Showing posts with label SUNAINAA. Show all posts
Showing posts with label SUNAINAA. Show all posts

Wednesday, December 19, 2012

ஜெயமோகன் -ன் நீர்ப்பறவை வசனங்கள் - ஆஹா 50 !

http://gallery.southdreamz.com/cache/movie-gallery/neerparavai/neer-paravai-tamil-movie-vishnu-sunaina-images-11_720_southdreamz.jpg 

1. மீனவன சுட்டுக் கொன்னுட்டா, பத்திரிக்கையில கூட இந்திய மீனவன்னு போடாம தமிழக மீனவன்னு தலைப்பப் போட்டு மேட்டரை முடிச்சுடறாங்க 


2. என் கணவர் உடம்பு மட்டும் தான் கரைக்கு வந்தது, உயிர் கடலுக்குள்ள தான் இருக்கு 


3. குடிப்பழக்கத்தை ஒருத்தன் நிறுத்திட்டான்னா, ஒன்னு அவனுக்கு அல்சர் வந்திருக்கும் இல்ல, காதல் வந்திருக்கும் 

4. மீனவனுக்குன்னு எங்காயாச்சும் தனி தொகுதியிருக்கா?  



5. முஸ்ஸிம் மக்கள் ஆதரிக்கவில்லைன்னா திட்டுறீங்க.. சரி கூட்டமா வந்தா தீவிரவாதம்னு சொல்றீங்க. அதுக்காக நாங்க வாராமய இருக்க முடியும் ?



6. இலங்கை ராணுவம் மீனவன் ஒருவனை சுட்டுக் கொன்றால், தமிழக மீனவன் சுட்டுக் கொல்லப்பட்டான் என்றுதான் சொல்கிறோம். அதனை ஏன் இந்திய மீனவன் என்று சொல்லக்கூடாது’ 


7. மனிதனின் உள்ளம் மட்டும்தான், அவன் தன் இனம் என்பதை மறந்து ரத்தவெறியோடு செயல்படுகிறது.


8.  உடனே தெருவுக்கு வந்திருவீங்களே..?

 நாங்க எங்க உரிமைக்காக போராடினா அது தீவிரவாதமா..?


9.  அம்மா, கை நடுங்குது , சரக்கு அடிக்க காசு குடு 


 கண்ட சரக்கை வாங்கிக்குடிச்சு உடம்பை கெடுத்துக்காம நல்ல சரக்கா வாங்கிக்குடிக்கோணும் 


 சரக்குக்கு பையனுக்கு காசு தரும் ஒரே அம்மா நீயாத்தான் இருக்க முடியும்  


10. கல்லா கட்றியோ இல்லையோ , நல்லா கள்ளா காட்றே? 



 http://cutmirchi.com/upimages/1350572629_sunaina-3ff1bd1c.jpg


11.  நான் சாதா கவிஞன் .ம் .என்ன எழுச்சிக்கவிஞனா மாத்திடாதே?



இந்தா இதை அடி , சரக்கு செம . எந்ந்திரிச்சு நின்னு ஆடுவே 



12. நமக்குள்ளே ஒத்துமை இல்லை,கவர்மெண்ட் பஸ்  டிரைவரை ஒருத்தன் அடிச்சுட்டா ஊர்ல எந்த பஸ்சும் ஓடாது, ஆனா கடல்ல ஒரு மீனவனை சுட்டுக்கொன்னாக்கூட நாம ஏன் நம்ம எதிர்ப்பை பதிவு பண்றதில்லை? 



13. முஸ்லீம் - நீங்க கூட்டம் போட்டா அது புரட்சி , அதுவே நாங்க கூட்டம் போட்டா அது தீவிரவாதம்? 


14. இதை அவன் பேசலை , அவனுக்குள்ளே இருக்கும் “அப்பா” பேசறார், பேச வைக்குது 



15. என்னப்பா? வீட்ல ஏதும் பிரச்சனையா? 


 நோ , பையன் கிட்டே சத்தமா கொஞ்சிட்டு இருந்தேன் .. போய்யாங்



16. மீனவர்கள் சார்பா 4 எம் எல் ஏ இருந்தா அவனவன் அலறி அடிச்சுட்டு பிரச்சனைன்னா வருவான்.



17. பாவ மன்னிப்பு கேட்க வந்தோம் ஃபாதர் 


என்ன பாவம்? 

 பிறந்ததே பாவம் 


 ஏன் தள்ளாடறீங்க..?

 ஹி ஹி பாவம் ஓவர் 



18. சுனைனா - தட்டுங்கள் திறக்கப்படும் , கேளுங்கள் கொடுக்கப்படும் , பைப்பிள்ல சொல்லி இருக்கு 


டொக் டொக் 

 எஸ் 


20 ரூபா கடன் வேணும் 



19. டைஃபாய்டு மாதிரி , காய்ச்சல் மாதிரி குடி ஒரு  வியாதி 



20. நாளைக்குத்தர்றேன்னு சொல்லி உங்க பையன் 50 ரூபா கடன் வாங்குனாரு 


நாளைக்கு - அவன்  அகராதில அடுத்த ஜென்மத்துல -ன்னு அர்த்தம் 


http://cine-talkies.com/movies/tamil-actress/sunaina/sunaina-104.jpg



21. யப்பா , அவனைத்திருத்தறேன்னு சொல்லி  ரொம்ப வலைச்சு ஒடிச்சறாதீங்க , பாவம், சரக்கு கேட்டா வாங்கிக்குடுங்க.. 







22 போதைலயும் ஒரு நிதானத்தை கடைப்பிடிப்பவர்கள் நாங்க, தெரியுமில்ல?

 யூ ஹேவ் குட் ஃபியூச்சர்

 சரி, இப்போ வெள்ளையா ஒரு உருவம் நம்மை கிராஸ் பண்ணிட்டுப்போச்சே, அதுதான் ஃபாதரா?



23. ஒழுக்கமா இருக்கறதுதான் நம்மளை மாதிரி ஏழைங்களோட மிகப்பெரிய சொத்து 



24. எழுச்சிக்கவிஞன் எழுச்சிக்கவிஞன்னு சொல்லிட்டு அடுத்தவன் பாட்டையே பாடிட்டு இருக்கியே, உன் சொந்தப்பாட்டை எப்போ பாடுவே?


25. உள் காய்ச்சல் இது. ஊசி போட்டா அந்த சுகம் போயிடும்



26. தம்பி, நீ ஏதோ சொல்ல வ்ர்றே, ஆனா எனக்குத்தான் எதுவும் விளங்க மாட்டேங்குது 



27. உன் பின்னாலயே நான் வர்றேனே, என்னை மதிக்கவே மாட்டியா? ஏன் என் கூட பேசறதே இல்ல?


எவ்ளவ் தூரம் பின்னாலயே வர்றே? னு பார்க்கத்தான்



28. ஒழுங்கா இருக்கியா?

 யா யா , ஆனா சண்டே வந்தா மட்டும் ஒழுக்கத்துக்கு லீவ் விட்டுடுவோமாக்கும், ஹி ஹி 




29. நீ தோற்ற இடத்துலயே ஜெயிக்கனும், பலவீனமானவர்க்ளை ஜெயிக்க விடனும், அதுதான் வீரம்



30. என்னை என்ன செய்யச்சோன்னாலும் செய்யறேன், ஆனா வேலைக்கு மட்டும் போகச்சொல்லக்கூடாது ,அதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு 







http://1.bp.blogspot.com/_QPkk0qlpQU8/TQwmzWK2GHI/AAAAAAAAAUk/WqMupzBi_BM/s1600/nandita+das.jpg

31 ஆல மர நிழல்ல புல் பூண்டு முளைக்காது


32.  எங்களை மாதிரி வயசான ஆள் சொன்னா எவன் கேட்கறான்? உன்னை மாதிரி இளசுங்க சொன்னாத்தான் வயசுப்பொண்ணுங்க சொன்னாத்தான்
 கேட்கறாங்க 


33. நான் கறுப்பா இருக்கும் வெள்ளைக்காரன், அளவாத்தான் குடிப்பேன் ,

34. இந்தியா முழுக்க ஒரு விதி இருக்கு, அது மீனவன் அல்லாதான் மீன் பிடிக்கக்கூடாது 


35.  இல்லாதவங்களுக்கு கடவுள் இரங்கி வருவான் ( இறங்கியும்) 



36. சுறா மீன் வெயிட் ஜாஸ்தி , எப்படி கடல்ல நீந்துது?


 தண்ணீர்ல அதனோட வெயிட் கம்மி 

 அப்போ இப்போ நாம தூக்கிட்டுப்போகும் மீன்களை ஒரு அண்டா தண்ணில கொண்டு போனா வெயிட் கம்மியா இருக்குமா?  



37. மாத்தறதே மாத்தறீங்க , நல்ல ஃபிகர் இருக்கற இடமா மாத்துனா நல்லாருக்கும் 

 உன் அவசரத்தைப்பார்த்தா பாலியல் புகார்ல உள்ளே போய்ட்டுத்தான் மறுவேலை போல 



38. இனிமே மீனவன் சாவு மழை பெய்யும் நியூஸ் மாதிரி சாதாரணமா ஆகிடும் :((


39. அமெரிக்கா , ஆஸ்திரிஏலியாவுல ஆறு மாசம்   பனி  நம்ம நாட்டுல மட்டும் தான் 12 மாசமும் மீன் பிடிக்க உகந்த சூழல் 


40. மீனைப்பிடிப்பவனை விட , மீனை தின்பவனை விட இடைல வாங்கி விக்கறானே, அவனுக்குத்தான் வருமானம் ஜாஸ்தி , அவன் தான் பணக்காரன்.


http://2.bp.blogspot.com/-JfwQnBa7GQg/TbvTwvH0UFI/AAAAAAAAB7E/yKAHVxDMU4E/s1600/I-AM-AFIA-nandita-das-6.JPG



41. கெட்டுப்போன பேரு பணம் வந்துட்டா காணாமப்போயிடும் 


 ஆமா, பணம் வந்த வழியை யாரும் பார்க்க மாட்டாங்க.. பணம் இருந்தா சரி




42. ஏய், காபி போடு 


 எனக்கு காபி குடிக்கும் பழக்கம் இல்லை.. 

 ஓய், காபி எனக்கு 



43. ரொம்ப நல்லவனா இருந்தா மறந்துடுவாங்க.அப்பப்ப கொஞ்சம் கெட்டவனாவும் இருக்கனும், அப்போதான் ஞாபகத்துல வெச்சுக்குவாங்க 



44. என்னை விரும்பற பொண்ணை நான் அவளை விரும்பலைங்கறதுக்காக எப்படி தங்கச்சின்னு சொல்ல முடியும்? அவ மனசு என்ன பாடு படும்?  பிடிக்கலைன்னா ஒதுங்கிடனும், படுத்தக்கூடாது



45. உன் கிட்டே எனக்குப்பிடிச்சதே உன் காதலிக்கு நீ உண்மையா இருப்பதுதான் 



46 , முதுகா இது? ராஜ நாகம் படம் எடுத்தது மாதிரி 



47. உனக்கு வெட்கமா இல்ல? 

 போடி, ஆரம்பிக்கும்போது இப்டித்தான் சொல்வே


48. சாரி, இருட்ல எதுவும் தெரியாது , மீ வாண்ட் லைட் .. யூ டியூப் லைட் 



49. நீ தான் என் கடல் . புரியுதா? 


 ம்ஹூம்


ம்க்கும்



50 யோவ்.. எப்பவும் “திங்கறதுலயே “ குறியா இருக்காதய்யா


http://www.bollywoodpicturesonline.com/new_jpg/nandita_das_002_dm.jpg




டிஸ்கி -1 படத்தில் இயக்குநர் சீனு ராமசாமியும் இணைந்து வசனம் எழுதி இருப்பதாக டைட்டில் சொல்லுது. ஆனா என் கெஸ்ஸிங்க் என்னான்னா அவர் வசன மேற்பார்வை மட்டும் பார்த்திருப்பார்.அங்கங்கே சில கரெக்‌ஷன் , எடிட்டிங்க் பண்ணி இருப்பார். சப்போஸ் அவர் எழுதி இருக்க வாய்ப்பு  உள்ள ஒரே வசனம்  சுனைனா பேசும் - சாத்தானே ! அப்பால போ! மட்டுமாத்தான் இருக்கும், மீதி எல்லாமே ஜெமோ தான் எழுதி இருக்கனும்  



டிஸ்கி 2 - முறைப்படி வசனகர்த்தா  ரைட்டர் ஜெயமோகன் சார் படம் தான் இதுல போடனும், ஆனா பாருங்க அப்புறம் எல்லாரும் என்னை ஆணாதிக்க வாதின்னு சொல்லிடுவாங்க. இந்த அட்ரா சக்க பெண்களுக்கு 100% இட ஒதுக்கீடு தரும்னு உலகத்துக்கே தெரியும் , ஹி ஹி




http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/11/neerparavai_movie_review.jpg