Showing posts with label ஸ்டெர்லைட். Show all posts
Showing posts with label ஸ்டெர்லைட். Show all posts

Tuesday, April 30, 2013

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 8


ஆண்டனி ராஜ்
  படங்கள்: ஏ.சிதம்பரம்  

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிரான சட்ட போராட்டம் என்பது நீண்ட வரலாறு கொண்டது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல, ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் 1996 நவம்பர் 7-ம் தேதி முதன் முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

அதில் 2010 செப்டம்பர் 28-ல் நல்ல தீர்ப்பு கிடைத்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி திலிப்பி தர்மாராவ், இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தீர்ப்பை அளித்தார்.  அதனை எதிர்த்து உச்ச நீதிமன்ற சென்ற ஆலை நிர்வாகம், உயர் நீதிமன்ர தீர்ப்புக்கு எதிராக இடைக்கால தடையை பெற்று விட்டது. அதனால் தற்போது வரையிலும் ஆலைக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

வழக்குகள் ஒருபுறம் இருந்தாலும், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆய்வுக் குழுக்கள் அல்லது கண்காணிப்பு குழுக்கள் ஆலையின் தரத்தை பரிசோதனை செய்து அறிக்கைகள் கொடுக்கும் நிகழ்வுகள் வாடிக்கையாக நடந்து வருகின்றன். ஆனால் அந்த அறிக்கைகளும்  பெரும்பாலும் ஆலை நிர்வாகத்துக்கு சாதகமானதாக இருப்பதுதான் வேதனைக்கு உரியது. சில அறிக்கைகள் ஆலை நிர்வாகத்துக்கு ஆலோசனைகளை வழங்கினாலும் அவையும் நிறைவேற்றப்படுவது இல்லை என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவலையாக இருக்கிறது.

உச்ச நீதிமன்ற கண்காணிப்புக் குழு

தமிழகத்தில் உள்ள ஆலைகள் பலவும் விதிமுறைகளை மீறி செயல்பட்டு சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தாக திகழ்வதாக எழுந்த புகாரை விசாரித்து அறிக்கை தருமாறு உச்சநீதிமன்றம் ஒரு கண்காணிப்பு குழுவை அமைத்தது. டாக்டர் தியாகராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த குழுவில் 5 பேர் இடம்பெற்று இருந்தனர். இந்த குழுவுடன் இணைந்து மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை சார்பில் உஷா சுப்பிரமணியன் இடம் பெற்று இருந்தார். 


தமிழக சுற்றுச்சூழல் துறை சார்பில் மூவரும், தமிழக அரசின் சார்பில் மூவரும் குழுவில் இடம் பெற்று இருந்தனர். மக்கள் சார்பில் கடலோர மக்கள்கூட்டமைப்பின் அமைப்பாளரான புஷ்பராயன் உள்ளிட்ட சிலர் அந்த குழுவிடம் மனு கொடுத்து ஆலையில் அத்துமீறல்களை தெரிவித்தனர்.

2004 செப்டம்பர் 20 முதல் 22 வரையிலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்த அந்த குழுவானது, 21-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தியது. ஆலைக்குள் நச்சுக் கலந்த கழிவுப் பொருட்கள் குவித்து வைக்கபப்ட்டு இருந்ததை அக்குழு நேரில் பார்வையிட்டது. காற்றில் அளவுக்கு அதிகமாக சல்ஃபர் கலந்த புகை பரவுவதையும் கவனமாக குறித்துக் கொண்டனர்.

ஆலை நிர்வாகம் மூன்றுமுறை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு உற்பத்தியை அதிகரித்து இருந்த போதிலும் அதற்கான அனுமதி முறைப்படி பெறப்படவில்லை. ஆலை செயல்பட தொடங்கிய நிலையில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், மத்திய சுற்றுச்சூழல் துறையும் முன்தேதியிட்டு அனுமதிகடிதங்களை கொடுத்ததற்கான ஆவணங்களை பார்த்துது அக்குழுவினரே அதிர்ந்தனர். ஆலை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், திரவ கழிவுகளையும் திடக் கழிவுகளையும் கையாள தேவையான எந்திரங்கள் இல்லாதது பற்றியும் இக்குழு கவலை தெரிவித்தது.

 
ஆலையை உடனடியாக தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சோதனை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்ற கண்காணிப்புக் குழு உத்தரவிட்டது. அப்போது அனுமதி இல்லாமல் விரிவாக்கம் செய்யப்பட்டது உறுதியானாலோ அல்லது கழிவுகளை கையாள்வதில் மெத்தனம் காட்டப்பட்டாலோ காசு மாசுபடுவதை தடுக்கும் சட்டம் (1981), நீரை மாசுபடுத்துவதற்கு எதிரான சட்டம் (1974), ஆபத்தை விளைவிக்கும் கழிவுப்பொருட்களுக்கான சட்டம் (2003) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்து ஆலையின் லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும்.


 ஆலையின் எந்திரங்கள், உற்பத்தி அளவு ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்து அதன் அறிக்கையை 15 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டாலும் ஆலை நிர்வாகம் எதையும் பின்பற்றுவது கிடையாது என பொருமுகிறார்கள், உள்ளூர் மக்கள்.

ம.தி.மு.க-வின் பங்களிப்பு

உயர்நீதி மன்றம் இந்த ஆலையை மூட உத்தரவிட்டு அதை எதிர்த்து ஆலை நிர்வாகம் மேல் முறையீடு செய்து இடைக்கால ஆணை பெற்று இருந்தாலும், உச்ச நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு நெருங்கி விட்டதாகவே போராடும் மக்கள் கருதுகிறார்கள். இருப்பினும் இதுவரையிலும் நடந்த சட்ட போராங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்துக்காக தேசிய தூய சுற்றுச்சூழல் அறக்கட்டளை வழக்கு தொடர்ந்த பின்னர் அதில், ம.தி.மு.க பொது செயளாளர் வைகோ, தூத்துக்குடி மாவட்ட சி.ஐ.டி.யூவை சேர்த கனகராஜ், தூத்துக்குடி மாவட்ட இந்திய கம்யூனிஸ் ஆகியவையும் தங்களை இணைத்துக் கொண்டு சட்ட போராட்டம் நடத்தின. தொடக்கத்தில் அனைத்து கட்சிகளும் பாரபரட்சம் இல்லாமல் ஸ்டெர்லைட் எதிர்ப்பை கடைபிடித்த போதிலும், பின்னர் பல் கட்சிகள் பின் வாங்கிக் கொண்டன.

ம.தி.மு.க சார்பில் 1996 மார்ச் 5-ம் தேதி தூத்துக்குடியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. அடுத்த வாரத்தில் கடையடைப்பு போராட்டமும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டமும் ம.தி.மு.க சார்பில் நடத்தப்பட்டது. ஏப்ரல் முதல்நாளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு பேரணி நடந்தது. டிசம்பர் மாதத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி ஸ்டெர்லைட் ஆலைக்கு மக்களிடம் இருக்கும் எதிர்ப்பு உணர்வை அதிகாரிகளுக்கு புரிய வைத்தனர்.

1997 மார்ச் 24-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் கட்சியினர் மட்டும் அல்லாமல் உள்ளூரை சேர்ந்த பொது மக்களும் பெருமளவில் கலந்து கொண்டதால் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் போலீஸார் திணறினார்கள். ஆயிரக்கணக்கான மக்களை கைது செய்ய வழி தெரியாமல் போலீஸார் விழி பிதுங்கினார்கள். 


பின்னர் ஒருவழியாக அனைவரையும் வாகனத்தில் ஏற்றி கல்யாண மண்டபங்களில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான கிராமங்கள் வழியாக ம.தி.மு.க-வினர் நடைப்பயணமாக சென்று ஆலையின் தீமையை விளக்கி சொன்னார்கள். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நெருப்பு மாவட்ட முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தது.

ஆலையில் நடந்த விபத்துக்கு விடுதலைப்புலிகள் மீது பழி போட்ட ஸ்டெர்லைட் நிர்வாகம் குறித்த தகவல்களை நாளை பார்க்கலாம்.


thanx -vikatan

ிஸ்கி 1 -தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 1 , 2 ,3-http://www.adrasaka.com/2013/04/1-2-3.html
ிஸ்கி 2  -தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 4, 5 -http://www.adrasaka.com/2013/04/4-5.html

Wednesday, April 24, 2013

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 1 , 2 ,3

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 1

ஆலைகள் அவசியம் தான். ஆனால், சுற்றுச்சூழலையும் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் ஆலையால், சுற்றிலும் வசிக்கும் மக்களின் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது என்றால் எப்படி இருக்கும்? அத்தகைய பதற்றத்தில் இருக்கிறார்கள், தூத்துக்குடி மக்கள். அவர்களின் நிம்மதியை கெடுத்த ஆலை.. ஸ்டெர்லைட்!
உண்மையிலேயே மக்களின் அச்சம் நியாயமானது தானா? மக்களின் எதிர்ப்புக்கு காரணம் இருக்கிறதா? அரசியல்வாதிகளின் நிலைப்பாடு என்ன? என்பது போன்ற பல விசயங்களை அலசுவோம்.

ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை தூத்துக்குடிக்கு வந்ததே தனிக்கதை. இந்த ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால். லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், வேதாந்தா ரிசோர்ஸஸ் என்ற நிறுவனத்தின் தலைவர். இந்த நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல இடங்களில் தாமிரத்தாதுவை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் இருக்கின்றன.
இந்தியாவில் வேதாந்தா- ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை தொடங்க திட்டமிட்ட அனில் அகர்வால், அதற்கான இடத்தை குஜராத்தில் தேடினார். ஆனால், அந்த மாநில அரசு அனுமதி தர மறுத்து விட்டது. அடுத்து அவரது பார்வை கோவா மாநிலத்தின் பக்கம் திரும்பியது. ஆனால் அங்கும் அவரது முயற்சி பலிக்கவில்லை. அடுத்து 1994ல் மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் 700 கோடி மதிப்பில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க திட்டமிட்டார். மாநில அரசின் அனுமதியுடன் தொடங்கிய திட்டம் முழுமை பெறுவதற்குள் சோதனையை சந்தித்தது. அதாவது, 200 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் முடிவடைந்த நிலையில் மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் பயந்து போன அப்போதைய மகாராஷ்டிர முதல்வரான சரத்பவார், ‘இந்த ஆலை பற்றி மாநில சுற்றுச்சூழல் வல்லுனர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்’ என சமாளிக்க பார்த்தார். ஆனால் தங்கள் கொள்கையில் இருந்து பின் வாங்க மறுத்த அந்த மாநில மக்கள், ‘ஆலையை அகற்ற வேண்டும்’ என்கிற ஒற்றை கோரிக்கையிலேயே விடாப்பிடியாக இருந்தனர். தொடர்ந்து நடந்த போராட்டங்களால் நிலை குலைந்த மகாராஷ்டிர அரசு, ஆலை பணிகளை நிறுத்த உத்தரவிட்டது.

இதனால் அங்கிருந்து கிளம்பிய ஸ்டெர்லைட் நிறுவனம் கர்நாடகா, கேரளாவில் இடம் தேடி அலைந்தது. அந்த மாநில அரசுகள் ஆலைக்கு அனுமதி கொடுக்க திட்டவட்டமாக மறுத்து விட்டன. போபால் விஷ வாயு கசிவு சம்பவத்துக்கு பிறகு பல மாநிலங்களிலும்ஆபத்து மிகுந்த ஆலைகளை அமைக்க எதிர்ப்பு வலுத்ததால், மாநில அரசுகள் பின்வாங்கின.  இதனால் சோர்ந்து போயிருந்த அனில் அகர்வாலுக்கு பச்சை கம்பள வரவேற்பு கொடுத்தது, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க அரசாங்கம்.

துறைமுக நகரான தூத்துக்குடியில் ஆலையை அமைக்க அனுமதி தர முதல்வர் ஜெயலலிதா சம்மதித்தார். அகர்வாலுக்கு அடித்த இந்த அதிர்ஷ்டத்தை என்ன சொல்வது? காரணம், தூத்துக்குடியில் ஆலையை அமைத்தால் ஆஸ்திரேலியாவில் வேதாந்தா நிறுவனம் வெட்டி எடுக்கும் தாமிர தாதுக்களை அப்படியே கப்பல் மூலம் கொண்டு வந்துவிட முடியும். இந்த ஆலையில் தாமிரத்தை உருக்கி தகடுகளாக மாற்றும் போது ‘பை ப்ராடக்ட்’ என்கிற முறையில் உடன் கிடைக்க கூடிய, தங்கம், சல்ப்யூரிக் அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம் ஆகியவற்றையும் நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும்.

அனில் அகர்வால் கணக்கு இப்படி இருக்கையில், தூத்துக்குடியில் ஆலைக்கு எதிர்ப்பு கிளம்பும் என்பதை அவர் நினைத்து கூட பார்க்கவில்லை. பொது மக்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும் களம் இறங்கி போராட்டத்தில் குதித்தன. ‘மராட்டிய மண்ணில் இருந்து அடித்து விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர நச்சுத் தொழிற்சாலை எங்களுக்கு தேவை இல்லை. இதை இந்த மண்ணில் காலூன்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என்று அரசியல் கட்சியினர் வேகம் காட்டினார்கள்.

இந்த கட்சிகளை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது அனில் அகர்வாலுக்கு தெரிந்து இருந்தது. வீர வசனம் பேசிய தலைவர்கள் அவரை சந்தித்த பிறகு மவுனம் காக்க தொடங்கினார்கள். ஆலைக்கு எதிராக தினமும் புதிய பெயர்களில் அமைப்புகள் முளைத்தன. உண்ணாவிரதம்,. ஆர்ப்பாட்டம் என ஸ்டெர்லைட்டை மிரட்டியவர்களை அழைத்து பேசியது, ஆலை நிர்வாகம். இதில் ‘கவரப்பட்ட’ சில கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் போராட்ட பந்தலை பிரித்துக் கொண்டு வீடுகளில் போய் முடங்கினார்கள்.
சில அமைப்புகளும் கட்சிகளும் மட்டுமே மக்களுக்காக கடைசி வரை போராட்ட களத்தில் நின்றன. சுமார் இரண்டு வருடமாக சாதி, மதம், தொழில் வேறுபாடுகளை மறந்து எழுச்சியுடன் போராடிய மக்கள், 1996 சட்டமன்ற தேர்தலை துருப்பு சீட்டாக பயன்படுத்த திட்டமிட்டனர். மகளிர் அமைப்புகளும் உத்வேகத்துடன் இதில் ஈடுபட்டனர். மக்களின் இந்த முடிவு அரசியல் கட்சிகளை அதிர வைத்தது.

ஸ்டெர்லைட்டை முன்வைத்து தேர்தலை சந்திப்பது ஆபத்தானது என்பதை அரசியல் கட்சியினர் புரிந்து வைத்து இருந்தனர். ஆலை நிர்வாகமும் அரசியல் சூழலில் அப்படி ஒரு நிலைமை ஏற்படுவதை விரும்பவில்லை. இந்த நிலையில், யாருமே எதிர்பாராத வகையில் தென் மாவட்டத்தில் சாதிக்கலவரம் மூண்டது. எங்கு பார்த்தாலும் வெட்டு குத்து என வெடித்த கலவரம் குக்கிராமங்களை கூட விட்டு வைக்கவில்லை. அப்பாவி மக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.

விவசாய நிலங்களில் விளைந்து கிடந்த பயிர்கள் தீ வைத்து கொளுத்தபப்ட்டன. மக்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டதில் உயிர் பலிகள் ஏற்பட்டன. எங்கும் பதற்றம் நிலவியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சினார்கள். இந்த மோதல் ஸ்டெர்லைட் போராட்டத்தை திசை திருப்பியது. அதுவரையிலும் போராட்ட களத்தில் அண்ணன் தம்பியாக நின்றவர்கள், சாதி மோதலுக்கு பின்னர் முகம் பார்த்து பேசிக் கொள்ளவே தயங்கினார்கள்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களுக்கு மக்கள் கூட்டம் குறைவாகவே வந்தது. அதே சமயம் சாதிக்கூட்டங்கள் பலத்த ஆரவாரத்துடன் நடந்தன. ஸ்டெர்லைட் போராட்டம் நடந்த மைதானங்களில் சாதிக் கூட்டங்கள் ஆரவாரமாக நடந்தன. மக்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செல்ல தொடங்கினார்கள். இதனால் ஸ்டெர்லைட் எதிர்ப்பு முனை மழுங்கி போய் கிடந்தது.

இந்த சமயத்தில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்ட தமிழ் மாந்தன் தலைமையிலான ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம்’ சட்ட ரீதியிலான போராட்டத்தையும் கையில் எடுத்தது. இந்த இயக்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அத்துடன் ம.தி.மு.க.வும் ஸ்டெர்லைட் எதிர்ப்பை தொடர்ந்து கடைப்பிடித்தது.

இந்த சமயத்தில், பள்ளிகள், கல்லூரிகள், சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி மற்றும் நகராட்சி மன்ற தலைவர்கள், மத போதகர்கள், அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டம் என்கிற பெயரில் லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டது. கத்தோலிக்க மையங்கள், கல்வி நிறுவனங்கள், முதியோர் இல்லங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மையங்கள் என பல்வேறு அமைப்புகளுக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் பண உதவி செய்தது. மீனவ மக்களுக்கு மீனவ வாழ்வாதார திட்டம் என்கிற பெயரில் பணம் தண்ணீராக செலவு செய்யப்பட்டது.

இவை எல்லாம் விதி முறை மீறலை சரி செய்ததா? ஸ்டெர்லைட் நிறுவனம் மன்னார் வளைகுடா பகுதியில் ஆலையை அமைத்தது சரிதானா..?
 wait
thanx - vikatan ,
ஆண்டனிராஜ்

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 2


ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்ட நாளில் இருந்தே தூத்துக்குடி மாவட்ட மக்களின் கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. அரசியல்வாதிகள், அதிகாரிகளின் பூரண ஆசி இருந்ததால் எதிர்ப்புகளை துச்சமாக மதித்து கோடிகளை கொட்டு பிரமாண்ட தொழிற்சாலையை வேகமாக உருவாக்கியது.

ஒரு ஆலையை அமைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள் எதையும் நிறைவேற்றாமல் துணிச்சலாக களம் இறங்கினார்கள். ’தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்ட மன்னார் வளைகுடா பகுதியில் இருந்து 25 கி.மீ தூரத்துக்குள் மாசு விளைவிக்கும் தொழிற்சாலைகளை நிறுவக்கூடாது’ என்கிற விதியை ஸ்டெர்லைட் நிறுவனம் அப்பட்டமாக மீறியது. சுற்றுச்சூழல் வாரியத்தின் அனுமதியை பெறாமலே ஆலையை அமைத்தார்கள். பின்னர் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதும், தமிழக மற்றும் தேசிய சுற்றுச் சூழல் வாரிய அதிகாரிகள் அவசரமாக ஆலை பகுதியை ஆய்வு செய்தது போல ஆவணங்களை கொடுத்தார்கள். அந்த அளவுக்கு விதிமுறைகளை வளைக்கும் துணிச்சலும் திறமையும் இந்த நிறுவனத்துக்கு இருந்தது.

அரசியல் கட்சிகளின் அந்தர் பல்டி
ஒட்டு மொத்த மக்களின் பலமான எதிர்ப்பை பார்த்ததும் அரசியல்வாதிகளின் கண்களுக்கு எதிரில் இருப்பது ஓட்டுக்களாக தெரிந்து இருக்க வேண்டும். அதனால் அரசியல் கட்சியினர் ஸ்டெர்லைட் எதிர்ப்பில் போட்டி போட்டுக் கொண்டு வேகம் காட்டி மக்களிடம் நல்ல மதிப்பை பெற முயற்சி செய்தார்கள். ஆரம்பத்திலேயே காங்கிரஸ் கட்சி ஆலைக்கு ஆதரவாக நின்றது. இதை தவிர்த்து, அந்த சமயத்தில் அரசியல் கட்சிகளால் உருவாக்கபப்ட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவில் தி.மு.க, ம.தி.மு.க, பா.ஜ.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஜனதா தளம், பா.ம.க., புதிய தமிழகம் (அப்போது தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு) உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளும் இடம்பெற்று இருந்தார்கள்.

ஆற்றில் ஒருகாலும் சேற்றில் ஒரு காலுமாக இருமனதுடன் நின்ற அரசியல் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், வேறு வழி இல்லாமலேயே அரைகுறை மனதுடன் இந்த போராட்டக் குழுவில் இருந்தனர். ’உழுகிற நேரத்தில் ஊர்வழி போனவன் அறுக்கிற நேரத்தில் அரிவாளோடு வந்தானாம்’ எனபது போல வந்து சேர்ந்த இந்த அரசியல்வாதிகளின் எதிர்ப்பை வேதாந்தா நிறுவங்களின் தலைவரான அனில் அகர்வால் எளிதாக சமாளித்து விட்டார்.

அரசியல்வாதிகளை பொறுத்தமட்டிலும் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக எந்த அளவுக்கு அக்கறையும் வேகம் காட்டினார்களோ அதே வேகத்தில் பின்வாங்கி சென்று விட்டனர். ஏறக்குறைய எல்லா கட்சிகளும் ஸ்டெர்லைட் எதிர்ப்பை கைவிட்டு அரசியல் மேடைகளில் அடுத்தவரை திட்டுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். இந்த சம்யத்தில் ம.தி.மு.க மட்டுமே மக்களுடன் நின்றது. 1995-ல் சுற்றுச்சூழல் வல்லுனரான ரஷ்மி மயூரியை தூத்துக்குடிக்கு அழைத்து வந்து மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு பிரசாரத்தையும் போராட்டத்தையும் நடத்திய தொண்டு நிறுவங்கள் கூட, தங்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு உணர்வை ஏனோ அடக்கி வாசிக்க ஆரம்பித்தது மக்களை ஆச்சர்யம் அடைய வைத்தது.

கடந்து வந்த போராட்ட பாதை...

அரசியல் கட்சிகள் அடங்கிப் போனாலும் மக்கள் போராட்டம் நீருபூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருந்தது. சில சமயங்களில் மக்களின் கோபம் வெடித்து கிளம்பியது. 1996-ல் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஆலையின் முன்பாகவே தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் அமர்ந்தார்கள், பொது மக்கள். இந்த போராட்டத்தில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். துறைமுகத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், பஞ்சாலை தொழிலாளர்கள், விவசாயிகள் என பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஆலைக்கு எதிரான எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த உண்ணாவிரத போராட்டம் வளர்ச்சி அடைந்து கடையடைப்பு, சாலை மறியல் என சூட்டை கிளப்பியது.


தூத்துக்குடியில் பள்ளி ஆசிரியர்கள், மானவர்கள் என பத்தாயிரத்துக்கு அதிகமானோர் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டம் 5கி.மீ தூரத்துக்கு நின்றனர். 1996-ல் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எம்.வி.ரீஸா என்கிற கப்பலில் தாதுப்பொருள் வந்தது. தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் இருந்து பொருட்களை இறக்க ஆலை நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது. இந்த தகவல் காட்டுத்தீயாய் பரவி உள்ளூர் மக்களை கொதிப்படைய வைத்தது.

கப்பலில் இருந்து தாதுப்பொருட்களை இறக்க அனுமதிக்க கூடாது என போராடும் மக்கள் வலியுறுத்தினர். ஆங்காங்கே போராட்டங்கள் தீவிரம் அடைய தொடங்கின. மீனவ மக்கள் கடலுக்குள் தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள். 74 விசைப்படகுகள், நூற்றுக்கணக்கான நாட்டுப் படகுகள் மூலமாக ஆயிரக்கணக்கானோர் தூத்துக்குடி துறைமுகத்தை கடல் வழியாக முற்றுகை இட்டனர். 15 மணி நேரம் நீடித்த இந்த முற்றுகை போராட்டத்தின் போது தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து எந்த கப்பலும் வெளியே செல்ல முடியவில்லை.  அதேபோல கப்பல்கள் எதுவும் உள்லே செல்லவும் அனுமதிக்கவில்லை.

இதனால் எம்.வி.ரிஸா கப்பலும் துறைமுகத்துக்குள் நுழைய முடியாமல் நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டு இருந்தது. போராட்டம் வலுப்பதை அறிந்ததும் திகைத்துப் போன தூத்துக்குடி துறைமுக பொறுப்புக்கழக அதிகாரிகள் அந்த கப்பலை கொச்சின் துறைமுகத்துக்கு திருப்பி விட்டனர். ஆனால், ஆறு மாத காலத்துக்கு பின்னர் சாதிச் சண்டையால் மக்களிடம் பிரிவினை ஏற்பட்டு இருந்த நிலையில், கொச்சின் துறைமுகத்தில் இருந்து அந்த சரக்குகள் லாரிகள் மூலமாக ஆலைக்குள் கொண்டு செல்லப்பட்டு பத்திரமாக இறக்கப்பட்டது என்பது தான் சோகம்.

மற்றொரு கப்பலில் வந்த தாதுப்பொருட்கள்


சில மாதங்களுக்கு பின்னர் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கான பொருட்களுடன் எம்.எஸ்.பரஸ்கவி என்ற கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தின் உள்லேயே கொண்டு வரப்பட்டு சரக்குகளை இறக்கும் பணியை தீவிரப்படுத்தியது. உள்ளூர் தலைவர்கள் பலரும் ஆலை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால் இந்த அளவுக்கு தைரியமாக நிர்வாகத்தினர் செயல்படுவதாக பொதுமக்கள் வேதனைப்பட்டார்கள்.
ஆனாலும், தூத்துக்குடி துறைமுக தொழிலாளர்கள் ஒன்றிணைந்து எம்.எஸ்.பரஸ்கவி கப்பலில் இருந்து சரக்குகளை எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம் என போராடினார்கள். இதனால் துணிச்சலும் உற்சாகமும் அடைந்த மீனவ மக்கள் தங்கள் பங்கிற்கு 172 விசைப்படகுகள் 50 நாட்டுப் படகுகளில் துறைமுகப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சென்று அந்த கப்பலை முற்றுகை இட்டனர். இதனால் பரஸ்கவி கப்பல் அவரசரமாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

ஆங்கிலேய அரசை எதிர்த்து சுதேசி கப்பல் ஓட்டிய தியாகியான வ.உ.சி பெயரில் செயல்பட்டு வரும் தூத்துக்குடி துறைமுகத்தில் மற்றொரு சுதந்திர போராட்ட எழுச்சி போலவே இந்த போராட்டம் இருந்ததாக அந்த சமயத்தில் மீனவ மக்கள் பெருமை பொங்க தெரிவித்தனர். மக்களின் ஒட்டு மொத்த ஆதரவுடன் நடந்த இத்தகைய போராட்டங்கள் அரசியல் கட்சியினர் அச்சம் அடைய வைத்தது. ஸ்டெர்லைட் நிர்வாகமும் மக்களின் இந்த எழுச்சியைக் கண்டு கலங்கியது.

தொடர்ந்து நடந்த போராட்டங்கள் என்ன..? அவற்றை எப்படி எல்லாம் ஒடுக்கவும் நசுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது
படங்கள்:
ஏ.சிதம்பரம்
ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 3

தூத்துக்குடி துறைமுகத்துக்கு எம்.வி.ரிஸா கப்பல் தாதுப்பொருட்களை ஏற்றி வந்ததை தீரத்துடன் எதிர்த்து அதனை முறியடித்த மக்கள் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது 1996 மார்ச் 18 ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தூத்துக்குடிக்கு அவர் வரும் தினத்தை கருப்பு தினமாக அறிவித்தது, ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு. காவல்துறையின் தீவிர முயற்சியால் அவரது பயணம் தடைபடாமல் போனாலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு செல்ல இருந்த ஜெயலலிதாவின் பயணம் மாற்றி அமைக்கப்பட்டது.

போராடும் மக்களிடம் கடுமை

அதனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.வும் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக மென்மை போக்கையும்,  போராடும் மக்களிடம் கடுமையாகவும் நடந்து கொண்டது. அதனால் ஆலையை மூடக்கோரி மக்கள் இயக்கத்தினர் நடத்திய போராட்டங்களை எல்லாம் ஆலை நிர்வாகம் தட்டிக் கழிப்பதை வழக்கமாக்கியது.சுற்றுசூழல் மற்றும் வனத்துறையின் விதி முறைகளை மீறி ஆலையை கட்டி இருப்பதையும் அதன் செயல்பாடுகள் இருப்பதையும் எதிர்ப்பு இயக்கத்தினர் பல முறை சுட்டிக் காட்டினார்கள். குறிப்பாக, ஆலைக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதாகவும் இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை ஆலை நிர்வாகம்மறுப்பதற்கு முன்பாக அரசு அதிகாரிகள் ‘இல்லை’ என தெரிவிப்பதில் அக்கறை காட்டினார்கள். அதற்கான அதாரங்களை அடுக்கடுக்காக விளக்கினார்கள்.

குற்றச்சாட்டை சமாளிக்க ஆய்வு குழுக்கள்


ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் கடலில் கொட்டப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகள் பகிரங்கமாக குற்றம் சாட்டின. இதுபோன்ற சமயங்களில் அரசின் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆலையின் உள்ளே சென்று ஆய்வு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.அப்படி ஆய்வு செய்த குழுவினர், ‘ஆலையில் இருந்து க்டல் வரைக்கும் குழாய்கள் பதிக்கப்பட்டு இருப்பது உண்மைதான்.ஆனால், அந்த குழாய்களில் அவர்கள் கழிவுகளை வெளியேற்றவில்லை.மாறாக உள்ளேயே அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்’என மக்களுக்கு ‘விளக்கம்’(?) அளித்தார்கள்.

இது தவிர,ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிலும் 250 மீட்டர் சுற்றளவுக்கு பசுமைக் காடுகளை அமைக்க வேண்டும் என தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முதலில் வலியுறுத்தியது.ஆனால், அப்படி செய்ய வேண்டுமானால் 150 ஏக்கர் பரப்பளவு தேவைப்படும் என்பதால் பசுமை வளைய பரப்பளவை குறைக்க வேண்டும் என ஆலை நிர்வாகம் கேட்டுக் கொண்டது.உடனடியாக அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்,பசுமை வளைய பரப்பளவு 25 மீட்டராக இருந்தால் போதுமானது என தாராளம் காட்டியது.

சாகும் வரை உண்ணாவிரதம்

மக்களின் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றாமல் ஆலையை செயல்படுத்த துணிந்து செயல்பட்ட ஆலை நிர்வாகத்தை அ.தி.மு.க அரசும், அதற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசும் அளவுக்கு அதிகமாக உற்சாகப்படுத்தின.ஆனால், விதி முறைக்கு மாறாக அமைக்கப்பட்டு உள்ள இந்த ஆலை செயல்பட தொடங்கும் போது சிறிய விபத்து ஏற்பட்டால் கூட தூத்துக்குடி நகரமே மற்றொரு போபாலாக உருமாறி விடும் என சமூக ஆர்வலர்கள் அஞ்சினார்கள்.

இந்த விவரங்களை சமூக ஆர்வலர்கள் மக்களிடம் விளக்க தெருமுனை பிரசாரம், சைக்கிள் பேரணி ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் என பல்வேறு யுத்திகளை கடைப்பிடித்தனர். அதனை எல்லாம் முறியடிக்கும் வகையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கொடுப்பதில் காவல்துறை தயக்கம் காட்டியது. அத்துடன் முன்கூட்டியே திட்டமிட்ட பல நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டன.ஆனால், அதை எல்லாம் மீறி பல கட்டமாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தப்பட்டன. கழிவு நீர் குழாய்களை அகற்ற வலியுறுத்தி 15 பேர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மாவட்ட ஆட்சியர் போராட்டக்குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, பயன்படுத்தப்படாமல் வெறுமனே பதித்து மட்டுமே வைக்கப்பட்டு இருக்கும் அந்த குழாய்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி கொடுத்த பின்னரே போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த போராட்டங்களில் புஷ்பராயன் (தற்போது, கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டக்குழு உறுப்பினராக இருப்பவர்), தியாகி கோமதியா பிள்ளை போன்றோர் பங்கெடுத்தனர்.

மவுனம் காத்த மதத் தலைவர்கள்

போராடும் மக்கள் மீதும், அதை ஊக்கப்படுத்தும் அமைப்புகள் மீதும் காவல்துறையின் நடவடிக்கைகள் கடுமையாக இருந்தன.போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் மீது சரமாரியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.ஒரு சிலரை போலீஸார் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று மிரட்டி அனுப்பினார்கள்.இதை எல்லாம் சந்திக்க பயந்து பல அமைப்புகள் பின்வாங்கிக் கொண்டன.சில அமைப்புகள் ஆலை நிர்வாகத்தின் மூலமாக கிடைக்கும் சலுகைகளுக்காக போராட்டத்தை முடித்துக் கொண்டன.

தொடக்கத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட களத்தில் ஆர்வமாக செயல்பட்ட சில மத தலைவர்களும் மத நிறுவனங்களும் கூட அரசின் அடக்குமுறைக்கு பயந்து மவுனம் காக்க தொடங்கினார்கள்.'கோடிகளை கொட்டி தொடங்கப்பட்ட ஆலையை இழித்து மூட் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?’ என்று உள்ளூர் தலைவர்கள் சிலரே மக்களிடம் பேசி சமாதானப்படுத்தினார்கள்.ஆனாலும் கத்தோலிக்கமத குருமார்கள் சிலர் கடைசி வரையிலும் போராட்டக் களத்தில் மக்களோடு தீவிரமாக நிற்கவே செய்தார்கள். ஆனாலும் அவர்களின் மதத் தலைமை எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை என்பதும் ஆலையை எதிர்த்து சிறு அறிக்கை கூட கொடுக்கவில்லை என்பதும் மதத்தின் மீதும் அந்த தலைமையின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்த மீனவ மக்களை வருத்தம் அடைய வைத்தது.

கலக்கம் அடைந்த ஆலை நிர்வாகம்


மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் 1989-ல் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கட்டப்பட்டபோது எதிர்ப்பு இயக்கம் வலுவாக இருந்தது.அந்த பகுதியில் இருந்த விவசாய மற்றும் மீனவ மக்கள் கொண்ட 35,000 பேரை ஒன்று திரட்டி போராட்டக் குழு அமைக்கபப்ட்டது.அந்த குழுவினர் தொடக்கத்தில் பல்வேறு வடிவங்களில் அமைதியான போராட்டங்களை நடத்திப் பார்த்தனர்.ஆனால் எதற்கும் வளைந்து கொடுக்காத ஆலை நிர்வாகம் தொடர்ந்து கட்டுமானப் பணிகளில் தீவிரமாக இருந்தது. இதனால் கொதிப்படைந்த ரத்னகிரி மாவட்ட மக்கள், கையில் கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களுடன் அதிரடியாக ஆலைக்குள் அத்துமீறி நுழைந்து அனைத்தையும் உடைத்து நொறுக்கினார்கள்.

அதே போன்ற நிலைமை தமிழகத்திலும் வந்து விடுமோ என்கிற அச்சம் ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு வந்து விட்டதால் போராட்டங்களை ஆரம்பத்திலேயே முடக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்பை நாடியது.இந்த போராட்டம் சுற்றுச் சூழலுக்கு எதிரான போராட்டமாக மாறுவதை திசை திருப்பும் வகையில், தூத்துக்குடியின் வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்க இந்த ஆலை உதவும் என்கிற கருத்தை பரப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கும் நல்ல பலன் கிடைக்கவே செய்தது. போராட்ட குணம் நீர்த்து போக ஆரம்பித்ததால் போராட்டக்குழுவினர் நீதி மன்றத்தை மட்டுமே நம்பும் நிலைமை உருவானது.

போராட்டம் ஒரு பக்கம் நடக்கும் போதே செயல்பாட்டை தொடங்கி விட்ட ஸ்டெர்லைட் ஆலையில் விபத்துகள் அடிக்கடி நடக்க தொடங்கின..

அந்த விவரங்களை நாளை பார்க்கலாம்.. 

நன்றி  விகடன்