Showing posts with label ANJALI. Show all posts
Showing posts with label ANJALI. Show all posts

Sunday, March 24, 2013

வத்திக்குச்சி - சினிமா விமர்சனம்

ஹீரோ ஷேர் ஆட்டோ டிரைவர் . ரெகுலர் கஸ்டமாரான அதாவது அப்படி இவராப்பார்த்து வலியனாப்போய் ஆக்கிக்கிட்ட ஹீரோயினோட  ஒன் சைடு லவ். இது ஒரு டிராக் . இவரை 3 வெவ்வேற ஆட்கள் வேறு வேறு காரணத்துக்காக துரத்தறாங்க , சும்மா இல்லை , அவரை கொலை செய்ய . அந்த அளவுக்கு அவர் என்ன செஞ்சார்?  என்பதை நான் லீனியர் ஸ்க்ரீன்ப்ளே மெத்தேடில் முடிஞ்ச வரை சுவராஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர்


 இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் அவர்களின் தம்பி  திலீபன் தான் ஹீரோ , ஆள் நல்லா ஜை ஜாண்டிக்கா  ஹைட்டா இருந்தாலும் முக பாவனைகள் , காதல் , ஆக்ரோஷம் சோகம் சுத்தமா வர்லை , ஸ்டண்ட் மாஸ்டர் தயவில் நல்லா ஃபைட் போடறார்.  மற்ற படி தம்பி  நீ இன்னும் கத்துக்கனும் . 


 ஹீரோயின்  நம்ம அஞ்சலி. அங்காடித்தெரு அஞ்சலிக்கும்  , வத்திக்குச்சி அஞ்சலிக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் , இன்னும் 2 வருஷம் போனா நமீதாவைத்தோற்கடிக்கும் 10 வித்தியாசம் ஆகி விட வாய்ப்பு இருக்கு, கபர் தார் (அ தெரு அஞ்சலி =  32 ,  வ கு  அஞ்சலி = 36 ,  இன்னும் 2 வருஷத்துல = 42). என்னதான் இருந்தாலும் அஞ்சலிக்கு கன்னம் 2ம் உப்பி இருக்கே அடடா என்ன அழகு ( கன்னம் மட்டும் தான்யா ) அவர் ஹீரோவை லவ்வினாலும் அதை வெளிக்காட்டாமல் பம்முவது , மிரட்டுவது , குழைவது என பிரமாதப்படுத்துகிறார். லவ்வர் உள்ளவங்க எல்லாம் அஞ்சலி மாதிரி லவ்வர் இல்லையே எனவும், லவ்வர் இல்லாதவங்க அஞ்சலியே லவ்வரா வேணும் என நினைக்க வைப்பது அஞ்சலிக்குக்கிடைத்த வெற்றி ( ஆனா நான் அப்டி ஏதும் நினைக்கலை ) ( ஹீரோயினுக்கு மட்டும் எதுக்கு இத்தனை பெரிய பத்தி? )


 நண்டு ஜெகனுக்கு வில்லத்தனம் மிக்க கதாப்பாத்திரம் . மனதோடு ஒட்டாத கதாப்பாத்திரம் என்றாலும்  அவரளவில் நல்லா நடிச்சிருக்கார்.

 


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1.  ஹீரோ - ஹீரோயின்க்கு இடையேயான காதல் எபிசோடு செம சுவராஸ்யம் , எங்கேயும் எப்போதும் படத்துக்குப்பின் இதில் தான் லவ் செம டெவலப்மெண்ட்


2.  அஞ்சலி இங்க்லீஷ்க்கு டியூஷன் போவதும் சக மாணவிகளுடன் அடிக்கும் லூட்டியும் 


3. ஹீரோ புது முகம் என்பதால் அதை பேலன்ஸ் பண்ண ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கரெக்ட் பண்ணிய அதாவது திரைக்கதையை கரெக்ட் பண்ணிய இயக்குநரின் லாவகம்


4. ஃபில்டர் வாட்டர் கேன் மாதிரி சரக்கு இருக்கும் வாட்டர் கேன் செம அப்ளாஸ் அள்ளுது தியேட்டரில் 


5.  வில்லனாக வரும் நண்டு வஞ்சகச்சிரிப்பும் அப்போது வரும் பி ஜி எம்மும் 


6. ஒரு சீனில் அஞ்சலி கல்யாணக்கோலத்தில் வரும்போது ஜரிகை வைத்த கல்யாணிக்காட்டன் சேலையில் அசத்தலாக வருகிறார். காணக்கண் கோடி வேண்டும்




 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. சரண்யா இட்லிப்பாத்திரத்தில் மூடியை எடுக்க அவர் கர்ச்சீப்பை யூஸ் பண்றார். கரித்துணி என்னாச்சு ? ஷூட்டிங்க் ஸ்பாட்டில் அவசரத்துக்கு அதுதான் கிடைச்சுதா? 


2. ஹீரோ யூஸ் பண்ணும் ஷேர் ஆட்டோ சில சமயம் க்ளோசப்பில் சாதா ஆட்டோவாகவும், லாங்க் ஷாட்டில் மட்டும் ஷேர் ஆட்டோவாகவும் இருக்கு, ஒய் திஸ் குழப்பம் ? 


3.  ஷட்டரை ஆள் மீது இறக்கி ஏற்றி  இறக்கி கொலை செய்யும் கொடூரக்காட்சி  எதுக்கு? எப்படி சென்சார் ல விட்டாங்க? 



4. பப்ளிக் ப்ளேஸ் ல 4 பேர் பார்த்துட்டு இருக்கும்போது ஒருத்தன் செல் ஃபோன்ல கொலை திட்டம் பற்ரி பக்காவா பிளான் அவௌட் பண்ணுவது எப்படி? 


5.என்னதான் அஞ்சலி மனம் கவரும்படி காதல் சல்லாபம் ,  ரொமான்ஸ் பண்ணாலும் அவர் கிட்டே ஒரு ஆம்பளைத்தனம் தெரியுதே , நளினம் குறையுதே, ஏன்?  குரல் காரணமா?


6. நண்டு ஜெகன் & நண்பன் 2 பேரும் ஷூ போட்டு பீச் மணல் ல ஓடறாங்க, அவங்களைக்கொலை பண்ணத்துரத்தும் ஆள் வெறும் கால் ல லாங்க் ஷாட்ல ஓடறாரு , கிட்டே நெருங்கியதும் அவர் கால் ல செப்பல் இருக்கு . மறுபடியும் லாங்க் ஷாட்ல  காட்டும்போது செப்பல் நோ


7.  ஹீரோ உயிரோட இருந்தா ஆள் கடத்தலுக்கு இடைஞ்சலா இருப்பான் என்பதால் ஹீரோவைக்கொலை செய்ய பிளான் போடுவது ஓவர். அதே மாதிரி ஹீரோவை வீட்டில் அடைச்சு வைப்பதும் 2 நாள் வெளியிலேயே வர முடியாது என வசனம் பேசியும்  போக்கு காட்டும் வில்லன் அப்போ ஆள் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாமே? அப்போ ஏன் ஹீரோவை கொலை பண்ண துடிக்கனும்?


8.  நோக்கியா பேசிக் மாடல் பேட்டரி 3 நாள் தாங்கும். ஆனா ஹீரோவை ரூமில் அடைச்ச முதல் நாள் இரவே பேட்டரி டவுன் ஆகிடுதே எப்டி?



9.  பெரிய ரவுடி மாதிரி காட்டப்படும் ஆள் சாதா போலீசைக்கண்டு ஏன் பயந்து நடுங்கனும்?


10. மார்க்கெட்டிங்க் எக்சிக்யூட்டிவ்வா ஒர்க் பண்ணும் 3 பேரும் என்னமோ கை தேர்ந்த கிரிமினல்ஸ் போல் பிளான் பண்ணுவது எப்படி? முன் பின் பழக்கம் இல்லை, இதுதான் முதல் குற்றம் என வசனம் வேறு





 மனம் கவர்ந்த வசனங்கள்


1. இன்சூரன்ஸ் ஏஜென்ட் ,சேல்ஸ் ரெப் 2ம் நாய்ப்பொழப்பு


2. தம் ,தண்ணி அடிக்கற மாதிரி அடுத்தவங்களுக்கு உதவி பண்றதும் ஒரு போதை தான்.அதுல வீழ்ந்துட்டா மீளவே முடியாது


3. முகம் தெரியாத நபருக்கு நாம செய்யும் உதவி,முகம் தெரியாத நபரிடம் இருந்து நமக்குக்கிடைக்கும் உதவி 2ம் அற்புதமான விஷயம


4.  வண்டலூர் ஜூவுக்கு போகலாம் வா

“நான் எதுக்கு உன் கூட வரணும்” 

நாம லவ்வர்ஸ் இல்லை அதான். 


“அலோ.. ரோட்டுக்கு நாலு பேர் என்னை லவ் பண்றேன்னு சொல்றாங்க.. அதுக்காக எல்லாரையும் நான் லவ் பண்ண முடியுமா? நீ வேணா என்னை லவ் பண்ணிக்க,  ஆனா நான் பண்ணலை


5.   அவங்க வீட்ல எல்லாரும் கவர்மெண்ட் ஜாப்டா, எப்படி நீ லவ் பண்ணலாம்?  ஒருத்தர் ஈ பி ஆபீஸ்ல வாட்ச் மேன் , இன்னொருத்தர் வார்டு பாய் ஜி ஹெச்ல 



6 நீங்க படிச்சவங்க தான், ஆனா படிச்சவங்க கல்ச்சர் தெரியல. 


7. சண்டைல அடிக்கறது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அடி வாங்குவதும் , தாங்குவதும் 


8. எப்பவுமே நமக்கு ஏதாவது நடந்தா அது கஷ்டம் , மத்தவங்களுக்கு நடந்தா அது வேடிக்கை

9.  பிசிக்கலா செஞ்சா தப்பு , அதுவே மெண்ட்டலா யோசிச்சு செஞ்சா அது திறமை


10. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்லயும்  கண்டு பிடிக்க முடியாத  க்ரைம் கேஸ் நிறைய இருக்கும் 


11. நான் உன்னை லவ் பண்றேன்


 சரி, பண்ணிக்கோ


வாட்?


 


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 43 ( இதை படம் பார்த்த  17 3 2013 நைட் ட்விட்டர்ல போட்டுட்டேன் ,ஆன விகடன் மார்க் - 42 )


ரேட்டிங் -  3 /5


சி.பி கமெண்ட் - அஞ்சலி ரசிகர்கள் எல்லாரும் பார்க்கலாம், மாமூல் கமர்ஷியல் மசாலாப்படம் , போர் அடிக்காம போகுது .
 
















Tuesday, January 22, 2013

Seethamma Vaakitlo Sirimalle Chettu - சினிமா விமர்சனம்

http://www.123cinejosh.com/wp-content/uploads/2012/11/Seethamma-Vaakitlo-Sirimalle-Chettu-Release-Wallpapers-123cinejosh.jpgஅண்ணன் , தம்பி 2 பேரு , அம்மா , அப்பா உள்ள ஃபேமிலி .அண்ணனுக்கு முறைப்பொண்ணு வீட்லயே இருக்கு . ஃபேமிலிக்கு ஆகாத தூரத்து ச்சொந்தம் வீட்ல தம்பிக்கு ஒரு பொண்ணு மாட்டுது. தம்பியோட லவ் அண்ணனுக்கு பிடிக்கலை. இதனால அண்ணன் தம்பிக்குள்ளே நிகழும் போராட்டங்கள் தான் கதை . ஆல்ரெடி நாம வானத்தைப்போல , ஆனந்தம் , நட்புக்காக மாதிரி பல படங்கள்ல பார்த்த கதை தான். ஆந்திராவுக்கு ஒரு வேளை புதுசா இருக்கும்.


ஆந்திரா சூப்பர் ஸ்டார்கள் வெங்கடேஷ் , மகேஷ் 2 பேரும் தான் அண்ணன் , தம்பி .  படம் பூரா வில்லன்களோட ஃபைட் போடாம அமைதியா இருந்ததுக்கே அவார்டு தரலாம். வேலை இல்லாத வெட்டாஃபீசாய் , முன் கோபி யாய் வரும் வெங்கடேஷ்க்கு செம ஈசியான வேலை . அப்பப்ப தளபதி ரஜினி மாதிரி முகத்தை இறுக்கமா வெச்சிருந்தாலே போதும் , மிச்சத்தை இயக்குநர் சமாளிச்சுக்கறார். அவர் அடிக்கடி சட்டைக்காலரை பின்னால தூக்கி விட்டுக்கறதுதான் ஸ்டைலா? நம்ம ஊர்ல ரஜினி 25 வருஷத்துக்கு முன்னாலயே அதை பண்ணிட்டாரு .


மகேஷ் இளமைத்துள்ளலான கேரக்டர் . வழியில் தென்படும் ஃபிகர்களை வலியனாப்போய் வம்பிழுக்கும் விதம் ஆஹா! கோபுர வாசலிலே படத்தில் கார்த்திக் பண்ணாததா?  ஆனாலும் ஜாலியா இருக்கு. அவர் அடிக்கடி டக் இன்  பண்ணிய சர்ட்டை எடுத்து வெளியே விடுவது ஸ்டைலா? , சகிக்கலை.  15 ரீல் படத்துல  27 டைம்  அப்படி பண்றார்.. உஷ் அப்பா . அவர் அடிக்கடி ஈ அப்டி காட்டுவது ஆரண்ய காண்டத்துல ஜாக்கி ஷெராப் ஆல்ரெடி செஞ்சாச்சி . புதுசா  அவர் பண்ணுனது ஒண்ணும் இல்லை .

 http://www.webparx.com/movies/wp-content/nggallery/mahesh-babu-in-seethamma-vakitlo-sirimalle-chettu-movie/mahesh-babu-in-seethamma-vakitlo-sirimalle-chettu-movie-webparx-2.jpg




ஹீரோயின் 2 பேர்ல முதல் அறிமுகம் ஆவது  அனுதினமும் அணு அணுவாக ரசிக்கச்சொல்லும் அங்காடித்தெரு அஞ்சலி. கொழுக் மொழுக் கன்னம் , சிரிக்கும் கண்கள் , அழைக்கும் உதடுகள் என அவர் வரும் காட்சி எல்லாம் ஈர்ப்பு. இந்திய சினிமாக்களிலேயே கிளாமரான ஹீரோயின் அறிமுகம் ஆகும்போது அடிக்கும்  டார்க் கலரான சிவப்பு , வயலெட் , மயில் கழுத்து , ராமர் க்ரீன் ஜாக்கெட் எல்லாம் போடாமல் மிக எளிமையான  சம்பங்கி கலரில் ( லைட் காக்கி கலர் )  ஜாக்கெட் போட்டு அறிமுகம் ஆகும் முதல் காட்சியிலேயே ஈர்த்து விடுகிறார். 


அடுத்தடுத்த காட்சிகளில்  அவர் டார்க் கலர் டிரஸ்ஸில் கலக்குகிறார். எல்லா காட்சிகளும் சேலைகள் தான். செம செம . எஜமான் படத்தில் வருவது போல் ஹீரோவுக்கு அடிக்கடி துண்டு  எடுத்துக்கொடுத்து தூண்டும் வேலை . ஒரு டூயட்டும் உண்டு 


அடுத்த ஹீரோயின் சந்தனச்சிலையா? என திகைக்க வைக்கும் சமந்தா. கிண் ஸ்பெஷலிஸ்ட்டான இவர் ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டிடம் போக வேண்டி வந்தது எல்லாம் இயற்கையின் திரு விளையாடல் . பாட்டியாலா சுடிதார் ,  லெக்கின்ஸ் , பாராசூட் மாடல் பைஜாமா என அவர் வகை வகையாய் உடை அணிந்து வருகையில் தியேட்டர் பெண்கள் எல்லாம் நோட் பண்ணிக்கறாங்க . செத்தாண்டா அவங்கவங்க புருஷங்க . 

அஞ்சலியை விட இவர் அதிக காட்சிகளில் வர்றார். ஓப்பனிங்க் சாங்க் , ஒரு டூயட் என இவருக்கு 2 பாட்டு .கலர் ஃபுல் கலக்கல்ஸ். 


பிரகாஷ் ராஜ் இருவர் பட கெட்டப் , காஞ்சிவரம் பட  பாடி லேங்குவேஜ் என அடக்கி வாசிக்கிறார்.

 http://publichubs.com/blogimages/hub/784-2-anjali-saree-stills-at-malabar-gold-showroom.jpg



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. சந்தனச்சிலை சமந்தா ஒவ்வொரு டைம் ஃபோன் பண்ணும்போதும் ஹீரோ ஃபோனை   ஓடும் மிக்சி ஜார் அருகே  ஃபோனை வைப்பது , ஊதும் நாதஸ்வரம் முன் வைப்பது என ஜாலி கலாட்டாக்கள் 


2. அஞ்சலிக்கான ஜாக்கெட் டிசைன் அற்புதம் , முழு முதுகும் தெரியும்படி வடிவமைக்கப்பட்ட பெரிய பள்ளத்தாக்கு  பேக் யு நெக் ஜாக்கெட். கேமரா எப்பவும் அஞ்சலி முதுகுலதான் லேண்ட் ஆகுது . ஹூம், முதுகா அது? பத்தமடை பாய் மாதிரி 



3. மேரேஜ் ஃபங்க்‌ஷனில் ஹீரோவைக்கண்ட  சம்ந்தா வெளிப்படுத்தும் ஷாக் சர்ப்பரைஸ் ரீ ஆக்‌ஷன்  சோ க்யூட்


 http://web2look.com/wp-content/gallery/samantha-hot1/samantha-hot-6.jpg



4. ஹீரோவை விட சமந்தா மிக குள்ளம் என்பதால் அவருக்கு  ஒரு அடி உயரத்துக்கு  ஹை ஹீல்ஸ் போட்டு சமாளிப்பதும் , வெங்கடேஷ் விட அஞ்சலி ஹைட் என்பதால் அவரை எப்போதும் வெறுங்காலுடன் நடக்க விடுவதும் , வெங்கடேஷ் ஹை ஹீல்ஸ் ஷூ அணிவதும் ( நம்ம ஊர் சூர்யா மாதிரி ) பேலன்ஸ்டு சீன்ஸ் 



5. தூரத்துடுக்கு பாட்டப்ப அஞ்சலி  தன்னோட இடுப்பை ஒரு வெட்டு வெட்டுவாரே .. செம கிக். கோடானு கோடி  பாட்டப்ப அந்த லேடி இடுப்பை ஒரு சுத்து சுத்துமே அந்த கிக்குக்கு சமம் 



6. படத்தில் வாய்ப்பு இருந்தும் சண்டைக்காட்சிகள் வைக்காதது , திரைக்கதையில் இரு காதல் ஜோடிகளின் ரொமாண்டிக் காட்சிகளை ஒன் பை ஒன் மாத்தி மாத்தி காட்டி பேலன்ஸ் பண்ணது 



7 . கல்யாண கலாட்டா காட்சிகள் அழகு + பிரம்மாண்டம்

http://moviegalleri.net/wp-content/gallery/samantha-ruth-prabhu-latest-hot-images/hot_samantha_latest_stills_pics_3143.jpg




 இயக்குநரிடம் சில கேள்விகள்




1. வசதியான குடும்பத்தில் இருக்கும் ஒரு நியூலி மேரீடு கப்பிள் ரயில்ல அன் ரிசர்வ்டுல ட்ராவல் பண்ணுவாங்களா? ஏ சி கோச் ல வராட்டியும் அட்லீஸ்ட் ரிசர்வ்டு செகண்ட் கிளாஸ்ல தானே வருவாங்க.. 


2. அஞ்சலிக்கு மட்டும் இண்ட்ரோ சாங்க் இல்லை, ஆனா சமந்தாவுக்கு இருக்கு. இது எந்த வகைல நியாயம்? ஒரு கண்ணுல வெண்ணெய் , இன்னொரு கண்ல தொண்ணையா? 



3. படத்துல ஏகப்பட்ட கேரக்டர்ஸ். கலைஞர் குடும்பம் மாதிரி , எல்லா கேரக்டரும் அறிமுகம் ஆகி கதைக்கு செட் ஆகும்போதே ஒரு மணி நேரம் ஆகிடுது 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidMMvOqxwULA-hFsezvrDydqB7AZsk8R6FbbgN3Rn-f6LQCyOa6u2KCAiykz5JyOWmcqKx6dLM2NtMjKNkrmp2cCtc58Gzr68qcQhJJGSV60oo4N7qI6AmeXA6wcwtoWZfkfDxwORoBtqh/s1600/anjali-hot-stills.jpg



4.  ஒரு சீனில் வேலை வெட்டி இல்லாத வெங்கடேஷ்  இன்ஸ்பெக்டரை கோபத்தில் பளார் என அடிப்பது எல்லாம் ஓவரோ ஓவர். அவர் ஆன்னு பார்த்துட்டு இருக்காரு . அவர் ஒண்ணும் ரவுடி கிடையாதே  நிஜ வாழ்வில் பப்ளிக்கில் ஒரு போலீஸ் ஆஃபீசரை ஒரு வெத்து வேட்டு பப்ளிக் பிளேஸ்ல அடிச்சா என்ன ஆகும்? 



5. கதைப்படி ஆன்மீக வாதியாக வரும் பிரகாஷ் ராஜ் ஒரு சீனில் கூட நெற்றியில் திருநீறோ , குங்குமமோ வைக்கலை, ஆனா கோயில் பிரசாதத்தை ஒணத்தியா சாப்பிடறார், கோயில்ல இருக்கார் . 



6. கல்யாண வேலைகளில் வீடே பரபரப்பாக இயங்குகையில் எல்லாரும் வெறும் காலுடன் இருக்க, ஹீரோ மகேஷ் மட்டும் ரன்னிங்க் கேன்வாஷ் ஷூ உடன் அலைகிறார்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbymytcERdthXZUXZC7CyzwFqGecFmrPwEBR7JvimYRrcpf-A-26-Hrh9aUxqLJl-6mFRslfWXaVt1kcglxQJ607XclINq81EDciycSwXtK_CrcAiy2B5KPWZYjRM7yQvg1I0KZlyygt-C/s1600/Anjali-Latest-New-Unseen-Photo-Shoot-+(1).jpg



7. அதே போல் மேரேஜ் ஃபங்க்‌ஷனில் குப்பம்மா, குருவம்மா , முனியம்மா எல்லாம் பட்டு சேலையில் மினுக்கிட்டு வரும்போது அஞ்சலி சாதா சேலையில் உலா வர்றாரே?  க்ளைமாக்ஸ்ல அவருக்கு மேரேஜ் ஆகும் காட்சியில் தான் சில்க் சேலை . ஒய்? 




8. படம் போட்டதில் இருந்து அஞ்சலி வரும் ஒவ்வொரு காட்சியிலும் அவர் ஏதாவது ஒரு சமையல் எடுபுடி வேலை  செஞ்சுட்டே இருக்காரே? அவர் என்ன வேலைக்காரியா? 



9. இண்ட்டர்வியூவில் எல்லா தேர்விலும் பாஸ் ஆன ஹீரோவிடம் அதிகாரிகள் “ உங்க சிரிப்பில் உயிர் இல்லை. அது இயல்பா இல்லை , நல்லா சிரிங்க அப்போதான் வேலை” என்பதும் மனதில் சோகத்துடன் இருக்கும் ஹீரோ மனம் விட்டு சிரிக்க முடியாமல் செயற்கையாய் சிரிப்பதும் அதனால் வேலை கிடைக்காமல் போவதெல்லாம் ஓவரோ ஓவர் . எந்த இண்ட்டர்வ்யூல சிரிப்பை வெச்சு ஜாப் தர்றாங்க? 



10 . ஒரு காட்சியில் கல்யாணப்பெண் வெள்ளைப்பட்டுப்புடவை அணிந்து வர்றார். கேரளாப்பெண்கள் தான் அப்படி வருவாங்க . நம்ம ஆட்கள் எல்லாம் முகூர்த்தப்புடவை மேக்சிமம் ரத்தச்சிவப்பு , மெரூன் , பிரவுன் , வயலெட் , பச்சை கலர் தான் . சத்தியமா வெ:ள்ளை நாட் அலோடு



11. கிட்டத்தட்ட வில்லனாக வரும் உறவினர் ரமேஷ் ராவுக்கும் பிரகாஷ்ராஜுக்குமிடையே பொறாமை ஏற்படக் காரணம் என்ன?ன்னு கடைசி வரை சொல்லவே இல்லை 



 12. அந்த மின் விபத்து , வில்லனை காப்பாற்றுவது  , அவர் மனம் மாறுவது படு செயற்கை


13. சமந்தா வை பல படங்கள்ல கவனிச்சுட்டுதான் இருக்கேன், அவர் அழகா இருக்கும் புருவத்தை பியூட்டி பார்லர் போய் ட்ரிம் பண்ணி அப்புறம் அது மேல  ஐ ப்ரோ பென்சிலால டார்க்கா  வரைஞ்சு அலங்கோலம் பண்ணிக்கறார். கார்த்திகாக்குத்தான் வேற வழி இல்லை , வரைஞ்சுக்கறார், உங்களுக்கு என்ன? அஞ்சலி இந்த விஷயத்துல குட்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD8u7je2fw7likzayZEj2zoUZyjVFsuJsCp5dSQ0BFosGSJ-9hpDJ24tmKqO2csxE1qLVYIZoERrSYZLvrhC9Gdea7Oa0v8BF6MPYNrcuumOt0Cg8CYYovgrJ96ompJ8hpwJsIyqtDbso/s1600/Samantha+Hot+Bikini+stills+(8).jpg



சி.பி கமெண்ட் -  ஃபேமிலியோட பார்க்கற மாதிரிதான் இருக்கு . 2 ஹீரோயின் ரசிகர்கள் பார்க்கலாம், மற்றபடி புதுசா கதைல ஒண்ணும் லேது . டைட்டிலுக்கான அர்த்தம் சீதையின் வீட்டின் முற்றத்தில் மல்லி செடி.ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்

Monday, March 05, 2012

அரிதிலும் அரிதான படமான அரவான் - அழகியல் வசனங்கள்

http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/03/Aravaan_Movie_Review-300x300.jpg

1. தூக்கம் வர்றவன் காவலுக்கும், தும்மல் வர்றவன் களவுக்கும் வரக்கூடாது


-----------------------------------

2.  ஒரு நாள் இல்லை ஒரு நாள் நம்மளை ஏமாத்தி கம்மியான விலைக்கு களவுப்பொருள்களை வாங்கறானே இவன் வீட்ல களவாடனும்


-------------------------------

3. வெறும் வெத்தலை ( வெற்றிலை) போட்டா அது வீட்டுக்கு ஆகாது.. சுண்ணாம்பும் எடுத்துக்கறேன்..?

--------------------------

4. ராத்திரி 3ம் ஜாமம் தான்  கட்டில் காவிலி வரும் , மனுஷன் அடிச்சுப்போட்டு கிடக்கற மாதிரி தூங்கற டைம், அப்போதான் நாம களவாடப்போகனும் .. ( ஜெ ஆட்சில அந்த தொல்லை இல்லை, கரண்ட் கட் ஆகறதால விழிச்சுக்கறாங்க)


-----------------------------------

5. களவாணிப்பயலுக்கு அழகே புகுந்த இடத்துல ஏதாவது களவாண்டுட்டு வர்றதுதான்.. நீ என்னடான்னா வெறும் கையோட வந்திருக்கே?

அது சரி,.. நான் போனப்ப ஒரு பொண்ணு நாண்டுக்கிட்டு செத்துடுச்சு ( தூக்கில் தொங்கி) பழி எம் மேல வந்துடக்கூடாது பாரு.. 

----------------------------------

6.  களவுக்கும் காலம், நேரம், திசை எல்லாம் உண்டு.. 

---------------------------

7.  லேடி பெருசு - ஏலேய்.. இந்த நேரத்துல எங்க ஊர்க்கு எதுக்கு வந்திருக்கே? நீ சம்மணம் போட்டு  உக்காந்திருக்கற சாமியை கும்பிடற கோத்திரத்துல வந்தவன் தானே..இப்படி அர்த்த ஜாமத்துல இங்கே வந்தா  உனக்கு சாமானம் எந்திரிக்காது பார்த்துக்க.. 

 பாட்டி, வயசுக்கு தகுந்த பேச்சு பேசு.. 

----------------------------------

8.  கோட்டையூர் பற்றி உனக்கு தெரியலை.. எங்க ஊர் பொன்னை, பெண்ணை கொண்டு வர வேண்டாம்.. ஒரு பிடி மண்ணை கொண்டு வாங்கய்யா பார்க்கலாம்.. எவ்வளவு பாதுகாப்பு.. அரண்.. 

--------------------------------

9.  திறன் இருக்கறவன் என் கூட வா.. திறன் கெட்டவன் சொந்த ஊர்  திசை தேடி ஓடிப்போ . ஆபத்துல சிக்குன நண்பனை விட்டுட்டு என்னை மட்டும் காப்பாத்திக்க மாட்டேன்.. 

-------------------------------------

10.  களவுத்தொழில்ல இருக்கறவனுக்கு எவ்ளவ் வேணாலும் ரத்தம் வரலாம், ஆனால் கண்ணீர் வரக்கூடாது.. 

------------------
http://www.southgossips.in/wp-content/uploads/2011/10/actress-dhanshika-latest-hot-photoshoot-gallery-pics-6.jpg
குத்து விளக்குடன் நிற்கும் குத்தாட்ட கலக்கு விளக்கு தன்ஷிகா

11.  ஏய்யா.. எனக்கென்ன குறைச்சல்? கொப்பும் குலையுமாத்தானே இருக்கேன்.. பொம்பளை தானா இறங்கி வந்து கேட்டா இந்த ஆம்பளைங்களுக்கு எப்பவும் எளக்காரம் தான்..

--------------------------

12. குலம் தெரியாதவனை ஊர்ல சேர்க்கலாம், ஆனா குடும்பத்துல சேர்க்க முடியாது. 

-------------------------------

13.  என்னது, என் ,மாட்டை அடக்கிடுவியா.. என் மாட்டோட கொம்பை தொட வேணாம்.. ------------------ கை தொடுய்யா பார்க்கலாம்.. 


-------------------------------

14.  களவுல இருந்துதான் காவல் பிறக்கும்..  உங்கப்பன் வழில வந்திருந்தா நீ புல் தான் புடுங்கிட்டு இருந்திருப்பே. 


-------------------------------------------

15.  கொளுந்தியாளை வம்புக்கிழுக்கறது தப்பா?

 அப்படி இழுக்கற மாதிரி இருந்தா உன் கொளுந்தியாளை வம்புக்கிழு.. எதுக்கு என் கொளுந்தியாளை வம்புக்கிழுக்கறே?

--------------------------------------

 16. என்னதான் இருந்தாலும் மச்சினி, கொளுந்தியான்னா ஒரு போதைதான்

----------------------------

17.  சிங்கம்புலி - என் பொண்டாட்டி குளிக்கறப்ப ஒளிஞ்சிருந்து பார்த்தான்.. அங்கங்கே அப்பப்ப கிள்ளினான்.. அதைக்கூட பொறுத்துக்கிட்டேன்... ஆனா என் கொளுந்தியாவை எக்காரணம் கொண்டும் யாருக்கும் விட்டுத்தர மாட்டேன்.. அவ எனக்குத்தான் ஹி ஹி பாதுகாப்பேன்..  இந்த ஊர்ல யாருக்கும் கொளுந்தியா பாசமே இல்லையா? ஏன் என்னை மட்டும் குறை சொல்றீங்க?

----------------------------------

18. காலைச்சுத்துன பாம்பு கணக்கா விதி நம்ம ஊரச்சுத்திக்கிடக்கு.. ஒவ்வொரு ஊரா   ரெண்டு ரெண்டு பேரா போய் தாக்கல் சொல்லிட்டு வந்துடுங்க ( இறந்த தகவல்)

---------------------------------

19.  எதா இருந்தாலும் நாம ஊர்க்காரங்க பேசித்தீர்த்துக்கலாம்.. 

 பேசிப்பேசியே தீர்த்துட்டீங்களே..  ஆளையே. அவன் என் தம்பிடா..

--------------------------------

20.  போரம் கேட்கப்போறப்ப பிரச்சனை வேணாம்னு பார்க்கறேன் (போரம் கேட்கப்போறப்ப - துக்கம் விசாரிக்க இழவு வீட்டுக்கு செல்லுதல்)

--------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYAPFAJntUtA9sgjhzwFsU30hI4yBMFVtWtISSBEgkieRxDshgUS3GLrz7c2vcsbdBraOQee5eG87cm_XCHHK11ystS2vpFjIhf58LKz0IrvYuDKOQzEiXtpMLcj6mzo-95hcfLumEaQ/s1600/swetha+menon-in-aravaan-movie-hot-stills.jpg

21.  புலியோட மீசை நரம்பு எடுத்து உன் கண்ல  ஒரு முடியை ஏத்துனா உன்  மூளை நரம்பு வெடிச்சு நீ செத்துடுவே..

-----------------------------

22.  விதவை ஆகப்போறேன்னு தெரிஞ்சும்  அப்பா கூட மல்லுக்கட்டி  உன்னை கட்ட நினைச்சேனே அது என் தப்பு.. 

---------------------------

 23.  உன்னை பார்க்கும்போதெல்லாம் 100 வருஷம் வாழ ஆசை வருது.. பலிக்கு பலி ஆடா நான் போகலை.. 

----------------------------

24.மதுர ராசா சாதாரண ஆளா? அவர் அரணாக்கொடியே என் கைல மாட்டி இருக்கு.. எம்புட்டு இடுப்பை பார்த்ததோ?


-------------------------------------

25.  மகா பாரதத்துல பாண்டவர்கள் போருக்கு முன்னால உயிர் பலி குடுத்தாங்களே.. அது மாதிரி தான் இதுவும்.. கலங்காதே..

--------------------

26.  மல்லுக்கட்டி 2 ஊரு மக்களும் போட்டி போட்டுக்கிட்டு சாகறதுக்கு ஒரு ஆளை மட்டும் பலி கொடுக்கறது தப்பே இல்லை..

----------------------

27.  உன்னை மந்தைல வெச்சு மொட்டை அடிச்சு விடனும்.. இல்லைன்னா டேஞ்சர்.

--------------------------------

28.  கோடாங்கி கண்ணீர் ஊரையே அழிச்சிடும்.

---------------------

29, சாகப்போறான்னு தெரிஞ்சும்  அவனை எப்படிம்மா உனக்கு கட்டி வைப்பேன்?

சரி.. அப்போ சாகாத ஆள் யார்னு காட்டுங்க.. அவனையே கட்டிக்கறேன்.. 

-------------------------

30.  யோவ்,.,. என்னைப்பற்றி என்னய்யா நினைச்சே.. நாளைக்கே வாந்தி எடுத்துக்காட்டவா?

---------------------

http://lh3.ggpht.com/-jdy3cWIj7jc/Tz9batCJs6I/AAAAAAAADhg/_9RZ0OI8uGM/aravaan_dhansika_exposing_boobs_in_saree_thumb%25255B3%25255D.jpg


31. சின்ன மகாராணி - மகாராஜா.. ஒண்ணு தெரிஞ்சுக்குங்க.. வெட்டி சாய்ச்சுத்தான் கொல்லனும்னு இல்லை.. விதைச்சும் கொல்லலாம்..

-----------------------------

32. ராணிக்கு அத்தர் வாசமும் பிடிச்சிருந்தது.. அத்தர் விற்க வந்தவனையும் பிடிச்சிருந்தது..

---------------------------------

33. மகா ராஜா - ஆடு கோழியைத்தான் பலி கொடுப்பாங்க.. யானையை எதுக்கு பலி கொடுக்கனும்? நான் ராஜா நான் எதுக்கு பலி ஆகனும்?

----------------------------

34. உன் நாக்கு புரளாத வரை உனக்கு மரணம் இல்லை..

--------------------------

35.  பலி ஆள் ஆனா என்ன? 10 வருஷம் தலை மறைவா இருந்துட்டு வந்துட்டா உனக்கு ஊரே மன்னிப்பு கொடுத்துடும்.. அப்படி ஒரு விதி இருக்கு.

--------------------------------------

Friday, November 11, 2011

தம்பி வெட்டோத்தி சுந்தரம் - சினிமா விமர்சனம்

http://tamilpaa.files.wordpress.com/2011/08/bc94f_thambi-vettothi-sundaram-9.jpg?w=330&h=458 

கேரளா பார்டர்ல நடந்த உண்மைக்கதைன்னதும் நான் என்னமோ ஏதோன்னு நினைச்சேன்.. சாதாரண ரேஷன் அரிசி  & கள்ளச்சாராயம் கடத்தல் காரனின் காதல் கதைதான்...கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த  ஒரு ரவுடியின் உண்மைச் சம்பவம்தான் தம்பி வெட்டோத்தி சுந்தரம்

பி ஏ பி எட் படிச்சுட்டு டீச்சர் வேலை செய்ய ஆசைப்பட்டு அதுக்கு ஹீரோ கரண் ட்ரை பண்றாரு.. ஆனா கிடைக்கலை.. உடனே போலீஸ் வேலைக்கு ட்ரை பண்றாரு. அதுவும் கிடைக்கலை.. பணம் கொடுத்தாத்தான் கவர்மெண்ட் வேலைன்னு சொன்னாங்காட்டியும் ஹீரோ என்ன பண்றாரு.. ரேஷன் அரிசி கடத்தற சரவணன் கூட கூட்டு சேர்ந்து  கள்ள சாராயம் கடத்தறார்.. ( எல்லா அன் எம்ப்ளாயிமெண்ட் கேண்டிடேட்ஸூம் நோட் பண்ணிக்குங்கப்பா).

அவரு அஞ்சலி கூட லவ்ஸ்.. அஞ்சலி வில்லனோட மக.. அட இவ்வளவுதான் கதையா?ன்னு யாரும் சர்வசாதாரணமா நினைச்சுடாதீங்க, அஞ்சலியோட ஃபி:ளாஸ்பேக்ல அவங்கம்மாவைக்கொன்ன கதை, , அவங்கம்மாவைக்கொன்னவனோட வாரிசு அஞ்சலி ஃபேமிலியை துரத்தற எக்ஸ்ட்ரா கதை எல்லாம் இருக்கு.. திரைக்கதை எழுதவே 2 குயர் நோட் செலவு ஆகி இருக்கும்னு நினைக்கறேன்..

 கரண்- க்கு சந்தேகமே இல்லாம இது ஒரு முக்கியமான படம்தான்.. கோபம், காதல், கிண்டல், வீரம், பழி வாங்கும் உணர்ச்சி-ன்னு  கலந்து கட்டி அடிக்கற ரோல்.. மனுஷன் புகுந்து விளையாடி இருக்கார்..

அஞ்சலி சும்மா வந்துட்டுப்போனாலே தமிழன் கை தட்டுவான்.. நல்லா நடிச்சா? கேக்கவே வேணாம்.. சாதாரண கேரக்டரைக்கூட ஸ்பெஷல் நடிப்பால பிரகாசிக்க வைக்கிற டேலண்ட் பாப்பாட்டா இருக்கு ( சரி சரி, அடுத்த பேராவுக்கு வாப்பா)

சரவணன் பருத்தி வீரனுக்கு அப்புறம் கிடைச்ச செம கல கல கேரக்டர்.. ஆங்காங்கே குணச்சித்திரம்.. 

அது போக படத்துல நடிச்ச 168 கேரக்டர் பற்றியும் சொல்லிட்டு இருந்தா இடம் போதாது.... அதுவும் இல்லாம அந்த 168ல 146 பேர் கொல்லப்படறாங்க .. தடுக்கி விழுந்தா கொலை தான். 

ஹீரோயினுக்கு ஃபிரண்டா வர்ற  அழகு ஃபிகர்கள் அப்டினு ஒரு கட்டுரை யாராவது எழுதுனா இந்தப்படத்துல வர்ற தோழியை முதல்ல மென்சன் பண்ணிடுங்க.. பார்ட்டி செம கலர் & நல்ல முக வெட்டு 

கஞ்சா கறுப்புக்கு கத்தறதுதான் காமெடி இன்னும் ஒரு நினைப்பு இருக்கு பாவம்.. 

 http://www.hotmalayalamactress.in/wp-content/uploads/2010/10/Hot-Anjali.jpg

படத்தில் ரசிக்க வைக்கும் வசனங்கள் ( பா. ராகவன் )

1.  வாங்க வாங்க.. பந்தயம் ஜெயிச்சா 200 வெச்சா 400

400க்கு எவ்ளவ் சைபர்?

திங்கிங்க்.. 

பிறந்ததுல இருந்தே இவன் தோத்து நான் பார்த்ததே இல்ல.. 

2.  உனக்கு கரண்ட்னு எவண்டா பேர் வெச்சது?

ஊர்ல தான் கரண்ட் இல்ல,, பேருலாயாவது கரண்ட் இருக்கட்டுமே..

3. வெ ஆ மூர்த்தி - அட.. அடுத்தவன் சாமான்னா அலேக்கா தூக்கிட்டு வந்துடுவீங்களே?

4. அடி வாங்கிட்டு உன்னால எப்படி சிரிக்க முடியுது?

அது என் கேரக்டர் சார்.. 

5. சார். சார்.. உடனே திரும்பி பாருங்க சார்.. 

ம்க்கும்.. நீங்க ஜஸ்ட் மிஸ்,.. அவன் அப்பவே எஸ்..
6. கண்டக்டர் - முன்னுக்கு போ..  முன்னுக்கு போ.

க, கருப்பு - நாங்க எல்லாம் அப்பா அம்மா சொல்லியே கேட்கல.. நீ சொல்லியா கேட்கப்போறேன்.. 
அதானே , கேட்டிருந்தா உருப்பட்டு இருப்பியே ( ஜோக் - பை டாக்டர் சி ராஜேந்திரன்  இன் பாக்யா 2009  ஆகஸ்ட் 9)


7.  அடேய்.. என்னடா அவ மேல பார்வை?  கிழக்கே போகும் ரயில்?

கள்ளக்காதல்?

ம்

நொள்ளக்காதல்.. அடேய்.. நாடு பூரா இதாண்டா நாறிட்டு இருக்கு.. 

8.  ஒரு பொண்ணு ஒரு ஆம்பளை கிட்டே நட்பா இருக்க முடியதா?

9.  யார் இந்த 3 வது மனுஷன்?

போலீஸ்!


லத்தியை காணோம்?நாங்க லத்தி இருந்தாதான் போலீஸ்னு நம்புவோம்.. 

10.  என் செண்டிமெண்ட் காசு ஒரு ரூபாயை பிடுங்கிட்டு வேற ஏதோ 5 ரூபா காசு தர்றாடா.. 

அட விடு .. எப்படி பார்த்தாலும் உனக்கு 4 ரூபா மிச்சம் தானே?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifHJFkdNwOoRE-bnwyXn3hPHpE0aArJEJRcFVlV0bgxsnqH8VWpqep8TEJKiNyoMq7kfyEdyQ3Q-D-V4nDGdP2ibfOgtS0qtEYbmsXtUTlf7X4RRcNrDEqOvCf6nqNU-zMtWpdertxiWg/s1600/Tamil-Actress-Anjali-latest-stills-photos-06.jpg

11. ஏங்க.. எனக்கு?

சாரி. கண்ணாடி போட்டவனுக்கெல்லாம் கஞ்சி வராது..

12. யோவ்.. கல்லாங்காட்டுல சும்மாதானே இருக்கே? லவ் பண்ணா குறைஞ்சா போயிடுவே?

------

10 ரூபா கண்ணாடியை கழட்டிட்டு பாருடா எருமை  ( என்னைத்தான் சொல்றாங்களா?)


13.  பொண்ணு தானா வருது.. ஏண்டா அதை புரிஞ்சுக்க மாட்டேங்கறே.. 

அடேய்.. இந்த மாதிரி  எடக்கு மடக்கா சொல்லித்தந்ததாலதான் தமிழ்நாட்ல பாதிப்பேரு கிறுக்கு பிடிச்சு அலைஞ்சிட்டு இருக்கான்..

14. உன் ஆள் என்ன பண்றான்.. ? பார்க்க கேனம் போல் இருக்கான்...

அடியேய்.. அவர் துபாய் கிணத்துல வேலைடி.. மாசம் ரூ 50000 சம்பளமாம்.. 

பார்த்துடி, ஒட்டகம் மேச்சுட்டு இருக்கப்போறான்.. 

15. .. ம் ம் ... இதை பிச்சுக்கலாமா? 

அய்யோ வேணாம்.. எல்லாரும் பார்க்கறாங்க..
அடச்சே.. உன்னைப்போய் லவ் பண்ணேன் பாரு.. 

16. போலீஸ் - வண்டில என்ன லோடு?

ம்.. வாழைப்பழ தாரு சார்.. 

எதுக்கு தார்ப்பாய் போட்டு மூடி இருக்கு? 

வெய்யில்ல என்னை மாதிரி கருத்துடக்கூடாதுன்னுதான்.. 

17. இந்த நாட்ல படிச்சவனுக்கு வேலை கிடைக்கலைன்னா பாழாப்போறது அவன் இல்லை.. இந்த சமூகமும் நாடும் தான்..  ( செம கிளாப்ஸ்)

18. உடம்பு கெட்டா மனசு கெட்டுடும்.. மனசு கெட்டா உடம்பு கெட்டுடும், 2ம் கெட விடலாமா?

19.  இப்போ மணி மிட் நைட் 12.. இப்போ போய் பணம் கேட்டா அவர் கொடுப்பாரா?

இந்த நேரத்துலதான் மனுஷன் சந்தோஷமா இருக்கற நேரம்..  ட்விங்க்கிள்   ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார்.. அண்ணன் ஒரு மேட்டர் ஸ்டார்..  ( செம கைதட்டல்)

20.  இத்தனை நகை வெச்சுக்கிட்டு அதை ஏன் கழட்டித்தராம இருக்கானேன்னு சந்தேகப்படாதே.. ஆல் கவரிங்க்.. எல்லாம் கவர் பண்ணத்தான் ஹி ஹி 


http://i.indiglamour.com/photogallery/tamil/freshface/2011/jan29/Anjali/normal/Anjali_30506rs.jpg

21.  டேய்.. எட்டாங்கிளாஸ்ல உனக்கு சொல்லித்தரலையா? ஸ்பிரிட் ஐஸ் ஆகனும்னா அது மைனஸ் 120 டிகிரில இருக்கனும் ( சத்தியமா எங்க சயின்ஸ் டீச்சர் செந்தாமரைச்செல்வி சொல்லித்தரவே இல்லை யுவர் ஆனர்...)

22. சுக்கிர திசை நடக்கறதா சொன்னாங்க/. சூறாவளி வந்திருக்கு?

23.  டேய்.. 12 சி பஸ் இங்கே நிக்குமா?

இங்கே நிக்காது.. கொஞ்சம் தள்ளி நிற்கும்.. 

24.  லவ் பண்ணுனா  மேரேஜ் மட்டும் பண்ணீ வைங்கடா.. எதுக்குடா மதம் மாத்தறீங்க? ( ராகவன் சாருக்கு நயன் தாரா மேல என்ன கோபமோ? ) தியேட்டரில் செம கிளாப்ஸ்

25.  இவரு அடிப்பாரு.. நாம பார்த்துட்டு இருக்கனுமா?

வயசான ஆளுங்களை நான் அடிக்கறதில்லை.. 

26. உடனே ரூமைப்போடறோம்.. ஒரு கட்டிங்கை அடிக்கறோம்.. யோசிக்கறோம் ( 3 முறை வரும் இந்த டயலாக் செம வரவேற்பு)

http://www.tamilactresspics.com/new-gallery/plog-content/images/tamil-actress/anjali/anjali-_17__002.jpg


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. இத்தனை நட்சத்திரப்பட்டாளத்தை வைத்துக்கொண்டு, குழப்பம் இல்லாமல் திரைக்கதை அமைத்த விதம்.. 

2. கொலை காரி  பாட்டு செம மெலோடி.. அந்த பாட்டின் பிக்சரைசேஷன் செம.. தென்னந்தோப்பு சூழந்த கடற்கரை பிரதேசம்.. ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை.. 

3.  கரண்க்கு கண் பார்வை போகும் இடம் , அந்த சீன் படமாக்கப்பட்ட விதம்..க்ளைமாக்ஸில் வாய்ப்பிருந்தும் ஹீரோயிசம் வெளிப்படுத்தாமல் இயல்பான ஆக்‌ஷன் காட்சிகள்... 

4. அஞ்சலியின் தந்தையாக வரும் வில்லனின் அமைதியான நடிப்பு, சரவணன் சர்ச்சில் வந்து தகராறு செய்யும் இடம், போலீஸ் இன்ஸ்பெக்டரின்  நடிப்பு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgihz_JnNYOjehSc4xvL5Thm16aUdXHSv4qPKgUrOFGXsiSXWbdNSwdup1_QS8cDYAakMg2aXhvfVtMQ3qxM8IK9y8NsaNQegGFKa42cEtfBnmvLLrByW3NhMtXlsrAtZqg71m_bz01vtk/s1600/Anjali+%2540+SRM+University+Stills_01.jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள், ஆலோசனைகள் , சந்தேகங்கள்

1.  படத்தோட ஓப்பனிங்க் சீன்ல பாம்பிளாஸ்ட்ல செத்துப்போன , கருகிப்போன  அந்தப்பெண்ணோட தங்க செயின் மட்டும் கொஞ்சம் கூட கருகாம இருக்கே? எப்டி? தெறிச்சு விழுந்திருக்குமோ?

2.  ஹீரோ பஸ்ல வர்றப்ப ஒரு ரூபா காசை ஹீரோயின் ஜாக்கெட்ல கை தவறிப்போடறது இன்னும் எத்தனை படத்துல பார்க்கறது? அது என்ன உண்டியலா?

3. போலீஸ் செலக்‌ஷன் காட்சிகள் எல்லாம் குள்ள நரிக்கூட்டம் படத்தில் வந்தாச்சே சார்... சீன் மாத்தி இருக்கலாம்.. அப்புறம் படத்துக்கே ஆணி வேரான அந்த கலாட்டா சீன் சிம்ப்பிளா முடிச்சுட்டீங்களே?

4.  கவர்மெண்ட்  வேலை கிடைக்கலைன்னா தற்கொலை பண்ணிக்கற அளவு  மெச்சூரிட்டி இல்லாமயா இப்போதைய இலைஞர்கள் இருக்காங்க..? ( ஒரு வேளை  கதை நடந்த கால கட்டம் பல வருஷங்களூக்கு முன்போ?)

5.  கரண் ஒரு குத்தாட்டப்பாட்டுல எம் ஜி ஆர் ஸ்டைல்ல நடிக்கரார், ஓக்கே.. ஆனா அது ஒரு குத்தாட்டப்பாட்டு , அரை குறை  டிரஸ்ல  வர்ற அந்த எக்ஸ்ட்ரா நடிகை வர்றப்பத்தான் அவர் அந்த ஸ்டைல் பண்ணி எம் ஜி ஆர் பேரை கெடுக்கனுமா?

6.  திரைக்கதைல இன்னும் ட்ரிம் பண்ணலாம்.. ஏகப்பட காட்சிகள், சம்பவங்கள்.. சாதாரண ரசிகனால எல்லாத்தையும் ஞாபகம் வெச்சுக்க முடியுமா?


ஏ செண்டர்ல 3 வாரம் ஓடும்.. பி , சி செண்டர்ல 10 நாட்கள் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - சுமார்

http://www.venkia.com/pdata/7738.jpg

சி,பி கமெண்ட் -  படத்தில் வன்முறைக்காட்சிகளும், தன்னம்பிகையை குலைக்கும் காட்சிகளும் அதிகம் என்பதால் கர்ப்பிணி பெண்கள், பள்ளிமாணவ மாணவிகள் தவிர்த்து மற்றவர்கள் பொழுது போகாம இருந்தா போலாம்.. 

ஈரோடு தேவி அபிராமி தியேட்டர்ல படம் பார்த்தேன்


டிஸ்கி -1

IMMORTAL - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

நான் சிவனாகிறேன் - சைக்கோ த்ரில்லர் - சினிமா விமர்சனம்

Saturday, September 17, 2011

எங்கேயும் எப்போதும் - அசத்தலான திரைக்கதை யுக்தி + அஞ்சலியின் அழகு நடிப்பு - சினிமா விமர்சனம்

http://i.indiglamour.com/photogallery/tamil/movies/2011/Aug03/Engeyum-Eppothum/normal/Engeyum-Eppothum_30405rs.jpg 

ஒரு படத்துக்கு திரைக்கதை எப்படி இருக்கனும்னு பார்க்க ஆசையா?ஒரு பஸ் பயணம் நம் மனசில் நீங்கா இடம் பெற நினைக்கறீங்களா.?ஒரே படத்தில் அழகிய 2 காதல் கதைகளை வேறு வேறு கோணத்தில் ரசிக்க எண்ணமா.? சாலை விதிகளை மதிக்காம வேகமா போகும் ஆட்களை திட்டும் நீங்கள் இனி என்றென்றும் அவர்கள் மேல் அனுதாபம் கொள்ள நினைப்பு இருக்கா? இறக்கப்போகும் மனிதர்களின் கடைசி கட்ட ஆசைகளை கண்ணீரோடு பார்க்க துடிப்பா? நீங்கள் அவசியம் காண வேண்டிய படம்தான் எங்கேயும் எப்போதும்.

ஏ ஆர் முருகதாஸ்ட்ட இயக்குநர் ஒன் லைன் கதை சொல்லும்பொதே இது செம ஹிட் ஆகற சப்ஜெக்ட்னு அவர் புரிஞ்சிருப்பார் போல.. அதான் துணிச்சலா தயாரிச்சுட்டார்...

படத்தோட ஓப்பனிங்க் ஷாட்லயே 2 பஸ் மோதறதை , அதன் பயணிகள் 80% பேர் இறப்பதை , பலர் படுகாயம் அடைவதை காட்டி விட்டு 4 மணீ நேரம் முன் என சப் டைட்டிலுடன் கதை சொல்லும் யுக்தியை தொடங்கும் போதே டெம்போ ஏறுது. இயக்குநர் சரக்குள்ள ஆள்னு தெரிஞ்சுடுது.

சென்னைக்கு முதல் முதலா இண்ட்டர்வியூவுக்கு வரும் அனன்யா - புது முகம் சர்வா ஒரு ஜோடி. அனன்யாவின் அநியாய அப்பாவித்தனமும்,ஓவர் முன் ஜாக்கிரதையும் ஹீரோவுக்கு எரிச்சலை கொடுத்தாலும் ஆடியன்ஸூக்கு
புன்னகையையே தருகின்றன...அனன்யா சென்னை வந்து ஒரு இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணி அக்கா வீட்டுக்கு போவதை மட்டும் போர் அடிக்காமல் 48 நிமிடம் சுவராஸ்யமான சம்பவங்களுடன் சொன்னதற்காகவே இயக்குநரை பாராட்டலாம்.. 


http://3.bp.blogspot.com/-HUp5FGk92uA/TZ72th5mdCI/AAAAAAAAREg/YXaWMCp2CmA/s1600/Jai_Anjali_In_Engeyum_Eppothum_Tamil_Movie_Gallery_3.jpg
அதிலும் இருவரும் நடந்து போகும்போது அனன்யா தன் ஒரு கையை மட்டும் முதுகுப்பக்கம் மடக்கி போவது செம .. ( கை அவர் மேல் பட்டுடக்கூடாதாம்.. )மெல்ல மெல்ல அவர் மேல் காதல் கொள்வது அழகு... இவர்களது காதல் கதை நாம் பக்கத்தில் இருந்து பார்ப்பது போலவே பிரமதமாய் செட் ஆகி விடுகிறது.. 



அடுத்து ஜெய் - அஞ்சலி.. காதல்.. அஞ்சலி தெனாவெட்டான பொண்ணு, ஜெய் கொஞ்சம் அப்பாவி, பயந்தாங்கொள்ளி...தன்னை விட 4 மாதம் மூத்த ஃபிகரான எதிர்  வீட்டு அஞ்சலியை அவர் வாங்க போங்க என்று  அழைக்கும் அழகும், அஞ்சலி அவரை வா போ என அசால்ட்டாக அழைப்பதும் அசத்தல். 

அஞ்சலி ஜெய்யை ஹாஸ்பிடல் அழைத்துப்போய் எய்ட்ஸ் டெஸ்ட் எடுப்பது, ஜெய்யின் சம்பளப்பணத்திலேயே ஜெய்க்கே டிரஸ் எடுத்துக்கொடுப்பது,காபி ஷாப் போவது, அவர் வேலை செய்யும் இடத்துக்கே  போய் அலப்பறை செய்வது என அஞ்சலியின் ராஜாங்கம் படம் நெடுக.. அங்காடித்தெருவில் ஃபோர் அடிச்சவர் இதில் சிக்சர்!!!!!!!!!!!!!

எல்லோரையும் விட படத்துல எல்லார் மனதையும் பாதிக்கும் இரு கேரக்டர்கள் பற்றி சொல்லியே ஆகனும்.. மனைவி கர்ப்பம் ஆனதும் ஃபாரீன் வேலைக்குப்போகும் கணவன் 5 வருஷம் கழிச்சு திரும்பி வர்றான்.. அவர் அதுவரை நேரில் பார்க்காத தன் மழலையை ஃபோன் மூலம் மட்டும் பேசி கொஞ்சி மகிழ்பவர்...அடிக்கடி எப்போப்பா வருவே? என தன் குழந்தை கேட்கும்போது சமாளிப்பவர்.. அவர் விபத்தில் இறந்த பின் அந்த குழந்தை ஃபோன் செய்கிறது.. கல் நெஞ்சையும் கரைக்கும் காட்சி... 

மணமான தம்பதி- தன்  மனைவியை பஸ் ஏற்ற வரும்  கணவன் அவளைப்பிரிய மனம் இன்றி கொஞ்ச தூரம் வந்துட்டு பின் இறங்கிக்கொள்வதாய் சொன்னவன் பின் இறப்பது பயங்கரம்.!


http://g.ahan.in/tamil/Engeyum%20Eppothum%20Movie%20Stills/Engeyum%20Eppothum%20(52).jpg

எங்கேயும் எப்போதும் நம் காதில் ஒலிக்கும் வசனங்கள்

1.  XQS  மீ, உங்க பொண்ணுக்கு சாக்லெட் தரலாமா?

அவ புது ஆளுங்க யார் குடுத்தாலும் வாங்க மாட்டா!!!!

இல்லம்மா, வாங்கிப்பேன்!!!!!!!!!

2. மேடம், உங்களை சீட் மாறி உட்கார வைக்கறேன்.. வெயிட் ப்ளீஸ்!!!!

யோவ் கண்டக்டர்! அவ உன்னை கேட்டாளா? சரியான பி ஜே பி ய்யா!!

3. நீங்க தம் அடிப்பீங்களா?             ம்

தண்ணி அடிப்பீங்களா?        ம்

அப்போ அந்த 3 வது தப்பு? 

கொள்ளையா? கொலையா?

4. இங்கே பாரம்மா, சென்னைல எல்லாரும் பார்க்க டீசண்டா தான் இருப்பாங்க.. பழைய படத்துல வர்ற மாதிரி கன்னத்துல மருவும்,கழுத்துல கர்ச்சீப்பும் கட்டி இருக்க மாட்டாங்க.. 

5. ஆமா, நீ ஏன் சிவப்பு கலர் டிரஸ்?

என் ஆள் சிவப்பு கலர் டிரஸ்... அதான்.. ஆமா நீ ஏன் மறுபடி ஒரு கலர்  மாத்தறே?

எனக்கு 2 லவ்வர்.. 

நீ ஏன் காக்கி யூனிஃபார்ம்லயே வேலைக்கு வந்துட்டே?

ம், என் ஆள் பாலிடெக்னிக்ல படிக்கரா, அவளுக்கு இதான் யூனிஃபார்ம்.. 

6. ஏண்டா? அம்மாவுக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியாம சிக்னல் காட்டுவியா? லூஸா? நீ?

7. இங்கே பாரு.. இது வரை எப்படியோ? லவ் பண்ண ஆரம்பிச்சுட்டே இல்ல? இனி பர்மிஷன் லீவ் எல்லாம் இருக்கனும். எடுக்கனும்.. புரியுதா?

8.  ஆஃபீஸ்ல இருந்து வர்றப்ப சம்பள கவரை கொண்டாந்துடு.. 

எதுக்குங்க?

அதான் என்னை லவ் பண்றதா சொல்லிட்டியே?எதுக்கு கேள்வி எல்லாம்/

9. ஆமா.. என்ன உன் உதடு சிவப்பா இருக்கு? லிப்ஸ்டிக்கா போடறே? ஆம்பள அதை போடலாமா?

இல்லீங்க. குச்சி ஐஸ் சாப்பிட்டேன்.. 

10. என்னங்க.. இந்த பேண்ட் கிழிஞ்சிருக்கு.. வேணாம்.. வேற எடுங்க.. 

டேய் லூசு.. அதுதான் ஃபேசனே!!!


http://www.koodal.com/cinema/gallery/events/2011/666/engeyum-eppothum-movie-press-meet-stills_10_152630123.jpg

11.  என்னங்க? காஃபி சூடா இல்லாம ஜில்னு இருக்கு?


டேய் கேனை.. கோல்ட் (COLD)  காபி அப்படித்தான் இருக்கும்.. 


12. என்னது? ஒரு காபி 80 ரூபாவா/ அய்யோ..!!!பீரே 80 ரூபாதான்..

அப்போ நீ பீர் அடிப்பியா?

சத்தியமா இல்லீங்க!!!!

நான் மட்டும் ஆம்பளையா இருந்தா உலகத்துல இருக்கற எல்லா சரக்கும் டேஸ்ட் பார்த்திருப்பேன்.. 

13.  இப்போ பார்த்துட்டு வந்தியே? அவர் யார்னு தெரியுமா? உனக்கு?

ஏட்டு?

அது உனக்கு.. எனக்கு?

ஏங்க.. எனக்கு ஏட்டுன்னா உங்களூக்கும் ஏட்டாத்தானே இருக்க முடியும்?உங்களூக்கு மட்டும் டி ஐ ஜியாவா இருக்கப்போறார்?

ஜோக்கு?

இல்ல, உங்களூக்குப்பிடிக்குமேன்னு......

அவர் தான் எங்கப்பா!!!!!!!!

14.  உங்க ஊர்ல எல்லாம் பொம்பளைங்க சமைக்க மாட்டாங்களா?

ஏன் கேட்கறே?

ஹோட்டல்ஸ்ல இத்தனை பொம்பளைங்க?

அவங்க எல்லாம் வேலைக்குப்பொறவங்க.. 

எங்க ஊர்லயும் வேலைக்குப்போற பொண்ணுங்க சமைச்சு , புருஷனுக்கு சாப்பாடும் குடுத்து விடுவாங்க.. 

15. முதல்ல உங்களை நம்பல்.. அதனால பயமா இருந்தது.. இப்போ உங்களை நம்பறேன் ஆனா என்னை நம்பலை.. எனக்கே என்னைக்கண்டு பயமா இருக்கு.. அதான் உங்களோட ஆட்டோல ஒண்ணா வர்லை.. 

16. இங்கே பாருங்க.. இப்போ நீங்க சிரிக்காதீங்க.. என் ஆஃபீஸ் கொலீக்ஸ் கேட்டா என்னை தப்பா நினைப்பாங்க.. 

டேய் நாயே.. அவங்க சிரிக்கலைன்னாலும் தப்பா தான் நினைப்போம்.. 

17. உங்க ஆள் ரொம்ப நல்லவன்.. எனக்குத்தெரிஞ்ச எல்லா மொழிலயும் அப்ரோச் பண்ணிட்டேன். ஆள் கண்டுக்கவே இல்லை.. அப்புறம் என்னைப்பற்றி நல்லாத்தெரிஞ்ச  ஒரு கேனையை கட்டிக்கிட்டேன்.. அது அதோ அவன் தான்.. 

18.  நான் செம அழகு இல்லைதான். தனியாப்பார்த்தா.. ஆனா அவன் கூட வெச்சு கம்ப்பேர் பண்ணிப்பாருங்க.. நான் ஓரளவு அழகுதான்,,

19. ம்.. சரி சரி.. என்னை கட்டிக்கோ!!!

இல்லைங்க , கல்யாணத்துக்கு அப்புறம் கட்டிக்கறேன்.

சரி.. நீ வேணா கல்யாணத்துக்கு அப்புறம் கட்டிக்கோ. நான் இப்பவே கட்டிக்கறேன்.. 

20. சரி என் மேல கோபப்படு பார்க்கலாம்?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglFHEmevCZszYozLMJYsh-kUmMX2pYQAOD8XplISaa6efKzCJAtjkI_Uqxb_LhMyDB9_KmAw5YYJO3p4hsMkf3CrffQGTUbtz376-qARmO_Q-WzOZ4XeWEAs9v-AltUQrbcyEpBSgf5Xk/s1600/ananya+tamil+movies00-9.jpg

சாரிங்க.. முடியாது.. 

1.உன் பேரே தெரியாது. 2.  சொட்ட சொட்ட நினைந்துவிட்டாய்3. கோவிந்தா என 3 பாடல்கள் ஆல்ரெடி ஹிட் லிஸ்ட்டில்.

ஒளிப்பதிவு கலக்கல்.. பெரும்பாலான காட்சிகள் பஸ்ஸுக்குள் தான் என்றாலும் நீட் ஃபோட்டோகிராஃபி..  2 பஸ்களும் மோதும் காட்சிகள், விபத்து நடக்கும் சந்தர்ப்பம் 2ம் அசத்தல்..

படத்துக்கு பின்னணி இசை பக்க பலம்..

கே பாலச்சந்தர் படம் போல் ஒவ்வொரு கேரக்டரையும் மனசில் தங்க வைக்கும் டெக்னிக் ஓக்கே!


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijr9d9Gt9sogoDsrGbixE10HxhjkIlguwTgaopTrVCC0GmkN6RcHxzKL9SMmrnkZApm_19oSQ0m2_SnnyPDJpdUM0RrNJlg-Eb5L4XV9VSocAQGiRPdqFA-69bwnv2X37XyJIBykoMfihv/s1600/1296908491-tamil-hot-actress-anjali-in-saree-photosactressinsareephotos.blogspot.com7.jpg

இயக்குநரிடம் சில சந்தேகங்கள்

1. ஓப்பனிங்க்லயே பஸ் ஆக்சிடெண்ட் ஆகப்போகுதுன்னு சொல்லிட்டதால நிதானமா வர்ற காதல் காட்சிகள் கொஞ்சம் பட படப்பை ஏற்படுத்துது.. அதாவது அழகான காதல் காட்சிகள் வந்தாலும் மனம் அதுல ஒன்றிட முடியல்.. அதுக்குப்பதிலா விபத்து நடக்கப்போவதை முன் கூட்டியே சொல்லாம விட்டிருந்தா சஸ்பென்ஸுக்கு சஸ்பென்ஸூம் ஆச்சு.. காதல் காட்சிகளில் ஆடியன்ஸ் இன்னும் நிதானமா மனம் லயிச்சு பார்த்திருக்கலாம்.. 

2. உடல் தானம் பற்றிய விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்ட காட்சி தான் என்ராலும் ஒரு பெண் அவள் என்னதான் நர்ஸா இருந்தாலும் லவ் புரொப்போஸ் பண்ண அடுத்த நிமிஷமே அவனை உடல் தானம் பண்ண ஹாஸ்பிடல் அழைத்துச்செல்வாளா?

3. ஜெய் அஞ்சலிக்கு சிக்னல் காட்டிட்டு பல் துலக்கும் காட்சியில் சுவர்க்கடிகாரம் 6.30 என காட்டுது.. அடுத்த ஷாட்ல 7.40 என காட்டுது.. அதுக்கு அடுத்த காட்சில மறுபடி 6.35 காட்டுது.. எடிட்டிங்க் ஃபா;ல்ட்டா?

4. க்ளைமாக்ஸில் ஜெய்க்கு தலையில் அடிப்பட்டு காதில் ரத்தம் வந்து சீரியஸ் என தெரிந்தும் அஞ்சலி அவருடன் செல்லாமல் இங்க்ர்ர்யே தங்கி மற்ரவர்களுக்கு உதவி செய்வது செயற்கையா இருக்கே? தனக்கு மிஞ்சித்தானே தான தர்மம்?

5. க்ளைமாக்ஸில 2 செட் லவ் ஜோடிகள்ல அந்த சைடுல ஒரு ஆண், இந்த சைடுல ஒரு பெண்ணை உயிர் இழக்க வைத்து விட்டு ஆல்ட்டர்நேடிவ் ஜோடியை ஜோடி சேர்க்கலாமா? என திரைக்கதையில் தடுமாறியிருக்கத்தேவை இல்லை.. 

6.அனன்யாவுக்கு அவர் லவ்வர் பற்றி எந்த விபரமும் தெரியாது.. ஊர்ப்பெயர் மட்டும் தான் தெரியும்.. ஆனா அவரைப்பார்க்க எப்படி கிளம்பறார்? ஆனா அவர் ஏன் அனன்யாவைப்பார்க்க அவரோட ஊர்க்கு வர்லை?


http://mimg.sulekha.com/anjali/images/wallpaper/1024-768/anjali-desktop-wallpapers028.jpg

சாலை வாகனங்களின் வேகத்தைப்பற்றிய நல்ல விழிப்புணர்வுப்படம் ,கமர்ஷியலாய்!!!!!!!

ஏ செண்ட்டர்களில் 60 நாட்கள் பி செண்ட்டர்களில் 50 நாட்கள். சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடும்... 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 44

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று 

சி.பி கமெண்ட் - மென்மையான மனம் கொண்ட காதலர்கள் பார்க்க வேண்டிய அசத்தலான திரைக்கதை . மார்க் - 50

 ஈரோடு தேவி அபிராமியில் படம் பார்த்தேன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9sd5dEWp0thF6R6MAY5HXILqlEh8ExwqLKk3e6LOnYX01gP0YGrvw8AoX0JxjI_ZyGi3qnEzeK6qXaDScFTH6QVs96en4igSfjmvUlAo85bqNFqKb-vVokI-b7pFdesuvcIdgg1JGxMo/s1600/Tamil-Actress-Anjali-latest-stills-photos-09.jpgA

டிஸ்கி - பட விமர்சனத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒரு மேட்டர்.. அனன்யா பார்க்க நெக்ஸ்ட் டோர் கேர்ள் போல இருந்தாலும் அவரை ரசிக்க  முடியவில்லை.,. ஏதோ சித்தி பொண்ணு, பெரியப்பா பொண்ணு போல இருக்கார்.. ஃபிகர்னா பார்த்ததும் மாமா பொண்ணு எஃப்க்ட் வேணும். பை சமந்தமில்லாம டிஸ்கி போடுவோர் சங்கம்

டிஸ்கி 2 -

வந்தான் வென்றான் - சந்தானம் பகடி + தப்ஸியின் ஜிகிடி - சினிமா விமர்சனம்

Monday, August 08, 2011

கருங்காலி - அங்காடித்தெரு அஞ்சலியின் கில்மா படமா?! - சினிமா விமர்சனம்

http://2.bp.blogspot.com/_VtsKRZCn0cc/TQM412jJzEI/AAAAAAAABCQ/vxfl5HEmUT4/s320/karungali_audio_launch_posters_01.jpg

மலையாளப்படங்கள்ல வர்ற மாதிரி கில்மா படம் எடுக்கனும்னு நினைக்கறவங்க  நேரடியா அப்படியே படம் எடுக்கனும்.நாயகன், தளபதி ரேஞ்சுக்கு தாதா கதை அல்லது லோக்கல் ரவுடி கதை எடுக்க ஆசைப்பட்டா அப்படி எடுக்கனும், ரெண்டுங்கெட்டானா இந்த 2 கதையையும் சேர்த்து எடுக்க ஆசைப்பட்டா இப்படித்தான் வகைப்படுத்த வழி இல்லாம ரெண்டுங்கெட்டானா படம் அமைஞ்சிடும்.. 

பூ மணி, பூந்தோட்டம் மாதிரி மென்மையான படங்களை கொடுத்து தனக்குன்னு நல்ல இமேஜை மெயிண்டெயின் பண்ணி வந்த மு களஞ்சியம் திடீர்னு இந்தளவு இறங்கிப்போய் ஆண்ட்டி ஹீரோ சப்ஜெக்ட் பண்ணுவார்னு யாரும் எதிர்பார்க்கலை. இருக்கற கொடுமை பத்தாதுன்னு அண்ணன் தான் இதுல ஹீரோ வேற .. முத படத்துலயே அண்னனுக்கு 3 ஜோடி

ஆக்சிடெண்ட்ல மாட்டிக்கிட்ட ஒரு லேடி டாக்டரை போலீஸால் துரத்தப்ப்படும் ஒரு கிரிமினல்  கம் மர்டரர் காப்பாத்தறான்.உடனே எந்த வித லாஜிக்கும் இல்லாம அந்த கேனை டாக்டர் அந்த கேவலமான ரவுடியைத்தான் மேரேஜ் பண்ணிக்குவேன்னு தலை கீழா நிக்குது .

ரவுடியோட ஃபிளாஸ்பேக் கதை .பொட்டலம் விக்கற ஆள் கிட்டே எடுபுடியா வேலைக்கு சேர்ந்த ஹீரோ 18 வருஷங்கள் அவன் கூட ஒண்ணா ஒர்க் பண்ணிட்டு தனியா தொழில் பண்ண அவனையே போட்டுத்தள்ளிடறான், அவன் கூடவே இருக்கற ஒரு ஃபிகரை தாலி மட்டும் கட்டாம மேட்டர் எல்லாம் முடிச்சிடறான். மாசமான அவ தாலி கட்ட சொல்றப்ப இரக்கமே இல்லாம அவளை போட்டுத்தள்ளிடறான்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXEG3JzpERvH-Gkz41iZZSFH7CahFSN1wDyMTXQh5vVDNLEQNLCj5UYvr1wMxXVsJdn_nsQx5jpqj0hZMht9LNJDlV7dcnOL7NFL84HEzOvdnWMTaLoztDg_CjraYcW0wZ6FP0md5HFun-/s1600/anjali+in+karungali+tamil+movie+stills+3.jpg

இந்த கேடு கெட்ட ஃபிளாஸ்பேக்கை கேட்ட பின்னும் அந்த லேடி டாக்டர் அந்த ரவுடியை மேரேஜ் பண்ணிக்கறாங்க.குழந்தை பாக்கியம் இல்லாத அஞ்சலி ட்ரீட்மெண்ட்டுக்காக இந்த டாக்டர்ட்ட வர்றாங்க. அவங்களுக்கு ஒரு ஃபிளாஸ்பேக்.. அந்த கதையை தன் ரவுடி கணவனிடம் எதேச்சையா சொல்றாங்க. உடனே ரவுடிக்கு அஞ்சலியை மடக்கிடனும்னு  நியாயமான (!!!!!!!!!) ஆசை வந்துடுது. 

அஞ்சலியோட அபார்ட்மெண்ட்க்கு அவங்க தனியா இருக்கும்போது போய்  அவங்க மனசை கலைக்கறாரு ஹீரோ.. இது தினம் நடக்குது.. ஒரு 5 நிமிஷம்  அட்ஜஸ் பண்ணீக்கோ. உனக்கு குழந்தை நிச்சயம்ங்கறாரு ஹீரோ. ரொம்ப அப்பாவியான அஞ்சலி  என்ன பண்றாங்க? எப்படி நடந்துக்கறாங்க என்பதுதான் மீதி ஜொள்ளப்பட்ட கதை.

படம் ஆரம்பித்து முதல்  50 நிமிடங்கள் ரவுடி கஞ்சா கதை என்பதால் ரொம்பவே பொறுமை வேணும்..அஞ்சலியை கணக்கு பண்ண களஞ்சியம்  பண்ற முயற்சிகள் எல்லாம் பத்தாம் பசலித்தனமா இருக்கு. ( எங்க கிட்டே கேட்டிருந்தா பல நல்ல ஐடியாக்கள் வாரி வழங்கி இருப்போமில்ல?)

ஏதோ ஒரு ஆங்கிலப்படத்தை பார்த்து பின் பாதி கதையை எடுத்திருப்பதும் 14 ரீல்கள் கரெக்ட் பண்ண முன் பாதியை சேர்த்திருப்பதும் நல்லா தெரியுது.



http://www.cinibox.com/content/wp-content/uploads/2011/07/karungali_movie_stills_08.jpg

கில்மா படத்தில் வந்த ஜொள்மா டயலாக்ஸ்

1. உழைச்சு சம்பாதிச்ச காசைத்தான் சேர்த்து வைக்கனும்,ஏமாத்தி ஊரை ஏய்ச்ச காசை அப்பப்போ செலவு பண்ணிடனும்.

2.  நான் இன்னும் எத்தனை பொண்ணுங்களை பார்க்கப்போறேனோ, எவ கிட்டே அடங்கப்போறேனோ? எனக்கே தெரிலயே?

3,   அவன் அடையவே முடியாத பொக்கிஷமா நான் இருப்பேன்..

4. அவனோட டார்கெட் ரெண்டே ரெண்டு தான் 1. பணம் 2 பொண்ணுங்க.

5. பெட்ரூம்க்குள்ளே லேப்டாப், கம்ப்யூட்டர், செல் ஃபோன் இதெல்லாம் இருக்கவே கூடாது.. 

6. நான் தெரியாமத்தான் கேட்கறேன், பெட்ரூம்க்குள்ளே எதுக்கு பிஸ்னெஸ்?

7. இந்த உலகத்துல பறவைகளை எங்கே பார்த்தாலும் எனக்கு உன் ஞாபகம் தான் வருது. 

8.  தேங்காய்க்குள்ளே இருக்கற தண்ணி மாதிரி எனக்கே தெரியாம நீ எனக்குள்ளே இருந்திருக்கே!

9.  என் ஒயிஃப் என் கிட்டே பேசற முத வார்த்தை ஐ லவ் யூ வா இருக்கனும்.. 

10.  என் புருஷன் என்னை பெட்ரூம்ல கெட்ட வார்த்தை எல்லாம் சொல்ல சொல்றாரு. 

அப்டி என்ன சொன்னாரு?

ஐ லவ் யூ சொல்ல சொல்றாரு. 






http://www.w3newz.com/wp-content/uploads/2011/07/karungali_6-hot-stills-500x283.jpg
11. உன்னை என்னுடன் சேர்த்து வைக்க சொல்லி நான் வேண்டிக்கிட்ட சாமி இதுதான்

12.  டாக்டர்ட்ட போய் செக்கப் பண்ணிக்கிட்டா  யார்ட்ட குறை இருக்குதுங்கறது தெரிஞ்சிடும். அப்புறம் குற்ற உணர்ச்சி வந்துடும். 

13.சென்னை 12 கிமீ நீளம், 12 கிமீ அகலம் இதுக்குள்ளே தான் சுத்தி சுத்தி வரனும்.. எப்போ வேணாலும் நாம் மறுபடி மீட் பண்ணுவோம்..

14.  பார்ட்டிக்கு வாங்க டியர்..

அடப்போம்மா.. நீ இல்லாதப்ப அந்த பார்ட்டியை உஷார் பண்ணலாம்னு நினைச்சா...



http://www.bestactress.info/wp-content/uploads/2011/03/karungali-anjali-hot-stills.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. அஞ்சலியை களஞ்சியம் மடக்கும் காட்சியில் பெண்களையே  சூடேத்தும் அளவுக்கு காட்சியை அமைத்து விட்டு டி வி விளம்பரங்களில் பெண்கள் பார்க்க வேண்டிய விழிப்புணர்வுப்படம் என அஞ்சலி வாயாலேயே சொல்ல வைத்த விளம்பரம் எடுத்த கெட்டிக்காரத்தனம்..

2.  அஞ்சலியை இந்தப்படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்தது.


http://4.bp.blogspot.com/_wxJUXQ9lvpA/TRKjEqot9YI/AAAAAAAACgg/amXvoyeEcSc/s1600/karungali-anjali-hot-stills-4.jpg


இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. நம்ம பிளாட்ல குடி இருக்கற பொண்ணு வேற ஒரு ஆள் கூட தினம் பழகறா என டயலாக் பேசும் அலெக்ஸ் பைனாகுலரில் எதிர் அபார்ட்மெண்ட்டில்  அஞ்சலியை பைனாகுலர் மூலம் நோட் பண்றாரே, அது எப்படி? ( அதாவது எதிர் வீதி )

2. முன் பின் அறிமுகம் இல்லாத ஒரு ஆளை தன் வீட்டுக்கு அழைத்து வரும் அஞ்சலியின் கணவன் சிக்கன் பார்சலை அவனிடம் கொடுத்து என் மனைவிட்ட குடுங்க, நான் இந்த பில்டிங்க் ஓனரை பார்த்துட்டு வந்துடறேன் அப்டினு சொல்றாரே, அது எப்படி?அவனுக்கு அவர் வீடு எப்படி தெரியும்?

3. படத்தோட ஓப்பனிங்க் சீன்ல ஹீரோ அடியாள்களுடன் உயிருக்கு போராடும் காட்சியில் அவரை சுற்றி ஒரு குரூப் அவரை காப்பாற்ற அல்லது அவருக்கு உதவி செய்யாமல் அவர்  போடும் ஃபைட்டுக்கு பேக் கிரவுண்ட் மியூசிக் கொடுக்குதே, அது ஏன்?

4. அஞ்சலியின் கணவன் அஞ்சலியின் க்ளாஸ்மேட்டாகவும் ,லவ் மேரேஜ் பண்ணினவராகவும் காட்டப்படுகிறார், அவர் திடீர் என ரகுவரன் (புரியாத புதிர்) ரேஞ்சுக்கு சைக்கோ மாதிரி ஏன் கத்தறார்? ஏன் பளார்னு அறையறார்? ( 5 தடவை) ஓவர் ஆக்டிங்க் வேற

5.  ஹீரோ, அஞ்சலி, அஞ்சலியின் கணவன் என 3 பேர் மட்டுமே ஹாலில் இருக்கும்போது வழக்கமா எந்த வேலையா இருந்தாலும் மனைவியை விரட்டும் கேரக்டரான கணவன் நீ இவர்ட்ட பேசிட்டு இரு, நான் போய் என் பர்சை எடுத்துட்டு வர்றேன் அப்டினு சொல்லி 12 நிமிஷம் காணாம போறாரே.. அது எப்படி?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih46Byc3zZKwj3Xd70ADXVzOCop-oiYPvrhZvi8lFGeJyfvRTxU_MP8OVmFB6wDqSFd7fx9R4LHbhUw9pjc8DHY4PNYqa6LgW0xxZcXTL2Hw1KMchwU5cRUbAU6uXNv43P6ylbxT0uwsU/s1600/karungali-angali-hot-stills-004.jpg

6. க்ளைமாக்ஸில்  தான் யார் என வெளீப்பட்டுவிடுவோமோ என அஞ்சும் ஹீரோ ஓடிப்போய் எஸ் ஆகனும் ,அல்லது மனைவியை போட்டுத்தள்ளனும், அதை விட்டு மரத்தின் மீது வாலண்ட்ரியாய் காரை இடித்து அவ்வளவு சீரியஸ் ஆக ஆபத்தான நிலைக்கு  தான் மட்டும் ஏன் போகனும்?

7.  என்னதான் கிராமத்துப்பெண்ணாக காண்பிக்கப்பட்டாலும், அப்பாவி என சொல்லப்பட்டாலும், ஒரு அறிமுகம் இல்லாத ஆள் வந்து டாக்டர் தான் என்னை அனுப்பினார், உங்களூக்கு குழந்தை உருவாக்க என்னை உங்களை உபயோகப்படுத்திக்க சொன்னார் என்று சொல்லும்போது டாக்டரிடம் ஏன் க்ராஸ் செக் செய்ய்யவில்லை. ?

8. உங்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்கா?ன்னு செக் பண்றேன், உணர்ச்சி நரம்புகள் வருதான்னு பார்க்கனும், உங்க அடி வயிற்றுல கை வைக்கறேன் கண்டுக்காதீங்க என ஹீரோ சொல்லிட்டு  அஞ்சலியை என்னென்னமோ பண்றாரு, ஆனா பாப்பா எதுமே கண்டுக்கலை, அவ்வளவு அப்பாவியா?

9. ஹீரோ சேரன் மாதிரி நடிக்க முயற்சி பண்றார், ஆனா அவருக்கு மன்சூர் அலிகான் பாவனைகள் தான் வருது.. இதுல ஏகப்பட்ட க்ளோசப் காட்சிகள் வேற.

10. அஞ்சலியின் கணவன் மாதிரி ஒரு வடி கட்டிய முட்டாளை நான் இதுவரை பார்த்ததே இல்லை.. இதுல இவர் பெரிய ஆஃபீசர் வேற.. ஹூம்..

http://www.tamilkey.com/wp-content/uploads/2011/07/karungali_movie-2011.jpg


இந்தப்படம் ஏ செண்ட்டர்ல சரியா ஓடாது.. பி செண்டர்ல 25 நாட்கள். சி  செண்ட்டர்ல 15 நாட்கள் ஓடும்..

 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் -  39

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி , கமெண்ட் - கில்மா பட ரசிகர்கள் பார்க்கலாம்,சீன் இல்லை, ஆனாலும் சூடேற்றும் காட்சிகள்க்கான லீடு உண்டு.

ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்.



http://3.bp.blogspot.com/_ptFVUqqUjVM/TQN9xlVP9NI/AAAAAAAABts/RWb9fU3FJ3g/s1600/Karungali_+MOvie_+Gallary_25.jpg

Monday, March 07, 2011

”மப்” பொழுதும் உன் கற்பனைகள்

http://spicy.southdreamz.com/spicydb/hot-actress-anjali-pictures/actress-anjali-saree-stills-05.jpg

1. ஹீரோ ஒரு சரக்கு பார்ட்டி..ஹீரோயின் ஞாபகமாவே எப்பவும் கவிதை எழுதிட்டே இருக்காரு..

ஓ,என்ன டைட்டில்?

மப்பொழுதும் உன் கற்பனைகள் (முப்பொழுதும் உன் கற்பனைகள் பட டைரக்டர் என்னை மன்னிப்பாராக)


---------------------------------------------------------

2.தலைவரு கமல் ரசிகர்னு எப்படி சொல்றே,,?

அவர் எடுக்கப்போற சொந்தப்படத்துக்கு மகளிர் அணித்தலைவி இருக்கின்றாள்னு டைட்டில் வெச்சிருக்காரே...

--------------------------

3. மேடம்.. முகம் பூரா ஜிகினா ஒட்டிக்கிட்டு வர்றீங்களே...ஏன்?

ஷைனிங்க் ஸ்டார்னு பெயர் எடுக்கத்தான்.

-------------------------------------

4 ஆடியன்ஸ் எல்லாரும் ஓடி வந்து அந்த டி வி காம்ப்பியரர் லேடி பின்னால ஒட்டிக்கிட்டு நிக்கறாங்களே..?  ஏன்?

வெல்கம் பேக்  ட்டூ  (WELCOME BACK   TO ) னு சொன்னாங்காட்டி அவர் பேக் பின்னால போய் நின்னுக்கிட்டாங்களாம்.

---------------------------

5.மிஸ்,,நான் குடுத்த லவ் லெட்டரை  ஏன் கிழிச்சுப்போட்டுட்டீங்க..?

உங்க முகத்தைக்கூட சகிச்சுக்கலாம் போல.. உங்க கவிதையை சகிக்க முடியல....

---------------------------------------------
http://www.bevapphasanam.com/wp-content/uploads/2011/02/Anjali-Tamil-Actress-Cute-In-Salwar-Kameez-bevapphasanam.com_.jpg
6. உங்க மனைவியை பாடவா டூயட் பாடலை நிகழ்ச்சில தான் முதன் முதலா சந்திச்சீங்களாமே...?

ஆமா... இப்போ வீட்ல தினமும் அவ பாட்டுத்தான்.. ஹி ஹி .

-----------------------------------

7. உங்க மனைவி கோவிச்சுக்கிட்டு அவங்கம்மா வீட்டுக்கு போயிடாங்களாமே..? ஏன்?

எங்கம்மா வீட்டுக்கு போக முடியாதே.. ஏன்னா,அவங்க என் கூடத் தானே இருக்காங்க..
-----------------------------------------------

8. நான் ஜாலியா,சந்தோஷமா இருக்கரது உங்க கண்ணை உறுத்துதா..?

அப்படியெல்லாம் இல்லையே.. ஏன் கேட்கறே..?

அம்மா வீட்டுக்கு கோவிச்சுக்கிட்டு போன மனைவியை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வான்னு சொன்னீங்களே...

-----------------------------------------

9. ஹீரோயின் கொஞ்சம் அழகு கம்மி தான்.. அதுக்காக வில்லன் அவரை ரேப் பண்ணற மாதிரி சீன்ல கூட  நடிக்க மாட்டேன்னு சொல்றது ஓவர்....



--------------------------------------------------------

10. டாக்டர்.. எனக்கு தூக்கத்துல நடக்கற வியாதி இருக்கு.

வெரிகுட்... அப்போ காலைல எழுந்ததும் நீங்க உங்க வேலையைபார்க்கலாம்,வாக்கிங்க் போற வேலை இல்லை..

--------------------------------------

டிஸ்கி (v) - 1. நாளைய இயக்குநர் நிகழ்ச்சில கலந்துக்கிட்ட இயக்குநர்கள் யாராவது ஷூட்டிங்க் டைம்ல எடுத்த ஃபோட்டோ இருந்தா என் மெயிலுக்கு அனுப்புங்க.

டிஸ்கி 2 - முப்பொழுதும் உன் கற்பனைகள் டைட்டிலுக்கும் அஞ்சலி படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.லேட்டஸ்ட் கனவுக்கன்னி அஞ்சலியா?ன்னு கேட்டு கமெண்ட் போட்டுடாதீங்க..

டிஸ்கி 3. அஞ்சலிக்கு ஒரு பர்சனல் அட்வைஸ்.. நீங்க மேட்ச்சுக்கு மேட்ச் பொட்டு வைக்கிற பழக்கம் ஏற்படுத்திக்குங்க. நான் பார்த்த 328 ஃபோட்டோலயும் உங்க டிரஸ்க்கும்,நெற்றிப்பொட்டு கலருக்கும் சம்பந்தமே இல்ல...( ரொம்ப முக்கியம்..?)