Showing posts with label CINE REVIEW. Show all posts
Showing posts with label CINE REVIEW. Show all posts

Friday, March 18, 2011

முத்துக்கு முத்தாக - வெற்றிக்கு வித்தாக -சினிமா விமர்சனம்

http://www.sivajitv.com/newsphotos/MuthukuMuthaga1.jpg
மாயாண்டி குடும்பத்தார்,கோரிப்பாளையம் ,பாண்டி,பூ மகள் ஊர்வலம் பட வரிசையில் இயக்குநர் ராசு மதுரவனின் 5 வது ஃபேமிலி செண்ட்டிமெண்ட் படமான இது கல் நெஞ்சையும் கரைக்கும், கண் கலங்க வைக்கும் அம்மா, அப்பா பாசக்கதை...இந்த கால இளைஞர்களுக்கு ஒரு பாடமாக வந்திருக்கும் இந்தப்படம் அடையப்போகும் வெற்றி ரவுடியிசக்கதைகளையே நம்பி குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டும் பாடாவதி இயக்குநர்களுக்கான சவுக்கடி,...

அம்மா, அப்பாவாக வாழ்ந்திருக்கும் இளவரசு - சரண்யா ஜோடிகளின் குணச்சித்திர நடிப்பு அருமை.அதுவும் இளவரசின் அண்டர்ப்ளே ஆக்டிங்கும் அவரது பாடி லேங்குவேஜூம் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு ஒரு பாடம்.

படத்தோட கதை என்ன?5 பசங்க பெத்திருந்தும் கடைசி காலத்துல மருமகள்களின் நயவஞ்சகத்தால் அடைக்கலமோ, பாசமோ கிடைக்காமல் பரிதவிக்கும் பெற்றொரின் கதை தான்...ஏற்கனவே தவமாய் தவமிருந்து, சம்சாரம் அது மின்சாரம்,வானத்தைப்போல போன்ற பல படங்களின் சாயல் இருந்தாலும் இது ஒருகவனிக்கத்தக்க படமே...

படத்தோட ஓப்பனிங்க் சாங்க்ல ஒளிப்பதிவு கண்களை அள்ளுகிறது.அதே போல் ஓப்பனிங்க் ஃபைட் சீனில் பதட்டத்தை ஏற்படுத்தாமல் ஏதோ லவ் தீம் மியூசிக் மாதிரி போட்டு பின்னணி இசையில் ஏன் சொதப்பினார்கள் என்பது தெரியவில்லை.. 


http://monikaonline.in/wp-content/uploads/2011/01/monika-muthukku-muthaga.jpg
கிராமத்து தெம்மாங்குப்பாட்டான  பொண்ணைபார்த்தா விசில் அடிப்பேன்...என்னத்தை பாட்டுக்கு  செமயான கலக்கல் இசை அமைத்து தியேட்டரை எழுந்து ஆட வைத்திருக்க வேண்டாமா? இசை அமைப்பாளர் ரொம்ப வே அடக்கி வாசித்தது ஏனோ..?அந்த பாட்டுக்கு எல்லா ஆண்களும் வேட்டையை அவிழ்த்து அண்டர் டிராயருடன் ஆடுவது மொத்தப்படத்துக்குமான திருஷ்டி...

படம் முன் பாதி வரை கலகலப்பாகப்போகிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம் சிங்கம்புலி. சாதாரண சீனைக்கூட இவர் செய்யும் அலப்பறைகளால் களை கட்டுகிற மாஜிக் தெரிந்தவர் போல..

.கதைக்களனாக  ஐவரில் ஒருவர் வேன் டிரைவராக வருவதும் அவரது வேனில் மோனிகா பயணிப்பதும் அழகு. ஆனால் நாயகி மோனிகாவை எந்த வித பில்டப்பும் இல்லாமல் சர்வசாதாரணமாக அறிமுகப்படுத்தியதை அகில இந்திய ”அழகி ” பட மோனிகா ரசிகர் மன்றத்தை சார்ந்தவன் என்ற முறையில் இயக்குநரை வன்மையாக கண்டிக்கிறேன்..

அதே இயக்குநர் இன்னொரு  நாயகி களவாணி ஓவியாவுக்கு மட்டும்  ஸ்லோமோஷனில் செம பில்டப்போடு அறிமுக சீன் வைத்தது ஏன்?
ஆனால் தாவணீயில் வந்து கிராமத்துமாணவியாக மனதில் பதிந்த ஓவியா இதில் சிட்டி காலேஜ் கேர்ளாக எடுபடவில்லை.. அதுவும் அவரது ஹேர் ஸ்டை பல காட்சிகளில் சகிக்க வில்லை.

http://narumugai.com/wp-content/uploads/2010/09/oviya-4.jpg
மோனிகா காதலன் தனக்கு கிடைக்கமாட்டான் என தெரிந்து கதறுவது செம நடிப்பு.. அவரது கழுத்து நரம்புகள் புடைக்க கதறும் அந்த சீனில் மோனிகாவின் அர்ப்பணிப்பான  நடிப்பு அட்டகாசம்.

ஐந்து மகன்களில் இருவருக்கு திருமணம் ஆகிறது.. அதில் ஒரு மகன் வீட்டோட மாப்பிள்ளையாக போகிறான்.. அந்த சீனில் அந்த மகன் கண் கலங்கிக்கொண்டே வீட்டை விட்டுக்கிளம்பும் சீன் டாப் கிளாஸ் நடிப்பு....

5 மகன்களிடம் அடி வாங்கும் ஆள் இந்த தேன் கூட்டின் மீது கை வைக்காதீர் என கட் அவுட் வைப்பது செம காமெடி சீன்...அதே போல் வேன் வாடகைக்கு ஆசைப்பட்டு ஒரு கல்யாண ஜோடியையே பிரிக்கும் காமெடியும் கலகல ..
சிங்கம்புலியின் கரிமேடு கருவாயன் கெட்டப் நகைக்க வைக்கிறது..

கிளாமர் ஹீரோயின் என்றால் ஸ்லோமோஷன்ல பேஸ்கட் பால் விளையாட வேண்டும், ஜீன்ஸ் பேண்ட் டைட் டீ சர்ட் போட்டு ஜாக்கிங்க் போக வேண்டும் (அதுவும் ஸ்லோ மோஷன்ல தான்) என்ற கோடம்பாக்கத்தின் மாறாத செண்ட்டிமெண்ட்டை வரவேற்கிறேன்.. (ஹி ஹி கிடைச்ச வரை லாபம்....)

http://monikaonline.in/wp-content/uploads/2011/01/Muthukku-Muthaga-Audio-Launch-monika.jpg

என்ன பண்ணி தொலைச்சே.. என் நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுத்துதே  பாட்டுக்கு மோனிகா ஆடும் டான்ஸ் இதம்... பாடல் வரிகள் இலக்கிய நயம். படமாக்கிய விதம் கண்ணியம்..

ஊருக்கு போய் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் ஒரு பையன் அம்மா சேலையையும், அப்பா வேட்டியையும் ஞாபகத்துக்காகவும் , வாசத்துக்காகவும் எடுத்து செல்வது செம செண்ட்டிமெண்ட் சீன்..

ஒரு சுடிதார் பூ வந்து என்னைத்தொட்டு சென்றது.. என் கன்னம் 2-ல் ஹைக்கூ சொல்லி சென்றது 30 நாளும் பவுர்ணமியே பாட்டுக்கு ஓவியா ஆடும் சீனும் கலக்கலான கொரியோகிராஃபி..

இந்த பாடலுக்கு பிளாக் ஜீன்ஸ் + ஸ்கை ப்ளூ டீ சர்ட்டில் ஓவியா ஆடும்போது.. செம கிளு கிளு..

நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு பாட்டுக்கு கிராமத்தின் பெருமையை அறிமுகப்படுத்தும் காமெடி சீன்கள் ஓக்கே ரகம்...
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_145913000000.jpg
முத்துக்கு முத்தான வசனங்களில் நினைவில் நின்றவை...

1. எம் பி பி எஸ் படிச்சுட்டு ஃபாரீன் டாக்டர் ஆகாம் ஏன் இந்த கிராமத்துக்கு வந்தேன்? இங்கே ஜாதிச்சண்டை அதிகம்...நிறைய பேரு வெட்டிக்குவாங்க.. அடிச்சுக்குவாங்க.. 4 காசு சம்பாதிக்கலாம்னுதான்.....

2.  அண்ணே.. உள் குத்து, வெளி குத்து என்ன வித்தியாசம்?

அவங்க ஆள்கள் அவங்களுக்குள்ளேயே அடிச்சுக்கிட்டா அது உள்குத்து.. வெளி ஆட்களை அடிச்சா அது வெளி குத்து...

3.  என்னது வீட்டோட மாப்பிள்ளையாவா..? இது சரி ஆகுமா?

நம்ம பசங்க எப்படி வாழறாங்கன்னு பார்க்கனும்.. எங்கே வாழறாங்கன்னு பார்க்கக்கூடாது..

4. என்னதான் வீட்டுசாப்பாடு ருசியா இருந்தாலும் மாமன் மச்சான் வீட்ல ஓசி சாப்பாடு சாப்பிடற சுகம் இருக்கே,,,.. அடடா...

5.. டே.. எதுக்கு இவ்வளவு பதட்டம்..? முத ராத்திரி ரூம்ல இருந்து வெளில வந்து எதிர்ல இருக்கற பொருளை எல்லாம் தட்டி விடறே.. கைல குடுத்த காபி டம்ளரை தட்டி விட்டே... ஆனா தலைல இருக்கற மல்லைகைப்பூவை தட்டி விடாம இருக்கே..? அதை முதல்ல தட்டி விடடா..

6. எண்ணையை தூக்கி உள்ளே வைடான்னா என்னை தூக்கி உள்ளே உட்கார வைக்கறியா..?

7. ஹீரோ -எந்த அழகான பொண்ணு என் எதிரே வந்தாலும் ஆட்டோகிராஃப் வாங்கறது என் பாலிசிங்க..போடுங்க...

8.சிங்கம்புலி  -எதுக்குய்யா என்னை சுருட்டைன்னு கூப்பிடறீங்க.? சச்சின் டெண்டுல்கர்னு கூப்பிடுங்க..

9.   அண்ணே , என் ஆளு வர இன்னும் 10 நிமிஷம் ஆகும் .எப்படியாவது இவங்களை  சமாளி....

சிங்கம்புலி - ஆமா.. இவனுங்க என்ன கலெக்டர் ஆஃபீஸ்லயா வேலை பார்க்கறானுங்க..?

10. சிங்கம்புலி - வண்டி 10 நிமிஷம் நிக்கும், யூரின் போறவங்க எல்லாரும் போயிட்டு வந்துடுங்க..

யோவ்,, வண்டி கிளம்பியே 10 நிமிஷம் தான் ஆகுது.. அதுக்குள்ளே  யூரின் போன்னா எப்படி வரும்?

11.  சிங்கம்புலி - யோவ்.. இடைத்தேர்தல் வந்தா ஓட்டுக்கு ரூ 10000 கிடைக்கும்.. செத்துத்தொலைய்யான்னா சாக மாட்டேங்கறே.. நீ எல்லாம் என்னய்யா எம் எல் ஏ..?

12. எல்லா நாளும் சண்டேவா இருந்தா ரொம்ப நல்லாருக்கும்.. நாம் எல்லாரும் குடும்பத்தோட சந்தோசமா இருக்கறது  அன்னைக்குத்தானே..

13.  என்னதான் ஏ சி ரூம்ல சாப்பிட்டாலும் அம்மா கையால சாப்பிட்ட மாதிரி வருமா?

14.  சரண்யா - டே.. தம்பி.. காலேஜ்க்கு போ.. படி ஆனா பாஸ் மட்டும் ஆகிடாதே., அப்புறம் எங்களை  பிரிஞ்சு போயிடுவெ...

15.  நாங்கதான் 10 மாசம் சுமந்து பெக்கறோம்..

அடிப்போடி.. உங்களுக்கு அந்த 10 மாசத்தோட முடிஞ்சிடுது மொத்த வேலையும்.. மீதி நாள் பூரா கஷ்டப்படறது நாங்கதான்.. அடுத்த ஜென்மம்னு  ஒண்ணு இருந்தா நான் உனக்கு பொண்டாட்டி ஆகனும், நீ என் புருஷன் ஆகனும். நீ இப்போ நீ  பண்ற சித்திரவதை எல்லாத்தையும் நான் உனக்கு                 பண்ணனும்..

என்ன சாபம் குடுக்கறீங்களா?

கையாலாகாத  ஆம்பளைங்க சாபம் தான் குடுக்க முடியும்.. ( இந்த சீனுக்கு செம க்ளாப்ஸ்.. ஏகப்பட்ட ஆம்பளைங்க பாதிக்கப்பட்டிருக்காங்க போல )
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/05/D-0490.jpg
பல காட்சிகளில் அம்மா செண்ட்டிமெண்ட்டையும், ஆண்களே கண் கலங்க வைக்கும் காட்சிகள் வைத்தும் இயக்குநர் பாராட்டைப்பெறுகிறார்..

மாமனார் மாமியார் வந்ததும் தனது அம்மா வீட்டில் போய் சாப்பிட்டு விட்டு கடையில் டிஃபன் வாங்கி வருவது,பேரனைப்பார்க்க வந்த மாமியார் ஆஸ்துமா பேஷண்ட் என்பதால் தன் குழந்தைக்கும் வந்து விடும் என அவனை அண்ட விடாமல் பண்ணுவது , வீட்டோட மாப்ளையான பையன் அங்கே மரியாதை கிடைக்காமல் மன்ம் ஒடிந்து வந்து அம்மா பசிக்குது சோறு போடு என சொல்லும் இடங்கள் என கண்களை குளம் ஆக்கும் சீன்கள் மட்டும் 13 இடங்கள்.

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. சொல்லி வைத்தது மாதிரி எல்லா மருமகள்களும் அப்படி கொடூரமாக இருப்பார்களா? யாராவது ஒருவரையாவது பாஸிட்டிவ்வாக காண்பித்திருக்கலாம்..

2. மோனிகாவும், ஹீரோவும் செல் ஃபோன் ரிங்க் டோனில் காதல் பாட்டு ரிங்க் டோன்களை மாற்றி மாற்றி வைத்து வேனில் காதல் தூது விடுவது கவிதையான சீன் தான்.. ஆனால் செல் ஃபோனில் ரிங்க் டோனோ அல்லது மெசேஜோ வந்தால் லைட் எரியுமே.. என்னாச்சு? 

3. க்ளைமாக்ஸ் ஃபைட் சீனில்  பின்னணி இசை அந்தகாலத்து பழைய பாணீயில் ஏன்..?

4. கதைக்களன் திண்டுக்கல்லில் நடப்பது போல் காட்டி இருக்கிறீர்கள். புது மணத்தம்பதிகள் கல் உப்புக்குவியலில் கால் வைத்து மிதிப்பது போல் ஒரு சாங்கிய சம்பிராதய சீன் உள்ளது.. உப்பை தாண்டுவாங்க.. மிதிக்க மாட்டாங்க..

5. க்ளைமாக்சில் அரளி விதை அரைத்த துவையலை  ( பச்சை கலர்)சரண்யா மட்டன் குழம்பில் மிக்ஸ் பண்றாங்க... ஆனா அதே கலர்ல தான் குழம்பு இருக்கு மாற்றமே இல்லை கலர்ல..

6. மருமகள் அரளி விதையை அரைச்சு குடிச்சு சாக வேண்டியதுதானே  என திட்டியதால் மனம் உடைந்த சரண்யா கணவனுடன் சாவது ஓக்கே.. ஆனால் தற்கொலைக்கு தூண்டிய வழக்கு மருமகள்  மீது போடலை.. அவளுக்கு தண்டனையே தர்லையே ஏன்?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_txRCodujsFK0B71dlN4xtlPQiunyEcAqqHiqJkebXmXOqjhEaB0T_Pl_pN4hVcD82ZsDas6oP5kcBpYNGYBGdHW67rpIrluwJdKz5zU_FarnQgRbnYJ_LiiEDYqSoleQg9z4azdkO-uk/s320/Kollywood-news-1740.jpg
படம் பார்க்கும் இளைஞர்களுக்கு இயக்குநர் சொல்ல வரும் கருத்துக்கள்

1. கோடி கோடியா கொட்டி கொடுத்தாலும் வீட்டோட மாப்பிள்ளையா போகாதே..ஆரம்பத்துல சுகமா இருக்கும்.. ஆனா போகப்போக மதிக்க மாட்டாங்க..

2. அம்மா, அப்பா செத்த பிறகு அவங்களை நினைச்சு கண்ணீர் சிந்துவதை விட அவங்க உயிரோட  இருக்கறப்பவே அவங்களுக்கு ஏதாவது நல்லது செய்.

படம் முடியற ஸ்டேஜ் வந்ததும் நான் அப்படியே சுத்தி பார்க்கறேன். எல்லாரும் அவசர அவசரமா கண்களை துடைச்சுக்கறாங்க.. அவங்க விடற கண்ணீர் வெளி ஆட்களுக்கு தெரிஞ்சுடக்கூடாதாம்..லைட் போடப்போறாங்கள்ல...
இந்தப்படம் பி  செண்ட்டர்களில்  40 நாட்கள் , சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடும். ஏ செண்டர்களில் 30 நாட்கள் ஓடலாம்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் -ஓக்கே

ஈரோடு ஆனூர்ல படம் பார்த்தேன்.. லட்சுமிலயும் போட்டிருக்காங்க..

Wednesday, February 23, 2011

குமுதம் VS கலைஞர் பேட்டி - காமெடி கும்மி & உட்டாலக்கடி கலாட்டா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhd70JSBPxmFqRkMKk1UXeTisNvkoN9v8zCBsIVHYzjWgqkjtDfbqSAoLL6LpgwaI4tC5OrJUA4fUDA9UGScrT7LsdPSVXQb2N9zuuoiVy5AWeO03koY9bWMlbDzwAmiqFZgHpc2ut_I_vh/s1600/Karunanidhi+cartoon.jpg
 
தமி்ழ்நாட்டின் நெம்பர் ஒன் தமிழ் வார இதழான குமுதம் (2.3.2011) இன்று கலைஞரைப்பேட்டி எடுத்து  போட்டிருக்கிறது.ஸ்பெக்ட்ரம் பிரச்சனை வெற்றியைப்பாதிக்குமா? என சென்சேஷனல் டைட்டிலுடன் வந்துள்ள பேட்டி படிக்க செம காமெடியாக இருந்தது.அதன் ஒரிஜினல் பதிப்பை லைப்ரரியிலோ. நண்பர்களிடம் ஓ சி புக் வாங்கியோ படித்து ரசியுங்கள். ( நாம எந்தக்காலத்துல காசு குடுத்து புக் வாங்கி இருக்கோம்?).இப்போது இங்கே கேள்வி மட்டும் குமுதம் கேட்டது ,பதில் கலைஞர் சொன்னதை போடாமல் கலைஞரின் மனசாட்சி என்ன சொல்லி இருக்கும் என ஒரு கற்பனை.

1.” வரப்போகும் தேர்தலில் தி மு க வின் வியூகம் எப்படி இருக்கும்??”

இதுல புதுசா சொல்ல என்ன இருக்கு?எப்பவும் போலத்தான்.வர்றவங்க எல்லாம் வாங்கன்னு எல்லாரையும் கூட்டணில சேர்த்திக்க வேண்டியது. அப்புறம் தொகுதி பிரிக்கறப்ப பிரச்சனை வந்தா “உங்களுக்கு என் இதயத்தில் கண்டிப்பாக இடம் உண்டு என மழுப்புவது...

2. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் தி மு க சாதித்தது என்ன?

என்ன இப்படி கேட்டுட்டீங்க?.கடந்த 64 வருட காலங்களிலேயே யாராலும் பண்ண முடியாத டார்கெட் ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ஊழல் அச்சீவ் பண்ணி இருக்கோமில்ல..ஸ்டாலின் -அழகிரி சண்டை வராம பேலன்ஸ் பண்றதே பெரிய சாதனையா இருக்கு.. எனக்கு.


3.நீங்க இது வரைக்கும் பல தேர்தலை சந்தித்து இருக்கீங்க. அந்த தேர்தலுக்கும், இந்த தேர்தலுக்கும் என்ன வித்தியாசம்?

அப்போவெல்லாம் குங்குமச்சிமிழ் அல்லது பனை ஓலை விசிறி குடுப்போம்,ஏமாளி ஜனங்க அதுக்கே ஆளுக்கு 2 ஓட்டு போடுவாங்க. இப்போ எல்லாரும் உஷார் ஆகிட்டாங்க. ஒரு ஓட்டுக்கு ரூ 2000, என் கிட்டே 4 ஓட்டு இருக்குன்னு கணக்கு போட்டு கேக்கறாங்க.. ஹூம் குடுத்துத்தொலைப்போம், சின்ன மீனைப்போட்டு பெரிய மீனை எடுக்க வேண்டியதுதான்.
http://athikalai.files.wordpress.com/2010/12/mathi_cartoon-1.jpg
4. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சிக்கல்கள் வந்தாலும் தேர்தலை உற்சாகமாகவே சந்திக்கிறீர்கள்.அதற்கான பலம் எங்கே இருந்து கிடைக்குது?

உள்ளுக்குள்ள பயம் இருக்கு, அதை வெளில காட்ட முடியுமா? 60 சீட் தான் ஜெயிப்போம்னு தெரிஞ்சாக்கூட “உடன் பிறப்பே ,நாம் 234 தொகுதிகள்லயும் வெற்றி பெறுவது உறுதி”அப்படின்னு உதார் விட்டுத்தானே பழக்கம்?

5. தி மு க தொண்டர்களை எப்படி எப்போதும் உற்சாகமாய் வைத்திருக்கிறீர்கள்?அவர்களை நினைக்கும்போது  உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
1000 ஊழல்களை  கட்சி  பண்ணுனாலும்,தி மு க ஊழலில் ஊறிய கட்சிங்கறதை  நம்ப மாட்டாங்க  பாசக்காரப்பய புள்ளைக... ஏதாவது சந்தேகம் வந்தாக்கூட முரசொலில உடன்பிறப்பே...அப்படின்னு ஆரம்பிச்சு எதை எழுதுனாலும் நம்பிடறாங்க.. அவங்களை எல்லாம் நினைச்சா எனக்கு பாவமா இருக்கு....

6. இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனை தி மு க வின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா?

ம். அதனாலதான் பல்லைக்கடிச்சுக்கிட்டு ராம்தாஸ் கூட எல்லாம் கூட்டணி வைக்க வேண்டியதா இருக்கு. 10 சீட்டுக்கு பம்புன ஆள் கூட இப்போ 30 சீட்டுக்கு மேல வாங்கிட்டாரு.காங்கிரஸ் வேற ஆட்சில பங்குனு குண்டைத்தூக்கிப்போடறாங்க... பார்ப்போம்.முடிஞ்சவரை அடுத்த ஊழல் பண்ண சான்ஸ் கிடைக்குமா?ன்னு பார்க்கறேன். முடியலைன்னா இதுவரைக்கும் பண்ணுன ஊழல் பணத்தினை வெச்சு 5 வருஷம் தாட்ட வேண்டியதுதான்.
http://www.vinavu.com/wp-content/uploads/2010/06/karunanidhi.jpg
7. ஆ ராசாவை கைது பண்றப்ப உங்களுக்கு தகவலை சொல்லிட்டுத்தான் கைது பண்ணுனாங்களாமே...

ஆமா.. கூட்டணி தர்மம்னு ஒண்ணு இருக்கில்ல?

8. வரப்போகும் தேர்தலில் எந்தப்பிரச்சனை மையமா இருக்கும்?உங்க பிரச்சாரம் எதை முன்னிறுத்தி இருக்கும்?

எல்லாத்தேர்தல்லயும் சி எம் சீட்டு யாருக்கு? இதுதான் மையமா இருக்கும். நாடு எக்கேடு கெட்டு நாசமாப்போனா நமக்கென்ன?பதவிதானே நமக்கு முக்கியம்.மேடைல பேசறப்ப ஊழல் அற்ற ஆட்சின்னு உதார் விடுவோம். தனியா வீடு வீடா போய் ஒரு ஓட்டுக்கு ரூ 2000 தர்றோம்னு வாக்கு குடுப்போம்.

9. உங்க குடும்பமே சினி ஃபீல்டை ஆக்ரமிச்சு இருக்கறதா குற்றச்சாட்டு இருக்கே?

அட.. அறிவு கெட்ட ஜனங்களே...சினிமாத்துறைக்கு சலுகைகளை வாரி வாரி தர்றேனே எதுக்கு? மக்கள் வரிப்பணத்துல கிடைச்ச பணத்தை தமிழ் டைட்டிலுக்கு வரி விலக்குனு அள்ளி விடறது எதுக்கு..? எல்லாம் சுய நலம் தான்.அதுவுமில்லாம சினி ஃபீல்டை மட்டுமா நாங்க ஆக்ரமிச்சு இருக்கோம்?டி வி மீடியா கூட எங்க கட்டுப்பாட்டுல தான்.அவ்வளவு ஏன் ?இப்போ பேட்டி எடுக்கற குமுதமே கூட இப்போ என் பினாமி தானே....
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZKRbOQ3Uw088X_BzU9b9EirMJWTygPuTs0znS3IgAjYJn0em9aNcJx9HOiwZVINv0oh5u-Lxw_gScJYsJXr-ST0IBQ_l3CD3-iqw1PJXEJkqiciwjUFaK4vUI3GqzQolO6N0Ijph-p5-A/s1600/tamilmakkalkural_kalavanigal_anbucartoons.jpg
10. இலங்கைத்தமிழர்கள். மீனவர்கள் பிரச்சனை பற்றி என்ன நினைக்கறீங்க..?

அந்தப்பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கப்படாமல் அப்படியே இருக்கனும்.அப்போத்தான் தேர்தல் வாக்குறுதி தர்றப்ப 6-வது முறையாக நான் ஆட்சிக்கு வந்தால் இலங்கைத்தமிழர்கள். மீனவர்கள் பிரச்சனைஅனைத்தையும் தீர்ப்போம்னு சொல்ல முடியும்.இப்பவே தீர்த்துட்டா எதை வெச்சு பிழைப்பை ஓட்டறது?

11. மு க ஸ்டாலின் அண்மைக்காலமாக அபாரமாக உழைத்து வருகிறாரே...
அவரு கவலை அவருக்கு.. ஆட்சி அழகிரி கைக்குப்போயிடக்கூடாதுன்னு பார்க்கறார்.

12. கனி மொழியும் இப்போது அரசியல் பணி ஆற்றி வருகிறார்,அதைப்பற்றி?

எப்படியோ.. தமிழ்நாட்டை எங்க பரம்பரை இன்னும் 100 வருஷம் ஆனாலும் விடாம சுரண்டுவாங்க..

13. நீங்க ஓய்வின்றி உழைக்கிறீர்களே... அது ஏன்?

இதென்ன கேள்வி,, கொஞ்சம் ஏமாந்தா வேற யாராவது ஊழல் பண்ணிடுவாங்க.. முழுக்க முழுக்க எல்லா ஊழலையும் நாங்க தான் பண்ணனும்.

14. நீங்க 75 வருஷமா சினி ஃபீல்டுல இருக்கீங்க.. அப்போ.. இப்போ என்ன வித்தியாசம்?

அப்போவெல்லாம் என் வசனத்திற்காகவே படம் ஓடுச்சு. இப்போ என் வசனம்னு சொன்னாலே கட்சிக்காரன் கூட காத தூரம் ஓடறான். இளைஞன் படம் ரிலீஸ் ஆன 2 வது நாளே ஊத்திக்கிச்சு.. ஆனா ஒரு கவுரத்துக்காக பிரம்மாண்ட வெற்றின்னு கலைஞர் டி வி ல போட்டு ஒப்பேத்திட்டிருக்கோம்.

15. கலைஞர் சிறு குறிப்பு வரைகன்னு கேட்டா என்ன பதில் சொல்வீங்க?

உலக பணக்காரர் வரிசையில் முதல் இடம் லட்சியம்,ஆசியப்பணக்காரர் வரிசையில் முதல் இடம் நிச்சயம்.
16. பத்திரிக்கையாளர் சோ உங்க மேல கடுமையா தாக்குறாரே ஏன்?

நான் ஒரு தலித் என்பதால் இருக்கலாம்.என்னால சரியா பதிலடி கொடுக்க முடியாம போச்சுன்னா இந்த ஜாதி மேட்டரை கைல எடுத்துக்குவேன். ஒரு பய கேள்வி கேட்க முடியாது.


டிஸ்கி 1 - குமுதத்தில் கேட்கப்பட்ட கேள்விகளை கொஞ்சம் நறுக் சுருக் ஆக்கி எடிட் செய்திருக்கிறேன்.கலைஞரின் பதில்களில் அவரது தமிழ் நடை வராது. ஏன் எனில் மனசாட்சியின் குரலாகத்தான் பதிவு செய்திருக்கிறேன். மனசாட்சிக்கு நடிக்கத்தெரியாது.

டிஸ்கி 2- தொடர்ந்து மிரட்டல்கள் வருவதால் எனது செல் ஃபோனில் புது நெம்பர் வந்தால் நான் எடுப்பதில்லை. எனவே பதிவுலக நண்பர்கள் என்னுடன் பேச விரும்பினால் முதலில் உங்கள் செல் ஃபோனில் இருந்து மெசேஜ் அனுப்பி இன்னார் தான் அன்னார் (அதாவது நீங்க)என சொல்லி அப்புறம் பேசவும்.

டிஸ்கி 3 - மேலே சொன்ன டெக்னிக், பதிவர்களுக்கு மட்டுமே.. என்னை மிரட்ட நினைப்பவர்கள் அதே ஐடியாவை ஃபாலோ பண்ணக்கூடாது... ஹி ஹி

Sunday, January 23, 2011

சைனீஷ் சினிமா விமர்சனம்-FIRE BALL 19+


கோலிவுட்டுக்கு ஒரு வெண்ணிலா கபாடிக்குழு எப்படியோ,பாலிவுட்டுக்கு ஒரு லகான் (அமீர்கான்) எப்படியோ,ஹாலிவுட்டுக்கு பிளட் ஸ்போர்ட்  (ஜீன் கிளாட் வேண்டம்)எப்படியோ அதே போல் சைனீஷ் பட உலகிற்கு ஒரு ஃபயர் பால் ( FIRE BALL).

பேஸ்கட்பால் விளையாட்டை இவ்வளவு வன்முறையாகச்சொன்ன ஒரே படம் இதுவாகத்தான் இருக்கும்.1985 களில் தமிழக கிராமங்களில் ஊமைப்பந்து என ஒரு விளையாட்டு விளையாடுவார்கள்.குழுவில் உள்ள வீரர்களை ஓட விட்டு பந்தை அவர்கள் மீது எறிந்து அது அவர்கள் மேல் பட்டால் அவுட்.அந்த விளையாட்டையே கொஞ்சம் மாடர்ன் ஆக்கி ,வன்முறையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு திணித்தால் ஃபயர்பால் கேம் ரெடி.

அதாவது 2 டீம்.பேஸ்கட் பால் கிரவுண்டில் இறங்கும்.பாலை (BALL)எடுத்து யார் வலைக்குள் போடுகிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள்.ஆனால் அதற்குள் அவர்களூக்குள் அடித்துக்கொள்ள வேண்டும்.நோ ரூல்ஸ்,நோ கண்ட்ரோல்,நோ அம்ப்பயர்.எப்படி இருக்கும்.?அடி போட்டு பின்னு பின்னு என பின்னுகிறார்க்ள்.

இந்த விளையாட்டில் அடிபட்டு கோமா ஸ்டேஜில் இருக்கும் அண்ணனை மருத்துவ சிகிச்சை செய்து காப்பாற்ற ஜெயிலில் இருக்கும் தம்பி பெயிலில் வருகிறான்(அண்ணன்,தம்பி 2 பேரும் ஒருவரே-வாழ்க் டபுள் ஆக்ட்பாலிசி)
கஜினி சூர்யா மாதிரி கெட்டப்பில் இறுகிய முகத்துடன் வரும் ஹீரோ கதாபாத்திரத்துடன் ஒன்றி விடுகிறார்.மேட்ச் ஃபிக்சிங் நடக்கும் 2 குரூப்களீடம் சிக்கி விளையாட்டு குழுக்கள் எப்படி சின்னாபின்னன்மாகின்றன என்பதே கதை.
கேம் ட்ரூப்பில் இருப்பவர்களை ஒவ்வொருவருக்கும் ஒரு செண்ட்டிமெண்ட் டச் குடுத்து உலவ விடிருப்பது டைரக்டரின் சாமார்த்தியம்.வீட்டு வாடகை கட்ட முடியாததால் துரத்தப்படும் ஒரு அம்மாவின் மகன்,மோசமான தொழிலை கணவன் செய்கிறான் என தெரிந்தும் வேறு வழி இல்லாத நிலையில் அவனை ஏற்றுக்கொண்டு இருக்கும் மாசமான மனைவி (கர்ப்பவதி),இப்படி கேரக்டர்களை உருவாக்கி இருப்பது அவர்கள் மேல் ஈடுபாடு காட்ட உதவும் திரைக்கதை சாமார்த்தியம்.
இந்த மாதிரி கடுமையான படங்களில் வசனங்கள் பொதுவாக ரொம்ப ட்ரையாக (DRY) இருக்கும்.இந்தப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல.இருந்தாலும் பாலைவனத்தில் நீரூற்று போல ஆங்காங்கே சில பளீச் வசங்கள் உண்டு.

கோர்ட்ல இருந்து உனக்கு சம்மன் வந்திருக்கு.
ஹூம்,நல்லவனா வாழ விடமாட்டாங்களே?

மனசாட்சியை கழட்டி வெச்சிட்டுதான் சில தொழிலை  செய்ய வேண்டி இருக்கு.

என் கிட்ட அவ பணம் கடன் வாங்கி இருக்கா.பணத்தை கொடுத்துக் கழிக்கிறாளா?படுத்துக் கழிக்கிறாளா?
 தமிழ் படம் ஏதாவது பார்த்திருப்பாரோ டைரக்டர் என சந்தேகப்படும் அளவு ஏகப்பட்ட தமிழ்ப்பட ஃபார்முலாக்கள் ஆங்காங்கே.
படத்தின் ஹீரோயின் நிலாப்பெண்ணே பட ஹீரோயின் திவ்யபாரதியின் சாயலில் இருக்கிறார்,மாசு மரு இல்லாத,மச்சம் ஒன்றைக்கூட சருமத்தில் மிச்சம் வைக்காத அழகு முகம்.செர்ரிப்பழங்களை தோற்று விடச்செய்யும் அழகு சிவப்பில் அதரங்கள்.உடல்நிலை சரி இல்லாத காதலனாக இருந்தாலும் எஸ்கேபாகாமல் கடைசி வரை கூடவே இருந்து கவனித்துக்கொள்ளும் கதாபாத்திரம்.மிக நன்றாக செய்திருக்கிறார்.

மருத்துவ சிகிச்சைக்கான செலவுப்பணத்துக்கு அவள் விலைமகளாக பணி புரிந்துதான் பணம் ஈட்டுகிறாள்ள் என்பதை மிக நாசூக்காக ,ஒரே ஒரு லாங் ஷாட்டில் 2 செகண்டில் சொல்லி விடுவது டைரக்டரின் சாமார்த்தியம்.படத்தின் டைட்டில் போடும்போது திரைக்கதை என்ற லிஸ்ட்டில் 6 பேர் பெயர் வருகிறது.எனக்குத்தெரிந்து எந்த தமிழ்ப்படத்திலும் அப்படி வந்ததாக வரலாறே இல்லை.இருக்கவே இருக்காங்க  அப்பாவி  உதவி டைரக்டர்கள் குழு.

படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய 2 முக்கிய மைனஸ்கள்-

1.ஒளீப்பதிவு. மகா மட்டம்.தன்னை மேதை எனவும் ,ஆடியன்ஸை முட்டாள் எனவும் நினைக்கும் ஒரு ஒளிப்பதிவாளர்தான் இப்படி மோசமாக பணீயாற்ற முடியும்.லைட்டிங்க் அடிப்பது பார்ப்பவர் கண்களை உறுத்துகிறது.படம் பார்ப்ப்த்ற்குள் கண் வலி வந்துவிடும் போல.

2.பிண்ணனி இசை.என்னதான் சண்டைப்படமாக இருக்கட்டும்.இப்படியா டம் டம் டமால் டமால் என 2 மணி நேரம் நான் -ஸ்டாப் ஆக இசை அமைப்பது?

காதலனான அண்ணன் ஹாஸ்பிடல் பெட்டில். (HOSPITAL BED)காதலனின் தம்பி அதே முகச்சாயல்.கூடவே தங்க,பழக வேண்டிய சூழல் ,இவை அனைத்தையும் பிரமாதமாக கண்களில் வெளீப்படுத்தி கோல் போட்டிருக்கிறார் ஹீரோயின்.ஆனால் இருவரும் இணையும் காட்சிக்கான லீட் ஜீன் கிளாட் வேண்டம்மின் ஹார்டு டார்கெட்டிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

மாற்றான் தோட்டத்து மல்லிகையை மணம் நுகரும் மசாலாக்காட்சியைக்கூட அழகியல் உணர்வு வெளிப்படுவது மாதிரி எடுத்தது  சபாஷ் டைரக்டர் என சொல்ல வைக்கிறது,

மேற்கூறிய காட்சிகளில் கத்திரியுடன் அத்து மீறி நுழைந்து முக்கியமான சீன்களை கட் செய்த இந்திய சென்சார் குழுவை அகில இந்திய அஜால் குஜால் சீன் பட ரசிகர் மன்றம் இளைஞர்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறது.

படத்தின் நீதி -பணத்திற்காக வாழ்க்கையைத்தொலைக்கிறோம்.அது தெரிவதற்குள் நமக்கு வாழ்க்கை முடிந்து விடுகிறது.

Saturday, January 22, 2011

MY MISCALCULATIONS - சினிமா விமர்சனம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWmEUbc9BYTUIzUA9-rCbmSz8CVz3JT-ImaAhQYtXZLEAekwjwNlI21wGtOfMcja_nhyYDFASb3VouAaRnqz5czS5a7H5iYBlJabpC951KwfCo9DTQnLtejqTBnuLVN4bNGOUk0ucHX2Y/s1600/Siruthai-Movie-Stills-16.jpg
 கருத்துக்கணிப்புகள் என்றுமே சுவராஸ்யமானவை, அவை அவ்வளவாக பலிக்காது என்ற போதும்.பொங்கல் ரிலீஸ் படங்களைப்பற்றி நான் விமர்சனம் எழுதிய போது  பல கருத்து வேறுபாடுகளும் ,விமர்சனங்களும் எழுந்தன.நான் சொன்னதும்.. இப்போ நடப்பதும் - ஒரு அலசல்

கமர்ஷியல் சக்சஸ் ஆன சிறுத்தைக்கு நான் எதிர்பார்த்த விகடன் மார்க் 44. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக விகடன் 39 வழங்கி இருக்கிறது.இது எனக்கு விழுந்த முதல் அடி.ஆனால் அவர்கள் 8 பேர் ஆசிரியர் குழுவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பார்த்த கலவையான அனுபவம் + மார்க். ஏன் இவ்வளவு குறைவா போட்டிருக்கீங்க என அதில் பணியாற்றும் நண்பரிடம் கேட்டபோது  ரீமேக் படங்கள், வன்முறையை தூண்டும் படங்கள் இவற்றுக்கு மைனஸ் மார்க் உண்டு என்றார்.


மேலும் கார்த்தி படத்தின் பின் பாதியில்  (திருடன் போலீஸ் ஆன பிறகு) செய்யும் காமெடி சேஷ்டைகள் படத்துக்கு மைனஸ் எனவும் படத்தின் சீரியஸ்னெஸ்சை அது பாதிக்கிறது எனவும் கூறினார்.ஆனால் மக்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. படம் ஜாலியா போகுது. நல்ல எண்ட்டர்டெயினிங்க் படம் என்றே ரிசல்ட் வந்திருக்கிறது.




பத்திரிக்கைகளில் வரும் விமர்சனங்கள் பல முறை பொய்த்துப்போனதற்கு ஒரு உதாரணம் கேப்டன் பிரபாகரன் வந்த போது ராணியில் அதற்கு அளிக்கபட்ட மார்க் 37.அது மெகா ஹிட் ஆகி கேப்டனின் லைஃப் டைம் அச்சீவ்மெண்ட் படம் ஆனது. ஈரோடு கிருஷ்ணாவில் அது 143 நாட்கள் ஓடி  போட்ட முதலை விட 7 மடங்கு லாபம் ( தியேட்டர்காரர்களுக்கு) சம்பாதித்து குடுத்தது,


என்னதான் சமாதானம் சொல்லிக்கொண்டாலும் ஏ , பி , சி  என எல்லா செண்ட்டர்களிலும் பட்டையை கிளப்பும் ஒரு படத்துக்கு ஆனந்த விகடன் அளித்த மார்க் அதிர்ச்சிதான்.
http://imagehosting.nazdrovia.net/images/tapsee5.jpg



அடுத்து ஆடுகளம். இந்தப்படத்துக்கு நான் எதிர்பார்த்த விகடன் மார்க் 43. ஆனால் விகடன் அளித்த மார்க் 44. ஒரு மார்க் தான் அதிகம் என்றாலும் என் கணிப்பு  தவறுதான். அதே போல் இந்தப்படம் சிட்டியில் சுமாராத்தான் போகும் என நான் நினைத்தேன். கிராமக்கதை அதுவும் சேவல் சண்டை அதிகம் என்பதால் நகர்ப்புற மக்களை அதிகம்  கவர முடியாது என நான் நினைத்தேன்.ஆனால் விகடனின் பார்வை வேறு விதமாக இருக்கு.படம் எதார்த்தமா எடுக்கபட்டதாலும் ,நடிகர்களின் ஜீவனுள்ள நடிப்பு பிரமாதம் என்பதாலும் பொங்கல் ரேசில் இதுதான் ஃபர்ஸ்ட் என்பது போல் விமர்சனம் வந்திருக்கு.


பொதுவா விகடன்ல நல்ல படங்களுக்கு 2 பக்க விமர்சனம் போடுவாங்க. ஆனா பொங்கல் ரிலீஸ்ல எல்லா படங்களுக்குமே ஒரு பக்க விமர்சனம் தான் போட்டிருக்காங்க..ஏன்?னு தெரியல.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEcmldHYOCUV5vAwedY0gcekKirP0-wj_lb1YDjdtV2jyJB5FinTEmj6hsU46IGTtmuvMTmXux9Sc8cyIMYXFS4v3b7jcHwLkG-iUy6WTGezkXh7ICSPMA_xh6pcgHXWsjiV7zhXXYn2mI/s1600/Kavalan_9.jpgADA
அடுத்து காவலன் படம் விகடன்ல 45 மார்க் எதிர்பார்த்தேன். ஆனா 42 மார்க்தான் போட்டிருக்காங்க.விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமா இருந்திருக்கும்.
படத்துல விஜய் நடிப்பு நல்லாருக்கு என விமர்சனம் எழுதி இருந்தாலும் மொத்த படத்தோட விமர்சனம் அப்ப்டி ஒண்ணும் படம் பிரமாதம் இல்லைன்னு எழுதி இருக்காங்க.பார்வைகள் வேறுபடுது.பார்ப்போம்.ரசிகர்களின் இறுதி தீர்ப்பு எப்படி இருக்கும்?னு..


ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல காவலன் ரிலீஸ் ஆனதை விஜய் ரசிகர்கள் வருத்தமா பார்க்க தேவை இல்லை. இதே ஸ்டார் தியேட்டர்லதான் முதல் மரியாதை, கரகாட்டக்காரன் போன்ற மெகா ஹிட் படங்கள் ரிலீஸ் ஆகி முதல் 7 நாட்கள் காத்து வாங்கி அப்புறம் மக்களின் மவுத் டாக் மூலம் படம் வெற்றி அடைந்தது.


என்னைப்பொறுத்தவரை காவலன் படம் ஓடனும்னு நினைக்கிறேன். காரணம், இந்த மாதிரி வெரைட்டி சப்ஜெக்ட் படம் எடுபட்டாத்தான் தொடர்ந்து விஜய் மற்றும் முன்னணி ஹீரோக்கள் நல்ல சப்ஜெக்ட்ல நடிப்பாங்க.. இல்லைன்னா பழையபடி பஞ்ச் டயலாக்.. தாதா கதைன்னு போயிடக்கூடிய அபாயம் உண்டு.


டிஸ்கி  - திடீர்னு விஜய்க்கு ஏன் ஆதரவா எழுதறீங்க?ன்னு சிலர் கேக்கறாங்க.ஒரு மனுஷன் தோல்வில இருக்கறப்ப மேலும் மேலும் வெந்த புண்ல வேல் பாய்ச்சக்கூடாது.2 ஹிட் குடுக்கட்டும்.. மீண்டும் மசாலா படத்துல பஞ்ச் டயலாக் பேசறப்ப கிண்டல் அடிப்போம்.

Thursday, January 13, 2011

மாயவலை -சினிமா விமர்சனம் 18+

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEip-TTR4hH1DcuhdBoLa2ujGDcEiJGh6CCIKamh9INqcaNXmMze0HcbHhr_k9YBiDsAQL3fgFyCKhkgB8Hpypxm5UlAVzIYfGA0V8d44IXZiXeo3KmRkeAuONMX9djF9pHxTwdoOCPcl2Y/s320/Swetha510w070709_050.jpg
பொதுவா தீபாவளி,பொங்கல டைம்ல ஒரு வாரத்துக்கு முன்னால தியேட்டர்ல புது தமிழ்ப்படம் எதுவும் ரிலீஸ் பண்ண மாட்டாங்க..அந்த கேப்ல இந்த மதிரி சீன் படத்துக்கு மவுசுதான்.டம்மிக்கட்சியான பா .ம. க எலக்‌ஷன் டைம்ல மட்டும் செல்வாக்கோட வலம் வர்ற மாதிரி இது.

இப்போ நமக்கு(!?) முன்னால இருக்கற 2 சாய்ஸ்.. மல்லிகா ஷெராவத் நடித்த மல்லிகா காமினி,கீர்த்தி சாவ்லா நடித்த மாய வலை படமும். சமுதாய சீர்திருத்தவாதிகளிடம் விசாரித்தபோது மல்லிகா காமினி படம் டைட்டில் புதுசு படம் பழசு கதை ஆச்சு.அது ஏற்கனவே ஹிந்தியில் வந்து சக்கை போடு போட்ட மர்டர் படம்தானாம்.

ஏற்கனவே கடலை போட்ட சூப்பர் ஃபிகரிடம் மீண்டும் கடலை போடுவதை விட இதுவரை கடலை போடாத மொக்கை ஃபிகரிடம் கடலை போடுவதே சாலச்சிறந்தது என்ற தமிழனின் கொள்கைப்படி கீர்த்தி சாவ்லா படத்துக்கே போலாம் என்று உறுதியான முடிவு எடுத்தேன்..

கொமராபாளையம் சரஸ்வதி தியேட்டர்... ஆஹா மங்களகரமான தியேட்டர்.சாமி படத்தை சாமி பெயர் உள்ள தியேட்டரிலேயே போட்டிருக்காங்க என மெச்சிக்கொண்டே தியேட்டருக்குள் போனேன்.

மொத்தமே ஒன்றரை மணி நேரப்படம்தான். ஆங்கிலப்படத்திலிருந்து சுடறவங்க எல்லாருமே பெரும்பாலும் ஆங்கிலப்படத்துக்கு நிகரா 8 ரீல்லயே படத்தை முடிச்சிடறாங்க..
http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/september/20.09.09/actress.jpg
படம் ஆரம்பிச்சு 24 நிமிஷம் ஹீரோயின் கீர்த்தி சாவ்லா ஸ்விம்மிங்க் பூல்-ல குளிக்கறாங்க குளிக்கறாங்க ,குளிச்சிட்டே இருக்காங்க...பாவம் ரொம்ப நாளா குளிக்கல போல. சிங்கிள் பீஸ் நீச்சல் டிரஸ்ல அவங்க குளிக்கறதை கேமராமேன் அவரால எவ்வளவு முடியுமோ அவ்வளவு கோணங்கள்ல க்ளோஷப்ஷாட், லாங்க் ஷாட் எல்லாம் வெச்சு எடு எடுன்னு எடுத்து தள்ளிட்டாரு.

அவருக்கு ஒரு ஃபோன் வருது..லவ்வர் போல. ஏதோ சொல்றான்.என்ன சொல்றான் அப்படிங்கறது சஸ்பென்ஸ்..( சீன் படத்துல சஸ்பென்ஸ் என்ன வேண்டிக்கிடக்கு?)படத்துல அஜால் குஜால் சீன் இருக்குமா இருக்காதாங்கற சஸ்பென்ஸையே நம்மளால தாங்க முடியல...இதுல டைரக்டர் வேற...கொல்றாரு.

ஹீரோயினிடம் ஹீரோ ஃபோன்ல பேசறப்போ ஹீரோயினின் ஃபோன் நெம்பரை எதுக்கோ சொல்றான்..வில்லன் அந்த நெம்பரை நோட் பண்ணி ஹீரோயினுக்கு ஃபோன் பண்றான்.. மேடம் ,கூரியர் ஆஃபீஸ்ல இருந்து பண்றேன்.உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு..உங்க வீட்டு லேண்ட் மார்க் சொல்லுங்க . உடனே பிளம் கேக்கு மாதிரி உடம்பும்,பேக்கு மாதிரி மூளையும் உள்ள ஹீரோயின்  (கேக்கு - பேக்கு பாருங்க வார்த்தை ஜாலத்தை - நானும் கவிஞன் தான் ) அட்ரஸை சொல்றா.
http://www.viduppu.com/photos/full/actresses/others/keerthi_chawla002.jpg
காலிங்க் பெல் அடிக்குது..வில்லன் மாஸ்க் போட்டு வெளில நிக்கறான், நம்ம ஹீரோயின் ஹீரோ தான் அவன் -னு தப்பா நினைக்கறா. என்ன தான் முகத்தை மூடி இருந்தாலும் ஆள் உயரம் ,பாடி ஷேப் தெரியாதா?என்ன கொடுமை சார் இது?வில்லன் ஹீரோயின் கூட கொஞ்சறான், குலாவறான் பாவம் அதுவரை ஹீரோயினுக்கு விபரமே தெரியல..

15 நிமிஷம் கழிச்சு வில்லன்தான் என்பதை எப்படியோ ஹீரோயின் கண்டு பிடிச்சுடறா.. உடனே ஓடறா ஓடறா ஓடிட்டே இருக்கா.. அந்த பங்களா ஃபுல்லா சுத்தி சுத்தி வர்றா.. நம்புனா நம்புங்க ,இந்த சேசிங்க் சீன் மட்டும் 40 நிமிஷம்.

அப்புறம் ஹீரோ வர்றார்.. ஃபைட் பண்றார். ஹீரோ ஜெயிக்கிறார். படம் முடிஞ்சுது. என்ன இப்படி பொசுக்குன்னு படத்தை முடிச்சுட்டாங்களே.. ஏதாவது பிட்டு போடுவாங்களா அப்படிங்கற நப்பாசைல சிலர் தியேட்டரை விட்டு கிளம்பவே இல்லை.

அப்புறம் மனசை தேத்திக்கிட்டு குனிஞ்ச தலை நிமிராம தியேட்டரை விட்டு வெளில எல்லாரும் கிளம்புனாங்க..அது ஏன் குனிஞ்ச தலை? யாராவது தெரிஞ்சவங்க பார்த்தா கேவலமா போயிடுமே...

வழக்கமா ஏதாவது வித்தியாசமா விமர்சனத்துல காண்பிக்கனும்னு நான் வசனத்தை கொஞ்சம் போடுவேன், ஞாபகம் இருக்கற வரை .அந்த மாதிரி போட வழியே இல்லை. படத்துல வசனமே மொத்தம் 7 வரிகள் தான்.

படத்துல பாரட்ட வேண்டிய அம்சம் ரெண்டே ரெண்டுதான். ஒண்ணு ஹீரோயின் கீர்த்தி சாவ்லாவின் அழகு.. ரெண்டு ஒளிப்பதிவு.. ராவணன் படத்துல ஐஸ்வர்யா ராய் குளிக்கறதை அழகா காட்டுன மாதிரி இதுல கீர்த்தி குளிக்கறதை ரசனையோட காட்டி இருக்காங்க...

படத்துல மொத்தம் 3 கேரக்டர்கள்தான். ஹீரோ, ஹீரோயின், வில்லன். ஹீரோயினுக்கு ரூ 5 லட்சம் சம்பளம் குடுத்திருப்பாங்க.ஹீரோவுக்கு நோ சம்பளம். வில்லன் கிட்டே இருந்து ரூ 2 லட்சம் வாங்கி இருப்பாங்க.. இந்த மாதிரி ஹீரோயினை ரேப் பண்ற வேலை இருந்தா வில்லன் கிட்டே காசு வாங்கிக்கறது கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் லோ பட்ஜெட் ஃபார்முலா..

சீன் இல்லாத சீன் படத்துக்கு விமர்சனம் எழுதி சமுதாயத்துக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துனதுக்காக  சிறந்த சமூக விழிப்புணர்வுக்காவலன் அப்படின்னு யாராவது பட்டம் குடுத்தா அதை கூச்சமே இல்லாம வாங்கிக்க தயாரா இருக்கேன்.  ( யாரப்பா அது கல்லை எடுக்கறது.. பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்.. வேணும்னா மைனஸ் ஓட்டு போட்டுக்குங்க.. அதை விட்டுட்டு அடிக்கற வேலை எல்லாம் வேணாம்.அப்புறம் அழுதுடுவேன்..அவ் அவ்)

டிஸ்கி 1 - சீன் படத்துக்கு விமர்சனம் எழுதி சமுதாயத்தை ஏன் கெடுக்கறே? அப்படின்னு சிலர் கேக்கறாங்க. நல்லா நோட் பண்ணிப்பாருங்க.. எழுதறது சீன் படமா இருந்தாலும் அதுல ஆபாச எழுத்து இருக்காது, சும்மா நக்கல் அடிச்சிருப்பேன் அவ்வளவுதான்.இதனால எத்தனை பேருக்கு பணம் மிச்சம் ஆகுது அதை நினைச்சுப்பாருங்க.

டிஸ்கி 2 - கடந்த 3 நாளா நல்ல கட்டுரைகளா போட்டியே .. ஏன் இப்போ இப்படி?அப்படின்னு கேக்கறவங்களுக்கு ..நான் கமல் ஃபார்முலாவை ஃபாலோ பண்றேன்.. அவர் மகாநதி மாதிரி நல்ல படம் குடுப்பாரு.. அது அவர் எதிர்பார்த்த வெற்றியை குடுக்காத பட்சத்துல கோபமா சிங்கார வேலன்,மவராசன் மாதிரி மசாலாக்குப்பை எடுத்து கோபத்தை காண்பிப்பாரு.

Tuesday, December 28, 2010

காந்திபுரம் - சினிமா விமர்சனம்

அர்ஜூன் - கவுண்டமணி அண்ணே ,வாங்க நல்லாருக்கீங்களா?ரொம்ப நாள் ஆச்சு,உங்களைப்பார்த்து..?

கவுண்டமணி - வல்லக்கோட்டை விமர்சனத்துல வலிக்க வலிக்க வாங்குனது மறந்துடுச்சா?

அர்ஜூன் - அண்ணனுக்கு எப்பவும் தமாஷ்தான்.

கவுண்டமணி -படுவா,பிச்சுப்புடுவேன் பிச்சு... எது தமாஷூ?சீரியசா பேசிட்டு இருக்கறப்ப காமெடி பண்ணிட்டு...அது இருக்கட்டும் ரஜினி நடிச்ச பாட்ஷா படத்தையும்,விஜய் நடிச்ச கில்லி படத்தையும் மிக்ஸ் பண்ணனும்னு ஐடியா குடுத்த மகராசன் யாரு?

அர்ஜூன் - வேற யாரு. நம்ம டைரக்டர்தான்.

கவுண்டமணி -அடங்கொக்கா மக்கா.அந்தாளு வேலையா இது?ஆனா எனக்கு ஒரே ஒரு விஷயம் இந்தப்படத்துல பிடிச்சிருந்தது...

அர்ஜூன் - என்னண்ணே,என் நடிப்பா?

கவுண்டமணி -நாசமாப்போச்சு... இந்தப்படத்துல நீ ஹீரோ இல்ல, கெஸ்ட்  ரோல்தான்.ஆனா போஸ்டர்ல நீதான் ஹீரோங்கற மாதிரி ஒரு பில்டப் எதுக்கு?

அர்ஜூன் - எல்லாம் மார்க்கெட்டிங்க் டெக்னிக்தான் அண்ணே.
rrkk-review.jpg (494×233)
கவுண்டமணி -இது தமிழ்ப்படம் கிடையாது,தெலுங்கு டப்பிங்க் படம்.அதுவும் ஜூனியர் என் டி ஆர் ஹீரோவா நடிச்ச படம்.எதுக்கு இப்படி ரசிகர்களை ஏமாத்தனும்...?

அர்ஜூன் - சரி,விடுங்கண்ணே... படத்தோட கதையை பத்தி கொஞ்சம் சொல்லுங்க.

கவுண்டமணி -ஆமா ,இவரு பெரிய இதிகாசம் படைச்சுட்டாரு..அப்படியே நீட்டி முழக்க... அந்த கருமத்தை என் வாயால சொல்லனுமா? நீயே சொல்லித்தொலை...

அர்ஜூன் - மும்பைல தாதாவை தட்டிக்கேட்கும் நான் ஒரு கட்டத்துல தாதா ஆகிடறேன்.அங்கே நடந்த ஆக்சிடெண்ட்ல நான் செத்துப்போன மாதிரி சீன் கிரியேட் பண்ணி தமிழ்நாடு வந்துடறேன்,இங்கே எனக்கு 2 தங்கச்சிங்க,2 பேரும் லவ் பண்றாங்க. ( 2 தனி தனி ஆளுங்களைத்தான் )அக்கா தங்கை 2 பேரும் அண்ணன் தம்பியை முறையே லவ் பண்றாங்க..அதாவது ஒரே குடும்பத்துல சம்பந்தம் வைச்சுக்கறாங்க.அவங்க எப்படி ஒண்ணு சேர்றாங்க அப்படிங்கறதுதான் கதை... ஹலோ  ஹலோ என்னண்ணே அதுக்குள்ள தூங்கிட்டீங்க..?

கவுண்டமணி -இந்த மாதிரி அரதப்பழசான கதையை சொன்னா ஆடியன்ஸ் தூங்காம என்னப்பா பண்ணுவாங்க.? .நீ பேசாம வேலண்ட்ரி ரிட்டயர்மெண்ட் வாங்கிட்டு ஓடிப்போயிடு,

அர்ஜூன் - அதை விடுங்க என்னோட அறிமுகக்காட்சி எப்படிண்ணே இருந்துச்சு?

கவுண்டமணி -வழக்கம்போல ரொம்ப கேவலமா இருந்தது..ஜீப்ல உக்காந்துட்டு இருக்கற நீ அப்படியே ராக்கெட் மாதிரி மேலே எம்பி அந்தரத்துல பறக்கறே...புவி ஈர்ப்பு விசைங்கறது ஒண்ணு இருக்கு, மறந்துட வேணாம்.

அர்ஜூன் - என்னோட பாடி லேங்குவேஜ் பற்றி கொஞ்சம் சொல்லுங்க..


கவுண்டமணி -குளத்துல இருந்து எந்திரிச்சு வர்ற சீன்ல எதுக்கு நெஞ்சை நிமித்திட்டு வர்றே...சாதாரணமா நீ நடக்கவே மாட்டியா?மனசுக்குள்ள பெரிய அர்னால்டுன்னு நினப்பா?

Rama-Rama-Krishna-Krishna-Movie-Poster-Designs-10.jpg (433×650)
சி பி - அண்ணே ,வணக்கம்ணே....

கவுண்டமணி -வந்துட்டாண்டா வீங்குன வாயன்,டேய் பரட்டைத்தலையா?நீ ஹாஸ்பிடல்ல பொறந்தியா?சினிமா தியேட்டர்ல பொறந்தியா..ஒரு படத்தை விட மாட்டே போல..இந்த குப்பைப்படத்துக்கு விமர்சனம் போடலைன்னு யார் அழுதா..?

சி பி - சொந்தமா சரக்கு இருந்தா நான் ஏண்ணே இப்படி கண்ட கண்ட படத்துக்கு எல்லாம் விமர்சனம் போடறேன்?வந்தது வந்தேன்,என் ஜோலிய முடிச்சுட்டு போயிடறேன் அண்ணே...

கவுண்டமணி -அதான் ஏற்கனவே ஜோலியை முடிச்சுட்டியே ,அப்புறம் என்ன.?

சி பி - அதில்லைண்ணே... இந்தப்படத்துல வர்ற வசனங்கள் பற்றி....

கவுண்டமணி - அதெல்லாம் வசனம் இல்ல.. விசனம்....

1. கட்டிப்பிடிக்காதடி ... என் கற்பு போயிடும்.

என்னைக்கு இருந்தாலும் போகக்கூடிய கற்புதானே...( ஆஹா பொண்ணுங்கன்னா இப்படித்தான் முற்போக்குவாதியா இருக்கனும்,)

2.ஏதாவது நடந்துடுமோன்னு ஆசையை அடக்கிட்டு வாழறது ஒரு வாழ்க்கையா? ( புதிய தத்துவம் 19,879)

3. அல்வா அலமேலு..இப்போ பால் (BALL) போடறேன்.. உன் விக்கெட் விழப்போகுது. ( டபுள் மீனிங்காம்,சகிக்கலை)

4. பெரியவங்களோட பார்வைல லவ்ங்கறது ஆகாசத்துல பறக்கற ஏரோப்ளேன் மாதிரி..சின்னதாத்தான் தெரியும்..லேண்டிங் ஆகறப்பதான் அதன் மகத்துவம் தெரியும். ( கிழிஞ்சுது கிருஷ்ணகிரி)

5. நீ வைகைல முக்கறவன்னா நான் மும்பைல முக்கறவன் ( வில்லனுக்கும் பஞ்ச் டயலாக்கா..?)

6. ஆண்டவனை எல்லாரும் கோயில்ல வைப்பாங்க,நான் ஜெயில்ல வெச்சிருக்கேன்... ( செண்ட்டிமெண்ட் செம்மலு..)

7. நீங்க அவங்களைப்போய் வரவேற்கலைன்னா உங்க பிரெஸ்டீஜ் போயிடும்,வரவேற்றா உங்க மரியாதை போயிடும்.நல்லா மாட்டிக்கிட்டீங்க.. ( ஆமா டிக்கட் கவுண்ட்டர்லயே தெரிஞ்சுடுச்சு)

பிரெஸ்டீஜ்னா என்ன? மரியாதைன்னா என்ன? # டவுட்டு

கவுண்டமணி - அப்பாடா முடிச்சுட்டாண்டா///,,, அப்படியே திரும்பி பார்க்காம ஓடிப்போயிடு நாயே...

அர்ஜூன் - அண்ணே, படத்துல நீங்க ரசிச்ச அம்சம் ஏதாவது சொல்லுங்க...

கவுண்டமணி -நீ கோயில்ல இருந்து வெளில வர்றப்ப ஷூ காலோட வர்றியே,,, அது ஏன்?ஏற்கனவே குஷ்பூ செருப்பு போட்டு மாட்டுனது பத்தாதா?

அர்ஜூன் - அடடா சாரிண்ணே... அது டைரக்டர் ஃபால்ட்.

கவுண்டமணி -உன்னை கமிட் பண்ணுனது கூட அந்த ஆளோட ஃபால்ட்தான்.

அர்ஜூன் - என்னோட வசனம் பேசற ஸ்டைல்ல ஒரு மாற்றம் கொண்டு வந்திருக்கேன்,பாத்தீங்களா?

கவுண்டமணி -ஆமா.. இவரு பெரிய புரொனொன்சேஷன் புரொஃபசரு,, ((PRONOUNSATION PROFESSOR)அப்படியே வசனத்தை வடிகட்டறாரு.. “ பிரியா கூட மருதமலைக்கு போயிட்டு வான்னு சிங்கிள் லைன்ல சொல்ல வேண்டிய டயலாக்கை எதுக்கு இழுத்து இழுத்து 20 நிமிஷம் சொல்றே..? மனசுக்குள்ள பெரிய கமல்ஹாசன்னு  நினைப்பா?

அர்ஜூன் - இந்தப்படம் எத்தனை நாள் ஓடும்?

கவுண்டமணி -எத்தனை காட்சிகள் ஓடும்னு கேளு ,10 ஷோ ஓட்டிடுவாங்கன்னு நினைக்கறேன்.

அர்ஜூன் - ஏ செண்ட்டர்ல சொல்றீங்களா?

கவுண்டமணி -ஓ அந்த ஆசை வேற இருக்கா? சி செண்ட்டர்ல மட்டும்தான் ரிலீசே ஆகி இருக்கு.

அர்ஜூன் - ஆனந்த விகடன் விமர்சனத்துல எவ்வளவு மார்க் போடுவாங்க?

கவுண்டமணி -உனக்கு பேராசை ஜாஸ்தி.. அவங்க எப்போ டப்பிங்க் படத்துக்கு எல்லாம் விமர்சனம் போட்டிருக்காங்க?இண்ட்டர்நெட்லயே யாரும் கண்டுக்கமாட்டாங்க..நீ வேணா பாரு. இந்தப்பட விமர்சனத்தை அட்ரா சக்க மாதிரி ஒரே ஒரு மொக்கை பிளாக்ல மட்டும்தான் போடுவாங்க.