Showing posts with label POORNA. Show all posts
Showing posts with label POORNA. Show all posts

Friday, November 18, 2011

வித்தகன் - வின்னர் - சினிமா விமர்சனம்

http://gallery.tamilkey.com/wp-content/uploads/2011/10/Viththagan-Tamil-Movie-2011-Poster-488x400.jpg 

அசிஸ்டெண்ட் கமிஷனராக பகலில் வேலை பார்க்கும் குண்டக்க மண்டக்க ஆர். பார்த்திபன் இரவில் ராபின் ஹூட்டாக மாறி ரவுடிகளை போட்டுத்தள்ளுகிறார்.. அப்போ அவர் எப்போ தூங்குவார்? எப்போ ரெஸ்ட் எடுப்பார்னு எல்லாம் யாரும் கேக்காதீங்க.. ஏன்னா நானும் கேட்கலை.. புரொடியூசரும் கேட்டிருக்க மாட்டார்னு நம்பறேன்... இது பார்த்திபனோட 50 வது படம்கறதால கொஞ்சம் விளையாண்டு பார்க்கலாம்னு ஆசைப்பட்டிருக்கார்.. 

படத்தோட விமர்சனத்துக்குள்ள போறதுக்கு முன்னால பார்த்திபனுக்கும் கமலுக்கும் உள்ள ஒரு சைக்காலஜிக்கல் ஒற்றுமையை பார்க்கலாம்..  குணா படத்தில் இருந்து கமலுக்கு ஒரு எண்ணம்.. ஸ்க்ரீன்ல தான் வர்ற ஒவ்வொரு சீனும் தான் மட்டுமே கவனிக்கப்பட வேண்டும்.. தன் நடிப்பு பிரத்யேக கவனத்தை பெற வேண்டும்னு நினைப்பாரு.. லேசா செயற்கை தட்டி நடிப்பாரு.. அதே போல பார்த்திபன்க்கும் ஒரு ஆசை.. தான் தான் செம பிரில்லியண்ட்.. மத்தவங்க எல்லாம் கேனை. அவன் இண்ட்டர் நேஷனல் கிரிமினல் ஆக இருந்தாலும் சரி மாக்கான் தான்னு நினைக்கறார்..

அவரோட எண்ணம் ரொம்ப தப்பு.. வில்லன் கேப்டன் பிரபாகரன்ல வர்ற மன்சூர் அலிகான் மாதிரி பலசாலியா, காக்கிசட்டை சத்யராஜ் மாதிரி புத்திசாலியா, ஏழாம் அறிவு வில்லன் போல் பிரமிக்க வைக்கும் அளவு காட்டிட்டு, அதுக்குப்பிறகு ஹீரோ வில்லனை வெல்வது போல் காட்னாத்தான் செம இண்ட்ரஸ்ட்டா இருக்கும்..

சரி படத்தோட கதைக்கு போலாம்.. ஹீரோவோட அப்பா ஒரு போலீஸ்காரர்.. அவர் ரவுடிகளை, சமூக விரோதிகளை ஒடுக்கறதால அதுல ஒருத்தன் அவரோட மகளை கொலை பண்ணிடறான்.. அதாவது ஹீரோவோட தங்கை.யை மர்டர்டு..வெறுத்துப்போன ஹீரோவோட அப்பா  வேலையை ரிசைன் பண்ணிட்டு வேற ஊர் போயிடறார்.. 

http://www.123stills.com/wp-content/uploads/2010/01/No-Buzz-About-Poorna%E2%80%99s-Viththagan.jpg

அப்பாவுக்கு தெரியாமயே ஹீரோ போலீஸ் வேலைக்கு படிச்சு அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆகி சமூக விரோதிகளை போட்டுத்தள்ளறார்.. தன் தங்கையை கொலை செஞ்ச வில்லன் இப்போ தாய்லாந்து நாட்டுல ... படம் லோ பட்ஜெட் என்பதால் ஹீரோ தாய்லாந்து போக முடியல.. தன்னோட சாணக்கியத்தனத்தால வில்லனை இங்கே வரவழைக்கறார்.. 

சாதாரண எக்ஸிக்கியூட்டிவ் முடிக்க வேண்டிய வேலையை கம்பெனி பாஸே செஞ்சா எப்படி இருக்கும்? அப்டி இருக்கு அந்த வில்லன் தமிழ் நாடு வர்றது..

சரி.. ஹீரோ ஆடும் ஆடுபுலி ஆட்டத்துல ஹீரோயினுக்கு என்ன வேலை? அவரை எப்படி கதைக்குள்ள கொண்டு வர்றது? ரொம்ப ஈசி.. ஹீரோ செய்யற ஒரு கொலையை அவர் நேர்ல பார்த்துடறார்.. என்ன ஏது? எதுக்காக அவர் கொலை செஞ்சார்ங்கற ஃபிளாஸ்பேக் எல்லாம் அவர் தெரிஞ்சுக்காததுக்கு முன்னேயே அவர் ஒரு போலீஸ் ஆஃபீசர்னு தெரிஞ்சதும் லவ்வ ஆரம்பிச்சடரார்.. ( நல்ல லவ்வுய்யா)

இடைவேளை ட்விஸ்ட் வேணுமே , அதுக்காக ஹீரோ போலீஸ்ல மாட்டிக்கறார்.. இடைவேளைக்குப்பிறகுதான் டர்னிங்க் பாயிண்ட்.. தண்டனை முடிஞ்சு ஹீரோ வெளீல வந்து தாதா முன்னேற்றக்கழகம்னு எதும் ஆரம்பிக்காமயே தாதா ஆகிடறார்.. 

இப்போ ஊர்ல 3 தாதா.. ஒண்ணு ஹீரோ தாதா..  2 வில்லன் தாதா.. 3 சைடு வில்லன் தாதா.. 2வது வில்லன் தாதா ஹீரோ கிட்டே கெஞ்சறாரு.. நீங்க 3வது வில்லனை போட்டுடுங்க...அப்போ நான் முதல் இடத்துக்குப்போயிடுவேன்.... நீங்க 2வது இடத்துக்கு வந்துடலாம்னு.. 

ஹீரோ தன்னோட அதி புத்திசாலித்தனத்தால என்ன செய்யறார்.. எப்படி ஜெயிக்கறார்? பழி வாங்கறார்ங்கறதுதான் மிச்ச மீதி திரைக்கதை..

பார்த்திபன் சும்மா சொல்லக்கூடாது மிடுக்கான அசிஸ்டெண்ட் கமிஷனர் ரோல்லயும் சரி.. தெனாவெட்டான தாதா ரோல்லயும் சரி. அசால்ட்டான நடிப்பு.. படம் முழுக்க அவரது எள்ளல்கள், நக்கல்கள், நையாண்டிகள் கொட்டிக்கிடக்கு.. ரசிக்கலாம்.. சில இடங்களில் மட்டும் ஓவர்..

பூரணி  சும்மா ரிலாக்‌சேஷனுக்கு , அதாவது ஆடியன்ஸூக்கு.. 2 டூயட் உண்டு.. ஆனால் மேற்படி ரசிகர்கள் எதிர்பார்க்கும் மேற்படிகள் இல்லை.. 

மெயின் வில்லன் நடிப்பு ஓக்கே.. டெபுடி கமிஷனராக, அரசியல்வாதியாக வருபவர் நடிப்பும் அருமை.. 

எடிட்டிங்க் செம ஷார்ப்.. ஒளிப்பதிவு கண்ணுக்கு உறுத்தல் இல்லாமல் இருக்கு,.. இசை ஓக்கே 2 பாடல்கள் ஆல்ரெடி ஹிட்.. 

http://pirapalam.com/wp-content/uploads/2011/11/18-vithagan300.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஹீரோயின் அருகே ஹீரோ ஜீப்பில் போகும்போது ஹீரோயின் கண்களுக்கு வில்லனாகத்தெரியும் ஹீரோவின் 2 கண்கள் மட்டும் தனியாகப்போய் ஹீரோயின் ஜாக்கெட் விளிம்பில் எட்டிப்பார்க்கும் சீன் என்னதான்  ஜிம் கேரியின் மாஸ்க் பட உருவல் என்றாலும் ரசிக்கும்படி இருக்கிறது..

2.   டி வியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போலீஸ் ஆஃபீசர் பார்த்திபன் ஹீரோயின் கண்களுக்கு மட்டும் அவரை எச்சரிப்பது போன்ற ஹீரோயின் கற்பனை செம காமெடி.. 

3. ஒரு பாடல் காட்சியில் பூரணாவின் சேலையில் இருக்கும் பூ டிசைன் அப்படியே பூவாக மலர்வது செம உத்தி.. கலக்கல் சீன் அது. 

4. இடைவேளைக்குப்பிறகு தாதா ஆகும் ஹீரோவின் ஆஃபீஸ்க்கு ஹீரோயின் வரும்போது அவரது ஆஃபீஸ் இண்ட்டீரியர் டெக்கரேஷன் செம.. ஆர் பார்த்திபன் ஆர்ட் டைரக்‌ஷனில் தனி கவனம் செலுத்துபவர் என்பதற்கான சான்று.. 

5. வசனகர்த்தா பார்த்திபனின் அபார உழைப்பு படத்தின் வெற்றிக்கு பக்க பலம் சேர்க்கிறது..  அவரது நக்கல் நையாண்டி வசனங்கள் மட்டும் 42 ஜோக்ஸ் தேறும்.. 

6. போர் அடிக்காமல் பர பர என காட்சிகளை நகர்த்திச்செல்லும் வேகம் அழகு..

7. ஒரு பாடல் காட்சியில் அதிகாலை செய்தித்தாள் போலே நீ வந்தாய் என்ற அழகு வரிகளுக்கு உயிர் ஊட்டும்படி ஒரு புறா கதவை திறந்து உள்ளேவருவது சோ க்யூட்.. 

8. வில்லன் கூட வரும் எடுபுடி கிழவன் செம காமெடி நடிப்பு டயலாக் டெலிவரி.. செம



http://suriyantv.com/wp-content/uploads/2011/10/vithakan-vizha.jpg
இயக்குநர் ஆர் பார்த்திபனிடம் சில கேள்விகள், பல சந்தேகங்கள். சில ஆலோசனைகள்

1.  மகன் அப்பாவை டேய் என கூப்பிடுவது கவுண்டமணியின் காமெடிக்கு ஓக்கே.. வில்லனின் மகனுக்குமா? அது கூட தேவலை.. கொலை நடந்த அன்று நீ எங்கே போனே? என அப்பா கேட்கறப்ப ஒரு மகன் அப்படியா தன் தந்தையிடம்  நான் ஃபிகர்ட்ட ஜல்ஸா செய்ய போனேன்னு சொல்வான்?

2. ஒரு கொலை நடக்குது. அதை செஞ்ச ஹீரோ கொலை ஆன டெட் பாடி சர்ட் பாக்கெட்ல இருந்து செல் ஃபோனை எடுத்து எஸ் எம் எஸ் அனுப்பறார் வில்லனுக்கு.. அதை பார்த்து அங்கே வர்ற வில்லன் கொலை செஞ்சதா மாட்றதா சீன்.. மெசேஜ் பார்த்து அவன் கால் பண்ணீ கன்ஃபர்ம் பண்ண மாட்டானா? போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ட வெச்சு கொலை நடந்த ஒரு மணி நேரம் கழிச்சே வில்லன் வந்தான் கற உண்மை தெரியாம போகாதா? அந்த செல் ஃபோன்ல ஹீரோவோட கை ரேகை இருக்கே?

3.  ஹீரோயின் பூரணா முகம் உடம்புக்கு செமயா பவுடர் போடறாங்க பாராட்டறேன்.. ஆனா முதுக்குக்கு நோ மேக்கப்... இதனால டூயட் சீன்ல அவர் நேரா நிக்கறப்ப கலரா தெரியறார்.. திரும்பறப்ப கறுப்பா தெரியறார்.. ( அவர் முதுகை எல்லாம் உன்னை யார் நோட் பண்ண சொன்னது?ன்னு கேக்காதீங்க.. அதை நான் பார்க்கலை.. பக்கத்து சீட் ஆள் சொன்னார்.. )

4. எல்லா படத்துலயும் வில்லன்க ஏதாவது கெட்ட தகவலை சொல்ற தன் ஆளுங்களையே டபக் டபக்னு சுட்டுட்டே இருக்காங்களே.. ஆள் பற்றாக்குறை வராதா? இந்தப்படத்துல 4 பேர் அவுட்.. பாவம்..

5. டூயட் சீன்ல கூட ரிவால்வர் வெச்சுக்கிட்டே ஹீரோ அலையறாரே.. அது ஏன்? வித்தகன் வித் த கன்  என்பதாலா?

6. க்ளைமாக்ஸ்ல ஹீரோயினை போட்டுத்தள்ளும் வில்லன் அதே ஸ்பாட்க்கு ஹீரோவை ஏன் வரச்சொல்லனும்? கொஞ்சம் தள்ளி வர சொல்லக்கூடாதா? ஹீரோயின் செயின் , ரத்தம் எல்லாம் அங்கே இருக்கே.. அதை  ஹீரோ பார்த்துட்டா ஹீரோயினை பிணையக்கைதியா வெச்சு நாம பண்ற டிராமா ஹீரோவுக்கு தெரிஞ்சுடுமேன்னு கூட  யோசிக்காத மாங்கா மடையனா?

7. பார்த்திபன் சார்.. 1 சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே.. போலீஸ் யூனிஃபார்ம் கெட்டப் செம.. ஆனா தாதா கெட்டப் நல்லாவே இல்ல.. ஏதோ நோய் வந்து இளைச்ச ஆள் மாதிரி இருக்கு.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjD5cSwtAZhEj-_dzqrGsvu3aV6BoAQiQAXuokex0WIeUVBkt1j7WXth3tUGzIcAEoJPvP_D216lbEWdqUfibE-4qayZPcdd75uTbZAI_N4Ej3lZyNjOd7Mg_bDDX8u80QT2TWf5NFf9MPY/s1600/poorna-hot-navel-stills-01.jpg

 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42


எதிர்பார்க்கப்படும் குமுதம் மார்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - ஆர் பார்த்திபனின் ரசிகர்கள், அவரது நக்கல் நையாண்டியை ரசிப்பவர்கள் பார்க்கலாம்.. ஃபேமிலியோட பார்க்கர மாதிரி டீசண்ட்டாதான் இருக்கு..

ஈரோடு ஆனூர் -ல் பார்த்தேன்

டிஸ்கி - வழக்கமாக போடும் ரசித்த வசனங்கள் போடாததற்கு காரணம்

. ஆல்ரெடி பதிவு நீளம்.. வசனங்கள் மட்டும் 45 டயலாக்ஸ் சேர்ந்துடுச்சு.. அதை தனி பதிவா போட்டுக்கலாம்-னு ஐடியா

Wednesday, October 05, 2011

வேலூர் மாவட்டம் - போலீஸ் ஸ்டோரி வித் சந்தானம் காமெடி - சினிமா விமர்சனம்

http://www.viparam.com/cinema/thumbnail.php?file=vellore_mavattam_movie_posters_451126400.jpg&size=article_medium 

கோடம்பாக்கம் கண்டு கொள்ளாமல் இருக்கும் ஒரு நல்ல நடிகர் நந்தா.திறமைசாலிகள் பலர் வாய்ப்புக்கிடைத்தும் சரியான வெற்றி கிடைக்காமல் தள்ளாடுகின்றனர்,அங்கீகாரம் கிடைக்காமல் அல்லாடுகின்றனர்,அப்படிப்பட்ட ஒரு திறமையான நடிகருக்கு கிடைத்திருக்கும் ஆறுதல் வெற்றிதான் வேலூர் மாவட்டம்.. 

சாதாரண மார்க்கெட் வியாபாரியான தந்தை தன் மகனை ஒரு ஐ ஏ எஸ் ஆஃபீசர் ஆக்க நினைக்கிறார்.. அது ஹேர் இழையில் தப்பி ஐ பி எஸ் ஆஃபீசர் ஆகும் வாய்ப்பு.. அவர் வேலூர் மாவட்டத்தில் பொறுப்பேற்று அந்த ஊரில் இருக்கின்ற லஞ்ச லாவண்யங்களை, தாதாக்களை, அரசியல் தலைகளை பலத்த எதிர்ப்புகளுக்கிடையே ஒழிக்கும் மாமூல்( இல்லாத , வாங்காத) போலீஸ் ஆக்‌ஷன் ஸ்டோரிதான்..

நந்தாவின் கம்பீரமான நடிப்புக்கு போலீஸ் யூனிஃபார்ம் ரொம்பவே கை கொடுக்கிறது. இதுதாண்டா போலீஸ், சிங்கம் ,சாமி, என பலதரப்பட்ட போலீஸ் ஆஃபீசர்ஸ் பார்த்து சலித்தாலும் நந்தாவின் நடிப்பால் கொஞ்சம் சலிக்காமல் போகிறது படம்...

அவருக்கு ஜோடி பூரணா... பார்ட்டி சுமாரான ஃபிகர் தான்.. வாய்ப்பு ரொம்ப கம்மி ( படத்துலப்பா... ) 2 டூயட் சீன் இருக்கு.. 

சந்தானம் போலீஸ் ஜீப் டிரைவராக வந்து சீரியஸான கதையில் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுகிறார்.. நித்யானந்தா கெட்டப் அவருக்கு செம மாட்ச்.. அந்த சீனை இன்னும் நல்லா டெவலப் பண்ணி இருக்கலாம்.. 


அழகம்பெருமாளின் வில்லன் நடிப்பு பாந்தம்.. ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான வில்லனிக் ஆக்‌ஷன் குட்.. அவருக்கு பாஸாக வரும் வில்லன் ப சிதம்பரம் மாதிரி கெட்டப்பில் வர்றார்.. இயக்குநருக்கு அவர் மேல் என்ன கோபமோ.. 
http://www.cinemaexpress.com/Images/article/2011/9/21/newrelease2.jpg
படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1. நம்ம குடும்பத்துல எல்லோருமே சுமையை தூக்கித்தான் பழக்கம், முதன் முதலா என் சுமையை ஒருத்தர் தூக்கிட்டு வர்றார்.. 


2. ஏன் சார்.? முன்னே பின்னே அறிமுகம் இல்லாத பொண்ணு ஃபோன் நெம்பர்  கேக்குதே, ஏன்? எதுக்குன்னு கேட்க மாட்டீங்களா?

ஏன்? எதுக்கு?

3. இந்தா பாருடி. இந்தாளைப்பார்த்தா கேணை மாதிரி இருக்கு. உன் ஆளை கண்டு பிடிக்க இவனை  யூஸ் பண்ணிக்க... 

4.  எனக்கு இலக்கியம் தெரியாது.. இசைல பிரமாதமா எதுவும் தெரியாது.. உன்னை மாதிரி கல கலன்னு பேசுற பொண்ணை பிடிக்கும், ஆனா எனக்கு அப்டி பேசத்தெரியாது.. உனக்கு ஓக்கேவா?

5.  சந்தானம் - ஏண்பா, ரவுடிங்க பேரைக்கேட்டா என்னமோ தாய்மாமன் பேரை சொல்ற மாதிரி டக் டக்னு சொல்றீங்க, போலீஸ் ஆஃபீசர் பேர் கேட்டா மட்டும் பம்பறீங்களே?என்னமோ சயின்ஸ்ல இருந்து கேள்வி கேட்ட மாதிரி...

6. சந்தானம் - அப்பா, நீ எதுக்கு ஹாஸ்பிடல்ல்ல வந்து அங்க பிரதட்சணம் பண்ண பம்பறேன்னு கண்டு பிடிச்சுட்டேன், நர்சுங்க எல்லாம் குட்டைப்பாவாடை போட்டிருக்காங்க. வாகா படுத்துக்கிட்டு நோகாம சீன் பார்க்க பிளான் பண்றே? பிச்சுப்புடுவேன் பிச்சு..

7. சந்தானம் -   ஹார்ட் ஆபரேஷன் பண்ற டாக்டர்க்கே ஹார்ட் அட்டாக்கா?

8.  அவர் என்ன கேட்டாரு இப்போ உங்களை?

அடுத்த குழந்தை எப்போ பெத்துக்கலாம்னு?

அடேய்.. இப்போத்தானேடா ஒரு குழந்தை பெத்தே? டே அப்பா!!!

9.  பக்கத்துவீட்டுக்காரனை பார்த்தியா? ஜாலியா அவன் சம்சாரத்தை கூட்டிட்டு வெளில கிளம்பறான். எனக்கும் அந்த மாதிரி ஆசை இருக்காதா?

சந்தானம் -அவன் பொண்டாட்டியை எதுக்கு நீ கூட்டிட்டு போக ஆசைப்படறே?  ( குமுதம் ஜோக் ரிட்டர்ன் பை வலங்கைமான் நூர்தீன் 1997)

10.  என்னப்பா? இது? எல்லா லாரிகளுக்கும் ஒரே ரெஜிஸ்ட்ரேஷன் நெம்பர்?

ட்வின்ஸ், த்ரின்ஸ் குழந்தைங்க பிறந்தா பார்க்க ஒரே மாதிரி இருக்கறதில்லையா? அது போல..
http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=11643&option=com_joomgallery&Itemid=77
11. சந்தானம் - இவனை எல்லாம் யார் மிரட்டப்போறாங்க? நான் நினைக்கறேன், கண்ணாடியைப்பார்த்து இவனே மிரட்டி இருப்பான்.. 

12. பரம்பரைப்பணக்காரங்க நிறையப்பேர் என் கிட்டே கை கட்டி சேவகம் பண்ணத்தயாரா  இருக்காங்க. பாவம் நீ பஞ்சம் பிழைக்க வந்தவன் தானே?

13.  ரிசைன் பண்ணறோமேன்னு மனசுக்கு கஷ்டமா இருக்கா?

இல்லை, நிம்மதியா இருக்கு.. 

14. யோவ்,, போலீஸ் வேலை தங்க முட்டை இடற வாத்து மாதிரி.. 

15. சந்தானம் - எல்லோரும் பொறுக்கி சாப்பிடறாங்க.. நீ மட்டும் தான்யா சாப்பிட்டுட்டு அப்புறம் பொறுக்கறே.. 

16.  சந்தானம் - யார் இவன்? பார்க்க பொம்பள புரோக்கர் மாதிரி இருக்கான்?
17. சந்தானம் - பொண்ணு பார்க்க வழக்கமா கோயிலுக்குத்தானே வரச்சொல்வாங்க? ஏன் வேன்?

18. சந்தானம் - நீ சொல்றதை கேட்கறோம், கொட்டாவி விட்டவன் வாய்ல திருப்பதி லட்டு போட்ட மாதிரி....

19 லேடி - எதுவா இருந்தாலும் பெட் 1 தலகாணி 2 என பேசுபவ நான்

சந்தானம் - வெட்டு 1 துண்டு 2 தானே நான் கேள்விப்பட்டிருக்கேன்.. இது புதுசா இருக்கே?

சரி.. எனக்கு மாசம் ரூ 15,000 தான் சம்பளம் உனக்கு ஓக்கேவா?

லேடி - எனக்கு ரூ 3000 குடுங்க போதும்...

20. சிஷ்யன் - சுவாமி! காமத்தை அடக்குவது எப்படி?

சந்தானம் - உன் கையால தான்

சாமி!!!!!!

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdhVUyKS0-tJItjazG1ULy3yfHHc-eZwOqtG_TfrBjZwcxgpYnHakbeJjMA3-lx2wvN0TpEELTP55sqtMEEgoic0JoI2Wr8hy4xg1K1ceJ2bZVeXrdxx4WgO8we3vb6dUIToZpmeC_Y7ZC/s1600/Poorna-hot-stills+%25284%2529.jpg

21.  என்னை கடத்திட்டு வந்தது குரு மூர்த்திக்கு தெரிஞ்சா உங்க நிலைமை அவ்வளவுதான்....


சந்தானம் - உன்னை கடத்திட்டு வந்தது உனக்கே இப்போதான் தெரியும். அதுக்குள்ள அவனுக்கு எப்படி தெரியும்?

22.  உள்ளே யாரையும் அலோ பண்ணக்கூடாதுன்னு மேடம் சொல்லி இருக்காங்க.. 

நாங்க உள்ளே போறதே மேடத்தை உள்ளே தள்ளத்தான், நீயும் வேணா கூட வா!!

23. சந்தானம் - டேய் , என்ன பிரச்சனை இங்கே?

உங்கப்பனையே கேளு..

சந்தானம் -அப்பா, என்ண்டா பிரச்சனை?

அவனையே கேளு..

சந்தானம் -என்ன பிரச்சனைன்னு கேட்டா அதை சொல்லாம ஏண்டா பிரச்சனை பண்றீங்க?

24. நான் வெளீல இருக்கேன்.. அப்புறம் பேசறேன்.. உன் கிட்டே..

இனிமே உள்ளேதான் போகப்போறீங்க!!

25.  சில நேரங்கள்ல உண்மையை விட பொய்க்கு மதிப்பு ஜாஸ்தி.. 

26. மறதின்னு ஒண்ணு இல்லைன்னா அரசியலே பண்ண முடியாது.. 


http://www.indiancinemagallery.com/Gallery2/main.php?g2_view=core.DownloadItem&g2_itemId=131858&g2_serialNumber=1

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  வழக்கமான போலீஸ் கதை எடுத்தாலும் திரைக்கதையில் விறு விறுப்பு ஏற்றி டெம்போவுடன் படத்தை போர் அடிக்காமல் கொண்டு சென்றது.. 


2. ஹீரோவாக நந்தாவை , வில்லனாக அழகம்பெருமாளை தேர்வு செய்தது..


3.சந்தானம் கேரக்டரை டெவலப் செய்து படத்தோட ஒன்றி வருவது போல் செய்தது..

4. போலீஸ் அரெஸ்ட், ரெய்டு , சேசிங்க் சமந்தப்பட்ட காட்சிகளில் பின்னணி இசை...

5. உன்னை உன்னை ஒன்று கேட்பேன் பாடல் நல்ல மெலோடி.. எடுத்த விதம் அழகு


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWq__SBVZfjTomw4DS6qomE-ECh63zq_6Iy9qec3DRjBuLlSPZs2MBOT-0OGuvUSX8EQ8hY5gDI4ziNQTb9-twap00-TfpXAegzFBZVyE05hB7O9byuJQqn7I8eaUZMdvBRV1lih4Yhpg/s1600/poorna210.jpg
இயக்குநரிடம் சில சந்தேகங்கள், கேள்விகள், ஆலோசனைகள்

1. ஐ பிஎஸ் ஆஃபீசர்க்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் லெட்டர் கூரியர் மூலமாகவோ,ரெஜிஸ்ட்டர் போஸ்ட் மூலமாகவோதான் வரும், ஆனால் சாதா தபாலில் ஹீரோவுக்கு வருது... 

2.  போலீஸ் பெரேட் நடக்கும்போதும், காலையில் ஜாகிங்க் எக்சசைஸ் பண்னும்போதும் யாருக்கும் செல் ஃபோன் நாட் அலோடு.. ஹீரோ மட்டும் செல் ஃபோனில் பேசறாரே? எப்படி?

3. போலீஸ் ட்ரெயினிங்க் நடக்கும்போது 50 மீட்டர் இடை வெளிவிட்டே வெளியாட்கள், அல்லது உறவினர்கள் பார்க்க முடியும், ஹீரோவின் அப்பா மட்டும் பக்கத்துலயே இருந்து பார்க்கறாரே? எப்படி?

4. பேஷண்ட்க்கு ஏதாவது சீரியஸ்னா நர்சுங்கதான் பதட்டமா இருப்பாங்க, இங்கேயும், அங்கேயும் ஓடுவாங்க. இதுல பெரிய டாக்டரே அப்படி பதட்டப்படறாரே? அவர் எப்படி ஆபரேஷன் செய்வார்?

5. ஆபரேஷன் பண்றதுக்கு முன்னாடி பேஷண்ட்டின் நெருங்கிய உறவினரிடன் கையெழுத்து வாங்க நர்ஸோ, அல்லது சின்ன டாக்டரோதான் வருவாங்க, இதுல பெரிய டாக்டரே பேடு, பேப்பர் தூக்கிட்டு பியூன் கணக்கா ஓடறாரே? ஏன்?

6. பஸ்ஸில் ஹீரோ, ஹீரோயின் ஒரே சீட்டில் போகும்போது மயில்சாமி தான் ஹீரோயின் பக்கம் அமர்வதாக ஆசைப்பட்டு கேட்டு ஹீரோயின் அருகே அமர்கிறார்... பின் துக்கம் கலைந்து எழுந்து பார்க்கும் ஹீரோயின் பயந்து மயில்சாமியை பின் சீட்டுக்கு விரட்றார்.. இப்போ நந்தா, பக்கத்துல மயில்சாமி.. ஆனா அடுத்த ஷாட்லயே ஹீரோ ஹீரோயின் பக்கம் இருக்காரு.. எப்டி?

7. ஆஃபீசர்ஸ் அனைவருக்கும் எங்கெங்கே டியூட்டி, எந்த ஊர் என உயர் அதிகாரி வாசிக்கும்போது இரியவர் எழுந்து எஸ் சார் என சொல்லி சல்யூட் வைக்க வேண்டும், ஆனால் எல்லோரும் விருந்துக்கு வந்தவங்க மாதிரி , அப்படியே உக்காந்து இருக்காங்களே? ஏன்?


http://flicksbuzz.com/Assets/Images/Tollywood/Tollywood-CelebPics/Tamil-actress-Poorna-Hot-stills.jpg

8. ஒரு டி எஸ் பிக்கு பதவி ஏற்றுக்கொண்ட 2 மாதங்கள் ஆகியும் தன் உயர் அதிகாரி வீடு தெரியாமல் போகுமா?அவர் எப்படி ஏமாற்றி வில்லனின் வீட்டுக்கு ஹீரோவை தன் வீடு என சொல்லி வர வைப்பார்?

9.  லாரிகள் 3ம் ஒரே ரெஜிஸ்ட்டரேஷன் நெம்பர் என ரெயிடின் போது தெரிகிறது... நந்தா அதை ஃபோட்டோ எடுக்க சொல்றார்... கோர்ட்ல இன்ஸ்பெக்டர் பல்டி சாட்சி அடிக்கறப்ப அந்த ஃபோட்டோ ஆதாரத்தை ஏன் காட்டலை?

10.  ஒரு சீன்ல கமிஷனர் ஆஃபீசர் பார்க்க நந்தாவும் ஜீப் டிரைவஎ சந்தானமும் போறாங்க, அப்போ சந்தானம் டீ வாங்கிட்டு வர்றார்.. டீ வாங்கிட்டு வர கமிஷனர் ஆஃபீஸ்ல உயாரும் இருக்க மாட்டாங்களா?

11.  சின்சியரான போலீஸ் ஆஃபீசரான நந்தா சோகமா இருக்கறப்ப ட்ரிங்க்ஸ் அடிக்கறாரே யூனிஃபார்மலயே? எபடி?

12.  ரிசைன் லெட்டரை கமிஷனரிடம் கொடுத்துட்டு நந்தா ரிட்டர்ன் ஆகறப்ப 3வது செகண்ட்லயே மினிஸ்டரும் , வில்லனுமான அழகம்பெருமாள் பின்னாலயே வந்து ஏன் ரிசைன் பண்ணீட்டிங்க? என கேட்கறாரே? அவருக்கு வேற பொழப்பே இல்லையா? அவ்வலவு குயிக்கா எப்படி வந்தார்?

13.  ஒரு சப் இன்ஸ்பெக்டருக்கு ஒரு மினிஸ்டரை கொலை செய்ய ரூ 20 கோடி ரொம்ப  ஓவர் ரேட்.. ( 2 கோடி போதாதா/)

14. அவ்வலவு முக்கியத்துவம் வாய்ந்த கொலைக்கான ஆதாரம் உள்ள சி டி யை ஒரு காப்பி எடுத்து வெச்சுக்கிட்டு கொடுக்க மாட்டாரா டி எஸ் பி? ( நம்மாளுங்க சாதா த்ரிஷா குளியல் பிட் டி வி டி வந்தப்ப 2 காப்பி பண்ணி வெச்சுக்கிட்டுத்தான் ரிட்டர்ன் தந்தாங்க)

http://www.chitramala.in/photogallery/d/553660-1/poorna-hot-stills.jpg

சாதாரணமா திறந்து இருக்கற கேட் கதவை சந்தானம் மூடி வெச்சு அப்புறம் தன் தலையால இடிச்சு திறப்பதிலிருந்து அவரோட காமெடி களை கட்டுது.. 

தீபாவளி வரை ஏ பி செண்ட்டர்களில் ஓடும்.. சி செண்ட்டர்களில் `10 நாட்கள்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - போலீஸ் ஸ்டோரி - ஆக்‌ஷன் ப்ரியர்கள் பார்க்கலாம்

 ஈரோடு ஸ்ரீலட்சுமியில் படம் பார்த்தேன்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifWu2rUWhCWPoP9IiOgEqU-CoE0jv3QSLzXjaKzsVjkYEB8h1OyXNd9XV7_8MDAAGEh-I_84If9jns9Je8pOfXjiDWFFVltlxoexG5amB_h8kEHKtfUt7G7cImHCQZ3k35SRArcR2c2DA/s1600/poorna_latest_new_hot_photos_008.jpg

டிஸ்கி - விமர்சனத்துக்கு சம்பந்தம் இல்லாத ஆனால் சொல்லியே ஆக வேண்டிய ஒரு மேட்டர்.. போஸ்டர் டிசைன் அப்ரூவல் பண்ணுனது யார்? பாடல் ஆசிரியர் தாமரையின் பெயர் தாமாரை என தவறாக பிரிண்ட் ஆகி உள்ளது.. எல்லா ஊர் போஸ்டரிலும்....!!!