Showing posts with label ஹன்சிகா. Show all posts
Showing posts with label ஹன்சிகா. Show all posts

Sunday, January 14, 2018

குலேபகாவலி - சினிமா விமர்சனம்

Image result for gulebakavali tamil film

ஹீரோ ஒரு திருடன் , அவர் கிட்டே ஒரு ஊர்ல பல வருசங்களுக்கு முன் புதைக்கப்பட்ட புதையல் எடுக்கும் பணி ஒப்படைக்கப்படுது , எப்படி திமுக காங்கிரஸ் ,  கூட கூட்டணி அமைச்சு தேர்தல்ல போட்டியிடுதோ அந்த மாதிரி ஹீரோவும் இன்னும் 3 திருடங்களை கூட்டணி சேர்த்து ( அப்பதானே பலமான கூட்டணி ஆகும்?) அந்த ப்ராஜெக்ட்டை சக்சஸ்ஃபுல்லா எப்படி முடிக்கறார்? என்பதே கதை 



ஹீரோவா நயன் தாராவின்  முன்னாள் காதலர் பிரபுதேவா. ஓப்பனிங் சீன்ல ஒரு செம டான்ஸ் ஆடி இருக்கார் ., அதகளமான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் , அப்பறம் ஒரு டூயட்ல  ஜிமிக்ஸ் வேலை எல்லாம் காட்டி ஒரு டான்ஸ் , அவ்ளோ தான் ஹீரோ ஒர்க் முடிஞ்சுது , தேவி படத்துல ரீ எண்ட்ரி ஆன மாதிரி  இதுலயும் ஒரு காட்டு காட்டுவார்னு ட்விட்டர்ல பில்டெப் எல்லாம் நான் குடுத்தேன், எல்லாம் வேஸ்ட்


 அதுக்குப்பதிலா ஹன்சிகா இதுல செம காட்டு காட்டி இருக்கார். ஹன்சிகா அவளோ திறமை காட்டி நடிச்ச படமா?னு வியக்க வேணாம் , கிளாமர் காட்டி நடிச்சிருக்கார் . பாடல் காட்சிகளில்   இவர் ஒரு திறந்த புத்தகம் . 3  சீன்களில்  ஹீரோ இவரை ரொம்ப  ஜொள் விடுவது சகிக்கல. குறிப்பா பிரபு தேவா வுக்கு என்னா டேஸ்ட்டோ சிம்பு கரெக்ட் பண்ணி கழட்டி விட்ட/ விடப்பட்ட ஃபிகர்களா பார்த்து  ரூட் போடறார்.


ரேவதி நல்ல பர்ஃபார்மென்ஸ் இதுல . மகளிர் மட்டும் , மஞ்சப்பை படங்களுக்குப்பின் சொல்லிக்கொள்ளும் ஒரு ரோல் , சத்யனை ஓப்பனிங் சீன்ல ஏமாற்றுவது , செண்ட்டிமெண்ட் கதை சொல்லி தப்பிப்பது , க்ளைமாக்ஸில் குதூகலம் காட்டுவது என பின்றார்
 அவருக்கு அடுத்தது நம்ம மொட்டை ராஜேந்திரன் . அம்மா,. சித்தி  என அவர் உருகுவது செம காமெடி . எம்(டன்) மகன் படத்தில் வடிவேலு அப்பாவை வெச்சு ஒரு சுடுகாட்டு காமெடி + குணச்சித்திர ரோல் பண்ணி கைதட்டலை அள்ளி \  இருப்பார் , அதுதான் இதுக்கு இன்ஸ்பிரேசன் போல 

முனீஸ்காந்த் க்கு முக்கிய ரோல் , ஆனாலும் பெரிய அளவில் காமெடி இல்லை 

 வில்லன்களாக ஆனந்த்ராஜ் & கோ வுக்கு   பெரிய வேலை ஏதும், இல்லை


 பாடல்கள்  , இசை எல்லாம் சுமார் ரகம் . ஒளிப்பதிவு , எடிட்டிங் சராசரி  தரம்

கதை சொல்லப்போறேன் பட இயக்குநருக்கு இது கையைக்கடிக்காத முதலீட்டுக்கு மோசம் போகாத சராசரி வெற்றிப்படம்  தான் 


Image result for hansika hot

நச் டயலாக்ஸ்


நான் ஒரு டாக்டரா இருக்்கறதால பிறப்பு ,இறப்பு இத எல்லாம் சகஜமா எடுத்துக்க முடியுது


பலமான எதிரி அமைஞ்சாதான் பிஸ்னெஸ்ல ஈசியா டார்கெட் அச்சீவ் பண்ண முடியும்

சாமியைக்கும்பிடறவங்களை விட அந்த சாமி சிலையைத் திருடறவங்களுக்குதான் அதன் உண்மையான மதிப்பு /விலை தெரியும்

காக்கா வலிப்பு வந்தா இரும்புச்சாவி குடுக்கனும்


;சாவி குடுக்க அவ என்ன பொம்மையா?


நான் தனிமையைத்தேடி காசி,ராமேஸ்வரம் னு போலாம்னு இருக்கேன்
ஆனா,அங்கே ஏகப்பட்ட கூட்டம் இருக்குமே?



Image result for hansika hot

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

`1  ஹன்சிகா ஒரு சீன்ல NEVER FINDING FUN னுனு ஒரு வாசக பனியன் சுசீலா கணக்கா போட்டுட்டு வருது , என்ன உள் குத்து அர்த்தமோ தெரில 


2  ஓப்பனிங் சாங் ல  பிரபுதேவா சிலம்பாட்டம்ல சிம்பு படுத்த மேனிக்கு ஒரு ஸ்டெப் போடுவாரே அதே போல் பேட்டர்ன்ல வெரைட்டியா ஆடி இருக்கார் , பிரமாதம் 

3  கிராமத்து வழக்கப்படி ஒரு பரிகாரத்துக்காக ஹன்சிகாவை   முழு நிர்வாணமா ஊர்வலம் வரனும்னு சொல்றாங்க , அப்படி ஒரு கிராமம் எந்த மாவட்டத்துல இருக்கு/னு  தெரில , தெரிஞ்சா ஒரு மினி டூர் போலாம்

Image result for hansika hot

சபாஷ் டைரக்டர்


1  லோ பட்ஜெட்ல  ஓரளவு ரசிக்கும்படி ஒரு காமெடிப்படம் கொடுத்ததுக்கு ஒரு ஷொட்டு

2 ஹன்சிகா வுக்கு சம்பளத்தை மட்டும் கொடுத்துட்டு கடைசி வரை கதை , கேரக்டர் பற்றி அவரை வாயை திறக்காம பார்த்துக்கிட்டது 

3 ரேவதியின் பங்களிப்பு , மொட்டை ராஜேந்திரன் நடிப்பு 

Image result for hansika hot

லாஜிக் மிஸ்டேக்ஸ்  ,திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1  ஓப்பனிங் சீன் ஃபிளாஸ்பேக்ல 2 பெட்டி நிறைய வைரக்கற்களை ஒரு ஆள் பதுக்கறான். அந்த வைரக்கற்களை ஒரு எலும்புக்கூட்டில் மறைச்சு அந்த 2 பெட்டில ஒரு பெட்டில அந்த எலும்புக்கூட்டை வைக்கறான் , இது எப்படி சாத்தியம், கொள்ளளவு , கன அளவு இது எல்லாம் டேலி ஆகலையே?

2  ஹன்சிகா நிர்வாணமா வருதா? ஊர்வலம் ல சீன் பார்க்கலாம்னு அந்த கிராமத்துல ஒரே ஒரு ஆள் மட்டும் ஒளிஞ்சிருந்து செக் பண்றான் , ஊர்ல பாதி ஆம்பளைங்க அப்படித்தானே இருப்பாங்க ?

3  பல வருசங்களா பெட்டியில் இருக்கும்போது எலும்புக்கூடு எந்த பாதிப்பும் இல்லாம , தூசி படாம க்ளீனா இருப்பது எப்படி?


Image result for hansika hot



சி.பி கமெண்ட் - குலேபகாவலி - புதையலை தேடிப்போகும் திருடர்கள்-மொக்கை காமெடி , ஹன்சிகா கிளாமர் , ரேவதி,மொட்டை ராஜேந்திரன் நடிப்பு மட்டுமே + , விகடன் - 40 ,41  ரேட்டிங் - 2.5 / 5 


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு) = 40 / 41


குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்) =  3/5


ஈரோடு ஸ்ரீனிவாசாவில் படம் பார்த்தேன். 12 பேர் இருந்தாங்க 

Monday, May 04, 2015

சிம்பு வின் மூன்றாவது முன்னாள் காதலி பர பரப்புப்பேட்டி

விஜய், சிம்பு, ஜெயம் ரவி என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த உற்சாகத்தில் இருக்கிறார் ஹன்சிகா. இப்போதெல்லாம் ஹன்சிகாவுக்கு நன்றாக தமிழ் பேச வருகிறது. “ஹலோ...நல்லா இருக்கீங்களா?” என்று அழகுத் தமிழில் கைகுலுக்கிவிட்டுப் பேச ஆரம்பித்தார்.
இந்த ஆண்டு வாலு, ரோமியோ ஜூலியட், உயிரே உயிரே, இதயம் முரளி, புலி என்று வரிசையாக உங்களது படங்கள் வெளியாக இருக்கின்றனவே?
நன்றி. ஐந்தாறு வருடங்கள் கழித்தும் இதே மாதிரி பரபரப்பாக நான் இருக்க வேண்டும். ஹன்சிகா நல்ல நடிகை. ஹன்சிகா நடிக்கிற படம் நல்லா இருக்கும் என ரசிகர்கள் நம்ப வேண்டும். இதுதான் என் ஆசை.
கொஞ்சம் கொஞ்சமா தமிழ் பேசக் கற்றுக்கொண்டுவிட்டீர்களே?
ஆமாம். வணக்கம். நன்றி. எப்படி இருக்கீங்க என்பதுபோன்ற வார்த்தைகளைத் தாண்டி நிறைய கற்றுக்கிட்டே இருக்கேன். மேடையில் பேச சின்னதாகத் தயங்குகிறேன். குழந்தைகளிடத்தில் தமிழில் பேசும்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன். தமிழில் எனக்கு அக்கா என்ற வார்த்தை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.
அக்காவா? அப்படி உங்களை யார் அழைக்கிறார்கள்?
நான் தத்தெடுத்து வளர்க்கிற 30 குழந்தைகளும் என்னை அக்கா என்றுதான் அழைக்கிறார்கள். அந்த வார்த்தை எனக்கு மிகவும் அன்பான வார்த்தையாகத் தெரிகிறது.
முப்பது குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதற்கான நோக்கம்?
என் அம்மா ஒரு டாக்டர். காசு கொடுக்க முடியாத ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பார். அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், குடிசைப் பகுதிகள் என எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துச் செல்வார். மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்று அம்மா அடிக்கடி சொல்வார். சின்ன வயதில் இருந்தே அம்மா சொல்லி சொல்லி வளர்த்தது என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
நான் சம்பாதிக்க ஆரம்பித்ததும் என் அம்மா மாதிரி முடிந்த அளவுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நடிகை ஆனதும் எனக்குக் கிடைக்கும் வருமானத்தில் 30 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறேன். இது எனக்கு மிகப்பெரிய திருப்தியையும், மகிழ்ச்சியையும் தருகிறது.
என்ன மாதிரியான உதவிகளைச் செய்கிறீர்கள்?
நான் தத்தெடுத்துக்கொண்ட குழந்தைகளின் கல்விக் கட்டணம், உடைகள், விளையாட்டுப் பொருட்கள், திறமைகளை வளர்ப்பதற்கான பயிற்சிகள் என அனைத்துச் செலவுகளையும் நானே பார்த்துக்கொள்கிறேன். நான் பார்ட்டிகளுக்குச் செல்வதில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் குழந்தைகளுடன் நேரம் செலவிடுகிறேன்.
அவர்கள் என்னைப் பார்த்தவுடன் “ ஹய்.. அக்கா” என்று சந்தோஷமாக கோரஸ் பாடுவதைப் போல அழைப்பார்கள். அவர்கள் அன்பில் நான் கரைகிறேன். பொம்மைகள் வாங்கிக் கொடுத்து நானும் சேர்ந்து விளையாடுகிறேன். தென்னிந்திய உடுப்பி சாப்பாடு என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். என் பிறந்த நாளை அவர்களுடன் கொண்டாடுவதில் அலாதி ஆர்வம் உண்டு.
குழந்தைகளுக்கு மட்டும்தான் உதவி செய்வீர்களா?
அப்படியில்லை. என் சக்திக்கு உட்பட்டு தேவைப்படும் யாருக்கும் உதவத் தயார். கடந்த வருடம் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 30 பெண்களின் மருத்துவச் செலவை ஏற்றுக்கொண்டேன். தற்போது முதியோர்களுக்காக ஒரு இல்லம் கட்ட விரும்புகிறேன். எனது குழந்தைகளுக்காக ஒரு இல்லம் கட்ட வேண்டும் என்ற முயற்சியும் இருக்கிறது.
சினிமாவில் இப்போது என்ன சாதித்திருப்பதாக நினைக்கிறீர்கள்?
10 வயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். இந்தியில் அமிதாப், ஹிருத்திக் ரோஷனோடு நடிப்பு, 15 வயதில் ஹீரோயின் என எனக்கு எல்லாமே நன்றாக அமைந்தன. அரண்மனை படம் என்னை நடிக்கத் தெரிந்த நடிகையாக அடையாளப்படுத்தியது. வாலு படத்தில் ப்ரியா மகாலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
இதில் என் நடிப்பில் இன்னும் முன்னேற்றத்தைப் பார்ப்பீர்கள். ரோமியோ ஜூலியட் படத்தில் சேட்டை செய்யும் குறும்புப் பெண்ணாக நடித்திருக்கிறேன். பத்து வருடங்கள் கழித்தும் ஹன்சிகா நல்ல நடிகை என்று பெயர் எடுக்க வேண்டும். கேமராதான் என் உலகம். ஒரு நடிகையா, ஒரு படத்துக்கு நூறு சதவிகிதம் உண்மையாக நடிப்பதே பெரிய சாதனைதான்.
மீண்டும் இந்திப் படங்களில் நடிப்பீர்களா?
தமிழ், தெலுங்கில் நல்ல நடிகையாக வர வேண்டும். தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக ஜொலிக்க வேண்டும். இதுதான் என் இலக்கு. இந்தி சினிமாவுக்குப் போகும் எண்ணம் இல்லை. தமிழ் சினிமாவின் தரம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இங்கு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். தமிழ் சினிமாவில் நானும் இருப்பது எனக்குப் பெருமை.
படத்துக்குப் படம் அழகாகத் தெரிகிறீர்களே, அந்த ரகசியம் என்ன?
நன்றி. நான் எதற்கும் கவலைப்படுவதில்லை, டென்ஷன் ஆவதில்லை, எனக்குக் கோபமே வராது. திட்டினால்கூட, நான் சிரித்துக்கொண்டேதான் இருப்பேன். என் மனசுக்கு நான் நேர்மையாக இருக்கிறேன்.
உலகிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த பெண் யார்?
என் அம்மாதான். நான், பிரபல நடிகையாக இருப்பதற்கு அவர்தான் காரணம். என்னை இந்த அளவுக்கு வளர்த்தெடுத்தது, நம்பிக்கை கொடுத்தது, சாதிக்கத் தூண்டியது எல்லாம் என் அம்மாதான்.
காதலை முறித்துக் கொண்ட பிறகு வாலு படப் பாடல் காட்சியில் நீங்களும், சிம்புவும் இணைந்து நடித்திருக்கிறீர்களே... (கேள்வியை முடிக்கும் முன்பே)
ஸாரி.. இந்தக் கேள்வியை மறந்திடுங்க. சிம்பு நல்ல நடிகர். அவ்வளவுதான். நன்றி.


நன்றி  - த இந்து

Monday, April 20, 2015

'டண் டணக்கா' விவகாரம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு ! அடங்கொன்னியா

ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் இமான், அனிருத், தயாரிப்பாளர் நந்தகோபால், பாடலாசிரியர் ரோகேஷ் ஆகியோருக்கு டி.ராஜேந்தர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அறிமுக இயக்குநர் லட்சுமணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, ஹன்சிகா, பூனம் பாஜ்வா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'ரோமியோ ஜுலியட்'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்காக 'டன் டணக்கா' என்ற பாடலை அனிருத் பாடியிருக்கிறார். அப்பாடலை ரோகேஷ் எழுதியிருக்கிறார்.
ஏற்கனவே இப்பாடலுக்கு டி.ராஜேந்தர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தற்போது படத்தின் தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அதில் கூறியிருப்பது:
"சென்னையைச் சேர்ந்த நந்தகோபால் என்பவர் தயாரிக்கும் படம் 'ரோமியோ ஜூலியட்'. படத்தின் இயக்குனர் லட்சுமணன். இசையமைப்பாளர் டி. இமான். இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல்-‘டண் டணக்கா… ணக்கா… ணக்கா’ என்று ஆரம்பமாகிறது. இந்தப் பாடலில் டி.ராஜேந்தரின் ஒரிஜினல் குரலை காப்பியடித்து, ‘இமிடேட்’ செய்து பாடியிருக்கிறார்.
பாடலின் பின்னணியில் டி.ராஜேந்தர் பேசும் வசனம் அவர் குரலிலேயே ஒலிக்கிறது. இதன் மூலம் என் கட்சிக்காரரின் பெயரை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள். கட்சிக்காரரிடமிருந்து முறையான அனுமதி இல்லாமலும் அவர் பேசும் வசனத்தை, பின்னணியில் ஒலிக்கச் செய்திருக்கிறார்கள்.
இது, பல ஆண்டுகளாக பல்வேறு படங்களில் நடித்து தனக்கென்று ஒரு தனிநடை ஸ்டைலை வைத்திருக்கும் என் கட்சிக்காரரின் தனி நபர் உரிமையையும், ‘காபிரைட்’ உரிமையையும் இதன் மூலம் மீறியிருக்கிறீர்கள் என்று டி.ராஜேந்தர் சார்பில் வாரான் அண்ட் சாய்ராம்ஸ் நிறுவனம் (வழக்கறிஞர்கள் தியாகேஸ்வரன், ராமகிருஷ்ணன்) வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இதே பாட்டும், பதிவு செய்யப்படும் காட்சிகளும் ‘யூ ட்யூப்’ தளத்திலும், சாட்டிலைட் சானலிலும் வெளியிடப்பட்டுள்ளது (ஆடியோ_வீடியோ வடிவில்). படம் திரையிடப்படுவதற்கு முன்னால் இப்படி ஒரு வெளியீடு ‘பெருமைக்குரிய’ என் கட்சிக்காரரின் பெயரை துஷ்பிரயோகம் செய்யும் நோக்கத்தோடே அமைந்திருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில், இந்தச் செயலுக்காக, சட்டத்துக்குப் புறம்பாக என் கட்சிக்காரரின் முறையான அனுமதியில்லாமல் அவர் பெயரையும், இமேஜையும், அவரது தனிப்பாணி உச்சரிப்பு வசனத்தையும் பயன்படுத்தியிருப்பதற்காக ரூ.1 கோடி நஷ்டஈடு தர வேண்டும்.
மேலும் யூ ட்யூப், சாட்டிலைட் சானல் உள்பட எந்த ஒரு ஊடகத்திலும், எந்த ஒரு தளத்திலும் வெளியிடுவதை உடனே நிறுத்த வேண்டும். அதோடு வழக்கு செலவினங்களுக்காக ரூ.1000 தர வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


நன்றி- த இந்து

  • N Krishnamoorthy  
    இலவச விளம்பரம்
    Points
    36600
    about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
    • ALFONS  
      எங்க தல எங்க தல டி ஆர் ரூஊஉ
      Points
      440
      about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Ganesan  
        தமிழ்நாட்டில் கற்பனை பஞ்சம் ஏற்பட்டுவிட்டது!பழையபடத்தின் தலைப்பை காப்பியடிப்பது, ரீமிக்ஸ் என்ற பெயரில் மக்கள் மனம் கவர்ந்த பாடல்களை கொலை செய்வது, பாடல் எழுத தெரியாமல் ஐய்யயோ ஐயையோ என கூப்பாடு போடுவது கர்நாடக,இந்துஸ்தானி ராகங்களில் மெட்டு போட தெரியாமல் ஆங்கில பாணியில் கூச்சல் இடுவது என தமிழ் திரையுலகம் அழிவை நோக்கி நடை போடுகிறது!!
        Points
        630
        about 4 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Senthil  
          உண்மை தான் கேலி நடவடிக்கைகளை இது போல தட்டிக் கேட்காவிட்டால் இதுவும் செய்வார்கள் இன்னமும் செய்வார்கள் டி ராஜேந்தர் தன் படங்களில் இப்படித்தான் மூத்த கலைஞர்களை கேலி செய்தாரா ? இல்லையே ! எதற்கும் ஒரு அளவு இருக்கிறது இது ஒரு படிப்பினையாக இருக்கட்டும் இனி இப்படி முயற்சி செய்பவர்களுக்கு
          about 6 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • Shree Ramachandran  
            அற்பத்தனமான செய்தி. அதற்க்கு இந்த பத்திரிகை இலவச விளம்பரம் கொடுக்கிறது.
            Points
            3465
            about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • Gnanasekaran  
              இவர்கேட்பதிலும் நியாம் இருக்கத்தான் செய்கிறது. ஒருவருடைய பொருளை எடுத்து மற்றவர்கள் காசு பார்க்கும்போது அந்த பொருளுக்கு உரியவருக்கு நிச்சயம் மனசங்கட்டம் வரத்தானே செய்யும். அதனால் திரு டி ஆர் சொல்வது நியாயமே.
              Points
              3915
              about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
              • R.M.Manoharan Manoharan  
                டி.ஆருக்கு பேரும்கிடையாது இமேஜும் கிடையாது. அவருடைய படமெல்லாம் எப்போவோ டப்பாவுக்குள் போய் விட்டது. அவருடைய டண்... டணக்கா பாடல் என்ன பெரிய புரட்சிகரமான கருத்துக்களையும், இலக்கிய சொற்றொடர்களையும் கொண்டதா? விலாசமற்ற ராஜேந்தர் விளம்பரத் திற்காக அலைகின்றார். இந்த வழக்கு விசாரணைக்கு வரவேண்டும், ராஜேந்தர் முகத்தில் கோர்ட் நிச்சயம் கரிபூசும். .
                Points
                7325
                about 14 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
                PonrajPethanan  Up Voted
                • Prabhu  
                  டன் டணக்கா என்ற வார்த்தைக்கு இவர் காபி ரைட் வங்கி இருக்கிறாரா.... அய்யகோ இது தெரியாமல் நான் பல முறை சொல்லி இருக்கிறேனே? என் மீது வழக்கு போடுவாரோ? பயமாக இருக்கிறது,,,,,
                  Points
                  520
                  about 14 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
                  PonrajPethanan  Up Voted
                  • Kilikkaadu  
                    அட..திள்ளண்டோம்மாரிடப்பங்குத்து ஆட்டம் ஆடுவேன்..பாட்டு பாடுவேன்..அஜக் தா..அஜக் தா..
                    Points
                    1040
                    about 15 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                    • Sangili Karuppan  
                      அடுத்து t ராஜேந்தர் கு மதிப்பே இருக்காது
                      about 15 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                      • LINGESH  
                        அதென்ன வழக்கு செலவினங்களுக்காக ரூ.1000 தர வேண்டும்". ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு தொடுக்கப்படும் வழக்கிற்கு வெறும் ஆயிரம் ரூபாய்தான் செலவாகுமா?