Showing posts with label ஹாலிவுட் பட விமர்சனம். Show all posts
Showing posts with label ஹாலிவுட் பட விமர்சனம். Show all posts

Saturday, August 14, 2010

ஹாலிவுட் சினிமா விமர்சனம்-THE EXPENDABLES 18+

நம்ம கோடம்பாக்கத்துல ரஜினி,கமல்,அஜித்,விஜய்,சூர்யா,விக்ரம் இவங்க எல்லாம் சேர்ந்து நடிச்சா எப்படி இருக்கும்?(தியேட்டர்ல எப்படியோ தியேட்டருக்கு வெளியே ரசிகர்களுக்குள்ள ஒரே அடி தடியா இருக்கும்) இங்கே சாத்தியமோ ,இல்லையோ ஹாலிவுட்டில் சாத்தியமாகி இருக்கிறது.
படத்தோட மக்கள் தொடர்பும் ,போஸ்ட்டர் டிசைனும் ரொம்ப மோசம்.ஏதோ டப்பிங்க் பட போஸ்டர்  மாதிரி..

படத்தின் இயக்குனரும் ,நாயகனும் ஃபர்ஸ்ட் பிளட்,ராம்போ புகழ் சில்வர்ஸ்டர் ஸ்டாலின் .விளம்பரத்தைப்பார்த்து ஏதோ ஆபாவாணனின் இணைந்த கைகள் மாதிரி பிரம்மாண்டப்படம் என நினைத்தால் அது சுயம்வரம் மாதிரி ஒரு அடாசு படம்.

ஆரம்பக்காட்சியில் சில வசனங்களை ரசிக்க முடிகிறது.

காலிங்பெல் சத்தம் கேட்டு “யாரது?” என ஒரு ஃபிகர் கேட்க, நம்மாளு நீ தூங்கறப்பக்கூட உன்னை ரசிக்க ஒருத்தன் வருவானே அவன்தான் என ஜொள் விட நாமும் ஏதோ சுவராஸ்யமான படத்துக்கு தான் வந்திருக்கோம் போல என நம்பி நிமிர்ந்து உட்கார்ந்தால்...?

நீ என்ன பண்றே?என்ன வேலைல இருக்கே?ஏதாவது சொல்றியா?

என்ன வேலை செய்யறேன்கறது முக்கியம் இல்ல,எப்படி உன்கிட்ட நடந்துக்கறேன்கறதுதான் முக்கியம்.

இப்படி நடக்கும் ஊடல் காட்சிகள் ரசனையான கவிதைகள்.
தமிழில் பார்த்தால் பல காட்சிகள் வினோதமாக தெரிகிறது.

இது நம்ம ஆளுதான்

அப்படியா,இன்னா பேரு கண்ணு?

த ட்ரான்ஸ்போட்டர் ஹீரோவை கெஸ்ட் கேரக்டர் எனக்கூறி கூட்டி வந்து நொங்கு எடுத்து விட்டார்கள்.அவரது தலையை கவுண்டமணி செந்திலை நக்கல் அடிப்பது போல் சர்வசாதரணமாக கிண்டலடிக்கிறார்கள்.

உன் தலையை பார்த்தா பானையை கவுத்து வெச்ச மாதிரி இருக்கு.

ஒரு புராஜக்ட்டை செய்ய அழைத்து வரப்படும் 3 திறமைசாலிகளுக்கிடையே நடைபெறும் உரையாடல்கள்

இந்த வேலையை கத்துக்குட்டிங்கதான் செய்வாங்க,என்னை விட்டுடுங்க என அர்னால்டு ஸ்வார்செனேகர் சொல்ல  உடனே இதை செஞ்சா எவ்வளவு பணம் தருவீங்க? என ஜெட்லீ கேட்க கத்துக்குட்டிங்கறதை நிரூபிச்ட்டான் என நையாண்டி செய்ய ஒரே ரகளை தான்.
படத்தின் ஹீரோ சில்வர்ஸ்டர்ஸ்டோலன் மும்பை எக்ஸ்பிரஸ் கமல் மாதிரி கெடப்பில் வருகிறார்.எடுபடவில்லை.படம்,அவர் நடிப்பு எதுவும்.ஒரு அபத்தமான காட்சி.

எதிரியின் பாசறைக்குள் நுழைந்த ஹீரோ &கோ விமானத்தில் பறந்தபடியே ஃபயர் சர்வீஸ் மாதிரி பெட்ரோலை பைப் மூலம் எதிரியின் இடத்தில் தெளிக்கின்றனர்,பின் ஷூட் பண்ணி வெடிக்க வைக்கிறாங்க.அப்போ இவங்க பயணம் பண்ற விமானமும்தானே தீப்பிடிக்கும்?பி எஸ் ஸி பிசிக்ஸ் சில் அரியர் வெச்சவன் கூட இதை சொல்லிடுவானே.சூப்பர் ஹிட் படங்கள் குடுத்த  இவருக்குத்தெரியாமல் போன மாயம் என்ன?

படத்தின் முக்கிய சொதப்பல் ஹீரோயின்.குதிரை மாதிரி நீள் முகம்.காமரா எந்த கோணத்தில் அவரை காண்பித்தாலும் ரசிக்க முடியவில்லை.படத்தோட கதையே ஆபத்துல மாட்டி இருக்கற காதலியை காதலன் நண்பர்களோட வந்து காப்பாத்தறதுதான் அப்படிங்கறப்போ நல்ல ஃபிகரா போட்டிருக்க வேணாமா?
இடைவேளைக்குப்பிறகு யார் யாரை  சுடறாங்க, யார் தப்பிச்சாங்க ஒண்ணும் புரியல.கிராஃபிக்ஸ் காட்சிகள் ஜூராசிக்பார்க் மாதிரி இருக்கும்னு பார்த்தா நம்ம ராமநாராயணனின் ஆடிவெள்ளியை விட மோசமாக இருக்கு.

க்ளைமாக்சில் ஜெட்லீ பேசும் டயலாக் நல்லாருக்கு.நான் ரொம்ப உயரனும்னு நினைச்சேன்.ஆனா சண்டை போடறப்பக்கூட எம்பி எம்பிதான் சண்டை போட வேண்டி இருக்கு.ஆண்டவன் என்னை குள்ளமாவே படச்சிட்டான்.
சரி ,படத்தைத்தான் கெடுத்துக்குட்டிச்சுவர் பண்ணிட்டோம்,ஏதாவது கண்ணுக்கு குளுமையா சீனாவது வெப்போம்கற பேசிக் நாலெட்ஜ் கூட டரக்டருக்கு இல்ல.நாம் என்ன செய்வது?ஸ்டில்களில் பார்க்கும் அளவு கூட திரையில் இல்லை.
இதுல இருந்து நாம தெரிஞ்சுக்க வேண்டிய நீதி என்னன்னா பெரிய ஹீரோ படம்னாலும் ரிசல்ட் கேட்டுட்டுதான் போகனும்.

Saturday, August 07, 2010

FIRE BALL 18+ - ஹாலிவுட் சினிமா விமர்சனம்-

கோலிவுட்டுக்கு ஒரு வெண்ணிலா கபாடிக்குழு எப்படியோ,பாலிவுட்டுக்கு ஒரு லகான் (அமீர்கான்) எப்படியோ,ஹாலிவுட்டுக்கு பிளட் ஸ்போர்ட்  (ஜீன் கிளாட் வேண்டம்)எப்படியோ அதே போல் சைனீஷ் பட உலகிற்கு ஒரு ஃபயர் பால் ( FIRE BALL).


பேஸ்கட்பால் விளையாட்டை இவ்வளவு வன்முறையாகச்சொன்ன ஒரே படம் இதுவாகத்தான் இருக்கும்.1985 களில் தமிழக கிராமங்களில் ஊமைப்பந்து என ஒரு விளையாட்டு விளையாடுவார்கள்.குழுவில் உள்ள வீரர்களை ஓட விட்டு பந்தை அவர்கள் மீது எறிந்து அது அவர்கள் மேல் பட்டால் அவுட்.அந்த விளையாட்டையே கொஞ்சம் மாடர்ன் ஆக்கி ,வன்முறையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு திணித்தால் ஃபயர்பால் கேம் ரெடி.

அதாவது 2 டீம்.பேஸ்கட் பால் கிரவுண்டில் இறங்கும்.பாலை (BALL)எடுத்து யார் வலைக்குள் போடுகிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள்.ஆனால் அதற்குள் அவர்களூக்குள் அடித்துக்கொள்ள வேண்டும்.நோ ரூல்ஸ்,நோ கண்ட்ரோல்,நோ அம்ப்பயர்.எப்படி இருக்கும்.?அடி போட்டு பின்னு பின்னு என பின்னுகிறார்க்ள்.

இந்த விளையாட்டில் அடிபட்டு கோமா ஸ்டேஜில் இருக்கும் அண்ணனை மருத்துவ சிகிச்சை செய்து காப்பாற்ற ஜெயிலில் இருக்கும் தம்பி பெயிலில் வருகிறான்(அண்ணன்,தம்பி 2 பேரும் ஒருவரே-வாழ்க் டபுள் ஆக்ட்பாலிசி)
கஜினி சூர்யா மாதிரி கெட்டப்பில் இறுகிய முகத்துடன் வரும் ஹீரோ கதாபாத்திரத்துடன் ஒன்றி விடுகிறார்.மேட்ச் ஃபிக்சிங் நடக்கும் 2 குரூப்களீடம் சிக்கி விளையாட்டு குழுக்கள் எப்படி சின்னாபின்னன்மாகின்றன என்பதே கதை.
கேம் ட்ரூப்பில் இருப்பவர்களை ஒவ்வொருவருக்கும் ஒரு செண்ட்டிமெண்ட் டச் குடுத்து உலவ விடிருப்பது டைரக்டரின் சாமார்த்தியம்.வீட்டு வாடகை கட்ட முடியாததால் துரத்தப்படும் ஒரு அம்மாவின் மகன்,மோசமான தொழிலை கணவன் செய்கிறான் என தெரிந்தும் வேறு வழி இல்லாத நிலையில் அவனை ஏற்றுக்கொண்டு இருக்கும் மாசமான மனைவி (கர்ப்பவதி),இப்படி கேரக்டர்களை உருவாக்கி இருப்பது அவர்கள் மேல் ஈடுபாடு காட்ட உதவும் திரைக்கதை சாமார்த்தியம்.

இந்த மாதிரி கடுமையான படங்களில் வசனங்கள் பொதுவாக ரொம்ப ட்ரையாக (DRY) இருக்கும்.இந்தப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல.இருந்தாலும் பாலைவனத்தில் நீரூற்று போல ஆங்காங்கே சில பளிச் வசனங்கள் உண்டு.


1. கோர்ட்ல இருந்து உனக்கு சம்மன் வந்திருக்கு.


ஹூம்,நல்லவனா வாழ விடமாட்டாங்களே?


2. மனசாட்சியை கழட்டி வெச்சிட்டுதான் சில தொழிலை  செய்ய வேண்டி இருக்கு.

என் கிட்ட அவ பணம் கடன் வாங்கி இருக்கா.பணத்தை கொடுத்துக் கழிக்கிறாளா?படுத்துக் கழிக்கிறாளா?



 தமிழ் படம் ஏதாவது பார்த்திருப்பாரோ டைரக்டர் என சந்தேகப்படும் அளவு ஏகப்பட்ட தமிழ்ப்பட ஃபார்முலாக்கள் ஆங்காங்கே.
படத்தின் ஹீரோயின் நிலாப்பெண்ணே பட ஹீரோயின் திவ்யபாரதியின் சாயலில் இருக்கிறார்,மாசு மரு இல்லாத,மச்சம் ஒன்றைக்கூட சருமத்தில் மிச்சம் வைக்காத அழகு முகம்.செர்ரிப்பழங்களை தோற்று விடச்செய்யும் அழகு சிவப்பில் அதரங்கள்.உடல்நிலை சரி இல்லாத காதலனாக இருந்தாலும் எஸ்கேபாகாமல் கடைசி வரை கூடவே இருந்து கவனித்துக்கொள்ளும் கதாபாத்திரம்.மிக நன்றாக செய்திருக்கிறார்.


மருத்துவ சிகிச்சைக்கான செலவுப்பணத்துக்கு அவள் விலைமகளாக பணி புரிந்துதான் பணம் ஈட்டுகிறாள்ள் என்பதை மிக நாசூக்காக ,ஒரே ஒரு லாங் ஷாட்டில் 2 செகண்டில் சொல்லி விடுவது டைரக்டரின் சாமார்த்தியம்.படத்தின் டைட்டில் போடும்போது திரைக்கதை என்ற லிஸ்ட்டில் 6 பேர் பெயர் வருகிறது.எனக்குத்தெரிந்து எந்த தமிழ்ப்படத்திலும் அப்படி வந்ததாக வரலாறே இல்லை.இருக்கவே இருக்காங்க  அப்பாவி  உதவி டைரக்டர்கள் குழு.


படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய 2 முக்கிய மைனஸ்கள்-

1.ஒளீப்பதிவு. மகா மட்டம்.தன்னை மேதை எனவும் ,ஆடியன்ஸை முட்டாள் எனவும் நினைக்கும் ஒரு ஒளிப்பதிவாளர்தான் இப்படி மோசமாக பணீயாற்ற முடியும்.லைட்டிங்க் அடிப்பது பார்ப்பவர் கண்களை உறுத்துகிறது.படம் பார்ப்பதற்குள் கண் வலி வந்துவிடும் போல.


2.பின்னணி இசை.என்னதான் சண்டைப்படமாக இருக்கட்டும்.இப்படியா டம் டம் டமால் டமால் என 2 மணி நேரம் நான் -ஸ்டாப் ஆக இசை அமைப்பது?


காதலனான அண்ணன் ஹாஸ்பிடல் பெட்டில். (HOSPITAL BED)காதலனின் தம்பி அதே முகச்சாயல்.கூடவே தங்க,பழக வேண்டிய சூழல் ,இவை அனைத்தையும் பிரமாதமாக கண்களில் வெளீப்படுத்தி கோல் போட்டிருக்கிறார் ஹீரோயின்.ஆனால் இருவரும் இணையும் காட்சிக்கான லீட் ஜீன் கிளாட் வேண்டம்மின் ஹார்டு டார்கெட்டிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.


மாற்றான் தோட்டத்து மல்லிகையை மணம் நுகரும் மசாலாக்காட்சியைக்கூட அழகியல் உணர்வு வெளிப்படுவது மாதிரி எடுத்தது  சபாஷ் டைரக்டர் என சொல்ல வைக்கிறது,



மேற்கூறிய காட்சிகளில் கத்திரியுடன் அத்து மீறி நுழைந்து முக்கியமான சீன்களை கட் செய்த இந்திய சென்சார் குழுவை அகில இந்திய அஜால் குஜால் சீன் பட ரசிகர் மன்றம் இளைஞர்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறது.



படத்தின் நீதி -பணத்திற்காக வாழ்க்கையைத்தொலைக்கிறோம்.அது தெரிவதற்குள் நமக்கு வாழ்க்கை முடிந்து விடுகிறது.


Friday, July 23, 2010

SALT - சினிமா விமர்சனம்

சால்ட்-அ”சால்ட்”டா ஒரு அதிரடி-ஹாலிவுட் திரை விமர்சனம்-  சால்ட்-உலகின் சிறந்த உதட்டழகி என்று பெயரெடுத்த SIN பட புகழ் ஏஞ்ஜலினாஜூலி நடித்த சுத்த சைவப்படம்.அவ்ர் நடித்த படங்களிலேயே லோகட்,லோஹிப் என ஒரு சின்ன சீன் கூட
இல்லாமல் நடித்த படமும் இதுதான்.



உயிரே படத்தின் ஹீரோயின் ம்ணீஷாகொய்ராலாவின் கேரக்டர்மாதிரிதான் ஏஞ்ஜலினாஜூலி யின் கேரக்டரும்.அமெரிக்காவில் வேலை செய்யும் ரஷ்ய உளவாளி.காதல் கணவனை பிணைக்கைதியாக்கி ,மிரட்டி அமெரிக்க அதிபரை கொல்லப்பணிக்கப்படுகிறாள்.ஒரு கட்டத்தில் கணவனை அவர்கள் கொன்று விட அவள் எடுக்கும் முடிவுதான் படம்.

படத்தின் ஓப்பனிங் சீனே பரபரப்பாக குருதிப்புனல் கமல்-நாசர் சந்திப்பு மாதிரி தொடங்குகிறது.தீவிரவாதி-சால்ட் விசாரணைக்காட்சிகள் செம டெம்ப்போவை ஏற்றுகிறது.விசாரனை  செய்யப்படும் குற்றவாளி சால்ட்டின் மேல் பழி சுமத்த திடீர் என அந்த ஆஃபீசே அவருக்கு எதிராக மாறுவது நல்ல டர்னிங்க் பாய்ண்ட்.அப்போ ஓட ஆரம்பிக்கும் ஜூலி படம் பூரா வெற்றிவிழா கமல் மாதிரி ஓடிக்கொண்டே இருக்கிறார்.

தப்பிக்கு ம் ஒரு சீனில் கண்காணிப்புக்கேமராவை செயலிழக்க வைக்க அவர் தன் உள்ளாடையை அகற்றி செய்யும் சாகசம் ரொம்ப நாசூக்கு+நளினம்.
என்ன தான் அவர் சாகசங்கள் செய்தாலும் சிரிப்பழகி சினேகாவை எப்படி நம்மால் வைஜயந்தி ஐ.பி.எஸ் ஆக பார்ப்பது சிரமமாக இருக்குமோ அப்படி ,மனசு கேட்காமல்தான் இருக்கு.

சேசிங் காட்சிகள் உயிரோட்டமாக இருந்தாலும் ஏஞ்ஜலினாஜூலியிடம் துடிப்போ,துள்ளலோ இல்லை.வயது மேக்கப்பை மீறி முதிர்ச்சியை காட்டுகிறது.நடு ரோட்டில் அவர் 50 போலீஸ்களூக்கு  டேக்கா கொடுக்கும் காட்சிகள் நம்பும்படி இல்லை.ஒரு ஜாக்கிசானோ,ஒரு ஜீன் ஹிலாடு வேண்டம்மோ செய்யவேண்டிய ஆக்‌ஷன் காட்சிகளை இவர்  சர்வசாதாரணமாக செய்வது குருவி தலையில் பனைமரத்தையே வைத்தது போல் ஓவெர் லோடு. மாடியில் தொங்கிக்கொண்டே ஒரு வீட்டு ஜன்னலை அவர் தட்டி சைகையால் ஜன்னல் கதவை திறக்கும்படி சொல்ல அந்தக்குழந்தை அவருக்கு டாட்டா காட்டுவது புன்ன்கையை வரவைக்கிறது.


ரயிலிலிருந்து தப்பிக்கும் சீன் செம விறு விறு ப்பு.கைவிலங்குடன் காரில் இருந்து தப்பிப்பது காதில் பூகூடையை வைப்பது போல் உள்ளது.
பிரசிடெண்ட்டை டார்கெட் வைத்து அவர் துரத்துவதும்,போலீஸ் காவலை மீறி கச்சிதமாக அவர் வேலையை முடிப்பது வரை பரபர ஆக்‌ஷன் காட்சிகள்.
ஆண் வேடத்தில் வரும் சீன் அருமை.அவ்ர் மாஸ்க்கை கழட்டும்போதுதான் நமக்கே அடையாளம் தெரிகிறது.”நான் சொல்றபடி நீங்க செய்யலைனா நீங்க பார்க்கற கடைசி ஆள் நானாகத்தான் இருக்கும்” என்று ஜூலி வசனம் பேசும்போது உயிரே படத்தில் மறக்கமுடியாத வசனமான “பார்த்துக்கோ நீ பாஅர்க்கற கடைசி சூர்யோதயம் இதுவாத்தான் இருக்கும்” ஞாபகம் வருகிறது.
க்ளைமாக்சில் நிராயுதபாணியாக ஜூலி,காயம் பட்டு போலீஸின் பார்வையில் நல்லவனாக காட்சி அளிக்கும் வில்லன்.என்ன நடக்கபோகிறதோ என எதிர்பார்க்கும்போது ஒரு ஜம்ப் பண்ணி கை விலங்கு சங்கிலியால் வில்லனின் கழுத்தை இறுக்கி அந்தரங்கத்தில் தொங்கும்போது தியேட்டரே அதிர்கிறது கை தட்டலால். நடப்புக்காட்சி வரும்போதே அதனோடே பயணிக்கும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் கவிதை,பிண்ணனி இசை ஒரு ஆக்‌ஷன் படத்திற்கு எவ்வ்ளவு முக்கியம் என உணர்ந்து டைரக்டர் பணீ ஆற்றி இருக்கிறார்.

படத்தில் கம்யூனிச வசனங்கள்,தீவிரவாதம்,நாட்டின் உளவாளிகள் பற்றிய சர்ச்சைக்குரிய வசனங்கள் உண்டு என்பதால் த்மிழில் பார்ப்பது சாலச்சிறந்தது.
காமெடி மருந்துக்கு கூட இல்லை.மூச்சு விடக்கூட நேரம் இல்லாமல் கேரக்டர்கள் ஓடிக்கொண்டு இருக்கும்போது காதல் ,காமெடி எல்லாம் வைத்தால் படத்தின் டெம்ப்போ குறைந்து விடும் என டைரெக்டர்
நினைத்திருக்கலாம்.மிகச்சரியான முடிவு


பிரமாதமான ஆக்‌ஷன் படம் எனக்கொண்டாட முடியாவிட்டாலும் பார்க்க போரடிக்காத ஆக்‌ஷன் படம் என சொல்லலாம்..