Showing posts with label RAPE. Show all posts
Showing posts with label RAPE. Show all posts

Monday, October 20, 2014

15 வருடத்தில் 1 1/2 கோடி ரேப் -வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தேவை -ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ். கிருஷ்ணன் நேர்காணல்


தீண்டாமையின் பரிணாம வளர்ச்சிதானே வன்கொடுமை? - ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ். கிருஷ்ணன் நேர்காணல்

இந்தியாவில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் மிகவும் மூத்தவர் பி.எஸ். கிருஷ்ணன். பல்வேறு சமூகப் பிரிவு மக்களுக்கான திட்டங்களை உருவாக்குவதில் இந்திரா காந்தி முதல் இன்றைய பிரதமர் வரை பல பிரதமர்
களோடு இணைந்து செயலாற்றிய ஆழ்ந்த அனுபவம் பெற்றவர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் உருவாக் கத்திலும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமலாக்கத்திலும் பங்காற்றியவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பல சட்டதிட்டங்கள் உருவானதில் முக்கியப் பங்குவகித்தவர் பி.எஸ்.கிருஷ்ணன். ‘தி இந்து’வுக்காக அவரைச் சந்தித்தோம். 


இந்த நவீன காலத்தில் சில சாதிகளுக்கு மட்டும் ஏன் ஒரு தனிச் சட்டம்?
சாதிக்கு அல்ல. சமூகப் பிரிவுக்கு ஒரு நீதி எனும் சமூக முறைதான் பல நூறு வருஷமாக நம் நாட்டில் இருக்கிறது. சுதந்திரம் கிடைத்த பிறகுதான் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றானது. ஆனால், அது பெரும்பாலும் காகிதத்தில்தான் இருக்கிறது. தலித் மக்களும் பழங்குடிகளும் இப்போதும் அடிமட்டத் திலேயேதான் உள்ளனர்.
உதாரணமாக, ஒரு வயதுக்குள் சாகிற குழந்தைகளில் தலித் குழந்தைகள் அதிகம். மக்கள் தொகையில் சிறுபான்மையாக இருக்கும் தலித் மக்கள், விவசாயத் தொழிலாளிகளின் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ளனர். தலித் மக்களின் சராசரி ஆயுட்காலம் மற்றவர்களைவிடக் குறைவாகத்தான் இருக்கிறது. இதெல்லாம் சொல்வதென்ன?
இப்படித்தான் ரொம்ப காலமாக நடக்கிறது. அப்படிப்பட்ட மக்களுக்குச் சமூகப் பாதுகாப்பைத் தந்து முன்னேற்ற வேண்டும் என்பது இந்திய அரசியல் சாசனத்தின் கட்டளை. அதை நிறைவேற்றத்தான் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மாதிரியான சில சட்டங்களைக் கொண்டுவந்தோம். 



அரசியல் சாசனத்தில் வன்கொடுமைகள் என்ற வார்த்தை இல்லை. வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி பதிவான வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 90 சதவீதத்துக்கும் மேலே விடுதலை ஆகிவிடுகிறார்கள்; அதனால், அவையெல்லாம் பொய் வழக்குகளே. இந்த வழக்குகளால் மற்றவர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். இப்படியெல்லாம், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் எதிர்ப்பாளர்கள் வாதங்களை முன்வைக்கிறார்களே?


 
அரசியல் சாசனத்தின் 17-வது பிரிவு தீண்டாமை முற்றாக ஒழிக்கப்படுகிறது என்று சொல்கிறது. அதில் தீண்டாமை என்ற வார்த்தை மட்டும்தான் இருக்கிறது என்பது சரிதான். ஆனால், 46-வது பிரிவில் தலித்-பழங்குடி மக்களை சமூக அநீதியிலிருந்தும், எல்லா விதமான சுரண்டல் வடிவங்களிலிருந்தும் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதே. தீண்டாமையின் பரிணாம வளர்ச்சிதானே வன்கொடுமைகள்?
வழக்குகளில் பலர் விடுவிக்கப்பட்டுவிடுவதால் பொய் வழக்குகள் என்ற வாதத்தில் பொருள் இல்லை. கீழவெண்மணி படுகொலைகளில் 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட எல்லோரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். அதனால் 44 பேர் கொல்லப்பட்டது பொய்யாகிவிடுமா? 



சுதந்திரத்துக்குப் பிறகு தலித் மக்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படவே இல்லையா?
மற்ற சமூகப் பிரிவுகளின் மக்கள் முன்னேறும் வேகத்தில் இல்லை என்றாலும், தலித் மக்கள் முன்னேற்றப் பாதையில் பயணம் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், அடிப்படையான மாற்றம் எதுவும் இன்னும் வரவில்லை.
முன்னேற்றத்துக்கான பயணத்தில் ஏற்படுத்தப்படும் தடைகள்தான் இந்த வன்கொடுமைகள். சுதந்திரத்துக்குப் பிறகு அவை அதிகரித்திருப்பதன் காரணம் அதுதான். 1959-ல் தமிழ்நாட்டில் முதுகுளத்தூர் வன் கொடுமைகள் நடந்தன. 1968-ல் கீழவெண்மணி சம்பவம். நமக்கும் சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று நம்பிக்கையோடு தலித் மக்கள் நிமிர்ந்து நிற்க முயன்ற இடங்களிலெல்லாம் இந்தியா முழுவதும் வன்கொடுமைகள் அதிகரித்தன. அதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை உருவாக்கினோம். 


வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஏற்கெனவே இருக்கும் போது, எதற்கு இன்னொரு அவசரச் சட்டம்?
வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-ல் அமலுக்கு வந்தது. ஆனால், அது எப்படி அமல்படுத்தப்பட்டது தெரியுமா? 1995 முதல் 2010 வரைக்குமான காலகட்டத்தில் சுமார் ஒன்றரைக் கோடிப் பேர் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில், பலர் காவல்நிலையம் வந்து புகார் தரும் வலுகூட இல்லாமல் இருக்கின்றனர். அப்படி தைரியம் வந்து, காவல் நிலையப் புகார் தரும் தலித்துகள், பழங்குடிகளின் புகார்களெல்லாம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் பதிவுசெய்யப்படுவதில்லை.
அப்படிப் பதிவுசெய்ய வைக்கவே ஒரு பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. அப்படிப் பதிவு செய்தவர்கள் சுமார் ஐந்தரை லட்சம் பேர். அந்த வழக்குகளெல்லாம் காவல் நிலையம் தாண்டி நீதிமன்றத்தின் படி ஏறுவதே பெரிய விஷயம். அப்படி ஏறிய வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டு, இறுதியில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை என்று விடுதலை செய்துவிடுவதுதான் இங்கு அதிகம் நடக்கிறது. வன்கொடுமை வழக்கு களில் நீதிமன்றத்தால் 0.5% முதல் 8% பேர் வரை மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறார்கள்.
வாச்சாத்தி மலைக் கிராமத்தில் பழங்குடி மக்கள் மீது வன்கொடுமைத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தையே எடுத்துக்கொள்ளுங்களேன். நீதி கிடைப்பதற்குக் கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் ஆனதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதிலும், பாதிக்கப் பட்டோருக்கு சட்டப்படி அரசு தர வேண்டிய நஷ்டஈடு இன்னமும் வழங்கப்படவில்லை. ஆனாலும், வன்கொடுமைகள் செய்த அதிகாரிகள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் தண்டனை பெற்றது இந்த வழக்கில்தான்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் தப்பிப்பதற்குப் பல ஓட்டைகள் ஏற்பட்டு விட்டன. அவற்றைச் சரிசெய்யவே அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 



அவசரச் சட்டம் காலாவதி ஆகிவிட்டதே?
ஆமாம். கடைசி நேரத்தில் இந்த அவசரச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் போய்விட்டது. தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுவுக்குப் போயிருக் கிறது. மீண்டும் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப் படும் என நம்புகிறேன். 


இன்னும் எவ்வளவு நாட்களுக்குத்தான் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தேவைப்படும்?
தீண்டாமையும் வன்கொடுமைகளும் இல்லாமல் போகும்போது இத்தகைய சட்டங்களும் இல்லாமல் போகும். சாதி சமத்துவம் ஏற்படும்வரை ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவு மக்களுக்குத் தனிச்சட்டம் என்பதுதான் ஜனநாயகம். இந்திய ஜனநாயகத்தின் வடிவமும் ஆன்மாவும் சமூகநீதியே. சாதி சமத்துவம் ஏற்படாமல் இந்தியாவில் ஜனநாயகமே மலராது. சாதி சமத்துவத்தின் வழியாக ஜனநாயகத்துக்குள் நாம் பயணம் செய்வதற்கான வழிகளில் ஒன்றாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருக்கும். இந்தியாவில் அதிசயம் அற்புதங்கள் எதுவும் நடக்கவில்லை என்றால், மிகவும் குறைவாக மதிப்பிட்டாலும்கூட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தேவை ஒரு நூறாண்டு காலத்துக்கு இருக்கும். 


த. நீதிராஜன்,
தொடர்புக்கு: [email protected]


நன்றி - த ஹிந்து 

Thursday, January 10, 2013

சாருநிவேதிதாவின் கட்டுரை @ THE ASIAN AGE ( Rape and the Indian home)

Charu Nivedita.JPG
Charu Nivedita

Rape and the Indian home

The recent gangrape of a 23-year-old girl in the national capital, followed by the death of the victim, has sent shockwaves throughout the country. It has also triggered discussions about the kind of punishments rapists deserve.



There are arguments for and against capital punishment. In my view, our country has not matured enough to bid adieu to capital punishment. Nevertheless, capital punishment alone will not stop these abominable acts. Faster and stiffer enforcement of punishment is sure to help. Few years ago some college students who had brutally attacked a girl in a cinema complex in Chennai were let off with just a fine of a few thousand rupees.






Who fosters the mentality of indulging in violence against women? It is the family and the society. A scene from a recent movie depicts the hero, accompanied by the comedian, waiting at a traffic signal. He asks a girl whose face is covered and is standing beside him, something. When the girl unveils her face the hero spits on the road, as the girl is not good looking. 





No other cinema of any other country can boast of such scenes. Men who watch and enjoy these films sexually assault women at slightest chance. They eve-tease schoolgirls, just like our heroes do in films. And if a girl complains to her parents, they vitriolise her face. These incidents are not stray; they get reported with chilling regularity. I used to refer to Delhi as the rape capital when I lived there 20 years ago. Today the situation has worsened rather than improving. Similarly, in Tamil Nadu, too, crimes against women have increased.




Those who commit these crimes are usually first-time offenders and the crimes are not predetermined. They are people like us and live among us. They are not strangers or outsiders.





A woman from the elite class said to me recently that she was sexually abused by a cyclerickshaw driver when she was six years old. When I asked her why she hadn’t complained, she said that she was afraid to do so.





There’s another incident that occurred in a Chennai pub. It was a birthday party and we were four friends — three guys and the girlfriend of a friend. After the party, the next morning, the girl called me and told me in a tense voice that one of our friends at the party had been asking for her phone number secretly, through signals, which the girl was unable to comprehend. 




At the end of the party, when they were about to leave, the friend came up to the girl and said that he was asking for her phone number. This incident made me think. Is this okay? Or is this the portrait of a man who may stalk a woman and sexually assault her?




Women’s space is hidebound in our society. She is cramped inside the family. There is slight relaxation of boundaries to enable her to go for work nowadays. But apart from that she has no other space outside family and workplace.




A few years ago, a girl who had stepped out of a discotheque was chased to death, literally, by men who followed her in a car. It happened in Chennai. It happens everywhere. You may recall the moral police who would attack women in pubs. The core issue is that women should never move out of their “space”. If they do, they will be teased, molested or raped. “What was a woman doing with a man at this hour?” was the question of the offenders in Delhi.




In India, a woman’s space is walled off like a jail. If she comes out of her cell, her body is no longer hers. Delhi tops in this attitude. A slum-dwelling woman who had stepped out early morning was kidnapped in a car and gangraped in east Delhi. Last year, in Delhi, a 70-year-old woman was raped by a rickshawpuller and was thrown on a farmland. This incident happened in front of a police station.
Leave alone Europe and America. Even in countries in the East, women’s space is not restricted like it is in India. When I was in Malaysia recently, I saw working women everywhere, even at bars, wearing a tudung (headscarf), and at men’s salons. Remember, Malaysia is an Islamic country. Of course, petty crimes happen — signboards with the warning, “Take care of your footwear”, hang everywhere, in temples and pagodas, but crimes against women are unheard of.




The attitude of Indian men towards women is the reason for the increasing number of sexual and other crimes against women in India. A mother plays a significant role in developing her son’s views about women. But most men see their mothers and sisters as domestic help who wash, cook and assist them. An extension of this view is the image of women as a commodity, meant only for gratification, sexual and otherwise.






Even though we have a culture of worshipping women as goddesses, crimes against women is rising in number and audacity. Because women have come out of the sanctum sanctorum prescribed by men, they are being sexually assaulted and raped — punished for defying “norms”. Mahatma Gandhi once said that only if a woman can walk safely on the streets at nights can we boast of our freedom. If India needs to attain that state of true freedom, our attitude towards women has to undergo a drastic change. 




Charu Nivedita is a post-modern Tamil writer based in Chennai.


His magnum opus, Zero Degree, is considered one of the best in trangressive fiction.

Comments

Charu, probably hadn't heard

Charu, probably hadn't heard of what a rape town malaysia is. Unknown to him, Malaysia is notorious for rapes involving children as young as 4 years old. Besides Charu your magic is lost in English. Better done in Tamil.

Salute you Mr.Charu. This is

Salute you Mr.Charu.
This is the first article on this rape incident that tries to identify the issue, as opposed to analysing the symptoms of the issue.
Very well written Mr.Cahru

realy its nice article..

realy its nice article.. delhi issue was not a law and order problem,its a severe society problem..
maanam ketta samoogam...

Asian Age will be doing a

Asian Age will be doing a service to readers if it stops publishing these junk pieces by Charu Nivedita.

This is very nice article. I

This is very nice article. I try to read Zero Degree also.

Chary put all the

Chary put all the informations crime against women but what are the salvation of this problem. How we can face this?

Well written article. The

Well written article. The author addressed the root of the problems. 'A mother plays a significant role in developing her son’s views about women'

Hi, I am a great fan of your

Hi, I am a great fan of your wrting and I have been following you(articles,books) for last five years. Its one of the great artcle about the fundmental reason of these incidents which sadly no one seems to be talking about. Its not just that, the so-called sexual morality dictated in the name of so-called indian 'culture' because of which indian males sex-starved when at the same time our sexual exposure gets increased manifold through movies, tv shows, internet(scandals). until we find solutions for these, i am afraid we are going to see many more of these even , the captial punishment is made into law books

Pucca.This is the way one

Pucca.This is the way one should look the problem, not in some mediocre way. Very nice article. Absolute true, the problem starts from the family.

Saturday, January 05, 2013

டெல்லி - சம்பவம் - மக்கள் கருத்து

பாலியல் பலாத்கார பாரதம்

தலைநகர் டெல்லி...தலைகுனிவு காட்சிகள்
 
 
ஆர்.ஷஃபி முன்னா 
 
 
டெல்லியில், பாராமெடிக்கல் கல்லூரியில் பிஸியோதெரபி பயிலும் 23 வயது மாணவி சீமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஓடும் பேருந்தில் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக் கப்பட்ட சம்பவம், நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் குற்றங்களின் உச்சகட்டம். இதைச் சமூகமும் உச்சபட்சமாக உணர்ந்ததால்... தலைநகரே ஸ்தம்பிக்க, நாட்டின் பல இடங் களிலும் பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர்.


தெற்கு டெல்லியின் சாக்கேத் பகுதியிலிருக் கும்
மால் ஒன்றில், தன் 'பாய் ஃப்ரெண்ட்' அர்விந்த் பிரதாப் பாண்டேவுடன் சினிமா பார்த்துள்ளார் சீமா. வீடு திரும்புவதற்காக, இரவு 9.30-க்கு தனியார் பேருந்தில் இருவரும் ஏறியுள்ளனர். உள்ளே இருந்த சில பயணிகள், அடுத்த ஸ்டாப்பிங்குகளில் இறங்கிவிட, சீமா, அர்விந்த், டிரைவர் மற்றும் ஐந்து ஆண்களுடன் பயணம் தொடர்ந்துள்ளது. 



அவர்கள் சீமாவை சீண்ட, இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம். கோபம் அடைந்தவர்கள்... அர்விந்தை இரும்புத் தடியால் தாக்கியுள்ளனர். பிறகு, டிரைவர் ஸீட்டின் அருகே உள்ள கேபினில், ஓடும் பேருந்திலேயே அனைவரும் சீமாவை மாறி மாறி வல்லுறவு கொண்டுள்ளனர். சுமார் 30 கி.மீ தூரம் வரை பயணப்பட்ட அந்தப் பேருந்தில் அரங்கேற்றப்பட்ட கொடூரம்... சினிமாக்களில்கூட பார்த்தறியாத உச்ச கொடூரம். அதன்பிறகு, இருவரையும் ஓடும் பஸ்ஸில் இருந்து தூக்கி எறிந்தது... கொடுமையிலும் கொடுமை! இதைப் பார்த்த ஒருவர் தந்த தகவலை அடுத்து, இருவரையும் மீட்டு அருகிலுள்ள சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் சேர்த்தது போலீஸ்.


குற்றவாளிகள் ஆறு பேரில் இருவர் மறுநாள் கைது செய்யப்பட்டாலும், மீதம் உள்ளவர்களை கைது செய்வதில் போலீஸ் வழக்கம்போல் சுணக்கம் காட்டியது. சம்பவம் தலைப்பு செய்தியாக மாற.... டெல்லியின் கல்லூரி மாணவ -மாணவிகளும், பொதுமக்களும் கைகோக்க... போராட்டக்களமாக மாறியது இந்தியா கேட். நாடாளுமன்றத்திலும் விஷயம் எதிரொலிக்க... 'குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை' என்கிற குரல் உரக்க ஒலிக்கிறது.



''பஸ்ஸிலிருந்து தூக்கி எறியப்பட்ட மாணவி, காயங்களுடன் நிர்வாணமாக நடுரோட்டில் கிடந்துள்ளார். போலீசார் வரும்வரை ஒரு துணியை அவர் மீது போர்த்தவும் யாரும் முன்வரவில்லை. நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் குற்றங்களில் இந்தச் சம்பவமே கடைசியாக இருக்க வேண்டும். இதற்கு ஒரு முடிவு கட்டாமல் எங்கள் போராட்டம் ஓயாது'' என நம்மிடம் ஆவேசப்பட்டவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி பிரதீபா சர்மா.


பொதுமக்களின் ஆவேசப் போராட்டம் டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி... ஏன், ஜனாதிபதியின் வீட்டையும் விட்டு வைக்கவில்லை. இதன் பிறகே... மீதம் இருந்த நான்கு குற்றவாளிகளையும் கைது செய்தது டெல்லி போலீஸ். அமைதி காக்கும்படி பிரதமர் மன்மோகன் சிங் தொலைக்காட்சியில் தோன்றி கோரிக்கை வைக்கும் அளவுக்கு போராட்டம் விஸ்வரூபமெடுத்திருக்கிறது!


''பாலியல் வன்புணர்ச்சி வழக்குகள் பலவும், பத்து வருடங்களுக்கு மேலாக, முடிவடையாமல் நிலுவையில் உள்ளதாக செய்திகள் வருகின்றன. இவர்கள் விஷயத்தில் மனித உரிமைகளைப் பார்ப்பது பாவமாகிவிடும். குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும், குற்றவாளிகளுக்கு துணைபோகாமலிருக்கவும் போலீஸார் உறுதி எடுக்க வேண்டும். அப்போதுதான் என் மகள் மற்றும் பேரக் குழந்தைகள் இந்த நகரத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும்'' எனச் சீறினார் போராட்டத்திலிருந்தவர்களில் ஒருவரான முதியவர் சாய்ராம் ராத்தோட்.



போராட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் லாபம் தேட முனைந்த சில அரசியல் கட்சிகளை, போராட்டக்காரர்கள் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. எனினும், போராட்டக்காரர்களுக்கு இடையே ஊடுருவிய சமூக விரோதிகள் சிலரால், எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.


போராட்டக்காரர்களை அடக்கும் பணியில் திடீர் என மயக்கம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்து போயிருக்கிறார் ஒரு போலீஸ்காரர். ஆனால், 'மாரடைப் பால் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் இறந்துபோயிருக்கிறார். போராட்டத்தை ஒடுக்குவதற்காக இந்த விஷயத்தை போலீஸ் பெரிதாக்குகிறது' என்று இந்த மரணத்தையும் சர்ச்சைக்கு உள்ளாக்குகிறார்கள் இப்போது.


''சீமா மருத்துவ மாணவி என்பதால், உடலின் தன்மையை அறிந்து சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைக்கிறார். ஐந்து முறை கோமா நிலைக்குச் சென்று திரும்பியபோதும் அவருக்கு மனஉறுதி அதிகமாக உள்ளது. இது, தான் உயிருடன் இருந்தால்தான் குற்றவாளிகளை தண்டிக்க முடியும் என்பதற்காகவும் இருக்கலாம். ஒருமுறை நினைவு திரும்பியபோது, 'அம்மா... நான் வாழ விரும்புகிறேன்!’ என ஒரு பேப்பரில் எழுதிக் காட்டினார்.


ஒரு கட்டத்தில் ஒருசில அடிகள் நடக்கவும் செய்தார். ஆனால், இப்போது அவரால் எதுவும் முடியவில்லை. வெறி கொண்ட அந்தக் கொடூரர்கள் அவருடைய பெண்ணுறுப்பில் இரும்பு கம்பியையும் நுழைத்துள்ளனர். அது வயிற்றுக்குள்ளும் சென்று பல உறுப்புகளையும் பாதித்துள்ளது. இதனால், உடல் முழுவதும் பரவிவிட்ட இன்ஃபெக்ஷன்தான் தற்போது மாணவிக்கு மிகவும் ஆபத்தாக உள்ளது. முதுகிலும் பல எலும்புகள் முறிந்துள்ளன. அவரு டைய முழு நிலைமையையும் விளக்கமாகக் கூறினால்... மருத்துவர்களாகிய எங்களுக்கே மனது வலிக்கிறது. இந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் மனிதர்களே அல்ல?'' என ஆதங்கப்பட்டார் சப்தர்ஜங் மருத்துவமனையின் சூப்பிரண்டென்டன்ட் பி.டி.அத்தானி.



விவகாரம் தொடர்ந்து பெரிதாகிக் கொண்டே போகும் நிலையில், ஒரு சமயம் நன்றாக.... மறுசமயம் மோசமாக என மாணவியின் உடல் நிலையும் மாறிக் கொண்டே போனதால்... மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு, அரசு செலவில் அனுப்பப் பட்டார் சீமா. ஆனால், உடல்உறுப்புகள் ஒவ் வொன்றாக செயல் இழக்க... டிசம்பர் 29-ம் தேதி அதிகாலை சிங்கப்பூரிலேயே, 13 நாள் போராட்டத் துக்குப் பின் இறந்து போனார்.


தேசிய குற்றவியல் ஆவணப் பதிவுகளின்படி, நம் நாட்டின் 53 பெரு நகரங்களில், மிக அதிகமான பாலியல் வன்புணர்ச்சி வழக்குகள் பதிவாகியிருப்பது... டெல்லியில்தான். 2011-ல் இங்கே மட்டும் 572 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள் ளனர். மும்பை-239, பெங்களூரு-96, சென்னை-76, கொல்கத்தா-47 என இந்த பட்டியல் நீள்கிறது!


டெல்லியில் இரண்டு நாட்களுக்கு, மூன்று கற்பழிப்பு வழக்குகள் சராசரியாகப் பதிவாகின்றன. கற்பழிப்பு குற்றங்கள் சம்பந்தமான டெல்லி போலீஸின் குற்றப் பதிவுகளின் புள்ளிவிவரங்கள், 'பெண்களுக்கு, அவர்களை அறிந்தவர்களால்தான் அதிக ஆபத்து' என்கின்றன. 


2011-ம் வருடத்தில் பதிவான வழக்குகளில் மட்டும் 97.54 சதவிகித குற்றவாளிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள்தான். இதில், 58.28 சதவிகித குற்றவாளிகள் உறவினர்கள். 36.46 சதவிகித குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களுடைய தெருவிலேயே வசிப்பவர்கள். வெறும் 2.8 சதவிகித குற்றவாளிகள் மட்டுமே முன்பின் தெரியாதவர்கள். இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல!


'பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு' என்ற பட்டியலில் இந்தியா இருப்பது, காந்தி பிறந்த தேசத்துக்கு எத்தனை பெரிய கேவலம்!     

பஸ் டிரைவர் ராம்சிங், இவனுடைய சகோதரன் முகேஷ் சிங், பாடி பில்டரான வினய் சர்மா, தள்ளுவண்டியில் பழங்களை விற்கும் பவண் குப்தா (இந்த இருவரும்... டிரைவரின் நண்பர்கள்), ப்ளஸ் டூ படித்துவிட்டு வேலை தேடி பீகாரிலிருந்து டெல்லி வந்திருக்கும் அக்ஷய் தாக்கூர், கூலி வேலை செய்து பிழைக்க ராஜஸ்தானில் இருந்து வந்திருக்கும் ராஜு ஆகிய ஆறு பேரும், இந்தக் கொடூரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.



 மக்கள் கருத்து 

1. பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடு.....இப்போதுதானா? மாபெரும் இதிகாசமென இந்த நாடு கொண்டாடுகிறதே அந்த 'மகாபாரத'த்தில் மனைவியை வைத்து சூதாடுகிறார்கள் பாண்டவர்கள்.அறிவிற் சிறந்த பெரியோரும்,மூத்தோரும் கூடியிருக்கும் சபையில் துகிலுரியப்படும் போது ஐந்து கணவர்களோ,அல்லது வீரத்திலும்,அறிவிலும் சிறந்த பெரியோர்களோ காப்பாற்றும் திறனை இழந்து விட்டதால் கடவுளைக் கூப்பிடுகிறாள்.....


.
இப்போது இந்தியப் பெண்களை பாஞ்சாலியின் நிலையில் வைத்துப் பாருங்கள் இரண்டு காட்சிகளுக்கும் வித்தியாசம் எதுவுமில்லை.

நல்லவேளை குறைவாக அணிந்திருந்ததால் பாஞ்சாலி பலாத்காரத்திற்கு உள்ளாட்கப்பட்டாள் என யாரும் இதுவரை யாரும் கருத்து சொல்லவில்லை.
இங்கு பெண் என்பவள் ஆணின் உடமை,அவள் ஒரு நுகர்பொருள்.... அவ்வளவுதான்.அப்படித்தான் இந்த கலாச்சாரம் சொல்லிக்கொடுத்திருக்கிறது.இங்கு பெண் தெய்வங்கள் வணங்கப்படுவதும்,
பெண்களின் பெயரால் நதிகளும்,மலைகளும் போற்றபடுவதும் நிஜத்தில் பெண்ணுக்கு இழைக்கும் கொடுமைகள் ஏற்படுத்தும் குற்ற உணர்வினால் மட்டுமே தவிர வேறு காரணம் ஏதுமிருக்க முடியாது.

கற்பழிப்பு என்பது கடைந்தெடுக்கப்பட்ட வன்முறையே.இந்தக் கொடுமையை செய்த அந்த இளைஞர்கள் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ள என்ன தூண்டியது,எது தைரியம் கொடுத்தது என்பதை யோசிக்கவே இயலவில்லை.
இந்த தேசத்து ஆண்கள் மனதில் பெண்களின் மீது இவ்வளவு வ்ன்மமா?
இதை பாலியல் இச்சை என்று மட்டும் எடுத்துக்கொண்டால் மிகக் குறுகிய வட்டத்துக்குள் சிக்கிக்கொள்வோம்.

எதுவென்றாலும் இந்த தேசம் முழுதும் மாறவேண்டிய தருணம் வந்து விட்டது...மாறுங்கள்,இல்லயென்றால் மாற்றப்படுவீர்கள்.

இத்தனை அவமானத்திலும்,துயரத்திலும் ஆறுதல் வீறு கொண்டு போராடும்
இளைய சமுதாயம். நாளைய வாழ்க்கையின் மீது ஒரு நம்பிக்கை ஒளி தெரிகிறது...!!!



2. இந்த அரசியல்வாதிகள் பேசி முடித்து சட்ட்ம இயற்றுவதற்கு வருடங்கள் ஆகலாம். சவுதியில் வழங்கப்படும் தண்டனையே (கட்டி வைத்து குற்றவாளிகளின் மேல் கல்லெறிதல்) சிறந்த தண்டனை. அதற்கு பயப்படாதவர்கள் குறைவே. கர்ஜிக்கும் மனித ஆர்வலர்கள் இந்த பெண்ணின் உயிரை கொண்டு வர மாட்டார்கள்.



3. பாலியல் வன்முறை வழக்குகள் டெல்லியில் அதிகம் என்றாலும், உண்மையில் மற்ற மாநிலங்களில் குடும்ப கௌரவத்திற்காக உண்மை வெளியே வந்து விடாமல் மறைத்து விடுகிறார்கள் பாதிக்கப் பட்டவர்கள்..இனிமேல் தைரியமாக சட்ட நடவடிக்கைகளுக்கு முன் வருவார்கள் என்பதுடன், தங்களைப் பாதுகாத்துக் கொள்வதிலும் தைரியமாக நடந்து கொள்வார்கள் என நம்புவோம்.


நன்றி - விகடன்

டெல்லி ரேப்டு கேர்ள் சாவுக்குக்காரணம் டெல்லி போலீஸ் தான் - பர பரப்பு தகவல்கள்

டெல்லி சம்பவம்: உதவ வராமல் சண்டை போட்ட போலீசார்'

Posted Date : 11:48 (05/01/2013)Last updated : 11:49 (05/01/2013)
புதுடெல்லி: டெல்லியில்  
மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி  சாலையில் வீசப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த போலீசார்  உதவ வராமல் அந்த இடம் எந்த காவல் நிலைய எல்லைக்குள் உட்பட்டது என்பது குறித்து  தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததாக மாணவியின் நண்பர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி இரவு ஓடும் பேருந்தில் மாணவியை இரும்பு  கம்பியால் தாக்கி பலாத்காரம் செய்த கும்பல்,அவரையும், அவருடன் வந்த ஆண்  நண்பரையும் பலமாக தாக்கி சாலையில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்துவிட்ட மாணவி உயிரிழந்துவிட்ட  நிலையில்,அவருடன் வந்த ஆண் நண்பர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை  பெற்று 

இந்நிலையில் சாலையில் ஆடைகளின்றி காயங்களுடன் தானும், மாணவியும் உயிருக்கு  போராடிக் கொண்டிருந்தபோது தங்களுக்கு யாருமே உதவவில்லை என்றும்,போலீசாரும்  உதவ வராமல் காவல் நிலைய எல்லை குறித்து தங்களுக்குள்  சண்டையிட்டுக்கொண்டிருந்ததாகவும் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள  பேட்டியில் அந்த ஆண் நண்பர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,"அவ்வழியாக காரிலும்,பைக்கிலும்,  ஆட்டோ ரிக்ஷாவிலும் சென்றவர்களை தடுத்து

நிறுத்தி உதவி கேட்க  முயற்சித்தேன்.ஆனால் தங்களது வாகனங்களில் மெதுவாக அருகில் வந்து வேடிக்கை  பார்த்து விட்டு சென்றனரே தவிர,யாருமே உதவவில்லை.இதிலேயே 25 நிமிடங்கள்  கழிந்துவிட்டது.

பின்னர் அந்த வழியாக சென்ற யாரோ ஒருவர் போலீசுக்கு இது குறித்து தகவல்  அளித்தபின்னர்,45 நிமிடங்கள் கழித்து 3 வேன்களில் ரோந்து போலீசார் வந்தனர்.

நாங்கள் ஆடையிலாமல் கிடந்த நிலையில்,போலீசார் உட்பட யாரும் ஒரு சிறிய  துணியை கூட கொடுக்கவில்லை.ஆம்புலன்ஸையும் அழைக்கவில்லை.அவர்கள்  வெறுமனே எங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

எங்களுக்கு உதவ முன்வராமல் இந்த வழக்கு எந்த காவல்நிலைய எல்லைக்குள் வரும்  என தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர்.இதிலேயே 45 நிமிடங்கள்  விரயமாகிவிட்டது.

பின்னர் பலமுறை நான் கேட்டுக்கொண்ட பின்னர் யாரோ ஒருவர் ஒரு போர்வையை  கிழித்துக்கொடுத்தார்.அதனைக்கொண்டு மாணவியின் உடலை நான் மூடினேன். 

பின்னர் நானே எனது தோழியை போலீஸ் வேனில் தூக்கி வைத்தேன். காவல்துறையினர்  அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், நீண்டதூரம் பயணித்து சப்தர்ஜங்  மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்" என்று தெரிவித்துள்ளார். 



நன்றி - விகடன் நியூஸ்

Thursday, January 03, 2013

ரேப் செய்யப்பட்ட புதுவை + 2 மாணவி பேட்டி

புதுவை: மயக்கமருந்து கொடுத்து என்னை கற்பழித்தனர் - டாக்டரிடம் மாணவி கதறல்


 புதுச்சேரி, ஜன. 3-

கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு புதுச்சேரி அரசு மகளிர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டரிடம் மாணவி கூறியதாவது:-

நான் 1-ந்தேதி வில்லியனூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது பஸ் கண்டக்டர் முத்துகுமரன் என்னிடம் உன் அம்மாவுக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது. உடனே வா என்று கூப்பிட்டார். எனவே அவருடன் நான் சென்றேன். என்னை பஸ்சில் அழைத்து சென்றார். அப்போது ஏதோ ஒரு வகை பொடியை முகத்தில் வைத்தார். அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

இரவு ஒரு குடிசை வீட்டில் இருந்தேன். அங்கு கண்டக்டர் முத்துகுமரன் என்னை கற்பழித்தார். இதனால் நான் பாதி மயக்கத்தில் இருந்தேன். அப்போது இருட்டு அறைக்குள் இழுத்து சென்றனர். அங்கு 2 பேர் இருந்தனர். அதில் ஒருவன் என்னை கற்பழித்தான்.



அதன்பிறகு காலையில் விழுப்புரம் பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். நான் என் பெற்றோருக்கு தகவல் கொடுத்தேன். இவ்வாறு அவர் டாக்டரிடம் கூறியதாக மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். கஸ்தூரி தெரிவித்தார். மேலும் டாக்டர் கஸ்தூரி கூறும்போது "மாணவிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் உடல் நலத்துடன் இருக்கிறார். அவருக்கு உடலில் வேறெங்கும் காயம் இல்லை என்றார்". 


 புதுவை மாணவி பாலியல் பலாத்காரம்: 2 பேர் கைது - என்ஜினீயரிங் மாணவர் தலைமறைவு

புதுச்சேரி, ஜன. 3-

புதுவை திருபுவனை அருகே உள்ள கொத்தபுரி நத்தத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் சுந்தரி வயது 17. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் புதுவையில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளி முடிந்ததும் அவர் டியூசனுக்கு சென்று வந்தார். நேற்று முன் தினம் புத்தாண்டு தினத்தில் அவர் டியூசனுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதுபற்றி திருபுவனை போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை விழுப்புரம் பஸ் நிலையத்தில் சுந்தரி மயங்கிய நிலையில் கிடந்தார். போலீசார் அவரிடம் விசாரித்து பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பெற்றோர் காரில் சென்று அவரை அழைத்து வந்து புதுவை அரசு பெண்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு பரிசோதனை செய்தார்கள். அதில் சுந்தரி கற்பழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து திருபுவனை போலீசார் கற்பழிப்பு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் மாணவியை பஸ் கண்டக்டர் ஒருவர் கடத்தி சென்றது தெரியவந்தது. சுந்தரி தினமும் திருபுவனையில் இருந்து புதுவை பள்ளிக்கு தனியார் பஸ்சில் வருவார். இந்த பஸ்சில் கண்டக்டராக இருந்த முத்துக்குமரன் (23) என்பவருடன் சுந்தரிக்கு அறிமுகம் இருந்தது. முத்துக்குமாரின் சொந்த ஊர் திருவெண்ணை நல்லூர் காந்திகுப்பம் காலனி ஆகும். முத்துக்குமரன் சுந்தரியை அழைத்து சென்று கற்பழித்தது தெரிய வந்தது.

சுந்தரியை அவர் திருவெண்ணைநல்லூருக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ஒரு குடிசை வீட்டில் வைத்து அவரும், அவருடைய நண்பர் அதே ஊரை சேர்ந்த வெங்கடாசலபதி (23) என்பவரும் கற்பழித்துள்ளார். மேலும் ஒருவரும் கற்பழிப்பில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து போலீசார் முத்துக்குமரன், வெங்கடாசலபதி இருவரையும் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகிறார்கள். அவருடைய பெயர் விபரம் இதுவரை தெரியவில்லை.

கற்பழிப்பில் ஈடுபட்ட வெங்கடாசலபதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவராவார். அவர் அரசூரில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். முத்துக்குமரன் சுந்தரியிடம் உனது தாயாருக்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறி அழைத்து சென்று இந்த பாதக செயலில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவெண்ணைநல்லூருக்கு பஸ்சிலேயே அழைத்து சென்றதாகவும், பின்னர் கற்பழித்துவிட்டு மீண்டும் பஸ்சிலேயே அழைத்து வந்து விழுப்புரம் பஸ் நிலையத்தில் விட்டு சென்றதாகவும் தெரிகிறது. 



நன்றி - மாலை மலர் 

புதுவையில் பிளஸ் 2 மாணவி பலாத்காரம்: மக்கள் போராட்டம்; பதட்டம் 
Posted Date : 12:55 (03/01/2013)Last updated : 13:01 (03/01/2013)
புதுச்சேரி :புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அங்கு  பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,அம்மாணவியின் தந்தை தீக்குளிக்க  முயற்சித்ததால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் மாணவிக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே  உலுக்கியபோதிலும்,பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்  கதையாகவே உள்ளது.

புதுவை திருபுவனை பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரின்  மகள் தேவி (வயது 17,  பெயர் மாற்றப்பட்டுள்ளது). புதுவை நகரில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து  வந்தார். புதுவையில் டியூசனும் படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை டியூசன் செல்வதாக கூறிவிட்டு சென்றார்.ஆனால் இரவு  வரை வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் விழுப்புரத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட அவர், தன்னை தனியார்  பஸ் கண்டக்டர் முத்து உள்ளிட்ட 3 பேர் தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.



இதுதொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து  குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கண்டக்டர் முத்து மற்றும் வெங்கடாச்சலம் ஆகிய இருவரை கைது செய்தனர்.

டெல்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் போராட்டம் அடங்குவதற்குள், புதுச்சேரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை  ஏற்படுத்தியுள்ளது.இதனால் புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள்  வெடித்துள்ளன.



இந்நிலையில் பாதிப்புக்குள்ளான மாணவியின் தந்தை நாகரஜ் இன்று திடீரென சாலைக்கு  ஓடிவந்து தம்மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.அவரை அங்கு நின்றவர்கள் ஓடிவந்து, அவரை தடுத்து நிறுத்தினர்.இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.



நன்றி - விகடன்



செய்தி 3


கேரளா: மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு தூக்குத் தண்டனை! 

 திருவனந்தபுரம்: கேரளாவில் 10 ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு தூக்குத் தண்டனை விதித்து திருவனந்தபுரம் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பளித்துள்ளது.

திருவனந்தபுரத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை, ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து,கொன்றுவிட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.


இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம்,ஆட்டோ ஓட்டுனர் மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை குற்றச்சாட்டு நிரூபணமானதால்,அவருக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Monday, September 17, 2012

திருச்செங்கோடு விவேகானந்தா காலேஜ் மாணவி கேங்க் ரேப் & மர்டர் , மறைக்கப்பட்ட உண்மைகள்

http://mmimages.maalaimalar.com/Articles/2012/Sep/86573ad0-bf78-4bae-b9db-e71f5c0ebd88_S_secvpf.gif 

 ஈரோட்டில் இருந்து 19 கிமீ  தொலைவில் உள்ளது திருச்செங்கோடு.அங்கிருந்து 7 கிமீ தொலைவில் எளையாம்பாளையம் என்னும் ஊர் உள்ளது. புகழ் பெற்ற  உலகப்பம்பாளையம் பஸ் ஸ்டாப்புக்கு முந்திய ஸ்டாப். அங்கே தான் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி . இருக்கிறது.

Address:

Elayampalayam,
Tiruchengode Tk,
Namakkal - 637205,
Tamil Nadu.





23000 மாணவிகள் படித்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கான கல்வி நிறுவனம் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி .மிக நல்ல பெயர் கொண்ட காலேஜ். இங்கே கல்வித்தரம் மிகச்சிறப்பாக இருக்கும். எனவே பெற்றோர்கள் தங்கள் பெண்களை இங்கே படிக்க வைக்க போட்டி போட்டு காலேஜில் சேர்க்கிறார்கள். 


கடந்த  2 வருடங்களில் இந்த காலேஜ் பல மர்ம மரணங்களின் தாயகமாக இருந்து வருகிறது.  தற்கொலை  செய்யும் மாணவிகள் பெருகி வருகிறார்கள்.அவை எல்லாம் நிஜமான தற்கொலையா? கொலை செய்து தற்கொலை நாடகமா என்பது விசாரனைக்குரியது.


இங்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு மாணவியை 7 மர்ம நபர்கள் கல்லூரிக்குள் வைத்து கற்பழித்துக் கொன்றுள்ளனர். இதனை மறைக்க கல்லூரி நிர்வாகம் ,மாணவியின் பெற்றோருக்கு 2 கோடி ரூபாய் கொடுத்துள்ளது.



போலீசாரிடம் கல்லூரி நிர்வாகம் இது ஒரு தற்கொலை தான் என்று விசாரணையை மூடிவிட பேரம் பேசி உள்ளார்கள். . இதனை ஏற்றுக்கொள்ளமுடியாத மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் .இது போல்  சம்பவம் நடப்பது இது மூன்றாம் முறையாம்.



http://www.infinitecourses.com/admin/RelatedImages/Institutes/634733898184859200_medical.jpg




விவேகானந்தா கல்லூரியில் படிக்கும்  பல  மாணவிகள் ஃபேஸ்புக்கில் புலம்பி இருக்கிறார்கள். ஒரு மாணவி ட்விட்டரில் இருக்கும் பாடல் ஆசிரியர் விவேகாவிடம் இந்த தகவலை சொன்னார்கள்.
அவர்  ஜூனியர் விகடனுக்கு தகவல் சொல்லி இருக்கிறார். ஆனால் இது சம்பந்தமான உண்மையான தகவலோ , செய்தியோ எந்த ஒரு தமிழ் ஊடகத்திலும் வந்ததாகத்தெரியவில்லை.. நாளிதழ்களிலும் வரவில்லை.. வந்ததெல்லாம் தற்கொலை என்ற செய்தியே..


 தங்கள் மகளின் பாதுகாப்பிற்காக பெண்கள் கல்விநிலையத்தை நாடி வரும் பெற்றோர்களின் நிலை என்ன ?


கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் காயத்ரி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அந்த காலேஜிலேயே மிக அழகானவர் என்றும் பலர் கண் இவர் மேல் என்றும் சொல்லப்படுகிறது.


 கெமிஸ்ட்ரி லேப் அசிஸ்டென்ஸ் 4 பேர் , ஒரு ஆஃபிஸ் கிளார்க் , ஒரு லெக்சரர் ,மற்றும் ஒரு HOD  மொத்தம் 7 பேர் சேர்ந்து கல்லூரி வளாகத்துலேயே ரேப் செஞ்சிருக்காங்க.. பின் கொலைசெஞ்சிருக்காங்க 

 காயத்ரியிடம் ஒரு லெக்சரர் அடிக்கடி வழிந்ததாகவும், தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாகவும்  மாணவிகள்  சொல்கிறார்கள்


பெண்ணின் பெற்றோரிடம் தூக்கு மாட்டிக்கிட்டு இறந்துடுச்சு என்று சொல்லி இருக்காங்க. 2 கோடி பேரம் பேசி இருக்காங்க.. போலீஸ்க்கு பணம் எவ்வளவு போச்சுன்னு தெரியல.. பாடி போஸ்ட்மார்ட்டமே பண்ணலை../ பின் பெற்றோரின் பிரஷருக்குப்பின் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது. அது எந்த அளவுக்கு உண்மையாக நடந்தது என்பது தெரியவில்லை


பெண்ணின் உறவினர் நாமக்கல் கலெக்டராம். அவர் மூலம் பெண்ணின் பெற்றோர் நீதி கிடைக்க போராடி உள்ளனர்.. ஆனால் விவேகானந்தா கல்லூரி நிர்வாகம் திமுக முக்கியப்பெரும்புள்ளியாம்.. அதனால் பல மேலிட பிரஷர் வந்திருக்கு.  

 



 கல்லூரி நிர்வாகத்திடம் சில கேள்விகள் 


1. மடில கனம் இல்லைன்னா வழில  பயம் இல்லை. உங்க மேல தப்பில்லைன்னா  தன்னிலை விளக்கம் கொடுக்கலாமே? ஏன் தர்லை?கல்லூரி வளாகத்துக்குள் ஏன் மீடியாக்களை வர விடுவதில்லை? 




2. கல்லூரி பெயர் கெட்டுப்போயிடும் என்று சொல்கிறீர்கள், அப்போ இதே போல்  தொடர்ச்சியாக  மாணவிகள் கெட்டுப்போனால் பரவாயில்லையா? 


3. இது ஒண்ணும் எக்ஸாம் டைம் இல்லை. எக்சாம்ல ஃபெயில் , அரியர்ஸ் விழுந்துடுச்சு அதனால மனம் உடைந்து தற்கொலை செய்துட்டான்னு ரீல் விட.. 



4. குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஊழியர்களை அப்படியே பணியில் இருக்க அனுமதித்தால் அவர்கள்  ருசி கண்ட பூனைகள் ஆகி தங்கள் பணியை தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள், நீங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு  நட்ட ஈடு கொடுத்துக்கொண்டே இருப்பீர்களா? 



5. இப்போது இருக்கும் களங்கத்தை போக்க அனைத்து ஆண் ஊழியர்களையும் நிறுத்தி விட்டு பெண் ஊழியர்களை நியமித்தால் தான் மாணவிகளின் பயம் போகும்.. அவர்கள் கோரிக்கையை ஏன் ஏற்கவில்லை?



6. சீல் வைக்கப்பட்டிருக்கும் காலேஜால் உங்களுக்கு நேரடி பாதிப்பு இப்போ இல்லை. ஆனா 20,000 மாணவர்கள் கதி என்ன? அவங்க எப்படி கல்வியை தொடருவாங்க?


இது பற்றி தினமணியில் வந்த செய்தி 


http://www.infinitecourses.com/admin/RelatedImages/Institutes/634733898023866917_hostel.jpg


நாமக்கல்லில் மாணவி தற்கொலை : மாணவிகள் போராட்டம், கல்லூரிக்கு விடுமுறை

First Published : 08 Sep 2012 01:59:02 PM IST


நாமக்கல், செப்., 08 : நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி கல்லூரி விடுதியில், மாணவி காயத்ரி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், மர்மம் இருப்பதாகக் கூறி கல்லூரி மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆனால், தேர்வில் தோல்வி அடைந்ததால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த சூழ்நிலையில், கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவி தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 மாலை மலர் செய்தி 

http://www.infinitecourses.com/admin/RelatedImages/Institutes/634733898312311423_mess.jpg
 திருச்செங்கோடு கல்லூரி மாணவி இறந்தது எப்படி? பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ள காட்டேரி, வேப்பனம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணி புரிந்து வருகிறார். இவரது மகள் காயத்ரி (வயது 19). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக்.ஐடி 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 2-ந் தேதி இவர் கல்லூரி விடுதி அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இந்த நிலையில் மாணவி காயத்ரி சாவில் மர்மம் இருப்பதாக கூறி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மாணவி காயத்ரியின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரப்பட்டது. டீன் வள்ளிநாயகம் தலைமையில் மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். இந்த பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

பரிசோதனை அறிக்கையை நேற்று மாலை மாணவியின் உறவினர்களிடமும் திருச்செங்கோடு ரூரல் போலீசாரிடமும் சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் வள்ளியநாயகம் வழங்கினார். அந்த அறிக்கையில் மாணவி காயத்ரி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதி படுத்தப்பட்டு உள்ளது. மாணவியின் உடலில் ரத்தக் காயங்கள் எதுவும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருந்தபோதிலும் மாணவியின் உடல் பாகங்கள் தடயவியல் சோதனைக்கும், ரசாயன பரிசோதனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் கிடைத்த பிறகு தான் மாணவி எப்படி இறந்தார் என்பது உறுதி செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

காயத்ரி சாவுக்கு பிறகு மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் கல்லூரி நிர்வாகம் கல்லூரியை காலவரையின்றி மூடி உள்ளது. கல்லூரி திறக்கும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதியில் தங்கி இருந்த மாணவிகள் அவர்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.



ட்விட்டர் நண்பர்


இந்த ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டவர்  கூறியது

Murugesan Vijayakumar அன்பின் நண்பர்களுக்கு, கடந்த மூன்று தினங்களாக திருச்செங்கோடு தனியார் கல்லூரி மாணவியின் மரணம் குறித்து பல்வேறு விதமான வதந்திகள் செல்போன்கள் வாயிலாகவும், இணையம் வாயிலாகவும் பரவி வருகிறது. ஒரு பத்திரிகையாளன் என்ற முறையிலும், இந்த சம்பவத்தை நேரில் பார்த்து விசாரித்து வருபவன் என்ற முறையிலும் சில விளக்கங்களை இங்கே தர கடமைப்பட்டுள்ளேன்.
 சில அரசியல் ஆதயம் தேடும் அமைப்புகளாலேயே இந்தபிரச்சனை தற்பொழுது பெரிதுபடுத்தப்பட்டுள்ளது என்பது எங்களது விசாரணையில் தெரியவந்தது.ஒவ்வொரு மீடியா நிறுவனங்களுக்கும் அனாமேதய போன் கால்கள் வந்தன. பேசுபவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.இதில் எங்களுக்கு சந்தேகம் எழவே தீவிர விசாரணையில் இறங்கினோம். 
மாணவியின் உடல் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பொழுது அவரது உடலை நேரில் பார்த்தேன்.இறந்த மாணவி தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் சில இயக்கங்கள் மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி மாணவியின் உறவினர்களையும் சேர்த்துக் கொண்டு மருத்துவமனையின் முன்பு மறியலில் ஈடுபட்டனர். 
 இதனையடுத்து மாணவி காயத்ரியின் உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு டீன் வள்ளிநாயகம் தலைமையில் மூன்று மருத்துவர்கள் இறந்து போன மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இந்த பிரேத பரிசோதனை முழுமையும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று மாலை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.இதன் நகல் மாணவியின் தாய் மாமா பழனிசாமியிடம் திருச்செங்கோடு ரூரல் போலீசார் ஒப்படைத்துள்ளனர். 
அந்த பிரேத பரிசோதனை அறிக்கையை நானும் வாசித்தேன். அதில் மாணவியின் மரணம் சம்பவம் நடந்த அன்று (2.9.2012) 23-36 மணி நேரத்திற்குள் நடந்திருக்கலாம் என்றும், மாணவியின் மரணம் தூக்கிட்டு கொண்டதால் கழுத்து எழும்பு முறிவு ஏற்பட்டும், மூச்சுகுழாய் உடைந்தும் மரணம் ஏற்பட்டுள்ளது என்றும், மாணவியின் உடல் தூக்கில் தொங்கியதால் இரத்த ஓட்டம் நின்று அவரது கால் பகுதியில் ரத்தம் தேங்கி பாதங்கள் நீண்டு வளைந்துள்ளன என்றும், ரத்தம் ஆங்காங்கே நின்றதால் உடல் கறுத்து,தோல்களில் நிற மாறுதல் ஏற்பட்டுள்ளதாகவும் ,மாணவியின் உடலில் காயங்களோ, பலாத்காரத்திற்கான தடையங்களோ இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
 இது முழுமையான தற்கொலை என முதல் கட்ட பிரேதபரிசோதனை அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. ##




டிஸ்கி - இந்த பதிவில் குறிப்பிட்ட கல்லூரி சம்பந்தப்பட மாணவிகள் யாராவது கமெண்ட் போட்டால்  உங்கள் உண்மையான பெயரை போட வேண்டாம். அது உங்கள் பாதுகாப்புக்கு ஏற்றது அல்ல



திருச்செங்கோடு வித்ய விகாஸ் பள்ளிக்கூடத்தில்  இதே போல் ஒரு மாணவி போன வாரம் , ஜன்னல் கண்ணாடியை உடைத்து அதை  தன் கையில் குத்திக்கொண்டார் என்று  ஒரு கேஸ் ஒன்றும் உள்ளதாகவும் ஒரு மாணவியின் பெற்றோர் என்னிடம் கூறினர். அது பற்றி விபரம் தெரிந்த  மாணவ மாணவிகள்   9842713441 , 94863 13441 செல்லிலோ  [email protected]  என்ற மெயிலிலோ விபரம் தெரிவிக்கவும்..