண்டும்.''


'' 2. 2.'நான் என்ன தவறு செய்வேன் என்று எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் காத்திருக்கின்றன’ என்கிறாரே ஜெயலலிதா?''


''பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பெயரால் அமைந்த நூற்றாண்டு நூலகத்தை முடக்க நினைத்தது சரியா? செம்மொழி நூலகத்தைப் பகிரங்கமாகவே அப்புறப்படுத்தியதை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும்? சமச்சீர்க் கல்வியை முடக்குவதற்காக எத்தனை வக்கீல்களை வைத்து ஜெயலலிதா வாதாடினார்?


தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்திருக்குமானால், கடந்த ஆட்சி மீது விசாரணை நடத்தலாம். அதற்காக மக்களின் வரிப் பணத்தால் கட்டப்பட்ட கோடிக்கணக்கான மதிப்பிலான கட்டடத்தை கவனிப்பார் இல்லாமல் போடு வேன் என்பது பாசிச அணுகுமுறை. கடந்த ஆட்சி செய்ததை எல்லாம் மாற்றுவேன் என்று அடுத்து வரும் ஆட்சி முடிவு எடுக்குமானால், ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தும் கேலிக்குரியவையாகி சவக்குழிக்குள் தள்ளப்படும்.''




3.''ஓர் ஆண்டு காலத்தில் நல்லதே நடக்கவில்லை என்கிறீர்களா?''


''பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்’ என்று தமிழ்நாட்டு மக்களின் மன உணர்வை வெளிப்படுத்தியது பாராட்டத்தகுந்தது. முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு சதி செய்ததும், அதற்கு மத்திய காங்கிரஸ் அரசு வாய் மூடி மௌனியாக இருந்தபோது, அறிக்கை வெளியிட்டு தமிழ்நாட்டு உரிமைக்காக ஜெயலலிதா நின்றதை வரவேற்கிறோம்.

 தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் என்கிற பெயரால் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படுகிறபோது, தைரியமாக அதனை எதிர்த்து உறுதியாக ஜெயலலிதா நிற்பது கவனிக்கத் தக்கது.''

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-ymYvJGv58xC5KYG-BbiE-SPfVCG21CrpEQ2-9y8-2UQGOLGAFs_sYkLc-uIh-2GrYP0CKD9ZP7y2rGC31QNLwePeCbDx_MswPnwccSctTtSIQpACIkbsCyuSkLDSC_yTjt1txBdnFZw/s1600/vaiko_2.jpg


4. ''இந்த ஓர் ஆண்டு காலப் படிப்பினைகளின் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு நீங்கள் ஆலோசனை ஏதேனும் சொல்ல முடியுமா?''


''மூன்று விஷயங்களை ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.


ஜெயலலிதாவின் அணுகுமுறையில் மாற்றம் வர வேண்டும். அரசியல்தலைவர் களால், மக்கள் பிரதிநிதிகளால், பாதிக்கப் பட்ட மக்களால் எளிதில் பார்க்க முடியாத மனிதராக அவர் இருக்கிறார்.

 இப்படி நடந்துகொள்வது மன்னர் ஆட்சிக் காலத் தின் எச்சம். தெருத் தெருவாகச் சென்று மக்களிடம் ஓட்டு போடுங்கள் என்று கேட்டு வாக்கு வாங்கும் மக்கள் ஆட்சிக் காலத்தில், அனைத்துத் தலைவர்களும் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். 

சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தப் பட்டபோது தமிழகத்தின் எத்தனையோ குடும்பங்கள் அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று பிரார்த்தித்தன. அலெக்ஸின் அப்பாவும் அலெக்ஸ் மனைவியின் அப்பா வும் தலைமைச் செயலகத்துக்குச் சென்று முதல்வரைப் பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டபோது கிடைக்கவில்லை. 

அவர்களை தமிழக முதல்வர் சந்திப்பது என்பது, அந்தக் குடும்பத்தின் பின்னால் மொத்தத் தமிழ்நாடும் இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு சமிக்ஞை. அதன் பிறகு, பிரதமருக்குக் கடிதம் எழுதினார் முதல்வர். ஆனால், பாதிக்கப்பட்டவர்களை அந்தச் சூழ்நிலையில் சந்திப்பதால், அப்பாயின் மென்ட் இல்லாமலேயே அவர்களைப் பார்க்க அனுமதிப்பதால் முதல்வர் குறைந்து விட மாட்டார். அவருடைய செல்வாக்கு உயரத்தான் செய்யும்.


இரண்டாவது... தமிழ்நாடு முழுவதும் கண்மாய், குளங்களில் மணல் கொள்ளை பகிரங்கமாக ஆளும் கட்சியினரின் ஆசீர்வாதத்துடன் பலமாக நடக்கிறது. ஆளும் கட்சியினருக்கு இன்று வருவாய் ஈட்டும் முக்கியமான தொழில்... மணல் திருட்டுதான். பிரதான ஆற்றுப் படுகைகள் மட்டும் அல்லாமல், சிற்றாறுகள், காட்டாறுகளைத் தேடிக் கண்டுபிடித்து மணல் அள்ளுகிறார்கள். தமிழ்நாட்டின் வளத்தை பட்டப் பகலில் சுரண்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதைத் தடுக்காவிட்டால், தமிழகமே பாலைவனமாகிவிடும்.


மூன்றாவது... சாராயக் கடைகள் மூலமாக வருமானம் அதிகமாவதை ஓர் அரசாங்கம் சாதனையாகச் சொல்வது கேவலமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் குற்ற நடவடிக்கைகள் பெருகிப்போய், பண்பாட்டுச் சீர்கேடுகள் அதிகமானதற்கு டாஸ்மாக் கடைகள்தான் காரணம்.


 ஜெயலலிதாவும் கருணாநிதியும் சேர்ந்து தமிழ்ச் சமுதாயத்துக்குச் செய்த பெருங்கேடு இது. இனி மதுக் கடைகளைப் புதிதாகத் திறக்கக் கூடாது; ஏற்கெனவே உள்ள கடைகளைப் படிப்படியாக மூட வேண்டும். எலைட் பார் வரவே கூடாது. தமிழ்நாட்டு ஆண்களின் கல்லீரலைக் கெடுத்த கழகங்கள் என்று வருங்கால சமுதாயம் இவர்கள் இருவரையும் சபிக்கும்!''

http://www.vaiko-mdmk.com/vaiko_img/nadaipayanamhtml/img/vaiko_big61.JPG


5. ''ஈழப் பிரச்னைக்கு வருவோம். மீண்டும் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) தொடங்கி உள்ளாரே கருணாநிதி?''


''கூச்சம் இல்லாமல் பொய்கள் சொல்வதும் வெட்கம் இல்லாமல் வேடிக்கை காட்டுவதும் கலைஞர் கருணாநிதிக்குக் கைவந்த கலை. வசனம் எழுதி வாழ்க்கையைத் தொடங்கியவர் அதே வசனங்கள் இன்னமும் கை கொடுக்கும் என்று நினைக்கிறார். 80-களின் தொடக்கக் காலத்தில் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் எல்லாம் 'ஈழம்’ என்ற சொல்லை விதைத்த 'டெசோ’ அமைப்பின் கழுத்தை நெரித்துக் கொன்றவரே கருணாநிதிதானே!

 24 ஆண்டுகளுக்கு முன் அவராலேயே கொன்று புதைக்கப்பட்ட உடலை மீட்டெடுத்து... பாடம் பண்ணி... படம் காட்ட வருகிறார். இது டெசோ அல்ல. வெறும் ஷோ!



யாழ்க் கோட்டையில் புலிக் கொடி பறந்தபோது வேடிக்கை பார்த்த அவர்... வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் முக்கால் நிலப் பரப்பில் நிர்வாகத்தைத் தமிழீழ அரசாங்கம் நிர்வகித்தபோது கண்டுகொள்ளாமல் இருந்த அவர்... தரைப் படை, கப்பல் படை, விமானப் படை மூன்றும் பிரபாகரனுக்கு இருந்தபோது வயிற்றெரிச்சல் பட்ட இவர்... ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் களம் நின்ற காலத்தில் கண்டுகொள்ளாதவர்... உலகம் பயன்படுத்தும் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்திப் போரிட்டு நின்ற காலத்தில் அதை ஒரு பொருட்டாகக் கருதாதவர்... இன்றைக்குத் தமிழ் ஈழம் அமையப் பாடுபடுவேன் என்று பேசுவது பச்சை சந்தர்ப்பவாதம். கருணாநிதிக்கு இது இயல்பானது.



நான்காவது கட்ட ஈழப் போர் என்பது 2006-2009 காலகட்டத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷேவால் நடத்தப்பட்ட ரத்த வெறியாட்டம். இன்றைக்கு 'டெசோ’வை உயிர்த்தெழவைத்திருக்கும் கருணாநிதி, அன்று தமிழன் சாகாமல் இருக்கச் செய்த காரியம் என்ன? தமிழ் ஈழத்துக்காகக் குரல் கொடுத்தாரா? கருணாநிதிக்கு தைரியம் இருக்குமானால், நேர்மை இருக்குமானால், 2008 நவம்பர் மாதம் முதல் ஆட்சியைவிட்டு இறங்கியது வரை ஈழப் பிரச்னை குறித்து பேசியது, எழுதியது அனைத் தையும் பகிரங்கமாக வெளியிடட்டும்.


 தமிழனுக்கு எதிராகப் பேசினார். தமிழீழக் கொள்கைக் குத் துரோகம் இழைத்தார். ஈழத் தமிழர்களின் காவல் அரணாக இருந்த விடுதலைப் புலிகளைப் பழித்தார். இலங்கை அரசோடு இணைந்து நாசகாரச் செயல்களுக்கு உடந்தையாக இருந்த மன்மோகன் - சோனியா கூட்டத்துக்கு ஆதரவாக இருந்தார். இந்தப் பாவத்துக்கு கருணாநிதியால் பரிகாரம் காணவே முடியாது.


தமிழர்கள், கருணாநிதியின் டெசோவை சீரியஸாக எடுத்துக்கொள்ளவே இல்லை. அவர் ஆண்டுக்கு ஒரு முறை கதை வசனம் எழுதும் படங்களைப் போலவே ஃப்ளாப் ஆகும் படங்களில் ஒன்று இது.''


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAXA2BaLH5NRLgz1z51PXObXERn1U6BSLlQU1VNBsN1j3fYYVomcZVKIKskaVzuJ8CFEz6hANjzSr3nh8kTNzDQeZDhzhXEGgrglf5PAifBbDndDpu2PYWQ2GDw372O1FCD6vVgTdFf5I/s1600/jayalalitha_vaiko_alliance-cartoon.jpg

6.''தி.மு.க-வில் ஸ்டாலின் - அழகிரி மோதல் தொடர்ந்து நடப்பதாகச் செய்திகள் வருகின்றனவே?''


''கொள்கைக் கட்சியில் விவாதங்கள் நடக்கும். குடும்பக் கட்சியில் கோஷ்டி மோதல்தானே நடக்கும்?


கருணாநிதியைப் போன்ற திறமையாளர்களைப் பார்ப்பது அரிது. அனைவரையும் ஈர்க்கக்கூடிய பேச்சு, வசீகரம் செய்யக்கூடிய எழுத்து, யாருக்கும் வாய்க்காத ஞாபக சக்தி, எவரையும் மடக்கும் சொற்சிலம்பம், ராஜதந்திரமாகக் காய்கள் நகர்த்துவதில் லாகவம், உலகத் தமிழர்கள் ஒருசேர வைத்திருக்கும் நம்பிக்கை - இத்தனையும் ஒருசேர இருந்தது கருணாநிதிக்கு.

 திறமையான அவருக்கு காலம் தங்கத் தாம்பாளத்தில் தலைவர், முதல்வர் என இரண்டு பதவிகளையும் ஒருசேர வழங்கியது. திறமையும் வாய்ப்பும் ஒருசேர ஒரு மனிதனுக்குக் கிடைத்தன. ஆனால், அத்தனை திறமைகளையும் சுயநலம், குடும்பப் பாசம் என்ற இரண்டின் காலடியிலும் கருணாநிதி கொண்டுபோய்ப் புதைத்துவிட்டதால் வரலாற்றின் முன் 'தமிழினக் குற்றவாளி’ என்ற பதற்றத்துடன் அவமானமாகத் தலைகுனிந்து நிற்க வேண் டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டார். இதைப் பார்த்து நான் சந்தோஷப்படவில்லை. பரிதாபப்படுகிறேன்.


எந்த இயக்கத்துக்காக என் இளமையின் பெரும் பகுதியை உழைப்பாக வழங்கினேனோ... எந்தத் தலைவனுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்து நின்றேனோ... அந்தத் தலைவன்... இப்படிப்பட்ட பழிச் சொல்லுக்கு ஆளாகிவிட்டாரே என்ற கவலையிலேயே பேசுகிறேன்!''




7.''அ.தி.மு.க., தி.மு.க. இரண்டையும் முழுமையாக நிராகரிக்கிறீர்கள். ஆனால், தமிழகத்தை இவர்கள் இருவரும் மட்டும்தானே மாறிமாறி ஆள முடிகிறது?''


''இரண்டு கட்சிகளுக்குமே வலிமையான வாக்கு வங்கி தமிழகத்தில் இருக்கிறது. இதுவே ஆட்சி அமைக்க சாதகமாக உள்ளது. அவர்களுக்கு இதுவே தைரியமும் கொடுக்கிறது. இந்த முறை தோற்றால்... அடுத்த முறை வந்துவிடுவோம் என்ற தைரியத்தில் இருக்கிறார்கள். இதனால் தவறை திருத்திக்கொள்ள முன்வருவது இல்லை.


இதைத் தமிழக மக்கள் உணர்ந்துவிட்டார்கள். தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளின் வாக்கு வங்கி வலிமை குறைந்துவருகிறது. புதிய, இளைய வாக்காளர்கள் இந்த இரண்டு கட்சிகளையும் நிராகரிக்கும் மனோபாவத்துக்கு வந்து உள்ளார்கள். மாற்றம் உடனடியாக வந்து விடும் என்று சொல்ல முடியாது. ஆனால், பல ஆண்டுகளுக்கு இது நீடிக்காது.''


8.''குறிப்பிட்ட அளவு செல்வாக்கு இருந்த, உங்க ளுடைய சொந்தத் தொகுதியான சங்கரன்கோவில் கூட ம.தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பைத் தரவில்லையே?''


''எங்களை எதிர்த்து நின்ற மூன்று கட்சிகளுமே வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தன. ஓட்டுக்கு ஒரு பைசாவும் தர மாட்டோம் என்று சபதம் எடுத்து நாங்கள் நின்றோம். இத்தகைய சூழ்நிலையில் 21 ஆயிரம் பேர் வாக்களித்ததே வெற்றிக்குச் சமம்தான்!''

http://seithy.com/siteadmin/upload/vaiko13-072011x411.jpg


9.''புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நிற்பீர்களா?''


''இல்லை. பகிரங்கமாகப் பண வேட்டை நடத்தும் ஆளும் கட்சியும், அதைக் கை கட்டி வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையமும் இருக்கும் நாட்டில் இடைத் தேர்தலில் போட்டி என்பது தவறான முடிவாகிவிடும். பணத்துக்கு ஓட்டை விற்பது ஜனநாயகத்தில் விழுந்துள்ள ஓட்டை. இதை சங்கரன்கோவிலில் சரிசெய்ய முடியவில்லை. புதுக்கோட்டை மக்களாவது பணத்துக்கு விற்கும் பாவத்துக்குப் பலியாகிவிடக் கூடாது என்பதே என்னுடைய வேண்டுகோள்.''
- கை கூப்பி முடிக்கிறார் வைகோ
 
நன்றி - விகடன்

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.  
 
 

Friday, September 16, 2011

ராஜீவ் காந்தி கொலை வழக்கு - வெளிவராத மர்மங்கள்- வை .கோ திகில் பேட்டி

http://media-2.web.britannica.com/eb-media//41/115041-050-2EC8ABCC.jpg 

சென்னை - டெல்லி - குமாரபாளையம் - டெல்லி - கோவை - சென்னை - ஆத்தூர்... நித்தமும் வேறு வேறு ஊர்கள். மூன்று தமிழர்களின் உயிர் காப்பு, முல்லைப் பெரியாறுக்காக உண்ணாவிரதம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு, போர்க் குற்ற விசாரணை... வைகோவுக்கு நித்தம்  நித்தம் யுத்தம்தான்!


1. ''ஜெயலலிதா, தனது 100 நாட்கள் ஆட்சியைச் சாதனை விழாவாகக் கொண்டாடிவிட்டார். இந்த 100 நாட்கள்பற்றிய உங்களது கருத்து என்ன?''


''இலங்கையைப் போர்க் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது, இலங்கை மீது பொருளாதாரத் தடை வேண்டும் எனக் கேட்டது, கச்சத் தீவை மீட்க வேண்டும் என்றது, மூன்று தமிழர்களின் உயிர் காக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தது என வரவேற்கத் தக்க பல்வேறு முயற்சிகளை முதலமைச்சர் இந்த 100 நாட்களில் செய்து காட்டிவிட்டார். 

ஆனால், சமச்சீர்க் கல்வி விவகாரத்தில் அவரது அணுகுமுறை தவறானது. ஒருமுறை உச்ச நீதிமன்றம் கண்டித்த பிறகும், தனது போக்கை மாற்றிக்கொள்ளாமல் மறுபடியும் டெல்லிக்கு ஓடியது, அவரது பிடிவாதக் குணத்தையே காட்டியது. இது சரியான ஜனநாயக அணுகுமுறை அல்ல!

பொதுவாகவே, இலவசங்களை அறிவித்து ஆட்சியைத் தக்கவைப்பது சரியானது அல்ல. 'உழைப்பே உயர்வு தரும்’ என்று சொல்லி வளர்க்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தில் உழைக்கும் மனோநிலையைக் குறைக்கும் இத்தகைய இலவசத் திட்டங்களை முதலமைச்சர் குறைக்க வேண்டும். கருணாநிதி இத்தகைய திட்டங்களைக் கொண்டுவந்தபோது விமர்சித்த இன்றைய முதல்வரும், அதையே பின்பற்றுவது தவறானது.

இத்தகைய திட்டங்களால்தான் தமிழகத்தில் வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல், பீகார், ஒடிஷாவில் இருந்து ஏராளமானவர்கள் இங்கு வேலைக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே நாசமாக்கும் டாஸ்மாக் மது விற்பனையை ஓர் அரசாங்கம் தனது சாதனையாகச் சொல்வது அருவருப்பானது. உழைக்கும் வர்க்கமான இளைய தலைமுறையின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாத அக்கறையற்ற போக்கு எனக்குக் கவலையைத் தருகிறது!''


2. ''திருச்சி மேற்கு தேர்தலைப் புறக்கணிக்கும் ம.தி.மு.க. உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா?''


''நிச்சயம் போட்டியிடுவோம்! 'ஊழலற்ற உண்மையான உள்ளாட்சி நிர்வாகத்துக்கு உறுதி அளிக்கும் ம.தி.மு.க.’ என்ற முழக்கத்தோடு வரப்போகிறோம். அ.தி.மு.க-வுடன் கூட்டணிக்கு நாங்கள் முயற்சிக்கவும் இல்லை. தி.மு.க - வுடன் கூட்டும் கிடையாது. எங்களை மட்டுமே நம்பி நாங்கள் இருக்கிறோம். 

பண பலம், அதிகார பலம், விளம்பர பலம் மூன்றுமே இல்லாமல், மக்களின் நம்பிக்கையைக் கடந்த ஐந்து மாதங்களில் அதிகமாகப் பெற்றுள்ளோம். ஊழல் கறை படியாதவர்கள் என்ற தகுதி எங்களைத் திரும்பிப் பார்க்கவைக்கிறது. மாற்றுச் சக்தியாக ம.தி.மு.க. வரும். அதை இந்த உள்ளாட்சித் தேர்தல் சொல்லும்!''


3.''ராஜீவ் காந்தியைக் கொன்ற கொலையாளிகளை ஆதரித்து நீங்கள் பேசுவது, அந்தக் கொலையைவிடக் கொடூரமானது என்று காங்கிரஸ் கட்சியினர் கொந்தளிக்கிறார்களே?''

''ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்தை நியாயப்படுத்தி நான் எந்த இடத்திலும் பேசவே இல்லை. மேலும், அந்தச் சம்பவத்துக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கும் துளி அளவும் சம்பந்தம் இல்லை. நாங்கள் தூக்கு மேடையில் இருந்து காப்பாற்றத் துடிப்பது கொலையாளிகளை அல்ல... அப்பாவிகளை. அசைக்க முடியாத ஆதாரங்களைவைத்து, அந்த வழக்கு போடப்பட வில்லை. 

ஜோடிக்கப்பட்ட கதைகளை வைத்து புனையப்பட்ட நாடகம் இது. ஒரே ஓர் உதாரணம் மட்டும் சொல்கிறேன்... பேட்டரி செல்களை வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளன் மீது குற்றச்சாட்டு. பேட்டரி செல் வாங்கினால், எந்தக் கடையிலாவது பில் கொடுப்பானா? அதுவும் 21 ஆண்டுகளுக்கு முன்னால் கொடுப்பானா? சரி, கொடுத்தான் என்றே வைத்துக்கொள்ளுங்கள். மே மாதம் 21-ம் தேதிக்கு முன்னால் தரப்பட்ட அந்த பில்லை, ஜூன் மாதம் 10-ம் தேதி வரை யாராவது சட்டைப் பையில் வைத்திருப்பாரா? கொலைச் சதியில் உடந்தையாக இருந்தவர் என்றால், அவருக்கு இதுவே முக்கிய ஆதாரமாக மாறும் எனத் தெரியாதா? கிழித்துப்போட்டு இருக்க மாட்டாரா? போலீஸ் கைதுசெய்ய வரும்போது, எடுக்க வசதியாக மேல்சட்டையில் வைத்து இருப்பாரா?  இப்படி எத்தனையோ கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகலாம். இப்படிப்பட்ட அப்பாவிகளுக்காகத்தான் பேசுகிறோம். இவர்களுக்குக் கொலையிலும் சம்பந்தம் இல்லை.

கொலைச் சதியிலும் பங்கேற்பு இல்லை. இதுதான் உண்மை!


இவர்களைத் தூக்கில் போடக் கூடாது என்று நாங்கள் சொல்வது கொலைக்கான ஆதரவு என்றால், 'இவர்களைத் தூக்கில் போடக் கூடாது’ என்று சோனியா சொன்னாரே, அவர் மீதும் இதையே சொல்வார்களா? 'எனக்கோ, என்னுடைய குடும்பத்துக்கோ, எனது பிள்ளைகளுக்கோ இவர்கள் நால்வரையும் தூக்கில் போட வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை’ என்று 99-ம் ஆண்டு அன்றைய ஜனாதிபதியிடம், சோனியா சொன்னதைத்தான் நாங்கள் சொல்கிறோம்!


நளினி, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய நால்வருக்கும் தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ், தூக்குத் தண்டனைக்கு எதிராக இப்போது கருத்துச் சொல்லி இருக்கிறார். நீதிபதி சொல்வதைத்தான் நாங்கள் சொல்கிறோம். பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி, சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுக் குழுவைக் கண்காணித்த அதிகாரி வி.ஆர்.கார்த்திகேயன். அவரும் தூக்குத் தண்டனை அவசியம் இல்லை என்கிறார். கார்த்திகேயன் சொல்வதைத்தான் நாங்கள் சொல்கிறோம். சோனியா உள்ளிட்ட இவர்களையும் கொலைகாரர்கள் என்பார்களா காங்கிரஸ்காரர்கள்?''

http://nimg.sulekha.com/others/original700/priyanka-gandhi-2009-6-1-7-23-3.jpg


4.''ஸ்ரீபெரும்புதூர் தாக்குதலில் இறந்த ராஜீவ் நீங்கலான 16 பேரின் குடும்பத்தினர் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். 'மூன்று பேரையும் தூக்கிலிட்டே தீர வேண்டும்’ என்று அவர்கள் சொல்வதற்கு உங்கள் பதில் என்ன?''


''அவர்களது துயரத்தில் நானும் பங்கேற்கிறேன். 'போன உயிர் திரும்பி வரப்போவது இல்லை’ என்று அவர்கள் பேட்டி அளித்து இருப்பதையும் நான் பார்த்தேன். அவர்களைத் தங்களது அரசியல் சுய லாபங்களுக்காக காங்கிரஸ்காரர்கள் தூண்டி விட்டுக் குளிர்காயப் பார்க்கிறார்கள். உச்ச நீதிமன்றம் வழங்கிய தனது தீர்ப்பில், 'இது தனிப்பட்ட ஒரு நபரைக் கொலை செய்ய நடந்த தாக்குதல்தான். 

மற்ற 16 பேர் இறந்தது தற்செயலானது. எனவே, இதை 17 பேர் இறப்புக்குக் காரணமான கொலையாகக் கருத முடியாது. அரசுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த வேண்டும், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் இல்லை’ என்று கூறிஉள்ளது. இதை காங்கிரஸ்காரர்கள் படிக்க வேண்டும்.


மும்பையில் 93 பேர் கொலையான சம்பவத் துக்குக் காரணமானவராகச் சொல்லப்படும் அபுசலீம், போர்ச்சுக்கல் நாட்டில் மறைந்து இருந்தார். இந்தியா அவரை ஒப்படைக்கச் சொன்னது. 'உங்கள் நாட்டிடம் ஒப்படைத்தால், அவரைத் தூக்கிலிட்டுக் கொல்வீர்கள்’ என்று தர மறுத்தார்கள். 'நாங்கள் தூக்கில் போட மாட்டோம்’ என்று போர்ச்சுக்கல் அரசுக்கு வாக்குறுதி கொடுத்தது இந்தியா. அது எந்த அடிப்படையில்?


பாகிஸ்தான் அரசு சரப்ஜித் சிங்கைத் தூக்கிலிடக் கூடாது என்று எந்த அடிப்படையில் இந்தியா சொல்கிறது?


இன்றைக்கு நீலிக்கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ்காரர்கள், லட்சக்கணக்கான தமிழர்கள் ஈழத்தில் கொல்லப்பட்டபோது, ஒரு நிமிடம் கண்ணீர் சிந்தியது உண்டா? இலங்கைப் படுகொலைகளுக்கு காங்கிரஸ் அரசும் பதில் சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் நெருங்கிக்கொண்டு இருப்பதால், அதைத் திசை திருப்ப மூன்று தமிழர்களைத் தூக்கிலிடத் திட்டமிட்டார்கள். அது நடக்காது.


மக்கள் மன்றம் இதை ஏற்காது என்பதற்கு ஆதரவாக எத்தனையோ போராட்டங்கள் நடந்தன. இதை ஏற்று சட்டமன்றமும் தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் மகத் தான சாதனையை முதல்வர் செய்துகாட்டிவிட்டார். இனி இருப்பது நீதிமன்றம் மட்டும்தான். ஏராளமான முன்னுதாரணத் தீர்ப்புகளைவைத்து, சட்டரீதியான வாதங் களிலும் வென்று எடுப்போம். தூக்குமரம் முறியும். இவர்கள் மூவருக்காக மட்டும் அல்ல... நிரந்தரமாகவே முறிய வேண்டும்!''


 நன்றி விகடன்

http://www.itimes.com/files/rsz/fit_s_400x600/files/01-2010/107/72ec12e11f2f0755d1957ba571fb7066_1262856257.jpg


சில சந்தேகங்கள், சில கேள்விகள்
1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் எப்படி ஒப்புக் கொண்டார்? 

2. ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா? 

3. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்? 

4. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள். அவர்களுடைய வேலை, ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன? 

5. ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்திலிருந்து சர்க்யூட் ஹவுஸுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்? 

6. சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா? 

7. ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன் ராமாவரம் தோட்டம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்குள்ளானதா? இன்றுவரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?

8. யார் அந்த பல்கேரியர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்? 

9. யார் அந்த இரண்டு அயல்நாட்டு பெண் பத்திரிகையாளர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?

10. அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் ராஜீவை பேட்டி கண்டார்கள். ஆனால் த. பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என்றார்கள். இவர்கள் எதை மறைக்க முயலுகிறார்கள்? ஏன்?



photo

11. தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா? 


12. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார்.


13. உள்துறை அமைச்சர் அப்படி சொல்லக்காரணம் என்ன என்பதை விசேஷ புலனாய்வுத்துறை ஏன் விசாரிக்கவில்லை? 

14. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை? 


15. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராபத், 'ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது' என்று அன்றைய பிரதமர் சந்திரசேகரிடம் தெரிவித்தார். 'அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்?' என்பதை ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை? 


16. மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தால் மட்டுமே அரபாத்திற்கு இந்தப் பின்னணி தெரிய வாய்ப்புண்டு.

17. மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் தன் கணவருடனும் வழக்கறிஞர் மகேந்திரனுடனும் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவேயில்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை? சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை?


18. சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களவர்கள் தான். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாஸாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?

 19. விடுதலைப் புலிகள், இலங்கை அரசு இரண்டுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இந்திய அமைதிப் படை இலங்கையில் நுழையக் காரணமாக இருந்த ராஜீவ் மீது இரு தரப்பினருக்கும் கோபமுண்டு. இந்த விஷயத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் விசேஷப் புலனாய்வுத் துறைக்கு ஒரு சவால் விட்டார். 'வினோதினியின் பூர்வீகம் என்ன? அவரும், அவர் குடும்பத்தினரும் அப்பாவிகள் என்பதை நிரூபித்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தானாகவே தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள் என்றார். இறுதிவரை அவர் சவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை.
http://livinggallery.oneindia.in/d/4268-2/sonia-robert-priyanka-rahul.jpg

20. காமினி திசநாயகா, அத்துலத்முதலி, விக்கிரமசிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?


 21. சிவராசன், தனு, சுபா ஆகியோர் ஒரு அந்நிய சக்தியின் தூண்டுதலால் ஏன் இந்தக் கொலையை செய்திருக்கக் கூடாது? அந்த மூவரும் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்பதால் மட்டுமே அவர்களைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி விசாரணையை முடித்துவிட்டார்களா?


22. புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த என்ன பலத்த ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் உள்ளது?


 23. பிரபாகனும், சிவராசனும் ரேடியோ மூலம் பேசியதை விசேஷப் புலனாய்வுத் துறை கேட்டதாகச் சொல்லப்படுவது ஏன் ஒரு கற்பனையான ஆதாரமாக இருக்கக்கூடாது?

 24. 'விசேஷ' இலட்சியமுள்ள அரசியல்வாதிகள், ஏன் அவரது காங்கிரஸ் தோழர்களே கூட தங்கள் வளர்ச்சிக்கு ராஜீவ் தடையாக இருக்கிறார் என்பதால் கூலிப்படையினரை ஏவிவிட்டு ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?


 25. பல்வேறு நாட்டு ஆயுத வியாபாரிகள், பிரதமர் என்கிற முறையில் ராஜீவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். கூலிப்படைகள் மூலமாக அவர்கள் ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?

26. மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில் இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக்கூடாது என்று இலங்கை அரசு ஏன் நினைத்திருக்கக்கூடாது?

 27. மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் சி.ஐ.ஏ. வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா?

 28. புலிகளின் 'இந்துத்துவா' அபிமானம், இலங்கைத் தமிழர்களுக்கு உண்டான இந்து வெறி இரண்டையும் பயன்படுத்தி ஆர். எஸ்.எஸ். பிஜேபி இலங்கைத் தமிழர்கள் மூலமாக ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது? அவர்கள் ஆட்சியைப் பிடிக்க தடையாக இருக்கும் ஒரே தலைவர் ராஜீவ் தான். மகாத்மாவைக் கொன்றவர்கள் ஏன் ராஜீவைக் கொன்றிருக்கக்கூடாது?


29. வாழப்பாடி ஏற்றுக் கொள்ளவில்லை. மூப்பனார் அக்கறை காட்டவில்லை. ஆனால் மரகதம் சந்திரசேகர் மட்டும் டெல்லி சென்று ஏன் ஸ்ரீபெரும்புதூருக்கு வரவேண்டும் என்று ராஜீவை வற்புறுத்தினார்? தன்னை அறியாமல் சிக்கி ராஜீவ் மரணப்படுக்கையில் விழக் காரணமாகி விட்டாரா?


 30. யார் இந்த பொட்டு அம்மான்? இப்படி ஒரு நபர் இருக்கிறாரா? அம்மான் ஒரு மூத்த தலைவர். ஒரு போரில் இறந்துவிட்டார். பொட்டு மட்டுமே உள்ளார் என்கிறது எல்.டி.டி.ஈ. வட்டாரம். உயிருடன் இல்லாத ஒரு நபரை எப்படி இரண்டாவது குற்றவாளியாக புலனாய்வுத்துறை முத்திரை குத்தியது?
http://www.timescontent.com/tss/photos/preview/145416/Priyanka%20Gandhi-Robert%20Vadra.jpg

31. பத்மநாபா கொலை வழக்கையும், இந்த வழக்கையும் ஒப்பிட்டால் பல உண்மைகள் வெளிவருகின்றன. தமிழ்நாடு காவல்துறையின் 'க்யூ' பிராஞ்ச், பத்மநாபா வழக்கை விசாரித்தது. விசேஷப் புலனாய்வுத்துறை, ராஜீவ் கொலை வழக்கை விசாரணை செய்தது. இரண்டு விசாரணை அமைப்புகளும் சதி நடந்த இடம் யாழ்ப்பாணம் என்கின்றன. பத்மநாபா வழக்கில் குற்றவாளிகளில் சிவராசன். ராஜீவ் வழக்கில் அவர் முக்கிய குற்றவாளி. அப்படியானால் ராஜீவ் கொலையில் குற்றவாளியாகக் கருதப்பட்ட பிரபாகரன் பத்மநாபா வழக்கில் ஏன் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை? ஆகவே பிரபாகரன் பெயரை நுழைப்பது அரசியல் முடிவே தவிர விசாரணையினால் கிடைத்த தெளிவே அல்ல. கடும் உள்நோக்கத்துடன் வழக்கிற்கு உயிர்கொடுக்க புலனாய்வுத்துறை செய்த முயற்சி இது.


32. விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார் கவிஞர் காசி. ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டு வந்த தகவல் என்ன? 'ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவை' என்று பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏன் அவரை பிரபாகரன் கொலை செய்ய வேண்டும்?


 33. இந்தியா மற்றும் தமிழகத்தில் தான் தனக்கு அனுதாபமும், ஆதரவும் கிடைக்கும் என்பது பிரபாகரனுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இந்த மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிற தவறைச் செய்து, நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தடை செய்யப்படுகிற அளவுக்கான முட்டாள் தனத்தையா பிரபாகரன் செய்தார்?


34. லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனிதகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை? லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்களின் மீது புலனாய்வுத் துறைக்கு ஏன் இத்தனை பரிவு?


 35. ஸ்ரீபெம்புதூருக்கு செல்லும் முன் இரண்டு தெருமுனைக் கூட்டங்களில் பேசினார் ராஜீவ். அந்தக் கூட்டங்களில் மேடை வரை உடன் வந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் ஏன் தொலை தூரம் தள்ளிப்போனார்?


 36. அப்பாவிப் பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் பலர் ராஜீவுடன் உயிரிழந்தார்கள். ஆனால் காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கும் இலேசான காயம் கூட இல்லையே. அது ஏன்?


 37. தனு, சுபா, சிவராசன் மூவரையும் ஸ்ரீபெரும்புதூருக்கு அழைத்து வந்தவர் லதா பிரியகுமார் என்று கருதப்படுகிறது. குறிப்பாக பெண்கள் பகுதிக்கு அழைத்து வந்து லதா கண்ணனிடம் அவர்களுக்கு உதவும்படி சொன்னார். அவர் மீது ஏன் குற்றம் சுமத்தப்பட வில்லை?


38. பிரபாகரன், சிவராசன் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய படத்தை வைத்துக் கொண்டு பிரபாகரனுக்கு இதில் தொடர்பு உண்டு என்று எப்படிச் சொல்லலாம்?


 39. தனு, சுபா, சிவராசன் மூவரும் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, மேற்கத்திய, ஐரோப்பா, இந்தியா கூலிப்படையின் கையாட்களாக ஏன் ஆகியிருக்கக்கூடாது?


 40. மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?
http://img.timeinc.net/time/photoessays/2009/nehru_ghandi/nehru_ghandi_07.jpg

41. சந்திரா சுவாமி, சுப்பிரமணிய சுவாமி, சந்திரசேகர், ஆயுத விற்பனையாளர் கசோகி மூவருக்கும் இந்த வழக்கில் ஏதாவது தொடர்பு உண்டா என்கிற கோணத்தில் விசாரணை நடந்ததா?


 42. புலிகள் இந்தக் கொலையை செய்ததின் மூலம் அவர்களுக்குக் கிடைத்த ஆதாயம் என்ன? அமெரிக்கா போன்ற மிகப் பெரிய வல்லரசுகள், சி.ஐ.ஏ. மூலமாக, ஏராளமான ஆயுத உதவிகளும் செய்து இந்தக் காரியத்தை செய்ய வைத்தார்களா?


43. யாரோ சிலரைப் பிடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.யும், விசேஷ புலனாய்வுத் துறையும் எதற்கு?

Thursday, March 24, 2011

வை கோ - ஆனந்த விகடன் பேட்டி - காமெடி கும்மி

வைகோ என்ற விதை நெல்லை வீணடித்துவிட்டார் ஜெ! தனது பசியைக்கூடப் பொறுத்துக்கொண்டு, எதிரிகளுக்கு விருந்து வைக்கும் யதார்த்த நிலைக்கு கருணாநிதி இறங்கி வந்திருந்தார். ஆனால், விசுவாசத்தைக் கொஞ்சம் கூடுதலாகவே காட்டிய வைகோவின் வயிற்றில் அடிக்கும் அளவுக்கு ஜெயலலிதா துள்ளிக் குதிக்கிறார். அ.தி.மு.க. அணி கலகலத்துவிட்டது தெளிவு.

கருணாநிதிக்கு எதிரான வாக்குகளை ஜெயலலிதாவுக்குச் சாதகமானதாக மாற்றும் சாமர்த்தியத்துடன் வலம் வந்த வைகோவின் துணை இல்லாமல் தேர்தலைச் சந்திக்க வருகிறார் ஜெயலலிதா. தி.மு.க-வில் இருந்த காலம் முதல் இன்று வரை அனைத்துத் தேர்தல்களிலும் பம்பரமாகச் சுழன்று வந்த வைகோ, இந்தத் தேர்தலில்... வெறும் பார்வையாளர்! 



1. ''நீங்கள் விரும்பும் அளவிலான தொகுதிகளை ஜெயலலிதா தர மாட்டார் என்று தெரிந்தது. ஆனால், கூட்டணியைவிட்டு விலகும் அளவுக்கு நிலைமை மாறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லையே?''

''மறுமலர்ச்சி தி.மு.க. தங்கள் அணியில் இருக்கக் கூடாது என்று தொடக்கத்திலேயே ஜெயலலிதா முடிவெடுத்துவிட்டார். தொகுதிப் பங்கீடு குறித்து நாங்கள் அமைத்த குழு, நான்கு முறை அ.தி.மு.க-வுடன் பேச்சு நடத்தியது. கடந்த முறை எங்களுக்குத் தரப்பட்ட 35 இடங்களை முதலில் கேட்டோம். இரண்டாவது சுற்று பேச்சில் 30 தொகுதிகளாவது வேண்டும் என்றோம். நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தையில்தான் எங்களுக்கு 6 இடங்கள்தான் தர முடியும் என்று சொன்னார்கள்.
பல்வேறு கட்சிகள் வருவதால் 23 தொகுதிகளாவது ஒதுக்கச் சொன்னோம். 7 தொகுதிகள் தருவதாகச் சொன்னார்கள். அதன் பிறகு, 8 தருவதாகச் சொன்னார்கள். பிறகு அவர்களே, 8 தர முடியாது, 7 தான் முடியும் என்றார்கள். பிறகு, 8 தர முடியும் என்றார்கள். அதன் பிறகு 9 இடங்கள் தருவதாகச் சொல்லி, கையெழுத்து போட வரச் சொன்னார்கள்.


ஜெயலலிதா சொல்லி அனுப்பிய எண்ணிக்கைகள் அவரது மன ஊசலாட்டத்தைக் காட்டுவதாக மட்டும் இல்லை. எதைச் சொன்னால் நான் ஏற்க மாட்டேனோ, அதைச் சொல்லி என்னைக் கோபப்படுத்த நினைத்தார். நானாகவே வெளியேறிவிடுவேன் என்று திட்டமிட்டார்.


'நீ இன்னுமா இருக்கிறாய்?’ என்று ஜெயலலிதா கேட்பதுபோல இருந்தது. எங்களுக்கும் அவருக்குமான பிரச்னைக்கு எண்ணிக்கை காரணம் அல்ல... எண்ணமே காரணம்!''

அண்ணே.. முதல்ல பேச்சு வார்த்தைன்னா வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு இருக்கனும்.. முதல் கட்ட பேச்சு வார்த்தை, 2வது கட்ட பேச்சு வார்த்தை.. இதெல்லாம் எதுக்கு..பேரம் பேச இதென்னா மாட்டுச்சந்தையா?
2. ''ஜெயலலிதாவுக்கு உங்கள் மீது கோபம் வர என்ன காரணம்?'' 

''2006-ம் ஆண்டு அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைக்கும் முடிவைக் கனத்த இதயத்துடன் நான் எடுத்தேன். பொடாவில் என்னை 19 மாதங்கள் சிறைவைத்த ஜெயலலிதாவுடன் அணி சேரத் தயங்கினேன். ஆனால், குறைவான இடங்களை கலைஞர் ஒதுக்கினார்.

எனவே, அ.தி.மு.க. கூட்டணிதான் சரியானது என்று கட்சி முன்னணியினர் முடிவெடுத்தார்கள். அதற்கு, நான் கட்டுப்பட்டேன். அப்போது நான், 'அரங்கேற்றம்’ படத்தின் கதாநாயகி, தனது தம்பியைப் படிக்கவைக்கக் கெட்டுப்போவதைப்போல, கட்சி நலனுக்காக இதற்கு உடன்படுகிறேன்!’ என்றேன். அ.தி.மு.க. கூட்டணிக்கு என்னைக் கட்டாயப்படுத்தி அழைத்துப் போனவர்கள் இன்று தி.மு.க-வில் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்!


அந்த சட்டமன்றத் தேர்தலில், அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில், சட்டமன்ற நடவடிக்கைகளில், இடைத் தேர்தல்களில் எல்லாம் அ.தி.மு.க-வுடன் எந்த முரண்பாடும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் கேட்காத நெல்லை, தஞ்சாவூரை ஜெயலலிதா ஒதுக்கினார். போராடித்தான் நான்கு தொகுதிகள் வாங்கினேன். 

அதிலும் நாங்கள் கேட்காத நீலகிரி, தஞ்சையைத் தந்தார். கொடுத்ததை வாங்கிக்கொள்ளவில்லை என்ற கோபத்தில், தீவுத் திடல் கூட்ட மேடையில் என்னிடம் ஜெயலலிதா பேசவில்லை. அன்று அவரது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நான் போனேன். வாசலில் முறையான வரவேற்பு இல்லை.

ஆனால், மற்ற தலைவர்களை வாசலில் வந்து வரவேற்று அழைத்துச் சென்று இருப்பதை ஜெயா டி.வி-யில் பார்த்தபோது, 'இந்த சோற்றைத் தின்றிருக்க வேண்டாம்!’ என்று நினைத்தேன். அது தனிப்பட்ட வைகோவுக்கு இழைக்கப்பட்ட அவமானம். தாங்கிக்கொண்டேன். ஆனால், இன்று, 6, 7, 8, 9... என்பது ம.தி.மு.க-வுக்கு ஏற்பட்ட அவமானம். என்னைவிட இயக்கம்தான் பெரிது.


சிறையில் இருப்பது மட்டும் தியாகம் அல்ல. நிந்தனைக்கும் பழிக்கும் ஆளாகும் நிலையை எடுப்பதும் தியாகம்தான். அதன் பிறகும் அவமானம்தான் பரிசு என்றால், ஏன் அதைத் தாங்கிக்கொள்ள வேண்டும்?''

அதிமுக என்றாலே அ வமானத்தை தி னமும்  மு ந்திக்கொண்டு தரும் க ழகம் என்று தான் பொருள்.. ஏம்ப்பா அவ்வளவு கஷ்டப்பட்டு அங்கே போறீங்க.. அந்தம்மா குணம்தான் தெரியுதல்ல....


3. ''குறைவாக இருந்தாலும், வெற்றி பெறும் தொகுதிகளை வாங்கி, அதில் மட்டும் நின்றுஇருக்கலாமே?'' 


''21 இடங்கள்... அதுவும் நாங்கள் கேட்ட இடங்கள் கொடுத்தாலும் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவது தவறு என்பதைக் கடந்த 10 நாட்களின் சம்பவங்கள் எனக்கு உணர்த்திவிட்டன!


48 ஆண்டுகள் பொது வாழ்க்கை உடையவன் நான். திராவிட இயக்கத்தின் வழித்தோன்றல் நான். இந்த அனுபவத்தில் சொல்கிறேன், 'ஜெயலலிதா இன்னும் திருந்தவில்லை... திருந்தவும் மாட்டார்’ என்பதை இந்த 10 நாட்கள் உணர்த்திவிட்டன. 

ஜெயலலிதாவின் அணுகுமுறையில், காலம் தந்த படிப்பினைகளால் மாற்றம் ஏற்பட்டு இருக்கும் என்று நம்பியது முற்றிலுமாகப் பொய்த்துவிட்டது. அவருடைய போக்கிலும் அணுகுமுறையிலும் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. 

அகந்தையும், ஆணவமும், தன்னிச்சையான அணுகுமுறையும், இன்னமும் போகவில்லை. அவருடன் இணைந்து கூட்டணியில் தொடர்வதும் வாக்காளர்களைச் சந்திப்பதும் எந்த வகையிலும் சரியானது அல்ல.

ம.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக வேண்டும் என்பதற்காக, திருந்தாத ஜெயலலிதாவுக்கு நான் வாக்கு கேட்டுச் செல்வது, 'வைகோ நல்லவன்’ என்று நம்பும் தமிழ் மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம். என்னுடைய மனசாட்சிக்குச் செய்யும் துரோகம்.


தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, இவ்வளவு ஆணவம் தலை தூக்குமானால், இப்படிப்பட்டவர் கையில் ஆட்சி போனால் என்ன ஆகும்? முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்த ஜெயலலிதா செய்யும் தவறுகளைக் கண்டிக்க, பிரசாரம் செய்ய எனக்கு யோக்கியதை உண்டா? 

'உன்னைச் சேர்ந்தவர்களை எம்.எல்.ஏ ஆக்க, ஜெயலலிதாவை நல்லவர் என்று சொல்லி, எங்களை முட்டாள் ஆக்கினீர்களா?’ என்று பொதுமக்கள் கேட்க மாட்டார்களா?

என்னைப் பொறுத்தவரையில், மக்களின் நம்பகத்தன்மையை மட்டும்தான் சொத்தாக நினைக்கிறேன்!''

இப்படி சொல்ற நீங்க.. இதே ஜெ உங்களுக்கு 20 சீட் குடுத்திருந்தா அம்மான்னா சும்மா இல்ல... ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்னு சொல்லி இருப்பீங்க.. மனுஷனோட நாக்கு இருக்கே அது நரம்பில்லாதது.. எப்படி வேணும்னாலும் மாத்தி மாத்தி பேசும்....


4. ''மூன்றாவது அணியாவது அமைக்க முயற்சித்து இருக்கலாமே?'' 


''தமிழகத்தைப் பொறுத்தவரை மூன்றாவது அணி சாத்தியம் இல்லை. பண பலம்கொண்ட இரண்டு அணிகளை எதிர்த்தால், மூன்றாவது அணி... மூன்றாவது இடத்தில்தான் வரும்!''


அப்படி சொல்ல முடியாது.. தி மு க வின் நிரந்தர ஓட்டு வங்கி 32%, அதிமுகவின் நிரந்தர ஓட்டு வங்கி 29 % ... மீதி இருக்கற எல்லா எதிர்க்கட்சியும் ஒண்ணு சேர்ந்து ஓட்டே போடாத, போடப்பிடிக்காத அனைவரும் ஒன்று சேர்ந்தா மாற்றம் நிகழும்...

5. ''தனியாக நிற்பது..?'' 


''ஒரு தரப்பை வீழ்த்த, இன்னொரு தரப்பிடம் பணம் வாங்கினேன் என்ற பழிச் சொல் மட்டும்தான் அதனால் கிடைக்கும்!''

அதுவும் இல்லாம கைக்காசு வீணா செலவு தான் ஆகும்.. அதையும் சொல்லுங்க.. இதுல என்ன ஒளிவு மறைவு.?
6. ''தேர்தல் அரசியலில் நம்பிக்கைகொண்ட ஒரு கட்சி தேர்தலைப் புறக்கணிப்பது சரியானது அல்லவே?'' 

''நாங்கள் இந்தத் தேர்தலை மட்டும்தான் புறக் கணித்து இருக்கிறோம். இனி, தேர்தலில் நிற்கவே மாட்டோம் என்று சொல்லவில்லையே! ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டபோது, மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தேர்தலில் பங்கேற்கவில்லை. சூழ்நிலைகளைச் சரிப்படுத்தி, கட்சியைப் பலப்படுத்திவிட்டு தேர்தலைச் சந்தித்தது. சீனாவில் மாசேதுங், தனது செம்படையைத் திடீரென்று கலைத்தார். எல்லோரும் இதைக் கடுமையாகக் கண்டித்தார் கள். ஆனால், ஓர் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அதை உருவாக்கி வென்று காட்டினார்.


ஒரு பக்கம்... தன்னுடைய சுயநலத்தால் தி.மு.க-வைக் கபளீகரம் செய்து தமிழினத்தைக் காட்டிக்கொடுத்த கருணாநிதி, இன்னொரு பக்கம் ஆணவப் போக்குகொண்ட ஜெயலலிதா - இந்த இருவர் மீதும் கோபம்கொண்ட பொதுமக்கள்தான் நாட்டில் அதிகம். அந்த வெற்றிடத்தை நாங்கள் நிரப்புவோம். எனக்கு அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்தும், 'தன்மானத்தை இழந்துவிடாதீர்கள்... சுயமரியாதையை இழந்துவிடாதீர்கள்!’ என்றே சொல்கின்றன. இழக்கவில்லை என்பதைத் தேர்தல் புறக்கணிப்பு மூலம் நிரூபித்து இருக் கிறேன்!''

'தன்மானத்தை இழந்துவிடாதீர்கள்... சுயமரியாதையை இழந்துவிடாதீர்கள்னு எல்லாரும் சொன்னப்பவே நீங்க ஒண்ணு மறந்துட்டீங்க... தன்மானம் இருக்கறவங்க இந்தக்காலத்துல அரசியலுக்கே வரக்கூடாது.. சுய மரியாதை இருக்கறவங்க அம்மா கூட கூட்டுன்னு அங்கே போய் கால்ல விழக்கூடாது...

7. ''பதவிகள், பொறுப்புகளுக்காக கட்சிக்குள் வருபவர்கள் ஏமாந்து போவார்கள். கட்சி மாறிவிடுவார்களே?'' 

''எல்லா சூழ்ச்சிகளையும் தாண்டித்தான் ம.தி.மு.க. இயங்கிக்கொண்டு இருக்கிறது. லட்சங்களைக் காட்டி பொதுக் குழு உறுப்பினர்களைப் பிரித்து, 'நாங்கள்தான் உண்மையான ம.தி.மு.க’ என்று ஒரு கும்பல் சதித் திட்டம் தீட்டியபோதே, எங்கள் உறுப்பினர் எவரும் போகவில்லை. லட்சியத்தைப்பற்றி நான் பேசுவதால் மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள்!''

இங்கே தான் கலைஞர் தப்பு பண்ணீட்டார்.. லட்சங்களை காட்டாம கோடியை காட்டி இருந்தா எல்லாரும் புற்றீசல் மாதிரி அங்கே போய் இருப்பாங்க.. உங்க கட்சி ஆளுங்களை குறைச்சு மதிப்பிட்டுட்டார் கலைஞர்....


8. ''யாருக்கு வாக்களிப்பது என்பதைச் சொல்வீர்கள்தானே?'' 


''ம.தி.மு.க. தொண்டனின் மனசாட்சியே அதை முடிவு செய்யும்!''

இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு? அம்மாவுக்கு எதிராத்தான் போடுவாங்க.. அது அய்யாவுக்குத்தான் போகும்.. கலைஞருக்கு செம லாபம்...
9. ''இத்தனை ஆண்டு காலப் பொது வாழ்வில் இந்த இரண்டு வாரங்களில் நீங்கள் பெற்ற படிப்பினை என்ன?'' 

''சிகாகோவில் உள்ள மே நாள் நினைவு அரங்கில், 'மௌனம் சில வேளைகளில் சப்தத்தைவிட வன்மையானது’ என்று எழுதப்பட்டுள்ளது. ஒரு பேச்சாளனான நான், இது சத்தியமானது என்பதை உணர்ந்துகொண்டேன். இந்த இரண்டு வாரமும் நான் மௌனமாக இருந்தேன். 

ஆனால், ஆயிரம் கூட்டங்கள் பேசினால் கிடைக்கும் பெருமையையும், நற்பெயரையும் இந்த மௌனம் எனக்கு வாங்கித் தந்திருக்கிறது. கடந்த முறை அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்ததால், பழிக்கு ஆளானேன். அந்தப் பழி துடைக்கப்பட்டுவிட்டது. காலம் எனக்குச் செய்திருக்கும் அருட்கொடை இது!''

எனக்கென்னவோ நீங்க அடுத்த எலக்‌ஷனுக்கு அய்யா கூடவே சேர்ந்து எனது ஒரே தலைவன் கலைஞர் தான்னு வீர முழக்கம் இடுவீங்களோன்னு டவுட்டா இருக்கு...


10. '' 'என்றும் நான் உங்கள் அன்புச் சகோதரிதான்!’ என்று ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறாரே?'' 

''ம.தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர் பட்டியலை அறிவித்ததும் அதே அன்புச் சகோதரிதானே! ம.தி.மு.க நடத்தப்பட்ட விதம் குறித்து, பொதுமக்கள் மத்தியில் கோபமும் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எனக்கு ஏற்பட்ட அனுதாபத்தையும் பார்த்துப் பயந்துபோன ஜெயலலிதா, இப்படி ஒரு கடிதத்தை அனுப்பி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்!''

சீட் குடுக்க முடியலைன்னா கலைஞர் இதயத்தில் இடம் உண்டுன்னு டகால்டி அடிப்பாரே.. அந்த மாதிரி இது அம்மா டெக்னிக்....


11. ''இந்தத் தேர்தல் களத்தில் நீங்கள் இல்லை...வருத்தமாக இல்லையா?'' 

''தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் இருப்போம்!''

நீங்க இருப்பீங்க... கட்சி இருக்குமா? # டவுட்டு