Showing posts with label SUJATHA. Show all posts
Showing posts with label SUJATHA. Show all posts

Thursday, September 13, 2012

பூனை- சுஜாதா- கற்றதும் பெற்றதும் -பாகம் 2

ரயில் பயணத்தின் போது ஏற்படும் அனுபவங்கள் சில மறக்க முடியாதவை.
கீழ்வரும் அனுபவத்தைச் சந்தோஷமா, சங்கடமா என்று நீங்களே தீர்மானியுங்கள்.

ஒரு முறை பெங்களூரிலிருந்து சென்னை வரை பிருந்தாவனில் பயணம்
செய்தபோது,ஒரு மாமா எதிர் ஸீட்டில் உட்கார்ந்துகொண்டு என்னையே ஐந்து மணிநேரமாகப்பார்த்துக் கொண்டிருந்தார். நான் தாங்க முடியாமல் அரக்கோணம்தாண்டியதும்கேட்டேவிட்டேன்.

“உங்களுக்கு ஏதாவது பேசணுமா ?”

“இல்லை….” என்று தலையாட்டினார்.

ஒருவேளை ஊமையோ என்றால், ஜிலேபிகாரரிடம் சில்லறை கேட்டு
வாங்கும்போதுபேசியிருக்கிறார்.

“ஏன் என்னையே பார்த்துண்டிருக்கீங்க ?”

“நீங்கதானே இந்தக் கதையெல்லாம் எழுதறவர் ?” என்று கையில் மானசீகமாக
எழுதிக் காட்டினார்.

“ஆமாம்….” என்றேன்.

“அந்தப் பூனையை அந்தக் கதையில ஏன் ஸார் சாகடிச்சீங்க ?”

“எந்தப் பூனையை எந்தக் கதையில ?”

“உங்க கதைகளைப் படிக்கறதையே அதுக்கப்புறம் நிறுத்திட்டேன்….”

“எந்தப் பூனை ?”

“ஒரு படப்பிடிப்பில் கறுப்புப் பூனை….”

எனக்குச் சட்டென்று கதை ஞாபகம் வந்தது. படப்பிடிப்புக்காக எடுத்துச்
சென்ற பயிற்சி பெற்ற பூனை, வில்லனைப் பிறாண்டி விடுவதால், அதன் ஓனர்அதை….


வேண்டாம், நீங்கள் படித்திருந்தால் you get the idea . “அந்தப்
பூனை உங்களை என்ன பண்ணித்து ? எதுக்காக வாயில்லா ஜீவனைப் போய்க்
கொன்னீங்க ?” என்று அவர் கேட்ட போது அவர் கண்களில் நீர் ததும்பியது.




“பூனையைப் பத்தி என்ன ஸார் தெரியும் உங்களுக்கு ? எத்தனை மில்லியன்
வருஷங்களா அது மனிதனோட வாழறது தெரியுமா ? கிளியோபாட்ரா காலத்தில் அதைத்தெய்வமா மதிச்சாங்க. எத்தனை வருஷமானாலும் ஒரு பூனையால மனிதனைச் சாராமல்வாழ முடியும், தெரியுமா ?”



நான் மையமாகப் புன்னகைத்தேன்.



“நீங்க அதைக் கொன்னிருக்கக் கூடாது. அதை அவன் ரோட்டுல விட்டிருந்தாக்
கூட, எங்கேயாவது பிழைச்சுப் போயிருக்கும்….”



“வீட்டுக்குத் திரும்பி வந்துடுமே ஸார் ?”



“அதைவிட்டு சுவத்துல…. சொல்லவே கூச்சமா இருக்கு. கிராதகன் ஸார் நீங்க!
அஞ்சு மணி நேரமா உங்களை என்ன பிராயச்சித்தம் பண்ண வைக்கலாம்னு
யோசிச்சிண்டிருந்தேன். நீங்க உங்க கதைல பூனையை ஒரு அதிர்ச்சிக்காகக்
கொன்னிருக்கீங்க. எங்காத்துல எட்டுப் பூனையை வளர்த்தவன் நான். எவனும்
அப்படிச் செய்ய மாட்டான்.”




தனது மஞ்சள் பையில் கை விட்டு எதையோ ஆராய்ந்தார். எனக்குத்
திக்கென்றது.ஆயுதம் தேடுகிறாரா, என்ன?




“ஸாரி… நான் பல கதைகளில் பல மிருகங்களைக் காப்பாற்றியிருக்கிறேன். எனக்கு மிருகங்கள்னா பிரியம். இந்தக் கதையில் அவனுடைய ஆத்திரத்தின்
வெளிப்பாடு….”



“வெளிப்பாடாவது, உள்பாடாவது…”



அவர் சமாதானமாகவில்லை.

வண்டி சென்ட்ரலில் வந்து நின்றதும், “நீங்க கொன்ன அந்தப் பூனைக்கு ஒரே
ஒரு ப்ரீத்தி பண்ணிடுங்கோ. ஒரு எய்ட் அண்ட்ரட் ருப்பீஸ் செலவழிச்சா, அந்த
ஜந்துவைக் கொன்ன பிரம்மஹத்தி உங்களைத் துரத்தாது. ஏற்பாடு பண்ணவா ?”



“என்கிட்டே எய்ட் அண்ட்ரட் இல்லை…”



“செக்கா கொடுத்தாலும் பரவாயில்லை….”



எப்படித் தப்பித்தேன் ?



“ஒண்ணு பண்ணுங்க…. அது என்ன பூஜைன்னு சொல்லுங்கோ…. எனக்குத்
தெரிஞ்சவாத்தியாரை வெச்சிண்டு பண்ணிடறேன்…..”



அவர் என்னைக் கடைசி வரை சபித்துக் கொண்டுதான் சென்றார்.



அதிலிருந்து கதைகளில் நான் பூனைகளைக் கொல்வதில்லை.



– சுஜாதா (கற்றதும் பெற்றதும் பாகம் II )

Monday, August 20, 2012

Bicentennial Man (1999) -ஷங்கர்-ன் எந்திரன் -ன் மூலம்- ஒரு பார்வை

http://ecx.images-amazon.com/images/I/51PBTXBTSFL._SL500_AA300_.jpg

ரோபோ, ஒரு பெண்ணை உருகி உருகிக் காதலித்தால்? பஸ்களைக் கவிழ்த்து அட்டகாசம் செய்யாமல் உணர்ச்சிகளால் நிரம்பிய சாந்தமான மனிதனாக வாழ்ந்தால்? அப்படியொரு ரோபோ படம் 1999-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது! க்ரிஸ் கொலம்பஸ் இயக்கியிருந்த அந்தப் படத்தின் பெயர் Bicentennial Man.



தமது வீட்டு வேலைகளைச் செய்வதற்காக ‘ஆண்ட்ரு’ என்கிற ரோபோவை வாங்கி வருகிறார் மார்ட்டின். சுட்டியாகவும் அறிவாளியாகவும் இருக்கும் ஆண்ட்ருவை, மார்ட்டினின் மூத்த மகளுக்குப் பிடிப்பதில்லை. குழந்தைகளுக்கே உரிய வெறுப்பின் காரணமாக ரோபோவை வீட்டை விட்டு வெளியேற்ற விரும்புகிறாள். ஆனால், முயற்சிகள் தோல்வியடைகின்றன. வெறுப்பின் உச்சகட்டமாக வீட்டு மாடியில் இருந்து குதிக்கும்படி ரோபோவுக்கு உத்தரவிடுகிறாள். ஆண்ட்ரு, எஜமானியின் உத்தரவுக்குக் கட்டுப்படுகிறது. ஆண்ட்ருவின் பெரும்பகுதிகள் நொறுங்கிப் போகின்றன.



கோபமடையும் மார்ட்டின், ரோபோவை நமது குடும்ப உறுப்பினரைப் போலவே நடத்த வேண்டும் என மகள்களிடம் கண்டிப்புடன் உத்தரவிடுகிறார். ‘ரிப்பேர்’ செய்யப்பட்டு வீடு திரும்பும் ஆண்ட்ரு அந்த வீட்டின் ஒரு செல்லப்பிராணி ஆகிறது. ஒரு கட்டத்தில் இன்னொரு உறுப்பினராகவே மாறுகிறது. தவிர, மகள்களின் உற்ற தோழனாகவும் மாறிவிடுகிறது.


http://images5.fanpop.com/image/photos/25300000/Bicentennial-Man-robin-williams-25340319-2126-1433.jpg

ஒரு நாள் மார்ட்டினின் இளைய மகள் ‘லிட்டில் மிஸ்’ஸின் கைவினைப்பொருள் ஒன்றை உடைத்துவிடும் ஆண்ட்ரு, அதே போன்ற பொம்மையை, தத்ரூபமாக வடிவமைக்கிறது. ஆண்ட்ரு, சுயமாகச் சிந்திப்பதையும் அதன் க்ரியேட்டிவிட்டியையும் அறிந்துகொண்ட மார்ட்டின் ரோபோ தயாரிப்பாளர்களிடம் கொண்டு செல்கிறார். மற்ற ரோபோக்களும் ஆண்ட்ருவைப் போலத்தானா என்பதை அறிந்து கொள்வதுதான் அவரின் நோக்கம். ஆனால் ஆண்ட்ரு சிந்திப்பதை அறியும் நிறுவனத்தின் தலைமை அதிகாரி, ரோபோ சுயமாக சிந்திக்கத் தொடங்கினால் எதிர்காலத்தில் விளைவுகள் விபரீதமாகிவிடும். எனவே, ஆண்ட்ருவை அழித்துவிடுவதுதான் நல்லது என்று வாதிடுகிறார்.





ஆனால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மார்ட்டின் அதைத் திரும்பவும் வீட்டுக்கு அழைத்து வருகிறார். அதோடு நில்லாமல் மனித உணர்ச்சிகளைப் பற்றிய பாடத்தை நடத்துகிறார். ஆண்ட்ரு, உணர்வுகளால் நிறைந்த மனிதனாக மாறுகிறது. மார்ட்டினிடம் இருந்து கற்றுக் கொண்ட மர வேலைகளின் மூலமாக ஆண்ட்ரு சுயமாகச் சம்பாதிக்கிறது. வங்கிக் கணக்கு தேவைப்படும் அளவுக்குக் கொட்டுகிறது வருமானம். இந்நிலையில் தமக்கு உத்தரவிடும் எஜமானர்களிடம் இருந்து விடுதலை தேவை என்பதை விரும்பும் ஆண்ட்ரு, வீட்டை விட்டு வெளியேறுவதற்கு மார்ட்டினிடம் அனுமதி கோருகிறது. மார்ட்டின் வேதனையுடன் அனுமதியளிக்கிறார்.



தம்மைப் போலவே வேறு ஏதேனும் ரோபோக்கள் இருக்கின்றனவா என்பதைத் தேடி அலையும் ஆண்ட்ரு, கெலேட்டி என்னும் ஒரு பெண் ரோபோவை கண்டுபிடிக்கிறது. ஆனால் அந்த ரோபோவுக்கு ஆண்ட்ருவைப் போல திறமைகள் இல்லை. கெலேட்டியை டெவலப் செய்வதற்கு அதன் உரிமையாளருக்கு ஆண்ட்ரு நிதியுதவி செய்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மார்ட்டினின் இளையமகள் ‘லிட்டில் மிஸ்’ மரணப்படுக் கையில் இருக்கும்போது அவளைக் காண வருகிறது ஆண்ட்ரு.



அவளுக்காக, சிறு வயதில் ஆண்ட்ரு செய்து கொடுத்த பொம்மை அங்கே இருப்பதை மிகுந்த காதலுடன் பார்க்கிறது. அப்போது லிட்டில் மிஸ் கண்ணை மூடுகிறாள். இந்தச் சமயத்தில் ‘லிட்டில் மிஸ்’ஸின் பேத்தி போர்ஷியா ஆண்ட்ருவுக்கு அறிமுகமாகிறாள். அச்சு அசலாக தன் பாட்டியைப் போலவே இருக்கும் அவளிடம் ஆண்ட்ருவுக்குக் காதல் பூக்கிறது. போர்ஷியா மிகுந்த குழப்பமடைகிறாள். ஆனால் அவளின் இதயத்தை தமது காதல் மிகுந்த சொற்களால் வென்றெடுக்கிறது ஆண்ட்ரு. போர்ஷியாவும் ஆண்ட்ருவை காதலிக்கிறாள்.



அவர்களின் காதலை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தம்மை மனிதனாக அறிவிக்கும்படி உலக அறிவியல் கழகத்திடம் விண்ணப்பிக்கிறது ஆண்ட்ரு ரோபோ. ஆனால் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகு ஆண்ட்ருவுக்குச் செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்டு முழு மனிதனாகிறது. பிறகு ஆண்ட்ரு மூப்படையத் தொடங்குகிறார். தமக்கும் மூப்பும் மரணமும் வரும் என்று மீண்டும் உலக அறிவியல் கழகத்திடம் விண்ணப்பிக்கிறார் ஆண்ட்ரு. மனித வாழ்வின் அத்தனை சிக்கல்களையும் சந்தித்துவிட்டு மரணத்தை எதிர்நோக்கும் போது ரோபோவை மனிதனாக ஏற்பதாக உலக அறிவியல் கழகம் அறிவிக்கிறது. இந்த அறிவிப்பைப் பார்த்தபடி ஆண்ட்ரு மரணிக்கிறார்; போர்ஷியாவும் ஆண்ட்ருவுடன் இறந்து போவதாக இந்தக் காதல்காவியம் முடிவடைகிறது.

http://movie2s.com/aimages/BicentennialMan.jpg



ஐசக் அஸிமவ்வின் நாவலைத் தழுவிய இந்தப் படம் ‘ரோபோ என்பது வெறும் இயந்திரம்’ என்ற பொதுவான கருத்தை அடித்து நொறுக்கியது. ஆசை, காதல், கோபம்... என அத்தனை மனித உணர்ச்சிகளையும் தமக்குள் அடக்கி வைத்திருக்கும் இன்னொரு உயிர்தான் ரோபோ என்று சினிமாவின் சாத்தியங்களைப் பயன்படுத்தி க்ளாஸிக்காக வெளிப்படுத்தியது. இந்தப் படத்தின் தழுவல்தான் ரஜினியின் ‘எந்திரன்’ என்ற பேச்சுக்கூடக் கிளம்பியது. அது இருக்கட்டும். இந்தப் படத்தின் கதை உண்மையாக நடப்பதற்கான வாய்ப்பிருக்கிறதா? நடந்துவிடக்கூடும். அறிவியலில் எதுவுமே சாத்தியம்தான். சாத்தியமாக்குவதற்குக் கொஞ்சம் கால அவகாசம் தேவை. அவ்வளவுதான்.



ரோபோ டான்ஸர்!


ஆகஸ்ட் ஒன்றாம் தேதி சில செய்தி சேனல்களில் சீனாவில் ஃப்யுஜின் என்ற இடத்தில் நடைபெற்ற ரோபோவின் நடன நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். ஸோலோ, க்ரூப் டான்ஸ் என்று பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள் ரோபோ டான்ஸர்கள். இதை எப்படி வடிவமைத்திருப்பார்கள்?



முதல் ரோபோ வலது கையை உயர்த்தும்போது மற்ற ரோபோக்களும் வலது கையை உயர்த்தினால்தான் அது க்ரூப் டான்ஸ். இல்லையேல் அது டுமீல் டான்ஸ். முதல் ரோபோ வலது கையை உயர்த்தப் போகிறதா அல்லது தலையை அசைக்கப் போகிறதா என்பதை மற்ற ரோபோக்கள் அறிந்துகொள்ள அவற்றுக்கு இடையே தொடர்பியல் (communication) மிக முக்கியம். இந்தத் துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால் ரோபோக்கள் ஃப்ரொபஷனல் டான்ஸர்களாக இன்னும் சில வருடங்கள் ஆகக் கூடும். அதுவரை ஸ்ரேயாவுக்கும், தமன்னாவுக்கும் பதிலாக ரோபோவை ஆட வைத்து விடுவார்களோ என்ற கவலை தேவையில்லை.
http://all-movie-goofs.info/wp-content/uploads/bicentennial-man-movie-still-9.jpg



நன்றி - கல்கி , புலவர் தருமி

Sunday, August 12, 2012

இரண்டணா - சுஜாதா - சிறுகதை

இப்போதும் சிலர் இரண்டணா நாலணா என்ற சொற்களைப் பயன்படுத்தினால் சுதந்திரத்துககு முன் பிறந்தவர்கள் என்று நிச்சயமாக சொல்லலாம் இரண்டணா ஒரு தனி நாணயம். பித்தளை. சதுர வடிவில் இருக்கும். ஒரணா போல அசிங்கமான நௌ¤நௌ¤கள் இல்லாமல் கூர்மையான முனைகளை மழுப்பி ஒருபககததில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் தன் தலையில் கிரீடத்துடன் சைடுவாகாக பார்த்ததுக கொண்டிருப்பார். அவர் கிரீடத்தை துக்கிப் பார்ததால் அப்போது தான் கிராப்பு வெட்டிக் கொண்டிருக்கலாம் என்று தோன்றும்





இரண்டணா அந்த தினங்களின் பொருளாதாரத்தில் முக்கியமான நாணயம் இந்த நாட்களின் எட்டுபைசாவுக்கு சமம் என்று அதை அலட்சியம் பண்ணிவிடாதீர்கள் நான் சொல்லும் நாட்களில் சீரங்கம் திருச்சி பஸ் கட்டணம் இரண்டணா. பெனின்சுலர் கபேயில் தோசை இரண்டணா . கிருஷ்ணன் கோட்டை வாசலில் இலநதைப்பழம் லேக்கா உருணடை கொடுக்காப்புளி எல்லாமே காலணாதான் அதாவது இரண்டணாவில் எட்டில் ஒரு பங்கு. டிபிஜி கடையில் அழிக்கும் ரப்பர் கட்டைபேனா மசிக்கூடு ரூல்டு பேப்பர் ப்ளாட்டிங் பேப்பர் வாங்கியும் இரண்டணாவுக்கு சில்லரை தருவார் அல்லது ஒரு புளிப்பு மிட்டாய் தருவார் .



 வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது மார்கழி மாதத்தில் பகல் பத்தில் தேர்முட்டியருகில் தரையில் பள்ளம் தோண்டி துருத்தி வைத்து சாணி பூசி பெரிய வாணலி அமைத்து அதில் கொள்ளிடம் மணலைக் கொட்டி அதனுடன் வருக்கப்பட்டு உற்சாகமாக வெடிக்கும் பட்டாணி ஒரு பை நிறைய இரண்டணாவுக்கு கிடைக்கும், இரவு பெடரமாக்ஸ் வெளிச்சத்தில் பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதை கொக்கோகம் போன்ற புத்தகங்கள் எங்கேயோ பார்த்துக்கொண்டு வாங்கலாம். ரங்கராஜாவில் ‘காப்டன் மார்வல் ‘படம் தரைடிக்கெட் இரண்டணா. தங்கராசு மிதிவண்டி நிலையத்தில் அவர்சைக்கிள் இரண்டணாவுக்கு எடுக்கலாம் அதற்கு கீழே ஒரணா அரையணா காலணா தம்பிடி போன்ற பரிவார நாணயங்கள் இருந்ததால் இரண்டணா இருக்கிறவன் ஆகாகான் போல உணரலாம்



விகடன் பத்திரிகை நீல நிறத்தில் அச்சிட்ட சிறுவர் மலருடன் இரண்டணா .ஒரு பாக்கெட் கலர்கலராக இருக்கும் பலப்பம் இரண்டணா. லிப்ஸ்டிக் போல சிவப்படிக்கும் மிட்டாய் ஐஸ்கட்டியை சரக்சரக் கென்று தேய்த்து சர்பத் ஊற்றி உறிஞசுவதுடன் ஒரு காத்தாடி தலையாரி பம்பரம் எல்லாம் வாங்கலாம் என்ன என்ன வெல்லர்ம இரண்டணாவில் வாங்கலாம்!




அப்பேற்பட்ட இரண்டணா நாணயத்தை தொலைத்துவிட்டேன் சொல்கிறேன் பாட்டி என்னை ஒரு ஆழாக்கு எண்ணெய் வாங்கிக்கொண்டு வா என்று இரண்டணா கொடுத் அரையர் கடைக்கு அனுப்பினாள் கூடவே ஒரு கிண்ணியும் கொடுத்தாள். ஈயம் பூசினது வாயகன்றதுநான் அந்தவயசில் ஸ்தலத்திற்கு ஸ்தலம் ஓட்டம் தான் ஒரு நிமிஷத்துக்குள் அரையர் கடைக்கு வந்து “மாமா ஒரு ஆழாக்கு எண்ணெய்” என்றேன் அரையர் கடை என்று எப்படி பெயர் வந்தது தெரியாது கடை சொந்தக் காரர் அரையர் இல்லை அய்யங்கார்தான்.


ஆனால் கோவில் அரையர்கள் பரம்பரையெல்லாம் கீழ உத்திர வீதியில் இருந்தார்கள் இநத அரையர் எங்கள் வீட்டிற்கு எடடுவீடு தள்ளி இருந்தார் சாதி வழக்கத்துககு மாறாக பலசரக்கு கடைவைத்திருநத ஒரே அய்யங்கார் சன்னமான குரலில் வரவேற்பார் எப்போதும் பலகையில் உட்கார்ந்து கொண்டிருப்பார் நிலக்கடலையோ முந்திரிப்பருப்போ எதையும கண்ணெதிரே ,இருந்தாலும் வாயில் போட்டுக் கொள்ள மாட்டார். கையில் பனை விசிறிக்கொண்டு இருப்பார் அவர் கடையில் ஏலக்காய் கிராம்பு கோதுமை அரிசி லவங்கப்பட்டை சீமெண்ணை எல்லாம் கலந்து ஒரு சுகமான வாசனை வீசும்




“என்ன எண்ணைடா நல்லெண்ணையா தேங்கா எண்ணெயா ஆமணக்கு எண்ணெயா விளக்கெண்ணையா வேப்பெண்ணையா ” என்றார்



அப்போதுதான் இவ்வளவு எண்ணெய் இருப்பது தெரிந்து நான் மீண்டும் பாட்டியிடம் ஓடி வந்து “என்ன எண்ணை பாட்டி?”



“உன்னை கன்னம் கன்னமா இழைக்கணும் நம்மாத்தில எப்பவாவது நல்லெண்யைதவிர எதாவது பயன்படுத்துவமா நல்லெண்ணைதாண்டா”




மீண்டும் ஓடிப்போய் “ ஒரு ஆழாக்கு நல்லெண்ணை மாமா”



“நல்லெண்ணை ஆழாக்கு ரெண்டரை அணா ஆச்சேப்பா பாட்டி கிட்ட போய் இன்னும அரைணா வாங்கிண்டு வரயா” நான் மீண்டும் ஓடி வந்து சொல்ல“ ஏண்டா மடயா ஆழாக்கு ரெண்டரை அணான்னா ரெண்டணாவுக்கு உண்டானதை வாங்கிண்டு வரதுக்கென்ன புத்திகிடையாதா உனக்கு” இப்படி பரபக்கபரக்க ஓடிண்டேருப்பியா“




”நீ சொல்லவே இல்லையே பாட்டி“ என்றேன் நியாயம் தானே ”காதுல வாங்கிக்கோ அரையர் கிட்டபோயி போன வாரம்தான் ரெண்டணா ஆழாக்கு ஒரு முழு ஆழாக்கு கொடுத்தாரேன்னு கேளு இல்லைன்னா முக்காலே மூணுவீசம் ஆழாக்கு போடச் சொல்லு நன்னா பார்த்து எல்லா எண்ணெயும் பாத்திரத்தில விழுந்து கீழசொட்டாம வாங்கிண்டு வா வரப்ப ஓடி வராதே கொட்டிடப்போறே “ இந்த எச்சரிக்கைகளுக்கெல்லாம் தேவை இல்லாதபடி அடுத்த முறை அரையர் கடைக்கு போக விடாமல் வழியில் ஒரு சம்பவம் நிகழந்தது




ராஜன் கேர்ள்ஸ் ஸ்கூல் எதிரில் தெரு நடுவில் தேர்முடடியருகில் கொட்டு சப்தம் கேட்டது அதைக் கடந்துதான் அரையர் கடைக்கு போக முடியும் கூட்டம கூடிக்கொண்டிருந்தது நையாண்டி மேளம் கேட்டது . மத்தளம் அவ்வப்போது உருமியது பைஜாமா அணிந்த ஒரு சிறுமி அலட்சியமாக உள்ளங்கைகளை தரையில அழுத்தி பல்ட்டி அடித்து சுற்றி வந்தாள் அவளைவிட சற்றே பெரிய சிறுவன் ஒரு கழியை லாவகமாக துக்கி நிறுத்த மஸ்தான் தரையில் வட்டம வரைந்து அதில் பாம்புப் பெட்டிகள் ஒரு மகுடி வேறு என்னஎன்னவோ உபரகணங்கள் கோழிமூககு இறகு போர்த்திய போர்வை கருப்புத் துண்டு என்று பலவித உபகரணங்களை பரப்பிக் கொண்டிருக்க ”வாங்க வாங்க நாகூர் பாபா மோடி மஸ்தான் பரம்பரை , மனுசனை பாம்பாக்குவேன் பாம்மை மனசனாக்குவேன் “ ஒரு கீரி ஆணியில் தனிப்பட்டு சுற்றி வந்து கெர்ணடிருக்க மோடி மஸ்தான் என்னையே பார்த்து ”பயப்படாத பக்கத்ல வந்து குந்து“ என்று என்னை அழைத்தான் அந்த பரட்டைததலை சிறுமி சின்ன பல்வரிசையில் என்னைப் பார்த்து சிரித்தாள்




ஆழாக்கு எண்ணெயை மறந்தேன் முதல் வரிசையில்போய் உட்கார்ந்துகொண்டுவிடடேன் அவ்வப்போது மத்தளம் தட்டிக்கொண்டு அவன் இடைவிடாமல் பேசினான்




”கந்துமதக்கரியை வசமாக்கலாம் கரடிபுலி வாயைக் கட்டுவேன் சிங்கத்தை முதுகிலல போட்டுப் பேன் பாம்பை எடுத்து ஆட்டுவேன் … இது என்ன?“ என்ற சபையோரில் ஒருவரை கேட்டான்




”ஒரணா“ ”என்னது ஒக்காளியா“ என்று கேட்க சபையில் சிரிப்பு ”நெருப்பில அரதம்வச்சு வேதிச்சு வித்துருவேன் வேற யாருமபார்க்காம உலகத்தில உலாவுவேன் எப்பவும் இளமையா இருப்பேன் மத்தொருவன் சரீரத்தில பூந்துருவேன் தண்ணில நடப்பேன் நெருப்பில குந்துவேன் எல்லாம் எதுக்காக?“ என்று கேள்வி கேட்டு தயங்கி தன் சட்டையை நீக்கி பட்டென்று வயிற்றில் எதிரொலிகேட்கத் தட்டி ”பாழும் வவுத்துக்காக!“




”நீ காசு கொடுக்கவாணாம் உன் காசை உம் மடிலயே வெச்சுக்க வித்தை பாரு பாத்து மஸ்தான் குஷியாயிருச்சுன்னு ஒரணா ரெண்டணா கால் ரூபா அரை ரூபா ஒரு ரூபா தட்ல போடு பச்சைப்புள்ளையை பந்தாடப் போக்ஷற்ன்“ எல்லாரும் பலமா கைத்தட்டுங்க என்று சொல்லி நாங்கள் கைதட்ட காத்திராமல் உய் உய் என விசிலடித்தான்




நான் அவன் வித்தையில் பரிபூர்ணமாக ஐக்கியமானேன் ”தகிரியமுள்ளவங்க யாராச்சும் இருந்தா வாங்க“ என்று கேட்க ஒரு சிறுவன் முன்னால்வந்து நின்றான் அந்தப் பையனை கூப்பிட்டு அவன்முன் விரல்களை என்னவோ பண்ண அவன் சட்டென்று துங்கிப்போக அழுக்குத் துணடால் போர்த்திப் படுக்க வைத்தான் ”யார் வூட்டுப் புள்ளையோ இது“ என்றான் தரையில் ஒரு முகம் வரைந்தான் அந்த முகத்திற்கு ஒரு வாய் மட்டும் பெரிசாக வரைந்தான் பக்கத்தில் ஒரு பேனாக்கத்தியை வைத்தான் பாம்புப் பெட்டியைத திறந்து அதை உசுப்பிவிட ஒரு முறை அவன் மணிக்கட்டில் கொத்தியது த என்று அதை அதட்டினான்



உள்ளுணர்வில் அஙகிருந்து விலகவேண்டும என்றுதான் தோன்றியது ஆனால் கட்டிப்போட்டவன் போல ஆகிவிட்டேன சன்மத்துககு இந்த இடத்தைவிட்டு விலகப் போவதில்லை கீரிப்பிள்ளை ஒன்றுக்குப்போனது அந்த பைஜாமா சிறுமி பெரிய கொம்பை வைத்துக் கொண்டு அவன் தோளிலிருநது கயிற்றுக்கு எவ்வி அதன்மேல லாவகமாக நடந்தாள் அதன்பின் கழி முனையில் படுத்திருக்க இவன் கீழே இருந்து பாலன்ஸ பண்ணி அவளை சுற்றினான் இந்த நேரத்தில் எல்லாம் பையன் கண்மூடிப் படுத்திருந்தான் எனக்கு மிகவும் கவலையாக இருந்தது ”யார் பெத்தபுள்ளையோ இதை எழுப்பவாணாமா?“




”வித்தை பாத்திங்கோ இப்ப நம்ம ராணி தட்டு கொண்டாருவா ஒரணா ரெண்டணா“ என்று சொன்னபோது சபையோர் மெல்ல எழுநதிருக்க ”ஏய்!“ என்று குலை நடுங்குமாறு ஒரு அதட்டுப் போட்டான் ”பாப்பார தெருவில வித்தை காட்டிட்டு காசு வாங்காம போகமாட்ன் நீ மட்டும காசு தராம வூட்டுக்கு போனே என்ன ஆகும்பாரு“ என்று கையில் அந்த பேனைக்கத்தியை எடுத்து தரையில் வரைந்திருந்த வாயில் கீறினான் படுத்திருந்த பையன் வாயிலிருந்து ரத்தம் வடிந்தது ”இதான் உனக்காகும் ராத்தரி“ அப்டியே எல்லோரும் மூச்சடங்கி கதிகலங்கி ப்போய் நின்றோம் மௌமான சூழ்நிலையில் அவன் கத்தியைக் காட்டிக்கொண்டே மெல்ல எங்களிடம வந்தான் நான் எனனிடமிருந்த இரண்டணாவைப் போட்டதை அவன் பார்க்கக் கூட இல்லை உடுக்கை அடித்துக் கொண்டே சற்றி வந்தான் கீரி சுற்றிக் கொண்டு இருந்தது வித்தை எப்போது முடிந்தது ஞாபகமில்லை மெல்ல கனவிலிருந்து விடுபட்டவன்போல நடந்து வந்தேன்




வீட்டின் அருகில் வந்தபோதுதான் நிஜ உலகத்து நிதர்சனங்கள் எனக்கு உரைக்க ”எங்கே இரண்டணா“ என்பதுமட்டுமின்றி எங்கே கிண்ணி? கிண்ணியையும் வைத்துவிட்டு வந்துவிட்டேன பாட்டி சமயலறையிலிருநது குரல் கொடுத்தாள்” ஏண்டா இத்தனை நாழி எண்ணையை மோடைமேல வச்சுட்டு பாடம் படிக்கபோ“ என்றள் மீண்டும தெருக்கோடிக்கு ஓடினேன் அதற்குள் வித்தைக்காரன் சாமக்கிரியைகளை கவர்நதுகொண்டு சென்றிருக்க வேண்டும விறிச்சோடியருந்தது தெரு. போய்விட்டான்





நான் செய்வதியறியாது திகைத்து நிற்க தெற்கு சித்திரை வீதி மூலையில் மீண்டும் கொட்டு சப்தம்எதிரொலிததது சப்தம் வந்த திசையை நோக்கி ஓடினேன் தெற்குவாசல் அருகில் வாணி விலாஸ் பிரஸ் எதிரில் அவன் அடுத்த டேரா போடடிருக்க மெல்ல கூட்டம் கூடிக் கொண்டிருந்தது வித்தைககாரன் அருகில் சென்க்ஷற்ன அந்தப்பையன், வாயில் ரத்தம் வந்து கிடந்தவன் பைஜாமா பெண்ணுடன் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தான்




வித்தைக்காரன் எங்கள் விட்டுக் கிண்ணியை திருப்பித் திருப்பிப் பார்ததுக் கொண்டிருந்தான் இது எவ்வளவு பெறும் என்பதுபோல் ”வா தம்பி“ ”நான் வந்து கீழ சித்திரைவீதில விததை பார்க்க வந்தேங்க கிண்ணியை விட்டுட்டு போய்ட்டடங்க அந்த கிண்ணி என்னுது“ ”தம்பி வந்தியா கிண்ணி தரேன் ஆனா ஒருகண்டிசன் “என்ன ”எங்கூட வரியா வித்தைகாட்ட லர்ல்குடி பிச்சாண்டாரகோவில் இந்தபக்கம் குளித்தலை அந்தப்பக்கம் புதுக்கோட்டை வரைக்கும போகலாம்“ என்றாள். பைஜமா சிறுமி என்னைப் பார்த்து மோகனமாக சிரித்தாள்




”ஏபிசி புஸ்தவம் வெச்சிருக்கியா“ என்று கேட்டாள் நான் அங்கேயே உட்கார்ந்து கொண்டு விசும்ப ஆரம்பித்தேன் ”என் கிண்ணியை கொடு“ ” கொடுக்கறேன் கொடுக்கறேன் “ அவன் என்னிடம அந்த கிண்ணியை கொடுக்காமல் அவவப்போது நீட்டி நீட்டி கொடுப்பதுபோல் கொடுதது கையை இழுத்துக கொண்டான் நான் பெரிசாக அழ ஆரமபித்ததும் கொடுத்தான் ”கிண்ணியை கொடுத்துடடு வந்துரு நல்ல ஐயர் வூட்டு சாப்பாடு போடடறேன் ஊர் உலகமெல்லாம் சுத்தலாம் பனாரஸ் அலகாபாத் கல்கத்தா “ நான் வீட்டுக்கு திரும்பும்போது அந்தப் பெண் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள் ”வரல்ல? வரப்ப ஏபிசி பொஸ்தவம் கொண்டுட்டுவா” என்றாள் நான் ஓடிவந்து அவசரமாக என் உண்டியலை உடைதது எட்டு காலணா சேர்த்து அரையர் கடைக்கு போய் எண்ணை வாங்கிக்கொண்டு வந்து விட்டேன், *





பாட்டி திட்டுவாளோ என்று நான் வித்தைக்காரருடன் போயிருந்தால் என்ன ஆகியிருப்பேன் என்று இந்த வயசில் எப்போதாவது எண்ணிப் பார்ப்பேன் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு ஒருகையால் மத்தளம் தட்டிக்கொண்டு மற்றொரு கையால்புல்லாங்குழல் வாசிக்க அந்தப் பெண் சுழனறு சுழன்று ஆட…. எது எப்படியோ இந்தக் கதையை எழுதியிருக்க மாட்டேன்.



நன்றி - சுஜாதா , உயிர் மெய், சிறுகதைகள்

Saturday, August 11, 2012

அப்பா அன்புள்ள அப்பா - சுஜாதா - சிறுகதை

செய்தி வந்த உடனே பஸ் பிடித்து சேலம் போய்ப் பார்ததால் அப்பா படுக்கையில் உட்கார்ந்திருந்தார்.




“எங்கே வந்தே” என்றார்.



“உனக்கு உடம்பு சரியில்லைன்னு” என்று மழுப்பினேன்.



“நேற்று வரை சரியில்லாமல்தான் இருந்தது. டாக்டர்கள் என்னமோ பண்ணி உட்கார வைத்து விட்டார்கள்.சாப்ட்டியா?”என்றார்” எனக்கு என்ன வாங்கிண்டு வந்தே?”



“என்னப்பா வேணும் உனக்கு”



“உப்பு பிஸ்கட். கொஞ்சம் பாதாம் அல்வா. அப்பறம் ஒரு சட்டை வாங்கிக் கொடுத்து விட்டுப் போ-”



சட்டையைப் போட்டு விட்டதும் “எப்படி இருக்கேன்” என்றார்.



பல்லில்லாத சிரிப்பில் சின்னக் குழந்தை போலத்தான் இருந்தார்.



நர்ஸ் வந்து “தாத்தா உங்க மகன் கதைகள் எல்லாம் படிச்சேன். ரொம்பஇன்டெலிஜெண்ட்” என்றதற்கு “நான் அவனை விட இன்டெலிஜெண்ட்” என்றார்.




பேப்பர் பேனா எடுத்து வரச்சொல்லி “உன் முன்னோர் யார் என்று அபபுறம் தெரியாமல் போய் விடும்” என்று வம்சாவழியைச் சொல்லி எழுதிக் கொள்ளச் செய்தார். ஞாபகம் தௌவாக இருந்தது. முதன் முதன் முதல் திருவாரூரில் நுறு ரூபாய் சம்பளத்தில் பதவியேற்ற தேதி சொன்னார். கணக்கம் பாளையம் பின்கோடு நம்பர் சொன்னார். “பழைய விஷயங்கள் எல்லாம் ஞாபகம் இருக்கிறது. சமீப ஞாபகம்தான் தவறிப்போகிறது. நீ வந்தால்கேட்கவேண்டும் என்று ஏதோ ஒன்று. என்ன என்று ஞாபகம் இல்லை. ஞாபகம் வந்ததும் ஒரு காகிதத்தில் குறித்து வைக்கிறேன்”




“அப்பா உனக்கு எத்தனை பென்ஷன் வருகிறது தெரியுமோ?”




“தெரியும் .ஆனால் பணத்தில் சுவாரஸ்யம் போயவிட்டது. எத்தனை இருந்தால் என்ன? நீங்கள் எல்லாம் என்னைக் காப்பாற்றாமலா போவீர்கள்?”




“ஏதாவது படித்துக்க காட்டட்டுமா அப்பா?”




“வேணட்ம். நிறையப் படித்தாயிற்று. இப்போது அதெல்லாம் எதற்கு என்று ஒரு அலுப்பு வந்து விட்டது. நீ போ உனக்கு எத்தனையோ சோலி இருக்கும். அமமாவின் வருஷாப்திகம் ஏப்ரல் ஒண்ணாம் தேதி வருகிறது. அப்போது வநதால் போதும். நான் படுத்துக் கொள்ளட்டுமா? களைப்பாக இருக்கிறது. காலையில் போவதற்குள் ஒரு முறை சொல்லிவிட்டுப் போ” என்றார்.




பெங்களூர் திரும்பிவந்து ஒரு வாரத்துககுள் மறுபடி சீரியஸ் என்னனனனறு தந்தி வந்தது.




என்.எஸ் பஸ்ஸில்” என்ன ஸார் அடிக்கடி சேலம் வர்றிங்க?”




“எங்கப்பா சீரியஸா இருக்கார்ப்பா”




“ஓ அப்டிங்களா? டேய் அந்த மல்லி மூட்டையை பாத்து இறக்குங்கடா”



ஸ்பெஷல் வார்டில் அவரைப் பார்த்து திடுக்கிட்டேன். படுக்கையில் கண்மூடிப் படுத்திருந்த முகத்தில் தாடி. காலில் பட்டர்ஃப்ளை ஊசி போட்டு சொட் சொட்டெனறு ஐவி க்ளுக்கோஸ் உள்ளே போய்க்கொண்டிருந்தது. சுவாச மூக்கில் ஆக்ஸிஜனும் ஆஸ்பத்திரி வாசைனயும் வயிற்றைக் கவ்வியது.




கண்ணைக் கொட்டிக்கொட்டிக் கண்ணீரை அடக்கிக்கொண்டு “அப்பா அப்பா” என்கிறேன்.

கண்ணைத் திறக்கிறார் பேசவில்லை. “நான்தான் வந்திருக்கிறேன்” என்று கையைப் பற்றுகிறேன்.




பேசும் விருப்பம் உதடுகளில் தவிக்கிறது.கையை மெல்லத் துக்கி முக்கில் இருக்கும் குழாய்களை அகற்றப் பார்க்கிறார். தோற்கிறார்.




“நீ போனப்புறம் ஒரு நாளைக்கு சரியா இருந்தார் அதுக்கப்புறம் இப்படி”



படுக்கையில் பூஞ்சையாக நெற்றியைச் சுருக்கிகொண்டிருக்கும் அபபாவைப் பார்க்கிறேன். இவரா ஆயிரம் மைல் தனியாகக் கார் ஓட்டிக்கெண்டு சென்றவர்? இவரா மின் வாரியத்தை தன் டிஸிப்ளினால் கலக்கியவர் “நல்ல ஆபிஸர்தான் ஆனா கொஞ்சம் முன் கோபிங்க”




இவரா அணைக் கட்டின் பாரப்பெட் சுவரின் மேல் ஏறிக்கொண்டு விளிம்பில் ஒரு ஃபர்லாங் நடந்தவர்?”என் வில் பவரை டெஸ்ட் பண்ணிப் பார்ககணும் போலிருந்தது” இன்ஜினியரிங் படிப்பையும் இளம் மனைவியையும் விட்டு விட்டு காஙகிரசில் சேருகிறேன் என்று காணமால் போனவர் இவரா?”ஐ வாஸ் கிரேஸி தட் டைம்”.




மேல் நர்ஸ் வந்து அவரை உருட்டி முதுகெல்லாம் யுடிகொலோனும் பேபி பவுடரும் போடுகிறார். “பெட்ஸோர் வந்துரும் பாருங்க”




ஸ்டாஃப் வந்து பக்கத்துககு ஒரு ஊசி கொடுத்து “நீங்கதான் ரைட்டர்ங்களா?” என்கிறார். நான் ஆஸபத்திரியைத் திகைத்துப் போய்ப் பார்க்கிறேன்.




ஆஸபத்திரியிலிருந்து தப்பிப்பதைப் பற்றி ஸர்வைவல் புத்தகங்கள் ஆங்கிலத்தில் எழுதீயிருக் கிறார்கள். டாக்டர்கள் எல்லோரும் நல்லவர்கள். ஆனால் ஸ்பெஷலிஸ்டுகள்.



“ஒரு ஸிடி ஸ்கான் எடுத்துரலாமே டாக்?”




“முழுங்கறதுக்கு ரொம்ப கஷ்டப்படறார், ஒரு பேரியம் மீல் கொடுத்துப் பார்த்துரலாம். அப்றம் ஒரு ஆன்ஜியோ”



“ஃப்ளுயிட் ரொம்ப கலெகட் ஆயிருச்சு. புட் ஹிம் ஆன் எ ஹெவி டோஸ் ஆஃப் லாஸிக்ஸ்” எல்லா டாக்டர்களுமே திறமைசாலிகள்தான், நல்ல நோக்கமுள்ளவர்கள் தான், ஆனால் ராத்திரி முழுக்க அவர் அருகில் கீழே படுத்திருக்கிறேன். துக்கமில்லை. கொஞ்ச நேரம் வராந்தாவில் உட்கார்ந்து காற்று வாங்குகிறேன். கான்க்ரீட் மேடையில் வேப்ப மரம் முளைத்திருக்கிறது. காகங்கள் ஸோடியம் விளக்குகளைச் சூரியன் என்று குழம்பிப்போய் இரை தேடச் செல்கின்றன. இங்கிருந்து அப்பா தெரிகிறார். அசையாமல் படுத்திருக்கிறார். முகத்தில் வேதனை எழுதியிருக்கிறது. கூப்பிடுகிறாரா? கிட்டப்போய்க் கேட்கிறேன்.




“என்னப்பா?”



“போதும்ப்பா என்னை விட்டுருப்பா” என்று மெல்லச் சொல்கிறார்.வில்லியம் ஹண்ட்டரின் கட்டுரை ஞாபகம் வருகிறது. If I had strength enough to hold a pen. I would write how easy and pleasant it is to die.




பொய்!




ஆனால் இவர் அவஸ்தைப் பட்டால் எனக்கு அபத்தமாகத்தான் படுகிறது. இவர் செய்த பாவம் என்ன? ப்ராவிடணட் பண்டில் கடன் வாங்கி பையன்களைப் படிக்கவைத்ததா? அவர்களுக்கு வரதட்சணை வாங்காமல் கல்யாணம் செய்துவைத்ததா? ஏழை உறவினர்களுக்கும் ஆசிரியருக்கும் மாசாமாசம் பென்ஷனிலிருந்து பணம் அனுப்பியதா? குடும்ப ஒற்றுமைக்காகப் பாடுபட்டதா? பிரபநதத்தில் ஒரு வரி விடாமல் மனப்பாடமாக அறிந்ததா?




காலை ஐந்து மணிக்கும்பிக்கத்தில் இருக்கும் சர்ச் எழுந்து ஒலி பெருக்கி மூலம் ஏசுநாதரைப் பேசுகிறது. அப்பாவுக்கு இது கேட்குமா? ரேடியோ சிலோனில் சுவிசேஷத்தை தவறாத ஆர்வததுடன் கேட்கும் தீவிர வைஷ்ணவர் “பைபிளில் பல இடஙகளில் நம்ம சரணாகதி தத்துவம் சொல்லியிருக்கு தெரியுமோ? சில இடஙகளில் ஆழ்வார் பாடல்க ளுக்கும் அதற்கும் வித்தியாசமே தெரிவதில்லை” பங்களூரில் குரான் முழுவதையும் படிக்கச் சொல்லிக் கேட்டது நினைவுக்கு வருகிறது.




ஆஸபத்திரி புது தினத்துக்குத் தயாராகிறது.மணி அடித்துவிட்டு சில்லரை கொடுக்காதவர்களை யெல்லாம் விரட்டுகிறார்கள். டாக்டர் ரவுண்ட்ஸ் வருகிறார். “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருப்பார்னு சொல்லமுடியாது.இன்னிக்கு கொஞ்சம் இம்ப்ருவ்மெண்ட் தெரிகிறது. கன்னத்ததைத் தட்டி “நாக்கை நீட்டுங்கோ” மெல்ல நாக்கை நீட்டுகிறார்.




“பேர் சொல்லுங்கோ”



“சீனிவாசரா..”



“அஃபேஸியா அத்தரோ சிலிரோஸிஸ் .ஹி இஸ் மச் பெட்டர நௌ. டோண்ட் ஒர்ரி”



புதுசாக பல்மனரி இடீமா உன்று சேர்ந்து கொண்டு அவரை வீழ்த்தியது.



சென்ற மாதம் இருபத்திரண்டாம் தேதி பிற்பகல் மூன்று மணிக்கு இறந்து போனார் உடன் அப்போது இருந்த சித்தி “கண் வழியா உசிர் போச்சு “என்றாள். பம்பாயிலிருந்து தம்பி வரக் காத்திருந்து மூன்று பிள்ளைகளும் அவரைச் சுற்றி நின்று கொண்டு அவர் மார்பைக் கண்ணீரால் நனைத்தோம்..வீட்டுக்குக் கொண்டு வந்ததும் வாசலில் நெருப்புக் கொண்டுவைத்தார்கள்.

நண்பர்கள் வந்தார்கள். ஆஸபத்திரி வண்டியில் எடுத்துக் கொண்டு போய் “வீட்டில் ஒருவரில்லை வெட்டவெளியாச்சுதடி காட்டில் எரித்த நிலா கனவாச்சே கண்டதெல்லாம்” என்று முழுமையாக எரித்தோம்.



காலை எலும்புகளைப் பொறுக்கிச் சென்று பவானி போய்க் கரைத்தோம்.இந்து பேப்பரில் இன்ஸர்ஷன் கொடுத்தோம். “மாலை மலர்ல செய்தி வந்திருந்ததே பார்த்திங்களோ?”



உறவுக் காரர்கள் வந்தார்கள். சினிமாவுக்குப் போனார்கள். வாத்தியார் கருட புராணத்தின் பிரதியை என்னிடம் கொடுத்தார். பிராமண போஜனம் செய்விக்காதவர்களை யெல்லாம் சிரித்துக்கொணடே கொடுமைப் படுத்திக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு நதியைக் கடப்பதற்கு கோதானம் இல்லையென்றால் ஒரு தேங்காய் கிஞசித்து ஹிரண்யம்! அப்பா மரணத்தைப் பற்றி ஒரு முறை சொன்னது ஞாபகம் வருகிறது “அது ஒரு முற்றுப் பள்ளி.வி ஸீஸ் டு எக்ஸிஸ்ட்.எபிக்யுரஸ் சொன்னதை மறுபடி படி”




“Death is nothing to us since so long as we exist death is not with us but when death comes. we do not exist”.




ஒன்பதாம் நாள் பத்தாம் நாள் பதினோராம் நாள்.. பிரேதத்தின் தாகமும் தாபமும் திருவதற்காக அதன் ரெப்ரசெண்டேடிவ்வாக வந்த “ஒத்தன்” என்னைப்பார்த்து சிரித்து “நீங்க எழுதின ரத்தத்தின் நிறம் சிவப்பு குங்குமத்தில நன்னா இருக்கு ஸார் அடுத்ததடவை ஒரு ஸோஷல் தீமா எடுததுண்டு எழுதுங்களேன்”

சேலம் கடைத் தெருவில் பத்தாறு வேஷ்டிகளுக்கும சொம்புகளுக்கும் அலைந்தோம். ங்கத்திலிருந்து ப்ரபந்த கோஷ்டி வந்து எங்கள் தலையில் பரிவட்டம் கட்டி நாலாயிரமும் ராமானுச நுத்தந்தாதியும சரம ஸ்லோகமும் சொல்லிவிட்டு”எனக்கினி வருத்தமில்லை” இரண்டு மணி பஸ் பிடித்துப் போனார்கள்.



“அவ்வளவு தாம்பா பிள்ளைகள்ளாம் சேர்ந்துண்டு அவரை பரமபதத்தில ஆசார்யன் திருவடி சேர்த்துட்டேள். இனி அந்த ஆத்மாவுக்கு ஒரு குறையும் இல்லை! மாசிய சோதம்பத்தை மட்டும் ஒழுங்கா பண்ணிடுஙகோ”.




சுபஸ்வீகாரம். எல்லோரும் பந்தி பந்தியாக சாப்பிடுகிறோம். எட்டணா தட்சணைக்காக வாசல் திண்ணையில் ஒன்பதுபேர் காலையிலிருந்து காத்திருக்கிறார்கள். காஷவுல்ட்டியில் எனக்கு ட்ரங்க் டெலிபோன் வருகிறது.தொடர் கதைக்கு டைட்டில் கேட்டு. பங்களுர் திரும்பி வருவதற்கு முன் அப்பாவின் அந்த கடைசிக் குறிப்பைப் பார்க்கிறேன். Ask Rangarajan about Bionics ஓவர்சீஸ் பாங்கில் மிசையில்லாத என்னைப் பார்தது சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்கிறார்கள். அப்பாவின் ‘எய்தர் ஆர் சர்வைவர்’ அக்கவுண்டில் அவர் தகனத்துககு ஆன செலவு முழுவதும் இருக்கிறது.

நன்றி - சுஜாதா , உயிர் மெய், சிறுகதைகள்

Wednesday, August 08, 2012

வேதாந்தம் - சுஜாதா - சிறுகதை

பாரில் நின் பாதமல்லால் பற்றிலேன் பரம மூர்த்தி


- தொண்டரடிப்பொடி


ஒரு காலகட்டத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் (சாஸ்திரி, பக்தவத்சலம்) இருக்கும்போது இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது தமிழகத்தில். துப்பாக்கிச் சூடு, கடையடைப்பு, ராணுவம் வந்து ரகளை எல்லாம் இருந்தது. ஸ்ரீரங்கத்திலும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் எதிரொலிகள் இருந்தன. கீழ உத்தர வீதியில் இருந்த நரசிம்மாச்சாரி என்னும் இந்தி வாத்தியாருக்கு வேலை போய்விட்டது. ரங்கு அவருக்கு ‘‘ஓய் இனிமே ‘லட்கா, லட்கி, யஹ் கலம் ஹை, தவாத் ஹை’ன்னு எதாவது குதிரை ஒட்டினீர்… கையை ஒடிச்சுருவா. பேசாம கொஞ்ச நாளைக்கு தொன்னை தச்சுண்டு, வாழைப்பட்டை உரிச்சுண்டு இரும். கலகமெல்லாம் அடங்கறவரைக்கும் லீவு எடுத்துண்டு ஆத்திலயே இரும்!’’ என்று அவருக்கு அறிவுரை வழங்கினான்.




‘‘என்னடா ரங்கு! ஜீவனத்துக்கு எங்கே போவேன்?’’ என்று அழாக் குறையாகக் கேட்டார். நரசிம்மாச்சாரிக்கு இந்தி தவிர வேறு எதுவும் சொல்லித்தரத் தெரியாது. இவருக்கு முன் இருந்த பாச்சா இந்தி எதிர்ப்பை எதிர்பார்த்துச் சட்டென்று மேத்தமட்டிக்ஸ§க்கு மாற்றிக் கொண்டார். சாரியை வாத்தியாராக வைத்துக்கொள்வதே சலுகைதான் என்று ஹெட்மாஸ்டர் சொன்னாராம். ரொம்ப ரொம்பக் கிட்டப்பார்வை. பகலில் பசுமாடு தெரியாது. பூதக்கண்ணாடி போன்ற சோடாபுட்டிக் கண்ணாடி போட்டும் புத்தகங்களை முகத்துடன் தொட்டுக் கொண்டுதான் படிக்க முடியும். பையன்கள் விஷமம் செய்தால் பொதுவாக அந்த திக்கைப் பார்த்து அதட்டுவார். யார் என்று அவருக்குத் தெரியவே தெரியாது. ‘‘அங்க என்னடா சத்தம்?’’ என்று மட்டும் கேட்பார். விஷமம் செய்யும் மாணவர் களைக் கிட்டத்தில் வந்தால்தான் அடிக்க முடியும். அவர்கள் சற்று துரத்தில் நின்றுகொண்டே சமாளிப்பார்கள். வீட்டில் கஷ்ட ஜீவனம்.





நான் அப்போது சிவில் ஏவியேஷனில் ஏ.டி.சி. ஆபீஸராக சென்னை மீனம்பாக்கத்தில் சேர்ந்திருந்தேன். தற்காலிகமாகத் திருச்சியில் போஸ்டிங். ஸ்ரீரங்கத்திலிருந்து செம்பட்டுக்கு தினம் ஜீப்பில் செல்வேன்.



இந்தி எதிர்ப்பால் பள்ளிகளுக்கு காலவரையறையின்றி லீவு விட்டிருந்தார்கள். இந்தி வாத்தியாரை வேலை நீக்கம் செய்தாகி விட்டது என்று நோட்டீஸ் போர்டில் போட வேண்டியிருந்தது. ‘இல்லையேல், பள்ளி கொளுத்தப்படும். எச்சரிக்கை!’ என்று போராட்டக்குழு அறிவித்திருந்தது. இந்தப் போராட்டக்குழுவில் ஸ்ரீரங்கத்து மூஞ்சிகள் யாரும் இல்லை. அது எதோ அந்நியப் படையெடுப்பு போல. எப்ப வருவார்கள், எப்பப் போவார்கள் என்று சொல்ல முடியவில்லை!



‘‘பாவம்டா நரசிம்மாச்சாரி. எதாவது பண்ண முடியுமா பாரு… ஏதாவது உங்க ஆபீஸ்ல கிடைக்குமா பாரு.’’




‘‘இந்தி வாத்தியாருக்கா? ஏரோட்ரோம்லயா… என்ன விளையாடறியா?’’

ரங்கு என்னிடம், ‘‘நீ வேணா வேதாந்தம் கிட்ட சொல்லிப் பாரேன். உனக்கு ஃப்ரெண்டுதா&ன? ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பாரு. வீட்டில குந்துமணி அரிசிகூட இல்லைங்கறார். எங்க பார்த்தாலும் கடன். எனக்கே நூத்தம்பது பாக்கி!’’




வேதாந்தம், ஸ்ரீரங்கத்தின் ஆர்.எஸ்.எஸ். சாகையின் தலைவன். அந்தக் கால ஆர்.எஸ்.எஸ். பற்றி கொஞ்சம் சொல்கிறேன். ஒரு காலத்தில் என்னை ஆர்.எஸ்.எஸ்-ஸில் சேர்ப்பதற்குத் தீவிர முயற்சிகள் நடந்தன. காலேஜில் கெமிஸ்ட்ரி வாத்தியார் ஆர்.எஸ்.எஸ்-ஸில் சேர்ந்தால் நிறைய மார்க் போடுகிறார் என்று கேள்விப்பட்டேன். நான் கெமிஸ்ட்ரியில் வீக். அதனால் ஒருநாள் போய்த்தான் பார்க்கலாமே என்று காலை முனிசிபல் லைப்ரரி பக்கத்தில் – இப்போது அதை நேத்தாஜி சாலை என்று சொல்கிறார்கள் – போனால் மைதானத்தில் எல்லாம் சம்ஸ்கிருதத்தில் கட்டளைகளாக இருந்தன. பையன்கள் காக்கி டிராயர் அணிந்துகொண்டு ஒல்லிக்கால் தெரிய தய்னா பாய்னா பண்ணிக் கொண்டிருந்தார்கள் ‘நமஸ்தே சதா வத்ஸலே மாத்ருபூமி’ பாடினார்கள். சிலர் கம்பு வைத்திருந்தார்கள். ஒரு சில தலைவர்களுக்கு விசில் இருந்தது.



மாமா மாமாவாக உள்ளவர் களெல்லாம் பனியனும் தொப்பை மேல் அரை டிராயரும் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்துச் சிரித்துவிட்டேன். அதனால் நான் வரிசையிலிருந்து நீக்கப்பட்டேன். மேலும் அதிகாலையில் எழுந்து போவது சிரமமாக இருந்தது. ஏனோ பாட்டியும் நான் சங்கத்தில் சேருவதை அங்கீகரிக்கவில்லை!



வேதாந்தம் இப்போது பார்த்தாலும் ‘‘ஆர்.எஸ்.எஸ்-ல சேராம டபாச்சுட்ட பாரு…’’ என்று விசாரிப்பான். அவன் வந்தால் ஒளிந்துகொள்வேன்.



இப்போது நரசிம்மாச்சாரிக்காக வேதாந்தத்தை பார்க்கப் போக வேண்டியிருந்தது.



‘‘இந்தி வாத்தியாரை பள்ளிக் கூடத்தை விட்டு டெம்பரரியா நீக்கிட்டா வேது. பாவம் ரொம்பக் கஷ்டப்படறேர். அவரைக் காப்பாத்த வேற வழியிருக்கா?’’ என்று கேட்டேன்.



அவன் யோசித்து, ‘‘நரசிம்மாச்சாரிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?’’



‘‘சும்மா… மனிதாபிமானம்தான்!’’



‘‘மனிதாபிமானமா… இல்லை அவாத்தில் மூணு பெண்ணு இருக்கே, அதில ஏதாவது…’’



‘‘சேச்சே நான் அவாத்துப் பக்கம் போனதே இல்லை. அவள்ளாம் கறுப்பா சேப்பான்னுகூட தெரியாது!’’ என்றேன்.



‘‘எல்லாம் சேப்பு. பாக்க நன்னாவே இருக்கும்பா. ஒண்ணு பண்றேன்… தக்ஷிண் பாரத் இந்தி பிரசார் சபாவிலிருந்து ஒரு வியக்தி என்னைப் பார்க்க வருவார். அவர்கிட்ட சொல்லி பிரைவேட்டா ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பார்க்கறேன். எதுக்கும் சாரியை இந்தில எதும் உளறாம இருக்கச் சொல்லு. ஊரே கொல்லுன்னு போச்சு. அவனவன் கர்ச்சீப்பை தலைல கட்டிண்டு அரியலூர் வரைக்கும் போய் ரயில்வே ஸ்டேஷன்லாம் இந்தி எழுத்துக்களை தார் போட்டு அழிச்சுட்டு வரான். ஒரு ஸ்டேஷன் அழிச்சா நாற்பது ரூபாயும் பொட்டலமும் தராங்க. நான்கூட பிக்ஷாண்டார் கோயிலுக்கு தார் டின்னோட போ&னன். அதுக்குள்ள யாரோ அழிச்சுட்டான்!’’




இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கிய அங்கம் அது. மைய அரசின் அலுவலகங்களில் இந்தியில் எழுதியிருப்பதை தார் பூசி அழிப்பது. அனைத்து போஸ்ட் ஆபீஸ்களிலும் ரயில்நிலையங்களிலும் கிடைத்த அத்தனை போர்டுகளையும் அழித்து ரோடு போட தார் இல்லாமல் பண்ணிவிட்டார்கள். இனிமேல் அழிக்கவேண்டுமானால் புதுசாக போர்டு எழுதினால்தான் உண்டு என்று பண்ணிவிட்டார்கள். ‘இந்தி ஒழிக… தமிழ் வாழ்க’ என்று மதில் எல்லாம் எழுதி ரங்கராஜா டாக்கீஸ் ‘அன்னையின் ஆணை’ பட போஸ்டர் ஒட்ட முடியாமல் – இடமே இல்லாமல் போய்விட்டது.




ஸ்ரீரங்கத்தில் பெண்கள்தான் அதிகம் இந்தி படித்தார்கள். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துவிட்டு திருச்சிக்கு காலேஜ் அனுப்பப்படாத பெண்கள் கல்யாணத்துக்குக் காத்திருக்கும்போது தையல் கிளாஸ், பாட்டு கிளாஸ், டைப் கிளாஸ் இவற்றுடன் இந்தி கிளாஸ§ம் போய் வந்தனர். அதற்கான சான்றிதழ்களை இந்தி பிரசார சபா கொடுத்துவந்தது. ப்ராத்மிக், மத்யமா, ராஷ்டிரபாஷா என்று எம்.ஏ. லெவல் வரைக்கும் படிக்கலாம். இந்த பரீட்சைகள் எல்லாம் ஒத்திப் போடப்பட்டிருந்தன. திருச்சி கெயிட்டி, ஜூபிடர் போன்ற தியேட்டர்களில் இந்திப்படம் காண்பிப்பதை நிறுத்தி ‘நீச்சலடி சுந்தரி’ என்று டப்பிங் படம் போட் டார்கள். உணர்ச்சிக் கொந்தளிப்பு வேளை. எங்களுக்கெல்லாம் ஓ.பி. நய்யாரின் இசை ரொம்பப் பிடிக்கும். ‘மிஸ்டர் அண்டு மிஸஸ் 55’, ‘ஆர்பார்’ போன்ற படங்களில் ‘ஆயியே மெஹரபான், ஹ¨ன் அபிமே ஜவான்’ போன்ற பாடல்களை அர்த்தம் புரியாமல் பாடிக் கொண்டிருப்போம். இப்போது அவற்றை கிராமபோனில் கேட்டதை கொஞ்ச நாளைக்கு ஒத்திப்போட்டோம்.



தக்ஷிண் பாரத் இந்தி பிரசார் சபாவிலிருந்து ஷர்மா வந்திருந்தார். அவரிடம் நரசிம்மாச்சாரியின் வேதனையை வேதாந்தம் சொல்லி அழைத்துச் சென்றான்.



அவர், ‘‘நீங்கள் செய்யும் சேவை மகத்தானது. சபாவிலிருந்து உங்களுக்கு அரைச் சம்பளமாவது தரச்சொல் கிறேன். தனிப்பட்ட முறையில் பாடங் கள் நடத்த, படிக்கக் குடிமக்களுக்கு உரிமை இருக்கிறது. இங்கிலீஷ் கற்பதில்லையா? பிரெஞ்ச் கற்பதில் லையா… அதுபோல் ஒரு மொழியைக் கற்பதற்கு யாரும் ஆட்சேபணை தெரிவிக்க முடியாது!’’ என்று தைரியம் சொல்லிவிட்டு நரசிம்மாசாரி சாப்பாட்டுக்குக் கஷ்டப் படுதாகச் சொன்னபோது, ‘‘தா&ன தா&ன மே நாம் லிக்கா ஹை (ஒவ்வொரு தானியத்திலும் பெயர் எழுதியிருக்கிறது)’’ என்று பழமொழி சொன்னார்.



‘‘அதெல்லாம் சரி. இவர் கஷ்டம் தீர என்ன செய்ய?’’ என்றபோது நரசிம்மாச்சாரிக்கு ஐம்பது ரூபாயும் வேதாந்தத்துக்கு பத்து ரூபாயும் கொடுத்துவிட்டுப் போனார். ஒப்பந்தம் என்னவென்றால், ‘எங்கள் வீட்டு மாடியில் பிரைவேட்டாக இந்தி கிளாஸ் ஆரம்பிப்பது. யாராவது வந்து கேட்டால் அதை தையல் கிளாஸ் என்றோ பிரெஞ்ச் கிளாஸ் என்றோ சொல்லிவிட வேண்டியது. விளம்பரம் எதும் கூடாது. ஒரு அம்பது பேராவது சேர்ந்தால் தொடர்ந்து சபா பணம் அனுப்பும். அதற்குள் கலகங்கள் அடங்கிவிடும்!’ என்றார்.



எங்கள்வீட்டு மாடியில் வாசல் திண்ணை அருகில் மர ஏணி வைத்து மேலே ஹால் போன்ற இடம் இருந்தது. கம்பி கேட்டை பூட்டிவிட்டால் யாரும் மாடி ஏறி வர முடியாது. பத்திரமான இடம்தான்.

இருந்தும் முதல் கிளாஸ் ஆரம்பித்த போது சற்று டென்ஷனாகத்தான் இருந்தது. நரசிம்மாச்சாரி முகத்தில் சவுக்கம் போட்டு மறைத்துக்கொண்டு சாயங்காலம் வெயில் தாழ இங்குமங்கும் பார்த்துக் கொண்டுதான் உள்ளே நுழைந்தார். ‘‘கீழ வாசல்ல டி.கே-காரங்க வேஷ்டியை உருவறாங்க ரங்கு.’’

‘‘அந்த வழியா ஏன் வந்தீர்… நான் என்ன சொன்&னன்?’’




‘‘எனக்கென்னவோ பதஷ்டமா இருக்கு வேது!’’



‘‘பயப்படாதேயும்.’’



கிளாசில் சேர விரும்புபவர்களுக்கு தற்போது ‘பாஸ்வேர்டு’ என்கிறார்களே, அந்த மாதிரி ஒரு ரகசிய சமிக்ஞை வார்த்தை கொடுக்கப்பட்டிருந்தது. அதை உச்சரித்தால்தான் உள்ளே அனுமதி. நாற்பது பேர் சேருவதாகச் சொல்லியிருந்ததாக ரங்கு சொன்னான்.

ராத்ரி ஏழு மணிக்கு கிளாஸ் என்று பெயர். ஏழரை ஆச்சு… எட்டாச்சு… ஒருவரும் வரவில்லை. நான், வேதாந்தம், நரசிம்மாச்சாரி ஒரு கரும்பலகையில் சாக்கட்டியில் எழுதப்பட்ட ஸ்வாகத் அவ்வளவு தான்.

‘‘என்னடா ஆச்சு?’’



வேதாந்தம், ‘‘எல்லாரும் பயந்தாரிப் பசங்க ஓய்!’’



‘‘என்னடா வேது… வேதனையா இருக்கு. ஒரு பாஷை கத்துக்கறதுக்குக்கூட இந்த நாட்டில உரிமை கிடையாதா? என்ன சுதந்திரம் வந்து என்ன பிரயோசனம்?’’



வேதாந்தம், ‘‘நம்ம தாய்மொழியைப் புறக்கணிச்சுட்டு இந்தி கத்துக்கோன்னு சொன்னதுதான் தப்பு!’’



‘‘வேது, நீ யார் கட்சி?’’



‘‘என்னை சொந்த அபிப்ராயம் கேட்டா, எனக்கு இந்தி பிடிக்காது. சம்ஸ்க்ருதம்தான் எல்லாம். ஆனா, உம்ம சங்கடம் வேற. கவலைப்படாதேயும். இவங்களையெல்லாம் பாடித்தான் கறக்கணும்’’ என்றான் வேதாந்தம். காத்திருந்து பார்த்து எட்டரை மணிக்கு நரசிம்மாச்சாரியை வீட்டில் கொண்டு விட்டபோது அவர் முகத்தில் கவலை ரேகை படிந்திருந்தது.



‘‘என்ன பண்ணப்போறேனோ… பேசாம தமிழ் வாத்தியாரா இருந்திருக்கலாம். எங்கப்பா ஆனமட்டும் சொன்னார்…’’



‘‘நீர் போய்ப் படும். இந்த வயசில தமிழ் வாத்தியாரா மாறமுடியாது!’’



‘‘பாச்சாதாண்டா கெட்டிக்காரன்! சட்டுனு கணக்கு வாத்யாராய்ட்டான் பாரு… இத்தனைக்கும் எல்.டி. கூட இல்லை.’’



அப்போது தீர்த்தம் கொணடு வந்து வைத்த மூத்த மகள் கல்யாணியைப் பார்த்தேன்.



‘‘வேது, எனக்கு ஒரு ஐடியா…’’



‘‘எனக்கும் அதேதான் ஐடியா! எம்மா உனக்கு இந்தி தெரியுமா?’’

‘‘தெரியுமே மாமா!’’

‘‘எங்கே ஏதாவது இந்தில சொல்லு?’’

‘‘பாரத் ஹமாரா தேஷ் ஹை. பஹ¨த் படா ஹை. இஸ் மே கங்கா பெஹ்தி ஹை.’’



‘‘உன் போட்டோ இருக்கா?’’ என்றான் வேதாந்தம்.



‘‘இல்லையே… எதுக்கு?’’



தெற்கு வாசலிலிருந்து கஸ்தூரியை அழைத்துவந்து அவளை ‘சுள் சுள்’ என்று நாலைந்து போட்டோக்கள் எடுக்க வைத்தான்.



‘‘எதுக்கு மாமா?’’



‘‘எல்லாம் உங்கப்பாவுக்கு ஒத்தாசை பண்ணத்தான். அப்பாகிட்ட சொல்லாதே?’’ என்றான்.



வேது திருச்சிக்குப் போய் அதை ப்ளாக் எடுத்து ஒரு நோட்டீஸ் அச்சடித்தான்



‘இண்டர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் லாங்வேஜஸ்.





லேர்ன் ஆல் வேர்ல்டு லாங்வேஜஸ்.

காண்டாக்ட் வேதாந்தம் பிரின்ஸிபல்’



‘ஒன்ஆஃப் அவர் டீச்சிங் ஸ்டாஃப்’ என்று கல்யாணியின் போட்டோவை போட்டிருந்தான். புசுபுசு ரவிக்கையுடன் பக்கத்தில் ஒரு பூச்செண்டை தொட்டுக் கொண்டு எடுத்த போட்டோ அட்டகாச மாக இருந்தது. அதும் இத்தனை இளம்வயதில் மூக்கு குத்தியிருந்தது கிறக்கமாக இருந்தது.





வேது தம்பியின் கிரிக்கெட் சிநேகிதர்களைக் கூப்பிட்டு வீடு வீடாகப் போட்டுவிட்டு வரச் சொன்னான்.



‘‘வேது, ப்ராப்ளம் ஏதாவது வருமா?’’



‘‘இதில எங்கயாவது ‘இந்தி’ங்கிற வார்த்தை இருக்கா பாரு…’’ என்றான்.



இல்லைதான். அந்தச் சுற்றறிக்கைத் துண்டுப்பிரசுரம் ஆச்சரியமான விளைவைத் தந்தது. வெள்ளிக்கிழமை மாலையிலேயே ஜனங்கள், ‘‘மாமா இங்க எங்கயோ…. ஏதோ கத்துத் தாராளாமே… எங்க பட்டாபி கத்துக்கணும்னான்!’’ என்று விசாரித்துக்கொண்டு வர ஆரம்பித்தார்கள். ‘‘லைஃப்ல ஒண்ணு ரெண்டு லாங்வேஜ் கத்துக்கறது இம்பார்ட்டெண்ட் பாருங்கோ…’’



முதல் கிளாஸ் ஹவுஸ் ஃபுல். கேட்டு கதவைப் பூட்ட வேண்டியிருந்தது.



வேதாந்தம்தான் கல்யாணியை அழைத்து வருமுன் ‘நமஸ்தே சதாவத்சலே மாத்ருபூமி’ பாடிவிட்டு ‘‘பிரின்ஸிபல் ஓரிரு வார்த்தைகள் பேசுவார்’’ என்றான்.



நரசிம்மாச்சாரியும் தன் அடர்ந்த தலைமயிரையும் தாடியையும் தள்ளி வாரிமுடிந்து புதுசாக மொரமொரவென்று தோச்ச கோட்டு போட்டுக்கொண்டு ஏறக்குறைய அழகாக இருந்தார்.



‘‘நம் பாஷைகள் எல்லாமே ப்ராசீனமானவை. சம்ஸ்க்ருதத்தில் பிறந்தவை. அது தேவபாஷை. தேவநாகரி லிபி என்பதுதான் எல்லாவற்றுக்கும் ஆதாரம்’’ என்று பாணினி, ஐந்திரம் என்று ஏதேதோ பேசினார். லேசான சலசலப்பு ஏற்பட்டது. ‘‘அந்த டீச்சரை வரச்சொல்லு வேது!’’ என்று குரல்கள் கிளம்பின.



‘‘நாந்தாம்பா டீச்சர்..’’



‘‘அப்ப நோட்டீஸ் போட்டது?’’



வேதாந்தம், ‘‘வருவாடா… ஆலா பறக்காதீங்க. முதல்ல இண்ட்ரொடக்டரி கிளாஸ். அப்புறம்தான் மத்ததெல்லாம்.’’

‘‘வேது… என்னடா இது?’’ என்றார் நரசிம்மாச்சாரி புரிந்தும் புரியாமலும். ‘‘ஒண்ணுமில்லை ஓய்… நீர் பாடத்தை நடத்தும்.’’ அப்போது கல்யாணி வந்தாள். ‘‘கூப்டிங்களா மாமா?’’ வகுப்பு மௌனமாகியது.

‘‘கல்! வா! அப்பாவுக்கு ஒத்தாசையா அ ஆ இ ஈ சொல்லிக் கொடு. கல்யாணி போர்டில் எழுதியதை மாணவர்களை நோட்டுப் புத்தகங்களில் எழுதச் சொன்னான். அவர்கள் ஆர்வமாக எழுதி அவளிடம் திருத்தி வாங்க விரும்பினார்கள். நானோ வேதாந் தமோ திருத்தவேண்டாம் என்றார்கள். அருகில் சென்று சந்தேகம் கேட்டார்கள். மாணவர்களில் எல்லா வயதினரும் இருந்தனர். கீமான்தாங்கியான சீமாச்சுவிலிருந்து மாங்கொட்டை நாணு, தனகோபால், ரகு, நந்து எல்லோரையும் பார்த்தேன்.

கல்யாணி வளப்பமான பெண். அதனால் அவள் சிரத்தையாகக் கற்றுத் தந்தாலும் மாணவர்கள் கவனம் பிசகியது.

சாரியிடம

் யாரும் சந்தேகம் கேட்க வரவில்லை.

கஸ்தூரியை வரவழைத்து வகுப்பை போட்டோவும் எடுக்க வைத்தோம்.



சாரியைப் பார்த்து அவர்கள், ‘‘உமக்கேன் சிரமம்? டாட்டரே பாடம் நடத்தட்டும்!’’ என்றார்கள்.



நரசிம்மாச்சாரி கோபமாக இருந்தார்.



அவர்கள் போனதும், ‘‘வேதாந்தம் நீ பண்றது உனக்கே நன்னா இருக்கா? அது சின்னக்குழந்தைடா. அதுக்கு எதும் தெரியாது. அத்தனை பேர் பார்வையும் அலையறதுரா… அதுக்குத் தெரியவே இல்லை!’’

‘‘பாரும்… ஆள் சேர்ற வரைக்கும் ஒரு வாரம் இவ வந்துட்டுப் போகட்டும். சபாவில இன்ஸ்பெக்ஷன் வர வரைக்கும்தா&ன? பாரும்… ஒரு ப்ராடக்டை விக்கணும்னா அதை அலங்காரமா கண்ணாடி, காயிதம் எல்லாம் போட்டு விக்கறதில்லையா… அந்த மாதிரிதான்!’’

‘‘எனக்கு இதில சம்மதமே இல்லை வேதாந்தம்!’’

‘‘ஒரு வாரம் சமாளிச்சு அம்பது பேர் சேந்துட்டா, ஆயிரம் ரூபா தர்றதா சொல்லியிருக்கா சபாவில.’’

மறுநாள் அட்மிஷனுக்கு இன்னும் சில பேர் விண்ணப்பம் செய்தார்கள். காலையே வந்து சிலர் விசாரித்து விட்டுப் போனார்கள். ஜாக்கிரதை யாகத்தான் பதில் சொன்னோம். எங்கும் இந்தி என்கிற வார்த்தையே பயன்படுத்தவில்லை. மாடி ஹாலில் முப்பது பேருக்கு மேல் உட்கார இடமில்லாததால் இரண்டு கிளாஸ் ஷிஃப்ட் போடுவதாக முடிவெடுத் தோம். யார் யாரோ மேல அடையவளைஞ்சான், நொச்சியம் போன்ற இடங்களில் எல்லாம் வந்து சேர விருப்பம் தெரிவித்தார்கள்.



விஷயம் இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழுவுக்குத் தெரிந்து போய்விட்டது. இவர்கள் மாற்றுப் பெயரில் இந்தி கற்றுத் தருகிறார்கள் என்பதை அறிந்த இளைஞர்கள், ‘புறப்படு தமிழா… ஆரிய மாயையை அடக்கக் கொதித்து எழு!’ என்று ஒரு கோஷ்டி நரசிம்மாச்சாரியின் வீட்டைச் சூழ்ந்துகொண்டு ‘‘ஆரியப் பதரே வெளியே வா!’’ என்று சத்தம் போட்டார்கள். சாரி புறக்கடையை விட்டு வெளிவரவில்லை. கல்யாணி தான் வெளியே வந்து, ‘‘அப்பா கோட்டைக்குப் போயிருக்கார்!’’ என்று பொய் சொன்னது. விஷயம் தீவிர மாகிவிட்டது. அவசர அவசரமாக ரங்கு கடைக்கு வந்து சாரியின் பக்கத்து வீட்டுப்பையன்!’’ ‘‘மாமா உங்களை இந்தி வாத்தியார் அழைச்சுண்டு வரச்சொன்னா”ர். ஒரே கலாட்டா… நெருப்பு வெக்கப் போறாளாம்.’’




நாங்கள் ஓடிச் சென்று பார்த்த போது ஊர்ப்பையன்கள் யாரையும் காணோம். பொன்மலையிலிருந்து வந்த ரௌடி கும்பல். அவனவன் கையில் கழி – கம்பு, அரிவாள் வைத்திருந்தார்கள்.

வேதாந்தம் நிலைமையை எடை போட்டான்.



‘‘பாருப்பா… யாரோ உங்களுக்குத் தப்பா சொல்லியிருக்கா. இந்தியாவது தொந்தியாவது… என்ன எங்களுக்குப் பைத்தியமா? தையல் கிளாஸ், பாட்டு கிளாஸ் நடத்தறா இந்தப் பொண்ணு.’’



‘‘இவளா, பாட்டா! ஏய் எங்க பாடு… பார்க்கலாம்’’ என்றான்.



கல்யாணி உட&ன கணீர் என்ற குரலில், ‘பாரத தேசம் என்ற பெயர் சொல்லுவார் துயர் வெல்லுவார்!’ என்று பாடி ‘நீராரும் கடலுடுத்த’வும் பாடினாள். எல்லாரையும் திகைக்க வைத்தாள். கூடவே அதன் தங்கையும் பாடியது. வேதுவும் சேர்ந்துகொண் டான்.



‘‘சார் கோட்டைக்குப் போயிருக் கார். வந்ததும் சொல்றேன். கலாட்டா பண்ணணும்னா நிச்சயம் பண்ணுங்கோ. இன்ஸ்பெக்டர் ராஜகோபாலுக்குச் சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.’’ ராஜகோபால் முரடர். சேர்த்தி உற்சவத்தின்போது மாந்தோலாலேயே மட்டையடி அடித்துக் கூட்டத்தைக் கட்டுப் படுத்துவார்





இவர்கள் இந்தி கிளாஸ் எதுவும் நடத்தவில்லை என்ற உறுதிமொழியில் வேதாந்தத்தின் கையெழுத்தைப் பெற்றுக்கொண்டுதான் கலைந்தார்கள்.

வேதாந்தமும் நானும் உள்ளே சென்றோம். புறக்கடையில் தோக்கிற கல்லில் சாரி உட்கார்ந்திருந்தார். ‘‘சாரி உமக்கு ஹெல்ப் பண்ண நினைச்சு, உயிருக்கே ஆபத்தாயிடுத்து. கொஞ்ச நாளைக்கு இந்தி கிளாஸே வேண்டாம்!’’ என்றான்.

‘‘நான் போய் காவேரில குதிக் கிறேன்’’ என்றார்.



‘‘அப்படி சொல்லாதீங்கப்பா..!’’



‘‘ஓய் காவேரில முழங்கால் அளவு கூட ஜலம் இல்லை. குதிச்சா முட்டிதான் பேரும். கொஞ்சம் பொறுமையா இரும்… நான் உமக்கு வழி சொல்றேன்’’ என்றான்.



‘‘நீ வரதுக்கு முன்னாடி வீதில நின்னுண்டு என்னவெல்லாம் கத்தினான் தெரியுமா? பொண்ணை அனுப்பு. இந்தி கிளாஸ் வேண்டாம் வேற கிளாஸ் நடத்தலாம்னான்!’’



கல்யாணி, ‘‘என்ன கிளாஸ்ப்பா..’’




‘‘சும்மார்றி அறிவுகெட்ட முண்டம்!’’



சாரிக்கு வேறு மார்க்கம் பார்க்க முடியாத நிலையில் எனக்கு டெம்பரரி டிரான்ஸ்ஃபர் முடிந்து லீவில் போன ஏ.ஏ.ஓ. வந்துவிட்டதால் மீண்டும் மீனம்பாக்கத்துக்கு டியூட்டிக்கு திரும்ப வரும்படி ஆர்டர் வந்துவிட்டது. எனக்குச் சாரியை நினைத்து வருத்தமாகத்தான் இருந்தது.



ஊருக்குக் கிளம்புமுன் ஸ்ரீரங்கம் ஸ்டேஷனில் ஜங்ஷன் போவதற்கு லால்குடி பாசஞ்சர் பிடிக்கக் காத்திருந்தேன். வாசலில் இந்தி எதிர்ப்பு உண்ணாநோன்பு என்று பெரிசாக போர்டு எழுதி பந்தல் போட்டுச் சிலர் ஜமக்காளத்தில் உட்கார்ந்திருந்தார்கள். போராட்டத்தை முன்னின்று நடத்துபவர் பேராசிரியர் மறையிறுதி என்று என் கையில் திணிக்கப்பட்ட நோட்டீஸிலிருந்து தெரிந்தது. அவர் தலைமையில் சாகும் வரை உண்ணாநோன்பு எனத் தெரிந்தது.




‘மைய அரசே ராணுவத்தை வாபஸ் வாங்கு!’ என அதட்டலாக எழுதியிருந்தது. நான் அந்தக் கூட்டத்தைக் கடக்கும்போது உண்ணாவிரதம் இருப்பவர் முன்னால் துண்டுவிரித்து ‘போராட்ட நிதிக்கு பொற்குவை தாரீர்!’ என்று எழுதி கண்ணாடிப் பெட்டியில் ரூபாய் நோட்டுகள் அடைந்திருந்தன. ‘‘தமிழ் வாழ்க… இந்தி ஒழிக…’’ என்று அவ்வப்போது கோஷம் லேசாக எழுந்தது. நிறைய நோட்டுகளும் நாணயங்களும் சிதறியிருக்க… அவ்வப்போது கண்ணாடிப் பெட்டியைத் திறந்து பெரிய பையில் திணித்துக் கொண்டிருந்தார்கள். பேராசிரியர் மறையிறுதியை கவனித்தேன். மூன்று நாள் தாடி… முழங்கையில் முறுக்கிவிட்ட ஜிப்பாவினால் அடையாளம் கண்டுகொள்ளச் சற்று நேரமாயிற்று.




‘‘வேதாந்தம் நீயா?’’

‘‘வா… வா… பக்கத்தில உக்காரு. தோழர்களே இவர் என் நண்பர் அரங்கத்தரசு. தாய்மொழிக்காக எதுவும் செய்வார். ஆரம்ப எழுத்தாளன். மைய அரசுப் பணியை நிராகரித்துவிட்டு நம் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கிறார்… வா கொஞ்ச நேரமாவது உக்காரு. ரயில் எங்களை மீறிப் போகாது!’’



‘‘அரங்கத்தரசு வாழ்க!’’ என்று கோஷம் எழுந்தது. சங்கடமாக இருந்தது. நான் அவன் அருகில் அசௌகரியமாக உட்கார்ந்து காதருகில்,

‘‘இதெல்லாம் என்னடா வேதாந்தம்?’’



‘‘தாய்மொழியைக் காப்பாத்தப் போராட்டம். ஒரே நாளில் ஐயாயிரம் ரூபாய் சேர்ந்திருக்கு.’’



‘‘இந்த நிதியை என்ன பண்ணப் போறே…’’

மெள்ளக் குரலைத் தாழ்த்தி ‘‘நரசிம்மாச்சாரிக்கு கொடுக்கப் போறேன்’’ என்று கண் சிமிட்டினான் வேதாந்தம்.



நன்றி - சுஜாதா , உயிர் மெய், சிறுகதைகள்

Tuesday, August 07, 2012

ஓலைப்பட்டாசு- சுஜாதா - சிறுகதை

அந்த தீபாவளி, என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அதைப் பற்றி சொல்வதற்குள் தேவைப்பட்ட அளவுக்கு மட்டும் சுயபுராணம். என் பெயர் எதற்கு? நான். அவ்வளவுதான். மற்றவர் பெயர்கள் முக்கியம். அது சந்தானம் ஐயங்கார், பெருந்தேவி, சின்னா இவர்களின் பெயர்கள் இந்த கதைக்கு என்னிலிருந்து அவர்களை அந்நியப்படுத்துவதற்கு முக்கியம்.



பார்த்தீர்களா… ஆரம்பித்த விஷயத்தை விட்டு அலைகிறேனே. காரணம் – என் வயசு இன்றைக்கு எழுபது. பார்த்த மரணங்கள் ஆறு. இரண்டு மனைவிகள். ஒரு தேசிய விருது. ஒரு நாள் ஜெயில். ஒரு ப்ராஸ்டேட் ஆபரேஷன். கராஜில் நெருக்கமாக மூன்று கார்கள். உறவினரின் துரோகங்கள். தென் ஆப்பிரிக்கா டர்பனில் இரண்டு வருஷம் இவ்வாறு அதிகம் சேதப்படாமல் எழுபதை அடைந்து விட்ட ஒருவன் இறந்துபோனால் ஹிந்துவில் எட்டாம் பக்கத்தில் நான்கு வரிகளில் எழுபது வருஷமும் அடங்கி போகும்.




சொல்ல வந்தது, அந்த ஒரு தீபாவளி பற்றி. சீரங்கத்தில் என் பன்னிரண்டாவது வயதில் என் பாட்டியின் கண்காணிப்பில் வாழ்ந்தேன். அதனால் கொஞ்சம் பணத்தட்டுப்பாடு. அந்த தீபாவளிக்கு பட்டாசு வாங்க மொத்தம் ஐந்து ரூபாய்தான் தந்தாள். இப்போது என் வீட்டில ஐந்து ரூபாய் தாளை, தரையில் விழுந்தால் வேலைக்காரர்கள் கூட பொறுக்கமாட்டார்கள். அப்போது குறைவான பொருளாதாரத்தில் ஐந்து ரூபாயில் அதிகப்படியாக சந்தோஷம் கிடைக்க… கொள்ளிடக் கரையருகில் ஓலைப்பட்டாசு சல்லிசாக விற்பார்கள்.


பனையோலையில் சின்னதாக வெடிமருந்தை வைத்து முடிச்சுப் போட்டு மிகச் சின்னதாக திரியுடன், பனையோலை வாலுடன் பிரமாதமாக வெடிக்கும். ஆனால், ரொம்ப உஷாராக இருக்க வேண்டும். பற்ற வைப்பதற்குள்ளே வெடித்து கையை உதறவேண்டி வரும். மேலும் ஒரு வாரம் வெயிலில் காயப்போட்டே ஆகவேண்டும். பாட்டி கொடுக்கும் காசில் ஓலைப்பட்டாசு பாதப் பணத்துக்கு வாங்கிக்கொண்டு, மிச்சத்தில் கொல்லன் பட்டறைக்கு போய் ஒரு வேட்டுக் குழாயும் கந்தகப் பொடியும் வாங்கிக் கொண்டேன்.


 இது ஒரு மாதிரி மினி வேட்டுக்குழாய். நீண்ட கம்பியின் இறுதியில் ஒரு குழலும் போல்ட்டும் இருக்கும். குழலில் மஞ்சளான கந்கத்தை கெட்டித்து அதனுள் போல்ட்டை செருகி சுவரில் மடேர் என்று ஒரு அறை அறைந்தால் கேட்கும் வெடிச் சத்தம், நம் காதில் விண்ண்ண்ண் என்று அலறும். வெடியை விட திண்ணையில் சுதேசமித்திரன் படித்து கொண்டிருக்கும் தாத்தாக்களின் பின்பக்கம் மெள்ள நழுவி, ஒரு டமால் அடித்துவிட்டு, கோரதமுட்டியை நோக்கி ஓடுவதில் உள்ள உற்சாகம்தான் மிக சுத்தமானது.



அந்த தீபாவளி ஓலைப் பட்டாசு காயப் போட மாடிக்கு சென்ற போது, பக்கத்து வீட்டு “எடுத்துக்கட்டி”யின் மேல் செருப்பு வைத்திருந்தது. அதில் ஏறினேன். பின்னால் யாரோ கஷ்டப்பட்டு முனகுவது போல் சத்தம் கேட்டது. உதவி தேவையோ என்று நான் சுவர் எகிறி குதித்து அந்தப் பக்கம் போய் பார்த்தபோது சந்தானமையங்கார் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு, சின்னவை பல இடங்களில் தடவிக் கொடுத்து சிகிச்சை மாதிரி என்னவோ செய்து கொண்டிருந்தார். சந்தானமையங்கார் அடுத்த வீட்டுக்காரர்.


எங்களையெல்லாம் ஓட ஓட விரட்டுபவர். கிரிக்கெட் பால் உள்ளே போனால் திருப்பி தரமாட்டார். கண்டபடி திட்டுவார். அவர் வீட்டு சுந்தர் எங்களுடன் விளையாட வரமாட்டான். அவர்கள் எந்த விதத்திலோ பணக்காரர்களாம். கொலுவுக்கு சில்க் ஜமக்காளங்கள் போட்டு, பெட்ரோமாக்ஸ் வைப்பார்கள். சின்னா அவர் வீட்டு சமையல்காரி. ரவிக்கை முந்தானையில் அவள் சேகரித்து இருந்த கொய்யாக் காய்கள் சிதறிக் கிடந்தன. தரை எல்லாம் வியர்வையால் ஈரமாக இருந்தது.


 சந்தானயைங்காரின் செருப்புதான் ‘எடுத்துக்கட்டி’யில் மேல் வைத்திருந்தது. “என்ன மாமா பண்றீங்க “என்று கேட்டபோது அவர் திடுக்கிட்டு “இவளுக்கு உடம்பு சரியா இல்லை. மூச்சு வாங்கறதுன்னா… அதனால, தசமூலாரிஷ்டம் கொடுத்து சரி பண்றேன். போடா போடா… நீ எங்க இங்க வந்து தொலைச்சே… ஓடிப் போ” என்றார்.



“பட்டாசு காயப் போட வந்தேன். மாமியை கூப்பிடட்டுமா” என்றேன்.



“மாமி பெட்டவாத்தலை போயிருக்கா. சுவரேறி குதிச்செல்லாம் வரக்கூடாது. போலீஸ்காரன் புடிச்சுப்பான்” என்றார்.



இதையெல்லாம் கேட்காதது போல், சின்னா ஒரு மாதிரி மயக்கத்தில் கண் மூடிக்கொண்டு சற்றே நெற்றியை சுருக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.



நான் வீரராகவனிடம் சொன்னேன். வீரராகவன் எங்கள் கிரிக்கெட் காப்டன். “பாவம்டா அவ. மேல்மூச்சு வாங்கிண்டிருந்தது. சந்தான மாமா தடவிக் கொடுத்தார். இல்லைன்னா ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா” என்றேன்.



அவன் அதைக் கேட்டு கைகொட்டி கண்ணீர் வரச் சிரித்தான். “நீ கொக்கோகப் படம் எதும் பார்த்ததே இல்லையா? மார்கழி மாதம் உற்சவத்தில் விக்குமே?”



“இல்லை…”



அவன் “வா” என்று உள்ளே சென்று பரண் மேல் கத்யத்ரயம் திவ்யபிரபந்தசாரம் போன்ற புத்தகங்களின் நடுவே செருகியிருந்த பழுப்பான புத்தகத்தை எடுத்து பிரித்துக் காட்டினான்.



“ஆமாண்டா, இப்படித்தாண்டா சந்தான மாமாவும் சின்னாவும் இருந்தா…”



அவன் ஒரு வக்கீல் போல பல கேள்விகள் கேட்டு “இது தெரிந்ததா?”, “அது புரிந்ததா?” என்றெல்லாம் கேட்டு, அவவப்போது குபீர் குபீரென்று சிரித்து, “அடிச்சடா லக்கி ப்ரைஸ்” என்று சொன்னது எனக்கு விளங்கவில்லை. அவ்வப்போது என் நண்பர்கள் என்னை மரியாதையுடன் பார்த்தார்கள். மீண்டும் மீண்டும் அந்த காட்சியை விவரிக்க சொல்லியே வதைத்தார்கள்.



“எனக்கு எல்லாம் புரியறது. ஆனா எதுக்குடா தலைல முண்டாசு?” என்றான் பாச்சு.



“அதாண்டா ட்ரிக்கு. அதை கட்டிண்டா அடையாளம் தெரியாதாம். வேற யாரோனு நினைச்சுண்டுருவோமாம்” என்று வீரு விளக்கியது புரிந்தும் புரியாமலும் இருந்ததை அவன் என்னை ஒரு மாதிரி பார்த்து, “நீ ஒண்ணு பண்ணு. அவர்கிட்ட போய் ‘மாமா மொட்டை மாடில ஓலைப்பட்டாசு காயப்போட போயிருந்த போது உங்களையும் சின்னாவையும் பார்த்துட்டேனே. மாமி பெட்டவாத்தலைலேர்ந்து வந்தாச்சா’ன்னு… அவாள்லாம் சீட்டாடிண்டிருப்பா… அங்க போய்க் கேட்டு பாரு…”



“ஐயோ… போடா… தோலை உரிச்சுருவார்…”



“அதான் இல்லை. பாரேன் நடக்கிறதை. எதுக்கும் ஓடத் தயாராவே இரு. ஓரமா நின்னு கேட்டுட்டு வந்துரு. நடக்கிறதைப் பாரேன்.”



அவர்கள் மிகவும் கட்டாயப்படுத்த நான் மெள்ள தைரியம் பெற்று பக்கத்து வீட்டு திண்ணைக்கு நழுவி ஓரத்தில் உட்கார்ந்தேன். வெள்ளி செம்பில் காபியும், பத்தமடை பாயுமாக “ஆஸ்” ஆடிக் கொண்டிருந்தார்கள். புகையிலையை துப்பிவிட்டு வாய் கொப்பளிக்க வரும்போது என்னை பார்த்து சந்தானமையங்கர் திடுக்கிட்டு “என்னடா?” என்றார்.



“மாமா, மாடில ஓலைப் பட்டாசு பெருந்தேவி மாமி வந்தாச்சா பெட்டவாத்தலைலருந்து?” இவ்வாறு ஆரம்பித்தவுடன் “வாடா” என்று என்னை அப்படியே அலாக்காகத் தூக்கி உள்ளே செலுத்தி, என் வாயில் கல்கண்டு, அரிசி பப்ரமுட்டு, லேக்கா உருண்டை என்று இனிப்பான வஸ்துக்களை திணித்துவிட்டு “என்ன பார்த்தே, சொல்லு…”



“நீங்க சின்னாவுக்கு சிகிச்சை எதும் பண்ணலை” என்றேன்.



“பின்ன என்னவாம் அது?”



“வீரு சொல்றான் கொக்கோகமாம் அது…”



“மாமிகிட்ட சொல்லாதே, சொல்லாம இருந்தா உனக்கு என்ன வேணும் சொல்லு? சொல்லுடா கண்ணு…”



நான் யோசித்து “எனக்கு சிங்க மார்க் பட்டாசு ஒரு சரம், ஒத்தை வெடி ஒரு டஜன், ரெட்டை வெடி ஒரு டஜன், கேப்பு துப்பாக்கி, குதிரைவால், தரைச்சக்கரம், ஊசிப்பட்டாசு, ராக்கெட், ஏரோப்ளேன், விஷ்ணு சக்கரம், லட்சுமி வெடி அப்புறம் பத்த வெக்க மட்டிப்பால் வத்தி” என்று என் சக்திக்கேற்ப ஒரு பட்டியல் சொல்லிப் பார்த்தேன்.



அவர் எழுந்து அலமாரிக்குச் சென்று ஒரு காகிதத்தில் எழுதி “இதைக் கொண்டு போய் டி.பி.ஜி. கடையில கொடு. உனக்கு வேணுங்கறதை வாங்கிக்கோ. ஆனால மாடில என்ன பார்த்தே?”



“ஓலைப் பட்டாசு காயப் போடறப்ப உங்களையும் சின்னாவையும்.”



“ஏய்… யாரும் கேட்டா அங்க ஏதும் பார்க்கலைன்னு சொல்லணும்… அப்பத்தான் பட்டாசு.”



“சரி மாமா” என்றேன்.



“சரி மாமா” என்று என் தலையில் நெத்தினார்.



அந்த தீபாவளிக்கு நானும் வீரராகவனும் ஆசை தீர பட்டாசு வெடித்ததும் அல்லாமல், கார்த்திகைக்கும் நிறைய பாக்கி வைத்தோம். பாட்டி “ஏதுரா இத்தனை பட்டாசு?” என்றதற்கு “நாங்கள்லாம் சேர்ந்து சந்தா கட்டி வாங்கினோம் பாட்டி” என்று புளுகினேன்.




அடுத்த தினங்களில் நான எப்போது சந்தானமையங்காரை பார்த்தாலும் “இங்க வாடா” என்று உள்ளே பரிவுடன் அழைத்து “சர்க்கரைப் பொங்கல் சாப்பிடறியா? வறுத்த பாதாம் பருப்பு வேணுமா? அரவணை வேணுமா?” என்று தின்னக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.




சில நாட்களில் தைரியம் பெற்று, “மாமா தெற்கு வாசல்ல புதுசா ஒரு பம்பரம் வந்திருக்கு. கோல் எடுத்தா கைல அப்படியே பூனைக்குட்டி மாதிரி தூங்கறது மாமா” என்றால்



“உடனே போய் ரெண்டு பம்பரமா வாங்கிக்கோ. தலையாரில குத்து பட்டா மாத்து பம்பரம் வேணுமோ இல்லையோ?” என்பார். அப்புறம் மேலும் தைரியம் பெற்று நிஜ கிரிக்கெட் பந்து, ஸ்டம்ப் எல்லாம் கேட்டுக் கூடக் கொடுத்துவிட்டார்.



பெருந்தேவி மாமி “என்ன இப்படி இந்தப் பிள்ளைக்குச் செல்லம் கொடுக்கறீங்க?” என்று கேட்டதற்கு “பையன் நன்னா படிக்கறான். அதுக்கு ஒத்தாசை பண்ணலாம்னு” என்றார் என்னைப் பார்த்து கண் சிமிட்டி.



இவ்வாறு இனிதாகக் கழிந்து கொண்டிருந்த தினங்கள் அதிகம் நீடிக்கவில்லை. வீரு “ஒரு பார்க்கர் பேனா கேட்டுப் பார்” என்று சொல்ல சந்தானமையங்கார் வீட்டுக்குள் சுதந்திரமாக நான் நுழைய மரவேலைப்பாடுகள் நிறைந்த கறுப்பு மேசை கண்ணாடியில் தெரிய விறுவிறுப்பாக தன்னை விசிறிக்கொண்டு சந்தானமையங்கார் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருக்க, பக்கத்தில் அவர் மனைவி பெருந்தேவி கோபத்துடன் அழுதுகொண்டிருக்க, அருகே ஓரத்தில் சின்னா வாயை முந்தானையால் பொத்தி அவளும் அழுது கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் மாமி “வாடா… இந்த பிராமணன் செய்த அநியாயத்தை பார்த்தாயோ… மொட்டை மாடில சின்னாவை கூட்டி வெச்சுண்டு…”




“ஏய் நீ போடா…”



“ஏண்டி அந்த பிராமணன்தான் துப்புக்கெட்டு போய் உன் கையை புடிச்சான்னா உன் புத்தி எங்கடி போச்சு? இடுப்பொடிஞ்ச சக்களத்தி, நீ நல்ல பாம்புக்குட்டி, சக்கை திங்க வந்தவளே” அதன் பின் “உனக்கு குளிர் காய்ச்சல் வர… உனக்கு பாடை கட்ட” என்று பலமாக திட்டியதில் சின்னா, “கிணற்றில் விழப் போகிறேன்” என்று புறப்பட எனக்கு அழுகை வந்து விட… “பாருங்கோ…. இந்த பிள்ளை கூட வருத்தப்படறது. உங்களுக்கு வெக்கமா இல்லை… ஓசிச் சிறுக்கி.”




நான் அழுதது அதற்காக இல்லை. சந்தானமையங்காரிடம் என் ப்ளாக்மெயில் இப்படி திடீரென்று மதிப்பிழந்து போய் விட்டதே என்றுதான்!



அடுத்த தீபாவளிக்கு பழையபடி ஐந்து ரூபாய்க்கு ஓலைப்பட்டாசு, வேட்டுக் குழாய்தான்.




அந்த தீபாவளியை மறக்க முடியாது தான். அந்த வயசிலேயே எனக்கு கொஞ்சம் அவசரப்பட்டுக் கிடைத்த சில சில ஞானங்களால் அறியாச் சிறுவன் அறிந்த சிறுவனாகிவிட்டேன். அது என் பிற்கால வாழ்க்கையை எவ்வளவு தூரம் மாற்றிவிட்டது! என் பிழைப்பே இந்த மாதிரி மற்றவர் பற்றி தகவல் அவதூறு சேகரித்து விலை பேசுவதாகி, அதைப் பயன்படுத்திக் கொண்டு பணம் சேர்ப்பதாகி விட்டது.


 எத்தனையோ பேரை என் நளின மூர்க்கங்களில் பயமுறுத்தி நிறையவே காசு சேர்த்து விட்டேன். இப்போது தீபாவளிக்கு என் இரண்டு மனைவியருக்கும் எட்டாயிரம் ரூபாயில் புடவை எடுக்கிறேன். என் பிள்ளைகள் தொடர்ந்து அறுபது நிமிஷம் வெடிக்கும் ஆயிரம் ரூபாய் சரமெல்லாம் வெடிக்கிறார்கள்.




நான் பண்ணையில் போய் உட்கார்ந்து கொண்டு, என் நாய்களுடன் பேசுகிறேன். “சீஸர், ரீட்டா… அந்த தீபாவளியன்று சந்தானமையங்காரை மாடியில் பார்த்திராவிட்டால், நான் எங்காவது பி.காம். படித்து விட்டு ரயில்வே கிளார்க்காக நிம்மதியாக இருந்திருப்பேனே!



ஆம்! என் முதல் பொய், முதல் பெண் தரிசனம், முதல் பணம் பிடுங்கும் வழி எல்லாமே அந்த தீபாவளியில்தான் துவங்கி திருத்த முடியாமல் விகாரப்படுத்தப்பட்டேன்.



காரணம் – ஓலைப் பட்டாசு!




நன்றி - சுஜாதா , உயிர் மெய், சிறுகதைகள்

Monday, August 06, 2012

குதிரை -சுஜாதா - சிறுகதை ( நகைச்சுவை)

சிலருக்கு லாட்டரியில் பரிசு விழுகிறது. சிலரை பிரபல டைரக்டர் பஸ்ஸடாண்டில் பார்த்து “அடுத்த அமாவாசைக்கு ஷ¨ட்டிங்குக்கு வா” என்கிறார்.இப்படித் திடீர் என்று தனிமனிதர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.ஏதோ ஒரு வகையில் பிரசித்தி பெறுகிறார்கள்.அம்மாதிரி நானும் பிரசித்தமானேன். என்னை ஒரு குதிரை கடித்ததால்!





“குதிரையா?” என்று வியப்புடன் கேட்கிறீர்கள் அல்லவா? உங்களுக்குச் சொல்கிறேன். முதலில் என்னைப் பற்றி. அப்புறம் குதிரையைப் பற்றி. என்பேர் கிஷ்ண சாமி அதை கிச்சாமி என்று சுருக்கி மனதில் ஒரு பிம்பம் ஏற்படுததிப் பாருங்கள். அதேதான் நான். தொழில், தோற்றம் என்று எந்த வகையிலும் எனக்குப் பிரத்தியேகம் கிடையாது. தினப்படி காப்பி குடித்து, பேப்பர் படிதது, துணி மடித்து, பஸ் பிடித்து அங்குலம் அங்குலமாக மாயும் மனித எறும்பு.




மனைவி, குழநதை ,மாமனார், வாடகை வீடு, பாத்ரூமில் பாட்டு, மண் தொட்டியில் ஒன்றிரண்டு மலர்ச்செடிகள், தவணை முறையில் ரேடியோ என்று பிரகாசமற்ற பிரஜைதான் நான்.



குதிரை கடிக்கும் வரை! குதிரையும் அவ்வளவு பிரசித்தமில்லாத ஜட்கா வண்டிக் குதிரைதான்.எங்கள் வீட்டிலிருந்து அஹமத் ஸ்டோர்ஸ்க்கு போகும் வழியில் ஆஸ்பத்திரி இருக்கிறது.அதன் வாசலில் வழக்கம்போல் இளநீர் காலி பாட்டில்கள் எல்லாம் விற்கும் இடத்துக்கு எதிரே ஒரு குதிரைலாயம் இருக்கிறது. பொதுவாக எல்லா ஆஸ்பத்திரிகளுக்கும் எதிரில் இந்த லாயம் இருப்பதை நீங்கள் கவனித் திருக்கலாம்.


இந்த லாயங்களில் மற்றொன்றையும் கவனித்திருக்கலாம், திருச்சி தென்னுர் போனலும் பிட்ரகுண்டா போனலும். ஒரே அமைப்பு. உயரமான கருங்கல் கம்பங்கள் மேல் ஜாக்கிரதையாக ஓடு வேய்ந்திருக்கும். நடுவே 1938 ல் ஏதோ ஒரு உள்ளூர் நாயுடுவின் உபயத்தில் கட்டடப் பட்டது என்று அறிவித்து ஒரு தண்ணீர்த் தொட்டி இருக்கும்.நகரச் சந்தடியில் ஒரு சோம்பேறித் தீவாக கொஞ்சம் சேணம்,கொஞ்சம் லத்தி ஈரப்புல் கலந்து நாற்றமடிக்கும்.



வண்டிக் காரர்க்ள் சுகமாக எங்கேயோ கவனித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். ஒன்றிரண்டு குட்டிக் குதிரைகள் தெனபடும்.அவை அழகாக இருக்கும். திடீர் என்று குதிரைக் குட்டி உற்சாகம் பெற்று வெறி பிடித்தாற்போல போக்கு வரத்தின் ஊடே ஓடும். இந்த மாதிரித் தான் நான் சொல்லும் இடமும். அதைக் கடந்து செல்லும்போது லேசாக மழை பெய்ததால் சற்று ஒதுங்கி குதிரைகளின் கிட்டே நடந்து போனேன்.



சில குதிரைகள் என்னை சட்டை செய்யாமல் அவ்வப்போது உடம்பில் எதிர்பாராத இடங்களைச் சிலிர்த்துக்கொண்டு தெய்வமே என்று வண்டிக்காரன் கொடுத்ததை மென்று கொண்டிருந்தன. எல்லாமே கிழட்டுக் குதிரைகள். முதுகெலும்புகள் தெரிய தோள்பட்டையில் தழும்போடு கால்கள் ஜபேட் அடித்து குதிரையா கழுதையா என்று தீர்மானமாக சொல்ல முடியாத அளவுக்கு இருந்தன. அவற்றில் ஒன்று என் முழங்கையைக் கடித்துவிட்டது.



நான் நடந்து கெசாண்டே இருக்கும் போது முழங்கைப் பகுதியில் சுரீர் என்கிறதே என்று பார்த்தால் குதிரை கடித்து முடித்துவிட்டு என்னைப் பார்த்தது. தொள தொள என்ற உதடுகளுடன் சிரித்தது. நான் ‘ஸ்ஸ்ஸ்ஸ்’ என்று முழங்கையைப் பார்ததுக்கொணடு குதிரைக் காரனைத் தேடினால் காணவில்லை. ஒரே ஒரு பையன் எங்கோ பார்ததுக் கொண்டு நின்றான். மறுபடி கடித்துவிடப் போகிறதே என்று விலகி வந்து காலை வெளிச்சத்தில் காயத்தை ஆராய்ந்தேன். லேசாகப் பல்லுப் பட்டிருந்தது.



அது ஒன்றும் நிகழவில்லைபோல் என் மேல் சுவாரசியம் விலகிப் போய் எதையோ மென்று கொண்டிருந்தது.என்னை யாரும் பார்க்கவில்லை.’ச்சே’ என்று பொதுப்படையாகத் திட்டிவிட்டு அடிக்கடி காயத்தைப் பார்த்துக் கொண்டே’ டெட்டால்’ போட்டு
அலம்பிக் களிம்பு தடவ வேண்டும் என்று எண்ணிய படி வீட்டுக்கு விரைந்தேன். என் மனைவி வாசலில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.கடைக்குப் போன கணவன் குதிரை கடித்து இத்தனை சீக்கிரம் திரும்பி வருவான் என்று எதிர் பார்க்கவில்லை.



“என்ன வந்துட்டிங்க? அகமத் ஸ்டோர் மூடியிருக்கா?”



 “இல்லை வரவழியில..”


 “ என்ன ஆச்சு? என்ன கையில”


“உள்ள வாயேன் சொல்றேன்”



 “என்ன ஆச்சு விழுந்திட்டிங்களா?”



“இல்லை ஆஸபத்திரிக்கு எதிர்ல கதிரை லாயம் இருக்கு பாரு அது வழியா நடக்கறபோது குதிரை கடிச்சுடுத்து”




“என்னது,குதிரையா?”



“ஆமாம்”


 “கடிச்சுதா?”



மாமனார் உள்ளே வர


“அப்பா குதிரை எங்கயாவது கடிக்குமா?”



என்று அவரிடம் கேள்வி.


“எதை” “


மனுஷாளைப்பா”



 “சேச்சே”


“இதோ உங்க மாப்பிள்ளையைக் கடிச்சிருக்கு” “



அப்படியா, ஆச்சரியமா இருக்கே! என்ன மாப்பிளளை எதாவது அதைப்போய் சீண்டனம் பண்ணேளா?”




“இல்லே ஸார் அந்தப் பக்கமா நடந்து போயிண்டிருந்தபோது லபக்குன்னு கவ்விடுத்து” “



குதிரை லாயத்துக் கெல்லாம் எங்க போறேன். கல்யாணி நீ எதாவது வண்டி கொண்டுவரச் சொன்னாயா?




” “இல்லைப்பா ஸ்டவ்வுத் திரி வாங்கிண்டு வர அகமத் ஸ்டோர்ஸ்க்கு அனுப்பிச்சேன். எதுக்கு நீங்க குதிரை கிட்டல்லாம் போறேள்? அய்யோ நன்னாப்பல்லுப் பட்டிடிருக்கே. விஷப் பல்லா இருந்துடப் போறது. அப்பா அதைப் பாருங்க”



மாமனார் கிட்ட வந்து பார்த்து


“கன்னித்தான் போயிருக்கு. மாப்பிள்ளை நீங்க எதுக்கும் ராயர் கிட்டக் கொண்டு காட்டிடுங்கோ. கல்யாணி, அழைச்சுண்டு போயிடு. ஜட்கா வண்டிக் குதிரையா” “



ஆமாம்”


சற்று யோசித்து“



ஜட்கா வண்டிக் குதிரை கடிக்காதே” என்றார் ஜ.வ.குதிரைகளில் டாக்டர் பட்டம் வாங்கினவர் போல். “



இந்தக் குதிரை கடிச்சுது ஸார் என்ன பண்ண?” என்றேன்



. “இவருக்கு மட்டும எல்லாம் ஆகும்பா, கணக்கால் அளவுக்கு தண்ணீர் போதும் இவருக்கு முழுகிப்போய்டுவார்.இப்படித்தான் திருச்சினாப்பள்ளியில உய்யக் கொண்டான் வாய்க்கால்ல.


.” “சரிதான் நீ ஆரம்பிக்காதே”

என்று அதட்டினேன். “எதுக்கும் டாக்டர் ராவ் கிட்ட கொண்டு காட்டிடறது நல்லது” என்றாள். எனக்கும் காயத்தைப் பார்த்ததில் அபபடித்தான் பட்டது.ஆனால் இதை டாக்டரிடம் எப்படிச் சொல்லப் போகிறேன் என்று கவலையாக இருந்தது.’’




நரஹரி ராவ் எங்கள் குடும்பத்து டாக்டர் . அறுபது வயசானாலும் நல்ல ப்ராக்டிஸ், நாங்கள் போனது காலை வேளையாக இருந்தாலும் நல்ல கூட்டம்.குழந்தைகளும் தாய்மார்களும் க்ளார்க்ககுகளும் மப்ளர்காரர்களுமாக அடைத்துக் கொண்டு காத்திருந்தார்கள்.சின்ன இடம் அதில் பாதி தடுத்து நரஹரிராவ் உள்ளே உட்கார்ந்துகொண்டு யாரையோ ‘ஆ’ சொல்லிக் கொண்டிருப்பது பனிக் கண்ணாடியில் குழப்பமாகத் தெரிந்தது. ’எங்களுக்கு உட்கார இடம் இல்லை. அடுத்த முறை பையன் வெளியே வந்தபோது கல்யாணி



 “இந்தாப்பா டாக்டர் கிட்ட சொல்லு அவசரமா பார்க்கணும்னு” என்றாள்.

“எல்லாருக்குந்தாம்மா அவசரம்”



“இல்லைப்பா இவரை குதிரை கடிச்சுடுத்துப்பா. ரத்தமா கொட்டறது பாரு



”என்றாள்



 “கல்யாணி! என்ன சொன்னே? சரியாக் காதுல விழலை குதிரையா?”



“ஆமாம் மாமி. போயும் போயும் குதிரை கிட்ட கடி பட்டுண்டு வந்திருக்கார். என்னத்தைச் சொல்லி மாள?”



 “குதிரை வளக்கறிங்களா?” “அதுங்கிட்ட எதுக்குப் போனார்?




” எல்லோரும் என்னையே பார்த்தார்கள்.


 “உள்ளே வாங்க கிச்சாமி”


என்றார் டாக்டர்.



“என்ன குதிரை கிட்டல்லாம் போய் விளையாடிண்டு இந்த வயசில




” “டாக்டர் அது வந்து ஆஸ்பத்திரிக்கு எதிர்த்தாப்பல நடந்து போயிண்டிருநதேனா.


.” என் கதையைத் தணிந்த குரலில் சொன்னேன்.“


 டாக்டர் அதுக்கு எதாவது விஷப் பல்லு இருக்குமா” என்றாள் கல்யாணி இடையே. “தெரியலைம்மா. இருக்காதுதான். ஆனா கல்யாணி நானும் இதே மில்கார்னர்ல முப்பது வருஷமா ப்ராக்டிஸ் பண்ணிண்டிருக்கேன்.குதிரை கடிச்ச கேஸை இப்பதான் முதல்ல பார்க்கறேன்”


என்றார். “என்ன பண்றது டாக்டர்? ஆக்ஸிடெண்ட்டுக்குன்னே பொறந்தவர் இவர்.ஸ்கூட்டர் ஓட்டக் கத்துக்கறேன்னு ஸ்கூட்டரை ஸ்டாண்டில இருந்து எடுக்கறதுக்கு முன்னாடியே ஆக்ஸிடெண்ட் பண்ணிட்டார்.தொப்புன்னு போட்டுண்டு கீழே விழுந்தார். கால்ல பாருங்ஙகோ தழும்பு” டாக்டர காயத்தை கவனித்தார்.




 “வலிக்கிறதா? இருங்க காட்டரைஸ் பண்ணிடறேன்” என்று குட்டியாக இருந்த ஸ்பிரிட் அடுப்பைப் பற்ற வைத்து விட்டு அலமாரியிலிருந்து தடிமனான ஒரு புத்தகத்தைப் பிரித்து அதன் பின் அட்டவணையில் குதிரை, குதிரைக் கடி என்று தேடினார். “ம் ஹ§ம் டெக்ஸ்ட் புக்லயே இல்லை. எதுக்கம் கவலை படாதங்கோ சீட்டு எழுதிக் கொடுக்கறேன். நேரா ஆஸபத்திரிக்குப் போய் இன்ஜெக்ஷன் ஒரு கோர்ஸ் ஆரம்பிச்சுடுஙகோ இப்பவே”என்றார்.




 “அந்த இன்ஜெக்ஷனை இஙகேயே போட்டுண்டடுடலாமே டாக்டர்” “எங்க கிட்ட ஸீரலம் கிடையாது, ஆதுவும் இல்லாம டாக்டர் கோபி எல்லாம் தேர்ந்தவர். அவர் பார்த்து தேவைப் பட்டுதுன்னாத்தான் ஊசி போட்டுக்கணும். இப்ப காட்டரைஸ் பண்ணி அனுப்பிச்சுர்றேன்” என்று சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் சிரித்துவிட்டு “குதிரை” என்று தனக்குள் சொல்லிக்கொண்டு“



டாக்டர் கோபிக்கு லெட்டர் கொடுக்கறேன் உடனே போம்” என்றார். ஆஸபத்திரியை நோக்கி நடக்கும்போது ஒரு மாடு கிழிசல் பனியனை மென்று கொண்டிருந்தது



. “பாத்து வாங்கோ .இது வேற கடிச்சு வெக்கப்போறது” என்றாள் கல்யாணி. “என்ன கல்யாணி சொல்றே? வேணும்னுட்டா கடிச்சுப்பா?” “வேணுமோ வேணாமோ நம்மாத்தில மட்டும்தான் இந்தமாதிரியெல்லாம் நடக்கறது. டாக்டர் சொன்னார் பாருங்கோ” “எல்லாம் எனக்கும் கேட்டுது. அதபாரு குதிரை கடிக்காதுதான் என்னைக் கடிச்சுடுத்து என்ன பண்ணச் சொல்றே ? ஏன் கடிச்சேன்னு வேணா விசாரிச்சுன்டு வரட்டுமா?”



 “வேண்டாம். மறுபடியும் கடிச்சு வெக்கப் போறது. கடிக்கறதுன்னா அந்தப் பக்கம் ஏன் போகணும்?” “



குதிரை கடிக்கும்னு யாருக்குடி தெரியும் மூதேவி!”

நடுரோடில் எங்களை வேடிக்கை பார்கக கூட்டம் கூடிவிடவே நாங்கள் கலைந்து நடந்தோம்.ஆஸபத்திரியில் டாக்டர் கோபிநாத்தைத் தேடிக்கொண்டு சென்றேன்.நீண்ட பெஞ்சு போட்டு பலபேர் உட்கார்ந்திருந்தார்கள். கல்யாணி இங்கே வந்து “குதிரை கடித்துவிட்டது” என்று இரைந்து கூறி சலுகை கேட்கப் போகிறாளே என்று பயமாக இருந்தது.ஆககால் கல்யாணி பேசாமல்தான் உட்கார்ந்தாள்.அங்கே உட்கார்ந்திருந்தவர்களை விசாரித்ததில் பெரும்பாலோர் நாய்க்கடிக் காரர்கள் என்று தெரிந்தது. அங்கங்கே ஒன்றிரண்டு எலி தேள் இருந்தன. எல்லாருடைய சீட்டுகளிலும் நாய் நாய் என்றுதான் எழுதியிருந்தது.அங்கே அருந்த சிப்பந்தி அவற்றை அடுக்கி வைக்கம் போது என் சீட்டு வந்தபோது மட்டும மயங்கினான்.

“குதிரை! இங்க யாருப்பா கிருஷ்ணசாமி”




“கிருஷ்ணசாமி நான்தான் ”என்றேன்.


 “உங்க டிக்கெட்டில் தப்பா போட்டிருக்கு குதிரை ன்னு. கொஞ்சம் திருத்திக் கொடுக்கறிங்களா”


 “இல்லை ஸார் என்னை குதிரைதான் கடிச்சிருக்கு



” இப்போது அத்தனை பேரும் திக்கித்துப் போய் என்னைப் பார்க்க, சிப்பந்தி உடனே உள்ளே போய் கோபிநாத்திடம் சொல்ல “கூப்பிடு உள்ளே அவரை முதல்ல” என்றார். “வாங்க உக்காருங்க. ராயர் போன் பண்ணிச் சொன்னார். நீங்கதானா அது? குதிரை எங்கே கடிச்சுது உங்களை?”என்று விசாரித்தார்.



 “ஆஸ்பத்திரிக்கு எதித்தாப்பல ஸ்டாண்டு இல்லை? அங்கே” “



அதைக் கேக்கலை.உடம்பில எந்த பாகத்தில?”


 நான் என் கைச்சட்டையை வழித்துக் காட்டினேன்.



“காட்டரைஸ் பண்ணாரா?”என்று அலமாரியிலிருந்து தடியான புத்தகம் ஒன்றை எடுத்தார். “அந்தப் புஸ்தகத்தில் ‘குதிரைக்கடி’ கிடையாது டாக்டர்”என்றாள் கல்யாணி.



“எப்படிச் சொல்றிங்க?” “டாக்டர் ராவ் பார்த்துட்டார்” “மிஸடர் கிருஷ்ணசாமி ஒண்ணு பண்ணலாம் நான் குதிரை கடிச்ச கேஸை இதுவரை ட்ரீட் பண்ணதில்லை எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்.


ஒரு ஷார்ட் கோர்ஸ் ஆரம்பபிச்சுர்றேன் ஸ்ப்க்யுட்டேனியஸ்ஸா..” “டாக்டர் உயிருக்கு ஆபத்து எதும்ம இல்லையே?” “சேச்சே பயப்படாதிங்கம்மா.மிஸ்டர் கிருஷ்ணசாமி எதுக்கும் ரெண்டு மூணுநாள் அந்தக் குதிரையை வாட்ச் பண்ணிக்கிட்டு இருங்க.செத்து கித்து வெக்குதான்னு. எந்தக் குதிரை கடிச்சுது ஞாபகம் இருக்குமோல்லியோ?”



“ம்” என்றேன் சந்தேகமாக


மூணு நானைக்கு எதுக்குப் பார்க்கணும்” என்றாள் கல்யாணி.



அதுக்கு வெறி கிறி எதாவது பிடிச்சிருந்தா செத்துப்போய்டும் . அது உயிரோட இருந்தா கவலைஇல்லை.எதுக்கும் பயப்படடிதிங்க ரிஸ்க் எடுத்துக்காம கோர்ஸை ஆரம்பிச்சுர்றக்ஷன்



. தினம் காலை இந்த வேளைக்கு வந்துடுங்க என்ன ?


” “பகவானே என்ன க்ஷசொதனை பாத்திங்களா?”


 என்று புலம்பிக்கொண்டே வெளியே வந்தாள் கல்யாணி.



வந்ததும் அங்கே உட்கார்ந்திருந்தவர்களிடம சட்டென்று பேச்சு நின்று போய் ஒரு சிலர் உள்ளங்கையால் வாயை மறைத்துக்கொண்டு பக்கத்தில் இருப்பவரிடம் என்னைக் காட்டிப் பேசுவதை கவனித்தேன். முதுகில் கூட அவர்களது பார்வை பட்டது. திடீரென்று திரும்பி’குதிரை கடிச்சா என்னய்யா?“ என்று சத்தமாகக் கேட்க நினைத்தேன். ஆஸ்பத்திரியை விட்டு வெளியே போகும் போதே குதிரையை ஒரு நடை விசாரித்து விட வேண்டும் என்று கல்யாணி சொன்னாள். எனக்கு அது தேவையாகப் படவில்லை. இருந்தும் அங்கே போனோம். ”குதிரையை ஞாபகம் இருக்கோல்லியோ?“ என்றாள்


. ”இருக்கும்னு நெனைக்கிறேன்.நெத்தில டைமண்ட் ஷேப்பில வெள்ளையா ஒரு திட்டு இருந்ததா ஞாபகம்.“

லாயத்துக்குப் போனபோது ஏறக்குறையக் காலியாக இருந்தது. சிறுவன் மட்டும் காலை ஆட்டிக்கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான்.


 ”ஏம்பா எல்லாக் குதிரையும எங்கே?“


 ”எல்லாம் சவாரி போயிருக்குதுங்க. கொச்ம் இருங்க வந்துடும்.


பாடி கொடுத்துட்டாங்களா


“ ”பாடியா?“


”இவன் என்ன சொல்றான்“


என்றாள் கல்யாணி.


 ”ஏம்பா இந்த அடத்தில எத்தனை குதிரை இருக்கு?“


”ஏங்க எதாவது எலக்சனா?


குதிரைச் சின்னத்தில் நின்னறிங்களா?



 ஊர்கோலம் போகணுமா?


எத்தனை குதிரை வேணும்?“



ஒரே ஒரு குதிரைதாம்பா. நெத்தில டைமண் மாதிரி இருக்கும்“



 ”கரீம்பாய் குதிரையை சொல்றிங்க. இதோ இப்ப சவந்துடுங்க. கபர்ஸ்தான் போயிருக்குது“



”அது உயிரோட இருக்கில்லே?“ ”


இல்லாம,பின்ன?“


 ”நல்லது“


 என்று புறப்பட்டு வந்துவிட்டோம். ”



தினம் ஆஸ்பத்திரிக்கு வர வழியில ஒரு விசை குதிரையை விசாரிச்சுண்டு வந்துருங்கோ“


 என்றாள் கல்யாணி. மறுதினம் ஆஸபத்திரிக்குப் போகிற வழியில் என்னைக் கடித்த குதிரையை மறுபடி சந்தித்தேன் அந்தப் பையன்தான்



 ” கரீம்பாய் கல் பூச்சானா? ஓ ஆத்மி ஆயா “


 என்றான். கரீம்பாய்க்கு காலையிலேயே கண்கள் கலங்கியிருந்தன. என்னைப் பார்தது,



 ”என்ன சாமி நம்ம சுல்தானைப் பத்தி விசாரிச்சிங்களாமே?“


என்றான்.நான் கிட்டப்போய்ப் பார்த்ததில் என்னைக் கடித்த குதிரை அதுதான் என்று தெரிந்துபோய்விட்டது



. ”பாய்! இந்தக் குதிரை நல்லாத்தானே இருக்குது? உயிரோடதானே இருக்குது?“



சேணம் எல்லாம் கழற்றிப் போட்டு எண்ணெய் தேய்த்துக் கொள்வதற்கு முன்பிருக்கும் நங்கை போல் இருந்தது.


 ”ஏன் சாமி“



 ”நேத்திக்கு இது என்னை கடிச்சிடுச்சுப்பா. குதிரை உயிரோடதான் இருக்கான்னு தினம் பார்க்கச் சொல்லியிருக்கார்


டாக்டர்“


 ”கடிச்சுதா? அதெல்லாம் செய்ய மாட்டானே நம்ம சுல்தான், க்யூன் சுல்தான் ஸாப்கோ காட்டா?“



 குதிரை ”பிஹிர்ர்ர்“ என்றது.



”என்னா குதிரைங்க இது?“



என்று அதன் கழுத்தருகில் சொரிந்து கொண்டே சொன்னான்.



”ரேக்ளா ரேஸ்ல எல்லர்ம ப்ரைஸ் வாங்கிருக்கு. க்யுன் சுல்தான்?“




 ”பிஹிர்ர்ர்“ ”ஏதோ சௌக்கியமா இருந்தா சரி. அதோ பார் முழங்கையைக் கடிச்சுடுச்சு. தினப்படி ஊசி போட்டுக்க வேண்டியிருக்கு. குதிரையைக் கட்டுப் படுத்தி வெச்சுக்கக் கூடாதாப்பா?“




 ”ஊசி போட்டுக்கறியலா?“ என்று சுல்தான் போலவே சிரித்தான். ”எதுக்கு? குதிரை கடிச்சதுக்கா? இத பாரு.“




என்று தன் கையைக் காண்பித்தான். ”எத்தனை தடவை புல் குடடுக்கறப்ப கொள் கொடுக்கறப்ப சுல்தான் என்னைக் கடிச்சிருக்கான் தெரியுமா? ஊசியா போட்டுக் கிட்டேன்? க்யூன் சுல்தான்?“ எதற்கும் நான் ரிஸ்க் எடுத்துக் கொள்ளவில்லை.ஆஸ்பத்திரிக்குப் போகும் போதெல்லாம் சிப்பந்திகள் குதிரைக்காரர் வந்துட்டாரு”


 என்று பேசிக்கொண்டாலும், எதிர் வார்டிலிருந்து நண்பர்களையெல்லாம் கூட்டி வந்து என்னைக் காட்டினாலும், வீட்டில் கல்யாணியின் பல உறவினர்கள் பேருக்குப் பேர்“குதிரை கடிச்சுடுத்தாமே ” என்று விசாரித்தாலும் மதிக்காமல் பிடிவாதமாக சிகிச்சைக்குச் சென்றேன்.சில நாட்களில் காயம் ஆறிவிட்டது. ஆனால் அந்த சம்பவத்துக்குப் பின் என் பெயர் மாறிவிட்டது ‘குதிரைக் கிச்சாமி’ என்று.



ஊருக்கு ஊர் கிச்சாமி இருக்கிறார்கள், ஆனால் நாட்டில் ஒரே ஒரு ‘குதிரைக் கிச்சாமி’ நான்தான் என்பதில் ஒரு அற்ப சந்தோஷம்.




நன்றி - சுஜாதா , உயிர் மெய், சிறுகதைகள்

Sunday, August 05, 2012

நிதர்சனம் - சுஜாதா - சிறுகதை ( க்ரைம் த்ரில்லர்)

திரும்பி வந்துகொண்டு இருந்தபோது, ஆபீஸர்ஸ் கிளப்பை அடுத்து இருந்த ஹாஸ்டல் வாசலில் கூட்டமாக இருந்தது. கம்பெனி லாரி நின்றிருந்தது. செக்யூரிட்டி ஆசாமிகள் சிகரெட் புகைத்தபடி அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். பேசாமல் வீட்டுக்குப் போயிருக்கலாம்.



ஏதாவது திருட்டாக இருக்கலாம் என்று அருகே சென்று விசாரித்தேன்.



”மேலே போய்ப் பாருங்க! மாடில வலது பக்கம் கடைசி ரூம்.”



தயக்கத்துடன் மாடி ஏறினேன். எதிர்பார்த்ததை மனசு விரும்பவில்லை. உடம்பு பூரா ஒரு தரிசனத்துக்குத் தயாராகிக்கொண்டு இருக்க, படிப்படியாக இஷ்டமின்றி ஒருவிதமான குரூர ஆர்வத்துடன் மேலே சென்றேன். காரிடாரில் மௌனமாகச் சிலர் நின்றிருந்தார்கள். ஓரிரண்டு பரிச்சய முகங்கள். எதையோ யாரோ செய்வதற்கு எல்லாரும் காத்திருந்தார்கள் போலத் தோன்றினார்கள்.




கடைசி அறை வாசலில் அவனை இறக்கிப் படுக்க வைத்திருந்தார்கள். முகம் கறுப்பாக இருந்தது. கழுத்தில் படுக்கைக் கயிறு இறுக்கியிருந்த இடத்தில் நீலம் பாரித்திருந்தது. கன்னங்கள் சற்று உப்பியிருந்தன. கண்கள் சொருகிப்போய் வெண்ணிற விழிகள் மட்டும் தெரிந்தன. கட்டம் போட்ட சட்டையும் டெரிகாட் பேன்ட்டும் அணிந்திருந்தான். கரிய தலைமயிர். கையில் கட்டியிருந்த டிஜிட்டல் கடிகாரம் இன்னும் உயிரோடு இருந்தது.



”எப்பப்பா?” என்றேன் அதிர்ந்து.



”ரெண்டு நாளாயிருக்கும்போலத் தோணுது. இன்னிக்குத்தான் கதவை உடைச்சுத் திறந்து பார்த்திருக்காங்க!”



நான் தயக்கத்துடன் கால்மாட்டுக்குச் சென்று அவன் முகத்தை நேராகப் பார்த்தேன். ”மை காட்! நான் இவனைச் சந்தித்திருக்கிறேன். இவனிடம் பேசியிருக்கிறேன்.”




மத்தியானம் இரண்டு மணிக்கு (சென்ற வாரம் என்று ஞாபகம்) அவன் என் அறைக்குள் கதவைத் தட்டாமல் நுழைந்தான். அன்றைக்குக் கொடுத்தாக வேண்டிய அவசர ரிப்போர்ட் டில் இருந்தேன்.




”வாட் டு யூ வான்ட்?” என்றேன் கோபத்துடன்.



”உங்ககிட்ட பேசணும் சார்” என்றான் சன்னமான குரலில்.



”வெய்ட் அவுட்ஸைட், ஐ’ல் கால் யூ.”



”அஞ்சு நிமிஷம் சார்.”



”ஐ ஸெட் வெய்ட்!”



அவனை நான் உடனே கவனித்திருக்க வேண்டுமோ? காத்திரு என்று சொன்னது தப்போ?



அரை மணிக்கு அப்புறம் அவனை மறந்தே போய்விட்டேன். மறுபடி எட்டிப்பார்த்து ”


கேன் ஐ ஸி யூ நௌ?”



”ஆல்ரைட், அஞ்சு நிமிஷம்தான்” என்றேன்.


 உள்ளே வந்து என்னைச் சற்று நேரம் பார்த்தான்.


”சார், என் பெயர் தர்மராஜன். எனக்கு உங்கள் டிபார்ட்மென்ட்டுக்கு மாற்றல் வேண்டும்.”




”இப்ப எந்த டிபார்ட்மென்ட்டில் இருக்கிறாய்?”



”டி.பியில்.”



”அங்கே என்ன செய்கிறாய்?”



”ப்ரொகிராமிங்.”



”எதற்காக மாற்றல் வேண்டும் என்று கேட்கிறாய்?”



”அங்கே எனக்குப் பிடிக்கவில்லை.”



”என்ன பிடிக்கவில்லை?”



”வேலை.”



”ஏன்?”



”அந்த வேலை என் திறமைக்குச் சவாலாக இல்லை.”




அந்த நிமிஷமே அவன் வேறு பட்டவன் என்று உணர்ந்திருக்க வேண்டுமோ?



”நீ என்ன படித்திருக்கிறாய்?”



”படிப்பு முக்கியமானால், நான் பி டெக்., கம்ப்யூட்டர் சயின்ஸ்.”



”கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருக்கிறாய். ப்ரொகிராமிங் செய்கிறாய். சரியான வேலையில்தானே இருக்கிறாய்?”



”அது எனக்குச் சரியான வேலையில்லை. மாடசாமிக்கும் முனுசாமிக்கும் சம்பளம், பிடிப்பு எல்லாவற்றையும் கணக்கிட கோபால் ப்ரொகிராம் எழுதுவது என் திறமைக்குத் தாழ்மையான செயலாக, என் திறமையை அவமானப்படுத்துவதாகப்படுகிறது. எனக்கு உரிய வேலை உங்கள் டிபார்ட்மென்ட்டில்இருக் கும் என்று தோன்றுகிறது.”




அவன் என் மேஜை மேல் பொருள்களை ஆராய்ந்தான். நகத்தைக் கடித்தான். ”கேன் ஐ ஸ்மோக்?” என்றான்.



 நான் உயர் அதிகாரி. என் ஆபீஸ் வம்சாவளியில் எனக்கு அதி ஜூனியர், ஜூனியர்கள் சாதாரணமாக என் முன் சிகரெட் பிடிப்பதில்லை.



அவன், என் அனுமதிக்குக் காத்திராமல் பற்றவைக்கத் துவங்கியது, எனக்கு அவன் மேல் வெறுப்பை ஏற்படுத்தியது. நான்கு தீக்குச்சிகள் செலவு செய்து, பற்ற வைப்பதை மிகச் சிக்கலான காரியமாக்கி, மிக ஆழமாகப் புகையை இழுத்து வெளிவிட்டான். பிடிவாதக்காரனை நிமிர்ந்து பார்த்தேன். சிறிய உடலமைப்பு. பிரதானமான மூக்கு. சற்றுத் தூக்கலான பற்கள். உயர்ந்த ரகத் துணியில் சட்டை அணிந்திருந்தான். கண்கள் என்னைச் சந்திக்க மறுத்து குத்துமதிப்பாக என் சட்டையின் இரண்டாவது பட்டனில் பதிந்திருந்தன.




”சார், ஒரு கம்ப்யூட்டரை டிஸைன் பண்ற அளவுக்கு என்னிடம் திறமை இருக்கிறது” என்றான்.



”என் டிபார்ட்மென்ட்டுக்கு அந்தத் திறமை தேவையில்லை. கம்ப்யூட்டரை உபயோகப்படுத் தும் திறமை போதும்.”



”ட்டிரிங் மெஷின் பற்றிய என் கட்டுரையை நீங்கள் வாசிக்க வேண்டும்.”



”அதெல்லாம் கம்ப்யூட்டர் வேதாந்தம். எனக்குத் தேவை நடைமுறை அனுபவம்.”



”உங்கள் டிபார்ட்மென்ட் டுக்கே பெருமை தரக்கூடியதாகச் சில விஷயங்களைச் செய்துகாட்டு வேன். எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள்.”



”என் டிபார்ட்மென்ட்டில் இப்போது வேகன்ஸி இல்லை.”



”சமீபத்தில் சந்திரகுமார்னு ஒருத்தனை எடுத்துக்கொண்டீர்களே?”



எனக்கு உறுத்தியது. ”சந்திரகுமார் கேஸ் வேற.”



”எப்படி?”



”எப்படி என்று விஸ்தாரமாகச் சொல்ல எனக்குச் சமயமில்லை.”



அவன் சற்று நேரம் மௌனமாக இருந்தான்.



”நீங்கள் என்னை ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் வந்தேன்.”



”வேகன்ஸி இல்லை.”




”வேகன்ஸி எப்போது வரும்?”



”ஆறு மாசம் ஆகும்.”



”நான் என் வேகன்ஸியுடன் டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கொண்டு வந்தால் எடுத்துக்கொள்வீர்களா?”



”லுக் ஹியர், யங் மேன்! எல்லோருக்கும் அவர்கள் மன உசிதப்படி வேலை அமைவது இல்லை. இந்தத் தொழிற்சாலை ஒரு மிகப் பெரிய மெஷின். இதில் நானும் நீயும் சின்னப் பல் சக்கரங்கள். விதித்த நியதிப்படி நாமிருவரும் சுழன்றாக வேண்டும். நீ இப்போது இருக்கும் வேலையிலேயே தொழிற்சாலைக்கு உபயோகமாக எவ்வளவோ செய்யலாம். அதை யோசித்துப்பார்த் தாயா?”




அவன் யோசிக்கவில்லை.”ஒரே தொழிற்சாலை; ஒரு டிபார்ட் மென்ட்டிலிருந்து இன்னொரு டிபார்ட்மென்ட்டுக்கு மாற்றிக் கேட்கிறேன். எனக்குக் கிடைப்பது உபதேசம்!” என்றான்.




”ஆல்ரைட்! யூ மே கோ நௌ!”



”உங்கள் மூக்கின் மேல் கறுப்பாக ஏதோ ஒட்டிக்கொண்டுஇருக் கிறது” என்றான்.



நான் தன்னுணர்வுடன் மூக்கைத் தடவிக்கொண்டேன்.



”பத்து ரூபாய்க்குச் சில்லறை இருக்குமா?” என்றான்.



”வாட் டு யூ மீன்?”




”நாம் எல்லோரும் இந்த உலகத்தை ஆள வேண்டிய நேரம் வரப்போகிறது” என்றான்.




அதே சமயம், டெலிபோன் மணி அடித்து எம்.டி. என்னைக் கூப்பிட்டதால் அவனுடைய அந்த கடைசி மூன்று வாக்கியங்களின் சமகால அபத்தத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் அப்போதே அவனை மறந்து போனேன்.





மறுதினம் டி.பி. டிபார்ட்மென்ட் கோவர்த்தனை கான்டீனில் சந்தித்தேன். ஏதோ பேச்சை ஆரம்பிப்பதற்காக ”தர்மராஜன்னு ஒரு பையன்…”



”எ க்ராக். அவன் உங்ககிட்டயும் வந்துட்டானா?”



”ம். நேற்று வந்து டிரான்ஸ்ஃபர் கேட்டான்.”




”சரிதான். என் டிபார்ட்மென்ட்டுக்கு வந்து ஒரு மாசம்கூட ஆகலை. இதுவரைக்கும் மூணு டிபார்ட்மென்ட் மாறி இருக்கிறான். முதல்ல ஆர் அண்ட் டியில் இருந்தான். அப்புறம் ஹெட் ஆபீஸ் போனான், மேனேஜ்மென்ட் சர்வீசுக்கு. அப்புறம் டெக்னாலஜி டெவலப்மென்ட். பூனைக் குட்டியை மாத்தற மாதிரி…”




”பையன் ஒரு மாதிரி நெர்வஸா இருந்தான்.”



”இல்லை, திமிர். கொட




ுத்த வேலையை நல்லாவே செய்துடறான். அப்புறம் மேஜை மேல் காலை நீட்டிண்டு ஃபிரெஞ்சு புஸ்தகம் படிப்பான். எதிர்த்தாப்பல ஒரு பெண் உட்கார்ந்திருந்தா. அவளையே வெச்ச கண் வாங்காம ஒரு மணி நேரம் பார்த்துண்டு இருந்தானாம். அப்புறம் ”போய் காலை அலம்பிண்டு வா” என்றானாம். அந்தப் பெண் உடனே வேற இடம் கேட்டு மாத்திண்டு போயிடுத்து. வேலையில் கெட்டிக்காரன்தான். ஆனா, ரெஸ்ட்லஸ். நீ வேணா எடுத்துக்கறியா, தாராளமா போஸ்ட்டோட டிரான்ஸ்ஃபர் பண்ணி அனுப்பறேன்.”




”சேச்சே, எனக்கு வேண்டாம்பா.




அடுத்த முறை அவனை ஆபீஸர்ஸ் கிளப் மெஸ்ஸில் பார்த்தேன். ஒரு ஓரத்தில் காபிக் கோப்பை, சிகரெட் சகிதமாக ‘டைம்’ படித்துக்கொண்டு இருந்தான்.




என்னைக் கண்டவுடன் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அடுத்த அறைக்குச் சென்றான்.



அவ்வளவுதான் அவனுக்கும் எனக்கும் ஏற்பட்ட சம்பந்தங்கள். இப்போது அவனைத் தரையில் கிடத்திப் பார்க்கிறேன்.



செக்யூரிட்டி ஆபீஸர் என்னை அடையாளம் கண்டுகொண்டு அருகில் வந்தார். ”ரூம் உள்ளே பூட்டியிருந்தது, சார். கதவைத் திறந்தோம். நீங்க அவன் ரூமைப் பார்க்க வேண்டும்.”




”ஏதாவது கடிதம் எழுதி வெச்சிருந்தானா?”




”இல்லை.”



”காதல் கீதல் என்று…”



”ம்ஹ¨ம்! அப்படி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.”



”ஆஸ்பிடலில் அவன் ரிக்கார்டைப் பார்த்தீர்களா? தீராத வயிற்றுவலி என்று ஏதாவது?”



”இல்லை.”



தயக்கத்துடன் அவனைத் தாண்டி அறைக்குள் நுழைந்தேன்.



அறையில் மேல்நாட்டுச் சாதனங்கள் அத்தனையும் இருந்தன. ரேடியோ, கேசட் ரிக்கார்ட் பிளேயர், ஸ்டீரியோ, சுவர்களில் வண்ண வண்ணப் படங்களில் காட்டுக் குதிரைகள் ஓடின. ஏராளமாகப் புத்தகங்கள். திறந்திருந்த மேஜையின் இழுப்பறையில் நூறு ரூபாய் நோட்டுக்கள். பிரகாசமான விளக்குகள். புதிய மின் விசிறி.




”போனவாரம்தான் வாங்கியிருக்கான் சார். பில் கிடக்குது.”



அவன் தொங்கின விட்டத்து வளையத்தைப் பார்த்தேன்.




”கட்டில்ல இருந்து இரண்டு இன்ச் தள்ளி அவன் கால் மட்டம் இருந்தது. எந்த நேரமும் அவன் தற்கொலையை ரத்து பண்ணி கட்டில்ல ஏறி நின்றிருக்க முடியும்.”

அறை முழுவதும் பார்த்தேன். ஏதாவது ஒரு பெண், ஏதாவது ஒரு காதல் கடிதம், ஏதாவது ஒரு வியாதி… ஏதாவது ஒரு சம்பிரதாயமான காரணம்?




ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். பக்கத்து கிராமங்களில் செய்தி பரவி, அவசரஅவசரமாகப் பார்த்துவிட்டுப் போக வந்துகொண்டு இருந்தார்கள். பெண்கள் தலையில் செவ்வந்திப் பூ வைத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வந்துகொண்டுஇருந்தார்கள்.




”அவன் தற்கொலைக்கு நானா காரணம்! சே அபத்தம்.”



வீட்டுக்குச் செல்லும்போது என்னை அறியாமல் என் விரல் மூக்கை அழுந்த அழுந்தத் தேய்த்தது.




நன்றி - சுஜாதா , உயிர் மெய், சிறுகதைகள்

Saturday, August 04, 2012

உஞ்சவிருத்தி - சுஜாதா - சிறுகதை

சில ஆண்டுகள் வடக்கே இருந்து விட்டு ஒரு முறை ஸ்ரீரங்கம் போன போது வழக்கம்போல் ரங்கு கடையில் போய் உட்கார்ந்தேன். ரங்கு ‘அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல்’ அப்படியே இருந்தான். புதுசாக கூலிங்கிளாஸ் போட்டிருந்தான். ஆண்டாளின் பையன் அமெரிக்காவில் இருக்கிறா&ன பாச்சாவோ, யாரோ… அவன் கொடுத்ததாம். வழக்கம்போல் தம்பு, சீது போன்றவர்கள் வந்து அரசியலையும் சினிமாவையும் அலசினார்கள். தம்பு தேவகாந்தாரிக்கும் ஆரபிக்கும் வித்தியாசம் என்னவென்று பாடிக் காட்டினான். சீது யாருக்கு மொட்டைக் கடுதாசி எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.



‘‘நீ எப்ப வந்தே?’’ என்று கேட்டான் ரங்கு.



‘‘நேத்திக்குதான்.’’



‘‘கொஞ்ச நாள் இருப்பியா?’’



‘‘ஒரு மாசம் இருக்கலாம்னு ஆன்யுவல் லீவ்ல வந்திருக்கேன்.’’



‘‘நீ ஏர்ஃபோர்ஸ்லதான இருக்கே?’’



‘‘ஏர்போர்ட்ல.’’



‘‘ப்ளேன் எல்லாம் ஓட்டுவியாமே! பாகிஸ்தான் மேல நீதான் பாம் போட்டதா பேசிக்கிறா.’’



‘‘ரங்கா… பாரு, சரியா புரிஞ்சுக்கோ! நான் இருக்கறது ஏர்போர்ட். டெல்லில சப்தர்ஜங்னு பேரு > விமானநிலையம். நீ சொல்றது ஏர்ஃபோர்ஸ். அது ‘பாலம்’கிற இடத்தில் இருக்கு.’’



‘‘ரெண்டும் ஒண்ணுதான.’’




‘‘இல்…லை.’’



‘‘பின்ன… ஏர்ஃபோர்ஸ்ல யார் இருக்கா?’’



‘‘மேலச் சித்திரை வீதில ரங்காச்சாரிடா அது… அவன்கூட பைலட் இல்லை.’’



‘‘ஏர்ஃபோர்ஸ்னா எல்லாரும் பறக்க மாட்டாளோ?’’



‘‘மாட்டா!!’’



‘‘அப்ப நீ ஏர்ஃபோர்ஸ்ல இல்லை?’’



‘‘ஏர்போர்ட்… ஏர்போர்ட்!’’



‘‘பின்ன யாரோ, நீ ப்ளேன் ஓட்டறதா சொன்னாளே..?’’



‘‘அது சின்ன ப்ளேன். டிரெய்னிங் ப்ளேன்.’’



‘‘ஏர்போர்ட்ல பெரிய ப்ளேன்தான இருக்கும்! போட்டுக் குழப்பறாங்கப்பா!’’



நான் அவனுக்கு மேலும் விளக்கும் முயற்சியைக் கைவிட்டேன். ரங்குவின் உலகம் அவன் வீடு, கடை இரண்டை விட்டு வெளியே எதும் கிடையாது. உலகம் முழுக்க அவன் கடைக்கு அரட்டையடிக்க வரும். இவன் இடத்தைவிட்டு நகரமாட்டான். பெருமாளைக்கூட பங்குனி, சித்திரை உற்சவங்களில் கடையைக் கடந்து செல்லும்போதுதான் சேவிப்பான்.





அப்போது ஒரு கிழவனார் கையில் சொம்புடன், ஒரு சிறுவன் குச்சியைப் பிடித்துக்கொண்டு அழைத்துச் செல்ல… ‘உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன்…’ என்று ஏறத்தாழ உளறலாகச் சொல்லிக்கொண்டு நட்ட நடுத் தெருவில் வந்துகொண்டிருந்தார். முகத்தில் ஒரு வாரத்துக்கு உண்டான வெண் தாடி. மார்பில் பூணூல். சவுக்கம். பத்தாறு வேஷ்டி.



‘‘ரங்கு, இது யாரு?’’



‘‘இவர் பேரு தேசிகாச்சாரி. ஜி.பி>னு ஐஸ்கூல்ல மேத் டீச்சர் இருக்காரே, அவரோட அப்பா.’’



‘‘ஆமாம். எதுக்கு சொம்பை கைல வெச்சுண்டு பிரபந்தம் சொல்லிண்டுபோறார்?’’



யாரோ அவர் சொம்பில் அரிசி போட்டுவிட்டு வணங்கி விட்டுச் சென்றார்கள்.



‘‘உஞ்சவிருத்தி.’’



‘‘புரியலை. ஜி.பி. இவரை வெச்சுக் காப்பாத்தலியா?’’



‘‘அதெல்லாம் இல்லை. பிடிவாதம்.’’



‘‘பணம் காசு இல்லையா? ஜி.பி. நிறையச் சம்பாதிக்கிறாரே!’’



‘‘இவருக்கே நிறைய சொத்து இருக்கு. சித்திரை வீதில ஜி.பி. இருக்கற வீடு இவர்துதான். மகேந்திர மங்கலத் தில் நெலம் எல்லாம் இருக்கு.’’



‘‘உஞ்சவிருத்தின்னா பிச்சை எடுக்கறதில்லையோ?!’’



‘‘ஆமாம். ‘பவதி பிக்ஷாம் தேஹி’ன்னு சொல்லலே… அவ்ளவுதான்!’’



‘‘புரியலை ரங்கு.’’



‘‘சில வேளைல பெரியவர்களுடைய பிடிவாதங்கள் புரியாது நமக்கு. இந்த பிராமணனுக்கு வீம்பு. போக்கடாத்தனம்.’’



ஜி.பி. என்னும் பார்த்தசாரதி செயலாக இருப்பவர். கணக்குப் பாடப் புத்தகம், நோட்ஸ் எல்லாம் போடுபவர். லட்சக்கணக்கில் விலை போகும்.

எஸ்.எஸ்.எல்.சி>க்கு ஒரு செக்ஷனுக்கு கிளாஸ் டீச்சர். ஹைஸ்கூலில் சீனியர் டீச்சர் என்று மதிக்கப்பட்ட ஆசிரியர். தேசிய விருது வாங்கியிருக்கிறார். அடுத்த ஹெட்மாஸ்டர் அவர்தான் என்று பேசிக்கொண்டார்கள். அவர் தந்தையார் பிச்சை எடுக்கிறார் என்றால்…



‘‘வேணும்னுட்டே, மகனை அவமானப்படுத்தறதுக்குன்னுட்டே..’’



‘‘கண்ணு வேற தெரியலை.’’



‘‘கண்ணெல்லாம் நன்னாத் தெரியறது. தன்மேல சிம்பதியை வரவழைச்சுக்க, கண் தெரியாத மாதிரி பாடசாலைப் பையனை வெச்சுண்டு குச்சியைப் பிடிச்சுண்டு போறார்.’’




‘‘என்ன ப்ராப்ளம் அவருக்கு?’’



‘‘வரார். கேட்டுப் பாரேன்.’’



இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போது அவரே கடைக்கு வந்து பெஞ்ச்சில் உட்கார்ந்தார். அவருடன் கொஞ்சம் ஈரம் காயாத வேஷ்டியின் நாற்றமும் வந்தது. எதையோ வாயிலே மென்றுகொண்டிருந்தார். கிட்டப் பார்க்கையில் ஆரோக்கிய மாகத்தான் இருந்தார். நல்ல மூங்கில் கம்பு. அதைப் பையன் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு நின்றுகொண்டிருக்க…




‘‘ஓய்! லைப்பாய், ரெக்சோனான்னு சோப்பு ஏதாவது போட்டுக் குளிக்கிறதுதா;ன? கிட்ட வந்தாலே கத்தாழை நாத்தம்!’’




‘‘மாட்டுப்பொண்ணு எங்கடா சோப்பு கொடுக்கறா? ஒரு அண்டா தண்ணிகூட வெக்கமாட்டேங்கறா ரங்கு.’’



‘‘ஜி.பிகிட்ட சொல்றதுதான?’’




‘‘அவனா? பொண்டாட்டிதாசன்..! தொச்சு, அது என்னடா சாக்லெட்டு?’’




‘‘பட்டை சாக்லெட் தாத்தா.’’



‘‘அது எனக்கு ஒண்ணு இவனுக்கு ஒண்ணு கொடு! ரங்கநாதா..!’’ என்று பெஞ்ச்சில் உட்கார்ந்து, ‘‘தீர்த்தம் இருக்குமா? என்ன வெயில்.. என்ன வெயில்!’’



ரங்கு சாக்லெட் எடுத்துத் தர, மடியிலிருந்து அஞ்சு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார்.



‘‘நீ யாரு… கோதை பேரன்தா;ன?’’ என்றார் என்னைப் பார்த்து.




‘‘ஆமாம் மாமா!’’



‘‘நீ ஏர்போர்ஸ்ல இருக்கியா?’’



‘‘ஏர்போர்ட்! மாமா, எதுக்காக இந்த வெயில்ல அலையறீங்க? வெயில் தாழ வீதிப் பிரதட்சணம் போகக்கூடாதா?’’



‘‘பாரு, வைஷ்ணவனா பொறந்தா பஞ்ச சம்ஸ்காரங்கள்னு அஞ்சு காரியங்கள் செய்யணும். அதான் ஐயங்கார். ஊர்த்வ புண்ட்ரம், சமாஸ்ரணம், திருவாராதனம், ஆசார்யன்கிட்ட உபதேசம் கேக்கறது, பரன்யாசம் வாங்கிண்டப்றம் உஞ்ச விருத்தி. பிச்சைபோடற அரிசியைத் தான் சாதம் வெச்சு சாப்பிடணும்!’’




‘‘மாமா, அதெல்லாம் வசதியில்லாத வாளுக்கு!’’



‘‘இல்லை. வைஷ்ணவனா பொறந்த எல்லாருக்கும். உனக்கு, எனக்கு… அந்த நாராயண&ன மகாபலிகிட்ட யாசகம் போனான்.’’



‘‘நீங்க இப்படித் தெருவில போறது அந்தக் கடமையை நிறைவேத்தறதுக் காகவா?’’



‘‘ஆமா, வேறென்ன..?’’



‘‘உங்க ஃபேமிலியில அவாளுக்கு சங்கடமா இருக்காதோ?’’



‘‘எதுக்குச் சங்கடப்படணும்? எதுக்குங்கறேன்?’’



‘‘இல்லை மாமா… உங்க சன் பெரிய கணக்கு வாத்தியார். ஹெட்மாஸ்டர் ஆகப் போறார். நேஷனல் அவார்டெல்லாம் வாங்கினவர்.’’



‘‘அதனால?’’



‘‘மத்தவாள்ளாம் என்ன நினைச்சுப்பா? தோப்பனாரை சரியா வெச்சுக்காம தெருவில யாசகம் பண்ண அனுப்பிச்சுட்டார் பாரு, இவர் என்ன வாத்தியார்னு தா&ன நினைச்சுப்பா?’’



‘‘நினைக்கத்தான் நினைச்சுப்பா. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?’’



ரங்கு சில சமயம் பட்டென்று போட்டு உடைத்துவிடுவான்.



‘‘ஓய்… உமக்கு மாட்டுப் பெண்ணோட சண்டை. ஜி.பி. அவ பேச்சைக் கேட்டுக்கறார். அந்தக் கோபத்தைத்தான் நீங்க இப்படி அவரை அவமானப்படுத்திக் காட்டறீர்னு ஊர் உலகமெல்லாம் பேசிக்கிறது. உஞ்சவிருத்தி குஞ்ச விருத்தியெல்லாம் சால்ஜாப்பு!’’




‘‘சரி, அப்படியே பேசிக்கிறான்னா நீ என்ன செய்யணும்?’’



அவர் ‘நீ’ என்று அழைத்தது ரங்குவை அல்ல. அங்கு இல்லாத தன் மகன் ஜி.பி>யை. ‘‘நீ என்ன செய்திருக்கணும்? ‘அப்பா, நீங்க சொல்றதிலயும் நியாயம் இருக்கு. கொஞ்சம் தழைஞ்சு போங்கபபா. நானும் அவளைத் தூக்கி எறிஞ்சு பேசாம இருக்கச் சொல்றேன்’னு சமாதானமா போகலாம் இல்லையோ..? எப்ப பார்த்தாலும் ‘அவ சொல்றதுதான் ரைட்டு, அப்பா… வாயை மூடுங்கோ’னு அதட்டினா எனக்கு எப்படி இருக்கும்..?’’




‘‘தனியா இருந்து பாருமேன்.’’



‘‘அதைத்தான் யோசிச்சிண்டிருக்கேன்.’’



‘‘இப்ப வீட்ல சாப்பிடறதில்லையா?’’



‘‘ரெண்டு தளிகை. எனக்கு உண்டான ஒரு மெந்தியக் குழம்பு, அப்பளத்தை நா;ன பண்ணிக்கறேன். ஒரு நெய் கிடையாது, கறமுது கிடையாது, தயிர் கிடையாது. மோர்தான். ஓட்டல் சாப்பாடு ஒத்துக்கலையே ரங்கா! பேதியாறது. அவா என்னவோ சாப்ட்டுட்டுப் போகட்டும். எனக்கு?’’



‘‘பிள்ளை?’’



‘‘அவனோட பேசியே ஒரு மாசம் ஆச்சு, ஒரே ஆத்துல இருந்துண்டு.’’



‘‘இதெல்லாம் சரி, உஞ்சவிருத்தி எப்டி உடம்புக்கு ஆறது உமக்கு? ரேஷன் அரிசியும் புழுங்கரிசியும் கைக்குத்தலும் கலந்திருக்குமே?’’



‘‘ஏதோ ரங்கநாதன் கிருபையில கல்லையும் ஜீரணிக்கிறது இந்த வயிறு. ஓடிண்டிருக்கு வண்டி.. இன்னும் எத்தனை நாள்… பார்க்கலாம். நான் செத்துப் போ&னன்னா இந்தப் பாடசாலைப் பையன்தான் எனக்குக் கொள்ளி போடணும், கேட்டுக்கோ ரங்கு.’’



‘‘நீர் எங்கே செத்துப் போவீர்? இருக்கறவாளை சாகடிச்சுட்டுத் தான் போவீர். ஆயுசு கெட்டி உமக்கு!’’



அவர் மறுபடி வீதி பிரதட்சிணத் துக்குப் புறப்பட, ‘‘ஸ்ட்ரேஞ்ச்… வெரி ஸ்ட்ரேஞ்ச்’’ என்றேன்.



ஹைஸ்கூல் எப்படி நடக்கிறது என்று… என் கிளாஸ்மேட்தான் கரெஸ்பாண் டெண்டாக இருந்தான், அவனை விசாரிக்கப் போயிருந்தபோது ஜி.பி-யைச் சந்தித்தேன். பொதுவாக மேத்ஸில் மல்ட்டிப்பிள் சாய்ஸ் கேள்விகள் வந்து தரமே போய்விட்டதாகச் சொன்னார். அவரேதான் ஆரம்பித்தார்…



‘‘அப்பாவைப் பாத்தியோ..?’’



‘‘பாத்தேன் சார்.’’



‘‘என்ன பிடிவாதம் பாத்தியா?’’



‘‘அவர் சொல்றதைப் பார்த்தா அவருக்குச் சோறு தண்ணி கூட சரியா கொடுக்கறதில்லைன்னு…’’



‘‘அப்படியா சொன்னார்? ஒரு நா எங்காத்துக்கு வந்து மாமியை சந்திச்சுக் கேட்டுப்பாரு. என் அப்பாதான்… இல்லேங் கலை. ஆனா, அவர் கார்த்தாலை எழுந்திருக்கற திலிருந்து பண்ற அட்ட காசம்… எனக்கு நாலும் பொண்ணு. நாலும் நன்னாப் படிக்கறதுகள். அதுகளைப் படிக்க விடாம சத்தமா பாராயணம் பண்ணிண்டு, எல்லா ரையும் கண்டார… வல்லாரன்னு திட்டிண்டு, கோமணத்தோட புழக்கடைல அலைஞ்சுண்டு…’’



‘‘தனி வீடு பாத்துக் கொடுத்துர்றதுதா;ன?’’




‘‘போகமாட்டேங்கறாரே! ‘என் வீடு, நான்தான் இருப்பேன்’கறார்!’’



‘‘சரி, நீங்க போய்டறதுதா;ன?’’



‘‘யோசிச்சிண்டிருக்கேன். வாடகை கொடுத்து மாளுமா?’’



‘‘அவர்கிட்ட பணம் இருக்கில்லே?’’



‘‘இருக்கு. என்ன வெச்சிருக்கார்னு காட்டமாட்டார். வக்கீலைக் கூப்ட்டு நாலு தடவை வில்லை மாத்தி மாத்தி எழுதிட் டார். சீரங்கம்னு ஒரு பேத்தி மேல கொஞ்சம் பிரியம். அதுங் கிட்ட எதோ சொல்லிண்டிருக்கார்… ‘உங்க யாருக்குமே நன்னி கிடையாது. தொச்சுக்குத்தான் எல்லாம்னு உங்கம்மா கிட்ட சொல்லிடு…’ ’’



‘‘தொச்சுங்கறது…’’



‘‘பாடசாலைப் பையன். அவரை கார்த் தால கம்பு பிடிச்சு அழைச்சுண்டு போறா&ன அவன். கேக்கறதுக்கு நன்னாவா இருக்கு? எதுக்குக் கிழத்துக்கு நான் சிசுருஷை பண்ண ணும்கறா என் ஆம்டையா! நான்தான் அவளை சமாதானப்படுத்தி வெக்கறேன்… ‘அப்படியெல் லாம் செய்ய மாட்டார். கோபத்தில ஏதோ சொல் றார்’னு. அவ சொல்றது நியாயம்தா;ன?’’




‘‘தான தளிப்பண்றதா…’’




‘‘அதெல்லாம் வெட்டிப்பேச்சு! ஆடிக் கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை தளிப்பண்ற உள்ளை மாடு கன்னுபோட்ட எடம் மாதிரி பண்ணிட்டுப் போவார். என் அப்பாவா இருந்தாலும், இந்த மாதிரி ஒரு பிடிவாதம் புடிச்ச கிழவனை நான் பாத்ததில்லை. போய்த் தொலைஞ்சாலும் பரவாயில்லைன்னு சில சமயம் அவ்வளவு வெறுப்பேத்தறார்.’’



‘‘அவருக்கு என்ன வேணுமாம்? எதாவது மனசில குறை வெச்சுண்டு இருக்கலாம் ஒரு இன்சொல், ஒரு பரிவு… அல்லது, ‘தாத்தா எப்டி இருக்கே?’னு பேத்திகள் கேட்டாலே போறுமா இருக்கலாம். உங்க மனைவியும் ‘அப்பா, எப்டி இருக்கீங்க? கண்ணுக்கு மருந்து போடட்டுமா’னு எதாவது கேக்கலாம்.’’



‘‘அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லை. நீ வேணா சீதாகூட பேசிப்பாரு. நான் சொன்னது பாதிதான். அவ ஆங்கிள்ள பார்த்தா கதை ரொம்பக் கடுமையா இருக்கும். டெல்லிக்குப் போறதுக்கு முன்னாடி ஒரு தடவை சாப்பிட வா, எங்காத்துக்கு!’’




போயிருந்தேன். நான்கு பெண்கள் பதினைந்து, பதின்மூன்று, பத்து, எட்டு என்று அலைந்தன. எனக்கு முன்னால் ஸ்டூல் போட்டு தீர்த்தம் எல்லாம் பதவி சாகக் கொண்டுவந்து கொடுத்தார்கள். எனக்காக மாமி ஜவ்வரிசிப் பாயசம் பண்ணியிருந்தாள். சமையல் எல்லாம் சூப்பராக இருந்தது.



நான் சென்றபோது, கிழவர் வாசல் திண்ணையில் காலை அகட்டி உட்கார்ந்து கொண்டு பனை விசிறியால் கீழே விசிறிக் கொண்டிருந்தார். நெற்றி சுருங்கி விரோதமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். ‘‘இருக்கறவனுக்கு ஒரு வேப்பம்பூ சாத்துமது கிடையாது. வரவா போற வாளுக்கெல்லாம் பால்பாயசம். கேக் கறவா கிடையாது இந்தாத்துல’’ என்றார்.




‘‘வாங்களேன் மாமா… உங்காம்தான? வாங்கோ, பாயசம் சாப்டலாம்’’ என்றேன்.



‘‘இந்தாத்திலயா? ஒரு திருஸ்தம் கூட எடுத்துக்கமாட்டேன்.’’



வாத்தியார் ஜி.பி-யின் மனைவி வெளிப்படையாகப் பேசினாள். ‘‘எவ்வளவு தூரம் பொறுத்துக்கறது? ‘பொறுத்துப் போ’னு இவர் பாட்டுக்கு சொல்லிட்டுப் பள்ளிக் கூடம் போய்டறார். இருபத்துநாலு மணி நேரமும் இவர் கூட மல்லுக் கட்ட வேண்டியிருக்கு. ரெண்டு பொண் வயசுக்கு வந்துட்டா. அவா முன்னாலயே கோமணத்தை அவுத்துக் கட்டிக்கறேர். ரெங்கராஜுவை கூப்ட்டு திண்ணைல உக்காந்துண்டு சர்வாங்க க்ஷவரம் பண்ணிக்கறேர். சாக்லெட்டு, பப்பர்மிட்டுனு வாங்கி ஒளிச்சு வெச்சுக்கறேர். பாட சாலைப் பையன்களுக்குக் கொடுத்தாலும் கொடுப்பேர்… பேத்திகளுக்குக் கொடுக்க மாட்டேர். அதுகளைப் படிக்க வெக்கறதே அவருக்குப் பிடிக்கலை. என்னைக் கண்டா ஆகவே ஆகலை…’’




‘‘இதுக்கெல்லாம் ஆதாரமா ஒரு சம்பவம் அல்லது காரணம் இருக்கணும் மாமி.’’



‘‘இருக்கு. அதைச் சொல்லிட்டுத் தான் ரசாபாசமாய்டுத்து! எங்காத்தில எனக்கு நிறைய செஞ்சிருந்தா. அதை அவர் அலமாரில வெச்சுப் பூட்டியிருந்தார். மாமியார் போறவரைக்கும் அதை நான் பார்த்தேன். பண்டிகை நாளில் என்னை எடுத்துப் போட்டுக்கச் சொல்வா. மாமியார் தங்கமான மனுஷி. அவர் போனதும், இது எதோ தங்கை பொண்ணு கல்யாணத்துக்கு எடுத்துக் கொடுத் துடுத்து போல! பாலிஷ் போட்டு வெள்ளிப் பாத்திரத் தையெல்லாம் கொடுத்திருக் கேர். போனாப் போறது, சொல்லிருக்கலாமில்லையா? ரங்கநாதன் கிருபை இவரும் சம்பாதிக்கிறேர். ஒரே ஒரு தடவை எச்சுமிக்கு தோடு செஞ்சு போடலாம். ‘அப்பா, அம்மா என் நகையெல்லாம் எங்க வெச்சிருக்கா?’னு கேட்டதுக்கு, ‘‘நகையா… உன்னை எதிர்ஜாமீன் இல்லாம இலவசமா கல்யாணம் பண்ணிண்டோம். உங்காத்துல உனக்கு என்ன போட்டா? உங்கப்பன் ஏமாத்திட்டான்’னார்.




எனக்கே தெரியும்… எனக்கு எத்தனை கேஷா கொடுத்தா, வைர மோதரத்துக்கு, பட்டு வேஷ்டிக்குன்னு… எத்தனை நகை போட்டான்னுட்டு. அதை எடுத்துச் சொன்னப்ப எல்லாம் கவரிங்னார். ‘இதை அப்பவே சொல்லியிருக்கறதுதா&ன?’ன்&னன். இவ்வளவுதாம்பா கேட்டேன். அதிலேர்ந்து என் மேலயும் என் பெண்கள் மேலயும் வெறுப்புன்னா வெறுப்பு அப்படிப்பட்ட வெறுப்பு. நின்னா குத்தம்.. உக்காந்தா குத்தம்…

’’

இந்தச் சம்பாஷணை முழுவதும் அவருக்குக் கேட்டிருக்கவேண்டும்.



திண்ணையிலிருந்து சத்தம் போட்டார்… ‘‘எல்லாத்தையும் சொன்னியே, உன் நகை அத்தனையும் சப்ஜாடா நான் திருப்பித் தந்ததைச் சொன்னியா?’’



இவள் ‘‘மொத்தத்தில கால்பாகம் கூடத் திரும்ப வரலைப்பா. ரெட்டை வடம் சங்கிலி என்ன ஆச்சு, பச்சைக்கல் தோடு என்னாச்சு, பேசரி என்னாச்சு, ஒட்டியாணம், நாககொத்து என்ன ஆச்சு, வங்கி என்னாச்சு..?’’ என்றாள்.



‘‘பச்சைப்பொய். உங்களுக்கெல்லாம் என் கெட்ட குணம் மட்டும் தான் தெரியும். நல்ல குணம் எதும் கண்ணுக்கே தெரியாது.’’

இவள் சன்னமாக ‘‘நல்லது எதாவது இருந்தா சொல்லுங்கப்பா’’ எனறாள்.



நான் இந்தச் சண்டை ஓயாது என்று புறப்பட்டு வந்துவிட்டேன். என் சமாதான முயற்சிகள் அத்தோடு முடிந்தன.



அடுத்த வாரம், புறக்கடையில் பாசி வழுக்கி விழுந்துவிட்டார் கிழவர். தொடை எலும்பும் இடுப் பிலும் முறிந்துபோய் ஜி.பி. அவரை புத்தூருக்கு அழைத்துப் போக, அங்கே இன்னமும் சீரியஸாகி, அப்புறம் தில்லைநகரில் அவரை அட்மிட் பண்ணி, மாற்றி மாற்றி வாத்தியாரும் மாமியும் பதினைந்து தினம் அவருக்கு வேளா வேளைக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு போய்… ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் நான் ஊருக்குக் கிளம்பும் முதல் நாள்தான் இறந்து போனார்.



இத்தனைப் பாடுபட்டதுக்கு ஜி.பி>க்கோ மனைவிக்கோ பேத்திகளுக்கோ எந்தவிதப் பயனும் இல்லை. சொத்து முழுவதையும் தொச்சு என்கிற துரைசாமியின் பேரில் எழுதி வைத்துவிட்டு, அவன் மேஜராகும் வரை > பதினெட்டு வயசு வரும் வரையில் வக்கீலை அந்தச் சொத்துக்கு கார்டியனாகப் போட்டு பதினெட்டாம் வயதில் அந்தச் சொத்து அவன் படிப்புக்கும் பராமரிப்புக்கும் போகவேண்டும் என்று எழுதி வைத்திருந்தார்.



பாடி எடுக்குமுன் துக்கம் விசாரிக்க அவர் வீட்டுக்குப் போய் திண்ணையில் சற்று மௌனமாக உட்கார்ந்திருந்தேன். உள்ளே பேத்தி ஒருத்தி மட்டும் ‘தாத்தாஆஆஆ…’ என்று அழுது கொண்டிருந்தது. உஞ்ச விருத்திக்கு அழைத்துச் சென்ற பாடசாலைப் பையன் ‘‘மாமா, நாளைலருந்து வரவேண்டாமா? வேற எதாவது ஒத்தாசையா இருக் கே&ன!’’ என்றான். ‘‘இந்த ஆமே உன்னுதுரா’’ என்றார் ஜி.பி. விசும் பலுடன். அவனுக்குப் புரியவில்லை. மாமிக்கு ஆத்து ஆத்துப் போயிற்று. ‘‘என்ன பாவம் பண்ணோம்னு இந்தத் தண்டனை கொடுத் துட்டுப் போனார் கிழவனார். எங்கப் பாம்மா போட்ட நகை எங்கேனு கேட்டது ஒரு பெரிய தப்பா? அதுக்கு இத்தனை பெரிய தண்டனையா?’



ரங்கு ஜி.பி-யிடம் ‘‘ஓய்… இது பிதுரார்ஜித சொத்து. அதை எழுதி வெக்க கிழத்துக்கு உரிமையே கிடையாது. கிறுக்குப் புடிச்சாப்ல இப்படியெல்லாம் வில் எழுதினா கோர்ட்டில ஒத்துக்க மாட்டா. சண்டை போட்டு வாங்கிடலாம்.’’





ஜி.பி-தான் ‘‘ரங்கு, நமக்கு எது உண்டு, எது இல்லைன்னு தீர்மானிக்கிறதெல்லாம் ஸ்ரீரங்கநாதன்தான்’’ என்றார்.



அதன்பின் நான் அலகாபாத் போய்விட்டு கல்கத்தா, டெல்லி, அல்மோரா, பதான்கோட், கொலம்போ என்று சுற்றிவிட்டு ஆறு வருஷம் கழித்துதான் ஸ்ரீரங்கம் திரும்ப முடிந்தது. ரங்குவை முதல் காரியமாக விசாரித்தேன்… ‘‘ஜி.பி. வாத்தியார் என்ன ஆனார் ரங்கு?’’



‘‘ஏன் கேக்கறே… ஸ்கூல்ல புதுசா ஹெட்மாஸ்டரை நியமனம் பண்ணிட்டா. ரெண்டு பேருக்கும் ஆகலை. நோட்ஸ் போடக் கூடாதுன்னு தடை பண்ணிட்டா. கோவிச்சுண்டு ரிஸைன் பண்ணிட்டேர். மணச்சநல்லூர்ல போய்ச் சேர்ந்தேர். அங்கயும் சரிப்பட்டு வரலை. சம்பளம் சரியா வரலை. அதுக்கப்புறம் நோட்ஸ் போட்டு விக்கறதும் பாழாப் போச்சு. இவர் போட்ட நோட்ஸையே காப்பி அடிச்சு இன்னொருத்தன் போட்டு அரை விலைக்கு வித்தான். அவன்மேல கேஸ் போடறேன்னு வக்கீல்கள்ட்ட காசு நிறைய விட்டேர். ஏறக்குறைய பாப்பர் ஆறநிலைக்கு வந்துட்டேர். சொத்தும் இல்லை. பத்ரிக்கு போ



றேன்னு காலை ஓடிச்சுண்டேர். மனசொடிஞ்சு போய்ட்டேர். அப்றம்…’’ என்று ரங்கு பேச்சை நிறுத்தினான்.

நான் சன்னமாக, ‘‘எதாவது விபரீதமா ரங்கு?’’ என்றேன்.



‘‘அதை ஏன் கேக்கறே… கடைசியா ரங்கநாதன் கண்ணைத் திறந்துட்டார்.



‘‘எப்படி?’’



‘‘மூத்த பொண்ணு எச்சுமி இருக்கு பாரு, தொச்சுவைக் கல்யாணம் பண்ணிண்டு டுத்து. எல்லாம் சரியாப் போய்டுத்து. உஞ்சவிருத்தி தேசிகாச்சாரி சொத்து மறுபடி ஃபேமிலிக்கே வந்துடுத்து!’’



‘‘அந்தப் பையன் அதிகம் படிச்சிருந் தானா?’’


‘‘எட்டாம் கிளாஸ்க்கு மேல படிப்பு ஏறலை…’’



‘‘இந்தப் பொண்ணு?’’


‘‘எம்.சி.ஏ.’’


நான் வியப்புடன் ‘‘எப்படிக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சது அந்தப் பொண்ணு… ஃபேமலிக்காக தியாகமா?’’


‘‘அதெல்லாம் இல்லை, காதல்!’’ என்றான் ரங்கு.

நன்றி - அமரர் சுஜாதா , உயிர் மெய் , சிறுகதைகள்