Showing posts with label PONGAL. Show all posts
Showing posts with label PONGAL. Show all posts

Monday, January 16, 2012

பிரபல பதிவர்கள் கொண்டாடிய பொங்கல் - ஒரு ஜாலி சந்திப்பு

http://www.tamilspider.com/attachments/Resources/5000-10341-pongal.jpg 

பொங்கல் டைம்ல காலேஜ், ஸ்கூல், ஆபீசுல்லாம் எல்லாரும் சேர்ந்து சமத்துவ பொங்கல் வைப்பாங்க.அது போல பிளாக்கர்ஸ் நாமெல்லாம் சேர்ந்து பொங்கல்  வைக்கலாம்ன்னு ஒரு ஐடியா தோணுச்சு. சரின்னு எல்லா பிளாக்கர்சுக்கும்  குறிப்பிட்ட இடத்துல, டைம்ல எல்லாரும் ஒண்ணு கூடி பொங்கல் வைக்கலாம்ன்னு மெயில் அனுப்பப்பட்டு எல்லாரும் சரி வரேன்னு சொன்னாங்க. 
 
இது பொங்கல். சாப்பாடு, கோலம், சாமிக்கு படையல்ன்னு நிறைய வேலைகள்லாம் இருக்கு. சாமி விஷயம் என்பதால் பொறுப்பா செயல்படனுமேன்னு யோசிச்சு சில பெண் பதிவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு அவங்களும் வரோம்ன்னு ஒத்துக்கிட்டாங்க. 

இது தனி ஒருத்தரால மட்டும் முடியும் காரியமல்ல. அதனால், ஆளாளுக்கு தனித்தனியா வேலைகளை பிரிச்சு கொடுத்தாச்சு. கரும்பு, அரிசி, வெல்லம், நெய் போன்ற சமையல் பொருட்களை வாங்கும் பொறுப்பு  கருண், சௌந்தரை சார்ந்தது. பானை வாங்கும் பொறுப்பு மகேந்திரன்கிட்ட. வீடு வாசல்லாம் ஒட்டடை அடிச்சு சுத்தம் பண்ற பொறுப்பு மனோ, விக்கிக்கு. கோலம், பொங்கல் வைக்கும் இடத்தை அலங்காரம் பண்ணும் பொறுப்பு மகளிரை சார்ந்ததுன்னு பிரிச்சு கொடுத்தாச்சு.


பொங்கல் அன்று:

சீனா தானா ஐயா: என்ன இது. இன்னிக்கு பொங்கல் வைக்கலாம்ன்னு எல்லாரும் ஒண்ணு கூடியிருக்கோம். மணி ஏழாச்சு. பொங்கல் வைக்கும் வேலையை இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே. ஏம்மா ”மணிராஜ்” ராஜராஜேஸ்வரி நீங்க எடுத்து சொல்லக்கூடாதா? மளமளன்னு வேலையை ஆரம்பிங்கம்மா. கைல என்னதும்மா?


ராஜராஜேஸ்வரி: சார், இது என் உறவினர் ஒருத்தர் கொடுத்தனுப்பிய ஃபாரீன் கேமிரா. பொங்கல் வைக்குறதை படம் எடுத்து என் பிளாக்ல போடுவேன்.


சீனா தானா ஐயா: சரிங்கம்மா. வேலையை ஆரம்பிங்கம்மா, முதல்ல பொங்கல் வைக்க போற இடத்தை சுத்தம் பண்ணுங்கம்மா.


ராஜராஜேஸ்வரி: ஐயா, இங்கதான் இது பொங்கல், இதுவே வட நாட்டுலலாம் மகர சக்ராந்திகை. அதுமட்டுமில்லாம ஒரிசாவுல கொணார்க் சூரிய பகவான் கோவில்ல பொங்கல் இப்படியெல்லாம் கொண்டாட மாட்டாங்க.


சீனா தானா ஐயா: அம்மா! உங்க ஸ்தல சுற்றுலா மேட்டரை அப்புறம் பேசிக்கலாம். ஏம்மா காணாமல் போன கனவுகள்” ராஜி, இங்க வாம்மா. நல்ல அழகா கோலம் போடும்மா.

ராஜி: ஐயா, கோலம் போடுவது எப்படி, கோலம் போடுவதால் ஏற்படும் நன்மைகள், கோலப்பொடி, கலர்பொடி வாங்கும்போது கவனிப்பது எப்படின்னு ஒரு பதிவு போட்டிருக்கேன். 

சீனா தானா ஐயா: ஓக்கே.அதை பார்த்து யாரையாவது கோலம் போட சொல்றேன்.  ஏம்மா ”வானம் வெளித்த பின்னும், உப்பு மட சந்தி”ஹேமா! பொங்கல் அதுவுமா  நீ என்ன யோசனைல  இருக்கே? வாம்மா வந்து கோலம் போடு.


ஹேமா: நான் இங்க போடும் இதே கோலத்தையே அங்க போய் போட்டுக்கலாமா? இல்லை அங்க வேற கோலத்தை போடலாமான்னு யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்.


சீனா தானா ஐயா:  உன் அவஸ்தை உனக்கு. சரிம்மா ”காகித பூக்கள்”ஏஞ்சலின் பொங்கல் மேடை, சாமிக்கு படையல் போடும் இடத்தை கொஞ்சம் அலங்காரம் பண்ணும்மா. 

http://2.bp.blogspot.com/-sfkoOhIpsBE/TwQ47TAi2CI/AAAAAAAAAUE/87X6637ygAo/s1600/Bhogi+Pongal+festival.jpg


ஏஞ்சலின்: சரிங்க ஐயா, அசத்திடுறேன். அதுக்கு தேவையான மெட்டீரியல் சொல்றேன் குறிச்சுக்குறீங்களா?


சீனா தானா ஐயா: நீ குறிச்சு குடுத்து இனிமே வாங்கி வந்து நீ செஞ்சு அலங்காரம் பண்றதுக்குள்ள காணும் பொங்கலே வந்துடும். ஏம்மா ”ஷாதிகா” ஸாதிகா, மேனகா நீங்க ரெண்டுபெரும் ஏம்மா அடிச்சுக்குறிங்க.


ஷாதிகா: ஐயா,**** பிளாக்குல *** அக்கா பொங்கல் குழம்புல மிளகு சேர்க்க கூடாதுன்னு சொல்லியிருகாங்க. ஆனால், சசிகா மேனகா மிளகு போட்டே ஆகனும்ன்னு அடம் பிடிக்குறாங்க.


மேனகா: ஐயா, மிளகு போட்டால் ஜீரணத்துக்கு நல்லது. பொங்கல் டைம் என்பதால், கரும்பு சாப்பிட்டு வறட்டு இருமல் வரும் அதனால மிளகு சேர்த்துக்கிட்டால் இருமல் வராதுன்னு *** பிளாக்குல ***அக்கா சொல்லியிருக்காங்க. 

இன்னிக்கு என்னவோ மகளிர் அணிதான்  சொதப்பிட்டிங்க. ஆண்கள் அணி என்ன கூத்து பண்றாங்கன்னு போய் பார்க்குறேன்.


சீனா தானா ஐயா: ”நாஞ்சில் மனோ”மனோ ஒட்டடை அடிக்காம லேப்டாப்புல என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?

மனோ: சார் பஹ்ரைன் ஓட்டல்ல ஒருமுறை இதுப்போல பொங்கல் கொண்டாடி இருக்கோம். அப்போ கேரள சேச்சிகள்லாம்கூட கலந்துக்கிட்டாங்க. 

விக்கி: டேய் உன் சுய புராணத்தை நிறுத்துடா நாதாரி.

மனோ: நீ முதல்ல அடங்குடா இல்லாட்டி அருவா எடுத்து ஒரே போடு போட்டுடுவேன். ஐயா இந்த விக்கி தக்காளி நைட் அடிச்ச மப்பு தெளியாம, தண்ணிக்கு பதில் அந்த தண்ணியை ஊத்தி இடத்தை கழுவி சுத்தம் பண்ணும் கூத்தை கேளுங்க.

விக்கி: இவன் தான் இவ்வளவு நேரமும் பஹ்ரைன்ல பொங்கல் அன்னிக்கு கேரள சேச்சிகள் கூட ஆட்டம் போட்டத என்கிட்ட சொல்லி கடுப்பேத்திக்கிட்டு இருந்தான். 

சீனா தானா ஐயா:  ஐயோ ஐயோ ஏன்தான் ஆளாளுக்கு நல்ல நாள் அதுவுமா இப்படி அலப்பறையை குடுக்குறீங்களோ? ஏம்பா தமிழ்வாசி பிரகாஷ் வந்தே மாதரம் சசி, வீடு சுரேஷ் நீங்க மூணு பேரும் அப்படி என்ன அங்கே டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருக்கிங்க. 

பிரகாஷ்: பொங்கல் நல்ல படியா பொங்கி வர மாதிரி javal ஒரு புரோகிராம் இருக்கு அது எப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தேன் ஐயா,

சசிக்குமார்: பிரகாஷ் சொன்ன மாதிரி புரோகிராம் பண்ணினால் பன்கலின் ருசியும், நிறமும் மாறிடும் அபாயம் இருக்கு. அதுக்கு மாற்று வழி என்னன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கோம் 

சுரேஷ்: ஐயா, அதுக்கு javaவைவிட வேற ஒரு சாஃப்ட்வேர் போட்டு செய்தால் ருசி, நிறம் மாறாது. நம்பிக்கை இருந்தால் என் பிளாக்குல அது பற்றி ஒரு பதிவே போட்டிருக்கேன் ஐயா.

சீனா தானா ஐயா:  என்னது பொங்கல் வைக்க சாஃப்ட்வேரா? ஒருவேளை சமத்துவ பொங்கல் வைக்கலாம்ன்னு ஆசைப்பட்டது தப்போ? பானை வாங்க போன ”வசந்த மண்டபம்”மகேந்திரனும், ”ஆணிவேர்”சூர்யஜீவாவும் எங்கே? 

http://cafehindu.com/files/pongal_757052816.jpeg


மனோ: அதோ வராங்க ஐயா, ஆனால் வெறுங்கையோடத்தான் வராங்க. எலேய் பானை எங்கலேய்


மகேந்திரன்- அன்பு நிறை மனோ,

மனோ: நாசமா போச்சி, இப்போ உன் பிளாக் கமெண்டுன்னு நினைச்சியா? ஒழுங்கா பேசு.

மகேந்திரன்: நான் பானை வாங்க போன இடத்துல குயவன்கிட்ட சூர்யஜீவா சண்டை போட்டு பெரிய அடிதடியாகி இந்த ஏரியாவுல யாருக்கிட்டயுமே பானைவாங்க கூடாதுன்னு என்னை சூர்ய ஜீவா கூட்டிக்கிடு வந்துட்டாரு. 


சீனா தானா ஐயா:  என்ன ஆச்சு? மனோதான் கோவக்காரன் அருவா கத்திலாம் தூக்குறான்னு பார்த்தால் நீயுமா? என்ன ஆச்சுன்னு சொல்லு சூர்யா?

சூர்யஜீவா: ஐயா, நான் பாட்டுக்கு பானை வாங்கிட்டு இருந்தேன். அப்போ குயவன் கைல சின்னதா ஒரு கொப்பளம்.என்னன்னு கேட்டேன். அது என்னன்னு தெரியலை. அது சாதாரண கட்டி னுசொன்னான். அவனை தோண்டி துருவி விசாரித்ததுல பானை செய்ய தேவையான மண்ணு கூடங்குளத்துல இருந்துதான் வருதுன்னு சொன்னான். அதோட விளைவுதான் இது, நீ போய் இந்த லிங்குல பார்த்து தெரிஞ்சுக்கோன்னு சொன்னேன்.  நானே  பானை செஞ்சு அஞ்சுக்கும் பத்துக்கும் விக்குறேன் என்கிட்ட ஏது கம்ப்யூட்டரும் நெட்டும் என்ன நக்கல் பண்றியான்னு அந்த ஏரியாவே அடிக்க வந்துட்டுது. கூடங்குளத்துல இருந்து வந்த மண் என்பதால் ஏன் ரிஸ்க்குன்னு நான் பானையே வாங்காம வந்துட்டேன். 


சீனா தானா ஐயா: இன்னிக்கு பொங்கல் வச்ச மாதிரிதான் அரிசி, வெல்லம் வாங்க போன ”வேடந்தாங்கல்” கருணும் ”கவிதைவீதி” சௌந்தரும், “உணவு உலகம்: சங்கரலிங்கமும் இன்னும் காணோம். ஏம்பா “நல்ல நேர” சதீஷ் அவங்களுக்கு போன் போட்டு பாரு,

சதீஷ்: ஐயா இன்னிக்கு நவமி. அதனால் என் போனை நான் யூஸ் பண்றதில்லை.

சீனா தானா ஐயா:  சரி, யார்கிட்டயாவது செல்லை வாங்கி அவனுங்களுக்கு போன் போடு.

சதீஷ்: இப்போ குளிகை ஐயா, அதனால நான் எந்த வேலையும் செய்ய மாட்டேன்.

மனோ: அப்போ நீ...

விக்கி: நல்ல நாள் அதுவுமா, சதீஷை திட்டி ஏழரையை கூட்டாதே.

சௌந்தர்: போன்லாம் போடாதீங்க. நாங்களே வந்திட்டோம்.

சீனா தானா ஐயா:  ஏம்பா சௌந்தர்  இந்த அரிசி, வெல்லம், ஏலக்காய், நெய் வாங்கி வர உங்களுக்கு இவ்வளவு நேரமா?

கருண்: ஆபீசர் சாரலதான் லேட்.அவர்தான் எந்த பொருளை எடுத்தாலும் கலப்படமிருக்கா? சுத்தமானதான்னு டெஸ்ட் பண்ணி பார்த்து பார்த்து வாங்குனார். 

சௌந்தர்: கிராமத்து தோட்டத்துல விளைஞ்சு வரும் காய்கறிகள், கறிவேப்பிலை கொத்தமல்லி க்கு கூட தர சான்றிதழ் இருக்கான்னு கடைக்காரனை கேட்டு அவனை தலை கிறுகிறுக்க வைத்தாரே அந்த கொடுமை சொல்லேன்.

ஆபீசர்: நீ மட்டும் ஒழுங்கா? ஒரு போஸ்டரையும் விடாம பார்த்து, அது எப்போ ரிலீஸ் யார் நடிகர்கள், எந்த தியேட்டர்ன்னு பார்த்துக்கிட்டே மெதுவா நடந்து வந்தே.  இந்த கருணோ ஒரு பஸ்ஸை விடலை, கண்ணே மணியே, சக்கரமேன்னு கவிதை எழுத ஆரம்பிச்சுடுறான்.


கருண்: டேய் மாப்ள “ராஜபாட்ட” ராஜா, நீ  என்ன யோசனை பண்ணிக்கிட்டு இருக்கே.

ராஜா: சூர்யா, அஜீத், விஜய்லாம் எப்படி பொங்கல் வச்சாங்கன்னு நாளைக்கு ஃபேஸ்புக்குல வருமா? அது வச்சு எப்படி பதிவை தேத்தலாம்ன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.


பிரகாஷ்: அடங்கோ, விஜய் பேரை சொல்லிட்டியா? இந்த பொங்கல் நல்லபடியா போன மாதிரிதான்.ஏண்டா மாப்பிள்ளை விஜய் பேரை சொன்னே?


மனோ: இங்க இம்புட்டு கலவரம் நடந்துக்கிட்டு இருக்கு. இந்த சிபி மூதேவி மட்டும் ஏன் மூஞ்சை தூக்கி வச்சுக்கிட்டு இருக்கான்?
டேய் அண்ணா உனக்கென்னடா கவலை? ஏன் உம்முன்னு இருக்கே.

சிபி: இன்னிக்கு, தமிழ்ல 4 படம், இங்கிலீஷ் ல 2 படம், இந்தி ல 1 ஒரு படம்ன்னு ரிலீஸ்.

விக்கி:கில்மா படம்?

சிபி:கில்மா படம் ஏதும் ரிலீஸ் ஆகலை.

விக்கி: டேய் நாதாரி அதான் உன் கவலையா ங்கொய்யால 

சிபி: ஹி ஹி அதில்லை தம்பி.  இன்னிக்கு ரிலீசாகுற படத்தையெல்லாம் பார்க்க முடியாம உங்ககூட பொங்கல் கொண்டாட வேண்டியதா போச்சே அதான் என் கவலை.
http://www.vikatan.com/news/images/onam.jpg

எல்லாரும் கோரஸாக, என்னது எங்ககூட பொங்கல் கொண்டாடுறதுதான் உங்க கவலையா?ன்னு கரும்பு, விறகு கட்டைன்னு கைக்கு கிடைச்சதை தூக்கிக்கிட்டு அடிக்க ஓடி வர, சிபி அதிலிருந்து தப்பிக்க ஓடன்னு பொங்கல் இனிதே முடிந்தது.

Wednesday, January 11, 2012

பொங்கல் ரிலீஸ் படங்கள் 6- ஒரு முன்னோட்ட விமர்சனம்

பொங்கலுக்கு முதல்ல 2 படம்தான்னு சொன்னாங்க.. இப்போ 4 தமிழ் படங்கள், 2 ஹிந்தி, ஒரு ஆங்கிலம், ஒரு தெலுங்கு மொத்தம் 8 படங்கள் ரிலீஸ் ஆகுது.. இதுல சந்தேகமே இல்லாம முதல் இடத்துல இருக்கறது நண்பன்..தான்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnJxVL_hyiR7bnazeC8ZdQ7pV_8ghJe4DDCGqzrPA5g2qAycTnRhRCGkO_3FLzx6OJAkAtsmWhmGEJ6tscXQ1KcrHYm0M9mrO_I-cC3Ax1_TdAxE_3uj1d3ErpNC1K8VXOo-Q5sLPVKaU/s1600/Nanban+movie+stills+nanban.jpg
1. நண்பன் - ஹிந்தில சூப்பர் ஹிட் ஆன 3 இடியட்ஸ் ரீமேக் ஆகுதுன்னு நியூஸ் வந்ததுமே பல கருத்துக்கள்..இதுவரை ஷங்கர்  சொந்தக்கதையைத்தான் எடுத்துட்டு வந்தார்.. ரீ மேக் அவருக்கு புதுசு.. விஜய்க்கு அது பழகுனது.. ஆனாலும் விஜய்க்கு ஷங்கர் டைரக்‌ஷன் புதுசு.. அவர் அப்பா எஸ் ஏ சந்திர சேகரிடம் அசிஸ்டெண்ட்டாக பணி புரிந்தவராக இருந்தாலும் ஜெண்டில்மேனுக்குப்பிறகு ஷங்கரின் ஸ்டார் வேல்யூ உயர்ந்தது.. அதன் பின் விஜய் ஷங்கர் டைரக்‌ஷனில் படம் பண்ணவே இல்லை.. 

த்ரீ இடியட்ஸ்’ஸில் அமீர்கானும், மாதவனும் இணைந்து நடித்திருந்தார்கள்.‘நண்பன்’னில் மாதவனுக்குப் பதிலாக ஸ்ரீகாந்த் நடிக்கிறார். இன்னொரு நண்பனாக ஜீவா. கதாநாயகியான இலியானாவின் தந்தையாக பேராசிரியர் வேடத்தில் சத்யராஜ் வருகிறார்.

 சி.பி - ஷங்கர் படத்துல ஒரே ஒரு ஹீரோயின் தானா? சார், பிரம்மாண்டம்னா எல்லாத்துலயும் இருக்க வேணாமா?

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் நண்பன். சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், இலியானா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார்.

நண்பன் படத்தின் பாடல்கள் குறித்தும் படம் குறித்தும் சில தகவல்கள் :( குமுதம் மற்றும் பலகனி)

* ஒரு பாடலுக்கு HARMONY பாடகர்கள் அனைவரது வாய்களில் சரியான அளவு தண்ணீரை வைத்துக் கொண்டு பாட வைத்து இருக்கிறார் ஹாரிஸ்.


சி.பி - அவங்களுக்கெல்லாம்  வாய்ல தமிழ் நல்லா வருமா?ன்னு கேட்டு பாருங்க முதல்ல..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglZexZx5IRjq6fHMhQTEiivQIU92wVXkMb2dtKbW8JtfTemPQjM2Hqz_FckVfa0_BDlWqNApK5k-bdKSuvFIX1m1eC5LE4IGWRCApQr1F_ECSIRRYg2HruV3bTKj_N0YJm01miwPH0i8U/s1600/nanban-movie-stills-photos-pics-images-3.jpg


* படப்பிடிப்பு எப்போதுமே கலகலப்பாக நடந்ததற்கு காரணம் ஜீவா தான். " ஷாட் ரெடி ! " என்றவுடன் அந்த கதாபாத்திரமாகவே ஆகிவிடுவாராம் ஜீவா. கலகலப்பில் விஜய்யை கூட ஜீவா விட்டுவைக்கவில்லை என்பது தான் இதில் ஹைலைட்.

சி.பி - விஜய் ரிசர்வ் டைப்பாச்சே? ஜீவா தானே ஜோக் அடிச்சு தானே சிரிச்சுக்கிட்டாத்தான் உண்டு.. ஹி ஹி 


* படக்குழுவினர் அனைவருமே கூறுவது இயக்குனர் ஷங்கருக்குள் ஒரு அற்புதமான நடிகர் இருக்கிறார் என்பது தான். எந்த ஒரு சீனாக இருந்தாலும் அதில் எப்படி நடிக்க வேண்டும் என்று அப்படியே நடித்து காட்டுவது ஷங்கர் ஸ்பெஷல்.

சி.பி - ஓஹோ, அவர் படத்துல டூயட் சீன்ஸ் எல்லாம் ரொம்ப நெருக்கமா வர காரணம் அதானா? காதலன் படத்துல முக்காலா முக்காபலா பாட்டுக்கு ஷங்கர் எப்படி நடிச்சு காட்டி இருப்பார்னு நினைச்சா சிரிப்பா வருது.. ஹி ஹி  


* படத்தின் விஜய்யின் பெயர் பஞ்சவன் பாரிவேலு, 

சி.பி - பஞ்ச் அவன் பாரிவேலு?? ( பாரி வேலு = போரு ஆளு?? ஹி ஹி )




ஜீவாவின் பெயர் சேவற்கொடி செந்தில், ஸ்ரீகாந்தின் பெயர் வெங்கட்ராம கிருஷ்ணன், இலியானாவின் பெயர் ரியா, சத்யராஜின் பெயர் விருமாண்டி சந்தனம்.

* HEART-ல BATTERY என்ற பாடலில் வரும் வித்தியாசமான இசை அனைத்துமே மக்களிடம் இருந்து RECORD செய்து பாட்டில் இணைத்து இருக்கிறார்கள்.

சி.பி - ஹி ஹி அப்போ அதுவும் சொந்த சரக்கில்லை? 

http://www.a2zpictures.com/wp-content/uploads/2011/04/ileana-nanban-movie-hot-stills.jpg


* " ஏ.ஆர்.ரஹ்மானிடம் அவர் அப்பா நீ பெரிய கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்று சொல்லி இருந்தாலும், சச்சினிடம் அவரது அப்பா நீ பெரிய இசையமைப்பாளராக வர வேண்டும் என்று சொல்லி இருந்தாலும் என்ன நடந்து இருக்கும் சொல்லு " என்பது போன்ற நிறைய சுளீர் வசனங்கள் இருக்கிறது நண்பன் படத்தில்.

சி.பி - உங்க ஊர்ல இதுதான் சுளீர் வசனங்களா? அவ்வ்வ்வ்வ்வ் 

 ஃபைனல் கமெண்ட் - இந்தப்படம் ஷங்கர்-ன் வழக்கமான படமாக இல்லாமல் காமெடி படமாக இருக்கும், அதிக எதிர்பார்ப்பு , பில்டப் இல்லாமல் வருவதால் ஹிட் ஆக வாய்ப்புகள் அதிகம்.. 

ஈரோடு அன்னபூரணி, ராயல், ஸ்ரீசண்டிகாம் ஸ்ரீநிவாசா  ஆகிய 4 தியேட்டர்கள் அறிவிக்கப்பட்டிருக்கு, அது போக  இன்னும் 2 தியேட்டர்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5n_C5YeasFywF-83kUq5Msn-klrwPf2wWWQifNNujZV1E2CBjf1Lzd8peNulWNc1CR37EhBXLikhcM6il7K62bGQnOGRkDJ7Iu1E-ibyf-MbifckEK2B_U98h1JmVv3o2GenxQNGuYjE/s1600/vettai.jpg

2. வேட்டை -பையா" படத்தை தொடர்ந்து டைரக்டர் லிங்குசாமி அடுத்து இயக்கும் படம் "வேட்டை". ஆர்யா, மாதவன், அமலா பால், சமீரா ரெட்டி ஆகியோர் நடிப்பில் ஆக்ஷன் கலந்த அதிரடி படமாக உருவாகி வரும் இப்படத்தை ஆரம்பத்தில் க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில் துரை தயாநிதி தயாரிப்பதாக இருந்தது. பின்னர் சிலபல பிரச்சனைகளால் அவர் விலக தயாரிப்பு பொறுப்பை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் ஏற்றது. லிங்குசாமியுடன் சுபாஷ் சந்திரபோஸ் சேர்ந்து தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

அந்த கால எம் ஜி ஆர் கால கதை .. ஒரே வீட்டில் அண்ணன் தம்பியாக இருக்கும் ஆர்யா , மாதவன் இருவரில் ஒருவர் போலீஸ் , ஆனா எங்க வீட்டு பிள்ளை எம் ஜி ஆர் போல் பயந்த சுபாவம் உள்ளவர். இன்னொருவர் வேலை இல்லாத வெட்டாஃபீஸ், அவர் செய்ய வேண்டிய வேலையை எல்லாம் இவர் செய்ய ஏற்படும் காமெடி குழப்பங்கள் படம்.. 

மேலே சொன்ன கதை ஒரு உதவி இயக்குநர் சொன்னது.. பார்ப்போம்..ஈரோடு அபிராமி, ஆனூர் ஆகிய இரு தியேட்டர்களில் ரிலீஸ்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGONZXpoA5e8UdNXzHTmuKctZ9g6JaJdWESXR7o8phUtdP1fP3jEqotbJClf1frdtO10GbQcn_VmjOb0EV34L3_n7_QZMNXlaEnlqXzW80FGdi5yqyMLWDD1VWSi6cZuZjdXyzUq95z26t/s1600/ramarajan_medhai_movie_wallpapers.jpg
3. மேதை - மக்கள் நாயகன், லிப்ஸ்டிக் நாயகன், டவுசர் நாயகன், பசு நேசன், நளினியின் முன்னாள் கணவர் திரு ராமராஜன் அவர்கள் நடிச்ச மேதை ரிலீஸ் ஆகுது.. யூ டியூப்ல ஒரு  ஃபைட் சீன் பார்த்டேன்.. ச்சே கொன்னுட்டார்..:))ஒரே பஞ்ச். 14 பேர் தொப் தொப்னு விழறாங்க.. இந்தப்படத்தை சத்தியமா நான் பார்க்க மாட்டேன்.. பவர் ஸ்டார், ராம்ராஜன் படங்கள்னா எனக்கு அலர்ஜி ஹி ஹி , ஈரோடு ஸ்டாரில் ரிலீஸ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKismPB-uMM836gYM6Bust5Eap3Mhfa6Zb_AKwcwMqMAwDutKZT3u8HIDsVlYhnoo8RHa_me49VvfolKIdLVIMx5CXsO01yciu9OOdUsHc0qfe2u5Gt3ewuaEaWEPxuvqAVjJ08CIofkA/s320/Kollaikaran+Songs+MP3+Free+Download++Tamil+Songs+Movie+mp3+Free+In+Single+File+Mediafire+Link+FRee+Download.jpg
4. கொள்ளைக்காரன் - மைனா விதார்த் நடித்து வெளி வர உள்ள படம் கொள்ளைக்காரன், படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே வேட்டை, நண்பன்  என்று இரண்டு படங்கள் மட்டுமே பொங்கலுக்கு ரிலிஸ் ஆகும் நிலையில் இப்போது புதிய வரவாக கொள்ளைக்காரனும் சேர்ந்துள்ளது.



பிரசாத் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தினர் தயாரிக்கும் கொள்ளைக்காரன் ‌படத்தில் தமிழ்செல்வன் இயக்கி உள்ளார். இவர் சீனு ராமசாமியிடம் அசோஷியேட் டைரக்டராக பணியாற்றியவர் ஆவார். இப்படத்தில் விதார்த், சஞ்சிதா ஷெட்டி, ரவிசங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் ஏ.எல்.ஜோகன் இசையில் உருவாக்கப்பட்டுள்ளன.ஈரோட்டில் இன்னும் தியேட்டர்ஸ் புக் ஆகலை

http://kollywoodz.com/wp-content/uploads/2011/12/Kollaikaran-Audio-Release-Stills02.jpg


சிறுசிறு தவறுகள் செய்து, பின்னர் திருந்தி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் இளைஞனை பற்றிய கூறுவதே கொள்ளைக்காரனின் கதையாகும். இப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்க்கையை நகைச்சுவை கலந்த காதலுடன் கொள்ளைக்காரன் படம் கூறுவதாக டைரக்டர் தமிழ்ச்செல்வன் கூறி உள்ளார்.  

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4Tm9gsZAlWjuhQbqtLoJApxTeX9UUWMSC7NtzcwENPlVlVRztesKEVoOn3BWhr0Eom5Ma1Lw73vP0CxhJ4xN1MOgCMt7U17o3y7AKkMSfuqREDldbhVwNqKMf5w83asSUvnKBaeALRqU/s1600/Business_Man_new_Wallpapers+%25281%2529.jpg


5. BUSINESS MAN -போக்கிரி, தூக்குடு போன்ற மெகா ஹிட் கொடுத்த மகேஷ் நடிச்ச இந்தபபடமும் கேங்க்ஸ்டார் கதைதானாம்.. ஆனாலும் திரைக்கதை செம ஸ்பீடுன்னு சொல்றாங்க.. ஜோடி காஜல் அகர்வால்.. ஆல்ரெடி அவங்க நடிச்ச மாவீரன்ல காட்டு காட்டுனு காட்டி இருந்தாங்க , நடிப்பைத்தான்.. அதே போல் இந்தப்படமும் இருக்கும்னு எதிர்பார்க்கலாம்..ஈரோட்டில் இன்னும் தியேட்டர்ஸ் புக் ஆகலை

http://www.filmics.com/telugu/images/stories/news/December/17-12-11/The_Business-Man_Movie_Preview.jpga

டிஸ்கி -1  மீதி 3 படங்கள் விபரம் 14ந்தேதிதான் தெரியும்.. 

டிஸ்கி 2 - நமீதா போட்டிருக்கற டிரஸ் டிசைன்ல கொங்கு மாவட்டகிராமத்துபெண்கள் 1985களில் பாவாடை போடுவாங்க.. அந்த டிசைனை எல்லாரும் கிண்டல் அடிப்பாங்க.. சரியான பட்டறைன்னு அந்த டிசைனுக்கு இளைஞர்கள் வட்டாரத்துல பேரு.. இப்போ இவங்க உடுத்துனாங்காட்டி ஃபேஷன் ஆகிடுச்சு போல அவ்வ்வ்

டிஸ்கி 3.

எனது 1000வது பதிவு - பதிவுலகம் -நண்பர்கள் -ஒரு பார்வை

Friday, January 14, 2011

ஆடுகளம் - சினிமா விமர்சனம்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBvdyTNlnjXWsGlmtKE5kcE_ETgnL5I2GYY3d0eFmwkvvmk_Zuos6hSw1PSdoTH9MQtUNormbwxQTCZB7CIWEJrjoGziK8om7X-OaA0wKbB-7M7cbIM-XGuw-dfsl49srDXwsrq6eiM0Bu/s640/6.jpg
சேவல் சண்டையை மையமாக வைத்து ஒரு கிராமியக்கதையை இவ்வளவு சுவராஸ்யமாய் எடுக்க முடியும் என்று நிரூபித்ததற்காகவே இயக்குநருக்கு ஒரு ஷொட்டு.பொல்லாதவன் படத்துக்குப்பிறகு இயக்குநர் வெற்றி மாறனுக்கு கிடைத்த பொங்கல் ஹிட்டு.

மனிதனுக்கு கிடைக்கும் வெற்றி,போதையைக்கொடுத்து அதை தக்க வைத்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் அவனை செய்ய வைக்கும்  என்ற உளவியல் தத்துவத்தை அட்டகாசமாய் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

ரெண்டே முக்கால் மணி நேரம் ஓடும் படத்தில் 30 நிமிடம் சேவல் சண்டையை திரில்லிங்காய் குடுத்திருப்பது புதுசு..படத்தில் தனுஷ் மதுரை வட்டார வழக்குத்தமிழ் பேசி ஜெயித்திருக்கிறார்.ஹீரோயின் புதுமுகம்.கிட்டத்தட்ட பிரியாமணியின் சாயல் (குரல் மட்டும் அதே மாதிரி கட்டைக்குரல்)நல்ல ஃபிகர்தான்.ஆங்கிலோ இண்டியன் மாதிரி காண்பித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.
http://www.koodal.com/cinema/koodal_reel/2010/Aadukalam-reel-27.jpg
அப்படி காண்பித்ததால் தேவை இல்லாமல் ஆங்கில வசனங்கள் பேச வைத்தது கிராமியக்கதைக்கு அந்நியம் சேர்க்கிறது.ஹீரோயினை தன்னை லவ் பண்ணுவதாக 2 பேர் சொல்ல ,ஏம்மா.. நீ யாரை லவ் பண்றே? என கேட்க ஹீரோயின் ஹீரோவைக் கை காண்பிக்கையில் தனுஷின் ஃபேஸ் எக்ஸ்பிரஸ்ஸன்ஸ் அருமை.

அந்த ஃப்ளோவில் வரும் டப்பாங்குத்துப்பாட்டு இசை அமைப்பாளர்,நடன இயக்குநர்,இயக்குநர் அனைவரும் கலக்கி எடுத்த கலக்கல் காக்டெயில் நடனம்.

அதே ஹீரோயின்  அவன் என்னை உன்னை விட அதிகமா டார்ச்சர் பண்ணுனான்,அதனாலதான் உன்னை லவ் பண்றதா பொய் சொன்னேன் என பல்டி அடிக்கும்போது தனுஷின் சோக நடிப்பும் கன கச்சிதம்.


படத்தின் கதைக்களன் சேவல் சண்டைதான் என்பதையும்,கதை நடப்பது கிராமத்தில் தான் என்பதையும் அடிக்கடி நினைவுபடுத்த சேவலின் கொக்கரக்கோ சத்தத்தை அடிக்கடி யூஸ் பண்ணி இருப்பதும் அவசியமே இல்லாதது.

மனிதனுக்கு பந்தயம் ,போட்டிகளில்,சூதாட்டத்தில் ஏற்படும் வெறியை நிதர்சனமாய் காண்பித்து பார்வையாளர்களுக்கும் அந்த வெறியை ஏற்படுத்துவதில் இயக்குநருக்கு வெற்றியே..

சேவல் சண்டையை கிராஃபிக்ஸில் எடுத்தது தெரியாத அளவு ஒளிப்பதிவாளர் பாடுபட்டு அழகாக சமாளித்து இருக்கிறார்.படத்தில் வில்லனாக வருபவர் உண்மையில் ஒரு கவிஞர்.தாத்தா மாதிரி இருக்கும் அவருக்கு அவரை விட 30 வயது இளைய பெண் காதலித்து மனைவி ஆனவர் என்பது நம்பும்படி இல்லை.

அதே போல் தனது மனைவியை அவர் சந்தேகப்படும் சீனும் எடுபடவில்லை.ஆனால் அந்த சீனில் மனைவியாக நடிப்பவரின் பிரமாதமான நடிப்பு மைனசை போக்கி விட்டது.


வசனகர்த்தாவாக இயக்குநர் ஜொலித்த இடங்கள்

1. இப்படியே தனியா பேசிட்டு இரு, சீக்கிரம் மெண்ட்டல் ஆகிடுவே...

சரி சரி விடம்மா.. உன் பையன் உன்னை மாதிரிதானே இருப்பான்..?

2. சும்மா ஜாலிக்காகத்தான் அவ கூட சுத்துனேன்.நேத்துதான் அவங்கப்பனைப்பார்த்தேன்,இனி நாமதான் அவளை கவனமா ,நல்லப்டியா பாத்துக்கோணும்னு அப்பவே முடிவு பண்ணீட்டேன்.


3. வேட்டைக்காரன் சாவு வீரமாத்தான் இருக்கோணும்,சாவே வந்தாலும் களத்துக்கு வெளில வந்த பிறகுதான் சாகனும்.

4.எனக்கு ஒரு பிரச்சனைன்னு வந்தப்ப என் கூடவே 10..15 வருஷமா இருந்த யாரும் ஹெல்ப் பண்ணலை,அவந்தான் உதவி செஞ்சான்..அவன் கெட்டவனா இருந்தா என்ன?

5. மனுஷனுக்கு ஒரு பிரச்சனை வரும்போது அவன் சவுகர்யத்துக்கு மாறிடறான்,அவனோட அடிப்படை  குணங்கள் மாறிடுது.

6. போலீஸ்காரன் புத்தி திருட்டு புத்தின்னு நிரூபிச்சுட்டியே,....

7. எனக்கு ரூ 2000 அவசரமாத்தேவைப்படுது.

சரி.. இந்தா..

ஓக்கே.என்னை லவ் பண்றதா சொல்லி ஏமாத்துனியே.. அதுக்கு ஃபைனா இதை நினைச்சுக்கோ...

8. தோத்திடுவோம்னு பயமா?

பயமா? எனக்கா? நாங்க எல்லாம் சுனாமிலயே ஸ்விம்மிங்க் பண்ற ஆளுங்க

(இந்த வசன பஞ்ச்சுக்கு தியேட்டரில் இருந்த தனுஷ் ரசிகர்கள் 22 பேரும் கை தட்டுனாங்க)

9. ஏய்.. எதுக்காக இப்போ என் கையை பிடிச்சே?

அது வந்து... சேஃப்டியா கூட்டிட்டு போறதா வாக்கு குடுத்துட்டேன்,, அதான்..

10. இப்போ நான் யாருமே இல்லாத தனியனாய் ஆகிட்டேன்,அதிர்ஷ்டத்துல ஜெயிச்சவன் எல்லாம் என்னைப்பார்த்து எள்ளி நகையாடறான்.

11.எங்கப்பாவோட தோத்த முகத்தை என்னால பாக்க முடியல.

12,  சந்தோஷமா இருக்கறதுக்கு காசு ,பணம்,ஸ்டேட்டஸ் எதுவும் தேவை இல்லைன்னு உன்னைப்பார்த்த பிறகுதான் தெரிஞ்சுக்கிட்டேன்.

13.  என்ன ..தயங்கறே..கேளு..

வந்து.. வந்து.. ஒரு கிஸ் அடிச்சுக்கிட்டா?

14.இத்தனை  நாளா நீ இங்கிலீஷ்ல பேசுனது புரியல.. இப்போ நீ தமிழ்ல பேசுறதும் புரியலயே..அது ஏன்?

15. என் பையன் உருப்பட்டுடுவான்.. என்னை சாகற வரை சந்தோஷமா வெச்சுக்குவான்னு நினைச்சேன்,, ம் ம் 

16. எங்கம்மா உயிரோட இருந்தவரை அவங்க எவ்வளவு முக்கியமானவங்கன்னு எனக்கு தெரியாமயே போச்சு..

17. மத்த ஜாதிப்பையனோட ஓடிப்போன பொண்ணு கடைசி வரை சந்தோஷமா இருந்ததை சரித்திரம் இதுவரை பார்த்ததில்லை..

18. அப்பன்கறது யாரு? ஆத்தா கூட படுத்து பிள்ளை பெத்துக்கறது மட்டும் இல்ல..பிள்ளையோட கையைபிடிச்சுக்கூட்டிட்டுப்போய் இதுதான் உலகம்னு காண்பிக்கனும்,

19. அண்ணே... ஏண்ணே இப்படிப்பண்ணீட்டே..?நீ பண்றது எனக்குப்பிடிக்கலை..செத்துப்போன்னு சொல்லி இருந்தாக்கூட செத்துப்போயிருப்பேனே....ஏன் நம்பிக்கை துரோகம் பண்ணுனே..

20. நாங்க எல்லாம் அம்பானிக்கே அட்வைஸ் தர்றவங்க..நமக்கே ஐடியாவா? 



இயக்குநர் சறுக்கிய இடங்கள்


1.ஹீரோ பந்தயத்தில் ரூ 10 லட்சம் ஜெயித்த பிறகு ஹீரோயின் லவ்வுக்கு ஓக்கே சொல்வது மாதிரி காட்சி வைத்து பெண்கள் எப்பவும் சேஃப்டி சைடு என்று தவறாக சொல்லப்படும் கருத்துக்கு ஆமாம் சாமி போட்டிருக்கிறார்.

2. என்னதான் கிராமங்களில் சேவல் சண்டை ஃபேமஸ் என்றாலும் ,சேவல் டோர்ணமெண்ட்டை விட்டால் வேறு உலகமே இல்லாதது மாதிரி திரைக்கதை அமைத்த  விதம்.

3.கலக்கல் ஃபிகராய் இருக்கும் ஹீரோயின் கசங்கிய சட்டை மாதிரி இருக்கும் ஹீரோவை லவ் பண்ணுவதற்கு நியாயமான காரணம் சொல்லாதது...


4.குழந்தைக்கு காது குத்தும் சீனை இவ்வளவு க்ளோசப்பில் காட்ட வேண்டுமா?கிராமப்படங்கள் எல்லாவற்றிலும் இது வருகிறது.

5.படம் முழுக்க யாராவது லொட லொட என பேசிக்கொண்டே இருப்பது ஓவர்.
பாதி வசனம் புரியவே இல்லை.

6. படம் பெரும்பாலும் இரவில் தான் நடக்கிறது என்பதால் ஒளிப்பதிவிலும் இருட்டாக காட்ட வேண்டிய கட்டாயம். இதை தவிர்த்திருக்கலாம்.

பாடல்கள் ஏற்கன்வே ஹிட். 3 பாடல்கள் நல்லாருக்கு.

வெற்றி பெறுவது பெரிசில்லை..அந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்...மனிதனுக்குப்பொறாமை கூடாது. எதிரியை அஹிம்சை வழியிலும்,சரண்டர் முறையிலும் வீழ்த்தலாம் என புது ரூட் போட்டு ஜெயித்திருக்கிறார்.சேவல் சண்டையை இவ்வளவு விஸ்தீரமாக காட்டியதில்லை என்ற அளவிலும் இது ஒரு முக்கியப்பதிவாக அமைகிறது.


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 44


எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - நன்று


ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள்,  பி செண்ட்டர்களில் 30 நாட்கள்,  சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடலாம்.

பொங்கல் ரிலீஸ் படங்கள் - ஒரு பார்வை

http://www.tamilmaxs.com/Admin/event/1085_thamna.jpg

1. சிறுத்தை - பொங்கலுக்கு ரிலீஸ் ஆகற படங்கள்லேயே ரொம்ப
பிரம்மாண்ட படைப்பும், பெரிய பேனர்,ஸ்டார் வேல்யூ உள்ள படமும்
இதுதான்.ஆனால் டிரெயிலரைப்பார்த்தால் படு டப்பா படம் போல் தோணுது.
தெலுங்கு ரீமேக்னு அவங்களே ஓப்பனா சொல்லீட்டாங்க..அடிதடி வெட்டு குத்து வன்முறைன்னு படம் பக்கா மசாலாவா இருக்கும்.சந்தானம் காமெடி படத்துக்கு பிளஸ் ஆக இருக்கும்னு எதிர்பார்க்க முடியாது.. இந்த மாதிரி ஆக்‌ஷன் ரீவேஞ்ஜ் சப்ஜெக்ட்ல காமெடி சும்மா ஊறுகாய் மாதிரிதான் இருக்கும்.தமனா செம கிளாமரா இதுல
நடிச்சிருக்கறதா கேள்விப்பட்டேன். கார்த்தி - தமனா கெமிஸ்ட்ரி ஏற்கனவே பையா படத்தில் ஒர்க் அவுட் ஆனதால் இதிலும் காதல் காட்சிகள் பட்டாசைக்கிளப்பும் என எதிர்பார்க்கலாம்.

ஆனால் என்னைப்பொறுத்தவரை இந்த மாதிரி வன்முறையைத்தூண்டும் மாமூல் மசாலாப்படங்களோ,தெலுங்கு ரீமேக்குகளோ ஹிட் ஆகாமல் இருப்பதே நல்லது மினிமம் பட்ஜெட் படங்கள் ஹிட் ஆனால்தான் கதாசிரியருக்கும், நம்மைப்போன்ற இளம் படைப்பாளிகளுக்கும் வாய்ப்பும்,மரியாதையும் கிடைக்கும்.

ஹீரோயிச படங்கள் ஹிட் ஆவதால் மேலும் மேலும் அவர்களது சம்பளம் உயருமே தவிர கோலிவுட்டில் ஆரோக்கியமான சூழல் நிலவாது.கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களே ஹிட் ஆக வேண்டும்.

ஈரோட்டில் இந்தப்படம் 4 முக்கிய தியேட்டரில் ரிலீஸ் ஆகுது. அபிராமி தியேட்டரில் காவலன் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்தேன்,ஆனால் தியேட்டர் மேனேஜர் சிறுத்தையை அபிராமியில் போட்டு,காவலனை தேவி அபிராமியில் ரிலீஸ் பண்ண முடிவெடுத்து விட்டார்.( அபிராமியில் 1280 சீட்,தேவி அபிராமியில் 680 சீட்) அவரது கால்குலேஷன் மிஸ் ஆகி
சிறுத்தையை விட காவலன் ஹிட் ஆகட்டும் என வாழ்த்துகிறேன்.(!?)
http://narumugai.com/wp-content/uploads/2011/01/Tapsee.jpg
2. ஆடுகளம் - தனுஷ் படம் என்பதால் அல்ல படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகம். படத்தின் ஹீரோயின் புதுமுகம் என்பதாலும், பார்ட்டி நல்ல ஃபிகர் மாதிரி உத்தேசமான ட்ரெயிலர் பார்வையில் தெரிவதாலும் இளைஞர்களின் ரசனைக்குத்தீனி கன்ஃபர்ம்.பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாத படம் என்பதே இதற்கு ஒரு பிளஸ் பாயிண்ட்.எந்தப்படம் அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகிறதோ, அது ஃபிளாப் ஆவதும் சத்தமே இல்லாமல் ரிலீஸ் ஆகும் படங்கள் ஹிட் ஆவதும் கோலிவுட்டுக்கு புதுசில்லை.

பெரிய பட்ஜெட் படங்களான சிறுத்தை,காவலன் ஆகிய படங்களுக்கு
நல்ல நல்ல தியேட்டர்கள் புக் ஆகி விட்டதால் இந்தப்படத்துக்கு
சுமாரான தியேட்டரே கிடைச்சிருக்கு. பார்ப்போம்.
http://www.123tamilcinema.com/images/2010/11/Kaavalan-e1290671207347.jpg
3. காவலன். - தொடர்ந்து 6 தோல்விபடங்கள் கொடுத்து விட்டதால்
விஜய் இந்தப்படத்தில் ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
காமெடியை நம்பினோர் கைவிடப்படார் என்பது அனைத்து மொழிகளிலும்
நிரூபிக்கப்பட்டது என்பதாலும் ,ஏற்கனவே சூப்பர் ஹிட் படமான ஃபிரண்ட்ஸ்
பட இயக்குநர் சித்திக்கின் படம் என்பதாலும் இந்தப்படம் குடும்பத்துடன்
பார்க்கும்படி இருக்கும் என நம்பி போகலாம்.

ஏற்கனவே மலையாளத்தில் இந்தப்படம் ஹிட் ஆகி இருக்கிறது
என்பதும், அந்த படத்தை பார்த்தவர்கள் படம் நல்லாருக்கு என கருத்து சொல்லி
இருப்பதாலும் விஜய்யும், அவரது ரசிகர்களும் தெம்பாக இருக்கிறார்கள்.

அசின் ஜோடி என்றாலும் இன்னொரு ஃபிகரும் தட்டுப்படுது.பார்ட்டியும் ஷோக்காத்தான் இருக்கு.ஒளிப்பதிவு நல்ல கிளாரிட்டி.எனது தனிப்பட்ட எதிர்பார்ப்பு இந்தப்பொங்கலில் ஹிட் அடிக்கப்போவது காவலன் தான் .
http://tamil.chennaivision.com/wp-content/uploads/2010/11/ilaignan.jpg
4. இளைஞன் - இந்தப்படத்தின் விளம்பரங்களில் உங்கள் அபிமான தியேட்டர்களில் ட்ரெயிலர் அதிர்கிறது என வாசகம் வந்தது செம காமெடி.கலைஞர் வசனம் என்பதால் எப்படியாவது ஒப்பேற்றி விடலாம் என நினைக்கிறார்கள்.பாடல் ஆசிரியர் விஜய் ஜஸ்ட் பாஸ் ஆவது ஆக வேண்டும் என பிரார்த்தித்தபடி இருக்கிறார். ட்ரெயிலரை பார்த்தால் படம் பத்தோடு பதினொண்னு அத்தோட இதுவும் ஒண்ணு என்றே தோணுது.

டிஸ்கி -1 ; கடைசியா வந்த தகவல்படி (ஆமா,இவரு பெரிய நியூஸ் சேனல் நடத்தறாரு..) காவலன் இன்னைக்கு ரிலீஸ் ஆகலை.

டிஸ்கி 2 : நான் ஆடுகளம் படம் விமர்சனம் டைப் பண்ணிட்டு இருக்கேன். 5 மணிக்கு  போட்டுடுவேன்.( ஆமா, இவரு எவரெஸ்ட் சிகரத்தை டச் பண்ணீட்டாரு, இந்தியக்கொடியை நட்டு மானத்தை காபாத்தப்போறாரு...)