Showing posts with label MURDER. Show all posts
Showing posts with label MURDER. Show all posts

Monday, October 20, 2014

15 வருடத்தில் 1 1/2 கோடி ரேப் -வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தேவை -ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ். கிருஷ்ணன் நேர்காணல்


தீண்டாமையின் பரிணாம வளர்ச்சிதானே வன்கொடுமை? - ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ். கிருஷ்ணன் நேர்காணல்

இந்தியாவில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் மிகவும் மூத்தவர் பி.எஸ். கிருஷ்ணன். பல்வேறு சமூகப் பிரிவு மக்களுக்கான திட்டங்களை உருவாக்குவதில் இந்திரா காந்தி முதல் இன்றைய பிரதமர் வரை பல பிரதமர்
களோடு இணைந்து செயலாற்றிய ஆழ்ந்த அனுபவம் பெற்றவர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் உருவாக் கத்திலும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமலாக்கத்திலும் பங்காற்றியவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பல சட்டதிட்டங்கள் உருவானதில் முக்கியப் பங்குவகித்தவர் பி.எஸ்.கிருஷ்ணன். ‘தி இந்து’வுக்காக அவரைச் சந்தித்தோம். 


இந்த நவீன காலத்தில் சில சாதிகளுக்கு மட்டும் ஏன் ஒரு தனிச் சட்டம்?
சாதிக்கு அல்ல. சமூகப் பிரிவுக்கு ஒரு நீதி எனும் சமூக முறைதான் பல நூறு வருஷமாக நம் நாட்டில் இருக்கிறது. சுதந்திரம் கிடைத்த பிறகுதான் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றானது. ஆனால், அது பெரும்பாலும் காகிதத்தில்தான் இருக்கிறது. தலித் மக்களும் பழங்குடிகளும் இப்போதும் அடிமட்டத் திலேயேதான் உள்ளனர்.
உதாரணமாக, ஒரு வயதுக்குள் சாகிற குழந்தைகளில் தலித் குழந்தைகள் அதிகம். மக்கள் தொகையில் சிறுபான்மையாக இருக்கும் தலித் மக்கள், விவசாயத் தொழிலாளிகளின் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ளனர். தலித் மக்களின் சராசரி ஆயுட்காலம் மற்றவர்களைவிடக் குறைவாகத்தான் இருக்கிறது. இதெல்லாம் சொல்வதென்ன?
இப்படித்தான் ரொம்ப காலமாக நடக்கிறது. அப்படிப்பட்ட மக்களுக்குச் சமூகப் பாதுகாப்பைத் தந்து முன்னேற்ற வேண்டும் என்பது இந்திய அரசியல் சாசனத்தின் கட்டளை. அதை நிறைவேற்றத்தான் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மாதிரியான சில சட்டங்களைக் கொண்டுவந்தோம். 



அரசியல் சாசனத்தில் வன்கொடுமைகள் என்ற வார்த்தை இல்லை. வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி பதிவான வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 90 சதவீதத்துக்கும் மேலே விடுதலை ஆகிவிடுகிறார்கள்; அதனால், அவையெல்லாம் பொய் வழக்குகளே. இந்த வழக்குகளால் மற்றவர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். இப்படியெல்லாம், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் எதிர்ப்பாளர்கள் வாதங்களை முன்வைக்கிறார்களே?


 
அரசியல் சாசனத்தின் 17-வது பிரிவு தீண்டாமை முற்றாக ஒழிக்கப்படுகிறது என்று சொல்கிறது. அதில் தீண்டாமை என்ற வார்த்தை மட்டும்தான் இருக்கிறது என்பது சரிதான். ஆனால், 46-வது பிரிவில் தலித்-பழங்குடி மக்களை சமூக அநீதியிலிருந்தும், எல்லா விதமான சுரண்டல் வடிவங்களிலிருந்தும் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதே. தீண்டாமையின் பரிணாம வளர்ச்சிதானே வன்கொடுமைகள்?
வழக்குகளில் பலர் விடுவிக்கப்பட்டுவிடுவதால் பொய் வழக்குகள் என்ற வாதத்தில் பொருள் இல்லை. கீழவெண்மணி படுகொலைகளில் 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட எல்லோரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். அதனால் 44 பேர் கொல்லப்பட்டது பொய்யாகிவிடுமா? 



சுதந்திரத்துக்குப் பிறகு தலித் மக்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படவே இல்லையா?
மற்ற சமூகப் பிரிவுகளின் மக்கள் முன்னேறும் வேகத்தில் இல்லை என்றாலும், தலித் மக்கள் முன்னேற்றப் பாதையில் பயணம் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், அடிப்படையான மாற்றம் எதுவும் இன்னும் வரவில்லை.
முன்னேற்றத்துக்கான பயணத்தில் ஏற்படுத்தப்படும் தடைகள்தான் இந்த வன்கொடுமைகள். சுதந்திரத்துக்குப் பிறகு அவை அதிகரித்திருப்பதன் காரணம் அதுதான். 1959-ல் தமிழ்நாட்டில் முதுகுளத்தூர் வன் கொடுமைகள் நடந்தன. 1968-ல் கீழவெண்மணி சம்பவம். நமக்கும் சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று நம்பிக்கையோடு தலித் மக்கள் நிமிர்ந்து நிற்க முயன்ற இடங்களிலெல்லாம் இந்தியா முழுவதும் வன்கொடுமைகள் அதிகரித்தன. அதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை உருவாக்கினோம். 


வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஏற்கெனவே இருக்கும் போது, எதற்கு இன்னொரு அவசரச் சட்டம்?
வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-ல் அமலுக்கு வந்தது. ஆனால், அது எப்படி அமல்படுத்தப்பட்டது தெரியுமா? 1995 முதல் 2010 வரைக்குமான காலகட்டத்தில் சுமார் ஒன்றரைக் கோடிப் பேர் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில், பலர் காவல்நிலையம் வந்து புகார் தரும் வலுகூட இல்லாமல் இருக்கின்றனர். அப்படி தைரியம் வந்து, காவல் நிலையப் புகார் தரும் தலித்துகள், பழங்குடிகளின் புகார்களெல்லாம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் பதிவுசெய்யப்படுவதில்லை.
அப்படிப் பதிவுசெய்ய வைக்கவே ஒரு பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. அப்படிப் பதிவு செய்தவர்கள் சுமார் ஐந்தரை லட்சம் பேர். அந்த வழக்குகளெல்லாம் காவல் நிலையம் தாண்டி நீதிமன்றத்தின் படி ஏறுவதே பெரிய விஷயம். அப்படி ஏறிய வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டு, இறுதியில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை என்று விடுதலை செய்துவிடுவதுதான் இங்கு அதிகம் நடக்கிறது. வன்கொடுமை வழக்கு களில் நீதிமன்றத்தால் 0.5% முதல் 8% பேர் வரை மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறார்கள்.
வாச்சாத்தி மலைக் கிராமத்தில் பழங்குடி மக்கள் மீது வன்கொடுமைத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தையே எடுத்துக்கொள்ளுங்களேன். நீதி கிடைப்பதற்குக் கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் ஆனதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதிலும், பாதிக்கப் பட்டோருக்கு சட்டப்படி அரசு தர வேண்டிய நஷ்டஈடு இன்னமும் வழங்கப்படவில்லை. ஆனாலும், வன்கொடுமைகள் செய்த அதிகாரிகள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் தண்டனை பெற்றது இந்த வழக்கில்தான்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் தப்பிப்பதற்குப் பல ஓட்டைகள் ஏற்பட்டு விட்டன. அவற்றைச் சரிசெய்யவே அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 



அவசரச் சட்டம் காலாவதி ஆகிவிட்டதே?
ஆமாம். கடைசி நேரத்தில் இந்த அவசரச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் போய்விட்டது. தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுவுக்குப் போயிருக் கிறது. மீண்டும் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப் படும் என நம்புகிறேன். 


இன்னும் எவ்வளவு நாட்களுக்குத்தான் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தேவைப்படும்?
தீண்டாமையும் வன்கொடுமைகளும் இல்லாமல் போகும்போது இத்தகைய சட்டங்களும் இல்லாமல் போகும். சாதி சமத்துவம் ஏற்படும்வரை ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவு மக்களுக்குத் தனிச்சட்டம் என்பதுதான் ஜனநாயகம். இந்திய ஜனநாயகத்தின் வடிவமும் ஆன்மாவும் சமூகநீதியே. சாதி சமத்துவம் ஏற்படாமல் இந்தியாவில் ஜனநாயகமே மலராது. சாதி சமத்துவத்தின் வழியாக ஜனநாயகத்துக்குள் நாம் பயணம் செய்வதற்கான வழிகளில் ஒன்றாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருக்கும். இந்தியாவில் அதிசயம் அற்புதங்கள் எதுவும் நடக்கவில்லை என்றால், மிகவும் குறைவாக மதிப்பிட்டாலும்கூட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தேவை ஒரு நூறாண்டு காலத்துக்கு இருக்கும். 


த. நீதிராஜன்,
தொடர்புக்கு: [email protected]


நன்றி - த ஹிந்து 

Thursday, November 01, 2012

கோவை இரட்டை கொலை வழக்கில் தீர்ப்பு , கேஸ் விபரம்

 மாலை மலர் செய்தி

கோவை, அக். 29-
கோவை ரங்கே கவுடர் சித்தி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித் ஜெயின். ஜவுளி வியாபாரி. இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதிகளின் செல்ல மகள் முஸ்கின் (வயது 10). அருமை மகன் ரித்திக் (7).
கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதி காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதற்காக புறப்பட்டு வந்தனர். அவர்களை கடத்தி பணம் பறிக்க வேண்டும் என திட்டமிட்டிருந்த டிரைவர் மோகனகிருஷ்ணன் என்ற மோகன்ராஜ் தனது திட்டப்படி கால் டாக்சியில் அவர்களை கடத்திச் சென்றான்.
திட்டத்தை அரங்கேற்ற பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியை சேர்ந்த நண்பன் மனோகரனையும் சேர்த்துக் கொண்டான். உடுமலையை அடுத்த தீபாலப்பட்டி பி.ஏ.பி. வாய்க்கால் பகுதிக்கு சென்ற அவர்கள் சிறுமி முஸ்கினை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
எங்கே நாம் செய்த தவறு வெளியே தெரிந்து விடுமோ என்ற பயத்தில் முஸ்கின், ரித்திக்கை கால்வாயில் தள்ளி கொன்றனர். இந்த கொடூரங்களை செய்த மோகன்ராஜ், மனோ கரனை போலீசார் சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர்.
கொலை நடந்தது எப்படி என்று விசாரிக்க 2010 நவம்பர் 9-ந்தேதி கோவையில் இருந்து வேனில் அழைத்து சென்றனர். வேன் செட்டிப்பாளையம் ரோட்டில் சென்றபோது போலீசை தாக்கிவிட்டு மோகன்ராஜ் தப்ப முயன்றான். அவனை போலீசார் என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொன்றனர்.
இதைத் தொடர்ந்து மனோகரன் மீதான வழக்கு விசாரணை 2011 ஜூன் மாதம் 23-ந் தேதி கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கியது. 7 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் வழக்கு கோவை மகளிர் கோட்டுக்கு மாற்றப்பட்டது.
வழக்கில் 121 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் 47 சாட்சிகள் அரசு தரப்பில் விசாரிக்கப்பட்டனர். 69 ஆவணங்களும், 38 சான்று பொருட்களும் ஒப்படைக்கப்பட்டன.எதிர் தரப்பில் 5 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 2 ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன.
வழக்கின் விசாரணை அதிகாரியான போலீஸ் இன்ஸ்பெக்டர் கனக சபாபதி தொடர்ந்து 3 நாட்கள் சாட்சியம் அளித்தார். கடந்த செப்டம்பர் மாதம் 4-ந்தேதி நீதிபதி சுப்பிரமணியம் குற்றஞ்சாட்டப்பட்ட மனோகரனிடம் வழக்கு தொடர்பாக 155 கேள்வி கேட்டு பதிலை பதிவு செய்தார்.
கடந்த 15-ந்தேதி சிறப்பு அரசு தரப்பு வக்கீல் சங்கர நாராயணனும், 22-ந்தேதி எதிர்தரப்பில் வக்கீல் சர்மிளாவும் வாதாடினர்.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று (29-ந்தேதி) தீர்ப்பு கூறப்படும் என்று நீதிபதி சுப்பிரமணியம் அறிவித்திருந்தார். பரபரப்பான இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட இருந்ததால் கோர்ட்டு வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் மனோகரன் இன்று காலை 10 மணி அளவில் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். 10.30 மணி அளவில் நீதிபதி சுப்பிரமணியம் கோர்ட்டுக்கு வந்தார். முதல் வழக்காக முஸ்கின்- ரித்திக் கொலை வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது நீதிபதி சுப்பிரமணியம் குற்றஞ்சாட்டப்பட்ட மனோகரனிடம், உன் மீது கூட்டு சதி, குழந்தைகளை கடத்துதல், கூட்டாக சேர்ந்து கற்பழித்தல், கொலை செய்தல், பிணையாக வைத்து பணம் பறிக்க கடத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. உனக்கு வழங்கப்படவுள்ள தண்டனை குறித்து தெரியுமா? என்று கேட்டார்.
அதற்கு மனோகரன் தெரியாது என்றார். அதைத் தொடர்ந்து மனோகரனின் வக்கீல் ஷர்மிளாவிடம் நீங்கள் ஏதும் கூற விரும்புகிறீர்களா? என்று நீதிபதி கேட்டார். அதற்கு ஷர்மிளா இல்லை என்று பதிலளித்தார்.
இதைத் தொடர்ந்து வருகிற 1-ந்தேதி தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என்று நீதிபதி சுப்பிரமணியம் கூறினார்.

 

 தினமணி

கோவையில் இரட்டைக் கொலை: மனோகரனுக்கு தூக்கு தண்டனை


கோவையில், இரண்டு பள்ளிக் குழந்தைகளைக் கடத்திச் சென்று கொலை செய்த குற்றவாளி மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்துள்ளார்.


கோவையில் 2010ஆம் ஆண்டு முஸ்கான், ரித்திக் ஆகிய குழந்தைகளைக் கடத்திச் சென்று, முஸ்கானை பாலியல் பலாத்காரம் செய்து பிறகு இருவரையும் கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்து அக்டோபர் 29ம் தேதி, இந்த வழக்கில் மனோகரன் என்பவர் குற்றவாளி என்று நீதிபதி எம்.பி.சுப்பிரமணியன் தீர்ப்பளித்திருந்தார். குற்றவாளிக்கான தண்டனையை இன்று அறிவித்த நீதிபதி, மனோகரனுக்கு 3 ஆயுள் தண்டனை மற்றும் சாகும் வரை தூக்கிலிடுமாறு தீர்ப்பளித்தார்.




கோவை ஜவுளிக்கடை உரிமையாளர் ரஞ்சித். இவரது குழந்தைகள் முஸ்கான் (11), ரித்திக் (8). இருவரும், காந்திபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில், 2010 அக்டோபர் 29-ஆம் தேதி குழந்தைகள் இருவரும் கடத்தப்பட்டனர். இதில், சிறுமி முஸ்கான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர், பொள்ளாச்சி அருகே உள்ள பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் இருவரும் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.



இந்த இரட்டைக் கொலை தொடர்பாக குழந்தைகளை வேனில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஓட்டுநரான பொள்ளாச்சி, அங்கலங்குறிச்சியைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன், அதே பகுதியைச் சேர்ந்த அவரது கூட்டாளி மனோகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 2010 நவம்பர் 9-ஆம் தேதி குழந்தைகளைக் கொலை செய்த இடத்தைக் காட்டுவதற்காக மோகனகிருஷ்ணனை போலீஸார் வேனில் அழைத்துச் சென்றனர். கோவை செட்டிபாளையம் அருகே போலீஸ் வேன் சென்றபோது, தப்ப முயன்றதால் என்கவுன்ட்டரில் மோகனகிருஷ்ணன் சுட்டுக் கொல்லப்பட்டார்; மனோகரன் சிறையிலடைக்கப்பட்டார்.



மனோகரன் மீதான இந்த வழக்கு விசாரணை 2011 ஜூன் 23-ஆம் தேதி கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கியது. வழக்கில் மொத்தமாக 121 பேர் அரசுத் தரப்பு சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர். 69 ஆவணங்களும், 38 சான்று பொருள்களும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.



7 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை அரசுத் தரப்பில் 47 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அதில், 9 பேரிடம் மறு குறுக்கு விசாரணை நடைபெற்றுள்ளது. எதிர்த்தரப்பில் 6 பேர் சாட்சிகளாக அனுமதிக்கப்பட்டு 5 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.



அக்டோபர் 22-ஆம் தேதியுடன் அரசுத் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.பி.சுப்பிரமணியன், அக்டோபர் 29-ஆம் தேதி தீர்ப்பு அளிப்பதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலையில் நீதிபதி முன், மனோகரனை போலீஸார் ஆஜர்படுத்தினர். அரசுத் தரப்பில் வழக்குரைஞர் சங்கரநாராயணன் ஆஜரானார். எதிர்த்தரப்பில் வழக்குரைஞர் ஷர்மிளா ஆஜரானார்.



இந்த வழக்கில் ஆள் கடத்தல், கூட்டுச் சதி, கற்பழித்தல், கொலை செய்தல், சாட்சியங்களை சிதைத்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ், சாட்சிகளின் விசாரணை அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் மனோகரனைக் குற்றவாளி என்று அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார். இத் தீர்ப்பு குறித்து தான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என நீதிபதியைப் பார்த்து மனோகரன் கூறினார்.



மனோகரனுக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனை அளிக்க வேண்டுமென அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.



அரசு வழக்குரைஞர் சங்கர நாராயணன், ஏற்கெனவே இதுபோன்று குழந்தைகளைக் கடத்தி, கற்பழித்துக் கொலை செய்த 2 வழக்குகளில் உயர் நீதிமன்றமும், 5 வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை அளித்துள்ளது. மேலும், இதேபோல் ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியதை, உச்ச நீதிமன்றம் விசாரித்து தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது என்றார்.

நன்றி - தினமணி , மாலை மலர் 

Monday, September 17, 2012

திருச்செங்கோடு விவேகானந்தா காலேஜ் மாணவி கேங்க் ரேப் & மர்டர் , மறைக்கப்பட்ட உண்மைகள்

http://mmimages.maalaimalar.com/Articles/2012/Sep/86573ad0-bf78-4bae-b9db-e71f5c0ebd88_S_secvpf.gif 

 ஈரோட்டில் இருந்து 19 கிமீ  தொலைவில் உள்ளது திருச்செங்கோடு.அங்கிருந்து 7 கிமீ தொலைவில் எளையாம்பாளையம் என்னும் ஊர் உள்ளது. புகழ் பெற்ற  உலகப்பம்பாளையம் பஸ் ஸ்டாப்புக்கு முந்திய ஸ்டாப். அங்கே தான் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி . இருக்கிறது.

Address:

Elayampalayam,
Tiruchengode Tk,
Namakkal - 637205,
Tamil Nadu.





23000 மாணவிகள் படித்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கான கல்வி நிறுவனம் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி .மிக நல்ல பெயர் கொண்ட காலேஜ். இங்கே கல்வித்தரம் மிகச்சிறப்பாக இருக்கும். எனவே பெற்றோர்கள் தங்கள் பெண்களை இங்கே படிக்க வைக்க போட்டி போட்டு காலேஜில் சேர்க்கிறார்கள். 


கடந்த  2 வருடங்களில் இந்த காலேஜ் பல மர்ம மரணங்களின் தாயகமாக இருந்து வருகிறது.  தற்கொலை  செய்யும் மாணவிகள் பெருகி வருகிறார்கள்.அவை எல்லாம் நிஜமான தற்கொலையா? கொலை செய்து தற்கொலை நாடகமா என்பது விசாரனைக்குரியது.


இங்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு மாணவியை 7 மர்ம நபர்கள் கல்லூரிக்குள் வைத்து கற்பழித்துக் கொன்றுள்ளனர். இதனை மறைக்க கல்லூரி நிர்வாகம் ,மாணவியின் பெற்றோருக்கு 2 கோடி ரூபாய் கொடுத்துள்ளது.



போலீசாரிடம் கல்லூரி நிர்வாகம் இது ஒரு தற்கொலை தான் என்று விசாரணையை மூடிவிட பேரம் பேசி உள்ளார்கள். . இதனை ஏற்றுக்கொள்ளமுடியாத மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் .இது போல்  சம்பவம் நடப்பது இது மூன்றாம் முறையாம்.



http://www.infinitecourses.com/admin/RelatedImages/Institutes/634733898184859200_medical.jpg




விவேகானந்தா கல்லூரியில் படிக்கும்  பல  மாணவிகள் ஃபேஸ்புக்கில் புலம்பி இருக்கிறார்கள். ஒரு மாணவி ட்விட்டரில் இருக்கும் பாடல் ஆசிரியர் விவேகாவிடம் இந்த தகவலை சொன்னார்கள்.
அவர்  ஜூனியர் விகடனுக்கு தகவல் சொல்லி இருக்கிறார். ஆனால் இது சம்பந்தமான உண்மையான தகவலோ , செய்தியோ எந்த ஒரு தமிழ் ஊடகத்திலும் வந்ததாகத்தெரியவில்லை.. நாளிதழ்களிலும் வரவில்லை.. வந்ததெல்லாம் தற்கொலை என்ற செய்தியே..


 தங்கள் மகளின் பாதுகாப்பிற்காக பெண்கள் கல்விநிலையத்தை நாடி வரும் பெற்றோர்களின் நிலை என்ன ?


கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் காயத்ரி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அந்த காலேஜிலேயே மிக அழகானவர் என்றும் பலர் கண் இவர் மேல் என்றும் சொல்லப்படுகிறது.


 கெமிஸ்ட்ரி லேப் அசிஸ்டென்ஸ் 4 பேர் , ஒரு ஆஃபிஸ் கிளார்க் , ஒரு லெக்சரர் ,மற்றும் ஒரு HOD  மொத்தம் 7 பேர் சேர்ந்து கல்லூரி வளாகத்துலேயே ரேப் செஞ்சிருக்காங்க.. பின் கொலைசெஞ்சிருக்காங்க 

 காயத்ரியிடம் ஒரு லெக்சரர் அடிக்கடி வழிந்ததாகவும், தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாகவும்  மாணவிகள்  சொல்கிறார்கள்


பெண்ணின் பெற்றோரிடம் தூக்கு மாட்டிக்கிட்டு இறந்துடுச்சு என்று சொல்லி இருக்காங்க. 2 கோடி பேரம் பேசி இருக்காங்க.. போலீஸ்க்கு பணம் எவ்வளவு போச்சுன்னு தெரியல.. பாடி போஸ்ட்மார்ட்டமே பண்ணலை../ பின் பெற்றோரின் பிரஷருக்குப்பின் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது. அது எந்த அளவுக்கு உண்மையாக நடந்தது என்பது தெரியவில்லை


பெண்ணின் உறவினர் நாமக்கல் கலெக்டராம். அவர் மூலம் பெண்ணின் பெற்றோர் நீதி கிடைக்க போராடி உள்ளனர்.. ஆனால் விவேகானந்தா கல்லூரி நிர்வாகம் திமுக முக்கியப்பெரும்புள்ளியாம்.. அதனால் பல மேலிட பிரஷர் வந்திருக்கு.  

 



 கல்லூரி நிர்வாகத்திடம் சில கேள்விகள் 


1. மடில கனம் இல்லைன்னா வழில  பயம் இல்லை. உங்க மேல தப்பில்லைன்னா  தன்னிலை விளக்கம் கொடுக்கலாமே? ஏன் தர்லை?கல்லூரி வளாகத்துக்குள் ஏன் மீடியாக்களை வர விடுவதில்லை? 




2. கல்லூரி பெயர் கெட்டுப்போயிடும் என்று சொல்கிறீர்கள், அப்போ இதே போல்  தொடர்ச்சியாக  மாணவிகள் கெட்டுப்போனால் பரவாயில்லையா? 


3. இது ஒண்ணும் எக்ஸாம் டைம் இல்லை. எக்சாம்ல ஃபெயில் , அரியர்ஸ் விழுந்துடுச்சு அதனால மனம் உடைந்து தற்கொலை செய்துட்டான்னு ரீல் விட.. 



4. குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஊழியர்களை அப்படியே பணியில் இருக்க அனுமதித்தால் அவர்கள்  ருசி கண்ட பூனைகள் ஆகி தங்கள் பணியை தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள், நீங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு  நட்ட ஈடு கொடுத்துக்கொண்டே இருப்பீர்களா? 



5. இப்போது இருக்கும் களங்கத்தை போக்க அனைத்து ஆண் ஊழியர்களையும் நிறுத்தி விட்டு பெண் ஊழியர்களை நியமித்தால் தான் மாணவிகளின் பயம் போகும்.. அவர்கள் கோரிக்கையை ஏன் ஏற்கவில்லை?



6. சீல் வைக்கப்பட்டிருக்கும் காலேஜால் உங்களுக்கு நேரடி பாதிப்பு இப்போ இல்லை. ஆனா 20,000 மாணவர்கள் கதி என்ன? அவங்க எப்படி கல்வியை தொடருவாங்க?


இது பற்றி தினமணியில் வந்த செய்தி 


http://www.infinitecourses.com/admin/RelatedImages/Institutes/634733898023866917_hostel.jpg


நாமக்கல்லில் மாணவி தற்கொலை : மாணவிகள் போராட்டம், கல்லூரிக்கு விடுமுறை

First Published : 08 Sep 2012 01:59:02 PM IST


நாமக்கல், செப்., 08 : நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி கல்லூரி விடுதியில், மாணவி காயத்ரி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், மர்மம் இருப்பதாகக் கூறி கல்லூரி மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆனால், தேர்வில் தோல்வி அடைந்ததால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த சூழ்நிலையில், கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவி தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 மாலை மலர் செய்தி 

http://www.infinitecourses.com/admin/RelatedImages/Institutes/634733898312311423_mess.jpg
 திருச்செங்கோடு கல்லூரி மாணவி இறந்தது எப்படி? பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ள காட்டேரி, வேப்பனம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணி புரிந்து வருகிறார். இவரது மகள் காயத்ரி (வயது 19). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக்.ஐடி 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 2-ந் தேதி இவர் கல்லூரி விடுதி அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இந்த நிலையில் மாணவி காயத்ரி சாவில் மர்மம் இருப்பதாக கூறி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மாணவி காயத்ரியின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரப்பட்டது. டீன் வள்ளிநாயகம் தலைமையில் மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். இந்த பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

பரிசோதனை அறிக்கையை நேற்று மாலை மாணவியின் உறவினர்களிடமும் திருச்செங்கோடு ரூரல் போலீசாரிடமும் சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் வள்ளியநாயகம் வழங்கினார். அந்த அறிக்கையில் மாணவி காயத்ரி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதி படுத்தப்பட்டு உள்ளது. மாணவியின் உடலில் ரத்தக் காயங்கள் எதுவும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருந்தபோதிலும் மாணவியின் உடல் பாகங்கள் தடயவியல் சோதனைக்கும், ரசாயன பரிசோதனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் கிடைத்த பிறகு தான் மாணவி எப்படி இறந்தார் என்பது உறுதி செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

காயத்ரி சாவுக்கு பிறகு மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் கல்லூரி நிர்வாகம் கல்லூரியை காலவரையின்றி மூடி உள்ளது. கல்லூரி திறக்கும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதியில் தங்கி இருந்த மாணவிகள் அவர்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.



ட்விட்டர் நண்பர்


இந்த ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டவர்  கூறியது

Murugesan Vijayakumar அன்பின் நண்பர்களுக்கு, கடந்த மூன்று தினங்களாக திருச்செங்கோடு தனியார் கல்லூரி மாணவியின் மரணம் குறித்து பல்வேறு விதமான வதந்திகள் செல்போன்கள் வாயிலாகவும், இணையம் வாயிலாகவும் பரவி வருகிறது. ஒரு பத்திரிகையாளன் என்ற முறையிலும், இந்த சம்பவத்தை நேரில் பார்த்து விசாரித்து வருபவன் என்ற முறையிலும் சில விளக்கங்களை இங்கே தர கடமைப்பட்டுள்ளேன்.
 சில அரசியல் ஆதயம் தேடும் அமைப்புகளாலேயே இந்தபிரச்சனை தற்பொழுது பெரிதுபடுத்தப்பட்டுள்ளது என்பது எங்களது விசாரணையில் தெரியவந்தது.ஒவ்வொரு மீடியா நிறுவனங்களுக்கும் அனாமேதய போன் கால்கள் வந்தன. பேசுபவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.இதில் எங்களுக்கு சந்தேகம் எழவே தீவிர விசாரணையில் இறங்கினோம். 
மாணவியின் உடல் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பொழுது அவரது உடலை நேரில் பார்த்தேன்.இறந்த மாணவி தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் சில இயக்கங்கள் மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி மாணவியின் உறவினர்களையும் சேர்த்துக் கொண்டு மருத்துவமனையின் முன்பு மறியலில் ஈடுபட்டனர். 
 இதனையடுத்து மாணவி காயத்ரியின் உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு டீன் வள்ளிநாயகம் தலைமையில் மூன்று மருத்துவர்கள் இறந்து போன மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இந்த பிரேத பரிசோதனை முழுமையும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று மாலை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.இதன் நகல் மாணவியின் தாய் மாமா பழனிசாமியிடம் திருச்செங்கோடு ரூரல் போலீசார் ஒப்படைத்துள்ளனர். 
அந்த பிரேத பரிசோதனை அறிக்கையை நானும் வாசித்தேன். அதில் மாணவியின் மரணம் சம்பவம் நடந்த அன்று (2.9.2012) 23-36 மணி நேரத்திற்குள் நடந்திருக்கலாம் என்றும், மாணவியின் மரணம் தூக்கிட்டு கொண்டதால் கழுத்து எழும்பு முறிவு ஏற்பட்டும், மூச்சுகுழாய் உடைந்தும் மரணம் ஏற்பட்டுள்ளது என்றும், மாணவியின் உடல் தூக்கில் தொங்கியதால் இரத்த ஓட்டம் நின்று அவரது கால் பகுதியில் ரத்தம் தேங்கி பாதங்கள் நீண்டு வளைந்துள்ளன என்றும், ரத்தம் ஆங்காங்கே நின்றதால் உடல் கறுத்து,தோல்களில் நிற மாறுதல் ஏற்பட்டுள்ளதாகவும் ,மாணவியின் உடலில் காயங்களோ, பலாத்காரத்திற்கான தடையங்களோ இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
 இது முழுமையான தற்கொலை என முதல் கட்ட பிரேதபரிசோதனை அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. ##




டிஸ்கி - இந்த பதிவில் குறிப்பிட்ட கல்லூரி சம்பந்தப்பட மாணவிகள் யாராவது கமெண்ட் போட்டால்  உங்கள் உண்மையான பெயரை போட வேண்டாம். அது உங்கள் பாதுகாப்புக்கு ஏற்றது அல்ல



திருச்செங்கோடு வித்ய விகாஸ் பள்ளிக்கூடத்தில்  இதே போல் ஒரு மாணவி போன வாரம் , ஜன்னல் கண்ணாடியை உடைத்து அதை  தன் கையில் குத்திக்கொண்டார் என்று  ஒரு கேஸ் ஒன்றும் உள்ளதாகவும் ஒரு மாணவியின் பெற்றோர் என்னிடம் கூறினர். அது பற்றி விபரம் தெரிந்த  மாணவ மாணவிகள்   9842713441 , 94863 13441 செல்லிலோ  [email protected]  என்ற மெயிலிலோ விபரம் தெரிவிக்கவும்..