Showing posts with label KUSHPU. Show all posts
Showing posts with label KUSHPU. Show all posts

Saturday, February 09, 2013

குஷ்பூ தான் அடுத்த சி எம்மா? என்ன கொடுமை சுந்தர் சி சார் இது?

 
 
தி மு.க-வைப் பொறுத்தவரை திருச்சியை 'திருப்புமுனை' என்பார்கள். அப்படி ஒரு திருப்புமுனைக்கான விவாதங்களை இன்று திருச்சி தொடங்கி வைத்துவிட்டது. 'கருத்​துக்குப் பதில் சொல்ல செருப்பா?' என்று தி.மு.க-வுக்குள்ளேயே முகச்​சுளிப்புகளும் உடனே தொடங்கி​விட்டது!'' - சிறியதொரு வருத்தம் கலந்த முகபாவத்தோடு கழுகார் சொன்னார்.  
 
 
 
கடந்த வியாழன் அன்று வெளியான 'ஆனந்த​விகட’னில் நடிகை குஷ்பு ஒரு பேட்டி கொடுத்திருந்தார். 'தி.மு.க-வின் அடுத்தத் தலைவர் யார்?’ என்பது தொடர்​பான கேள்விகளுக்கு பதில் அளித்த குஷ்பு, 'தலைவர், பேராசிரியர் எல்லாரும் இது சம்பந்தமா கலந்து பேசி முடிவு எடுப்பாங்க. தலைவர் மட்டும் முடிவு எடுத்துட்டதால, அடுத்தத் தலைவர் தளபதியா​தான் இருக்கணும்னு அவசியம் இல்லை.



 அது கட்சியில் யாராகவும் இருக்கலாம். கட்சியின் பொதுக்குழு கூடித்தான் அதை முடிவு எடுக்க வேண்டும்’ என்று சொல்லி இருந்தார். பேட்டியைத் தொடர்ந்து எழுந்துவிட்ட கலாட்டாக்களைப் பற்றித்தான் விரிவான தகவல்களோடு வந்திருந்தார் கழுகார்.


''இந்தப் பேட்டி இடம்பெற்ற 'ஆனந்த விகடன்' இதழ் கடைகளில் வெளியானது வியாழக்கிழமை காலை... கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவாவின் மகள் திருமணம் அன்றுதான்! கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட அனைத்து தி.மு.க. பிரமுகர்களும் திருச்சியில் இருந்தார்கள். கட்சியின் இன்னும் பல முக்கியஸ்தர்களும் கோட்டை மாநகரில் குவிந்​திருந்தனர்.




 குஷ்பு பேட்டியைப் படித்ததுமே கே.என்.நேரு, டி.ஆர்.பாலு ஆகியோருக்கு ஏக டென்ஷன் ஏறிவிட்டது. உடனடியாக இது ஸ்டாலினுக்கும் கருணாநிதிக்கும் போனது. 'தலைவர் பதவி பற்றி கருத்து சொல்ல இவர் யார்? குஷ்புவுக்கு யார் இப்படி எல்லாம் பேட்டி கொடுக்கும் அதிகாரத்தைக் கொடுத்தது?’ என்று  கொந்தளித்தனராம். பல்வேறு ஊர்களில் இருந்தும் ஸ்டாலினுக்கு கலவையான கருத்துக்கள் போனில் வர ஆரம்பித்தன.



 'தேவை இல்லாமல் குஷ்புவை வளர்த்துவிட்டு இப்போ அவஸ்தைப்படுறோம்’ என்று முன்னாள் அமைச்சர்கள் தங்களுக்குள் கூடிப் பேசிக்கொண்டனர். குஷ்புவிடம் விளக்கம் கேட்கலாம் என்று சிலரும், அவரைக் கட்சியை விட்டு நீக்கிவிடலாம் என்று சிலருமாக கருத்து சொல்ல ஆரம்பித்தனர். 'உள்கட்சி விவகாரம் பற்றி அ.தி.மு.க-வில் இப்படி எல்லாம் பேச முடியுமா?’ என்று சிலர் ஒப்பீட்டு பட்டிமன்றம் நடத்தி​​னார்கள். 'கட்சிக்குள் வந்து மூணு வருஷம்கூட ஆகாதவர்... தலைமையைத் தீர்மானிக்கும் இடத்துக்கு வந்துவிட்டாரா?’ என்றும் கேள்விகள் எழும்பியது. அத்தனையுமே கருணாநிதி, ஸ்டாலின் காதுக்கும் போனது!''


''குஷ்பு ரியாக்ஷன்?''


''சிவா வீட்டுத் திருமணத்தில் பங்கேற்​பதற்காக அவரும் திருச்சிக்கு வந்திருந்தார். ஃபெமினா ஹோட்டலில் தங்கி இருந்தார். அதுதான் வில்லங்கம் ஆகிவிட்டது. நடக்கப் போகும் விபரீதத்தை உணராத குஷ்பு, சங்கம் ஹோட்டலில் இருந்த ஸ்டாலினை நேரில் சந்தித்து விளக்கம் தர எண்ணினாராம். ஆனால், 'ஸ்டாலின்தான் சந்திக்க மறுத்துவிட்டார்’ என்று தி.மு.க-வினர் சொல்கிறார்கள்.



 இதைத் தொடர்ந்து திருமண விழா நடந்த தேசியக் கல்லூரி விளையாட்டு மைதானத்துக்கு ரொம்ப காஷ§வலாகவே வந்தார் குஷ்பு. எதுவுமே நடக்காத மாதிரி குஷ்புவை மேடையிலும் அனுமதித்தார்கள். கருணாநிதியின் அருகில் வந்து ஏதோ சிரித்துப் பேசிச் சென்றார். மேடையில் அவரை பேசச் சொன்னார்கள். 



'குடும்பம் என்றால் சண்டைச் சச்சரவு இருக்கும். அதைச் சமாளித்து வாழ்க்கையை வாழ வேண்டும்’ என்று யதார்த்தமாக அறிவுரை சொல்லிச் சென்றார். ஃபெமினா ஹோட்டலுக்கு லாபியில் சற்றே ரிலாக்ஸாக அவர் உட்காரவும் சென்னையில் அவரது வீட்டின் மீது ஒரு கும்பல் கல் வீசித் தாக்கிய தகவல் வரவும் சரியாக இருந்தது. 'நான் அப்படி ஒன்றும் தவறாகச் சொல்லிவிடவில்லையே’ என்று அருகில் இருந்தவர்களிடம் சொன்னாராம்!''


''கருத்துச் சண்டைதான் அவருக்குப் புது​சில்லையே...!''



''ஆனால், குஷ்புவை மேடை ஏற்றி வாழ்த்தச் சொன்​னது, மண அரங்கில் முதல் வரிசையில் இருந்த ஸ்டாலினின் மனைவியை கொந்தளிக்க வைத்துள்ளது. உடனடியாக அங்கிருந்து கிளம்பி ஹோட்டலுக்கு வந்துவிட்டாராம் அவர். 'குஷ்புவை யார் பேசச் சொன்னது?’ என்று பிறகு கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனிடம் அவர் சீறியதாகவும் சொல்லப்படுகிறது. 



திருமணம் முடிந்து ஹோட்டலுக்கு வந்த ஸ்டாலினும் டென்ஷனாகவே இருந்தாராம். 'உடனடியாக சென்னை திரும்ப வேண்டும். டிக்கெட் போடுங்கள்’ என்று சொல்லி இருக்கிறார். இந்தத் தகவல் கே.என்.நேருவுக்குப் போனதும் அவர் பதறிவிட்டார். 'கட்சிக்கு தேர்தல் நிதி கொடுக்கும் கூட்டம் மாலையில் இருக்கிறது. அதுல நீங்க இல்லைன்னா எப்படி?’ என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டாராம். அதன் பிறகுதான் மாலைக் கூட்டத்​தில் கலந்துகொள்ள சம்மதித்தாராம் ஸ்டாலின்!''


''அந்த அளவுக்குப் போய்​விட்டதா?''



''சென்னையில் குஷ்பு வீட்டை அடித்தார்கள் என்ற தகவல், திருச்சி விசுவாச தி.மு.க-வினரையும் உசுப்பி விட்டது. தங்கள் பங்குக்கு ஃபெமினா ஹோட்டலை நோக்கி ஒரு கும்பல் சென்றது.  வெளியே காத்திருந்தது. மதிய விமானத்தைப் பிடித்து சென்னை வருவதற்காக ஹோட்டலை விட்டு வெளியே வந்த குஷ்புவை நோக்கி ஒருவர், செருப்பை வீசி இருக்கிறார். அவருடன் வந்தவர்கள் அதனை தட்டி விட்டுவிட்டார்கள். 




அடுத்து பத்துப் பதினைந்து பேர் வந்து, செருப்பைக் கழற்றி வரிசையாக வீச வர... அதனை குஷ்புவுடன் வந்தவர்கள் தடுக்க... அதையும் தாண்டி குஷ்பு தலையில் ஒருவர் அடித்துவிட... 'நான் போலீஸைக் கூப்பிடுறேன்’ என்று இவர் சொல்ல... 'எங்க தளபதியைப் பத்திப் பேச நீ யாரு?’ என்று கூடடத்​துக்குள் இருந்து ஒரு கர்ஜனை புறப்பட... மறுபடியும் ஹோட்டலுக்குள் திரும்பிப் போனார் குஷ்பு.!''



''ம்!''


''குஷ்புவை மையம் கொண்டு தி.மு.க-வுக்குள் கடந்த இரண்டு மாதங்களாகவே சுழல் இருக்கிறது. 'குஷ்பு அளவுக்கு அதிகமாக அட்வான்டேஜ் எடுத்துக்கொள்கிறார். பொதுமேடைகளில் அவர் தலைவரிடம் பேசுவது மீடியாக்களில் அதிகமாக வருகிறது. கட்சியிலும் தலைவரிடமும் தனக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்ள அடிக்கடி அவர் கோபாலபுரத்துக்கு வந்து செல்வது குடும்பத்துக்குள் பலரது முகத்தையும் சுளிக்க வைத்துள்ளது.



 அதனால் கோபாலபுரம் இல்லத்துக்கு அவர் வரக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது என்று நான் ஏற்கெனவே சொல்லி இருந்தேன். 'கோபாலபுரத்துக்கு வராதே... குஷ்புக்கு தடை போட்டதா குடும்பம்?’ என்று 25.11.12 தேதி ஜூ.வி-யில் அட்டைப் படம் போட்டிருந்தீர்! 



தென் சென்னை எம்.பி. தொகுதியை தனக்குத் தர​வேண்டும் என்று குஷ்பு கேட்டதாகவும் அதற்குத் தலைமை சம்மதிக்கவில்லை என்றும்கூட அப்போது கிளம்பியச் செய்தியைச் சொல்லி இருந்தேன். அதையெல்லாம் வைத்துத்தான் குஷ்பு இப்படி கருத்துச் சொல்லிவிட்டாரா என்றுகூட சீனியர்கள் சந்தேகப்பட ஆரம்பித்துள்ளனர்.''



''அடுத்து அவர் என்ன செய்வார்?''



''தான் சொன்னதை சிலர் மிஸ்அண்டர்​ஸ்டேண்டிங் செய்துகொண்டார்கள் என்று சொல்லி வருகிறாராம். ஆனால் குஷ்புவை கட்சியை விட்டு நீக்குவதில் சிலர் முடிவோடு இருக்கிறார்கள். அநேகமாக ஒரு வாரத்துக்குள் விவகாரம் வெடிக்கும்'' என்ற கழுகார், சிறிது இடைவெளிவிட்டு மறுபடியும் தொடங்கினார்.



''திருச்சி சிவா மகள் திருமணத்தை நடத்தி வைத்துப் பேசிய கருணா​நிதி ஒரு ஸ்கூப் நியூஸ் கொடுத்தார். 'ஆறு மாதத்துக்கு முன்பு இந்த நிகழ்ச்சிக்கு தேதி வாங்கிய சிவா, அதன் பிறகு என்னை இன்று காலை வரை ஒரு முறைகூட நினைவுப்படுத்தி அழைக்கவே இல்லை. அப்படி இருந்தும் நான் இங்கே வரக் காரணம், எங்களுக்கு இடையே உள்ள குடும்பப் பாசம். தம்பி சிவாவுக்கு எதிர்காலம் பொற்காலமாக அமைய இருக்கிறது. 




அவரது பேச்சில் நானே மயங்கி​யவன். அவரது கொள்கை விளக்கப் பேச்சை நான் என்றும் மறக்கப் போவதில்லை’ என்று பொடி வைத்துப் பேசினார். சிவாவின் ராஜ்யசபா எம்.பி. பதவி காலம் இன்னும் சில மாதங்களில் நிறைவுபெற இருக்கிறது. தி.மு.க-வுக்கு இப்போது உள்ள எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையைக் கொண்டு ராஜ்யசபா எம்.பி-யைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லை.



அதனால் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு சிவாவுக்கு வழங்கப்படலாம் என்பதைக் கருணாநிதி அப்படி சூசகமாக சொன்னதாகக் கழக முன்னோடிகள் சிலர் விளக்கம் அளிக்கின்றனர். பலரும் 'திருச்சி தொகுதி எம்.பி.' என்று சிவாவை இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.''
''ஆனால், அவருடைய லோக்கல் எதிரி கே.என்.நேருதானே வெற்றிக்குப் பாடுபட வேண்டும்?''


''அது அவர்கள் பாடு!'' என்ற கழுகார்,

''திருச்சி வந்தால் பெரும்பாலும் சங்கம் ஹோட்டலில் தங்குவதை வழக்கமாகக் கொண்ட கருணாநிதிக்கு இந்த முறையும் அங்கேதான் ஜாகை. காலை பத்திரிகையாளர் சந்திப்பின்போது மிகுந்த உற்சாகமாகக் காணப்பட்டார் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகள் சரிவர அவர் காதில் விழாததால், தலைவருக்கு  அருகில் அமர்ந்தபடி உரக்கச் சொன்னார் ஸ்டாலின். 



என்ன தோன்றியதோ...  பத்திரிகையாளர்களுடன் ஒரு குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டார். திருமண விழாவில் முன்னிலை என பெயர் குறிப்பிடப்பட்டு இருந்த தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி வரவில்லை. அவர்தான் கால் வலி காரணமாக சிகிச்சை எடுக்​கிறாரே!. மதுரை மருத்துவமனைக்கு அழகிரி வீல் சேரில் வந்தது பலரையும் உன்னிப்பாக கவனிக்க வைத்தது.''



'
அட்டைப் படம்: 'ப்ரீத்தி’ கார்த்திக்


படங்கள்: என்.ஜி.மணிகண்டன், பா.காளிமுத்து


 


 குஷ்புவுக்கு ஆதரவாக துரை தயாநிதி!  




திருச்சி சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் ட்விட்டர் சமூக வலைதளத்தில், ''நான் நலமாக இருக்கிறேன். ஒரு துரதிருஷ்டம் நேர்ந்துவிட்டது. விசாரணை முடியும் வரை இது​பற்றி கருத்து எதுவும் சொல்ல முடியாது'' என்று தட்டிவிட்டார் குஷ்பு. 



அவருக்கு உடனே ஆதரவு கமென்ட்கள் பறந்து வர ஆரம்பித்தன. எஸ்.வி.சேகர், பாடகி சின்மயி ஆகிய பிரபலங்கள் தைரியம் சொன்னார்கள். மீண்டும் குஷ்பு, ''இந்த இக்கட்டான சூழலில் பல தரப்புகளில் இருந்தும் வரும் ஆதரவுகளை கண்டு என் மனம் உணர்ச்சிவசப்படுகிறது. நான் எப்போதும் வெற்றிபெறும் பெண்ணாகவே இருந்து வருகிறேன். இப்போதும் அப்படியே'' என்று பதிவு போட... அழகிரியின் வாரிசான துரை தயாநிதி இதை  'ரீ-ட்விட்’ செய்ததை ஸ்டாலின் தரப்பு கவனிக்கத் தவறவில்லை.


சர்ச்சைக்குரிய பேட்டி


சின்ன தும்மல், களைப்பான கண்கள், சோர்வு ததும்பும் குரல்... குஷ்பு இஸ் நாட் ஃபீலிங் வெல்! ஆனால், ஒவ்வொரு கேள்விக்கும் பாய்ந்து வந்த பதில், அதிரடி!




ஸ்டாலினுக்குத் தலைவர் பதவி, கோபாலபுரத்துக்குள் நுழையத் தடை, விஜயகாந்துடனான கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி, தி.மு.க-வில் இருந்து ஒதுக்கப்படுகிறாரா என்ற எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளித்தார் குஷ்பு.  



''தி.மு.க-வுக்கு ஸ்டாலின்தான் அடுத்த தலைவரா வரணும்னு கருணாநிதியே அறிவித்துவிட்டாரே?''



  ''நாமளே அப்படி ஒரு முடிவுக்கு வந்துடக் கூடாது. தலைவர் என்ன சொல்லியிருக்கார்னா, எனக்கு அப்புறம் சமூகப் பணிகளைத் தளபதி செயல்படுத்துவார்னுதான். தி.மு.க. தலைவரைத் தேர்ந்தெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா, தளபதிதான் அவரோட சாய்ஸ்னு சொல்லியிருக் கார். ஆனா, இறுதி முடிவைப் பொதுக்குழுதான் எடுக்கும். 'யார் கட்சித் தலைவர்’னு முடிவு பண்றப்போ, அதைப் பத்திப் பேசுவோம்.''



 


''ஆனா, அந்த அறிவிப்புக்கே அழகிரி பயங்கர எதிர்ப்புத் தெரிவிச்சாரே?''


'' 'நான் இதை ஏத்துக்க மாட்டேன்’னு அழகிரி அண்ணன் சொன்னாரா? தளபதியோ, அழகிரி அண்ணனோ, தலைவரோ... யாருமே அண்ணன், தம்பிக்குள் பிரச்னைனு சொல்லலையே. வெளியில சம்பந்தம் இல்லாதவங்க பேசிக்கிறதுக்குப் பதில் சொல்ல வேண்டியது இல்லை.''



''சரி... நீங்க உங்க கருத்தைச் சொல்லுங்க... ஸ்டாலின், அழகிரி, கனிமொழி... தி.மு.க. தலைவர் பதவிக்குப் பொருத்தமானவங்க யார்?''



''திரும்பவும் சொல்றேன்... அதை பொதுக் குழுதான் முடிவு பண்ணும்.  தலை வர், பேராசிரியர் எல்லாரும் இது சம்பந்தமா கலந்து பேசி முடிவு எடுப் பாங்க. தலைவர் மட்டுமே முடிவு எடுத்துட்டதால, அடுத்த தலைவர் தளபதியாதான் இருக்கணும்னு அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம். உட்கட்சித் தேர்தல் நடக்கும். எல்லாரும் வாக்களிப்போம். எல்லாம் முறைப்படி நடக்கும். தி.மு.க - வில் சின்னச் சின்னப் பதவிகளுக்குக்கூட உட்கட்சித் தேர்தல் மூலம்தான் ஆட்களை நியமிப் பாங்க. ஆனா, என் வழி தலைவர் வழிதான்!''



''அதான் 'எனக்குப் பிறகு ஸ்டாலின்’தான்னு தி.மு.க. தலைவர் கருணாநிதியே சொல்லிட்டாரே?''



''எல்லார் விருப்பப்படிதான் தலைவர் தேர்ந்து எடுக்கப்படுவார்னு தலைவரே சொல்லியிருக்கார். கட்சியில அடிமட்டத் தொண்டனாஇருப்ப வங்களுக்குக்கூட தலைவரைத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கு. தலைவர் முடிவு எடுத்துட்டா ரேனு யாரையும் தேர்ந்தெடுக்க முடியாது. கட்சியின் நலனுக்கு யார் பொருத்தமாஇருப்பாங் களோ, அவங்களை உட்கட்சித் தேர்தல் நடத் தித் தேர்ந்தெடுப்பாங்க.''



''சமீப காலமா தி.மு.க-வில் இருந்து உங்களை ஒதுக்கிவெச்சிருக்காங்கன்னு சொல்றாங்களே?''



''சம்பந்தம் இல்லாம யாரோ பேசுற பேச்சுக்குஎல்லாம் நான் ஏன் பதில் சொல்லணும்? இந்தப் பேச்சு எப்படி வந்திருக்கும்னு நான் சொல்லவா? தி.மு.க-வின் வீர வணக்க நாள் கூட்டத்தில் நான் கலந்துக்கலை. அன்னிக்கு எங்க வீட்ல முக்கிய மான விசேஷம் ஒண்ணு இருந்துச்சு. இந்த விஷயத்தைத் தலைவர்கிட்ட யும் தளபதிகிட்டயும் நேர்லயே சொல்லிட்டு வந்துட்டேன். உலகத் துக்கே தெரியும்...



 எனக்குக் கட்சி, சினிமாவைவிடக் குடும்பம்தான் முக்கியம்னு. அன்னிக்கு என் பொண்ணுக்கு ஒரு விசேஷம். அதனால, அந்தக் கூட்டத்தில்நான் கலந்துக்கலை. இதை மட்டுமே வெச்சு என்னைக் கட்சியில ஒதுக் கிட்டாங்கன்னு சொன்னா, அதை ஏத்துக்கவே முடியாது. முன்னாடி வள்ளுவர் கோட்டத்துல மின்வெட் டுக்கு எதிரா நடந்த கண்டனஆர்ப் பாட்டத்துல தலைவர் முன்னிலை யில் பேசினப்ப, சிறப்பு முக்கியத்து வம் கொடுக்குறாங்கன்னு பேசு னாங்க. இப்ப, ஒரே ஒரு கூட்டத்துக் குப் போகாததால், ஒதுக்கிவெச்சுட் டாங்கன்னு சொல்றாங்க. குட் ஜோக்!''



''நீங்க கோபாலபுரத்துக்கே வரக் கூடாதுனு ஆர்டர் போட்டிருக்கறதா...''


(கேள்வி முடிவதற்குள்ளாகவே) ''இதுக்கெல்லாம் விளக்கம் கொடுக்க எனக்கு நேரம் இல்லை.''  



'' 'விஸ்வரூபம்’ பட விவகாரத்தின் பின்னணியில் எந்த அரசியலும் இல்லைனு நம்புறீங்களா?''



'' 'விஸ்வரூபம்’ பத்தி இனிமே நாம பேசினா, அது கமல் சாருக்குத்தான் பிரச்னையா முடியும். கமல் சாரைப் பாதிக்கும்கிறதால அதைப் பத்தி நான் எதுவும் பேச விரும் பலை. அதான் அரசாங்கம் சார்பிலேயே பேசி ஒரு முடிவுக்கு வந்துட்டாங்களே!''



''அது தொடர்பான விவாதத்தில், 'ஜெயா டி.வி-க்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை’னு ஜெயலலிதா சொல்லியிருக்காங்களே?''


''அதை நீங்க நம்புறீங்களா? சம்பந்தம் இல்லைனு சொல்றாங்க. ஆனா, அந்தப் பேட்டி கொடுத்தப்ப, ஜெயா டி.வி. மைக் மட்டும்தான் அவங்க
முன்னாடி இருக்கு. எல்லா உண்மையும் புரியுற அளவுக்கு மக்கள் தெளிவா இருக்காங்க.''  



''நாடாளுமன்றத் தேர்தலுக்காக விஜயகாந்த் தி.மு.க. கூட்டணிக்கு வரப்போறதா பேச்சு அடிபடுதே?''



''எதிர்காலத்துல நடக்கப்போறதைப் பத்தி இப்பவே ஏன் பேசணும்? வரட்டும். அப்புறம் பார்க்கலாம். தலைவரோ, விஜயகாந்தோ அதி காரப்பூர்வமா அறிவிக்கிற வரை பொறுமையா இருப்போம். விஜயகாந்துடனான கூட்டணிபத்தி தளபதி எதுவுமே பேசலை. ஜனநாயகரீதியாக எதிர்க் கட்சித் தலைவருக்குத் துணையா இருப்போம்னு மட்டும்தான் சொன்னார்.''



''நாடாளுமன்றத் தேர்த லில் நீங்க போட்டியிடுவீங்களா?''


''தெரியலையே! இன் னும் ஒன்றரை வருஷம் இருக்கே. கட்சித் தலைமை தான் இதை முடிவு பண்ணணும். ஒருவேளை நான் போட்டியிடலைன்னா, 'குஷ்பு கேட்டாங்க... ஆனா, தலைமை மறுத்திடுச்சு’னு எழுதுவாங்க. போன சட்டமன்றத் தேர்தல் சமயமே எல்லாமே பார்த்துட்டேன். சேலம், ஆயிரம் விளக்குனு பல தொகுதிகளில் நான் போட்டியிடப் போறதாச் சொன்னாங்க. நான் தேர்தல்ல நிக்கணும்னு கட்சியில் சேரலை. யாருக்கு என்ன பொறுப்பு கொடுத்தா சரியா இருக்கும்னு அவங்களுக்குத் தெரியும்.''



''உட்கட்சிப் பூசல் பழிவாங்கும் கொலைகளில் முடியும் விபரீதப்போக்கு தி.மு.க.-வில் அதிகரிச்சுட்டே இருக்கே?''



''சும்மா... பரபரப்புக்காக அப்படி வர்ற செய்திகள் உண்மை ஆகிடாது.  ஒன் ப்ளஸ் ஒன்... பதினொண்ணுனு எழுதுவாங்க. ஆனா, எனக்கு ஒன் ப்ளஸ் ஒன் ரெண்டுனு நல்லாவே தெரியும்.உட்கட்சிப் பிரச்னை ஏன் வருது? தி.மு.க. ஜனநாயகரீதியில் செயல்படும் கட்சி. மத்த இடங்களில் கட்சித் தலைமைக்குப் பயந்து கிட்டே செயல்பட வேண்டிய கட்டாயம். ஜன நாயக மரபுகளைக் கடைப் பிடிக்கிறதால, உங்களுக்கு அப்படித் தெரியுது. இதை விட அதிகமான உட்கட்சிப் பூசல்கள் மத்த கட்சிகளில் இருக்கும். ஆனா, அதெல் லாம் வெளியே தெரியாது. ஏன்னா பயம்!



இன்னொரு விஷயம்,உட் கட்சிப் பூசல்கள் ஒரு கட்சி யின் வளர்ச்சிக்கு மைனஸ் கிடையாது. ஒரு குடும்பமா செயல்படும்போது, அதுல இருக்கிறவங்க தங்களோட வருத்தங்கள், கோபங்களை உள்ளேயே வெச்சுட்டு இருக் கிறது நல்லது இல்லையே. ஓப்பனாப் பேசினாத்தானே பிரச்னைக்கு ஒரு முடிவு வரும்.''



''எப்பவும் ஏதாவது ஒரு சர்ச்சை உங்களை வட்டமிட்டுக்கொண்டே இருக்கே... சமீபத்தில், ராமர் படம் போட்ட புடவை. ஒருவேளை பரபரப்புக்காகவே இப்படிப் பண்றீங்களா?''



''யாரை விமர்சிச்சா லாபம் கிடைக்குமோ, அவங்களைத்தானே தொடர்ந்து குறிவைப்பாங்க. ஆனா, ஒண்ணே ஒண்ணு மட்டும் அவங்களுக்குப் புரியவே மாட்டேங்குது. அது, குஷ்பு யாருக்கும்பயப்பட மாட்டா!



என் டிக்ஷனரியில் பயம்கிறதே கிடையாது. அன்பு, பாசத்துக்கு மட்டும்தான் கட்டுப்படுவேன். அச்சுறுத்தல், மிரட்டலுக்கு அடிபணிய மாட்டேன். எனக்குப் பயம்னா என்னன்னே தெரியாது!''


 




மக்கள் கருத்து 


1. பத்த வெச்சுட்டியே பரட்ட



2.சேலையில ஒரு டிசைனை வைத்துக்கொண்டு ஒரு கூட்டம் அரசியல் செய்த்து.... அந்த கேடுகெட்ட கூட்டம்தான் கருத்துச் சுதந்திரம் பற்றி எக்காளம்போட்டது...... அட ஒரு சேல தனக்குப் புடிச்சமாதிரி கட்டமுடியல.... கருத்தாம் சுதந்திரமாம்... கேடுகெட்டதுகள்... 


3. அப்பாடா இன்னுமொரு வருங்கால முதல்வர் பேட்டியை விகடன் தந்துள்ளது!. யார் கண்டது திமுக காரர்கள் இவரை முதல்வராக தேர்ந்தெடுக்கலாம். ஏனென்றால் இவர் ஒரு சினிமா ஹிரோயின். கனவு உலகத்தில் மயங்கும் தமிழர்கள் இப்படி செய்தாலும் செய்வார்கள்.



 



4. விகடன் புண்ணியத்தால் குசுப்பூ தான் திமுகவின் நிரந்தர தலைவியாக போகிறார்... இந்த பேட்டியை படித்த ஸ்டாலினின் உண்மை தொண்டர்கள் தலைவி குசுப்பூவிற்கு பலவிதமான இன்னல்களை கொடுக்க துவங்கிவிட்டனர்... திருச்சியில் கார் மீது தாக்குதல், திருச்சி விமாண நிலையத்தில் செருப்பு வீச்சு, சென்னையில் குசுப்பூ வீட்டின் மீது கொடூர தாக்குதல்.... திமுகவில் இப்படியெல்லாம் செய்வார்கள் என்பதை அறியாதவரா குசுப்பூ??? இனி தான் குசுப்பூ தனது வீரியத்தை வீசுவார்... அப்பொழுது தான் ஸ்டாலினுக்கு பலவிதங்களிலும் போட்டியாக பல காரியங்களை செய்வார்... முடிவு குசுப்பூவின் பிடிக்கு திமுக போவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது... அப்புறமென்ன கருணாநிதியின் காலத்திற்கு பிறகு குசுப்பூ தான் திமுகவின் நிரந்தர முதலாளி..



5. அதிகப் பிரசங்கித்தனமான பேட்டி. தலைவரே ஸ்டாலின் அடுத்தவர் என்று சொல்லியும் இப்படி ஒரு பேட்டி கொடுப்பதற்கு குஷ்பூவுக்கு தைரியம் எப்படி வந்தது? பதில் சொல்லாமல் இருந்திருக்கலாம். ஏதோ திராவிடப் பாரம் பாரம்பர்யத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர் போல பேசுகிறார். சொல்ல முடியாது இவர் எம்.பி ஆகி அமைச்சராகவும் ஆகி விடலாம், எதுவும் நடக்கும். வாக்காளனும் இவருக்கு ஓட்டைப் போட்டு விட்டு, ஓட்டுப் போட்டதையே மறந்து விட்டு டாஸ்மாக்கில் விழுந்து கிடப்பான்.



6. அன்று இதே குசுப்பூவிற்கு இதே திருச்சியில் கோவில் கட்டினார்கள்.... இன்று இதே குசுப்பூவிற்கு இதே திருச்சியில் செருப்பை வீசி மரியாதை செய்திருக்கிறார்கள்... இதெல்லாம் செய்தது யார் தெரியுமா??? மாபெரும் ஜனநாயகம் இயக்கம் என்று தணக்கு தானே புகழாரம் சூட்டி கொள்ளும் கருணாநிதி திமுகவின் உடன்பிறப்புக்கள்.... இனியென்ன குசுப்பூவை கட்சியிலிருந்து ஓரங்கட்டுவார்கள்.... இதையறிந்தே குசுப்பூவும் அஞ்சாநெஞ்சரின் ஆசியை பெற்றிருக்கிறார்... அஞ்சாநெஞ்சரின் அருளாசியிருக்கும் போது இனி குசுப்பூவிற்கு பயமில்லை...


 




நன்றி - விகடன் 

Wednesday, July 04, 2012

கலைஞர் -குஷ்பூ இணைந்து வழங்கும் சிறை நிரப்பும் போராட்டம் - காமெடி கலாட்டா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjk5xTG8IHZcOOoKMIQKsKayp3YL5BOgumoUeVzruTtYiCI3hbp6TWiVeA0_gnFYHys7bEW6nB12aJUf__IiYkXp_srecbaHKdi7fZCY5Owf-75SsIZFmMJDf3R3jXSV1s7RGf7qAYd6ko/s400/DN_01-02-09_E1_05-06%2520CNI.jpg 

சென்னை: சிறை நிரப்பும் போராட்டத்தில் கைதாகி சிறைக்கு வரும் திமுகவினருக்கு பி கிளாஸ் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நல்ல சாப்பாடு அவர்களுக்குக் கிடைக்கும். சுடச் சுட உணவு வழங்க சிறப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.


இன்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடவுள்ள திமுகவினர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளுக்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு மூன்று வேளையும் நல்ல சாப்பாடு தரப்படும். அதாவது அவர்களுக்கு பி கிளாஸ் சாப்பாடு தரப்படுமாம்.

பி கிளாஸாக இருந்தாலும் சாப்பாடு சூப்பராக இருக்குமாம். காலையில் சுடச் சுட உப்புமா, வெண் பொங்கல், கஞ்சி ஆகியவை தரப்படும். இதை ஒரு நாளைக்கு ஒரு ஐட்டம் என மாற்றி மாற்றித் தருவார்களாம்.

மத்தியான சாப்பாடாக சாம்பார், காய்கறி கூட்டு, ரசம், மோர் ஆகியவை கிடைக்கும். அப்பளம் தரப்பட மாட்டாது.

இரவுக்கு சாப்பாடும், சாம்பாரும் மட்டும்தானாம். அதேசமயம், சர்க்கரை வியாதி உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு மட்டும் 2 சப்பாத்தி தருவார்களாம்.

ஞாயிற்றுக்கிழமை கோழிக்கறியைப் போட்டு அசத்துவார்களாம்.

'ஏ' கிளாஸ் சாப்பாடு வேண்டுமென்றால்...

சிலர் ஏ கிளாஸ் சாப்பாடு வேண்டும் என்று விரும்பினால் அதற்கு கோர்ட்டில் அனுமதி பெற வேண்டும். அப்படி அனுமதி பெற்றால், அவர்களுக்கு வாரத்தில் 3 நாட்களுக்கு கோழிக்கறி குழம்பு கொடுப்பார்கள். மாலையில் கூடுதலாக சுண்டல், டீ ஆகியவை தருவார்கள். சப்பாத்தியும் விசேஷமாக கிடைக்கும்.


தூங்க போர்வையும், பாயும்

இரவில் தூங்கும்போது ஒவ்வொருவருக்கும் போர்வையும், படுக்க பாயும் தருவார்களாம்.

மொத்தத்தில் எந்தவித குறையும் இல்லாமல் திமுகவினர் தங்களது காவல் நாட்களை சிறையில் கழிக்க முடியும்.


http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TCR0RuOg02I/AAAAAAAAD_o/i2o9rR9CbrA/s1600/semmoli3.JPG


திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகை குஷ்பு உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் சேப்பாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்.

திமுக சார்பில் சென்னை மாநகரில் 22 இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. சேப்பாக்கம் பகுதியில், நடிகை குஷ்பு தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

குஷ்பு தவிர தயாநிதி மாறன், ஜெ.அன்பழகன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கடந்த முறை திமுக பொதுக் கூட்டத்திற்கு வந்தபோது குஷ்புவிடம் திமுகவினர் சிலர் சில்மிஷம் செய்ததாக பரபரப்பு ஏற்பட்டதால் இந்த முறை குஷ்புவுக்கு பாதுகாப்பாக திமுகவினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிமுக அரசை எதிர்த்துக் கோஷமிட்டனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து பஸ்கள், வேன்களில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.

தாம்பரத்தில் டி.ஆர்.பாலு கைது

இதேபோல தாம்பரம் தாலுகா அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் ஆயிரக்கணக்கானோரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சியில் கே.என்.நேரு கைது

திருச்சியில் மொத்தம் 8 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. திருச்சி நகரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் ஆயிரக்கணக்கானோரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

சென்னை சைதாப்பேட்டையில் நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டார்.


http://moonramkonam.com/wp-content/uploads/2011/05/karunanidhi-rest-cartoon.jpg


திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்தில், சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த போராட்டத்தில் கனிமொழி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


காலை 10 மணிக்குப் போராட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்தபோதும் காலை 8 மணியிலிருந்தே தொண்டர்கள் திரளத் தொடங்கி விட்டனர். காலை 10 மணியளவில் கனிமொழி சம்பவ இடத்திற்கு வந்தார். இதையடுத்து அதிமுக அரசைக் கண்டித்து தொண்டர்கள் கோஷமிட்டனர்.


இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவதாக போலீஸார் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து கனிமொழி உள்ளிட்டோர் பேருந்துகளில் ஏற்றப்பட்டனர்.


கனிமொழி இன்று சிறையில் அடைக்கப்பட்டால், அவர் சிறை செல்வது இது 2வது முறையாக இருக்கும். இதற்கு முன்பு அவர் 2ஜி ஊழல் வழக்கில் சிக்கி கைதாகி பல மாதங்கள் சிறையில் இருந்தார் என்பது நினைவிருக்கலாம்.


இன்று காலை கனிமொழி கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டபோது அங்கு கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாளும் வந்திருந்தார். அவர் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. இருப்பினும் கனிமொழியை வழியனுப்பி வைப்பதற்காக அவர் வந்திருந்தார். பஸ்சில் ஏறிய கனிமொழியை பத்திரமாக இருந்து கொள்ளுமாறு கூறி விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார் ராசாத்தி அம்மாள்.


தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டு கைதாகியுள்ளார். அவர் சென்னையில் உள்ள தனது தொகுதியான கொளத்தூரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

இன்று காலை 8 மணியிலிருந்தே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கொளத்தூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே திரண்டனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் திமுகவினர் மயமாக காணப்பட்டது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjhAJ0jhTdeGBtlZseiGFOKIelH4FG1Eu6q3QcuAepn4w-UkxKZjP8mqWUfAYPv7Yh9Z2HtXpuYSWXCxtYAOH9zYVKj6Eyx5QZLKQIZqS8AnvDa28ofaqXsy46sLqic-5LyoK_wSMu0DU/s1600/kuspoo-95.jpg


காலையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின் போராட்ட இடத்திற்கு வந்தார்.அவருக்கு சமீபத்தில் கண் அறுவைச் சிகிச்சை நடந்தது. இதனால் அவர் ஓய்வில் இருந்து வந்தார். இருப்பினும் தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல்,இன்றைய போராட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.


காலை 10 மணியளவில் போராட்டக் களத்திற்கு வந்த அவர் தானாகவே போலீஸ் வாகனத்தில் ஏறிக் கைதானார். அவரைத் தொடர்ந்து ஏராளமான தொண்டர்களும் அதே வாகனத்தில் ஏறிக் கொண்டனர். இதேபோல போராட்டத்திற்கு வந்திருந்த அத்தனை பேரும் கைது செய்யப்பட்டனர்.


முன்னதாக ஸ்டாலின் பங்கேற்பதை கட்சித் தலைவர் கருணாநிதி நேற்று உறுதி செய்தார். இதுகுறித்து அவர் நேற்று அளித்த பேட்டியின்போது,

மிகுந்த எழுச்சியோடு இந்த போராட்டம் நடைபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, அரசுக்கும் இருக்கிறது. கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஆங்காங்கு மாவட்ட கழக செயலாளர்கள் இடத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளார்கள்.


கனிமொழி போராட்டத்தில் கலந்து கொள்ள நீதிமன்றத்தில் அனுமதி கிடைத்துள்ளது. எந்த இடத்திலே கலந்துகொள்வார் என்று இன்னமும் தெரியவில்லை. காலையில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம் (சைதாப்பேட்டையில் பங்கேற்பதாக பின்னர் அறிவிப்பு வெளியானது).


அவர் சற்று உடல் நலம் இல்லாமல் இருக்கிறார். இருந்தாலும் கலந்துகொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார் (கொளத்தூரில் பங்கேற்பதாக பின்னர் அறிவிக்கப்பட்டது).


போராட்டத்தில் பங்கேற்று கைதானாலும் கூட எம்.பிக்கள், எம்எல்ஏக்களுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க நிச்சயமாக அனுமதி உண்டு. எனவே அவர்கள் வாக்களிப்பார்கள் என்று கூறியிருந்தார் கருணாநிதி.


http://athikalai.files.wordpress.com/2010/12/mathi_cartoon-1.jpg


 மதுரையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் உள்பட மொத்தம் 5 இடங்களில் திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மத்திய அமைச்சரும், தென் மண்டல அமைப்பாளருமான மு.க.அழகிரி பங்கேற்கவில்லை.


மதுரை நகர்ப் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே மட்டும் போராட்டம் திட்டமிடப்பட்டது. அதேபோல புறநகர்ப் பகுதிகளில் மொத்தம் 4 இடங்களில் போராட்டம் நடந்தது.


இந்த ஐந்து போராட்டங்களிலும் மு.க.அழகிரி கலந்து கொள்ளவில்லை. வாடிப்பட்டியில்நடந்த போராட்டத்திற்கு புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக போராட்டத்திற்கு நகர செயலாளர் கோ.தளபதி தலைமை தாங்கினார்.


இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான திமுகவினர் பங்கேற்றுள்ளனர். மத்திய அமைச்சர் மு.க.அழகிரி போராட்டத்திற்கு வராதது திமுகவினர் மத்தியி்ல பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதைக் காண முடிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
http://rajkanss.files.wordpress.com/2008/10/cartoon_1991.jpg


1. சிறை நிரப்பும் போராட்டத்துக்கு ஏன் வர்லை?


 போங்க தலைவரே! சின்ன வயசுல ஃபில் இன் த பிலாங்க்ஸ் ( FILL IN THE BLANKS)-கோடிட்ட இடத்தை நிரப்புக -இந்தக்கேள்வியையே நாங்க நிரப்பாம எஸ் ஆன ஆளுங்க,, நீங்க ஜெயிலை நிரப்பக்கூப்பிட்டா எப்படி?

-----------------------------------------



2. பதவி வேணும்னா ஜெயிலுக்கு போகனும்..

தலைவரே! ஆல்ரெடி பதவி வேணும்கறதுக்காக கட்சிக்குள்ளேயே போட்டிக்கு இருந்த 2 பேரை கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போனவன் தான் நான்.. இந்த தகுதி ஓக்கேவா?
----------------------------------------


3.மன்னர் ரொம்ப விபரமான ஆள்.. அப்டினு எப்படி சொல்றே?

கஜானாவை நிரப்பும்போது மட்டும் சத்தம் இல்லாம கமுக்கமா நிரப்பிக்கறாரு.. இப்போ சிறை நிரப்பும் போது மட்டும் நம்மளை கூப்பிடறாரு. 



------------------------------------


4. தலைவரே! ஜெயிலுக்குப்போய்ட்டு வந்தா நீங்க பதவி கொடுப்பீங்க ஓக்கே? எங்களுக்கு பொண்ணு எவன் கொடுப்பான்? # பிரம்மச்சாரியின் கேள்வி


----------------------------


5. மணல் லோடு லாரி லாரியா போகுதே, எதுக்கு?

சிறையை சீக்கிரம் நிரப்பத்தான்.. எதிர்பார்த்த அளவு கூட்டம் வர்லையாம்./. 



-----------------------


6. ஜெயிலுக்குள்ளே போய் மறுபடி எதுக்கு போராட்டம் பண்றாங்க?


சிறை நிரப்பும் போராட்டத்துல கலந்துக்கிட்டவங்களுக்கு  சோறே போடலையாம்.. செம பசி.. இப்போ வயிறு நிரப்பும் போராட்டம்..



--------------------------------


7. குடும்பத்துடன்  அவசியம் வந்துடுங்கன்னு சொல்லிட்டு போறாரே, மேரேஜ் இன்விடேஷனா?

 ம்ஹூம், சிறை நிரப்பும் போராட்டம்.. 



-----------------------------------


8.  தலைவரே! இன்னைக்கு ஜெயிலுக்குள்ளே  ஒரு அசம்பாவிதம் நடந்துடுச்சு.. 


 என்ன ஆச்சு?


ஜெயிலர் வேணும்னே சாவியை தொலைச்சுட்டு  லாங்க் லீவ்ல போய்ட்டாராம்.


------------------------------


9. ஓ! தமிழர்களே!தமிழர்களே!அம்மையார் என்னை ஜெயிலில் தூக்கிப்போட்டாலும் நான் பெயிலில் வந்து விடுவேன், அங்கே தங்கி விட மாட்டேன்



--------------------------

10. குஷ்பூவின் இடுப்பைக்கிள்ளலாம், சைக்கிள் கேப்பில் கிடா வெட்டலாம் என யாரும் எதிர்பார்த்து வந்தால் ஏமாந்தே போவார்கள், தனி செல்லாம் 



-----------------------

 நன்றி - தட்ஸ் தமிழ்

Thursday, June 07, 2012

குஷ்பூவைக்கிள்ளிய குணகேடன் யார்? கோர்ட்டில் வழக்கு- கல கலப்பு, கை கலப்பு, கிளுகிளுப்பு

http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TCR0RuOg02I/AAAAAAAAD_o/i2o9rR9CbrA/s1600/semmoli3.JPG


சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 89 வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் நடிகை குஷ்பு இடுப்பை மர்ம நபர் கிள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சி.பி - அவர் சர்ட் பாக்கெட்ல மர்ம நபர்னு ஐ டி கார்டு குத்தி இருந்தாரா?

திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஜூன் 03 ந் தேதி 89 -வது பிறந்த நாள் ஆகும். அன்று காலை 7 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.


சி.பி - வாரிசு அரசியல் கூடாது என்ற அண்ணா கொள்கைக்கும் சேர்த்துத்தான் இந்த மலர் வளையமா ? தலைவரே?

 அடுத்து, வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்பு, காலை 9 மணி அளவில் அண்ணா அறிவாலயம் சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துகள் மற்றும் பரிசுகளைப் பெற்றுக் கொண்டார்.


சி.பி - எனக்குப்பரிசுகள் எதுவும் வேண்டாம், உங்கள் பாராட்டும் ,வாழ்த்தும் போதும்னு ஃபார்மாலிட்டிக்கு சொல்லிட்டே வாங்கிட்டு இருந்தாராம்.. 


இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு எப்படியும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் நடிகை குஷ்பு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டிற்கு சென்றார். ஆனால் ஏற்கனவே , அங்கிருந்து கருணாநிதி புறப்பட்டு அறிவாலயம் சென்றதால், அறிவாலயம் நோக்கி குஷ்பு சென்றார். ஆனால் அங்கு இருந்து கருணாநிதி வேறு இடத்திற்கு சென்று விட்டதால், அவரால் அங்கும் சந்திக்க முடியவில்லை.


சி.பி -இதெல்லாம் சும்மா டுபாக்கூர்.. கலைஞரை பார்க்கனும்னு நினைச்சா அப்பாயிண்ட்மென்ட் கேட்டிருப்பார்.. அவங்க ஆஃபீஸ்ல அல்லது வீட்ல டைம் சொல்லி இருப்பாங்க.. மேடம் சும்மா சீன் போடறதுக்கும், ஒரு பர பரப்பை கிளப்பவும் மக்கள் மத்தில சந்திக்க முடிவு பண்ணி இருப்[பாங்கன்னு ஒரு பட்சி சொல்லுது.. 


இதனையடுத்து, மாலை 6 மணிக்கு கலைஞர் கருணாநிதி நகர் பேருந்து நிலையம் அருகே பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் முதல் வரிசையில் நடிகை குஷ்பு வந்து அமர்ந்திருந்தார்.


கூட்டம் முடிந்து குஷ்பு வெளியேற முன்ற போது, அவரது இடுப்பை யாரோ மர்ம ஆசாமி கிள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதை சற்றும் எதிர்பாராத குஷ்பு கடும் அதிர்ச்சி அடைந்து அதே இடத்தில் சத்தம் போட்டதாக கூறப்படுகின்றது. இதைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த திமுக நிர்வாகிகள் குஷ்புவை பத்திரமாக அவரது காருக்கு அனுப்பி வைத்தனர்.


சி.பி - திமுக நிர்வாகிகளுக்கு என்ன அதிர்ச்சின்னா இத்தனை நாளா நாம பக்கத்துலயே இருக்கோம், ராஸ்கல்ஸ் முந்திக்கிட்டானே அப்டி கூட இருக்கலாம்./. 





மேலும், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தினால் அது குஷ்புவுக்கும், கருணாநிதி பிறந்த நாள் பொது கூட்டத்திற்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் எடுத்துக் கூறியதால், குஷ்பு அமைதி காத்ததாக கூறப்படுகிறது.


சி.பி - திராவிடக்கட்சியின் நலனுக்காக அமைதி காத்த அரண்மனைக்காவலே! உங்களை பெரிய பதவியில் அமர்த்த ஆவலே!


இந்த தகவல் அறிந்து திமுக தலைமை கடும் கோபத்திலும், சங்கடத்திலும் உள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறானது என குஷ்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியெல்லாம் நடக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்


சி.பி - ஆமா, நடக்கலை, கிள்ளுனதும் அவன் ஓடிட்டான்.. 
 -------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifK3prHGRq7apGwlvlRGgNt0jbogccE43PwWwxXlIZstM2XMf0h9zak81bC_UaKYQWUQkjWABRutboeVcq27eu8gHPnv7aN6REPdRnjMOUaBVeQxgKXldFNgW1C2V-ee9yil3axIn0B_g1/s1600/Namitha_Kushbo.jpg
இதுவரை நீங்க படிச்சது செய்தி.. இனி சும்மா சில  கற்பனை ஜோக்ஸ்.. இது சும்மா சிரிக்க மட்டுமே.. யார் மனதையும் புண்படுத்த அல்ல. அப்படி யார் மனதையாவது புண் படுத்துனா இங்கேயே மன்னிப்பு கேட்டுக்கறேன்.. என்னால ஃபேஸ்புக், கூகுள் பஸ், பிளாக், ட்விட்டர் டைம் லைன், டி எம் என எல்லா இடங்களிலும் போய் மன்னிப்பு கேட்டுட்டு இருக்க முடியாது, ஏன்னா ஆல்ரெடி அப்படி கால்ல விழுந்து விழுந்து முதுகு கூன் போட்டுடுச்சு..  ஹி ஹி


1. ஜட்ஜ் - நடிகையோட இடுப்பைக்கிள்ளுனது நீதானா? உன் பேரென்ன?

கைதி - கிள்ளி வளவன் யுவர் ஆனர்.. 


-----------------------



2. மேடம், நீங்க மேடைல பேசுன பெண்ணியப்பேச்சுதான் அப்படி ஒரு சம்பவம் நடக்கக்காரணமா?

 ஆமா யுவர் ஆனர், பெண்கள் எல்லாம் கிள்ளுக்கீரை அல்ல  அப்டினு ஆவேசமா பஞ்ச் டயலாக் பேசுனேன், கிள்ளிட்டுப்போயிட்டான்.. 


---------------------------------------


3. ஜட்ஜ் - உங்க இடுப்பைக்கிள்ளுனதைப்பார்த்த சாட்சி இருக்கா?

நடிகை - நோ யுவர் ஆனர்.. அப்போ நான் பயத்துல கண்ணை மூடிக்கிட்டேன்.. அதனால யார் கிள்ளுனான்னும் தெரியாது, அதை யாரெல்லாம் பார்த்தாங்கன்னும் தெரியாது.. 


---------------------------------------



4. இன்ஸ்பெக்டர், நடிகையோட இடுப்பைக்கிள்ளுனது இந்தாளுதான்னு எப்படி கண்டு பிடிச்சீங்க?

உள்ளுவதெல்லாம் சைடு உள்ளல், கிள்ளுவதெல்லாம் கில்மா அள்ளல்னு டைரில எழுதி வெச்சிருந்தான்


-----------------------------------


5. யுவர் ஆனர், என் ஆதர்ச நடிகையை நேர்ல பார்த்ததை என்னால  நம்ப முடியலை,நான் கண்டது கனவா? நனவா?ன்னு தெரிஞ்சுக்கத்தான் அவங்களைக்கிள்ளுனேன், சாரி..



---------------------------------


6. ஜட்ஜ் - உங்க இடுப்பைக்கிள்ளுனதுக்கு வீடியோ ஆதாரம் இருக்கா? ஏது?


நடிகை - முதல் டைம் கிள்ளுனப்ப என் மொபைலை எடுத்தேன், 2 வது டைம் கிள்ளுனப்ப அதை வீடியோ எடுத்தேன்.. பெண் புத்தி முன் புத்தி.. 


-------------------------------

7. கட்சி உறுப்பினர்கள் 80,000 பேரும் ஏன் க்யூவில் நிற்கறாங்க?

 சிலம்பாட்டம் படத்துல வர்ற மாதிரி  யார் கிள்ளுனது?ன்னு கண்டு பிடிக்க  இப்படி ஏற்பாடு.. 


-------------------------------------


8. ஜட்ஜ் - ஏய்.. மிஸ்டர்.. பொது இடத்துல  ஒரு நடிகையை கிள்ளி இருக்கே. இது தப்பில்லையா?


கைதி - XQS மீ யுவர் ஆனர், நான் கிள்ளுனது பொது இடம் அல்ல, பிரைவேட் இடம்.. 



----------------------------------


9. மேடம், இதுவரை 125  படங்கள்ல  நடிச்சிருக்கீங்க.. அதுக்கான ஆதாரம் http://en.wikipedia.org/wiki/Kushboo_Sundar.. அதுல 84 படங்கள்ல ஹீரோவோ, வில்லனோ கிள்ளி இருக்காங்க. பத்தோட 11, அத்தோட இதுவும் 1னு விட்டுடுங்க.. 


ஸாரி.. அது விட முடியாது.. அதுக்கு சம்பளம் குடுத்தாங்க.. 



---------------------------


10. நடிகை - என் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடா ரூ 2 லட்சம் வேணும். 


 அப்போ 2 லட்சம் குடுத்துட்டு யார் வேணும்னாலும் ஒருக்கா கிள்ளிக்கலமா?



-------------------------------------------


11.  இன்ஸ்பெக்டர், டியூட்டி டைம்ல ஒரு நடிகையோட இடுப்புக்கு பவுடர் போட்டு விட்டிருக்கீங்க.. இது தப்பில்லையா?


அட , நீங்க வேற யுவர் ஆனர்.. கிள்ளுன ஆளோட கை ரேகையை எடுக்க வேணாமா? ஃபாரன்சிக் ஆளுங்க தயங்குனாங்க. 


--------------------------------------


12. ஜட்ஜ் - நடிகையை கிள்ளுன குற்றத்துக்காக உனக்கு  2 வருஷ தண்டனை.. 


கைதி -யுவர் ஆனர், வேணும்னா அவங்களையும் என்னை கிள்ளிக்க சொல்லுங்க, தானிக்கு தீனி சரியாப்போயிடும் :0


------------------------------


13. வக்கீல் - சம்பவம் நடந்தப்போ நீங்க என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?


நடிகை - சம்பவம் நடந்த பிறகு, நான் அதை சொன்ன பிறகு மீடியாக்கள் கேட்கப்போகும் கேனத்தனமான கேள்விகளுக்கெல்லாம் என்ன பதில் சொல்லனும்னு  மனசுக்குள்ளேயே ரிகர்சல் பார்த்துட்டு இருந்தேன்


--------------------------


14. தலைவரே... நம்ம கட்சி 2 கோஷ்டியா பிரிஞ்சுடுச்சாமே?


ஆமா, நடிகையை கிள்ளுனதை நேரில் பார்த்த கோஷ்டி, பார்க்காத கோஷ்டி.. 


----------------------------

15. மேடம், இது எல்லாமே டிராமா தான் அப்டினு சொல்றாங்களே?


 அட ராமா 


----------------------


16. ஜட்ஜ் - பிரபல நடிகையோட இடுப்பைக்கிள்ளுனியா? 


 கைதி - யாரோ ஒரு லேடியை கிள்ளுனேங்க,அவங்க பிரபலமா?ன்னு கேட்டுக்கலை :)



--------------------------------

http://www.thenaali.com/cpanel/Editor/images/articles/kushboo-press-meet.jpg

Tuesday, February 14, 2012

ஒரு நடிகையின் வாக்கு மூலம் - சோனியா அகர்வாலின் ஷாக் நீலம் -சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9kij9b_LweF5mtBc-FFau0_VPs1SbXh9c8JIxFPYB4gRNLMppjRKXw6BnTaKNkW1WyMPkJz9AvMwoRx-R150A417YwoNDK1p82st9GofmxtahoXOjUTyRIxxwQV3xCF08uX6-UpkQuEs/ 

இந்தப்படம் புக் ஆகும்போதே செல்வராகவன் வயிற்றில் புளியை கரைச்சிருக்கும்.. என்னென்ன சொல்லப்போறாரோ?ன்னு.. ஆனா செகண்ட் இன்னிங்க்ஸ்க்கு இன்னும் சான்ஸ் இருக்கறதா சோனியா நினைச்சாரோ என்னவோ அவர் சொந்தக்கதை எதுவும் சொல்லலை.. படத்தோட டைரக்டர் பூடகமா பாரதிராஜா, குஷ்பூ, சிம்பு, நயன் தாரா, பிரபு தேவா  எல்லார் கதையையும் மிக்ஸ் பண்ணி ஒரு காக்டெயில் கதை ரெடி பண்ணிட்டார். ஆனா திரைக்கதைல வேகம் இல்லை.

சோனியா அகர்வாலோட அப்பா கிராமத்துல  நாடக கலைஞர்.. நலிவடைஞ்ச நாடகக்கலையால அவர் பழசெல்லாம் மறந்துட்டு இருக்கறப்ப ஊர் ஜனங்க அவர் பெண்ணை ஹீரோயினா போட்டு நாடகம் எடுக்க சொல்றாங்க.. அவரும் ரெடி பண்றார்.. திடீர்னு வேற ஒரு ட்ரூப்பை வெச்சு நாடகம் நடத்திடறாரு ஊர்த்தலைவரு.. ஆக்சுவலா இந்த சீன்ல அப்பா கேரக்டர் தானே கோபப்படனும்? ஆனா அம்மா கேரக்டர் கோபம் அடைஞ்சு ஜெ கேப்டன் கிட்டே சட்டசபைல சவால் விட்ட மாதிரி கிராமத்துக்கே சவால் விடறாரு.. என் மகளை நாடறஞ்ச அழகிய நடிகை ஆக்கி காட்றேன்னு.


கட் பண்ணா  சிட்டி..  THE DIRTY PICTURE  படத்துல வர்ற மாதிரி சான்ஸ் கேட்டு ஸ்டூடியோ ஸ்டூடியோவா அலையறாங்க.. அப்போ ஒரு லேடி ஆடம்பரமா வாழ, சான்ஸ் கிடைக்க உன்னை நீ இழக்கனும்கறாங்க.. கேட்கற நமக்கே ஷாக்கா இருக்கற அந்த சீன்ல என்னமோ கைல வெச்சிருக்கற கடலை பர்பியை கேட்டதும் இந்தா என தர்றது மாதிரி அவங்க கில்மாவுக்கு ஓக்கே சொல்றாங்க. ( இந்த சீன்ல டைரக்டர் ஹீரோயின் சோனியாவோட அம்மா கேரக்டர் மெழுகுவர்த்தி மாதிரினு காட்ட நினைச்சிருக்கார் எடுபடலை.. )

தன் கற்பை ஏலம் விட்டும் கூட  சோனியாவோட அம்மாவால மகளுக்கு ஹீரோயின் சான்ஸ் வாங்கித்தர முடியலை.. கடைசில ஒரு டைரக்டர்ட்ட சான்ஸ் கேட்கறாங்க ( படத்துல ராஜ்கபூர் நடிச்ச இந்த கேரக்டர் பாரதிராஜா மாதிரி காட்றாங்க) அவர் சோனியா அகர்வாலை கேட்கறாரு. நடிகை ஆக்குவதே லட்சியம் (!!!!??) என்பதால் அதுக்கும் ஒத்துக்கறாங்க... அட தேவுடா. 

இனிமே சொல்லப்போற கதை சிம்பு, நயன் நினைவில் கொள்ளவும்.. சோனியா அகர்வால் ஹீரோயினா நடிச்ச படம் ஹிட் ஆகுது.. காட்சி மாறுது.. அவரை அறிமுகம் செஞ்ச டைரக்டருக்கே அவரோட அடுத்த பட கால்ஷீட் கொடுக்க முடியாத அலவு பிசி.. இவருக்கு போட்டியா ஒரு நடிகையை களம் இறக்கறார் ( ஹன்சிகா மோத்வானி மாதிரி சாயல் )

சோனியா அகர்வால் ஒரு டைரக்டரை லவ் பண்றாரு..  ( நயன் தாரா சிம்புவை லவ்வின மாதிரி)  அந்த டைரக்டர்  சோனியாவை நல்லா யூஸ் பண்ணிக்கிட்டு  திடீர்னு மார்க்கெட்ல வந்த புது நடிகையை  கரெக்ட் பண்றாரு.. புதுசு பிக்கப் ஆனதும் பழசை மறக்கறாரு ( பிரபுதேவா நயனை கழட்டி விட்டுட்டு ஹன்சிகா மோத்வானியை கரெக்ட் பண்ணுன மாதிரி )

இதை எல்லாம் பார்த்து வெறுத்துப்போன ஹீரோயின் ஆசிரமத்துக்கு போய் செட்டில் ஆகிறாரு ( ரஞ்சிதா மாதிரி )

அவ்ளவ் தான் கதை. இப்போ படத்தோட புரொடியூசர் புன்னகைப்பூ கீதா .. அவர்க்கு மனசுக்குள்ள ஆசை, இந்தப்படத்துல நடிக்கனும்னு.. உடனே டி வி  மேனேஜிங்க் டைரக்டர் ரோல்ல வந்து நடிகை சோனியாவை பேட்டி எடுக்கற மாதிரி 2  ரீல் ரெடி பண்ணி அட்டாச் பண்ணிட்டார்.

படத்துல முதல் பாராட்டு சோனியா அகர்வால்க்கு அம்மாவா நடிச்ச நடிகை. ஊர்மிளா உன்னி . செம அக்டிங்க்.. வறுமைல இருக்கறப்ப பம்முவதும், பணம் வந்ததும் காட்ற கித்தாப்பும், ஆடம்பர பாடி லேங்குவேஜும் அசத்தல். 

2 வது பாராட்டு டைரக்டராவே வர்ற ராஜ்கபூர்..  நடிகைகளை வலை வீசி பிடிப்பதையே தொழிலாக கொண்டவர் கேரக்டர் செம பொருத்தம். 

சோனியா அகர்வால் மென் சோக உணர்வுகளை மட்டும் பிரமாதமாக காட்டி நடிக்க தெரிந்த நடிகை, அவ்ளவ் தான்,, மற்றபடி அவரிடம் நவ ரச நடிப்பை எல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. முகத்தில் முற்றல் தெரியுது. ஓவர் மேக்கப்.. குறைச்சுக்கனும்.. 

http://tamil.oneindia.in/img/2011/11/30-sonia-agarwal5-300.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  பிரச்சனை வரும் என்று தெரிந்தும் தைரியமாக பாரதிராஜா, குஷ்பூ, பிரபு தேவா, நயன் தாரா , சிம்பு, ஹன்சிகா மோத்வானி என சினிமா பிரபலங்களின் பர்சனல் கதைகளை ஆங்காங்கே கோர்த்து விட்டிருப்பது.. ( புரிந்து விடாமல் மக்கள் தடுமாறக்கூடாது என வாரமலர் கிசு கிசு பாணியில் சில க்ளூஸும் தர்றார்.. )

2.  சுமாரான இந்தக்கதைக்கு சோனியா அகர்வாலை புக் பண்ணுனது

3. புன்னகைப்பூ கீதா வரும் காட்சிகளில் எல்லாம் இவர் தான் படத்தோட தயாரிப்பாளர் என டமாரம் அடிக்காத குறையாக அவருக்கு லைம் லைட் அடித்து விட்டது..  ( அவர் போட்டு வரும் நெக்லஸ்  டிசைன் சூப்பர் )

4. பாடல்களில் போவது யாரு? தேவதை பாரு பாட்டும், டோண்ட் டச் மீ பாடும் தேறுகிறது. 


5. இது ஒரு நேரடி தமிழ்ப்படம் போல் காட்டியது..உண்மையில் இது தெலுங்கு டப்பிங்க் படம்


http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-3666.jpg

இயக்குநர் கவனிக்கத்தவறிய லாஜிக் மிஸ்டேக்ஸ், அவரிடம் சில கேள்விகள்

1. படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல டி வி மீடியா ஒர்க்கர்ஸ் எல்லாரும் ஐ டி கார்டோட மீட்டிங்க்  வர்றாங்க, ஆனா புன்னகை பூ கீதா மட்டும் ஐ டி கார்டு போடலை.. ஏன், அவர் தயாரிப்பாளர் என்பதாலா?

2.  சோனியா அகர்வாலின் ஹேர் டிரஸர் ( சிகை அலங்கார நிபுணர்)க்கு வயசு 45 இருக்கும், கீதாவுக்கு 25 இருக்கும், ஆனா அவரை இவர் வா போ என மரியாதை இல்லாமல் பேசறாரே?

3.  ஜோதிலட்சுமி சோனியா அகர்வால் அம்மா கிட்டே நீங்க கற்பை இழக்கத்தயாரா? என கேட்கும்போது யோசிச்சு சொல்றேன் அப்டினு கூட சொல்லாம உடனே ஓக்கே சொல்றது எப்படி?

4.  ஆல்ரெடி பலரிடம் கற்பு பறி போன ஒரு நடிகையை கரெக்ட் பண்ண ஒரு ஹீரோ எதுக்காக டிரிங்க்ஸ்ல மயக்க மருந்தோ, போதை மருந்தோ கலந்து தர்றார்? அவர் என்ன கன்னிப்பெண்ணா?

5.  கதைப்போக்கு டைரியை படிக்கற மாதிரி வருது.. அதாவது ஒவ்வொரு காட்சிலயும் சோனியா அகர்வால் வரனும், ஆனா அவர் இல்லாம பல காட்சிகள் வருது.. அது எப்படி அவர் டைரில எழுதி இருக்க முடியும்?

6. கோவை சரளா சான்ஸ் கேட்டு வரும் ஒரு புது முகத்தோட அம்மா, ஆனா பல படங்கள் ஹிட் கொடுத்த தயாரிப்பாளரை அவரது வேலையாள் போல் பப்ளிக்காக நடத்துவது எப்படி? ( ஏன்னா சினிமா புரடியூசருங்க எல்லாம் தனியா எப்படி இருந்தாலும் பப்ளிக்ல இமேஜ் மெயிண்ட்டெயின் பண்ணுவாங்களே?)


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEintZ8JdSJmj1fCehYJU8u2RhoRaUVtXx9BiwRaA8bj0fTVSZ8oc9gekmmPJtvjmXORC8k-YAzlaDvoxIfkONytbQau18RbA-HwRttD4OhA-XAk6v8-8hZdTtE9nVZCVSbQ_50TVOqMzg-E/s1600/65684786Sonia-Agarwal-and-Selvaraghavan.jpg

7. க்ளைமாஸ்ல சோனியா அகர்வால் என்னமோ தவணை முறை தற்கொலை திட்ட அமைச்சர் மாதிரி 20 நிமிஷத்துக்கு ஒரு முறை தூக்க மாத்திரை 10 போடறார்.. கொஞ்ச நேரம் ஷூட்டிங்க்ல கலந்துக்கறார்.. மறுபடி 10 மாத்திரை சாப்பிடறார்/.. வாழ்வை வெறுத்தவங்க தனி அறைல ஒரே மூச்சாகத்தானே தற்கொலை செய்வாங்க?

8.  ஹீரோயின் சோனியா அகர்வாலோட பள்ளித்தோழி தன் மேரேஜ் இன்விடேஷனை கொடுக்க வர்றப்ப சோனியா வீட்ல இல்லை, அவங்கம்மா கிட்டே கொடுக்கறாங்க.. போயிடறாங்க.. அவங்கம்மாவுக்கு சோனியா அந்த மேரேஜ்ல கலந்துக்க இஷ்டம் இல்லை.. அதனால சொல்லலை.. அப்போ அவங்க அந்த பத்திரிக்கையை ஒளிச்சோ எரிச்சோ வெச்சிருக்கலாம், ஆனா 20 நாளா டேபிள்லயே இருக்கு.. 

9. அந்த கல்யாண பத்திரிக்கையை பார்த்த  20 நாள் கழிச்சு லேட்டா  பார்த்த சோனியா  தன் அம்மா கிட்டே “ ஏன் மறைச்சே? அவளுக்கு நான் என்னெ என்னெ எல்லாம் செய்ய நினைச்சேன்னு  1 பக்கம் கோப வசனம் பேசறாரே?ஏன்? அவர் செய்ய நினைச்சதை மேரேஜ் முடிஞ்ச பின் செய்யக்கூடாதா?கண்டுக்காம விட்றாரே?

10. சான்ஸ் கேட்கப்போகும் நடிகைகள் எல்லாரும் தயாரிப்பாளர், அல்லது டைரக்டர் கூட படுத்துக்கறாங்க என்று சொல்ல வர்றதைக்கூட ஒரு வகைல ஏத்துக்க்கலாம்.. ஆனா எல்லாருமே எந்த பாதுகாப்பும் இல்லாம மாசம் ஆகறது காமெடி..

11. சோனியா அகர்வாலோட பெயர் கதைப்படி அஞ்சலி. அதைக்கேட்ட ராஜ்கபூர் சினி ஃபீல்ட்ல ஆல்ரெடி ஒரு அஞ்சலி இருக்காங்க, அதனால உன் பேரை மாற்றனும்கறார்.. ஆனா அதே பேர்ல தான் கடைசி வரை இருக்கார்.. ஏன்?

12.. செம பரபரப்பா, விறு விறுப்பா எடுத்து இருக்க வேண்டிய இந்தக்கதையை ஏன் அவ்ளவ் ஸ்லோவா டிராமா மாதிரி கொண்டு போகனும்?

http://4.bp.blogspot.com/-wOc_qUlI9do/TtZncnsm8dI/AAAAAAAAWeg/4PwTTp3jfjs/s1600/Oru+Nadigayin+Vakku+Moolam+Shooting+Spot+Stills+%252838%2529.jpg

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 39 ( ஆனா விகடன்ல விமர்சனம் போட மாட்டாங்க, சும்மா படத்தோட மதிப்பீட்டுக்காக மார்க்)

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்
சி.பி கமெண்ட் - யார் யார் எல்லாம் இந்தப்படம் பார்க்கலாம்?பாரதிராஜா, குஷ்பூ, பிரபு தேவா, நயன் தாரா , சிம்பு, ஹன்சிகா மோத்வானி மற்றும் கிசு கிசு செய்திகளை ஆர்வமாக படிக்கும் வம்படி வனஜாக்கள்,வரதராஜன்கள் மட்டும் பார்க்கலாம்.

ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் படம் பார்த்தேன்

15 நாட்கள் ஓடும்..

http://www.filmics.com/tamil/images/stories/news/Sep_2011/24.09.11/sonia_agarval.png

Tuesday, August 02, 2011

கழுவற மீன்ல நழுவற மீனா ஃபிகர் இருந்தா நாம என்னா செய்யனும்?

Colorful Cauliflowers
1. எப்போ பார்த்தாலும் எனக்கு ஐஸ் வெச்சு பேசறீங்களே?ஏன்?


EYES உன் மேல் இருக்கையில்  ICE என் வார்த்தைகளில் இருப்பதில் வியப்பென்ன? # காதல் கடலை





--------------------------------------


2. ”ஏதோ கோபத்துல பேசிட்டேன்,எதையும் மனசுல வெச்சுக்காதீங்க”

“உன் அன்பைத்தவிர வேறெதுவும் என் மனசில் தங்குவதில்லை” # காதல் கடலை.




-------------------------------------

3.  உன் கூந்தல் இழைகள் இவ்வளவு சூடாக இருக்கக்காரணம் என் சமீபமா? இல்ல. உன் வீட்ல இருந்து கிளம்பறப்பவே கூந்தலை அயர்ன் பண்ணிட்டு வந்துட்டியா?

--------------------------

4. சர்வ சாதாரணமாக அடையாளம் காணப்படுகிறது பல பெண்களின் அநாவசிய அலட்டல்கள்,ஆனால் அனைத்து ஆண்களாலும் ரசிக்கப்படும் திகட்டல்கள்

----------------------


5. கூடல் முடிந்தும் கூடவே அணைத்தபடி படுத்திருந்தால் அவன் அன்பானவன்,அந்தப்பக்கம் திரும்பிப்படுத்தால் ஆணானவன்,ஆணவமானவன்

------------------
 Photo




6. ”பேசிப்பேசியே என்னை மடக்கி விட்டீர்கள்”

“ பேசா மடந்தையாயிருந்த என்னை மடக்கி பேச வைத்ததே நீ தானே?” # காதல் கடலை

-----------------------


7. நீரின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க  அதன் அழுத்தமும் அதிகரிப்பது போல நீ என்னை விட்டு தொலை தூரம் செல்ல செல்ல என் நேசமும் அதிகரிக்கும்

--------------------------


8. எங்கள் இருவரில் யார் உசத்தி? என விஷத்தீ பரப்பும் கேள்வியை 2 சிநேகிதிகள் கேட்கையில் நிசத்தினை சொல்ல அகத்திணை தடுக்குது

-------------------------


9. மொய்க்கு மொய் வைப்பது தமிழனின் பாரம்பரியம்,நான் உன் மீது ஏராளமான அன்பை செலுத்தி விட்டேன், இனி உன் முறை


---------------------------------


10. ”நீ ஒரு மச்சக்கன்னி”

“அழகிலா?”

“ ம்ஹூம், கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கழுவற மீன்ல நழுவற மீனா இருப்பதால்”

----------------------------

Photo



11. டியர்,எனக்கு கண்கள், உதடுகள் 2ம் ரொம்ப சின்னது.பிடிச்சிருக்கா?

“அப்படி சொல்ல உனக்கு உரிமை இல்லை,அவை முழுக்க  என்னுது,இன்னும்  என் மனசுக்குள்  மின்னுது

--------------------

12. சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் இனி சத்தியம் செய்ய மாட்டேன். இது உன் மேல சத்தியம்

-----------------------------


13. எந்த பக்க விளைவும் இல்லாத உலகின் மிகச்சிறந்த மருந்து புன்னகைத்த முகம்

-------------------


14. சில சமயம் சிரிப்பாள்,பல சமயம் சீறுவாள்,மல்டிபிள் பர்சனாலிட்டி உண்டு அவளுக்கு,அதனாலேயே அந்நியள் ஆனாள்

-------------------------


15. ராஜாத்தியின் கணக்குப்பிள்ளை...கைது!: நில மோசடியில் அடுத்த திருப்பம் #அவர் ஏதாவது சைடுல யாரையாவது கணக்கு பண்ணீட்டாரா?

------------------------
 Hoverpath



16. என் வளர்ச்சியை பொறுக்க முடியாதவங்க என்னைப் பற்றி  தப்பான செய்தியை பரப்புகிறார்கள் -  திவ்யா ஸ்பந்தனா#பெரிய வளர்ச்சி ஒண்ணும் தட்டுப்படலையே மேடம்?

------------------


17. ஆத்தூர் அருகே கணவன் சாவு: மனைவி தற்கொலை முயற்சி #இந்த முயற்சியை முதல்லியே ஒழுங்கா செஞ்சிருந்தா அண்ணன் தப்பி இருப்பாரு!

--------------------------


18. பரத்துக்கு மார்க்கெட் இல்லை- சிம்பு  #நல்ல வேளை, நயன் தாரா மார்க்கட்டு சரிஞ்சிடுச்சுன்னு பிரபு தேவாவுக்கு தந்தி அடிக்காம விட்டீங்களே!

---------------------------


19. தி.மு.க., பொதுக்குழுவில் ஸ்டாலின் கை ஓங்கியது #ஆமா, அழகிரியின் முகம் கோபத்தில் வீங்கியது,அவரது வாகனம் மதுரையில் தேங்கியது

-------------------


20. குஷ்பூ கைது# அவரை கைது பண்ணி கூட்டிட்டு போனப்ப பேக் டிராப்ல போவோமா ஊர்கோலம்,ஜெயிலோரம் எங்கெங்கும் பாட்டு போட்டாங்களா?

---------------


21.ஊர்ல 10 தடவை 15 தடவை ஜெயிலுக்குப்போனவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான், ஒரே ஒரு தடவை நான் ஜெயிலுக்குப்போயிட்டு பட்ட அவஸ்தை இருக்கே!- குஷ்பூ

-------------------------


22. பச்சோந்தியின் கண்கள் பார்க்கும் தன்மையை இழந்து விட்டால் அதன் நிறம் மாறும் தன்மையும் மறைந்து விடுவது போல உன் நேசத்தை சார்ந்து என் கவிதைகள் தடம் மாறுகின்றன.

---------------------


23.. ஆஃபீஸ் கான்ஃப்ரன்ஸ் ஹால் நோட்டீஸ் போர்டில் “ KEEP YOUR CELL PHONE IN MANMOHAN SINGH MODE"

---------------------

24. என்னதான் கற்பனை என்றாலும் விறகு வெட்டி கதையில் ஒன்றிற்கு 3 கோடாலிகளாக தந்து மரம் வெட்ட ஊக்குவித்தவள் எப்படி தேவதையாக இருக்க முடியும்?

--------------------

25. யுவர் ஆனர், என் காதலி என்னை பழி வாங்கும் நடவடிக்கைல ஈடுபட்டிருக்கா.

எப்படி?

மேரேஜ் பண்ணிக்க சொல்றா.#DMK  லவ்வர்




------------------------------



Saturday, March 19, 2011

ஆனந்த விகடன் VS குஷ்பூ பேட்டி - காமெடி கும்மி

 http://www.anushkapics.com/images/anushka.jpg
 

முத்தமிழ் வித்தகர் டாக்டர் கலைஞர் ஆசி பெற்று கழகத்தின் கிளாமர் பேச்சாளராக குணவதி குஷ்பூ நம் நகரங்களில் வலம் வர இருக்கிறார்..பெண்களின் கற்பு பற்றி உயரிய கருத்துக்களை பகிர்ந்து 87 கோர்ட்களில் பாராட்டு பெற்றவரும்,ஷூட்டிங்க் ஸ்பாட்டில் கடவுள் படத்தைபார்த்தாலே பய பக்தியோடு கும்பிட்டு நல்ல பெயர் வாங்கியவரும்,ஜெயா டி வி யில் ஜாக்கெட்பாட் நிகழ்ச்சியின் மூலம் பெண்களுக்கு ஜாக்கெட் பற்றிய விழிப்புணர்வை ஊட்டியவரும் ஆகிய தானைத்தலைவி  (அம்மா தொண்டர்கள் மன்னிக்க)குஷ்பூ இந்த வாரம் ஆனந்த விகடனுக்கு பேட்டி அளித்திருக்கிறார்..

அந்த பேட்டியை அப்படியே தந்தால் சுவராஸ்யம் இருக்காது என்பதால் குஷ்பூவின் மனசாட்சி என்ன நினைத்திருக்கும் என்பதை எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்குடன் தந்துள்ளேன்..

தி மு க வுக்கு குஷ்பூவே தேவை இல்லாத ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்தானே என முணு முணுப்பவர்களுக்கு - சாரி.. இதை நீங்கள் உங்கள் தலைவரிடம் தான் கேட்க வேண்டும்.. ஹி ஹி


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGNL_oAkB5EsAjE_39uJspwn-OtvKno7Rod3kbTuxnYyZ1v6DOpBmiFqcWxC8S3opZ0DKx4k-ZKUSFc5EI496drYlLZqr5f_nkgOmNJefyeyMlf0hEig6bEQ4fQ9rndto1pAcnTljvd0x9/s320/kushbu_3_deviyar.jpg

1. ''முதன்முதலா பிரசாரத்துக்குக் கிளம்புறீங்க. என்ன பேசுவீங்க... பயமா இருக்கா?'' 

''எனக்குப் பயமே கிடையாது. 20 வருஷமா இங்கேதான் இருக்கேன். ரெண்டு பெரிய கட்சிகளைப்பத்தியும் நல்லாவே தெரியும். திராவிட அரசியல் வரலாறு தெரியும். நாட்டு நடப்பு தெரியும். வழக்கமான அரசியல்வாதிங்க மாதிரி நான் பேச மாட்டேன். எதிர்க் கட்சி யைப்பத்தியோ, அதன் தலைவர்களைப்பத்தியோ தப்பா பேச மாட்டேன். தலைவர் கலைஞர், தமிழ் மக்களுக்காக இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ், இலவச டி.வி, இலவச நிலம், ஒரு ரூபாய் அரிசின்னு அத்தனை விஷயங்களையும் பார்த்துப் பார்த்துப் பண்ணியிருக்கார். அதைச் சொன்னாலே, கோடிக்கணக்கான மக்களின் ஓட்டு எங்களுக்குத்தான்!''

குஷ்புவின் மனசாட்சி - எனக்கு எதுக்குங்க பயம்? சுந்தர் சி தான் பயப்படனும்..பொதுவா புருஷங்க தான் பொண்டாட்டி என்ன பேசிடுவாளோ.. வம்பை விலைக்கு வாங்கிட்டு வந்துடுவாளோன்னு பயப்படுவாங்க..பொண்டாட்டிங்களுக்கு கவலையும் கிடையாது, பயமும் கிடையாது..

2. ''பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள் ரெண்டு கட்சிகளும் ஒரு காலத்தில் உங்களைக் கடுமையா எதிர்த்தாங்க. இப்போ அவங்ககூட இணைந்து பிரசாரம் செய்யும் சந்தர்ப்பம் வந்தால்..?'' 

''கண்டிப்பா இணைந்து பிரசாரம் செய்வேன். இப்போ அவங்க எங்க அணியில்தானே இருக்காங்க. தலைவர் பாலிஸிதான் என் பாலிஸியும். மறப்போம்... மன்னிப்போம்!''


குஷ்புவின் மனசாட்சி -

டைரக்டர் சொல்றபடி கேட்கவேண்டியது ஒரு நடிகையோட வேலை.. ஹீரோ கூட டூயட் பாடச்சொன்னா பாடுவோம்.. வில்லன் கூட டூயட் பாடச்சொன்னாலும் பாடுவோம்..கலைஞர் தி மு க வோட டைரக்டர்...


3. ''ஸ்பெக்ட்ரம் பிரச்னை தி.மு.க-வுக்கு எதிரா இருக்குதே?'' 

''உண்மையில் ஸ்பெக்ட்ரம் ஒரு பிரச்னையே இல்லை. மீடியாதான் எல்லாத்துக்கும் காரணம். பரபரப்புக்காக, 'அவ்ளோ நஷ்டம்... இவ்ளோ நஷ்டம்’னு கிளப்பிவிடுறாங்க. கடைசியில், இப்போ டயர் பஞ்சர் ஆன மாதிரி புஸ்ஸுனு போயிருச்சு. எதிர்க் கட்சிகளுக்கு தி.மு.க-வைக் குறை சொல்லக் காரணமே இல்லை. அழுத குழந்தை கையில் பொம்மையைக் கொடுத்தா, அதையே வெச்சு விளையாடும். அது மாதிரி எதிர்க் கட்சிகள் ஸ்பெக்ட்ரமைக் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டாங்க!'' 


குஷ்புவின் மனசாட்சி -

அது என்ன ரம்மோ எனக்கு என்ன தெரியும்?ஒரு கூட்டத்துக்கு இவ்வளவுன்னு சம்பளம் குடுத்துடறாங்க.. என்ன பேசனும்னு எழுதிக்குடுத்துடுவாங்க.. போய் ஒப்பிச்சுட்டு வந்துடுவேன்,, தி மு க தோத்தா என்ன?  ஜெயிச்சா என்ன? எனக்கு கல்லா நம்புனா சரி (நிரம்புனா)
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj83a2f1m39wBAQmJp0X0ZwSYDuI8molwihBTspDwz32uU6Vn-UtFlyR0gH0yuCgTvZNXT8eM5a-6wDHsfhEf5ZfXcZrNsnMBQyXFCL0fOiqNi-ue7CPNQUrq2XTei5Eb8WgqIhLjoUZ9yd/s1600/kushboo%5B1%5D.jpg

4. ''கலைஞர் ஆட்சியில் அவர் குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகம் என்பது ஒரு முக்கியக் குற்றச்சாட்டு...'' 


''அப்படின்னு மக்களா சொன்னாங்க? எதிர்க் கட்சிகள் புதுசு புதுசா யோசிச்சு காரணம் சொல்றாங்க. 'இவ்வளவு நல்லது பண்ணி இருக்கோம்’னு தைரியமா எங்களால் சொல்ல முடியும். அவங்களால சொல்ல முடியுமா? கலைஞர் ஆட்சியில் தப்பு கண்டுபிடிக்கப் பெரிய ஆராய்ச்சியே பண்ணிட்டு இருக்காங்க!''


குஷ்புவின் மனசாட்சி -

ஆமாங்க.. கலைஞர் வாரிசுலயே பாருங்க ஸ்டாலினுக்கு என்னை பிடிக்கும், அழகிரிக்கு பிடிக்காது.. கனி மொழிக்கு என்னை பிடிக்காது.. கட்சில ஒரு கிளாமரான ஆளு வர்றதை அவங்க விரும்பலை ... இதுவும் குடும்ப ஆதிக்கம் தான்.. ஆனா வெளில சொல்ல முடியுமா?


5. ''கார்த்திக், விஜயகாந்த், சரத்குமார்னு உங்க சினிமா நண்பர்கள் எதிர் அணியில் இருக்காங்களே?''

''நான் அவங்களை எதிர்த்துப் பேசறதுக்காகவோ, குறைச்சுப் பேசறதுக்காகவோ அரசியலுக்கு வரலை. ஒருவேளை, அவங்க என்னைத் தாக்கிப் பேசினாலும், நான் அவங்களைத் தாக்கிப் பேச மாட்டேன். எதிர்க் கட்சி என்பதால், அவங்க எனக்கு எதிரிகள் கிடை யாது. நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் ஆனப்போ, கட்சி வித்தியாசம் இல்லாம எல்லாப் பெண் எம்.பி-க்களும் ஒண்ணா நின்னு கை கொடுத்தாங்களே... அப்படித்தான் நான் அரசியல் பண்ண ஆசைப்படுறேன்!''


குஷ்புவின் மனசாட்சி -

இருந்தா என்ன? என்னமோ அவங்க நாட்டைக்காப்பாத்த வந்த தியாகிங்க மாதிரியும், நான் துரோகி மாதிரியும் பேசறீங்களே.. எல்லாரும் கூத்தாடிங்க தான்.. பணத்துக்காக எப்படி வேணும்னாலும் மாத்தி மாத்தி பேசுவோம்.. கல்லா கட்டற வேலையைத்தான் எல்லாரும் பார்க்கறோம்..?

6. ''விஜய் அரசியலுக்கு வர்றதைப்பத்தி...'' 

''நாட்டுக்கு நல்லது பண்ணணும்னு நினைக்கும் யாரும் அரசியலுக்கு வரலாம். ஆனால், சினிமா வேற... அரசியல் வேற! சினிமாவில் கை தட்டி, விசில் அடிப்பாங்க. அவங்க அப்படியே நமக்குத்தான் ஓட்டுப் போடுவாங்கன்னு நம்பி வரக் கூடாது. அரசியல்... சினிமாவைவிடச் சிக்கலான ஏரியா!''


குஷ்புவின் மனசாட்சி -

அவருக்கு படத்துலதான்  நடிப்பு சரியா வர்லைன்னு  பார்த்தா அரசியல்லயும் சரியா நடிக்க வர்லை.. இன்னும் பக்குவப்படனும்.. இப்போ என்னை ஜெவை யும் எடுத்துக்குங்க.. எவ்வளவு திறமையா நடிக்கறோம்..அந்த அளவுக்கு அவருக்கு அனுபவம் பத்தாது...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqqS4hYJwnWwJuNydfG72p_Bfbqv_XRXcQ8sliHQw8bTkoVGLV94VejAw4sQO5BB7bUE2IUvX7E11_79HeVlerO6CuHKDuv1VGs71XCGrcK6gfdldbAkkQQ9CYIoAL4cagPUQe2UnGvy4/s1600/kus.jpg
7. ''சரி... சினிமா பத்திப் பேசுவோம். உங்களுக்குப் பிடிச்ச ஹீரோயின் யாரு?'' 

''எனக்கு ஜோதிகாவை ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அவங்க ஒரு கம்ப்ளீட் ஹீரோயின். ரொம்ப வருஷம் கழிச்சு, இப்போ அனுஷ்காவைப் பிடிச்சிருக்கு. 'அருந்ததி’யில் பிரமாதமான பெர்ஃபார்மன்ஸ். நல்ல உயரம், நல்ல அழகு... நம்பர் ஒன் ஹீரோயினுக்கான எல்லா தகுதிகளும் அவங்களுக்கு இருக்கு!''


குஷ்புவின் மனசாட்சி -

நல்ல வேளை பிடிச்ச ஹீரோ யாருன்னு கேட்கலை.. பிரபுன்னு சொன்னா புருஷன் மூடு அவுட் ஆகிடுவாரு,, கார்த்திக்னு சொன்னா பிரபு மூடு அவுட் ஆகிடுவாரு.. இவங்க 3 பேர் கிட்டயும் சிக்கிட்டு நான் படற பாடு இருக்கே.. ஹய்யோ ஹய்யோ..


8. ''பலர் உங்களுக்கு ரசிகர்கள். நீங்க யாருக்கு ரசிகை?'' 

''நான் ஸ்கூல் படிக்கும்போது ரவி சாஸ்திரியோட ஃபேன். ஆனா, இதுவரை ஒரு தடவைகூட அவரை நேரில் பார்த்தது இல்லை. அது பெரிய வருத்தம். நடிகர்களில் நான் கார்த்திக் ரசிகை. 23 வருஷமா அவர் எனக்கு நல்ல ஃப்ரெண்ட். அவர் ஒரிஜினல் பேரான 'முரளி’ன்னு சொல்லித்தான் இப்பவும் நான் கூப்பிடுவேன். என் குழந்தைகளுக்கு அவர் பேரே தெரியாது. 'பெரியப் பா’ன்னு சொன்னாத்தான் தெரியும். என் குடும்பத்தில் அவரும் ஒருவர்!''


குஷ்புவின் மனசாட்சி -

நல்ல அப்பா.., நல்ல பெரியப்பா அமைஞ்சிருக்காங்க என் குழந்தைகளுக்கு.. .ஹி ஹி 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgF5j849OuiTd-uJqg5LnuW8BqyJOMgKSIEZ1aD3w0vjeTDZuQ7TGNg-X02sxmqsOKS2jzeRVhFSPiX1idG8ShD3AWuZ3-96gFdTVJobjsIzQ1ZzCfYlFzOIkKewUQEf6-NcToqhFjZNMxJ/s1600/ileana_vedi.jpg
டிஸ்கி -1 : இந்த பேட்டி குஷ்புவைத்தவிர யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. ஹி ஹி  

டிஸ்கி 2 : குஷ்பூவின் குலப்பெருமையை கேவலப்படுத்தி விட்டார்..சி பி மன்னிப்பு கேட்கும் வரை போராடுவோம் என யாராவது பதிவு போட நினைத்தால்.. வேணாம்ங்க.. ஏன் இந்த சிரமம்.. இங்கேயே இப்பவே மன்னிப்பு கேட்டுக்கறேன்.. ஹி ஹி ஈரோட்ல 10 ரூபாவுக்கு 5 மன்னிப்பு...


டிஸ்கி 3. - இலியானா ஃபோட்டோ எதுக்கு போட்டிருக்குன்னா ரொம்ப பழசா இருக்கே ஃபோட்டோக்கள் என யாரும் சலித்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக..