Showing posts with label VADIVEL. Show all posts
Showing posts with label VADIVEL. Show all posts

Saturday, June 16, 2012

மறுபடியும் ஒரு காதல் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitAUSb_bg4OW3XrH9_1ea7fNbQIOnxjOikUJrgTktnDTMjnA8saMxfFLHT4BggXPz__wBB2Vr8wTtUOk6ll4qCY3WbH-XsNgdxCvkiIyZZdR3x3fVO9H5J8ARWdgAckNOhp3-6Nk5xh1T_/s1600/marupadiyum-oru-kadhal-movie-posters-01.jpg

ஹீரோ இந்தியாவுல டாக்டர், ஹீரோயின் லண்டன்ல டாக்டர்.. 2 டாக்டர்ஸும் பேஷண்ட்டை கவனிக்காம ரேடியோ மிர்ச்சில, எஃப் எம் ல பாட்டுக்கேட்கறாங்க.. அதுல கேட்கற கேள்விக்கு பதிலை விமர்சனம் மாதிரி எழுதி அனுப்பறாங்க.. என்ன  ஒரு மெடிக்கல் மிராக்கிள் பாருங்க. 2 பேரும் முதல் பரிசுக்கு செலக்ட் ஆகறாங்க.. ஆனானப்பட்ட சன் டி வி யே ஏதாவது போட்டி வெச்சா 500 ரூபா செலவுல கிஷ்கிந்தா கூட்டிட்டு போறாங்க.. ஆனா இவங்க 2 பேரையும் லண்டன்ல ஒரு விழாவுக்கு கூப்பிடறாங்க..

2 பேரும் காதலர் தினம் படத்துல வர்ற மாதிரி மெயில் சேட்டிங்க்ல ஃபிரண்ட்ஸ் ஆகறாங்க.. காதல் கோட்டை மாதிரி ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டது இல்லை.. ஹீரோயின் அப்பா இந்தியா போகச்சொல்றாரு.. இந்த கேன ஹீரோயின் என்ன பண்ணுது.. ஹீரோ அனுப்பின கிரீட்டிங்க்ஸ், லெட்டர்ஸ்ட் எல்லாத்தையும் கிழிச்சுப்போட்டுட்டு அவனைப்பற்றின தகவல் அடங்கின பென் டிரைவை மட்டும் எடுத்துட்டு இந்தியா போகுது..

பில்லா படத்துல வர்ற மாதிரி அந்த பென் டிரைவை ஹீரோயின் தொலைச்சுடுது.. 2 பேரும் சந்திக்க முடியாத சூழல்.. எதேச்சையா ஹீரோ,ஹீரோயின் குடும்பம் 2ம் கோயில்ல சந்திச்சு நட்பாகறாங்க.. சம்பந்தம் பேசி முடிக்கறாங்க.. பெற்றோர்கள் வற்புறுத்தலால் 2 பேரும் மேரேஜ் பண்ணிக்கறாங்க.. ஆனா மற்றபடி கில்மா ஏதும் நடக்கலை.. 2 பேர் மனசிலயும் தங்கள் காதல் பற்றின ஏக்கம்,.,. பரஸ்பரம் காதலிச்ச நபரைத்தான் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்னு 2 பேருக்கும் தெரியலை.. இதுக்கு மேல என்ன ஆகுது என்பதுதான் மிச்ச சொச்ச கதை..

அகத்தியனின் காதல் கோட்டை, காதல் தேவதை, கதிரின் காதலர் தினம் எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி ஒரு கதையை டைரக்டர் ரெடி பண்ணி இருக்காரு.. காதலர்கள் பார்க்கற அளவு இருக்கு .

ஹீரோ அனிருத் ஆள் டீசண்ட்டா தான் இருக்கார்.. இவர் சாதாரணமா இருந்தா காலேஜ் ஸ்டூடண்ட், ஒரு பவர் கிளாஸ் போட்டா டாக்டர், ஒரு சரக்கு கிளாஸ்ட் அடிச்சா லவ் ஃபெயிலியர் ராமானுஜம்.. அவ்லவ் தான்.. ரொம்ப ஈஸி.. எதிர் காலம் உண்டு

ஹீரோயின் ஜோஸ்னா.. பேரே ஏதோ நாய்குட்டி மாதிரி இருந்தாலும் பாப்பா குதிரைக்குட்டி மாதிரி ஜைஜாண்டிக்கா இருக்கு.. பூப்போட்ட பாவாடையை மிடி மாதிரி போட்டுக்கிட்டு வெள்ளைக்கலர் பனியன் போட்டுக்கிட்டு அது ஸ்லோமோஷன்ல ஓடி வர்றப்போ அடடா.. துள்ளுவதோ இளமை.... பாட்டு மட்டும் தான் போடலை.. அழுகைக்காட்சிகள், காதல் காட்சிகளில் கன கச்சிதம் .. மாடர்ன் டிரஸ்ஸில் அசத்தும் அவர் சுமங்கலி பூஜை அன்று அக்மார்க் தமிழ்ப்பொண்ணாக பட்டுச்சேலையில் அசத்துவது அழகு.. கண்ணுக்குள் நிக்குது.

சுமன் இதுல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்.. ஹீரோயின் அப்பாவாக அடக்கி வாசித்து இருக்கிறார்.. படத்தில் தனி காமெடி டிராக்காக வடிவேல் காமெடி ஓடுது.. ஆனந்த விகடன், குமுதம் இதழ்களில் வந்த 17 ஜோக்ஸ்களை எடுத்து கொஞ்சம் பட்டி டிங்கரிங்க் பண்ணுனா காமெடி டிராக் ரெடி.. சில சிரிக்க வைக்குது.. பல கடுப்படிக்குது.. 

 http://kollywoodz.com/wp-content/uploads/2012/06/Marupadiyum-Oru-Kadhal-Movie-Stills04.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஹீரோ, ஹீரோயின் செல்கஷன் கன கச்சிதம் அவர்களிடம் வேலை வாங்கியது எல்லாம் ரைட்.. ஒரு புது முக ஹீரோயினை எந்த அளவுக்கு எக்ஸ்போஸ் பண்ண வேண்டுமோ அந்த அளவு எக்ஸ்போஸ் பண்ணி யூஸ் பண்ணிக்கிட்டது சபாஷ்.. .

2. சலக்கு சலக்கு சிங்காரி குத்தாட்ட பாட்டு இசை, நடன அமைப்பு செம.. சி செண்ட்டர் ரசிகர்களை எழுந்து ஆடவைக்கும்..

3. படத்தில் வடிவேல் காமெடி ஒட்டாமல் இருந்தாலும் போஸ்டர்களில் , விளம்பரங்களில் மார்க்கெட்டிங்க்கு ரொம்ப யூஸ் ஆகுது..
http://haihoi.com/Channels/cine_gallery/marupadiyum_oru_kadhal_movie_latest_stills_13779_S_170.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்

1. ஹீரோ மருத்துவத்துறைல சாதனை செஞ்சதுக்கான பாராட்டு விழாவுல ஒரு நாட்டின் ஜனாதிபதி அப்படித்தான் டிராமா ஆர்ட்டிஸ்ட் மாதிரி கையை ஆட்டி ஆட்டி உணர்ச்சிவசப்படு பேசுவாரா?

2. கைதட்டும் ஆடியன்ஸ் ஏன் தலைக்கு மேலே கையை தூக்கி கைதட்டறாங்க? சினிமாவில் மட்டும் தான் அப்படி கிளாப்ஸ் பண்றாங்க.. எல்லா விழாக்கள்லயும் இயல்பா கையை மடுல வெச்சுத்தான் தட்றாங்க..

3. படத்தோட மெயின் KNOT ஹீரோயின் ஹீரோ பற்றின தகவல்களை மறப்பது, அந்த பென் டிரைவை தொலைப்பது.. நான் கேட்கறேன் உணத்தியா 2 பேரும் சேட் பண்ணாங்களே . அந்த மெயில் ஐடிக்கு மெயில் பண்ணி கேட்கலாமே?

4. ஒரு சீன்ல ஹீரோயின் ஃபிரண்ட்ஸ் கிட்டே தன் மெயில் பாஸ்வோர்டை மறந்துட்டதா ரொம்ப வருத்தப்பட்டு சொல்லுது.. ஏன்? பாஸ்வோர்டை மறந்துட்டா அதை ரெக்கவர் பண்ண ஒரு ஆப்ஷன் இருக்கே? அதை க்ளிக் பண்ணி மாத்திக்கலாமே?

5. ரேடியோவுல கேள்வி கேட்டதுக்கு 2 பேரும் வாசகர் கடிதம் மாதிரி எழுதறாங்க.. விமர்சனம்னும் சொல்லலாம்.. ஆனா அதை உங்க கவிதை சூப்பர்னு தொகுப்பாளர் அடிக்கடி சொல்றார். அது என்ன கவிதைப்போட்டியா?

6. ரேடியோ  ஆஃபீஸ்க்கு ஃபோன் போட்டு ஹீரோ அட்ரஸ் கேட்டா கொடுத்துட்டு போறாங்க.. ஏன் பாப்பா பம்முது?

7. காதலிக்கறவங்க கடைசி வரை காதலன் கொடுத்த க்ரீட்டிங்க் கார்டை சண்டை வந்தா தவிர மற்ர படி கிழிச்சு எல்லாம் போட மாட்டாங்க.. அந்த லூஸ் ஹீரோயின் ஏன் கிழிக்கனும்?

8. ஹீரோ ஹீரோயின் ஃபோட்டோவை ஆல்ரெடி பார்த்து இருக்கார்.. ஆனா கண்ணை மட்டும் மறைச்ச வாக்கு போஸ்ல.. ஹீரோயினை நேர்ல சந்திக்கறப்போ “உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?”ன்னு கேட்கறார்.. அதுவே “நீங்க ரேடியோ புரோகிராம்ல வந்த கவிதாயினியா?”ன்னு கேட்டிருந்தா அப்பவே படம் முடிஞ்சிருக்கும்.. . 


http://www.cinepicks.com/tamil/gallery/marupadiyum-oru-kadhal/marupadiyum-oru-kadhal-3113.jpg


9.ஒரு சீன்ல ஹீரோயின் தோழிகள் அட்வைஸ்படி ஹீரோ பேர் உள்ல 182 பேரை ஃபில்டர் பண்ணி நெட் மூலம் ஒரே க்ளிக்ல எஸ் எம் எஸ் அனுப்பற மாதிரி சீன் வருது.... ஆனா வே டூ எஸ் எம் எஸ் உட்பட எல்லா எஸ் எம் எஸ் சேனல்லயும் குரூப் மெசேஜ் ஒரு டைம்ல 25 பேருக்குத்தான் அனுப்ப முடியும்.. அப்புரம் 25 பேருக்கு அனுப்பலாம்.. ஒரே க்ளிக்ல 182 பேருக்கெல்லாம் அனுப்பவே முடியாது

10. ரேடியோ புரோகிராமர்க்கு ஒரு டைம் ஹீரோயின் ஹீரோ பற்றி தகவல் கேட்க 8 டைம் ஃபோன் பண்றாரு.. அவர் எடுக்கலை.. ஓக்கே , என்ன மேட்டர்னு ஒரு எஸ் எம் எஸ் பண்ணி இருக்கலமே?

11. ஹீரோ ஒரு டாக்டர் என்பது ஓக்கே.. ஆனா அவர் ஜனாதிபதிக்கு, அவர் குழந்தைக்கு சிகிச்சை அளிச்சு காப்பாத்தறது, அவர் அவார்டு வாங்கறது மட்டும் படத்துல 3 ரீல் சாப்பிடுது.. காதல் கதைல இந்த ஹீரோ பில்டப் எதுக்கு? அப்படி அவசியம்னா 1 ரீல்ல அதை சுருக்கி இருக்கலாம்..

12.  இந்தக்காலத்துல 5 வருஷம் லவ் பண்ணி அட்டாச்மெண்ட்டா இருக்கறவங்களே ஈசியா பிரியறாங்க.. ஆனா முன்னே பின்னே பார்க்காத ஜஸ்ட் 3 நாள் சேட்டிங்க்ல ஃபிரண்ட்ஸ் ஆகற பெண்ணுக்காக ஹீரோ சரக்கு அடிச்சு நடு ரோட்டில் தேவதாஸ் ஆவது எல்லாம் ஓவரோ ஓவர்.. அதுவும் ஒரு டாக்டர்......

13.. வடிவேல் காமெடி ரிலாக்ஸ்க்காக இருந்தாலும் படத்தோட சீரியஸ்சை அது பாதிக்குது.. உதாரணமா ஹீரோ ஹீரோயின் லவ் எபிசோடு சுவராஸ்யமா போறப்போ டக்னு வடிவேல் காமெடி வருது.. அடுத்த ஷாட்ல லவ்.. ஆடியன்ஸ் பேலன்ஸ் பண்ண ரொம்ப சிரமப்படுவாங்க..

14. ஹீரோ மேல ஒரு தலைக்காதல் வெச்சு போதைல அவன் பேரை சொல்லிக்கிட்டே வேற ஒருத்தனை கிஸ் பண்ற அந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க் பாப்பா படத்துக்கு எதுக்கு சமப்ந்தமே இல்லாம..ஹீரோ ராமர்னு காட்டி பில்டப் ஏத்தவா?

15. திருமணத்துக்கு முன் பால் உறவு பற்றி அந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க் கேர்ள் கருத்து கேட்பது, பின் அவரே அதே மெடிக்கல் காலேஜ்ல சேருவது இதெல்லாமே  கதைக்கு தேவை இல்லாத காட்சிகள்

http://nikhilscinema.com/wp-content/uploads/2012/06/Marupadiyum-Oru-Kadhal-Movie-Press-Meet-Photos-10.jpg


படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1.  ஏமாத்துற பொண்ணுங்க இருக்கற வரைக்கும்  எல்லா டாஸ்மாக்கும் எப்பவும் ஃபுல்லாத்தான் இருக்கும்..

2. ப்ரீ மேரிட்டல் செக்ஸ் பற்றி உங்க கருத்து என்ன? 


 அது தப்பே இல்லைங்க.. 

 இது உங்க சொந்தக்கருத்தா? 

 ம்ஹூம், குஷ்பூ சொன்னது .. ( குஷ்பூ  என்ற லைன் சென்சார் கட் )


3. விபச்சாரத்தை தொழிலா அங்கீகரிச்ச நாட்டை விட கற்பு , கலாச்சாரம்னு பேசிட்டு இருக்கற நம்ம நாட்ல தான் எய்ட்ஸ் அதிகமா பரவி இருக்கு..  ஏன்னா அது பற்றிய விழிப்புணர்வு நம்ம கிட்டே இல்லை.. 

4. பிஸ்னெஸ்ல புலியா இருக்கறவங்க கூட செண்ட்டிமெண்ட்ஸ்ல குழந்தையா இருப்பாங்க.. 


http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/marupadiyum-oru-kadhal-02/wmarks/marupadiyum-oru-kadhal-0244.jpg


வடிவேல் காமெடி வசனங்கள்


1. டாக்டர். எனக்கு ட்ரீட்மெண்ட் தர்றப்ப ராவா சாப்பிடக்கூடாதுன்னு நீங்க தானே சொன்னீங்க.. அதனால தான் தண்ணி மிக்ஸ் பண்ணி சாப்பிடறேன்.. 

 சண்டாளப்பயலே... ஹாஸ்பிடலை கணநேரத்துல ஒயின்ஷாப் ஆக்கிட்டு பேச்சைப்பாரு.. 


2.. டாக்டர் டாக்டர்.. என் பொண்ணை பாம்பு போட்டுடுச்சு


 அடப்பாவி.. மாப்ளை என்ன பண்ணிட்டு இருந்தார்?


அவ்வ்வ்வ்வ் 


3. டாக்டர். உங்க ட்ரீட்மெண்ட் செம டேஸ்ட்..

 அடிப்பாவி.. பாம்பு உன் உதட்டுல கொத்துனதால உன் உதட்டை உறிஞ்சுனேன்.. அது உனக்கு டேஸ்ட்டா?


4. ஒவ்வொரு கேசையும் டீல் பண்றப்போ எல்லாம்  ஒரு சிக்கல்ல மாட்டிக்கறேனே?


5. மாமா.. பூ வாங்கிக்குடுங்க

 முன்னே பின்னே மேரேஜ் ஆகி இருந்தா இந்த டெக்னிக்கெல்லாம் தெரிஞ்சுருக்கும்.. எனக்கு ஏதாவது கப்பி ஃபிகர் மாட்டும்னு நினைச்சேன்.. ஆனா பப்பி ஃபிகர் மாட்டும்னு எதிர்பார்க்கலை


6. உங்க பர்ஃபார்மென்ஸ் ரொம்ப ஓவர்.. பிணத்தை படுக்க வெச்சு பிச்சை எடுக்கற மாதிரியே இருக்கு


7. யோவ் டாக்டரு.. மரியாதையா என் பொணத்தை திருப்பிக்கொடுத்துடுய்யா././ 


 சொன்னா நம்புங்க மேடம்.. பொணம் எந்திரிச்சு ஓடிடுச்சு


8. டாக்டர்.. பல் பிடுங்க எவ்ளவ்?


 50 ரூபான்னு நினைக்கிறேன்

என்னது? நினைக்கிறீங்களா?


9. அந்த பெனாயிலை எடு..

 என்னது?

 சாரி டெட்டாலை எடு.. 

 அம்மா.. 

 இருக்காங்களா?

 இல்லை..

 அப்புறம் ஏன் அவங்களை கூப்பிடறே.. ?


10. டாக்டர்.. என் நல்ல பல்லை ஏன் பிடுங்குனிங்க?


 சொத்தைப்பல்லை பிடுங்குனதுக்கு நீ கொடுத்த ஃபீஸ்க்கு மீதி சில்லறை இல்லை.. ஹி ஹி 


11.  டேய் டாக்டர்.. 


ஒண்ணு டாக்டர்னு கூப்பிடு, அல்லது டேய்னு கூப்பிடு.. ரெண்டையும் மிக்ஸ் பண்ணி கூப்பிட்டா கன்ஃபியூஸ் ஆகுதில்லை?


12. அல்சர்னு வந்த பேஷண்ட்டை படுக்க வெச்சு ஹல்மேட்டை வயிற்றில் வெச்சு தெச்சுட்டீங்க.. இப்போ நான் என்ன செய்ய?


 ஓஹோ , அதான் தையல் போடறப்போ பிரிஞ்சு பிரிஞ்சு வந்ததா?


13. டேய்.. நான் பேஷண்ட்டை பார்க்க வந்தவன்.. என்னை படுக்க வெச்சு உடம்பு பூரா கீறல் போட்டு எல்லா டெஸ்ட்டையும் எடுத்து உடம்பையே ரணகளம் ஆக்கிட்டீங்களெடா.. 

http://1.bp.blogspot.com/-8pJ_41qrbq0/T8aN2eMmprI/AAAAAAAABIE/AQYsCn3tO9A/s1600/Josna+Latest+Stills+(4).jpg



எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 39

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 


 சி.பி கமெண்ட் - வடிவேல் காமெடி க்ளிப்பிங்ஸ்ஸை சிரிப்பொலியிலும், படத்தை சன் டி வில போடும்போதும் பார்த்துக்கலாம்..


 ஈரோடு சங்கீதாவில் படம் பார்த்தேன்



http://2.bp.blogspot.com/-FcujuHtYUTo/T8aN3RgYtMI/AAAAAAAABIM/jsPkss9fjZk/s1600/Josna+Latest+Stills+(5).jpg

டிஸ்கி -

முரட்டுக்காளை - சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/06/blog-post_2487.html

Tuesday, April 24, 2012

இம்சை அரசன் 23 ம் புலிகேசி பாகம் 2 - வடிவேல் பேட்டி - கெடாவெட்டு

http://www.gingly.com/grpimg/201006211823vadivelu-attitude.jpg 

ரெடி... டேக்... ஆக்ஷன்!’ சொல்கிறார் அந்த 75 வயது லேடி டைரக்டர்.


 ''எட்டு மாதம் சுமந்து என்னை ஈன்றெடுத்த தாயே'' - புலிகேசி வசனத்தைப் பேசிப் புல்லரிக்கவைக்கிறார் வடிவேலு. சுற்றி வேடிக்கை பார்க்கும் உறவுகள் கைதட்டி ஆரவாரிக்கிறார்கள்.


''ஏய் வடிவேலு... சொன்னாலும் சொல்லாட்டியும் நீ எட்டு மாசத்துலயே பொறந்த புள்ளதான். புலிகேசி டைரக்டரு அவரா இந்த வசனத்த எழுதினாரா... இல்ல நீயா எடுத்து வுட்டியா?'' - அந்த 75 வயது டைரக்டர் விழுந்து விழுந்து சிரிக்கிறார். அவர் வடிவேலுவின் தாய் சரோஜினி.


சி.பி - அவசரத்துல பொறந்த பய புள்ளையா? அதான் இப்படி அவதிப்படுது அய்யோ பாவம்..

''ஆத்தா... எந்தெய்வமே... ஒம் மொகத்துல இப்பத்தானே சிரிப்பைப் பாக்குறேன். ஊரு ஒலகத்தையே சிரிக்கவெச்ச நானு, ஓடுற ஓட்டத்துல ஒங்கள எல்லாம் மறந்துட்டேன் அம்மா. ஒன்னைய ஆஸ்பத்திரிக்கு அள்ளிட்டுப் போனப்பதான் 'பெத்தெடுத்த இந்த ஆத்தாவை விட்டுட்டா காலுல றெக்கையக் கட்டிக்கிட்டுப் பறந்தோம்’னு மனசு குறுகுறுத்துச்சு.


 'எங்களோட வைத்தியம் முடிஞ்சிடுச்சு. இனிமே உங்க வைத்தியந் தான் வடிவேலு, அம்மாவுக்கு முக்கியம்’னு மதுரை அப்போலோ ஆசுபத்திரி டாக்ட ருங்க சொன்னப்பதான் எம் மனசு குளிர்ந் துச்சு. எந்தாயக் காப்பாத்துற பாக்கியம் எனக்கு அமையணும்கிறதுக்காகவே இறைவன் இப்படியரு இடை வெளியை உண்டாக்கி இருக்கான்.


 வழக்கம்போலவே பரபரப்பா சுத்திக் கிட்டு இருந்திருந்தா இன்னிக்கு ஒம் பக்கத்துல உக்காந்து சிரிக்கவெக்கிற பாக்கியம் அத்துப்போயிருக்கும் என்னை யப் பெத்த அம்மா!''


வடிவேலு கண் கலங்க, ஆறுதலாக அவரை மார்போடு அணைத்துக்கொள்கிறார் 

சரோஜினியம்மா.


கடந்த இரு வாரங்களாக அம்மா முன்னால் தன் காமெடிக் காட்சிகளை நடித்துக்காட்டி, அவருக்குச் சிரிப்பு வைத்தியம் செய்துகொண்டு இருக்கிறார் வடிவேலு.


''என்ன கையப் புடிச்சு இழுத்தியா..?''


''இதெல்லாம் நரம்பு இல்ல தாயி... நீங்க போட்ட நூடுல்ஸு...''


''சங்கமே அபராதத்துலதான் ஓடிக்கிட்டு இருக்கு...''


பலவித பாப்புலர் பஞ்ச்சுகளையும் வடிவேலு அள்ளிவிட... வயிறு வெடிக்கிறது சுற்றி அமர்ந்திருப்பவர்களுக்கு.


http://flashnewstoday.com/wp-content/uploads/2010/03/Vadivelu-.jpg




1. ''பரபரப்பா நடிச்சுக்கிட்டு இருந்த வடிவேலு இப்படி வீட்டுக்குள்ளேயே இருக்கிறதில் உங்களுக்கு வருத்தம் இல்லையா?'' 



சி.பி - நல்ல வேளை வீட்டுக்குள்ளேயே இருக்காரு.. வெளீல வந்தா கைமா தான்.. ஒரு பக்கம் கேப்டன் ஆட்கள், இன்னொரு பக்கம் அம்மா ஆட்கள்..

- சரோஜினி அம்மாவிடம் கேட்டேன்.

''அவன் நடிச்சு ஓய்ஞ்சிட்டதா நீங்க நெனைக்கிறீங்களா... அடப்போங்கப்பா. அவன் சம்பாதிக்க வேண்டிய புகழும் பணமும் இனிமேதான் இருக்கு. இதுவரைக்கும் அவன் நடிச்சதெல்லாம் பத்து சதவீதந்தான்.


சி.பி - அண்ணன் இதுவரைக்கும் வாங்குன அடி எல்லாம் சாதா, இனிமே  வாங்கப்போறதுதான் ஸ்பெஷல் சாதா. ஹி ஹி 

 இனிதான் இருக்கு பாக்கி தொண்ணூறும்! எம் புள்ள திரையில நடிச்சதை நான் பாத்திருக்கேன். ஆனா, நேர்ல அவன் பண்ற கூத்தும் கும்மாளமும் கொஞ்சமா, நஞ்சமா? எங்க வீட்டுக்காரரு இறந்தப்ப புள்ளைங்க எல்லாரும் வருத்தப்பட்டாக. அப்போ நான் வடிவேலுகிட்ட சொன்னேன், 'அப்பா செத்துட்டார்னு அழாதப்பா... நம்மளோட கஷ்டத்தை எல்லாம் அவரு அங்கே கொண்டுக்கிட்டு போயிட்டாருனு நெனச்சு நிம்மதியா இரு’னு. 


இப்பவும், 'இந்த ஓய்வு நல்லதுக்குத் தான்பா... உனக்குக் கெடுதல் பண்றவங்கள நம்ம குலசாமி அய்யனார் பாத்துப்பார்’னு எம் புள்ளைக்குத் தைரியம் சொல்றேன். எம் புள்ள மார்க்கெட்டு போயி வீட்ல கெடக்கல தம்பி. அது இப்போ கோடம் பாக்கத்துக்கு லீவு விட்டிருக்கு... அம்புட்டுத் தேன்!'' - வாய்கொள்ளாத பூரிப்பில் சிரிக் கிறார் சரோஜினி.


''ஒம் பேட்டி போதும்மா... இனி நான் பேசிக்கிறேன்''- வான்ட்டடாக வருகிறார் வடிவேலு.


2. ''எப்போதான் ரீ - என்ட்ரி கொடுக்கப்போறீங்க?''


சி.பி - அதுதான் கோடம்பாக்கத்துல  நோ எண்ட்ரி கொடுத்துட்டாங்களே.. எப்படி ரீ எண்ட்ரி வர..?

''கொடுப்போம்ணே... ஏன் அவசரப்படணும்? இப்பவும் நிறையப் பேர் கூப்பிட்டுக்கிட்டுதான் இருக்காங்க. 


சி.பி - என்னை ஏவி எம் ல கூப்பிட்டாங்க. கோச்சடையான் டீம் கூப்பீட்டாக. ஆனா நான் ரொம்ப பிஸி.. ஹிஹி

ஆனா, இப்போதைக்கு காமெடி ரோல் பண்ண எனக்கு விருப்பம் இல்லண்ணே. இத்தன நாள் இடைவெளிக்கு அப்புறம் வாரப்ப... நம்ம என்ட்ரி டெரரா இருக்கணுமில்ல? அதுக்காகத்தான் ஹீரோ ரோல் பேசிக்கிட்டு இருக்கேன். புலிகேசி பார்ட் டூ ஒருபக்கம்... தெனாலிராமன்கிற கதை ஒரு பக்கம்னு டிஸ்கஷன் ஓடிக்கிட்டு இருக்கு. சம்மர் முடியட்டும்ணே... மக்களுக்கு பம்பர் பரிசு கொடுத்திருவோம்!''


சி.பி - சம்மர் முடிஞ்சா ராகு காலம் ஸ்டார்டிங்க்கா? இம்சை அரசன் ஓடுச்சு ஓக்கே.. இந்திர லோகத்தில்  நா அழகப்பன் ஓடலை, ஏன்? ஏதோ டிஃப்ரண்ட்டா இருந்தால் முத படம் ஓடிடும், அதே மாதிரி 2 வது படமும் எடுத்தா ஓடுமா?

http://www.extramirchi.com/wp-content/uploads/2008/02/senthil-son-marriage.jpg


3. ''பெத்த அம்மாவைத் தாங்குதாங்குனு தாங்குறீங்க... ஆனா, முதல்வர் அம்மாவைப் பத்தி எதுவுமே சொல்றது இல்லையே... அவங்க ஆட்சி எப்படி இருக்கு?''


சி.பி - ம்க்கும், கேள்வி கேட்டு அவரை வம்புல சிக்க வைக்கப்பார்க்கறீங்க.. அம்மாவுக்கு ஆதரவா பேசுனா அழகிரி அண்ணன் கோபப்படுவார், எதிரா பேசுனா ஓ பி எஸ் கோபப்படுவார்.. 


''ஆட்சியைப் பத்தியெல்லாம் பேசுற நிலையில நான் இல்லண்ணே..



சி.பி - ஹா ஹா ஹா அடி பலமோ.?

 ஆனா, அவங்களைப் பத்தி நச்சுனு நாலே வார்த் தையில நான் சொல்ல நினைக்கிறது இது தான். காலுக்கு உதவாத செருப்பை கழட்டி எறியுறதுல அவங்க கரெக்டான முதலமைச்சர்.''



சி.பி - அண்ணே, செருப்புன்னு நீங்க சொல்றது நெருப்புண்ணே.. கருப்பு நெருப்பு.. வீட்டுக்கு வெளீல போறப்ப செருப்பு இல்லாம போக முடியாது. கேவலமா பேசாதீங்க. 

4. ''தேர்தல் வெற்றிக்குக் கூட்டணிதான் முக்கியம்கிற இந்தக் காலகட்டத்துல ஒருத்தங்க வேண்டாம்னா, அடுத்தவங்க சேர்த்துக்கப்போறாங்க. அப்படி ஒண்ணு நடந்தா?''



''அது காலுக்கும் கேடு... அதை மாட்டிக்கிடற ஆளுக்கும் கேடு!''




5. ''நீங்க இப்படிச் சொல்றீங்க. ஆனா, 'என்னை அடக்க நினைப்பவர்கள் அழிந்துபோவார்கள்’னு சொல்றாரே விஜயகாந்த்?''


''ஏங்காதுல அப்புடி ஏதும் விழலையேண்ணே... ஏங்காதுல கேட்குற குரல் என்ன தெரியுமாண்ணே... 'நா அடங்கிப் பல மாசமாச்சு... தேவையில்லாம ஏன் என்னையவே சீண்டுறீங்க. இது நல்லது இல்ல... யாருக்கு, எனக்கு!’ அப்புடின்னுதான் யாரோ புலம்புற மாதிரி இருக்கு. 


எம் படத்துல பாக்குற அத்தனை கேரக்டர்களையும் ஒருசேரப் பாக்குற மாதிரி இருக்குண்ணே... ஸ்நேக் பாபு, நாய் சேகர், கைப்புள்ளனு சிரிப்பா பார்த்த கேரக்டர் எல்லாம் ஒண்ணுசேர்ந்து சீரியஸா பேசுற மாதிரிதானே இருக்கு? சினிமாங்கிறது நிழல். நிஜ வாழ்க்கை வேறண்ணே... 


 நகைச்சுவை, இசை, ஃபைட்னு மொத்த ரத்தமும் உடலோடும் உயிரோடும் கலந்து கட்டி மெனக்கெட்டுச் செய்யிற வித்தைண்ணே சினிமா. ஒரு மாஸ்டரும் ஏராளமான ஃபைட்டர்ஸும் சேர்ந்து ரத்தம் சிந்தி நம்மள தைரியசாலியாக் காட்டுற வித்தியாசமான உலகம்ணே... அங்க நாக்கைத் துருத்தி சேட்டையக் காட்டலாம்ணே. 


 ஆனா, மக்கள் பிரதிநிதிகளும் முதல்வரும் அமர்ந்திருக்கிற ஒரு சபையில நாக்கைத் துருத்துறது நாகரிமாக படலையேண்ணே... நான் அன்னைக்குச் சொன்னது எல்லாம் இன்னைக்கு நடக்குறது நல்லாப் பார்த்தா தெரியும்ணே!''


http://photos.geni.com/p12/dd/04/9e/86/534448388ca1da76/dsc00341_medium.jpg


6. ''இத்தகைய விமர்சனங்களை எல்லாம் சட்டையே செய்யாமல், 'நிச்சயம் ஆட்சி யைப் பிடிப்போம்!’னு விஜயகாந்த் நம்பிக்கையோடு சொல்றாரே?''



''என்னது ஆட்சியையா... இம்புட்டுக்காணு பூச்சியைக்கூட அவரால பிடிக்க முடியாது!''


சி.பி - இப்படியே வெறும் வாய்லயே வெத்தலை போடுங்க.. வெயிட் அண்ட் ஸி.. கேப்டன் இன்னும் 10 வருஷங்கள்ல ஆட்சியை பிடிப்பது உறுதி.. 


http://vijaynet.files.wordpress.com/2006/10/pulikesi17.jpg

7. ''இன்றைய அரசியல் நிலவரங்களை எப்படிப் பாக்குறீங்க?''


''இன்னும் நாள் இருக்குண்ணே... ஏன் இம்பூட்டு அவசரப்படுறீங்க? இவ்வளவு அவசரம் உமக்கு ஆகாதையா. நான் ரொம்பப் பொறுமையா இருக்கேன். அதனாலதான், என் வூட்டுக்குப் பக்கத்துல எழுதிக்கிடக்குற கறுப்பு காமராஜரையும் கறுப்பு அண்ணாவையும் இன்னும் பல பல கறுப்புத் தலைவர்களையும் இந்தக் கறுப்பு பொறுமையோட பார்த்துக்கிட்டு இருக்கேன்!''


சி.பி .  விட்டா கருப்பு காமராஜும் நானே, அழகிய அண்ணாவும் நானே அப்டினு பாட்டுப்பாடி ஓட்டு  கேப்பீங்க போல.. 

 THANX - VIKATAN


Saturday, August 13, 2011

ஜெ ஆளுங்க மிரட்னாலும் சரி , ஜெயிச்ச ஆளுங்க மிரட்னாலும் சரி பயப்படமாட்டேன் - வடிவேல் பேட்டி - காமெடி கும்மி

உண்மையை உடைக்கும் வடிவேலு

நான் பொய்ப் புள்ள இல்லண்ணே... கைப்புள்ள!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhI5p-TWhIPyn7z4Ti6NmHJgzrH3WkdlGgAp6cIX8skQ2iQha6oNMRLXZF-8j-dAMUjhoj_cFt0AwPAZFVzjOCiExM_NdKjeesszWOnTF4gS9mC-cRoMm04IczB_YEGXhqEvBVAVVuGZ60/s400/Vadivelu-and+Actress-Asin-in-Press-meet+.jpg 

ந்த நேரத்தில் பிரசார வேனில் ஏறி னாரோ... அக்கப்போரும் பரபரப்பும் வடிவேலுவை இன்னும் விடாது விரட்டுகிறது. லேட்டஸ்ட் வரவு... போலிப் பத்திர மோசடி! 


சென்னை புறநகர் போலீஸில் பழனியப்பன் என்பவர் புகார் கொடுத்த உடனேயே, 'வடிவேலு தலைமறைவு’ என்கிற செய்திகள் றெக்கை கட்டத் தொடங்கிவிட்டன.


''எங்கேண்ணே இருக்கீங்க?'' என போன் போட்டுக் கேட்டதுதான் தாமதம். ''எங்கேயும் ஓடலை. 'தலைமறைவு’னு போட்டிருக்கிற போஸ்டர்களை நானும் பார்த்தேன். இந்தத் தலை என்னிக்குமே மறையாதுண்ணே... நான் செத்தாக்கூட, என் தலை ஏதாச்சும் ஒரு தியேட்டர்லேயோ, டி.வி-யிலேயோ தெரிஞ்சு கிட்டேதான் இருக்கும்.


ஒண்ணு... சென்னையில இருப்பேன். இல்லன்னா, என் அன்னையோட மதுரைத் திண்ணையில இருப்பேன்.

 சி.பி - எங்கே இருக்கீங்கன்னா அதுக்கு மட்டும் பதில் சொல்லனும், அதை விட்டுட்டு சென்னை , திண்ணைன்னு ஏன் வெண்ணை மாதிரி சமாளிப்பு?

தலைமறைவு ஆகிற அளவுக்கு நான் ஒண்ணும் என்கவுன்ட்டர் குற்றவாளி இல்லண்ணே... நாலு பேரை வயிறு வலிக்கச் சிரிக்கவெச்சதைத் தவிர, வேற எந்த வேலையும் செய்யலண்ணே! என்னையப்போய் வில்லங்கம்னு சொல்ல எப்படித்தான் மனசு வருதோ?'' என்றவரிடம் சொத்து விவகாரக் கேள்விகளை வைத்தோம்.



சி.பி - ஏன்? சிங்கமுத்து கிட்டே காமெடி டிராக் எழுதி வாங்கிட்டு ஏமாத்தலை? 



http://www.chennai365.com/wp-content/uploads/movies/Indira_Logathil_Na_Azhagappan/Vadivelu-012908-.jpg
1. ''ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஒருவரே நீங்கள் மோசடி செய்ததாகப் புகார் செய்திருக்கிறாரே?''

சி.பி - அட!!! சிங்கி மங்கி சீட்டிங்க் ஒன் வங்கி !!! அவ்வ்வ்
''அந்த பழனியப்பன் கறுப்பா சிவப்பானுகூட எனக்குத் தெரியாது. இப்போ டி.வி-யிலதான் பார்த்தேன். என் மேனேஜர் முத்தையா மாதிரியே இருக்கார். 2002-ல் இப்போ சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிற நிலத்தை நான் வாங்கினேன். அதில், ஈ.சி. பார்த்தப்ப எந்த வில்லங்கமும் இல்லை. 


2009-ல் அந்த இடத்தில எங்க ஆளுங்க காம்பவுண்ட் போட்டப்ப, பழனியப்பன்கிறவர் வந்து, 'இது என்னோட இடம்’னு சொல்லி இருக்கார். 2006-ல் அந்த இடத்தை வாங்கியதாகச் சொல்ற பழனியப்பன், மூணு வருஷம் கழிச்சு வந்து கேட்க என்ன காரணம்? அப்புறம், அவரே செங்கல்பட்டு கோர்ட்ல கேஸ் போட் டார். அதுக்கு அப்புறம் அவர் கோர்ட் பக்கமே எட்டிப் பார்க்கலை. இதுக்கிடையில நானும் இது சம்பந்தமா கோர்ட்ல கேஸ் போட்டு இருக்கேன். இப்போ, 2011-ல் பழனியப்பன் திடீர்னு கிளம்பி வந்து கம்ப்ளெய்ன்ட் பண்றார்னா, அதில இருக்கிற உள்நோக்கம் புரியுதா?''

 http://thatstamil.oneindia.in/images34/vadivelu-asin-450.jpg

2. ''போலீஸ் உங்களை விசாரிச்சாங்களா?''


''இப்போ வரைக்கும் எந்த போலீஸும் விசாரிக்கலை. 

 சி.பி - ரொம்ப சந்தோஷம் வேணாம், அம்மா இப்போதான் ஃபிரீ ஆனாங்க, இனி விசாரணை தொடரும்

நான்தான் சில போலீஸ் ஆபீஸர்களுக்கு போனைப் பண்ணி, 'நீங்க எப்போ கூப்பிட்டாலும் வர்றேன்’னு சொன்னேன். 


 சி.பி - ஹா ஹா படத்துல வர்ற மாதிரியே நீங்களா போய் மாட்டிக்கிட்டீங்களே?


'உங்களை இன்டலிஜென்ஸ்ல இருந்து விசாரிக்கப்போறாங்களாம்’னு கொஞ்சம் பேர் சொன்னாங்க. உளவுத் துறை அளவுக்கு நான் ஒர்த் இல்லைண்ணே... புகார் கொடுத்திருக்கிற பழனியப்பன் நான் அவரை மிரட்டியதா சொல்லி இருக்காராம். ஒரு முக்கியமான ஆள் மூலமா அந்த பழனியப்பன் தரப்பு என்கிட்ட பேசினாங்க. பல லட்சம் ரூபாய் கேட்டாங்க. கொடுக்கலைன்னா, போலீஸுக்குப் போறதா சொன்னாங்க. 'எந்த விதத்தில உங்களுக்குப் பணம் கொடுக்க முடியும்?’னு கேட்டு நான் மறுத்துட்டேன். 


அததான், சிலரோட தூண்டுதலின் பேரில் இப்போ புகார் கொடுத்து புயலைக் கிளப்பி இருக்காங்க. இது எல்லாமே போலீஸுக்குத் தெரியும்ணே... அவங்க நியாயத்தை செய்வாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு!''


சி.பி - உங்க படத்துல வர்ற காமெடியை விட இந்த காமெடி செம! போலீஸ் நியாயத்தைசெய்யுமா? ஹய்யோ ஹய்யோ!


http://www.nitharsanam.net/wp-content/uploads/2007/10/24sreya.jpg
3. ''அரசியல் பழிவாங்கல் உங்களை நோக்கியும் திரும்புமோ?''


சி.பி - ஆமா, இவர் கர்ம வீரர் காமராஜர், அரசியல்ல போட்டியா வந்துடப்போறாரு....அடப்போங்கப்பா. சினிமால இவரு காமெடியன், அரசியல்ல காமெடி பீஸூ..


''அதெல்லாம் தேர்தலோட முடிஞ்சிடுச்சு. பிடிச்சவங்களுக்குப் பிரசாரம்பண்றதுல அரசியல் எங்கே இருந்து வருது? ஊரையே சிரிக்கவெச்ச ஒருத்தன் இன்னிக்கு, உள்ளுக்குள்ள வெந்து செத்துக்கிட்டு இருக்கேன். என்னால எந்த வேலையும் செய்ய முடியலை. எனக்கு ஏன் இவ்வளவு எதிரிகள்னு தெரியலை.


கிரிமினல் எண்ணம் ஒருத்தனுக்கு இருந்துச்சுன்னா, நிச்சயம் அவன் நல்ல காமெடியனா இருக்க முடியாது. பரம்பரை பரம்பரையா இந்த நரம்புக்குள்ள நகைச்சுவை ஓடுது. என்னையப்பத்தி தப்பா செய்தி பரப்புறவங்ககூட என்னோட காமெடிக்கு நிச்சயம் சிரிப்பாங்க. 


'உண்மை எப்போதும் தூங்குவது இல்லை... பொய்மை எப்போதும் ஓங்குவது இல்லை’ங்கிற எம்.ஜி.ஆரோட வரிகளைத்தான் மனசுக்குள்ள மந்திரமா நினைச்சுக்கிட்டு இருக்கேன். இந்த நில விவகாரத்தை சி.பி.ஐ. வந்து விசாரிச்சாலும் என் தரப்பு நியாயம் நிச்சயம் புரியும். அதனாலதான் எதையும் எதிர்கொள்ற தைரியத்தோட 'வரட்டும் பார்க்கலாம்’னு உட்கார்ந்து இருக்கேன்!''


சி.பி - எக்ஸ்க்யூஸ் மீ, ஒன் ஸ்மால் கரெக்‌ஷன், நடுங்கிட்டு இருக்கேன்னு சொல்லுங்க. 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7mJX6wSSAGdqnFMWQuURVkEytyRGErFiqks9Szi2KRf5nfMJYIJ_ZWW36C6JGK1T6bOca1XnMjd5PYjLxgll_o6AzkYPZBewrSZRyW8RR1sa1jUUAF96y4WBprsoWuWUyKN0MlxGvuV-n/s1600/24.jpg
4. ''வருமான வரித் துறைக்கு பயந்துதான் நீங்க சிங்க முத்து பெயரில் சொத்து வாங்கியதாக அவர் சொல்லி இருக்காரே?''

சி.பி - இந்த விஷயத்துல 2 மேட்டர் இருக்கு, 

1. சிங்கமுத்துவை வடிவேல் காமெடி ஸ்கிரிப்ட் மட்டும் எழுதி வாங்கிட்டு சம்பளம் தராம டேககா கொடுத்தாருன்னும், அதுக்கு பைசல் பண்ணும் விதமாகத்தான் நிலம்  சிங்க முத்து பேர்ல எழுதி வாங்கப்பட்டதுன்னும் சொல்றாங்க.  

2. பொதுவாவே வி ஐ பிங்க அவங்க பி ஏ பேர்ல சொத்து வாங்கறதும், அதனால பின்னால பிரச்சனை வர்றதும் சகஜம் தான். 


''என் வீட்ல திருடியவனைப் பிடிச்சாச்சு. அவனை விசாரிக்கிறப்ப, 'நீயும் நானும் சேர்ந்துதானே திருடினோம்’னு என்னையவே கைகாட்டுறான் அவன்! உன்கூட சேர்ந்து ஏன் என் வீட்டை நான் திருடணும்? ஆங்... உங்க கேள்விக்கு இதுதாண்ணே பதில். என் வீட்டு சுவத்தில நானே ஏன் ஏறிக் குதிக்கணும்? என்னோட குல தெய்வம் அய்யனார் கண் பார்க்க, என்னென்னமோ சொல்லி என்னை ஏமாத்திட்டாங்க. அதைக்கூடத் தாங்கிக்கிட்டேன். 


ஆனால், ஏமாந்தவன் மேலேயே பழிச் சொல் பேச எப்படித்தான் மனசு வருதோ? கைக்குழந்தை மாதிரி எதிர்ப்படுற எல்லாரையும் பார்த்துச் சிரிக்கிற ஆளுண்ணே. இந்தக் கைப்புள்ளைய பொய்ப் புள்ளைன்னு சொல்றவங்களுக்கு அந்த அய்யனார்தான் புத்தி கொடுக்கணும். மற்றபடி துரோகிகள், எதிரிகள்னு என்னைச் சூறையாட நினைக்கிறவங்களோட பெயரைச் சொல்றதைக்கூட பெரும் பாவமா நினைக்கிறேன் நான்!''


சி.பி - எப்படியோ வடிவேலுக்கு இது இறங்கு முகம்,. இதில் இருந்து மீண்டு வந்து அவர் பழையபடி காமெடியில் சினிமாவில் கலக்க வாழ்த்துக்கள். அதை விட்டுட்டு அரசியல்ல காமெடி பண்ணிட்டு இருந்தா அழிஞ்சு போயிடுவாரு

tks - vikatan

Saturday, June 04, 2011

வடிவேலு VS விஜய்காந்த் -இனி என்ன ஆகும்? காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhI5p-TWhIPyn7z4Ti6NmHJgzrH3WkdlGgAp6cIX8skQ2iQha6oNMRLXZF-8j-dAMUjhoj_cFt0AwPAZFVzjOCiExM_NdKjeesszWOnTF4gS9mC-cRoMm04IczB_YEGXhqEvBVAVVuGZ60/s1600/Vadivelu-and+Actress-Asin-in-Press-meet+.jpg
தி மனிதனின் அடையாளமான ஹோமோசேப்பியன்ஸை அச்சு அசலாக வார்த்ததுபோல் 'உர்’ரென்று இருக்கிறார் வடிவேலு.

 சி.பி - ஆமாமா.. ஆப்பு அடிக்கப்பட்டவங்க உர்னு தான் இருப்பாங்க.. கிர்னு கீழே விழாம இருக்கறதே பெரிசு..



ஆதம் பாவா இயக்கத்தில் உருவாகும் 'உலகம்’ படத்தில் வடிவேலு ஏற்று நடிக்கும் 25 வேடங்களில், இந்த ஹோமோசேப்பியன்ஸ் வேடமும் ஒன்று. ''எப்படி இருக்கு நம்ம கெட்டப்பு? இப்போ வரைக்கும் ஏழு கெட்டப்பு ரெடியாகி இருக்கு. மற்ற கெட்டப்பும் தயார்னா... தாரைத் தப்பட்டைகள் கிழியப் பயணத்தைத் தொடங்கிர வேண்டியதுதான்!'' - அரசியலில் எத்தகைய சூட்டை ஏற்படுத்தினோம் என்பதை எல்லாம் மறந்துவிட்டு, பகபகவெனச் சிரிக்கிறார் வடிவேலு.

சி.பி - அவர் எங்கேங்கே சூட்டை எழுப்புனாரு?சூடு வாங்கிட்டு வந்து நிக்கறாரு.. மீடியாக்கள் தான் அவரை பெருசாக்குனாங்க.. அவரே சொன்ன படி அவரை டம்மி பீஸாத்தான் மக்கள் நினைச்சிருக்காங்க.. 

 கடந்த சட்டமன்றத் தேர்தலில் திடீர் சூறாவளியாகக் கிளம்பி விஜயகாந்த்தைச் சுளுக்கெடுத்தவர். 'அவரு கேப்டன்னா... நான் டாப் டென்!’ என ஆரம்பித்து, 'தண்ணி’லை விளக்கம் வரை அவருடைய அதிரடிகள் நீள... தி.மு.க. புள்ளிகளே திகைத்துப்போனது உண்மை. ஆனால், தேர்தல் முடிவு வேறு விதமாக அமைய... வடிவேலுவின் காட்டில் மீண்டும் கல் மழை!

சி.பி - டாப் டென் எல்லாம் கிடையாது வேணும்னா டூப் டென்னு சொல்லலாம்
http://www.cinechance.com/forum/tamil-films/jan-01-08/shriya-vadivelu.jpg


1. ''கால்ஷீட் ஒதுக்க நேரம் இல்லாத அளவுக்கு பிஸியா இருந்த நீங்க, திடீர்னு பிரசாரத்தில் குதிக்க என்ன காரணம்?''

சி.பி - எல்லாம் சொந்தப்பிரச்சனைக்கு வஞ்சம் தீர்க்கத்தான்.. பின்னே தமிழ்நாடு நல்லா இருக்கனும்கற அக்கறையா என்ன?

''என் சொந்தப் பிரச்னைக்கோ, சொத்துப் பிரச்னைக்கோ, நான் பிரசாரத்தில் குதிக்கலை. எப்பவுமே யாரோட வம்புதும்புக்கும் போகக் கூடாதுன்னு நினைக்கிறவன் நான். ஆனா, நான் ஒதுங்கிப்போக நினைச்சாலும், அதுக்கு சிலர் வழிவிடலை. குழந்தைங்க முதல் பாட்டி வரை எல்லோரையும் சிரிக்க வைக்க நினைக்கிற எனக்கு இப்படி ஒரு இக்கட்டு. ஒரு புழுவை மிதிச்சாலும் எத்தனை நாளைக்கு அது பொறுத்துக்கிட்டு இருக்கும். அதான் அடக்க முடியாம பொங்கிக் கிளம்பிட்டேன்!''

சி.பி - பொங்குனது ஓக்கே.. ஆனா இப்படி அடிபட்டு கன்னம் வீங்குனது நாட் ஓக்கே.. 



2. ''விஜயகாந்த்துக்கும் உங்களுக்கும் என்னதான் பிரச்னை?''

 சி.பி - ஒரே உறைல 2 கத்தி இருக்க முடியாதும்பாங்க.. ஒரே ஊர்க்காரங்கள்ல 2 பேரும் பெரும் குடிகாரர்கள்னு பேர் எடுத்தா எப்படி? யாரா இருந்தாலும் தனித்து தெரிய தானே ஆசைப்படுவாங்க?




''சில விஷயங்களை விளக்கிச் சொன்னாத்தான் புரியும். 2007-ல் அவரோட படத்துக்காக என்கிட்ட வந்து பேசினாங்க. ஓப்பனிங் ஸாங்கே நான்தான் பாடணும்னு வற்புறுத்தினாங்க. அவர் கட்சி கொடியைப் பிடிச்சுக்கிட்டு நான் பாடுற மாதிரி ஸீனுக்கு ரொம்ப வற்புறுத்தினாங்க.


'அய்யா, ஆளை விடுங்க!’ன்னு விலகிட்டேன். அடுத்தபடியா 'கருப்பு எம்.ஜி.ஆர்-தான் அடுத்த முதல்வர்’னு நான் அவரைப் பார்த்து வசனம் பேசணும்னு சொன்னாங்க. ஒருத்தரைப் புகழ்ந்தா, அடுத்தவங்க கோபப்படுவாங்க. அந்தப் பொல்லாப்பு நமக்கு எதுக்குன்னு தவிர்த்திட்டேன். 'அப்போ நான் முதல்வர் ஆவதில் வடிவேலுவுக்கு விருப்பம் இல்லையா?’ன்னு அவர் வருத்தப்பட்டாராம்.

வருங்கால முதல்வர்னு நான் ஒருத்தன் கூவினா, அவர் முதல்வராகிட முடியுமா? இதுதான்யா ஆரம்பப் பிரச்னை. அதுக்கு அப்புறம் என் வீடு முழுக்கக் கல் எறிஞ்சு அவங்க பண்ணின அடாவடி எல்லோருக்கும் தெரிஞ்சது தான். ஆனாலும், நான் அமைதியா இருந்தேன்.

அடுத்த தடவை நடந்த கல் வீச்சில் என் குழந்தைக்கு மண்டை உடைஞ்சிடுச்சு. நான் தனி மனிதனாத் தவிச்சு அழுதது அன்னிக்குத்தான் தம்பி. பெத்த புள்ளைங்களுக்காகத்தானே நாம சம்பாதிக்கிறோம்; கஷ்டப்படு றோம். அப்படி இருக்க, புள்ளைங்களுக்கு ஒரு இடைஞ்சல் வர்றப்ப எப்படிப் பொறுத்துக்க முடியும்?

வெளியில தெரிஞ்சது இது... சொல்லக் கூசுற அளவுக்கு இந்த ரெண்டு வருஷத்துல நான் படாதபாடு பட்டேன். ஊரையே சிரிக்க வெச்ச ஒருத்தன் பொழப்பு, சிரிப்பா சிரிச்சது யாருக்குத் தெரியும்? 'வடிவேலுவுக்கு இது தேவையா’ன்னு கேட்ட யாருக் காவது என்னைச் சுத்தி நடந்த இத்தனை பிரச்னையும் தெரியுமா?''

சி.பி- நீங்க சொல்றதுல ஏதோ இடிக்குதே? எங்கள் அண்ணா படத்துல தான் அப்படி  ஒரு சம்பவம் நடந்தது..அதுக்குப்பிறகு நீங்க அவர் படத்துல நடிக்கவே இல்லையா என்ன?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLiCta5thfd_4MVJbRIcaAysjeYJy5ThwsfP3uYJZQqaTg3BNnmZ5WDKpc2bQuoi4vK3nB-0FADUAL55p5HLD8smweWJlLi1hLx3or_SWcN_H8am1xT8aq8UEEkAzDCxrHFUfXlg2TyPU/s1600/Vadivelu-and-Actress-Namitha-in-Jegan-Mogini-Tamil-Movie.jpg
3. ''இதனால்தான் பிரசாரத்துக்குப் போனீங்களா? இல்லை, தி.மு.க-வில் இருந்து யாராவது வற்புறுத்தினாங்களா?''


''நான் வான்டடா போன ஆளுய்யா! திடீர்னு ஒருநாள் கோபாலபுரம் போனேன். 'அய்யா, உங்களுக்காக நான் பிரசாரம் பண்றேன்’னு சொன்னேன். கலைஞர், அழகிரி, ஸ்டாலின் எல்லோருக்கும் ஏக சந்தோஷம். அப்போ, 'நான் உங்களுக்கு ஆதரவா மட்டும்தான் பேசுவேன். அந்தம்மாவை நான் தாக்கிப் பேசமாட்டேன்’னு சொல்ல நான் வாயெடுத்தேன்.

நாடி ஜோசியர் மாதிரி என்னைக் கூப்பிட்ட கலைஞர், 'அரசோட திட்டங்களை மட்டும் நீங்க பேசுங்க... அந்த அம்மாவைத் திட்டிப் பேசாதீங்க’ன்னு சொன்னார். எனக்கு வாயடைச்சுப்போச்சு. ஒருத்தனோட மனசுக்குள்ள இருக்கிற விஷயத்தைக்கூட தெளிவாத் தெரிஞ்சு வெச்சிருக்கிற தலைவர்யா அவர். உசுப்பேத்துவாங்கன்னு பார்த்தா, இப்படி ரியலா பேசச் சொல்றாங்களேனு எனக்குத் திகைப்பு தாங்கலை!''

சி.பி - பின்னே நீங்களே ஜெவையும் திட்டிட்டா அப்புறம் கழகக்கண்மணிகளுக்கு,அழகிரிகளுக்கு வேலை வேணாமா? அப்புறம் ஒரு பய அவங்களை மதிக்க மாட்டானே?




4. ''ஓஹோ... விஜயகாந்த்துக்கு எதிரா நா கூசும் அளவுக்குத் தனி மனிதத் தாக்குதல் நடத்தியது நியாயமா?''

சி.பி - என்ன கேனத்தனமான கேள்வியா இருக்கு?மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி.. தனி மனித தாக்குதலில் பி ஹெச் டி வாங்கியவர் கலைஞர்.. அவர் கட்சிக்கு ஆதரவா பேசறவங்க பின்னே எப்படி பேச முடியும்?


''தப்புதான்... நான் தனி மனிதத் தாக்குதல் நடத்தியது தப்புதான். 'அவர் அப்படிப் பண்றார், இப்படிப் பண்றார்’னு நான் பேசினது தப்புதான். தனி மனிதத் தாக்குதல் பற்றி ஆதங்கப்படுறவங்க, அரை மணி நேரம் என் வீட்டு வாசல்ல வந்து நின்னு பாருங்க சார். உங்க காதே கருகிப்போற அளவுக்குத் திட்டுவாங்க. இன்னிக்கும் அப்படித்தான் நடக்குது. அது தப்பு இல்லையா?''

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGeBz-I1YOMWzCbJdHbolwlL1xgc8iwQZDJuDjqujfZXVmZXjRhB_bNZYzPHOS8Xgjgys1wdk6fmWdlcBZOULF_jDh8UlXoMH_P6fFZvEx5QWHZnI0jjuCEdbPlXWhlwNreTSQ8U37u40/s1600/Vadivelu-and-Actress-Tamanna-in-Thillalangati-Tamil-Movie.jpg
5. ''உங்களுடைய பிரசாரத்தையும் மீறி விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவராகவே உட்கார்ந்துட்டார். இனி, உங்களின் நிலைப்பாடு?''


'' 'சின்னக் கவுண்டர்’ பட ஷூட்டிங் நடந்த நேரம்... என்னையப் பார்த்து எந்த ஊர்னு கேட்டார் அந்த ஆள். 'மதுரை’ன்னு சொன்னேன். 'ஒரு நாளைக்கு அம்பது ரூபா சம்பளம் வாங்குற நீ எல்லாம் ஊரப் பார்க்கப் போனா என்னய்யா?’னு கேட்டார்.

அன்னிக்கே என்னை ஊருக்கு அனுப்புற திலேயே குறியா இருந்தார். என்ட்ரியானப்பவே என்னையப் பார்த்து எளக்காரமாக் கேட்ட ஆளு, என்னோட இந்த அளவுக்கான வளர்ச்சியை எப்படிப் பொறுப்பார்?


தேர்தல்ல அவர் ஜெயிச்சிட்டார்னா, ஜெயிக்கவெச்ச மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டியதுதானே? அதை விட்டுட்டு, நாய் வைக்கோல் போரைச் சுத்துற மாதிரி எந்த நேரமும் என் வீட்டையே சுத்திக்கிட்டு இருந்தா எப்படி? என்னைய அடிக்கத்தான் மக்கள் உங்களை ஜெயிக்க வெச்சாங்களா?

'நாங்க அந்தம்மாவோட உருவ பொம்மையவே எரிச்ச ஆளுங்க... எங்க வலிமை தெரிஞ்சு தான் அந்தம்மா எங்களைக் கூட்டணியில் சேர்த்துக்குச்சு. அவங்களுக்கு முன்னால நீ எம்மாத்திரம்? கவர்மென்ட்டே எங்களோடது’னு நைட்டும் பகலும் என் வீட்டுல நின்னு கத்துறாங்க.

அந்தம்மாவுக்கு வீசிய ஆதரவு அலையில ஜெயிச்சிட்டு, இப்படி அபவாதம் பேசலாமாண்ணே... இன்னும் என்ன வேணும்னாலும் பேசட்டும்ணே... நான் இனி பின்வாங்கப்போறது இல்லை. மனசுக்குள்ளகிடக்குற ரணம் இன்னும் ஆறலைண்ணே... அந்த வெறி அடங்கலை. அடக்கவும் மாட்டேன். அவர் சட்டசபைக்கு உள்ளே எதிர்க் கட்சித் தலைவர்னா, வெளியில் அவருக்கு எதிர்க் கட்சித் தலைவர் நான்தான்!''

சி.பி - ரைட்டு.. இனிப்பேசிப்பிரயோஜனம் இல்லை.. ஹி ஹி உதை கன்ஃபர்ம் டி



6. ''பிரசாரத்தில் இறங்கியதால், இப்போ பட வாய்ப்புகளே இல்லாமல் உட்கார்ந்து இருக்கீங்களே... வருத்தமா இல்லையா?''

''மனசு முழுக்க இருந்த ரணத்தைக் கொட்டித் தீர்த்த நிம்மதியில் இருக்கேன். அவரோட அத்தனை அடாவடிகளையும் வெளியே சொல்லாமல் தாங்கி இருந்தா, நெஞ்சு வெடிச்சே செத்திருப்பேன்.

பட வாய்ப்புகள் குறைஞ்சா, எனக்கு வருத்தம் இருக்காது. சிந்திக்கவும் ஓய்வெடுக்கவும் இந்த இடைவெளி எனக்கு அவசியமாப் படுது. கொஞ்ச காலம் ஒதுங்கித்தான் இருப்போமே... வடிவேலுவோட காமெடி தேவைன்னு தோணிச்சுன்னா... மக்களே நம்மளை நடிக்கவைப்பாங்க சார்!''

சி.பி - எங்கே ? சந்தானம் சைக்கிள் கேப்ல சிக்சரா அடிச்சுட்டு இருக்காரு.. சிங்கம் புலி ஒரு பக்கம் கோல்களா போடறாரு.. உங்களுக்கு ரீ எண்ட்ரி கஷ்டம்.. இனி டிஸ்ஸெண்ட்ரி தான்.. 




7. ''வடிவேலுவுக்கு இந்த வீம்பு தேவையான்னு சினிமாக்காரங்களே குரல் எழுப்புறாங்களே?''

''வயித்துப்போக்கும் வாந்தியும் அவன் அவனுக்கு வந்தாத்தானே தெரியும். நியாயமான சினிமாக்காரங்க நிச்சயம் என்னைப்பற்றிப் பேசி இருக்க மாட்டாங்க. ஆட்சிக்குத் தகுந்த மாதிரி நாக்கை மாற்றிப் பேசுறவங்கதான் என்னை வசை பாடி இருப்பாங்க.

நான் பிரசாரம் பண்ணினப்ப கூடின கூட்டத்தைப் பார்த்து மிரண்டவய்ங்க எத்தனை பேர்னு எனக்குத் தெரியும். 'இவனுக்கு ஏன்டா இம்புட்டுக் கூட்டம்?’னு வயிற்றெரிச்சலோட தூக்கம் வராமத் தவிச்சவய்ங்களையும் தெரியும். கூட்டம் கூட்டமா திரண்ட மக்கள்தான் என்னோட சொத்துங்கிறதை இந்தத் தேர்தல் பிரசாரத்தில் பார்த்துட்டேன் சார்!''

சி.பி - யோவ்.. என்னாய்யா பேச்சு ? இது? ஷகீலா ஸ்டேஜ் ஏறுனாக்கூட மாளாத கூட்டம்   வரும்.. அதுக்காக அவருக்கு மக்கள் செல்வாக்கு இருக்குன்னு சொல்லிட முடியுமா?அவர் எலக்‌ஷன்ல நின்னா ஓட்டு போடுவாங்களா?,,,,..
http://sites.google.com/site/cinemaphotogallery/Vadivelu5.jpg

8. '' 'ராணா’ படத்தில் இருந்து நீக்கப்பட்டதால், 'ராணா படமாவது, கானா படமாவது’ என ரஜினியைத் திட்டியது தவறு என உணர்கிறீர்களா?''


''யார் சொன்னா? அவருக்கும் எனக்கும் எப்பவாச்சும் பிரச்னை வந்திருக்கா? மத்தவங்க மாதிரி முதல்வர்னு என்னை முழங்கச் சொன்னாரா... ஆள் அனுப்பினாரா... வம்பு இழுத்தாரா? எதுக்கும் என்னை ரஜினி வற்புறுத்தலை. அப்படியிருக்க ஏன் இப்படி எல்லாம் முடிச்சுப் போடுறாங்க?

கலைஞர் அய்யாவைப் பார்த்துட்டு வெளியே வந்தப்ப, 'ராணா படத் தில் இருந்து உங்களை நீக்கிட்டாங்களாமே?’னு கேட்டாங்க. 'ராணா படமா இருந்தாலும் சரி, கானா படமா இருந்தாலும் சரி... இல்லை என் கேரியரே அவ்வளவுதான்னாலும் சரி... என் பிரசாரத்தைத் தொடரவே செய்வேன்’னு பதில் சொன்னேன். இதில் அவரை நான் எந்த இடத்தில் திட்டுறதா அர்த்தம் வருது?

எனக்குச் சிக்கலை உண்டாக்கணும்னு அவரோட மோதல்னு கிளப்பிவிடுறது நியாயமா? அவரை நான் ரொம்ப மதிக்கிறேன். 'சந்திரமுகி’ பார்த்த ரஜினி ரசிகர்களுக்கு என்னை நல்லாத் தெரியும்!''

சி.பி - அப்போ நீங்க சொல்றதை வெச்சுப்பார்த்தா ஒண்ணு உங்களுக்கு நாவடக்கம் பத்தாது.. இன்னொண்ணு ராணா படம் யார் நடிப்புல உருவாகுதுங்கற மேட்டரையே அப்டேட் பண்ணிக்கல.. ரெண்டும் டேஞ்சர் தான்.. இனி உங்களை புக் பண்ண நினைக்கறவங்க ஏன் வீணா ரஜினி,கேப்டன்,ஜெ இத்தனை பேரை  பகைச்சுக்கனும்னு நினைப்பாங்க..


9. ''அரசியலில் அடுத்த கட்டம்?''

''கல் எறிஞ்சு களைப்பாகிக்கிடக்கிறவங்கதான் அதைத் தீர்மானிக்கணும். அவங்க நடந்துக்கிறதைப் பொறுத்துதான்... என்னோட நடவடிக்கையும் இருக்கும்... ஆமா!''

சி.பி - எனக்கென்ன தோணுதுன்னா நல்ல நாளா பார்த்து ஒரு சால்வை வாங்கிட்டுப்போய் கேப்டனைப்பார்த்து இருவரும் ஒரே தாய் வயிற்றில் பிறக்கவைல்லையே தவிர மற்றபடி அம்மா பாசத்துக்கு ஏங்குபவர்களே.. இருவரும் ஒண்ணா தண்ணி அடிச்சவங்களே..  இருவரும் சினிமாக்காரங்களே அப்டின்னு ஏதையாவது உளறி நைஸா சமாதானம் ஆகிக்குங்க.. தி முக ல வரிசையா எல்லாரும் உள்ளே போய்ட்டு இருக்காங்க.. அவங்களையே காப்பாத்திக்க அவங்களுக்கு நேரம் இருக்காது.. உங்களை எல்லாம் காப்பாத்த நேரமும் இல்லை.. அவங்களுக்கு அது இனி தேவையும் இல்லை..

 நன்றி - விகடன்