Showing posts with label SWATHI. Show all posts
Showing posts with label SWATHI. Show all posts

Thursday, June 19, 2014

வடகறி - சினிமா விமர்சனம்

  

ஹீரோ  ஒரு மெடிக்கல்  ரெப் . சாதா பேசிக் மாடல்  மொபைல் வெச்சிருக்கார் . கூட இருக்கும் ஃபிரண்ட்ஸ் எல்லாம்  ஐ ஃபோன் வெச்சிருந்தாத்தான் ஃபிகர் உஷார்ப்படுத்த  முடியும்னு  உசுப்பேத்தி  விடறாங்க . ஆனா அவரால வாங்க  முடியலை. அப்போ அநாமத்தா ஒரு ஐ ஃபோன் இவர் கை ல மாட்டுது . அந்த ஃபோனை கமுக்கமா ஆ ராசா கணக்கா அமுக்கிடறாரு . அதனால அவருக்கு என்னென்ன பிரச்சனைகள் வருது என்பது தான் திரைக்கதை . 

நாட்ல  இப்போ  பெருகி வரும்  போலி மருந்து  தயாரிக்கும் கும்பல் பற்றிய  விழிப்புணர்வு கதையை  த்ரில்லர்  மூவியா கொடுத்திருக்காங்க . 

ஹீரோவா  ஜெய் . அவருக்கு அப்பாவியான  மிடில் கிளாஸ் இளைஞன்  வேடம் அட்டகாசமாப்பொருந்துது . அவரது   டயலாக்  டெலிவரி  , ஃபேஸ் எக்ஸ்பிரசன் எல்லாம்  டபுள்  ஓக்கே .  அடுத்த  கட்டத்துக்கு  தயார் ஆகிட்டார் . சபாஷ்  பாஸ் . 

  ஹீரோயின்  பலாச்சுளை க்கு ரோஸ் பவுடர்  போட்டு விட்ட  கோவைபழ உதட்டு அழகி ஸ்வாதி . தெத்துப்பல் தெரிய அவர் சிரிக்கும்போது  உங்க  டூத் பேஸ்ட் ல  சுண்ணாம்பு அதிகமா இருக்கா?னு கேக்கத்தோணுது . வழக்கம்  போல் ஆடை வடிவமைப்பு  கண்ணியம் . பாடல் காட்சிகளில் பாந்தம் . 


 ஹீரோயினுக்குத்தோழியாக  யாரோ  ஒரு புதுமுகம் . அடடே சொல்ல வைக்கிறார் . நாம எந்தக்காலத்தில்  பொண்ணுங்களை அடச்சே என சொல்லி  இருக்கோம் ? 

ஹீரோவின்  நண்பராக ரேடியோ  ஜாக்கி  ஆர் ஜே பாலாஜி   நல்ல  எண்ட்ரி .  லோ பட்ஜெட் சந்தானம் ஆக வாய்ப்பு  உண்டு . அவர் பேசும் ஸ்பீடு டயலாக்குகளைப்புரிந்து  கொள்ளவே  ஒரு பயிற்சி தேவை .  ஆனாலும்  ரசிகர்கள்  ஒரு குத்து மதிப்பா சிரிச்சு  வைக்கறாங்க . 


ஹீரோ  ஹீரோயின்  தோழியை   லவ்வுவது ,  பின்  தோழியை ஃபாலோ பண்ணுவது , பின் பல்டி அடிச்சு  ஹீரோயின் க்கு ரூட் விடுவது  , இதனால்  தோழிகளுக்கிடையே   ஈகோ வருவது என கலகலப்பான  காதல் கா மெடி  டிராக் படத்தின்   முற்பாதியை   மிகச்சுலபமாக நகர்த்தி  விடுகிறது 

பின் பாதியில்   கதை  த்ரில்லர்  மூவி , சேசிங்க் காட்சிகள் என பர பரப்புக்குத்தாவும் போது    விறு விறுப்பு 

பின் பாதியில் பாடல் காட்சிகள்      தேவையே இல்லை . கட் பண்ணி  ட்ரிம் பண்ணி இருக்கலாம்


 கஸ்தூரி   ஹீரோவுக்கு அண்ணியா பரிதாபமா வர்றார் . அய்யோ பாவம் . வில்லனுக்கு  எல்லாம்  பெரிதா  வேலை இல்லை

 

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1.    டைட்டிலுக்கும் , படத்துக்கும் சம்பந்தமே  இல்லை என அவங்களே படத்தில் வாக்குமூலம்  கொடுத்து  விட்டாலும்  அவர்கள்  சூசகமாக  யாரைச்சொல்கிறார்கள் என  புரிகிறது . சன்னிலியோனின்  குத்தாட்டம்   படத்துக்கு   நல்ல பிளவுஸ் சாரி  பிளஸ் . 


2   ரேடியோஜாக்கி பாலாஜியின்  டைமிங்க் சென்ஸ்  , ஹீரோவின்  சுறு சுறுப்பான நடிப்பு , ஸ்வாதியின் அழகு  பிளஸ் 


3   முன் பாதி   செம ஜாலி  காதல் காமெடி  கலாட்டா , பின் பாதி சேசிங்க் காட்சி என பிரித்து  சரியான கலவையில்   கதை அமைத்த விதம் 


4   செல் ஃபோன் ரிங்க்  டோனை வைத்து அமைக்கப்ட்ட இய்லபான காமெடி டிராக் கதையோடு ஒன்றி கலக்குகிறது 





இயக்குநரிடம் சில கேள்விகள் 


1.   15,000  ரூபா சம்பளம் வாங்கும்  மெடிக்கல்  ரெப்  2000  ரூபா  ஃபோனுகே வழி  இல்லாமல்  இருக்கார் , ஓக்கே , ஆனா அவர் 60,000  ரூபா  புது பைக்கில் வர்றார் , போறார் . போட்டிருக்கும்  டிரஸ் எல்லாம் 10,000  ரூபா சர் ட் ,  பேண்ட் . காஸ்ட்லி  லுக் வேற  , எப்படி ?  ரேபான்  கிளாஸ்  எல்லாம் போட்டுட்டு வர்றார் . 


2  ஹீரோ  லபக்கிய   ஃபோன் அவருது இல்லை  என நிரூபிக்க் வழி இருந்தும் அவர் எந்த  முயற்சியும்  ஏன் எடுக்கலை ?  அந்த   சிம் மை வெச்சு அது யார் பேரில் எடுக்கப்பட்டிருக்கு ?  என்ன அட்ரஸ் கொடுக்கப்பட்டிருக்கு என பார்க்கலாமே? 


3 க்ளைமாக்ஸ் ல  ஹீரோயின்  ரயில்வே ஸ்டேஷன் ல வெய்ட்டிங்க் .  குறிப்பிட்ட டைம்க்கு ஹீரோ வர்லைன்னா த்ற்கொலை செஞ்சுக்கறதா மிரட்றாங்க . ஹீரோ வில்லன் க்ரூப் ல இருந்து எஸ் ஆக தாமதம் ஆகிடுது . அவர் பைக்ல வேக வேகமா வர்றாரு . அவர் ஏன் ஹீரோயினுக்கு  ஃபோன் பண்ணி இதோ வந்திட்டிருக்கேன்னு  சொல்லலை ? அட்லீஸ்ட் ஒரு எஸ் எம் எஸ்  கூட அனுப்பலை  ? 

4  பல பேர் எப்பவும்  அப்ரோச் பண்ணிட்டிருக்கும்  அழகு தேவதை  ஹீரோயின்    மிடுக்குடன்  இருக்கார் . திடீர்னு   லூஸ் மாதிரி  பிஹேவ் செய்வது ஏன் ?


 

 மனம் கவர்ந்த வசனங்கள்



1. எம் ஜி ஆர் FANனா நேர்மையா இருப்பீங்களா? நான் கூடத்தான் சிம்பு FAN.அதுக்காக அவர் பன்றதை எல்லாம் நான் பண்ணிட்டிருக்கேனா? #வடகறி

2. இந்தக்காலத்துப்பொண்ணுங்க பசங்க வெச்சிருக்கும் ரிச்சான போன் மாடல் பாத்துத்தான் உஷார் ஆவாங்க # வடகறி


ஒரு பிரச்னைனு வந்தா அதுல இறங்கி கேள்வி கேட்பவன் ,அதை தீர்க்க நினைப்பவன் லோ க்ளாசா இருந்தாலும் அவன் தான் ஹை க்ளாஸ்

படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S


1 அங்காடித்தெரு அஞ்சலியின் நேற்றைய லவ்வர் ஸ்டார் ,நாளைய சூப்பர் ஸ்டார் ஜெய் யின் வடகறி ஓப்பனிங் சீனே காமெடி கலக்கல்


2  குணச்சித்திரக்குன்று சன்னி லியோன் ன் குத்தாட்டம்.இதுக்கு யூ சர்ட்டிபிகேட் கொடுத்த கேனயன் யாரோ?

3  செல்போன் காஸ்ட்லியா வெச்சிருந்தா பிகர் செட் ஆகும் கற கேவலமான கான்செப்ட் ல திரைக்கதை போய்க்கிட்டு இருக்கு #,வடகறி


4  தெத்துப்பல் தேவதை அழகி ஸ்வாதி  தான் ஹீரோயின். # வ க


5 ஆர் ஜே பாலாஜி மொக்கை போடறார்.சொந்த ஜோக் போல . தியேட்டர் ல சி செண்ட்டர் ரசிகர்கள் கை தட்றாங்க . அடுத்த சந்தானம் ஆகிடுவார் போல 


6 காமெடி ,மொக்கை,கலாட்டா,காதல் னு போய்ட்டிருந்த திரைக்கதை த்ரில்லர் மூவி ட்ராக் ல் போகுது # வடகறி இடை வேளை






சி பி கமெண்ட் -வடகறி - போலி மருந்து கம்பெனி பற்றிய த்ரில்லர்  மூவி , முன் பாதி காமெடி, பின் பாதி ஸ்பீடு- விகடன் மார்க் = 41 , ரேட்டிங்க் = 2.5 / 5


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =41





குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =  2.5 / 5 


விருதாச்சலம் சந்தோஷ் குமார் பேலஸ்  


டிஸ்கி - 

வெற்றிச்செல்வன் - சினிமா விமர்சனம்



http://www.adrasaka.com/2014/06/blog-post_8644.html

நேற்று இன்று - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2014/06/blog-post_5435.html

 

 

சூறையாடல் - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2014/06/blog-post_7814.html





விருதாச்சலம் சந்தோஷ் குமார் பேலஸ்
Embedded image permalinka

Monday, September 10, 2012

மன்னாரு - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9AZAv40G6mDw1dUN3p6_ZuiNUwnbcvMlhH6YwjtT1t1-Ny4SaDjQ0n3BW42CiF4Iwl-n_Mwa7J7bMlU5-volmtKN2FToINtaFkrXjShJEg-QSadQIPmrQ0tUr2TZ2w2mynUg4g5qtO45N/s640/Mannaru+Movie+Posters+Mycineworld+Com+(3).jpg ஒரு ஊர்ல ஒரு லவ் ஜோடி ரிஜிஸ்தர் ஆஃபீஸ்ல மேரேஜ் பண்ணிக்கறாங்க. ஊரை விட்டு ஓட பிளான். வில்லன்கள் துரத்திட்டு வர்றாங்க. மாப்ளை பொண்ணு கூட போக முடியலை.. டக்னு தன் நண்பனை தன் மனைவி கூட அனுப்பி வைக்கறார். மாப்ளை வில்லன்கள் கிட்டே மாட்டிக்கறார். அவரை அடைச்சு வெச்சுடறாங்க.. 


 இப்போ அந்த பொண்ணு, மாப்ளையின் நண்பன் 2 பேரும் கொடைக்கானல் ல லாட்ஜ்ல ஒரே ரூமில் தங்க வேண்டிய சூழ்நிலை.. அப்புறம் மாப்ளையின் நண்பன் தன் ஊருக்கு அவளை கூட்டிட்டுப்போனா அங்கே அவனோட காதலி , ஊர் பெருசுங்க..  என்ன ஆச்சு? எப்படி இந்த இடி ஆப்பச்சிக்கலுக்கு விடை கிடைச்சது என்பதை அனுபவம் குறைவான திரைக்கதையால் சொதப்பி இருப்பதே மன்னாரு.. 



 இந்த கதையை திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் டைரக்‌ஷன்ல யதார்த்த நாயகன் சேரன் ஹீரோவா நடிச்சிருந்தா கனகச்சிதமா இருந்திருக்கும்.. மிஸ் பண்ணிட்டாங்க..


 ஹீரோ அழகர் சாமியின் குதிரை ஹீரோ அப்புக்குட்டி.. படத்தின் முன் பாதியில்  ஆங்காங்கே எரிச்சல் படுத்தும் நடிப்பா இருந்தாலும் இடைவேளைக்குப்பின் அபாரமான நடிப்பு.. இவர் இயல்பாய் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் அழகு.. ஆனால் செயற்கையாய்  செய்யும் பல இடங்கள் கடுப்படிப்பு.. 


 ஹீரோயின் ராட்டினம் ஹீரோயின் ஸ்வாதி .மிக கச்சிதமான , பொருத்தமான  தேர்வு.துளியும் ஓவர் ஆக்டிங்க் பண்ணாமல் அச்சு அசலாக அந்த கேரக்டரை முன்னிறுத்துகிறார். கண்ணியமான தோற்றம், கவுரவமான ஆடை வடிவமைப்பு , குடும்பப்பாங்கான தோற்றத்துக்கு கண்ணை மூடிக்கிட்டு இவரை இனிமே செலக்ட் பண்ணலாம்.


http://l2.yimg.com/bt/api/res/1.2/qIohxAfyGNtf1s8DNeH7Tg--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MDA7cT04NTt3PTYwMA--/http://media.zenfs.com/en_us/News/ybrand.dinamalar.com.ta/15212333019.jpg



தம்பி ராமையா தான் படத்துக்கு வசனம். அதுக்காக அவர் படத்துல பேசிப்பேசிக்கொல்லனுமா? மைனா படத்துல எந்த அளவு  ரசிக்க வெச்சாரோ அதே அளவு இதுல கடுப்பேத்துறார்.


ஹீரோவின் மாமா பெண்ணாக வரும்  அந்தப்பொண்ணு மேக்கப் போடாம இயல்பா சில காட்சிகளிலும், ஓவர் ஆக்டிங்கா பல காட்சிகளிலும் வருது.


http://www.thaalamcinema.com/uploads/news/original/-MA469318.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்




1. பெண்களைக்கவரும் பாக்யராஜ் ஸ்டைலில் கதை தேர்ந்தெடுத்தது, அழகான ஹீரோயின் செலக்‌ஷன்,ரம்மியமான ஒளிப்பதிவு



2. இங்கே எதுவுமே சரி இல்லை பாடலும், கரகாட்டக்கார பாடலும் துள்ளலான நாட்டுப்புற இசையும் கலக்கல்.. அப்படியே கிராமத்து இசையை, நடனத்தை கண் முன் நிறுத்துது ( பாட்டும் ராமையா தானாம்)


3. இடைவேளை வரை திரைக்கதையை வேகமாக நகர்த்தியது, கொடைக்கானல் லொக்கேஷன்கள்

http://l1.yimg.com/bt/api/res/1.2/oY4JDtnI.0sgMtdND04l5w--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MDA7cT04NTt3PTYwMA--/http://media.zenfs.com/en_us/News/ybrand.dinamalar.com.ta/15212382399.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்



1. அண்ணே! வண்டியை கொஞ்சம் நிறுத்துங்க



ஓடற வண்டியை நிறுத்தச்சொல்றியே?



பின்னே? நிக்கற வண்டியையா நிறுத்தச்சொல்வாங்க?



2. அய்யா என் ஊரு  தாண்டிக்குடி, எனக்கு ஒரு டிக்கெட் குடுங்க



 தியேட்டருக்கு வந்தா டிக்கெட் மட்டும் கேளுங்க. ஊர்ப்பேர் எல்லாம் சொல்லி ஏன் கேவலப்படுத்தறீங்க?



3. நாம இப்போ எங்கேடா போறோம்?



மேரேஜ்க்கு



யார் மேரேஜ்க்கு?



என் மேரேஜ்க்குத்தான், ஹி ஹி



4. உழைக்கறவன் கைல ஒரு மோதிரம் கூட இல்லை, ஆனா மொதலாளிங்க கைல  10 விரல்லயும் மோதரம்



5. எனக்கும், என் நண்பன் மனைவிக்கும் ஒரு ரூம் வேணும்.



அடப்பாவிங்களா. இப்போ எல்லாம் இப்படி எல்லாம் ஓப்பனா கேட்க ஆரம்பிச்சுட்டீங்களா?



6. நான் சொன்னா அவங்க நம்ப மாட்டாங்க.




 ஏன்?



 அவளவ் மரியாதை என் மேல .



7. இந்த ஊர்த்தலைவர் யார் தெரியுமா? நாந்தேன்..




 இப்போதானே சொன்னீரு?



மறந்துட்டீன்னா?



8. கரகாட்டக்காரி வனஜாவை கற்பாழிக்கப்போறாங்க போல. வாங்க நாமும் போவோம்//


அய்யய்யோ எதுக்கு?


 அடச்சே, அவளைக்காப்பாத்த.



9. நான் ஒருத்தன் மட்டும் படிச்சவனா இருக்கறதால இந்த ஊர்ல எத்தனை பிரச்சனைகளை சமாளீக்க வேண்டியதா இருக்கு?



10. அவன் நெம்பர் ஒன் குடிகாரன்.



அப்போ நீ யாருவே? நெம்பர் டூ  குடிகாரனா?



11. இது என்ன கழுத்தா? தாலி கட்ற மரமா?  எதுக்கு ஆளாளுக்கு  என் கழுத்துல தாலி கட்ட திட்டம் போடறீங்க?



http://img1.dinamalar.com/cini/CineGallery/VM_113532000000.jpg

யக்குநரிடம் சில பல கேள்விகள்



1. காதலிக்கறவனுக்கு முதல்ல தைரியம் தான் வேணும். பதிவுத்திருமணம் நடந்த பின் ஏன் வில்லன்களுக்கு பயந்து  மாப்ளை தன் கல்யாண டிரஸ்சை  ஹீரோவுக்கு போட்டு விடறாரு?அவர் மாட்னா பரவாயில்லையா?


2. பஸ் ஸ்டேண்ட்ல மாப்ளை, பொண்ணு , ஹீரோ 3 பேரும் நிக்கறாங்க. வில்லன்கள் அங்கே வர்றாங்க. எதுக்கு மாப்ளை லூஸ் மாதிரி ஹீரோவை நீ என் சம்சாரத்தை கூட்டிட்டு போ. நான் பின்னாலயே வர்றேன்னு சொல்றான்/ அவன் லூஸா? மிக்சர் பார்ட்டியா? தியாகியா? கேனமா? படத்தோட முக்கியமான இந்த காட்சில மாப்ளை ஏன் ஹீரொவை தன் மனைவி கூட அனுப்பறார்னு காரணம் சரியா சொல்ல வேணாமா?


3. மாப்ளை ஒரு சீன்ல சாஃப்ட்வேர் கம்பெனில 3 வருஷம் வேலை செஞ்சதா சொல்றாரு. பொண்ணும் தான். அப்படி இருக்கும்போது சாட்சிக்கையெழுத்து போட யாருமே வர்லையே, ஏன்?


4. படத்துக்கு சம்பந்தமே இல்லாம திருநங்கைகளை கேவலப்படுத்தி ஒரு பாட்டு சீன் இருக்கு. எதுக்கு? இந்த லட்சணத்துல ஆர் பாண்டியராஜன் அந்த பாட்டுக்கு மட்டும் வந்துட்டுப்போறாரு? அவர் என்ன சாரு நிவேதிதாவா? கிளாமர்க்கு யூஸ் பண்ணிக்க?


5. ஹீரோவோட மாமா பொண்ணு மல்லிகா கிணத்துல தண்ணி சேந்திட்டு இருக்கு. அப்போ ஒரு பொண்ணு வந்து “ உன் மாமன் வேற ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்திருக்கார்”னு சொல்லுது.  உடனே மல்லிகா சேந்திட்டு இருந்த குடத்தை அப்படியே கிணத்துல தொபுக்கடீர்னு போட்டுட்டு காலியான குடம் ஒண்ணை எடுத்துட்டு போகுது. அங்கே மாமனை பார்த்ததும் அதிர்ச்சில குடத்தை கீழே போடுது. அப்போ தண்ணீர் ஃபுல்லா கொட்டுது. எப்படி? கர்நாடகாக்காரன் தண்ணி குடுத்தானா?


6. ஹீரோவோட மாமா பொண்ணு கிட்டே ஹீரோயின் தனியா கூட்டிட்டுப்போய் இந்த மாதிரி விஷயம், உன் மாமா உன்னைத்தான் நினைக்கறார்னு சொல்லிட்டா 4 வது ரீல்லயே படம் ஓவர்.. ஆனா அவ கடைசி வரைக்கும் அப்படி சொல்லவே இல்லை..



7. ஹீரோ அழகை பற்றி நான் சொல்றதா நினைக்க வேண்டாம். அவர் முகத்தை எதுக்கு அவ்ளவ் க்ளோசப்ல அடிக்கடி காட்டனும்? ஆனானப்பட்ட ஐஸ்வர்யாராயா இருந்தாலும் சில கோணங்கள்ல அழகு கம்மியா தெரிவாங்க.. அந்த ஆங்கிள்களை அவாய்டு பண்ணனும் . ஹீரோ பல் துலக்காத காரை பற்களை, எண்ணெய் பூசாத தலை முடியை அவ்ளவ் க்ளோசப்ல அடிக்கடி காட்றீங்களே, ஏன்.. கலா மாஸ்டரை க்ளோசப்ல காட்டுன மாதிரி.. உவ்வே..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgazXhCfxOjd0jcrRz4K4NTZHgXKpR7wzCHtTKeKLmn947VWySXYcWS821fDdQvG-cKl4yHrEX1UW-5MLQqf5HNjpRbdyuyAJxPrl-apguag3a5iKT_juxL1YqiEruAoR6AmVs9yfUitO__/s1600/tamil-movies-mannaru-movie-audio-launch15.jpg

8. ஹீரோ ஒரு ஆட்டை திருடுனாருன்னு ஊர் மக்கள் முன்னால அவரை கட்டி வெச்சு ஹீரோவோட அப்பாவே அடிப்பதும், ஆடு திருடு போகலை, கட்டை அவுத்துட்டுப்போயிடுச்சு என்று ஒரு ஆள் வந்து சொல்வதும் 1980 டைப் அரதப்பழசான செண்ட்டிமென்ட் காட்சிகள். ஒட்டவே இல்லை.. இந்தக்காலத்துல  1000 கோடி அடிச்சவனை ஒரு அடி வைக்க முடியலை, ஆடு திருடுனதுக்கு அவ்ளவ் அடியா?


9. ஹீரோவுக்கும், நண்பனின் மனைவிக்கும் எந்த மேட்டரும் இல்லை, ஜோடி சேரப்போவதில்லை. எதுக்கு தேவை இல்லாம  ஹீரோ மேல் நல்ல அபிப்ராயம் அவளுக்கு வர்ற மாதிரி வரிசையா சீன் வெச்சீங்க?



10 . இந்த திரைக்கதையின் முக்கிய மைனஸ் என்ன தெரியுமா? ஆடியன்ஸ் மனசுல ஹீரோவும், அந்த நண்பன் மனைவியும் ஒண்ணு சேர்ந்துடுவாங்களா? என்ற நினைப்பை ஏற்படுத்தனும்.. பதை பதைப்பை கொண்டு  வரனும். ஆனா ஹீரோ யார் கூட சேர்ந்தா நமக்கென்ன? சேராட்டி நமக்கென்ன? என்ற அலட்சியம் தான் வருது..


11. ஒரு சீன்ல மாப்ளை ஒரு ரூம்ல அடைச்சு வைக்கப்பட்டிருக்கார். அவரை சுத்தி வேட்டை நாய்கள் 12 இருக்கு.. அதை எல்லாம் தூங்க வெச்சுட்டு அண்ணன் எஸ் ஆகறார். யோவ்.. நாய்ங்க என்ன கும்ப கர்ணன்களா? அப்படித்தூங்க? தூக்க மருந்தோ, மயக்க மருந்தோ தராம எந்த நாயும் அப்படித்தூங்க சான்ஸே இல்லை..


12. ஆனானப்பட்ட கமல் ஹாசனே அபூர்வ சகோதரர்கள் படத்துல சேர்ல கட்டி வெச்ச சீன்ல அடக்கி வாசிச்சாரு. இந்தப்படத்துல மாப்ளை சேர்ல கட்டி வெச்சாலும் அதை எல்லாம் உடைச்சுட்டு 8 பேரை ஃபைட் போட்டு காலி பண்றாரு..  யப்பா...


13. மாப்ளையும், பொண்ணும் மேரேஜ் பண்ணிட்டாங்க, எம் எல் ஏவோட பையனுக்கு நிச்சயம் ஆன பொண்ணு. மாப்ளையை பிடிச்சிடறாங்க. முதல் வேலையா என்ன பண்ணுவாங்க? மாப்ளை கைல இருக்கற செல் ஃபோனை வாங்கி யார் யார் எல்லாம் கால் பண்றாங்க?ன்னு ட்ரேஸ் அவுட் பண்ணி பொண்ணோட இருப்பிடத்தை கண்டு பிடிக்க முயற்சி பண்ணுவாங்க. அதை விட்டுட்டு செல் ஃபோனை லூஸ் மாதிரி ஆஃப் பண்ணி வைப்பாங்களா?  பொண்ணு மாப்ளை செல்லுக்கு எப்போ ஃபோன் பண்ணாலும் ஸ்விட்ச் ஆஃப்னு வருது. அந்த சீன் 2 டைம் வெச்சா பரவாயில்லை 8 டைமா?


14. ஹீரோ ஓப்பனிங்க் ஷாட்ல கில்மா படம் பார்க்க போறாரு. படம் போட்ட உடனே ஆடியன்ஸ் எங்கே பிட்டை காணோம்?னு ஆர்ப்பாட்டம் பண்றாங்க. இயக்குநர் இதுக்கு முன்னே பிட் படம் பார்த்ததே இல்லையா? இடைவேளைக்கு 5 நிமிஷம் முன்னால தான் பிட் வரும். கடைசி வரைக்கும் வர்லைன்னாத்தான் அப்படி சண்டை போடுவாங்க, சீட்டை கிழிப்பாங்க. அதுவரைக்கும் கமுக்கமா உக்காந்து படம் பார்ப்பான் இந்த மறத்தமிழன் ( ர்கள்)


15.  .  டைட்டில் வைக்கும்போது கேரக்டர் நேம் வைக்கனும்னா அந்த ஹீரோ மினிமம் 25 படமாவது நடிச்சிருக்கனும். அப்போத்தான் ஒரு கெத்து இருக்கும். வளரும் நடிகர்கள் படத்துக்கு கதைக்குத்தக்க டைட்டில் தான் வைக்கனும்,. இந்தப்படத்துக்கு நான் வைக்க நினைக்கும் டைட்டில் “ கை மாறிடுமோ ரோஜா? “ ( ஆர் கே செல்வமணி மன்னிக்க )

16. ஒரு சீன்ல ஹீரோயின் அதாவது ஹீரோவின் நண்பனின் மனைவி ஸ்வாதி ஹீரோ கேரக்டர் எவ்ளவ் யோக்கியம்னு வார்த்தைல சொல்றார். நான் தூக்கத்துல படுத்திருந்தப்போ சேலை விலகி இருக்கும், மாராப்பு நகர்ந்திருக்கும்னு.. அதை நாங்க எப்படி நம்பறது? காட்சியா அதை ஏன் எடுக்கலை? எவிடன்ஸ் ஸ்ட்ராங்கா இருந்திருக்கும், கில்மா சீனுக்கு கில்மா  ( இந்த கடைசி கேள்வி மட்டும் சும்மா ) 



http://gallery.southdreamz.com/cache/movie-launch/mannaru/exclusive-mannaru-movie-launch-stills-12_720_southdreamz.jpg



எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - டைம் பாஸ் படம் தான் இது. பார்க்கலாம்... பெண்களும் பார்க்கும் தரத்தில் தான் படம் இருக்கு. ஈரோடு  ஸ்டாரில் படம் பார்த்தேன்

 டிஸ்கி -1-பாகன் - சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/09/blog-post_8.html

2.  RAAZ 3 - பாலிவுட் சினிமா விமர்சனம் 18+-http://www.adrasaka.com/2012/09/raaz-3-18.html

 http://moviegalleri.net/wp-content/gallery/mannaru-movie-latest-stills/mannaru_movie_stills_3251.jpg

Thursday, December 01, 2011

போராளி - ஹிட் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRpbiz-544ZRauuqmvEc1mCvHMbNfqb7GojRFnDKzgxEw54PZ9DVRYJ7UzKXx287OPzSk7Y6X9vwj64vjUL_NFqbk_I2MQ0v4F96BTleXQwNqyjL0qQlBkMRKSaRBF9WArEzgw5kXlzA/s1600/02.jpg

எம் சசிகுமார்க்கு சினி ஃபீல்ட்லயும் சரி, தனி மனித வாழ்க்கைலயும் சரி ஒரு நல்ல பேர் இருக்கு.. அது என்னான்னா அவர் நட்புக்கு முக்கியத்துவமும் மரியாதையும் தருவார், இயக்குநர் சமுத்திரக்கனியோட  அவர் கை கோர்த்த சுப்ரமணியபுரம், நாடோடிகள் படங்கள் நட்பை பேஸ் பண்ணுன படங்கள் தான் .இந்தப்படத்துலயும் அதே கருத்துதான், சொந்த பந்தங்களை நம்பாதே, நட்பு தான் கை கொடுக்கும்ங்கறது தான் ஒன் லைன்.. அது எந்த அளவு ஒர்க் அவுட் ஆகி இருக்குன்னு பார்க்கலாம்..

சசிகுமாரும், அல்லாரி நரேஷும் ஒரு அபார்ட்மெண்ட்ல புதுசா குடி வர்றாங்க.. அங்கே குடி இருக்கற எல்லாருக்கும் உதவி செய்யறார் சசி... ஹவுஸ் ஓனரே தன் பெண்ணை கல்யாணம் கட்டிக்குடுக்கற அளவு  க்ளோஸ் ஆகி நல்ல பேர் எடுக்கறார்..அந்த சமயத்துலதான் இவங்க 2 பேரும் பைத்தியங்கன்னு ஒரு குரூப் வந்து சொல்லுது.. 

இப்போ இடைவேளை.. அதுக்குப்பிறகு ஃபிளாஸ்பேக்.. அவங்க 2 பேரும் ஏன் அப்படி ஆனாங்க?கிராமம் , சொந்த பந்தம் , உறவு ,அடிதடி வெட்டு குத்து , துரத்தல் எல்லாம் முடிஞ்ச பின் சுபம்.. உஷ்  அப்பா மூச்சு வாங்குது.. படம் பார்த்த நமக்கே இப்படி மூச்சு வாங்குதே படம் பூரா ஓடிட்டே இருந்த ஆட்களுக்கு எம்புட்டு மூச்சு வாங்கி இருக்கும்?

சமுத்திரக்கனிக்கு ஒரு வார்த்தை முதல்ல உங்க பேட்டர்ன் மாத்துங்க.. ஒரே மாதிரி கதை, ஒரே யூனிட் ஆட்கள் ,சேசிங்க் எல்லாம் எங்களுக்கு மனப்பாடம் ஆகிடுச்சு..

http://www.metromatinee.com/gallery/a3827/large/Nivedita25688.jpg

சசிகுமார் நடிப்பில் நல்ல முன்னேற்றம்.. பொண்ணுங்களை சரியா கண்டுக்காம இருந்தவர் இந்தப்படத்துல கொஞ்சம் கண்டுக்கறார்..அவர் ரெட்டைக்குதிரையில் ஸ்லோமோஷனில் எம் ஜி ஆர் கணக்காய் வருவதெல்லாம் ஓவர்.. ஃபிளாஸ்பேக் கதையில் கொஞ்சம் மனதை தொடும் கதை இருந்தாலும் இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்.. 

சமுத்திரக்கனிக்கு கிராமத்து மணிரத்னம் ஆகலாம்னு ஒரு முடிவோட தான் கிளம்பி இருக்கார் போல.. பாதி படம் இருட்டு தான்.. எனக்கென்ன டவுட்னா நார்மல் வெளிச்சத்துல இயல்பான கிராமத்தை காட்னா யாராவது ஊரை விட்டு ஒதுக்கி வெச்சுடுவாங்களா?

ஸ்வாதி சொல்லவே வேணாம்.. செம ஃபிகர், அவர் சிரிக்கறப்ப அந்த தெத்துப்பல் அழகுக்கே அம்பது ரூபா சரியாப்போச்சு.. ஆரம்பத்துல அநியாயத்துக்கு முறுக்கிட்டு இருக்கற அவர் ஹீரோ கிட்டே காதல் வந்ததும் என்னமோ ரொம்ப அர்ஜெண்ட்டா செவ்வாய் கிரகத்துக்குப்போற கடைசி பஸ்ஸை பிடிக்கற அவசரம் மாதிரி என் ;லவ்வுக்கு பதில் சொல்லுங்க அப்டிங்கறதெல்லாம் ஓவர்.. பெண்களை குறை சொல்லக்கூடாதுங்கற உயர்ந்த (!!!!) லட்சியம் வெச்சிருக்கறதால ஸ்வாதி சில சமயம் தேவையே இல்லாம சிடுமூஞ்சியா வர்றது பற்றிய விமர்சனத்தை அவைக்குறிப்பில இருந்து நீக்கிடறேன் ..

நரேஷ் நடிப்பு செம.. கேவலமான கவிதையை ரெடி பண்ணி ரூட் போடறப்பவும் சரி , செகன்ட் ஆஃப்ல மன நிலை பாதிக்கப்பட்டவரா காட்டும்போதும் சரி செம நடிப்பு..  தன் சொந்த தயாரிப்பா இருந்தாலும் சக நடிகருக்கு இந்த அளவு வாய்ப்பு கொடுத்ததற்கு சசிகுமாரை பாராட்டலாம்.. 

50 புரோட்டா சாப்பிட்ட காமெடியனும், கஞ்சா கறுப்பும் அவங்க பங்குக்கு சிரிக்க வைக்கறாங்க.. அப்புறம் நிவேதா , வசுந்த்ரராக்‌ஷாயப் ( பேரே வாய்ல நுழைய மாட்டேங்குது) 2 பேரும் படத்துல பெரும்பாலும் உம்மணாமூஞ்சியாவே வர்றாங்க .நல்ல ஸ்மைலிங்க் ஃபேஸ் இருந்தும் கோபக்கார பொண்ணா , சிடு சிடு கேரக்டரா அவ்ளவ் தூரம் காட்டி இருக்க தேவை இல்லை

பாடல்கள் பாஸ் ரகம்.. நாடோடிகள் படத்துல வர்ற மாதிரியே ஒரு சேசிங்க் பாட்டு இருக்கு ( ஜகடம் ஜெகடம் ஜெக ஜெகஜம் ஜம் சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ)



http://reviews.in.88db.com/images/Swathi/actress-swathi-saree-photos27.JPG

மனம் கவர்ந்த வசனங்கள்

1.  விலங்குகள் சத்தத்தை வெச்சே அவங்க குணத்தை சொல்லிடலாம்.. ஆனா மனுஷன் எப்போ எந்த குணத்துல  இருப்பான், காட்டுவான்னு சொல்லவே முடியாது.. அப்படிப்பட்ட மனுஷங்களோட வாழ்க்கை நடத்தும் எல்லாருமே போராளிங்கதான்..

2. இந்த உலகத்துலயே  லெட்டர் போட்ட அட்ரஸ்க்கே வந்து அவங்க எழுதுன லெட்டரை பிரிச்சுப்படிக்கற ஒரே ஆள் நீங்க தான்

3.  பேச்சிலர்க்கு வீடு தரமாட்டேன்.. எனக்கு ஒரு பொண்ணு இருக்கு...

வீட்டைத்தானே வாடகைக்கு கேட்டோம், பொண்ணையா கேட்டோம்?

( பாக்யா ஜோக்  2008 வலங்கை மான் நூர்தீன்)

4. அவங்களைப்பார்த்தா உருப்படற மாதிரியே தெரியுது.. ஒரு ஒளிவட்டம் தெரியுது..

5. அவங்க யார்னு தெரியுமா?

சாரிங்க, எனக்கு என் சம்சாரம் சாந்தியைத்தவிர வேற யாரையும் தெரியாது..

6.  போடா.. போ போய் வேலையைப்பாரு.. 

ஹலோ, வேலை கிடைச்சா போய் இருக்க மாட்டோமா? வேலை இல்லாததால தானே இப்படி வெட்டியா சுத்திட்டு இருக்கோம்?

7. படிச்சவனுக்கு ஒரு வேலை, படிக்காதவனுக்கு பல வேலை.. 

8. டேய் பார்த்துடா, படிச்சு கிடிச்சு கலெக்டர் ஆகிடப்போறானுங்க

( சேம் டயலாக் இன் அறைஎண் 305 இல் கடவுள் பை த சேம் பர்சன் கஞ்சா கறுப்பு )

9.  கட்ன பொண்டாட்டி மேலயும், பெத்த பொண்ணு மேலயும் நம்பிக்கை இல்லாதவன் தான் பேச்சிலர்க்கு ரூம் தர யோசிப்பான்

(ம்க்கும், நீங்க கிண்டிக்கிட்டு போய்டுவீங்க)


10. பெட்ரோல் பேங்க் இல் - ஃபிகரு - நீ  செட் செஞ்சியா?


நான் எதும் செட் செய்யலை..

நீ ஏதும் கரெக்ட் செஞ்சியா? 

ம்ஹூம், நான் எதும்  கரெக்ட் செய்யலை.

இந்த டபுள் மினிங்க்ல பேசறது எல்லாம் வேணாம்..


http://3.bp.blogspot.com/-jp0QrkQOIBY/TcqjGQfcYlI/AAAAAAAABGA/Cxkns-UVO3Q/s1600/swathi_in+porali.jpg

11.  என் காதல்  கவிதையை கேளு.. நிலவே நிலவே நீ நில்லு.. என் மனசில நீதான் பாறாங்கல்லு.. எப்பவும் போதையா இருக்கற பனைமரக்கள்ளு.

. ( இந்த மாதிரி கவிதை எழுதுனா செட் ஆகற ஃபிகரும் செட் ஆகாது)

12.  எப்பவோ கிடைக்கற  பால்கோவாவை விட இப்போ கிடைக்கற பப்பர்மெண்ட் மிட்டாய் தான் முக்கியம்..

13. ஆமா ரஜினி படமா ரிலீஸ் ஆகுது? டாஸ்மாக்ல எதுக்கு இவ்ளவ் கூட்டம்?

சம்பாதிக்கற பணத்தை எல்லாம் இங்கே தானே கொண்டுவந்து கொட்றாங்க?

( விக்கி தக்காளீ, லேப்டாப் மனோ கவனிக்க)

14. வேடிக்கை மட்டும் பாருங்க.. ஏதாவது உதவி  கேட்டா ஒதுங்கிடுங்க..அப்புறம் என்ன இதுக்கோசரம்டா இங்கிலீஷ் படிச்சீங்க? 

15.  ஹீரோயின் - சிலோன் புரோட்டா வேணும்..

எனக்கு சிலோனே பிடிக்காது

16. சொந்த பந்தம் எல்லாம் சும்மா.. அவங்கவங்க லைஃபை அவங்கவங்க தான் பார்த்துக்கோனும்..


17. உன்னை நானே தூக்கிட்டு போகட்டா.. அப்படி பார்க்காதே. அண்டாவை தூக்கற ஃபீலிங்க்லதான் உன்னை தூக்குவேன்..


இல்ல, என்னை தூக்கற ஃபீலிங்க்லயே தூக்குங்க..


உன்னை தூக்கறதும் அண்டாவை தூக்கறதும் ஒண்ணுதான்

( பருத்திப்பூ போல் லேசாக இருக்கும் ஸ்வாதியை அண்டா என வர்ணித்ததை அகில இந்திய ஜொள்ளர்கள் சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் ஹி ஹி )

 18.  என்னடி.. அங்கே பார்த்துட்டே ஆர்டர் பண்றே?

போய் ஒரு லிட்டர் இண்டியன் ஆயில் கொண்டு வா..


அது எங்க கம்பெனி நேம்..

சரி பெனாயில் கொண்டு வா,,

19.  உன் முகத்துல 3 புள்ளி.. அப்புரம் ஒரு ஆச்சரியக்குறி...

( 2 கண்கள், உதடு புள்ளீயாம், மூக்கு ! வாம் அய்யோ ஹய்யோ)


20. நாம் விரும்பற கிளியை விட நம்மை விரும்பற குரங்கு மேல்..


http://www.bujjigadu.com/wp-content/uploads/2011/11/allari-naresh-porali300.jpg

21.  டேய் நல்லா பாரு அவன் தான் பெருமாள்..

அப்போ நான் ?

அம்மா தாயே பார்ட்டி ( பிச்சைக்காரனாம்)

22.  ஹீரோயின் - நான் இப்படி எல்லாம் யார் கிட்டேயும் இப்படி வழிஞ்சதில்லை


ஹீரோ - அப்போ நாங்க மட்டும் பார்ட் டைமா இதை பண்ணீட்டிருக்கற ஆளா?

23. மாமா, அக்காட்ட ஐ லவ் யூ சொல்லுங்க..

பாப்பா.. உன் வயசுக்கு இதெல்லாம் நீ பேசக்கூடாது..

அப்போ போய் பாட்டியை அனுப்பட்டா?

24. என்னடா பொண்டாட்டி கிட்டே வழிஞ்சிட்டு? எடுக்கற முடிவை முதல் இரவுக்கு முன்னாலயே எடுங்கடா.. அப்போ விழுந்திடுங்க..  ( ஏப்பா, அங்கே போய் சோலியை பார்ப்பாங்களா? ஆராய்ச்சி பண்ணிட்டு இருப்பாங்களா?)


25.  சுகர் இருந்தா நான் சுகர் பேஷண்ட்-னு பெருமையா சொல்லிக்கறோம், ஆனா  மன ரீதியா ஏதாவது பிரச்சனைன்னா அதை வெளீல சொல்ல கூச்சப்படறோம்

26. தான் மட்டுமே நல்லாருந்தா போதும்னு நினைக்கறவங்களூம் இந்த உலகத்துல இருக்காங்க, தன்னை சுத்தி இருக்கறவங்களூம் நல்லாருக்கனும்னு நினைக்கறவங்களூம் இருக்காங்க.

27.  டேய்.. அதிகமா யோசிக்கக்கூடாது டா. அப்புறம் நம்மை மக்குன்னு வாத்தியார் சொல்லிடுவாரு..

இந்த எழவுக்குத்தாண்டா நான் யோசிக்கறதே இல்ல..

28.  நிலாவுல காலை வெச்சது யாரு?

ஆர்ம்ஸ்ட்ட்ராங்க்

அவர் இடது காலைத்தான் வெச்சாரு.. நான் கேட்டது வலது காலை முதல்ல வெச்சது யாரு?

( அண்ணே, இந்த ஜோக்கை நான் பேச நினைப்பதெல்லாம் கற விக்ரமன் படத்துல விவேக் பேசிட்டாருங்கோவ்)

29. நாங்க எல்லாம் அப்பவே அந்த மாதிரி..

எந்த மாதிரி..?

இப்படி தானா வந்து மாட்டிக்கறதுதான்..

30. முன்னே பின்னே தெரியாதவங்க கூட கை கொடுத்து உதவுவான், ஆனா இந்த சொந்தக்காரங்க இருக்காங்களே.. ( செம கிளாப்ஸ் தியேட்டர்ல)



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSGUktj7hQw9K-AMjO89graKrYz2nzVde28lJfIqGw9-0CpC9ZSoFrqxnnaTabJ9R5E61t5Ki8RpXJ_f9v1LrF0o7xwQJ7gt5EJ5CKv3BNGbI3QVM73KC3B5PHXiSOGjIH_3nFsd5Ozw/s1600/swathi-hot6.jpg

31. நீ இன்னும் உயிரோடவா இருக்கே? ஊர்ல  அத்தனை பஸ் லாரி எத்தனை ஓடுது.. அதுல எல்லாம் சாகாம எப்படி எஸ்கேப் ஆனே? ( எஸ் வி சேகரின்  வண்னக்கோலங்கள் நாடகத்துல வந்த ஜோக்)

32.  உலகம் பூரா இருக்கற எல்லா போலீசும்  இதைத்தானே சொல்றீங்க? இன்னார்தான்னு முதல்லயே சொல்லி இருக்கலாமில்ல?ன்னு எங்கேடா சொல்ல விடறீங்க? அடிச்சுட்டுத்தானே ஆரம்பிக்கறீங்க?

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. பின் பாதி க்ளைமக்ஸில் ஹீரோவை காட்ட வேண்டும் என்ற குறுக்கீடோ நிர்ப்பந்தமோ இன்றி சிறு வயசு காட்சிகளை அதிகம் வைத்தது..

2. டி வி நடிகை சாண்ட்ரா சாந்தியாக வந்து படவா கோபியுடன் அலப்பறை செய்யும் காமெடி காட்சிகள் கலக்கல், கூடவே பொய்யல்ல போட்டுக்குடு பார்ட்டியும் அதகளம் பண்றாங்கப்பா..

3. கஞ்சா கறுப்பு காமெடி காட்சிகளை  திரைக்கதையில் சமயம் பார்த்து புகுத்திய விதம் அழகு..

4. சந்தனம் பூசி வந்த சப்பாத்திக்கள்ளியே பாடல் காட்சியில் நடன அமைப்பு அசத்தல்.. சிம்பிள் மூவ்மெண்ட் தான், ஆனால் வெகுவாக ரசிக்க வைத்தது.

5. பெட்ரோல்பங்கில் வரும் ரெகுலர் பிச்சைக்காரனை டெயிலி டீ வாங்கிக்குடுத்து  நண்பன் ஆக்குவது, அவரை குளிக்க வைத்து ஹேர் கட் பண்ணி விட்டு நிட் டிரஸ் போட வைத்து ஆளையே மாற்ற வைப்பது  எல்லாம் செம ( வசூல்ராஜா எம் பி பி எஸ் சீனை நினைவு படுத்தினாலும்..)



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2RuviPfXlbOCkHdA_VmkkpZekRdQcNMgYe2umPpOGHfTgBtE2wnQFOn-gvef5UE5cF9abc20h-DCkytH8BAhKrB3vFrYusPJINel6HX3KpdrIyt2cXbyh6vSuSohV33Wtv2mQvrrk0shJ/s1600/Swathi__37_.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள் ,லாஜிக் மீறல்கள்

1. பெட்ரோல் பங்குக்களில் பெட்ரோல் அடிக்கும் தொழிலாளர்கள் டியூட்டி டைம் 12 மணி நேரம் தான்// ஒரு இடத்தில் 8 மணி நேர வேலை தானே, ஏதாவது பார்ட் டைம் ஜாப் பண்ணலாமே?னு வசனம் வருது.. ( எந்த பிரைவேட் வேலையும் 8 மணி நேரம் கிடையாது)

2.  அதே போல் பெட்ரோல் அடிக்கும் தொழிலாளர்கள் தினமும் இரவு போறப்பதான் எல்லா வசூல் பணத்தையும் கணக்கு பார்த்து செட்டில் செய்வார்கள், இதில் ஹீரோ ஒரு கார்க்கு பெட்ரோல் அடிச்சுட்டு, அந்த பணத்தை இன்னொரு தொழிலாளரிடம் கொடுத்து இதை மேனேஜர்ட்ட கொடுத்துடுங்கறார்.. அவர் என்ன அவருக்கு பி ஏவா?

3.  ஒரு சீனில் ஹீரோ காரில் போறார், அப்போ வழில ஒரு தம்பதி கைல குழந்தையோட வழில நிக்கறாங்க, பைக் ரிப்பேர்.. உடனே ஹீரோ ஹெல்ப் பண்ணி பைக்கை ஸ்டார்ட் பண்ணி தந்துடறார், அப்புறம் அந்த லேடியை கார்ல வரச்சொல்லிட்டு பைக்ல ஹீரோ வர்றார், டிராப் பண்ற இடம் வந்ததும் அந்த ஜோடி விடை பெறும்போது அந்த மனைவி கைல குழந்தை இல்லை அவ்வ்வ் ஹாயா பின்னால உக்காந்துட்டு போறாங்க..அந்த அட்டுக்குழந்தை டர்க்கு டவல் போர்த்தப்பட்டு முன்னால இருக்கற மாதிரி காட்டி இருக்காங்க

4. வன்முறை, அடிதடி , வெட்டுக்குத்து எல்லாம் ஓவர்.. ஒரு கட்டத்துல போர் அடிச்சிடுது... சீக்கிரம் படத்தை முடிங்கப்பா என சொல்ல வைக்குது..



http://www.chitramala.in/photogallery/d/475712-1/Swathi-hot-Pics003.jpg

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 42




எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - எம் சசிகுமாருக்காக,ஸ்வாதிக்காக ஆண்கள் பார்க்கலாம், பெண்கள் பார்க்கறது சிரமம் தான்.. நாடோடிகளை விட, சுப்ரமணியபுரம் விட ஒரு மாற்று கம்மிதான்

ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள் , பி - 30 , சி - 20 நாட்கள் ஓடலாம்..