Showing posts with label ஸ்பெக்ட்ரம். Show all posts
Showing posts with label ஸ்பெக்ட்ரம். Show all posts

Monday, February 18, 2013

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் குற்ற வாளிக் கூண்டில் சி.பி.ஐ. வழக்கறிஞர்

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நீரா ராடியா, சி.ஏ.ஜி., கலைஞர் டி.வி. என வந்த அத்தியாயங்களுக்கு மத்தியில், சி.பி.ஐ. வழக்கறிஞர் ஒருவரே குற்ற வாளிக் கூண்டில் நிற்பது புதிய அத்தியாயம்!


2ஜிஅலைவரிசை உரிமத்தை தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவும் தொலைதொடர்புத் துறை தனியார் நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து லாபம் அடைந்தாக புகார்கள். ஓர் ஆண் டாக நடந்த விசாரணையில் திடீர் திருப்பம். குற்றம் சாட்டப்பட்ட யுனிடெக் டெலிகாம் அதிபர் சஞ்சய் சந்திராவும் குற்றம் சாட்டும் சி.பி.ஐ. வழக்கறிஞர் ஏ.கே.சிங்கும் பேசும் ஆடியோ டேப் வெளியாகி இருக்கிறது.
சுமார் 1,651 கோடி ரூபாய்க்கு அலைவரிசை உரிமத்தை வாங்கிய யுனிடெக் நிறுவனம், அதை அதிக விலைக்கு டெலிநார் என்ற நார்வே நாட்டு டெலிகாம் கம்பெனிக்கு விற்றது. ரியல் எஸ்டேட் பிசினஸில் பதிவுபெற்ற யுனிடெக் நிறுவனம், டெலிகாம் உரிமங்களைப் பெற தகுதியற்றதாகவும் இருந்தது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளில்தான் தொலைத்தொடர்பு அமைச்சர் ராசாவோடு கூட்டு சதியில் ஈடு பட்டதாகச் சொல்லி கைது செய் யப்பட்டார் சஞ்சய் சந்திரா. இந்தக் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க இவர் சி.பி.ஐ. வழக்கறிஞரோடு  சதித் திட்டங்கள் தீட்டியதற்கான ஆதாரம் என்று  இந்த ஆடியோ டேப் காட்டப்படுகிறது.
ஏராளமான இரைச்சல்கள். அருகே இருப் பவர்களின் பேச்சுக்கள் எல்லாம் பதிவாகி இருக் கின்றன. இவர்கள் ஓர் அறையில் சந்தித்து பேசும்போது தொலைவில் இருந்து மைக் மூலமோ அல்லது மறைத்து வைக்கப்பட்ட ரெக்கார்டர் மூலமாகவோ பதிவு செய்யப்பட்டதைப் போல ஒலியாக இருக்கிறது. சிறப்பு நீதிமன்றத்தின் வளா கத்தில் உள்ள சி.பி.ஐ. அறையில் இந்தச் சந்திப்பு நடந்து இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆனால், இருவருடைய பேச்சுக்களின் வேகத்தை வைத்துப் பார்த்தால் இது தொலைபேசி உரையாடலாகவும் இருக்கலாம்.  
இந்த ஆடியோ சி.டி-யை தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட பிறகே, சி.பி.ஐ. தரப்பு நடவடிக்கையில் இறங்கியது. 2ஜி வழக்கில் இருந்து ஏ.கே.சிங்கை நீக்கிவிட்டு, இந்த ஆடியோவை ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பியது.
ஆ.ராசா, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற கடைசி தேதி என்று முதலில் குறிப்பிட்டது...2007,அக்டோபர் 1-ம் தேதி. ஆனால், இந்த தேதி செப்டம்பர் 25 என்று பின்னர் மாற்றி அறிவிக்கப்பட்டு, அதன்பிறகு  வந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. யுனிடெக் நிறுவனத்தின் விண்ணப்பங்கள் கிடைத்தவுடன், அதன் பின்னர் வரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விண்ணப்பங்களை நிராகரிக்க இந்தச் சதி நடந்ததாக ஆ.ராசா மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க சி.பி.ஐ. வழக்கறிஞர் ஏ.கே.சிங்கும் யுனிடெக் அதிபர் சந்திராவும் பேசிய பல தகவல்கள், அந்த ஆடியோவில் உரையாடலாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பவர் ஏ.கே.ஸ்ரீவத்சவா. இவர் தொலைத்தொடர்புத் துறையில் வயர் லெஸ் பிரிவு துணை இயக்குநர் ஜெனரல். இவர் மூலமாக இந்தத் தேதி மாற்ற விவகாரங்கள் நடந்ததாக சொல் லப்படுகிறது. இவரை ராசாவுக்கும் சஞ்சய் சந்திராவுக்கும் எதிராக சாட்சியம் அளிப்பவராக சி.பி.ஐ. நிறுத்தியுள்ளது. ''நாங்கள் ஸ்ரீவத்சாவை உங்கள் வசதிக் காகவே நிறுத்தி இருக்கிறோம். நீயே குற்றவாளிதான் என்று அவரை மடக்கினால், பிறகு அவரது சாட்சியம் பயன் இல்லாமல் போகும்'' என்று, சஞ்சய் சந்திராவுக்கு ஏ.கே.சிங் ஆலோசனை கூறுகிறார். இவ்வாறு வழக்கு சம்பந்தப்பட்ட பல யோசனைகளை சஞ்சய் சந்திராவுக்கு கூறுகிறார் அவர்.  


சி.பி.ஐ-யில் கடந்த 20 ஆண்டுகளாக இருந்து, பல அரசியல் வழக்குகளை கையாண்டவர் ஏ.கே.சிங். ஹவாலா டைரி வழக்கு விவகாரம் முதல் சிபுசோரன் கொலை வழக்கு வரை சி.பி.ஐ. சார்பில் ஆஜரானவர். இந்த விவகாரத்தில் சிங் திட்டமிட்டு கவிழ்க்கப்பட்டு இருக்கலாம் என்றும் கருதப் படுகிறது.


நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு முதல்நாள் இந்த ஆடியோ லீக் செய்யப்பட்டது. கூட்டுக் குழு விசாரணைக்கு ப.சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டவர்களை அழைக்கும் பி.ஜே.பி-யின் கோரிக்கையை திசைதிருப்ப இந்த ஆடியோ வெளியிடப்பட்டதா என்ற சந்தேகமும் இருக்கிறது.


இந்த உரையாடல் விவகாரத்தால் ஏ.கே.சிங் பதவி பறிபோவதோடு, குரல் பரிசோதனையில் உண்மை வெளியாகும் பட்சத்தில், கிரிமினல் வழக்கு பதிவாகி ஜெயிலுக்குப் போவதும் நடக்கலாம். சஞ்சய் சந்திராவின் ஜாமீன் ரத்தாகி, ஜெயிலுக்குப் போவதிலும் சந்தேகம் இல்லை என்கின்றனர். விசாரணையில் நடந்த தில்லுமுல்லுகளை ஒட்டி, 2ஜி வழக்கை உச்ச நீதிமன்றம் மறு விசாரணைக்கு உத்தரவிடவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.


சி.பி.ஐ. வழக்கறிஞரே சிக்கி இருப்பதால் இந்த வழக்கின் விசாரணை எவ்வளவு தூரம் நியாயமாக நடக்கும் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது!


- சரோஜ் கண்பத்

thanx - vikatan 


1.
2g வழக்கில் இதை விட மிகப் பெரிய காமெடி 200 கோடி லஞ்சம் கொடுத்த சாஹிட் பால்வா சிறை மற்றும் அவனது நிறுவனங்களுக்கு சீல், லஞ்சம் வாங்கிய கலைஞர் டிவி சீரும் சிறப்புமாக இன்னும் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் 60% பங்குதாரர் மற்றும் நிர்வாக இயக்குனர் மீது ஒரு வழக்கு கூட இல்லை !! உலகத்திலேயே லஞ்சம் கொடுத்தவன் சிறையிலும் லஞ்சம் வாங்கியவன் சுதந்திரமுமாக திரிவது இந்தியாவில் மட்டுமே!! ஒன்று 2G வழக்கு மற்றொன்று இத்தாலியில் இருந்து வாங்க விருந்த ஹெலிகாப்டர் ஊழலில்.

இத்தனை நல்லவர்களான காங்கிரஸ் மற்றும் திமுக உடன் வியஜகாந்த் கூட்டணி ஏற்படுத்தினால் நாப்பதும் நமதே நாமமும் நமக்கே!! காவிரிக்கும் கரன்ட்டுக்கும் வழக்கம் போல உச்சநீதிமன்றத்தையே நாடலாம்



2. சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்குதாம். என்னத்த கண்காணிக்குது? கே.ஜி.பாலகிருஷ்ணன், தின்னகரன் மாதிரி நிறையா பேரு இருப்பாங்க போல். அந்த டிவி சேனல் மட்டும் இந்த ஆடியோ டேப்ப வெளியிடாடிட்டி இதையும் முடி மறைச்சுருப்பானுங்க. கூடிய சீக்கிரம் எல்லா ஆவணட்திஅயும் அழிச்சு கேசை ஒண்னும் இல்லாம பண்ணப்போறாங்க. திருட்டு பசங்க



3. என்றைக்கு ராசாவை மட்டும் உள்ளே தள்ளி விட்டு, சிதம்பரம் அவர்கள் மீது குற்றம் இல்லை என்று நீதிபதி சைனி தீர்ப்பு அளித்தாரோ, அன்றே இந்த வழக்கை ஊத்தி மூடும் வேலை துவங்கி விட்டது.....ஆனாலும், உண்மை ஒரு நாள் வெளியே வந்தே தீரும் என்று நம்புவோமாக... 


Saturday, November 24, 2012

வலுவிழக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் - உள்ளடி வேலைகள் - குற்றம் நடந்தது என்ன?

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிஏஜி வினோத் ராய் கூறிய தகவல்கள் முழுக்க முழுக்க அவரது சொந்த கற்பனை என்ற விவரம் மெல்ல மெல்ல வெளியே வந்து கொண்டுள்ளது.


இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே வினோத் ராயின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகவே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டிருந்தால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி கிடைத்திருக்கும் என்றார் வினோத் ராய். ஆனால், சமீபத்தில் இதை ஏலம் விட்டபோது வாங்கக் கூட ஆள் இல்லாமல் வெறும் ரூ. 9,407 கோடிக்கே அது விற்பனையானது. இதிலிருந்தே ஸ்பெக்ட்ரத்தின் விலை தொடர்பாக வினோத் ராய் கூறிய 'மனக் கணக்கு' எந்த அளவுக்கு ஏற்றிச் சொல்லப்பட்ட ஒன்று என்பது நிரூபணமாகிவிட்டது.


இந் நிலையில் வினோத் ராய் மற்றும் அவரது துணை அதிகாரியான ரேகா குப்தாவின் அடுத்த தகிடுதித்தம் வெளியே வந்துள்ளது.


2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை குறித்து உண்மையிலேயே ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க வேண்டியது, மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகத்தில் பணியாற்றிய டைரக்டர் ஜெனராலான ஆர்.பி.சிங் தான். இவர் தான் தொலைத் தொடர்பு மற்றும் தபால் துறைக்கான சிஏஜியின் தணிக்கை அதிகாரி ஆவார்.


ஆனால், வினோத் ராய் அண்ட் கோ ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக தாங்களே ஒரு அறிக்கையை தயார் செய்து அதில் ஆர்.பி.சிங்கிடம் கட்டாயப்படுத்தி வாங்கியுள்ளது. இந்த நஷ்டக் கணக்கு சரியானதல்ல என்று ஆர்.பி.சிங் கூறியும் கூட அவரது உயர் அதிகாரியான வினோத் ராய் அதில் கையெழுத்து போட வைத்துள்ளார். இதை ஆர்.பி. சிங் இப்போது வெளியே கூறியுள்ளார்.


முரளி மனோகர் ஜோஷி...:


2ஜி விவகாரம் குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு 2008ம் ஆண்டு முதலே விசாரித்து வந்தது. இந் நிலையில் இதன் தலைவராக பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி 2010ம் ஆண்டு பதவியேற்றார்.



அதே நேரத்தில் மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகமான சிஏஜியின் அலுவலகமும் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை குறித்து ஆய்வு செய்து வந்தது. அப்போது, சிஏஜி அலுவலகத்தை முரளி மனோகர் ஜோஷி பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சிஏஜி தயாரித்து வந்த ரகசிய 2ஜி அறிக்கை குறித்து விவாதித்துள்ளார். இதை சிஏஜி அலுவலகத்தின் தலைமையக டைரக்டர் ஜெனரல் ஆர்.பி.சின்ஹா தனது அலுவலகக் குறிப்புகளில் எழுதியுள்ளார்.


இதன் பின்னர் தான் சிஏஜியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. அதில், ஸ்பெக்ட்ரம் விற்பனையால் மத்திய அரசுக்கு ரூ. 57,666 கோடி முதல் ரூ. 1.76 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டிருந்தது.


சிஏஜி ஒரு விஷயத்தை ஆய்வு செய்து வந்தபோது முரளி மனோகர் ஜோஷி ஏன் அந்த விவரங்களைப் பெறவும், அது குறித்து அதிகாரிகளுடன் விவாதிக்கவும் ஆர்வம் காட்டினார் என்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது

.
முரளி மனோகர் ஜோஷியின் வீட்டுக்கே போய் உதவிய சிஏஜி அதிகாரிகள்:



மேலும் முரளி மனோகர் ஜோஷி இந்த விவகாரத்தில் அறிக்கை தயாரிக்க உதவுவதற்காக சிஏஜி அலுவலக அதிகாரிகள் அவரது வீட்டுக்கே நேரில் சென்று, அதுவும் விடுமுறை நாட்களில், உதவி செய்துள்ள விவரத்தையும் ஆர்.பி.சிங் இப்போது வெளியே கூறியுள்ளார்.



கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற ஆர்.பி.சிங் 2ஜி விவகாரத்தில் சிஏஜி வினோத் ராயின் செயல்பாடுகள் குறித்து பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ள பேட்டியில்,


கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி, குட் பிரைடே விடுமுறை தினத்தில், சிஏஜி அலுவலக அதிகாரிகள் முரளி மனோகர் ஜோஷியின் வீட்டுக்குச் சென்றனர். பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரையும் குற்றம் சாட்டி ஜோஷி தயாரித்த 2ஜி அறிக்கையை தயாரிக்க உதவினர்.



ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்று தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அலுவலக அறிக்கை என்னுடையதே அல்ல. தனக்கு இப்படித்தான் (ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் நஷ்டம் என்று கூறி) அறிக்கை வேண்டும் என்று எனது அதிகாரியான சிஏஜி (வினோத் ராய்) எழுத்துப்பூர்வமாகவே உத்தரவு போட்டுவிட்டால் நான் என்ன செய்ய முடியும்?.



நான் செய்த கணக்குத் தணிக்கையின்படி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் எந்த நஷ்டமும் இல்லை என்றே எழுதியிருந்தேன். அதே நேரத்தில் கூடுதல் ஸ்பெக்ட்ரம் வைத்திருக்கும் நிறுவனங்களிடம் இருந்து இன்னும் ரூ. 37,000 கோடியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று தான் எழுதியிருந்தேன். இதைக் கூட நஷ்டமாகக் கூற முடியாது. காரணத்தைச் சொல்லி, அதை நிச்சயம் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க முடியும்.


இது நடந்தது 2010ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி. இதையடுத்து எனது தலைமையிலான குழுவை சிஏஜி தலைமையகத்தில் உள்ள துணை சிஏஜியான ரேகா குப்தாவின் கீழ் இணைத்துவிட்டனர். மேலும் மத்திய நிதித்துறையின் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்யும் பணியையும் என்னிடம் தரவில்லை.



2010ம் ஆண்டு ஜூலை மாதம் நான் கொடுத்த அறிக்கையை முழுவதுமாகவே திருத்தி (ரூ. 1.76 லட்சம் கோடி வரை நஷ்டம் என்று எழுதி) அதை மத்திய நிதித்துறைக்கும், தொலைத் தொடர்புத்துறைக்கும் அனுப்புமாறு உத்தரவு போட்டனர். இந்த உத்தரவு மேலதிகாரிகளிடம் இருந்து வந்ததால் என்னால் ஏதும் செய்ய முடியவில்லை.


மேலும் எந்தவித ஆடிட் வழிகாட்டுதல்களும் இல்லாமல் இந்த அறிக்கையை தயார் செய்திருந்தனர். எதை வைத்து இந்த நஷ்டக் கணக்குக்கு வந்தீர்கள், அந்த வழிகாட்டு விதிமுறைகள் என்ன என்று கேட்டு ரேகா குப்தாவுக்கு பலமுறை கடிதங்கள் அனுப்பியும் பதிலே வரவில்லை.


அதே போல இந்த நஷ்டக் கணக்கை நான் ஏற்கவில்லை என்பதையும், சரியான வழிகாட்டுதல்கள்- ஆவணங்கள் இல்லாமல் இந்த ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் காட்டுப்படுவதையும் எதிர்த்து வினோத் ராய்க்கும் ரேகா குப்தாவுக்கும் அலுவலகரீதியாக பலமுறை எனது எதிர்ப்பைக் காட்டினேன்.



ஸ்பெக்ட்ரத்துக்கு இது தான் விலை என்று டிராய் அமைப்போ, மத்திய அரசோ எந்த கட்டணத்தையும் நிர்ணயித்திருக்கவில்லை. இதனால் எதை வைத்து ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்று சொல்ல முடியும். நம்மிடம் இதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லையே என்று சுட்டிக் காட்டினேன். ஆனால், சிஏஜி தலைமையகம் (வினோத் ராய்) சொன்னதை வைத்து இது தான் நஷ்டம் (ரூ. 1.76 லட்சம் கோடி) என்று எழுதி அனுப்ப வேண்டிய நிலைக்கு எனது அலுவலகம் தள்ளப்பட்டது.


முன்னதாக ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்று எழுதி அவர்கள் அனுப்பிய ரிப்போர்ட்டில் நஷ்டக் கணக்கை நீக்கினேன். ஆனால், மீண்டும் அதையே சேர்த்து எழுதி திருப்பி அனுப்பி வைத்து கையெழுத்து போட வைத்தனர். எதை வைத்து இந்தத் தொகையை சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ஒரு யூகம் தான் என்று பதில் தந்தனர். ஆடிட்டிங்கில் யூகங்களுக்கு எப்படி இடம் தர முடியும் என்று கேட்டதற்கு பதிலே வரவில்லை.


மேலும் 2ஜி விவகாரத்தில் சிஏஜி அலுவலகத்தில் இருந்து பல தகவல்கள் வெளியே கசிந்தபடியே இருந்தன. அதை யார் லீக் செய்தது என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.


2ஜி ஸ்பெக்ட்ரம் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் கூட சிஏஜி அலுவலக அதிகாரிகளுடன் முரளி மனோகர் ஜோஷி தொலைபேசியில் விவாதித்தார்.


சி.பி - ஆனால் துக்ளக் கில் ; இதெல்லாம் நாடகம், கேசை திசை திருப்ப , ஒன்று மில்லாமல் ஆக்க அனைவரும் சேர்ந்து நடத்தும் நாடகம் என கட்டுரை வந்துள்ளது 


இவ்வாறு போட்டு உடைத்துள்ளார் ஆர்.பி.சிங்.


நஷ்டம் குறித்து வினோத் ராய் கூறிய தகவல்களை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் ஏற்கனவே பலமுறை ஆஜராகி ஆர்.பி.சிங் மறுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இப்போது தான் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் தலையீடுகளையும் வினோத் ராயின் 'வேலைகளையும்' வெளியே விளக்கமாகப் பேசியுள்ளார் சிங்.


இப்போது சொல்லுங்கள் ராசா குற்றவாளியா?: கருணாநிதி


சென்னை: 2ஜி ஏலம் விடப்பட்டதில் எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் கிடைக்காததில் இருந்தே, இது தொடர்பாக சிஏஜி கூறிய கணக்குத் தவறு என்பது உறுதியாவிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


மேலும் இந்த விவகாரத்தில் ஆ.ராசா குற்றவாளியா என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


''வீரமணி முழக்கியுள்ள விவேக மணி!'' என்ற தலைப்பில் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:


வேடிக்கை! விநோதம் - சரியான தமாஷ்!:


கேள்வி: சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகத்தில் நாடார்கள் பற்றிய தவறான பகுதியை நீக்க வேண்டுமென்று நீங்கள் கடிதம் எழுதிய பிறகு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறாரே?



கருணாநிதி: கடந்த மாதம் 27-10-2012 அன்றே இந்தப் பிரச்சனை பற்றி நான் முரசொலி கேள்வி-பதில் பகுதியிலே விரிவாக நாடார் சமுதாயத்தினை இழிவுபடுத்தும் வகையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒன்பதாம் வகுப்புக்கான புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டித்ததோடு, சம்பந்தப்பட்டவர்கள் இதிலே தக்க கவனம் செலுத்தி, பிழையினை நீக்குவதற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்தினேன். 


 தமிழகத்திலே உள்ள மற்றக் கட்சிகளின் சார்பிலும், இதனைக் கண்டித்து அறிக்கைகள் விடுத்தார்கள். உரியவர்களிடமிருந்து தக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியாததால், 15-11-2012 அன்று பிரதமருக்கும், மத்திய அரசின் மனித வளத் துறை அமைச்சருக்கும் நான் கடிதம் எழுதியதும்; அது பல ஏடுகளில் செய்தியாக வெளிவந்திருந்தது.



மேலும் 16-11-2012 அன்று டெல்லியில் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றபோது, நாடாளுமன்றக் கழகக் குழுத்தலைவர் தம்பி டி.ஆர். பாலு, அந்தக் கூட்டத்தில் நாடார்களின் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பிட, அப்போது அதற்கு பதிலளித்துப் பேசிய பிரதமர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியோடு தெரிவித்திருக்கிறார்.

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் அவர்களும், மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பல்லம் ராஜு அவர்களை நேரில் சந்தித்து, நாடார்கள் பிரச்சனை பற்றி கூறியவுடன், மத்திய மனிதவளத் துறை அமைச்சரும், நாடார்கள் பற்றிய அவதூறு வரிகளை நீக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார். 


இந்த நிலையில்தான் நம்முடைய தமிழக அரசு திடீரென்று விழித்துக் கொண்டு, 16-11-2012 அன்று அவசர அவசரமாக பிரதமருக்கு இந்தப்பிரச்சனை குறித்து கடிதம் எழுதி, 17ம் தேதி பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் பல்லாயிரம், பல லட்சம் ரூபாய்ச் செலவில், முதல் பக்க விளம்பரச் செய்தியாக அது இடம் பெற்றுள்ளது. நல்ல சுறுசுறுப்பு?.


ஆனால் இதற்கே மிகப்பெரிய விளம்பரங்கள்! நாடார்களுக்கு வந்த ஆபத்து ஏதோ முதல்வர் கடிதத்தால் தான் விலகியது என்பதைப்போல நன்றி தெரிவித்து- பெரிய விளம்பரங்களைக் கொடுத்திருப்பதுதான் வேடிக்கை! விநோதம் - சரியான தமாஷ்!.


அதிர்ச்சிக் கடலில் ஆளாக்கினார்கள்.. என்ன சொல்லப் போகிறார்கள்?:


கேள்வி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டினை ஏலத்தின் மூலமாக கொடுத்திருந்தால் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத் திருக்கும் என்ற தணிக்கைக் குழுவின் அறிக்கை; தவறு என்று தற்போது நடைபெற்ற ஏலத்தின் மூலமாக நிரூபணம் ஆகியுள்ளதே?



கருணாநிதி: இதைப்பற்றி மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மனீஷ் திவாரி அவர்களே விளக்கமாகச் சொல்லியிருக்கிறார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து இரண்டாண்டுகளுக்கு முன்பு தணிக்கைக் குழு அறிக்கையினை தாக்கல் செய்தது. அதில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. அந்த 1.76 லட்சம் கோடி எங்கே? தற்போது ஏலத்தில் கிடைத்த தொகை, சுமார் 9,000 கோடி ரூபாய் தான். எனவே தணிக்கை அதிகாரி தனது மதிப்பீடு குறித்து சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இதுவாகும் என்று அவர் கூறியிருக்கிறார்.



இதை வைத்து இரண்டாண்டுகளாக அரசியல் நடத்திய பா.ஜ.கவும், இதர எதிர்க்கட்சிகளும் மன்னிப்பு கேட்க வேண்டிய நேரமும் இதுவாகும் என்று மனீஷ் திவாரி சொல்லியிருக்கிறார். மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி அவர்கள், 2ஜி ஸ்பெக்ட்ரத்தை முன்பே ஏலத்தில் விட்டிருந்தால், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்குமென தணிக்கை அதிகாரி அளித்த அறிக்கை தவறானது என்று மத்திய அரசு, பிரதமர் அலுவலகம், மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் ஆகியோர் ஏற்கனவே கூறி வந்ததைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.



தற்போது இந்த அலைக்கற்றைகளை ஏலம் விட்டதில் சுமார் 9,000 கோடி ரூபாய் அளவுக்கே வருவாய் கிடைத்துள்ளதன் மூலம், தவறான அறிக்கை அளித்த தலைமைத் தணிக்கை அதிகாரிதான் விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.


எப்படியோ தணிக்கைத் துறை அறிக்கையில் ஒரு பெரும் தொகையைக் குறிப்பிட்டு, அதை ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ப; அந்தத் தொகை இழப்பு என்பதற்குப் பதிலாக, அவ்வளவு தொகையையும் ஏதோ கொள்ளை அடித்துக் கொண்டுபோய் விட்டதைப்போல குற்றஞ்சாட்டி, அதை ஏடுகளும் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து நாட்டையே அதிர்ச்சிக் கடலில் ஆளாக்கினார்கள். அவர்கள் எல்லாம் இதற்குப் பிறகு என்ன சொல்லப் போகிறார்கள்?.


தமிழர் தலைவர், இளவல் வீரமணி:


தமிழர் தலைவர், இளவல் வீரமணி அவர்கள் "விடுதலை"யில் "1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அலைக்கற்றை ஊழல் என்று ஊரெல்லாம் கூச்சலிட்டவர்களே, ஏலம் விடப்பட்டதால் இப்போது கிடைத்த லாபம் என்ன? ஆ. ராசா குற்றவாளியா? நடுநிலையாளர்கள் சிந்திக்கட்டும்" என்று அருமையானதொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். பலரை சில நாள் ஏமாற்றலாம்; சிலரை பல நாள் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாதல்லவா?



அதிமுகவினரை போலீசில் நுழைக்க ஜெ. முயற்சி:


கேள்வி: தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கென 50,000 பேரைத் தேர்ந்தெடுக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதைபற்றி தாங்கள் ஏற்கனவே எழுதியிருந்தீர்கள். அதிமுகவைச் சேர்ந்தவர்களை காவல் துறையிலே நுழைப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிதான் அது என்று பரவலாகப் பேசப்படுகிறதே?


கருணாநிதி: அதைத்தான் நான் முன்பே எழுதியிருந்தேன். அங்கன்வாடிக்கும், சத்துணவுக்கும் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் எந்த அளவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் பரிந்துரைகளைத் தந்தார்கள் என்பதையும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அதன் காரணமாக அந்தப் பணியாளர்களைத் தேர்ந்தெடுத்ததில் எந்த அளவுக்குச் சிரமப்பட்டார்கள் என்பதையும், பரிந்துரை செய்தவர்கள் மீது அதிமுக அரசு எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். ஏடுகளிலேயே அந்தச் செய்திகள் ஏற்கனவே விரிவாக வந்தன.



அதே வழியில் சிறப்புக் காவல் இளைஞர் படை என்ற பெயரில் மேலும் கட்சிக்காரர்களை பணியிலே சேர்ப்பதற்கான முயற்சியிலே அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது. சிறப்புக் காவல் இளைஞர் படையினரை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்களும், சென்னையில் போலீஸ் கமிஷனரும் தேர்ந்தெடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 



முதலமைச்சர் 110வது விதியின் கீழ் இதற்கான அறிக்கையைப் படித்த போதே, சிறப்புக் காவல் இளைஞர் படையில் ஓராண்டு காலம் பணி நிறைவேற்றினால், காவல்துறையில் காலியாகும் காவலர் பணியிடங்களில் ஈர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று சொல்லியிருப்பதில் இருந்தே, காவல் துறையினரை முறைப்படித் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக தங்கள் கட்சியினரை முதலில் சிறப்புக் காவல் இளைஞர் படையிலே நுழைத்து, ஓராண்டிற்குப் பிறகு அவர்களைக் காவல் துறையிலே சேருவதற்கு வழிவகுத்து விட்டால், காவல்துறையிலே கட்சிக்காரர்களைச் சேர்த்து விடலாம் என்ற எண்ணத்தோடு செய்யப்படும் இந்தக் காரியத்தை கட்சிப் பாகுபாடு பாராமல் அனைத்துக் கட்சியினரும் எதிர்க்க முன் வரவேண்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.



நன்றி - தட்ஸ் தமிழ்

Sunday, January 08, 2012

ஸ்பெக்ட்ரம் ஊழல்-ப சிதம்பரத்துக்கு எதிரான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்த சு,சாமி

http://www.envazhi.com/wp-content/uploads/2011/09/P-Chidambaram.jpg 

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரம், தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா ஆகியோர் சந்தித்துப் பேசி எடுத்த முடிவுகள் தொடர்பான ஆதாரங்களை, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, டில்லி பாட்டியாலா கோர்ட்டில் நேற்று சமர்ப்பித்தார்.


சி.பி - அரசியல் கோமாளி என்று சு சாமி வர்ணிக்கப்பட்டாலும் ஸ்பெக்ட்ரம் ஊழலைப்பொறுத்தவரை  இவர் தான் அச்சாணியாக செயல்பட்டு  வழக்கின் போக்கை நிர்ணயிக்கும் சக்தியாக வருகிறார்.. பாராட்ட வேண்டிய விஷயம்.. 

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில், முன்னாள் அமைச்சர் ராஜாவோடு, உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று கோரி, கடந்த செப்டம்பரில், ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, டில்லி பாட்டியாலா கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஷைனி, இவ்வழக்கில் சிதம்பரத்தை சேர்ப்பதற்கான ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்கும்படி, கடந்த டிசம்பர் 17ம் தேதி உத்தரவிட்டார். அதன்படி, நேற்று சுப்ரமணியசாமி தன்னிடம் உள்ள அதிகாரப்பூர்வமான ஆதாரங்களை கோர்ட்டில் ஒப்படைத்தார்.

சி.பி - இவரை விலைக்கு வாங்க முடியாது என்பதால் விபத்து மூலமாகவோ ,மிரட்டல் மூலமாகவோ தடை ஏற்படுத்த மேலிடம் முனையக்கூடும், கோர்ட் விரைந்து நடவடிக்கை எடுக்கவும், சு சாமிக்கு தக்க பாதுகாப்பு அளிக்கவும் ஆவன செய்யவேண்டும்.. 

சாமி ஒப்படைத்த ஆதாரங்களில் முக்கியமானது, பிரதமர் மன்மோகன் சிங், அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரம், தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா ஆகிய மூவரும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சந்தித்துப் பேசி எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான ஆறு பக்க ஆவணம். தவிர, ஸ்பெக்ட்ரம் தொடர்பாக 2008 ஜனவரி 15ம் தேதி, நிதி அமைச்சர் சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பிய கடிதம். அதைத் தொடர்ந்து, ஜனவரி 30ம் தேதி நிதி அமைச்சரும் தொலைத் தொடர்பு அமைச்சரும் சந்தித்துப் பேசி எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான ஆவணம். மேலும், 2008 ஏப்ரல் 21ம் தேதி ஸ்பெக்ட்ரம் பற்றி அமைச்சர் ராஜா, சிதம்பரத்திற்கு எழுதிய கடிதம் ஆகியவையும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.


சி.பி - இந்த வழக்கில் ப சிதம்பரம் ஆஜர் ஆவதை ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் விரும்பவில்லை, காரணம் அதற்கு அடுத்த கட்டமாக பிரதமரும், அவருக்குப்பின்னால் இருந்து இயக்கி வரும் சோனியா காந்தியும் வழக்கை எதிர் கொள்ள வேண்டி வரும் எனப்தால் இதற்கு முட்டுக்கட்டை போட முயலக்கூடும்.. இந்தியாவில் நடக்கும் மிக பெரிய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு இது.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQONY3B73DuvQJFR9pLxX0awWviiNm0ysxH2d3PnlHiW1Y8kqN7aoSNBnBvEE7_BAh4t5fG_9TKG7YUDrZ5K-1wVxGX5vRfDMAsgLA8Z0UhncV0cvL1m9FD3E8ihhH4EzZ9l8KTgkSTBL7/s1600/susamay.jpg

அத்துடன், 2011 மார்ச்சில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கொடுத்த தீர்ப்பின் விவரம். கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதியிட்ட நிதி அமைச்சகத்தின் ஆவணத்தையும் சாமி ஒப்படைத்தார். இந்த ஆவணத்தில் தான், "சிதம்பரம் வலியுறுத்தியிருந்தால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏலமுறையை கடைபிடித்திருக்கலாம்' என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல், "2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான முடிவுகளை நிதி அமைச்சரும் தொலைத் தொடர்பு அமைச்சரும் இணைந்து தான் எடுக்க வேண்டும்' என்றும், 2003ம் ஆண்டு அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. அதற்கான ஆதாரத்தையும் சாமி சமர்ப்பித்தார்.


சி.பி - அசிஸ்டெண்ட் மேனேஜர் தப்பு செய்யறார்னா மேனேஜர் சரி இல்லைன்னு அர்த்தம் .. மேனேஜர் செயல்பாட்டால கம்பெனிக்கு நஷ்டம் வருதுன்னா அதுக்கு மேனேஜரை நியமித்த & மேனேஜரை கண்காணீக்க வேண்டிய  ஜி எம் பொறுப்பேத்துக்கனும்.. மேனேஜர் - சிதம்பரம், ஜி எம் - மன்மோகன்சிங்க்

சிதம்பரத்திற்கு பங்கு:அனைத்து ஆதாரத்தையும் சமர்ப்பித்த சாமி கோர்ட்டில் கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராஜா மீது இரண்டு முக்கிய குற்றச்சாட்டு உள்ளது. ஒன்று, 2008ல் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரத்திற்கு, 2001ம் ஆண்டு விலையை நிர்ணயித்தது. இரண்டாவது, ஸ்வான் மற்றும் யூனிடெக் கம்பெனிகளின் பங்குகளை வெளிநாட்டு கம்பெனிகளான எடிசாலட் மற்றும் டெலினார் கம்பெனிகளுக்கு விற்பனை செய்ய அனுமதித்தது. இந்த இரண்டு குற்றங்களிலும் அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு பங்கு இருக்கிறது. இங்கே சமர்ப்பித்த ஆதாரங்கள் அதை உறுதி செய்கின்றன.

எனவே, இந்த ஆதாரங்களின் அடிப்படையில், ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது போல், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிதம்பரம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எடிசாலட் மற்றும் டெலினார் கம்பெனிகள் உள்துறை அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டவை. இந்த விவரங்களை சிதம்பரம், ராஜாவிடம் தெரிவிக்கவில்லை. எனவே, தேசப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சிதம்பரம் மீது, "நம்பிக்கை சதி மோசடி' யின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜா மட்டும் அல்லாமல், அவரோடு சேர்த்து சிதம்பரத்திற்கும் பங்கு இருக்கிறது.இவ்வாறு சுப்ரமணியசாமி கூறினார்.

சி.பி - போற போக்கை பார்த்தா ஆ ராசாவை விட ப சிதம்பரத்துக்குத்தான் அதிக பங்கு இருக்கும் போல தெரிதே? சிதம்பர ரகசியம் எப்போ வெளில வரப்போகுதோ? சிதம்பரம் எப்போ உள்ளே போகப்போறாரோ? வெயிட்டிங்க்



அதிகாரப்பூர்வ ஆவணங்கள்:இதைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் சிலவற்றையும் சமர்ப்பிக்கும்படி கூறினார். அதை ஏற்பதாக சாமி பதிலளித்தார். அத்துடன், இந்த ஆதாரங்கள் தொடர்பான விசாரணையை ஜனவரி 21க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

சி.பி - இந்த மாதிரி பிரச்சனையான கேஸ்களை முடிஞ்ச வரை சீக்கிரமா விசாரிச்சு தீர்ப்பு சொல்லிடறது நாட்டுக்கு நல்லது.. அப்புரம் சாதிக்பாட்சா மாதிரி சாட்சி தற்கொலை செஞ்சுக்குவார், அல்லது கொலை செய்யப்படுவார்..