Showing posts with label PERUNDURAI. Show all posts
Showing posts with label PERUNDURAI. Show all posts

Tuesday, August 07, 2012

பெருந்துறை சுசி ஈமுப்பண்ணை - கோடிக்கணக்கில் மோசடி - தலைமறைவு


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

ஈமு கோழிப்பண்ணையின் தாயகம் என சொல்லப்படும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சுசி ஈமுக்கோழிப்பண்ணை இழுத்து மூடப்பட்டது.. நேற்று அங்கே ஒரே பரபரப்பாக இருந்தது, மக்கள், முதலீட்டாளர்கள் கூட்டம் கூடி இருந்தது.. கொடுத்த பணத்தை திருப்பிக்கொடு என்று கோஷம் போட்டார்கள்.


ஆர் பார்த்திபன், கே பாக்யராஜ், பரவை முனியம்மா போன்ற பலர் பணத்தை வாங்கிக்கொண்டு எல்லாம் தெரிந்தவர்கள் போல கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்டை படித்து நடித்து விட்டுப்போகிறார்கள்.. இது சமுதாயத்தை எந்த அளவு பாதிக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை.. 

 ஒரு சோப் விளம்பரமோ, ஷாம்பு விளம்பரமோ இந்த அளவு பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. ஆனால் லட்சக்கணக்கான முதலீடு சம்பந்தப்பட்ட மேட்டர் என்பதால் மக்கள் ஒரு நம்பகத்தன்மையை  சினிமா பிரபலங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். 


மக்கள் இவர்களைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.. சினிமா பிரபலங்களும் காசு கிடைக்குதுன்னு கண்ட கண்ட விளம்பரங்களில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்.. இதனால் பாதிக்கப்படுவது அவர்கள் இமேஜும் தான்..


நேற்று மாலை 5 மணிக்கு  முதலீட்டாளர்கள் வாசலில் கூடி நின்று கோஷம் போட்டிருக்கிறார்கள்.. கொடுத்த பணத்தை திருப்பிக்கொடு, லாபம் ஏதும் வேண்டாம், முதலீட்டுத்தொகை மட்டும் போதும் என  கெஞ்சிக்கேட்டும் பொறுப்பான பதில் இல்லை..


ஈரோடு, கோவை, சேலம் மாவட்டங்களில் மட்டும்  கிட்டத்தட்ட 18 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.. முழுமையான விபரம் இன்னும் 2 நாட்களில் தெரியும்..  பணத்தை இழந்தவர்கள் பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து வருகிறார்கள்.. பலர் வெளியே சொன்னால் கேவலம் என்று யோசித்து வருகிறார்கள்..


 கலைமகள் சபா, தேக்கு மர மோசடி ஆகியவற்றுக்குப்பின் சமீபத்தில் நடந்த மிகப்பெரும் மோசடி இதுதான்.. கவுண்டர்கள் , முதலியார்கள் சமூகத்தினர் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது ..


ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ 6000 தருவதாக வாகு கொடுத்தவர்கள் அபப்டி தர முடியாததால்  வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் கேள்விக்கு பதில் தர முடியாமல் திணறினர்..

 அரசு 80 ப்பைசா வட்டி தருது, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் தனியார் சீட்டு நிறுவனங்கள் நமக்கு ரூ 2 முதல் ரூ3 வரை வட்டி தருது.. அப்படி இருக்க ரூ 100க்கு ரூ 6 வட்டி என்றதும் மக்கள் அது எப்படி முடியும்? என்றெல்லாம் யோசிக்காமல் முதலீட்டை அள்ளி அள்ளி வழங்கினர்,..


இப்போ உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா என்ற பழமொழிக்கெற்ப சோகத்தோடு உலா வருகின்றனர்..


ஈமு கோழிகளுக்கு தீவனம் வழங்கும் நிறுவனத்துக்கு இவர்கள் ரூ 1,34,000 பாக்கி வைத்திருக்கிறார்கள்.. எனவே அவர்கள் சப்ளையை நிறுத்தி விட்டார்கள். விஷயம் வெளீயே கசிந்ததும் மக்கள் பொங்கி விட்டார்கள்..


 மக்களின் புகாருக்குப்பின் போலீஸ் பெருந்துறை சுசி பண்ணை உரிமையாளர்  குருவை தொடர்பு கொண்டபோது அண்ணன் செல்லை ஸ்விட்ச் ஆஃப் பண்ணீ விட்டிருந்தார்.. கம்ப்யூட்டர்களை செக் பண்ணியபோது அவர்கள் வங்கிக்கணக்கில் ரூ  18,78,000 மட்டுமே இருந்தது..


இது மேலும் அதிர்ச்சி.,. ஏன்னா குறைஞ்ச பட்சம் 1000 பேர் தலா 1 லட்சம்னு முதலீடு  கணக்கு போட்டலும் 10 கோடி ரூபா இருக்கனும்.. எல்லாம் ஸ்வாகாவா? தெரியலை




 சுசி ஈமு பண்ணை ஒரு வருடம் முன் தமிழ் முரசு பத்திரிக்கைக்கு கொடுத்த இண்ட்டர்வியூவை இப்போ பார்ப்போம்






‘ஈமு கோழி வளர்ப்பு தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. பண்ணை அமைத்து சிரத்தையுடன் தொழிலில் ஈடுபட்டால் லாபத்தை அள்ளலாம் என்று கூறுகிறார் ஈரோடு மாவட்டம் பெருந்துறை யில் ‘சுசி ஈமு பார்ம்ஸ் இந்தியா’ நடத்திவரும் எம்ஜிஎஸ்.அவர் கூறியதாவது:





நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். கல்லூரி படிப்பை முடித்தவுடன் தனியார் நிறுவனத்தில் மாதம் 8 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைபார்த்து வந்தேன். விவசாயம் மற்றும் பண்ணைகள் பற்றிய தகவல்களை ஆர்வமுடன் தெரிந்து கொள்வேன். ஆந்திரா, புதுவை ஆகிய இடங்களில் உள்ள பண்ணைகளுக்கு சென்று ஈமு கோழி வளர்ப்பு குறித்து முழுமையாக அறிந்துகொண்டேன்
.




2004ம் ஆண்டு 5 ஜோடி ஈமு கோழிகளுடன் பெருந்துறையில் பண்ணை துவங்கினேன். அவை முட்டையிட துவங்கியதும்  வேறொரு பண்ணையாளரிடம் கொடுத்து குஞ்சு பொரிக்க செய்து, அவற்றையும் சேர்த்து வளர்த் தேன். ஈமு வளர்ப்பையே முழு நேர தொழிலாக மேற் கொண்டேன். தமிழகத்தில் ஈமு எண்ணிக்கை குறைவு. ஒப்பந்த அடிப்படையில் ஈமுவை வளர்க்க விவசாயிகளிடம் ஆர்வத்தை உருவாக்கினேன்.  சிரமம் இல்லாத வளர்ப்பு முறை, அதனால் கிடைக்கும் வருமானத்தை பார்த்து இன்று தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையிலும், சொந்தமாகவும் ஆயிரக்கணக்கானோர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.




சந்தை வாய்ப்பு!



ஈமு இறைச்சி விற்பனையாளர்கள் நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். அக்கம்பக்கத்தினர் வீட்டுத்தேவைக்கும், விசேஷங்களுக்கும் வாங்கிச் செல்வார்கள். ஓட்டல்கள், உணவு விடுதிகளுக்கும் நேரடியாக ஆர்டர் பிடித்து சப்ளை செய்யலாம்.




பயன்கள்: மற்ற பறவை, விலங்கி னங்களை ஒப்பிடும்போது ஈமுவில் கழிவு குறைவு. முட்டை, இறைச்சி, எண்ணெய் கிடைக்கிறது. ஈமு கோழிகளின் இறைச்சி மற்ற இறைச்சிகளை விட சுவையில் தனித்தன்மை வாய்ந்தவை. ஆடு, மாடு போன்ற கால்நடைகள்தான் சிவப்பு மாமிசம் கொடுக்கும். சிவப்பு மாமிசம் கொடுக்கும் பறவை இனம் ஈமு. ஈமு இறைச்சிக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.  40 முதல் 45 கிலோ எடை கொண்ட ஈமுவை இறைச்சிக்காக வெட்டும்போது 10 முதல் 12 கிலோ கொழுப்பு தனியாக கிடைக்கும்.



கொழுப்பை காய்ச்சி எண்ணெய் எடுக்கப்படுகிறது. 5 முதல் 6 லிட்டர் ஈமு எண் ணெய் கிடைக்கும். சுத்திகரிப்பு செய்து வலி நிவாரணி, அழகு சாதன கிரீம்கள் தயாரிக்க பயன்படுத்தப்படு கிறது. ஒரு ஈமுவில் 6 சதுரஅடி தோல் கிடைக்கும். மிருதுவாகவும், அதிக வலுவாகவும் இருப்பதால் செருப்பு, கைப்பை, பர்ஸ்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.



இதன் சிறகுகள்  கம்ப்யூட்டர் போன்ற இயந்திரங்களை சுத்தம் செய்யும் பிரஷ்கள் தயாரிக்கவும், அழகான தொப்பிகள், ஆடைகளின் மேல் அழகு வேலை பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாஸ்து பொருளாகவும் ஈமு முட்டைகளை பயன்படுத்துகின்றனர். ஈமு முட்டைகளை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் பெருகும் என்பது அவர்களது நம்பிக்கை.

கட்டமைப்பு


பண்ணை தொடங்க குறைந்தது 5 ஜோடி ஈமு குஞ்சுகள்(ரூ.75 ஆயிரம்) வேண்டும். 40 அடி நீளம், 35 அடி அகல இடம் வேண்டும். இடத்தை சுற்றி 5 அடி உயரம் கம்பி வேலி, தீவனம் மழையில் நனையாமல் இருக்க சிறிய ஆஸ்பெஸ்டாஸ் ஷெட், தீவனம் வைக்க 2 பாத்திரம், தண்ணீர் தொட்டி (இதற்கு செலவு ரூ.15 ஆயிரம்), முட்டைகளை பொரிக்க வைக்க இன்குபேட்டர் (ரூ.3 லட்சம்), சீரான மின் சப்ளைக்கு ஜெனரேட்டர் (ரூ.1 லட்சம்) போன்றவை வேண்டும்.



எங்கு வாங்கலாம்?



ஈமு குஞ்சுகள் மற்றும் தீவனங்களை தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் உள்ள ஈமு பண்ணைகளில் பெற்றுக் கொள்ளலாம். இன்குபேட்டர், ஹேச்சர் மெஷின் ஐதராபாத்தில் கிடைக்கும்.



குஞ்சுகள் தேர்வு



ஈமு குஞ்சுகளை வாங்கும்போது பார்வை, கேட்கும் திறன் சரியாக உள்ளதா, கால்களை வளைக்காமல் நடக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். 3 மாதத்துக்கு மேற்பட்ட குஞ்சுகளைதான் வாங்க வேண்டும். முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகளுக்கு 3 மாதம் வரை உடல் பகுதியில் வெள்ளை கோடுகள் இருக்கும். 3 மாதத்துக்கு பின் கோடுகள் மறைந்து இயல்பான நிறம் வரும். 3 மாத ஈமு, 4 முதல் 6 கிலோ எடை இருக்கும்.



வளர்ப்பு முறை



3 மாத குஞ்சுகளை வாங்கிவந்து 5 மாதம் வரை கூட்டமாக வளர்க்கலாம். ஆண், பெண் தெரிந்த பின்  தனித்தனியாக பிரித்து வளர்க்க வேண்டும். பெண் ஈமுக்கள் 18வது மாதத்தில் முட்டையிடும் பருவத்துக்கு வரும். தொண்டையில் இருந்து தும்தும் என ஒலி எழுப்புவதை வைத்து இதை தெரிந்து கொள்ளலாம்.   24வது மாதத்தில் இனச்சேர்க்கைக்கு  விட்டால் அதிக முட்டை கிடைப்பதோடு தரமான குஞ்சுகளையும் பொரிக்க வைக்க முடியும்.



குஞ்சு பொரிப்பு


ஹேச்சர் மெஷினில் ஒரே நேரத்தில் 700 முட்டைகளை அடுக்கி வைத்து, 93 முதல் 96 டிகிரி வரை தொடர்ந்து 52 நாட்களுக்கு  வைத்திருக்க வேண்டும். பொரித்த குஞ்சுகளுக்கு கால்கள் வளையாமல் இருக்க 2 கால்களையும் சேர்த்து டேப் மூலம் ஒட்டி விடவேண்டும். 15 நாட்களுக்கு பின் டேப்பை பிரித்து இன்குபேட்டரில் 20 நாட்களுக்கு வைக்க வேண்டும். பின்னர் குஞ்சுகளுக்காக தனியாக ஷெட் அமைத்து ஒரு மாதம் வளர்க்க வேண்டும். 3 மாதத்துக்கு பின்னர் வளர்ந்த கோழியாக மாறும்.



வருமானம்


3 மாத வயதுள்ள 5 ஜோடி ஈமு வளர்த்தால் 16 மாதத்துக்குள் 30 கிலோ எடையுள்ள ஈமு கோழி கிடைக்கும். 5 ஜோடியும் சராசரியாக 30 கிலோ எடை இருந்தால் 300 கிலோ இறைச்சி கிடைக்கும். ஒரு கிலோ இறைச்சி குறைந்தபட்சம் ரூ.295க்கு விற்பனை செய்யலாம். இதன் மூலம் ரூ.88,500 கிடைக்கும். வெட்டப்படும் கோழிகளில் இருந்து 5 லிட்டர் எண்ணெய் வீதம் 5 ஜோடி ஈமுவுக்கு 50 லிட்டர் ஈமு எண்ணெய் கிடைக்கும். ஒரு லிட்டர் ரூ.1500க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.75 ஆயிரம் கிடைக்கும். இறைச்சி, கொழுப்பு மூலம் ஒரு ஆண்டில் ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்து 500 கிடைக்கும்.


இதற்கான செலவு 5 ஜோடி ஈமு கோழிகள் ரூ.75 ஆயிரம், 15 மாதத்திற்கு அதற்கான தீனி உள்பட மற்ற செலவுகள் ரூ.25 ஆயிரம். ஆண்டு முடிவில் 5 ஜோடிகளுக்கு மட்டும் ரூ.63,500 வருமானம் கிடைக்கும். 15 மாதத்தில் இறைச்சிக்காக ஈமுக்களை


இனவிருத்தி செய்து வளர்த்தால் பெண் ஈமுக்கள் 18வது மாதத்தில் பருவத்துக்கு வந்து ஆண்டுக்கு 20 முட்டைகள் தரும். 5 ஜோடி வளர்க்கும்போது 100 முட்டைகள் கிடைக்கும். இதன்மூலம் தரமான 60 குஞ்சுகள் கிடைத்தால் அவற்றை விற்று ரூ.4.5 லட்சம் சம்பாதிக்கலாம்.



தினமணி செய்தி - ஈரோடு பகுதியில் சுசீ ஈமு ஃபார்ம் - ஈமு கோழி வளர்ப்பு நிறுவனத்தில் கடந்த 3 நாள்களாக கோழித் தீவனம் இன்றி திண்டாடுவதால், ஈமு கோழிகள் தீவனம் இன்றி வாடிப் போயுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 


சுசீ ஈமு ஃபார்ம் கோழிப் பண்ணையில் முதலீடு செய்தவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக புகார் அளித்து, பண்ணையை முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால் பண்ணையின் செயல்பாடு தடைப்பட்டுள்ளது. கோழிப் பண்ணை நிர்வாக இயக்குனர் மீது முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தனர் போலீஸார். இந்நிலையில் இன்று அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. 


அதிகாரிகள் அந்தக் கோழி நிறுவனத்தின் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த 75 ஆயிரம் ஈமு கோழிகளுக்குத் தேவையான தீவனம் நிறுவனத்தில் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. கடந்த 3 நாள்களாக கோழிகள் தீவனமின்றி இருந்ததும் தெரியவந்தது. அதிகாரிகளும் அவற்றின் தீவனத்துக்கு வழி தெரியாமல் திண்டாடுகின்றனர். கோழிகளையும் அழிக்க முடியாது என்பதால் சரியான தீர்வு குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

 



நன்றி - ஈரோடு சோழமண்டலம்  ஃபைனான்ஸ் கதிர், தமிழ் முரசு, பெருந்துறை நகர பொதுமக்கள், பெருந்துறை போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு, தினமணி

Monday, June 25, 2012

கோவை பதிவர்கள் சந்திப்பு @ பெருந்துறை

சேலத்துல பாடகர் மனோ,திருடா திருடி மன்மத ராசா பாட்டு புகழ் மாலதி, பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் கலந்துக்கற  நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தது.. லக்‌ஷ்மண் ஸ்ருதி ஆர்க்கெஸ்ட்ரா @ ஜவஹர் திடல், சேலம்..அழைப்பு விடுத்தவர் பிரபல ட்விட்டர் கம் பதிவர்.. ஆனா பேர் சொல்லக்கூடாதாம்.. பெயர் வெளீயிட விரும்பாத பதிவர்.. கம் ட்வீட்டர்.. 

 நானே கேள்வி நானே பதில் என்ற பகுதி முதன் முதலா ஆனந்த விகடன்ல தான் ஆரம்பச்சதுன்னு யாராவது நினைச்சா அந்த நினைப்பை உடனடியா ரப்பர் வெச்சு அழிச்சிடுங்க.. ஏன்னா தினமலர் வார மலர் பகுதில தான் அது முதல் முதலா அந்தரங்கம் கேள்வி பதில்ல ஆரம்பிச்சுது.. இவங்களே ஒரு கேள்வி போட்டு 2 பக்கத்துக்கு ஒரு மேட்டர்  ஆஃப் த மேட்டர் போடுவாங்க.. பெயர் வெளியிட விரும்பாத வாசகி அப்டினு போடுவாங்க... அதுக்கு தமிழ்ல உள்ள மாற்றுப்பெயர்.. அனாமிகா.. அந்த மாதிரி பெயர் வெளியிட விரும்பாத வாசகர் அல்லது பதிவர்னா அவர் மிஸ்டர் அனாமிகாவா? தெரியல.. 


ஒரு க்ளூ வேணா தர்றேன். அவர் லக்கி யுவா, அதிஷா 2 பேருக்கும் தோஸ்த்..அவர் ஃபோன்ல மெசேஜ் அனுப்பி தகவல் சொன்னதும் போலாமா? வேணாமா?ன்னு யோசனை பண்ணிட்டு இருந்தேன்.. கம்ப்பெனிக்கு ஆள் வேணுமே.. அப்புறம் தான் மாயவரத்தான் ட்விட்டர்ல  அவரும் சேலம் போக இருப்பதா சூசகமா தகவல் சொன்னார் . ( சூசகம் -நன்றி  டூ கலைஞர்)


சரின்னுட்டு சேலம் போக ரயில் டைம், ரயில் பேரு எல்லாம் கேட்டுக்கிட்டேன்.. சம்பவம் நடக்கறது  23.6.2012 சனிக்கிழமை மாலை 6 டூ நைட் 11. ( சம்பவம் சம்பவம்னு சொல்றாங்களே அதுக்கு ஒரே ஒரு அர்த்தம் தானா?) சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு மாயவரத்தான்க்கு செல்லுல ஒரு எஸ் எம் எஸ் தட்டி விட்டேன்.. சேலத்துக்கு ரயிலா? பஸ்சா? ... உடனே ரிப்ளை - கார்ல .....


யார் பக்கமும் சாயாத பாபா அல்ல ஒரு பக்கமா சாஞ்சு நிக்கும் பாபா

அப்போ நான் பெருந்துறை வந்துடறேன், பிக்கப் பண்ணிக்கறீங்களா? .....


ஒய் நாட் ஸ்யூர். 


அப்டினு ரிப்ளை.. அப்புறம் அவரே கால் பண்ணார்.. 

“ சாயங்காலம் 4 மணிக்கு கிளம்பறதா  ஐடியா. ஈரோடே வர்றதா இருந்தாலும் வந்துடறோம். ”\\

“ றோம்? பன்மை? கூட யாரு?”

 கணேஷ்.. என்கிற பிழை திருத்தி”


ஓ. ஓக்கே நீங்க கிளம்பும்போது சொல்லுங்க.. நான்  பெருந்துறை வந்து வெயிட் பண்றேன்.. பிக்கப் பண்ணிக்குங்க”


தேவைப்பட்டா ஈரோடே வந்துடறேன்.?





 வேணாம், அது உங்களுக்கு சுத்து வழி.. 19 கி மீ அதிகம் வந்துடும்.. அதனால நானே பெருந்துறை வந்துடறேன்..


அப்புறம் அவங்க அவினாசி கிராஸ் பண்றப்போ கன்ஃபர்மேஷன் கால் குடுத்தாங்க.. நான் கிளம்பி கலெக்டரேட் பஸ் ஸ்டாப்ல  நின்னேன்.. பெருந்துறை பஸ்ல ஏறி பெருந்துறை வந்தேன்.. அப்போ மணி 5 ஆகி இருந்துச்சு.. அவங்க வர இன்னும் அரை மணி நேரம் ஆகும்.. அதுக்குள்ள அவங்களை பற்றி ஒரு ட்ரெய்லர் ஓட்டிடறேன்..


மாயவரத்தான் 1973 ல பிறந்தவர்..() ஆனந்த விகடன் மாணவ பத்திரிக்கையாளர் போட்டில வெற்றி பெற்று அங்கே ஒர்க் பண்ணவர்.. இவர் ஆர்ட்டிகிள் பல ஜூ வி ல ஆ வி ல வந்திருக்கு,.,. ஜி போஸ்ட் கவுதம் இவர் செட் தான்.. ( சூர்ய கதிர் மாதம் இரு முறை இதழின் முன்னாள் கவுரவ ஆசிரியர்).. இவர் மலேசியாவில் ரத்தினக்கல் பிஸ்னெஸ் எல்லாம் பண்ணுனவராம்.. யார் அந்த ரத்தினம் என்ற விபரம் எல்லாம் சரியா கிடைக்கலை.. இப்போ கோவை வாசி..


பிழை திருத்தி என்கிற கணேஷ்.() இவர் ஊட்டி வாசி.. பிறந்தது, வளர்ந்தது, பல பெண்களின் வாழ்க்கையில் விளையாண்டது எல்லாமே ஊட்டில தான்.. பல பெண்கள் அவங்க வாழ்க்கைல தாயக்கரம், செஸ், கேரம் விளையாடும்போது அவரும் கூட விளையாண்டாரு. வேற ஏதும் இல்லை..




இவருக்கு பிழை திருத்தி என்ற பெயர் எப்படி வந்தது? அதுக்கு ஒரு சுவராஸ்யமான கதை உண்டு.. அதாவது ஆஃபீஸ்ல, பப்ளிக் ப்ளேஸ்ல யாராவது நமக்கு தெரிஞ்ச பொண்ணோ, தெரியாத பொண்ணோ லோ ஹிப்லயோ, லோ கட்லயோ டிரஸ் பண்ணிட்டு வந்தா நாம என்ன செய்வோம்? கமுக்கமா ரசிச்சிட்டு கம்முனு இருப்போம்.. சிலர் தன் ஃபிரண்ட்ஸ்சை கூப்பிட்டு தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்கற பாலிஸி பிரகாரம்..அவங்களுக்கும் அதை காட்டுவாங்க..


ஆனா நம்ம அண்ணன் கணேஷ் என்ன பண்ணுவார்னா  அவங்க செஞ்ச பிழையை கூப்பிட்டு சுட்டிக்காட்டுவாரு.. அதாவது “ இங்கே பாரம்மா.. இது இது இப்படி இருக்கு.. சண்டே ஈஸ் லாங்கர் தன் மண்டே..  ப்ளீஸ் கரெக்ட் இட்.. அப்டினு டக்னு சொல்லிடுவாரு.. இந்த மாதிரி லேடீஸ் பண்ற பிழைகளை எல்லாம் திருத்தறதால ஊட்டியில் உள்ள ஜேசீஸ் இளைஞர்கள் நற்பணி மன்றம் இவருக்கு இந்த பட்டத்தை கொடுத்திருக்கு.. பிழை திருத்தி... அண்ணன் அதையே  ட்விட்டர் கேண்டிலாவும் வெச்சுக்கிட்டார்..


இவரைப்பறி இன்னொரு சுவராஸ்யமான தகவல் இருக்கு.. அது முறைப்படி பாகம் 4 ல தான் வரனும்.. ஆனா பாருங்க.. இந்த தமிழ் சினிமா பார்த்து பார்த்து சஸ்பென்ஸ் மெயிண்ட்டெயின் பண்றதுக்குப்பதிலா இடைவேளைக்கு முன்னாலயே க்ளைமாக்ஸ் சீன்ல இருந்து 2 க்ளிப்பிங்க் முன் பாதிலயே காட்டி டெம்ப்போ ஏத்துவாங்களே,. அது பார்த்து பார்த்து எனக்கும் அது பழகிடுச்சு.. மிஸ்டர் அனாமிகா அண்ணன் பிழை திருத்தியை பற்றி சொன்ன தகவல் ஆக்சுவலி சேலம் பற்றிய பதிவில் தான் வரனும்.. இருந்தாலும் இப்பவே சொல்லிடறேன்..
 

 அண்ணன் பிழை திருத்தி தனது செல் ஃபோனில் உள்ள அரிய புகைப்படங்களின் கலெக்‌ஷனை காட்டு காட்டுனு காட்டறப்போ மாயவரத்தான் அதை க்ளிக் பண்ணி அவர் ட்விட்டர்ல போட்ட ஃபோட்டோ. இது ஒரு காபி பேஸ்ட் ஃபோட்டோ

 கார்ல அண்ணன் பிழை திருத்தியும்,( கணேஷ்) மிஸ்டர் அனாமிகா அண்ட் கோ 4 பேரும் போஉ இருக்காங்க.. அப்போ கார்ல பெட்ரோல் போட பெட்ரோல் பங்க் கிட்டே நிறுத்தி இருக்காங்க.. ( பின்னே பிளட் பேங்க்  முன்னாலயா நிறுத்தி இருப்பாங்க?)அப்போ அண்ணன் பிழை திருத்தி


“ இங்கே வேணாம்.. இங்கே கலப்பட பெட்ரோல் இருக்கும்..”

 அப்டியா? வேற எங்கே  நல்ல பெட்ரோல் இருக்கும்?


போங்க , சொல்றேன்

 அண்ணே.. ஹிந்துஸ்தான் பாரத் பெட்ரோல் பங்க் வந்தாச்சு.. இங்கே அடிக்கலாமா?


 ச்சே ச்சே.. இங்கே எல்லாம் வேணாம்..

 அப்போ எங்கே தான் அடிக்கறது?


இன்னும் போங்க.. எப்பவும் பெட்ரோல் பங்க் மெயின் சிட்டில அடிக்கக்கூடாது.. ஹை வேல தான் அடிக்கனும்.. அதே மாதிரி ஹோட்டலுமே பஸ் ஸ்டேண்ட், ரயில்வே ஸ்டேன்ட்ல சாப்பிட செலக்ட் பண்ணக்கூடாது.. கொஞ்சம் தள்ளித்தான் பார்க்கனும்.. அந்த மாதிரி..

சரிங்கண்ணே.. இது ஓக்கேவா?




அண்ணன் பிழை  திருத்தி உடன்

இப்போ அண்ணன் பிழை திருத்தி காரை விட்டு இறங்கி வலது கையை வலது இடுப்புல வெச்சு ( அவரோட இடுப்புல தான் )இடது கையை நீட்டி அங்கே இருக்கற பெட்ரோல் போடற பையனை பார்த்து “ ஏய்.. தம்பி.. இங்கே பெட்ரோல் நல்லாருக்குமா?:”அப்டினு கேட்டிருக்காரு,,


அதுக்கு அந்த பையன் “ ஏதோ சுமாரா இருக்கும்ணே”

அப்டினு பதில் சொல்லி இருக்கான்.. உடனே இவரு “ ஆங்க்.. ஏப்பா இங்கேயே பெட்ரோல் அடிச்சுக்கலாம்ப்பா.. அவனே சொல்லிட்டான்”

 இப்போ கார்ல உள்ளவங்க நிலைமையை கொஞ்சம் கற்பனை பண்ணிப்பார்த்துக்குங்க.. செம காண்ட் ஆகிட்டாங்க.. 

யோவ்.. ஒழுங்கா நாங்க அங்கேயே அடிச்சிருப்போம்.. எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி எங்களை எல்லாம் காய விட்டுட்டியேப்பா” அப்டினு கலாட்டா பண்ணி இருக்காங்க..

கட் த ஃபிளாஸ்பேக்.. அவங்க வந்துட்டாங்க..

மாயவரத்தான் ட்விட்டர் டி பில இருக்கற மாதிரியே தான் நேர்லயும் இருந்தாரு,, கணேஷ் கொஞ்சம் மாற்றம் இருந்தது.. கை கொடுத்து அறிமுகம் பண்ணிக்கிட்டோம்..


“ டீ சாப்பிட்டுக்கிட்டே பேசுவோமே?”

 சரி..வாங்க.. பஸ் ஸ்டேண்ட்ல ஒரு கடை இருக்கு, அங்கே போலாம்..


 வேணாம்ப்பா .. வேற ஒரு கடை இருக்கு.. அங்கே போலாம்னு  கூட்டிட்டு போனாங்க. பாருங்க நான் லோக்கல் ஆள் ( ம்க்கும், நீ லோக்கல்னு தான் எல்லாருக்கும் தெரியுமே?) எனக்கே தெரியலை.. ஆனா இவங்களுக்கு தெரிஞ்சுருக்கு..


பெருந்துறைல பழைய பஸ் ஸ்டேண்ட்க்கு பக்கத்துல  இன்ஃப்ரா டெக்ஸ்னு ஒரு எக்ஸ்போர்ட் கம்ப்பெனி.. அதுக்கு பக்கத்துல ஒரு பேக்கரி கடை.. அங்கே போனோம்.. அப்போ டைம் சரிஒயா 5.30.. அந்த கம்ப்பெனில இருக்கறவங்களுக்கு அதுதான் டீ டைம்.. இவங்க 2 பேரும் அதெல்லாம் தெரிஞ்சே தான் கரெக்ட்டா அந்த டைம்க்கு வந்தாங்களா? அல்லது எதேச்சையா அமைஞ்சுதான்னு தெரியலை..


காரை அங்கே நிறுத்தும்போதே தகராறு.. கடைக்காரர் அங்கே நிறுத்த வேணாம்..  தள்ளி நிறுத்துங்க. அந்த எக்ஸ்போர்ட் கம்ப்பெனி கார் வந்தா ஹார்ன் அடிச்சே கொல்வானுங்க..

 அப்டின்னாரு,,


 இன்னைக்கு ஒரு ஃபைட் கன்ஃபர்ம்னு நினைச்சேன்.. ஆனா ஆச்சரியம் பாருங்க.. மாயவரத்தான் எந்த சண்டையும் போடாம காரை தள்ளி நிறுத்திட்டு வந்துட்டார்..




 பதிவுலக வழக்கப்படி ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம் ( பதிவுல போட வேணாமா?)பிழை திருத்தி வெச்சிருக்கற கூலிங்க் கிளாஸ் என்னுதை விட நல்லாருந்தது. அதுல ரேபான்னு போட்டிருந்ததால அது ஒரிஜினல்னு நினைச்சு அண்ணே , 2 பேரும் டெம்பரவரியா கிளாஸ் மாத்திக்கலாம்.. ஃபோட்டோ எடுத்துக்கிட்டு எக்ஸேஞ்ச் பண்ணிக்கலாம்னேன். ஓக்கேன்னுட்டாரு.,.

 கார்ல , ஐ மீன் கார்க்கு வெளில நின்னு 3 ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம்..ரோட்ல போறவங்க எல்லாம் ஒரு மாதிரியா பார்த்தாங்க.. ஏன்னா ஊட்டி, கொடைக்கானல் மாதிரி டூர் ஸ்பாட்ல நீங்க என்ன பண்ணாலும் யாரும் எதுவும் கண்டுக்க மாட்டாங்க.. ஆனா பெருந்துறை மாதிரி  ஒரு ஊர்ல ஒரு மாதிரி பார்க்கத்தான் செய்வாங்க..

2 டீ , ஒரு பால் சொன்னோம்.. மாயவரத்தான் ஒரு பன் சாப்பிட்டார்.. கணேஷ் ஒன் பை டூ ( பன்னை)

  சாப்பிட்டுக்கிட்டு ட்விட்டர் வம்பு தும்புகள் பற்றி பேசிட்டு இருந்தோம்..


இங்கே இருந்து சென்னிமலை எவ்ளவ் துரம்?


 11 கி மீ தான்.. வாங்க  மலைக்கு போயிட்டு போகலாம்.

 இன்னொரு நாள் வர்றோம்.. இப்போவே டைம் ஆகிடுச்சு.. கிளம்பலாம்..


 நான் பில் பே பண்னப்போனேன். மாயவரத்தான் தடுத்து நானே குடுக்கறேன்.. ஏன்னா நான் தான் உன்னை விட சீனியர்னாரு,,


 எங்க ஊருக்கு வந்திருக்கீங்க... நான் தான் செலவு  பண்ணுவேன் ( 2 டீ ஒரு பால், ஒரு பன் என்றாலும் செலவு செலவு தானே..?)


சின்னத்தம்பி பெரிய தம்பி படத்துல ஓப்பனிங்க் ஷாட்ல சத்யராஜூம், பிரபுவும் ஒரு காமெடி ஃபைட் போட்டு கடைசி வரை பில்லே கொடுக்காம எஸ் ஆவேங்களே. அந்த மாதிரி ஆகிடுமோனு கடைக்காரர் பயந்துட்டார்.. ஏப்பா , யாராவது ஒருத்தர் பில்லைக்கொடுங்கப்பா அப்டின்னார். அப்புறம் சீனியரான மாயவரத்தான் பில் பே பண்ணூனார்.. யூத் நான் கம்முன்னு இருந்துட்டேன்..


தொடரும்...



டிஸ்கி 1 - ஆல்ரெடி ஈரோடு பதிவர் சந்திப்பு, சென்னை மெகா ட்வீட்டப் இதெல்லாம் ஓப்பனிங்க் நல்லாதான் போச்சு, ஃபினிஷிங்க் சரி இல்லைன்னு வடிவேல் பண்ணுன காமெடி மாதிரி ஆனதால செண்ட்டி மெண்ட்டலா.. மில்லி மெண்ட்டலா திங்க் பண்ணி என்ன முடிவு பண்ணி இருக்கேன்னா.. ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு தனி டைட்டில்.. ( ஏன்னா பாகம் 1, 2, 3 எல்லாம் போட்டா கிண்டல் பண்றாங்க..


டிஸ்கி 2 - என்னென்ன டைட்டில்ல பதிவு போடலாம்னு யோசிச்சு வெச்சிருக்கேன்னா


1. சேலம் லக்‌ஷமண்-ஸ்ருதி ஆர்க்கெஸ்ட்ரா - விமர்சனம்


2. சேலம் பதிவர் சந்திப்பு


3.சேலம் சாப்பாட்டுக்கடை


4. ஹோட்டல் ரூமில் நடந்த காமெடி கலாட்டாக்கள் (இரவு 12 டூ 2 ரூமில் நடந்தது என்ன/)


5. ஏற்காடு - ஒரு பார்வை


6.  திரைக்கு வர இருக்கும் , பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் ஒரு படத்தின் கதை திரைக்கதை


7. கமல் கலந்து கொண்ட சினிமா ஷூட்டிங்கில் நடந்த காமெடி கலாட்டா


8. மொக்கை ஃபிலிம் கிளப் - ஊட்டி பிளான்


9. சேலம் பெண்கள்  VS  ஈரோடு பெண்கள் ஒரு ஒப்பீடு


10. லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் ரசிகர்களா நீங்கள்?

11. தொலை தூர கார் பயணத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை


12. சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் சில கேள்விகள்

13. ஏரியில் போட்டிங்க் போவோர் கவனத்திற்கு


14. ஏற்காடு - சாப்பாட்டுக்கடை


15. மிஸ்டர் அனாமிகா பதிவர் சொன்ன சுவராஸ்யமான கேரக்டர்கள் - ஒரு அறிமுகம் ( ஆத்தா குரு)


16. பிரபல பதிவர்கள் சிம்பு- தனுஷ் ரேஞ்சுக்கு இருந்தவர்கள் திடீர் என ஆர்யா மாதவன் போல் நட்பு பாராட்டும் மர்மம் ( ஒரு ஃபிளாஸ்பேக் கதை)


17. பவர் ஸ்டார் டாக்டர் ஆக்டர் சீனிவாசன் - சேலம் மக்கள் சந்திப்பு பேட்டி


18. திருடா திருடி படத்தில் தனுஷ் இன் அப்பா கேரக்டரில் நடித்த பாடகர் கம் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் சேலத்தில் சந்தித்த பிரச்சனைகள்


19. இரவு நேரத்தில் திலை தூரப்பயணம் செய்கையில் கவனிக்க வேண்டியவை


டிஸ்கி 3 - டிஸ்கி 3 - ஒரே ஒரு டைம் சேலம் போய்ட்டு எதுக்கு இத்தனை பதிவுனு கேட்பவர்களூக்கு - இதயம் பேசுகிறது இதழில் மணியன் ஒரு நாட்டுக்கு போய்ட்டு வந்தா 34 வாரம் தொடர் எழுதறார். கல்கண்டு லேனா . தமிழ் வாணன் ஒரு டைம் ஊருக்கு போனா  50 தன்னம்பிக்கை கட்டுரை எழுதறார்.. ஏதோ ஏழைக்கு ஏத்த எள்ளுரண்டை. நான் முதல்ல  12 பதிவு தான் போடுவதா இருந்துச்சு, மாயவரத்தான் தான் ஒரு ட்வீட்ல 20 பதிவு போடப்போறார்னு நக்கல் அடிச்சார். அதான் 20 ஹி ஹி