Showing posts with label FACEBOOK. Show all posts
Showing posts with label FACEBOOK. Show all posts

Monday, February 04, 2013

சிவகார்த்திகேயன் ஃபேன்ஸ் ஃபேஸ்புக்கில் செய்த திருட்டு மோசடி

பெங்களூர் ரைட்டர் சி எஸ் கே போட்ட ட்வீட் லாங்கர் 


ஃபேஸ்புக்கில் டிவி காம்பியரர் / சினிமா நடிகர் சிவகார்த்திகேயனுக்கு Sivakarthikeyan Vijaytv Anchor பெயரில் யாரோ ஒரு ரசிகரால் நடந்தப்படும்
unofficial page (http://www.facebook.com/shivavijaytv) ஒன்று இருக்கிறது. கிட்டதட்ட அரை லகரம் லைக்களுடன் கூடிய ஒரு பிரபலமான பக்கம் அது.

நேற்று இரவு (செளம்யா) 7:51க்கு போட்ட ஒரு ட்வீட்டை (https://twitter.com/arattaigirl/status/294087553416577024) அப்படியே எடுத்து எந்த reference / courtesyயும் இல்லாமல் தன்னுடையது போல் இப்பக்கத்தில் நேற்று இரவு 8:05க்கு ஒரு post போடப்பட்டிருக்கிறது (http://www.facebook.com/shivavijaytv/posts/482718678435978).

இதுவரை இந்தப் போஸ்டுக்கு 209 பேர் இதற்கு லைக் போட்டு உள்ளனர். ஆனால் பாவம் ஒரிஜினல் ட்வீட்டுக்கு இதுவரை 20 ரீட்வீட்களும் 9 ஃபேவரைட்களும் தாம்.

இது எனக்குத் தெரிய வந்தவுடன் நான் இதைக் கண்டித்து கீழ்கண்ட கமெண்ட்டை அந்தப் போஸ்டில் போட்டேன்.

<<<<<<<

இது ட்விட்டரில் (செளம்யா) என்பவர் உங்களுக்கு முன்னதாக (இன்று இரவு 7:51க்கு) போட்ட ட்வீட்.

ஆதாரம் - https://twitter.com/arattaigirl/status/294087553416577024

அவர் பெயர் குறிப்பிட்டு நன்றி நவிலாமல் உங்களுடையதைப் போல் இங்கே பயன்படுத்தி இருப்பது அறிவுத் திருட்டு. அதற்கு என் வலுவான கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

ஒன்று இப்பதிவினை நீக்குங்கள் அல்லது அவர் பெயரைச் சேருங்கள்.

>>>>>>>

எனக்கு முன்பே ம் அந்தப் போஸ்டின் கமெண்ட்டில் இதை சுட்டிக் காட்டி நியாயம் கேட்டிருந்தார்.

ஆனால் இன்று நான் போட்ட கமெண்ட் (மற்றும் சென்னை செந்திலுடையது) அழிக்கப்பட்டிருக்கிறது. அந்த சிந்தனை தன்னுடையதே என்று கொஞ்சமும் குற்றவுணர்வின்றி காட்டிக் கொள்வதான‌ தடித்தனமே இது. தட்டிக் கேட்க ஆளில்லை என்ற பாவனையிலான‌ திமிர்த்தனமும் கூட.

அடுத்தவர் அறிவில் பெயர் வாங்கி அப்படி என்ன சாதித்து விடப் போகிறார்? இவர்கள் தாம் அசிஸ்டெண்ட்களின் சினிமாக் கதையைத் திருடி படம் எடுப்பவர்களின், ஜூனியர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் பெயரில் வெளியிட்டுக் கொள்பவர்களின் ஆரம்பப் புள்ளி.

இதைத் திருட்டென உணரும் நண்பர்கள் இதை எதிர்த்து அப்பக்கத்தில் தம் கருத்துக்களைப் பதியுங்கள். எத்தனை கமெண்ட்களை அந்த அறிவுஜீவி அழிக்க முடியும்? அழிக்கச் சோர்ந்து பதிவை ரத்து செய்யட்டும் அல்லது கருத்தின் உரிமையாளர் பெயரைச் சேர்க்கட்டும்.


நன்றி - ரைட்டர் சி எஸ் கே 



டிஸ்கி - நீ மட்டும் யோக்கியமா? காப்பி பேஸ்ட் போஸ்ட் டெய்லி போடறியே? என கேட்பவர்களுக்கு நான் கீழே நன்றி போட்டு எங்கே இருந்து சுட்டது என தகவல் சொல்லிடுவேன், நான் எட்டாங்கிளாஸ் பாஸ் , அவங்க பத்தாங்க்ளாஸ் ஃபெயில் , பாஸ் பெருசா  ஃபெயில் பெருசா?

Wednesday, May 30, 2012

ஃபேஸ்புக் மூலம் ஏமாற்றப்பட்டு கற்பை இழந்த சேலம் பெண்கள்-ஜூ வி கட்டுரை


ட்பு வட்டங்களுக்குத் தளமாக இருக்கும் ஃபேஸ்புக், சில நேரங்களில் தப்பு வட்டங்களுக் கான களமாகி விடுகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் சேலத்தைச் சேர்ந்த லலிதாவும் கன்னியாகுமரியை சேர்ந்த மேரியும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). பேஸ்புக் மூலமாக அறிமுகம் ஆன நண்பர்களிடம் தங்களையே இழந்து நிற்கிறார்கள் இருவரும்! 


கடந்த 24-ம் தேதி வேலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வந்து புகார் கொடுத்தவர்கள் சார்பில் பேசினார் வழக்கறிஞர் மணிகண்டன். ''லலிதா, மேரி இருவரும் தோழிகள், சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். இருவரும் ஃபேஸ்புக்கில் இருக்கின்றனர். ஃபேஸ்புக் மூலமாக லலிதாவுக்கு வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் பழக்கமானார். சதீஷின் நண்பர் ஆனந்தபாபுவும் லலிதாவிடம் அறிமுகமாக, மேரியும் அவர்களின் நட்பு வட்டத்தில் சேர்ந்துள்ளார்.

 சிவப்புச்சட்டை போட்டு நான் டேஞ்சரான ஆள்னு சொல்லாம சொல்றாரு போல அண்ணன் பார்க்க பாரதிராஜா பையன் மனோஜ் மாதிரி இருக்காரு
அடுத்து செல்போன் பேச்சாக இவர் கள் நட்பு வளர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து, ஜனவரி மாதத்தில் ஒரு நாள் லலிதாவையும் மேரியையும் பார்க்க ராணிப்பேட்டை நண்பர்கள் காரில் சென்னைக்கு வந்தனர். இருவரையும் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் தங்கக் கோயிலுக்குக் கூட்டிச் செல்வதாக அழைத்துப் போனார்கள். 



சி.பி -   ஹா ஹா >>வேலூர் மாவட்டத்தில் இருக்கும் தங்கக் கோயிலுக்குக் கூட்டிச் செல்வதாக>>> 

 தங்கக்கோயிலா? அங்கே போய் தங்கறதுக்கு கோயிலா?


ஆனால் அவர்கள், ராணிப்பேட்டையில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துப் போயி ருக்கிறார்கள். அங்கே ஆனந்த பாபு - மேரி ஓர் அறையிலும், லலிதா - சதீஷ் ஓர் அறையிலும் தங்கி இருக்கின்றனர். காதலிப்பதாகவும் உருக்கமான வார்த்தைகளால் சொல்லி இருக்கிறார்கள். தங்களை நிச்சயமாகத் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எண்ணி, இருவரும் அவர்களிடம் ஏமாந்து போய் இருக்கின்றனர். பிறகு, 'எப்போது திருமணம்?’ என்று பெண்கள் இருவரும் நச்சரித்திருக்கிறார்கள்.


சி.பி - ஏம்மா, அப்பாவிப்பெண்களே! அந்த நச்சரிப்பை மேட்டர்க்கு முன்னாலயே பண்ணி இருந்தா தக்காளிங்க 2ம் ஓடி இருக்குமே?


 ஆள் எஸ் ஜே சூர்யா மாதிரியே இருக்காரு. அப்பவாவது பொண்ணுங்க ஜாக்கிரதையா இருந்திருக்கலாம்
'உங்களிடம் நாங்கள் டைம் பாஸ்க்குத்தான் பழகினோம். உங்களை எங்களால் திருமணம் செய்ய முடியாது. மீறி ஏதாவது பிரச்னை செய்ய நினைத்தால், உங்களின் அந்தரங்கப் புகைப்படங்கள் எங்களிடம் இருக்கிறது, அதை ஃபேஸ்புக்கில் போட்டுவிடுவோம்’ என்று மிரட்டி இருக்கிறார்கள்.



சி.பி - உடனே பொண்ணுங்களும் மிரட்டி இருக்கனும்.. தம்பி.. உன் ஆபாச ஃபோட்டோவும் இருக்கு அதை நாங்க நெட்ல போட எவ்ளவ் நேரம் ஆகும்? எங்க முகத்தை மறைச்சு உன் முகம் தெரியற மாதிரி போட்டுடுவோம்னு மிரட்டி இருக்கலாம் , பய புள்ளங்க பயந்து தெறிச்சிருக்கும்

அவர்களின் நண்பர்களான திலீப், லூயிஸ், ஆனந்த நித்தியானந்தம் ஆகியோரும் இந்தப் பெண் களை மிரட்டவே, தாங்கள் ஏமாற்றப்பட்டதாக வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள் ளார்கள். இப்போது ஆனந்த், சதீஷ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்'' என்றார் கொந்தளிப்பாக.




வேலூர் காவல் துறையினரிடம் விசாரித் தோம். ''சதீஷ் மிகவும் டிப்டாப்பாக இருப்பான். பெண்களை ஏமாற்றுவது சதீஷ§க்கும் அவனது நண்பன் ஆனந்த பாபுவுக்கும் கை வந்த கலை. ஏற்கெனவே சென்னையைச் சேர்ந்த  விஜயலட்சுமியை ஃபேஸ்புக் மூலம் தொடர்புகொண்டு, சதீஷ் ஏமாற்றி உள்ளான். 'உன்னுடைய ஆபாசப் படம் என்னிடம் இருக்கிறது. இரண்டு லட்சம் தர வேண்டும்’ என்று மிரட்டி, 50,000 ரூபாய் வாங்கியுள்ளான். மேலும் மிரட்டவே, விழுப்புரம் மாவட்டத்தில் அந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார். இதுபோன்று நிறையப் பெண்களை ஏமாற்றி இருக்கிறார்கள். எங்களின் கணிப்புப்படி 15-க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாந்திருப்பதாகத் தெரிகிறது'' என்று சொன்னார்கள்.
இந்த விவகாரம் குறித்துப் பேசும் வேலூர் மாவட்டத்தில் யாஸ்காம் இன்டர்நெட் சென்டர் நடத்திவரும் ஆஸாம் இர்பான், ''பெண்கள் ஃபேஸ்புக்கில் எந்தக் காரணம்கொண்டும் யாருக்கும் தொலைபேசி எண்ணைத் தரக்கூடாது. நன்கு அறிமுகமான நபர்களை மட்டுமே தங்களுடைய நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தனது புகைப்படங்களையோ அல்லது குடும்பத்தாரின் புகைப்படங்களையோ ஃபேஸ்புக்கில் வெளியிடக்கூடாது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் சாட் செய்யாதீர்கள்'' என்று ஆலோசனைகள் சொன்னார்.



பெண்களே உஷார்!