Showing posts with label ABILASHA. Show all posts
Showing posts with label ABILASHA. Show all posts

Friday, March 04, 2011

பதிவை படிச்சிட்டு சிரிக்காம இருந்தா ரூ 10,000 பரிசு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinv5qTd8sZl9I1dbWTJWRjk0HO7rDlWYmDa99qj7gnk-FZnt_z8wJXeNX2QSMoWDA5nyz1K_t-XxXLQF-Jmwbnn2IMZAsA0JvyzjsI2sbjfAtnzJwOgTqVk_wLoAYC-enNHhNJJ_JkGO6u/s1600/mynaa-heroine-amala-paul-hot+%25282%2529.jpg 
1. ஆஸ்திரேலியா கண்டத்துல தனது சுற்றுப்பயணத்தை முடிச்சுட்டு தலைவர் இன்று தாய் நாடு திரும்பறாராம்.

அப்போ தமிழ்நாட்டுக்கு கண்டம் ஸ்டார்ட் ஆகிடுச்சு...அப்படின்னு சொல்லு.

------------------------------------------------

2. அத்தான்.. சாம்பார்ல ஏகப்பட்ட ஸ்பூன் இருக்கே?ஏன்?

சமையல் குறிப்புல  உப்பு ஒரு ஸ்பூன், கடலை எண்ணய் 3 ஸ்பூன்,மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் போடவும்  அப்படின்னு போட்டிருந்தது.. மொத்தம் 5 ஸ்பூன் தானே இருக்கும்..நீ எப்படி ஏகப்பட்ட ஸ்பூன் என சொல்லலாம்..?

(ஆஹா .. இவன் தாண்டா உண்மையான புருஷன்)

-------------------------------------------------------

3.  அம்மா... தாயே...

யாரய்யா.. அது காலங்காத்தால பிச்சை எடுக்க வந்திருக்கறது... அடடே.. நீங்களா? வாங்க வாங்க .. உங்களுக்கு கண்டிப்பா 2 சீட் உண்டு.

---------------------------------------

4. அபிலாஷா நடிச்ச முதல் பாவம்  சீன் படம் ரிலீஸ் ஆகி பல வருஷங்கள் ஆச்சு.

ஆமா.. அதுக்கென்ன இப்போ..?

அவரோட ரெண்டாவது பாவம், மூணாவது பாவம் எல்லாம் எப்போ ரிலீஸ் ஆகும்?

( பய புள்ளே.. ராம்சாமிட்ட கேட்க வேண்டிய கேள்வியை எல்லாம் என் கிட்டே கேட்டுட்டு..)

------------------------------------

5. பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் பண்றப்ப மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக பாலை ரோட்டில் கொட்டியது தவறு-ன்னு தலைவர் சொல்றாரே..?

சரி... அதுக்காக அமலா பால்-ஐ ரோட்ல தள்ளி விட்டு  போராட்டம் பண்ண முடியுமா?

(#அப்பாடா .. நடிகை ஸ்டில் போட்டுடலாம். ஹி ஹி )

------------------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpOS-NEUi9ilZjXSC5aNkMXEtfUTbLpl_Z5VDo_4cSeMoUpbjYOM9yPCfz8VFn0sBzYfRDPH2IilbCtwC7hOUVA8o31t44eg5a-uGhnwS2EeskUYUOZIQDWnFep75rc0ysMI6K666A1xY/s640/actress_amala_paul+_hot_photos_gallery_01.jpg
6. தலைவருக்கு தேர்தல் பயம் வந்துடுச்சுன்னு எப்படி சொல்றே..?

நெஞ்சுக்கு பீதின்னு நாவல் எழுதறாராம் . ( நெஞ்சுக்கு நீதி பார்ட் 8 )

-----------------------------------------------------------

7. தலைவரே.. லேடீஸ் மேட்டர்ல நீங்க வீக்னு எல்லாரும் பேசிக்கறாங்களே..?

யாருய்யா.. அப்படி ஒரு புரளியை கிளப்புனது..? நான் அந்த மேட்டர்ல ஸ்ட்ராங்க் தான். டவுட்னா 17 வருஷமா நான் வெச்சுட்டு இருக்கற மகளிர் அணித்தலைவி  மல்லிகாவைக்கேட்டுப்பாரு...


(பெரிய அபூர்வமான குறிஞ்சி மலரு....)

---------------------------------------

8.உன் மனைவியை நீ அடிச்சதே இல்லையா?

ஆமா.. அவ ஒரு அடி தாங்கா  பத்தினிங்க...( படி தாண்டா பத்தினிக்கு தங்கை)

-----------------------------------------------------

9. உங்க சம்சாரம் உங்களை பளார்னு கன்னத்துல அறையறா..பார்த்துட்டுசும்மா இருக்கீங்களே..?

சும்மா இல்லாம..? எதுக்கு அடிச்சே?ன்னு எதிர்த்துப்பேசி இன்னொரு கன்னத்துலயும் அடி வாங்க சொல்றீங்களா?

----------------------------------

10.டாக்டர் பட்டம் வழங்குனதுக்கான நன்றி உரை விழாவுல தலைவர் சொதப்பீட்டாராமே..?

ஆமா.. எனக்கு டாக்டர் பட்டம் வழங்கிய யுனிவர்சிட்டிக்கு நன்றி.. கூடவே என் கூட உதவிக்கு நர்ஸ் அனுப்பி வைத்த க்ளினிக்கிற்கு நன்றி அப்படின்னு பேசி மானத்தை வாங்கிட்டாரே..

-------------------------------------

டிஸ்கி 1 - .அமலாபால் ,அபிலாஷா இருவர் பற்றிய ஜோக்ஸ்-ம் போட்டு அபிலாஷா ஸ்டில் மட்டும் ஏன் போடலை?ன்னு கண்டனம் தெரிவிப்பவர்களுக்கு நான் என்ன வெச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன்.. கிடைக்கலை.. அபிலாஷா ஸ்டில்லை வெச்சிருக்கறவங்க( @அண்டர்லைன் ஸ்டில்லை) என் மெயில்க்கு அனுப்பினா உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

டிஸ்கி 2 - இன்னைக்கு வெள்ளிக்கிழமை.. உங்களுக்கே தெரியும்.. லேடீஸ்க்கு கோயில்.. என்னை மாதிரி சின்னப்பசங்களுக்கு தியேட்டர்... மீண்டும் மதியம் 3 மணிக்கு சந்திப்போம்...சிங்கம்புலி,பவானி,தப்பு (அஜால் குஜால் படம்),ஒரு இங்கிலீஷ் (INFESATION)படம் மொத்தம் 4 படம் ரிலீஸ் ஆகுது

டிஸ்கி 3  - டைட்டிலில் ஏதோ பரிசு போட்டிருக்கே.. நான் வேணும்னே சிரிக்கலைன்னு பிரதாப் போத்தன் மாதிரி இன்னும் முகத்தை உம்முன்னு வெச்சிருக்கறவங்களுக்கு...ஊழல் அற்ற ஆட்சி தருவோம்னு ஒவ்வொரு முறையும் வாக்கு குடுத்துட்டு இன்னும் ஊழலைத்தவிர வேற எதுவும் பண்ணாம இருக்காங்களே... அவங்க கிட்டே கேட்டுட்டு அப்புறமா என் கிட்டே வாங்க.. ( ஈரோடு பஸ் ஏறி ரொம்ப கிட்டே வந்து பய முறுத்தக்கூடாது)