Showing posts with label COMEDY.நகைச்சுவை. Show all posts
Showing posts with label COMEDY.நகைச்சுவை. Show all posts

Thursday, March 17, 2011

ரெகுலரா ஒரே பஸ்ல போய் ஃபிகர்களை சைட் அடிப்பது எப்படி?

http://www.hindu.com/2005/11/20/images/2005112002820201.jpg 
என்னை கேவலப்படுத்திய ஃபிகர்கள் பாகம் 2 

சென்னிமலை டூ ஈரோடு போக பஸ் ரூட் 2 இருக்கு. ஒண்ணு வெள்ளோடு வழி..டவுன் பஸ் சார்ஜ் 6 ரூபா...இன்னொண்ணு பெருந்துறை ரூட்..சர்வீஸ் பஸ் சார்ஜ் ரூ 10.டவுன் பஸ்ல போனா ஃபிகர்ங்க மதிக்கறதில்லை..(இல்லைன்னா மட்டும் வணக்கம் போட்டுட்டுத்தான் மறு வேலை..)

பெருந்துறை வழியா போற பஸ்ல போக 2 காரணங்கள் இருக்கு. 1. அந்த ரூட்ல தான் மகாராஜா மகளிர் காலேஜ் இருக்கு. 2. திண்டல் வெள்ளாளர் மகளிர் காலேஜ் அந்த ரூட்லதான் இருக்கு, ( VMC)

காலைல 8.40 க்கு சக்தி முருகன் பஸ் வரும் . இதுல மகாராஜா மகளிர் காலேஜ் ஃபிகருங்க 18 பேரும்,வி எம் சி கேர்ள்ஸ் 12 பேரும் வருவாங்க.. (கவுண்ட்டவுன் கண்ணாயிரம்) இந்த பஸ்ல ஹை குவாலிட்டி பொண்ணுங்க வருவாங்க..அதாவது ஹை சொசயிட்டி பணக்காரப்பொண்ணுங்க..இந்தப்பொண்ணுங்க எல்லாம் சுத்த மோசம். யாரும் மோசமான கேரக்டர்னு நினைச்சுடாதீங்க.. பசங்களோட அகராதில நம்மைப்பார்த்து சைட் அடிச்சா அது நல்ல பொண்ணு.. கண்டுக்காம விட்டா ராங்கி.. அப்படிம்போம்.

நானும் 2 மாசம் அதே பஸ்ல ரெகுலரா போய் பார்த்தேன்.. யாரும் கண்டுக்கலை.. மனுஷனாக்கூட மதிக்கலை.... சரி.. பஸ்ஸை மாத்திப்பாக்கலாம்னு அடுத்த பஸ் கே எம் எல் காலை 8. 50 க்கு வர்ற பஸ்க்கு மாறுனேன்.
http://www.hindu.com/2007/12/14/images/2007121452290301.jpg
இதுல மொத்தமா 30 ஃபிகருங்க வந்தாங்க.. எல்லாரும் அவ்வளவு மொத்தமான்னு கேட்கக்கூடாது..டோட்டலான்னு அர்த்தம்.KML பஸ்ல ஒரு மூணு எழுத்துப்பெயர் கொண்ட ஃபிகர் ரெகுலரா வந்தது..அந்த பஸ்ல ரெகுலர் ஃபிகர்ஸ் 30 பேரு.. இர் ரெகுலர் ஃபிகர்ஸ் 12 பேரு..( இர்ரெகுலர்னா அப்பப்ப வர்ற ஃபிகர்ங்க)

அந்த த்ரிஷா ஃபிகர் பார்க்க திரிஷா மாதிரியே இருக்கும்.(பெயரை வெளியிட வேணாம்னு சொல்லிடிச்சு)அந்த கால கட்டத்துல கதைகள்ல மட்டும் தான் கேரக்டர் நேம் வரும்.ஜோக்ஸ்ல வராது.நான் ஒரு ஐடியா பண்ணுனேன். அது வரை காதலர்கள் ஜோக்ஸ்னா கண்ணே... அன்பே. டியர்.. இப்படித்தான் ஜோக் வசனம் வரும்.மீறிப்போனா கமலாங்கற பேர் வரும்.. மத்தபடி வேற பொண்ணுங்க பேர் வராது..நான் 13 ஃபிகர்ங்களோட பேரை வெவ்வேறு ஜோக்ஸ்களில் வர வைத்து ஒரே ஜோக் எழுத்தாளர் அதிக அளவில் ஃபிகர் பெயர்களை வர வைத்தவன் என்ற வரலாற்று சிறப்பை ஏற்படுத்தினேன்..( ஹி ஹி நம்மால இது தான் முடியும்.. ஹி ஹி )

நான் அந்த த்ரிஷா ஃபிகர் பேரை வர வைக்க சபதம் எடுத்துக்கிட்டேன்.அப்பவெல்லாம் மாதம் ஒரு முறை குமுதம் இதழ் குமுதம் ஸ்பெஷல் என ஒரு குட்டி புக் வரும். அதுல இந்த ஜோக் வந்துச்சு.

” எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்...நீங்க தான் மிஸ்   ***  வா?”

“ஆமா.. நீங்க யாரு? எப்படி என் பேரு தெரியும்?”

”இல்ல.. இந்த கே எம் எல் பஸ்ல வர்ற ஃபிகர்லயே சூப்பர் ஃபிகர்   ***  தான்னு சொன்னாங்க.. அதான் பஸ்ல ஏறுனதும் டால் அடிச்சு கண் கூசுச்சு.. நீங்க தான்னு கண்டு பிடிச்சுட்டேன்..”

“ ஹய்யோ”
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYxHJpTWG03gCMjLjHYYvWjTDUS3eiBPy9Pr9J4gYr-29ZnQlZiDDcT0XaktOOo6EeZv2cCcJ4FEpzmYUstSvZYGOAw7w52-DgMuRE0EBUL729Md55lvTXg_5LNqqFOM1ahizj2RC4zoE/s1600-r/DSC00101.JPG

இந்த ஜோக் புக்ல என் பெயர், ஊர் பேரு போட்டு வந்தது.. அப்போ நிறைய பேருக்கு என்னை தெரியாது.. (இப்போ மட்டும்?)அந்த புக்கை காலேஜ்ல யாரோ அந்த ஃபிகர்ட்ட காட்டீட்டாங்க... (பார்க்கத்தானே அப்படிப்பண்ணுனதே..!) அந்த குரூப்ல வந்த பொண்ணுங்களுக்கெல்லாம் பொறாமை... இந்த ஃபிகருக்கு மட்டும் பெருமை...ஆனா ஆள் யார்னு தெரியாது...

மேட்டர் லீக் ஆகி அந்த ஃபிகரோட வீட்டுக்கு போயிடுச்சு.. பஸ்ஸை மாத்தீட்டாங்க..எந்த பஸ்னு தெரியலை... நானும் பெருசா ரிஸ்க் எடுத்துக்கலை.. விட்டுட்டேன்..
சில வருடங்களுக்குப்பிறகு ஈரோட்ல அந்த பெண்ணை பார்த்தேன்.. ( இப்போ அந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. பார்த்தீங்களா? மேரேஜ் ஆனதும் ஃபிகர் பத பிரயோகம் கட் ஆகி பெண் என மாறியதை..? # தமிழன் கல்யாணம் ஆன பொண்ணுங்களுக்கு எப்பவும் மரியாதை குடுப்பான்)ஈரோடு நகர டிராஃபிக் எஸ் ஐ.. (அய்யோ சாமி.)தான் புருஷன்.

.
அவர் பயங்கர கறுப்பு..ஆள் பாக்க  ராஜ்கிரன்  மாதிரி இருப்பாரு..நான் அந்த பெண் கிட்டே கேட்டேன்.


.” என்னை தெரியுதுங்களா?” ( எதிர்த்த மாதிரியே நின்னா தெரியாம..?)

”ம்..சென்னிமலைதானே..?” (ஆஹா.. ரெக்கை கட்டி பறக்குதய்யா..)

”நீங்க ரெகுலரா பஸ்ல வர்றப்ப நான் அதே பஸ்ல வருவேன்.. அப்புறம்....”


” தெரியும்... குமுதம்ல ஜோக் போட்டிருந்தீங்களே..”

”ஆமா.. அதைப்பார்த்து என்ன நினைச்சீங்க..?”

” ஒண்ணும் நினைக்கலை..ஆனா அந்த ஜோக் வந்த பிறகு நிறைய பேர் அந்த பஸ்ல என்னை நோட் பண்ண ஆரம்பிச்சாங்க.. என் கணவர் கூட அந்த ஜோக்கை பார்த்த பிறகு யார்னு பார்ப்பமேன்னு அதே பஸ்ல வந்து பார்த்தார்..அப்புறம் என்னை பிடிச்சதால எங்கம்மா ,அப்பா கிட்டே வந்து சம்பந்தம் பேசுனார்..நிச்சயம் முடிஞ்சதும் அந்த பஸ்ல போகவேணாம்.. ரவுடிப்பசங்க ஜாஸ்தின்னு அவர் தான் வேற பஸ்ல வரச்சொன்னார்.”

”அப்போ என்னைப்பற்றி நீங்க நினைச்சதே இல்லையா?”
http://www.fashionclothingtoday.com/wp-content/uploads/2010/08/Printed-Bridal-saree2.jpg
”ம்ஹூம்.. சமீபத்துல உங்க ஃபோட்டோ வந்தது ஒரு புக்ல .. அப்பத்தான் நீங்கன்னே எனக்கு தெரியும்..ஆனா அதுக்குள்ள எனக்கு மேரேஜே ஆகிடுச்சு..”

”ஓஹோ.. சரி.. சப்போஸ் அவருக்கு முன்னே நான் வந்து பொண்ணு கேட்டிருந்தா எனக்கு ஓக்கே சொல்லி இருப்பீங்களா?”

ம்ஹூம். கண்டிப்பா சொல்லி  இருக்க மாட்டேன்”

ஏன்?

ஏன்னா உங்களுக்கு பொண்ணுங்களை கவர்ற லுக் இல்ல... எல்லாரையும் கலாய்ச்சுட்டே இருக்கீங்க..பஸ்ல எல்லா பொண்ணுங்களும் உங்களை பற்றி இதே விதமான அபிப்ராயம் தான் வெச்சிருக்காங்க.. ஒரு ரவுடி இமேஜ்..

எனக்கென்னவோ உங்களுக்கு கல்யாணம் ஆனதால இப்படி சொல்றீங்களோன்னு டவுட்டா இருக்கு..

இல்லை.. வேணும்னா என் ஃபிரண்ட் ஃபோன் நெம்பர் தர்றேன் .. கேட்டுப்பாருங்க..

வேணாம்... வேணாம்... (உங்க கிட்டே கேவலப்பட்டது போதாதுன்னு ஃபோன் போட்டு அவுட் கோயிங்க் கால் போட்டு பேசி கேவலப்படனுமா?)

”உங்க கிட்டே ஒண்ணு சொல்லனும்”

ம்.. சொல்லுங்க

நீங்க உங்க வாழ்க்கைல எந்த சம்பவம் நடந்தாலும் அதை பத்திரிக்கைகளுக்கு கதையா எழுதுவீங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.. இந்த சம்பவத்தை எழுதுனா என் பேரை எழுத வேண்டாம்..

சரிங்க.. நான்  வர்றேன்..
http://www.suriyakathir.com/issues/2010/Feb01-15/PG47a.jpg
டீன் ஏஜ் பசங்களுக்கு சில ஐடியாக்கள்

1. ஹீரோ மாதிரி நடக்கறதா நினைச்சுக்கிட்டு எல்லா பொண்ணுங்களையும் கலாட்டா பண்ணிட்டு கமெண்ட் அடிச்சுட்டு இருக்காதீங்க...

2. பஸ்ல ஸ்டெப்ல நின்னுக்கிட்டே வந்தா எல்லா பொண்ணுங்க பார்வைலயும் படலாம்னு தப்புக்கணக்கு போடாதீங்க.. எனக்கு தெரிஞ்சு ஸ்டெப்ல நின்னுட்டு வந்தவன் யாரும் லவ் மேரேஜே பண்ணுனதில்லை.. கமுக்கமா பஸ்ஸுக்குள்ள உக்காந்து நல்ல பையனா வந்தாத்தான் நல்ல பேரு கிடைக்கும்.

3. ரெகுலரா ஒரே பஸ்ல வருஷக்கணக்கா வராதீங்க..வாரா வாரம் பஸ் மாத்துங்க.. அப்போ அதிக ஃபிகருங்களை பார்க்கலாம்.. அவங்களுக்கும் பையன் ரெகுலரா வர்றான்கறது தெரியாது...

4. நல்ல ஃபிகரை எங்காவது பார்த்தா சும்மா அலம்பல் பண்ணி ஊரைக்கூட்டி , ஃபிரண்ட்ஸ் கிட்டே காட்டி விளம்பரம் பண்ணாதீங்க..அப்புறம் வேற யாராவது லவட்டிட்டு போக சான்சஸ் உண்டு.

5. ஃபங்க் தலையோட ,ரவுடி மாதிரி இருக்காதீங்க.. டீசண்ட்டா தலையை அழுந்த படிய வாரிக்கிட்டு நெற்றில மங்களகரமா திருநீறு, குங்குமம் வெச்சுக்கிட்டு நீட்டா வரனும்.. (திருநீறு, குங்குமம் வெச்சாலே பாதி ரவுடி களை போயிடும்..)


டிஸ்கி -1 மேலே உள்ள எந்த காலேஜ் ஃபிகரும் என்னுடன் படித்ததல்ல..எதேச்சையா ஃபோட்டோ கிடைச்சது.. அவ்வளவுதான்.

டிஸ்கி 2 - மேலே சொன்ன நிகழ்வுகளில் என்னையும் மீறி ஏதாவது சொல் பிரயோகங்கள் யார் மனதையாவது பாதித்தால் அதற்கு தனி பதிவு போட்டு என்னை கேவலப்படுத்த வேண்டாம்.. இங்கேயே பின்னூட்டமா போடுங்க,, மன்னிப்பு கேட்டுடறேன்.. நான் டெயிலி 10 பிளாக் போய் மன்னிப்பு கேட்க சங்கடமா இருக்கு.. ஹி ஹி 

டிஸ்கி 3 - முதல் பாகம் படிக்காதவங்க, ஏற்கன்வே படிச்சிருந்தாலும் ரிப்பீட்டா படிக்க ஆசைப்படறவங்க  என்னை கேவலப்படுத்திய ஃபிகர்கள் (பாகம் 1 )

Wednesday, March 16, 2011

தமனாவும், தப்ஸியும் ஒரே கட்சிலயா? உருப்பட்ட மாதிரி தான்...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioWJDBnit0WAHtClKHkSfNYxbpq8PNXWcLg_8m-3gFsksZMtDUq_kJy_IfFQC0ICC_yioAEqVucWHfunNKtXugMVhGWM9AalBr6NhdqDEwAL4wkCQj2-auMRShZzmLFunf4rENsQHN8duR/s1600/tapsee2.jpg

1.  நாட்டு நலனுக்காகத்தான் கட்சி நடத்தறேன்...

காமெடி பண்ணாதீங்க தலைவரே.... நீங்க கட்சியை கலைச்சாத்தான் அது நாட்டுக்கு நலன்.....

--------------------------------------------

2. உங்க மேல சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு நீங்க பதிலே சொல்லலையே...

கண்டு பிடிக்கப்பட்டது கை அளவு... கண்டுபிடிக்கப்படாதது கடல் அளவு...

-----------------------------------------

3. தலைவருக்கு இனப்பற்று அதிகம்னு எப்படி சொல்றே..?

அவரோட ஜாதி ஆளுங்களுக்கு மட்டும் தான் சீட் தர்றாராம்...

-----------------------------------------

4. நான் 25 வருஷமா ஊழல் பண்றேன்...

தலைவரே... அதெல்லாம் கமுக்கமா வெச்சுக்கவேண்டியது...இப்படியா வெள்ளி விழா கொண்டாடி  ஊரை கூட்டறது?

---------------------------------------

5. இன்ஸ்பெக்டர! ஆயுதக்கடத்தல் வழக்குல எதுக்கு மளிகைக்கடைக்காரரைப்போய் அரெஸ்ட் பண்ணி இருக்கீங்க..?

அவரு கடைல 100 கிலோ ரவை ஸ்டாக் வெச்சிருந்தாராம்..

-------------------------------------
http://mallumasalaactress.in/wp-content/uploads/2010/06/tamanna2.jpg
6.சி பி ஐ ஆஃபீசர்ஸ் ஏன் திக் பிரமை அடைஞ்சு நின்னுட்டாங்க?

ஊழல் எனது பிறப்புரிமை அப்படின்னு தலைவரு  உரிமை முழக்கம் இட்டாராம்..

-------------------------------------

7. தலைவருக்கு தன்னம்பிக்கை குறைஞ்சிடுச்சுன்னு எப்படி சொல்றே...?

கட்சில தப்ஸி, தமன்னா இவங்களை சேர்த்துக்கிட்டா ஜெயிச்சிடலாமா? அப்படிங்கறாரே..

-------------------------------------

8.    சித்தோடு சதீஷ் அம்மா கட்சின்னு எப்படி சொல்றே..?


மஞ்சள் கலர்ல இருக்குன்னு போஸ்ட் கார்டு கூட யூஸ் பண்றதில்லை...

-----------------------------

9. பேடு பாய்ஸின் டெண்ட்டாக டெம்ப்பிள்ஸ் எல்லாம் மாறி விடக்கூடாதுன்னு ஹீரோ வசனம் பேசறாரே.. என்ன அர்த்தம்? புரியலையே..?

கொடியவர்களின் கூடாரமாக கோயில்கள் ஆகி விடக்கூடாதுங்கற பராசக்தி வசனம் தான்.. ரீ மிக்ஸ்ல அப்படி ஆகிடுச்சு...

----------------------------------

10.  தலைவரோட செல் ஃபோன்ல காலர் டியூனாக என்ன வெச்சிருக்காரு..?

அது தெரியலை.. கரகாட்டக்காரி காஞ்சனாவை வெச்சிருக்காரு. அது வேணா தெரியும்...

---------------------------------

Monday, March 14, 2011

ஆட்சியை கலைப்பது கவர்னர் உரிமை-ஆட்சியை கலாய்ப்பது பதிவர் கடமை

http://thenaali.com/cpanel/Editor/images/articles/thenaali%20choice/thenaali%20cartoon/cartoon_feb_17.jpg 

1. பத்திரிகைச் செய்தி: சுப்ரீம் கோர்ட்டுக்கு விரைவில் பதிலளிக்க வேண்டிய சூழ்நிலை சி.பி.ஐ.,க்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, தி.மு.க., எம்.பி.,யும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

சும்மா கண் துடைப்பு விசாரனை பண்ணுனா நாங்க நம்பிடுவோமாக்கும்?முதல்ல கலைஞர் டி விக்கு சீல் வெச்சு விசாரனை பண்ற வழியைப்பாருங்க...


-------------------------------------------

2. "டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளரான அரவாணி ரோஸ்: தி.மு.க., அரசில் எந்த திருநங்கைக்கும் அரசு பணி வழங்கப்படவில்லை. அ.தி.மு.க., ஆட்சியின் போது திருநங்கையர்கள் மூன்று பேருக்கு ஜெயலலிதா அரசு பணி வழங்கினார். கருணாநிதிக்கு எதிராக என்னை நிறுத்தினால் போட்டியிடுவேன்.

அதுவுமே அம்மா எதேச்சையா குடுத்திருப்பாரு..அல்லது கலைஞர் ஆட்சியில் இல்லாதது என் ஆட்சியில் நடந்ததுன்னு காட்ட குடுத்திருப்பாரு.. எப்படியோ நல்லது நடந்தா சரிதான்.


-------------------------------------------

3. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: கபட நாடகம் நடந்து முடிந்தாகிவிட்டது. இறுதியாக, குட்டு வெளிப்பட்டு விட்டது. அனைவருக்கும் தெரியும் வண்ணம் உண்மை வெளிவந்து விட்டது. "ஸ்பெக்ட்ரம்' ஊழல் மூலம் கிடைத்த பணத்தை, தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்ட தி.மு.க., - காங்கிரஸ், தங்கள் வேறுபாட்டைப் போக்கி, தமிழக சட்டசபை தேர்தல் தொகுதிப் பங்கீட்டை முடித்துள்ளன.

ஏம்மா ,சும்மா நடிக்காதீங்க.. 50 சீட்டுக்கு ஓக்கே சொல்லி இருந்தா அவங்க கூட நீங்க கூட்டணி வெச்சிருப்பீங்க.. பச்சைக்கலர் டிரஸ் போட்டுட்டு ஏன் இப்படி பச்சோந்தி மாதிரி பேசறீங்க?


------------------------
http://inthiya.in/ta/wp-content/uploads/2011/02/kanimozhi-rasa-cartoon.jpg
4, பா.ஜ., மாநில துணைத் தலைவர் எச்.ராஜா பேட்டி: குரல் வளையை நசுக்குவது போல காங்கிரஸ் நடந்து கொண்ட பிறகும், அக்கட்சியுடன் தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளது. ஊழலின் ஊற்றுக்கண்ணாக உள்ள காங்கிரஸ் செய்த ஊழலில் நான்கில் ஒரு பங்கு தி.மு.க.,விற்கும் உண்டு.

 என்னது? வெறும் 25 % தானா? எங்க தானைத்தலைவர் அந்த அளவுக்கு இறங்கி வர மாட்டாரே.. அட்லீஸ்ட் பாதிக்குப்பாதியாவது வாங்கி இருப்பாரே,...


-------------------------------------------

5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலர் பிரகாஷ் கராத் பேச்சு: இந்திய மக்கள் முன் இப்போது மிகப் பெரிய இரு பிரச்னைகள் உள்ளன. ஒன்று மிகப் பெரிய ஊழல், மற்றொன்று விலைவாசி உயர்வு. இந்த இரு பிரச்னைகளுக்கு காரணம், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசும், மாநிலத்தில் தி.மு.க., அரசும் தான்.

பிரச்சனை  என்ன?ன்னு எல்லாருக்கும் தெரியுது.. ஆனா அதுக்கான தீர்வு என்ன?ன்னு தான் யாருக்கும் தெரியல...

-------------------------------------------

6. முன்னாள் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேட்டி:பணத்திற்கும், பிரியாணிப் பொட்டலத்திற்கும், மது பானத்திற்கும் ஓட்டுகளை அடகு வைக்கும் நிலை இனியும் தொடரக்கூடாது. "என் ஓட்டு விற்பனைக்கல்ல' என்பதை ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் மக்கள் புரிய வைக்க வேண்டும்.

 அது சரி.. இதையும் ஓ சி ல குடுத்து எங்களை வேடிக்கை பார்க்க சொல்றீங்களா?வந்த வரை லாபம்னு வாங்கி போட்டுட்டு போய்ட்டே இருக்க வேண்டியதுதான்.

--------------------------------------------
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjL4EwVTbqM3pj2a1mwqJSLSRleRya6cAr7Dr9byyS4upk3VTKVAtha58gs7yKAHLuX82VxrHxzFRlCz3jn0fRngyXpRDVVLCbJDuRUhuIxcW2gZkBr_MPjv56-mLMnb1VglkfvPe3pcBg/s400/image009.jpg
7. புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி பேட்டி:சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட இரண்டு தொகுதிகள் கேட்டோம். ஆனால், ஒரு தொகுதி மட்டும் தருவதாகக் கூறினர். எனவே, தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறி, 40 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

ஹா.. ஹா.. ஹா.. இருங்க என்னால சிரிப்பை அடக்க முடியல... எங்க தலைவர் ஒரு சீட் பிச்சை போட்டதை வாங்காம இப்படி சுய மரியாதை அது இதுன்னு ஏன் சார்  உடம்பை கெடுத்துக்கறீங்க? எங்க அண்ணன் ராம் தாசை பார்த்தீங்களா? எவ்வளவு கேவலப்படுத்தினாலும் ஒண்ணுமே தெரியாத மாதிரி , எதுவுமே நடக்காதது மாதிரி சிரிச்சுட்டே போஸ் குடுப்பாரு.. நீங்க இன்னும் வளரனும் தம்பி...

----------------------------------------
8. இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா பேச்சு: ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்படாத எந்த ஒரு நாகரிகமும் மனித நாகரிகமாகவே ஏற்றுக் கொள்ளப்படாது. அதனால், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் இன்னும் கால தாமதம் கூடாது. மேலும், அதை தள்ளிப் போடுவதை அனுமதிக்க முடியாது. விரைவில், மசோதா நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆமாங்க ..அப்படித்தான் கடந்த 25 வருஷமா எல்லாரும் நம்பறாங்க... இன்னும் 25 வருஷம் நம்புனா என்ன ஆகிடும்?

---------------------------------------
9. பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் பேச்சு: நிதி நிலை அறிக்கையில், கறுப்புப் பணம் தொடர்பான எந்த விவரத்தையும், அரசு அறிவிக்கவில்லை. குறைந்தபட்சம் வெளிநாட்டில் எவ்வளவு கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது, எத்தனை பேர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பன போன்ற விவரங்களையாவது அரசு வெளியிட வேண்டும்.

அது சரி.. அதை வெளியிட்டா எங்களுக்கு எப்படி வருமானம் வரும்?னு காங்கிரஸ் கேட்குமே..?


10. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்மூத்த தலைவர் பிருந்தா கராத் பேச்சு: விலை உயர்வு என்பது சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படாத வரி போல் உள்ளது. இந்த பட்ஜெட் பணக்காரர்களுக்கும், கம்பெனிக் காரர்களுக்கும் தான் பயனுள்ளதாக இருக்கும். மருத்துவமனைகள், ரத்த பரிசோதனை மையங்களுக்கு கூட, இந்த பட்ஜெட்டில், 5 சதவீத சேவை விதிக்கப்பட்டுள்ளது.நோய் வந்தால் கூட வரி விதிக்கப்படும் என்பது கொடுமையானது.

ஏழைகளுக்கும் தேர்தல் சமயங்களிலே ஏதாவது நல்லது செய்வாங்க , கவலைப்படாதீங்க... 

டிஸ்கி - சனி ஞாயிறு நெட் பக்கம் வராதவர்களுக்காக  என் முன் தினப்பதிவுகள்

1. சினேகா-வின் பவானி - சினிமா விமர்சனம்

2. WORLD INVASION - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

3. பிரகாஷ்ராஜ்-ன் அன்வர் - கோவை குண்டு வெடிப்பு பின் புலக்கதை - சினிமா விமர்சனம்

4. ஆ...!! அனுஷ்காவா அப்படி. ? .ம்ஹூம் ..இருக்காது. நான் நம்ப ... 

 

 

Saturday, March 12, 2011

சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்....சமயம் பார்த்து பல வகையில் கொள்ளை அடிக்கிறார்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8rcUaR_CKR-jO8PSEz4ZObOh1vP6-XjVS0uji6cRSrPVoXbnCvKmCnM-dJGf6lgtRbZdcJ106Xm3F4bI3a8hiBPuFSWUoElOTCdA8VnJrfQBsJ1Ripch10GDQIr-cpNvvsuO6pVOoM3Z8/s400/pg2a.jpg 

1. பிரதமர் மன்மோகன் சிங்: தவறான கணிப்பின் காரணமாக, மத்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையராக தாமஸ் நியமிக்கப்பட்டுவிட்டார். இதற்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

உங்களுக்கு அந்த அளவுக்கு பவர் இருக்கா..? சொக்கத்தங்கம் சோனியா ஓக்கே சொல்லீட்டாங்களா?

------------------------------------------

2. கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி: காங்கிரஸ் கட்சி, ஒழுக்கக் கட்டுப்பாட்டை தீவிரமாக கடைபிடித்து வருகிறது. அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டவர்கள் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்க வேண்டும்.

ஒழுக்ககட்டுப்பாடுன்னா.. என்ன அர்த்தம்? தலைமைக்கு தெரியாம எந்த ஊழலையும் பண்ணக்கூடாதுன்னு அர்த்தமோ?

-----------------------------------------------

3. மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன்: மார்க்சிஸ்ட் கட்சி ஊழல், தாராளமயமாக்குதல் ஆகியவற்றுக்கு எதிரானது. ஆகவே, தி.மு.க.,வுடன் உடன்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. அ.தி.மு.க.,. தரப்பில் இருந்து தேர்தல் உடன்பாடு குறித்து பேசுவதற்காக மார்க்சிஸ்ட் கட்சிக்கு அழைப்பு வந்துள்ளது. இரு கட்சிகளின் குழுவினரும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச இருக்கிறோம்.

வெற்றி வாய்ப்பு உள்ளவருடன் மட்டுமே கூட்டணிங்கறது உங்க கொள்கை போல...

---------------------------------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCMPY28JroG8kKRc0xzSsU7zNQBynJihPeKbUFD3LwRrMkH6OpD_vsQu0OBTZ6tA9R_Vh4CgofhjdyG9gaWnbRTfScmS67JgvsrdS-78f1xRBEE5_6X7mVNYJrpsbx2pEexN-wUpoEf1rv/s1600/tamilmakkalkural_blogspot_sonia.jpg
4. மத்திய உரத் துறை அமைச்சர் அழகிரி பேட்டி: தி.மு.க., - காங்கிரஸ் நல்லுறவில் விரிசல் என்று, ஊடகங்களில் தான் பெரிதுபடுத்தப்பட்டது. ஆனால், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில், எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை; இரு கட்சித் தொண்டர்களும், இணைந்து பணியாற்றுவோம். எங்கள் கூட்டணி மக்கள் ஆதரவுடன் மகத்தான் வெற்றியைப் பெறும்.


அதெல்லாம் சரி.. உங்களுக்கு அப்புறம் வந்தவங்க எல்லாம் ஏகப்பட்ட ஊழல்ல மாட்டி இருக்காங்க.. நீங்க வெறும் வாய்தான்.. இது வரை ஒரு ஊழல்ல கூட மாட்டலையே.. அம்புட்டு நல்லவரா நீங்க..?

-------------------------------------------------
5. என்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பேச்சு: முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு எனக்கு கட்சித் தலைமை கட்டளையிட்டது. கட்சித் தலைமையின் கட்டளைக்கு கட்டுப்பட்டு அப்பதவியை ராஜினாமா செய்தேன். அதன் பின் முதல்வர் வைத்திலிங்கம் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த ஆட்சியில், மக்களுக்கு எந்த புதிய திட்டங்களும் அமல் செய்யவில்லை. பொய்யான குற்றச்சாட்டுக்களை என் மீது சுமத்தி முதல்வர் பதவியில் இருந்து என்னை விலகுமாறு கூறிய சோனியா, தற்போது நடக்கும் மோசமான ஆட்சியை கண்டிக்கவில்லை.

எப்படிய்யா கண்டிப்பாங்க..?ஒரு  அயோக்கியனை மிரட்டனும்னா முதல்ல நாம யோக்கியமா இருக்கனும்...

---------------------------------------

6. மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் பேட்டி: இரு ஓய்வு பெற்ற அதிகாரிகள், ஒரு பணியிலுள்ள அதிகாரி ஆகிய மூன்று பேரை சி.வி.சி., பதவிக்கு பணியாளர் மற்றும் பயிற்சித்துறை பரிந்துரை செய்தது. இந்த விஷயத்தில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. இது குறித்து பிரதமர் கூறியிருப்பது மிகச் சரியானது. எல்லாவற்றையும் அவரே போய்ப் பார்க்க முடியாது. அவர் முன், என்னென்ன விவரங்கள் வைக்கப்பட்டனவோ அவற்றைக் கொண்டுதான் அவர் முடிவெடுக்க முடியும்.

ஆமாமா.. எல்லாத்தையும் அவரே பார்க்க முடியாதுதான்.. ஆனா பேசுனபடி கமிஷன் தொகையை மட்டும் சரியா தராம டபாய்ச்சசிடறாங்க.. அதான் இப்போ பிரச்சனை

--------------------------------------


http://img.dinamalar.com/data/images_news/tblcatroon_67855471373.jpg
7. முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேச்சு : தேர்தல் நேரத்தில் கட்சியினர் உண்மைகளை திரித்துக் கூறுவதை தவிர்த்தால், பிரச்னைகள் வருவதை தடுக்கலாம். ஜாதி, மத உணர்வுகளை தூண்டும் வகையில், கட்சியினரின் பேச்சு அமையக் கூடாது.

ஜாதி ஓட்டுக்களை எப்படித்தான் அவங்க வாங்குவாங்க பாவம்..?நல்ல ஜாதில பொறந்திருந்தா எதுக்கு ஜாதி அரசியலுக்கு வர்றானுங்க..?

----------------------------------

8. முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேச்சு: அரசின் நல்ல திட்டங்களை வரவேற்றோம்; பிடிக்காத திட்டங்களை எதிர்த்தோம். டாஸ்மாக், சாராயம், லாட்டரியை எதிர்த்தோம். இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து எதிர்க்கத்தான் போகிறோம்; இது நம் கொள்கை. இதை மாற்றிக் கொள்ள முடியாது.

ஏம்ப்பா அவ்வளவு கஷ்டம்.. ஏன் கூட்டு சேர்றீங்க? நீங்க சொல்றது எப்படி இருக்குன்னா பொண்டாட்ட்டி நடத்தை தவறுனா கண்டிப்போம்னு சொல்ற மாதிரி இருக்கு. காலுக்கு ஆகாத செருப்பு எதுக்கு.. யோக்கியமா இருந்தா அதை கழட்டி எறிய வேண்டியது தானே,..?

-------------------------------------------

9. வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் பேச்சு: கிராமப்புறங்களில், வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும். இதுவே, பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை. தற்போது, தகவல் தொழில்நுட்பமானது, நகரங்களை மையப்படுத்தியே உள்ளது; இது, கிராமங்களை சென்றடைய வேண்டும். தகவல் தொழில்நுட்பத்தின் இத்தகைய மாற்றம் தான் உலகளவில் இந்தியாவை உயர்த்த உதவும்.

கவர்னர் ஆட்சி வந்தாத்தான் தமிழனுக்கு நல்ல காலம் பொறக்கும். இந்த அரசியல்வியாதி வந்தானுங்கன்னா சுரண்டீட்டே தான் இருப்பாங்க..சுரண்டுற அளவு மாறும், ஆனா சுரண்டறது மாறாது..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjy5STpTSLTgoMi9hNc9B54g8By-uFdcZ5VZNEtG77CLxg8Axsa-X9zk9jKnETHMonpJbG1imPyfFBBmD3Zhbp6HGr6-31ps7P-tns6VrCXmuSVexSWxxko1AOv-BO1tda9I-R0yj5l8RA/s400/mgr_jaya.jpg
-------------------------------------
டிஸ்கி -1 : இன்று டிஸ்கில எந்த மேட்டரும் இல்ல.. ஏன்னா பதிவுங்கறது நாம போய்ப்பார்க்கற பொண்ணு மாதிரி.. டிஸ்கிங்கறது பொண்ணுக்கு தோழி மாதிரி.. சும்மா சப்போர்ட்டுக்கு.. ஆனா நம்மாளுங்க என்ன பண்றாங்க ? பொண்ணை விட பொண்ணோட தோழி நல்லாருக்கே அப்படின்னு கமெண்ட் பண்ணிடறாங்க..ஹி ஹி

டிஸ்கி 2 -  பாருங்க அட்ரா சக்க போடற டிஸ்கி ல கூட கருத்து இருக்கு.. நாம தெரிஞ்சுக்க வேண்டிய நீதி என்னான்னா பொண்ணு பார்க்கப்போறப்ப பொண்ணோட தோழியையோ, பொண்ணோட தங்கையையோ சைட் அடிக்கறது தப்பு...அப்படியே அடிச்சாலும் அதை வெளில சொல்லக்கூடாது.. ஹி ஹி


Tuesday, February 15, 2011

காதலர் தினத்தன்று நடந்த காமெடி கலாட்டாக்கள்

http://sports.dinamalar.com/SportsImages/news02_29.jpg
1. சொர்க்கத்துக்கான டெம்ப்பரவரி பாஸ்வோர்டு - ஐ லவ் யூ டியர்.பர்மணெண்ட் பாஸ்வோர்டு - எனக்கு ஆளே கிடையாது.. எப்பவும் ஃபிரீ.

-----------------------------------------------------

2. லவ்வர் கிடைக்காதவங்க எல்லாம் கேப்டன் ஃபார்முலாவை ஃபாலோ பண்ண வேண்டியதுதான்.-# யாருடனும் கூட்டணி கிடையாது.

----------------------------------------

3. ஒருமை, பன்மை - இலக்கண குறிப்பு வரைக. ஒரு ஃபிகரை மட்டும்வெச்சே லைஃப் லாங்க் ஓட்டிடறது ஒருமை.... ஹி ஹி

------------------------------------------

4. டியர், நீ என்ன கலைஞரா? நான் என்ன மீனவனா? செத்தாக்கூட கவலை இல்லைங்கறியே.. # புலம்பல்

----------------------------------------------

5. என் காதலியும் சிங்களப்படை மாதிரி.. எல்லையை தாண்டினா கண்ணாலயே (GUN) சுட்டுடுவா..

------------------------------------------
http://sports.dinamalar.com/SportsImages/news01_43_43.jpg
6.காதலிக்கு ரெகுலரா குடுக்கற கிஃப்ட் தான் இன்னைக்கும்.சீப் & பெஸ்ட் முத்தம் தான்  #காசு குடுத்து கிஃப்ட் வாங்க கையாலாகாதோர் சங்கம்.

---------------------------------------

7. பீச்சுக்கு என் தோழியையும் அழைச்சுட்டு வரவா?ன்னு கேட்ட காதலி கிட்டே நோ சொல்லீட்டேன்.# 1. இடைஞ்சல் 2. என் மனசு தோழி பக்கம் மாறிட்டா?

-------------------------------------

8.பீச்ல ஏகப்பட்ட லவ் ஜோடிங்க போன வருஷம் வந்ததுல 70 % ஜோடி மாறிடுச்சே..? # மாற்றம் ஒன்றே உலகில் மாற்றம் இல்லாதது.

--------------------------------------

9. தியேட்டருக்கு வர்ற லவ் ஜோடிகள்ல நல்ல ஜோடியை எப்படி அடையாளம் காண்பது?கார்னர் சீட்ல உக்காராம ஃபேன் க்கு கீழே உள்ள சேர்ல உக்காந்தா நல்ல ஜோடி.

-----------------------------

10. பீச்சுக்கு வர லேட்டாகும்னா ஒரு மெசேஜ் பண்ணி இருக்கலாமே? - காதலி
இன்னைக்கு SMSக்கு 50 பைசா - கஞ்சக்காதலன்

----------------------------------------

டிஸ்கி - எனக்கு ஸ்போர்ஸ்ல அவ்வளவா ஆர்வமும் நாலெட்ஜூம் கிடையாது.அதனால நிறைய பேரு வருத்தபட்டுட்டாங்க.. விளையாட்டு சம்பந்தமா பதிவே போடறதில்லையேன்னு.. அவங்க வருத்தத்தை போக்கற விதமா 50 % இப்போதைக்கு சானியா மிர்சா படம் மட்டும்,, ஹி ஹி

Saturday, January 22, 2011

MY MISCALCULATIONS - சினிமா விமர்சனம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWmEUbc9BYTUIzUA9-rCbmSz8CVz3JT-ImaAhQYtXZLEAekwjwNlI21wGtOfMcja_nhyYDFASb3VouAaRnqz5czS5a7H5iYBlJabpC951KwfCo9DTQnLtejqTBnuLVN4bNGOUk0ucHX2Y/s1600/Siruthai-Movie-Stills-16.jpg
 கருத்துக்கணிப்புகள் என்றுமே சுவராஸ்யமானவை, அவை அவ்வளவாக பலிக்காது என்ற போதும்.பொங்கல் ரிலீஸ் படங்களைப்பற்றி நான் விமர்சனம் எழுதிய போது  பல கருத்து வேறுபாடுகளும் ,விமர்சனங்களும் எழுந்தன.நான் சொன்னதும்.. இப்போ நடப்பதும் - ஒரு அலசல்

கமர்ஷியல் சக்சஸ் ஆன சிறுத்தைக்கு நான் எதிர்பார்த்த விகடன் மார்க் 44. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக விகடன் 39 வழங்கி இருக்கிறது.இது எனக்கு விழுந்த முதல் அடி.ஆனால் அவர்கள் 8 பேர் ஆசிரியர் குழுவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பார்த்த கலவையான அனுபவம் + மார்க். ஏன் இவ்வளவு குறைவா போட்டிருக்கீங்க என அதில் பணியாற்றும் நண்பரிடம் கேட்டபோது  ரீமேக் படங்கள், வன்முறையை தூண்டும் படங்கள் இவற்றுக்கு மைனஸ் மார்க் உண்டு என்றார்.


மேலும் கார்த்தி படத்தின் பின் பாதியில்  (திருடன் போலீஸ் ஆன பிறகு) செய்யும் காமெடி சேஷ்டைகள் படத்துக்கு மைனஸ் எனவும் படத்தின் சீரியஸ்னெஸ்சை அது பாதிக்கிறது எனவும் கூறினார்.ஆனால் மக்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. படம் ஜாலியா போகுது. நல்ல எண்ட்டர்டெயினிங்க் படம் என்றே ரிசல்ட் வந்திருக்கிறது.




பத்திரிக்கைகளில் வரும் விமர்சனங்கள் பல முறை பொய்த்துப்போனதற்கு ஒரு உதாரணம் கேப்டன் பிரபாகரன் வந்த போது ராணியில் அதற்கு அளிக்கபட்ட மார்க் 37.அது மெகா ஹிட் ஆகி கேப்டனின் லைஃப் டைம் அச்சீவ்மெண்ட் படம் ஆனது. ஈரோடு கிருஷ்ணாவில் அது 143 நாட்கள் ஓடி  போட்ட முதலை விட 7 மடங்கு லாபம் ( தியேட்டர்காரர்களுக்கு) சம்பாதித்து குடுத்தது,


என்னதான் சமாதானம் சொல்லிக்கொண்டாலும் ஏ , பி , சி  என எல்லா செண்ட்டர்களிலும் பட்டையை கிளப்பும் ஒரு படத்துக்கு ஆனந்த விகடன் அளித்த மார்க் அதிர்ச்சிதான்.
http://imagehosting.nazdrovia.net/images/tapsee5.jpg



அடுத்து ஆடுகளம். இந்தப்படத்துக்கு நான் எதிர்பார்த்த விகடன் மார்க் 43. ஆனால் விகடன் அளித்த மார்க் 44. ஒரு மார்க் தான் அதிகம் என்றாலும் என் கணிப்பு  தவறுதான். அதே போல் இந்தப்படம் சிட்டியில் சுமாராத்தான் போகும் என நான் நினைத்தேன். கிராமக்கதை அதுவும் சேவல் சண்டை அதிகம் என்பதால் நகர்ப்புற மக்களை அதிகம்  கவர முடியாது என நான் நினைத்தேன்.ஆனால் விகடனின் பார்வை வேறு விதமாக இருக்கு.படம் எதார்த்தமா எடுக்கபட்டதாலும் ,நடிகர்களின் ஜீவனுள்ள நடிப்பு பிரமாதம் என்பதாலும் பொங்கல் ரேசில் இதுதான் ஃபர்ஸ்ட் என்பது போல் விமர்சனம் வந்திருக்கு.


பொதுவா விகடன்ல நல்ல படங்களுக்கு 2 பக்க விமர்சனம் போடுவாங்க. ஆனா பொங்கல் ரிலீஸ்ல எல்லா படங்களுக்குமே ஒரு பக்க விமர்சனம் தான் போட்டிருக்காங்க..ஏன்?னு தெரியல.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEcmldHYOCUV5vAwedY0gcekKirP0-wj_lb1YDjdtV2jyJB5FinTEmj6hsU46IGTtmuvMTmXux9Sc8cyIMYXFS4v3b7jcHwLkG-iUy6WTGezkXh7ICSPMA_xh6pcgHXWsjiV7zhXXYn2mI/s1600/Kavalan_9.jpgADA
அடுத்து காவலன் படம் விகடன்ல 45 மார்க் எதிர்பார்த்தேன். ஆனா 42 மார்க்தான் போட்டிருக்காங்க.விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமா இருந்திருக்கும்.
படத்துல விஜய் நடிப்பு நல்லாருக்கு என விமர்சனம் எழுதி இருந்தாலும் மொத்த படத்தோட விமர்சனம் அப்ப்டி ஒண்ணும் படம் பிரமாதம் இல்லைன்னு எழுதி இருக்காங்க.பார்வைகள் வேறுபடுது.பார்ப்போம்.ரசிகர்களின் இறுதி தீர்ப்பு எப்படி இருக்கும்?னு..


ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல காவலன் ரிலீஸ் ஆனதை விஜய் ரசிகர்கள் வருத்தமா பார்க்க தேவை இல்லை. இதே ஸ்டார் தியேட்டர்லதான் முதல் மரியாதை, கரகாட்டக்காரன் போன்ற மெகா ஹிட் படங்கள் ரிலீஸ் ஆகி முதல் 7 நாட்கள் காத்து வாங்கி அப்புறம் மக்களின் மவுத் டாக் மூலம் படம் வெற்றி அடைந்தது.


என்னைப்பொறுத்தவரை காவலன் படம் ஓடனும்னு நினைக்கிறேன். காரணம், இந்த மாதிரி வெரைட்டி சப்ஜெக்ட் படம் எடுபட்டாத்தான் தொடர்ந்து விஜய் மற்றும் முன்னணி ஹீரோக்கள் நல்ல சப்ஜெக்ட்ல நடிப்பாங்க.. இல்லைன்னா பழையபடி பஞ்ச் டயலாக்.. தாதா கதைன்னு போயிடக்கூடிய அபாயம் உண்டு.


டிஸ்கி  - திடீர்னு விஜய்க்கு ஏன் ஆதரவா எழுதறீங்க?ன்னு சிலர் கேக்கறாங்க.ஒரு மனுஷன் தோல்வில இருக்கறப்ப மேலும் மேலும் வெந்த புண்ல வேல் பாய்ச்சக்கூடாது.2 ஹிட் குடுக்கட்டும்.. மீண்டும் மசாலா படத்துல பஞ்ச் டயலாக் பேசறப்ப கிண்டல் அடிப்போம்.

Thursday, December 30, 2010

சினிமா ஜோக்ஸ் + அரசியல் ராக்ஸ் ( ராஸ்கல்ஸ்)

http://www.viparam.com/thumbnail.php?file=1_626643737.jpg&size=article_medium
1.டைரக்டர் சார்,உங்க படத்துக்கு மாட்டை விரட்டற மாதிரி “ஹை ஹை “னு டைட்டில் வெச்சு இருக்கீங்களே,ஏன்?

”நல்லா ஓடட்டும்னுதான்”

2. இன்ஸ்பெக்டர் - சட்டம் தன் கடமையை செஞ்சே தீரும்.

கைதி - ரொம்ப நன்றி சார்,இந்தாங்க ரூ 1000 லஞ்சம்,என்னை விட்டுடுங்க.

3.இது ஒரு லோ பட்ஜெட் படம்னு எப்படி சொல்றே?

டெயிலி ஏதாவது ஒரு கோயில்ல ஷூட்டிங்கை வெச்சு லஞ்ச்சை அன்னதான சாப்பாடு சாப்பிட வெச்சு சாப்பாட்டு செலவை மிச்சம் பண்ணறாங்களே....

4. ஜட்ஜ்  - ரூ 1000 பிக்பாக்கெட் அடிச்ச உனக்கு 6 மாத சிறை தண்டனை.

கைதி - ஆமா,கோடிக்கணக்குல ஊழல் பண்ணுனவங்களை எல்லாம் விட்டுடுங்க,பிசாத்து 1000 அடிச்சவன்,நோ எண்ட்ரில போறவன்னு இளிச்சவாயனாப்பார்த்து தண்டனை குடுங்க.

5. அந்த ஹீரோ ரொம்ப சிம்ப்பிள்,யூனிட்ல மத்தவங்க சாப்பிடற சாப்பாட்டைத்தான் அவரும் சாப்பிடறாராம்.

அடடா,அது எச்சில் ஆச்சே,வேற கொண்டு வரச்சொல்லி சாப்பிட வேண்டியதுதானே....
http://vanniyan.com/newsimages/cinema/Tamil/112010/Simran_actress.jpg
6. மாப்பிள்ளைக்கு சொந்தமா நாலஞ்சு மெயில் இருக்குன்னீங்க ,ஒரு ரயிலைக்கூட கண்ணுல காட்டலையே?

அடடா... ஓடற மெயில்னு நினைச்சுட்டீங்களா?மெயில் ஐ டி MAIL I D) இருக்குன்னு சொன்னோம்.

7. டியர், நீ இல்லாம என்னால ஒரு நொடி கூட இருக்க முடியாது....

4 நாள் வெயிட் பண்ணுங்க..என் கணவர் ஃபாரீன் போனதும் ஃபோன்  பண்றேன்.

8.  தலைவர் வீட்டுக்கு போனேன்,பொங்கல் குடுத்தாரு...

ஆச்சரியமா இருக்கே,, அவரு வழக்கமா எல்லாருக்கும் அல்வா தானே தருவாரு..?

9. குடுகுடுப்பைக்காரன் - நல்லகாலம் பிறக்குது ,நல்லகாலம் பிறக்குது,,

யோவ் ,தெளிவா சொல்லுய்யா...நாட்டுக்கா? தலைவருக்கா?

10.  நிருபர்  - மேடம்,திடீர்னு ஏன் சின்ன திரைக்கு நடிக்க வ்ந்துட்டீங்க?

நடிகை - பெரிய திரைல துரத்தி விட்டுட்டாங்க...ஆனா இதை ஆஃப் த ரெக்கார்டா வெச்சுக்குங்க. (  OFF THE RECORD) . பேட்டில எல்லா வீடுகள்லயும் ரீச் ஆக அப்படின்னு போட்டுக்குங்க....

Tuesday, December 28, 2010

காந்திபுரம் - சினிமா விமர்சனம்

அர்ஜூன் - கவுண்டமணி அண்ணே ,வாங்க நல்லாருக்கீங்களா?ரொம்ப நாள் ஆச்சு,உங்களைப்பார்த்து..?

கவுண்டமணி - வல்லக்கோட்டை விமர்சனத்துல வலிக்க வலிக்க வாங்குனது மறந்துடுச்சா?

அர்ஜூன் - அண்ணனுக்கு எப்பவும் தமாஷ்தான்.

கவுண்டமணி -படுவா,பிச்சுப்புடுவேன் பிச்சு... எது தமாஷூ?சீரியசா பேசிட்டு இருக்கறப்ப காமெடி பண்ணிட்டு...அது இருக்கட்டும் ரஜினி நடிச்ச பாட்ஷா படத்தையும்,விஜய் நடிச்ச கில்லி படத்தையும் மிக்ஸ் பண்ணனும்னு ஐடியா குடுத்த மகராசன் யாரு?

அர்ஜூன் - வேற யாரு. நம்ம டைரக்டர்தான்.

கவுண்டமணி -அடங்கொக்கா மக்கா.அந்தாளு வேலையா இது?ஆனா எனக்கு ஒரே ஒரு விஷயம் இந்தப்படத்துல பிடிச்சிருந்தது...

அர்ஜூன் - என்னண்ணே,என் நடிப்பா?

கவுண்டமணி -நாசமாப்போச்சு... இந்தப்படத்துல நீ ஹீரோ இல்ல, கெஸ்ட்  ரோல்தான்.ஆனா போஸ்டர்ல நீதான் ஹீரோங்கற மாதிரி ஒரு பில்டப் எதுக்கு?

அர்ஜூன் - எல்லாம் மார்க்கெட்டிங்க் டெக்னிக்தான் அண்ணே.
rrkk-review.jpg (494×233)
கவுண்டமணி -இது தமிழ்ப்படம் கிடையாது,தெலுங்கு டப்பிங்க் படம்.அதுவும் ஜூனியர் என் டி ஆர் ஹீரோவா நடிச்ச படம்.எதுக்கு இப்படி ரசிகர்களை ஏமாத்தனும்...?

அர்ஜூன் - சரி,விடுங்கண்ணே... படத்தோட கதையை பத்தி கொஞ்சம் சொல்லுங்க.

கவுண்டமணி -ஆமா ,இவரு பெரிய இதிகாசம் படைச்சுட்டாரு..அப்படியே நீட்டி முழக்க... அந்த கருமத்தை என் வாயால சொல்லனுமா? நீயே சொல்லித்தொலை...

அர்ஜூன் - மும்பைல தாதாவை தட்டிக்கேட்கும் நான் ஒரு கட்டத்துல தாதா ஆகிடறேன்.அங்கே நடந்த ஆக்சிடெண்ட்ல நான் செத்துப்போன மாதிரி சீன் கிரியேட் பண்ணி தமிழ்நாடு வந்துடறேன்,இங்கே எனக்கு 2 தங்கச்சிங்க,2 பேரும் லவ் பண்றாங்க. ( 2 தனி தனி ஆளுங்களைத்தான் )அக்கா தங்கை 2 பேரும் அண்ணன் தம்பியை முறையே லவ் பண்றாங்க..அதாவது ஒரே குடும்பத்துல சம்பந்தம் வைச்சுக்கறாங்க.அவங்க எப்படி ஒண்ணு சேர்றாங்க அப்படிங்கறதுதான் கதை... ஹலோ  ஹலோ என்னண்ணே அதுக்குள்ள தூங்கிட்டீங்க..?

கவுண்டமணி -இந்த மாதிரி அரதப்பழசான கதையை சொன்னா ஆடியன்ஸ் தூங்காம என்னப்பா பண்ணுவாங்க.? .நீ பேசாம வேலண்ட்ரி ரிட்டயர்மெண்ட் வாங்கிட்டு ஓடிப்போயிடு,

அர்ஜூன் - அதை விடுங்க என்னோட அறிமுகக்காட்சி எப்படிண்ணே இருந்துச்சு?

கவுண்டமணி -வழக்கம்போல ரொம்ப கேவலமா இருந்தது..ஜீப்ல உக்காந்துட்டு இருக்கற நீ அப்படியே ராக்கெட் மாதிரி மேலே எம்பி அந்தரத்துல பறக்கறே...புவி ஈர்ப்பு விசைங்கறது ஒண்ணு இருக்கு, மறந்துட வேணாம்.

அர்ஜூன் - என்னோட பாடி லேங்குவேஜ் பற்றி கொஞ்சம் சொல்லுங்க..


கவுண்டமணி -குளத்துல இருந்து எந்திரிச்சு வர்ற சீன்ல எதுக்கு நெஞ்சை நிமித்திட்டு வர்றே...சாதாரணமா நீ நடக்கவே மாட்டியா?மனசுக்குள்ள பெரிய அர்னால்டுன்னு நினப்பா?

Rama-Rama-Krishna-Krishna-Movie-Poster-Designs-10.jpg (433×650)
சி பி - அண்ணே ,வணக்கம்ணே....

கவுண்டமணி -வந்துட்டாண்டா வீங்குன வாயன்,டேய் பரட்டைத்தலையா?நீ ஹாஸ்பிடல்ல பொறந்தியா?சினிமா தியேட்டர்ல பொறந்தியா..ஒரு படத்தை விட மாட்டே போல..இந்த குப்பைப்படத்துக்கு விமர்சனம் போடலைன்னு யார் அழுதா..?

சி பி - சொந்தமா சரக்கு இருந்தா நான் ஏண்ணே இப்படி கண்ட கண்ட படத்துக்கு எல்லாம் விமர்சனம் போடறேன்?வந்தது வந்தேன்,என் ஜோலிய முடிச்சுட்டு போயிடறேன் அண்ணே...

கவுண்டமணி -அதான் ஏற்கனவே ஜோலியை முடிச்சுட்டியே ,அப்புறம் என்ன.?

சி பி - அதில்லைண்ணே... இந்தப்படத்துல வர்ற வசனங்கள் பற்றி....

கவுண்டமணி - அதெல்லாம் வசனம் இல்ல.. விசனம்....

1. கட்டிப்பிடிக்காதடி ... என் கற்பு போயிடும்.

என்னைக்கு இருந்தாலும் போகக்கூடிய கற்புதானே...( ஆஹா பொண்ணுங்கன்னா இப்படித்தான் முற்போக்குவாதியா இருக்கனும்,)

2.ஏதாவது நடந்துடுமோன்னு ஆசையை அடக்கிட்டு வாழறது ஒரு வாழ்க்கையா? ( புதிய தத்துவம் 19,879)

3. அல்வா அலமேலு..இப்போ பால் (BALL) போடறேன்.. உன் விக்கெட் விழப்போகுது. ( டபுள் மீனிங்காம்,சகிக்கலை)

4. பெரியவங்களோட பார்வைல லவ்ங்கறது ஆகாசத்துல பறக்கற ஏரோப்ளேன் மாதிரி..சின்னதாத்தான் தெரியும்..லேண்டிங் ஆகறப்பதான் அதன் மகத்துவம் தெரியும். ( கிழிஞ்சுது கிருஷ்ணகிரி)

5. நீ வைகைல முக்கறவன்னா நான் மும்பைல முக்கறவன் ( வில்லனுக்கும் பஞ்ச் டயலாக்கா..?)

6. ஆண்டவனை எல்லாரும் கோயில்ல வைப்பாங்க,நான் ஜெயில்ல வெச்சிருக்கேன்... ( செண்ட்டிமெண்ட் செம்மலு..)

7. நீங்க அவங்களைப்போய் வரவேற்கலைன்னா உங்க பிரெஸ்டீஜ் போயிடும்,வரவேற்றா உங்க மரியாதை போயிடும்.நல்லா மாட்டிக்கிட்டீங்க.. ( ஆமா டிக்கட் கவுண்ட்டர்லயே தெரிஞ்சுடுச்சு)

பிரெஸ்டீஜ்னா என்ன? மரியாதைன்னா என்ன? # டவுட்டு

கவுண்டமணி - அப்பாடா முடிச்சுட்டாண்டா///,,, அப்படியே திரும்பி பார்க்காம ஓடிப்போயிடு நாயே...

அர்ஜூன் - அண்ணே, படத்துல நீங்க ரசிச்ச அம்சம் ஏதாவது சொல்லுங்க...

கவுண்டமணி -நீ கோயில்ல இருந்து வெளில வர்றப்ப ஷூ காலோட வர்றியே,,, அது ஏன்?ஏற்கனவே குஷ்பூ செருப்பு போட்டு மாட்டுனது பத்தாதா?

அர்ஜூன் - அடடா சாரிண்ணே... அது டைரக்டர் ஃபால்ட்.

கவுண்டமணி -உன்னை கமிட் பண்ணுனது கூட அந்த ஆளோட ஃபால்ட்தான்.

அர்ஜூன் - என்னோட வசனம் பேசற ஸ்டைல்ல ஒரு மாற்றம் கொண்டு வந்திருக்கேன்,பாத்தீங்களா?

கவுண்டமணி -ஆமா.. இவரு பெரிய புரொனொன்சேஷன் புரொஃபசரு,, ((PRONOUNSATION PROFESSOR)அப்படியே வசனத்தை வடிகட்டறாரு.. “ பிரியா கூட மருதமலைக்கு போயிட்டு வான்னு சிங்கிள் லைன்ல சொல்ல வேண்டிய டயலாக்கை எதுக்கு இழுத்து இழுத்து 20 நிமிஷம் சொல்றே..? மனசுக்குள்ள பெரிய கமல்ஹாசன்னு  நினைப்பா?

அர்ஜூன் - இந்தப்படம் எத்தனை நாள் ஓடும்?

கவுண்டமணி -எத்தனை காட்சிகள் ஓடும்னு கேளு ,10 ஷோ ஓட்டிடுவாங்கன்னு நினைக்கறேன்.

அர்ஜூன் - ஏ செண்ட்டர்ல சொல்றீங்களா?

கவுண்டமணி -ஓ அந்த ஆசை வேற இருக்கா? சி செண்ட்டர்ல மட்டும்தான் ரிலீசே ஆகி இருக்கு.

அர்ஜூன் - ஆனந்த விகடன் விமர்சனத்துல எவ்வளவு மார்க் போடுவாங்க?

கவுண்டமணி -உனக்கு பேராசை ஜாஸ்தி.. அவங்க எப்போ டப்பிங்க் படத்துக்கு எல்லாம் விமர்சனம் போட்டிருக்காங்க?இண்ட்டர்நெட்லயே யாரும் கண்டுக்கமாட்டாங்க..நீ வேணா பாரு. இந்தப்பட விமர்சனத்தை அட்ரா சக்க மாதிரி ஒரே ஒரு மொக்கை பிளாக்ல மட்டும்தான் போடுவாங்க.