Showing posts with label INTERVIEW. Show all posts
Showing posts with label INTERVIEW. Show all posts

Sunday, November 29, 2015

வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்படுவோருக்கு எச்சரிக்கை - சவுதி பெண்ணின் பேட்டி

காட்பாடி அருகே மூங்கிலேரி கிராமத்தை சேர்ந்த கஸ்தூரியை எளிதில் மறந்திருக்க முடியாது.

சவுதிக்கு வீட்டு வேலைக்கு சென்று, மொழியறியாத தேசத்தில் பல மாதம் கஷ்டங்களை அனுபவித்ததோடு, தன் ஒரு கையையும் பறிகொடுத்து, குற்றுயிரும் குலையுமாக நாடு திரும்பியவர். சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடித்து, தன் சொந்த ஊருக்கு வந்திருந்த அவரை சந்தித்தோம்.

வலது காலும் முறிந்துள்ளது. முதுகெலும்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சவுதி அனுபவங்கள் அவர் மனதிலிருந்து  இன்னும் முழுவதுமாக விலகவில்லை என்பதை அவரது முகம் காட்டுகிறது. 

எழுந்து நடக்கவே சிரமப்பட்டவரிடம், "என்ன நடந்தது?" என்றோம். 

"எனக்கு மூணு பொண்ணுங்க, ஒரு பையன். வீட்டுக்காரர் ஒழுங்கா வேலைக்கு போகலை. பையன் கட்டட வேலைக்கு போய் குடும்பம் நடத்தவேண்டியதா இருந்துச்சு. ஒருநாள் வேலைசெய்றபோது தடுமாறி விழுந்து அவனுக்கு கால் உடைஞ்சு, தொடர்ந்து வேலைக்கு போக முடியாம ஆகிவிட்டது.

குடும்பத்துக்கு வருமானமே இல்லாம போச்சு.  கடன் வாங்கி பொண்ணுங்களை கட்டிக்கொடுத்திட்டு அந்த கடனையும் திருப்பி கட்ட முடியல. சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலைமையிலதான் பையனுக்கு தெரிஞ்ச ஒருத்தர்,  'வெளிநாட்டுல வீட்டு வேலைக்கு நல்ல சம்பளம் தராங்க'னு சொல்ல, சரின்னு அங்க போறதுக்கு முடிவு செய்தேன். 

புருஷனும் வேலைக்கு போறதில்லை. பையனுக்கும் அடிபட்டுப்போச்சு. நாமதான் இனி குடும்பத்தை கரைசேர்க்கணும்னு வெளிநாட்டு வேலைக்கு போனேன். நல்ல சம்பளம் தருவாங்க. நம்ம வாழ்க்கை வறுமையும் போயிடும்னு நம்பிப்போனேன். ஆனா கையை இழந்து, காலும் செயல்படாமபோய், இப்போ என்னோட வேலைகளையே என்னால செஞ்சுக்க முடியலை."- கதறி அழுகிறார் கஸ்துாரி.

மெல்ல தன்னை ஆசுவாசப்படுத்தியவரிடம் "அங்கு வேலைச் சூழல் எப்படி இருந்தது?"  என்றோம்.

" ரியாத்ல எனக்கு வேலை. அரபிக்காரங்க ஒருத்தங்களோட 65 வயசு அம்மாவ பாத்துக்கணும். அவங்க வீட்டு வேலையை எல்லாம் செய்யணும். துணி துவைக்கறது, வீட்டை சுத்தம் பண்றது, அவங்களுக்கு தேவையானதை செய்து தரணும். காலைல எந்திரிக்கறதுல இருந்து ராத்திரி தூங்குற வரை வேலை இருக்கும். ஒருநிமிடம் கூட ஓய்வு கிடைக்காது. ஜூலை மாசம் போனேன். போன நாள்ல இருந்து ஒரு நாள் கூட நல்ல சாப்பாடே எனக்கு போட்டதில்லை.
மூணு நாளுக்கு முன்னாடி செஞ்ச கெட்டுப்போன சாப்பாட்டைதான் கொடுத்தாங்க. சரி சம்பளத்துக்குன்னு இவ்ளோ தூரம் வந்துட்டோம். சகிச்சுகிட்டு இருப்போம்னு இருந்தேன். மாசம் 300 டாலர் சம்பளம்னு சொல்லியனுப்பினாங்க. அங்க 900 ரியால் கொடுத்தாங்க. முதல் மாசம் சம்பளம் கொடுத்திட்டு என் பையனுக்கு போன் போட்டு கொடுத்தாங்க. 

அவன்கிட்ட 'சம்பளம் வாங்கிட்டேன்பா என்று சொல்லிவிட்டு, 'சரியான சாப்பாடு போடறதில்லைன்னு' மனக்குறையாக சொன்னேன். அவ்வளவுதான், மறுநாள் எனக்கு கொடுத்த காசையும் புடுங்கிட்டாங்க. என் செல்லையும் வாங்கிகிடுச்சு அந்த வீட்டம்மா. 

சாப்பாடு போடலைன்னாலும் சம்பளமாவது தந்தா போதும்னு இருந்தேன். கொடுத்த சம்பளத்தையும் புடிங்கிகிட்டதால பயம் வந்துவிட்டது. வீட்டுக்கும் பேச முடியாது. அவங்க பேசுறதும் எனக்கு புரியாது. அந்தம்மா கூட சைகையில்தான் பேசுவேன்.  'எனக்கு இங்க இருக்க புடிக்கலை... ஊருக்கே அனுப்பி வச்சிடுங்கமா' ன்னு ஒருமுறை அழுதுட்டே சைகையால கெஞ்சினேன். 

கோபமான அந்தம்மா,  'கழுத்தை அறுத்திடுவேன்' னு சைகை காட்டினாங்க. எனக்கு பகீர்னு ஆகிடுச்சு. இங்க இனி இருந்தா நம்மளை எதாவது பண்ணிடுவாங்கன்னு, அவங்க பையன் வீட்ல வேலை செய்த நெய்வேலிக்காரர் ஒருத்தர்ட்ட நடந்த விஷயத்தை சொல்லி, 'என்னை போலீஸ் ஸ்டேஷன்ல விட்டுருப்பா நான் அவங்க மூலமா ஊருக்கு போய்டுறேன்' னு அழுதேன்.

ஆனா அந்த பையன் நான் சொன்னதை அப்படியே அந்த வீட்டுக்காரங்ககிட்ட சொல்லிட்டான். அப்புறம் சித்ரவதை ஆரம்பிச்சிட்டது. என்னை எதாவது பண்ணிடுவாங்களோன்னு பயந்து, ஒருநாள் அந்த வீட்டின் மாடியில் இருந்து சேலையை கட்டி இறங்கப் பார்த்தேன். அப்போ அங்க இருந்த ஜெனரேட்டர்ல கை சிக்கிக்கிடுச்சு. ரத்தம் வெளியேறினதால் நான் மயங்கி கீழ விழுந்துட்டேன். அப்புறம் என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியாது. கை ரொம்ப நசுங்கினதால வெட்டி எடுத்துட்டதா சொன்னாங்க." என்று பறிகொடுத்த கையின் தோள்பட்டையை தடவிப்பார்த்து கண்ணீர் சிந்தினார். 

"குடும்ப வறுமைக்கு ஒரே தீர்வாக வெளிநாட்டு வேலை அமையும்னு நம்பிதான் அங்க போனேன். இந்த மாதிரி கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும்னு தெரியாது. இனி அப்படி யாரும் போகக்கூடாது. அதுக்கு நானே நேரடி உதாரணம். குறைவான சம்பளத்துக்கு ஒரு ஆட்களை அனுப்ப இத்தனை லட்சம்,  இத்தனை ஆயிரம்னு ஏஜெண்டுங்க கமிஷன் வாங்கிக்கறாங்க. 

வீட்டுக்காரங்க அவ்ளோ செலவு செய்வதால், நமக்கு வேலை புடிக்கலைன்னாலும் கட்டாயப்படுத்தி வேலை வாங்குறது நடக்குது. வீட்டை விட்டு எங்கயும் அனுப்பாததால், மற்ற இடங்கள்ல இருக்க நம்ம பொம்பளைங்க நிலை தெரியலை. ஆனால் அவங்களும் இப்படிதான் கொடுமை அனுபவிக்கறாங்கன்னு நினைக்கிறேன்." என்றார் கம்மிய குரலில்.

கஸ்துாரிக்கு தமிழக அரசு சார்பில் பத்து லட்சம் நிவாரணத் தொகையாக வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து மாதம் ரூ. 8000 வட்டிப்பணமாக வருவதாக சொல்கிறார். ஆனால் தற்போதைய நிலையில் அவரின் மருத்துவ செலவை கவனித்துக்கொள்வதற்கே அந்த தொகை சரியாகி விடுகிறது என்கிறார்.
மத்திய அரசு மற்றும் சவுதி அரசிடமிருந்து நஷ்ட ஈடு  கேட்டு கோரிக்கை மனு அனுப்பிக்கொண்டிருக்கிறார். 

வெளிநாட்டு வேலையில் விருப்பம் இருப்பது தவறில்லை. சரியான தகுதிகளோடு, அனுபவம் வாய்ந்த,  முறையாக அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலம் செல்வதே சரியாக இருக்கும்.  எதையும் ஆராயாமல் அதிக சம்பளம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தைகளை நம்பிபோனால் துயரங்களை சந்திக்கவேண்டிதான் இருக்கும்.

கஸ்துாரியின் வாழ்க்கை சொல்லும் படிப்பினை இதுதான்!

- அ. அச்சணந்தி
படங்கள்: ச.வெங்கடேசன்

thanks vikatan

Thursday, March 20, 2014

ஆப்பிள் ஏன் விழுந்தது? - நியூட்டன் ‘பரபரப்பு’ பேட்டி! @ THE HINDU,ADRASAKA

நியூட்டனின் விதிகளை எளிமையாக விளக்கும் வகையில் ஒரு கற்பனை உரையாடல்!
நிருபர்: நியூட்டன் சார், ஆப்பிள் உங்கள் தலையில் விழுந்த கதை உண்மையா?
நியூட்டன்: கெப்ளர் கண்டுபிடித்த கோள்களின் இயக்க விதிகளை மூன்று நாட்களாக விடாமல் படித்துக்கொண்டிருந்தேன். கோள்களெல்லாம் சூரியனை நீள்வட்டமாகச் சுற்றிவருவதுபற்றி அவற்றின் மூலம் அறிந்தேன். அப்போது எனக்குப் பசி தாங்க முடியவில்லை. அந்த வாசிப்பைத் தொடர முடியாததால், ஆப்பிளைப் பறித்துச் சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாம் என்று தோட்டத்துக்குச் சென்றேன்.
நிருபர்: அப்போதுதான் அந்த ஆப்பிள் உங்கள் தலையில் விழுந்ததா?
நியூட்டன்: இல்லை, அது என் கையில் விழுந்தது.
நிருபர்: உங்களுக்குப் பசி எடுக்கிறது என்று ஆப்பிளுக்கு எப்படித் தெரியும்? அல்லது கடவுள் செயலா?
நியூட்டன்: கடவுள் செயலல்ல, கெப்ளர் செயல்.
நிருபர்: எப்படி?
நியூட்டன்: கோள்களைப் பற்றிய அவரது கண்டுபிடிப்புதான், ஆப்பிள் எப்படி நேராக என் கையில் வந்து விழுந்தது என்பதை எனக்குப் புரிய வைத்தது. கோள்களின் சுற்றுப்பாதை சூரியனை மையம் கொண்டு எப்படி ஒரு நீள்வட்டமாக அமைகிறது என்பதை அவர்தான் புரியவைத்தார்.
நிருபர்: கிரகங்களின் சுழற்சி எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே?
நியூட்டன்: மேலும் அவர் சொன்னது, “சூரியனிலிருந்து ஒரு விசை வெளிவந்து கோளங்களைப் பற்றிக்கொள்கிறது.” அதிலிருந்து நான் சொல்வது, “பூமி தன் புலப்படாத கைகளால் ஆப்பிளைப் பற்றிக்கொள்கிறது.”
நிருபர்: ஆப்பிளைப் பற்றியது உங்கள் கைதானே?
நியூட்டன்: சூரியனிலிருந்து வெளிவரும் விசைபோல் பூமியிலிருந்து ஒரு விசை வெளி வந்து அதைச் சுற்றியுள்ள அனைத்தையும் பற்றிக்கொள்கிறது என்பதைத்தான் நான் அப்படிச் சொன்னேன். கோள்கள், விண்மீன் திரள், ஆப்பிள், நீங்கள், நான் அனைத்தும் அசைவது ஒரு விதியின் கீழ்தான். அதுதான் ‘நியூட்டனின் ஈர்ப்பு விதி’.
நிருபர்: சூரியனைச் சுற்றும் சனி அல்லது புதனைப் போல் ஆப்பிள் ஒன்றும் பூமியைச் சுற்றவில்லையே?
நியூட்டன்: ஆப்பிளால் சுற்ற முடியும்.
நிருபர்: எப்படி?
நியூட்டன்: கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள். மிகமிகப் பலத்துடன், அதாவது பூமியின் ஈர்ப்பு விசையை அது சமாளிக்கக் கூடிய அளவு பலத்துடன் வீசியெறிந்தால் அது பூமியைச் சுற்ற ஆரம்பித்து, தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கும்.
நிருபர்: ஆ… புரிகிறது, பூமியைச் சுற்றும் செயற்கைக்கோள்களைப் போல…
நியூட்டன்: என் கணக்குப்படி ஆப்பிளை ஒரு நொடிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால், பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து ஆப்பிள் விடுபட்டுவிடும். அதையே நொடிக்கு 42 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால், சூரியனின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு அண்டவெளியில் சுதந்திரமாகப் பயணிக்கத் தொடங்கிவிடும், இன்னொரு கோளின் அல்லது இன்னொரு நட்சத்திரத்தின் ஈர்ப்பு வலையில் விழும்வரை.
நிருபர்: ஆகையால் உங்கள் புகழ்பெற்ற ஈர்ப்பு விதி ஆப்பிளிலிருந்துதான் வந்தது.
நியூட்டன்: ஆமாம். நிறையுள்ள பொருள்கள் எல்லாமே ஒன்றையொன்று ஈர்க்கும் தன்மையுடையன. ஆகையால் மனிதர்கள் நாம் அனைவரும் ஒன்றாக இணையப் படைக்கப்பட்டவர்கள்.
நிருபர்: ஆப்பிளைச் சாப்பிடாமல் ஏன் அதைப் பார்த்தபடியே நிற்கிறீர்கள்?
நியூட்டன்: ஆப்பிளின் சிவப்பு நிறத்தைக் கவனித்தீர்களா?
நிருபர்: அதில் என்ன இருக்கிறது?
நியூட்டன்: சூரியனின் ஒளி ஆப்பிளின் தோல்மீது எதிரொலிப்பதால் ஆப்பிள் நம் கண்களுக்குத் தெரிகிறது.
நிருபர்: இதில் என்ன விஷயம்?
நியூட்டன்: சூரியனின் ஒளி வெண்மையாக இருக்க, அது எப்படி சிவப்பாகப் பிரதிபலிக்கிறது?
நிருபர்: ஆப்பிளின் தோல், ஒளியின் நிறத்தை மாற்றிவிடுகிறது.
நியூட்டன்: இல்லை இல்லை. சில நாள்களுக்கு முன்பு நான் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். சூரிய ஒளியை ஒரு முப்பட்டகம் (ப்ரிஸம்) வழியே செலுத்தினேன். அது வானவில்லாக வெளிவந்தது.
நிருபர்: ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு.
நியூட்டன்: வெண்மை என்பது ஒரு நிறமல்ல, அது அனைத்து நிறங்களின் கூட்டல்.
நிருபர்: ஓ, எல்லா நிறங்களின் தொகுப்பு என்று சொல்லவருகிறீர்களா?
நியூட்டன்: அந்தத் தொகுப்பை முப்பட்டகம் முழுமையாகப் பிரித்துவிடுகிறது. ஆப்பிளோ அனைத்து நிறங்களையும் உள்வாங்கிக்கொண்டு சிவப்பை மட்டும் பிரதிபலிக்கிறது.
நிருபர்: இதைச் சரி என்று எப்படி நிரூபிப்பது?
நியூட்டன்: நீல நிற வெளிச்சத்தில் இந்த ஆப்பிள் உங்கள் கண்களுக்குத் தெரியாது.அது எதையும் பிரதிபலிக்காமல் கருநிறத்தில் தெரியும்.
நிருபர்: அந்த ஆப்பிளைக் கொடுங்கள், நான் பரிசோதித்துப் பார்க்கிறேன்.
நியூட்டன்: ஐயோ, எனது ஆப்பிள்…?
நிருபர்: இயக்கம் குறித்த விதிகளை எனக்குப் புரியும்படி விளக்குங்கள். உங்கள் ஆப்பிளைத் தந்துவிடுகிறேன்.
நியூட்டன்: சரி, சொல்கிறேன். ஒரு பொருளின் அசைவுக்குப் பின்னால் இருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்துவதுதான் எனது மூன்று இயக்க விதிகள். நீங்கள் ஒரு காரில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் நேராகச் சென்றுகொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் கார் எந்தவொரு மாற்றமுமின்றி நேராகச் செல்லும். அப்படிச் செல்லும் காரின் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டால் என்ன அர்த்தம்?
நிருபர்: காரை ஓட்டும் நான் வேகத்தைக் குறைத்துவிட்டேன் அல்லது கூட்டிவிட்டேன்.
நியூட்டன்: அல்லது…
நிருபர்: ஸ்டீயரிங்கை வலது அல்லது இடது பக்கம் திருப்பிவிட்டேன்.
நியூட்டன்: இதுதான் என் இயக்க விதிகளின் மூலக்கரு. எந்தவொரு பொருளின் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டாலும், அந்தப் பொருளின் மீது ஏதோவொரு விசை செயல்படுகிறது என்று அர்த்தம்.
நிருபர்: ஓ! திடீரென்று ஸ்டீயரிங்கைத் திருப்பியதுபோல்…
நியூட்டன்: ஆம்! இந்தத் திடீர் மாற்றத்தின் விளைவு உங்கள் காரின் வேகத்தில் அல்லது செல்லும் திசையில் தெரியும்.
நிருபர்: வேக மாற்றமும் விசையும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதே நீங்கள் கண்டறிந்த உண்மை. இதை அனைவரும் மிகப் பெரிய சாதனை என்று சொல்கிறார்கள்.
நியூட்டன்: நான் மற்றவர்களுக்கு எப்படித் தோன்றுகிறேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால், என்னை நான் பார்க்கும்போது கடலோரம் விளையாடும் ஒரு குழந்தையைப் போல் தெரிகிறேன். அந்தக் குழந்தை அதிர்ஷ்டவசமாக ஒரு அழகான கிளிஞ்சலைக் கண்டெடுத்தது. ஆனால், அந்தக் குழந்தையின் முன் பரந்த பெருங்கடலாக அறியப்படாத உண்மைகள் விரிந்துகிடக்கின்றன என்பதுதான் உண்மை.
குறிப்பு:
நியூட்டன் பிறந்தபோது வழக்கத்தில் இருந்தது ஜூலியன் நாட்காட்டி முறை.
இதன்படி நியூட்டனின் பிறப்பு: 25-12-1642, இறப்பு: 20-03-1727.
புதிய நாட்காட்டி முறைப்படி (கிரிகோரியன் நாட்காட்டி) பிறப்பு: 04-01-1643, இறப்பு: 31-03-1727
- குமரன் வளவன், நாடகக் கலைஞர், இயற்பியலாளர்,
பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்பாளர்
தொடர்புக்கு: [email protected]

THANX - THE HINDU 

Saturday, January 19, 2013

பிரியாணி - கலக்கலான காமெடி ஃபிலிம் - வெங்கட்பிரபு பேட்டி

பிரிhttp://sphotos-a.xx.fbcdn.net/hphotos-snc7/c9.0.403.403/p403x403/421019_424850067585441_567857404_n.jpgயாணி பிளேபாய்!

கி.கார்த்திகேயன்
'ஹலோ... சிக்கன் பிரியாணி மேக்கிங் இல்லை... உங்க 'பிரியாணி’ படத்தோட மேக்கிங் கேட்டேன்?'
 
சார்... இது அஜித் சார் சொல்லிக் கொடுத்த ஃபார்முலா. உங்களுக்காக கம்பெனி ரகசியத்தை வெளியே சொல்றேன். மொதல்ல பாஸ்மதி அரிசி சார்... நல்ல பிராண்ட் அரிசியா வாங்கிக்கணும். அப்புறம் செம ஸ்பைஸி மசாலா தேவைப்படும். அது கையால் அரைச்சதா இருந்தா சூப்பர். அப்புறம் அரிசியைக் களைஞ்சு போட்டு, சிக்கனைக் கழுவி....''



கண் சிமிட்டிச் சிரிக்கிறார் வெங்கட்பிரபு. கோலிவுட்டின் கொண்டாட்டமான இயக்குநர். ''என் 'பிரியாணி’ டமால் டுமீல் சிரிப்புப் பட்டாசு. டைட்டில்ல வெங்கட்பிரபு டயட்னு இருக்கும். ஆனா, அன்லிமிடெட் கொண்டாட் டம் கியாரன்ட்டி. இதுவரை கார்த்தியே பார்க்காத கார்த்தியை 'பிரியாணி’யில் அவருக்குக் காட்டியிருக்கோம். செம ஸ்டைலிஷா ஆளை மாத்தியாச்சு. மாஸ் ஹீரோ சாயலே இல்லாம, ஏதோ தேனாம்பேட்டை சிக்னல்ல பஸ்ஸுக்குக் காத்திருக்கிற பையன் மாதிரி இருப்பார். 


கிட்டத்தட்ட ஒரு காஸனோவா கேரக்டர் பண்ணியிருக்கார். தாடி, கேடி, அடிதடினு திரிஞ்சிட்டு இருந்தவரை பிளேபாயா மாத்துறதுக்காக, மீசையை ட்ரிம் பண்ணி, உடம்பை டைட் பண்ணி, செம டிரில் வாங்கிட்டோம். என்னங்க... இந்த ஹன்சிகா நேர்ல இவ்ளோ பப்ளியா இருக்காங்க. ஐஸ்க்ரீம் பொண்ணுங்க. ஆனா, மனசைக் கல்லாக்கிக்கிட்டு அவங்களை வெயிட் குறைக்கச் சொல்லி இன்னும் ஸ்லிம் ஆக்கினோம். பொண்ணைப் பார்க்கிறப்பலாம் காதலிக்கத் தோணும்.


ரெண்டு பேர் எல்.கே.ஜி-யில் இருந்தே ஃப்ரெண்ட்ஸ். ரொம்ப ரொம்ப திக் ஃப்ரெண்ட்ஸ். அவங்க அப்படியே வளர்றாங்க. அவங்க பண்ற சேட்டைகள்தான் படத்தோட காமெடி, டிராஜடி, காதல் எல்லாமே. இப்பதான் முதல்முறையா ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறாங்க. ஆனா, இந்தப் படத்தில் ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி செமத்தியா பத்திக்கிச்சு. 'வேணும்னா பாருங்க... எங்க ரெண்டு பேருக்கும்தான் இந்த வருஷத்தோட 'பெஸ்ட் பேர்’ அவார்டு கொடுப்பாங்க’னு கார்த்தி அவ்வளவு நம்பிக்கையா இருக்கார். அந்த பெஸ்ட் பேர், கார்த்தி - ஹன்சிகா இல்லை. கார்த்தியும் ப்ரேம்ஜியும். ரெண்டு பேரும் சும்மா அள்ளு கிளப்பியிருக்காங்க!'



''ஓ... 'மங்காத்தாவுல அஜித்தை வில்லனாக்கி அதிர்ச்சி கொடுத்த மாதிரி, இந்தப் படத்தில் ப்ரேம்ஜியை ஹீரோவாக்கி ஷாக் கொடுக்குறீங்களா?'




''ஐயையோ, இப்படி எல்லாம் யோசிச்சு எனக்கு அதிர்ச்சி கொடுக்காதீங்க நண்பா! கார்த்தித£ன் ஹீரோ. சிங்கிள் ஹீரோ படம் இது. படம் முழுக்க ப்ரேம்ஜி அவர்கூடவே டிராவல் பண்ணுவார். தன்னையும் அறியாம கார்த்தி பண்ற தப்புக்கு எல்லாம் பலியாகிட்டே இருப்பார் ப்ரேம்ஜி. கடைசியில் ரெண்டு பேரும் ஒரு பெரிய சிக்கல்ல மாட்டுவாங்க. அதுல இருந்து எப்படி வெளியே வர்றாங்கங்கிறதுதான் பிரியாணி ரெசிப்பி!



இது யுவன் மியூஸிக் பண்ற நூறாவது படமாகவும் அமைஞ்சது ரொம்ப ஹாப்பி. செம ஜாலி சவாரி!''


''அஜித், கார்த்தினு டாப் ஹீரோக்களின் 'மோஸ்ட் வான்டட் டைரக்டரா இருக்கீங்க. ஆனா, சட்டுனு பார்த்தா ரெண்டு, மூணு படங்களில் நடிக்கிறீங்க. இன்னும் நடிப்பு ஆசை துடிச்சுட்டே இருக்கா?''



''அப்படி இல்லைங்க... 'விழித்திரு’ படத்தில் நான் நடிக்கிறது ரொம்பச் சின்ன ரோல். ஆனா, அர்த்தம் நிறைஞ்சதா இருக்கும். இயக்குநர் மீரா கதிரவன் அந்தப் படத்தில் நான்தான் நடிக்கணும்னு சொல்லி வந்து நின்னப்போ, 'தலைவா... தொழில் இப்பதான் நல்லாப் போயிட்டு இருக்கு. 


அப்படியே மெயின்டெய்ன் பண்ணிக்கிறேனே... முடி கொட்டி, வெயிட் எல்லாம் போட்டு ஒரு மாதிரி இருக்கேன். இப்பப் போய் நடிக்கச் சொல்றீங்களே?’னு பாலீஷா சொல்லி மறுத்தேன். ஆனா, அவர் விடாப்பிடியா நின்னு கதை சொன்னார். மெல்ட் ஆகிட்டேன். நல்ல கதை. ஒரே ராத்திரியில் நடக்கிற சம்பவங்கள்தான் படம். என்னால் முடிஞ்ச சின்ன விஷயத்தை பண்ணிக் கொடுத்திருக்கேன்.


 மத்தபடி, நம்ம பேட்டை எப்பவும் டைரக்‌ஷன்தான். என் படங்கள்லகூட நடிக்கக் கூடாதுனு தெளிவா இருக்கேன். அதுவும் போக, எங்க வீட்ல ஏற்கெனவே ப்ரேம்ஜினு ஒரு மகா நடிகன் கொடுக்கிற டார்ச்சர் பத்தாதா?'


 http://vanavilfm.com/wp-content/uploads/2012/07/sneha-prasanna-reception-stills01-275x244.jpg

'
''சமீபத்துல என்ன படம் பார்த்தீங்க... எது பிடிச்சிருந்தது?''


''ரொம்பப் பிடிச்சது 'வழக்கு எண் 18/9’. மத்தபடி, 'அட்டகத்தி’, 'பீட்சா’, 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’னு ரசிகர்களோட குட் புக்ஸ்ல இருக்கும் எல்லாப் படங்களும் பார்த்தேன். 'அட்டகத்தி’ ரஞ்சித் 'சென்னை28’-ல என் கிட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்தான். அந்தப் படத் துக்கு ஸ்டோரி போர்டு வரையுறதுக்காக சேர்த்துக் கிட்டேன்.


 ஆனா, ஒரு சின்ன கார்ட்டூன்கூட அவன் வரையலை. ஏன்னா, நான் அவனுக்கு ஸ்டோரியே சொல்லலை. அந்தப் படத்துல என்னங்க ஸ்டோரி இருந்துச்சு. ஆனா, இப்போ 'அட்டகத்தி’யில் அட்டகாசப்படுத்திட்டான். இப்போ வர்ற பசங்க மிரட்டுறாங்க. உங்களை எல்லாம் பார்த்தா பயமா இருந்தாலும், ஆல் தி பெஸ்ட் பசங்களா!''  



'' 'ஏப்ரல் மாதத்தில்’, 'உன்னைச் சரணடைந்தேன்’ சமயங்கள்ல, இன்னைக்கு இருக்கிற வெங்கட்பிரபு பத்தி ஏதாவது ஐடியாவாவது இருந்ததா?'



''சுத்தமா இல்லைங்க. இப்ப நான் இப்படி இருக்கேன்னா அதுக்குக் காரணம், என் நட்பு வட்டம்தான். அதுவும் என் மேல் நானே வைக்காத நம்பிக்கையை என் நண்பன் எஸ்.பி.பி.சரண் வெச்சான். என்னை நம்பி ஒரு படம் எடுத்தான். 'சென்னை 28’ வெற்றி என் வாழ்க்கையையே புரட்டிப்போட்ருச்சு. என்னதான் திறமை, வசதி எல்லாம் இருந்தாலும், உங்களைத் தாங்கித் தூக்கிவிடுறதுக்குன்னு ஒரு ஆதரவு வேணும். அது நட்பா இருக்கலாம், குடும்பமா இருக்கலாம், அப்படி உங்களைச் சுத்தி இருக்கிற நல்ல மனசுக் காரங்ககிட்ட உங்களை முழுசா ஒப்படைங்க... எல்லாமே நல்லதா நடக்கும்!''


 ''நன்றி - விகடன்


http://reviews.in.88db.com/images/Biriyani-movie-launch/Biriyani-movie-launch-photos.jpg

Thursday, January 17, 2013

எனது உடல்நிலைகுறித்து ஊகமான விபரீத வதந்திகள் - மு க ஸ்டாலின் பேட்டி @ விகடன்

விகடன் மேடை - மு.க.ஸ்டாலின் பதில்கள் 




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvYML7yE0zxUeED6eWA_yuDMGHIoCoY352zlsIs3hh_MBD0OeCyvert9X-cnjNagMaaZzEwQsxx2cJCppIqCxc6UQQtqVTHOk3irMrVTIky5_AdmVA-rEHClK7Xpkk93fQWRsABLMxNpdk/s1600/thuglak+dated+14.04.2010.jpgவைகோவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது?'' 

 
''வெற்றி - தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாத அயராத உழைப்பு!''


தங்க.நாகேந்திரன், செம்போடை.


''தங்கள் உடல்நிலைகுறித்து ஊகமான விபரீத வதந்தி பரவியபடியே உள்ளதே?'' 


''எனது தொடர் சுற்றுப்பயணங்களும் இடையறாது கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுமே அந்த வதந்திகளுக்கான பதில். 'உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியுமா?’ என்பது முதுமொழி!''



ஊர் வாயை மூட முடியுமா?’ என்பது முதுமொழி!''


கே.ஹரி நாராயணன், மதுரை.


''விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா, 'ஜெயம்’ ரவி, ஜீவா ஆகியோர் நடிப்பில் உங்களுக்குப் பிடித்த படம் எது?'' 


 ''விஜய் - காதலுக்கு மரியாதை

அஜித் - வரலாறு

விக்ரம் - அந்நியன்

சூர்யா - ஏழாம் அறிவு

சிம்பு - விண்ணைத் தாண்டி வருவாயா?

தனுஷ் - யாரடி நீ மோகினி?

ஆர்யா - மதராஸபட்டினம்

'ஜெயம்’ ரவி - சந்தோஷ் சுப்ரமணியம்

ஜீவா - ராம்.''

தா.சூர்யா, வேதாரண்யம்.


 ''உங்கள் பார்வையில் மு.க.ஸ்டாலினின் அரசியல் நடவடிக்கை எப்படி இருக்கிறது?'' 



 ''தன்னால் கழகத்துக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே நினைத்து உழைத்திடும் தளராத தி.மு.க. தொண்டன். கழகத்துக்கும் அதன் மூலமாக தமிழ்ச் சமுதா யத்துக்கும் இறுதி வரை சிறந்த பணியாற்ற நினைக்கும் சேவகன். அரசியல் நடவடிக்கைகளில் கடிகாரம்போல் கச்சிதமாகச் சுழல்வதும், கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு போற்றி நடப்பதும் அவருடைய பண்புகள்!''


தங்க.நாகேந்திரன், செம்போடை.


 ''உங்கள் மாணவப் பருவ நினைவொன்றைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்..?'' 



''அப்போது நான் சேத்துப்பட்டு பகுதியில் இருந்த கிறிஸ்துவக் கல்லூரி மேனிலைப் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தேன். ஒருநாள், பள்ளி முடிந்து சினிமாவுக்குச் செல்வதற்காக அண்ணா சாலையில் உள்ள தியேட்டருக்குசைக்கிளில் வந்தேன். என் நண்பன் ஒருவன் சைக்கிளை ஓட்டி வந்தான். 


அப்போது எல்லாம் சைக்கிளில் டபுள்ஸ் செல்லக் கூடாது. இன்றைக்கு ஸ்பென்சருக்கு முன் இருக்கும் சிக்னலில் நாங்கள் நின்றுகொண்டு இருந்தோம். அப்போது  டபுள்ஸ் வந்ததற்காக ஒரு போலீஸ்காரர் எங்க ளைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். என் பெயர், வீட்டு விவரம், எந்தப் பள்ளி என்பதை விசாரித்தார்கள். சொன்னேன். குறித்துக்கொண்டார்கள்.

'உங்க அப்பா பெயர் என்ன?’ என்று கேட்டார் கள். 'கருணாநிதி’ என்று சொன்னேன். 'என்ன வேலை பார்க்கிறார்?’ என்று கேட்டார்கள். 'செக்ரட்டரியேட்ல’ என்றேன். 'எந்த டிபார்ட்மென்ட்?’ என்று கேட்டார்கள். 'பொதுப்பணித் துறை மந்திரியாக இருக்கிறார்’ என்றேன். அதற்குப் பிறகுதான் நான் மந்திரியின் மகன் என்பதே அவர்களுக்குத் தெரிந்தது. அதன் பிறகு வீட்டுக்கு அனுப்பிவிட்டார் கள்!''



ப.பிரேம்குமார், தேனி.


''நீங்கள் மனம் விரும்பிக் கேட்கும் பத்து பாடல்களை இங்கு பட்டியலிடுங்களேன்..?'' 


'' 'காகித ஓடம் கடல் அலை மீது...’ - தலைவர் கலைஞர் எழுதியது.


'செந்தமிழ் நாடெனும்போதினிலே...’ என் செல்போனுக்கு அழைத்தால், இந்தப் பாடலைத் தான் நீங்கள் கேட்பீர்கள்.


'நீ இல்லாத உலகத்திலே...’ - கண்ணதாசன் எழுதி பி.சுசீலா பாடியது.


'கா... கா... கா... ஆகாரம் உண்ண’ - கலைஞர் எழுதி சி.எஸ்.ஜெயராமன் பாடியது.


'எங்கள் திராவிடப் பொன்னாடே’ - புரட்சிக் கவிஞரின் எண்ணவோட்டம் எப்போது கேட்டா லும் சிலிர்க்கும்.


'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ - இன்றைய காலகட்டத்துக்கு இது தானே பொருத்தமானது.


'விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’ - சி.எஸ்.ஜெயராமன் குரல் இப்போதும் வசியப்படுத்தும்.


'தப்பித்து வந்தானம்மா... காலம் கற்பித்த பாடத்தின் அடி தாங்க முடியாமல்’ - கவிஞர் மாயவநாதன் எழுதி, கே.பி.சுந்தராம்பாள் பாடியது.


'இது ஒரு பொன்மாலைப் பொழுது’- கவிப்பேரரசு வைரமுத்துவின் காவியத் தொடக்கம்.



'எம்மா எம்மா காதல் பொன்னம்மா’- 'ஏழாம் அறிவு’ படத்துக்காக கபிலன் எழுதிய சுந்தர கீதம்.


- இவை நான் விரும்பிக் கேட்கும் பாடல்களில் சில. நீங்கள் பத்துப் பாடல்கள் என்று கேட்டதால் இதனை மட்டும் சொன்னேன். இன்னும் என்னால் சொல்லிக்கொண்டே இருக்க முடியும். செவிச்சுவை மூலமாக இப்புவியை வாழவைப்பது இசைதானே!''



'நீங்கள் இப்போது வாசித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?'' 



 ''திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி தொகுத்த 'வடநாட்டில் பெரியார்’ என்ற புத்தகம். பம்பாய், லாகூர், அமிர்தசரஸ், கல்கத்தா, செகந்திராபாத், லக்னோ ஆகிய பகுதிகளுக்குச் சென்று, பெரியார் கொள்கை முழக்கம் இட்டதை நம் மனக்கண் முன் கொண்டுவந்து காட்டுகிறது அந்தப் புத்தகம். இன்றைக்கு பெரியாரின் சீர்திருத்தக் கொள்கைகள் அனைத்து மாநிலங்களிலும் பரவிவிட்டது. அதற்கு அடித்தளம் அமைத்த பயணத்தைப் பற்றிய முழுமையான நூல் இது. அய்யாவின் அடிச்சுவட்டில் பயணிக்கும் ஆசிரியர் தொகுத்த இரண்டு பாகங்களும் இன்றைய தலைமுறை அறிய வேண்டியது!''


ஆதிபகவன், கும்பகோணம்.


 ''தி.மு.க-வை வளர்த்த எழுத்து, பேச்சு எல்லாம் காணாமல் போய்விட்டனவே? இளைய தலைமுறைக்கு அதில் ஆர்வம் இல்லையே? எழுத்தாற்றல், பேச்சாற்றல் உள்ளவர்களை வளர்க்க நீங்கள் முயற்சி எடுக்கவில்லையே?'' 


'' 'எங்களுடைய கால்கள் நடையை நிறுத்தா...
நாங்கள் நடந்துகொண்டே இருப்போம்.
எங்கள் கைகள் எழுத்தை நிறுத்தா...
நாங்கள் எழுதிக்கொண்டே இருப்போம்.


எங்களுடைய உதடுகளும் நாவுகளும் பேசுவதை நிறுத்தா...

நாங்கள் பேசிக்கொண்டே இருப்போம்!’ 


- என்று தலைவர் கலைஞர் அவர்கள் இளைஞர் அணியின் தொடக்க விழாவில் குறிப்பிட்டார்கள். தி.மு.க-வின் அடிப்படைத் தொண்டர் முதல் அனைவருமே எழுத்தாற்றல், பேச்சாற்றல் பெற்ற வர்களே. இன்றைக்கு இளைஞர் அணியின் புதிய அமைப்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்கு தடை இல்லாமல் எழுச்சியாகப் பேசுவார் கள்.


வருங்காலத் தலைமுறையினருக்கும் திராவிட இயக்கத்தின் லட்சியத்தில் ஈடுபாடு வேண்டும் என்பதற்காகவே, பள்ளி மாணவ - மாணவியருக்கு மாவட்ட அளவில் பேச்சுப் போட்டிகள் வைத்து பரிசுகள் அளித்துவருகிறோம். சமீபத்தில் தஞ்சா வூரில் அத்தகைய போட்டிகள் நடந்தன. காலை முதல் இரவு வரை நடந்த இந்தப் போட்டிகளில் மாணவ - மாணவியர் பேசியதைக் கேட்டபோது, எதிர்காலத் தலைமுறை மீது எனக்குப் பெரிய நம்பிக்கையே வந்துவிட்டது.


'தமிழகம் அம்மா ஆசையால் ஆட்சி கண்டு, இருளில் மூழ்கி இன்று அமாவாசையாய் இருண்டுகிடக்கிறது’ என்று ஒரு மாணவர் பேசினார்.
'ஏ.எம்., பி.எம். பார்க்காமல் உழைத்த சி.எம். நம் தலைவர் கலைஞர்’ என்று ஒரு மாணவி முழங்கினார்.


அண்ணா, கலைஞரின் வாரிசுகளாக இந்த மாணவச் செல்வங்கள் திகழ்கிறார்கள். இவர்கள் எதிர்கால மேடைகளில் ஒளிவீசுவதை நீங்கள் பார்க்கலாம். எனவே, தி.மு.க. சும்மா இருக்க வில்லை; விதைத்துக்கொண்டு இருக்கிறது. விளைச்சலின் விளைவுகள் வியக்கவைக்கும்!''


அடுத்த வாரம்...
நன்றி - விகடன் 


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkzaSiRxdl1V75CcipvAidnYobv5_snjFQrVGrcE6pX69TspkiuG9mEBfaEz2HvuuJK_aAtR76qi-BVikkUfU_E8HdFKryIQbDjIlOEcJKiPJqNJdCJrpom1ogcxh-LCZNwP0oU3mShpqz/s1600/Stalin-jayalalitha-.jpg



டிஸ்கி - 1 அழகிரி உங்களுக்குப்போட்டியா ? ஸ்டாலின் பேட்டி 

( பாகம் 1) http://www.adrasaka.com/2012/12/blog-post_27.html


டிஸ்கி 2 - -கட்சிக்காக உழைச்ச யாரையும் மதிக்க மாட்டேங்கிறீங்க...? ஏன்? மு க ஸ்டாலின் பேட்டி

 பாகம் 2   http://www.adrasaka.com/2013/01/blog-post_1472.html



டிஸ்கி 3 - திராவிடக் கட்சிகள்  தமிழகத்தைக் குட்டிச்சுவராக்கிவிட்டனவா? 2016-ன் தமிழக சி .எம் .மு. க .ஸ்டாலின்  பேட்டி
 பாகம் 3  http://www.adrasaka.com/2013/01/2016.html
 




Thursday, January 10, 2013

ஆதிபகவன்

ஜீவா நடிக்க...

எ ஃபிலிம் பை 'ஜெயம்' ரவி!
க.நாகப்பன்
"போன வருஷம் என் படம் தமிழ்ல ஒண்ணுகூட ரிலீஸ் ஆகலை. ஆனா, 2012ல நான் பண்ண வேலைகள் 2013ல்தான் ஸ்க்ரீனுக்கு வரும். அதிலும் 'ஆதிபகவன்’ படத்தில் நாலு படத்துக்கான உழைப்பைக் கொடுத்திருக்கேன். 2013 எனக்கு... ஏன் நம்ம எல்லா ருக்கும் ரொம்ப ரொம்ப ஜோரான வருஷமா இருக்கும்!''நம்பிக்கை வார்த்தை களுடன் பேட்டியைத் துவக்குகிறார் 'ஜெயம்’ ரவி.


 ''கடகடனு நிறையப் படங்கள் பண்ணிட்டு இருந்தீங்க. இப்ப ரொம்ப செலெக்ட்டிவ் ஆயிட்டீங்க. முக்கியமா அண்ணன் இயக்கத்தில் ஒரு படம்கூட நடிக்கலை. ஏன் இந்த மாற்றம்?''


 
''மாற்றம் நல்லதுதானே! அண்ணன் இயக்கமோ, மத்த இயக்குநர்களோ எல்லாமே நல்ல படங்கள்தான் பண்ணேன். ஆனா, மொத்தக் குடும்பத்துக்குமான பேக்கேஜ்னு சொல்லிட்டு, ஒரு ஃபார்முலாவில் செட் ஆகிட்டேன். இனிமே பண்ற ஒவ்வொரு படமும் நமக்கே புதுசா இருக்கணும்னு முடிவுபண்ணி நடிச்ச படம்தான் 'பேராண்மை’. 




 அதுக்குக் கிடைச்ச ரெஸ்பான்ஸ்.... ரொம்ப சந்தோஷமா இருந் தது. இப்ப 'ஆதிபகவன்’, 'நிமிர்ந்து நில்’, 'பூலோகம்’ படங்களோட போஸ்டர்ஸ் பார்த்தீங்கன்னாலே, ஒவ்வொரு படமும் வேற வேற ஏரியானு தெரிஞ்சுக்குவீங்க.



 'ஆதிபகவன்’ ரொம்ப ரௌத்ரமானவன். அந்தப் படத்தோட கேன்வாஸுக்காகவே ஒரு வருஷம் உயிரைக் கொடுத்து நடிச்சேன். 'நிமிர்ந்து நில்’ படத்துல 40 வயசைத் தாண்டின கேரக்டர்ல நடிக்குறது... ஃப்ரெஷ்ஷா இருக்கு. முதன்முதலா டபுள் ரோல் பண்றேன். 'பூலோகம்’ செம ஆக்ஷன் ஏரியா. என்ன... அடுத்தடுத்து மூணு படங்கள்ல நடிக்கிறதால, உடம்பை ஏத்த, இறக்க, ஜிம் வொர்க் அவுட்னு ஒவ்வொரு நாளும் கஷ்டமா இருக்கு. வயசு இருக்கிறதால சமாளிக்க முடியுது. படம் வரும்போது, அதுக்கான கிரெடிட் கிடைக்கும்போது கவலை, வலி எல்லாம் மறைஞ்சிடும்!''



''சாக்லேட் பாய் இமேஜை உடைக்கத்தான் அடுத்து அடுத்து ஆக்ஷன் படம் பண்றீங்களா?''


''அப்படி இல்லை. என்னால இன்னும் பிரமாதமான ரோல் பண்ண முடியும்னு என்னைவிட என் இயக்குநர்கள் நம்பினாங்க. 'இவன் காதலிச்சுட்டே இருந்தா சரிவராது. அடுத்த லெவலுக்கு இவன் போகணும்’னு என் மேல் அக்கறையும் நம்பிக்கையும் வெச்ச ஜனா சார், அமீர் அண்ணன், கனி அண்ணன்... இவங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும். உதவி இயக்குநரா இருந்த நான் நடிக்க வந்ததே ஒரு நம்பிக்கையில்தானே!''  


''உதவி இயக்குநரா..? எந்தப் படத்தில் வேலை பார்த்தீங்க?''  



''இயக்குநர் ஆகணும்கிற ஆசையில்தான் லயோலாவில் விஸ்காம் படிச்சேன். அப்பவே நான் இயக்கின 'சம்மரி’ குறும்படமும் 'வேர்ல்டு பீஸ்’ ஆவணப்படமும் பாராட்டுகளைக் குவிச்சது. சரி... சினிமாவுக்குள் வந்துடுவோம், நிறையக் கத்துக்குவோம்னு நினைச்சுதான் வந்தேன். 'ஆளவந்தான்’ல சுரேஷ் கிருஷ்ணா சாரிடம் உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். 



ஆனா, சினிமாவைப் பக்கத்தில் இருந்து  பார்த் தப்போ, இயக்கத்தைவிட நடிப்பு கொஞ்சம் பக்கத்தில் இருந்த மாதிரி தெரிந்தது. அப்படியே டிராக் மாறி நடிப்புப் பயிற்சி எடுத்துக்க ஆரம் பிச்சேன். இப்ப ஆர்வமா நடிச்சுட்டு இருக்கேன். ஆனா, டைரக்ஷன்தான் என் கனவு. சீக்கிரம் ஒரு படம் பண்ணுவேன். என் மனசுல ஒரு கதை இருக்கு. அந்த கேரக்டருக்கு நீதான் பொருத்தமா இருப்பேனு ஜீவாகிட்ட இப்பவே சொல்லி வெச்சிருக்கேன்... பார்க்கலாம்!''  



''ஹீரோக்கள் மத்தியில உங்க ஃப்ரெண்ட்ஸ் கேங் ரொம்ப ஆரோக்கியமான விஷயம். என்னல்லாம் பேசிக்கு வீங்க?''



''கார்த்தி, சிபிராஜ், ஆர்யா, ஜீவா, விஷால், நான்... இது செம குபீர் ஜாலி பிரதர்ஸ் டீம்! இவங்கள்ல ஒருத்தன் சிக்கிட்டா, எல்லாரும் அவனைக் கலாய்ச்சுக் கிண்டலடிச்சுக் காலி பண்ணிருவோம்.



' 'எங்கேயும் காதல்’ படத்தில் அழகா இருக்கடா... டான்ஸ் நல்லாப் பண்ற’னு என்னைப் பாராட்டினாங்க. இன்னொரு படத்துல நடிச்சதுக்கு, 'ஏன்டா... கதையே இல்லாத படத்துல நடிச்ச?’னு செம பரேடு வாங்கினேன். சினிமாபத்திக் கொஞ்சம்தான் பேசிக்குவோம். மத்த அரட்டை, சேட்டைதான் நிறைய. நான், ஆர்யா, விஷால், ஜீவா நாலு பேரும் சேர்ந்து நடிக்கிற மாதிரி ஒரு படம் பண்ணலாம்னு வெங்கட் பிரபு சொல்லியிருக்கார். அந்தப் படத்துக்காக நாங்க நாலு பேருமே வெயிட்டிங்!''




''புதுசா வந்த ஹீரோ, ஹீரோயின்கள்ல யாரைப் பிடிச்சிருக்கு?''  



'' 'பரதேசி’ டிரெய்லர்லயே மிரண்டுட்டேன். அதர்வா நல்லாப் பண்றார். சமந்தா பெர்ஃபார்மன்ஸ் ரொம்ப க்யூட்!''



''சினிமாவுக்கு வந்து பத்து வருஷம் ஆச்சு. என்னலாம் கத்துக்கிட்டீங்க?''



''கத்துக்கிட்டே இருக்கேன். ரொம்பக் கொஞ்சம்தான் கத்திருக்கேன். இன்னும் நிறையக் கத்துக்கணும். யார் உண்மையா இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன். பொய்யானவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். ஒவ்வொரு படத்துலயும் என்னை இம்ப்ரூவ் பண்ணிட்டே இருக்கேன். நடிப்பு, டான்ஸ், ஃபைட் மட்டும் நல்லாப் பண்ணாப் போதும்னு நினைக்க மாட்டேன். நான் நடிக்கிற படத்தில் நடிகன்கிறதைத் தாண்டி, ஓர் உதவி இயக்குநராகவும் வேலை பார்ப்பேன்.



'பேராண்மை’ படத்தில் என் கேரக்டருக்கு எங்கேயும் ரெஃபரன்ஸ் இல்லை. என்.சி.சி. ஆபீஸர், பழங்குடி இளைஞன், உறுதியான உடம்பு, அதீதப் புத்திசாலித்தனம்... அவன் எப்படி இருப்பான்... என்ன பண்ணுவான்? ஜனா சார் சுருக்கமா சொன்னார், 'பலரோட தாய்ப் பால் குடிச்சு வளர்ந்தவன். காட்டுப் பழங்கள் சாப் பிட்டு வளர்ந்தவன். ஆரோக்கியமா இருப்பான். அதே சமயம், இரும்பு மாதிரி இருப்பான்’னு சொன்னாரு. 



அப்போ 'சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்துக்காக அமுல் பேபி மாதிரி இருந்தேன். சில வாரங்கள்ல அப்படியே ஆளே மாறினேன். ஒரு செட் பிராப்பர்ட்டி எப்படி இருக் கணும்னு இயக்குநர் நினைக்கிறாரோ, ஒரு நடிகனையும் அப்படித்தான் எதிர்பார்ப்பார். அந்த எதிர்பார்ப்புக்கும் மேல இருக்கணும்னுதான் நான் ஓடிட்டே இருக்கேன்.




எனக்குப் பக்கத்துல இருக்கிற ரோல் மாடல் அமீர் கான். சினிமாவில் சகல துறைகளிலும் அவர் மாதிரி வித்தியாசமான முயற்சிகள் பண்ணிட்டே இருக்கணும். அதுக்கு ஏத்த மாதிரி என்னைத் தகுதிப்படுத்திட்டு இருக்கேன்.''


நன்றி - விகடன்

Wednesday, January 09, 2013

விஸ்வரூபம் எப்போ ரிலீஸ் ?புதிய தலைமுறை டி வி யில் கமல் பேட்டி

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தயாரித்து இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள ‘விஸ்வரூபம்’படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில்,அப்படம் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்ற தேதியை தானே பின்னர் அறிவிக்க உள்ளதாவும்,இது குறித்து வேறு யாரும் அறிவிக்க உரிமை இல்லை என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர்,‘விஸ்வரூபம்’படம் நிச்சயம் டி.டி.எச்.சில் வெளியிடப்படும் என்றும்,தமது இந்த முயற்சி நியாயமான வர்த்தகம் என்று கூறியுள்ள கமலஹாசன்,சுயநலத்துக்காக தாம் ‘விஸ்வரூபம்’ படத்தை டி.டி.எச்.சில்  வெளியிடவில்லை என்றும் கூறினார்.   

முன்னதாக இப்படத்தை டி.டி.எச் மூலம் 10ம் தேதி முதலில் ஒளிபரப்புவது என்றும் அடுத்த நாளான 11ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்வது என்றும் கமல்ஹாசன் முடிவு செய்திருந்தார். இதற்கு தமிழ்த் திரையுலகில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. டி.டி.எச்.சில் ஒளிபரப்பினால், தமிழ்நாட்டிலுள்ள தியேட்டர்களில் ‘விஸ்வரூபம்’ படத்தை திரையிட மாட்டோம் என்று, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது. இந்நிலையில், 6 டி.டி.எச் நிறுவனங்கள் ‘விஸ்வரூபம்’ படத்தை ஒளிபரப்ப முன்வந்தன.இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.


இதையடுத்து நேற்று முன்தினமும், நேற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கும், கமலுக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் பன்னீர்செல்வம், சென்னை திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், தயாரிப்பாளர் கேயார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் அபிராமி ராமநாதன் கூறும்போது, ‘பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.முதலில் தியேட்டர்களில் படத்தை வெளியிட கமல் ஒப்புக்கொண்டார்.படத்தின் ரிலீஸ் தேதி பற்றி புதன்கிழமையன்று முடிவு செய்யப்படும்’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  




நன்றி - விகடன் 


புதிய தலைமுறை  டி வி யில் இன்று மதியம்   1 ம்ணிக்கு அவர் அளித்த பேட்டியில் 


உங்களது தலையங்கத்தை நான் முடிவு செய்வதில்லை,அதேபோல் என் தொழில் அமைப்பை நீங்கள் முடிவு செய்ய வேண்டாம்-


என்னுடைய ரசிகர்கள் அமைதியானவர்கள், ஒழுக்கம் நிறைந்தவர்கள். அவர்கள் அமைதியாக இங்கு நடப்பவைகளை கண்காணித்துக் கொண்டுதான் இருகிறார்கள். 



விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.,சில் வெளியிடுவதால் யாருக்கும் பாதிப்பில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


விஸ்வரூபம் படத்தை கமல்ஹாசன் டி.டி.எச்., சில் வெளியிடுவதற்கு தமிழக திரையுலகத்தில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து நேற்று முதல் திரையரங்கு உரிமையாளர்களுடன் நடிகர் கமல்ஹாசன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார்.


புது வழி ..பொது வழியாகும் :இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் விஸ்வரூபம் சர்ச்சை குறித்து விளக்கமளித்த கமல்ஹாசன் : டி.டி.எச்.,சில் திரைப்படத்தை வெளியடுவது என் புதிய வழி என்றார். நியாமான முறையில் நான் வியாபாரம் செய்துள்ளேன் இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றார். எதிர்காலத்தில் டி.டி.எச்.,சில் திரைப்படங்களை வெளியிடுவது பொதுவழியாகும். மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனம் வேண்டும் என்றார்.


விஸ்வரூபம் திரைப்படத்தின் அறிமுகப் பாடலில் இடம் பெற்றுள்ள யாரென்று புரிகிறதா?..இவன் தீ என்று தெிரிகிறதா என்ற வரியை மேற்கோள் காட்டி பேசிய கமல்ஹாசன் : தானும் வாழ்க்கையில் தடைகளை எதிர்த்து முறியடித்து வெற்றிகளை காணும் லட்சியம் உள்ளவன் என சுட்டிக் காட்டினார்.


மேலும் நேர்மையாக தொழில் நடத்தும் தனக்கு யாரும் மிரட்டல் விடக்கூடாது என்றார். ஒரே நாளில் 2முறையிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடது குறித்து ஆலோசனை நடத்தப்படும், நியாமான கருத்துக்கள் முன்வைக்கப்படும் நிலையில் ஒரே நாளில் 2 முறையில் திரைப்படம் வெளியிடப்படும் என்றும் கமல்ஹாசன் உறுதிபட தெரிவித்தார். ரிலீஸ் தேதி தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரிலீஸூக்கான தேதி குறித்து பலருடன் ஆலோசிக்க வேண்டியிருக்கிறது. ஆலோசனைகள் முடிந்த பின்னர் நானே ரிலீஸ் தேதியை அறிவிப்பேன்.


சட்டவிரோத ஒளிபரப்புக்கு தக்க நடவடிக்கை : விஸ்வரூபம் படத்தை ஓட்டல், ஷாப்பிங் மால் போன்ற பொது இடங்களில் டி.டி.எச்.,சில் ஒளிபரப்புவது சட்ட விரோதமானது. அவ்வாறு ஒளிபரப்பப்பட்டால் சட்ட ரீதியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.



What abt those who paid for DTH? 


அவங்கல்லாம் என் கூடநின்ன நண்பர்கள் அவங்களுக்கு என்ன உதவி வேணுமோ செய்யப்படும்! 


"vishwaroopam press meet" kamal hassan jan 9, 2013 part -1 

 

http://www.youtube.com/watch?v=P0nEEiZCpfc&feature=youtu.be&a

vishwaroopam press meet" kamal hassan jan 9, 2013 part -2

 




நன்றி - புதிய தலைமுறை 


The premiering of Kamal Haasan's new movie 'Vishwaroopam/Vishwaroop' first on direct-to-home (DTH) platform may not happen on January 10 as Rajkamal Films has postponed the release date, say DTH operators.
"We have a communication (from Rajkamal Films) about the postponement of movie release on DTH platform and in theatres," Salil Kapoor, COO, Dish TV told IANS.
"In line with the postponement of the release date of the movie 'Vishwaroopam (Tamil and Telugu)/Vishwaroop (Hindi)' across theatres and on the DTH platform by Rajkamal Films, we have stopped taking bookings for the movie premiere that was scheduled for Jan 10, 2013 at 9:30 pm on Airtel DTH," Shashi Arora, CEO-DTH/Media, Bharti Airtel was quoted as saying in a statement issued by the company. 


we are awaiting confirmation from Rajkamal Films on the revised dates," he said.
The theatre release which was to happen Jan 11 too stands postponed and the revised dates are yet to be announced by Rajkamal Films.
Queried about the money paid by the subscribers to watch the movie Jan 10, Kapoor said: "We will go by what our customer want us to do. If they want a refund, we will refund the money."
Queried whether Dish TV would be able to get compensation from Rajkamal Films for the money it spent on promoting the movie, Kapoor said: "The release of the movie has been postponed and nothing else has happened."
Both Airtel and Dish TV are silent on the number of bookings they have got for the movie.
The decision to premiere the movie on DTH platform first is opposed by theatre owners.


நன்றி - IBN LIVE


diSki - புதிய தலைமுறையில் கமலின் இன்றைய பேட்டி கமலின் இமேஜ்க்கு மிகப்பெரும் பின்னடைவு ;(((

Thursday, January 03, 2013

ஷங்கரின் ஐ பட காமெடி டிராக்கில் நான் - பவர் ஸ்டார் பட்டாசு பேட்டி

http://tamil.oneindia.in/img/2012/06/01-powerstar-srini-300.jpg 
"கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு நான் அண்ணேன்டா!"

க.ராஜீவ்காந்தி
படங்கள் : ஜெ.தான்யராஜு
ப்பாடா... உலகம் அழியலையே!’ எனப் பெருமூச்சு விடுபவர்களுக்கு... ''அப்படி எல்லாம் உங்களை ரிலாக்ஸ் ஆக விட மாட்டேன்ல!'' என்று துள்ளித் தொடை தட்டி வருகிறார் உங்கள் 'பவர் ஸ்டார்’ கம் அக்குபஞ்சர் டாக்டர் சீனிவாசன். ஜெயலலிதா, ரஜினி, கமல், ஷங்கர், சிம்பு, சந்தானம் என்று நான் கேட்ட கேள்விகளும் சரி, அதற்கு பவர் ஸ்டார் அளித்த பதில்களும் சரி... செம சீரியஸ்தான். ஆனால், அதைப் பேட்டியாகப் படிக்கும்போது, 'இது ஜாலி பேட்டிதானே’ என்று எழும் எண்ணத்தைத் தவிர்க்க முடிகிறதா... பாருங்கள்


http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/04/Anandha-Thollai-21-10-2010-0000.jpg



காலர் டியூனா 'அம்மா என்றழைக்காத’ பாட்டு வெச்சிருக்கீங்களே... வழக்குகள்ல இருந்து தப்பிக்கத்தானே?'' 


'எனக்கு அம்மான்னா ரொம்பப் பிடிக்கும். என் சொந்த அம்மா மட்டும் இல்ல... 'அம்மா’வும்தான். அவங்களுக்காகத்தான் இந்தப் பாட்டு வெச்சிருக்கேன். இன்னொண்ணு... தாயில்லாமல் நானில்லை!''



''ஆக்ச்சுவலா உங்க வயசு என்ன?''



''என் அருமைத் தம்பி சிம்புவைவிட 10 வயசு... கம்மி!''


''சார், சிம்பு கோச்சுக்கப் போறாரு?''



''அட... நீங்க வேற! என்னைப் பார்த்தாலே அவர் சிரிச்சுடுறாரு! 'எத்தனையோ பேரைச் சிரிக்கவெச்சிருக்கேன். என்னையே சிரிக்கவெச்சது நீங்கதான்’னு என்கிட்டயே சொல்லிஇருக்காப்ல. நம்ம மேல அவருக்கு ரொம்ப மரியாதை!''



''ஸோலோ ஹீரோவா பட்டையக் கிளப்பிட்டு இருந்தீங்க. இப்ப ஏன் மூணு ஹீரோ சப்ஜெக்ட்ல நடிச்சு உங்க பேரைக் கெடுத்துக்குறீங்க?''



''என்ன தம்பி இப்படிக் கேட்டுட்டீங்க... சந்தானம் தம்பிகூட நடிக்கிறதெல்லாம் எவ்ளோ பெரிய வாய்ப்பு. இருந்தாலும், உங்களை மாதிரி தீவிரமான ரசிகர்களுக்காக(!) சோலோவாகவும் நடிப்பேன். அப்பப்போ காம்பினேஷன்லயும் நடிப்பேன்!''



''சந்தானம் ஷூட்டிங் ஸ்பாட்ல உங்களைக் கண்டபடி கலாய்ச்சுட்டே இருந்தாராமே?''



''சந்தானம்கூட எனக்கு கெமிஸ்ட்ரி ரொம்ப நல்லா வந்திருக்கு. எனக்கு ஒரு தம்பி இல்லையேங்கிற ஏக்கத்தைப் பூர்த்தி செஞ்சுட்டாரு சந்தானம் தம்பி. அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா, அந்தத் தம்பியே எனக்குத் தம்பியாப் பொறக்கணும்!''



''நடிக்கிறதுக்கு ஹோம்வொர்க் பண்ணுவாங்களே... நீங்க எந்தப் படத்தைப் பார்த்து உற்சாகப்படுத்திக்குவீங்க?''


'' 'பாட்ஷா’தான். அந்தப் படத்தை 30 தடவை பார்த்துட்டுதான் நடிக்கணும்கிற வெறி எனக்குள்ள வந்துச்சு!''


''உங்க ரசிகர்கள் பற்றி..?''


''என்னை நம்பி இருக்கிற கோடிக்கணக்கான ரசிகர்கள்பத்தி நினைச்சாலே, எனக்குக் கண்ணீர் வந்துடும். 'உயிரை விடு’னு சொன்னா, விடுற அளவுக்கு எனக்கு ரசிகர்கள் இருக்காங்க. இவங்கள்லாம் எனக்கு எப்படிக் கிடைச்சாங்கன்னு இப்ப வரை தெரியலை. எல்லாமே பாபா வோட அருள்!''



'' 'ஐ’ படத்துல ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கிற விக்ரமுக்கு நீங்கதான் கோச்சாமே... உண்மையா?''



''ஷ்...ஷ்ஷ்... அப்படிலாம் இல்லை. இந்தப் படத்துலயும் சந்தானம்தான் எனக்கு பார்ட்னர். படம் ஃபுல்லா வருவோம். காமெடி பண்ணுவோம். கதையை வெளியே சொல்லக் கூடாதுனு ஷங்கர் சார் கண்டிச்சுச் சொல்லியிருக்காரு. அதனால கதை வேண்டாம்!''



''உங்க பாடிகார்டு எத்தனை பேர்? அவங்களுக்கு எவ்ளோ சம்பளம் தர்றீங்க?''


''எல்லாருமே பிரியப்பட்டு, 'அண்ணன்’கிற அன்புக்குக் கட்டுப்பட்டு இருக்காங்க. யாரும் பணத்துக்கு ஆசைப்பட்டு இல்லை.''



''2013-ல தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன பரிசு கொடுக்கப்போறீங்க?''  



''நான் நடிச்ச நிறையப் படங்கள் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கு. ஆனா, சந்தானம் தம்பி கேட்டுக் கிட்டதால நிறுத்திவெச்சிருக்கேன். சீக்கிரமே 'மன்னவன்’, 'தேசிய நெடுஞ்சாலை’, 'சீனு எம்.ஏ.பி.எல்’னு வரிசையா படங்கள் வெளிவரும்!''


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbmzmXqjqHN4NBDi1IsW3HRA_7Elk4G50tADDzP0QtnlpEkTPm3BdHti9HTYv0T4GzrS3YynWj5YJ8ZyA5XHPaAcB16eWiiW1SEHYDBVKGK5qUtf44wT01lva1QNc3yc8h0W1peU9d9Q4/s1600/Meenakshi-srinivasan-Hot-In-Lathika-Movie-Stills.jpg


''விக் இல்லாமலேயே அழகாத்தானே இருக்கீங்க... அப்புறம் எதுக்கு டோப்பா எல்லாம்?''



''ஹலோ தம்பி... இது நேச்சுரல் முடி. நம்புங்க! நான் சில படங்களுக்காக, அந்த கேரக்டர் கேட்டுக் கிட்டதால மொட்டை அடிச்சதைப் பார்த்து எனக்கு சொட்டைத் தலைனு நினைச்சுட்டாங்க. ஆனா, இதுதான் ரியல்!''



''நீங்க ரஜினியை ஃபாலோ பண்றீங்கன்னு பார்த்தா, திடீர்னு 'விஸ்வரூபம்’ கமல் மாதிரி ஸ்டெப்ஸ் போடுறீங்களே?''


''உலக நாயகனோட யாரும் போட்டி போட முடியாது. அவர் வேற பாணி. இது பவர் பாணி!''



''நீங்க நடிக்கிற படத்துக்குனு பஞ்ச் டயலாக் யோசிச்சு வெச்சிருப்பீங்களே... அதைக் கொஞ்சம் சொல்லுங்க?''


''ம்ம்ம்... சூப்பர் ஸ்டாருக்குப் போட்டின்னா... அது பவர் ஸ்டார்தான்!''



''ஓ... அப்போ ரஜினி மட்டும்தான் உங்களுக்குப் போட்டியா இங்கே?''


''ஆங்... ஆமாதானே... இல்லையா? அவர்கூட போட்டி இருக்கு. ஆனா, பொறாமை கிடையாது. இதை அவரோட தீவிர ரசிகனா சொல்றேன்!''


''நீங்க நல்லவரா... கெட்டவரா?''


''அது எனக்கே தெரியலையே!'' 


நன்றி - விகடன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqqGnrsG6K2LpReTmUDWKNu7Y5pgD24S81uNtZ6FlsnNP0HC34K4mgVsd0U4ASM3NAY1_XMbYU7d2TpRdIfqDOAyQkqUgaxJbO_nJH4eTsdNmyX1EHlwZEUr5X1DiBBWctpC2R1vCwBZM/s1600/power.jpg

Saturday, December 29, 2012

கும் கி லட்சுமி மேணன் பேட்டி - நான் ஸ்கூல் பொண்ணு

ahttp://www.southdreamz.com/wp-content/uploads/2012/12/kumki-vikram-prabhu-lakshmi-menon-love-making-stills-3.jpg
கும்கிகுஷியில் லட்சுமி

நீ அழகா இருக்கே!

ராகவ்குமார்

கும்கிபடத்தைப் பார்த்துவிட்டு லட்சுமி மேனனுக்குப் போன் செய்தால், ‘பொண்ணு ஸ்கூலுக்குப் போயிருக்கு. கூட்டிக்கிட்டு வரப் போறேன். வந்தவுடனேயே பேசச் சொல்கிறேன்என்கிறார் லட்சுமியின் அம்மா. அரை மணி நேரத்தில் லைனில் வருகிறார் லட்சுமி. சாரி சார். நான் டென்த் படிக்கறதால ஸ்பெஷல் கிளாஸ் இருந்தது. அதனால்தான் உங்ககிட்ட பேச முடியலை," என்று மன்னிப்புடன் பேசத் தொடங்குகிறார் இந்த மாணவி கம் நடிகை.
ஸ்கூல் - சினிமா எப்படி பேலன்ஸ் பண்றீங்க?
என்னுடைய ஸ்கூலில் எனக்கு ஃபுல் சப்போர்ட் பண்றாங்க. நான் ஷூட்டிங்கிக்காக லீவு போட்டாலும் எப்படியும் படிச்சிடுவேன்னு தெரியும். அதனால ஈஸியா பேலன்ஸ் பண்ண முடியுது."
நடிகையாகிட்டீங்க... இனி படிப்புக்கு முற்றுப்புள்ளி தானே?

ஏன் சார் இப்படியெல்லாம் கேட்கறீங்க. சினிமா இன்டஸ்டரியை நான் தேடிப் போகலை. அதுவா வந்தது. ஒரு டான்ஸ் புரோக்ராமில் என்னை பார்த்த விஜயன் சார் மலையாளச் சினிமாவுக்கு என்னை கூட்டி வந்தார். ‘கும்கிவாய்ப்பும் தானா வந்தது. இப்ப முழுமையா சினிமாவை நேசிச்சாலும் படிப்பை விட முடியாது. ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ, டிகிரின்னு என் படிப்பு தொடரும்.
நான் நிறைய படங்கள் கமிட் பண்ணாததுக்கு அடுத்த மாசம் வரப்போற பப்ளிக் எக்ஸாம்தான் காரணம்."
கும்கியில் யானையோட இவ்வளவு அன்பா இருக்கீங்களே? யானைன்னா ரொம்ப பிடிக்குமா?
நான் கேரளாவை சேர்ந்தவள் என்பதால் யானையை பிடிக்குமான்னு நிறைய பேர் என்கிட்ட கேட்பாங்க. உண்மையில் யானையால் நிறைய பிரச்னைகள் வர்றதும் கேரளாவில்தான். ‘கும்கிமுதல்நாள் ஷூட்டிங்கில் யானைகிட்ட பழகறது கொஞ்சம் பயமாகதான் இருந்தது. போகபோக யானைகிட்ட பழகி அன்பு செலுத்த ஆரம்பிச்சேன்."
விக்ரம் பிரபுவுடன் நடித்த அனுபவங்கள் எப்படி?

கும்கிஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது ஒருநாள் பிரபு சார் திடீரென வந்துட்டார். உடனே விக்ரம்அப்பா இருந்தால் என்னால் நடிக்க முடியாது. பிரேக் - அப் சொல்லுங்கஎன கேட்டுக்கொண்டார், பிரபு சாரிடம் பேசி வழியனுப்பிய பின்புதான் நடிக்க ஆரம்பித்தார்.
பெரிய குடும்பத்திலிருந்து வந்திருக்கிறோம் என்ற பந்தா இல்லாமல் பழகக்கூடியவர் விக்ரம். ‘கும்கிஆடியோ ரிலீஸில்லட்சுமி நீ அழகா இருக்க, நல்லா வருவஎன்று வாழ்த்தியது மறக்க முடியாது."
மலைவாசி பெண்களுடன் பழகியிருக்கீங்களா?
கும்கிஷூட்டிங் நடந்த அரக்கவேலி மலைப்பகுதியில் தலையில் மூன்று குடங்களைத் தூக்கி வைச்சு, கையால் பிடிக்காமல் நடந்து செல்லும் மலைவாசி பெண்ணைப் பார்த்தோம். பிரபுசாலமன் என்னை இடுப்பிலிருந்த குடத்தைத் தலையில் தூக்கி வைக்கச் சொன்னார். ‘கும்கியில் தலையில் குடங்களைத் தூக்க அந்த மலைவாசி பெண்தான் காரணம். மலைவாசிகளுடன் பழகிய அனுபவம் இல்லை."
கும்கி லட்சுமிக்கும், ‘சுந்தரபாண்டியன்லட்சுமிக்கும் என்ன வித்தியாசம்?

கும்கிதமிழில் என் முதல் படம். அதில் நடித்தது பத்து படத்தில் நடித்ததற்குச் சமம். பிரபுசாலமன் என் குரு. ‘சுந்தர பாண்டியனில் எஸ்.ஆர். பிரபாகரன் பலவித நடிப்பைக் கற்றுத் தந்தார்."
எந்த ஹீரோயின் மாதிரி பெயர் வாங்க ஆசை?
ரேவதி, வித்யாபாலன்."
கிளாமரா நடிப்பீங்களா?
சில படங்கள் நடித்துவிட்டு எனக்கு ஏத்த மாதிரி, லிமிட் மீறாத கிளாமரில் நடிப்பேன்."
எந்த பையனாவது லவ் லெட்டர் கொடுத்துருக்கானா?
இந்தக் கேள்வியைக் கேட்காம இன்டர்வியூ முடியாதே. இது வரைக்கும் யாரும் லவ்லெட்டர் தந்ததில்லை. தந்தாகூட அந்தப் பையனைத் திட்டமாட்டேன். உன் இஷ்டம் என்னை லவ் பண்றது பண்ணிக்கோன்னு சொல்லி போய்க்கிட்டே இருப்பேன்."

நன்றி - கல்கி 



http://i.indiglamour.com/photogallery/tamil/actress/2012/August28/Lakshmi-Menon/wide/Lakshmi-Menon_25565rs.jpg