Showing posts with label CHENNAI. Show all posts
Showing posts with label CHENNAI. Show all posts

Saturday, November 21, 2015

வெள்ளத்தில் கார்/பைக் சிக்கினால்...

‘‘மழைத் தண்ணியில வண்டி ஓட்டுறது செமையா இருக்கு மச்சான்...’’ என்று புளகாங்கிதம் அடைபவரா நீங்கள்? அப்படியெனில், இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான்.
‘‘ஏரியா இருந்ததெல்லாம் ஏரியாவா மாறி, மறுபடியும் ஏரியா மாறிடுச்சு!’’ என்று ஃபேஸ்புக், வாட்ஸ் அப்களில் கவிதை எழுதுவதைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு, இதைக் கொஞ்சம் படியுங்கள். கார்/பைக் விஷயங்களில் மழை வெள்ளத்திடம் ஈரத்தை எதிர்பார்க்க முடியாது. சிக்கிவிட்ட உங்கள் வாகனத்தை வெள்ளத்திடம் இருந்து காப்பாற்ற... மழை நேரங்களில் கவனமாக வாகனத்தைச் செலுத்த இதோ சில டிப்ஸ்...
பைக் ஓட்டிகளுக்கு...

1. வாகனங்களுக்கு முதல் சிம்ம சொப்பனமே தண்ணீர்தான். அதுவும் சைலன்ஸருக்கும் தண்ணீருக்கும் சுத்தமாக ஆகாது. எனவே, சைலன்ஸர் மூழ்கும் அளவு உள்ள நீர்ப் பகுதிகளில், ‘‘கொஞ்ச தூரம்தானே.. அப்படியே ஓட்டிடலாம்’’ என்று நினைத்தீர்கள் என்றால், இன்ஜினுக்கு கண்டம். அதன் காரணமாகவே இப்போது சைலன்ஸர் உயரமாக உள்ள பைக்குகள் வர ஆரம்பித்துவிட்டன. லேட்டஸ்ட் யமஹா, ஹோண்டா, சுஸூகி பைக்குகளுக்கு எல்லாமே இப்போது சைலன்ஸர் உயரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிதாக பைக் வாங்க இருக்கிறீர்கள் என்றால், அதைக்கூட நீங்கள் பரிசீலிக்கலாம்.

2. மழை வெள்ளத்தில் பார்க்கிங் செய்யப்பட்ட கார்/பைக்குகளை, வெள்ளம் வடிந்தபிறகு, ஸ்டார்ட் செய்யவே கூடாது. முடிந்தால், பெட்ரோலையும் காலி செய்வது சாலச் சிறந்தது. சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு செல்வதுதான் பெஸ்ட்.

3. மழை நேரங்களில் மட்டுமல்ல; வெயில் நேரங்களிலும் ஸ்பார்க் ப்ளக்கைக் கழற்றிச் சுத்தம் செய்துவிட்டு பொருத்துவது நல்ல பலன் தரும். ஸ்பார்க் ப்ளக் எக்ஸ்ட்ரா ஒன்றை எப்போதுமே டூல் கிட்டில் வைத்துக்கொள்வது இன்னும் பெஸ்ட். பைக்குகளின் ஸ்பார்க் ப்ளக் விலை 90 முதல் 100 ரூபாய்தான்.

5. செயின் கார்டு உள்ள பைக்குகளில் பிரச்னை இல்லை. நேக்கட் பைக்குகளில் செயின் ஸ்பிராக்கெட்டுகள் ‘கார்டு’ இல்லாமல், ஓப்பனாகவே இருக்கும். இவை ஓரளவு பிசுபிசுப்புத்தன்மையுடன் இருந்தாலும், மழை நேரங்களில் மெக்கானிக்குகள் மூலம் ‘செயின்  ஸ்ப்ரே’ செய்து கொள்வது நல்லது.

6. மழை நேரங்களில் பெட்ரோல் டேங்க்கில் மிகவும் கவனம் தேவை. என்னதான் டேங்க் மூடி நன்றாக கவர் செய்யப்பட்டிருந்தாலும், ஓரம் வழியாக சில சொட்டு நீர்த்துளிகள் பெட்ரோல் டேங்கினுள் கலக்க வாய்ப்புள்ளது. பெட்ரோலில் தண்ணீர் கலந்து விட்டால், ஸ்பார்க் ஏற்படுவதில் பிரச்னை ஏற்பட்டு... வழியில் ஆஃப் ஆகி... (இன்ஜின் ஸ்டாப்) வேறென்ன..? ஸ்டார்ட்டிங் டிரபுள்தான்!

கார் ஓட்டிகளுக்கு...

1. பைக்கைவிட, வெள்ளத்தின் பாதிப்பு கார்களுக்குத்தான் அதிகம். இதிலும் சைலன்ஸர்/ஏர் இன்டேக்குக்குள் தண்ணீர் புகாத வரை எல்லாமே ஸ்மூத்தான். வேறு வழியில்லை என்றால், முதல் கியரில் 1,200 முதல் 1,500 ஆர்பிஎம்-முக்குள் குறைவான வேகத்திலேயே மெதுவாகச் சென்று வெளியேறுங்கள்.

2. அதிக தண்ணீருக்குள் இருக்கும்போது கார் ஆஃப் ஆகிவிட்டால், காரை ஸ்டார்ட் செய்யாதீர்கள். இது கனெக்டிங் ராடுகளில் பிரச்னை ஏற்படுத்தி, மிகப் பெரிய செலவுக்குக் கைகாட்டி விடும். தள்ளிச் செல்வதுதான் பெஸ்ட்.

3. வெள்ள நேரங்களில் எங்கெங்கு, எத்தனை அடி பள்ளம் ஏற்படும் என்பது மாநகராட்சியினருக்குக்கூடத் தெரியாது. கார்களில் சென்று சின்னப் பள்ளங்களில் விழுந்தால்கூட, சேதாரம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். வீல்கள் அடிவாங்குவதோடு இன்ஜின் சம்ப், சேஸி, பம்பர் பகுதிகள் நிச்சயம் அடி வாங்கும்.  

4. பிரீமியம் கார்களில் பிரச்னை இல்லை; ஹேட்ச்பேக் கார்களில் முன் பக்க விண்ட்ஷீல்டில் என்னதான் வைப்பர் பயன்படுத்தினாலும், மழை நேரங்களில் விசிபிளிட்டி அவ்வளவாக இருக்காது. வெளியே நிறுத்தப்பட்ட காரை எடுக்கும்போது, உடனே வைப்பர் பயன்படுத்துவதால், விண்ட் ஷீல்டுகளில் ஸ்க்ராட்ச்கள் ஏற்படுவதுடன், மழை நேரங்களில் இது மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே, டிஷ்யூ பேப்பர், மைக்ரோ ஃபைபர் துணி அல்லது நல்ல வளவளப்பான நியூஸ் பேப்பரைக் கொண்டு அழுந்தத் துடைத்துவிட்டு வைப்பர் பயன்படுத்துவது பெஸ்ட்.

5. மழை நீர், கார்களில் பெரும்பான்மையாக கை வைப்பது எலெக்ட்ரானிக் பாகங்களில்தான். எனவே, ஜன்னலை மூடிவிட்டு, ஏ.சியை ஆன் செய்யாமல் பயணிப்பதுகூட நல்லதுதான். 

6. எலெக்ட்ரானிக் விஷயங்கள் எவ்வளவு ஆபத்து என்பதற்கு ஓர் உதாரணம்: சென்னை டிராஃபிக்கில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஒருவர், காரை ஐடிலிங்கில் விட்டு, ஏ.சியை ஆன் செய்துவிட்டுத் தூங்க ஆரம்பித்து விட்டார். எக்ஸாஸ்ட் வழியாக வெளியேற முடியாத காற்று, உள்ளுக்குள்ளேயே சுழன்று தீப்பிழம்பை ஏற்படுத்த, கார் தீப்பிடித்து உயிரை இழந்திருக்கிறார் ஓர் அப்பாவி. 

7. பவர் விண்டோஸ் பட்டனும் எலெக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இதிலும் கவனம் தேவை. கார் முழுவதும் மூழ்கிய நிலையில் உள்ளே மாட்டிக் கொண்டால், பின் பக்க விண்ட்ஷீல்டை உடைத்து வெளியே வருவது நல்லது. கண்ணாடியை விட, உயிர் முக்கியம் இல்லையா?

8. மழையில் நிறுத்தப்பட்ட காரை, மறுநாள் ஸ்டார்ட் செய்து உடனே ஆக்ஸிலரேட்டரை மிதித்து, அவசர அவசரமாகக் கிளம்புவதைத் தவிருங்கள். எப்போதுமே காரை ஸ்டார்ட் செய்துவிட்டு, ஐடிலிங்கில் சிறிதுநேரம் வைத்திருந்தபிறகு கிளம்புங்கள். டர்போ சார்ஜர், பெட்ரோல் மிக்ஸிங் என்று எல்லாமே அப்போதுதான் சீராக நடக்கும்.

9. மெக்கானிக் பாகங்களுக்கு ஏதும் பிரச்னை வராதா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஸ்டீயரிங், கியர்பாக்ஸ், கிளட்ச், பிரேக், ஹேண்ட்பிரேக் போன்றவை ஜாம் ஆக வாய்ப்புண்டு. எனவே, கிளம்பும் முன் இவற்றை நன்றாக பரிசோதித்து விட்டுக் கிளம்புவது நல்லது.

10. ரொம்ப முக்கியமான விஷயம் - ஈரமான சாலைகளில் வேகம் வேண்டாமே!

- தமிழ் தென்றல்

thanks vikatan

மழை... யார் செய்த பிழை?

ஒரு ரியல் (எஸ்டேட்) எச்சரிக்கை!சென்னைக்கு அருகே... சகல சகதி(வசதி)களும் நிரம்பிய குடியிருப்புகள்!

வெள்ளத்தில் மிதக்கும் சென்னையில் கால் டாக்ஸி நிறுவனங்கள் இப்போது படகு விடுகிறார்கள் என்ற மீம்ஸ் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் வைரலாகப் பரவியது. கிண்டல் செய்யப்பட்ட கால்டாக்ஸி நிறுவனம் அதனை உண்மையாக்கி இலவசமாகப் படகுகளைவிட்டு, வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டதுதான் இத்தனை பாதிப்பிலும் பாராட்ட வேண்டிய அம்சம்.

சொகுசு பங்களாக்கள்... சோக பங்களாக்கள்!

சென்னையில் அனைத்து வசதிகளும் கொண்ட, அமைதியாக வாழ ஏற்ற இடம் என்று தீபாவளிக்கு முன்பு வரை ரியல் எஸ்டேட் மார்க்கெட்டிங்கில் உச்சத்தில் இருந்த வேளச்சேரியில், படகுப் போக்குவரத்து விடும் நிலை ஏற்பட்டது. வெனிஸ் நகரைப்போல வீடுகளை ஒட்டிப் படகுகள் விடும் அளவுக்கு சென்னை மாநகர், புறநகர் பகுதிகளை மாமழை புரட்டிப் போட்டுவிட்டது.

வேளச்சேரி ஏரியைச் சுற்றியுள்ள குடிசைப் பகுதிகள், பேருந்து நிலையம் அமைந்துள்ள விஜயநகரம், வேளச்சேரியில் இருந்து பெருங்குடிக்குச் செல்லும் நூறடி சாலை என அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளநீர் ஆறாக ஓடியது. முக்கியமான சாலைகளில் இந்த நிலைமை என்றால், குடியிருப்புகளில் மூன்றடி உயரத்துக்கு மேலே தண்ணீர் புகுந்துவிட்டது. வேளச்சேரியில் வீடுகளைச் சூழ்ந்த வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட சுமார் 5,000 பேர் மீட்கப்பட்டு மேடான பகுதிகளில் இருந்த பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர்.


மேல்தட்டு மக்கள் வசிக்கும் பகுதியாகக் கருதப்பட்ட மேற்கு தாம்பரம்  சி.டி.ஓ. காலனியில் ‘வில்லா’ என்றழைக்கப்படும் சொகுசு வீடுகள் அதிகம். வெளி ஆட்கள் யாரும் நுழைய முடியாத அந்த வீடுகளுக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அழையா விருந்தாளியாக வெள்ளநீர் புகுந்தது. அனைத்து அடுக்குமாடிகளிலும் தண்ணீர் புகுந்துவிட்டதால் கீழ்த்தளத்தில் இருந்தவர்கள் மேல்தளத்தில் தஞ்சம் அடைந்தனர். மின்வசதி, உணவு, குடிநீர் இன்றித் தவித்தனர். சிலர் நகருக்குள் உள்ள தங்களது உறவினர்கள் வீடுகளுக்குத் தற்காலிகமாக இடம்பெயர்ந்தனர்.

கனமழை கடந்த திங்கள்கிழமை ஓய்ந்தது. மழை ஓய்ந்தாலும் மக்களின் துயரத்துக்கு முடிவில்லை. பல ஆண்டுகளுக்குப் பின்னர் முழுக் கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் அடையாறு ஆற்றில் திறந்துவிடப்பட்டது. எனவே, ஏரி மற்றும் அடையாறு ஆற்றின் கரைகளின் அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கப்பட்டனர்.

ஹெலிகாப்டர் உதவி!

அடுத்தடுத்து தண்ணீர் திறக்கும் அளவு அதிகரிக்கப்பட்டதால் குடியிருப்புகளுக்கு உள்ளே செம்பரம்பாக்கம் தண்ணீர் புகுந்தது. இதனால், சென்னையின் புறநகர் பகுதிகளான மேற்கு தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், சங்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆறடி உயரத்துக்கு வெள்ளநீர் சூழ்ந்தது. மணப்பாக்கத்தில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் குடியிருப்பிலும் வெள்ளம் புகுந்தது. வெள்ள நீர் எந்த அதிகாரிகளுக்கும் கட்டுப்படவில்லை. புறநகர்களில் உள்ள பல ஏரிகளுக்கு முறையான வெளியேற்றுக் கால்வாய்கள் இல்லாத நிலையில், சிலர் அவசரப்பட்டு ஆங்காங்கே ஏரிக்கரைகளை உடைத்ததால் இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டி ருப்பதாகக் கூறப்படுகிறது.

பேரிடர் மீட்புத் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை ஆகியவற்றின் சார்பாக 130 படகுகளைக் கொண்டு குடியிருப்புகளில் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டனர். பல இடங்களில் மீட்புப் படையினர் செல்ல முடியாத அளவுக்குத் தண்ணீர் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அதுபோன்ற பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தில் சிக்கியோர் மீட்கப் பட்டனர். ஹெலிகாப்டர் மூலம் உணவு மற்றும் குடிநீர் அளிக்கப்பட்டன.


குழந்தைக்குப் பால் வாங்க வழியில்லை!

வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களிடம் பேசினோம். முடிச்சூர் சோழன் தெருவைச் சேர்ந்த சந்திரசேகர், “ஞாயிற்றுக்கிழமை எங்கள் வீதியில் குறைந்த அளவே தண்ணீர் வந்தது. ஆனால், தண்ணீர் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இரவில் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் அதிகரிக்கத் தொடங்கி வீதியில் நின்ற தண்ணீர் வீட்டுக்குள் நுழைய ஆரம்பித்தது. முக்கியமான பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு மேல் மாடி வீடுகளில் இருந்தவர்களிடம் அடைக்கலம் புகுந்தோம். கீழ்த்தளத்தில் இருந்த வீடுகளில் இரவில் முழுவதும் தண்ணீர் நிரம்பிவிட்டது.

என் குழந்தை பசியால் அழுதபோது பால் வாங்கக்கூட முடியாத நிலை. தண்ணீரைக் கொடுத்து சமாளிக்க வேண்டிய பரிதாப நிலையில் தவித்தோம். படகு வந்து எங்களை மீட்ட பிறகுதான் எங்களுக்கு உயிரே வந்தது” என்றார்.

மாத்திரைகள், சான்றிதழ்கள் நாசமாகின!

‘‘நள்ளிரவுதான் அதிக அளவில் தண்ணீர் வரத் தொடங்கியது. கால் மணி நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்தது. எந்தப் பொருளையும் எடுக்க முடியவில்லை. எனக்கு ரத்த அழுத்தம் இருக்கிறது. அதற்கான மாத்திரையை எடுக்க டிராவை திறந்தேன். அதிலும் தண்ணீர் போய்விட்டது. பீரோவிலும் தண்ணீர் புகுந்துவிட்டது. என் குழந்தைகளின் சான்றிதழ்களும் பாழாகிவிட்டன. போட்டது போட்டபடி வீட்டின் மாடிக்குப் போய்விட்டேன். இரண்டு நாட்கள் கழித்துத்தான் கீழ்த்தளத்துக்கு இறங்கி வந்தேன்” என்றார் கஸ்தூரி.

சி.டி.ஓ. காலனியைச் சேர்ந்த பென்னி, “செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டால், அது போரூர் ஏரிக்குத்தான் செல்ல வேண்டும். ஆனால், அந்தக் கால்வாய் சீர் செய்யபடாததால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வீணாகப்போய்க் கொண்டு இருக்கும் தண்ணீர் முழுவதும் போரூர் ஏரிக்குப் போய் இருந்தால் சென்னையில் தண்ணீர் பஞ்சமே வராது. அதேபோல் பள்ளிக்கரணை ஏரியைத் திறந்தபோது கால்வாய் வழியே செல்ல வேண்டிய தண்ணீர், அது தூர்வாரப்படாததால், வீடுகளுக்குள் புகுந்தது. நீர்நிலைகள் வீட்டுமனைகளாக மாற்றி விற்கப்பட்டுவிட்டன. இதற்கு அரசு அனுமதி கொடுத்து விட்டு இப்போது நிவாரணம் வழங்குவது எதற்காக? பல வீடுகளில் கழுத்தளவு தண்ணீர் நின்றது. டி.வி., வி.சி.ஆர்., வாஷிங்மெஷின், கார், பைக், துணிமணிகள், புத்தகங்கள் போன்ற விலையுயர்ந்த பொருட்கள் சேதம் அடைந்துவிட்டன” என்றார்.



கைக்குழந்தைகள்... கர்ப்பிணிகள்!

மழை, வெள்ளத்தில் சிக்கித் தவித்த நோயாளிகளையும், குழந்தைகளையும் மீட்பதே சிரமமாக இருந்துள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராகுல் என்பவர், ‘‘நாங்கள் சி.டி.ஓ. காலனியில் மீட்புப் பணியில் ஈடுபட்டோம். பல்வேறு சிரமங்களில் தத்தளித்த பலரை மீட்டோம். மூன்று மாதக் குழந்தையைப் படகில் ஏற்ற முடியாமல் தோளில் தூக்கியவாறே கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தோம். சிறுநீரகப் பிரச்னையில் தவித்த வயதான முதியவர் ஒருவரை, ஸ்ட்ரெச்சர் கொண்டு வந்து ‘யூரினரி’ பையோடு அவரை படகில் மீட்டோம். வெள்ள நீரில் சிக்கிக்கொண்ட கர்ப்பிணிப் பெண்களை மீட்டோம்’’ என்றார்.

ஆடுகள், மாடுகள், செல்லப்பிராணிகள்!

மனிதர்கள் மட்டுமின்றி, மாடுகள், வீடுகளில் வளர்க்கப்பட்ட செல்லப் பிராணிகளும் ஆறடி தண்ணீரில் சிக்கித் தவித்தன. பல இ்டங்களில் தெருக்களில் திரிந்துகொண்டிருந்த பன்றிகள் இறந்துவிட்டதால், துர்நாற்றம் வீசியது. வெள்ளத்தில் தத்தளித்த மாடுகளை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். மாடுகளுக்குக் கால்நடை மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகிறது. பல  இடங்களில் மீட்புக் குழு வரும்வரை காத்திருக்காமல் அந்தப் பகுதியைச் சேர்ந்த நீச்சல் தெரிந்தவர்கள் டியூப்களைக்கொண்டு மக்களை மீட்டுள்ளனர். 


கடலோரக் காவல் படை ஏ.டி.ஜி.பி சைலேந்திர பாபு, தனது கமாண்டோ சகாக்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டார். “இதுவரை சுமார் 800 பேரை மீட்டுள்ளோம். நவீன ஃபைபர் படகுகளைக் கொண்டு மீட்புப் பணியில் ஈடுபட்டோம்.  முடிச்சூரில் வீட்டுக்குள் தண்ணீர் நிரம்பிய அதிர்ச்சியில் ஒருவருக்கு நெஞ்சுவலி வந்துவிட்டது. அவருக்கு முதல் உதவிசெய்து, பத்திரமாக மீட்டோம். நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் தண்ணீரில் சிக்கிக்கொண்டார். அவரையும் பத்திரமாக மீட்டோம். வீதிகளில் தண்ணீர் நிரம்பிய நிலையில் ஆள் அரவமற்ற வீடுகளில், ஆடுகள் இரண்டாவது மாடியில் கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டிருந்தன. அவற்றையும் மீ்ட்டு வந்தோம்.

முடிச்சூரில் பசுவும் கன்றும் மழை நீரில் சிக்கிக்கொண்டன. தாய்ப் பசுவுக்குக் கழுத்தளவு தண்ணீர். கன்றோ கிட்டத்தட்ட நீரில் மூழ்கிவிட்டது. முதலில் கன்றுக்குட்டியை மீட்டுக் கரை சேர்த்தனர். பிறகு, தாய்ப்பசுவை மீட்டுக் கொண்டுவந்தனர். கரை சேர்ந்த பசுவும் கன்றும் உயிர் மீண்ட மகிழ்ச்சியில் ஒன்றை ஒன்று நக்கிக்கொடுத்து பாசத்தைப் பொழிந்த காட்சி காண்போரை உருகவைத்தது’’ என்றார் சைலேந்திர பாபு.

ஆனந்த அனுபவத்தைத் தர வேண்டிய மழைக்காலம், சென்னை மக்களுக்குத் துயரத்தைத் தந்துள்ளது.

- அ.சையது அபுதாஹிர்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ், தி.ஹரிஹரன்


இயற்கையை வெல்ல முடியாது!

ஏரிகளை ஆக்கிரமித்தால் என்ன நேரும் என்பதைச் சொல்லாமல் உணர்த்திவிட்டது சென்னையைப் புரட்டிப்போட்ட கனமழை. நீர்நிலைகளாக இருந்த ஏரிகளையும் கால்வாய்களையும் மனைகளாக மாற்றி விற்பனை செய்ததன் விளைவுதான், இன்று சென்னையின் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பதற்குக் காரணம். மனிதர்கள் என்றைக்குமே இயற்கையை எதிர்க்கவோ, வெல்லவோ முடியாது என்பதற்கு சென்னையின் மழை, வெள்ள பாதிப்புகள் ஓர் உதாரணம்.

வெள்ள செய்தி!

சென்னையின் புறநகரில் ஞாயிற்றுக்கிழமை முதல் வீடுகளில் தண்ணீர் சூழந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தபோது, அரசு உடனடியாக  100-க்கும் மேற்பட்ட படகுகளைக் கொண்டு வெள்ளத்தில் சிக்கிய மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டது. இந்தப் பணியில் தமிழகத்தில் கால்டாக்ஸி சேவையில் இருக்கும் ‘ஓலா’ நிறுவனமும் களத்தில் இறங்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஃபைபர் படகுகளைத் தண்ணீர் தேங்கிய வேளச்சேரி, நந்தம்பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புப் படையினரோடு இணைந்து ஈடுபட்டனர். இவர்கள் படகில் இரண்டு நீச்சல் தெரிந்த மீனவர்கள் படகோட்டிகளாக இருந்துள்ளனர். ஒன்பது பேர் உட்காரும் அளவிலான படகுகளைப் பயன்படுத்தியுள்ளனர். சுமார் 10-க்கும் மேற்பட்ட படகுகளை ஓலா நிறுவனம் மீட்புப் பணிக்குப் பயன்படுத்தியுள்ளது. கால்டாக்ஸிக்குக் கட்டணம் வசூல் செய்யும் ஓலா நிறுவனம், இந்த மீட்புப் படகுகளை இலவச பயன்பாட்டில் இயக்கியது. தண்ணீர் தேங்கி இருக்கும் நிலையைப் பொறுத்து படகுப் போக்குவரத்து இயங்கும் என்று ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுவா மனிதநேயம்?
சி.டி.ஓ. காலனியில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்கள் இருந்தனர். தண்ணீர் அதிகரிக்கத் தொடங்கியதும். தொண்டு நிறுவன நிர்வாகிகள், குழந்தைகளை மட்டும் அழைத்துக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டனர். மூதாட்டிகள் 25 பேரை அங்கேயே விட்டுச் சென்றுவிட்டனர். தொண்டு நிறுவனத்தின் மாடிக்குச் சென்ற மூதாட்டிகள் காப்பாற்ற உதவி கேட்டு இரவில் கூக்குரலிட்டுள்ளனர். காலையில்தான் அவர்களின் கூக்குரல் கேட்டு அருகில் வசித்தவர்கள் மீட்புக் குழுவுக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்தப் பகுதியில் வசிக்கும் சரண்யா “திங்கள் கிழமை படகு மூலம் எங்களை மீட்டனர். அப்போதுதான் மூதாட்டிகள் மீட்கப்பட்டனர். பலர் நடக்க முடியாத நிலையில் இருந்ததால் மீட்புக் குழுவினர் அவர்களைத் தூக்கி வந்து படகில் ஏற்றினர். 25 மூதாட்டிகளையும்  யாரிடம் ஒப்படைப்பது என்ற கேள்வி எழுந்தது. தொண்டு நிறுவனத்தைத் தொடர்புகொண்டதற்கு அவர்கள் தரப்பில் சாதகமான பதில் வரவில்லை என்பதுதான் வேதனை” என்றார் துயரத்துடன்.

ஹெலிகாப்டர் பயன்பாடு!

வெள்ளத்தில் சிக்கிய மக்கள் தங்கள் வீடுகளின் மாடியிலேயே முடங்கியதால் அவர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் ஹெலிகாப்டர்கள் மூலம் இரண்டு நாட்கள் வழங்கப்பட்டன. முடிச்சூர், வேளச்சேரி பகுதியி்ல் சிக்கியிருந்தவர்களுக்கு தண்ணீர் பாக்கெட்டுகள், வெஜிடபிள் பிரியாணி ஆகியவை  இரண்டு நாட்களும் வழங்கப்பட்டன. ஆனால், பல இடங்களில் மரங்கள் அடர்த்தியாக இருந்ததால் ஹெலிகாப்டர் பறக்க முடியாமல் அங்கு இருந்த மக்கள் தண்ணீருக்கே தவித்துள்ளனர். வீட்டில் இருந்த உணவுப் பொருட்களை வைத்து மூன்று நாட்களைச் சமாளித்துள்ளனர் பல குடும்பத்தினர். மின்சாரம் தொடர்ந்து தடைபட்டதால் செல்போன் சார்ஜ் இல்லாமல் உதவிக்குக்கூட யாரையும் அழைக்கமுடியாத பரிதாபத்தில் பல குடும்பங்கள் இருந்துள்ளன. மீட்புப் படையினர் வந்தும் பலர் தங்கள் வீடுகளின் மாடியில் இருந்து வர மறுத்துவிட்டனர். வீட்டில் உள்ள பொருட்களைப் பாதுகாக்க முடியாது என்று இவர்கள் கூறியுள்ளனர்.

விநோத வேண்டுதல்!

குடிதண்ணீர் இல்லை என்று சில நேரங்களில் குடங்களைத் தூக்கிக்கொண்டு வீதிகளில் அலையும் பெண்களைப் பார்த்திருக்கிறோம்.  இப்போது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மழை நிற்கவேண்டும் என “அம்மிக்கல்” வைத்து வேண்டுதல் செய்த விநோதமும் நடந்தேறியுள்ளது.

thanks vikatan

Thursday, November 19, 2015

உலுக்கும் புயல்

சென்னை: வருகின்ற 22-ம் தேதி சென்னையை புயல் உலுக்கும் என்று வாக்கிய பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

ஆண்டுதோறும் தமிழ் ஆண்டு பிறப்பை அடிப்படையாக வைத்து பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது.

இந்த பஞ்சாங்கங்களின் உதவியுடன் ஜாதகம் கணிப்பது, எதிர்கால பலன்களைச் சொல்வது போன்றவற்றை ஜோதிடர்கள் செய்கின்றனர்.

அப்படிப்பட்ட பஞ்சாங்கம் இருவகைப்படும். முனிவர்கள் எழுதிய சுலோகங்கள் அடிப்படையில் எழுதப்படுவது ‘வாக்கிய பஞ்சாங்கம்’. சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுவது ‘திருக்கணித பஞ்சாங்கம்’.
இதில், வாக்கிய முறை பஞ்சாங்கத்தை பல்வேறு ஜோதிடர்களும் வெளியிட்டு வருகிறார்கள்.

அவ்வாறு வெளியான ஒரு வாக்கிய பஞ்சாங்கத்தில் கடந்த 14-ம் தேதி (சனிக்கிழமை) அன்று “புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதுபோல அந்த பஞ்சாங்கத்தில் வருகின்ற 21-ம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி “ஒரு வாரம் மழை பெய்யும்” என்றும், 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று “புயல் பலமாக சென்னையை உலுக்கும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையை புரட்டிப்போட்ட மழை வெள்ளத்தின் பிடியிலிருந்து தற்போதுதான் மக்கள் இலேசாக மீண்டு வந்துகொண்டிருக்கின்றனர்.  இந்நிலையில், வாக்கிய பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி மீண்டும் மழை வந்துவிடுமோ என்ற கவலை பஞ்சாங்கத்தை நம்புவர்களிடையே ஏற்பட்டுள்ளது

thanks vikatan

Monday, November 19, 2012

சைபர் க்ரைம் - தொடரும் ட்விட்டர் கைதுகள் - சென்னையில் நடந்த விவாதம்

CYBER LAWS: TO REGULATE OR TO CRUSH? 

 

ட்விட்டர் கைதுகள். தூண்டும் விவாதங்கள்" என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் ஒன்றை சேவ்தமிழ்ஸ் இயக்கம் சென்னையில் நடத்தியது. 

 

 

 

Wednesday, October 31, 2012

நீலம் புயல் - சென்னை - அப்டேட்ஸ்

 Nilam Moves Closer Chennai Coast

சென்னை: நிலம் புயல் தற்போது மகாபலிபுரம் அருகே கரையை கடந்து கொண்டிருப்பதாகவும், மேலும் கரையை புயல் முழுவதுமாக கடந்து முடியும் இன்னும் 2 மணிநேரமாகும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.



வங்கக் கடலில் சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் உருவெடுத்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு நிலம் என்றும் பெயரிடப்பட்டது. அந்தமான் தீவுகள் கடற்பரப்பில் உருவான இந்த புயல் இலங்கையின் திரிகோணமலைக்கும் சென்னைக்கும் இடையே மையம் கொண்டிருந்தது.



நேற்று இரவு முதல் இது வேகமாக நகர்ந்து இன்று காலை சென்னைக்கு தென்கிழக்கில் 320 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. தற்போது இது சென்னைக்கு தென்கிழக்கில் வந்து புயல், தற்போது மகாபலிபுரம் அருகே கரையை கடந்து கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தற்போது வீசி வரும் பலத்த காற்று காரணமாக, பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி உள்ளது.



சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் ரோந்து சென்று வருகின்றனர். மேலும் உடனடி மருத்துவ உதவிக்காக ஆங்காங்கே ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.



நிலம் புயல் கரையை முழுவதுமாக கடந்து முடிக்க 2 மணிநேரத்திற்கு மேல் எடுத்து கொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 5 மணிநேரத்திற்கு பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



8-ம் எண் புயல் கூண்டு



சென்னை மெரினா கடற்கரையின் மணற்பரப்பு முழுவதையும் சீறிவரும் கடலலைகள் ஆக்கிரமித்திருக்கிறது. சென்னை துறைமுகத்தில் 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. சென்னை துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடந்து வருவதால் சென்னை துறைமுகத்துக்கு கடுமையான பாதிப்பு இருக்கும் என்பதால் 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 6-ன் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.



பலத்த காற்று


இன்று மாலைக்குள் புதுச்சேரி- நெல்லூர் இடையே சென்னைக்கு அருகே கரையைக் கடக்க இருக்கிறது, புயல் கரையைக் கடக்கும் போது 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. நிலம் புயல் கரையை நெருங்க நெருங்க கடலில் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி மிரட்டி வருகின்றன. இதனால் இன்றும் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லக் கூடாது என்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருக்கிறது.



அலுவலகங்கள் விடுமுறை:


புயல் கரையை கடக்கும் போது சென்னையில் பலத்த சேதங்கள் ஏற்படலாம் என்பதால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வேலை செய்யும் பணியாளர்களை மாலை விரைவில் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். மாலை 3 மணிக்கு மேல் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.



மின்சாரம் துண்டிப்பு


நிலம் புயலால் சென்னை நகரின் பல பகுதிகளில் குறிப்பாக கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் உஷாரான நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இதனிடையே தமிழகம் முழுவதும் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு அனுப்பி வைத்திருக்கிறது.



 People Tired Take Photos Cyclone

சென்னை: நிலம் புயல் கரையை கடக்கும் போது போட்டோ எடுத்து, அந்த நீரில் தங்களின் காலை நனைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சிலர் விரும்பி சென்னையில் கடற்கரை பகுதிகளில் காத்திருந்தனர். ஆனால் அவர்களை கடலை நோக்கி செல்ல போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.



நிலம் புயல் கரையை கடக்கும் போது சென்னை மற்றும் புதுச்சேரியில் பலத்த சேதம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் மாலை 4.45 மணி அளவில் நிலம் புயல் கரையை கடக்க துவங்கியது. புயல் முழுவதுமாக கரையை கடக்க சுமார் 2 மணி நேரமாகும் என்பதால், பொதுமக்கள் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.



புயல் காரணமாக சென்னை மற்றும் கடலோர பகுதியில் பலத்த காற்று வீசியது. புயல் கரையை எட்டும் முன் சிறிதுநேரம் மழை பெய்தது. ஆனால் புயல் கரையை எட்டிய பிறகு, மழை நின்று பலத்த காற்று வீசியது.



இந்த நிலையில் புயலை நேரடியாக பார்க்க விரும்பிய சிலர், கடற்கரை பகுதியில் கேமராக்களுடன் சுற்றி திரிந்தனர். மேலும் சிலர் கடலை நோக்கி சென்று போட்டோக்களை எடுத்தனர். அப்போது கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.



அப்போது அவர்கள், நிலம் புயலில் வரும் தண்ணீரில் காலை நினைக்க வேண்டும். புயலின் போது போட்டோ, வீடியோ எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் அவர்களின் விபரீத ஆசைக்கு போலீசார் மறுப்பு தெரிவித்து, திருப்பி அனுப்பி வைத்தனர்.



நிலம் புயல் காரணமாக கடற்கரை பகுதிகளில் வசித்த பலரும், அங்கிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்ற நிலையில், சிலர் ஆர்வ கோளாறாக புயலுக்கு இடையே போட்டோ எடுக்க முயன்றது போலீசாருக்கு வியப்பை அளித்தது.

 Nilam Cyclone Safety Tips Precaution

சென்னை: சென்னைக்கு அருகே மகாபலிபுரம் அல்லது கல்பாக்கத்தில் நிலம் புயல் நாளை கரையைக் கடக்கப் போகிறது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுளளது.


அண்மையில் தானே புயலை தமிழகம் எதிர்கொண்டது.மணிக்கு நூறுகிலோ மீட்டருக்கும் மேலாக வீசிய கொடுங்காற்றினால் கடலூர் மாவட்டமே நிர்மூலமானது.



இந்தப் புயலைத் தொடர்ந்து இந்த ஆண்டின் முதல் புயலாக நிலம் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்தமான் அருகே காற்றழுத்தத் தாழ்வுநிலை மையம் கொண்டபோது அதாவது கடந்த வாரமே தமிழகத்துக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுவிட்டது.



மேலும் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. புயல் சென்னை நோக்கி வருவதும் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



கடலோர மக்களே கவனம்
குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மீனவர்களே கடலுக்குள் போகாதீர்கள்
கடல் சீற்றமாக இருந்து வருவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக் கூடாது என்று கடந்த 3 நாட்களாகக் கூறப்பட்டு வருகிறது.
தற்போது புயல் கரையைக் கடக்க இருப்பதால் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகளும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளன.



பீச் பக்கம் எட்டிப்பார்க்காதீங்க...
சென்னை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை தவிர மகாபலிபுரத்துக்கு அருகே உள்ள கோவளம், விஜிபி, நீலாங்கரை, பாலவாக்கம் உள்ளிட்ட அனைத்து கடற்கரைக்கும் செல்வதைத் தவிர்க்குமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.



அத்துடன் மக்கள் கூடும் கடற்கரைப் பகுதிகளில் போலீசாரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மின்கம்பங்கள் சாயலாம்


பொதுவாக மழைகாலத்தில் தேங்கிக் கிடக்கும் மழைநீரில் மின்சாரம் பாய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. புயல் காலங்களில் முறிந்து விழும் மரங்கள், மின்கம்பங்கள் அருகே செல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.



மரங்கள் விழலாம் - கீழே ஒதுங்காதீர்கள்


புயலடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மரங்களின் கீழே மழைக்கு பாதுகாப்பு என ஒதுங்கி நிற்பதைத் தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் மழை நீரில் நடந்து போவதைத் தவிர்க்கவும்



சுவிட்சுகளை முடிந்தவரை ஆப் செய்யுங்கள்


புயல் காற்று வீசும் நிலையில் வீடுகளில் மின்சாதனங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களுக்கான சுவிட்சுகளை கூடுமானவரை அணைத்தே வைக்கவும்.



மெழுகுவர்த்திகள் ஸ்டாக் இருக்கட்டும்


மின்சாரம் துண்டிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் வீட்டில் மெழுகுர்த்திகளை போதிய அளவில் வைத்துக் கொள்வது நல்லது.


தற்போதைய நிலம் புயலுக்கான முன்னெச்சரிக்கையின் போது வானிலை மையமும் கூட தகவல் தொடர்பு சாதனங்கள் பாதிக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.


அவசர உதவிக்கு...


சென்னையில் புயல், மழை பற்றிய அறிய 044-28447734 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Cyclone Nilam: Emergency numbers in Chennai 26412646, 28170738, 24838968, 24867725,22342355, 24425961, 22420600, 24500923 


 Heavy Rain Lashes Chennai Its Suburbs

சென்னை: புயல் சின்னம் காரணமாக தலைநகர் சென்னை முழுவதும் கன மழை கொட்டி வருகிறது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. அலுவலகம் செல்வோர் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.


வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருவதால், புயலாக மாறும் அபாயம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக சென்னையில் மழை இல்லாமல் இருந்தது.இந்த நிலையில் புயல் சின்னம் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது.



சென்னை நகரின் பல பகுதிகளிலும் கன மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. கடலோரப் பகுதிகளான மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், மந்தைவெளி, திருவல்லிக்கேணி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.



இதேபோல நகரின் உட்பகுதியிலும் மழை பெய்கிறது. புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, மேடவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தபடி உள்ளது.



இதனால் காலையில் அலுவலகம் செல்வோர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவ மணிகள் காலையிலேயே டிவி முன் உட்கார்ந்து ஜாலியாக பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அலுவலகம் செல்வோர்தான் வெளியில் எப்படிப் போவது என்று தெரியாமல் குழம்பிக் கிடக்கின்றனர்.



 http://www.vikatan.com/news/images/koyambedu-rain2.jpg






http://www.vikatan.com/news/images/koyambedu-rain.jpg
 அ





http://dinamani.com/incoming/article1307137.ece/ALTERNATES/w460/RAIN4.JPG





http://mmimages.maalaimalar.com/Articles/2012/Oct/e5c2df68-3e35-4459-8e08-052ee18c2bdf_S_secvpf.gif






http://www.dinakaran.com/data1/Nilam-Chennai-Gallery/day-1/image_1.jpg


நன்றி - தட்ஸ் தமிழ்



NILAM Current Status

Current Wind Speed 63 MPH / 55 knots
Max Predicted Wind Speed 63 MPH / 55 knots at

TROPICAL CYCLONE NILAM Land Hazards

No land hazards or hazard data not available for this storm.

TROPICAL CYCLONE NILAM Tracker

NILAM Satellite Loop

TROPICAL CYCLONE NILAM Alternate Tracking Map

Alternate tracking maps are only available on NHC tracked storms.

Sunday, October 28, 2012

சென்னை சைபர் க்ரைம் போலீஸ் அறிவிப்பு - நெட் யூசர்ஸ் பின்பற்ற வேண்டிய 10 விதிமுறைகள்

 சின்மயி புகார்க்குப்பிறகு பலரும் சைபர் க்ரைம் பற்றி அறிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள்.இண்ட்டர்நெட் யூஸ் பண்றவங்க , குறிப்பா லேடீஸ் எந்தெந்த விஷயங்கள்ல, எப்படி  ஜாக்கிரதையா  இருக்கனும்னு அவங்க அறிக்கை வெளியிட்டு இருக்காங்க,.,.

#cybercrimechennai Online security tips.


We all know that the Internet is a cool place to hang with friends and check out new things. But don’t forget about the Internet’s risks and dangers.


If you’re going to use the Web, do it safely!


Here are some suggestions on what you should and shouldn’t be doing online to help protect you against the bad stuff. Be careful online. 





1. Never reveal personally – identifiable information online. A lot of creeps use the Internet to take advantage of other people, especially kids and teens. Never reveal any personally-identifiable information online, whether it’s on your profile page or in a blog, chatroom, instant messenger chat or email. Always use a screen name instead of your real name. Never give out your address, telephone number, hangout spots or links to other websites or pages where this information is available. 



Be careful about sending pictures to people you do not know very well. Never tell people personal or private information about your friends or family. Never assume you’re completely anonymous online. Even if you don’t put personal information online, there are different ways that people can still figure out who you are and where you live.

2.Never share your password with other people (except for your parents).

Your passwords to websites, email accounts and instant messenger services should not be shared with friends or strangers. Your friends may not be as safe as you are and may unknowingly subject you to danger. You should, however, share your passwords with your parents if they ask so they can make sure you’re using the Internet safely.

3. Never arrange meetings with strangers. Just because you’ve seen a person’s picture and read his or her profile, does not mean you know them. Many people online lie about who they are and what their intentions are. Just because someone seems nice online, does not mean they really are. They could be trying to hurt you. Never arrange a meeting with a stranger you’ve met online. Even meeting a stranger in a crowded place could be dangerous as he could follow you home. If you wish to meet an online friend in person, talk to your parents and arrange a time and place where your friend can meet your parents first, just in case. If you are worried about your parents meeting one of your online friends, you probably shouldn’t be friends with them in the first place.


4.Don’t believe everything you read or see online. Be wary of everything you see online unless it is from a trusted source. People lie about their age, who they are, what they look like, where they live, how they know you and what their interests are. Also, a lot of websites and emails contain information that is misleading or just plain untrue. If a person or deal sounds too good to be true, it probably is. Ask your parents to help you figure out what information is really true.


5.Don’t download files or software from unknown sites or untrusted sites.

There are a lot of files on the Internet that are unsafe to download to a computer. Some files will bombard you with pop-up ads all day long. Some files will actually track everything you and your family does on your computer, including your logins, passwords and credit card information, which criminals then use to steal money from you and do other harm. There is no easy way to tell which files are bad and which are ok to download. That free desktop wallpaper you want to download might also steal your parents’ credit card information. Ask your parents before you download any files or software from the Internet.

6.Don’t respond to inappropriate messages or emails.

Some people send inappropriate messages just to see if you will respond. If you do, you are simply encouraging them to send more inappropriate material to you. Don’t respond to inappropriate messages. Instead, talk to your friends or simply google the mail id. If its fake you can always see complaint in google search. Discuss with your friends about how to report them to the right place.

7. Don’t post inappropriate content. .

If you post information about tennis, you will attract people who are interested in tennis. If you post inappropriate content or pictures, you will attract people who have inappropriate interests. If you post jokes, photos or other content that contain sexual references you will probably attract people who are only interested in talking about sex. Be mindful of what you are communicating to the rest of the online world through the content you put onto the Internet.

8. Be leery of personal questions from strangers. People you don’t know who ask personal questions are often up to no good. Don’t continue communicating with strangers who ask you personal questions. Talk to your parents about how to block them from communicating with you and report them to the right place.


9. Don’t be bullied into fights. People tend to say things online that they would never say in person. Some people even say rude and malicious things, sometimes just to see if you will respond. Don’t respond to these people. Instead, talk to your parents about how to block them from communicating with you and report them to the right place.


10. Understand. what you put online will be there forever.

Assume that everything you put online—- every email you write, every picture you post, every blog or journal entry you post—- will be accessible on the Internet forever. Many search engines copy Internet pages and save them for viewing even after the pages are no longer online. Think about that before you post anything online. Do you really want pictures or blog entries to be seen 10 years from now?

Wednesday, September 12, 2012

குமுதம் விழாவில் சென்னிமலை சி .பி.செந்தில்குமார் பேச்சு

சென்னை - குமுதம் - ஜோக் ரைட்டர்ஸ் சந்திப்பு  பாகம் 2

குமுதம் பத்திரிக்கை எங்களை எல்லாம் மதிச்சு அழைச்சு விழா நடத்துவதில் ரொம்ப சந்தோஷம்.. 12 வருடங்களுக்குப்பின் சந்திக்கிறோம். இங்கே பேசுனவங்க எல்லாம் குமுதம் பத்திரிக்கை பற்றி ரொம்ப சிலாகிச்சு சொன்னாங்க.. நான் என் மனசுல உள்ளதை எந்த ஒப்பனையோ,அலங்காரங்களோ செய்யாம சொல்றேன்.. 


2000 ஆம் வருஷ தீபாவளி மலர்ல இதே மாதிரி நிகழ்ந்த ஜோக் ரைட்டர்ஸ் சந்திப்பை 2 பக்க கட்டுரையா போட்டீங்க.. அப்போ இதே மாதிரி குமுதம் புக்ஸின்  ஜோக்ஸ் தரத்தை கூட்டுவது எப்படி?ன்னு பேசுனோம்.. அப்போ குமுதத்தின் விலை ரூ 6. குமுதத்தோட சேல்ஸ்  ஏழரை லட்சம். அப்போ என்ன டாக் இருந்துச்சுன்னா குமுதம் புக்கை ஏழரை லட்சம் பேருக்கும் இலவசமா குடுத்தாலே அதுல வர்ற விளம்பரங்கள் மூலமா குமுதத்துக்கு வர்ற லாபம் ஒரு புக்குக்கு ரூ 1.80  அப்டினு சொல்வாங்க. 


அப்போ ஒரு ஜோக்குக்கு ரூ 50 சன்மானம் குடுத்தீங்க.. ஒரு பக்க கதைக்கு ரூ 100 குடுத்தீங்க.. அப்போ ஒரு பவுனோட விலை ரூ 3900. பெட்ரோல் விலை ரூ 34 .குமுதம் விலை ரூ 6 . இப்போ 12 வருஷங்கள் கழிச்சு பார்த்தா ஒரு பவுனோட விலை ரூ 24,000 + . பெட்ரோல் விலை ரூ 72  .குமுதம் விலை ரூ 10 . எல்லாமே டபுள் மடங்கை தாண்டிடுச்சு. ஆனா சன்மானம்  12 வருடங்களுக்கு முன்னால  என்ன சன்மானம் தந்தீங்களோ அதே 50 ரூபா தான் தர்றீங்க..


 போட்டி பத்திரிக்கைகளான தின மலர் வார மலர்ல ஒரு ஜோக் குக்கு ரூ 500 தர்றாங்க.. அது போக ஸ்பெஷல் ஜோக் 1 க்கு 1000 தர்றாங்க. ஆனந்த விகடன்ல  ஒரு ஜோக் = ரூ 100. ஆனா குமுதம் இதழ்ல  ஏன் சன்மானத்தை உயர்த்தலை?


 உங்களை விட பல மடங்கு சேல்ஸ்ல குறைவா இருக்கும் கல்கி வார இதழ்ல 2000 ஆம் வருஷத்துல ஒரு ஜோக்குக்கு ரூ 15 குடுத்தாங்க. இப்போ 3 மடங்கா  45  தாண்டி ரூ 50 தர்றாங்க.. அட்லீஸ்ட் நீங்க ரூ 100 ஆவது தர வேண்டாமா?


அடுத்து செலக்‌ஷன் டீம். பொதுவா இப்போ இருக்கும் அனைத்து பத்திரிக்கைகளிலும் ஜோக் செலக்‌ஷனுக்கு அனுபவம்  மிக்க ஆட்களை போடுவது கிடையாது. செலக்‌ஷன் டீம்ல இருக்கறவங்க பல வருசங்கள் எல்லா பத்திரிக்கைகளும் படிச்சவரா இருக்கனும். அப்போதான் உல்டா ஜோக்ஸ் வந்தா கண்டு பிடிக்க முடியும்..


ஆல்ரெடி வந்த ஜோக்குகள் தான் இப்போ மீண்டும் மீண்டும் ரீ மேக் ஜோக்குகளா உலா வந்துட்டு இருக்கு. ஒரு நல்ல படைப்பாளி ஒரு நாளுக்கு 10 ஜோக் அனுப்பினா  ஒரு உல்டா படைப்பாளி பல புக்ஸ்ல இருந்து சுட்டு 100 ஜோக்ஸ் அனுப்பறார். செலக்‌ஷன் டீம்ல இருக்கறவங்க அடடே, இத்தனை அனுப்பி இருக்காரே என அவருக்கே அதிக வாய்ப்பு தர்றீங்க.



இதுக்கு நல்ல உதாரணமா எம் அசோக் ராஜா அரவக்குறிச்சிப்பட்டி அவர்களை சொல்லலாம்.. அவர் புக் ஷாப்ல தான்  இருக்கார். எல்லா பழைய புக்ஸும் அத்துபடி.. அது போக நடை பாதைக்கடைகள்ல விற்கும் பழைய குமுதம், விகடன், பாக்யா வாங்கி அதுல வரும் ஜோக்ஸ் காப்பி அடிச்சு எழுதறார்.. ஏன் அப்படிப்பட்டவங்களுக்கு வாய்ப்பு தர்றீங்க? புது ஆட்களுக்கு புது ஜோக்ஸ்க்கு வாய்ப்பு தாங்க..



 புது ஜோக்ஸ் போட ஒரு குறுக்கு வழி இருக்கு. அது டாபிக்கல் ஜோக்ஸ் போடறதுதான்.. உதாரணமா இந்த மன்னர் ஜோக்ஸ், வேலைக்காரி ஜோக்ஸ், நர்ஸ் ஜோக்ஸ் எல்லாம் கட் பண்ணுங்க.. அந்தந்த வாரத்துல எது ஹாட் டாபிக்ஸோ அது சம்பந்தமான ஜோக்ஸ்.. உதாரணமா ஆண்ட்ரியா-அனிரூத் கிஸ் மேட்டர்,அழகிரி மகன் கைது ஆகும் சூழல்,கார்ட்டூனிஸ்ட் கைது இந்த மாதிரி மேட்டர்ஸ் கைல எடுங்க.. அப்போ காப்பி ஜோக்ஸ் உல்டா ஜோக்ஸ் குறைஞ்சுடும். நீங்க மீண்டும் மீண்டும் தலைவர் ஜோக், டாக்டர் ஜோக், வேலைக்காரி ஜோக் போட்டா எல்லாம் ரிப்பீட் ஆகிட்டே தான் இருக்கும் 


 இன்னைக்கு ஆனந்த விகடனும், குங்குமமும் நெட்ல அப்டேட்டா இருக்காங்க.. ட்வீட்ஸ்  வலை பாயுதே , வலைப்பேச்சு என்ற டைட்டில்ல வருது,.,.  ஆனா குமுதத்துல வர்றது இல்லை.  குமுதம் ரிப்போர்ட்டர்ல ஆன் லைன் ஆப்பு என்ற பெயரில் வருது.. ஆனா ஏன் குமுதத்துல. ட்வீட்ஸ்க்குன்னு 2 பக்கங்கள் ஒதுக்கக்கூடாது?


 ஒரு ட்வீட்க்கு ரூ 50 என சன்மானம் குடுத்து படைப்பாளிகளை ஊக்குவியுங்கள்.. ஏராளமான திறமைசாலிகள் சமூக வலைத்தளங்களில் இருக்காங்க.. அவங்களை உபயோகப்படுத்துனா அவங்களும் வளர்வாங்க, குமுதமும் வளரும்.


 குமுதம் இதழில் முதல்ல எல்லாம் ஆறு வித்தியாசங்கள் டாபிக்ல ஒரு ஜோக் செமயா வரும், ஆனா இப்போ அதுல குவாலிட்டி குறைஞ்சுடுச்சு.. அதில் நல்ல கவனம் செலுத்தனும்.


 குமுதம் பத்திரிக்கைல வாரம் மினிமம் 25 ஜோக்ஸாவது போடனும். ரெகுலரா ஜோக்ஸ் எழுதறவங்க 50 பேர் இருக்காங்கன்னா அவங்க தலா 50  ஜோக்ஸ் வாரம் அனுப்பினாலே வாரா வாரம் 2500 ஜோக்ஸ் வந்துடும். ஆனா நீங்க என்ன பண்றீங்க? குமுதம் இதழில் பணி புரியும் குட்டி மு வெங்கடேஷன், மாதவரம் பால்பண்ணை, ஜெயாப்ரியன், சென்னை இவங்க 2 பேருக்கும் தலா 2 பக்கம் ஒதுக்கிடறீங்க. அவங்க ஜோக்ஸ் போட்டது  பொக ஏதோ போனா போகுதுன்னு  தர்மம் போடற மாதிரி வாசகர்கள் ஜோக்ஸ் அஞ்சோ பத்தோ போடறீங்க? அது எப்படி பத்தும்?



 உங்க ஆஃபீஸ் ஆட்கள் ஜோக்ஸை போட வேண்டாம்னு சொல்லலை.. அதை கணக்குல வெச்சுக்காதீங்கன்னு சொல்றேன்.. வாசகர்கள் ஜோக்ஸ் மினிமம் 25 வாரா வாரம் போடுங்க.. அப்போதான் உற்சாகமா ஜோக்ஸ் எழுத முடியும்,..


 வாரா வாரம் ஒரு ஸ்பெஷல் ஜோக் கை ஒரு முழுப்பக்கத்துக்கு போட்டு முத்திரை ஜோக்னு போடுங்க.. ஆல்ரெடி இது ஆனந்த விகடன் ஒரு டைம் செஞ்ச மேட்டர் தான்... நல்ல விஷயங்களை நம ஃபாலோ பண்ணறது தப்பில்லை.



சினிமா விமர்சனங்கள் உங்க யூனிட் ஆட்கள் எழுதறாங்க.. அவங்க பெரும்பாலும் தமிழ்ப்படங்க மட்டும் தான் விமர்சனம் எழுதறாங்க. மற்ற மொழிப்படங்களான ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஹாலிவுட் பட விமர்சனங்களை வாசகர்கள் எழுத வாய்ப்பு குடுங்க.. படிக்கறவங்களுக்கும் ஒரு வெரைட்டி கிடைக்கும்.


 குமுதம் புக்ல கண்ட்டெண்ட் ரொம்ப கம்மியா இருக்கு.. ஒரு குமுதம் புக்கை  கேப் விடாம படிச்சா 45 நிமிஷங்கள்ல  ரெகுலர் வாசகனும், 1 மணி நேரத்துல புது வாசகனும் படிச்சுடலாம்.. ஆனந்த விகடன், இந்தியா டுடே எல்லாம் படிச்சு முடிக்க  2 மணி நேரத்துக்கும் மேல ஆகுது.. 



- தொடரும்



 என் பேச்சு முடிஞ்ச பின்  ஆசிரியர்கள், எடிட்டர்கள் பேசுனாங்க.. பின் கார்டூனிஸ்ட் கண்ணா 3 நகைச்சுவை கார்ட்டூன் வரைஞ்சு ஜோக்ஸ் போட்டி வைச்சாங்க.. அது பற்றி பிறகு....

இதன் முதல் பாகம் படிக்காதவங்க


சென்னை - குமுதம் - ஜோக் ரைட்டர்ஸ் சந்திப்பு பாகம் 1 

 http://www.adrasaka.com/2012/09/1_10.html

 

 


Monday, September 10, 2012

சென்னை - குமுதம் - ஜோக் ரைட்டர்ஸ் சந்திப்பு பாகம் 1

குமுதம் பத்திரிக்கையின் இணை ஆசிரியர் இரா மணிகண்டன்  20 நாட்களுக்கு முன் ஃபோன் பண்ணி குமுதம் ஆஃபீசில் முன்னணி ஜோக் எழுத்தாளர்கள் சந்திப்பு ஒண்ணு வைக்கப்போவதாகவும் , குமுதம் ஜோக்ஸ் தரத்தை முன்னேற்றும் ஆலோசனைக்கூட்டமாகவும், ஜோக் எழுத்தாளர்களை கவுரப்படுத்தும் விழாவாக அது இருக்கும் எனவும் அறிவித்தார்.மிக்க மகிழ்ச்சியுடன் வருவதற்கு ஒப்புதல் தெரிவித்தேன். நிகழ்ச்சி நடைபெறும் நாள் 8.9.2012 சனிக்கிழமை


 ஏன்னா இந்தக்காலத்துல தமிழ் நாட்டில்  படைப்பாளிகளுக்கு மரியாதை கிடைப்பதே அரிது. ஏற்கனவே 12 வருடங்களுக்கு முன் இதே போல் ஒரு சந்திப்பு  நிகழந்தது. 2000 ஆம் ஆண்டின் குமுதம் தீபாவளி மலரில் அது ஃபோட்டோக்களுடன் இடம் பெற்றது. அப்போ  தேர்வு ஆன டாப் டென் ஜோக் ரைட்டர்ஸ் 



1. வி சாரதி டேச்சு, திருவல்லிக்கேணி, சென்னை , 

 2. அம்பை தேவா , தூத்துக்குடி , 

3, சி பி செந்தில்குமார் , சென்னிமலை

 4. பா ஜெயக்குமார் , வந்தவாசி 

5. எஸ்  எஸ் பூங்கதிர் , திருவெண்ணெய் நல்லூர்


 6. சீர்காழி வி ரேவதி, தஞ்சாவூர்


7. உ ராஜாஜி , இடைக்காட்டூர்,சிவகங்கை


8. பாஸ்கி  ,சென்னை


9.தஞ்சை தாமு


10. இரா கமலக்கண்ணன், நாமகிரிப்பேட்டை






இந்த முறை  பழைய லிஸ்ட்டில் இருந்தவங்கள்ல முதல் 3 பேர் , 6வது நபர் மட்டும் இடம் பிடிச்சோம். மீதி ஆட்கள் புது வரவு . அதில் முக்கியமானவர் பர்வீன் யூனுஸ், இவர் இப்போ பெருந்துறையில் வங்கி மேலாளராக பணி புரிகிறார். அவர் தான் விடு பட்ட பல ஜோக் ரைட்டர்ஸை  விழாவுக்கு ஒருங்கிணைப்பதில் பெரும்பங்கு ஆற்றியவர்.


வழக்கம் போல் அதே ஏற்காடு எக்ஸ்பிரஸ் பயணம். சென்னையில் அதிகாலை 4.15 க்கு செண்ட்ரல் போயாச்சு. அங்கே இருந்து எதிர் புறம் உள்ள பார்க் ஸ்டேஷனுக்கு நடந்து போய்  எலக்ட்ரிக் ரயிலில் பல்லாவரம் ஸ்டேஷன் போனேன். அங்கே ட்விட்டர் நண்பரும் , அட்ராசக்க இணையத்தின் ஆரம்ப கால வாசகரும், ஆலோசனை சொல்பவருமான சிவ பக்தர் தீவிர ஆன்மீகவாதி சிவ கீர்த்தியுடன் சந்திப்பு. 


 சென்னை மழையுடன் என்னை வரவேற்றது, நண்பர் சிவா என்னை குடையுடன் வரவேற்றார். மழையிலும் தாமதிக்காமல்  வந்த அவர் என்னை அவர் வசிக்கும் அபார்ட்மெண்ட்டுக்கு அழைத்துச்சென்று உபசரித்தார். காலை டிபன் அவர் கைங்கரியம். ஆனியன் தோசை 8 சாப்பிட்டேன். காலை, மாலை என இரு வேளைக்கும் அவர் வாங்கி வந்த மாவு பாக்கெட் ஒரே  வேளையில் காலி ஆனது.. 

9.30 மணிக்கு என்னை பல்லாவரம் ஸ்டேஷனில் டிராப் பண்ணினார். விழா நடக்கும் நேரம் காலை 11 மணி தானே போயிடலாம்னு நினைச்சது எவ்லவ் பெரிய தப்பு.. ஏகப்பட்ட கூட்டம். வரிசையில் நின்று டிக்கெட் எடுக்கவே 30 நிமிடம் ஆகிடுச்சு. அங்கே இருந்து எக்மோர் ஸ்டேஷன் போனேன். மணி 10.30 ஆகிடுச்சு. 


 அம்பை தேவாவும் , பர்வீன் யூனுசும் ஃபோன் பண்ணி குமுதம் ஆஃபீசுக்கு வந்துட்டதா சொன்னாங்க.. கே ஆனந்தன் ஃபோன் பண்ணி நாங்க எல்லாம் 9 மணிக்கே வந்துட்டோம்.. நீங்க தான் லேட் என்றார்.. இதில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் வெளியூரில் ஒரு நிகழ்ச்சிக்கு செல்லனும்னா நம்ம ஊர் கணக்கு ஒத்து வராது.. பங்க்சுவாலிட்டியை கடை பிடிக்க  முன்னதாக தயாராக வேணும்.. 


அங்கே இருந்து 20 ஆம் நெம்பர் பஸ் பிடிச்சு அபிராமி தியேட்டர்  ஸ்டாப் போனேன் . ஆட்டோ வாடகை ரூ 70ன்னு சொன்னாங்க,. பஸ்சில் 5 ரூபாதான். சிக்கனம் தேவை எக்கணமும். 11. 15 க்கு ஆஃபீஸ் போய்ட்டேன். என்னமோ சி எம் ஆஃபீஸ் மாதிரி பயங்கர செக்யூரிட்டி..  ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவது போல் உள்ளே செல்ல ஏகபப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பண்ணி வெச்சிருந்தாங்க. போன தடவை இவ்வளவு பாதுகாப்பு இல்லை.. 


அதாவது  உள்ளே செல்லும் ஒவ்வொரு கதவிலும் செக்யூரிட்டி ஏதோ ஒரு கார்டை சொருகறார். அப்போதான் கதவு திறக்குது.. 

 கூட்டம் ஜஸ்ட் அப்போதான் ஆரம்பிச்சிருந்தாங்க.. நான் வரப்போ அம்பை தேவா தான் முதல்ல பேசிட்டிருந்தார்.


1.அம்பை தேவா - நான் 30 வருஷங்களா ஜோக் எழுதிட்டு இருக்கேன். என் பூர்வீகம் அம்பை.. விக்ரமசிங்க புரம் ( மணிரத்னம் எடுத்த ராவணன் படத்துல உலக அழகி ஐஸ்வர்யா ராய்  14 ஷாட்ல குளிச்சுட்டே இருப்பாங்களே அந்த அம்பா சமுத்திரம் - சி .பி ) நடிகர் சிவகுமார் என் நீண்டகால நண்பர். அவர் மகன் கார்த்தியின் திருமணத்துக்காக  கோவை வந்து பின்  ஊர் திரும்பும்போது நடந்த பெரிய  பஸ் விபத்தில் என் மகள் , மனைவிக்கு பெரிய காயம் ஏற்பட்டதால் நீண்ட நாட்கள் சென்னை மருத்துவ மனையில் தங்க வேண்டிய சூழலால் சென்னையில் பணி மாற்றல் வாங்கிக்கொண்டேன்.அந்த விபத்து சிகிச்சைக்கு சிவகுமார் ரூ 1,50,000 உதவி செய்தார்.  வாரா வாரம் 100 ஜோக்குகள் எழுதறேன்.. எனக்கு ஜோக் எழுதுவதில் சலிப்பே ஏற்பட்டதில்லை .



2. பர்வீன் யூனுஸ்  - நான் ஒரு வங்கியில் மேலாளரா இருக்கேன். மாசம் ரூ 60,000 சம்பளம் வாங்கினாலும் ஜோக் சன்மானமா ரூ 50 வந்தது என மனைவி ஃபோன் பண்ணிச்சொல்லும்போது ஏற்படும் மன மகிழ்ச்சி அளவில்லாதது. அது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. கடந்த 2 வருடங்களாக பல பத்திரிக்கைகளில் எழுதிட்டு வர்றேன்.  எல்லா படைப்பாளிகளுக்கும் எஸ் எம் எஸ் மூலமா யார் யார் படைப்புகள் எந்த எந்த பத்திரிக்கைகளில் வந்திருக்கு என தகவல் சொல்லிடுவேன்.. குமுதம் பத்திரிக்கையும், விகடனும் என் 2 கண்கள் போல.. தொடர்ந்து வாய்ப்பு தர்றீங்க.. 



3. பாலாஜி கணேஷ் , கோவிலாம்பூண்டி - சார் சொன்னா நம்ப மாட்டீங்க.. மிக வறுமையான சூழலில் நான் இருக்கேன்././ நான் வேலைக்குப்போய் சம்பாதிப்பதை விட ஜோக் எழுதி சம்பாதிக்கறதுல தான் வீட்ல அடுப்பு பொங்குது.. சில சமயம் நீங்க அனுப்பிய மணி ஆர்டர் பணத்துல தான் அரிசி வாங்கி சமைச்சிருக்கோம்.. என் வாழ்க்கைல பத்திரிக்கைகளும், படைப்புகளும் இரண்டறக்கலந்துடுச்சு . 



4. கே ஆனந்தன் பி பள்ளிப்பட்டி  - நான் ஜோக்ஸ், ஒரு பக்க கதை என எல்லாம் கலந்து கட்டி எழுதிட்டு வர்றேன்.. ஒரு பக்க சிறுகதைகள் எழுத என்னை ஊக்குவிச்சதே குமுதம் தான்.மற்ற பத்திரிக்கைகளை விட குமுதம் தான் என் படைப்புலக வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் வகிக்குது.. ஏன்னா ஒரு முறை விகடன் ஆஃபீஸ்ல ஃபோன் பண்ணி 2 நாளுக்குள் அனுப்புங்க அவசரம்னு சொல்லி ஒரு டாபிக்ல ஜோக்ஸ் அனுப்ப கேட்டாங்க.. நானும் ஆஃபீஸ்க்கு லீவ்  போட்டுட்டு மாங்கு மாங்குன்னு 100 ஜோக்ஸ் எழுதி அனுப்பினேன். ஒண்ணு கூட வர்லை..  மனசு விட்டுப்போச்சு.. ஆனா குமுதத்துக்கு நான் அனுப்பற  ஜோக்ஸ்ல 20க்கு 1 என்ற விகிதத்துல வந்துடுது..



5. சொக்கம்பட்டி தேவதாசன்  - நான் ஆனந்த விகடன் உட்பட பல பத்திரிக்கைகளில் நிருபராக பணி ஆற்றியவன். கடந்த 5 வருடங்களாக ஜோக்ஸ் எழுதிட்டு வர்றேன். ஆனந்த விகடன் தீபாவளி  மலரில் பல ஜோக்ஸ் என்னுது வந்திருக்கு. என்னை லட்சக்கணக்கான மக்களுக்கு அறிமுகம் செஞ்சதில் குமுதத்திற்கு பெரிய பங்களிப்பு இருக்கு.




6. சீர்காழி வி ரேவதி - நான் தஞ்சையில் இருக்கேன்.. என் மனைவி பேர்ல தான் எழுதிட்டு இருக்கேன்.. 21 வருடங்களாக ஜோக்ஸ் எழுதிட்டு இருக்கேன்.. என்னோட முதல் ஜோக் வந்ததே குமுதத்துல தான்.. புக்ல என் பேரு ஐ மீன் என் மனைவி பேரு பார்க்கும்போது எழுதுவதற்கான உத்வேகம் பெருகும்..



7. அ . பேச்சியப்பன் , ராஜபாளையம் - குமுதம் ரிப்போர்ட்டர்  வைத்த பாபா பஞ்ச் டயலாக் போட்டியில் 200க்கும் மேற்பட்ட பஞ்ச் டயலாக்ஸ் அனுப்பினேன்.. அதில் தேர்வானதுதான் 

1. நான் சாய் பாபா அல்ல, யார் பக்கமும் சாயாத பாபா, 

2. நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்..



இப்போ குமுதம் நடத்திய கோச்சடையான் பஞ்ச் டயலாக் போட்டியிலும் கலந்திருக்கேன்.. வாசகர்களை நாடித்துடிப்பு அறிந்து குஷிப்படுத்துவதில் குமுதம் தான் என்றும் நெம்பர் ஒன்..



8. சுபஸ்ரீ சென்னை - நானும், எங்கப்பாவும் கடந்த 3 வருடங்களா குமுதத்துக்கு ஜோக்ஸ் எழுதிட்டு இருக்கோம்.. என் படைப்பு வந்தா என்னை விட எங்கப்பா தான் சந்தோஷப்படுவார்.  ஒரு பொண்ணா நான் சந்தோஷப்படறது என்னை எங்கப்பா ஊக்குவிக்கறதுதான். 



9.  நா கி பிரசாத் , கோவை - என் முத ஜோக், என் முதல் சிறுகதை வந்ததெல்லாம்  குமுதம் இதழில் தான். புதிய படைப்பாளிகளை குமுதம் ஊக்குவிப்பது போல் எந்த பத்திரிக்கையும் ஊக்குவிப்பது இல்லை.. ஒரு பக்க கதை போடும்போது அதில் படைப்பாளிகளின் பெயரை நல்லா போல்டு லெட்டர்ல போடுங்க.. ஏன்னா 2 லைன்ல ஜோக் எழுதறவங்க பேரும், ஒரு பக்கத்துல கதை எழுதறவங்க பேரும் ஒரே சைஸ்ல தான் வருது..  இன்னும் அட்ராக்சனா பேர் போட்டா நல்லாருக்கும்,,


 இதைத்தொடர்ந்து பேசுனவங்க எல்லாம்  ஒரே டைப்ல தான் பேசுனாங்க.. அவங்க பேச்சுல ஒண்ணை கவனிச்சேன்.. எல்லாரும் அவங்கவங்களைப்பற்றி ஒரு சுய அறிமுகம், அப்புறம் குமுதம் துதி பாடல் இதுதான் மேலோங்கி இருந்தது.. கூப்பிட்ட்டிருப்பது குமுதம் பத்திரிக்கையின் ஜோக்ஸ் தரத்தை மேம்படுத்துவது எப்படி? என்பதற்கான ஆலோசனைக்கூட்டம்.. ஆனா வந்தவங்கள்ல பெரும்பாலும் அந்த டாப்பிக்கை தொடவே இல்லை.. 


குமுதம் பத்திரிக்கையின் நிறை குறைகள் என்ன? அவங்க என்ன செய்யறாங்க? என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? ட்விட்டர்ஸ்க்கு ஏன்  விகடன், குங்குமம் போல்  மரியாதை செலுத்தலை?என்பது பற்றி விளக்கமா நான் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு அடுத்த பதிவில்..... 

Thursday, August 30, 2012

சென்னை பதிவர் சந்திப்பு கொண்டாட்டம் பாகம் 2

சென்னை பதிவர் சந்திப்பு பற்றி பலரும் பல பதிவுகள் போட்டுட்டு வர்றாங்க. நான் படிச்ச 16 பதிவுகள்ல  4 பேர் மட்டும் விழாவில் பதிவர்கள் அறிமுகம் பகுதில நானும் , கேபிள் சங்கரும்  மற்றவர்களை ஓவராய் கலாய்த்ததாகவும், அது பெண்களுக்கு பிடிக்காது எனவும், தனிப்பட்ட முறையில் பதிவர்களை கலாய்ப்பது  தவறு எனவும் சொல்லி இருக்காங்க.. 



 அவங்களை நினைச்சு சிரிப்புதான் வருது,. நரசிம்ம ராவ் மாதிரியோ, மண் மோகன் மாதிரியோ அறிக்கையை பார்த்து படிச்சா தூக்கம் வந்துடும். இதெல்லாம் ஜாலிக்கு.  தருமன் கண்ணுக்கு எல்லாமே நல்லதா தெரியும்.. துரியோதணன் கண்ணுக்கு எல்லாமே கெட்டதா தெரியும். அதுக்கு மனசை பக்குவப்படுத்திக்கனும்.. 

  மேடையில் இருந்தவாறே நாங்க 2 பேரும் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸை கவனிச்சுட்டுதான் இருந்தோம்.. அப்படி யாரும் ரசிக்காம இருந்த மாதிரி தெரியல.. பெண்கள் அதை ரசிச்சிருக்க மாட்டாங்க என்பதும் கற்பனையே? ஏன்னா  4 பதிவர்களிடம் தனிப்பட்ட முறையில் கருத்து கேட்ட போது அப்படி எல்லாம் ஏதும் இல்லை என்றே சொன்னார்கள். மேடையில் அமர்ந்த படி எஸ் எம் எஸ் மூலம் அவ்வப்போது நான் கருத்து கேட்டுக்கொண்டுதான் இருந்தேன்.. அவர்கள் சொன்ன ஆலோசனைகளை ஃபாலோ பண்ணிட்டுதான் இருந்தேன்..


 இதுல இன்னொரு விஷயமும் சொல்லிக்கறேன். 150 பதிவர்கள் தங்களை அறிமுகம் பண்ணிக்கிட்டாங்க.. அதுல நான் கலாட்டா செஞ்சது மொத்தம் 16 பேரை மட்டுமே. தனிப்பட்ட முறையில் எனக்கு அவர்கள் பழக்கம்.. அதே போல் அப்படி கிண்டல் அடிக்க எனக்கு உரிமை உள்ளது. அதே போல் கேபிள் சங்கர் கலாட்டா செய்தது மொத்தம் 7 பேரை மட்டுமே.



டி வி சீரியல்கள் பார்த்து பார்த்து தமிழர்கள் பலர் உம்மணாம்மூஞ்சிகளாக மாறி வருவது மனதுக்கு கஷ்டமாக இருக்கு.. அவர்கள் மன நலம் அடைந்து சிரிச்ச முகமாக மாற இயற்கையை வேண்டிக்கொள்கிறேன்.குறை சொல்லி எழுதிய மற்ற பதிவர்கள் எனக்கு அதிகம் பழக்கம் இல்லை.. ஆனா ஜாலி டைப்பான பலா பட்டறை சங்கர் கூட  அது போல் ஒரு கருத்தை சொன்னது ஆச்சரியமா இருக்கு


இதை விட காமெடி இன்னொரு அதி புத்திசாலி பதிவர்  12 பக்கம் ஏ 4 ல வர்ற மாதிரி ஒரு பதிவு போட்டிருக்கார்.. அதனோட சாராம்சம் பதிவர் அறிமுக நிகழ்ச்சி தேவை அற்றது . 2 மணி நேரம் வீண் என்றார். பதிவரை பற்றித்தான் நமக்கே தெரியுமே? டெயிலி பதிவு வாசிக்கிறோமே என்றார்.


அவருக்கு என் பதில் இணைய  தளங்கள் 1000க்கும்  மேல் இருக்கு. அதில் நாம் ரெகுலரா பார்ப்பது ஒவ்வொருவரும் குறிப்பிட்ட 20 பதிவுகள் தான். எத்தனையோ பதிவுகள் விடுபட்டிருக்கும். தெரியாமல் இருக்கும். 2 வருடங்கள் வலை உலகில் இருக்கும் எனக்கே இதுவரை சென்னை பதிவர் சந்திப்பில் வந்த பதிவர்கள் பாதிப்பேர் தெரியாது. ( இந்த லைனில் எனக்கே என்ற வார்த்தையில் தலைக்கனம் இல்லை ) அப்படி இருக்க புது ஆட்களுக்கு யாரை தெரியும்.. இந்த சந்திப்பின் மூலம் பலரும் பலரை அறிய வாய்ப்பு.. அவ்ளவ் தான்.


புதிய தலைமுறை வார இதழில் இருந்து  ஒரு மேடம் வந்திருந்தாங்க. அவங்க சொன்ன அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிப்பதா இருந்தது. அதாவது ஆனந்த விகடன் இதழ்ல என் விகடன் புக்ல வாரா வாரம் வலை ஓசை பகுதியில் ஒரு பதிவரை அறிமுகம் செய்வது போல் புதிய தலைமுறை வார இதழில் அனைத்து பதிவர்களுக்கும் எழுத வாய்ப்பு கொடுப்பதாக சொன்னார்கள்.

அதற்காக துறை வாரியாக அதாவது இலக்கியம், சமையல்
, சமூகம், கவிதை, சிறுகதை, கட்டுரை, சினிமா விமர்சனம் இப்படி இயங்குபவர்கள்  அந்தந்த பிரிவை குறிப்பிட்டு மெயில் ஐ டி வலைத்தள முகவரியை ஒருங்கிணைத்து தரச்சொன்னார்கள்

இது நல்ல வாய்ப்பு, அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம்
 1.30 மணிக்கு லஞ்ச்..  அறிவிச்ச பின்னும் பாதிப்பேர் சாப்பிடப்போகாம வந்த பதிவர்களுடன் அளவளாவிப்பேசிக்கொண்டிருந்தது அவங்க ஆர்வத்தை காட்டுச்சு.


 சைவ விருந்து , வெஜிடபிள் சூப், மைசூர் பாக், கோக், இட்லி, தோசை ,பூரி . இதுதான் மெனு. எல்லாரும் ஒரு வெட்டு வெட்டிட்டு மீண்டும் மேடைக்கு வந்தோம்.. ஷாக் சர்ப்பரைஸ் என்னன்னா பி கே பி சத்தமே இல்லாம மேடைல அமர்ந்திருந்தார்.. வழக்கமா வி ஐ பி ங்க வந்தா உடனே மேடைல உக்கார வைக்க மாட்டாங்க.. மைக்ல பில்டப் கொடுத்து அப்புறமா தான் உக்கார வைப்பாங்க.. ஆனா இவர் சோ சிம்ப்பிள்.. மேன்..



 கவியரங்கம் நடந்தது.. இதுல பிரபல ட்விட்டரும், பாடல் ஆசிரியருமான சுரேகாவின்  ஆளுமை வெளிப்பட்டது.. அருமையான பேச்சு. அழகான மொழி நடை.. அங்கதம் என மேடையில் கலக்கினார்.. அவரது பேச்சும், அறிமுகமும், கவிஞர்கள் கவிதையும்  டைப் பண்ண 3 மணி நேரம் ஆகும் என்பதால் அது அடுத்த பாகத்தில். 


 அடுத்து பி கே பி பேச வந்தார்






அவர் நல்ல மேக்கப்பில் இருந்தார்.. மிக இயல்பாக பேசினார்..

வலைப்பதிவர்களின் விழா சென்னையில் இவ்வளவு பெரிய முறையில் நடப்பது இதுவே முதல் முறை. பெண்கள் இவ்வளவு பெரிய அளவில் கலந்து கொண்டதும் அதுவும் நாள் முழுதும் அமர்ந்து கேட்டதும் விழாவின் வெற்றி என  நினைக்கிறேன்

Photo


விழாவுக்கு என்னை அழைத்த போது மின்னல் வரிகள் கணேஷ், “  நீங்கள் பேசும் நேரம் இருந்தால் போதும், பிறகு  நீங்கள் கிளம்பிக்கலாம்என்று தான் சொன்னார். ஆனால் அது சபை நாகரிகம் அல்ல; அந்த பகுதி முழுமைக்கும் நான் இருப்பதே நல்லது; நானும் ஒரு வலைப்பதிவர் தான். அதனால் முழுதும் இருக்க விரும்பினேன். அனைத்தையும் சந்தோஷமாக நீங்கள் பேசுவதை ரிசீவ் செய்து கொண்டிருந்தேன்.
தென்றல் சசிகலாவின் கவிதை புத்தகத்தை நான் வெளியிட்டேன். அது பற்றி சிறிதேனும் பேசுவது தான் முறை என சில நல்ல கவிதைகளை குறிப்பிட்டு இப்பகுதியில் பேசினார்





லஞ்சம் 



பலூன் விற்பவன்
பிறக்கப் போகும் தன் குழந்தைக்கு ..
வாங்கிய சட்டையின் விலை இருபது
பிறந்த குழந்தை
ஆணா பெண்ணா என
தெரிந்து கொள்ள கொடுத்த விலை ஐநூறு .


கோபம் வரத்தான் செய்கிறது

குடுமி பிடித்து
மண்ணில் உருண்டு புரண்டு
சண்டையிடும்
மழலைகளை காணும் போதெல்லாம்
கொஞ்சம் கோபம் வரத்தான் செய்கிறது .
என்னோடு சண்டையே ..
போட்டிராத அக்காவின் மேல் .


என் அன்பைப்போல !

எவர் தடுப்பினும்
நடுவழியிலேயே
நின்றுவிடப்போவதில்லை மழை
உன் மீதான என் அன்பைப்போல !



தென்றல் கவிதை புத்தகம் வெளீயிடுபவர்  பி கே பி , பெறுபவர் சேட்டைக்காரன் அண்ணன், அருகில் கவிதாயினி சசிகலா



முதலில் கையெழுத்து பத்திரிக்கை என்ற ஒன்று இருந்தது. அதன் நீட்சியாக தான் இன்றைய வலைப்பூவை பார்க்கிறேன்

நாங்கள் எழுதிய போது பத்திரிக்கைக்கு அனுப்பி விட்டு எப்போது பிரசுரம் ஆகும் என காத்திருக்க வேண்டும். ஆறு மாதம் கழித்து " உங்கள் படைப்பை பிரசுரம் செய்ய முடியாமைக்கு வருந்துகிறோம் " என கடிதம் வரும். ஆனால் நீங்கள் காத்திருக்க தேவையின்றி உங்கள் படைப்புகளை வெளியிடுகிறீர்கள். ஆயிரக்கணக்கானோர் உடன் வாசித்து கருத்துக்கள் சொல்கிறார்கள்

விஞ்ஞானம் எந்த அளவு வளர்ந்துள்ளது ! எலக்ரானிக் யுகத்தில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு வாய்ப்புகள் ! அந்த காலத்தில் போன் பேசவே டிரன்க் கால் புக் செய்து பேசணும் ! அதுக்கு எட்டு பேர் காத்திருப்பாங்க. இப்போ எந்த அளவு வளர்ந்துட்டோம் !



வலைப்பதிவர்கள் உங்கள் அனுபவத்தை எழுதுவதுடன் இன்னும் பலரை எழுத வைக்க வேண்டும். நாம் பேப்பர்லெஸ் சொசைட்டி நோக்கி செல்கிறோம். வருங்காலத்தில் வலைப்பூக்கள் உலகை ஆளும். எனவே " எனது வலைப்பூவை படியுங்கள் " என சொல்வதை விட உங்களை போன்ற நிறைய வலைப்பதிவர்களை உருவாக்க வேண்டும் ! அடுத்தடுத்த கூட்டங்கள் புதிய வலைப்பதிவர்களுக்கு டெக்னிக்கல் விஷயங்களை சொல்லி தரும் கூட்டங்களாக இருந்தால் நலம் !
\
கேபிள்சங்கர், வீடு திரும்பல் மோகன், சி பி


இப்போ வலைப்பூ என்பது தவிர்க்க முடியாத சக்தி ஆகிடுச்சு. இப்போ புதுசா ஒரு பத்திரிக்கை தொடங்குனா  அதுல கண்டிப்பா வலைப்பூ  பக்கங்கள்னு ஒதுக்கியே ஆக வேண்டிய கட்டாய சூழல் இருப்பதை நான் பார்க்கிறேன்.. உல்லாச ஊஞ்சலில் கூட கேபிள் சங்கரை எழுத வைத்தேன்.. அவரும் 17 வலைப்பூக்கள் பற்றி அறிமுகம் செய்தார்.. 


அட்ராசக்க நீண்ட நாள் வாசகரும்,ஆத்ம நண்பரும் ஆன கும்பகோணம் பேராசிரியர் உடன் ஒரு அழகிய சந்திப்பு


உங்கள் சினிமா விமர்சனங்கள் திரை உலகினரால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. பத்திரிக்கையில் விமர்சனம் வர தாமதம் ஆகும். உங்கள் விமர்சனம் தான் முதலில் வாசிக்கிறார்கள். கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் போன்றோரின் விமர்சனம் அனைத்து இயக்குனர்களும் வாசிக்கிறார்கள்.

சில ப்ளாகுகளில் பின்னூட்டங்களில் தனி மனித தாக்குதல் நடப்பதை பார்க்கிறேன். ஒருவனின் எழுத்தை மட்டும் பாருங்கள். விமர்சியுங்கள் அவன் வாழ்க்கையையும், அவனையும் விமர்சிக்காதீர்கள். கண்ணதாசன் இன்றளவும் நினைவு கூறப்படுவது அவர் எழுத்தால் தான். அவர் வாழ்க்கையில் பல்வேறு முறை தடுக்கி விழுந்தார். இன்று யாரும் அதை பற்றி பேசவில்லை.அவர் எழுத்துக்களால் நிலைத்து நிற்கிறார் !


பத்திரிக்கைகளுக்கு தணிக்கை உண்டு. எழுத்தாளர்கள் படைப்புகளை எடிட் செய்து தான் பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. ஆனால் ப்ளாகில் கட்டற்ற சுதந்திரம் உள்ளது. எனவே வெளியிடுவோர் தான் எச்சரிக்கை ஆக இருந்து தேவையற்றவற்றை தவிர்க்க வேண்டும்.


வலைப்பூவை எளிதில் எடுத்து கொள்ளாதீர்கள். அங்கு தெரிவது ஒரு மனிதனின் பெர்சனாலிட்டி. உங்கள் முகம், உங்கள் சுயம் அதில் தெரிகிறது. நீங்கள் யார் எத்தகையவர் என ஒவ்வொரு பதிவிலும் வெளிப்படுத்துகிறீர்கள். அதை நினைவில் கொண்டு எழுதுங்கள்.


Unparliamentary
வார்த்தைகள் , அல்லது விஷயங்கள் எழுதினால் பெண்களால் எப்படி வாசிக்க முடியும்? அப்படி நீங்கள் தொடர்ந்து எழுதினால் உங்களை பலரும் புறக்கணித்து விடுவார்கள். ஒரு மீட்டிங்கில் உங்களை பார்த்தால் உங்களை வந்து சந்தித்து பேசணும். இவரிடம் பேசாமல் இருப்பதே நல்லது என போகும் அளவில் இருக்க கூடாது !  





சினிமா விமர்சனம் முக்கியம் தான் எனினும் எல்லாரும் அதை எழுத வேண்டும் என்பது இல்லை. சினிமா பற்றிய அறிவும் ரசனையும் உள்ளவர்கள் அதை எழுதினால் நல்லது.விமர்சனத்தில் ஒரு நேர்மை இருக்க வேண்டும்.


சினிமா விமர்சனம் எழுதியே ஆகனும் என்பதற்காக யாரும் அப்படி எழுதிட்டு இருக்காதீங்க.. வேறு பல விஷயங்கள் எழுத இருக்கு..



பதிவுலகின் ஒரு சூப்பர் ஸ்டார் ஜாக்கி சேகர் பேச அதை ரசிப்பவர் இன்னொரு சூப்பர் ஸ்டார் கேபிள் சங்கர் 


வலைப்பூவில் படித்த ஒரு குட்டிக்கதையை இங்கே பகிர்ந்து என் பேச்சை நிறைவு செய்கிறேன்... “ஒரு டிபார்ட்மெண்ட்டர்ல்  ஸ்டோர்,, அங்கே ஒரு கஸ்டமர் வந்து அரைக்கிலோ பட்டர் வேணும்னு கேட்றார். சேல்ஸ்மேன் சொல்றார். சார், எங்க கிட்டே ஒரு கிலோ பட்டர் பாக்கெட் தான் இருக்கு.. பேக் பண்ணினது.. அதை பிரிக்க முடியாது, அது பேக் பண்ணி இருக்கு.

 யோவ்,.. நான் கஸ்டமர்.. நான் சொல்றதுதான் வேணும். என்னை சேட்டிஸ்ஃபை பண்றதுதான் உன் வேலை .. உன் கிட்டே என்ன பேச்சு? நான் ரெகுலரா இங்கே வந்து  அரை கிலோ தான் வாங்கிட்டு இருக்கேன். நீ மேனேஜர்ட்ட போய் கேளு


 சேல்ஸ் மேன் உடனே  மேனேஜர் கிட்டே போய்  “ சார், இங்கே ஒரு லூஸ் , மெண்டல் , சாவு கிராக்கி வந்து   பட்டர் பாக்கெட்ல லூஸ்ல கேட்குது சார்.. “

 இப்படி சொல்லிட்டு இருக்கும்போது திடீர்னு கஸ்டமர் அங்கே வந்துட்டார்.. 

 இப்போ  2 பேருக்கும் அதிர்ச்சி.. கஸ்டமரை லூஸ்னு சொல்லியாச்சு,.. என்ன சொல்லி சமாளிக்கறதுன்னு தெரியல.. 

 உடனே அந்த சேல்ஸ் மேன் ஸ்மார்ட்டா   ரிப்ளை பண்ணான்.. ” ஆனா இந்த ஜெண்டில்மேன் அரைக்கிலோ வாங்கிக்கறேன்னு சொல்றார் சார்.. “ என சமாளிச்சார்


 உடனே மேனேஜரும் “ அப்புறம் என்னய்யா? அவருக்கு அரைக்கிலோ பிரிச்சு குடுத்துடு” என்றார்


 கஸ்டமர் போனதும் மேனேஜர் அந்த சேல்ஸ்மேனை தனியா அழைச்சு “ வெரிகுட்யா.. நீ கஸ்டமரை நக்கல் அடிச்சே, கமெண்ட் பண்ணினே.. ஆனா கஸ்டமர் வந்ததும் டக்னு சமாளிச்சியே,  நீ எந்த ஊருப்பா? 

 மெக்சிகோ சார்.. மெக்சிகோ தெரியுமில்ல சார்? ஃபிட்பால்  மேட்சுக்கு பேர் போன  இடம்.. அது போக  பிராஸ்டிடியூட்க்கும் பேர் போன இடம் “

 உடனே மேனேஜர் செம காண்ட் ஆகி “ யோவ், என்னை நக்கல் அடிக்கறியா? என் சம்சாரம் கூட மெக்சிகோ தான் “

 உடனே சேல்ஸ் மேன் டக்னு “ஓஹோ அவங்க அந்த ஃபுட் பால் டீம்ல இருக்காங்க சார்? 


 என்றானாம்.. அதுலயும் அவன் தன்னோட ஸ்மார்ட்னெசை காண்பிச்சுட்டான்.. 

 அது மாதிரி உங்க  வலைப்பூவை எல்லாரும் வாட்ச் பண்ணிட்டுதான் இருக்காங்க என்ற உணர்வுடன் ஸ்மார்ட்டாக நடந்துக்குங்க.. வாழ்த்துகள்.. “















a
“படங்கள் உதவி வீடு திரும்பல் மோகன்