Showing posts with label SIVAJI. Show all posts
Showing posts with label SIVAJI. Show all posts

Saturday, April 30, 2011

எம் ஜி ஆர் சந்திரபாபுவை வெறுத்தது ஏன்?

கழுகார் பதில்கள் - காமெடி கும்மி

1.குணசீலன், தஞ்சாவூர்

சார்லி சாப்ளின் நடிப்பு பிடிக்குமா?
சாப்ளினை ரசிக்காதவர்கள் ரசிப்புத்தன்மை இல்லாதவர்கள்! அவர் நடிகர் மட்டுமல்ல...  தத்துவ மேதை! இதோ சில முத்துகள்...

. வாழ்க்கையே ஒரு நகைச்சுவை​தான்.
. மழையில் நனைவது பிடிக்கும், ஏனென்றால் நான் அழுவதை யாரும் கவனித்துவிட முடியாது.

. வாழ்க்கையை நெருங்கிப் பார்த்தால் சோகம், விலகிப் பார்த்தால் இன்பம்.

.நீங்கள் தலைகுனிந்து நடந்தால், வானவில்லை ரசிக்க முடியாது.


.நினைவுகள் இருந்தால் தனிமை தெரியாது.

சி. பி  - கம்யூனிச சிந்தனைகளை, தொழிலாளர் படும் கஷ்டங்களை அவர் அளவுக்கு நகைச்சுவையாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தவர் யாரும் இல்லை.. பர்சனல் லைஃபில் அவர் போல் தோல்வியை சந்தித்த நகைச்சுவை நடிகரும் யாரும் இல்லை.

------------------------------
2.எல்லோரும் கரடியாய்க் கத்தி என்ன பயன்? நம் பிரதமரே வாக்களிக்கவில்லையாமே?

யாருக்கு வாக்களிப்பது என்று மன்மோகன் சிங் முடிவுக்கு வருவதற்குள், தேர்தல் முடிந்துவிட்டது. பாவம், பிரதமர் என்ன செய்வார்?



சி .பி. -அன்னையிடம் இருந்து ஆணை வரவில்லையோ என்னவோ?முன் மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் எல்லாம் இந்த மாதிரி இருந்தால்நாட்டை முன்னேற்றப்பாதையில் செலுத்துவது எப்படி?

 -------------------------------

3.ஆர்.ஜேஸ்மின் ரமேஷ், கம்பம்

தி.மு.க-வுக்கு எதிரான செய்திகளுக்கு கழுகார் முக்கியத்துவம் தருவது ஏன்?

அ.தி.மு.க ஆட்சிக் காலமாக இருந்திருந்​தால் நீர், இதே கேள்வியை மாற்றிக் கேட்டிருப்பீர். காய்க்கும் மரமே கல்லடி படும். ஆளும் கட்சியே அதிக விமர்சனங்களை சந்திக்க நேரும்!

சி பி - உச்சியில் இருப்பவர்களைத்தானே குட்ட முடியும்?

----------------------------------
4. ஜி.விஸ்வநாதன், நாகர்கோவில்.

நல்ல நடிகர் சந்திரபாபுவை குடிதானே வீழ்த்தி​யது?

குடியும்!
ஆனால், மனசுக்குள் எதையும் மறைத்து வைக்​காமல் வெளிச்சத்தில் போட்டு உடைத்த குணம் உடையவர் என்பதால், அவர் வீழ்த்தப்பட்டார் என்பதே உண்மை!

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி ஆகிய மூவரையும்பற்றி சந்திரபாபுவிடம் கருத்துக் கேட்டார் ஒரு நிருபர்.

'ஜெமினி என்னோட ஆதிகால நண்பன். அவனுக்கு காமெடி எப்படிப் பண்ணனும், லவ் சீன் எப்படிப் பண்ணனும் என்று நடித்துக் காட்டுவேன்.

அடே அம்பி, இத்தனை வருஷமாச்சு. நடிப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை!

சிவாஜி நல்ல ஆக்டர், பட்... அவரைச் சுத்தி காக்கா கூட்டம். அந்த ஜால்ரா கூட்டம் போனாத்தான் தேறுவார்.

எம்.ஜி.ஆர்., கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். கம்பவுண்டராகப் போகலாம்’ என்று பதில் சொன்னவர் சந்திரபாபு. இடம், பொருள் பார்க்காமல், இப்படி கமென்ட்கள் அடித்ததால்தான் அவருக்கு சிக்கல் வந்தது!

சி பி - ஓப்பனா பேசக்கூடாது என்பது வி ஐ பி களுக்கான எழுதப்படாத விதி.. நம் ஆர் ராதாவும்,சந்திரபாபுவும் அதை மீறினார்கள். அவர்கள் பலமும் அதுதான்,பலவீனமும் அதுதான்

---------------------------------

5. போடி எஸ்.சையது முகமது, சென்னை-93

  மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் பற்றி?

'அவருக்கு யாருய்யா சகாயம்னு பேர் வெச்சது? எந்த சகாயமும் பண்ண மாட்டேன்னு சொல்றாரே?’ என்று புலம்பினாராம் மத்திய அமைச்சர் அழகிரி.
'யார் என்னைத் தொந்தரவு செய்தாலும், இந்த சகாயம் நேர்மை தவற மாட்டான்’ என்பது அவர் அடிக்கடி சொல்வது.

2026-ல் யார் முதலமைச்சராக வருவார் என்பதைக்கூடக் கணக்குப் போட்டு காக்கா பிடிக்க நினைக்கும் ஐ.ஏ.எஸ். அதிகார வர்க்கத்தில் தப்பிய சிலரில் சகாயமும் ஒருவர். இந்த சமூகம் இன்னும் மோசமாகிவிடவில்லை, நல்லவர்களும் ஆங்காங்கே இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் ஒரு சாட்சி!

சி. பி -சகாயம் அரசியல்வாதிகளுக்கு ஒரு கசாயம். சேற்றில் செந்தாமரைகள் முளைப்பது மாதிரி நாட்டில் சில நல்லவர்கள் தோன்றுவது உண்டு

---------------------------

6.ரேவதிப்ரியன், ஈரோடு

  உங்கள் குரு யார்?

வாசகர்!

சி பி - காசு குடுத்து வாங்கிப்படிக்கறவங்களா? ஓ சி ல லைப்ரரில படிக்கறவங்களா?

--------------------------
7. வி.சுதாகரன், நெய்வேலி.

  ஈழத் தமிழர் பிரச்னையை முழுமையாக அறிந்துகொள்ள சில புத்தகங்களைப் பரிந்துரை செய்யுங்கள்!


போரும் சமாதானமும் - ஆன்டன் பாலசிங்கம்

சமாதானம் பேசுதல் - 'அடையாளம்’ வெளியீடு

ஈழத்தமிழர் போராட்ட வரலாறு - பாவைச் சந்திரன்

இந்த மூன்றும் புராதன இலங்கையில் தொடங்கி ராஜபக்ஷேவின் காலம் வரைக்குமான அனைத்து அழிவுத் தகவல்களையும் அப்பட்டமாகச் சொல்கின்றன!

சி பி - புத்தகங்கள் படிப்பதை விட ஈழ அகதியிடம் ஒரு நாள் இருந்து அவர்களுடன் பேசிப்பார்த்தாலே அவர்கள் வலியை உணர முடியும்.

-----------------------

8. எம்.செல்லையா, சாத்தூர்

  நரேஷ்குப்தா, பிரவீண் குமார் ஒப்பிடுக!

இரண்டுமே அணுகுண்டுகள். ஒன்று அமைதியாகவும், இன்னொன்று அதிரடியாகவும் வெடிக்கும்!

சி பி -ஆணவத்தால் ஆடிய அரசியல்வாதி மாப்புகளை ஆப்பு அடித்தவர்கள் இருவருமே..

------------------------------


9. வி.செல்லப்பா, திருநெல்வேலி.

  இந்தத் தேர்தலில் செலவான பணத்தின் மதிப்பு எவ்வளவு இருக்கும்?

ஒரே ஒரு கட்சி செலவழித்தது மட்டும் இரண்டாயிரம் கோடியைத்  தாண்டுகிறது!  இதைத்தான் பூஜ்யங்களின் ராஜ்யம் என்கிறார்கள்!

சி பி - பிஸ்னெஸ்மேன் முதல் போட்டு பின் போட்ட காசை எடுப்பது மாதிரி சின்ன மீனைப்போட்டு பெரிய மீனை எடுக்கிறார்கள்.பாக்கெட்டில் இருந்தா செலவு பண்ணுனாங்க.? ஏற்கனவே அடிச்ச காசில இருந்து ஒரு பர்சண்ட்டேஜ்ஜை செலவு பண்ரது பெரிய தியாகமா? என்ன?

----------------------------
10. என்.சொர்ணம், தூத்துக்குடி.

  ஆ.ராசா எப்படி இருக்கிறார்?

தேர்தல் முடிந்ததும் தன்னை வந்து தலைவர் சந்திப்பார் என்று நினைத்தாராம். ஆசை நிராசை ஆகி வருவது அவருக்கு வருத்தமாகத் தானே இருக்கும்!

 சி பி - மாட்டிக்கொள்ளாதவரை மகான், மாட்டிக்கொண்டால் மாக்கான் .
தலைவர் வராட்டி என்ன? தலைவி வந்தாங்களே போதாதா?


-------------------------------
11. சி.சாந்தி, மதுரை.

  அமைச்சர்களில் அதிகம் சம்பாதித்த முதல் அமைச்சர் யார்?

தமிழ்நாட்டின் மத்தியில் இருக்கிறார்!

 சி பி - அதிகம் சம்பாதித்த முதல் அமைச்சர் நம் முதல் அமைச்சர்?