Showing posts with label FILM REFVIEW. Show all posts
Showing posts with label FILM REFVIEW. Show all posts

Wednesday, May 30, 2012

உருமி - சினிமா விமர்சனம்

http://kakakiki.aneeska.com/wp-content/uploads/2011/04/urumi_malayalam_movie_1.jpgஇந்தியாவை கண்டுபிடிச்சது வாஸ்கோடகாமான்னு ஏழாம் கிளாஸ்ல படிச்சது நினைவு இருக்கு. 15ஆம் நூற்றாண்டுல நடந்த சரித்திர உண்மைக்கதையை சுவராஸ்யமா சொல்ல முயற்சி பண்ணி இருக்காங்க..

மிளகு இங்கே அதிகம் விளையறதை பார்த்த அண்ணன் வாஸ்கோடகாமா நம்மாளுங்க எப்படி மணல் கொள்ளை அடிச்சாங்களோ அந்த மாதிரி மிளகு டூ பிரிட்டிஷ் உலகு கடத்தறாரு.. பார்த்தாரு.. ஒரு பய கண்டுக்கலை, எதிர்க்கலை/.இந்தியாவில் இயற்கை வளங்கள் பிரமாதமா இருப்பதை பார்த்து ஒட்டு மொத்தமா இந்தியாவை ஆட்டையைப்போட்டுடலாம்னு பிளான் பண்றாரு.


சேரநாட்டில் அதாவது கேரளாவில் சிறைக்கல் அப்டினு ஒரு ஊரு, அங்கே வர்றாரு.. அங்கே இருக்கும் மன்னர் ஆங்கிலேயரை கேப்டன் ஜெவை எதிர்க்கற மாதிரி ஆவேசமா பல்லை, நாக்கை கடிச்சு எதிர்க்கறார்.. தமிழன் எங்கே போனாலும் ஒரு துரோகியும் அவன் பின்னாலயே வந்து அவன் கூடவே இருந்து குழி பறிக்க காத்திருப்பான். இது அவன் தலை விதி.. அமைச்சர் ஓ பி எஸ் மாதிரி ஆங்கிலேயர் கால்ல விழுந்து  மன்னருக்கு எதிரா சதி பண்றார்..


அப்போதான் 2 பேர் அதாங்க ஹீரோஸ்  பிருத்வி ராஜும் ,பிரபு தேவாவும் வர்றாங்க.. அவங்களோட வீர தீரத்தை பார்த்து மன்னர் அவங்களை  தளபதி ஆக்கிறார்.. கூடப்பிறந்த தம்பியை  சி எம் ஆக்க அப்பா ட்ரை பண்ணாலே அண்ணனுக்கு பொறுக்காத உலகம் இது. அமைச்சர் விடுவாரா? சதி பண்ணி மன்னரை போட்டுத்தள்ளிடறாரு..


இதுதான் சாக்குன்னு ஆங்கிலேயர்  படை எடுத்து வர்றாங்க.. வாஸ்கோடகாமாவின் சோப்ளாங்கி மகன் ஒருத்தன் மைதா மாவு அப்பாஸ் மாதிரி அவனை ஹீரோஸ் 2 பேரும் சிறைப்படுத்தறாங்க.. இப்போ போர் நடக்குது.. என்ன நடக்குது? அவங்க வாரிசுகள் என்ன ஆகறாங்க? இதுதான் கதை.. 

 அங்கங்கே மானே தேனே பொன் மானே போட்டுக்குங்க மாதிரி ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு ஹீரோயின் ஜோடி ..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7rO06qnshKIgMygrp4jPo2kOvhWbqSJslTuxT6f0hrWfIXsPIVv-aDtDizq4giG14krmEMVoAKAcjSmDwTgBxkIIC5D1W9P-_Uq0brBaLgsGyqNnycN1LAbd4MGpu4AF3Sl3Re9m975Y/s1600/urumi_malayalam_movie_stills_pics_03.jpg


படத்துல  முதல் பாராட்டு அமைச்சரா வர்ற அந்த மலையாள நடிகருக்குத்தான். இப்படிக்கு ரோஸ் மாதிரி திருநங்கை போல் அவரது நளினம், வில்லத்தனம், பார்வை எல்லாமே அபாரம்.. ( jஜெகதி ஸ்ரீகுமார்)

 ஹீரோவாக வரும் பிருத்விராஜ் அமர்த்தலான நடிப்பு.. பொதுவா நம்மாளுங்க வீரம்னாலே முறுக்கு மீசை தான் அப்டினு ஒரு எழுதப்படாத நியதி வெச்சிருப்பாங்க. அதை எல்லாம் பொடியாக்கி அவரது உடல் மொழி, கம்பீரம், குரல் ஆவேசம் எல்லாம் கன கச்சிதம்.. தளபதி படத்தில் ரஜினி எப்படி படம் பூரா ஒரு இறுக்கமான முகத்தோட வந்து கலக்குனாரோ அந்த மாதிரி பின்னிப்பெடல் எடுக்கும் நடிப்பு 


ஜெனீலியாவின் பாத்திரபடைப்பு, அவரது உடல் மொழி, ஆக்ரோஷ கண்கள் எல்லாம் அட்டகாசம்.. சந்தோஷ் சுப்ரமணீயம், பாய்ஸ் படத்தில் கிட்டத்தட்ட ஜாலி லூஸ் கேர்ள் போல் வரும் இவர் இந்தப்பத்தில் விஜயசாந்திக்கே சவால் விட்டிருக்கிறார்.. இவரது ஆடை வடிவமைப்பு செம கிளுகிளுப்பு ஹி ஹி 


அடுத்து அண்ணன் பிரபு தேவா.. படத்துல வர்ற எல்லா ஆண் கேரக்டர்களும் அவனவனுக்கு யார் ஜோடியோ அந்த ஃபிகரை மட்டும் பார்க்கறாங்க, பேசறாங்க.. நம்ம அண்ணன் மட்டும் படத்துல கூட பொம்பளைன்னு வந்துட்டா போதும் வாயை ஆ-ன்னு பார்க்கறாரு. யோவ் யோவ்!அண்ணன் வர்ற சீன்ல எல்லாம் ஃபிகர் போற இடம் எல்லாம்  அவர் கண் போகுது.. சூரிய காந்திப்பூ சூரியன் போற திசையை நோக்கி திரும்பிக்கற மாதிரி.. அவர் சில சீன்ல காமெடிங்கற பேர்ல சில லூஸ்தனம் பண்றாரு.. திடீர்னு அழகிரி மாதிரி ஆவேசம் ஆகி சண்டை போடறாரு. ஹூம்.. 

கேரளத்துக்கன்னியாக  ( ஒரு உத்தேசமா சொல்றதுதான்) நித்யா மேனன்..  காதல் காட்சிகளில் நல்ல நெருக்கம்.. நமக்கு அதானே வேணும்? அப்புறம் தொட்டுக்க ஊறுகாய் மாதிரி வித்யா பாலன் .. நமக்கில்லை டைரக்டருக்கு


http://www.bollyketchup.com/wp-content/uploads/2011/03/Urumi-Malayalam-Movie.jpg


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. ஆர்ட் டைரக்‌ஷன் தான் இந்த மாதிரி பீரியட் ஃபிலிம்க்கு ரொம்ப முக்க்கியம்.. பிரமாதமா பண்ணி இருக்காங்க.. ஒளிப்பதிவும் செம அழகு.. அருவி , காடு , கடல் என காமிரா கலக்கல்.. சந்தோஷ் சிவன் அடிப்படையில் ஒரு ஒளிப்பதிவாளர் என்றாலும் இயக்குநரே ஆளுமைப்படுத்துகிறார்


2. வாஸ்கோடகாமாவாக நடிப்பவர், அவரது மகனாக நடிப்பவர் இருவரும் மிக லாவகமாக, பக்குவமாக அண்டர் ப்ளே ஆக்ட் செய்து நடித்தது அழகு.. ஏன்னா நம்மாளுங்க வாஸ்கோடகாமா பற்றி அதிகம் தெரியாதவங்க.. அதனால வீரபாண்டியக்கட்டபொம்மன் ரேஞ்சுக்கு ரீல் எல்லாம் விடாம கரெக்டா வரலாற்றுக்குறிப்பில் இருப்பது போல் காட்சிப்படுத்தியது சபாஷ்


3. உருமி என்பது பொதுவா ஒரு இசைக்கருவியைத்தான் குறிக்குதுன்னு நினச்சோம்.. அது அந்தக்கால சுருள் வாள் மாதிரி ஒரு ஆயுதம். கிட்டத்தட்ட பட்டாக்கத்தி அல்லது சுருள் கத்தி .. அதை கனகச்சிதமா வடிவமைச்சு பயன்படுத்தி இருக்கும் விதம்..

 
 jagathi sreekumaar 
http://www.zonkerala.com/movies/gallery/urumi/jagathy-sreekumar-in-urumi.jpg


4.படத்தில் ஏகப்பட்ட கேரக்டர்கள், எல்லாருக்கும் அந்தக்கால உடைகள், நகைகள் எல்லாம் ஏற்பாடு பண்ணி சாப்பாடு எல்லாம் கொடுத்து படம் எடுக்கறது சாதாரண விஷயம் இல்லை.. வெல்டன் டைரக்டர்


5. சண்டைக்காட்சிகளை வடிவமைத்தவர்க்கு தனி பாராட்டு. பல காட்சிகள் பிரமாதப்படுத்துகின்றன. குறிப்பா ஜெனிலியா சுழன்று சுழன்று எகிறும் காட்சியில் டூப்பே போடாமல் கலக்கலான ஃபைட் சீன்ஸ்.. இசை அழகு. பின்னணி இசை  நேர்த்தி.


6.படத்துல ஆர்யாவுக்கு கெஸ்ட் ரோல்னாக்கூட அவர் தான் ஹீரோ என்பது போல் போஸ்டர்களில் விளம்பரங்களீல் காட்டிக்கொண்டது


http://im.rediff.com/movies/2011/mar/29sd3.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்,லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. இளவரசி ஜெனீலியா பயங்கரமான ஃபைட்டர்னு தெரிஞ்சும் அவரை சுத்தி நிக்கும் 17 அடி ஆட்களும் ஒன் பை ஒன்னா ஃபைட்டுக்கு போறாங்க.. ஏன்? குரூப் ஸ்டடி சார் குரூப் அடி அவங்களுக்கு முடியாதா?


2. பிருத்விராஜ் கதைப்படி சீரியஸ் கேரக்டர் என்பதால் பிரபுதேவா காமெடி கேரக்டர் ஆக்கி பேலன்ஸ் செஞ்சது ஓக்கே.. ஆனா அப்பப்ப அவர் பண்ற அலப்பரைகள் சகிக்கலை.. அடிப்படையில் பயந்த சுபாவம் உள்ளவரா காட்டப்படும் அவர் அப்பப்ப வீராவேசம் வந்தவர் போல் ஃபைட் போடறது சறுக்கல்

3. ஜெனிலியாவை வில்லன் கில்மாக்கு ரெடி பண்ண பெட்ரூம்ல  தள்ளி விடறாரு.. அப்போ நைட் மணி 8..  ஆனா அதை ஒளிஞ்சிருந்து பார்க்கறப்ப பிருத்விராஜ் முகத்துல ஜன்னல் பேக்டிராப்ல சூரிய வெளிச்சம் மஞ்சள் வண்ண மயம்.. மறுபடி ஹீரோயினைக்காட்டறப்ப இருட்டு, ஹீரோவைக்காட்டறப்ப பகல்..


4. ஜெனிலியா அதுக்குப்பிறகு பிரித்விராஜ்  கூட சரசம் பண்றப்ப என்னமோ ஓட்டுக்கேட்க வார்டு மெம்பர்ஸ் சுதந்திரமா வீட்டுக்குள்ளே வர்ற மாதிரி 27 பேர் வர்றாங்க? என்னய்யா அக்கிரம் இது? பெட்ரூமை தாழ் போடற பழக்கம் தமிழனுக்கு இல்லையா? அவன் ரொம்ப விபரமானவன் ஆச்சே?


5. ஒரு சீன்ல ஆங்கிலேயர் மேல இருக்கற எதிர்ப்பை காட்ட நடு வீதியில் இருக்கும் நட்ட வைத்த தூக்குமரத்தை 78 பேரு சேர்ந்து தம் கட்டி தள்ளறாங்க.. இதுல காமெடி என்னன்னா ஹீரோ தனி ஆளா முதல்ல அதை ட்ரை பண்றாரு
அவரால முடியாத போனதும் மத்தவங்க எல்லாம் வர்றாங்க.. 2 பேரு கடப்பாரை  எடுத்து தோண்டினா 1 அடி ஆழம் வந்ததும் ஈசியா அதை பேர்த்து எடுக்கலாம்..


6. தனது தந்தையை கொலை செய்ய ஒருத்தன் முடிவு பண்ணுனா அவர் தூங்கறப்போ தலையணையை  வெச்சு அமுக்கி அல்லது சாப்பாட்ல விஷம் வெச்சுதான் கொல்வான்.. அப்போதான் டவுட் வராது.. ஆனா ஒரு மன்னரா இருக்கற தன் தந்தையை சர்வ சாதாரணமா மக்கள் சந்தேகப்படும் அளவுக்கா படுகொலை செய்வாங்க?


7. இளவரசர் திருநங்கை போல கேரக்டர்.. ரொம்ப அப்பாவி, பயந்த சுபாவம் உள்ளவர். படம் பூரா இப்படி காட்டிட்டு திடீர்னு பி எஸ் வீரப்பா மாதிரி சிரிச்சுக்கிட்டே நூறாவது நாள் சத்யராஜ் ஆகி கொலை பண்றது ஓவர்..


8. படத்தோட முதல் பாதில எடிட்டிங்க்ல இயக்குநர் தலையீடு இருந்திருக்கு , ஏகப்பட்ட குழப்பங்கள்.. இடைவேளைக்குப்பிறகி எடிட்டிங்க் பக்கா.. இன்னும் தெளிவா  எடிட் பண்ணி இருக்கலாம் முதல் பாதில ..


9. வாஸ்கோடகாமாவின் மகன் ஆக்சுவலி  வில்லன்.. ஆனா அவர் மேல ஆடியன்ஸ்க்கு பரிதாபம் வர்ற மாதிரி எப்போ பாரு அவரை  அடிச்சு உதைச்சு ஒரு கைதி மாதிரி நடத்தறதை  அவ்ளவ் விலா வாரியாக்காட்ட வேண்டியதில்லை.. இதனால வில்லன் மேல நமக்கு அனுதாபம் தான் வருது.. பொதுவா இயக்குநர்கள் கத்துக்க வேண்டிய பாடம் வில்லன் மேல மக்கள்க்கு அதாவது ஆடிய்ன்ஸ்க்கு பரிதாபமோ, பச்சாதாபமோ வராம பார்த்துக்கறதுதான்.


10 . படத்துல வர்ற  பெண் கேரக்டர்கள் எல்லாம் ஆண்களையே பார்க்காதது மாதிரி எவன் கிடைச்சாலும் லவ்விடறாங்க.. கொஞ்சம் கேப் விட்டு லவ்வி இருக்கலாம்.. எட்டாக்கனிக்குத்தான் மதிப்பு அதிகம்


http://www.cinespot.net/gallery/d/429427-1/Urumi+Malayalam+movie+photos+_3_.jpg


மனதில் நின்ற வசனங்கள்


1, எந்த தருணத்திலும் பகைவன் முன் தலை குனிந்து விடாதே.. இதுதான் அரச தர்மம் ( பகைவன் டி பி கஜேந்திரன் மாதிரி இருந்தா?)


2. நஷ்டம் எப்பவும் நம்ம பக்கமே வரகூடாது. டீலிங்கை லாபத்துல முடி.


3. சந்தன மணம் வீசும் இந்தப்பெண்  பின் போனால் உன் சங்கை அறுத்து சங்கு ஊதி விடுவார்கள்


ஊதட்டும் ஊதட்டும், ஊதிக்கொண்டே இருக்கட்டும்..


4. அகம்பாவி மரியாதையை கேட்டுப்பெறுகிறான்


5. கண்ணில் கள்ளமும், கையில் கத்தியும் வைத்திருப்பவனே என் விரோதி


6. என்னை யாரும் விலைக்கு வாங்க முடியாது.. எனக்காகத்தோன்றினால் அதை நான் செய்வேன்


7. பூட்டி வைத்திருக்கும் மலர்களில் பொத்தி வைத்த மல்லிகை நீ பெண்ணே! ( இதை எங்க பாரதிராஜா, வைர முத்து எல்லாம் அப்பவே “ பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு பூத்திருக்கு வெட்கத்தை விட்டு அப்டி பாடியாச்சுங்க்ணா.. )


8. ஆராதிப்பதற்கு ஆயுதம் எதற்கு? நான் ஆரியன்..


9. இந்த சபித்த நாட்கள் இனி ஒரு போதும்  திரும்பி வராது


10. அடுத்த பிறந்த நாளை நான் காணக்கூடாது, அதுதானே உன் நோக்கம்?

11. இனி நாம் போகவேண்டிய வழி போர்த்துக்கீசியர்கள் வழி..


12.  படுக்கையிலாவது நீ தலைவன் ஆக முயற்சி செய் பேடியே!


http://img.stillgalaxy.com/public/04-29-2011/vidya%20balan/vidya-balan-hot-stills-in-urumi-movie-0.jpg



ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 44 ( இது டப்பிங்க் ப்டம் என்பதால் விகடன் விமர்சனம் வராது)


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - நன்று


 சி.பி கமெண்ட் - பீரியட் ஃபிலிம் பார்ப்பவர்கள், சரித்திரப்படங்களில் ஆர்வம் உள்ளோர், ஒளிப்பதிவு ரசிப்பவர்கள், வித்யாபாலன்,ஜெனீலியா,நித்யா மேனன் என 3 ஃபிகர்ஸ் இருக்கு, இது போதாதா? என நினைக்கும் யூத் உள்ளங்கள்  பார்க்கலாம்..

 ஈரோடு ஸ்ரீசண்டிகா, ஸ்ரீகிருஷ்ணாவில் படம் ஓடுது. நான் சண்டிகாவில் பார்த்தேன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8SM86RhdUJDjdcqGuYl9Z40S2qp3DbZ5vYC7BMH_sQWEo5g4IUUh8UmgY6NZOV1KGmV__Z_tklj_yBUrzckEHwTA7HmFrZ5GlpndaVrBMX5-FjriD59QbJUMBwFPZoO260nMgzN0Nyb0/s1600/Urumi+On+Location7.jpg

Thursday, May 24, 2012

BAY RONG - ( BLACK DRAGON) - ஹாலிவுட் ஆக்‌ஷன் திரில்லர் - சினிமா விமர்சனம்

http://www.asiatorrents.com/imgz/images/bayrongcla.jpg

ஏழாம் அறிவு படத்துல  ஹிப்னாடிச  வில்லனா வந்தாரே டோங்க்லீ  அவர் தான் ஹீரோ கம் திரைக்கதை ஆசிரியர்  பேரு johnny nguyen. அவர் நடிச்ச இந்தப்படத்தை  இந்தியாவுக்கு வர்றப்போ பிளாக் டிராகன் அப்டினு டைட்டில் கொடுத்து ரிலீஸ் பண்ணி இருக்காங்க.. ஆனா ஆல்ரெடி 2009 ல அங்கே ரிலீஸ் ஆன படம் 


ஹீரோயின் ஓரியண்ட்டட் சப்ஜெக்ட்.. அதாவது ஹீரோயின்  ஒரு கடத்தல் கேங்க்ல எப்படியோ மாட்டிக்கிட்டா.. அவ ஒரு டிக்கெட்.. அவளுக்கு பிறந்த ஒரு குழந்தையை வில்லன் ஒளிச்சு வெச்சு மிரட்டி அவனுக்குத்தேவையான கடத்தல் வேலைகளை வாங்கிக்கறான்.. 

ஒரு லேப்டாப்.. அதுல நாட்டோட  ராணுவ ரகசியம் எல்லாம் அடங்கி இருக்கு.. அந்த லேப்டாப்பை அபேஸ் பண்ணிட்டு வர்ற பிராகஜ்ட் தர்றான்.. அதை சக்சஸா முடிச்சுட்டா  குழந்தை அவளுக்கு அப்டினு டீல் 

ஹீரோயின் இந்த  லேப்டாப் வேலைக்கு 4 பேர் கொண்ட குழுவை ரெடி பண்றா. அதுல ஒரு ஆள் தான் நம்ம ஆள்.. பல அடிதடி ஆக்‌ஷன்க்கு நடுவே , அல்லது ஓரத்துல அந்த லேப்டாப்பை கைப்பற்றிடறாங்க.. 



http://files.myopera.com/doanhientt88/albums/850261/BayRong4.jpg

 ஆனா ஒரு ட்விஸ்ட்.. போக்கிரி படத்தை பார்த்து உல்டா பண்ணிட்டாங்க போல ஹி ஹி ஹீரோ ஒரு போலீஸ்.. இந்த சமூக விரோத கும்பலை பிடிக்கத்தான் இப்படி வேஷம் போட்டிருக்கான். ஹூம் எத்தனை படத்துல இந்த சஸ்பென்சை பார்த்திருப்போம் .. 

 க்ளைமாக்ஸ்ல வில்லனை முடிச்சுக்கட்டிட்டு, ஹீரோயினை கண்ணாலம் கட்டிக்கிட்டு ஹீரோ சுபம் + சுகம் ஹி ஹி


ஹீரோயின் நடிப்பு செம ( நாம எந்தக்காலத்துலயாவது பெண்களை குறை சொல்லி இருக்கோமா? )ஆள் பார்வை, பாடி லேங்குவேஜ், ஆக்‌ஷன் ஸ்பீடு எல்லாம் அபாரம்.. ஹீரோ கிட்டே தன் சொந்தக்கதை சோகக்கதை சொல்றப்போ சோகம், தன் அடியாள்ங்க கிட்டே முதலாளி அம்மா பாவனை, வில்லன் கிட்டே பம்ம வேண்டிய சூழல், குழந்தைக்கு ஏங்கும் அம்மா என நவ ரச நாயகி தான் போங்க .. எல்லா பிளஸ்க்கும் மேல ஹீரோ கூட ஒரு கில்மா சீன் இருக்கு ஹி ஹி  ஆனா கண்ணியமான காதல் காட்சி தான்


ஹீரோ வந்ததும் தியேட்டர்ல விசில் பறக்குது. ஆனா நம்மாளுங்க என்ன எதிர்பார்க்கறாங்கன்னா  அவர் ஏழாம் அறிவுல வந்த மாதிரியே  ஹிப்னாடிசம் மாதிரி அசால்ட்டா வில்லனை அடிக்கனும்னு பார்க்கறாங்க.. அவர் என்னடான்னா கமல் மாதிரி  நேச்சுரல் நடிப்பு பிளஸ் அடி வாங்கு வாங்குன்னு வாங்கறார்,, க்ளைமாக்ஸ் ஃபைட் செம .. எனக்கென்னமோ அவர் இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்னு தோணுது.. 


அநேகமா ஹீரோயின் ஃபைனான்சியரோட ஃபியான்சியா இருக்கும் , அதனால ஃபிகரை முன்னிறுத்தி அண்ணன் கொஞ்சம் அடக்கி வாசிச்சுட்டார் போல .. 

 வில்லன் குரூப் 2 லேப்டாப் வெச்சிருக்காங்க. அதுல எது ஒரிஜினல் லேப்டாப்னு கண்டு பிடிக்க அங்கே கலவரம் நடப்பது போல் சீன் கிரியேட் பண்ண  வில்லன் டக்னு ஒரிஜினலை தன் பக்கம் இறுக்கிக்க அதுதான் ஒரிஜினல் என்பதை அறியும் காட்சியில் இயக்குநர் அப்ளாஸ் அள்ளறார்

 http://files.myopera.com/doanhientt88/albums/850261/thumbs/BayRong10.jpg_thumb.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1.  முடிவு எடுக்கறதுலயும் சரி, ஆளை முடிக்கறதுலயும் சரி கிங்க் மேக்கரா இருக்கனும்.. 


2. நமக்கு வெற்றி கிடைக்கும்கறதுக்காக யாரை வேணாலும் இழக்கலாம்.. 



3. நாய் வேஷம் போட்டா குரைக்கற வேலையை மட்டும் தான் செய்யனும்
வாலை ஆட்டக்கூடாது.. 


 சும்மா சீனைப்போடாத.. கிளம்பு காத்து வரட்டும்



4.  கையை குடு கோர்த்துட்டே ஜோடியா உள்ளே போலாம்// 



 ம் என்ன தைரியம்?

 உன் அழகுல மயங்கி இதை செய்யலை.. இன்னைக்கு நாம கப்பிள்சா ஆக்ட் பண்றோம்

 அதுக்காக மேல கை வைப்பீங்களா?  ( ஹி ஹி  ஸ்டெப் பை ஸ்டெப்பாத்தானே வர முடியும் மேடம் ? )


5.டேய்.. சைலண்ட் மோடுல  படுடா.. ( அவ்வ்வ்வ்)


6. நமக்குப்பிடிச்சவங்களை இழந்துட்டா எவ்ளவ் கஷ்டம்னு  எனக்குத்தெரியும்.. என்னை சுட வைக்காத..


7. எவ்ளவ் புத்திசாலித்தனமா திட்டம் போட்டாலும் பல சமயங்கள்ல விதியை யாராலும் மாற்ற முடியாமல் போய் விடுகிறது..



http://www.chud.com/wp-content/uploads/2011/08/Clash6.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஓப்பனிங்க் ஷாட்ல 2 ஃபிகருங்க போரிங்க் பைப் லேடீஸ் மாதிரி பயங்கரமா அடிச்சுக்குதுங்க/.. அதுல ஒரு லேடி இன்னொரு லேடியை கன்ல ஷூட் பண்ணிடுது.. அந்த பெண் கைலயும் ஆயுதம் இருக்கு.. பொதுவா ஜாக்கிரதையாதான் எல்லாரும் இருப்பாங்க.. ஆனா அது பெப்பெரப்பேன்னு நிக்குது.. சாகற சூழல்ல எல்லாருக்கும் பயங்கர ஆவேஷம் வரும்.. பல பேரை கொலை செய்த அந்த ஃபிகருக்கு அது தெரியாதா? தேமேன்னு நின்னு அதும் பொட்டுன்னு போயிடுது



2. ஹீரோயின் முகத்தை வில்லன் பார்த்துடறான்.. எந்த விதமான மாறுவேஷமோ அல்லது அட்லீஸ்ட் கூந்தல் அலங்காரமாற்றமோ செய்யாம ஹீரோயின் தானா வலியனா போய் பார்ட்டில டேன்ஸ் ஆடி வில்லன்கிட்டே மாட்டிக்கறா.. எப்படி?


3. ஹீரோ போலீஸ் தான் என்பதை வில்லன் கண்டு பிடிக்கற சீன் படு கேவலமா இருக்கு.. அதாவது வில்லன் ப்ளேஸ்ல போலீஸ் ஒருத்தர் வேவு பார்த்துட்டு நிக்கறார்.. ஹீரோ பக்கத்துல வில்லனை வெச்சுக்கிட்டே நீ கிளம்பு என்பது போல் தலையை ஆட்டுறார்.. ஹய்யோ அய்யோ.. இந்த சீனை பார்த்தா குருதிப்புனல் க்ளைமாக்ஸ் சபாஷ் போட வைக்குது.. 


4. ஹீரோயின் வில்லி கிடையாது.. சந்தர்ப்ப வசத்தால வில்லன் கிட்டே பணயக்கைதியா ஆகிட்டா.. ஹீரோ ஒரு போலீஸ்னு தெரிஞ்சதும் அவ பெருமைதானே படனும். இல்லைன்னா பயப்படனும்.. அதை விட்டுட்டு அவனை கொலை பண்றதா மிரட்டறது எல்லாம் ஓவர்.. என் பேபி வில்லன் கிட்டே இருக்குன்னு கடைசி வரை அவ சொல்லவே இல்லை


5. இந்த கதைக்கு ஹீரோயின் ஒரு டிக்கெட் என்ற விஷயம் தேவையே இல்லை..  ஏன்னா ஹீரோ - ஹீரோயின் ரொமான்ஸ் காட்சில ஒரு கிளு கிளுப்பே வர்லை. எப்படியும் அது ஒரு டிக்கெட் தானே எப்படியும் செட் ஆகிடும்னு ஒரு அசால்ட் ஆடியன்ஸ்க்கு வந்துடுது ( கவனிக்கவும், ஆடியன்ஸ்க்கு தான், எனக்கு  இல்லை )


6. க்ளைமாக்ஸ்ல ஹீரோவை வில்லன் சுட்டுடறான்.  ஹீரோ கீழே விழறார்.. வில்லன் , ஆடியன்ஸ், ஹீரோயின் எல்லாரும் ஹீரோ செத்துட்டதா நினைக்கறாங்க.. 10 நிமிஷம் கழிச்சு ஹீரோயினை வில்லன் கொலை பண்றப்போ டக்னு ஹீரோ குறுக்கே வந்து காப்பாத்தற சீன் ஓக்கே .. அவ்லவ் டேஞ்சரான சூழல்ல டக்னு வில்லனை பொட்டுத்தள்ளாம அவன் கிட்டே ஹீரோ செய்முறை விளக்கம் காட்டிட்டு நிக்கறாரு.. அதாவது மார்புக்கவசம் ( புல்லட் புரூஃப்) போட்டிருந்தேன்னு அதை காட்டிட்டு நிக்குது பக்கி .. ஹய்யோ அய்யோ


ஈரோடு வி எஸ் பி ல படம் பார்த்தேன்


http://www.giaoduc.edu.vn/upload/image/2009/05/29/vhnt/bay-rong-2.jpg


 சி.பி கமெண்ட் - ஆக்‌ஷன் ரசிகர்கள் பார்க்கலாம்.. 18 + மட்டும் , ஏன்னா படத்துல ஒரு சீன் இருக்கு , படம் சரியா 87 நிமிஷம் ஓடுது.. சீன் வர்ற நேரம் படம் போட்டு 37 வது நிமிடம்  ஹி ஹி ( சீன் வர்றப்போ நான் வெளில போய்ட்டேன், 2 நிமிஷம் கழிச்சுத்தான் உள்ளே வந்தேன், # நீதி - மீ எ குட் பாய் )



http://pixhost.me/avaxhome/a1/ac/0019aca1_medium.png