Showing posts with label SEEMAAN. Show all posts
Showing posts with label SEEMAAN. Show all posts

Thursday, July 26, 2012

சீமான் மேரேஜ் - வெளி வராத மர்மங்கள், விஜயலட்சுமிக்கு அல்வா

http://www.eutamil.com/wp-content/uploads/2011/04/29Seemaan.jpg 

தலைவர் பிரபாகரன் திருமண நாளான அக்டோபர் 1-ம் நாள் என் திருமணமும் நடக்கும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார் !

ஆம்.. அக்டோபர் ஒன்றில் எனது அண்ணன் பிரபாகரனுக்கும் அண்ணி மதிவதனிக்கும் திருமணம் நடந்த தினம். அன்று திருமணம் செய்துகொள்வது என்ற முடிவிலிருக்கிறேன்.  பெண் யாரெனத்தான் இன்னும் தெரியவில்லை. எப்படியும் அதற்குள் பெண்தேடும் படலம் முடிந்துவிடும். இத்தனை லட்சம் பெண்களில் எனக்கென்று ஒரு பெண் கிடைக்காமலா போய்விடுவாள் ? என்று இந்திய ஊடகம் ஒன்றிற்கு கூசாமல் பொய்யுரைத்துள்ளார் சீமான் என்றால் நம்புவீர்களா ?


சரி சீமான் உண்மை சொல்கிறாரா இல்லையா என்பதனை எவ்வாறு அறிய முடியும் ? முதலில் ஒரு யதார்த்தத்தை நாம் உணரவேண்டும். தற்போது ஜூலை மாதம் முடிவில் உள்ளோம். ஆகஸ்ட், செப்டெம்பர், அக்டோபர் 1ம் திகதி என்று பார்த்தால் 60 நாட்களே உள்ளது. இந்த 60 நாட்களில் சீமான் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் முடிகப்போகிறாராம். ஆனால் அது யார் என்று அவருக்கே தெரியாதாம் ! நாம் தமிழர் கட்சியை நடத்தும் தலைவர் அவர் ! ஒரு மாநாடு நடக்க 3 மாதங்களுக்கு முன்னரே பிளான் போடும் அவர் தனது வாழ்க்கை துணை யார் என்று தெரியாது, ஆனால் அக்டோபர் 1ம் தேதி கல்யாணம் என்று சொல்கிறாரே நம்பக்கூடிய வகையிலா இது இருக்கிறது ?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYHKbC4AalJf3TF_-keayBJ8Dg0HJBERSCvezxjWmFU1S8JzXwEkG2N6olc94xBa9SmozbIGJI6NbviJXnuSfJaLOQxulMUNQp-CsUDIWL29aU3kgykjztO-_Jfa0WjMncqN3YZ6l3rjs/s1600/se+v+5.jpg

வன்னியில் புலிகள் பலமாக இருந்தவேளை புலிகளின் ஊடகவியலாளராக இருந்த அழகான பெண் யாழ்மதி. இவர் குறிப்பாக ஆங்கிலச் செய்திகளை வாசிக்கும் ஊடகவியலாளர். சீமான் முதன்முதலாக இந்தப் பெண்ணை வன்னியில்தான் சந்தித்து இருந்தார். திரைப்படப் பிடிப்பு சம்பந்தமாக புலிகளுக்கு பாடம் எடுக்க சென்றவர், இந்த அழகான பெண்ணை கண்டு மயங்கி இருந்தார். தமிழ் தேசியத்தின் பெயரால் புலிப் பெண் ஒருவரை திருமணம் செய்ய விரும்புகின்றார் என்று இவர் தலைவர் பிரபாகரனுக்கு சொன்னார்.

ஆனால் குறிப்பிட்ட அப் பெண்ணை பிறிதொருவர் திருமணம் முடிக்க இருப்பதாக தலைவர் தெரிவித்து, அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அப் பெண் யாரும் இல்லை, புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் வலதுகரமாகத் திகழ்ந்த அலெக்ஸ் என்னும் அன்புமணி காதலித்தவர் ஆவார். பின்னர் இவர்கள் இருவருக்கும் திருமணம் நிகழ்ந்தது. ஆனால் நான்கே மாதத்தில் அலெக்ஸ் மற்றும் சு.ப. தமிழ்ச்செல்வன் ஆகியோர் விமானத் தாக்குதலில் இறந்தனர். பின்னர் 2009ம் ஆண்டு யாழ்மதி இராணுவத்திடம் சரணடைந்தார்.


இவர் இவர் இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை எப்படியோ மோப்பம்பிடித்த சீமான், இலங்கையில் உள்ள துணை ஆயுதக் குழு ஒன்றுக்கு பெருந்தொகைப் பணத்தை இலஞ்சமாக கொடுத்து அன்புமணியின் முன்னாள் மனைவியான அழகான பெண்ணை(யாழ்மதியை) சிறையில் இருந்து மீட்டு இருக்கின்றார் சீமான்.

இந்தியாவில் அடைக்கலம் கொடுத்து வைத்திருக்கின்றார். சீமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாட்களில் கூட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த அன்புமணியின் முன்னாள் மனைவி எவ்வித குறைகளும் இல்லாதபடி பார்க்கப்பட்டார். தற்போது தமிழ் நாட்டில் மறைவாக வைக்கப்பட்டிருக்கும் இப் பெண்ணுக்கும் சீமானுக்கும் அக்டோபர் 1ம் திகதி திருமணமாக உள்ளது ! அதாவது ஒரு விதவைக்கு மறு வாழ்வு கொடுப்பது பாவம் என்று நாம் கூறவில்லை. இல்லையேல் ஒரு போராளியை இவர் காப்பாற்றியது தொடர்பாக நாம் விமர்சனம் தெரிவிக்கவில்லை.

http://cinemaulakam.com/images/vija_viyapu_170711.jpg


ஆனால் சீமான் தான் இன்னும் மணப் பெண்ணை பார்க்கவே இல்லை என்று ஏன் பொய்யுரைக்க வேண்டும் ? குறைந்த பட்சம் தான் ஒரு ஈழப் பெண்ணை தான் மணம் முடிக்க இருப்பதாக ஏன் அறிவிக்கவில்லை ? இதனைக் கூட துணிவாக அறிவிக்க வக்கில்லாத சீமான் எவ்வாறு தமிழீழத்துக்காகப் போராடப்போகிறார் ?

எவ்வாறு உண்மையுள்ளவராக இருக்கப்போகிறார் ? அன்புமனியின் மனைவியை மணப்பது நல்ல விடையம் ! ஆனால் அதனை அவரால் ஏன் நேர்மையாகத் தெரிவிக்க முடியவில்லை ? வாய் கிழிய கத்தும் அவர், இதனை மட்டும் ஏன் ஒரு கேவலமாக நினைக்கிறார் ? பெண் விடுதலை அவ்வளவு தானா ? இவ்வளவு நாளும் இவர் பேசிய வீர வசனங்கள் எல்லாம் பொய் தானா ? இனி ஈழத் தமிழர்கள் சீமானை எப்படி நம்புவது ?  ஒரு கருணாநிதி, ஒரு சுபவீரபாண்டியன், ஒரு தொல் திருமாவளவன், காங்கிரஸ் கட்சி நபர்கள், இவர்களைப் போல ஒரு உயிர் இல்லாத அரசியல் ஜடம் போல அல்லவா சீமான் மாறிவிட்டார் ?


உலகத் தமிழர்கள் எவ்வாறு இதனை ஏற்றுக்கொள்வார்கள் ? தமிழ் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் ஆரம்பத்தில் ஈழத் தமிழர்கள் பற்றிப் பேசி  அரசியல் செய்வதும், பின்னர் அரசியலில் முக்கியத்துவம் பெற்றதும் ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் நிலையில் தானா இன்னும் இருக்கிறார்கள் ? நாங்கள் இலங்கையில் அப்படியே செத்து மடிவதை தவிர வேறு வழியே இல்லையா ? இது தான் எங்கள் இனத்தின் சாபக்கேடா ? நாங்கள் எங்கள் உயிருக்கும் மேலாக நம்பியிருக்கும் தமிழ் நாட்டு உறவுகளே எங்களை அழிக்க உதவுவதா ? எங்கள் கண்ணில் மண்ணை வாரிப் போடுவதா ?


அதாவது சுருக்கமாகச் சொல்லப்போனால், தலைவர் நிராகரித்த பெண்ணை, தலைவர் மணம் முடித்த நாளில் மணம் முடித்து தேசிய தலைவர் முகத்தில் கரியைப் பூசுகிறார் சீமான் !


நன்றி - சம்பவம், முத்தமிழ் குழுமம்

செய்தி 2 


நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி திருமணம் செய்ய இருக்கிறார். மணமகள் முன்னாள் சபாநாயகரான மறைந்த காளிமுத்துவின் மகள் கயல்விழி. சென்னை அண்ணா நகரில் வசிக்கும் கயல்விழி காளிமுத்துவின் இரண்டாம் தாரத்து மகள். பட்டதாரிப் படிப்பை முடித்திருக்கும் கயல்விழி சீமானின் புரட்சிகரமான பேச்சில் மனதைப் பறிகொடுத்திருக்கிறார்.



நாம் தமிழர் கட்சியில் சேர விரும்பிய கயல்விழி அதுபற்றி பேசுவதற்காக சீமானை சந்தித்து இருக்கிறார். காளிமுத்துவின் மீது மிகுந்த மரியாதை கொண்ட சீமான் கயல்விழியை மனமார வரவேற்றதுடன் மட்டும் அல்லாமல், கயல்விழியின் தாயையும் சந்தித்து நன்றி தெரிவித்து இருக்கிறார். குடும்ப ரீதியான இந்த நட்புதான் ஒருகட்டத்தில் திருமணப் பேச்சு வரை நீண்டிருக்கிறது.


திருமணமே வேண்டாம் என்கிற நிலையில் இருந்த சீமான் மீது தேவையற்ற சர்ச்சைகளை சிலர் தொடர்ந்து ஏற்படுத்தி வந்தார்கள். விஜயலெட்சுமி என்கிற நடிகையைத் தூண்டிவிட்டு புகார் கொடுக்க வைத்தார்கள். அரசியலில் புதுப்புயலாக பரபரப்பு கிளப்பும் சீமான் மீது உளவுத்துறையும் இதர அரசியல் கட்சிகளும் சினிமாப் புள்ளிகள் சிலரும் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். அதனால் பெண் சம்மந்தமான புகார்களை இவர்கள் எந்த நேரத்திலும் சீமானுக்கு எதிராகக் கிளப்பக்கூடும். 



அதனால் திருமண வாழ்வில் அடியெடுத்து வைப்பதே சிறந்தது என சீமானுக்கு பலரும் அறிவுரை வழங்கினார்கள். இதற்கிடையில் சீமானுக்கு எதிராக பரபரப்பு கிளப்பிய விஜயலட்சுமி தன்னுடைய வழக்குகளை வாபஸ் பெறுவதாக சொல்லியிருக்கிறார்.



அதனால் இந்த சுபவேளையை தவறவிட விரும்பாத சீமான் காளிமுத்து மகள் கயல்விழியை திருமணம் செய்ய பரிபூரண சம்மதம் தெரிவித்திருக்கிறார். சிவகங்கை மாவட்டம் அரனையூரில் வசிக்கும் சீமானின் தாய் தந்தையர் இருவரும் இந்த திருமணத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். ”முகாம்களில் வாழும் ஈழ அகதிப் பெண்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து என் மகன் திருமணம் செய்வான் என எதிர்பார்த்தேன். ஈழ உணர்வு கொண்ட கயல்விழியை மணப்பது அகதிப் பெண்ணை மணப்பதற்கு ஒப்பானதுதான்” எனச் சொல்லி இருக்கிறார் சீமானின் தாய்.



மேதகு வே.பிரபாகரன் – மதிவதனி திருமணம் நடந்த அக்டோபர் முதல் தேதி சீமானின் திருமணமும் நடக்க இருக்கிறது. மிகப்பெரிய அளவில் விருந்துக்கு ஏற்பாடாகி வருகிறது. நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி உள்ளிட்ட ஈழ ஆதரவுத் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கும் இந்தத் திருமண விழாவை தலைமை ஏற்று நடத்த இருப்பவர் ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன்.


நன்றி - தாய்த்தமிழ்


சி.பி - மேலே சொன்ன இரண்டு செய்திகளில் எது உண்மை என்பது அக்டோபர் 1 அன்று தெரிந்து விடும்

Thursday, September 08, 2011

சிங்கம் மாதிரி கர்ஜிக்கும் சீமான் ஜெவிடம் மட்டும் சிறு நரி போல் பம்முவது ஏன்? விகடன் பேட்டி - காமெடி கும்மி

http://www.cinesnacks.in/tamil-movies/actress/Vijayalakshmi-Photos/boss-engira-baskaran-vijaylakshmi-008.jpg 
அடுத்த பிரதமரை அம்மாதான் அடையாளம் காட்டுவார்!

சிலிர்க்கிறார் கொ.ப.செ. சீமான்
நீங்கள் இறந்த பிறகு, உங்களுடைய உடலை யாரிடம் ஒப்படைப்பது?’ - தூக்குத் தண்டனைக்கு நாள் குறிக்கப்பட்ட பிறகு, இப்படி ஒரு கேள்வி எழுவது சிறைத் துறை சம்பிரதாயம். பேரறிவாளன், 'என் தாயிடம் ஒப்படையுங்கள்’ என எழுதிக் கொடுத்தார்.

ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்தபடி இருந்த முருகனும் சாந்தனும், 'எங்கள் உடல்களை அண்ணன் சீமானிடம் ஒப்படையுங்கள்!’ என எழுதிக் கொடுத்தார்கள். மரண மேகமாகச் சூழ்ந்த இந்தக் கொடூர நிகழ்வுகளை, சட்டப் போராட்டமும் சட்டமன்றத் தீர்மானமும் சுக்குநூறாக நொறுக்கிவிட்ட நிலையில், சீமானுடன் ஒரு சந்திப்பு...


1.  ''நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை... சட்டமன்றத்தில் தீர்மானம்... இந்த இரட்டிப்பு வெற்றி எப்படிச் சாத்தியமானது?''

சி.பி - தமிழகம் முழுக்க எழுந்த பிரம்மாண்டமான மக்கள் எழுச்சிதான் காரணம். எந்த ஒரு தனி நபரும் இதற்கு  சொந்தம் கொண்டாடிட முடியாது.. 




''முழுக்க முழுக்கப் பெண்களாலேயே நிகழ்த்தப்பட்ட சாதனை இது!


தூக்குக் கயிற்றை அறுத்து எறியும் இந்த அறப் போரை முன்னின்று நடத்தியவர்கள் பெண்கள். 21 வருடங்களாகப் பல தளங்களிலும் கண்ணீரைச் சுமந்தவர் எங்கள் தாய் அற்புதம் அம்மாள்.

அவருடைய கண்ணீரில் கருவான எழுச்சி, தங்கைகள் கயல்விழி, சுஜாதா, வடிவாம்பாள் அக்கா ஆகிய மூன்று வழக்கறிஞர்கள் நடத்திய பட்டினிப் போராட்டத்தில் பன்மடங்காக வீரியம் பூண்டது. தங்கை செங்கொடியின் மரணத்தில், ஒருமித்த எழுச்சித் தீயாக வெடித்தது.


தாய் உள்ளத்தோடு முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தபோது, தமிழர்களின் எழுச்சி வென்றது. ஒரு தாயின் கண்ணீர், இன்னொரு தாயாலேயே துடைக்கப்பட்டது. கட்சிப் பாகுபாடு பார்க்காத அத்தனை தலைவர்களும் இதற்கு பக்க பலமாக நின்றார்கள்!''

சி.பி - ஆரம்பத்துல அம்மா “நான் எதுவும் இதுல செய்யறதுக்கில்லை”ன்னு எஸ் ஆகப்பார்த்தாரு... ஆனா தமிழகம் முழுக்க எழுந்த எதிர்ப்பு அலை  உள்ளாட்சித்தேர்தல்ல பாதிப்பு ஏற்படுத்தும் என உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்த பின் சுதாரித்து அடுத்து உருப்படியான முடிவு எடுத்துட்டார்.. 

http://www.koodal.com/cinema/koodal_reel/2011/Seeman-Viji-reel-02.jpg


2. ''போர்க் குணத்தோடு போராடும் வழக்கம் உடைய நீங்கள், தூக்குத் தண்டனை விவகாரத்தில் ரொம்பவே அடக்கி வாசித்தீர்களே?''


சி.பி - அண்ணன் ஆல்ரெடி விஜயலட்சுமி மேட்டர்ல அம்மாகிட்டே இருந்து அழைப்பு வந்து விளக்கம் கேட்டா என்ன சொல்றது?ன்னு பம்பிட்டு இருந்தாரு, இந்த மாதிரி சூழ்நிலைல அம்மாவை எதிர்த்து அரசியல் பண்ண வேண்டாம்னு நினைச்சார் போல..  




''தொட்டதற்கெல்லாம் சட்டையைப் பிடிக்கிற ஆள் நான் இல்லை. சிங்கள அரசின் போர்க் குற்றங்களைக் கண்டித்து தீர்மானம் கொண்டுவந்த முதல்வர், நிச்சயம் மூன்று பேர் தூக்கு விவகாரத்திலும் அக்கறை காட்டுவார் என உறுதியாக நம்பினோம். ஈழத்தில் போர் தீவிரமானபோது கண்ணீர் உகுத்தால்கூட கைது நடவடிக்கையைப் பாய்ச்சினார் கலைஞர்.

தம்பி முத்துக்குமாரின் தீக்குளிப்பு தமிழ்நாடு முழுக்கத் தகித்தபோது, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து இளைய சமுதாயக் கைகோப்பை ஒடுக்கினார். ஆனால், மூன்று பேர் தூக்கைத் தடுக்க, மனிதச் சங்கிலி, மத்திய அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம், தொடர்வண்டி மறியல், கவர்னர் மாளிகை முற்றுகை, தங்கை செங்கொடியின் உடலைவைத்து காஞ்சி முழுக்க ஊர்வலம் என எத்தனையோ போராட்டங்கள் நடந்தன. இதில் எதற்காவது அரசு அனுமதி மறுக்கப்பட்டதா? போராட்டங்களுக்காக யாராவது சிறையில் அடைக்கப்பட்டார்களா? அடக்குமுறைச் சட்டங்கள் பாய்ச்சப்பட்டனவா?

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் அரசாங்கத்தை எதற்காக நாங்கள் எதிர்க்க வேண்டும்? 'ராஜீவ் கொலையாளிகள் தண்டிக்கப்படுவதில் என்ன தவறு?’ என, தங்கபாலு, சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டவர்கள் சொல்வதைப்போல் முதல்வரும் சொல்லி இருந்தால், நம்மால் என்ன செய்திருக்க முடியும்?

சி.பி - அப்படி அம்மா சொல்ல 1% கூட சான்ஸ் இல்லை, காங்கிரஸ் கூட கூட்டு கிடையாது,வைக்கும் ஐடியாவும் அம்மாவுக்கு இல்லை, அப்படி இருக்கும்போதுதேவை இல்லாம சோனியாவுக்கு ஏன் ஜால்ரா அடிக்கப்போறாங்க? 



அப்படி ஒரு வார்த்தை வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு நொடியும் தவிப்பும் பதற்றமுமாக நாங்கள் தத்தளித்துக்கிடந்தோம். தன் எழுச்சியான மக்கள் போராட்டம்தான் மகத்தான மாற்றத்தை உருவாக்கியது. எவ்வித சாயமும் இல்லாமல் உயர்நீதிமன்றத்தில் திரண்ட தலைவர்களாகிய நாங்களே ஆச்சர்யப்பட்டோம். மக்களின் பின்னால் தலைவர்கள் அணிவகுக்கும் காலம் வந்துவிட்டது.


'தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து...’ என்கிற வார்த்தைகளைத் தீர்மானத்தில் முதல்வர் அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார். கோரிக்கைகள் பலிக்காத இடத்தில்தான் கொந்தளிப்பு தேவை. பக்குவம் பழகியவர்களுக்கு இது புரியும்!''


சி.பி - அண்ணே, என்ன தான் சப்பை கட்டு கட்னாலும் குரலை உயர்த்திப்பேச முடியாட்டாலும் பம்மிக்கிட்டேவாவது அம்மா கிட்டே நீங்க இது பத்தி பேசி இருந்தா உங்க இமேஜ் டேமேஜ் ஆகாம இருந்திருக்கும்./.


http://telanganabuzz.com/upload/news/17767/vijayalakshmi-case.jpg

3. ''உங்கள் மீதான வழக்குகளுக்காகப் பயந்துதான் நீங்கள் அமைதி காத்ததாகச் சொல்லப்படுகிறதே?''

சி.பி - நிருபர் நேரடியா அட்டாக் பண்ணிட்டாரு.. இப்போ பாருங்க பெனால்டி கோல் எதிர்கொள்ளும் கோழி மாதிரி பார்ட்டி பம்மும் பாருங்க.. 


''வழக்குகளுக்குப் பயந்து அல்ல; என் இலக்குகளுக்குப் பயந்து! சிறையில் என் தம்பிகளின் தவிப்பை அருகே இருந்து அறிந்தவன் நான். வேலூர் சிறைக்குள் நான் இருந்தபோது, ரஜினி என்கிற வழக்கறிஞர் ஒரு விவகாரத்தில் சிக்கி உள்ளே வந்தார். மூன்று தம்பிகளின் தூக்கு குறித்து அவர் பேசியபோது, 'நான் செத்தால்தான், அவங்களைத் தூக்கில் போட முடியும்’ எனச் சொன்னேன்.


அந்த வார்த்தைகளைக் காக்க வேண்டியவனுக்கு, யாரையும் தாக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் தம்பிகள் இருவர் தீக்குளித்தபோதுகூட, 'உயிர் வேண்டாம்; உணர்வு போதும்’ என்றுதான் வலியுறுத்தினேன். வலிய போராட்டங்களையும் வன்முறைகளையும் நிகழ்த்திப் பெயர் வாங்குவது பெரிது அல்ல. ஆனால், மூன்று உயிர்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கி, அரசியல் செய்கிற ஆள் நான் இல்லை. எங்களுடைய நோக்கம் எதிர்க் கட்சி அரசியல் அல்ல; எதிர்கால அரசியல்!

சி.பி - என்னது எதிர்கால அரசியலா? அப்படி ஒரு நினைப்பு வேற அண்ணனுக்கு இருக்கா?அப்போ அண்ணி விஜயலட்சுமிதான் கொள்கை பரப்பு செயலாளரா? அவ்வ்வ்வ்வ்வ்வ்

சிறை ஒருபோதும் என்னைச் சிதைக்காது; செதுக்கவே செய்யும். வழக்குக்குப் பயந்தவனாக இருந்திருந்தால், மாதச் சுற்றுலா போவதுபோல் கடந்த ஆட்சியில் சிறை வலம் வந்திருப்பேனா? காலம் முழுக்கச் சிறையில் அடைத்தாலும் சிறைக் கம்பியோடு கம்பியாக இந்தத் தம்பி இருப்பானே தவிர, வாய் பொத்தி நிற்பவர்களின் வரிசையில் நிற்க மாட்டான்!''


சி.பி - அண்ணன் இங்கே, மேடைல எல்லாம் சீற்றமாத்தான் பேசறாரு.. ஆனா அம்மா முன்னே போய் நிக்கும்போது மட்டும் பம்முறாரு.. அது ஏன்?


http://reviews.in.88db.com/images/stories/vijyalakhmi.jpg


4. ''நீங்கள் அடுத்தடுத்து பாராட்டு மழை பொழிவதைப் பார்த்தால், அ.தி.மு.க-வின் அறிவிக்கப்படாத கொ.ப.செ. ஆகிவிடுவீர்கள் போலிருக்கிறதே?''

சி.பி - அதுக்கு ஒரு பட்டியலே இருக்கே? இவரு இப்போ வந்தவர் தானே? போற போக்கைப்பார்த்தா கேப்டன் தான் அதிமுக வோட கொ ப செ ஆவார் போல..!!!!!!!!!!


''போரைத் தடுக்க கடந்த ஆட்சியில் எந்த அளவுக்குப் போராடினோம் என்பது தெரிந்தால், இப்படிக் கேட்க மாட்டீர்கள். கலைஞரை நாங்கள் போராடச் சொல்லவில்லை. அவர் அமைதியாக இருந்திருந்தால், எங்களின் போராட்டங்களாலேயே ஈழப் போரைத் தடுத்திருப்போம்.


கூடினால் குற்றம், சீறினால் சிறை எனச் சகிக்க முடியாத அரக்கத்தனங்களை அவிழ்த்துவிட்டு, ஒருமித்த தமிழர் எழுச்சியை கலைஞர் முடக்கியதை மறக்க முடியுமா? மூவரைக் காக்க தீக்குளித்த தங்கை செங்கொடிக்கு முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் இரங்கல் தெரிவித்து இருக்கிறார். ஆனால், ஈழத் துயரங்களைத் தடுக்கக் கோரி உயிர்விட்ட தம்பி முத்துக்குமார் பெயரை சட்டமன்றத்தில் மொழிய கடந்த ஆட்சியாளர்களுக்குத் துணிவு இருந்ததா? காங்கிரஸுக்குக் கை கட்டி, வாய் பொத்தி இனத்தையே பலி கொடுத்த கலைஞர், 'அன்றைய நிலை வேறு; இன்றைய நிலை வேறு’ என வியாக்கியானம் பேசுகிறார்.


 சி.பி - ஆமா , அன்றைய நிலை தமிழகம் முழுக்க வளைச்சு போட்டாரு, இன்றைய நிலை தமிழகம் முழுக்க கோர்ட் , ஜாமீன்னு அலையறாரு..


20 வருட இறுக்க நிலையை இந்த இரண்டு வருடங்களில் உடைத்தவர்கள் நாங்கள். கலைஞரின் துரோகங்களுக்கு ஆளாகியவர்களுக்குத்தான் இப்போதைய ஆட்சியின் மகிமை புரியும்!''



http://www.southdreamz.com/wp-content/uploads/2010/04/vijayalakshmi.jpg

5. ''அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீங்கள் கலந்துகொள்ளாதது சர்ச்சை ஆனதே?''


''அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பது சாத்தியமே இல்லை. அனைத்துக் கட்சிகளும் திரண்டால், தமிழகத்தால் தாங்க முடியுமா? அனைத்துக் கட்சிகளும் கைகோக்கும்என்கிற நம்பிக்கை இற்றுப்போய், ஒவ்வொருவர் பின்னாலும் ஓடிக் களைத்துத் திரும்பிய என்னையே அந்த சாத்தியமற்ற சங்கமிப்பில் இணையச் சொல்கிறீர்களே... ஒரு சாதாரணக் கட்சியின் மாநாட்டுக்குக்கூட லட்சக்கணக்கில் தொண்டர்கள் திரள்கிறார்கள்.

ஆனால், ஈழப் போரைத் தடுக்க நடந்த அனைத்துக் கட்சிப் போராட்டத்தில் திரண்டவர்கள் எத்தனை பேர்? எங்கள் கட்சி தேர்தலுக்கானது அல்ல; இனத்தின் தேறுதலுக்கானது. இங்கே தமிழர்களை இணைப்பது எளிது. ஆனால், தலைவர்களை இணைப்பது கடினம். ஒன்றாக நிற்க இங்கே எல்லோரும் தயார். ஆனால், யார் முன்னால் நிற்பது என்கிற அக்கப்போருக்குப் பதில் இல்லையே?''

 சி.பி - அண்ணன் வார்த்தை ஜாலத்துல அடி பிண்றாரு.. ஆனா செயல்ல அந்த அளவு புத்திசாலித்தனம் இல்லையே?





6. ''மாநில அரசின் தீர்மானம் குடியரசுத் தலைவரைக் கட்டுப்படுத்தாது என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் சொல்லி இருக்கிறாரே?''


''சோனியா சொன்னால் கேட்கிற சட்டம், எங்கள் முதல்வர் சொன்னால் கேட்காதா?




சி.பி - அண்ணன் சந்தடி சாக்குல எங்கள் முதல்வர் சொன்னால் அப்டின்னு ஒட்டி உறவாடறார் பாருங்க, அநேகமா அண்ணன் உள்ளாட்சித்தேர்தல்ல கூட்டணி போட்ருவாரு போல



முறையாகத் தேர்தலில் நின்று வெல்ல முடியாதவர்களால் எங்களைக் கொல்ல மட்டும் முடியுமா? அமெரிக்காவில்கூட குடியரசுத் தலைவரை மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், தலையாட்டும் தகுதி மட்டுமே கொண்டவர்களை முதல் குடிமகனாகத் தேர்ந்தெடுப்பது இந்தியாவின் நடைமுறை ஆகிவிட்டது.


மக்களாட்சி என்கிற பெயரில் சர்வாதிகாரப் போர்வையோடு அலைகிறது இந்தியா. திட்ட அமைச்சரையும் சட்ட அமைச்சரையும் நிர்மாணிக்கும் சக்தியாக எங்கள் முதல்வர் சீக்கிரமே உருவெடுப்பார். அடுத்த பிரதமரை அடையாளம் காட்டப்போவதும் அவர்தான்!

சி.பி - அடுத்து வரப்போவது பி ஜே பி தான், ஆனா அன்னா ஹசாரே தான் பி எம்னு ஒரு பேச்சு அடிபடுது பார்ப்போம், அத்வானிக்கு மக்கள் செல்வாக்கு இல்லை.. 

http://filmreviews.bizhat.com/wp-content/uploads/2011/07/seeman-vijayalakshmi-affair-photo-3.jpg
இது தெரியாமல் தமிழக முதல்வரோடு மத்திய அரசு மோதினால், அன்றைக்குத்தான் தெரியும் தமிழர்களின் ஒருமித்த உணர்வு எத்தகையது என்று. அதுவரை அந்த சட்ட அமைச்சர் தன் கொட்டத்தை அடக்கிக்கொண்டால் சரி!''

சி.பி - சரி, அதெல்லாம் போகட்டும்னே, விஜயலட்சுமிக்கும் , எனக்கும் எந்த தொடர்பும் இல்லைனு சொன்னீங்க, ஆனா நீங்க பாப்பா பர்த்டே பார்ட்டில கேக் ஊட்டுன ஃபோட்டோ எல்லாம் அக்கா ரிலீஸ் பண்ணீட்டாங்க.. அதை எப்படி டீல் பண்ணுனீங்க?பிரபு தேவா மாதிரி பைசல் பண்ணுனீங்களா?

 thanx - vikatan

Saturday, June 04, 2011

சீமான் VS விஜயலட்சுமி -கில்மா?!! நடந்தது என்ன? ஜூ வி கட்டுரை

http://thatstamil.oneindia.in/img/2011/06/03-seeman-vijayalakshmi300.jpg 

ன்னை மூணு வருஷமா லவ் பண்ணினார். கல்யாணம் பண்ணிக் கிறதாச் சொல்லி ஆசையாப் பழகினார். ஆனால், இப்போ கல்யாணத்துக்கு மறுக்கிறார். என்னை மன உளைச்சலில் தள்ளிய அவர் மீது நடவடிக்கை எடுங்கள்!'' - இயக்குநர் சீமான் மீதுதான் இப்படி ஒரு புகார்... கிளப்பி இருப்பவர் நடிகை விஜயலட்சுமி! 

சி.பி- ஏம்மா.. 3 வருஷமா பழகிட்டே இருந்தீங்களே... அப்பவே ஏன் புகார் பண்ணாம இப்போ எலக்‌ஷன் ரிசல்ட் காங்கிரஸ்க்கு பாதகமா வந்த பிறகு பண்றீங்க?


புகார் கொடுத்த கையோடு சில சினிமா புள்ளிகளிடம் பேசிய விஜயலட்சுமி, ''உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு ஹீரோவாக இருக்கும் சீமான் என் வாழ்வில் வில்லனாகிவிட்டார். புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி யாரும் வற்புறுத்தினால் தற்கொலை செய்துகொள்வேன்!'' எனப் புலம்பி இருக்கிறார்.  

சி.பி - ஹா ஹா அப்படியா?அப்போ புகாரை வாபஸ் வாங்குங்க.. ஹே ஹே ஹேய்

விஜயலட்சுமிக்கு அப்படி என்னதான் பிரச்னை?

சி.பி- எல்லாம் புகழ் ஆசை தான், வேற என்ன? பரபரப்பா பத்திரிக்கைல பேர் வரனும்.. மீடியா ஜூம் லைட் தன் மேல படனும்...

'ப்ரண்ட்ஸ்’ படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் விஜயலட்சுமி. பெரிய வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் சின்னத்திரையிலும் தலையைக் காட்டினார். சீமானின் இயக்கத்தில் வெளியான 'வாழ்த்துகள்’ படத்திலும்  நடித்தார். பரபரப்பு சர்ச்சையில் அவர் பெயர் சிக்குவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே இயக்குநர் ஏ.ஆர்.ரமேஷ், தன்னைக் காதலித்து ஏமாற்றியதாகப் புகார் கொடுத்தார். அப்போது, தூக்க மாத்திரை களை விழுங்கி தற்கொலைக்கும் முயன்றார். 2006-ல் கன்னட நடிகர் சுஜான் லோகேஷ§டன் மூன்று வருடங்களாக குடும்பம் நடத்துவதாகச் சொல்லி பரபரப்பு கிளப்பினார். 

சி.பி - ஹா ஹா .. மேடம் உங்க ராசியான நெம்பர் 3 ஆ? யாரை லவ் பண்ணுனாலும் 3 வருஷம்  தான் லவ் பண்றீங்க?

டி.வி நிகழ்ச்சியின் இயக்குநர் ஒருவர் மீதும் 'கல்யாண கலாட்டா’ புகாரைக் கொடுத்து பரபரக்க வைத்தார். இப்போது அதே வெடிகுண்டை சீமான் மீதும் வீசி இருக்கிறார். பரபரப்பு கிளப்புவதும் பின்னர் அப்படியே அமைதியாகிவிடுவதும் விஜயலட்சுமியின் வழக்கமான வாடிக்கைதான்.

சீமானுக்கும் விஜயலட்சுமிக்கும் எப்படிப் பழக்கம்?

சி.பி - ஹி ஹி ,இதை எல்லாம் பப்ளிக்கா சொல்ல முடியுமா?
ஒன்றரை வருடத்துக்கு முன்பு விஜயலட்சுமியின் சகோதரிக்கு குடும்ப ரீதியான சிக்கல். அப்போது விஜயலட்சுமி கண்ணீரோடு சீமானை அணுக, அவர் மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்த ராமாத்தாளிடம் அனுப்பினார். விஜயலட்சுமியின் சட்டப் போராட்டத்துக்கு சங்கமித்திரை என்ற வழக்கறிஞர் மூலமாக உதவினார். மேற்கொண்டு நடந்ததை சீமானின் வழக்கறிஞர் சந்திரசேகர் விவரிக்கிறார்.

சி.பி - ஓஹோ அவர் குடும்பமே அப்படித்தானா? அப்ப சரி.. அவர் மேல தப்பில்லை போல ... எல்லாம் ஹெரிடிட்டி பிராப்ளம்.. 

''ஈழ விவகாரத்தில் மிகுந்த தீரத்தோடு போராடும் சீமானுக்கு இழுக்கு உண்டாக்கும் விதமாகவே இப்படி ஒரு புகாரைப் பரப்பி இருக்கிறார் விஜயலட்சுமி. குடும்பப் பிரச்னையில் மனிதாபிமான முறையில் இரக்கப்பட்டதைத் தவிர அந்தப் பெண்ணுக்கும் சீமானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சம்பந்தமே இல்லாமல் சீமானின் செல்லுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி தேவையற்ற மன உளைச்சலை உண்டாக்கியது விஜயலட்சுமிதான்.

சி.பி - ஓஹோ, சிவா மனசுல சக்தி மாதிரி சீமான் மனசுல சிங்கார லட்சுமியா? ம் ம் நடக்கட்டும்.. 

'என் மீது கயல் விழி என்கிற ஆவியை ஏவிவிட்டு என் குடும்பத்தின் நிம்மதியையே குலைத்து விட்டீர்கள். தயவு செய்து என் மீது ஏவி இருக்கும் ஆவியை விரட்டுங்கள். இல்லையேல் நான் தற்கொலை செய்துகொள்வேன்!’ என்கிற எஸ்.எம்.எஸ்-ஐ சமீபத்தில் சீமானுக்கு அனுப்பினார். 

 சி.பி - அட.. அது யாரு?கயல்விழி.. புது கேரக்டரா இருக்கு? நல்ல ஃபிகரா?


(அதை நம்மிடம் காட்டுகிறார்!) 

 சி.பி - இதை காட்டுனது விஜயலட்சுமியா?சீமான் வக்கீலா? #டவுட்டு..
ஹி ஹி

எத்தனையோ இக்கட்டுகளையும் பொருட்படுத்தாமல் ஈழ விவகாரத்தில் தொடர்ந்து போராடிவரும் சீமான், ஆவியை ஏவிவிடுகிறார் என்றால் சிரிக்கத்தானே முடியும்? பகுத்தறிவுக் கொள்கையில் உறுதி பிறழாமல் இருக்கும் சீமான் மீது பில்லி சூனியப் பிரச்னையைக் கிளப்புவதில் இருந்தே அந்தப் பெண்ணின் குணம் எப்படிப்பட்டது என்பது தெரிகிறது. அவதூறு பரப்பிய விஜய லட்சுமி மீது ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர இருக்கிறோம். விஜயலட்சுமியை இயக்கும் சூத்திரதாரிகளையும் சும்மா விட மாட்டோம்!'' என்றார் சந்திரசேகர்.

 சி.பி- அப்போ அஞ்சு கோடி ரூபா கொடுத்துட்டா அண்ணன் சீமான் மானம் காக்கப்படுமா? ஹி ஹி , சும்மா ஒரு ஜெனரல் நாலெட்ஜை வளர்த்துக்க கேட்டேன்.. அது சரி.. ஏதோ சூத்திரதாரின்னு சொல்றீங்களே? அது கலைஞரா?அவர் தான் அப்படி கதை சொல்லிட்டு இருப்பாரு.. 



இன்னும் சிலரோ, ''விஜயலட்சுமி புகார் கொடுக்க கமிஷனர் ஆபீஸ் போவதற்கு முன்னரே காங்கிரஸ் புள்ளி ஒருவர் அனைத்து பத்திரிகை யாளர்களுக்கும் போன் செய்து 'கமிஷனர் ஆபீஸில் முக்கியச் செய்தி!’ எனப் பரப்பி இருக்கிறார். 

 சி.பி - உண்மை பொடி   நடையா வாசலுக்கு வந்து செருப்பை தொடும்போது வதந்தி பஸ் ஏறி ஊருக்கே போய் இருக்குமாம்.. அந்த மாதிரி.. 



ஈழ விவகாரத்தில் தீவிரமாக இருக்கும் சீமானை சிதைக்கும் விதமாகவே திட்டமிட்டு சிலர் விஜயலட்சுமி மூலமாக இந்த நாடகத்தை நடத்துகிறார்கள். விஜய லட்சுமி மீது தாக்குதலை நடத்தி பழியை சீமான் மீதும் போட்டு சிக்கவைக்கவும் சிலர் திட்டமிட்டு வருகிறார்கள். விஜயலட்சுமி சீமானை திருமணம் செய்ய நினைத்திருந்தால் அவருடைய உறவினர்களைத்தானே அணுகி இருக்க வேண்டும்.

 http://123tamilcinema.com/images/2011/06/02-vijayalakshmi33-300.jpg
அதைச் செய்யாமல் போலீஸிடம் புகார் கொடுத்ததிலேயே சீமானின் இமேஜை உடைப்பதுதான் அவருடைய நோக்கம் என்பது புரிந்துவிட்டது. ஈழப் போர் தீவிரமாக நடந்த நேரத்தில் சிங்கள அரசுக்கு எதிராக தொடர்ந்து முழங்கி வந்த சி.மகேந்திரன் மீது வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அதன் பின்னணியில் சிங்கள உளவுப் புள்ளிகளின் கைங்கர்யம்தான் செயல்பட்டது. அதேபோல் இப்போது சீமான் மீதும் பரபரப்பு கிளப்பப்படுகிறது. உலகளாவிய அளவில் சீமானுக்கு எழுந்திருக்கும் ஆதரவை சிதைக்க உளவுப் புள்ளிகள் நிகழ்த்தும் சதிதான் இது!'' என்கிறார்கள் அவர்கள்.

சி.பி - பொதுவா வி ஐ பிங்க எல்லாம் இந்த மாதிரி பிரச்சனை வரும்னு தெரிஞ்சு பொண்ணுங்க கிட்ட பழகறப்ப ஜாக்கிரதையா இருக்கனும், அல்லது ப்ழகவே கூடாது.. அதுக்கான விலை தான் இதெல்லாம்.

'பகலவன்’ பட டிஸ்கஷனில் இருந்த சீமானை சந்தித்தோம். எதையும் சட்டையே செய்யாதவராக சிரித்தவர், ''காதல் செய்கிற நிலையிலா நான் இருக்கேன்? ஒரு வருஷத் துக்கும் மேல் சிறையில் இருந்துட்டு வெளியே வந்த எனக்கு ஈழ விவகாரங்களுக்காகப் போராடவும் காங் கிரஸுக்கு எதிராகப் பரப்புரை செய்யவுமே நேரம் இல்லை. படிக்கவோ தூங்கவோ நேரம் இல்லாத அளவுக்கு தீவிரமாக இயங்கிவரும் எனக்குக் கண்டவர்களோடும் டூயட் பாடுவதுதான் வேலையா?

ஏற்கெனவே இலங்கைப் புள்ளிகள் சிலரை தமிழகத்துக்கு அனுப்பி என்னைக் கொலை செய்ய முயற்சி நடந்தது. அதையே சட்டை செய்யாத நான் இந்த மாதிரி சின்னத்தனமான அவதூறுகளையா பொருட்படுத்துவேன்? யுத்த களத்தில் நின்றால் குண்டுகளையும் அரசியல் களத்தில் நின்றால் அவதூறுகளையும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். விட்டுத் தள்ளுங்கள் அந்த வெட்டிக் கதைகளை எல்லாம்...'' என்றார் சீறலாக!

சி.பி - வெட்டிக்கதைகள்னா விட்டுத்தள்ளிடலாம். குட்டிக்கதைகளா இருக்கே? ஹி ஹி 

Sunday, March 20, 2011

ஆனந்த விகடன் VS சீமான் பேட்டி - காமெடி கும்மி



காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிப் பட்டியலும் வேட் பாளர் விவரமும் எப்போது வெளியாகும் என தொடை தட்டிக் காத்திருக்கிறார் சீமான். 

''ஒரு நாளைக்கு முன்று தொகுதிகள்...
ஐந்து மணி நேரம் தொண்டை கிழியப் பேச்சு... 20 நாட்களில் 63 தொகுதிகளில் வலம்... காங்கிரஸுக்கு எதிராக இப்போதே களம் இறங்கிவிட்டேன். காங்கிரஸோடு கூட்டுவைத்தால், கருவறுக்கப் படுவோம் என்கிற அச்சம் இங்கே இருக்கும் அத்தனை கட்சிகளுக்கும் பிறக்க வேண்டும். அத்தகைய மரண அடியை இந்த முறை காங்கிரஸுக்குக் கொடுப்பேன். 

இந்த அடிபட்ட புலியின் உறுமலில் காங்கிரஸ் என்ன கதியாகப்போகிறது பாருங்கள்!'' - சபதம் போடும் சீமான் கட்சியின் உயர் மட்டக் குழு, ஆன்றோர் பேரவைகளைக் கூட்டி தேர்தல் வியூகங்களில் தீவிரமாக இருக்கிறார். 

 

1. ''தி.மு.க-வின் ராஜினாமா நாடகம் காங்கிரஸிடம் எடுபடாமல் போய்விட்டதே..?'' 

சீமான் - ''தமிழகத்தின் மிச்சம் மீதித் தன்மானத்தையும் காங்கிரஸின் காலடியில் அர்ப்பணம் செய்துவிட்டு வந்திருக்கிறது தி.மு.க. '63 தொகுதிகள் கேட்பது நியாயமா..? அதுவும் தங்களுக்கான தொகுதிகளை அவர்களே தேர்ந்தெடுக்கலாமா..?’ என்றெல்லாம் உரிமைக் குரல் எழுப்பி, முறுக்கிக் கிளம்பினார் முதல்வர். 

அதை வரவேற்று தி.மு.க-வினரே பட்டாசு வெடித்தார்கள். 'உலகத் தமிழர்களின் உளமார்ந்த எண்ணம் ஈடேறிவிட்டதாக’ப் பாராட்டி பொன்னாடை போர்த்திப் பூரித்தார்கள் பலரும். இறுதியில் என்ன நடந்தது? அதே 63 தொகுதிகளில் ஒன்றுகூடக் குறையாமல் நிர்பந்தித்து வாங்கி இருக்கிறது காங்கிரஸ். மீசை முறுக்கி ராஜினாமா கடிதங்களோடு கிளம்பியவர்கள், காங்கிரஸின் ஆசையை நிறைவேற்றிவிட்டு, 'கூட்டணி தொடரும்’ என வெட்கமே இல்லாமல் வெளியே வருகிறார்களே... இந்தக் கேவலமான சரணாகதி தேவைதானா? 

மலை மலையாக சொந்த இன மக்கள் கொன்று  குவிக்கப்பட்டபோதுகூட கருணையையும் சுரணையையும் கணக்கில்கொள்ளாதவர்கள், தேர்தலுக்காகத் திடீர் தன்மானம் காட்டினால் காங்கிரஸே சிரிக்காதா? சீட்டுக்காகப் பதவியைத் துறப்பதாகச் சொன்னவர்கள், ஈழ நாட்டுக்காகத் துறக்க முன்வந்தார்களா?

விசாரணை வளையம் தன் குடும்பத்தைச் சுற்றிவிடக் கூடாது என்பதற்காக கலைஞர் வீசிய மிரட்டல் அஸ்திரம் முனை மழுங்கி விழுந்திருக்கிறது. காங்கிரஸை வீழ்த்துவதற்காகவே தொடங்கப்பட்ட இயக்கத்தை, காங்கிரஸின் காலடியில் விழவைத்த பெருமை கலைஞர் பெருமகனாரையே சேரும்!''

சி பி - கலைஞர் ஒரு ராஜ தந்திரி.. .. எது செஞ்சாலும் ஒரு அர்த்தம் இருக்கும். தமிழ்க்குடும்பத்துக்குத்தான் என்ன செய்வது என அவருக்கு தெரியாதே தவிர.. தன்னோட குடும்பத்துக்கு என்ன பண்ணனும்னு அவருக்கு நல்லாவே தெரியும்.


2. ''காங்கிரஸின் சாதிப்பை முதல்வரின் ராஜ தந்திரத்துக்கு விழுந்த அடியாகக் கருதுகிறீர்களா?'' 

சீமான் - ''கிச்சுக்கிச்சு மூட்டாதீங்க... யார் ராஜ தந்திரி? எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்த வரை ஆட்சிக் கட்டிலில் அமர முடியாமல் அல்லாடித் தவித்தாரே, இவரா ராஜ தந்திரி? ஜெயலலிதாவிடம்கூட அரசியல் நடத்த முடியாமல் அவர் ஆட்சிக் கட்டிலில் அமர அடிகோலினாரே... இவரா ராஜ தந்திரி? வருகிற, போகிற கட்சிகளுக்கு எல்லாம் ஏழு சீட்டு, இருபது சீட்டு என அள்ளி வழங்கி, எப்படியாவது மறுபடியும் ஆட்சியைப் பிடிக்க மாட்டோமா என அஞ்சிக் கிடப்பவரை அரசியல் ராஜ தந்திரி என்றால், சிரிப்புத்தான் வருகிறது!''

சி பி  - கொடுத்ததெல்லாம் கொடுத்தார்.. அவர் யாருக்காக கொடுத்தார்... ஒருத்தருக்கா கொடுத்தார்.. இல்லை.. அனைவருக்குமே (பங்கு)கொடுத்தார்..


3. ''தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து கனிமொழி உள்ளிட்டவர்களும் களம் இறங்கிக் கைதாகி இருக்கிறார்களே?'' 

சீமான் - ''கனிமொழி மட்டுமா களம் இறங்கினார்... காங்கிரஸ்காரர்களே களம் இறங்கினார்கள். 'தமிழ் மீனவர்கள் தாக்கப்படக் கூடாது’ என ராஜபக்ஷே மட்டும்தான் கொடி பிடிக்கவில்லை. இவர்கள் நாடகப் போராட்டம் நடத்திய அடுத்த நாளே நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடத்தப்பட்டார்கள். இவர்களின் போராட்டத்தாலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. திரைக்கதைகளில்கூட இயற்ற முடியாத கற்பனையை இங்கே கடை விரிக்கிறார் கள்.

இதே மீனவப் பிரச்னைக்காகத் தானே நானும் போராடினேன். நான் பேசினால் ஐந்து மாதம் சிறைவாசம்... கனிமொழி பேசினால் ஐந்து மணி நேர சிறைவாசமா? அப்பாவின் கையில் இருக்கும் காவல் துறை, மகளைக் கைது செய்து விடுவித்த கூத்தைப் போராட்டம் எனச் சொல்லாதீர்கள். நாடகத்தாலேயே நாட்டை ஆண்டுவிட முடியும் என நினைக்கிற நயவஞ்சகம் அது!''

சி பி  - இந்தியாவின் இறையான்மைக்கு எதிரா நீங்க பேசுனீங்க..அவங்க என்ன பண்ணுனாங்க..? பாவம்.. அப்பா சொல்லிக்குடுத்ததை கரெக்ட்டா பண்ணுனாங்க..அவங்க அப்பாவுக்கு எதிராவும் பேசலை.. மீனவர்களுக்கு ஆதரவாவும் எதுவும் செய்யலை...


4. ''இந்தத் தேர்தல் களத்தில் நடிகர் விஜய்யின் நிலைப்பாடு எப்படி இருக்கும்?''

சீமான்  - ''விஜய் மட்டும் அல்ல... களத்துக்கு வராத பலருக்கும் இந்த ஆட்சியை அகற்றவேண்டிய ஆவேசம் இருக்கிறது. என்னுடைய நோக்கம் வேறு... விஜய் யின் நோக்கம் வேறு. ஆனால், இருவருமே ஆட்சி மாற்றத்தை விரும்புகிறோம். 

தேளும் ஒரு புழு இனத்தைச் சேர்ந்ததுதான். ஆனால், அதற்கு கொடுக்கு வந்தது எப்படி? பலரும் நசுக்க நசுக்க, தன்னைத் தற்காத்துக்கொள்ள தானாகவே அதற்கு கொடுக்கு முளைத்துவிட்டது. அப்படி கொடுக்கு முளைத்த தேள்தான் விஜய். அவர் என்ன ஆற்று மணலை அள்ளி விற்றாரா? மதுபானத் தொழிற்சாலை தொடங்கி மலை மலையாக பணம் குவித்தாரா? அப்படி இருக்க, அவருக்கு ஏன் இத்தனை பிரச்னைகள்? 

'இளைஞன்’ படம்தான் ஓட வேண்டும்; 'காவலன்’ ஓடக்  கூடாது என ஏன் கட்டுப்பாடு? தன்மானத்துக்காக மூன்று கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுக்கவேண்டிய இக்கட்டை விஜய்க்கு ஏற்படுத்தியது ஏன்? விநியோகஸ்தரையே தூக்கிக்கொண்டு போன விசித்திரங்களை எல்லாம் விஜய்யால் எப்படிப் பொறுக்க முடியும்?

ஒரு புழுவின் மனதோடு அத்தனையையும் பொறுத்துக்கொண்டவருக்கு அடுத்தடுத்த அவமானங்களும் அடக்குமுறைகளுமே கொடுக்கைக் கொடுத்துவிட்டன. அந்தக் கொடுக்கு, அவர்களைக் கொத்தாமல் விடாது. அதற்காக, விஜய் களத்துக்கு வந்து பிரசாரம் செய்யவேண்டியது இல்லை. அவர் வீட்டுக்குள் இருந்தாலே போதும். அவர் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார் என்பது கடைக்கோடி ரசிகனுக்கும் தெரியும்!''

சி பி  - இளைஞன் படம் ஓடுச்சா.. ? செம காமெடி போங்க.. தியேட்டர்ல ஓடுனது 4 காட்சிகள்..ஒரு நாள் மட்டும்தான். இன்னும் கலைஞர் டி வி ல மட்டும் தானே ஓடிட்டு இருக்கு..?விளம்பரமா..?


5. ''ஜெயலலிதா - விஜயகாந்த் கூட்டணியை வலுவானதாகப் பார்க்கிறீர்களா?'' 

சீமான்  - ''ஆட்சி மாற்றத்தை அனைத்துத் தரப்பு மக்களும் விரும்புகிறார்கள் என்பதற்கு இங்கே ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருக்கின்றன. தமிழகத்தில் இருக்கும் பெரிய கட்சியான அ.தி.மு.க-வுடன் விஜயகாந்த் இணைந்திருப்பது நிச்சயமான ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

இத்தனை வருடங்களாகத் தொடர் போராட்டங்களைச் சந்திக்கும் தே.மு.தி.க. இன்றைக்கு அ.தி.மு.க. கூட்டணியில் 41 இடங்களைப் பெற்று இருப்பது அந்தக் கட்சித் தொண்டர்களை நம்பிக்கையோடு நிமிரவைத்து இருக்கிறது. அவர்களின் உழைப்புக்கான அறுவடைக் காலம்தான் இந்தத் தேர்தல்.


இவர்களோடு அண்ணன் வைகோவும் இடதுசாரித் தலைவர்களும் இணைந்திருப்பது மக்களின் கூட்டணியாக அந்த அணியை மாற்றி இருக்கிறது. இதைச் சொல்வதாலேயே, இரட்டை இலை சின்னத்துக்கு சீமான் ஆதரவு கேட்கிறார் என சொல்லத் தொடங்கிவிடுவார்கள்.

காங்கிரஸை எதிர்த்து நிற்பது இலையாக இருந்தாலும் பம்பரமாக இருந்தாலும் அதைத்தான் ஆதரிப்பேன். இங்கே சின்னம் முக்கியம் இல்லை. எண்ணம்தான் முக்கியம். கலைஞரையும் காங்கிரஸையும் எதிர்ப்பது ஜெயலலிதாவை ஆதரிப்பதற்குச் சமமாகிவிடுமே எனப் பதறுகிறார்கள் சிலர்...

அதைப்பற்றி கவலை இல்லை. அ.தி.மு.க. பார்ப்பன தலைமையிலான கட்சி என்பதற்காக கலைஞரின் அத்தனை கொடுமை களையும் சகித்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை!''

சி பி  - தமிழ்நாட்டின் இரண்டு தீய சக்திகளையும் துரத்த ஐடியா இருக்கா? அதை சொல்லுங்க.. மாத்தி மாத்தி 2 கொள்ளைக்காரங்களுமே நாட்டை கொள்ளை அடிக்க விடனுமா?