Showing posts with label THRILLER. Show all posts
Showing posts with label THRILLER. Show all posts

Tuesday, February 26, 2013

MURDER 3 - சினிமா விமர்சனம்



மல்லிகா ஷெராவத் கிளாமரை நம்பி  ஹாலிவுட் கில்மா கம் சஸ்பென்ஸ் படமான UNFAITHFULL  படத்தை ரீமேக்கி மர்டர் பாகம் 1 எடுத்தாங்க , THE CHASER என்ற கொரியன் மூவியை  உல்டா பண்ணி மர்டர் 2 எடுத்தாங்க , இப்போ  The Hidden face   படத்தை ( கொலம்பியா) உல்டா பண்ணி  மர்டர் 3 எடுத்திருக்காங்க . மற்ற இரு பாகங்களை விட இது சஸ்பென்ஸ் , த்ரில்லிங்க் ஜாஸ்தி .

  ஹீரோ ஒரு ஃபேமஸ் ஆன ஃபோட்டோ கிராஃபர். அவரோட காதலி அவரை விட்டுப்போன சோகம் தாங்காம சரக்கு சங்கர லிங்கம் ஆகிடறாரு  .தண்ணி அடிக்க ரெகுலரா வர்ற பார்ல ஒரு ஃபிகரைப்பார்க்கறாரு, பார்ல ஒர்க் பண்ணுது . 


 ஹீரோ   கட்டதுர மாதிரி கடலை போட்டே  தன் சொந்தக்கதையை அள்ளி விட்டே அதை கரெக்ட் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்து மேட்டரை முடிச்சிடறாரு .

இப்போ புதுக்காதலி ஹீரோ வீட்ல யாரோ பேய் அல்லது ஒரு தீய சக்தி நடமாட்டம் இருப்பதா உணர்றா. ஆனா போலீஸ் ஹீரோ மேல சந்தேகப்படுது. அவரோட முதல் காதலி காணாம போனதுக்கு காரணமே அவர் தான்னு நினைக்குது , கொலை பண்ணிட்டாரோன்னு சந்தேகப்படுது 


ஆனா சஸ்பென்ஸ் முடிச்சுகள் அவிழ அவிழ திரைக்கதை பட்டாசைக்கிளப்புது . எதிர்பார்க்காத திருப்பங்கள் படத்தின் பின்பாதியில் அசர வைக்குது .


 




 ஹீரோவா  ரன் தீப் , அண்ணனுக்கு முக்கிய வேலையே 2 ஃபிகர்களையும் கரெக்ட் பண்றதுதான். இதுக்கு லட்சக்கணக்குல சம்ப்ளம் வேற . கரும்பு தின்னக்கூலி . ஸ்டொமக் பர்னிங்க் . நடிக்க வெல்லாம் தேவை இல்லை, சும்மா வந்து நின்னாலே போதும்.


 ஹீரோயின்கள் 2 பேரு . 2 வது காதலியா வர சாரா லோரன்  தேங்காய் பர்பி மாதிரி இருக்குது . கடிச்சுப்பார்த்தியா?ன்னு எல்லாம் லாஜிக் கேள்வி கேட்கக்கூடாது . வழு வழுன்னு வெண்ணெய் தடவிய தேகம் . செம கலர் , லக்கி நெம்பர் 38.படத்தின் முன் பாதி பூரா இவர் ராஜ்ஜியம் தான் . பேய் இருக்கோன்னு நம்மையே நம்ப வைக்கும் அளவு இவர் ரீ ஆக்‌ஷன் இருக்கு. நல்லா வருவாங்க பிற்காலத்துல


 அடுத்த ஹீரோயின்அதிதிராவ் .ஒல்லியா இருக்கும் தர்பூசணிப்பழம் மாதிரி கலரு,பால்கோவா மாதிரி உடம்பு .( சரியான சாப்பாட்டு ராமண்டா நீ) இவர் நடிப்புதான் படத்தின் ஆணிவேர். படத்தின் மெயின் கேரக்டரே இவர் தான் ,அறைக்குள் மாட்டிக்கொண்டு துடிக்கும் துடிப்பென்ன? தன் கண் முன்னே காதலன் வேறொரு பெண்ணுடன் கில்மா பண்ணும்போது அடையும் வலி ,  என  அவர் காட்டும் முக பாவனைகள் அற்புதம் . தமிழ் சினிமா இவரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்






இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. படத்தின் பின் பாதியில் பிரமாதமான சஸ்பென்ஸ் காட்சிகள் இருக்கு என்ற தைரியத்தில் முன் பாதியில் அசால்ட்டாக கதை சொல்லாமல் ஏதோ கில்மாப்படம் போல் காட்சிகள் வைத்தது . ஒரிஜினல் அளவுக்கு இல்லைன்னாலும் ஹிந்திக்கு இது நெம்ப ஓவருங்கோ


2. ஹீரோயின்  செலக்‌ஷன்ஸ் பிரமாதம் , தொப்பை இல்லாம , அதே சமயம் ஒல்லிப்பிச்சானாக இல்லாம நச் ஃபிகர் 2 பேரை புக் பண்ணி  முடிஞ்சவரை இருவரையும் பேலன்ஸ் பண்ணி ஐ மீன் காட்சிகளில்  பிரமாதப்படுத்தி இருப்பது


3.  படத்தின் பின்னணி இசை எனப்படும் பி ஜி எம்  பின் பாதியில் கலக்கல் ரகம் , ஒளிப்பதிவும் பக்கா


4. கதைக்களம் சவுத் ஆஃப்ரிக்கா அப்டினு சொல்லிக்கிட்டாலும்  படம் முழுக்க ஒரே வீட்டில் முடிச்சது லோ பட்ஜெட்டுக்கான இலக்கணம் , குறைந்த முதலீடு , நிறைந்த லாபம்


5. திகில் , சஸ்பென்ஸ் படங்கள் என்றால் பி ஜி எம் டொம் டொம்னு  அடிக்கனும் என்றில்லாமல் தேவையான இடங்களில் மட்டும் அதை யூஸ் பண்ணி பெரும்பாலான இடங்களில் அமைதியாய் அப்படியே விட்டது . அமைதியும் ஒரு இசையே என உணர்த்தியது


6. பாலிவுட்டின் டாப் 10 சஸ்பென்ஸ் த்ரில்லர் என ஒரு லிஸ்ட்  எப்போ எடுத்தாலும் இந்தப்படத்துக்கு கண்டிப்பாக ஒரு இடம் உண்டு


 



இயக்குநரிடம் சில கேள்விகள்


1. என்னோட முத கேள்வியே என்னோட ஜி கே வை வளர்த்துக்க , சும்மா தெரிஞ்சு வெச்சுக்க.. அதாவது முதன் முதலா அப்போதான் மீட் பண்ணும் ஒரு ஃபேமிலி ஃபிகரை பேசியே கரெக்ட் பண்ணி அன்னைக்கு  நைட்டே மேட்டரை முடிக்க முடியுமா?



2. அறையில் மாட்டிய ஃபிகர் கண்ணாடி வழியே எல்லாத்தையும் பார்க்க முடியுது , ஆனா அவங்க கூப்பிடும் குரல் வெளில கேட்காது என்ற வரை ஓக்கே , அந்த கண்னாடியை உடைக்கக்கூட முடியாதா?  ரூம்ல சேர் டேபிள் இருக்கு . உடைக்க முடியாத கண்ணாடி என்பதை காட்டிக்கவாவது ஹீரோயின் முயற்சி பண்ணி தோற்பது போல் ஒரு காட்சி வெச்சிருக்கலாம் .


3. ஹீரோ மேல சந்தேகப்படும் போலீஸ்  ஹீரோ வீட்டை தரோவா செக் பண்ணி இருந்தா அந்த ரகசிய அறையை கண்டு பிடிசிருக்கலாமே?  அட்லீஸ்ட் வீட்டை செக் பண்ற மாதிரி கூட சீன் வெக்கலையே?


4. அறையில் மாட்டிக்கொண்ட ஹீரோயின் சாப்பிட , குடிக்க ஏதும் இல்லாம  எப்படி அத்தனை நாள் உயிரோட இருக்க முடிஞ்சுது?



5. பல நாட்கள் பட்டினி கிடந்த ஹீரோயின் நெம்பர் 1  கொழுக் மொழுக் ஹீரோயின் நெம்பர் 2 வை திடீர்னு அவ்வளவு ஆவேசமா எப்படி தாக்கி வீழ்த்த முடியும் ? அவளே சொங்கிப்போய் இப்பவோ அப்பவோன்னு கிடக்கா


6. நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தாத பாதாள அறைக்கு முதன் முறையா ஹீரோயின் 1 போகும்போது  சுத்தமா ரூம் இருக்கு , சிலந்தி வலை கட்டி  தூசும்  குப்பையும் இருக்கற மாதிரி காட்டி இருக்க வேணாமா?



 


 மனம் கவர்ந்த வசனங்கள் 


 படத்துல வசனத்துக்கு வேலையே இல்லை , கொஞ்ச நஞ்ச வசனமும் ம் ம் ஹா ஹேய் அப்படி முக்கல் முனகல் வசனம் தான்




 ரேட்டிங்க் - 7 /10


 சி பி கமெண்ட் - சஸ்பென்ஸ் , திகில்  ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய பிரமாதமான திருப்பம் உள்ள படம், இந்தப்படத்துக்கு தமிழ் நாட்டில் சரியான ஓப்பனிங்க் இல்லாததுக்குக்காரணம் மார்க்கெட்டிங்க் சரி இல்லாததே.. இந்தப்படம் கண்டிப்பா தமிழ்ல யாராவது ரீ மேக்குவாங்க ..

 ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்





Film: Murder 3

Cast: Randeep Hooda, Aditi Rao Hyadri, Sara Loren, Rajesh Shringapure, Shekhar Shukla, Bugs Bhargava



Director: Vishesh Bhatt



Producer: Vishesh Films, Fox Star Studios


Writer: Mahesh


 

Monday, December 17, 2012

ஊமை விழிகள் (1986) - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiew_AFBWzfRHkC41B7iF6xjeACIA3xTSV_XlfomevaabigV3KV1xA2UvZ2wen7sxRD3xBvD6M5IAfiROTiRhmzKfOVfIQh-kGrl4lkGxfRCzukK01UDHaRK_MJW15rruuDu611lNRF2Jo/s1600/a3.jpgதிரைப்படக்கல்லூரி மாணவர்கள் என்றாலே ஆர்ட் ஃபிலிம் தான் எடுப்பாங்க, கமர்ஷியல் சினிமா அவங்களுக்கு செட் ஆகாது என்றிருந்த காலகட்டத்தில் 1986 இல் ரிலீஸ் ஆகி அந்த எண்ணத்தை , தமிழ் சினிமாவை ஒரு புரட்டு புரட்டிய படம் தான் இந்த ஊமை விழிகள் .பல பிரம்மாண்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம் .

வில்லன்ஒரு 60 மார்க் ஃபிகரை லவ் பண்றார்.அது சஹானா மாதிரி வேற ஒருத்தன் கூட ஓடிடுது. உடனே அவருக்குப்பொண்ணுங்கன்னாலே வெறுப்பு. தன் காதலி கண்கள் பேசிப்பேசி தன்னை மயக்குச்சு. அந்த பாதிப்பில் கண்ணில் பட்ட பெண்களை  கொலை பண்ணி அவ கண்களை எடுத்து வெச்சுக்கும் சைக்கோ பார்ட்டி. சட்ட சிக்கல்களை தவிர்க்க ஒரு பாதுகாப்புக்கு ஒரு அமைச்சரை பார்ட்னர் ஆக்கிக்கறார். ஃபிகர் மினிஸ்டர்க்கு , மேட்டர் முடிச்சதும் கண் இவருக்கு. 

 இந்த விஷயம் ஒரு  பத்திரிக்கை அம்பலப்படுத்துது. எந்த விதப்பின்புலமும் இல்லாத சாதா பத்திரிக்கை. அதை ஒடுக்க நினைக்கறார் வில்லன். அந்த பிரஸ்க்கு ஒரு டி எஸ் பி உதவி பண்றார். வில்லனுக்கு எதிரா அவர் நிகழ்த்தும்போராட்டம் தான் மிச்ச மீதி திரைக்கதை .


படத்தோட ஓப்பனிங்க்கே ஒரு வித அமானுஷ்யமான இரவில் கொண்டாட்டமான பாட்டோட ஆரம்பிக்குது. ராத்திரி நேரத்துப்பூஜையில்  ரகசிய தரிசன ஆசையில் ஆ ஆ அது சுக வேதனை ( இதுல எதுக்கு 2 ஆ? ) . மனோஜ் கியான் + ஆபாவாணன் இணை இசையில் கலக்கலான பாட்டு. 


 பாட்டு முடிஞ்சதும் கொலை  அப்போ டாப் கீர்ல போற படம் க்ளைமாக்ஸ் வரை செம ஸ்பீடு .


நேர்மையான , வறுமை நிலையில் உள்ள பத்த்ரிக்கை ஆசிரியரா ஜெய்சங்கர். ஆல்ரெடி இவர் சொல்வதெல்லாம் உண்மைல இதே ரோல்ல நடிச்சிருப்பாரு , நல்லா சூட் ஆகி இருக்கு. 

 சந்திர சேகர்  ஜெய் ஆஃபீஸ்ல ஒர்க் பண்றவரா வர்றாரு. நல்ல நடிப்பு . கத்திக்குத்து வாங்கி துடிக்கும் இடத்தில் நிஜமாவே குத்திட்டாங்களோன்னு நினைக்க வைக்கும் அநாயசமான உயிரோட்டமான நடிப்பு 


வில்லனாக ரவிச்சந்திரன் . செம்பட்டை விக் , தாடில இவர் குதிரை வண்டில ஏறும்போதே செம திகில். 

மலேசியா வாசுதேவன்  மினிஸ்டர் வில்லன். மினிஸ்டர்னாலே வில்லன்க தானே?  கலகலப்பான நடிப்பு 

 டி எஸ் பி தீனதயாளன். பேருக்கேத்த கம்பீரமான நடிப்பு கேப்டனோடது. படம் போட்டு  50 நிமிஷம் கழிச்சு ஹீரோ எண்ட்ரி . ஈரோடு பாரதி தியேட்டர்ல ரிலீஸ் டைம்ல என்னா ஒரு கைதட்டல். இந்தப்படத்திற்குப்பின் கேப்டன் அட்டகாசமான அப்ளாஸ் வாங்கியது கேப்டன் பிரபாகரன் ஓப்பனிங்க் போலீஸ் ஸ்டேஷன் ஃபைட்டில் தான்  .மனைவி சரிதா இறந்ததும் கதறும்போதும் சரி , புலன் விசாரணையில் கம்பீரம் காட்டும்போதும் சரி அனுபவம் மிக்க நடிப்பு .


இது போக அருண் பாண்டியன், கோகிலா, சசிகலா, கார்த்திக் இன்ன பிற நடிக நடிகைகளும் உண்டு .


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJ5NGu-eoWt8o100ity5M8bIIuw8ry3AZpTAz_U2-z0JwmP0PUJtL86HyXWHetu8mksGrRX5QPavmjEDFrUCHbe1LMdcjyOwdJ-vmmaBb5S_VbTWPecroygxwrLpDrd4yov1fZyszjpR8/s1600/o5.jpg


 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. க்ரைம் படங்கள், த்ரில்லர் படங்களுக்கு பாடல்கள் ஒரு ஸ்பீடு பிரேக்கர்கள் என்ற விதியை உடைத்து  3 மணி நேரப்படத்தில் தைரியமாக 6 பாடல்கள்  சூப்பர் ஹிட்  ஆக்கியது. ராத்திரி நேரத்துப்பூஜையில் செம குத்து சாங்க் , கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் சோக மெலோடி , தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?  இன்றளவும் நிலைத்து நிற்கும் தன்னம்பிக்கை ஊட்டும் பாட்டு ,மாமரத்துப்ப்பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடப்வா கிளு கிளு முதல் இரவுப்பாட்டு ,நிலைமாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனிதர் ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி  தத்துவ பாட்டு , குடுகுடுத்த கிழவனுக்கு கல்யாணப்பேச்சு  ரகளையான பாட்டு என எதுவுமே  குறை சொல்ல முடியாத பாட்டு. 



2. ரவிச்சந்திரனின் வில்லன் கெட்டப் , பாடி லேங்குவேஜ் திகில் ஊட்டும் விதமாய் அமைத்தது . அவர் கேரக்டரை கடைசி வரை சஸ்பென்சாக காட்டியது 


3.. ஆர்ட் டைரக்‌ஷன் அட்டகாசம் . அந்த வில்லன் பங்களாவே திகிலைத்தரும். அந்த மணி அடிக்கும் கிழவி , பாதிரியார் என   மர்மம் கிளப்பும் முகங்கள் அருமை

4.  ஜெய் சங்கரின் பத்திரிக்கை ஆஃபீஸ் ஸை ரொம்ப டீட்டெயிலாக காட்டியது , படத்தோட ஒன்ற வைத்து இருந்த முக்கியக்காரணி 


5. க்ளைமாக்சில் 67 ஜீப்கள் லைனாக வருவது , ஆரம்பத்தில் ஒரே ஒரு லைட்டை மட்டும் காட்டி அது அப்படியே  பிரிந்து  பிரம்மாண்டமான அணி வகுப்பாய் வரும் காட்சி பர பரப்பாக அப்போது பேசப்பட்டது இதுவரை தமிழ் சினிமாவில் அந்த காட்சியை ஓவர் டேக்க இன்னும் எந்தபப்டமும் வரவில்லை



http://padamhosting.com/out.php/i94153_7.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்( ஆர் அர்விந்த்ராஜ் பிஎஸ் சி டி எஃப் டெக் )



1. படத்துல லேடீசை துரத்தும் குதிரை  க்ளோசப்ல 70 கிமீ வேகத்துல பாயுது , துரத்தப்படும் பெண்கள் 7 கி மீ வேகத்துல ஓடுறாங்க. ஆனா 10 நிமிஷம் அந்த சேசிங்க் சீன் வருது . லாங்க் ஷாட்ல காட்டும்போது வேகம் கம்மியா ஆகிடுது . பார்க்கும்போது திகிலா இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சா.... 



2. பத்திரிக்கைக்காரர் அந்த மர்ம பங்களாவுக்கு வந்து அந்த கிழவையை ஃபோட்டோ எடுக்கறதைக்கூட ஒத்துக்கலாம். பாட்டிக்கு விபரம் தெரியாது, படிப்பறிவு இல்லை, அதனால கண்டுக்கலைன்னு . ஆனா அந்த பாதிரியார் படிச்சவர் ஆச்சே .( பாதிரியாரைக்கொன்று பாதிரியார் ஆன வில்லனின் எடுபுடி ) அவர் எப்படி ஃபோட்டோ எடுத்தப்ப எதுவும் சொல்லலை? பிடிங்கி இருக்க வேணாமா? அல்லது அப்போவே போட்டுத்தள்ளி இருக்க வேணாமா? 


3. நேர்மயான , தன் தொழிலை தெய்வமாக மதிக்கும் எடிட்டர் ஜெய்சங்கர் டியூட்டி டைம்ல தம் அடிக்கறார்/ அதுவும் சக பணியாளர்கள் முன். எனக்குத்த்தெரிந்து  விகடன் , குமுதம் உட்பட எந்த ஒரு பத்திரிக்கை எடிட்டரும் ஆஃபீஸ் டைமில் ஆஃபீஸ்க்குள்  அப்படி தம் அடிக்கறதில்லை.



4. அருண் பாண்டியன் கோகிலா கிட்டே இது இது  பத்திரிக்கை நிருபர் வீடுதானே> என கேட்கும் இடம் ரொம்ப அமெச்சூர் நடிப்பு . இயக்குநர் கவனிச்சு அதை ரீ சூட் பண்ணி இருக்கலாம் .



5.  ஹவுஸ் ஓனர் பொண்னு வீட்டில் நைட் சாப்பிடுது . அப்போ அருண் பாண்டியன் பட்டினியா இருப்பதா வசனம் பேசுவது கேட்டு சாப்பிடும் தட்டில் கை கழுவறார்.அத்தனை சாப்பாடும் வேஸ்ட். அதை சாப்பிட்டுட்டு அவருக்கும் சாப்படு எடுத்துட்டுப்போய் கொடுத்தா மேட்டர் ஓவர். அதே சீனில்  ஒரு சின்னக்குண்டாவில் சாப்பாடு இருக்கும். ஒரு டம்ளர் அளவு அரிசியில் சமைச்ச சாப்பாடுதான் இருக்கும். அவங்க அம்மா , அப்பா சாப்பிட அது போதுமா?ன்னு யோசிக்கும்போதே சந்திர சேகர் , அருண் 2 பேரையும் கூப்பிட்டு சாப்பாடு பரிமாறுவாங்க , அதே குண்டா , ஆனா சாப்பாடு மட்டும் நிறைய இருக்கும் 



6. பேங்க் மேனேஜர் ஜெய்சங்கர்க்கு ஃபோன் பண்ணி “ பர்சனல் மேட்டர் 1 பேசனும் , மாலை விட்டுக்கு வா’ன்னு கூப்பிடறார். அங்கே போனதும் “ பேங்க் லோன் டியூ கட்டவே இல்லை , ஒரு வாரம் டைம் , கட்டலைன்னா சீஸ் பண்ணிடுவேன்னு சொல்றார். இதுதான் பர்சனலா? இது பேங்க்  மேட்டர். பேங்க்லயே சொல்லி இருக்கலாமே? 


7. பத்திரிக்கை ஆஃபீஸ்ல கரண்ட் போயிடுது 12 மெழுகுவர்த்தி ஏத்தி வைக்கறாங்க. மீட்டிங்க் நடக்குது. ஆனா அந்த சீனில் லைட்டிங்க் அப்பட்டமா காட்டிக்குடுக்குது. அதே ஷாட்டில் கரண்ட் வந்த பின் வெளிச்சம் அப்படியே தான் இருக்கும் . செம காமெடி 


 8. இளவரசியை ரேப்போ , மர்டரோ அவர் வீட்டிலேயே பண்ணி இருக்கலாம். ஒரு கார் நிறைய ஆள் அனுப்பி பில்டப் கொடுத்து மலேசியா வாசுதேவன் வீட்டுக்கு வர வெச்சு  ரிசைன் லெட்டர் டைப் பண்ணச்சொல்லி அதுக்குப்பின் ரேப் அண்ட் மர்டர் பண்ணுவது ரொம்ப நீலமான சாரி நீளமான காட்சி 


9. கொலை நடந்ததுக்கான சாட்சியா வர்ற விசு படத்துக்கு ஃபைனான்ஸ் உதவி செஞ்சாரா?  அவர் சாதாரண சாட்சி தான் . அவர் எப்படி ஒரு டி எஸ் பி தோள்ல கை போட்டு பாராட்ட முடியும்? பேச முடியும். அது கூடப்பாரவாயில்லை,. டி எஸ் பி  தான் போடும் ரகசிய பிளானை  சந்திரசேகர், ஜெய் சங்கர்க்கு விளக்குவது ஓக்கே ,. ஏன்னா அவங்க ஃபீல்டு ஒர்க் பண்றாங்க . ஆனா சமப்ந்தமே இல்லாம விசு எதுக்கு அங்கே? அதே போல் பிரஸ் மீட்டில் விசு என்னமோ போலீஸ் டிபார்ட்மெண்ட் ஐ ஜி மாதிர் பில்டப் கொடுப்பது ஓவர் . அவர் ஒரு சாட்சி . அவ்ளவ் தான்


10. கார்த்திக்கை தலையில் தாக்கும் வில்லன் அப்படியே அவரை விட்டுட்டு சசிகலாவைதூக்கிட்டுப்போறாரே? அவரை கண்ணால் கண்ட சாட்சியை கொலை பண்ணிட்டு , உயிர் அடங்கியாச்சா?ன்னு செக் பண்ணிட்டுத்தானே போகனும்?


http://i.ytimg.com/vi/gRfRUIAPGW8/0.jpg


11. ஓப்பனிங்க்ல அருண் பாண்டியன் 7 ரவுடிகளை ஒரே ஆளா அடி பின்றார்.சந்தோஷம் . ஆனா க்ளைமாக்ஸ்ல நடக்கும் ஃபைட்ல 4 பேர் அவரை சூழந்த்தும் ஒரு ஆளைக்கூட ஒரு அடி கூட அடிக்கலை .



12.  வில்லன் பொண்ணுங்களை ரேப் பண்றார். இன்னொரு வில்லன் கொலை பண்றார். இதுல என்ன ஆதார டாக்குமெண்ட்ஸ் இருக்கும்? ஜெய்சங்கர் க்ளைமாக்ஸ்ல ஆதார டாக்குமெண்ட்ஸ் பேப்பர்ஸ்னு ஒரு கத்தைப்பேப்பர் எடுத்துட்டு வர்றார். ஆராசா வழக்குல கூட அவ்வளவு டாக்குமெண்ட்ஸ் இருக்காது . டெண்டர் விட்டது ,ரகசிய ஒப்பந்தம்னு இருந்தாலாவது அத்தனை பேப்பர்ஸ் காட்ட அர்த்தம் இருக்கு


13. பத்திரிக்கையாளர் மீட்டிங்க்கில் டி எஸ் பி தீனதயாளன் வழக்கமா உங்க பத்திரிக்கை எப்போ வரும்னு கேட்கும்போது எல்லாருமே அதிகாலை 4.30க்கு லாஸ்ட் நியூஸ் ,  காலை 6 மணிக்கு பேப்பர் வரும்கறார், ஆனா உண்மையில் தினத்த்ந்தி உட்பட எல்லாப்பத்திரிக்கைகளுக்கும் லாஸ்ட் நியூஸ் அப்டேஷன் நடு நிசி 12 மணி , பேப்பர் ரிலீஸ் @ அதிகாலை 3.30 தான்


14. வில்லன் ரவிச்சந்திரன் பொம்பளைப்பித்தன் அல்ல, பெண்ணின் கண்ணை எடுப்பவன். அவனை வலை வீசிப்பிடிக்க சும்மா ஒரு பெண் அந்த ஏரியாவில் போனால் போதும் . எதுக்கு கோகிலாவை ஸ்விம்மிங்க் டிரஸ்ல அனுப்பனும்>



15. எந்தக்காதலனும் தன் காதலியை பகடைக்காயா அதுவும் ஸ்விம் டிரஸ்ல அனுப்ப ஒத்துக்க மாட்டான், அதுவும் படம் பூட்ரா பாவாடை தாவணி அல்லது சேலையில் வரும் மிடில் கிளாஸ் ஃபேமிலி கேர்ள் சிட்டி பொண்ணு மாதிரி எந்த தயக்கமும் இல்லாம ஸ்விம் டிரஸ்ல போக ஓக்கே சொன்னது எப்படி?


16. கொலை வழக்கில் முக்கிய சாட்சியான சசிகலாவை டி எஸ் பி தன் வீட்டில் வெச்சு பாதுகாக்கிறார். கேசில் சமப்ந்தப்பட்ட சந்திரசேகர் கொலை செய்யப்பட்ட பின்பு கூட அவர் உஷார் ஆகி தன் வீட்டுக்கு பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டாமா? அட்லீஸ்ட் 2 போலீஸ் கான்ஸ்டபிள் கூட பாதுகாப்பு இல்லை அவர் பங்களாவில் . சர்வ சாதாரணமாக வில்லன் குரூப் அவர் மனைவியை கார்னர் பண்ணறாங்க


17. தவறான நடத்தை உள்ள காதலியால் மன நலன் பாதிக்கப்படும் வில்லன் பழி வாங்க அதே போல நடத்தை தவறும் பெண்களை மட்டும் தானே கொல்லனும்? கண்ணுக்கு சிக்குன ஃபிக்ரை எல்லாம் கொலை செய்வது என்ன லாஜிக்?


18 சந்திரசேகர் வயிற்றில் ஆழமான கத்திக்குத்து வாங்குனதும் ஒரே ஒரு பெட்ஷீட்டை செந்தூரப்பூவே கேப்டன் மாதிரி போர்த்திக்கறார். அப்படிப்பண்ணுனா ரத்தம் நிக்குமா? டைட்டா ஒரு துணி போட்டு கட்டவே இல்லை




19. ஆனானப்பட்ட  ஆ ராசாவை அரெஸ்ட் பண்ணவே 10 போலீஸ் தான் போனாங்க. ஆனா வில்லன் சிங்கிளா இருக்கார். அவர் கிட்டே அடியாளுங்க யாருமே இல்லை, அவரை அரெஸ்ட் பண்ண எதுக்கு அத்தனை அமளி துமளி? எதுக்கு 67 ஜீப் ?



20. லாங்க் ஷாட்ல காட்டும்போது 67 ஜீப்பிலும் ஒரே ஒரு டிரைவர் தான் இருக்கார் . ஆனா வில்லன் மாளீகையை எண்ட்டர் ஆனதும் ஒவ்வொரு ஜீப்பில் இருந்தும் 4 போலீஸ் ஆஃபீசர்ஸ் இறங்கறாங்க, எப்படி?



21. ஒரு பேச்சுக்கு 80 போலீஸ் தேவை என்றே வைத்துக்கொண்டாலும் 20 ஜீப் போதாதா?  20 * 4 = 80 .

22. கோகிலா கிட்டே கேப்டன் “ இந்த கேசோட திருப்பு முனையே நீங்க அந்த குதிரைக்காரரை பேச வைப்பதில்தான் இருக்கு” அப்டினு ஒரு பில்டப் டயலாக் விடறார். ஆனா கோகிலா அந்த  குதிரைக்காரரை பார்த்து  எந்த ரிஸ்க்கும் எடுக்காமயே அவர் பாட்டுக்கு பேச ஆரம்பிச்சுடறார்


23. குதிரைக்காரரை வில்லன் ஏன் ஓப்பனிங்க்லயே கொலை பண்ணலை? அவர் பேத்தியை கொலை பண்ணினது அவருக்குத்தெரிஞ்சிடுச்சுன்னு வில்லனுக்குஹ்ட்தெரிஞ்சுடுச்சு . சாட்சியாவோ , பழி வாங்கும் ஆபத்தாகவோ அவர் மாறுவார்னு வில்லனால் யூகிக்க முடியாதா?


24. வீட்ல வயசுப்பொண்ணை வெச்சிருகறவர் பிரம்மச்சாரி சந்திரசேகர்க்கு எப்படி வீடு கொடுத்தார்? சென்னைல பிரம்மச்சாரிக்கு வீடே கிடைக்காது. ஹவுஸ் ஓனருக்கு அழகான சம்சாரமும், வயசுப்பொண்ணும் இருந்தா கேட்கவே வேணாம். ஆனா இவர் சந்திரசேகரையும் அலோ பண்ணி அவரோட ஃபிரண்ட் அருண் பாண்டியனையும் அலோ பண்ணி தன் பொண்ணு கையால சோறெல்லாம் போடறாரு ஹி ஹி


25. படத்துக்கு முக்கியத்திருப்புமுனையே வில்லனோட  காதலி சஹானாவா மாறுவதுதான் , வில்லன் சஹானா வா பார்ப்பதை காட்சியா காட்டி இருகனும் , முதல் 2 கொலையா வில்லனின் காத்லி , அவ கள்லக்காதலன் இருவரையும் கொலை பண்ரதை காட்டி இருக்கனும்

http://img822.imageshack.us/img822/9797/vlcsnap2011111808h24m54.png



சி.பி கமெண்ட் - பார்த்தே ஆக வேண்டிய க்ரைம் த்ரில்லர் படம், பெரும்பாலானோர் பார்த்திருப்பீங்க, பார்க்காதவர்கள் பார்த்துடுங்க .

http://www.shotpix.com/images/58364948498597659820.png
 சில சுவாராஸ்யமான செவி வழித்தகவல்கள்


1. இந்தபடத்தில் ஹீரோவாக நடிக்க உச்ச நட்சத்திரங்கள் இருவரைக்கேட்க ஃபிலிம் ஸ்டூடன்ட்ஸ் என அவர்கள் தயங்க  3 வது  ஆளாக  கேப்டன் ஒத்துக்கொண்டார்.



2. ரவிச்சந்திரன் நடித்த வில்லன் கேரக்டரில் முதலில் புக் ஆனவர் நாகேஷ். சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது . அப்படி நடிச்சிருந்தா அபூர்வ சகோதரர்கள் க்கு முன்பே அவர் வில்லன் ஆகி இருப்பார் .



3. இந்தபப்ட ரிலீசின் போது போஸ்டரில்  விஜய் காந்த் படமே ஸ்டில்ஸாக பேப்பர் விளம்பரங்களில் இருந்தது. படம் மெகா ஹிட் என்றதும் வகை வகையாக அருண் பாண்டியன் - கோகிலா ஸ்டில்ஸ் அதிகம் வந்தது . அது கேப்டனுக்கு பிடிக்கவில்லை



4. கண்மணி நில்லு காரணம்  சொல்லு பாடல் காட்சி  பட ரிலீசின் போது  இல்லை, எடிட்டிங்கில் கட். படத்தின் நீளம் கருதி ( 165 நிமிடங்கள் ) பாட்டை கட் பணிட்டாங்க , பின் 25 வது நாளில் பாடல் இனைக்கப்பட்டு போஸ்டர்களில்  இன்று முதல் இப்பாடல் இணைக்கப்பட்டு என விளம்பரம் வந்தது


5. இந்தப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க கார்த்திக் குக்கு நோ சம்பளம் , அதுக்குப்பதிலாக சசிகலாவுடன் ஸ்டோரி டிஸ்கஷன் ஹி ஹி


6 படத்தின் டைரக்டர் ஆர் அர்விந்த்ராஜ் தான் நடிகை விஜியை லவ் பண்ணி மேட்ட்ரை முடிச்சுட்டு அல்வா குடுத்தவரு , காதல் தோல்வியில் விஜி தற்கொலை பண்ணிக்குச்சு , நல்ல வேளை லெட்டர் எதும் எழுதி வைக்கலை அண்ணன் எஸ் ஆகிட்டாரு


7 . இதன் 2ஆம் பாகமாக மூங்கில் கோட்டை வருவதாக  இருந்தது , சில காரணங்களால் வரவில்லை


http://cdn5.supergoodmovies.com/FilesFive/oomai-vizhigal-to-be-remade-db4bacf7.jpg



Directed by R. Aravindraj
Produced by Abhavanan
Written by Abhavanan
Starring Vijayakanth
Arun Pandian
Chandrasekhar
Jaishankar
Karthik
Music by Manoj Gyan
Cinematography A. Ramesh Kumar
Editing by G. Jayachandran
Release date(s) 15 August 1986
Running time 176 minutes
Country India
Language Tamil
http://www.thiraivideo.com/video/wp-content/uploads/2012/05/Oomai-Vizhigal.jpg

Friday, September 21, 2012

சாருலதா - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4tDUZ24wqeI1wZ90oslh7ixGXOMrO7w_CWm2EVKPsRxQ2z_RPlb1qc2ykmbAnZKv2oyH-TdrCOsz5MDNzEtlSUCOQzmpSiutTxnhAsPaJU-xIkfigLyxTYvzJ19qYUSxfXUScnqPS-_k/s1600/0.jpg 

சாருவும் , லதாவும் ட்வின்ஸ்.ஒட்டிப்பிறந்த ரெட்டை சகோதரிகள்.சின்ன வயசுல இருந்தே ஒண்ணாவே வளர்றாங்க.ஒத்த ரசனை. சில காரணங்களால அவங்களை பிரிக்கலை. அப்படியே ஒட்டியேதான் இருக்காங்க.19 வயசு வரைக்கும் சரியாதான் போய்ட்டு இருந்திருக்கு.  19 வயசு ஆனதும் திடீர்னு இசை ஆர்வம் வந்து வயலின் கத்துக்க போறாங்க.. அங்கே தான் ஹீரோவும் வயலின் கத்துக்க வர்றார். 


2 பேருக்கும்  அவரை பிடிச்சிடுது.ஆனா ஹீரோ கமலோ, எஸ் ஜே சூர்யாவோ, கே பாக்யராஜோ கிடையாது . பாவம். அவர் ஒரு பொண்ணைத்தான் அதாவது சாருவை லவ்வறாரு.இது லதாவுக்கு பிடிக்கலை.காதலனை சந்திக்க போகக்கூடாதுன்னு தடை போடறா. இந்த சங்காத்தமே வேணாம், 2 பேரும் ஆபரேஷன் பண்ணி பிரிஞ்சுடலாம்னு முடிவு பண்ணிடறா சாரு. 


 ஆபரேஷன்ல ஒருத்தி உயிர் போயிடுது.லதா செத்துடறா. சள்ளை விட்டுதுன்னு  சாரு அம்மாவை அம்போனு ஊர்ல விட்டுட்டு காஷ்மீர் போய் லவ்வரோட லிவ்விங்க் டுகெதரா வாழறாங்க ( ஆனா நோ கில்மா )அம்மாவுக்கு சீரியஸ்னு தகவல் வருது.


சொந்த ஊர்க்கு போனா சந்திரமுகில வர்ற மாதிரி திகில் அனுபவங்கள்..செத்துப்போன லதா பேயா வந்து பயப்படுத்தறா.. அதுக்குப்பிறகு என்ன நடக்குது என்பதே கதை.. 


http://lh4.ggpht.com/-CCewH8xWxwg/T9dXEU_v8PI/AAAAAAAAQdM/Ry-geX6pbH0/Charulatha%252520Stills%252520%2525288%252529.jpg


கேட்க ரொம்ப சாதாரணமா இருந்தாலும் இதுல நான் சுவராஸ்யம் போய்டக்கூடாதுன்னு கலக்கலான 2 ட்விஸ்ட் மேட்டரை சொல்லாம விட்டிருக்கேன்.. ட்வின்ஸ் கதைல 2 ட்விஸ்ட்.. அடடே.. 


படத்துல முதல்ல பாராட்ட வேண்டியது பிரியாமணியைத்தான்.. ஆஹா! பருத்தி வீரன் முத்தழகு கேரக்டருக்குப்பிறகு  அவருக்கு அமைஞ்ச அல்வா கேரக்டர். வழக்கமா நாம பார்த்த அடக்க ஒடுக்கமான பிரியாமணியா குங்குமம் வெச்சு படிய தலை வாரிய ஹேர் ஸ்டைலில் பாந்தமா வர்றவர் அந்த  வில்லி கேரக்டர்ல மிரட்டிட்டார். சபாஷ்! 


 இதுக்கு முன்னால இப்படி அகம்பாவமான , ஆணவமான , மிரட்டலான, ஆண்மைத்தனமான கேரக்டரை ஜெயலலிதா கிட்டே , மன்னன் விஜயசாந்தி கிட்டே, படையப்பா ரம்யா கிருஷ்ணன் கிட்டே தான் பார்த்திருக்கோம். அவங்களை டச் பண்ணலைன்னாலும் கிட்டே வந்துட்டார்.. 


ஆர் பார்த்திபனின் முன்னாள் மனைவி சீதா டாக்டரா, சரன்யா அம்மாவா பாந்தமா நடிச்சிருக்காங்க.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqnMGlHpPsF5aIY_m-hEigQoGwXi1eWYsole_PGqvb7sDiVlOx8iilfidmTTQIVw61rtSzUb41Reo1gRDa_1l0RllFdCrlHfJv6oLJvGartoLW63X41Y9XVmwUsk6yDqxzHtl10IH1P4fw/s1600/guniguni.jpg



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. இயக்குநர் நினைச்சிருந்தா இது வாலி கதையின் உல்டா வெர்ஷன் தான் அப்டினு சமாளிச்சிருக்க முடியும், ஆனா அப்படி பண்ணாம முறையா தாய்லாந்துப்பட ஒரிஜினலான  அலோன் (ALONE)  தயாரிப்பு தரப்பு கிட்டே அனுமதி வாங்கி கதைக்கு கிரெடிட் அவங்கதான்னு ஒத்துக்கிட்டதுக்கு. ( மிஷ்கின், கே வி ஆனந்த் வகையறாக்கள் கவனிக்க ) 


2. பிரியாமணிக்கு இந்தப்படத்துல ஏகப்பட்ட காஸ்ட்யூம்ஸ்.ஆல் மாடர்ன் டிரஸ் தான். செம .. இதுக்கு முன்னால இந்த சாதனை செஞ்சவங்க பூக்களைப்பறிக்காதீர்கள் , உயிரே உனக்காக நதியா , வஸந்த் இயக்கத்தில் வந்த நீ பாதி நான் பாதி  படத்துல கவுதமி ( நிவேதா பாடல் காட்சில மட்டும்  65 டிரஸ்சாம் )


3. இடைவேளை ட்விஸ்ட்டில்  படத்தின் ட்விஸ்ட்டை சூசகமாக சொல்லும் அந்த  கண்ணாடி ஷேப்பில்  சிதறிய முத்து மணிகள் கூடுவது 



4. த்ரில்லர் பட விமர்சன மேனர்ஸ் கருதி சொல்லாமல் விட்ட அந்த 2 திருப்பு முனை காட்சிகள் 



5. பேய்ப்படம் என்பதற்காக கோரமான உருவம், ரத்தம், கசமுசா காட்சிகள் எல்லாம் வைக்காமல் மிக கண்ணியமாக படத்தை எடுத்தது


http://www.tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_83856928349.jpg



 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. த்ரில் , திகில் படங்களுக்கு காமெடி, பாடல் காட்சிகள் ஒரு பெரிய டிரா பேக். ஏன் ஓப்பனிங்க் ஷாட்ல ஹீரோயினுக்கு தேவை இல்லாம ஒரு பாட்டு?  சந்திர முகி படத்துல வடிவேல் காமெடி மேட்ச் ஆச்சு ஆனா இதுல  அந்த சின்னப்பையன் காமெடி எடுபடலை



2. அன்பே வா படத்துல எம் ஜி ஆர் தன் சொந்த பங்களாவுக்கு வந்தும் வாடகை கொடுத்து தங்கற மாதிரி சூழல், அப்போ நாகேஷ் காமெடி பண்ணுவாரு, மனோரமாவுக்கு எம் ஜி ஆர் தான் ஓனர்னு தெரியும். இந்த காமெடி டிராக் கதையோட ஒன்றி இருந்தது, ஆனா இதுல செட் ஆகலை.. பிரியாமணி எதுக்காக அப்படி நடிக்கனும்? அந்த டிராமா எதுக்கு? 



3. ஹீரோயின் ஒரு சீன்ல வாக்குவம் க்ளீனர் மூலம் வீட்டை சுத்தப்படுத்திட்டு இருக்காங்க. ஹீரோ உள்ளே வந்ததும் தன் காலால வாக்கும் க்ளீனர் ஸ்விட்சை ஆஃப் பண்றாங்க.. ஆயுத பூஜை கும்பிடறாங்க, இப்படித்தான்   பண்ணுவாங்களா? ஹீரோயின் கையால அதை ஆஃப் பண்ண மாட்டாங்களோ?


4. ஹீரோயின் அம்மா சரண்யா சீரியஸ்னு  ஐ சி யூ ல அட்மிட் ஆகி இருக்காங்க. டாக்டர் வெளீலயே பிரியாமணியை நிறுத்தி அவங்களை தொந்தரவு பண்ணாதீங்கன்னு சொல்லாம உள்ளே கூட்டிட்டுப்போய் அதே டயலாக்கை சொல்றாரு// ஆர்க்யூ பண்ணற இடமா அது? 



5. பேபி ஷாலினி சில படங்கள்ல வயசுக்கு மீறி பேசும்போது, சேட்டை பண்ணறப்போ ஒரு கோபம் வருமே ஆடியன்ஸுக்கு அந்த கோபம் இந்தப்படத்துலயும் அந்த பையன் மேல வருது.. பிஞ்சுலயே பழுத்துட்டான் போல.. 


6. ஹீரோயின் ஒரு சீன்ல காரை ரிவர்ஸ் எடுக்கறா. பின்னால நாய் உக்காந்து இருக்கு. பகல் டைம் தான்.  நாய் தூங்கலை, மயக்கம் இல்லை, ஆனா விலகலை.. கார்ல அடிபட்டு சாகுது.. அது எப்படி நாய்க்கு மனுஷனை விட கேட்கும் திறன் அதிகம் ஆச்சே? கார் சவுண்டை கேட்காம எப்படி விட்டுது? ( ரோட்ல விபத்து நடப்பது வேறு, வீட்டு கார் ஷெட்டில் அப்படி ஆகுமா? ) 


7. சரண்யா ஊர்ல தனியா இருக்காங்க.அவங்க ஹாஸ்பிடல்ல இருக்கற மேட்டரை யார் பிரியாமணிக்கு தகவல் சொல்றாங்க? ஏன்னா அந்த வீட்ல இருக்கற மத்த 2 பேரான ஆர்த்தி, அந்தப்பையன் 2 பேருக்கும் பிரியாமணி வர்ற மேட்டரே தெரியலை. 

http://www.vidikural.com/wp-content/uploads/2012/06/priyamani_002.jpg


8. ஹீரோயின் ஒரு சீன்ல ஒரு  டப்பாவை எடுத்து அதுல இருந்து கிட்டத்தட்ட 70 டேப்லட்ஸ் சாப்பிடறா.. தண்ணீர் குடிக்காமலேயே.. நம்மால 2 மாத்திரையே அப்படி சாப்பிட முடியறதில்லை.. அதுவும் ஒவ்வொண்ணா பொறுமையா சாப்பிடாம அப்படியே கொட்டிக்கறா.. 



9. சிஸ்டர்ங்க 2 பேருக்கும் பிராப்ளம் ஓக்கே. சக்களத்தி சண்டைக்காக ஆவி பயமுறுத்துது. ஏன் அம்மாவை பயப்படுத்தனும்?


10. படத்துக்கு முக்கியமான கேரக்டரே அந்த வில்லி கேரக்டர் தான். அதுக்கான ஸ்கோப்பை திரைக்கதைல எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேர்த்தாம எதுக்கு தேவை இல்லாம அந்த காமெடி போர்ஷன்.செம மொக்கை.. அதுவும் நட்பு படத்துல செந்தில் நடிச்ச 10 பைசா பைத்தியம் காமெடி டிராக் மாதிரி 1000 ரூபா எதுக்கெடுத்தாலும் லஞ்சமா கேட்பது மகா எரிச்சல் 



11. மந்திரவாதி, சஞ்சீவி வேர் , சூன்யம் எடுக்கறது இந்தக்கதைக்கு தேவையே இல்லை.. ஏன்னா இது பேய்ப்படம் கிடையாது, அந்த மாதிரி போக்கு காட்டும் ஒரு த்ரில்லர் சஸ்பென்ஸ் படம்.. அந்த மந்திரவாதி கேரக்டர் படத்தின் போக்கை கொஞ்சம் திசை திருப்புது ( அநேகமா ஒரிஜினல்ல இது இருந்திருக்காது, நீங்க சேர்த்து இருப்பீங்க?)


12. இந்த பங்களாவில் பேய் பிரச்சனைன்னு தெரிஞ்சதும் இடத்தை காலி பண்ணாம ஏன் அங்கேயே இருக்கனும்? அம்மா ஹாஸ்பிடல்ல . இவங்க வேற ஹோட்டல்ல தங்க வேண்டியதுதானே?


13. ட்வின்சை பிரிக்கும் சீன்ல ஆபரேஷன் நடக்காததுக்கு முன்பே ஒருத்தி செத்துடறா. டாக்டர் எந்த கேள்வியும் கேட்கலையே. இந்த த்ரில்லர்ல ஒரு சீன்ல கூட போலீஸே எண்ட்ரி ஆகலையே ஏன்? போலீஸ் பந்த்தா? 


14. க்ளைமாக்ஸ்ல  ஹீரோவை கட்டி வெச்சு ஹீரோயின் மிரட்றா. என்னை கட்டிக்கிறியா, உன்னை கொன்னுடவா?ன்னு. ஹீரோ பெரிய பருப்பு மாதிரி செத்தாலும் பரவாயில்லை உன்னை கட்ட மாட்டேன்கறான். அப்போதைக்கு ஓக்கே சொல்லிட்டு எஸ் ஆக பார்க்க மாட்டானா? 


15. ஹீரோவுக்கு சுய புத்தி இல்லையா? க்ளைமாக்ஸ்ல ஹீரோயினை வேண்டாமுனு சொல்லி எஸ் ஆகி வந்த பின் சரண்யா என் மகளை ஏத்துக்கோன்னு சொன்னதும் ஏத்துக்கறாரே? 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3zL5VIj_pLsQUKi3pbIB5ntsflA-UwI9quzgIBlhSudKSaxw4XouDzMRaadMAwznwW0DpKrxX6jkev8iOgXOT5cQUjmJFvYC5M8R2dciyIh7-7HdQvT_iVDnEMTGUnikP0joy2canzw8/s1600/priyamani.jpg




மனம் கவர்ந்த வசனங்கள் 


1. நம்மை மீறி நடக்கும் சில விஷயங்களுக்கு  விதி மேல பழியைபோட்டுட்டு  நாம சைலண்ட்டா இருக்கனும்


2.  என்னது? 2 வருஷமா ஒரே வீட்ல ஒண்ணா இருந்துட்டு ஒண்ணுமே பண்ணலையா? 


3. மேடம், பத்தாயிரம் ரூபா கொடுத்துட்டு ஏன் படிக்கட்டுல படுத்திருக்கீங்க, போய் உள்ளே பெட்ரூம்ல படுங்க.. 

 அடேய், நான் ஸ்லிப் ஆகி விழுந்திருக்கேன் 



4.  ரோசியா? யார் அந்த ஃபிகரு?


 அது அவ வளர்க்கும் நாய் 


5. இந்த உலகத்துல ஒவ்வொருவருக்கும்  ஒரு கவலை கண்டிப்பா இருக்கும். 


6. ட்வின்ஸ்ல ஒருத்தர் இறந்துட்டா இன்னொருத்தர் சீக்கிரம் செத்துடுவாங்கன்னு சொல்றது உண்மையா? அதே போல் செத்துப்போன ஒருத்தர் தன் ட்வின்ஸை வாழ விடமாட்டாங்களா? 



7. பொதுவா இந்த மாதிரி பேஷண்ட்ஸ் ரெக்கவர் ஆவது பேஷண்ட்ஸ் வில் பவரை பொறுத்தது



8.  கார் ஏத்தி  ரோசியை ரோஸ்ட் பண்ணிட்டாங்க 




9. நான் வேணா பாடி காட்டட்டா? 

 அய்யோ , பாடியை காட்ட வேணாம்.. பாடி காட்டுனா போதும்




10. எங்கக்காவைக்கட்டிக்கிட்டா ஒரே கல்லுல 2 பங்களா


11. உங்க எதிர்காலம் ரொம்ப பிரம்மாண்டமா அமையும்னு சொன்னியே அந்த பிரம்மாண்டம் இவ தானா? அவ்வ்வ் 



12. இந்த டிரஸ்ல நான் எப்படி இருக்கேன்?


 புலவன் மாதிரி வர்ணிக்கவா? பொறுக்கி மாதிரி சொல்லவா? 


 பொறுக்கி மாதிரி சொல்லு 


 ஒரு மரத்துப்பனை கள்ளு போல இருக்கே


 சரி, புலவன் மாதிரி சொல்லு 


தேனில் ஊறிய தேனடை மாதிரி இருக்கே. 
\


13. பொண்ணுங்களை பிக்கப் பண்ண பசங்க நாய் மாதிரி அலைவானுங்க,.ஆனா நீங்க அந்த நாயையே கிஃப்டா கொடுத்து பிக்கப் பண்ணிட்டீங்களே? 


14. நீ என்னை வெறுத்தாலும் நான் உன்னை வெறுக்க முடியாது 


15. ஜஸ்ட் 20 நாள் லவ்வுக்காக 20 வருஷ பாசத்தை கொன்னுட்டியே


16. சஞ்சீவி வேருக்கு அபூர்வ சக்தி இருக்கு. கம்பி மேல பட்டாக்கூட  கம்பி உடையும், வேர் உடையாது, நெருப்பால கூட அதை ஒண்ணும் பண்ண முடியாது 


17 . மேலே மேகத்தை பாரு என்ன தெரியுது?


 மேகம் தான் தெரியுது



 சிங்கம் மாதிரி தெரியலை? நிலாவுல பாட்டி வடை சுடற பிம்பம் தெரியறதும்
 இப்படித்தான். நம்ம மனசும் , கற்பனையும் தான் காரணம்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUFZuD3J-X9pajVKPjR1WHwXeo9K6uZ7Oz41RI2NU3Cfu4mFgmW28DBpdghUqFIoij_zP9-aLxpQ_0mFlQMVoRHcnKyAOul7pwoyUOyl96BsSrW8kNZmZl2sJLkC914pwatk-h-WsZzii6/s1600/alone-horror-2007.jpg

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 44


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - நன்று



சி.பி. கமெண்ட் - த்ரில்லர் , திகில் ரசிகர்கள் அனைவரும் பார்க்கலாம். பெண்களும் பார்க்கலாம்.. கண்ணியமான நெறியாள்கை.ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்

டிஸ்கி -சாட்டை -http://www.adrasaka.com/2012/09/blog-post_7166.html

Friday, August 31, 2012

முகமூடி -சினிமா விமர்சனம்

http://reviews.in.88db.com/images/Mugamoodi-first-look/Mugamoodi-Jiiva-Narain-First-look-posters.jpga

நாட்ல முகமூடி போடாத கொள்ளைக்காரர்கள் நிறைய பேர் இருக்காங்க, இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வர் ,பிரதமர்கள், என் நீளும் பட்டியல்கள். ஆனா பாருங்க அவங்க கிட்ட அதிகாரம், அரசியல் செல்வாக்கு, அரசாங்க பாதுகாப்பு, ஒத்துழைப்பு இதெல்லாம் இருக்கு.. சோ அவங்களை ஒண்ணும் பண்ண முடியாது.. போலீசோட வேலை என்ன?  அஞ்சு பத்து திருடுனவன், பேங்க்ல கொஞ்சமா கொள்ளை அடிக்கறவன் இவங்களைத்தானே பிடிக்க முடியும்?



 கோடிக்கணக்குல ஊழல் பண்ணுனவங்க வாய்தா ராணிகளாகவும், நம்ம குடும்பத்தை தவிர வேற யாருக்கும் தமிழ் நாட்டின் சொத்து போயிடக்கூடாதுன்னு நினைக்கும் மனசும், , மற்றவர்கள்க்கு வாய்ப்புத்தராத தலைவர்கள் இருக்கும் தேசம் இது..


கமிங்க் டூ த பாயிண்ட், பணக்கார வீடுகள்ல கொள்ளை அடிக்கும் முகமூடிக்கொள்ளைக்காரர்களை பிடிக்க ஒரு போலீஸ் ஸ்பெஷல் டீம்.. நாசர் தான் அதுக்கு லீடர்.. அவர் பொண்ணு தான் ஹீரோயின். ஒரு வேலையும் செய்யாம தறுதலையா இருக்கும் ஹீரோ ஜீவா அந்த டொக்கு ஃபிகரை பார்த்ததுமே ஒரு தலையா லவ்வறாரு.. 


http://tamil.cinesnacks.net/photos/movies/Mugamoodi/mugamoodi-movie-stills-016.jpg

பால் வடியும் முகமா இருக்கும் ஹீரோ எப்படி இப்படி ஃபைட் போடறார்னு எந்த நாயும் கேள்வி கேட்டுடக்கூடாதே.... அதனால அவர் குங்க்ஃபூ மாஸ்டர்ட்ட  ஃபைட் கத்துக்கிட்ட ஆளா ஓப்பனிங்க்லயே காட்டிடறாங்க.. 


வில்லன்களை பிடிக்கும் முயற்சில நாசர் கிட்டத்தட்ட கொலை செய்யப்படறார்... அதாவது கொலை முயற்சில ஆள் எஸ்.. ஆனா ஹீரோதான் கொலை செஞ்சதா ஹீரோயின் நம்பற மாதிரி ஒரு சிச்சுவேஷன்..  இடைவேளை ( பயங்கர டர்னிங்க் பாயிண்ட் )


அதுக்குப்பின் எல்லா பட ஹீரோ மாதிரி ஹீரோ தான் கொலையாளி இல்ல..  அப்டினு நிரூபிக்க ஒரிஜினல் கொலையாளியை பிடிச்சு போலீஸ்ல ஒப்படைப்பதே இந்த டப்பா படத்தின் கேவலமான கதை. 



ஹீரோ ஜீவா நல்ல அர்ப்பணிப்போட உழைச்சிருக்கார்.. குங்க்ஃபூ ஃபைட் நிஜமாவே கத்திட்டு வந்திருப்பார் போல .. ஓக்கே.. ஆனா  அடுத்த  கவுதம் படத்து கெட்டப்பே இதுக்கும் போட்டது எடுபடலை.. அந்த பிஞ்சு மூஞ்சி எப்படி ஆக்‌ஷன் ஹீரோவுக்கு செட் ஆகும்? மீசை இல்லாமல் மழு மழு முகம் இருந்தா தமிழ் சினிமால ஆக்‌ஷன் ஹீரோவா காட்ட முடியாது.. ( குருதிப்புனல் கமல் விதி விலக்கு )கோ படத்துக்குப்பின் வந்தான் வென்றான் , ரவுத்திரம் போல  ஜீவாவுக்கு இதுவும் ஒரு சறுக்குப்படமே.


 ஹீரோயின் பூஜா ஹெக்டே..தானா வந்து அவர் நம்மை ஹக் பண்ணாக்கூட வேணாம் விலகம்மா என சொல்ல வைக்கும் சுமார் அழகுதான்..  பாடல் காட்சில ஃபுல் முதுகை காட்டறார்..  ஒரு சோகக்காட்சில  லோ ஹிப் காட்றார்..  ஒரு காதல் சீன்ல லோ கட் காட்டறார்.. ஆனா நடிப்பை மட்டும் கடைசி வரை காட்டவே இல்லை.. எல்லாத்தையும் இப்பவே காட்டிட்டா எப்படி? அடுத்த படத்துல நடிப்பைக்காட்டலாம்னு பெண்டிங்க் வெச்சிருக்காராம்.. 60 மார்க் போடலாம்.. லிப்ஸ். கண் எல்லாம் நல்லாருக்கு.. கனகாம்பரப்பூ கலர்ல அவர் உதடுகள் வசீகரிக்கிறது.. தொப்பை போடாத அவர் இடை அழகு.. மற்றபடி  அவர் வந்து போகும் 13 காட்சிகளில் இயக்குநர் சொல்லிக்குடுத்ததை செய்கிறார்.. 


 வில்லனாக நரேன்.. இயக்குநருக்கு என்ன கோபமோ தெரில .. நல்லா பழி வாங்கிட்டார்..  இவர் வரும் ஆரம்ப காட்சிகள் நல்லா இருந்தாலும் க்ளைமாக்ஸ் காட்சிகள் படு சொதப்பல். என்னமோ கார்பெண்டர் மாதிரி சுத்தியலோட அவர் சுத்துவதும், ஹீரோவை நக்கல் அடிப்பதாக நினைத்து இவரே கேவலப்படுவதும் சகிக்கல.. 


நாசர் கனகச்சிதமான நடிப்பு.. 


http://mimg.sulekha.com/tamil/mugamoodi/stills/mugamoodi-movie-012.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் காட்சிகள்



1. முதல் குங்க் ஃபூ ஃபைட் சீன் ஷார்ப் அண்ட் கலக்கல்..  ஹாலிவுட் படம் போல் காட்சி அமைப்பு.. 


2. எஃப் எம்மில் செம ஹிட் ஆன வாயைப்பொத்தி சும்மா இரு பாட்டு படப்பிடிப்பு அம்சம்.. ஒளிப்பதிவு, கேமரா ஆங்கிள் எல்லாம் ரசிக்கும் விதத்தில் 


3. ஹீரோயின் ஹீரோவை துப்பு சுல்தானி மாதிரி கேவலமா துப்பியதை நினைத்து புலம்பும் ஹீரோ  தன் தாத்தா எதார்த்தமா துப்பும் போது  ஜெர்க் ஆவது கலக்கல்.. 


4. ஹீரோ வில்லன் சேசிங்க் சீனில் நள்ளிரவில் ஒரு கள்ளக்காதல் ஜோடி கொஞ்சுவதும்.. கண் மூடி சொக்கிய நிலையில் இருக்கும் அந்த ஜிகிடியின் கன்னத்தில் ஹீரோ ஒரு தட்டு தட்டி செல்லும்போது அது தன் கள்ளக்காதலன் தான் என அந்த கற்புக்கரசி நினைத்து புளகாங்கிதம் அடைவதும் செம காமெடி சீன். 


5. படு மொக்கை படத்தை என்னமோ பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படம் மாதிரி போஸ்டர் டிசைன், ட்ரெயிலர் எல்லாவற்றிலும் கலக்கலான ஓப்பனிங்க் கொடுத்த மிஸ்கினின் திறமை.. 


 6. டைட்டில் டிசைன் மார்வெல் பிக்சர்ஸின் ஸ்டைலை சுட்டிருந்தாலும்
 ரசிக்கும்படி இருப்பது



http://tamil.cinesnacks.net/photos/events/Mugamoodi-Press-Meet-02/mugamoodi-meet-stills-051.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள் ,



1. யுத்தம் செய் படத்தில் ஃபைட் சீன்க்கு பேக்கிரவுண்ட் மியூசிக் நல்லா இருந்ததுன்னு எல்லாரும் சொன்னாங்க.. ஓக்கே அதுக்காக அதே இசையை எடுத்து இதுக்கும் போடனுமா? 


2. தமிழ் நாடே கொண்டாடும் ஹீரோ முகமூடியை பார்க்கனும்னு வில்லன் போலீஸ்ட்ட கோரிக்கை வைக்கறான்.. எப்போ தமிழ் நாடு கொண்டாடுச்சு? அவர் இருக்கும் தெருவுக்குக்கூட தெரியாது.. அபப்டி ஒரு சீனே வைக்கலையே? 


3. வில்லன் ஆசாரியா? கார்பெண்டரா? ஏன் லூஸ் மாதிரி கைல ஒரு சுத்தியை வெச்சுக்கிட்டு சுத்திட்டு இருக்கான்?


4. ஸ்பைடர் மேன், பேட் மேன், அயர்ன்மேன், சூப்பர்மேன் என்று வில்லன் ஹீரோவை  நக்கல் அடிப்பது படு கேவலம். அதுவும் 5 முறை அப்படி பண்றார்.. க்ளைமாக்ஸ் சீரியஸா இருக்க வேண்டாமா?  கோபம் வற்ற மாதிரி காமெடி பண்ணாதீங்கன்னு எத்தனை டைம் சொல்றது?


5. ஹீரோயின்க்கு ஹீரோவை 6 டைம் நேருக்கு நேர் பார்த்தப்ப வர்லை.. முக மூடி போட்டுட்டு வேன் கிட்டே யூரின் போறப்ப எதார்த்தமா ஹீரோயின் ஹீரோவை அந்த கேவலமான கோலத்துல பார்த்த பின் காதல் பொங்கிட்டு வருது.. யோவ்,, இது என்ன கில்மா படமா? 


6.  க்ளைமாக்ஸ்ல வில்லன் ஸ்கூல் குழந்தைங்க இருக்கும் வேன்ல உள்ளே போக நினைச்சா கதவைத்திறந்து போக மாட்டாரா? ஏன் லூஸ் மாதிரி டாப்பை சுத்தியால அடிச்சுட்டு இருக்கார்? அவருக்கும் டாப் அதாவது மேல் மாடி காலியா?


7. ஹீரோயின் ஹீரோகிட்டே லவ்வை வெளிப்படுத்த பல வழி இருந்தும் ஏன் கேனம் மாதிரி ஹீரோ  நெஞ்சை தடவி தடவிப்பார்க்கறாரு? ஆண்ட்டி மாதிரி.. 

( நல்ல வேளை.. )


8. குங்க் ஃபூ மாஸ்டர்  ஹீரோவுக்கு  எல்லாத்தையும் கத்துக்குடுக்காம  இன்ஸ்டால்மெண்ட்ல வித்தைகள் கத்து தர்றாரே, அது ஏன்? 


9. க்ளைமாக்ஸ் ஃபைட் சீன் தான் பொதுவா இந்த மாதிரி ஆக்‌ஷன் படத்துக்கு முக்கியம்.. ஆனா ஏன் சொதப்பல் ஃபைட்?


 10. ஹீரோ அந்த குழந்தைங்க முன்னால பல்டி, குட்டிக்கரணம் எல்லாம் அடிச்சு டாக்டர் ராமதாசை விட  பெரிய காமெடியன் ஆக ட்ரை பண்றது  படு கேவலமா இருக்கு.. ஆக்‌ஷன் ஹீரோ இமேஜையே அது உடைக்குது.. 



11. ஹீரோவுக்கு அந்த ப்ளூ கலர் பனியன் லெக்கின்ஸ் டிரஸ் படு கேவலமா இருக்கு.. பார்த்தா சிரிப்பு தான் வருது.. அதுக்கு மேல சிவப்பு கலர் ஜட்டி வேற .. அவ்வ்வ்வ்.. ராமராஜன் நடிச்சிருக்கனும் 
http://3.bp.blogspot.com/-awG8r-wdTKI/UD5CP548PZI/AAAAAAAA72Q/IVZ3RitUtUE/s1600/Mugamoodi-Movie-Stills-%2B(1).jpg


மனம் கவர்ந்த வசனங்கள்

1. யாரையும் நம்பாதீங்க.. கமிஷனர் உட்பட.. எப்பவும் சிவில் டிரஸ்ல வாங்க.. யூனிஃபார்ம் வேண்டாம்.. , இந்த ஃபார்மாலிட்டி சார்.. மோர் எல்லாம் கட் பண்ணுங்க , டியூட்டியை பாருங்க.. 


2.  அதென்ன மாப்ளை 18 வயசுல இருந்து 81 வயசு வரை எல்லாரும் டாஸ்மாக் வந்துடறாங்க?


3. அதெப்பிடிடா தண்ணி அடிக்க உன் கிட்டே மட்டும் காசு வந்துடுது?



4. புரூஸ்லி யார் மாதிரியும் ஆகணும்னு நினைக்கலை..தான் என்னவா ஆக
நினைச்சாரோ அப்படியே ஆனார். அதனால நீயும் அவர் மாதிரி வரணும்னு
நினைக்காதே..உனக்கு என்ன ஆகத் தோணுதோ அப்படி ஆகு’


5. எங்கேடா போறே?


 அவளைப்பார்க்கனும்


 பார்த்து?


 கன்னத்துல அறையனும். 

 அவ கமிஷனர் பொண்ணுடா.. 

 அப்போ 2 டைம் அறையனும்.. 



6. இப்போதான் சாமி மலை ஏறி இருக்கு..  திரும்பவும் ஏற வெச்சுடாதீங்க.. 



7. அங்கே என்னடா பண்றே?


 டாடி, பைக்கை ரிப்பேருக்கு குடுத்திருக்கேன்.. மெக்கானிக் பார்த்திட்டு இருக்கான்.. ( பில்டப் ஹீரோயின் முன்)



 உன்கிட்டே சொந்தமா ஒரு சைக்கிள் கூட இல்லையேடா.. சரி சரி.. நைட் சீக்கிரம் வீட்டுக்கு வந்துடு.. சரக்கு அடிச்சு வாமிட் எடுத்துட்டு இருக்காதே.. 



8.  ஏண்டா மூடு அவுட்டா இருக்கே? 


 என்னால முடியல.. 

 அப்போ நல்ல டாக்டராப்பாரு


 அய்யோ தாத்தா.. அதில்லை.. அந்த முடியல அல்ல.. இது வேற.. சோகம்.. 


 9. லவ் ஒரு டெஸ்ட் மாதிரி டா.. 

 ம்க்கும், நான் ஸ்கூல் டெஸ்ட்டே பாஸ் பண்ணலை.. 



10. குனிஞ்சு நடக்காத.. என்னை மாதிரி ஆகிடுவே.. 

 உன்னை மாதிரி இருந்தா நான் அவளை பார்க்காமயே இருந்திருப்பேன்.. 

http://www.koodal.com/cinema/gallery/events/2011/771/mugamoodi-movie-launch-stills_23_190750123.jpg


11. தாத்தா.. ஏதாவது ஐடியா குடு ப்ளீஸ்;. 

 எல்லாத்தையும் நானே சொல்ற மாதிரி இருந்தா நானே அந்தப்பொண்ணை லவ் பண்ணிடலாமே? நீ எதுக்கு ? 


12.  நீ என்னமோ தப்பு பண்றே? உனக்கு என்னமோ நடக்கப்போகுது.. 


13. டேய்.. இப்போ நீ என்ன பண்ணப்போறியோ.. எனக்கு வயிற்றை கலக்குது.. 


 எனக்கும் தான்.. 


14. வில்லன் - என் நிழல் கூட என் பின்னால் வராது.. ஆனா நீ வந்துட்டே..  எனக்கு போலீஸ் வாசனை பிடிக்காது, ஆனா சாவு வாசனை பிடிக்கும்.. 






எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40 ( 37 தான் போடனும் நியாயப்படி பார்த்தா, ஆனா விகடன்ல மிஸ்கின்னா ஒரு சாஃப்ட் கார்னர், அள்ளி வீசுவாங்க )

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - வேலை வெட்டி இல்லாதவங்க, பொழுது போகாதவங்க யாரா இருந்தாலும் டி வில அடுத்த வாரம் போட்டுடுவாங்க.. அது வரை வெயிட் பண்ணவும் . இந்த டப்பாவை . ஈரோடு அபிராமியில் பார்த்தேன்






http://kollywoodgalatta.com/wp-content/uploads/2012/08/tamil-movie-mugamoodi-photos.jpg a


Friday, August 24, 2012

18 வயசு - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_7JTCGBocASzWKRcn03EEgPOm8uiJzKlRkPh8auuOk_RWMg6hzjcCLEV05rp79NR2wMko48ZySY5pP0I5xHdGJ8AvQ8-VaJdgm6Q_fpZZE5m7BvNJzGiTtJ5djiE0Fzo7cLVb89I8Yyc/s1600/18_Vayasu_Movie_wallpapers_posters_01.jpg 
பிறவிக்கலைஞன் கமல் -ன் குணா படக்கதையை கொஞ்சம் ஆல்டர் பண்ணி  பாசிடிவ் அப்ரோச் டைரக்டர் விக்ரமன் கிட்டே கொடுத்து திரைக்கதை அமைக்க சொல்லி அதை ஆண்ட்ரியா, சோனியா அகர்வால் ஜோடி சைக்கோ ஸ்பெஷலிஸ்ட் செல்வராகவனை டைரக்ட் பண்ண சொல்லி இருந்தா எப்படி இருக்கும்? அதுதான் 18 வயசு.

 ஹீரோ சின்ன வயசுல இருந்தே அப்பா செல்லம், அவங்கம்மா கேரக்டர் சரி இலை, எப்போ பாரு அப்பா கூட சண்டை.. வேற ஒரு ஆள் கூட தொடர்பு. மேட்டர் தெரிஞ்சு  அப்பா தூக்கு மாட்டி தற்கொலை செஞ்சுக்கறார். அம்மா எப்பவும் போல கள்ளக்காதலனுடன் ஜாலியா இருக்கார்.. 


 ஹீரோ இதனால மன நலம் பாதிக்கப்படறார்.. இவருக்கு வந்திருக்கும் வியாதிப்படி அருகில் ஏதாவது ஒரு மிருகத்தை பார்த்தா அந்த மிருகத்தின் குணநலன்கள் இவருக்கு வந்துடும்.. உதாரணமா நாயை பார்த்தா இவரும் வள் வள்னு குலைப்பார்..


 ஹீரோவை நார்மல் ஆக்க அவர் ஃபிரண்ட்  தன் லவ்வரோட தோழியை லவ் பண்ண சொல்றார்.. சொல்லி வருவதில்லை காதல் என்ற தியரிப்படி அது ஒர்க் அவுட் ஆகலை.. ஆனா ஹீரோயின் எதேச்சையா ஹீரோவை சந்திக்க காதல் ஸ்டார்ட் ஆகுது.. 

குணா கமல் போல் நம்ம ஹீரோ காட்டுக்கு போலாம், அங்கே தான் ஜாலின்னு கூப்பிடறார்.. அந்த பொண்ணும் ஓக்கே சொல்லுது..  இப்போ என்ன சிக்கல்னா ஹீரோவொட அம்மாவோட கள்ளக்காதலன் இத்தனை நாளா  வெளில இருந்தே அப்பப்ப ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டவன் இனி பர்மனெண்ட்டா வீட்லயே தங்கி சாப்பிடலாம்னு வர்றான். 


 ஹீரோ செம காண்ட் ஆகி அம்மாவையே கொலை பண்ணிடறார்.. அப்புறம் 2  ரீல் கழிச்சு அந்த கள்ளக்காதலனை.டமால் இது தெரிஞ்ச ஹீரோயின் பேக் அடிக்கறா,..போலீஸ் ஹீரோவை தேடுது. ஹீரோ  போலீஸ் ஸ்டேஷன் பூந்து ஹீரோயினை கடத்திட்டு போறாரு, போலீஸ் துரத்துது.. என்ன ஆகுதுங்கறதுங்கறதுதான் கதை..


http://galleries.celebs.movies.pluzmedia.com/albums/raadhu/kollywood/movies/2011/18%20vayasu/18%20vayasu-e256d6f0f74fbed02e976db378541bdc.jpg


படத்தோட முதல் ஹீரோ ஹீரோவுக்கு வந்திருக்கும் புது மன நோய் தான்.. தமிழுக்கு புதுசு.. மாடு, நாய், பாம்பு போல் எல்லாம் உள்வாங்கி உரு மாறி  ஜிம் கேரியின் சீரியஸ் கேரக்டரை ஹீரோ ஜானி செய்கையில் ரசிக்க முடிகிறது..


ஜானி உடல்  மொழியில் பிரமாதப்படுத்துகிறார்.. ஆனால் முக பாவனைகளில் ஜஸ்ட் பாஸ் தான்.. எல்லா படங்களுக்கும் இது கை கொடுக்கும் என்று சொல்லி விட முடியாது, கவனம்..


 ஹீரோயின்  புதுமுகம் காயத்ரி.. ஐஸ்வர்யா ராயின் இடை, கன்னம், நந்திதாதாஸின் புன்னகை, கண்கள் மிக்ஸ் செய்த அழகிய கலவையாய் அவரைப்பார்க்க  குளிர்ச்சியாய்த்தான் இருக்கு. டூயட் காட்சிகளீல் லேசா  சூடு கிளப்பறார்.. 70 மார்க் ஃபிகர், தேறிடும். ஆனா காம்ப்ளான் ரெகுலரா குடிக்கனும்.. 


ஹீரோவுக்கு ஃபிரண்ட்டா வர்றவர் அச்சு  அசல் நம்ம ராஜன் லீக்ஸ் மாதிரி இருக்கார் 6 சீனே வந்தாலும் நல்ல நடிப்பு. எதிர் காலம் இருக்கு.. அவரோட  லவ்வரா வர்றவரும், தோழியா வரும் அட்டு ஃபிகரும் நல்ல நடிப்பு.. 


ஹீரோவின் அம்மா கேரக்டர் யுவராணி , சரி கட்டை.. மனோவியல் மருத்துவரா வரும்  ரோஹினி கச்சிதமான நடிப்பு.

 இன்ஸ்பெக்டராக  வருபவர் அசத்தலான நடிப்பு.. தோரனை , மீசை எல்லாம் கன கச்சிதம்..  ஹீரோவின் மனநலம் குன்றிய நண்பராக வருபவர் நடிப்பு புதுசு.. சபாஷ்.. 


ஒளிப்பதிவு, கேமரா , இசை என தொழில் நுட்பங்களில் எல்லாம் எபவ் ஆவரேஜ்,.,.

 http://galleries.celebs.movies.pluzmedia.com/albums/raadhu/kollywood/movies/2011/18%20vayasu/18%20vayasu-aff17ab8c5bea4fbbb32cb7cb8807e7f.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. எந்த உலகில் நீ இருந்தாய்? 2. எனக்கென நீயே பிறந்தாய், 3 போடி போடி பெண்ணே 4 திருநங்கை பாட்டு என 4 பாடல்களுமே நல்லாருக்கு.. படமாக்கப்பட்ட விதமும்  மெத்த சரி



2. போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டர், மன நிலை பாதிக்கப்பட்ட தோழன் கேரக்டர் இருவருக்குமான  நடிகர் தேர்வு சூப்பர். கலக்கிட்டாங்க



3. ஹீரோ ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விலங்கு அல்லது பறவையின் குணநலன் கள் பெறுவது  நல்ல கற்பனை. அதை காட்சிப்படுத்தியதும் ஓக்கே 




 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. தன் மகன் மேல் மனைவிக்கு பாசம் இல்லை என்பதை உணர்ந்தவர் மகனை அநாதையாக விட்டு தற்கொலை செய்ய முயல்வாரா?


2. குடும்பப்பெண் பட்டப்பகலில் தன் வீட்டின் வாசல் முன் கள்ளக்காதலனுடன் கை கோர்த்து கதை பேசிட்டு இருப்பாரா? அவர் என்ன மாமா பையனா? முறைப்பையனா? கள்ளக்காதல்னா ஒரு பதட்டம் வேணாம், ? ராஸ்கல்ஸ்.. தன் புருஷன், மகன் வீடு திரும்பும் நேரம்னு தெரிஞ்சும் அவர்  அசால்ட்டா இருப்பது நம்ப முடியலை.. 


3. கள்ளக்காதலன் வெச்சிருக்கறவங்க பொதுவா உஷரா இருப்பாங்க. தன் ஃபோன் 5 மணி நேரம் பேட்டரி டவுன் என்பதை அவள் ஏன்  தன் கள்ளக்காதலனுக்கு லேண்ட் லைன் ஃபோன்ல இருந்து தகவல் சொல்லலை? சொல்லி இருந்தா அவன் வீட்டுக்கு ஃபோன் பண்ணி மாட்ட வெச்சிருக்க மாட்டானே?


4. போலீஸ் திடீர்னு ஹீரோ ஹீரோயினை கூட்டிட்டு போற ஏரியாவை எபப்டி கண்டு பிடிக்கறாங்க?


5. மனநல மருத்துவரான ரோகினி எப்படி கரெக்டா அந்த இடத்துக்கு க்ளைமாக்ஸ்ல வந்து தடுக்க முடியுது?


6. க்ளைமாக்ஸ்ல 4 சப் இன்ஸ்பெக்டர், ஒரு இன்ஸ்பெக்டர் எல்லார் கைலயும் கன் இருக்கு, அது போக 9 கான்ஸ்டபிள் வேற. ஏன் யாருமே ஹீரோவை சுடலை? ஹீரோவை நேர்ல பார்த்தா சுட்டுட்டுத்தான் மறுவேலைன்னு கர்ஜிக்கும் இன்ஸ்பெக்டர் ஏன் அவரை ஷூட் பண்ணலை? தண்டமா ஃபைட் போட்டுட்டு இருக்காங்க?


7.  விலங்குகளின் குணநலன் உள்ள மன நோயாளியா இருந்தாலும் உடல் பலம் சாதாரண மனிதனின் பலம் தான் இருக்கும்னு ஈரோடு டாக்டர்  சொல்றார். ஆனா ஹீரோ ஆக்ரோஷமா 20 பேரை க்ளைமாக்ஸ்ல அதகளம் பண்றாரே> அதுவும் போலீஸ்ல ட்ரெயினிங்க் எடுத்தவங்களை. அது எப்படி?


8. மன நலம் பாதிக்கப்பட்ட ஆள் கிட்டே லோடட் கன்னை இன்ஸ்பெக்டர் எந்த நம்பிக்கைல தர்றார்? அவன் அவரையே திருப்பி சுட்டுட்டா என்ன பண்ண?னு யோசிக்க மாட்டாரா? ( அவன் அப்படித்தான் சுடறான் )

http://masscinema.in/wp-content/gallery/18-vayasu-tamil-movie/18-vayasu-hot-movie-stills.jpg



 மனம் கவர்ந்த வசனங்கள்



1. அம்மா எவ்ளவ் சண்டை போட்டாலும் அப்பாவோட பொறுமை, புன்னகை,அமைதி எல்லாம் பார்த்து எனக்கும் அப்பா குணம் வந்துடுச்சு.



2. பொண்ணுங்க பக்கத்துல இருந்தா சந்தோஷம் தான் வரும், அழுகை எப்படி வரும் ?



3. அவ வந்தாளா? முத்தம் குடுத்து உன்னையும் ஏதாவது பண்ணச்சொன்னாளா? 

 ம், 150 ரூபாவுக்கு டாப் அப் பண்ணி விடசொன்னா. 




4. நீ தானே வெயிட் பண்ணச்சொன்னே?



அதுக்காக நேத்து மத்தியானத்துல இருந்து இன்னைக்கு காலைல வரை தூங்காம, சாப்பிடமயா?



5. டேய், நீ எதுக்கு அவ வீட்டுக்கு போனே? 


 சார், இப்போ இதான் சார் ஃபேஷன். லிவிங்க் டுகெதர், மேரேஜ் ஆகாம ஒண்ணா இருப்பது



6. அழுகை ல பல வகை இருக்கு.லவ் பண்றவங்க மட்டும்தான் உள்ளுக்குள்ளே ஊமை அழுகை அழ முடியும#்



7. எந்த புருஷனும் தன் பொண்டாட்டி பேரை நெஞ்சுல சூடு போட்டுக்க மாட்டான்.காதலன் மட்டும்தான் காதலி பேரை சூடு போட்டுக்குவான் 


8. சார், நான் இன்னும் சாகலை?


இனிமேத்தான் சாகப்போறே..


http://photogallery.indiatimes.com/movies/regional-movies/18-vayasu/photo/15052342/A-still-from-the-Tamil-movie-18-Vayasu-.jpg




எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 41


 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 



சி.பி கமெண்ட் - எல்லாரும் இந்தப்படத்தை ரசிச்சுட முடியாது. 30 வயசுக்கு உட்பட்டவர்கள் மட்டும் பார்க்கலாம்.. பெண்களும் பார்க்கும் தரத்தில் தான் படம் இருக்கு. ஈரோடு அபிராமியில் ப்டம் பார்த்தேன்


http://moviegalleri.net/wp-content/gallery/18-vayasu-actress-gayathri/18_vayasu_actress_gayathri_0199.jpg

Saturday, July 28, 2012

பொல்லாங்கு - நடுநிசி நாய்கள் 2 - சினிமா விமர்சனம்

http://www.nakkheeran.in/AllImages/Gallerys/22141_1.jpg

தமிழ் சினிமாவில் 4 வகையான படங்கள் வருவதுண்டு. 

1. அனைவராலும்  சிலாகித்து பாராட்டு பெறும் படங்கள் 

2. மாமூல் மசாலா குப்பைகள்

 3. விருதை குறி வைத்து எடுக்கப்படும் படங்கள் 

4. வக்ர சிந்தனையை தூண்டும் வல்கரான படங்கள்..

 நடு நிசி நாய்கள் படத்துக்குப்பின் நான் பார்த்த மிக மோசமான , வன்முறை,வல்கரின் உச்சமான படமாக இதை சொல்லலாம்.. மேக்கிங்க் வைஸ் பல இடங்களில் சபாஷ் வாங்கினாலும் அஸ்திவாரம் மகா மட்டம்.. இந்த மாதிரி மக்கள் மனதை பாதிக்கும், சமுதாயத்துக்கு எந்த வித நேர் மறை விளைவுகளை தராமல் வக்கிர எண்ணங்களை சமூக விரோதிகளிடம் வளர்க்கும் படங்களை தடை செய்ய வேண்டும் என்ற கண்டனத்துடன் விமர்சனத்துக்குள்ளே போலாம்.. 


கார் ஆகட்டும், பைக் ஆகட்டும் முதல்ல ஃபர்ஸ்ட் கீர், அப்புறம் செகண்ட் கீர் லாஸ்ட்டா டாப் கீர். இப்படித்தான் ஸ்பீடு எடுக்கனும்.. ஆனா  படத்தோட ஓப்பனிங்கே டாப் கீர்ல ஸ்டார்ட் ஆகுது.. ஒரு ஹனிமூன் கப்பிள் நடுக்காட்ல கார்ல போறாங்க.. அதை 4 பேர் கொண்ட கும்பல் துரத்துது..  இதை சுவராஸ்யமா 7 ரீல் கொண்டு போனதே பெரிய விஷயம்.. அவங்க எதுக்காக அவங்களை துரத்தறாங்க அப்டிங்கறதை சாவகசமா இடைவேளைக்குப்பிறகு  ஃபிளாஷ்பேக்ல சொல்றாங்க. 


 முறைப்படி இந்த கதையை ஃபிளாஷ்பேக் உத்தியை பயன் படுத்தாம நேரடியா ஏன் சொல்லலைங்கறதுக்கும், ஆரம்பத்துல ஹீரோயின் கார் ஓட்ட ஹீரோ ஏன் பின் சீட்ல உக்காந்திருக்கார் என்பதற்கும் அட்டகாசமான சஸ்பென்ஸ் ட்விஸ்ட் க்ளைமாக்ஸ்ல இருக்கு.. சொன்னா சுவராஸ்யம் போயிடும்./.

வில்லன் குரூப் ல மெயின் வில்லன் சாடிஸ்ட்.. உலகத்துல சாடிஸ ரேப்க்கு தனி மார்க்கெட் இருக்கறதால  பெண்ணை சித்ரவதை பண்ணி ரேப் பண்ணி அதை வீடியோ எடுத்து நெட்ல விட பிளான் பண்றாங்க.. 3 டிக்கெட்ங்களை கூட்டிட்டு வந்து ஃபாரஸ்ட்ல பாழடைஞ்ச பங்களாவுல கில்மா பண்றப்போ ஹீரோயின்  அதை பார்த்துடறா.. அதை வீடியோ எடுத்துடறா.. அதை கைப்பற்றத்தான் சேசிங்.. படம் பூரா ஓட்டம் ஓட்டம் ஓட்டம்தான்.. படம் முடிஞ்சதும் ஆடியன்சும் ( மொத்தமே 19 பேர்தான்)  விட்டா போதும்னு வீட்டுக்கு ஓட்டம் பிடிக்கறாங்க


http://i.ytimg.com/vi/LwNRQ2Lwfzw/0.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஷூட்டிங்க் ஸ்பாட், லொக்கேஷன்ஸ், ஒளிப்பதிவு அட்டகாசம்..

2. ஹீரோயின்  நடிப்பு செம.. பல படங்களில் நடித்து அனுபவம் உள்ளவர் போல் நடிச்சிருக்கார்..அங்கங்கே ஓவர் ஆக்டிங்கும் உண்டு

3. ஹீரோயின் பட ஓப்பனிங்க்ல இருந்து இடைவேளை வரை  காரை டிரைவ் பண்றார்.. ஆனா ஹீரோ தேமேன்னு பின்னால இருக்கார்./  ஆனா பின் பாதி ஃபிளாஷ்பேக் சீன்ல ஹீரோ தான் கார் ஓட்டறார்.. இதுக்கான காரணத்தை க்ளைமாக்ஸ் சஸ்பென்ஸ் சீனா வெச்சது கலக்கல் .. இயக்குநர் படத்தில் பாராட்டத்தக்க ஒரே  விஷயம் இந்த ட்விஸ்ட் தான்.. அதை சொன்னா சுவராஸ்யம் போயிடும்..  


http://i869.photobucket.com/albums/ab253/tamiltheatre/pollangu-5.jpg


மனம் கவர்ந்த ரொமான்ஸ் வசனங்கள் ( ஹனிமூன் ட்ரிப்)

1. ஏய்.. ரொம்ப வளைக்காதே..

எதை?

 காரை

2.ஹனிமூனை யார் கண்டு பிடிச்சாங்க ? தெரியுமா? கேன் யூ கெஸ்?

ம்ஹும், நீங்களே சொல்லிடுங்க..

கூட்டுக்குடும்பத்துல பிறந்த ஒருத்தன் தன் பொண்டாட்டி கூட ஜாலியா இருக்க முடியாதவன் தனியா எங்காவது அவளை தள்ளிட்டு போக ஐடியா கண்டு பிடிச்சு இருக்கனும்

 அப்போ மாயாண்டி குடும்பத்துல  பிறந்த முனியாண்டி?!!

3.  ஏய்! வலிக்குதா?


வலி இல்லாம வழி கிடைக்காது



4. டியர்.. தாங்க்ஸ்..

எதுக்கு?

என்னை சந்தோஷப்படுத்துனதுக்கு

ஐ நோ (I KNOW)

எப்படி?

ம் ம்  என்னால உணர முடிஞ்சது..  உயிர்த்துடிப்பு சொல்லுச்சு..



ம், ஆனா வலிக்குது



5.  குளிருது... உனக்கு குளிரலை?

 போர்வைக்கு எப்படி குளிரும்?



 புரியலையே..

மக்கு புருஷா.. நைட் டைம்ல நான் தானே உன் போர்வை.. எனக்கு எப்படி குளிரும்?



6. கடல்ல ஒரு வகை மீன்கள் இருக்கு.. லாங்க் ஷாட்ல அவை நீர்  மட்டத்தை விட்டு வெளில வர்றப்போ நெருப்புக்குழம்பு பாய்ச்சல் போல் தெரியும்.. கொள்ளி வாய் பிசாசுன்னு  சிலர் நினைப்பாங்க.. அதே மாதிரி அடர்ந்த கானகத்தில் இப்படி அருவி சத்தம் போலியா கேட்கும்.. அதுக்கு கோஸ்ட் மாடஸ்டி ஆஃப் வாட்டர்னு பேரு.,.

வில்லனின் வசனங்கள்

1. எல்லா பெரிய ஆளுங்களும் ( பெரிய மனுஷங்க) தொடர்ந்து பணக்காரங்களா இருக்க அவங்க ஏதாவது தப்பு பண்ணிட்டே இருக்கறது தான் காரணம்

2. அது போக 18 இடங்களில் கெட்ட வார்த்தைகள் 



http://4onlinetv.com/wp-content/uploads/mvbthumbs/img_359_pollangu-tamil-theo-trailer-pro-mounam-ravi_xvid.jpg


இயக்குநரிடம்  பல கோபாவேச கேள்விகள்


1. இந்தப்படத்தின் மூலம் நீங்க சமுதாயத்துக்கு சொல்ல வருவது என்ன? சமூக விரோதிகளுக்கு ஐடியா குடுக்கறீங்களா? ஆட்டோ சங்கர் மாதிரி இதை பார்த்து அது போல் செய்யலாம்னு முயற்சி செஞ்சு யாராவது பாதிக்கப்பட்டா நீங்க அதுக்கு பொறுப்பு ஏத்துக்குவீங்களா?

2. ஹாலிவுட் படத்தை காப்பி அடிக்கறது தப்பில்லை.. நல்ல விஷயங்களை காப்பி அடிக்காம இப்படிப்பட்ட வல்கர் படம் தான் உங்க கண்ணுக்கு சிக்குச்சா?

3. படத்தோட டைட்டில்ல எழுத்து , இயக்கம்னு உங்க பேரை ஜம்பமா போட்டுக்கறீங்க.. இதன் ஒரிஜினல் மூவிக்கான க்ரெடிட்டை ஏன் கொடுக்கலை?

4. ஏதோ த்ரில்லர் படம்னு தெரியாம ஒருத்தன் தன் ஃபேமிலியோட வந்து தியேட்டர்ல மாட்டிக்கிட்டா அவன் அடையும் மன உளைச்சல்களுக்கு உங்க நஷ்ட ஈடு என்ன?

5. ஹீரோ செலக்‌ஷன் மகா மட்டம்.. சரியான தத்தியா இருக்கார்.. அவர் தான் ஃபைனான்ஸ் பண்ணாரா?

6. ஹீரோயின் நியூலி மேரீடு கேர்ள்க்கு பொருத்தமே இல்லை.. 38 வயசு ஆண்ட்டி மாதிரி இருக்கு..

7 சென்சார் ஆஃபீசர்ஸ்க்கு எவ்ளவ் லஞ்சம் கொடுத்தீங்க?


http://www.tamilnow.com/movies/gallery/pollangu/pollangu-9231.jpg


லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள்

1. படத்தோட ஓப்பனிங்க் சேஸ் சீன்ல ஹீரோயின் கார்ல வேகமா போறா.. வில்லன் குரூப் ஜீப்ல துரத்தறாங்க.. அப்போ ஹீரோயின்  டக்னு மெயின் ரோட்டை விட்டு விலகி லெஃப்ட்ல கட் பண்ணி மண் ரோட்டில் கொஞ்ச தூரம் போய் வண்டியை நிறுத்தி வந்த பாதையின் மண் தாரையை அழிச்சுட்டு கிளம்பறா.. அதுக்கு எல்லாம் நேரம் இருக்குமா? என் ஐடியா என்னன்னா ஆளில்லா அநாமத்து காட்டில்  அப்படி சப்வே மண் ரோட்டில் போய் மாட்டிக்கறதுக்கு ஒரு பெண் என்ன யோசிப்பான்னா வில்லன்க அந்த இடத்தை கிராஸ் பண்ணதும் வந்த வழியிலேயே காரை திருப்பி போனா எஸ் ஆக வாய்ப்பு அதிகம்.. ஏன்னா 10 கிமீ வில்லன்க போய் ஆள் எஸ்னு உணரும்போது ஹீரோயின் ஆப்போசிட் டைரக்‌ஷன்ல 10 கிமீ போய் இருப்பா.. டோட்டலா 20 கிமீ தள்ளி இருப்பா.. சேஃப்.. இந்த ஐடியா தான் செலக்ட் பண்ணுவாங்க.. மேலும் மேலும் சிக்கலை வரவழைக்கும் அந்த சப் வே ஐடியா வை யாரும் அதும் ஒரு பொண்ணு செலக்ட் பண்ண மாட்டா..

2. ஒரு  சீன்ல வில்லனை மலைப்பாம்பு வளைக்குது.. அப்போ அவன் கைல கன் இருக்கு.. சுட்டிருக்கலாம்.. பயத்துல அல்லது உயிர்ப்பாதுகாப்புக்காகவாவது சுட்டிருக்கனும்./. ஆனா அவன் சுடலை ஏன்? வேற ஒரு வில்லன் வந்து அவன் கைல இருக்கற கன்னால சுடறான்.. அது டேஞ்சர் இல்லையா? பாம்பு மேல குண்டு பாய்வதை விட ஆள் மேல பாய்வதற்குத்தான் சான்ஸ் அதிகம்

3.  இன்னொரு காட்சில மலைப்பாம்பு ஒருத்தனை வளைக்குது.. அப்போ 3 பேரு வந்து என்னமோ ராட்டைல இருந்து நூல் உருவற மாதிரி அவனை ஈசியா விடுவிக்கறாங்க.. அப்புறம் என்னமோ செல்லப்பிராணியை வழி அனுப்பற மாதிரி காட்டுக்குள்ளே அதை விட்டுடறாங்க.. காட்டிலாகா அதிகாரியிடம் இது பற்றி பேசினேன்.. மலைப்பாம்பின் பிடி இறுகி இருக்குமாம்.. அல்ப சொல்பமா  அப்படி எல்லாம் விடுவிக்க முடியாதாம்.. உடும்புப்பிடிக்கு அடுத்து மலைப்பாம்பின் பிடிதான் ஃபேமஸாம்

4.   புரட்சித்தலைவியின் தஞ்சாவூர் பொம்மைஓ பி எஸ், சோனியாவின்  கை பொம்மை மன்மோகன் சிங்கை  எல்லாம் தோற்கடிக்கும் வகையில் அந்த கணவன் கேரக்டர்,, மகா மகா சோப்ளாங்கி..  கேரக்ட்ரைசேஷன் ஒர்ஸ்ட்

5. கதைப்படி அவங்க ஹனிமூன் கப்பிள் தான்.. ஆனா வில்லன் அவங்க கிட்டே “ உங்க கழுத்துல தாலி இல்லை.. தள்ளிட்டு வந்துட்டீங்களா?” அப்டினு கேவலமா கேட்கறப்போ எந்த ரெஸ்பாண்சும் இல்லையே, ஏன்? தன்னிலை விளக்கம் கொடுக்க வேணாமா?

6. டவர் இல்லாத காட்டுப்பகுதி.. யாருக்கும் செல் ஃபோன் டவரே கிடைக்கலை.. ஆனா வில்லன்க தேடல் வேட்டையை நடத்தும்போது 4 வெவ்வேறு திசைகளில் போய் மறுபடி கரெக்டா வேற ஒரு இடத்துல ஒண்ணு கூடுவது எப்படி?இந்த இடத்துல மீட் பண்ணலாம்னு அவங்க பேசிக்கவும் இல்லை..

7. ஹீரோயின் அடிபட்டு மயக்க நிலைல இருக்கு.. இந்த லூஸு வில்லன்க பாட்டுக்கு கேனத்தனமா விசாரனை பண்றதும், தேளை அவங்க மேல விடறதும் ஓவர்.. தேளை ஒருத்தன் அப்பப்ப தூண்டி விடறான்.. அவன் என்ன ஜூவாலஜி ஸ்பெஷலிஸ்ட்டா? பொட்டுன்னு அவனைத்தான் மொதல்ல போடும்..

8. ஹீரோயின் போலீஸ் டிபார்ட்மெண்ட்டோ, தீவிரவாதியோ கிடையாது.. சராசரி பொண்ணுக்கான வலி தாங்கு திறன் தான் அவருக்கும் இருக்கும்.. ஆளில்லா காட்டில் கை விரல் நகங்கள் 10, பற்கள் எல்லாம் கட்டிங்க் ப்ளையர் எல்லாம் வெசு பிடுங்கியும் அவர் பிடிவாதமா அந்த கேமராவை எங்கே ஒளிச்சு வெச்சேன்னு சொல்ல மாடேன்னு அடம் பிடிப்பது செயற்கை.. அவ்ளவ் அடம் பிடிச்சு என்ன யூஸ்?

9. ஏதோ ஒரு காட்டுக்குள்ள இருட்டுல இவர் பாட்டுக்கு  மண்ணுக்குள்ளே கேமராவை ஒளிச்சு வைக்கறார்.. செல் ஃபோன் டவர் இல்லை.. யாருக்கும் மெசேஜ் அனுப்பும் வசதியும் இல்லை.. அதனால என்ன யூஸ்? இவர் செத்துட்டா அந்த ரகசியத்தை யார் எடுக்கப்போறாங்க?

10. நடுக்காட்டில் நள்ளிரவில் எழும் மணப்பெண் ஒரு மினிமினி பட்டர்ஃபிளை பார்த்து வீடியோ எடுப்பது ஓக்கே.. அது பின்னாலயே 2 கிமீ தூரம் போய்க்கிட்டே இருப்பது ரொம்ப ஓவர்.. அது என்ன பிட்டுப்படமா? பட்டர் ஃபிளை தானே.. 2 நிமிஷம் எடுத்தாலும் 2 மணி நேரம் எடுத்தாலும் 1 தானே..?  




http://haihoi.com/Channels/cine_gallery/Pollangu-Movie-Wallpapers-11_S_152.jpg


சென்சார் ஆஃபீசரிடம் சில கேள்விகள்

1.  லஞ்சம் வாங்கிட்டா எவ்ளவ் குப்பை படத்தையும் ரிலீஸ் பண்ணிடலாமா? இந்தப்படத்துக்கு எப்படி சென்சார் சர்ட்டிஃபிகேட் கிடைச்சதுன்னு நீதி விசாரனை எல்லாம் வரவா போகுதுன்னு  அலட்சியமா?

2.  ஒரு பெண்ணை ரேப் பண்ற மாதிரி சீன் காட்ட சிம்பாலிக் ஷாட் போதாதா? அவ்ளவ் டீட்டெயிலா காட்டி இருக்காங்க.. அதை எப்படி அலோ பண்ணீங்க?

3. ஹீரோயின் நகங்கள் பிடுங்கப்படும் காட்சி, பல்லை கட்டிங்க் ப்ளையர் ( கொரடு) வெச்சு எடுக்கும் காட்சி எல்லாம் ஓவரோ ஓவர்.. இதுவரை எந்த தமிழ் சினிமாவுலயும் வர்லை.. என்ன தைரியத்துல இதை எல்லாம் அலோ பண்ணீங்க?

4. ஹீரோயின் மயக்கம் ஆகிடறா.. அவளை எழுப்ப தண்ணி தெளிக்கறதுக்குப்பதிலா வில்லன் ஹீரோயின் முகத்துல.. .. மகா மட்டமான வல்கரான சீன் அது.. உவ்வே,, இதை எப்படி ஓக்கே சொன்னீங்க?

5. பிணத்துடன் உறவு கொள்ளும் வில்லன் மூவ்மெண்ட் காட்டுனது ஓவர்னா ஒருத்தன் அந்த பிணத்தின் முகத்து தோலை அப்படியே  உரிச்சு எடுக்கறது எல்லாம் வல்கரின் உச்சம்.. உங்க ஃபேமிலி லேடீஸ் இந்தப்படத்தை பார்க்க அலோ பண்ணுவிங்களா?

6. இந்தப்படத்துக்கு பணத்தை வாங்கிட்டு சர்ட்டிஃபிகேட் குடுத்த குற்றத்துக்காக தண்டனையா உங்க மனைவி மகள் அம்மாவுடன் இந்தப்படத்தை பார்க்கனும்னு சொல்லிடனும்.. அப்போதான்யா உங்களுக்கெல்லாம் புத்தி வரும்..


தயாரிப்பாளரிடம் ஒரே ஒரு கேள்வி

1. நாய் வித்த காசு குரைக்காதுதான்.. இந்த மாதிரி மட்டமான படம் எடுத்து அதுல வர்ற வருமானத்துல சாப்பாடு சாப்பிடனுமா?கீழே இருப்பவர் தான் தயாரிப்பாளர் . படத்துல போலீஸ் ஆஃபிசரா வர்றார்..


http://www.thehindu.com/multimedia/dynamic/00928/19cp_Pollangu_Praka_928179g.jpg



சி.பி கமெண்ட் - இந்த கேவலமான படத்தை பெண்கள், கர்ப்பிணிகள், மாணவ மாணவிகள் , 36 வயதுக்கு உட்பட்டோர், மனோரீதியாக பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால் மென்மையான மனம் கொண்ட அனைத்து வயது ஆண்கள் பார்க்க வேண்டாம். ஹனிமூன் போகும் புது மணத்தம்பதிகள் பார்த்தால் ஜென்மத்துக்கும் அந்த ஆசையே போயிடும் அபாயம் இருப்பதால். அவர்களும் பார்க்க வேண்டாம்..வன்முறையின் உச்சமான படத்தை எடுத்த இயக்குநர் பேரு காந்தி மார்க்ஸ்ஸாம் அவ்வ்வ்வ். என்னே ஒரு முரண்!


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39

குமுதம் ரேங்க் - ஓக்கே


டைம்ஸ் ஆஃப் இண்டியா - 3 /5

 டெக்கான் கிரானிக்கல்   6 /10

டிஸ்கி 1 - நடுநிசி நாய்கள் விமர்சனம் - http://www.adrasaka.com/2011/02/18_18.html


டிஸ்கி 2 -

இயக்குநர் கவுதம் மேணனுக்கு ஒரு கண்டனக்கடிதம்( இது பொல்லாங்கு இயக்குநருக்கும் பொருந்தும்)http://www.adrasaka.com/2011/02/blog-post_7783.html

 

 

டிஸ்கி 3 - சுழல் விமர்சனம் http://www.adrasaka.com/2012/07/blog-post_6087.html

 

 

டிஸ்கி 4 -  டிஸ்கி - மாலைப்பொழுதின் மயக்கத்திலே விமர்சனம் -http://www.adrasaka.com/2012/07/blog-post_6127.html