Showing posts with label PIYA. Show all posts
Showing posts with label PIYA. Show all posts

Friday, December 21, 2012

சட்டம் ஒரு இருட்டறை - சினிமா விமர்சனம்

http://www.starmusiq.com/movieimages/Sattam-Oru-Iruttarai_B.jpg

ஹீரோயின் ஒரு கொலையை நேர்ல பார்த்துடறா,வில்லன்க 3 பேரும் அவளைப்போட்டுத்தள்ளிடறாங்க. ஆனா அவங்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கித்தர முடியல . ஆல்ரெடி அவங்க ஜெயிலுக்குள்ளே இருந்த மாதிரி பொய் ரெக்கார்டு வெச்சிருக்காங்க .அதே ஃபார்முலாவை யூஸ் பண்ணி ஹீரோ எப்படி பழிக்குப்பழி வாங்கறார் என்ற புளிச்சுப்போன மாவில் பழைய மொந்தையில் புதிய கள்ளு  ஃபார்முலா படி  விஜய்காந்த் எஸ் ஏ சி கூட்டணியின் பழைய படத்தை இப்போ ரீமேக் பண்ணி இழுக்கறாங்க சாரி ரீமேக் பண்ணி இருக்காங்க..

ஹீரோவா தமன். இவர் லவ் சப்ஜெக்ட் எல்லாம் 10 பண்ணிட்டு அப்புறமா இந்த மாதிரி ரிவஞ்ச் சப்ஜெக்ட் பண்ரது நல்லது. ஏன்னா  அதுக்கு எல்லாம் ஒரு மெச்சூரிட்டி வேணும். சிறு புள்ள வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு எங்க ஊர்ப்பக்கம் ஒரு சொலவடை உண்டு . மற்றபடி காதல் காட்சிகளில் ஓக்கே .


 ஹீரோயின் நெம்பர் ஒன்னா சுருட்டை கூந்தல் அழகி பியா. இவர் மேக்கப் இல்லாமயே ரொம்ப அழகான சிரிப்பழகிதான் , ஆனா இதுல மேக்கப் , ஹேர் ஸ்டைல் சொதப்பல் . படம் பூரா அவர் வர்ற காட்சிகள் எல்லாமே ஒரே ஒரு ஷார்ட்ஸ் , டி சர்ட் மட்டும் தான் ..


  ஹீரோயின் நெம்பர் டூ வா பிந்து மாதவி . இவருக்கு பிளஸ் என்னன்னா இவருக்கு மேல் உதடை விட கீழ் உதடு  ஒரே ஒரு செ மீ அகலம் அதிகம். லிப்ஸ்டிக் போடாமயே இலஞ்சிவப்பு , ஆனா மெரூன் கலர் லிப்ஸ்டிக் போட்டு படுத்தறாங்க


 அடுத்து திமிறும் காட்டாறு , உருமும் குதிரை  ரீமா சென் . போலீஸ் ஆஃபீசரா வர்றார். கெத்து ஓக்கே ,  விஜயசாந்தி கம்பீரத்துல பாதி கூட வர்லை

http://tamilmaxs.com/wp-content/gallery/actress-piaa-latest-hot-gallery-at-sattam-oru-iruttarai-movie-teaser-launch/piaa-hot-spicy-gallery-at-sattam-oru-iruttarai-movie-teaser-launch-1.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 



1. உயிரே உயிரே உன்னை ஒரு வரம் கேட்கிறேன் அழகான மெலோடி நல்ல பிக்சரைசேஷன் , ஒளிப்பதிவு , லொக்கேஷன்ஸ்  எல்லாம் அழகு



2. படத்துல நல்ல கண்ணுக்கு குளிர்ச்சியா 3 ஃபிகருங்க ( அதுல 1 ஆண்ட்டி ) ளை வளைச்சு போட்டது . பிந்து + பியா 2 பேரையும் படம் பூரா நல்லா வேளை வாங்குனது  ( நடிப்பில் அல்ல )


3. படத்துக்கு தேவை இருக்கோ இல்லையோ ஒரு லிப் கிஸ் டூ பிந்து மாதவி

இளைய தளபதி அருகில் இருப்பது படத்தின் இயக்குநர்

http://haihoi.com/Channels/cine_gallery/sattam-oru-iruttarai-movie-onlocaton14_S_162.jpg



 இயக்குநரிடம் பல சரமாறி கேள்விகள்



1. ஹீரோயினை வில்லன்க 3 பேரும் கார்ல அடிச்சுட்டு போறாங்க, அப்போ ஹீரோ ஐஸ் க்ரீம்கடைல ஐஸ் வாங்கிட்டு இருக்கார். கடைக்காரர் சொல்லித்தான் ஹீரோவே கொலையைப்பார்க்கறார். அவர் போய் ஹீரோயினைப்பார்த்து அழுது 3 நிமிஷத்துக்குள்ள கார் பறந்திருக்கனும், ஆனா 4 நிமிஷம் கழிச்சு ஒரு வில்லன் “ டேய், அவ என்ன ஆனா?னு பாரு?” அப்டினு சொல்ல  3 பேரும் எதுக்கு அங்கே பார்த்து தங்களை ஹீரோவுக்கு அடையாளம் காட்டறாங்க?வந்தமா? கார்ல இடிச்சமா?ன்னு போய்ட்டே இருக்கறதுதானே? கேனங்க மாதிரி தங்கள் முகத்தை ஏன் காட்டனும்?



2. வில்லன் பாட்டுக்கு  துரை  தயாநிதி மாதிரி தலைமறைவா ஃபாரீன்லயே இருந்தா ஹீரோவுக்கு அவன் எங்கே இருக்கான்னே தெரியாது . பேக்கு மாதிரி வில்லன் ஒரு பஞ்ச் டயலாக் பேசிட்டு வர்றார்  “ எமனுக்கு இன்விடேஷன் தர்ற முத ஆள் நீதான்” அப்டினு சவடால் பேசி லூஸ் மாதிரி இங்கே வந்து உயிரை விடறார்.. ஹய்யோ அய்யோ



3. போலீஸ் விசாரனைக்கு அழைக்கப்பட்டு வந்திருக்கும் ஈரோடு  மகேஷ் , பிந்து மாதவி 2 பேரும் ஆக்சுவலி பம்மிட்டு இருக்கனும், ஆனா பிந்து சொல்லுது “ நீ ஆம்பளையா இருந்தா எங்க காலேஜ் பக்கம் வந்து பாரு” இப்படி சொல்லிட்டு ஒரு பொண்ணு போலீஸ் ஸ்டேசனை  விட்டு வெளீல போயிட முடியுமா? இப்போ ரேப் சீசன் வேற .மகேஷ் காமெடிங்கற பேர்ல போலீஸை கலாய்ப்பது படு கேவலம் , இப்படி எல்லாம் நிஜத்துல நடந்தா லாடம் கட்டிடுவாங்க




4. ஒரு சீன்ல ஈரோடு மகேஷ் போலீஸ் கமிஷனர்ட்ட

“ சார் , உங்களுக்கு ஒயிஃப் இருக்கா?

இருக்கு ஏன்?

 ஒயிஃபை கூட்டிக்கொடுப்பதும் ,  நண்பனைக்காடிக்குடுப்பதும் ஒண்ணுதான்

 அப்டினு பஞ்ச் டயலாக் பேசி ஹாயா வெளீல வந்துடறார். போலீஸ் கமிஷனர் தேமேன்னு பார்த்துட்டு இருக்கார் . சென்சார்ல எப்படி விட்டாங்க? கைதட்டல் வரும்னு நினைச்சாங்க போல.. ஒரு பய கண்டுக்கலை



5. லாக்கப் ரூம்;ல  ராதாரவி & கோ சீட்டு விளையாடிட்டு இருக்காங்க, அப்போ கமிஷனர்   & போலீஸ் பட்டாளமே வருது , யாரும் எந்திரிச்சு நிக்கலை. போலீஸும் என்னப்பா விளையாடிட்டு இருக்கீங்க?ன்னு கேட்கலை



6. கொலையாளையை பியா ஃபோட்டோ எடுக்குது.  ஆனா டி வி ல  அவர்  எடுத்த வீடியோ காட்சின்னு ஒளிபரப்பறாங்க. அடுத்த சீன்ல யே வில்லன் “ அவ ஃபோட்டோதானே எடுத்தா? ஒரு ம... ரும் புடுங்க முடியாதுங்கறார், அதுக்கு அடுத்த சீன்ல ஹீரோ  வீடியோ அப்டிங்கறார், எடிட்டிங்க்ல கூட கவனிக்கலையா?



7. பியா தன் பாய் ஃபிரண்ட்னு முதல் முதலா ஹீரோவை தன் அக்கா கிட்டே அறிமுகம் பண்றா , முதன் முதலா  ஹீரோவைப்பார்க்கும் பியாவின்  அக்கா ஸ்வீட் பாய்னு ஹீரோ முகத்தை தடவிக்குடுக்குது , எதிர்ல்யே  அக்கா புருஷன் மிக்சர் சாப்பிட்டுட்டு நிக்கறாரு  ஹய்யோ அய்யோ



8. ஹீரோ ஹீரோயினை  ஃபாரீன்ல மீட் பண்றார். நீ யார்? எதுக்கு  நாலஞ்சு டைம் என் லைன்ல யே கிராஸ் பண்றே? அப்டினு ஹீரோயின் கேட்டதும்  ஹீரோ விதி நம்ம தலை விதி நாம லவ் பண்ணனும்னு இருக்குன்னு உளர்றாரு, அதுக்கு அந்த பதி விரதை சொல்லுது “ ஓக்கே இதே ஷாப்பிங்க் காம்ப்ளக்ஸ்ல காலைல இருந்து மாலை வரை ரவுண்ட் அடிப்போம் , எதேச்சையா நாம மீட் பண்ணிக்கிட்டா லவ் க்கு ஓக்கேன்னு கெக்கே பிக்கேக்கேன்னு இளிச்சுக்கிட்டு சொல்லுது. அதே போல் மீட் பண்றாங்க , அந்த கேனம் தன் மோதிரத்தை கழட்டி ஹீரோவுக்கு போட்டு விட்டு  கி கி ந்னு இளிக்குது,.இதான் லவ்வா? ஹய்யோ


9 ஹீரோயின் ஒல்லி , அவங்க மோதிர விரல்ல போட்டிருக்கும் மோதிரம் பாடியா இருக்கும் ஹீரோ சுண்டு விரல்ல கூட பொருந்தாது , ஆனா க்ளோசப்ல காட்டறாங்க  , கனகச்சிதமா நாஞ்சில் , அதிமுக மாதிரி பின்னிப்பிணைஞ்சிருக்கு , எப்படி?


10. ஹீரோ 2 வதா ஒரு கொலை பண்ணிட்டு ஹேரே போச்சுன்னு போய்ட்டே இருக்கறதுதானே? எதுக்கு லூஸ் மாதிரி போலீஸ்க்கு ஃபோன் பண்ணி லொக்கேஷன் சொல்லி மாட்டிக்கறார்?


http://www.cinejosh.com/gallereys/movies/normal/sattam_oru_iruttarai_tamil_movie_stills_2111120956/sattam_oru_iruttarai_tamil_movie_stills_2111120956_033.jpg


11. ஹீரோவோட நண்பர்கள் 3 பேரும் ஹீரோவுக்கு முன்னாலயே ஹீரோயின் அங்கத்தை ஸ்டெப் ஸ்டெப்பா வர்ணிக்கறாங்க. என்ன கண்றாவிக்காதல் இது? கேனம் மாதிரி எல்லாரும் சிரிக்கறாங்க ஹீரோயின்க்கு கூச்சம்கிடையாதா? ஹீரோ தமிழனா? ஃபாரீனரா?



12. வில்லனை அரெஸ்ட் பண்ணும் போலீஸ்  ஏன் அவர் கிட்டே இருக்கும் செல் ஃபோனை கைப்பற்றலை? ஃபோனை ஆஃப் பண்ணச்சொல்லவும் இல்லை.. போலீஸ் ஒரு கைதியை  ஜீப்ல கூட்டிட்டுப்போகும்போது அவன் கிட்டே செல் ஃபோன் எல்லாம் விட்டு வைக்க மாட்டாங்க , போலீஸ் எதிரேயே அவன் செல் ஃபோன் எடுத்து பேசறான்



13. ஓப்பனிங்க் ஷாட்ல கொலை நடந்த இடத்தை பார்வையிட வரும் ரீமா சென் அங்கே இருக்கும் எஸ் ஐ கிட்டே அங்கே ஒரு கார் இருக்கே? அது யாரோடது? அப்டினு கேட்டபின் அந்த எஸ் ஐ பக்கத்துல நிக்கும் ஆசாமியிடம் அந்த கார் யாரோடதுன்னு கேட்கறார், அவருக்கு சொந்தமா கிட்னி நஹி?


14. ஹீரோ ஜிம்முக்குப்போறேன்னு சொல்லிட்டு ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கிட்டுப்போறார் ஹய்யோ அய்யோ



15. வில்லன் சுரேஷ்க்கு பவர் கண்ணாடியை பிடுங்கிட்டதும் அவர்க்கு கண் மங்கலாத்தெரியுது, சுத்தமா பார்வையெல்லாம் போகலை. அவர் பாட்டுக்கு ஒரு ஓரமா நின்னா மேட்டர் ஓவர் , அவர் ஏன் கேனம் மாதிரி ரோட்டை கிராஸ் பண்ணி வாகனங்கள் மேல மோதிக்கறார்?


16. அசிஸ்டெண்ட் கமிஷனர் கொலை நடந்த இடத்துக்கு வந்ததும் மீடியா கிட்டே “ அது விபத்து இல்லை கொலைன்னு பேட்டி தர்றார். அவர் இன்னும் இன்வெஸ்டிகேஷனே ஆரம்பிக்கலை அதுக்குள்ளே யாராவது லூஸ் டாக் விடுவாங்களா?


17. வாட் டூ யூ திங்க் அபவுட் மீ?

 நத்திங்க்

 இதே கான்வர்சேஷன் படத்துல ஹீரோ & ஹீரோயின் 13 டைம் பேசிக்கறாங்க, செம போர்



18. ஈரோடுமகேஷ் 1980ல வந்த SMS  ஜோகஸை சாரி மொக்கைகளை எல்லாம் சொல்லி அவரே சிரிச்சுக்கறாரு அம்மா தாங்க முடியல  . விகரமனின் சென்னைக்காதல்ல இப்படித்தான் கோவை குணா சொதப்பினார்.  ஈரோடு மகேஷ் மதுரை முத்து கிட்டே இருந்து கத்துக்க நிறைய இருக்கு. அவர் அப்பப்ப பத்திரிகக்கைகள்ல வர்ற அடுத்தவங்க ஜோக்ஸ் எல்லாம் மனப்பாடம் பண்ணி தன்னுது மாதிரியே சன் டி வி ல சண்டே காலை 10.30க்கு சுடச்சுட அப்டேட் பண்ணிடுவார், ஆனா மகேஷ் இன்னும் பழைய மொக்கைகளையே ஒப்பேத்துனா எப்படி?

http://g.ahan.in/tamil/Sattam%20Oru%20Iruttarai%20Movie%20Stills/Sattam%20Oru%20Iruttarai%20Movie%20(49).jpg



19. ஈரோடு மகேஷ் படத்துல  மொத்தம் 7 இடத்துல ஜோக் அடிக்கறார்.  ஒரு நமீதா சோற்றுக்கு ஒரு இலியானா பதம்கற மாதிரி ஒரு சாம்ப்பிள்

 ஹேய், ஹேப்பி தீபாவளி மாப்ளை

 டேய், இது பர்த் டே பார்ட்டிடா.. ஹேப்பி பர்த் டேன்னு சொல்லனும்


 ஹே ஹே ஹே ஹ்ய்ய்  அப்படியா ஹேப்பி பர்த் டே ஹே ஹே

 அப்டினு என்னமோ செம ஜோக் சொன்ன மாதிரி இவரே சிரிச்சுக்கறாரு


20 . ஹீரோவோட ஃபிளாஸ் பேக் கதை போலீஸ் ஆஃபீசர்  ரீமாவுக்கு ஆல்ரெடி தெரியும், ஆனா வில்லன்க 2 பேர் கொலை செய்யப்பட்டப்ப அவருக்கு தன் தம்பி மேல டவுட்டே வர்லை, ஆனா அவருக்கு கீழே ஒர்க் பண்ணும்  சாதா போலீஸ்க்கு டவுட் வருது ம் எபப்டி?




21. கொலையை நேரில் பார்த்த 2 ஹையர் ஆஃபீசர் இருக்கும்போது , ஹீரோ ஜெயில்ல இருந்ததா ஜெயிலர் சொல்லும் சாட்சி எப்படி செல்லுபடியாகும்? இது எப்படி இருக்குன்னா சி எம் ஜெ  ஒரு  கவர்னர் 2 பேரும் ஒரு அரசாணை வெளியிடும்போது டம்மி பீஸ்  ஓ பி எஸ் “ இது செல்லாது”ன்னு சொல்ற மாதிரி இருக்கு



22. ஹீரோவோட முதல் லவ்வர் கொலை செய்யப்ப்டறா. அடுத்த லவ்க்கு அட்லீஸ்ட் ஒரு வருஷம் கூடவா எடுத்துக்கக்கூடாது ? கிடைச்சா போதும்னு 2 வதுக்கு ஆள் ரெடி பண்றாரே? எப்படி? ஒரு சீன்ல கூட அவர் சோகமாவே இல்லையே? 

http://mimg.sulekha.com/tamil/sattam-oru-iruttarai/events/sattam-oru-iruttarai-movie-teaser-launch/sattam-oru-iruttarai-movie-teaser-launch-photos073.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்



1. பசங்களோட சேர்ந்து நீயும் பீர் குடிக்கறியே , இது உனக்கே நல்லாருக்கா?

 எஸ் , நல்லாருக்கே?


 ஷட்டப்



2.  புலிக்கு முன்னால போன மானும் , பொண்ணு பின்னால பொன ஆணும் பிழைக்க சான்ஸே இல்லை  ( 1989 எஸ் எம் எஸ் ஜோக்)





3.  ஏய்! என் செல் ஃபோன்ல சார்ஜ் இல்லை, சார்ஜ் ஏத்தித்தர்றியாடா?

 நான் சார்ஜ் ஏத்தினா ஏடாகூடம் ஆகிடும் ( டபுள் மீனிங்க் )




4. பசங்க மனசு ரஜினி மாதிரி , சொல்றதைத்தான் செய்யும் , செய்ய்றதைத்தான் சொல்லும், ஆனா பொண்ணுங்க மனசு சத்யராஜ் மாதிரி  அவங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியாது ( 2001 எஸ் எம் எஸ் ஜோக் )



 5.  என்னடா ஜிம் பாடின்னே , டெட் பாடி வந்திருக்கு ?  ( மவுலி யின் நாடக வசனம் )



6. உங்க தியேட்டர்ல மெயின் கேட் தவிர வேற ஏதாவது வழி இருக்கா?

 நோ மேடம், நீங்க சொன்னா இனிமே வேணா ஏற்பாடு பண்ணிடறேன் ( படத்தில் உள்ள ஒரிஜினல் ஒரே ஒரு ஜோக் இதுதான் )



7 . என்னடா , லவ் ஸ்டோரியை விளம்பரம் மாதிரி சுருக்கீட்டே?



http://southfilms.in/wp-content/gallery/sattam-oru-iruttarai-movie-stills/sattam-oru-iruttarai-movie-stills-9.jpg


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38


 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்


 டெக்கான் கிரானிக்கல் ரேட்டிங் - 2.5 /5



சி.பி கமெண்ட் -  இந்த மாதிரி குப்பைப்படங்களை பார்க்காம இருப்பது உங்க டைம்க்கு, பர்சுக்கும் நல்லது. இந்த மக்கிய குப்பையை ஈரோடு தேவி அபிராமில பார்த்தேன்


http://www.123cinejosh.com/wp-content/uploads/2012/12/Bindu-Madhavi-Hot-Photos-At-Sattam-Oru-Iruttarai-Movie-Audio-Launch-12.jpg

Friday, April 22, 2011

கோ - பொலிட்டிகல் ஆக்‌ஷன் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

http://picasamusic.com/musicimg/KO.jpg

பாலைவன ரோஜாக்கள்,ஊமை விழிகள், சொல்வதெல்லாம் உண்மை போன்ற பட வரிசையில் லேட்டஸ்ட் பிரஸ் ரிப்போர்ட்டர் ஓரியண்ட்டட் ஸ்டோரி லைனில் சுபாவின் கதைக்கருவை  வைத்து கே வி ஆனந்த்  களம் இறங்கி இருக்கும் படம் தான் தலைவன் என்ற அர்த்தம் உள்ள கோ படம்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே மாறி மாறி ஊழல் பண்ணும் கட்சி என்பதால் ஒரு மாற்று சக்தி வேண்டும் என சில இளைஞர்கள் முன் வந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தி போராடுகிறார்கள்...ஆட்சி மாற்றம் வருகிறது.. பின் நடக்கும் சுவராஸ்யமான சம்பவங்கள் தான் கதை.. 
கேட்கும்போது மறுபடியும் ஒரு அரசியல் படமா ? என யாரும் சலித்துக்கொள்ள தேவை இல்லை.. நீட் ஆக்‌ஷன் கம்ர்ஷியல் தான்.

படத்தில் முதலில்  நம் மனதைக்கவர்வது பியா தான்.துறு துறுப்பான நடிப்பு,இயல்பான முக பாவனைகள்,செம்பருத்திப்பூ மலர்ந்த மாதிரி உதட்டில் தக்க வைத்த சிரிப்பு என சர்வசாதாரணமாக நம் மனதில் சப்பணம் போட்டு அமர்ந்து விடுகிறார்.அவரது ஹேர் ஸ்டைல் செம அழகு..
http://www.southdreamz.com/wp-content/uploads/2010/05/Piya-Bajpai.jpg

 இரண்டாவது படத்தின் ஒளிப்பதிவு.. கே வி ஆனந்தின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளில் இயற்கை அழகை அள்ளுகிறது.. ஆக்‌ஷன் காட்சிகளில் நம்மையும் உடன் அழைத்து செல்லும் லாவகமான கேமரா கோணங்கள்,பல இடங்களில் வெல்டன் சொல்ல வைக்கிறது.

3 வது கதைக்களன் . பத்திரிக்கை ஆஃபீஸ்-ல் நடப்பதை நம் கண் முன் கொண்டு வந்திருக்கும் ஆர்ட் டைரக்‌ஷன்.ஆரம்பக்காட்சிகளில் குப்பத்தில் குடிசைகளில் கேமரா புகுந்து புறப்பட்டு படம் பிடிக்கும்போது ஒரு படத்துக்கு ஆர்ட் டைரக்‌ஷன் எவ்வளவு முக்கியம் என நிரூபிக்கிறது..

அடுத்தது ஜீவா.. பிரஸ் ரிப்போர்ட்டரை கண் முண் நிறுத்துகிறார்.. தன்னை சுற்றி எது நடந்தாலும் அவர் உடனே கேமராவை கையில் எடுப்பது அருமை..ஒரு பத்திரிக்கையாளனுக்கு கேமரா மூன்றாவது கை மாதிரி என்ற லைனை கேட்ச் பண்ணி , கேரக்டரை உள் வாங்கி நடித்திருக்கிறார்.

அடுத்து அஜ்மல்.. இவரது அண்டர்ப்ளே ஆக்டிங்க் நல்லாவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.. ஆனால் கட்சியின் இளைஞர் படைத்தலைவர் என்ற அளவில் காட்டத்தான் அவர் ஒர்த். அதை மீறி ஒரு கட்சிக்கே தலைவராக காட்டுவதும் சி எம்மாக காட்டுவதும் குருவி தலையில் பனங்காய் கதை தான்.
http://narumugai.com/wp-content/uploads/2010/11/ko-karthika.jpg
ஹீரோயின் கார்த்திகா.. ராதாவின் மகள்.ஆள் நல்ல உயரம் தான்.. ஆனால் இவர் தமிழ் சினி ஃபீல்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார். அவரது புருவங்கள் மகா மைனஸ்.. செயற்கையாக வரையப்பட்ட வளைந்த வில் போன்ற புருவங்கள்  பிளஸ் என நினைத்து விட்டார்கள் போல.. அது அவரது முகம் எப்போதும் கோபமாக இருப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அவர் முகம் ஒரு ட்ரை ( DRY SKIN)ஸ்கின் என்பதால் மேக்கப் போடும்போது பக்கா செயற்கை காட்டுகிறது.. பாப்பாவுக்கு நடிப்பும் வர லேது..  ஸாரி டூ சே திஸ்... 

படத்தில் சுவராஸ்யமான வசனங்கள்

 1.  ரேஷன் கார்டுல என்ன விசேஷம்?

நாங்க ஆட்சிக்கு வந்தா ரேஷன் கார்டுக்கு 5 லிட்டர் சாராயம் தருவோம்.

2.  மிஸ்டர் டாக்டர் பிரகாஷ்.. நீங்க ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆனதும் 10 பேஷண்ட்டை மொத்தமா ஒரே சமயத்துல போட்டுத்தள்ளுனது எப்படி?ங்கறதை விளக்குவீங்களா?

3. தீ விபத்து நடந்தப்ப  எப்படி தப்பிச்சீங்க?

என் கிட்டே  4 வாட்டர் பாக்கெட் இருந்தது.. அதை என் மேல பீய்ச்சி அடிச்சுக்கிட்டேன்.

4. ஜீவா - அர்னாட்ஷா(!!) என்ன சொல்லி இருக்கார்னா நல்ல ஃபிகரா ,டாப்பா இருக்கற பொண்ணுங்களுக்கு டாப் சரியா இருக்காதாம் .. ( மூளை....)

5. பியா - நான் அந்தப்பொண்ணு கிட்டே பேச்சு குடுத்தேன்.. ஒரே நைட்ல ரூ 30,000 சம்பாதிக்கறாளாம்.. சில சமயம் ரூ 50000 கூட கிடைக்குமாம்.சரி.. ஒரு ஆர்வத்துல கேட்கறேன்.. எனக்கு எவ்வளவு கிடைக்கும்?

 ஜீவா - ம் ம் ஒரு நூத்தம்பது ரூபா?

பியா - அடப்பாவி.. அடி வாங்கப்போற.. சரி இவளுக்கு... 

ஜீவா- ஆள் ஹைட் ஜாஸ்தி.. அதுக்காக சும்மா அனுப்பிட முடியுமா..ஏதோ போட்டு குடுத்து அனுப்பலாம்.

கார்த்தி.-- அடச்சே.. என்ன பேச்சு இதெல்லாம்..
http://1.bp.blogspot.com/_Uno_emuDLJc/TIsE3nNxllI/AAAAAAAAIC4/hEiuyjjVjN4/s1600/piaa_bajpai_hot_photo_shoot_pics_images_04.jpg
6.  வில்லன் - தமிழ்ப்பேப்பர்ல தாண்டி வேலை செய்யறீங்க? எதுக்கு இங்கிலீஷ்ல பேசறீங்க?

7. நான் யாருன்னு உனக்குத்தெர்யுமா?

அல்லக்கை

என்ன சொன்னே?

 சாரி,.. அண்ணனோட கை.. 

8.  ஜீவா - ஏய்.. அதெல்லாம் போகட்டும்.. நீ கடிச்சியே ஒருத்தனை.. அல்சேஷன் நாய் பிச்சை வாங்கனும்.. 

பியா - !!!!!!!!!!!!!!!!

9. பிரஸ்னா பாசிட்டிவ் மேட்டர்க்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடாது.. நெகட்டிவ் மேட்டர் தான் எடுபடும்.. ஒரு கள்ளக்காதல், ஒரு கொலை,இப்படித்தான் நியூஸ் எடுக்கனும்.. 


10. சார்.. பிரஸ்னா கேவலமா நினைக்காதீங்க.. பத்திரிக்கைக்காரங்களால தான் ஆட்சியே மாறுது.. ( ஆமா.. கருத்துக்கணிப்புன்னு எதையாவது போட்டு மக்களை குழப்பறதே இவங்க தானே?)

11.  பியா - தூங்காம கண்ணை மூடிக்கிட்டே கனவு காண்பதும் ஒரு சுகம் தான்.. 

12. நான் ஏன் அவனை லவ் பண்றேன்னா பொண்ணுங்க தானா வந்து பேசுனா பசங்க அடுத்த நிமிஷமே மேல கை போட நினைப்பாங்க.. ஆனா அவன் அப்படி இல்லை...அவன் ஒரு ஜெம்..  ( இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு நினைச்சிருக்கலாம்.. அதுக்குள்ள அவசரப்பட்டுட்டியே பொண்ணு.. )

13. டேய்.. எதுக்குடா கொதிக்கறீங்க? அரிசி மூட்டை இருந்தா அங்கே நாலஞ்சு எலிங்க இருக்கத்தான் செய்யும்.. ஆட்சின்னு ஒண்ணு இருந்தா அங்கே ஊழல் இருக்கத்தான் செய்யும்.. ( நாலஞ்சுன்னா ஓக்கே ஒண்ணே முக்கால் லட்சம் கோடின்னா நாட் ஓக்கே)
14. நிருபர் - சி எம் சார்.. உங்களுக்கும், இந்த கொள்கைப்பரப்புச்செயலாளர்க்கும் ஏதோ கனெக்‌ஷன்னு பேசிக்கறாங்களே?

பிரகாஷ்ராஜ் - அவ எம் பொண்ணு மாதிரி.. 

நிருபர் - அப்போ அவங்கம்மாவுக்கும் உங்களுக்கும் கனெக்‌ஷன்னு நியூஸ் போட்டுக்கலாமா/ சார்?   ( எம் ஜி ஆர் - ஜெ நேரடி அட்டாக் )

15. இந்த மாதிரி ஆளுங்கட்சிக்கு எதிரா நியூஸ் போட எவ்வளவு வாங்குனீங்க?

சார்.. நீங்க தான் சொன்னீங்க.. எங்க  நல்லாட்சில எதிர்க்கட்சியே கிடையாதுன்னு.. அப்புறம் எப்படி?

16.  டியர்.. உன் மன்சுல நான் இல்லைன்னா ஏன் உன் கண்ணு கலங்குது?

17. பியா - அடேய்.. நீ என்னை லவ் பண்ணலைன்னாலும் பரவாயில்லை.. ஆனா போற வர்றவளை எல்லாம் லவ் பண்றியே அதைத்தான் என்னால தாங்கிக்க முடியல..  ( ஆஹா என்ன ஒரு உயர்ந்த உள்ளம் )




18. இந்த உலகத்துல பழமையான தொழில் ரெண்டே ரெண்டு தான்.. 

1. அரசியல் 2. விபச்சாரம்,.

ஆனா இப்போ அரசியலே விபச்சாரமா போச்சு.. 

19 தம்பிங்களா.. அரசியல்னா சும்மா இல்ல.. சுறா, திமிங்கலம் எல்லாம் பசியோட உலாவற இடம்.. ஜாக்கிரதையா இருக்கனும்.. இல்லைன்னா ஆளைப்போட்டுத்தள்ளிடும்.. ( சரி விடுங்க,. தெரியாம சுறா பார்த்துட்டோம்.. அதையே சொல்லிக்காண்பிச்சுட்டு)


20. நம் தலைவர் ஒரு பாயும் புலி.. நடமாடும் சிங்கம்.. அதனால் தான் நடிகை ஷமீதா ஸ்ரீயை தன் கூடவே வைத்திருக்கிறார்.. ( இந்த இடத்துல நமீதாவை அட்டாக்)

 21. ஷமீதா - ஹாய் மச்சான்ஸ்.. உங்க எல்லாருக்கும் தெரியும்.. எனக்கு ரொம்பப்பெரிய..... மனசுன்னு.. ( நல்ல வேளை.. )

 22 - சி எம் - என்னடா நான் பேசறப்ப கூட்டமே இல்லை..?

தலைவரே .. ஷமீதா போனதும் கூட்டமும் போயிடுச்சு.. நீங்க அவங்க பேசறதுக்கு முன்னாமே பேசி இருக்கனும்..

 அட.. வெளக்கெண்ணெய்.. அதை நீ முதல்லியே சொல்லி இருக்கனும். 

23  இந்தகாலத்துல இளைஞர்கள் எல்லாம் ஐ டி ல ஒர்க் பண்ணத்தான் விரும்பறாங்க.. ஃபாரீன்ல வேலை கிடைச்சா உடனே நாட்டை அம்போன்னு விட்டுட்டு ஓடிடறாங்க.. 

. ஏன்.. உனக்கு விசா கிடைக்கலைங்கற கோபத்துல பேசறியா?
 http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-1234.jpg

 இயக்குநருக்கு பாராட்டு போகும் இடங்கள் (ALL CREDITS GO TO DIRECTER)
1. காலேஜ் ஃபிளாஸ்பேக் காட்சியில்  வரும் கனவில் தூங்கு  பாடல் காட்சியில் அஜ்மல், ஆடு இரண்டு பேரும் ஒரே கிளை இலையை ஆளுக்கு ஒரு முனையில் வைத்து தின்பது...
 
2. அதே பாடல் காட்சியில் காலேஜ் ஃபிகர்களாக வருபவர்கள் நிஜமான காலேஜ் ஃபிகர்ஸாக இருப்பது...

3.  கார்த்திகா தனிமையில் ரூமில் இருக்கும்போது சடார் என ஒரு உருவம் வருவதை சர்ப்பரைஸ் ஷாட்டாக எடுத்தது.. ( தியேட்டரில் பாதிப்பேர் வீல் என கத்தி விட்டார்கள்)

4.  ஒரு சேஸிங்க் சீனில் உயரமான பில்டிங்க்ல இருந்து ஜாக்கிசான் போல பைப்பில் சறுக்கிக்கொண்டே ஜீவா வரும் சீனை டூப் இல்லாமல் ,கட் ஷாட் இல்லாமல் லெங்க்த்தி ஷாட்டாக எடுத்தது..( வெல்டன் ஜீவா)

5. சூப்பர் ஹிட் சாங்கான என்னமோ ஏதோ பாட்டுக்கான லொக்கேஷன், பாடல் படமாக்கப்பட்ட விதம்,கண்ணியமான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்.( THE PICTURAISATION OF THE SONG IS SO LOVELY)

இயக்குநருக்கு சில கேள்விகள் ( மைனஸ்)

 1.  படத்தின் ஆதார இடமான மேடையில் குண்டு வெடிக்கும் சீனை பிரம்மாண்டமாக எடுக்காமல் சொதப்பியது ஏன்? அதை லாங்க் ஷாட்டில் துக்ளியூண்டு காட்டி தப்பிச்ட்டீங்களே.. 

2. மொத்தப்படத்திலும் மனித நேயத்தை புகழ்ந்து விட்டு பாடல் காட்சியில் திருநங்கைகளை கிண்டல் செய்யும் ஷாட் எதற்கு?

3. என்னதான் ஒரு நிருபர்க்கு கடமை கண்ணாக இருந்தாலும் விபத்து நடந்தாலும் சரி.. கலவரம் நடந்தாலும் சரி.. ஜீவா  மக்களை காப்பாற்றாமல்
ஃபோட்டோ எடுத்துட்டு இருப்பது ஏன்?

4. படம் செம ஃபாஸ்ட்டா போய்ட்டிருக்கறப்ப எதுக்கு அந்த வெண்பனியோ பெண்மணீயோ மெலோடி பாட்டு? அதுவும் செகண்ட் ஆஃப்ல...?

5. தீவிரவாதிகளை பார்க்க சி எம் தான் மட்டும் தனியே போய்ப்பார்க்க வேண்டிய அவசியம் என்ன? மாட்டிக்கவா?

6. ரிப்போர்ட்டர்க்கான டிரஸ் கோட் படத்தில் ஹீரோ, ஹீரோயின் டாரும் மெயிண்ட்டெயின் பண்ணலையே..? ( ஹீரோ காலர் இல்லாத பனியனுடனும், ஹீரோயின் முதுகில் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டுடனும் சுத்தறாங்களே?)

7. செகண்ட் ஆஃப்ல வைத்த ட்விஸ்ட் ஓக்கே.. ஆனா அதுக்கான காரணத்தை ஃபிளாஸ்பேக்ல சொல்லி இருக்கனும்.. 

இந்தப்படம் ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள், பி செண்ட்டர்களில் 30 நாட்கள், சி செண்ட்டர்களில் 15 நாட்கள் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க் - நன்று

 ஈரோடு வி எஸ் பி, சண்டிகா , ஸ்ரீ கிருஷ்ணா என 3 தியேட்டர்ல படம் ரிலீஸ் ஆகி இருக்கு.

டிஸ்கி 1 - இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை விமர்சனத்தில் யாரும் வெளியிட வேண்டாம் என பிரஸ் மீட்டில் இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.. எனவே விமர்சனம் செய்யும் அன்பர்கள் அதை ஃபாலோ பண்ணுங்க..

 டிஸ்கி 2 - இந்தப்படத்தின் கதைக்களன் பத்திரிக்கைத்துறை என்பதாலும், பிரசஸ்காரங்க நினைச்சா எதையும் சாதிக்க முடியும் என்ற கான்செப்ட் என்பதாலும்  இந்தப்படத்துக்கான பத்திரிக்கை விமர்சனங்கள் கொஞ்சம் ஓவர் பில்டப்போடே இருக்கலாம்..