Showing posts with label TERROR. Show all posts
Showing posts with label TERROR. Show all posts

Thursday, December 20, 2012

நானே வருவேன் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNgORehqribNXBgygBqQcVAlfvzoZ6ApgW4yQPssmyaYlJv4s1VbZyjPMIOmy0PD2kZAR87WbtW2TgH5ktkkejTFxQK2sACvumOO5gqk4blksvVcm6flfTcz0x1bAm3skivuAHzkyrL2Zr/s400/naane-varuven-tamil-movie-cd.jpg

நான் ஏன் இந்த டப்பா படத்துக்கு போனேன்னா  போஸ்டர் விளம்பரம் தான் . உலகின் முதல் வாசனைத்திரைப்படம் அப்டினு பக்காவா , பண்ணாட்டா விளம்பரம் கொடுத்திருந்தாங்க. அதாவது ஹீரோயின் மல்லிகைப்பூ வெச்சுட்டு வந்தா தியேட்டர் ஃபுல்லா அந்த வாசம் வீசுமாம். அந்த புது அனுபவம் எப்படி இருக்கும்னு பார்ப்போம்னு நினைச்சேன்.இன்னொரு காரணம் லோ பட்ஜெட் டி ஆர் என அழைக்கப்படும் பாபு கணேஷ் . கதை வசனம் ஆபீஸ் பாய் உட்பட 14 பொறுப்புகளை சுமந்து இவர் எடுத்த கடல் புறா படம் நினைவு இருக்கு . சரின்னுட்டு போனா மனுஷன் கொன்னு குதறிட்டாரு. முடியல


ஹீரோ தன் ஃபிரண்ட்ஸோட டூர் போறார். அங்கே போன இடத்துல ஒரு விபரீதம் நடக்குது . ஒரு மலைவாசிப்பெண் ரேப் செய்யப்படறா. அதை வேடிக்கை பார்த்து ஏளனம் செய்ய்யும் 3 பெண்கள் , 2 ஆண்கள் 5 பேரையும் ரேப்பப்பட்ட பார்ட்டி பேயா வந்து பழி வாங்குது . இந்த பிரமாதமான புதுமையான கதை முடிச்சு படம் போட்டு க்ளைமாக்ஸ்க்கு கொஞ்சம் முந்திதான் தெரிய வருது, சஸ்பென்ஸை மெயிண்ட்டெயின் பண்றாங்களாம், அடேய்

 ஹீரோ பாபுகணேஷ் பார்க்க சகிக்கல . பீர் அடிச்சு உப்பிய கன்னம் ,வழுக்கையை மறைக்கும் மூன்றாந்தர  விக். எல்லா சீன்களுக்கும் ஒரே மாதிரி பாறை மாதிரி முகத்தை வெச்சிருக்கும் லாவகம் . பாபு கணேஷ் ராக்ஸ். அப்பா சாமி


ஹீரோயின் அதை விட கண்றாவி .பொதுவா ஒரு படத்துல ஹீரோயின் தோழிகளா வர்ற பொண்ணுங்க நல்ல ஃபிகர்ங்களா இருப்பாங்க , இதுல அதுவும் இல்லை. பாக்கி 3 பொண்ணுங்களும் படு கேவலமா இருக்காங்க .காலேஜ் கேர்ள்ச் மாதிரி தெரியல . பக்கா அயிட்டம்ஸ் மாதிரி இருக்கு .ஆண்டிகள் மாதிரி ஆட்களைக்காட்டிட்டு 19 வயசுப்பொண்ணுன்னு சொல்றதுக்கு ஜெயில்ல பிடிச்சு போடுங்க ஏட்டய்யா


டைட்டில் போடும்போது வகீதா , ஷில்பா , இப்ரா , விக்டோரியா ,ச்டேபி , பாபி என வித்தியாசமான பேரா வந்தப்போ நான் சந்தோஷப்பட்டேன், படம் டப்பாவா இருந்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியா ஏதாவது ஃபிகர்ங்களையாவது பார்க்கலாம்னு.. ஆனா பாருங்க இதுங்களைப்பார்த்து  கண்ணே கெட்டுப்போச்சு , ஐ வாஷ் பண்ணனும் 

http://www.tamilnow.com/movies/gallery/naane-varuven/nane-varuven-film-stills-11.jpg



 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்



1. கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம கின்னஸ் புக்ழ் பாபுகணேஷ்னு டைட்டில்ல போட்டுக்கிட்ட மொள்ளமாரித்தனம்


2. வாசனை டெக்னிக்னு ஊரை ஏமாத்தின லாவகம்

3. படம் பார்க்கும் முதல் 200 பேருக்கு கோடி ரூபா பரிசுன்னு கோல்மால் விளம்பரம் ( ஆனா தியேட்டர்,ல நான்,  தியேட்டர் ஓனர், ஆபரெட்டர், பின்னே டிக்கெட் கிழிப்பவர் 4 பேர்தான் ) 

4. இந்தப்படத்தோட மொத்த பட்ஜெட்டே ரூ 50,000 தான் இருக்கும். ஆனா கொஞ்சம் கூட மன்சாட்சியே இல்லாம கோடி ரூபாய் பரிசுன்னு விளம்பரம் கொடுத்தது செம 


5.கடலுக்குள்ளே மீனம்மா  கட்டு மரத்துல போவமா? மனசுக்குள்ளே பாரமா? உன் மாமன் மேல கோபமா? செம கானா பாட்டு


http://www.images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/naane-varuven/bwoods_naane-varuven-01.jpg

இயக்குநரிடம் வேண்டா வெறுப்பாய் சில கேள்விகள்


1. படத்துல ஃபாரஸ்ட் ஆஃபீசர்னு சொல்லிட்டு ஒரு கேனம் வருது . அது ஏன் போலீஸ் யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு அலையுது . அந்தாள் பார்க்க வாட்ச்மேன் மாதிரியே இருக்காரு


2. நான் ஒரு ஃபாரஸ்ட் ஆஃபீசர்னு அந்த கேனம் சொல்லும்போது ஹீரோ - அதை எல்லாம் உன் வீட்ல வெச்சுக்க “ அப்டினு கேவலமா ஒரு பஞ்ச் பேசறாரு , காட்டுல வெச்சுக்கறதுக்கு வேற ஏதாவது அரேஞ்ச் பண்ணி இருக்கீங்களா?


3. அனாமத்தா வழில கிடக்கும் ஃபார்ஸ்ட் ஆஃபீசரோட டெட் பாடியை இவங்க் அதாவது ஹீரோ அண்ட் கோ பார்க்கறாங்க. அவங்க பாட்டுக்கு கிளம்ப வேண்டியதுதானே , எதுக்கு பேக்குங்க மாதிரி அந்த டெட் பாடியை டிஸ்போஸ் பண்னனும்? வேலியில் போகும் ஓணானை எதுக்கு வேட்டிக்குள்ள விடனும்?


4. அப்படி டெட் பாடியை டிஸ்போஸ் பண்ணும்போது 4 பேர் கைரேகையும் டெட்பாடில படுது.  போலீஸ் அதை கவனிக்காதா?


5.  வழக்கமா  பேய்னா வெள்ளை சேலை தான் போட்டுட்டு வரும்? இதுல ஏன் வெள்ளை பெட்டிகோட் , வெள்ளை பிரா போட்டுக்கிட்டு காட்டுக்குள்ள சுத்துது? குளிராதா? 


6. ஒரு பெண்ணோட 2 கண்களை க்ளோசப்ல படத்துல 67 டைம் காட்டறீங்க, எதுக்கு? 



 http://www.cinepicks.com/tamil/gallery/naane-varuven/nane-varuven-film-stills-2.jpg



மனம் கவர்ந்த வசனங்கள்


1. ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ( பேய் எஃபக்ட்டாம் ) 



2. நானே வருவேன்  நானே வருவேன் நானே வருவேன் நானே வருவேன் நானே வருவேன் நானே வருவேன் நானே வருவேன் ( டைட்டிலை நியாயப்” படுத்தறாங்களாம் “)


 சி.பி கமெண்ட் - இந்த கேவலமான , குப்பையான , டப்பாவான, மொக்கையான மக்காத குப்பையை யாரும் போஸ்டரைக்கூட பார்த்துடாதீங்க 



எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் -  மைனஸ் 10 


 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - அய்யய்யோ 



டெக்கான் கிரானிக்கல் ரேங்க் -  மைனஸ் 4 /5

http://www.images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/naane-varuven/bwoods_naane-varuven-03.jpg



Wednesday, June 27, 2012

GHOST SON -ஹாலிவுட் திகில் சினிமா விமர்சனம்

http://www.filmlinks4u.net/wp-content/uploads/2011/04/Ghost-Son-2007-%E2%80%93-Hollywood-Movie-Watch-Online.jpg
ரத்தம், வன்முறை, தேவை அற்ற பயமுறுத்தல் காட்சிகள் எல்லாம் இல்லாம ரொம்ப நுணுக்கமான மனித உணர்வுகளை சித்தரிக்கும் வித்தியாசமான படமா இதை எடுத்திருக்காங்க.. 2007-ல் வந்த இந்தப்படம் இப்போதான் இங்கே ரிலீஸ் ஆகுது.. படத்தோட விமர்சனத்துக்கு போறதுக்கு முன்னே என் அம்மா , அப்பா பற்றி ஒரு பேரா...


எங்கப்பா ஜூலை 7, 2007 ஆம் ஆண்டுதான் மாரடைப்பில் திடீர்னு இறந்தார்.. எங்களுக்கு சென்னிமலைல சொந்த வீடு இருக்கு.. மொத்தம் 4 வீடுகள்.. 3 வீடுகளை வாடகைக்கு விட்டுட்டு மீதி ஒன்றில் குடி இருந்தோம்.. அப்பாவின்  இறப்புக்குப்பின்  அம்மாவை ஈரோடு வந்துடச்சொல்லி எல்லோரும் அழைத்தும் அம்மா வர்லை.. எங்கப்பா வாழ்ந்த ( 30 வருடங்களா) அதே வீட்டில் தான் வசிப்பேன் என உறுதியா சொல்லீட்டாங்க.. அந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் , அப்பாவின் நினைவுகளை கிளறி விடுவதாக,வர்ணிக்க இயலாத ஆத்ம சந்தோஷம்  தருவதா அம்மா சொல்றாங்க..இந்தப்படம் பார்க்கறப்போ  எனக்கு அவங்க நினைவு தான் வந்தது.. 


தென் ஆப்பிரிக்காவில் உள்ள கானகம் தான் கதை நடக்கும் இடம்.. அங்கே ஹீரோ, ஹீரோயின் 2 பேரும் குடி இருக்காங்க.. சில குதிரைகள் சொந்தமா இருக்கு. அந்த குதிரை லாயத்தை நடத்திட்டு இருக்காங்க.. 2 பேரும் புது மணத்தம்பதிகள்.. 

ஹீரோ ஜீப்ல ஒரு இடத்துக்கு போறப்போ ஒரு விபத்துல மாட்டிக்கறார்.. உடனே ஹீரோயின் ஸ்பாட்டுக்கு சைக்கிள்ல போறாங்க.. ஜீப்  கவிழ்ந்து இருக்கு.. அதுக்குள்ளே சிக்கி இருக்கற ஹீரோ தன் கடைசி மூச்சை விட்டுட்டு இருக்காரு.. என்னை விட்டுட்டுப்போயிடாதேன்னு ஹீரோயின் கதறியும் ஹீரோ இறந்துடறாரு.. 

 ஹீரோவின் பாடியை அடக்கம் பண்ணிடறாங்க.. ஹீரோயினை அங்கே தனியா இருக்க வேணாம்.. ஊருக்கு கிளம்பிடுன்னு டாக்டர் கம் ஃபிரண்ட் அட்வைஸ் பண்றாரு.. ஆனா ஹீரோயின் கேட்கலை..  கணவன் இருந்த இடத்துல வாழ்ந்து அந்த குதிரை லாயத்தை பார்த்துக்கறேன்னு சொல்லிடறா.. 

அவ உதவிக்கு ஒரு டீன் ஏஜ் பொண்ணு.. நீக்ரோ.. கூட மாட ஒத்தாசைக்கு.. அந்த பொண்ணோட அம்மாவும் இறந்துட்டாங்க.. ஆனா அந்தப்பொண்ணு அடிக்கடி இறந்து போன அம்மா தன் கூட அப்பப்ப வந்து பேசுவாங்கன்னு சொல்லி ஹீரோயினை குழப்பறா.. 

இனி நடக்கும் சம்பவங்களை எல்லாராலும்  நம்ப முடியாது.. உணர முடியாது.. ஐ திங்க் ஆண்களை விட பெண்களால் தான் இந்த நுட்பமான உணர்வுகளை உணர முடியும்.. 




http://images.movieplayer.it/2004/01/18/laura-harring-in-una-scena-del-film-ghost-son-38905.jpg

தனிமையின் தவிப்பில் ஒரு முறை ஹீரோயின் தற்கொலை முயற்சி பண்றா.ஆனா அந்த டாக்டர் வந்து காப்பாத்தறார்.. நார்மல் செக்கப் பண்றாங்க. அப்போதான் ஹீரோயின் கர்ப்பமா இருக்கறது  தெரிய வருது.. கலைக்கலாம்னு சொல்லியும் அவ கேட்கலை..

 ஹீரோயின் ஹீரோ கூட வாழ்ந்துட்டு இருக்கா.. கற்பனையில் .. அவளோட ஒவ்வொரு அசைவும் தன் கணவன் பக்கத்துலயே இருக்கறதா நினைச்சுக்கறா.. ஆல்ரெடி மாசமா இருக்கற ஹீரோயின் குழந்தை பெத்துக்கறா.. 


இறந்து போன கணவன் இப்போ அடிக்கடி அவ முன்னால வந்து “ என்னை விட்டுட்டு நீ எப்படி இருக்கப்போறே? என் கூடவே வந்துடு..”ன்னு சொல்றான்.,. 


குழந்தைக்கு  தாய்ப்பால் குடுக்கறப்போ குழந்தை நல்லா கடிச்சு வெச்சுடுது.. ரத்தம் வர்ற அளவு.. டாக்டர்ட்ட காட்டுனா அவர் நம்பலை.. 2 மாசமே ஆன குழந்தை எப்படி பல்லே இல்லாம ரத்தம் வர்ற அளவு கடிக்க முடியும்?னு உதாசீனப்படுத்திடறார்.. 


இப்போ கணவனின் ஆவி அப்பப்போ குழந்தையின் உடலில் புகுந்து ஹீரோயினை மிரட்டுது.. பயம் காட்டுது.. 

ஹீரோ பேய் கிட்டே இருந்து ஹீரோயின் எப்படி தப்பிக்கறா? என்பதை ஒன்றரை மணி நேரம் திகிலுடன் சொல்லி இருக்கார்..   



http://i188.photobucket.com/albums/z58/annubis44/GhostSonCap1.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



 1. தெளிவான திரைக்கதை, மிகக்குறைவான பாத்திரப்படைப்புகள்.. எந்த அளவு திரைக்கதையில் கேரக்டர்ஸை குறைக்கறோமோ அந்த அளவு தெளிவு, புரிதல், ஆர்வம் வந்துடும் ( விதி விலக்கு - பொன்னியின் செல்வன் )


2. ஹீரோயின் பயம் கலந்த நடிப்பு டாப் ரகம்.. குறிப்பா பாத்டப்ல பிளேடால தற்கொலை செய்ய முயலும் சீன், தன் குழந்தையைப்பார்த்து தானே பயப்படும் சீன் என படம் முழுக்க ஹீரோயின் ராஜ்யம் தான்


3. பேய்ப்படமாகட்டும், திகில் படமாகட்டும்  பின்னணி இசை ரொம்ப முக்கியம்.. இந்தப்படத்துல கனகச்சிதமா பயமுறுத்தும் இசை போடப்பட்டிருக்கு.. 


4. அந்த சிறுமியின் மரணப்போராட்டம் செம திகில்.. அந்த 7 நிமிடக்காட்ட்சியில் ஒளிப்பதிவு, இசை, நடிப்பு 3க்கும் பலத்த போட்டி.. வென்றது அந்த சிறுமியின் நடிப்பு.. நீக்ரோ முகமாக இருந்தாலும் அட்டகாசமான நடிப்பு


5. லொகேஷன் செலக்சன் அழகு.. அந்த மரச்சிற்பங்கள் செய்யும் கலைஞனின் இடம் அசத்தல்.. அந்த மரம்.. காடு என ஆர்ட் டைரக்‌ஷன் செம.. 




http://images.movieplayer.it/2004/01/18/john-hannah-e-laura-harring-in-una-scena-del-film-ghost-son-38906.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. கணவனால் ஆபத்து என்பது தெரிந்ததும் ஹீரோயின் அந்த வீட்டை விட்டு வெளியேற ஓக்கே சொல்லிடறா.. ஆனா டாக்டர் இப்போ என்ன அவசரம்? விடிஞ்சதும் காலைல போய்க்கலாம்னு அசால்ட்டா சொல்றார்.. அது ஏன்? இவரே தான் சில காட்சிகளுக்கு முன்  “ இங்கே நீ இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்துதான்னு பேசறார்.. ஏன் இந்த முன்னுக்குப்பின்  முரண்?



2. ஹீரொயின் தன் குழந்தையை கொஞ்சும்போது அது அப்படியே கணவனாக உருமாறுவது , பின் இருவரும் கில்மாவில் ஈடுபடுவது என்னமோ மாதிரி இருக்கு.. அந்த காட்சி அமைப்பில் மாற்றம் தேவை.. 


3. ஒரு சீன்ல வீட்டில் நடக்கும் சின்ன விபத்தில் கண்ணாடி அலமாரி  உடைஞ்சு ஹீரோயின் சின்னத்தம்பி க்ளைமாக்ஸ் குஷ்பூ “ நீ எங்கே என் அன்பே?  பாட்டு பாடறப்போ கால் பூரா கண்னாடி மாதிரி எதையோ ஏத்திக்குவாரே அந்த மாதிரி ஆகிடுது.. பேண்டேஜ் போட்டுக்கறா.. அவளே சுய வைத்தியம்.  ஓக்கே , ஆனா அவ எப்படி பூ விழி வாசலிலே வில்லன் ரகுவரன் மாதிரி அந்த உபகரணம் வெச்சு நடக்க ஆரம்பிக்கறார்.. அது ஏது? தனி வீடு.. கானகம்.. அருகில் ஹாஸ்பிடல் இல்லை.. உடனே எப்படி அந்த கிட் கிடைக்கும்?



4. பேய்க்கணவனின் இலக்கு தன் மனைவி தானே? எதுக்காக சம்பந்தமே இல்லாம வேலைக்கார சிறுமியை  கொலை செய்யுது? ( சாமார்த்தியமா அந்த சீனை விபத்து மாதிரி காட்டினாலும் அது எடுபடலை)

5. ஹீரோயின் ஆரம்பத்துல கணவன் போன இடத்துக்கே போக நினைக்கறா.. தற்கொலை முயற்சி எல்லாம் செய்யறா.. ஆனா அவ  தன் கணவன் கூப்பிடும்ப்போது ஏன் மனசு மாறிடறா?ன்னு தெளிவா சில்லலை.. 


6. பேய்க்கு அபரிதமான சக்தி இருக்கு.. தன் மனைவியை கொல்ல வருது.. எப்போ மனைவி “ எனக்கு உன் மேல உண்மையான காதலே இல்லை,.” அப்டினு சொல்றாளோ அப்பவே அது மனசு உடைஞ்சு கிளம்பிடுது.. அவ்ளவ் நல்ல பேய் ஏன் அவளை அப்பப்ப டார்ச்சர் பண்ணுது? டார்ச்சர் பண்ற மாதிரி காட்டிட்டா அவளை கொலை பண்ணி இருக்கனும்.. நல்ல பேய் மாதிரி காட நினைச்சா டார்ச்சர் பண்ற சீன் இருக்கக்கூடாது. எதுக்கு இந்த ரெண்டும் கெட்டான் வேலை?






ஈரோடு வி எஸ் பி ல இந்தப்படம் பார்த்தேன்.. பெண்கள் , திகில் பட ரசிகர்கள் பார்க்கலாம்..  இந்தப்படம் வழக்கமான பர பரப்புள்ள திகில் படம் அல்ல. ஸ்லோவான ஸ்க்ரீன்ப்ளே தான்.. பொறுமையாக பார்ப்பவர்கள் மட்டும் பார்க்கலாம்..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoJf-AVq534w20VkCRFePMF08OREiVae8pYD-FZiibZSSh4WoCYjuNCo6hkpcD2Uwlro9pwCrELsPo6bjryPDHW0J_K4pfdtDrMQYs3TOP7e1J6RGQRb5FKAnmdhq0TQ-X0l0mtpPaakY/s400/ghostsonharring.jpg




Tuesday, April 03, 2012

ஒத்தைக்குதிரை -கொஞ்சம் திகில், கொஞ்சம் டஹில் - சினிமா விமர்சனம்

http://www.nanbargal.com/images/movies/tamil/othakuthirai.jpg

ஒரு கிராமம்.. அதுல வரிசையா சிலர் கொலை செய்யப்படறாங்க. கிராமத்து ஜனங்க எல்லாம் அது பேய் வேலைன்னு சொல்லிக்கறாங்க.. ஒரு பிரைவேட் டி வி சேனல் ஒரு குரூப்பை அனுப்பி நிலைமையை கண்டறிய ட்ரை பண்ணுது.. 

கிராமத்துல பஞ்சாயத்து தலைவர் அவங்களுக்கு தங்க உதவி பண்றார். டி வி டிடெக்டிவ் குரூப் 4 பேரு. 3 பசங்க, ஒரு பொண்ணு. கிராமங்கள்ள சந்தேகப்படும்படி தெரியற இடங்கள்ல ஹிடன் கேமரா வைக்கறாங்க ( எந்த குரங்கும் தூக்கிட்டு போகல)

ஹீரோவோட ஆள் ஆல்ரெடி இதே கிராமத்துல இதே டிடெக்டிவ் வேலைக்காக இங்கே வந்து மாயம் ஆகிட்டா .. ஹீரோ உடனே ஒரு ஐடியா பண்றாரு.. தன் ஆளோட தங்கச்சி அதாவது வருங்கால கொழுந்தியா அதே சாயல் பொண்ணு.. கிராமத்துக்கு வர வைக்கிறார்.. 

வில்லன் பஞ்சாயத்து தலைவன் தான்.. நைட் டைம் வில்லன் கார்ல வெளீல போறப்ப ஹீரோவோட கொழுந்தியாவை அவன் பார்வைல பட வைக்கிறாங்க.. வில்லன் திகில்ல உறைஞ்சிடறான்..


http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_09_w800_h537_600024.jpg

 இன்னா மேட்டர்னா வில்லன்க்கு ஜாதி வெறி ஜாஸ்தி.. வில்லனோட பொண்ணு யாரையோ கீழ் ஜாதி ஆளை லவ் பண்ணி இருக்கு. 2 பேரும் ஊரை விட்டு ஓடிப்போறப்ப வில்லன் வழி மறைச்சு பளார்னு ஒரு அறை விட்டாரு.. அதுல அவர் மகள் க்ளோஸ். 

எதேச்சையா நடந்த இந்த விபத்தை  வில்லன் பேய் அடிச்சதா கிளப்பி விட்டு எஸ் ஆகிடறாரு.. தன் மகளே போய்ட்டா.. என்னமோ ஆகட்டும்னு விட்டுட வேண்டியதுதானே.. அவ காதலனையும் அடிச்சே கொலை பண்றாரு.. அந்த கொலையை ஹீரோவோட ஆள் பார்த்துடறா,. அதனால  அவளையும் போட்டுத்தள்ளிடறாரு.. 

 இப்போ ஹீரோ தன் கொழுந்தியாவை வர வெச்சதும் வில்லனுக்கு குழப்பம். 

என்ன நடக்குது.?  என்பது  மீதி திரைக்கதை ( இப்போ நான் சொன்னதே முக்கா வாசி திரைக்கதை ஹி ஹி )

 அம்புலி படத்தை நினைவு படுத்தினாலும் இதுவும் நல்லதொரு திகில் பட முயற்சியே.. 

 ஆனா புது முகங்கள் செலக்‌ஷன் தான் சுமார் ரகம். ஹீரோ சுமாரா இருந்தா எப்படியோ போகட்டும். அதைப்பற்றி நமக்கென்ன கவலை.. லட்சக்கணக்குல செலவு பண்ணி படம் எடுக்கறவங்க கதைக்கு அடுத்ததா முக்கியத்துவம் தர வேண்டியது ஹீரோயின் செலக்‌ஷனுக்குத்தான்.. சுமார் ஃபிகரை ஹீரோயினா போட்டா எப்படி?

படத்துல  2  ஹீரோயின். டி வி டிடெக்டிவ் குரூப்ல ஒரு பொண்ணு அது 50 மார் ஃபிகர்.. ஹீரோவோட லவ்வர் 54 மார்க் ஃபிகர். செம போர் ஹி ஹி

http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_32_w800_h537_600024.jpg


படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. எப்படி எல்லா ஆண்களால் ராமனா இருக்க முடியாதோ, எப்படி எல்லா பொண்ணுங்களும் கண்ணகியா இருக்க முடியாதோ ,அதே மாதிரி எல்லா அரசியல்வாதிகளூம் நேர்மையா இருக்க முடியாது

2. XQS மீ



நான் ஒண்ணும் எச்சக்கலை மூர்த்தி இல்லை.. என் பேரு ஆறுச்சாமி

3. தண்ணியைப்போட்டாலும் குடிகாரங்க எப்பவும் உண்மையைத்தான் சொல்வாங்க.. 

4. பேய், பிசாசுல உங்களூக்கு நம்பிக்கை இருக்கா? பெரியவரே. 

 உங்க அனுபவத்துல இல்லாத ஒரு விஷயத்தை ப்பற்றி பேசுனா நீங்க நம்பப்போறதில்லை... 

5. பேய் இருக்கறது உண்மைன்னா அது இன்னொரு பேயை கொல்ல வேண்டியதுதானே , ஏன் மனுஷனை கொல்லனும்? ( தன் இனத்தை கொல்லாத இனமோ என்னவோ?)


6. அவன் நடந்து வர்றப்ப பேய் நடந்து வர்ற மாதிரியே இருக்கு

 இருடி உன்னை வந்து வெச்சுக்கறேன்

 அதுக்கு வேற ஆள் இருக்கு.. 

7. ம்.. சொல்லுப்பா... 

 என்னது? அப்பாவா?


 அது வேற அப்பா... 

8. பொண்ணுங்க இருக்காங்களே மேரேஜ்க்கு முன்னே நாமளா வலிய போய் பேசுனாலும் கண்டுக்க மாட்டாங்க.. மேரேஜ்க்குப்பிறகு அவங்களா நம்ம கிட்டே வந்து வந்து பேசி தொந்தரவு பண்ணுவாங்க.. 

9.  இந்த மூஞ்சிக்கே ஒருத்தன் சிக்கி இருக்கான்.. எனக்கு ஒருத்தன் சிக்காமயா போயிடுவான்.. 

10. அறிவாளி, புத்திசாலின்னு சொல்றீங்களே, அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?

டியர்.. அது அந்த பேருக்கும் தான் தெரியும்.. நமக்கென்ன அதை பற்றி


http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_25_w800_h537_600024.jpg


11. பெத்தவங்களை பாரமா நினைக்கக்கூடாது.. நம்ம உடம்புல ஒரு பாகமா நினைக்கனும்..

12. நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன்

எந்த டிரஸ் போட்டாலும் உனக்கு  நல்லாத்தான் இருக்கும்.. 

 அப்போ டிரஸ்சே போடலைன்னா?

13. என் பொண்டாட்டி என்ன காரியம் பண்ணிட்டா தெரியுமா?

 என்னய்யா பிரச்சனை? எவன் கூடயாவது தப்பு பண்ணிட்டாளா?

 அப்படி பண்ணி இருந்தாக்கூட பரவாயில்லையே?

 அடப்பாவி. நீ  எல்லாம் ஒரு புருஷனா? என்ன தான் பண்ணித்தொலைச்சா?

 எனக்குன்னு வாங்கி வெச்சிருந்த குவாட்டரை ஒரு சொட்டுக்கூட எனக்கு மிச்சம் வைக்காம அவளே  எடுத்துக்குடிச்சுட்டா..

14. என்ன ஒரு விசித்திரம்னா இந்த உலகத்துல காதலை நம்பறதில்லை, ஆனா சாமியை நம்பறாங்க

15. ஒண்ணா வாழ்ந்தோம்னு பேர் எடுப்போம், இல்லைன்னா ஒண்ணா செத்தோம்னு பேர் எடுப்போம்..


http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_08_w800_h537_600024.jpg

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. முழுக்க முழுக்க ஒரே ஒரு கிராமத்திலேயே முழுப்படத்தையும் எடுத்து காசை மிச்சம் பண்ணியது.. ஸ்க்ரிப்ட்டில் நம்பிக்கை வைத்து பெரிய நடிக நடிகைகள் யாரும் இல்லாமல் படம் எடுத்தது

2. ஹீரோயின் இருவரும்  படம் பூரா திருப்பூர் பனியன் அல்லது டி சர்ட் மட்டும் அணிந்து வருவது..  அதிலும் 42 சைஸ் அணீய  வேண்டிய இருவரையும் 40 எனும் எல் சைஸ் கொடுத்து அணீய வைத்தது .. ஹி ஹி

3. தோளோடு தோளாய் சேரும் கைகள், என் காதல் என 2 பாடல்களை கண்ணியமாக எடுத்தது.. ஆனால் இந்தப்படத்துக்கு பாடல்களோ, டூயட்டோ தேவை இல்லை என்பது வேறு விஷயம்

4. பின்னணி இசை பிரமாதப்படுத்தாவிட்டாலும் ஓக்கே தான்.. பயப்படுத்த வேண்டிய இடத்தில் பயப்படுத்தி விறு விறுப்பை கூட்டும் இடத்தில் திரில்லிங் மியூசிக் ..


http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_06_w800_h537_600024.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1.கதை நடக்கற இடம் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ள ஒத்திக்குதிரை எனும் கிராமம்.. அங்கே கார்ல வர்ற  ஆள் கிட்டே போலீஸ் லைசன்ஸ் , ஆர் சி புக் எல்லாம் கேட்குது.. கார் தமிழ் நாடு ரிஜெஸ்டரேஷன்... ஆனா அவர் ஆர் சி புக் காட்டாம ஏதோ அட்டை ஒண்ணை காட்றாரு.. கர்நாடகா ஸ்டேட் ல தானே அட்டை வந்துச்சு? தமிழ் நாட்ல இன்னும் புக் சிஸ்டம் தானே?

2. ஒரு டிராஃபிக் கான்ஸ்டபிள் 10 நிமிஷம் ஒரு ஆளை சும்மா விசாரிச்சுட்டு இருக்கார்.. அப்போ தான் ஜஸ்ட் லைக் வந்த எஸ் ஐ “ என்னப்பா ரொம்ப நேரமா அவன் கிட்டே விசாரிச்சுட்டு இருக்கே?” அப்டினு கேட்கறாரே? அது எப்படி?

3. வில்லன் தன் மகளை ஓங்கி ஒரு அறை விட்டதும் மக செத்துடறா.. உடம்புல எந்த காயமும் இல்லை... பார்க்க ஆள் தூங்கிட்டு இருக்கற மாதிரியோ, மயக்கம் அடைஞ்ச மாதிரியோதான் இருக்கு.. ஆனா அப்போ அந்த வழியா வர்ற நெல்லை சிவா  “ ஆள் அவுட்”னு உடனே எப்படி முடிவு பண்றார்? ரத்தம் பார்த்தாரா? மூக்குல கை வெச்சு மூச்சு நின்னுடுச்சா?ன்னு பார்த்தாரா?

4. ஹீரோவோட லவ்வரை வில்லன் கொலை பண்ணி புதைச்சுடறார்.. 9 நாட்களுக்குப்பின் ஹீரோ அண்ட் கோ அந்த டெட் பாடியை  குழி தோண்டி எடுக்கறாங்க.. அப்போதான் புதைச்ச மாதிரி ஃபிரஷ்ஷா இருக்கே? அது எப்படி? ( குமட்டும் வாசம் அல்லது அழுகிய உடல் தானே காட்டனும்?)

5.  க்ளைமாக்ஸ் வரை நீட்டா போன  கதைல திடீர்னு சம்பந்தமே இல்லாம ஆவியை எதுக்கு கொண்டு வந்தீங்க?

6. கொலையாளியா ஊர்ப்பெரிய மனுஷரே இருக்கறப்ப அவரே அந்த டீம்க்கு ஏன் எல்லா வசதியும் பண்ணித்தரனும்?அவர் மேல சந்தேகம் வரக்கூடாதுன்னா? தேவையே இல்லையே..


http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_35_w800_h537_600024.jpg


 எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே

 சி.பி  கமெண்ட் - த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம், பெண்களும்

 ஈரோடு தேவி அபிராமியில் படம் பார்த்தேன்

Wednesday, March 14, 2012

THE WOMAN IN BLACK -ஹாலிவுட் திகில் சினிமா விமர்சனம்


http://www.covershut.com/covers/The-Woman-In-Black-2012-Front-Cover-64080.jpg
திகில் படம், பேய்ப்படம்னா பேன்னு கத்தறது, ரத்தம் குடம் குடமா கொட்டறதை காட்றது,கோரைப்பல்லோட பேய் உருவங்களை காட்டறதுன்னு நிறைய பேர் தப்பான டெஃபனிஷன் வெச்சிருக்காங்க.. அதை எல்லாம் தவிடு பொடி ஆக்கி ரொம்ப டீசண்ட்டா ,கண்ணியமா ( 2ம் 1 தான்) ஒரு திகில் படம் கொடுத்திருக்காரு டைரக்டர்.. அவருக்கு முதல்ல வாழ்த்துகள்.. 

இந்தப்படம் ஃபாரீன்ல மெகா ஹிட்டாம்.. நம்ம ஊர்ல எந்திரன் ஏற்படுத்திய பரபரப்பை இது அங்கே ஏற்படுத்தி இருக்கு

படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல 3 சின்னப்பொண்ணுங்க அமைதியா வந்து முகத்துல எந்த வித உணர்ச்சியையும் காட்டாம பல அடுக்கு மாடி ஜன்னல் வழியா எட்டி குதிச்சு தற்கொலை செஞ்சுக்குதுங்க..

http://www.filmcritic.com/assets_c/2012/02/womaninblack-cropped-proto-filmcritic_reviews___entry_default-thumb-560xauto-42444.jpg

அந்த கிராமத்துல ஏதோ சாபம்.. குழந்தைங்கள் வரிசையா சாகறாங்க..ஹீரோ ஒரு வக்கீல்.. அந்த குழந்தை இறந்த எஸ்டேட் செட்டில்மெண்ட் சம்பந்தமா ஹீரோ அங்கே போறார் . ஹீரோவுக்கு, ஒரு குழந்தை..சம்சாரம் ஆல்ரெடி டெட்.. ஒரு கார்டியன் லேடி( அதாவது நம்ம ஊர் பாஷைல சொல்லனும்னா வேலைக்காரி கம் பணியாள்) அவங்களை ஊர்ல விட்டுட்டு 2 நாள்ல வந்துடறேன்னு சொல்லிட்டு லண்டன்ல இருக்கற அந்த அமானுஷ்ய கிராமத்துக்கு ஹீரோ போறார்..



அவருக்கு அங்கே பல திடுக்கிடும் அனுபவங்கள் கிடைக்குது. பல விசாரணைக்குப்பிறகு குழந்தையை இழந்த ஒரு பெண்ணின் சாபம்  அல்லது பழி வாங்கல் தான் இதெல்லாம் அப்டிங்கறதை கண்டு பிடிக்கறாரு.. அந்த பெண் பேய் தான் விமன் இன் பிளாக்  ( அந்த ஃபிகரு பிளாக் கலர்லயும் இல்லை , சொந்தமா ஒரு பிளாக் ஸ்பாட்டும் வெச்சிருக்கலை, யாரையும் பிளாக் பண்ணிடுவேன்னு மிரட்டலை,ஆனாலும் சும்மா ஒரு எஃபக்ட் தர அப்படி டைட்டில்)

2 நாள் முடியுது.. இருந்தாலும் ஹீரோ கிளம்பலை.. பொதுவா இந்த சம்சாரங்க வேலை என்னான்னா புருஷன் எங்கே இருக்கானோ அங்கே போய் அவன் உயிரை எடுக்கறதுதான்.. அவனை நிம்மதியா தனியா இருக்க விட மாட்டாங்க.. ஆக்சுவலா அவங்க வந்த பிறகு தான் அவன் நிம்மதியே போகும்..இந்த சம்பிரதாயம் ஆல் ஓவர் வோர்ல்ட்லயும் இருக்கு.. சம்சாரம் மாதிரியே அந்த கார்டியன்  ஹீரோவை தேடிட்டு குழந்தையை கூட்டிக்கிட்டு அந்த கிராமத்துக்கு வந்ததும் ஹீரோ பதட்டம் ஆகிடறான்.. ஏன்னா அங்கே இருக்கற பேயோட வேலையே குழந்தைகளை தற்கொலை செய்ய வைக்கறதுதான்

 ஏன்னா ஹீரோவோட குழந்தையோட உயிருக்கு எந்த பாதிப்பும் வந்துடக்கூடாதே?அவசர அவசரமா அவன் இடத்தை காலி பண்றான்.. ரயில்வே ஸ்டேஷன்ல என்ன நடக்குதுங்கறதை திக் திக் திகிலோட பார்க்கலாம்.. 

ஹாரிபாட்டர் படத்துல சின்னப்பையனா வந்து  பலரது உள்ளங்களை கொள்ளை அடிச்சு, ஃபாரீன் ஃபிகரு ரெண்டை அட்டர் டைம்ல  கரெக்ட் பண்ணின டேனியல் ராட் கிளிஃப் தான் ஹீரோ. அதுல பால் மணம் மாறாத பாலகனா வர்றவர் இதுல அமலா பால்க்கே அண்ணன் மாதிரி கொஞ்சம் ஓல்டு கெட்டப்ல ( 25 வயசு) வர்றார்.. நல்ல நடிப்பு.. அவரை இன்னும் யூத்தாவே காட்டி இருக்கலாம்.. இந்தக்காலத்துல 18 வயசுலயே பிஞ்சுலயே பழுத்துடுதுங்களே.. 

 டைரக்டர் ஹீரோவை அப்படி ஏஜ்டு பையனா காட்ட முக்கிய ரீசன் ஹீரோ 8 வயசுப்பையனின் அப்பான்னு காட்ட வேண்டிய சூழல் தான்.. ஓக்கே

http://horrornews.net/wp-content/uploads/2011/12/the-woman-in-black-movie-2012-3.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  கிராமம் வரும் ஹீரோ அந்த ஹோட்டல்ல தங்கிட்டு நைட்ல கதவு சாவித்துவாரம் வழியா பார்க்க அதே மாதிரி பேயும் பார்ப்பது செம திகில்

2. ஹீரோவுக்கு அந்த கேஸ் பற்றிய துப்பு கிடைப்பது குழந்தையை இழந்த அம்மாவின் லெட்டர் மூலமா.. அந்த லெட்டர்ஸை அப்படியே ஆடியன்ஸ் கிட்டே பகிர்ந்ததன் மூலம் டெரர் டெம்ப்போ ஏத்துனது.. 

சாம்ப்பிள் -a  என்னை மெண்ட்டல்-னு சொல்லி என்னை என் மகள் கிட்டே இருந்து பிரிச்சு வெச்சே.. 

b என்னதான் நீ பிளான் பண்னாலும் என்னை என் மக கிட்டே இருந்து பிரிக்க முடியாது

c. என் மகளை நீ புதைக்கக்கூட இல்லை.. உனக்கு நரகம் தான் கிடைக்கும்.. 

3. பின்னணி இசையில் அடக்கி வாசித்தது.. பெரும்பாலான படத்தை சைலண்ட் மோடில் கொண்டு சென்று தேவையான இடத்தில் மட்டும் அதிரடி இசையை உபயோகித்த லாவகம்..


4. த சிக்ஸ்த் சென்ஸ் படத்தை நினைவு படுத்தினாலும் உறைய வைக்கும் க்ளைமாக்ஸ் காட்சி ட்விஸ்ட்

5.  வீட்டில் உள்ள குருவிகுஞ்சை  ஹீரோ எடுத்து அதன் கூட்டில் விடும்போது மடார் என்று  காகம் வந்து ஹீரோ முகத்தில் மோதிச்செல்லும் சீன்   சவுண்ட் எஃபக்ட், ரீ ரெக்கார்டிங்க், எடிட்டிங்க் கட் எல்லாம் செம

6.  ஹீரோ படுத்திருக்கும் கட்டில் மெத்தையில் கொஞ்சம் கொஞ்சமாய் ரத்தம் பரவி அப்படியே குழந்தையாக எழும்  பேய் செம திக் திக் சீன்

7. ஃபயர் ஆக்சிடெண்ட்டில்  சிக்கி நெருப்புக்கிடையில் மாட்டிக்கொண்ட குழந்தை டக் என்று பெட்ரோல் கேனை உடைத்து தனக்கு தானே தீ வைத்துக்கொள்ளும் உறைய வைக்கும் காட்சி

8. குழந்தை நலன் விரும்பி பேயை வர வைக்க ஹீரோ ரூமில் உள்ள எல்லா பொம்மைகளையும்  சாவி கொடுத்து இயக்கி வர வைக்கும் தந்திரம்.. அந்த சீனில் மெல்ல மெல டெம்ப்போ ஏற்றிய விதம் மார்வலஸ்

http://paracinema.net/wp-content/uploads/2012/02/The-Woman-in-Black-front.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள் ( அவருக்கு தமிழ் தெரியாது, எனக்கு இங்கிலீஷ் தெரியாது, ஐ ஜாலி, என்ன வேணாலும் கேட்கலாம்)


1. ஹீரோ எங்கே வேலை செய்யறார் என்பதே அவர் கார்டியன்க்கு தெரியாது, ஹீரோ போகும்போது எந்த ஊர்க்கு போறேன்னு சொல்லாம போறாரு, பின் எப்படி சரியாக அவர் அங்கே வந்தார்?

2. கிராமத்தில் அமானுஷ்ய சக்தி இருக்குன்னு  ஹீரோவுக்கு தெரிஞ்சுடுது.. தான் வீட்டை விட்டு கிளம்பறப்ப  2 நாள்ல வந்துடறதா சொல்லி இருக்கார், அவர் ஏன் கார்டியன்க்கு ஃபோன் பண்ணி என்னை தேட வேண்டாம், வேலை முடிய இன்னும் நாள் இருக்குன்னு சொல்லலை?

3. குழந்தை பாசத்தால் தவிக்கும் பேய் எதுக்காக குழந்தைகளை குறி வெச்சு கொல்லனும்? தன் கணவன் போல அயோக்கிய ஆண்களை கொன்னா  அதுல லாஜிக் இருக்கு.. தான் எப்படி மழலையை இழந்து கஷ்டப்படறோமோ அதே போல் ஊர் மக்கள் அனைவரும் கஷ்டப்படட்டும் என்பது மோசமான லாஜிக்கா இருக்கே?

 படத்தில் மனதைக்கவர்ந்த ஒரே வசனம் 


சமூக சேவை செய்ய இங்கே யாரும் வர்லை.. சம்பாதிக்க வந்திருக்கோம்.. அதை முதல்ல ஞாபகம் வெச்சுக்கிட்டு அப்புறம் வேலை செய்..

http://mimg.sulekha.com/english/the-woman-in-black/stills/the-woman-in-black-movie-013.jpg
வழக்கமான திகில் ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்காமல் போகலாம், ஆனால் ஏ செண்ட்டர் ரசிகர்களுக்கு ,வித்தியாசமான திகில் பட விரும்பிகளுக்கு  மிகவும் பிடித்தமான படமாக இருக்கும்.. ஆண்கள், பெண்கள் அனைவரும் பார்க்கலாம்..

 குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் சீன்கள் நிறைய இருப்பதால் மனோ ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் இந்தப்படம் பார்ப்பதை தவிர்க்கவும்

ஈரோடு அண்ணா தியேட்டரில் படம் பார்த்தேன்



Saturday, October 01, 2011

முரண் - த்ரில்லிங்க் , ட்விஸ்ட்,மர்டர் - சினிமா விமர்சனம்


 http://tamil.way2movies.com/wp-content/uploads/2011/09/muran_review_cheran_muran_movie_review-300x254.jpg
அன்பே சிவம் படத்தில் வருவது போல் 2 மாறுபட்ட கேரக்டர்கள் சேரன் + பிரசன்னா ,இருவரும் ஒரு கார் பயணத்தில் எதேச்சையாக இணைகிறார்கள்.தனது காதலியை தன் தந்தையே கெடுத்து அவளது தற்கொலைக்கு காரணம் ஆகி விட்டார், அவரைப்பழி வாங்க வேண்டும் என்ற வெறியுடன் பிரசன்னா, கோடீஸ்வரியாக இருந்தாலும் தன் மனைவி தன்னை மதிக்காமல் பார்ட்டி, குடி என ஊர் சுற்றுகிறாளே என்ற ஆதங்கத்தில் வேறொரு காதலியுடன் தன் கவனத்தை திருப்பிய சேரன் இருவரும் எந்தப்புள்ளியில் ஒருவருக்கொருவர் உதவி செய்ய முடியும்?



எஸ்.. அதே தான்...பிரசன்னாவின் அப்பாவை சேரன் கொலை செய்வது, சேரனின் மனைவியை பிரசன்னா கொலை செய்வது.. யாருக்கும் சந்தேகம் வராது.. இது தான் பிரசன்னாவின் திட்டம்.. ஆனால் இதற்கு சேரன் உடன் பட வில்லை..


விறுவிறுப்பான திரைக்கதை மூலம் பல ட்விஸ்ட்களை சந்தித்து கடைசியில் என்ன ஆகிறது என்பதை வெள்ளித்திரையில் காண்க.. கதையோட  பேசிக் நாட் (BASIC KNOT) அமரர் சுஜாதாவின் எதையும் ஒரு முறை என்ற நாவலில் இருந்தும், திரைக்கதையை ஹாலிவுட்டின் திகில் கதை மன்னன் ஹிட்ச்சாக்-ன் STRANGERS ON THE TRAIN படத்தில் இருந்தும் சுட்டிருந்தாலும் , படத்தின் இயக்குநர் தமிழுக்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்.. பிரசன்னாவின் காதலி அவரது தந்தையால் ரேப் செய்யப்படவில்லை,பிரசன்னாதான் ரேப் செய்தார் என்ற ட்விஸ்ட் எழுத்தாளர் சுபாவின் நீ நான் நிலா நாவலில் இருந்தும் சுடப்பட்டுள்ளது.

யதார்த்த நாயகன் என்ற பெயர் எடுத்த சேரன் என்னதான் அண்டர்ப்ளே ஆக்டிங்க்கில் அசத்தினாலும், அசால்ட்டாக நடித்து பெயர் தட்டிக்கொண்டு செல்வதென்னவோ பிரசன்னா தான்.. அஞ்சாதே படத்துக்குப்பின் நல்ல வில்லன் வாய்ப்பு.. அவரது பாடி லேங்குவேஜ், வசன உச்சரிப்பு எல்லாம் அட்டகாசம்.. ஆர்யாவுக்குப்பிறகு தமிழில் அசால்ட்டாக நடிக்க ஒரு ஆள் ரெடி.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZI94K623jmkk-fZPC3IBMppGws8NNtYOf5PWzAo6gf5ruyMbjo2M_NMTHdWjnUk4SBTNvXD22q6GLHJjHtiXNmDt-xoOictx7YL_LO5UJGpkb6HfrxdqkpA8CQrz50QeNZVj6SSMQzfof/s1600/muran+movie+pictures.jpg
படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1. அப்பன் காசை அழிக்கறதுக்குன்னே ஒருத்தன் இருப்பான் இல்லையா? அதுல இவனும் ஒருத்தன்...

2. சாதாரண லெமன் சோடா .. எவ்ளவ் மப்புல இருந்தாலும் இவன் தமிழ்லயே தெளிய வெச்சுடுவான்

3. லைஃப்ல த்ரில்லிங்கா ஏதாவது செய்யனும்..

அப்படி செய்ய நான் ஒண்ணும் முட்டாள் இல்லை.. 

அப்படி செய்யாம இருக்க நான் ஒண்ணூம் கோழை  இல்லை..
4. நீங்க இப்போ பார்க்கப்போறது பயங்கர ஆக்சிடெண்ட்.. அல்லது மிரேக்கிள்..


5.  நான் எப்பவுமே லக்கை நம்பாதவன்.. அதுக்கு எல்லாம் கட்ஸ் வேணும்.. 

அப்போ என்னை தைரியம் இல்லாதவன்கறியா?

6. உங்க ஒயிஃபை ரொம்பவே லவ் பண்றீங்க போல.. 

சாரி..   அவள் என் ஒயிஃப் இல்லை..

உங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னு நினைச்சேன்...


மேரேஜ் ஆகலைன்னு சொல்லவே இல்லையே.. அவ எனக்கு ஒயிஃபா நடந்துக்கலை.. 

7.  லேடி - சார்.. நீங்கதான் என்னோட முதல் கஸ்டமர்.. 

வாட்?

ஐ மீன், இந்த சோப் பவுடர் வாங்க.. 

8. சார்.. உங்க வீட்ல லேடீஸ் இல்லையா?

எஸ்.. இருக்காங்க.. ஆனா இப்போ இல்லை.

சார்.. உங்க துணியை நீங்க தானே வாஷ் பண்றீங்க..?எப்டி கண்டுபிடிச்சேன் பார்த்தீங்களா?

9. ஏம்மா.. இந்த அபார்ட்மெண்ட்ல இத்தனை பேர் இருக்கறப்ப என்னை மட்டும் ஏன் செலக்ட் பண்ணுனே?

 வேற யாரும் என்னை உள்ளே வர அலோ பண்ணலை சார்.. 

10.  நைட் லேட்டா தண்ணி அடிச்சுட்டு இப்படி வீட்டுக்கு வர்றியே, நீ எல்லாம் ஒரு பொம்பளையா?

அதை நீ கேட்காதே , உனக்கு எந்த தகுதியும் இல்ல.. என்னை விட நாலுல ஒரு பங்கு கூட சம்பாதிக்க கையாலாகாத ஆம்பளை நீ...





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiK6EMMSa3mnqyy-f3aNYLXylYpLJOg1KkMjxkjffZRGaLexLFsUiIQVklckiCDIK4Dp2hJO6vr4NsmDktx4lzqCM-krIhWavfKQdkJEUzwByK6PbnbpYALe2w-ozL5HIaqZwiSx7S3mEnb/s1600/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D.jpg

11.  என் கிட்ட அவ என் ஃபோன் நெம்பர் வாங்குனா... எனக்கு அவ கால் பண்ணுனா,அவளுக்கு நான் கால் பண்ணுனேன்.. 2 பேரும் லவ்வ ஆரம்பிச்சுட்டோம்...

12. உங்க கிட்டே ஒரு கஷ்டமான கேள்வி கேட்கப்போறேன்.. உங்க ஒயிஃபை நீங்க லவ் பண்றீங்களா?

விதி என் லைஃப்ல விளையாண்ட மாதிரி யார் லைஃப்லயும் விளையாடக்கூடாது..

13. ஹாய்... நீ அழகா இருக்கே.. அது உனக்கு தெரியும்.. ஆனா எனக்குத்தெரியும்கறது உனக்குத்தெரியனும் இல்லையா? அதான் சொன்னேன்.. இதை நான் தான் உன் கிட்டே முதல்ல சொல்லி இருப்பேன்னும் நான் நினைக்கலை.. ( டேய், என்னதாண்டா சொல்ல வர்றே? )

14.  உன்னை மாதிரி பணக்காரப்பசங்களுக்கு என்னை மாதிரி பொண்ணுங்க வெறும் ஃபன் தான்..

15.  ஆம்பளைன்னாலே ஒரு இண்டிவிஜாலிட்டி வேணும்.. அப்பன் காசுல உக்காந்து சாப்பிடக்கூடாது.. 

ஏய்.. யார்ட்டடி பேசிட்டு இருக்கே?

யார்ட்ட பேசுனா என்ன? சரியாப்பேசறேனா? இல்லையா?

16.  என்னால இதை ஜீரணிக்கவே முடியலை./..

ஏன், இன்னும் சாப்பிடவே ஆரம்பிக்கலையே? எப்படி ஜீரணம் ஆகும்?

டோண்ட் ஜோக்.. நீங்க சொன்னதை ஜீரணிக்கவே முடியலைன்னு சொன்னேன்.. 

17.  நான் இப்படி ஒரு காரியம் பண்ணுனேன்னு லாவண்யா கிட்டே சொன்னா அவ நம்பவே மாட்டா...

சொல்லப்போறீங்களா?

நோ..

18.  உங்க மனைவியை கொலை பண்ணனும்னு உங்களுக்கு எப்பவாவது தோணி இருக்கா?

இல்லை..

தோணி இருக்கும்.. ஏன் பயப்படறோம்னா விளைவுகள்.. அதனால அப்புறம் போலீஸ்.. கேஸ், ஜெயில் இதான் பயம்..  வீ ஆர் ஸ்மார்ட் பியூப்பிள்..

19.  புரிஞ்சுக்காத பொண்டாட்டி இருந்தும் உங்க காதலி கூட நீங்க  வாழலை.. ஆனா புரிஞ்சுக்கற புருஷன் இருந்தும் உங்க மனைவி உங்க கூட வாழலை..

20.  அதுல ஒரே ஒரு பிராப்ளம் இருக்கு.. நீங்க ஷூட் பண்னப்போற அதே ரோட்ல தான் கமிஷனரும் வாக்கிங்க் வர்றார்.. 



http://cinema.dinakaran.com/cinema/CineGallery/Kollywood/Movie/Muran/vm-02.jpg

21. ஏய்.. இங்கே பாருடி.. உன் கிட்டே இருந்த அழகு திமிர் 2ம் எனக்கு பிடிச்சிருந்தது... இப்போ மேட்டர் ஓவர்,. என் த்ரில் குறைஞ்சிடுச்சு.. 

22. இங்கே பாரு... 24 வயசு வரைக்கும் கோடீஸ்வரனா வாழ்ந்துட்டு திடீர்னு பிச்சைக்காரனா என்னால வாழ முடியாது.. அதான் அப்பனையே போட்டுத்தள்ள முடிவு பண்ணிட்டேன்.. 

23. உன்னால முடிஞ்சதை பண்ணிப்பாருன்னு சவால் விட்டீங்க..  நான் பண்ரேன்.. நீ பாரு.. 

24. வாழ்றப்ப  யாரோட பரிதாபத்தையும் சம்பதிக்காம வாழறவன் வேஸ்ட்.. 
http://www.tamilactresspics.com/new-gallery/plog-content/images/tamil-movies/muran/muran_movie_new_stills_3080.jpg


இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. சேரனின் ஃபிளாஷ்பேக் கதைக்கு பி கே பி யின் நாவல் கரு, பிரசன்னாவின் ஃபிளாஷ்பேக்கிற்கு சுபாவின் கதைக்கரு, படத்தின் மெயின் நாட்டிற்கு (KNOT) சுஜாதாவின் கதைக்கரு என இயக்குநர் ரொம்பவே ஹோம் ஒர்க் பண்ணி தெளிவாக திரைக்கதை அமைத்திருக்கிறார்.. 

2.  இதுவரை என்னை தீண்டியதில்லை பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் கவிதை.. அதே போல் நான் கண்டேன் நேற்று இல்லா இன்று  பாடல் வரிகளும் லொக்கேஷன்களும் அழகு..

3. சேரன், பிரசன்னா இருவருக்குமான வாய்ப்புகள், கதாபாத்திரத்தின் தன்மை எல்லாம் அளந்து வைத்திருப்பது போல் சம வாய்ப்பு.. 

4. இடைவேளைக்குப்பின் கதை எப்படி பயணிக்கும் என்பதை எளிதில் யூகிக்க வைக்காத திரைக்கதை..

5. பின்னணி இசை, ஒளிப்பதிவு இரண்டும் இந்த மாதிரி   த்ரில்லர் படத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து பயன்படுத்திய விதம்.. சபாஷ்!!

http://mimg.sulekha.com/tamil/muran/stills/muran-stills-0204.jpg

இயக்குநரிடம் சில  கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்


1. சேரனின் மனைவியின் சகோதரன் ஒரு இன்ஸ்பெக்டர்.. அவருக்கு சேரன் மீது டவுட்.. ஓப்பனாக கேட்கிறார்.. கொலை செஞ்சியா? என, விரைவில் ஆதாரத்துடன் பிடிப்பேன் என்கிறார்.. ஆனால் அந்த இன்ஸ்பெக்டரே கொலை ஆன பின்னும் போலீஸ் நிர்வாகம் எப்படி சேரனை சந்தேகப்படவில்லை?

2.  பிரசன்னா செமயா பிளான் பண்ணி சேரனின் மனைவி, இன்ஸ்பெக்டர் என இருவரையும் கொலை செய்பவர் அதே போல் வேறு ஏதாவது பிளான் பண்ணி அப்பாவை கொன்றிருக்கலாமே? ஏன் படம் பூரா சேரன் பின்னாலயே தொங்கிட்டு இருக்கனும்?

3. கதைப்படி பிரசன்னா ஒரு லேடீஸ் செலக்டர். அதாங்க பொம்பள பொறுக்கி.. சேரனின் மனைவி ஒரு கில்மா லேடி.. சேரனின் மனைவியை கொலை செய்ய 2 மாசம் அவரை ஃபாலோ செய்யும் பிரசன்னா அவரை ஏன் யூஸ் பண்ணிக்கலை?

4. கதைல ஒரு டர்னிங்க் பாயிண்ட் வேணும்கறதுக்காக சேரனின் காதலி பிரசன்னாவுக்கு காதலி மாதிரி ஒரு பிட்டை டவுட் வர்ற மாதிரி போட்டு ஏன் இயக்குநர் பேக் அடிச்சுட்டார்? அது இன்னும் செம த்ரில்லிங்காவும், ட்விஸ்ட்டாவும் இருந்திருக்குமே?

5. சேரன் வீட்டுக்குள்ள தெரியாம ரிவால்வரால நிலைக்கண்ணாடியை சுடறப்ப காதலி வீட்டுக்கு வர்றாங்க... என்ன சத்தம்?னு கேட்டதுக்கு கண்ணாடி விழுந்து உடைஞ்சிதுன்னு அவர் சமாளிக்கிறார்..காதலி வீட்டுக்குள்ள வந்தும் அந்த உடைஞ்ச கண்ணாடியை கண்டுக்கவே இல்லை.. குண்டு சத்தம் பற்றி எதுவும் கேட்கலை.. ஏன்?

6.  பிரசன்னாவின் காதலியின் தோழிக்கு பிரசன்னாவின் கேரக்டர் தெரிந்தும் அவ ஏன் தோழியை எச்சரிக்கை பண்ணலை?

7. தனது எல்லா வண்டவாளங்களும் தெரிந்த காதலி லிண்டாவின் தோழியை பிர்சன்னா ஏன் உயிரோட விட்டு வெச்சார்? அந்தப்பொண்ணு சேரனை பார்த்து உண்ஐயை சொல்றப்ப  பிரசன்னா ஏன் தடுக்க முயற்சி பண்ணலை?

8. பிரசன்னாவின் தந்தையை கொலை செய்ய சேரன் ரிவால்வரை நீட்டிக்கிட்டே வர்றப்ப திடீர்னு கமிஷ்னர் பிரசன்னாவின் தந்தையை பார்க்க வந்துடறார்..அப்போ சேரன் டக்னு ரிட்டர்ன் ஆகறாரே? அப்போ கமிஷனருக்கு டவுட் வராதா? ஏன் கண்டுக்கவே இல்லை?

http://600024.com/gallery/cache/events/muran-press-meet/muran-press-meet_08_w531_h800_600024.jpg

ஆனா இந்தக்குறைகளெல்லாம் பெரிசாத்தெரியாத அளவுக்கு படம் செம விறு விறுப்பா போகுது.. 

ஏ செண்ட்டர்கள்ல 50 நாட்கள், பி செண்ட்டர்கள்ல 30 நாட்கள் ( தீபாவளி வருதே? ), சி செண்ட்டர்கள்ல 20 நாட்கள் ஓடும்.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - சஸ்பென்ஸ் த்ரில்லர் ரசிகர்கள் அனைவரும் பார்க்கலாம்..

ஈரோடு ஸ்ரீ சண்டிகாவில் படம் பார்த்தேன்

டிஸ்கி -1

வாகை சூடவா - மண்வாசனை,ஒளிப்பதிவு ஸ்பெஷல் - சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

JOHNNY ENGLISH REBORN - மிஸ்டர் பீன் ஜேம்ஸ்பாண்டாக கலக்கிய காமெடி ஹாலிவுட் படம் - சினிமா விமர்சனம்

டிஸ்கி 3 -

வெடி - ன் கிளாமர், விவேக்கின் மொக்கைகாமெடி - சினிமா விமர்சனம்

 

 




http://www.nakkheeran.in/AllImages/Gallerys/12331_1.jpg

Tuesday, May 31, 2011

A NIGHT MARE ON ELM STREET -3 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://onlinemoviesplanet.com/covers/February-17-2011-2-25-53-a-nightmare-on-elm-street.jpg
மனுஷன் நிம்மதியா இருக்கறதே தூங்கறப்பத்தான்.. ஆனா தூங்குனா உங்க உயிருக்கு ஆபத்துன்னா நீங்க என்ன பண்ணுவீங்க?அதிர்ச்சியா இருக்கா? இது தான் படத்தோட ஒன் லைன்...
ஸ்கூல்ல ஒண்னா படிச்ச ஒரு ஸ்டூடண்ட்ஸ் செட்ல வரிசையா ஒவ்வொருவரா கொலை செய்யப்படறாங்க.. ஒவ்வொரு கொலையும் அவங்க தூங்கறப்ப தான் நடக்குது.. தூங்கும்போது ஒரு சக்தி அவங்களை அதனோட கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து கொலை செய்யுது.. 

ஏன் கொலைகள் நடக்குது? ஒரு ஃபிளாஸ்பேக்.. 

அந்த ஸ்கூல்ல தோட்ட வேலை பார்த்த ஒருவனோட நடவடிக்கைகள் மர்மமா இருக்கு.. தொடர்ந்து கண்காணிக்கறாங்க.. அவன் ஸ்கூல்ல படிக்கற சின்ன பசங்களோட,பொண்ணுங்களோட பாலியல் பலாத்காரம் பண்ணுறானோன்னு ஒரு டவுட்.. அது பற்றி சரியா விசாரிக்காமயே,அவன் குற்றவாளியாங்கறது  உறுதி செய்யப்படாமயே குழந்தைகளோட பெற்றோர் அவங்களா ஒரு முடிவெடுத்து அவனை ஒரு ரூம்ல வெச்சு தீக்குளிக்க வெச்சுடராங்க.. 

அவன் சாகறப்ப உங்களை எல்லாம் கொல்லாம விட மாட்டேன்னு சபதம் எடுக்கறான்.. அவன் ஆவியா வந்து ஒவ்வொருவரா கொல்றான்.. அதான் கதை...

http://maxcdn.fooyoh.com/files/attach/images/1068/532/601/004/nightmare-elm-st-mouthwash.jpg
படம் ஓப்பன்ல இருந்து முதல் 3 ரீல் செம சஸ்பென்ஸ் தான்.. ஆனா கொலைகள் ஏன் நடக்குதுன்னு தெரிஞ்ச பிறகு விறு விறுப்பு மிஸ்ஸிங்க்.. ( இதனால தான் சில படங்கள்ல கடைசி வரை கொலையாளி யார்னு சொல்லாமயே விட்றாங்க போல..)
திக் திக் படத்தில் வரும் டக் டக் வசனங்கள்

1. மிஸ்.. வீக் எண்ட்ல ரொம்ப டயர்டு ஆகீட்டீங்கபோல..?


ஏன்.. நீ அப்படி ஆக மாட்டியா?  ( ஹாலிவுட்லயும் டபுள்மீனிங்க்கா?)


2. என்னால 3 நாளா தூங்க முடியல.. தூங்குனா கனவு வருது.. கனவுல பேய் வந்துடுது.. என்னை என்ன பண்ண சொல்றீங்க?


3. எந்தக்கடவுளும் உன்னை காப்பாற்ற முடியாது.. மரண தேவன் கிட்டே இருந்து நீ தப்பிக்கவே முடியாது.. 


4. உன் இதயம் நின்னு போனாக்கூட மூளை மட்டும் 7 நிமிஷம் இயங்கிட்டே இருக்கும்.. நாம விளையாட அந்த 7 நிமிஷம் போதும்..

5. என்னால தூங்காம இருக்க முடியல.. 72 மணி நேரம் தொடர்ந்து தூங்கலைன்னா உடல் பலஹீனம் ஆகிடும்.. ..தூங்குனா உயிர் என் கைல இல்ல.. இப்போ நான் என்ன பண்ண?


6. டாக்டர்.. சொன்னா நம்புங்க.. நான் என்னோட 15 வது வயசுல இருந்தே இந்த மாத்திரையை சாப்பிட்டு வர்றேன்.. என் உடம்புல பலம் குறைஞ்சிடுச்சுன்னா அதை சாப்பிடனும் . ப்ளீஸ் குடுத்திடுங்க.. சக்தியை பூஸ்ட் பண்ணும் மாத்திரை அது.. 

7. டியர்.. நீ எதுக்கும் கவலைப்பதாதே.. நான் உன்னை எந்த சூழ்நிலைலயும் தூங்க விட மாட்டேன்..

ஐ நோ.. சப்போஸ் நான் என்னையும் மீறி தூங்கிட்டா தூக்கத்துல நான் துடிச்சா என்னை எழுப்பி விட்டுடு.. என்னை உடனே காப்பாத்து

http://thewolfmancometh.files.wordpress.com/2011/01/nightmare-on-elm-street-3-dream-warriors-patricia-arquette.jpg
இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. ஃபிளாஸ்பேக் சீனில் சஸ்பென்ஸை சரியாக காப்பாற்றி டெம்ப்போ ஏத்துனது.. 

2. ஹீரோயின் அழகான ஃபிகரா செலக்ட் பண்ணி டீசண்ட்டா அவரை (படத்துல )யூஸ் பண்ணிக்கிட்டது.. 

3. ஹீரோயின் அம்மா மேல் டவுட் வர வைத்து டைவர்ட் செய்தது.. 

4. க்ளைமாக்ஸ் சீனில் ஹீரோயின் தரையில் நடக்கும்போது அது அப்படியே ரத்தக்குளமாக மாறும் சீன்...

5. ஒவ்வொரு கொலை நடக்கும் போதும் கனவு சீனில் வரும் வில்லன் நிகழ்கால பேக் கிரவுண்டை அப்படியே கனவு உலகத்து அதே பேக் கிரவுண்டில் இடம் மாற்றுவது.. 


http://moviemusereviews.com/wp-content/uploads/2011/03/spring-movie-preview-2011-scream-4.jpg
 

 இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. தோட்டக்காரன் மேல் தவறு இருக்கா? இல்லையா? என்பதை கடைசி வரை தெளிவாக சொல்லாதது..

2. தோட்டக்காரன் மேல் தவறு என்றே வைத்துக்கொண்டாலும் பெற்றோர்கள் போலீசில் புகார் தராமல் ஏன் அவனை எரித்துக்கொள்ளவேண்டும்? அதை ஏன் போலீஸ் விசாரணை செய்யவே இல்லை.. ?

3. ஹீரோயின் நான்சி அடிப்பட்டு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டு ட்ரீட்மெண்ட் தரும்போது கடைசி வரை அவர் ஷூ சாக்ஸ் கழட்டாமலேயே ட்ரீட்மெண்ட் தருவது.. 

4. ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸில் ஆபத்தான மருந்துகள் எப்படி ஓப்பனாக வைத்திருப்பார்கள்? அவை பாதுகாப்பாக பீரோவில் தானே இருக்கும்?

5.ஹீரோவுக்கு இருக்கும் ஸ்லீப்டெப்ரிவேஷன் நோய்க்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்?

6.  ஹீரோயின் பாத்ரூமில் குளித்துக்கொண்டிருக்கும்போது பேயின் கரங்கள் பாத் டப்பில் வருது.. அப்போ ஹீரோயின் அம்மா நான் சி என அழைக்கிறார்.. உடனே பேய் ஓடிடுது.. ஏன்? பேய்க்கு ஹீரோயின் அம்மான்னா பயமா?
7.  கடைசியாக ஒரு கில்மா டவுட்.. ஸ்கூல் ஃபிகர்கள் உட்பட படத்தில் வரும் அனைத்து பெண் கேரக்டர்களும் குளிருக்காக கோட் போட்டே வருவது ஓக்கே.ஆனா ஏன் முழங்காலுக்கு கீழே வெறும் சருமம் தெரிய இருக்க வேண்டும்? குளிராதா?

http://moviesmedia.ign.com/movies/image/article/108/1085171/a-nightmare-on-elm-street-2010-20100421114129649_640w.jpg

--
படத்தில் ஆரம்ப காட்சிகளில் இருந்த திகில் போகப்போக குறைவு.. பின்னணி இசை இன்னும் நல்லா போட்டிருக்கலாம்.. வில்லனுக்கான மேக்கப் சரி இல்லை.. தசாவதார மேக்கப் மாதிரி சுமார் தான்.. அதுவே படத்தின் பெரிய மைனஸ்..

 கர்ப்பிணிப்பெண்கள் தவிர அனைவரும் பார்க்கலாம்.. திகில் பட ரசிகர்கள் பார்க்கலாம். இது ஈரோடு ஸ்ரீநிவாசாவில் பார்த்தேன்..