Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts

Thursday, September 03, 2015

தலைச்சுற்றல் ஏற்படுவது ஏன்? - டாக்டர் கு.கணேசன்

ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி
நடைமுறையில் ஒருவருக்குக் கிறுகிறுப்பு, தலைச்சுற்றல் வந்துவிட்டால், உடனே அது மூளை தொடர்பான நரம்புக் கோளாறு என்றுதான் பலரும் நினைக்கிறார்கள், அப்படியில்லை. பெரும்பாலான நேரங்களில் இந்தப் பிரச்சினைகளுக்குக் காதுதான் முக்கியக் காரணமாக இருக்கும். ஏனென்றால், கேட்பதற்கு மட்டுமல்ல காது! உடலைச் சமநிலைப்படுத்த உதவும் உறுப்புகளில் முக்கியமானதும் காதுதான்!
காது கேட்பது எப்படி?
காதில் வெளிக்காது, நடுக்காது, உள்காது என்று மூன்று பகுதிகள் உள்ளன. வெளிக்காது ஒலி அலைகளை உள்வாங்கிக் காதுக்குள் கொண்டு செல்கிறது. நடுக்காதில் உள்ள செவிப்பறை அந்த ஒலி அலைகளை ஏற்றுக்கொள்ளும்போது அதிர்கிறது. இந்த அதிர்வுகள் செவிப்பறையை ஒட்டியுள்ள சுத்தி, பட்டடை, அங்கவடி எனும் மூன்று எலும்புகள் மூலம் உள்காதுக்குள் நுழைந்து, அங்கு நத்தை வடிவில் உள்ள ‘காக்ளியா'வை (Cochlea) அடைகின்றன.
அங்கு பெரிலிம்ப் (Perilymph), எண்டோலிம்ப் (Endolymph) என்று இரு வகைத் திரவங்கள் உள்ளன. இதில் எண்டோலிம்ப் திரவத்தின் மீது நடுக்காதின் அங்கவடி எலும்பு பிஸ்டன் போல் இயங்குவதால், இங்கேயும் அதிர்வுகள் உண்டாகின்றன. அப்போது இந்தத் திரவங்களில் மிதந்துகொண்டிருக்கும் இழை அணுக்கள் (Hair cells) தூண்டப்படுகின்றன. உடனே, அங்கு மின்னலைகள் உருவாகி, செவி நரம்பு வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. பிறகுதான் நாம் கேட்பது பேச்சா, பாட்டா, இசையா, இரைச்சலா என்று வகை பிரித்துச் சொல்கிறது, மூளை.
சமநிலை காவலன்
உள்காதில், கேட்கும் திறனைத் தருகிற காக்ளியாவோடு உடலைச் சமநிலைப்படுத்துகிற லேப்ரிந்த் (Labyrinth) என்னும் பகுதியும் உள்ளது. லேப்ரிந்தின் ஒரு பக்கத்தில் காக்ளியாவும், இன்னொரு பக்கத்தில் அரைவட்டக் குழல்களும் (Semicircular canals) இருக்கின்றன. லேப்ரிந்த் என்பது எலும்பு லேப்ரிந்த், படல லேப்ரிந்த் என்று இரண்டுவிதமாக இருக்கிறது.
மேலும் கீழும் உள்ள எலும்பு லேப்ரிந்தில் பெரிலிம்ப் திரவமும், நடுவில் உள்ள படல லேப்ரிந்தில் எண்டோலிம்ப் திரவமும் உள்ளன. நாம் நடக்கும்போது, எழுந்திருக்கும்போது, ஓடும்போது, தலையைத் திருப்பும்போது படல லேப்ரிந்தில் உள்ள எண்டோலிம்ப் திரவம் அசைகிறது. இந்த அசைவின் வேகம், விகிதம், திசை, பரப்பு ஆகியவற்றைக் கொண்டு அரைவட்டக்குழல்களில் வெவ்வேறு குறியீடுகள் உண்டாகும்.
இவற்றை இழை அணுக்கள் கிரகித்துச் செவிநரம்பின் வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லும். இந்தத் தகவல்களைக் கொண்டு நாம் நிற்கிறோமா, நடக்கிறோமா, தலையைத் திருப்புகிறோமா என்று நம் மூளை தெரிந்துகொள்ளும். அதற்கேற்ப மூளை செயல்பட்டு உடல் தசைகளுக்கு ஆணை பிறப்பித்து, உடலைச் சமநிலைப்படுத்துகிறது. இந்தச் சங்கிலிவினைச் செயல்பாட்டில் ஏதாவது குறை ஏற்படுமானால், காதிலிருந்து தவறான தகவல்கள் மூளைக்குச் செல்லும். அப்போது மூளை குழம்பிவிடும். இதனால்தான் தலைச்சுற்றல் ஏற்படுகிறது.
தலைச்சுற்றல் என்பது என்ன?
கிறுகிறுப்பு (Dizziness) என்பது மிதமான தலைச்சுற்றல். கிறுகிறுப்புக்கு அடுத்த நிலைதான் உண்மையான தலைச்சுற்றல். காதுப் பிரச்சினை காரணமாக உடல் சமநிலையை இழக்கும்போது, நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் தலை தனியாகச் சுற்றுவதுபோல் தோன்றும். அல்லது சுற்றியுள்ள பொருட்கள் சுற்றுவதுபோல் தோன்றும். இந்த வகைத் தலைச்சுற்றலை ஆங்கில மருத்துவத்தில் ‘வெர்டைகோ’ (Vertigo) என்கிறார்கள்.
இது முப்பது வயதுக்கு மேல் எவருக்கும் வரலாம் என்றாலும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் நூறு பேரில் பத்து பேருக்குக் கட்டாயம் உள்ளது. ஆண்களைவிட பெண்களுக்குத்தான் தலைச்சுற்றல் தொல்லை அதிகம். என்றாலும், இந்த மாதிரித் தலைச்சுற்றல் காரணமாக உயிருக்கு ஆபத்து ஒன்றும் ஏற்பட்டுவிடாது என்பது ஓர் ஆறுதல்.
மூன்று வகை
மிதமான வகை: இந்த வகை தலைச்சுற்றல் உள்ளவர்களுக்குக் குமட்டலும் தலைச்சுற்றலும் சிறிது நேரம் இருக்கும். படுத்துக்கொண்டு சில மணி நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டால், இந்த அறிகுறிகள் தானாகவே மறைந்துவிடும்.
மத்திய வகை: இவர்களுக்குத் தலைச்சுற்றலோடு வாந்தியும் இருக்கும். படுத்து ஓய்வு எடுத்துக்கொண்டால் இவை சரியாகிவிடும்.
தீவிர வகை: இந்த வகைதான் மோசமானது. தலைச்சுற்றலும் அதிகமாக இருக்கும், வாந்தியும் மோசமாக இருக்கும். தலையை அசைத்தாலே இந்த இரண்டும் அதிகப்படும். நடந்தால் மயங்கிவிடுவோமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும்.
மினியர் நோய்
உள்காதில் எண்டோலிம்ப் திரவம் அளவுக்கு அதிகமாகச் சேருவதால் காதுக்குள் அழுத்தம் அதிகரித்துத் தலைசுற்றல் வருவது ஒரு வகை. இது தூங்கும்போதுகூட வரும். இந்த வகை தலைசுற்றல் உடனே குறையாது; இரண்டு நாட்களுக்கு மேல்கூட நீடிக்கும். குமட்டலும் வாந்தியும் அதிகமாக இருக்கும். எப்போதும் படுக்கையிலேயே இருக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு இருக்கும். காதில் இரைச்சல் கேட்கும். காது மந்தமாகக் கேட்கும். இதற்கு ‘மினியர் நோய்’ (Meniere’s disease) என்று பெயர்.
ஒரு திசை தலைச்சுற்றல்
சிலருக்கு ஏதாவது ஒரு பக்கமாகக் கழுத்தைத் திருப்பும்போது, மேல்நோக்கிப் பார்க்கும்போது, குனியும்போது, நிமிரும்போது தலை சுற்றும். இதற்கு ‘ஒரு திசை தலைச்சுற்றல்’ ( Benign Paroxysmal Positional Vertigo) என்று பெயர். இதன் அறிகுறிகள் மினியர் நோய்க்கு எதிராக இருக்கும். குறிப்பாக, இந்த வகைத் தலைச்சுற்றலின்போது காதில் இரைச்சல் இருக்காது. காது கேட்பதில் பிரச்சினை இருக்காது. தலைசுற்றலுக்காகச் சிகிச்சை பெற வருகிறவர்களில், பெரும்போலோருக்கு இந்த வகை தலைசுற்றல்தான் முக்கியக் காரணமாக இருக்கும்.
உட்செவி நரம்புப் பிரச்சினை
ஜலதோஷம் பிடிக்கும்போது உட்செவி நரம்பில் வைரஸ் கிருமிகள் பாதிக்குமானால், நரம்பு வீங்கித் தலைச்சுற்றலை ஏற்படுத்தும். லேப்ரிந்த் பகுதியில் வீக்கம் ஏற்பட்டாலும், உட்செவியில் கட்டிகள் தோன்றினாலும் தலைச்சுற்றல் உண்டாகும். நடுக்காதில் சீழ் வைக்கும்போது, வெளிக்காதில் அழுக்கு சேர்ந்து அடைக்கும்போது எனப் பலவிதக் காதுப் பிரச்சினைகளால் தலைச்சுற்றல் ஏற்படலாம்.
இதர காரணங்கள்
பொதுவாகக் காதுப் பிரச்சினை காரணமாக 80 சதவீதம் பேருக்குத் தலைச்சுற்றல் ஏற்படுகிறது என்றால், மீதி 20 சதவீதம் பேருக்கு மற்றக் காரணங்களால் தலைச்சுற்றல் ஏற்படுகிறது. ஒற்றைத் தலைவலி, உயர் ரத்தஅழுத்தம், குறை ரத்தஅழுத்தம், மிகை ரத்தக்கொழுப்பு, ரத்தச் சோகை, ஊட்டச்சத்துக் குறைவு, கட்டுப்படாத நீரிழிவு நோய், தாழ் சர்க்கரை, கழுத்து எலும்பில் பிரச்சினை, தைராய்டு பிரச்சினை, கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டம், இதயத்துடிப்புக் கோளாறுகள், மருந்துகளின் பக்கவிளைவு, பார்வைக் கோளாறு, மன அழுத்தம், உறக்கமின்மை, மலத்தில் ரத்தம் போவது, தலைக்காயங்கள் என்று பல காரணங்களால் தலைச்சுற்றல் ஏற்படுவதுண்டு.
பரிசோதனைகள் என்ன?
ஒருவருக்கு முதல்முறையாகத் தலைச்சுற்றல் ஏற்படும்போது முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அப்போதுதான் காரணம் தெரிந்து சிகிச்சை செய்துகொள்ளமுடியும். மேலும் தலைச்சுற்றல் என்பது பலருக்கும் மீண்டும் மீண்டும் வருகிற தொல்லை என்பதால், ஒருமுறை காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டால், அடுத்தமுறை இது தொல்லை தரும்போது பயப்படாமல் இருக்கலாம்.
பொதுவாக, தலைச்சுற்றல் ஏற்பட்ட நபருக்கு உட்கார்ந்த நிலையிலும் படுத்த நிலையிலும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படும். முழு ரத்தப் பரிசோதனை உதவக்கூடும். ஆடியோகிராம், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட காதுக்கான அனைத்துப் பரிசோதனைகளும் தேவைப்படும். சில வேளைகளில் கழுத்தெலும்பு எக்ஸ்ரே, கண் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை மற்றும் இதயத்துக்கான பரிசோதனைகளும் தேவைப்படும்.
சிகிச்சை என்ன?
தலைச்சுற்றலுக்குப் பலதரப்பட்ட காரணங்கள் உள்ளதால், முதலில் அடிப்படைக் காரணத்துக்குச் சிகிச்சை பெற வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். காது தொடர்பான தலைச்சுற்றல் பிரச்சினையைப் போக்க, இப்போது நல்ல மருந்துகள் உள்ளன. இவை காதின் சமநிலை உறுப்புக்கு ஓய்வு கொடுப்பதால், தலைச்சுற்றல் சரியாகிறது. சில மருந்துகள் உட்செவிக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். இதனாலும் தலைச்சுற்றல் கட்டுப்படும்.
மினியர் நோய்க்குக் காதின் செவிப்பறையில் ஸ்டீராய்டு ஊசி மருந்து அல்லது ஜென்டாமைசின் ஊசி மருந்தைச் செலுத்திக் குணப்படுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. இப்போது இதைக் குணப்படுத்துவதற்கு நல்ல மாத்திரைகள் வந்துள்ளன. இதில் குணமடையாதவர்களுக்கு அறுவைச் சிகிச்சை உதவுகிறது.
பயிற்சிகள் உதவும்
இங்கு ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘ஒரு திசை தலைச்சுற்றல்’ உள்ளவர்களுக்கு மாத்திரை மருந்துகளால் மட்டுமே தலைச்சுற்றலைத் தடுக்க முடியாது. குறிப்பிட்ட உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டியதும் முக்கியம்.
படுத்திருக்கும்போது கண்களைச் சுழற்றுதல், உட்கார்ந்துகொண்டு கழுத்துத் தசைகளுக்கும் தோள்பட்டைத் தசைகளுக்கும் பயிற்சி அளித்தல், தலையை முன்னும் பின்னும் வளைத்தல், பக்கவாட்டில் வளைத்தல், நடந்துகொண்டே பந்தைப் பிடித்தல் போன்ற பல பயிற்சிகள் இவ்வகை தலைச்சுற்றலைத் தடுக்க உதவுகின்றன. இவற்றைக் காது மூக்கு - தொண்டை மருத்துவர் மற்றும் இயன்முறை மருத்துவர் ஆலோசனையுடன் முறையாகவும் சரியாகவும் செய்துவந்தால், தலைச்சுற்றல் விடைபெற்றுக்கொள்வது உறுதி.
தடுப்பது எப்படி?
l உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
l அதிகக் கொழுப்புள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்.
l சரியான அளவுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியம்.
l ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு மற்றும் ரத்தச் சர்க்கரை அளவுகளை நல்ல கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள்.
l புகைபிடிக்காதீர்கள்.
l மது அருந்தாதீர்கள்.
l போதை மாத்திரைகளைச் சாப்பிடாதீர்கள்.
l தலை சுற்றுவதுபோல் உணர்ந்தால், உடனே தரையில் படுத்துக்கொள்ளுங்கள். கால்களைச் சற்று உயரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
l படுக்கமுடியாத நிலைமைகளில் தரையில் உட்கார்ந்துகொண்டு, உடலை முன்பக்கமாகச் சாய்த்து, முழங்கால்களை மடக்கி, கால்களுக்கு இடையில் தலையை வைத்துக்கொள்ளுங்கள்.
l படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது நேராக எழுந்திருக்காமல், பக்கவாட்டில் முதலில் படுத்துக்கொண்டு அந்தப் பக்கமாகவே எழுந்திருங்கள்.
l எழுந்தவுடனேயே நடந்து செல்ல வேண்டாம்.
l படுக்கையில் சிறிது நேரம் உட்கார்ந்த பிறகு நடந்தால், தலைசுற்றல் ஏற்படாது.
l படுக்கையிலிருந்து எழுந்ததும் எதையாவது எடுப்பதற்குக் கீழ்நோக்கிக் குனியவோ, சட்டென்று திரும்பவோ முயற்சிக்காதீர்கள்.
l தலைக்குத் தலையணை வைக்காதீர்கள்.
l உடலின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உடனடியாக மாறாதீர்கள். உதாரணத்துக்கு, புரண்டு படுக்கும்போது திடீரெனப் புரளாதீர்கள்.
l அடிக்கடி தலைச்சுற்றல் பிரச்சினை உள்ளவர்கள், வீட்டுக் கழிப்பறை, குளியலறை போன்ற இடங்களில் பிடிமானக் கம்பிகளைச் சுவற்றில் பதித்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் தலைச்சுற்றல் வரும்போது இந்தக் கம்பிகளைப் பிடித்துக்கொள்வதன் மூலம் கீழே விழுவதைத் தடுக்கமுடியும்.
l வீட்டிலும், குளியலறை மற்றும் கழிப்பறைகளிலும் வழுக்காத தரைவிரிப்புகளையே பயன்படுத்துங்கள்.
l இரவு விளக்குகளைப் பயன்படுத்துங்கள்.
l அடிக்கடி மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
l ரோலர் கோஸ்டர் போன்ற ராட்டினங்களில் சுற்றுவதைத் தவிருங்கள்.
l மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து சாப்பிடாதீர்கள். அப்படிச் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுச் சாப்பிடுங்கள்.
l மன அழுத்தத்தைத் தவிருங்கள்.
l வாகனத்தை ஓட்டாதீர்கள். ஆபத்தான இயந்திரங்களை இயக்காதீர்கள்.
l ஆண்டுக்கு ஒருமுறை காதுப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: [email protected]

Tuesday, August 11, 2015

மினரல் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்

ஒரே ஒரு நாள் வெளியில் தண்ணீர் குடித்துவிட்டாலும்கூட, உடனே சிலருக்குச் சளி பிடித்து மூக்கு ஒழுக ஆரம்பித்துவிடும், தொண்டை கட்டிக்கொள்ளும், காய்ச்சலும்கூட எட்டிப்பார்க்கலாம். டாக்டரிடம் போனால், அவர் முதலில் கேட்கும் கேள்வி, “வெளியே தண்ணீர் குடித்தீர்களா?” என்பதுதான்.
பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை பாட்டில் குடிநீரை வாங்கிக் குடிப்பதைப் பரவலாகப் பார்க்க முடிந்ததில்லை. போகுமிடத்தில் கிடைத்த தண்ணீரைத்தான் எல்லோரும் குடித்துக்கொண்டிருந்தோம். எல்லா நேரமும் பெரிய நோய்கள் தொற்றிக்கொண்டிருக்கவில்லை. ஆனால், இன்றைய நிலைமை தலைகீழாக இருக்கிறது. என்ன நோய் தொற்றிவிடுமோ என்ற அச்சத்தில், பலரும் லிட்டருக்கு 15 ரூபாய் கொடுத்து பாட்டில் குடிநீரை நம்பிக் குடிக்கிறோம்.
என்ன இருக்கிறது?
கல்யாணம்-காதுகுத்து-பிறந்தநாள்-புதுமனை புகுதல் என்று எந்த வீட்டு நிகழ்ச்சி, திருவிழா என பார்க்கும் இடமெல்லாம் பாட்டில் குடிநீரே தரப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகத் தர வசதியாகக் குட்டிக் குட்டி பாட்டில்களில் தண்ணீர் அடைத்து விற்கப்படுகிறது. ஒவ்வொரு கொண்டாட்டம் முடிந்த பிறகும் தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் குப்பையின் அளவு பிரம்மாண்டமாக இருக்கிறது. மற்றொரு புறம் இவ்வளவு செலவு செய்து குடிக்கும் தண்ணீர் பாதுகாப்பானதாக இருக்கிறதா?
இல்லை என்கிறது ‘அறிவியல், சுற்றுச்சூழல் மையம்’ (சி.எஸ்.இ.) 2003-ல் நடத்திய பரிசோதனை முடிவு. இந்தப் பரிசோதனைக்காக மும்பை, டெல்லியில் சேகரிக்கப்பட்ட பாட்டில் குடிநீர் மாதிரிகளில் நாம் எதிர்பார்ப்பதை விடவும், மிகவும் ஆபத்தானதாக இருந்திருக்கின்றன. பாதுகாப்பான குடிநீருக்காகத் தரநிர்ணயம் செய்யப்பட்ட அளவை விடவும், அதிகப் பூச்சிக்கொல்லி எச்சங்கள் இவற்றில் நிறைந்திருந்தன. குறைந்தபட்சம் ஐந்து பூச்சிக்கொல்லிகள் இருந்திருக்கின்றன.
எப்படி வந்தது?
இந்த வேதியியல் பகுப்பாய்வு பரிசோதனையை டெல்லியைச் சேர்ந்த சி.எஸ்.இ. மாசுபாடு கண்காணிப்பு ஆய்வகம் மேற்கொண்டது. அதில், அதிகம் விற்பனையாகும் பிரபல வணிக நிறுவனங்களின் பாட்டில் குடிநீரில் வயல்வெளியில் தெளிக்கப்படும் லிண்டேன், மாலத்தியான், குளோர்பைரிஃபாஸ், டி.டி.டி. ஆகிய பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இன்றைக்குப் பெரும்பாலான குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் புறநகர் பகுதிகளிலும், கிராமங்களிலும் வயல்வெளிகளுக்கு அருகேதான் தங்களுடைய சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்துள்ளன. அங்கு ஆழ்குழாய் கிணறு மூலம் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டுச் சுத்திகரிக்கப்படுகிறது. இங்குதான் தொடங்குகிறது பிரச்சினை. எடுக்கப்படுவது நிலத்தடி நீர்தான் என்றாலும், பசுமைப் புரட்சி காலத்திலிருந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாகக் கட்டுப்பாடு இல்லாமல் ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டுவருவதே, நிலத்தடி நீர் மாசுபாட்டுக்குக் காரணம் என்கிறது சி.எஸ்.இ நிறுவனம். சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இதையே வலியுறுத்துகிறார்கள்.
பூச்சிக்கொல்லி நீங்கவில்லை
மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் நிலத்தடி நீரை உறிஞ்சி, தூய்மைப்படுத்தி, பாட்டிலில் அடைத்துப் பல மடங்கு விலையேற்றி பாட்டில் குடிநீர் உற்பத்தியாளர்கள் விற்கிறார்கள். நிலத்தடி நீர் கடுமையாக மாசுபட்டிருப்பது ஒருபுறம், மற்றொருபுறம் சுத்திகரிப்பு நடவடிக்கையில் பூச்சிக்கொல்லி எச்சம் முழுமையாக நீக்கப்படுவதும் இல்லை.
இன்றைக்குக் குக்கிராமத்தில் உள்ள சிறிய கடைகளிலும்கூட பாட்டில் குடிநீர் கிடைக்கிறது. வீடுகளுக்கான குடிநீர் தேவைக்குத் தனித்தனி பாட்டில்களாக வாங்காவிட்டாலும், சென்னை போன்ற நகரங்களில் பப்பிள் டாப் பிளாஸ்டிக் கலன்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்தான் வாங்கப்படுகிறது. இதற்கும் மேற்கண்ட சுத்திகரிப்பு முறையே பின்பற்றப்படுவதால், அவற்றிலும் பூச்சிக்கொல்லி எச்சம் இருக்கலாம்.
படியும் நஞ்சு
இருந்தபோதும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைக் குறைவாகத்தானே குடிக்கிறோம் என்று சிலர் நினைக்கலாம். நம்மில் பெரும்பாலானோர் அதை அனுதினமும் குடித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தப் பூச்சிக்கொல்லி எச்சங்களால் யாரும் உடனடியாக இறந்துபோய்விட மாட்டார்கள் என்பது உண்மைதான். அதேநேரம் நம் உடலில் உள்ள கொழுப்பின் மீது இந்த எச்சங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் படிவதால், சீரமைக்க முடியாத உடல்நலக் கோளாறுகள் எதிர்காலத்தில் ஏற்படலாம்.
பயமுறுத்தும் பாதிப்புகள்
பாட்டில் குடிநீரில் இருக்கும் நஞ்சு நீண்ட காலமாக உடலில் சேர்வதால் புற்றுநோய், கல்லீரல், சிறுநீரகங்களைச் சிதைக்கக்கூடியதாகவும், நரம்புமண்டலக் கோளாறுகளை உருவாக்கக்கூடியதாகவும், நோயெதிர்ப்புசக்தி குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் பிறக்கும் குழந்தைகளுக்குப் பிறவிக் குறைபாடுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
நகரங்களில் வாழும் பெரும்பாலான கர்ப்பிணிகள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத்தான் குடிக்கிறார்கள். அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை என்னவென்று சொல்வது?
குளோர்பைரிஃபாஸ் என்ற வேதிப்பொருள் மிக மிக ஆபத்தானது. குழந்தையின் நரம்பு மண்டல வளர்ச்சியைக் கருவிலேயே பாதிக்கக்கூடியது. ஐரோப்பாவில் பூச்சிக்கொல்லி எச்சம் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவைவிட, சி.எஸ்.இ. பாட்டில் குடிநீர் பரிசோதனை மாதிரிகளில் குளோர்பைரிஃபாஸ் அளவு 400 மடங்கு அதிகமாக இருந்துள்ளது. பாட்டில் குடிநீர் மாதிரிகளில் மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வுகள் இன்னும் அதிர்ச்சியளிப்பவை. அதைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.
பாட்டில் குடிநீரில் பாக்டீரியா
சென்னையில் விற்பனை செய்யப்படும் பல்வேறு நிறுவனங்களின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் தீமை பயக்கும் பாக்டீரியா இருப்பது சென்னை மாநகராட்சி மேற்கொண்ட பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. சென்னையில் 450-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்துவருகின்றன.
இந்த நிறுவனங்களிடமிருந்து 2007-2012-ம் ஆண்டுவரையிலான காலத்தில் பரிசோதிக்கப்பட்டதில், 70 நிறுவனங்களின் பாட்டில் குடிநீர் குடிப்பதற்கு உகந்தது இல்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில் சில நிறுவனங்கள் தரமில்லாத குடிநீரை விநியோகித்ததற்காக மீண்டும் மீண்டும் பிடிபட்டிருக்கின்றன. சுத்திகரிக்கப்படாத தண்ணீர் கேனில் அடைத்து விற்கப்படுவது இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தக் குடிநீர் மாதிரிகளில் கோலிஃபார்ம், இ. கோலி போன்ற ஆபத்தான பாக்டீரியா இருந்ததே இதற்குக் காரணம். சில மாதிரிகளில் 100 மில்லியில் இ. கோலி 1,200-ம், 100 மில்லியில் கோலிஃபார்ம் 200-ம் இருந்தன. இ. கோலி பாக்டீரியாவால் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். சிறுநீரகச் செயலிழப்பை ஏற்படுத்தும் ஒரு வகை ஆபத்தான குறைபாடு (hemolytic uremic) உருவாகவும் வாய்ப்பு உண்டு.

நன்றி - த இந்து

ரத்தச் சர்க்கரை குறைவது ஏன்? - மருத்துவக்கட்டுரை

ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி
‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ என்று சொல்வதற்குப் பதிலாக இனி, ‘வீட்டுக்கு வீடு ஒரு நீரிழிவு நோயாளி’ என்று சொல்லும் அளவுக்கு உலகில் நீரிழிவு உள்ளவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் ஏழு கோடிப் பேருக்கு நீரிழிவு உள்ளது. தமிழ்நாட்டில் 90 லட்சம் பேர் இந்த நோயால் அவதிப்படுகிறார்கள்.
இது குழந்தைகள் முதல் முதியோர்வரை எல்லா வயதினரையும் பாதிக்கிற நோயாகவும் உள்ளது. இந்த நோய்க்குச் சிகிச்சை எடுத்துவருபவர்கள், அவ்வப்போது சந்திக்கிற பிரச்சினைகளில் முக்கியமானது, தாழ்சர்க்கரை மயக்கம் (Hypoglycaemic Coma). இன்சுலினை மட்டுமே நம்பியுள்ள டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குச் சராசரியாக ஆண்டுக்கு ஒருமுறையாவது தாழ்சர்க்கரை ஏற்பட்டுவிடுகிறது.
என்ன காரணம்?
ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு, ரத்தச் சர்க்கரை சாதாரணமாக 120 முதல் 140 மி.கி./ டெ.லி. (ஒரு டெசிலிட்டரில் உள்ள மில்லி கிராம் அளவு) வரை இருக்கும். இவர்களுக்கு இயல்பாகச் சுரக்கிற இன்சுலின், இந்த அளவைச் சரியாக வைத்துக்கொள்கிறது. அப்படியே இன்சுலின் குறைவாக இருந்தாலும், ரத்தத்தில் குளுக்ககான் (glucagon) ஹார்மோன் சுரந்து, ரத்தச் சர்க்கரையை அதிகப்படுத்தி, நிலைமையைச் சரிசெய்துவிடும்.
ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நிலைமை வேறு. இவர்கள் உணவுக் கட்டுப்பாடு, மாத்திரை, இன்சுலின் ஊசி ஆகியவற்றால்தான் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு ரத்தச் சர்க்கரையைச் சரியான கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சிக்கும்போது, இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றில் தவறு ஏற்பட்டாலும், ரத்தச் சர்க்கரை ரொம்பவே குறைந்துவிடும் அல்லது அதிகமாகிவிடும். அப்போது மயக்கம் வரும். இந்த இருவகை மயக்கங்களில் தாழ்சர்க்கரை மயக்கம் மோசமானது. உயிருக்கு ஆபத்தை உடனே வரவழைப்பது.
எது தாழ்சர்க்கரை?
ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 70 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும் நிலைமையை ‘தாழ்சர்க்கரை’ (Hypoglycaemia) என்கிறோம். ஒருவருக்கு இந்த அளவு 50 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது அவருக்கு மயக்கம் வருகிறது. இதை ‘தாழ்சர்க்கரை மயக்கம்' என்கிறோம். என்றாலும், சொல்லிவைத்ததுபோல் எல்லோருக்கும் இந்த அளவு பொருந்தாது. ஒருவருக்கு ரத்தச் சர்க்கரை 70 மி.கி./டெ.லி. இருந்தாலே மயக்கம் வரலாம். சிலருக்கு 50 மி.கி./டெ.லி. இருக்கும்போதும் மயக்கம் வராமல், எப்போதும்போல் இருக்கலாம். இது அவரவர் உடல் இயல்பைப் பொறுத்தது.
எப்படி வருகிறது?
சாதாரணமாக, நமது மூளை செயல்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 5 - 6 கிராம் குளுக்கோஸ் தேவை. தொடர்ந்து மூன்று நிமிடங்களுக்கு குளுக்கோஸ் மூளைக்குச் செல்லவில்லை என்றால், மூளை செயலிழந்துவிடும். வழக்கமாக, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 100 மி.கி./டெ.லி.க்குக் குறையாமல் இருந்தால், மூளைக்குத் தேவையான குளுக்கோஸ் சரியான அளவில் கிடைத்துக்கொண்டிருக்கும்.
ஆனால், ரத்தத்தில் இந்த அளவு 50 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது மூளைக்குக் குளுக்கோஸ் கிடைப்பது குறைந்துவிடும். இதன் விளைவாக, மூளை செல்கள், மூளை நரம்புகள் குறிப்பாக, தானியங்கி நரம்புகள் - வேலை செய்யாமல் போகும். மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது, அதை சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிற குளுக்ககான் ஹார்மோன் அப்போது செயல்படுவதில்லை. இதனால், உடலானது ரத்தச் சர்க்கரையைத் தானாக அதிகப்படுத்திக்கொள்ள வழி இல்லை. ஆகவேதான், இந்த மயக்கம் ஏற்படுகிறது.
அறிகுறிகள் என்ன?
ஆரம்ப அறிகுறிகள
ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 60 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது இந்த அறிகுறிகள் தென்படலாம். இவற்றை முன்னெச்சரிக்கை அறிகுறிகள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
உடல் அதிகமாக வியர்ப்பது.
உடல் குளிர்ச்சியாக இருப்பது.
உடல் தளர்ச்சி.
படபடப்பு.
உடல் நடுக்கம்.
அதிகப் பசி.
தலைவலி.
தலைசுற்றல்.
பார்வை குறைவது.
இதயத் துடிப்பு அதிகரிப்பது.
அடுத்த கட்ட அறிகுறிகள்
ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 40 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது ஏற்படும் அறிகுறிகள்.
l பேச்சு குழறுதல்.
l மனக் குழப்பம்.
l அரை மயக்கம் (Semiconsciousness).
இறுதி கட்ட அறிகுறிகள்
l வலிப்பு வருவது.
l முழு மயக்கம் (Unconsciousness).
l 'கோமா' (Coma) எனும் ஆழ்நிலை மயக்கம்.
முழு மயக்கம் ஏற்பட்டால்?
முழு மயக்கத்தில் உள்ளவருக்கு மேற்சொன்ன முதலுதவிகளைச் செய்ய முடியாது. அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து, குளுக்கோஸ் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால் குளுக்ககான் ஊசி போடப்பட வேண்டும்.
டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தாழ்சர்க்கரை மயக்கம் வரலாம். இவர்கள் வீட்டிலேயே குளுக்ககான் ஊசியைப் போட்டுக்கொள்ளலாம். டாக்டர் ஆலோசனைப்படி அளவு அறிந்து, இன்சுலின் சிரிஞ்சிலேயே இந்த மருந்தை எடுத்து, வீட்டில் யார் வேண்டுமானாலும் அவருக்குப் போட்டுவிடலாம்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள்!
வாகனம் ஓட்டுபவர்கள், இயந்திரங்களில் வேலை செய்பவர்கள், உயரமான இடங்களில் வேலை செய்பவர்கள், தண்ணீருக்கு அருகில் வேலை செய்பவர்கள் போன்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களுக்குத் தாழ் சர்க்கரை ஏற்பட்டால், விபத்து ஏற்படவும், உயிருக்கு ஆபத்து உண்டாகவும் வாய்ப்பு அதிகம்.
குழந்தைக்கு ரத்தச் சர்க்கரை குறைந்தால்?
டைப் 1 நீரிழிவு நோய் குழந்தைகளுக்குத்தான் அதிகம். இவர்களுக்குத் தாழ்சர்க்கரை மயக்கம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். குழந்தைக்கு ரத்தச் சர்க்கரை குறைய ஆரம்பித்துவிட்டால், குழந்தையின் நடத்தையில் மாறுதல்கள் தெரியும். அதிகம் பசிக்கும், வியர்க்கும், படபடப்பு வரும், நாக்கு உலரும், உடல் நடுங்கும், பார்வை குறையும். குறிப்பாக, குழந்தையின் பேச்சு குழறும்; குழப்பமான மனநிலையில் இருக்கும். இன்னும் சொல்லப்போனால், குடிபோதையில் நடப்பது போன்ற நிலையில் இருக்கும்; மயக்கம் வரும்; சில வேளைகளில் வலிப்பு வரலாம்.
பொதுவாக, மயக்க நிலையில் உள்ளவர்களுக்கு வாய்வழியாக எதுவும் கொடுக்கக் கூடாது; அப்படிக் கொடுத்தால், புரையேறி சுவாசத்தை நிறுத்திவிடும் என்றுதான் சொல்வோம். ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை குறைவதன் காரணமாக மயக்கம் ஏற்படும்போது, அவர்களுக்கு எவ்வளவு விரைவில் இனிப்புப் பொருள் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு மயக்கம் விரைவில் தெளியும், ஆபத்து குறையும்.
எனவே, நீரிழிவு நோய் உள்ள குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டால்,உடனே மாவு போலிருக்கும் குளுக்கோஸ் பவுடர், இனிப்பு மாவு போன்றவற்றில் ஒன்றைப் பிசைந்து, நாக்கிலும் பல் ஈறுகளிலும் தடவி, முன்பக்கத் தொண்டையைத் தடவிவிட வேண்டும். இப்படிச் செய்யும்போது, குழந்தை மயக்கத்தில் இருந்தாலும், அந்த இனிப்புப் பொருளை விழுங்கிவிடும். இதனால் மயக்கம் தெளிந்துவிடும். இந்த முதலுதவி தரப்பட வேண்டிய அவசியத்தைப் பள்ளியிலும் சொல்லிவைப்பது நல்லது.
தடுப்பது எப்படி?
l நீரிழிவு உள்ளவர்கள் சரியான நேரத்தில் தேவையான அளவு உணவைச் சாப்பிட வேண்டும்.
l இடைவேளை உணவைத் தவிர்க்கக் கூடாது.
l டாக்டர் சொல்லாமல் மாத்திரை அல்லது இன்சுலின் அளவை மாற்றக்கூடாது.
l இன்சுலினுக்கு ஏற்ற சிரிஞ்சைப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, 40 யூனிட் இன்சுலினுக்கு 100 யூனிட் சிரிஞ்சைப் பயன்படுத்தினால், இன்சுலின் அளவு அதிகரித்துவிடும். இது தாழ்சர்க்கரை மயக்கத்தை வரவேற்கும். இதைத் தவிர்க்கவே இந்த எச்சரிக்கை.
l இன்சுலின் ஊசியைப் போட்டுக்கொண்ட உடனே அல்லது நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளைச் சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யக் கூடாது.
l அடிக்கடி இப்படி மயக்கம் வருபவர்கள், வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்யக் கூடாது. சர்க்கரை இல்லாத பால் அருந்திவிட்டு நடைப்பயிற்சி செய்யலாம்.
தாழ்சர்க்கரை ஏன் ஏற்படுகிறது?
l தேவைக்குச் சாப்பிடாமல், குறைந்த அளவில் உணவைச் சாப்பிடுவது.
l இடைவேளை உணவைச் சாப்பிடாமல் இருப்பது.
l தாமதமாகச் சாப்பிடுவது.
l விரதம் இருப்பது.
l நீரிழிவு நோய் மாத்திரைகள் அல்லது இன்சுலின் அளவை அதிகமாக எடுத்துக்கொள்வது.
l அதிக நேரம் உடற்பயிற்சி / நடைப்பயிற்சி செய்வது.
l கடுமையாக உடற்பயிற்சி செய்வது.
l வெறும் வயிற்றில் மது அருந்துவது.
யாருக்கு வருகிறது?
கீழ்க்காணும் நபர்களுக்குத் தாழ்சர்க்கரை ஏற்பட வாய்ப்பு அதிகம்.
l இன்சுலின் ஊசி போட்டுக்கொள்பவர்களுக்கு.
l டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு.
l சல்ஃபொனைல் யூரியா மாத்திரைகள் சாப்பிடுவோருக்கு.
l முதியோருக்கு (வயது 70-க்கு மேல்)
l மது அருந்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு.
l கல்லீரல் நோய், சிறுநீரக நோய், பிரிட்டில் டயபடிஸ் உள்ளவர்களுக்கு.
இவர்கள் என்ன செய்ய வேண்டும்?
கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:
l ‘தான் ஒரு நீரிழிவு நோயாளி’ எனும் அடையாள அட்டையை எப்போதும் சட்டைப் பையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
l தினமும் சாப்பிடும் மாத்திரை விவரங்கள், அதில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
l இன்சுலின் எடுத்துக்கொள்வதாக இருந்தால் அதன் அளவு, நேரம் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
l 25 கிராம் குளுக்கோஸ் மாவு, சாக்லேட், மிட்டாய் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
l குளுக்ககான் ஊசியைக் கைவசம் வைத்துக்கொள்வதும் நல்லதுதான்.
l தாழ்சர்க்கரையின் அறிகுறிகள் தெரிந்த உடனேயே இனிப்புப் பொருளைச் சாப்பிட்டுவிட வேண்டும்.
l வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள், அலுவலக நண்பர்கள் போன்றோரிடம் தனக்குத் தாழ்சர்க்கரை வந்தால், எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பதைக் கற்றுத் தந்துவிட வேண்டும்.
l குளுக்கோமீட்டரைக் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.
l தனியாக உறங்குவதைத் தவிர்ப்பது நல்லது.
l படுக்கை அறையைத் தாழ்ப்பாள் போட்டு உறங்குவதைத் தவிர்ப்பதும் நல்லது.
என்ன முதலுதவி?
தாழ்சர்க்கரையின் ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தவுடன் வீட்டில் அல்லது அலுவலகத்தில் செய்ய வேண்டிய முதலுதவி:
l குளுக்கோமீட்டர் இருந்தால் உங்கள் ரத்தச் சர்க்கரையைப் பரிசோதித்து ‘தாழ் சர்க்கரை’ உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள். அப்படி உறுதியானால், உடனடியாக 20 - 25 கிராம் குளுக்கோஸ் மாவைச் சாப்பிடுங்கள்.
l குளுக்கோஸ் மாவு இல்லாதபோது சாக்லேட், மிட்டாய், ஜீனி, தேன், பழச்சாறு, ஜாம் போன்றவற்றில் ஒன்றைச் சாப்பிடுங்கள்.
l மாத்திரை வடிவில் இருக்கும் குளுக்கோஸ் மாத்திரைகளையும் சாப்பிடலாம்.
l கிடைக்கிற ஏதாவது ஒரு இனிப்புப் பானத்தை அவசரத்துக்குப் பருகலாம்.
l இந்த ஆரம்ப அறிகுறிகள் 10 - 12 நிமிடங்களுக்குள் மறைந்துவிடும். என்றாலும், பிரச்சினை சரியாகிவிட்டது என்று வீட்டில் இருந்து விடக்கூடாது. மேல் சிகிச்சைக்கு டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.
l முக்கியமாக, மாத்திரைகளை மாற்ற வேண்டுமா, உணவு முறையைச் சரி செய்ய வேண்டுமா அல்லது இன்சுலின் அளவை குறைக்க வேண்டுமா என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொண்டு சிகிச்சையைத் தொடர வேண்டும்.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: [email protected]

நன்றி - த இந்து

Monday, August 20, 2012

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மர்மங்கள்

http://resultsbuzz.in/wp-content/uploads/2012/05/TNPSC-Images.jpg 
கேள்வித்தாளை லீக் செய்தவர் யார்?

பிடிக்கத் துடிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை


நல்ல நம்பிக்கையை பெற்றுவந்த டி.என்.பி.எஸ்.சி.க்கு திருஷ்டிப் பரிகாரம்... கடந்த வாரத்தில் நடந்தது. எல்லாம் ஒழுங்காய் போய்க்கொண்டு இருப்பதைப் பொறுக்காத மனிதர்கள் புகுந்து விளையாட.. எது ஓட்டை என்பதற்கான தேடுதல் துரிதமாய் நடக்கிறது!


சமீபத்தில் நடந்த தேர்வில் மட்டும் அல்ல, கடந்த சில ஆண்டுகளாகவே  டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் வினாத்தாள் லீக் ஆகி இருக்கிறது என்று அதிர்ச்சியைக் கிளப் புகிறார்கள், லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரத்தினர். ''டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு, கல்வித்துறை ஆசி ரியர்கள், டியூஷன் சென்டர்கள், டுடோரியல் கல்லூரிகள் என்று ரகசியத் தொடர்பு இருக்கிறது. இந்தத் தொடர்பு மூலம் கோடிக்கோடியாக கொள்ளை அடித்திருக்கிறார்கள்.


 இந்த முறை சென்னையில் இருந்து கேள்விகள், பாலன் என்பவருக்குப் போய் இருக்கிறது. பாலன் மூலம் இ-மெயிலில் பல்வேறு நபர்களுக்கு வினாக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த பாலன் யார்? அவருக்குக் கேள்வித்தாள் யார் மூலம் கிடைத்தது என்பதைத்தான் விசாரித்து வருகிறோம்'' என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில். அவர்களே கடந்த ஆண்டு நடந்த இரண்டு சம்பவங்களைச் சொல்கிறார்கள்.




டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதுகிறவர்கள் சென்னையைச் சேர்ந்த பாலன் அண்டு கோ நெட்வொர்க் ஆட்களிடம் பணம் கொடுத்தால் போதும். ஒரு துண்டுக் காகிதத்தில் பீச் ரோட்டில் உள்ள ஒரு நூலகத்தில் இருக்கும் ஒரு நபரைப் பார்க்கச் சொல்வார்கள். 'புத்தகம் கொடுக் கவும்' என்ற வார்த்தை மட்டும்  பென்சிலால் அதில் எழுதப்பட்டு இருக்கும்.

 அங்கே போனால், ஒரு குறிப்பிட்ட புத் தகத்தைக் கொடுத்து, அதை நன்றாகப் படித்து தேர்வு எழுதச் சொல்வார்கள். அந்தப் புத்தகத்தில் வினாத்தாளில் வர விருக்கும் கேள்விகளில் 80 சதவிகிதம் வரை இருக்குமாம். கடந்த வருடம்தான், டி.என். பி.எஸ்.சி. உறுப்பினர் ஒருவரின் அரவ ணைப்பில் இந்த நெட்வொர்க் இயங்குவதைக் கண்டுபிடித்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், அந்த நூலக நபரையும் பிடித்து விட்டனர். ஆனால், இந்த வருடமும் அதேபோன்று நெட்வொர்க் இயங்கி உள்ளதுதான் ஆச்சர்ய்ம்! 



சென்னையில் இருந்து உடுமலைப்பேட்டையில் உள்ள ஒரு சென்டருக்கு குரூப் 2 தேர்வுக்கு முந்தைய நாள் இரவு, அங்கே படிக்கும் மாணவர்களை எல்லாம் வரவழைத்து இருக்கிறார்கள். தலைக்கு ஒரு லட்சம் வீதம் வசூல் செய்துகொண்டு, பாடம் நடத்தும் போர்டில் வினா - விடைகளை எழுதிப் போட்டு இருக்கிறார்கள். அந்த போர்டில் எழுதி யதை அழிக்காமலேயே போய்விட்டதால், அடுத்த நாள் விஷயம் வெளியே கசிந்து விட்டது என்கி றார்கள்.



இந்த வருடம் நடந்த சம்பவம் குறித்து டி.என்.பி.எஸ்.சி. அலுவலக வட்டாரத்தில் விசாரித்தோம். ''எங்களைப் பொறுத்தவரை, நிஜ வினாத்தாளை எடுத்து, யாரோ மற்றவர்களுக்குப் படித்துக் காட்டியிருக்கிறார்கள். அதைக்கேட்டு, தப்பும் தவறுமாக எழுதியுள்ளனர். வினாக்களுக்கான பதில்களிலும் தவறுகள் இருக்கின்றன.


இதையெல்லாம் தவறு செய்தவர்களிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்களில் இருந்து அறிய முடிகிறது. திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி, நாமக்கல், ஆயக்குடி ஆகிய இடங் களில் உள்ள சில சென்டர்களில் படித்துத் தேர்வு எழுதி யவர்கள் இதுவரை 100% வேலையில் சேர்ந்திருக்கிறார்கள். இவை எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதையெல்லாம் ரகசியமாக சர்வே செய்து வருகிறோம்'' என்றனர்.


http://www.thehindu.com/multimedia/dynamic/01072/TH-EXAM_1072396f.jpg

லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி களிடம் பேசியபோது, ''பயங்கரமான நெட்வொர்க் அமைத்து வேட்டை நடத்தி இருக்கிறார்கள். இதை நிச்சயம் லோக்கல் போலீஸாரால் டீல் செய்ய முடியாது. முன்னர் நாங்கள் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வீடுகளில் சோதனை நடத்தியபோது பல்வேறு ஆதாரங்களைக் கைப்பற்றினோம்.


மேற்கொண்டு விசார¬ணையைத் தொடர முடியாமல் தடை வாங்கி விட்டனர். அதனால், தமிழக அரசு உடனே தலையிட்டு எங்களுக்கு இருக்கும் தடையை உடைத் தால், திடுக்கிடும் பல விவரங்களைக் கொண்டு வருவோம். இப்போதைய வினாத்தாள் லீக்கின் ஆணிவேர் எங்கே இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது என்பதால் வேறு வழியின்றி வேடிக்கை பார்க்கிறோம்'' என்றனர் வருத்தத்துடன்.



இந்தச் சூழலில் கடந்த வருடம் குரூப் 2 தேர்வு எழுதித் தோற்றுப் போன, சென்னையைச் சேர்ந்த  போலீஸ் அதிகாரி ஒருவரின் மகன், நம்மைத் தொடர்பு கொண்டு பேசினார்.



''கடந்த ஆண்டு குரூப் 2 தேர்வுக்காக நான் மெனக்கெட்டுப் படித்து எழுதினேன். அப்போது மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த சிலர் என்னிடம் வந்து, 'கஷ்டப்பட்டுப் படிச்சா, வேலை கிடைக்காது. எங்களைக் கவனி. அப்பத்தான் உனக்கு வேலை கிடைக்கும்' என்று என்னிடம் சொன்னார்கள். வினாத்தாள் முன்கூட்டியே வாங்கித் தருவதாகப் பேரம் பேசியவர்கள், மூன்று லட்சம் கேட்டனர். அந்த அளவுக்கு வசதி இல்லை என்பதைவிட, குறுக்குவழியில் போக விரும்பாமல் நோ சொல்லி விட்டேன்.


ஆனால், என்னை அணுகிய அதே நபர், தேர்வில் மிகஅதிக மதிப்பெண்கள் பெற்று அரசுப்பணியில் சேர்ந்துவிட்டார். அவருக்கு வேண்டப்பட்ட பலரும் அதிக மதிப்பெண்கள் எடுத்து அரசுப் பதவிகளைப் பிடித்து விட்டனர். குறுக்கு வழியில் பதவியைப் பிடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கொதித்தார்.



என்ன செய்யப்போகிறது அரசு?


  நன்றி - ஜு வி 



http://i.ytimg.com/vi/utTdVEjTb9E/0.jpg

Sunday, August 19, 2012

சென்னை ஈ சி ஆர் ரோடு NH 47 ஆ? NH 143?யா?

http://www.ecrbeachhouse.com/images/chennai-beachhouseecr.jpgடான்ஸுக்கு கூட்டிட்டு வந்து உடான்ஸ் பண்ணச் சொல்றாங்க!


ஈ.சி.ஆர். பார்ட்டி... மைனர் பொண்ணு!



விபசாரத்தில் பெண்களைத் தள்ளுவதற்காக புதுசு புதுசாகத்​தான் யோசிக்கிறார்கள்.அப்படிக் கையாளப்பட்ட ஒரு டெக்னிக் அம்பலமாகவே, 11 புரோக்கர்களும், 23 பெண்களும் போலீஸாரிடம் சிக்கி இருக்​கிறார்கள்.



சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் அருகே சுதந்திர தினத்துக்கு முன் தினம் இரவு, ஒரு சொகுசுப் பேருந்து நின்றது. பேருந்துக்கு வெளியே சில பெண்கள் கூச்சல் போட்டுக் கொண்டிருக்க... அந்த வழி யாகச் சென்ற ஒருவர் போலீஸுக்குத் தகவல் தட்டிவிட்டார்.
 போலீஸார் ஸ்பாட்டுக்கு வந்ததும், ''இந்த ஆளு எங்களை டான்ஸ் ஆடினா போதும்னு கூட்டியாந்துட்டு, இப்போ வேற மாதிரி இருக்கச் சொல்றான் சார்'' என்று பெண்கள் குற்றம் சாட்டினர். 'ஆஹா... இது வேற விவகாரம்’ என்று உஷாரான போலீஸ், உடனே பஸ்ஸில் இருந்த பெண்களை மயிலாப்பூர் அரசு காப்பகத்துக்கு அனுப்பினர். பிரச்னை செய்த புரோக்கர்கள் 11 பேரை ரிமாண்ட் செய்து விட்டனர்.


http://images03.olx.in/ui/11/06/41/1295810330_160350541_1-Farm-House-for-Daily-Rent-in-ECR-Chennai-ECREast-Coast-Road.jpg

காப்பகத்துக்கு அனுப்புவதற்கு முன், அந்தப் பெண்களில் ஒருவரிடம் பேசினோம். ''என் பேரு சந்தியா. எனக்கு டான்ஸ் நல்லா ஆட வரும். சினிமாவுல முயற்சி செஞ்சேன். பெருசா வாய்ப்பு கிடைக்கலை. அதனால, ஹோட்டல்ல டான்ஸ் ஆடுறேன். நுங்கம்பாக்கத்தில் இருக்குற ஒரு ஸ்டார் ஹோட்டல்ல வெள்ளி, சனி, ஞாயிறு மூணு நாள் மட்டும் டான்ஸ் ஆடப் போவேன். ராத்திரி 9 மணிக்கு ஆரம்பிச்சா 2 மணி வரைக்கும் ஆடுவேன். டிப்ஸ் எல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு 2,000 ரூபா கிடைக்கும். சில பேர் டான்ஸ் முடிஞ்சதும் ரூமுக்குப் போகலாம்னு வம்பு பண்ணிக் கூப்பிடுவாங்க. அவங்களை சமாளிக்குறதுக்குள்ள தாவு தீர்ந்துடும்.




போன வாரம் எங்க ஹோட்டலுக்கு அன்​சாரினு ஒரு புரோக்கர் வந்தார். 'ஈ.சி.ஆர். ரோட்டுல இருக்கிற பண்ணை வீட்டுல வெளிநாட்டுக்காரங்க விருந்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க. 25 பேரு அந்த விருந்துல கலந்துக்கப் போறாங்க. அங்கே டான்ஸ் ஆடணும். நிறையத் துட்டு கிடைக்கும்’னு சொன்னார். என்கூட டான்ஸ் ஆடுற பொண்ணுங்க நாலு பேரு இருக்காங்க. அவங்ககிட்டேயும் விஷயத்தைச் சொல்லி, நாங்களே 13 பேரை ரெடி பண்ணிட்டோம். எனக்கு வீடு வடபழனி பக்கத்தில் இருக்கு. 'ராத்திரி 9 மணிக்கு பஸ் வரும் ரெடியா இருங்க’னு அன்சாரி எனக்குப் போன் பண்ணிச் சொன்னார். நாங்க எல்லோரும் வடபழனியில் நின்னுட்டு இருந்தோம். ஏசி பஸ் வந்து எங்களை ஏத்திக்கிட்டு கிளம்புச்சு.




பஸ்ல போகும் போது, அன்சாரி என்கிட்ட வந்து, 'ஃபாரீன்ல இருந்து வர்றவங்களுக்கு தமிழ்நாட்டுப் பொண்ணுங்கன்னா ரொம்பப் பிடிக்கும். டான்ஸ் முடிஞ்சதும் அவங்க ஆசைப்படுற மாதிரி நடந்துக்கோங்க. பணத்தைப் பத்தி கவலைப்பட வேண்டாம். எவ்வளவு வேணும்னாலும் கொடுப்பாங்க’னு சொல்லவும் எனக்கு பக்குன்னு ஆகிடுச்சி. என் கூட வந்த மத்த பொண்ணுங்ககிட்டயும், அன்சாரி கூட வந்த ஆளுங்க இதே மாதிரி பேசினாங்க. உடனே, எல்லா பொண்ணுங்களும் கத்திக் கூச்சல் போட்டு வண்டியை நிறுத்திட்டோம். அதுக்குள்ள போலீஸ் வந்துட்டாங்க...'' என்று நடந்த சம்பவத்தை விளக்கினார்.



http://www.southdreamz.com/wp-content/uploads/2010/11/Lohas-Hotel-New-Well-Being-Spa-Resort-Clark.jpg

''ஈ.சி.ஆர். ரோட்டுல மாயாஜால் தாண்​டிட்டா நிறைய கெஸ்ட் ஹவுஸ் இருக்கின்றன. அங்கதான் இது மாதிரி பார்ட்டிக்கு ஏற்பாடு பண்றாங்க. வெளிநாட்டில் இருந்து வரும் சில பார்ட்டிகளைத் திருப்திபடுத்த சில நிறுவனங்கள் இது மாதிரியான பார்ட் டிகளுக்கு ஏற்பாடு பண்ணுவாங்க. வெளி நாட்டுக்காரங்க, 'ப்ரஷ்ஷா’ வேணும்னு கேட்பாங்க. 
அதுக்காகத்தான் டான்ஸ் அது இதுன்னு பொய் சொல்லி பொண்ணுங்களை ஏமாத்திக் கூட்டிட்டுப் போவாங்க. அங்கே வச்சுப் பணத்தைக் காட்டினா சிலர் சைலன்ட் ஆயிடுவாங்க. பிடிக்காதவங்களை டான்ஸ் முடிஞ்சதும் அனுப்பி வைச்சிடுவாங்க. காசுக்காக சில ஸ்கூல் பொண்ணுங்க கூட இந்த பார்ட்டிக்கு வந்து போறாங்க. இந்த மாதிரி பார்ட்டிகளை அரேஞ்ச் பண்றதுக்காகவே நிறைய புரோக்கர்கள் இருக்காங்க'' என்று நம்மிடம் சொன்னார் ஈ.சி.ஆர். ரோட்டில் உள்ள ரிசார்ட்ஸ் ஒன்றில் பணிபுரியும் மேனேஜர் ஒருவர்.




இந்த வழக்குத் தொடர்பாக விசாரணை நடத்தி இருக்கும் ஐ.ஜி. மஞ்சுநாதாவிடம் பேசினோம். ''மீட்கப்பட்ட பெண்களில் ஒருவர் மைனர். ஏதாவது ஸ்கூல் பொண்​ணாக இருக்குமோன்னு நினைச்சோம். விசாரிச்சபோது அந்தப் பொண்ணு வெளியூரில் இருந்து சென்னைக்கு வந்து, இங்கே ஒரு வீட்டில் வேலை செய்வது தெரியவந்தது. 
பார்ட்டியில டான்ஸ் ஆட ணும்னு சொல்லித்தான் அந்த பொண்ணுங்க 23 பேரையும் கூட்டிட்டுப் போயிருக்காங்க. இருந்தாலும் பிடிபட்ட புரோக்கர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. புரோக்கர்களிலும் பெண்கள்தான் அதிகம். ஈ.சி.ஆர். பகுதியில் இதுபோல பார்ட்​டிகள் நடப்பது தெரிய வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்'' என்றார் உறுதியாக.



இருட்டுக்குள் இன்னும் என்னனென்ன  நடக்கிறதோ...!
http://mithunonthe.net/wp-content/uploads/2010/02/mamallapuram-chennai-ecr.jpg

thanx - ju vi

Thursday, April 05, 2012

சூரிய நகரம் - சினிமா விமர்சனம்

http://www.mysixer.com/wp-content/gallery/suriya-nagaram-gallery/suriya-nagaram.jpg

யூ சர்ட்டிஃபிகேட் வாங்கியாச்சுங்கறதை சிம்பாலிக்கா சொல்ற மாதிரி படம் பூரா ஹீரோயினுக்கு யு நெக் ஜாக்கெட், நல்ல வேளை பேக் யூ நெக்..ஹீரோயின் புதுமுகம்.. லட்சணமான, லட்சுமிகரமான முக அமைப்பு. படம் பூரா பாந்தமா பாவாடை தாவணில  சொக்க வைக்கிறார்.. ஆனா ஒரு முழுப்படத்தை ஹீரோயின் மட்டுமே காப்பாத்த முடியாதே?


இதுல செம காமெடியான சீன் என்னான்னா வேலை வெட்டியே இல்லாத ஹீரோ ரோட்ல நிக்கறப்ப ஒரு கார் அங்கே வந்து நிக்குது.. கார்க்கதவு வழியா ஒரே ஒரு கை மட்டும் வெளீல வந்து பூ வாங்குது.. பிக்காலிப்பையன் இதுவரை பொம்பளை கையையே பார்த்தது இல்லை போல..  உடனே அந்த காரை ஃபாலோ பண்ணி கண்டு பிடிச்சு ஹீரோயினை பார்த்து நெக்ஸ்ட் செகண்ட்டே ஐ லவ் யூ சொல்லிடறான்..

 அதைக்கூட ஜீரணீச்சுக்கலாம்.. கோயில் வாசல்ல உக்காந்து பிச்சை எடுக்கற ஆளுக்கு அவ போட்ட ஒரு ரூபா காசை 100 ரூபா குடுத்து வாங்கறான். அவனோட இந்த வெட்டி வேலையை பார்த்து நமக்கு ஆத்திரம் வருது.. ஆனா ஹீரோயினுக்கு காதல் வருது

 ஹீரோயின் அவனுக்கும் மேல.. ஆம்பளையையே பார்த்ததில்லை போல. உடனே அவளும் ஈ ஈ ந்னு பல்லை காட்டி லவ்க்கு ஓக்கே சொல்றா. 2 தத்திங்களும் ஜாலியா டூயட் பாடி லவ்வுதுங்க. நிற்க..


http://lh6.ggpht.com/-P2zUlNNPNHE/TyKR0fOWNvI/AAAAAAABB7Y/4AmwzaAf6H4/meera%252520nandan%252520cute%252520pic%25255B3%25255D.jpg

 ஹீரோயின் அப்பா தான் வில்லன்.. டைரக்டர் ஆர் வி உதய குமார்.. அவர் என்னமோ விஜய குமார்க்கு வாரிசு மாதிரி ஜாதி வெறி பிடிச்ச பெரிய மனுஷனா வந்து லவ்வை எதிர்க்கறார்.

வேற மாப்ளை பொண்ணுக்கு பார்க்கறார்.. இப்போ தான் அடுத்த காமெடி.. ஹீரோவுக்கு தில் இருந்தா ஹீரோயினை கூட்டிட்டு ஓடனும்.. தில் இல்லைன்னா கிராமத்தை விட்டே அவர் மட்டும் தனியா ஓடனும்.. அவர் 2ம் பண்ணலை.. இன்னா பண்றார்னா சீப்பை ஒளிச்சு வெச்சா கல்யாணம் நின்னுடும்கற மாதிரி மாப்ளையை கொலை பண்ணிடறார்..

 திரைக்கதையில் செம கேனத்தனம் இதுதான். ஹீரோ புள்ள பூச்சி மாதிரி இருந்துக்கிட்டு எதுக்கு சம்பந்தமே இல்லாம அந்தாளை கொல்லனும்?அப்படியே ஹீரோ அந்த மாப்ளையை கொலை பண்ணனும்னா வில்லன் ஹீரோயினை ரேப் பண்ற மாதிரி காட்டி இருந்தா சீனுக்கு சீனும் ஆச்சு. லாஜிக்கு  லாஜிக்கும் ஆச்சுன்னா அமைதியா இருந்துருப்போம்..


ஹீரோ ஜெயில்ல . ஹீரோயின் எத்தனை வருஷம் ஆனாலும் ஹீரோவைத்தான் கட்டுவேன்னு ஒரே அடம்..

 வில்லன் ஆர் வி உதய குமார்க்கும் பட டைரக்டர்க்கும் ஏதோ சண்டை போல. அவசர அவசரமா திரைக்கதைக்கு சம்பந்தமே இல்லாம வில்லனை பாதிலயே ஒரு கோஷ்டி தாதா சண்டைல கொலை பண்ணிடறார்.

ஹீரோயினுக்கு ஒரு தம்பி.. அவன் 12  வயசுல இருந்து 23 வயசு இளைஞன் ஆகறவரை ஹீரோ ஜெயில்லயே களி சாப்பிட்டு இருக்கான்..

இனிமே என்ன ஆகுதுங்கறதை யாரும் பார்க்கவே வேணாம்.. ஹி ஹி

http://middaytimes.com/wp-content/uploads/2012/01/meera-nandan-suriya-nagaram00-1-640x424.jpg
படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. இவர் தான் எங்க ஊர் புரூஸ்லீ

 என்னது பெருச்சாளியா?


2. டேய்.. எதுக்காக நீ இப்போ சிரசாசனம் பண்றே?

 நம்ம சாதி சனத்தை காப்பாத்த தலைகீழா நின்னாவது பாடுபடனும்னு நீங்கதானே சொன்னீங்க?

3.  கண் உறுத்துது


என்ன விழுந்துச்சு?

 ம். நயன் தாரா

4.  குத்து விளக்கு மாதிரி ஃபிகர் வேணும்னா கோயில்ல தான் அதை பிடிக்கனும்.


5. ஏண்டி அவனை லவ் பண்ணலை?

 போடி. அவன் கிட்டே ஒரு கார், பைக் எதுவும் இல்லை.. எல்லா இடங்களுக்கும் நடந்து தான் போறான்.. அவனை லவ் பண்ணுனா பாத யாத்திரை தான் போகனும்.

6.  புள்ளையை பெத்துப்போடச்சொன்னா எமனைப்பெத்துப்போட்டிருக்கு பக்கிக. இவனால என்னென்ன நடக்கப்போகுதோ.




7.  நீ ஐ ஐ டி ஃபெயிலா?

 ஆமா.. எப்படி கண்டு பிடிச்சே?

 பழைய கவிதையா சொல்லி அறுக்கறியே?

http://3.bp.blogspot.com/-ixJsAdQweQc/TgjeIj4r3-I/AAAAAAAABZo/TD0S187f8ag/s1600/MeeraChandhan281210_014.jpg


8. அவங்க மாலையை போட்டுட்டாங்க.. வில்லன் ஆளூங்க அடுத்து உங்களை போடப்போறாங்க./.

9. நமக்கு நாமளே தீயை வைக்கற மாதிரி இருக்கு.


10.  உன் கல்யாண பத்திரிக்கையை பார்த்தேனே?

 அச்சடிச்ச பேப்பரை நம்பறே.. உசுரோட இருக்கற என்னை நம்ப மாட்டேங்கறே..


11. நான் ஒரு மரத்தடி ஜோசியர்ங்க.. யார் யார் கையையோ பிடிச்சு பலன் சொன்ன எனக்கு என் கையை பிடிச்சவ பற்றி தெரியாம போச்சு.. அவ கையை எவனோ பிடிச்சு கூட்டிட்டு போய்ட்டான்.. அவனைப்போட்டுத்தள்ளிட்டு ஜெயிலுக்கு வந்து இருக்கேன்..


12. இந்த ரேகைப்படி நாம 2 பேரும் 1 சேர முடியாது டியர்


 அப்போ இந்த ரேகையே வேணாம்

 அடிப்பாவி.. எதுக்கு கத்தியால கையை கிழிச்சே?

உன்னையும், என்னையும் சேர்க்காத இந்தக்கை ரேகை எதுக்கு?

13.  ஒரு ஆம்பளை கடைசி வரை தனியா வாழ்ந்துடலாம், ஆனா ஒரு பொம்பளையால அப்படி வாழ முடியாது..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4J-eSFH4kgKzyf1tOC6RyyhBjI1gkchleXK9WglLnGmqjjb6I5bZPIvZLkM5jUL1XfsO9GhccgDFbpV1pia18OZ2KfksV49N1KJ3lZ5tonEt7PUkEIYjeioBXmuwGNLmkEFF7SzZj9yQ/s1600/oridathoru-postman-22.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1.  படத்துல காமெடியனாவும், ஹீரோ ஃபிரண்டாவும் வர்றவர் கோயிலுக்குள்ள லுங்கியோட வர்றாரே? எந்த ஹிந்துக்கோயில்ல அலோ பண்றாங்க?


2. ஹீரோயின் ஊர்லயே பெரிய பணக்காரர் வீட்டுப்பொண்ணு.. எதுக்கு சம்பந்தமே இல்லாம ஹீரோ வேலை செய்யற ஒர்க்‌ஷாப்க்கு வருது?அதுவும் நடந்து வருது?

3. வில்லனோட ஆட்கள்ல ஒருத்தன் ஹீரோயினை பார்த்துடறான்.. உடனே கோயில் திருவிழாவுல விற்கற முகமூடியை ஹீரோயின்  மாட்டிக்கறா.. ஃபேஸ் மட்டும் தானே அது மறைக்குது? 18 வருஷமா வேலை செஞ்ச அடியாளுக்கு அந்த ஹீரோயின் உடம்பு ஞாபகம் இருக்காதா?அல்லது டவுட்னா முகமூடியை கழட்டி பார்க்க மாட்டானா?

4.  ஹீரோ ஹீரோயின் 2 பேரும் மெக்கானிக் ஷாப்ல சைக்கிள் டியூப்பை மாலையா மாத்தி கல்யாணம் பண்ணீக்கறது செம காமெடி.. ஏன் சார் ஏன்?

5.  சின்னப்பையன் அதாவது ஹீரோயின் தம்பி வேணும்னே கீழே விழுந்து காயத்தை வாங்கி நிச்சய தார்த்தத்தை நிறுத்துறது எல்லாம் ரொம்ப ஓவரு..

6.  ஹீரோ, ஹீரோயின் 2 பேரும் ஊரை விட்டு ஓடிப்போக கிளம்பிட்டாங்க.. 2 பேரும் வெறுங்கையை வீசுட்டு வர்றாங்க? ஒரு பேக் கூட இல்லாம கிளம்ப அவங்க என்ன பேக்கா?

7. கொலைக்குற்றவாளி எப்படி பிரைவேட் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகறார்? அவருக்கு செக்யூரிட்டியாய் நியமிக்கப்படும் 2 கான்ஸ்டபிள்ஸ்-ம் ஒரே டைமில் டீ குடிக்க வெளீல போறாங்களே. அது எப்படி?

8. ரிலீஸ் ஆகி வர்ற ஹீரோவை வரவேற்க ஹீரோயின் தம்பியோ. ஹீரோவின் நண்பர்கள் யாரும் போகலை.. ஆனா வில்லன்கள்க்கு மட்டும் தகவல் தெரிஞ்சு போறாங்களே?

9. கிராமம் பூரா காதலுக்கு எதிர்ப்புன்னு தெரிஞ்சும் ஏன் அந்த ஊர்க்கோயில்ல மேரேஜ் பண்ண லூசு த்தனமா முடிவு பண்றாங்க? ஊரை விட்டு ஓட வேண்டியதுதானே?

10 . க்ளைமாக்ஸ் மகா அபத்தம்.. ஊர்மக்களிடம் இருந்து காதல் ஜோடியை காப்பாற்ற ஹீரோயினின் தம்பியே அந்த ஜோடியை வெட்டி கொலை செய்து கருணைக்கொலை செய்யறார்.. அடங்கோ


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3VpTxSMb9BlA5pTn7jWaofrqthXaVqlxICT8SehQKqnVpxlj54mR7D-NfTaQSN7sEHm_cxmzybHhJMxKh1nPZVMD4O6LHPQtsF3-5vUK8XHGpYrqZf9ydM3Z8VQbEZz8w0yEcEOnw0viE/s1600/Meera+Nandan+at+prithviraj+marriage+reception+_6_.jpg

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் -  35

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்

 சி.பி கமெண்ட் - அய்யய்யோ வேணாண்டா வேணாண்டா இதுல ஒண்ணுமே இல்லை.. படம் போட்ட நொடில இருந்து ஒரே தொல்லை.  


 ஈரோடு சங்கீதா தியேட்டர்ல படம் பார்த்தேன்.. சங்கூதற வயசுல சங்கீதா கேட்குதா? ராஸ்கல்ஸ்

 டிஸ்கி - டைட்டிலுக்கும் படத்துக்கும் சம்பந்தம் இல்லை.. சூரியன் ஹிட், சூரிய வம்சம் ஹிட்.. அந்த செண்ட்டிமெண்ட்ல வெச்சிருப்பார் போல.. ஆனானப்பட்ட உதய சூரியனுக்கே இப்போ நேரம் சரி இல்லைன்னு அவருக்கு தெரியல போல..

Wednesday, April 04, 2012

ஒத்தை வீடு - பெண் குழந்தை பெற்றவர்களுக்கான பாடம் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2SR34QdcyeyiBYUQqo79aqMfGIKbjta9uzNrqUVM0S1wOGDx_IwwvyB4foUP1Z0x0_ds32BWm1uMuxLbRUJyxx395JwK_4ct9130ffCHQp-Lbzqt-QTkVSLYI2Npw1Rmi76siolX0fDA/s1600/Oththaveedu.jpg 

கூட இருக்கறவங்களே குழி பறிக்கற மாதிரி நம்ம நெருங்கிய சொந்தங்களே சந்தர்ப்பங்களுக்கு காத்திருக்கும் கழுகுகளாய் பெண்ணை சீரழிக்க திட்டம் போடறாங்க.. நாம கவனமா நம்ம பெண் குழந்தைகளை கண்காணிச்சுக்கனும், பாதுகாப்பா பார்த்துக்கனும்.. இது தான் படத்தோட ஒன் லைன்.. இந்த கால கட்டத்துல மக்களுக்குத்தேவையான  சமூக விழிப்புணர்வு படம் தான்.. 

ஹீரோவோட ஃபேமிலில அம்மா, ஒரு தங்கச்சி.. ஹீரோவோட தாய் மாமன் அதாவது அம்மாவோடதம்பி  ஒர்ஸ்ட்  கலெக்டர் ஆஃப் லேடீஸ் அதாவது மோசமான பொம்பள பொறுக்கி.. வீட்ல ஆள் இல்லாதப்ப ஹீரோவோட  தங்கையை அதாவது தன் சொந்த  அக்கா பொண்ணையே  பாலியல் பலாத்காரம் பண்ன ட்ரை பண்றாரு.. 

 அந்த அதிர்ச்சில அந்தப்பொண்ணு உறைஞ்சு போய்க்கிடக்கு.. மேட்டர் நடக்கலை.. தப்பிச்சுடுது.. ஆனாலும் அந்த பாதிப்பு திக் பிரமை அடைஞ்ச மாதிரி ஆக்கிடுது.. வெளில சொல்லவும் முடில.. தன் மகளூக்கு பேய் பிடிச்சுடுச்சு.. சாமி வந்து இறங்கிடுச்சுன்னு அவங்கம்மா கோயில் கோயிலா சுத்தறாங்க.. 

ஹீரோவோட முறைப்பொண்ணு தான் ஹீரோயின்.. அந்த வில்லனோட பொண்ணு.. இவங்க 2 பேரும் லவ்வறாங்க.. திடீர்னு ஹீரோ தங்கச்சி செத்துடுது.. 

தங்கச்சி சாவுக்கு யார் காரணம்? வில்லன் என்ன ஆனான்? ஹீரோ லவ் நிறைவேச்சா? என்பது தான் மிச்ச கதை.. 


http://www.cinespot.net/gallery/d/646897-1/Oththa+Veedu+Photos+_7_.jpg

உண்மையில் எங்கோ நடந்த சம்பவம் போல.. திரைக்கதை நகர்த்தப்பட்ட விதம் அதைத்தான் சொல்லுது.. இடை வேளை வரை கதை சரியான திசைல தான் பயணிக்குது.. ஆனா ஹீரோ தங்கை இறந்த பின் இயக்குநருக்கு ஒரு குழப்பம்.. படத்தை எப்படி கொண்டு போறதுன்னு... 

மன்னித்தல் தான் சிறந்த குணம்.. பழசை பழைய பகையை எல்லாம் மறக்கனும் அப்டிங்கற கருத்தை சொல்ல வந்திருக்கார்.. ஆனா ராஜ பக்சே செஞ்ச கொடுமையை  மன்னிச்சு மறக்க முடியுமா? அதனால வில்லனை மன்னிச்சு விட்டுடறதை ஜீரணிக்க முடியலை.. கடைசி வரை ஹீரோ அல்லது ஹீரோயினிக்கு வில்லனோட சுய ரூபம் தெரியாமயே இருக்கு என்பதையும் ஏத்துக்க முடியல.. 

ஹீரோ ஆழ்கடல் நீச்சல் வீரர் திலீப் குமார்.. ஓக்கே ரகம்.. அவர் ஏன் படம் பூரா தாடியோட வர்றார்?லவ் ஃபெயிலியரும் இல்லை.. டூயட் காட்சிகளில் இன்னும் முகத்தில் ரொமான்ஸ் கொண்டு வரனும்.. 

 ஹீரோயின் பளிச் அக்மார்க் வில்லேஜ் கேர்ள்.. இந்த இடத்துல ஒரு கேள்வி.. வடிவுக்கரசி கேரக்டர்  தவிர படத்துல வர்ற எல்லா லேடீஸ் கேரக்டரும் லிப்ஸ்டிக் போட்டிருக்காங்களே ஏன்? ஹீரோயின், ஹீரோ தங்கச்சி போட்டிருந்தாக்கூட ஓக்கே வில்லனோட மனைவியா வர்ற  40 வயசு லேடியும் லிப்ஸ்டிக் .. எந்த கிராமத்துல அப்படி இருக்கு? 

ஹீரோவின் தங்கை கேரக்டர் சோனியா கர்வால் மாதிரி எப்பவும் சோகத்தை கண்களில் தேக்கி வைக்கும் முகம்.. நல்லா பண்ணி இருக்கார்.. 

வில்லன் நடிப்பு கன கச்சிதம்.. வடிவுக்கரசி நடிப்பில் அனுபவம் தென்படுது.. 

http://chennai365.com/wp-content/uploads/movies/Oththa-Veedu/Oththa-Veedu-Movie-Stills-050.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்


1.  வில்லன் - ஏம்மா என்னைப்பார்த்ததும் பட்டுன்னு எந்திரிச்சுட்டே..?நீ பாட்டுக்கு சாமான் கழுவு.. மரியாதை மனசுல இருந்தா போதும்.. 

2. எல்லா அம்மாக்களும் தன் புள்ளைங்க தன் பக்கத்துல இருக்கனும்னு தான் ஆசைப்படுவாங்க.. 

3.  ஒரு வேப்ப மரத்தையே புடுங்கி சாப்பிட்ட மாதிரி வாய் கசக்குது  ( ஆஹா.. என்ன ஒரு உவமானம்.. சபாஷ் வசனகர்த்தா)

4.  கண்ணுக்கு முன்னால இருக்கற ஆளை கட்டுறதுதான் பெஸ்ட்.. ஆள் எப்படி? என்னென்ன நல்ல பழக்கம் இருக்கு.. எப்படிப்பட்ட ஆள்னு தெரிஞ்சுக்கலாம்.. முன்னே பின்னே  பார்த்தே இராத ஆளை கட்டறது ரிஸ்க்.. 

5. வயசானாலும் மாமனுக்கு நக்கல் குறையலை..

 அது என் உடன் பிறந்தது.. 


 http://123tamilgallery.com/images/2011/07/Oththa-Veedu-Movie-Launch-834.jpg


6. சாமி எப்படிங்க மனுஷனை அடிக்கும்? அது நம்மளை காப்பாத்தும்.. 

7. பெண்களோட மனசு ரொம்ப சாஃப்ட்.. ஒரு சின்ன டம்ளர் விழுந்தாக்கூட அதிர்ந்துடுது.. 

8. இந்த உலகத்துல மாத்த முடியாதது எதுவுமே இல்லை.. அது ஆண் பால்., பெண் பால் அனைவருக்கும் பொது.. 

9. வாழ்றது கொஞ்ச நாள்.. அதுல போய் நான் பெரியவனா? நீ பெரியவனா? என்ர ஈகோ எதுக்கு?

10. மன்னிக்கத்தெரிஞ்சவன் தான் மனுஷன்.. முரண்பாடுங்கறது மனுஷனோட வாழ்க்கைல வந்துட்டே தான் இருக்கும்.. 


11. பத்து விரல்ல பாடுபடறோம் .. 5 விரல்ல சாப்பிடறோம்

http://g.ahan.in/tamil/Oththa%20Veedu/Oththa%20Veedu%20(19).jpg
 இயக்குநர் மற்றும் சக பதிவர் நண்பர் பாலு மலர் வண்னன் அவர்களிடம் சில கேள்விகள்


1.  கிராமங்களில் உள்ள பழக்கப்படி பெரிய  காரியத்துக்குப்போய்ட்டு வர்றவங்க அதாவது இழவு வீட்டில் பொய் துக்கம் விசாரிச்சுட்டு வர்றவங்க ரிட்டர்ன் வர்றப்ப எதுவும்  கடைலயோ, நண்பர்கள் உறவினர்கள் வீட்லயோ வாங்கிட்டு வரக்கூடாது.. வெறும் கைல தான் வரனும்னு ஒரு சாங்கியம் இருக்கு.. ஆனா ஹீரோவின் அம்மா வடிவுக்கரசி மருமகளுக்கு  பலகாரம் எல்லாம் வாங்கிட்டு வர்றார்..


2.  கிராமங்களில் வயசுக்கு வந்த பொண்ணை தனியா விட்டுட்டு போக மாட்டாங்க.. பக்கத்து வீட்டில் ஏதாவது வயசான பாட்டியை கர்டியனா விட்டுட்டு தான் போவாங்க.. ஆனா வடிவுக்கரசி அதெல்லாம் கண்டுக்கவே இல்லை.. 

3. வில்லன் வேலைக்காரியிடம் ஓப்பனிங்க் ஷாட்லயே ஜொள் விடறார்.. அவரோட சபல குணத்தை பயன் படுத்தி அந்த பணிப்பெண்ணும்  அப்பப்ப பணத்தை கறந்துக்குது.. ஆனா மேட்டர் மட்டும் நடக்கலை.. ஓக்கே.. ஆனா செகண்ட் ஆஃப்ல ஹீரோ ஒளிஞ்சு இருந்து பார்க்கும்போது வில்லன் வேலைக்காரியை கட்டிப்பிடிக்கறப்ப அது என்னமோ  பதி விரதை மாதிரி சீன் போடுதே ஏன்?


4. அண்ணன் ஒரு ரவுடி.. மேட்டரை வெளீல சொன்னா அவன் மாமாவை கொலை பண்ணி ஜெயிலுக்கு போயிடுவான்கறதால மறைச்சாச்சு ஓக்கே ஆனா  ஹீரோயின் கிட்டே கூட ஏன் சொல்லலை? அவ கிட்டே சொல்லி அவங்கப்பாவை கண்டிக்கச்சொல்லலாம் அல்லது வில்லனின் மனைவியை அதாவது அத்தையை சந்திச்சு ஒழுங்கா இருக்கச்சொல்லுங்கன்னு சொல்லி இருக்கலாமே?

5. தனது பெண் குழந்தையிடன் சின்ன மாற்றம் வந்தாலும் ஒரு தாய் டக்னு கண்டு பிடிச்சுடுவா .. ஆனா வடிவுக்கரசிக்கு அது எல்லாம் ஒண்ணும் தெரியலை.. 

6. ஹீரோவின் தங்கைக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கு என்ற பாயிண்ட்  திரைக்கதைல யாரும் கே:ள்வி கேட்கக்கூடாது என்பதற்காகவே சாமார்த்தியமா சொன்ன மாதிரி இருக்கு.. 

7. செகண்ட் ஆஃப்ல வில்லன் வேலைக்காரியை பலாத்காரம் பண்றப்ப அந்த வீட்டில் இருக்கும் நாய் சும்மா குலைச்சுட்டுதான் இருக்கு.. கட்டி வைக்கவும் இல்லை.. ஏன் நாய் பாயவே இல்லை?

8. படம் போட்ட முதல் 26 நிமிஷங்களில் 3 பாட்டு.. ஒரு ஓப்பனிங்க் சாங்க், அப்புறம் கோயில் பாட்டு.. டூயட் பாட்டு.. ஏன்? ஏன்?

9. ஹீரோ திடீர்னு சிங்கப்பூர் போறதும் டக்னு ரிட்டர்ன் வர்றதும் செயற்கை..

10.  இடைவேளைக்குப்பின் அழுகை காட்சிகள், சோகக்காட்சிகள் அதிகம்.. கொஞ்சம் எடிட் பண்ணி இருக்கலாம்.. ஆடியன்ஸ் சோக சிச்சுவேஷன் உணர்ற அளவுக்கு இருந்தா போதும்.. போட்டு புழிஞ்சு எடுக்க தேவை இல்லை..

11. திரைக்கதைல ஆடியன்ஸ் எல்லாரும் வில்லன் எப்படி மாட்டப்போறான்? அவனுக்கு என்ன தண்டனை?ன்னு பார்க்கறப்ப அவனை மன்னிச்சு விட்றதும்.. அவருக்கு ஒரு கால் போயிடுது இயற்கையாகவே என்பது செயற்கை.. 

12. இயக்குநரோட பார்வை  எப்டி இருக்குன்னா ஹீரோ ஹீரோயின் சேர்வாங்களா? மாட்டாங்களா?ன்னு பர பரப்பை காட்டலாம்னு.. ஆனா ஆடியன்ஸ் என்ன நினைக்கறாங்கன்னா வில்லன்க்கு தண்டனை கிடைக்குமா? கிடைக்காதா?ன்னு.. 

http://chennai365.com/wp-content/uploads/movies/Oththa-Veedu/Oththa-Veedu-Movie-Stills-002.jpg


 திரைக்கதையில் சில ஆலோசனைகள் ( நண்பர் என்பதால்)


1. ஹீரோ சிங்கப்பூர் போற மாதிரி காட்டி இருக்கவே தேவை இல்லை.. ஹீரோ அருகில் இருக்கும்போது இந்த சம்பவம் நடந்த மாதிரி காட்டினால் தான் பரபரப்பு , டெம்ப்போ ஏத்த முடியும்.. 

2. ஹீரோவுக்கு வில்லன் செஞ்ச வேலைகள் தெரிஞ்சு இருக்கனும்.. கடைசி வரை தன் தங்கயை மாமா பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார் என்பதும் தன் தன் தங்கையின் சாவுக்கு மாமா தான் காரணம் என்பதும் தெரியாமல் போவதும் திரைக்கதையின் மைனஸ்.. தெரிய வந்து வில்லனை ஒரு புரட்டு புரட்டி இருக்க வேண்டும்.. 

3. வேலைக்காரியை வில்லன் ட்ரை பண்றப்ப ஹீரோ மறைஞ்சு இருந்து கல்  எடுத்து அடிக்கறார்.. அதுல டெப்த் இல்லை.. மக்களுக்கு அதாவது ஆடியன்ஸ்க்கு வில்லன் சரியான தண்டனை பெற வில்லை என்ற மன வருத்தம் கடைசி வரை இருக்கு.. 

4. இந்தக்கதைக்கு பாடல் காட்சிகளே தேவை இல்லை.. ஆடியோ சி டி மார்க்கெட்டுக்காக பாட்டு வெச்சாலும்  படத்துல குறைச்சிருக்கலாம்..


5. படத்தில் சோகம் அதிகம் என்பதால் காமெடி டிராக் வெச்சிருக்கலாம்.. 


http://g.ahan.in/tamil/Otha%20Veedu%20Movie/Otha%20Veedu%20Movie%20(46).jpg


 எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் -  ஏ  செண்ட்டர்களில் சுமாராத்தான் ஓடும்.. பி சி செண்ட்டர்களில் படத்தின் விளம்பரம் ரீச் ஆகும் விதம் பொறுத்து ஓடலாம்..

Wednesday, March 21, 2012

கூடன்குளம் - ஜெ நடத்திய நாடக காட்சிகள் - ஜூ வி கட்டுரை - ஒரு பார்வை



''உலகில் நடக்கும் வெவ்வேறு விஷயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை என்பது தானே கேயாஸ் தியரி?'' 

சி.பி - ஆமா.. பஸ் கட்டணம் ஏற்ற லேட் ஆச்சுன்னாலும் சரி.. கூடன்குளம் திறக்க லேட் பண்ணாலும் சரி.. இடைத்தேர்தல் இருக்குன்னு அர்த்தம். 

''ஒரு வழியாக கூடங்குளம் அணு மின் திட்டத்துக்குப் பச்சைக் கொடி காட்டி இருக்கிறது தமிழக அரசு. 'கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனே திறக்க வேண்டும்’ என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார் ஜெயலலிதா. இந்த விவகாரத்தில் பெரிய அரசியல் சதுரங்கமே ஆடப்பட்டிருக்கிறது. சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்த சமயத்தில் கூடங்குளம் போராட்டம் வெடிக்க ஆரம்பித்து இருந்தது. தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கத் தொடங்கிய நேரத்தில், 'கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானதுதான்’ என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து அறிக்கை வந்தது. உண்ணாவிரதத்தைக் கைவிடச் சொல்லிய அந்த அறிக்கையைக் கண்டு, போராட்டக் குழுவினர் கொதித்தார்கள். எதிர்ப்பு கடுமையாக இருந்தால், 'கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்கும் வரை அதனைத் திறக்கக் கூடாது’ என்று அடுத்த நாளே ஜெயலலிதா அறிவித்தார்.


சி.பி - பல்டி அடிக்கறது அரசியல் வாதிகளுக்கு கை வந்த கலை ஆச்சே.. என்ன.. ஜெ ரொம்ப ரேரா தான் பல்டி அடிப்பாங்க...
 

 'கூடங்குளம் பாதுகாப்பானதுதான்’ என்று ஜெயலலிதா முதலில் வெளியிட்ட அறிக்கையில் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி சிலவற்றை குறிப்பிட்டு இருந்தார். கிட்டத்தட்ட இப்போது அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு வெளியிட்ட ஜெயலலிதாவின் அறிக்கையில், அதனை அப்படியே வழிமொழிந்திருந்தார். மிகமிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது அறிக்கையை அவரே ஜெராக்ஸ் எடுத்து ஒப்புக்கொண்டு இருக் கிறார்!''

''கூடங்குளத்தைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் ஆரம்பத்தில் இருந்தே ஜெயலலிதா உறுதியாகத்தான் இருந்தார். தீவிரவாதத் தடுப்பு மையம், பட்ஜெட், பெட்ரோல் விலை உயர்வு, ஈழத் தமிழர்கள் விவகாரம், தமிழக அரசுக்கு போதிய நிதி அளிக்கவில்லை என்று மத்திய அரசோடு பல விஷயங் களில் முரண்பட்டார். இவை அனைத்துக்கும் வெளிப்படையாகவே அறிக்கையும்விட்டார். ஆனால்,  கூடங்குளம் விவகாரத்தில் மட்டும் வாய் திறக்காமல் இருந்தார். 'கூடங்குளம் திட்டம் செயல்படுத்தத் தகுதி ஆனதுதான். ஆனால், அந்தப் பகுதி மக்கள் எதிர்க்கும்போது, அவர்களது பேச்சுக்கு செவிமடுக்கத்தானே வேண்டும்’ என்பது ஆரம்பத்தில் அவரது நிலைப்பாடாக இருந்தது.


 சி.பி - அதெல்லாம் சும்மா.. ஆரம்பத்துலயே அவங்க முடிவு எடுத்திருப்பாங்க.. ஆனா தேர்தல், இடைத்தேர்தல்க்காக  வெயிட்டிங்க்..இப்போ எல்லாம் முடிஞ்சது.. அதான் சுய ரூபம் காட்டறாங்க

  'தூத்துக்குடி ஏரியாவில் பலம் பொருந்திய மணல் மனிதர் ஒருவர் கூடங்குளம் அணு உலை வந்தால், தனது தொழில் பாதிக்கும் என்று கருதி காய்களை நகர்த்தி வருகிறார்’ என்று பெயர் குறிப்பிடாமல் தனது கட்சிப் பொதுக்குழுவில் சொன்னார் விஜயகாந்த்.


சி.பி - இதென்ன புதுக்கரடி?  கேப்டன் மப்புல இருக்கறப்ப சொன்னதா? திராணியோட சொன்னதா?


 தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான 'முரசொலி’யிலும் இதுபற்றி வெளிப்படையாகவே பெட்டிச் செய்தி வெளியானது. 'அந்த மணல் மனிதர் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களின் தேர்தல் செலவைப் பார்த்துக்கொண்டவர். அதனால்தான், கூடங்குளத்தை வராமல் ஜெயலலிதா பார்த்துக்கொண்டார்’ என்று எல்லாம் செய்திகளை றெக்கை கட்டின.''


சி.பி - அடப்பாவிகளா?வில்லனா இருந்தாக்கூட மறைமுகமா மக்களுக்கு அந்தாள் நல்லதுதான்யா  பண்ணி இருக்கான்.. ஏதோ கொஞ்ச நாள் தள்ளீப்போட்டிருக்கார்..
''இந்த அரசியல் விமர்சனங்கள் பற்றி ஜெயலலிதா கவலைப்பட்டதைவிட மின் வெட்டுதான் அவருக்கு தீராத தலைவலி ஆனது. 'வேறு வழி இல்லை! கூடங்குளம் திறக்கப்பட்டுத்தான் ஆக வேண்டும்’ என்று முடிவுக்கு வந்தார் ஜெயலலிதா. அதிலும் அரசியல் வித்தைகளை நடத்தியதுதான் ஆச்சரியம். கூடங்குளத்தின் பாதுகாப்பு பற்றி ஆராய மாநில அரசின் சார்பில் போடப்பட்ட வல்லுனர் குழு அறிக்கை கடந்த மாதம் 28-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், அதன் மீது முடிவு எடுக்காமல் கிடப்பில் போட்டார் ஜெயலலிதா.



காரணம், சங்கரன் கோவில் இடைத்தேர்தல். கூடங்குளத்தைத் திறக்க வேண்டும் என்று, ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், 'தமிழக அரசு நியமித்த குழுவின் பரிந்துரைகளை சுட்டிக்காட்டித்தான் கூடங்குளத்தைத் திறக்க வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார். அப்படி முடிவு எடுத்திருந்தால், அந்தக் குழு அறிக்கை கொடுத்த மறுநாளே அறிவித்திருக்கலாம். ஆனால், சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்த அடுத்த நாள் இந்த முடிவை அவர் எடுத்ததற்கு அரசியல் பின்னணிதான் முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது!''


''சங்கரன்கோவில் தேர்தல் முடிந்ததும் கூடங்குளம் திறக்கப்பட்டுவிடும்என்ற நிலை அனைவரும் எதிர்பார்த்ததுதான்


''சங்கரன்கோயில் வாக்குப்பதிவு முடியும் தருவாயில், 'நாளை அமைச்சரவை கூடும்’ என்கிற அறிவிப்பு வந்தது. அப்போதே, பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. 'சங்கரன்கோவில் தேர்தலுக்கு முன்னதாக கூடங்குளத்தைத் திறந்தால் போராட்டக்காரர்களால் ஏதாவது கொந்தளிப்பு ஆகி... சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்து... அது தேர்தல் வெற்றியைப் பாதிக்கலாம்’ என்று நினைத்தாராம் முதல்வர். அதற்குத்தான் தாமதம் காட்டி உள்ளார்!''

 சி.பி - யார் எக்கேடு கெட்டால் என்ன? எனக்கு காரியம் நடந்தா சரி - ஜெ


 கூடங்குளத்தைத் திறக்க வேண்டும் என்கிற அறிவிப்பை ஜெயலலிதா வெளியிடுவதற்கு மூன்று மணி நேரம் முன்பு டெல்லியில் நடந்த சம்பங்கள்தான் தமிழகத்தில் இப்படி அதிர்வலைகளை உண்டாக்கியதாம். டெல்லியிலும் தமிழகத் திலும் நடந்த சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கின்றனவாம். இங்கே அமைச்சரவைக் கூட்டம் நடந்துகொண்டு இருந்தபோது 'இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிக் கும்’ என்று நாடாளுமன்றத்தில் சொல்லிக்கொண்டு இருந்தார் பிரதமர் மன்மோகன் சிங். பிரதமரின் இந்த அறிவிப்பும் அமைச்சரவை முடிவும் வெவ் வேறாக இருந்தாலும் அதற்குள் அரசியல் பின்னணி இருக்கிறது. அதுதான் கேயாஸ் தியரி.’

''15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்ட கூடங்குளத்தை எப்படியும் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் மத்திய அரசு ரொம்ப உறுதியாகவே இருந்தது. ஆனால், மாநில அரசிடம் இருந்து எந்த ஒத்துழைப்பும் இல்லை. அதோடு வேறு விவகாரங்களில் மத்திய அரசோடு முரண்டு பிடித்துக்கொண்டு இருந்தார் ஜெயலலிதா. இந்தப் பின்னணியில்தான் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்கிற குரல்கள் தமிழகத்தில் இருந்து எழுந்தன.


 ஜெயலலிதா இது தொடர்பாக இரண்டு கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதினார். ஆனால், சரியான ரியாக்ஷன் இல்லை. அதற்குப் பதிலாக, 'எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு எதிரான தீர்மானத்தையும் ஆதரிப்பது இல்லை என்பது இந்தியாவின் பொதுவான நிலைப்பாடு’ என்று தீர்மானத்துக்கு எதிராகவே கருத்து சொல்லிவந்தது மத்திய அரசு. 'கூடங்குளத்தைத் திறக்க வேண்டும் என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றுகிறோம். அதற்குப் பதிலாக நீங்கள் என்ன செய்வீர்கள்?’ என்று மத்திய அரசுக்கு செக் வைத்தாராம் ஜெயலலிதா. 'என்ன வேண்டும்?’ என்று கேட்டது மத்திய அரசு. நிதிஉதவி, மின்சாரம் உட்பட மத்திய அரசிடம்  கோரிக்கைகளின் பட்டியல் ஒன்றைக் கொடுத்தாராம் ஜெயலலிதா. அதில் ஒன்றுதான் ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது. அதைத்தான் நிறைவேற்றி இருக்கிறார்கள் என்றும் டெல்லிப் பறவைகள் சொல்கின்றன.''



'' 'இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றினார் ஜெயலலிதா. அதன் மீது எந்த நடவடிக்கையும் இந்தியா எடுக்கவில்லை. இப்போது ஐ.நா. தீர்மானத்தை ஆதரிப்பதாக அறிவித்ததற்கு அவசரம் காட்டியது கூடங்குளத்துக்காகத்தான். மத்திய மாநில அரசுகள் கணக்குப் போட்டு காய்களை நகர்த்தியதன் விளைவு.... கூடங்குளம் பிரச்னையும் தீர்ந்தது. ஐ.நா. தீர்மான விவகாரமும் ஓய்ந்தது. பாம்பும் சாகக் கூடாது கம்பும் உடையக் கூடாது என்கிற கணக்கு சரியாகி இருக்கிறது. இந்த 'மூவ்’களை கடைசி நேரம் கண்டு கோதாவில் திடீரென்று கருணாநிதியும் குதித்தார்.''


''அவர் ஏதோ உண்ணாவிரதம் என்று அறிவிப்பு வெளியிட்டாரே?''

''திங்கள் கிழமை அன்று காலையில் கருணாநிதி யிடம் பிரதமர் பேசினார். 'அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்’ என்று அப்போது சொன்னாராம் பிரதமர். இதை அறிந்துகொண்டுதான், உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று கருணாநிதி அறிவித்தார். பிரதமர் அறிவிப்பு டெல்லியில் இருந்து வந்ததும் கருணாநிதி உண்ணாவிரதத்தை வாபஸ் வாங்கிக்கொண்டார். 'அதாவது கருணாநிதி மிரட்டியதால்தான் மன்மோகன் இந்த முடிவு எடுத்தார்’ என்பதைக் காட்ட நடந்துள்ளன இந்தச் சம்பவங்கள்!''

 சி.பி - நாடகம் போடறதுல கலைஞர் கில்லாடி ஆசே..
''கூடங்குளம் போராட்டக்காரர்களை ஜெயலலிதாவே நேரடியாக அழைத்துப் பேசினாரே!''
''இரண்டு தரப்பையும் அழைத்துப் பேசினோம் என்பதைப் பதியத்தானே வேண்டும்!
கேபினெட் நடந்துகொண்டு இருந்தபோதே கூடங்குளம் பகுதிக்கு போலீஸார் மலையளவு குவிக்கப்பட்டுவிட்டார்கள்.




சங்கரன்கோவில் தேர்தல் பணிகளுக்காக சென்ற போலீஸார் அங்கு திருப்பிவிடப்பட்டார்கள். மாநில அரசு நினைத் தால்தான் கூடங்குளத்தை திறக்க முடியும் என்பதில் மத்திய அரசும் தெளிவாக இருந்தது. எனவே ஜெயலலிதாவையே அவர்கள் முழுமையாக நம்பி இருந்தார்கள். அவர்களது எண்ணத்துக்கு 19-ம் தேதிதான் வந்தார் ஜெயலலிதா!


இதனால் கூடங்குளம் பகுதியில் வன்முறை ஏற் படக்கூடும் என்பதால் முதல் நாளிலேயே, தென்மண்டல ஐ.ஜி-யான ராஜேஸ்தாஸ் தலைமையில் 4,000 போலீஸார் குவிக்கப்பட்ட னர். சங்கரன்கோவில் தேர்தல் பணிக்காக வந்திருந்த எட்டு மாவட்ட எஸ்.பி-க்கள் கூடங்குளம் பகுதிக்குத் திருப்பிவிடப்பட்டனர். நிலைமையைக் கண்காணிக்க கூடுதல் டி.ஜி.பி-யான ஜார்ஜ் வந்து சேர்ந்தார். வன்முறையைக் கட்டுப்படுத்த வஜ்ரா வாகனங்கள், கலவரத் தடுப்புப் படை என கூடங்குளம் அணு உலை முன்பாக பெரும் படையே குவிக்கப்பட்டது.

அணு உலைக்கு எதிரில் வாடகைக் கட்டடத்தில் அமர்ந்து அணு உலையைக் கண்காணித்து வந்த போராட்டக் குழு உறுப்பினர்களான வக்கீல் சிவசுப்பிரமணியன், ராஜலிங்கம் உள்ளிட்ட ஒன்பது பேரை போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். தமிழக அரசின் தீர்மானம் பற்றி அறிந்த இடிந்தகரை மக்கள், ஆலய மணியை அடித்துக் கூட்டத்தை திரட்டினர். அதற்குள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்ததால், இடிந்தகரை பகுதியில் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது.''

''போலீஸை வைத்து இதற்குப் பதில் சொல்வார்களா?''
''போராட்டக்காரர்களை 18-ம் தேதி இரவு நெல்லைக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு மாவட்ட ஆட்சியர் அழைத்தார். 'என்ன விஷயம்?’ எனக் கேட்டதற்கு, 'ஏற்கெனவே நீங்கள் முதல்வருக்கு கொடுத்திருந்த மனு பற்றி பேச வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார்.

'கூடங்குளத்தில் போலீஸாரைக் குவிப்பதையும் எங்களைத் திட்டமிட்டு அழைப்பதையும் சந்தேகத்துடன் பார்க்க வேண்டும். இதனால், நாங்கள் அங்கு செல்ல மறுத்து விட்டோம். 19-ம் தேதி காலையில் மீண்டும் எங்களை அழைத்த அவர், 'ராதாபுரம் வரையாவது வாருங்கள். அங்கு வைத்துப் பேசிக்கொள்ளலாம்’ எனக் கூப்பிட்டார். இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக எங்கள் மக்கள் சந்தேகப்பட்டார்கள்.


அதனால் எங்களைப் போக அவர்கள் அனுமதிக்கவில்லை. நாங்கள் போயிருந்தால் எங்களைக் கைது செய்திருப்பார்கள்’ என்று போராட்டக்காரர்கள் சொல்கிறார்கள். கூடங்குளத்தை அமைதியாகத் திறக்கவிடுவார்களா என்பது இரண்டொரு நாட்களில் தெரிந்துவிடும்''

சி.பி - இந்த தலைமுறை மக்கள் மின்சாரம் பெற வேண்டும் என்பதற்காக கூடங்குளம் அணு உலை திறப்பது நம் எதிர் கால சந்ததிக்கு நாம் செய்யும் துரோகம்.. மக்கள் பெருமளவில் இதை எதிர்க்கக்கூடாது என்பதற்க்காக செயற்கையான 8 மணி நேர மின் வெட்டை ஜெ உருவாக்கினார் என்று சில ர் சொல்றாங்க.. நாளை கூடங்குளத்தில் ஏதாவது விபத்து நடந்து மக்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? மேலும் அங்கே பணீ புரிந்த 147 பேருக்கு புற்று நோய் என்று இந்தியா டு டே கட்டுரை வெளியிட்டு இருக்கு.. அதுக்கெல்லாம் என்ன பண்ணப்போறாங்க?

இப்போ லேட்டஸ்ட் நியூஸ் அந்த ஏரியா மக்களுக்கு தண்ணீர் சப்ளை, , மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் நிறுத்தமாம்/... அட தேவுடா.. ஏழை எளிய மக்களை அடக்குமுறை கொண்டு ஆள ஆங்கிலேயர் என்ன? நம்மாளுங்க என்ன? எல்லாம் ஒரே கேட்டகிரிங்க தான்..

Friday, March 02, 2012

கோடம்பாக்கத்தின் முகமூடியை கிழிக்கும் சோனியா அகர்வால் - வாக்குமூலம்- வசனங்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgokPv0Ixb9CrWOrkkmqvvA7XxtzTcWOkk9bcCiGBAUtxfEawSEpF-ZG3FsaUJAe8ynYNZt-x-4kAHVkZIjuEOEiRNaM8SPadzwl9NxtlrveO1tFB6lF88OGbjh3GuScBxecrBFcAmYbcll/s1600/oru_nadigaiyin_vakkumoolam_posters_095.jpg

1. என்னோட ரிலேசன்ஸ், சுத்தி இருக்கறவங்க எல்லோருமே அவங்கவங்க சுயநலத்துக்காக என்னை யூஸ் பண்ணிக்கிட்டவங்க தான்..

-------------------------------------

2.எல்லாருக்கும் நல்லவனா வாழ யாராலும் முடியாது

-----------------------------------------

3. எல்லோருடைய மனசையும் சந்தோஷப்படுத்த தெரிஞ்ச எனக்கு என் மனசை சந்தோஷப்படுத்த வழி தெரியலையே?

---------------------------------

4. நான் தெரியாமத்தான் கேட்கறேன், ஊர்ல சந்தோஷமா இருக்கற எந்தப்பொண்ணாவது அப்போ அம்மா வீட்டுக்குப்போறாங்களா? ஏதோ புருஷன் போதைல இருக்கறப்ப ஒரு அறைவிட்டுட்டான்னா உடனே அம்மா வீட்டுக்கு ஓடிடறீங்களே? ஏன்?

--------------------------------------

5சினிமால  போராடறது மட்டும்தான் நம்ம பிழைப்பு.. வெள்ளாமையை ஆண்டவன் பார்த்துக்குவான்

---------------------------------------

6. சார்.. எப்படியாவது எனக்கு நடிக்க சான்ஸ் தாங்க சார்..

சாரி மேடம், நாங்க புதுசா யாரையும் யூஸ் பண்றதைல்லை, மீன் அறிமுகப்படுத்தறதில்லை

----------------------------------------------------

7. மேடம்.. ஆல்பம் இருக்கா?
ம்ஹூம்

 அல்பம்

-----------------------------------

8. யோவ் டைரக்டரே,எப்போ படம் ஸ்டார்ட் ஆகுது?

 அது தெரிஞ்சா அவர் சொல்ல மாட்டாரா?

--------------------------------------

9. அவர் 10 படம் ஹிட்ஸ் குடுத்து 2 படம் மட்டும் தான் ஃபிளாப் குடுத்திருக்கார்..

இந்த சினிமா ஃபீல்டு ஒரு படம் ஃபிளாப் குடுத்தாலே ஃபீல்டை விட்டு துரத்தி விட்டுடும்.. 

-------------------------------

10. உன் பேரென்னம்மா?

 அஞ்சலி

அந்த பேர்ல ஆல்ரெடி ஒரு நடிகை இருக்காங்க..

அப்போ நீங்களே வெச்சு விடுங்க

------------------------------------------ 

http://iclienttech.com/news1/1nov42.jpg

11. ஹீரோயின் பேரு ஆர் வர்ற மாதிரி  வெச்சிடலாமா?

நோ நோ அந்த வேலையை பாரதிராஜா குத்தகைக்கு எடுத்துக்கிட்டாரு

------------------------------------------

12. என் கதைக்கு இந்த பொண்ணு சரிப்பட்டு வருமா?

அப்போ உங்க படத்துல கதை இருக்கா?

------------------------------

13. ஏய்யா, ஆரம்பத்துலயே அண்ணா, அப்பான்னு செண்ட்டிமெண்ட்டா போட்டுத்தாக்கறாளுகளே,சரிப்பட்ட்டு வருமா?

ம் ம் ஸ்டார்ட்டிங்க் சரி இல்லை, ஆனா போக போக சரி ஆகிடும்

--------------------------------

14.சார்.. காலைல ஓக்கே சொன்னீங்க, இப்போ நாட் ஓக்கே சொல்றீங்க?

அதுதான்  சினிமா உலகம்..

------------------------------------


15.திர்பார்த்து ஏங்கிப்போறத விட  ஊருக்குப்போய்பொழப்பை பார்க்கலாம்  

 ----------------------------

16. இந்த உலகத்துல ஏதாவது  ஒரு பிளஸை இழந்தாத்தான் நாம நினைச்சதை அடைய முடியும்.. ஆனா சினிமா உலகத்துல மட்டும் நம்மையே இழந்தாத்தான் சான்ஸ்  கிடைக்கும்

------------------------------------------

17.எந்த அம்மாவும் தன் பெண் கிட்டே கேட்கக்கூடாத ஒண்ணை கேட்க வைக்குது இந்த சினிமா உலகம்

------------------------------ 
18. வாழ்க்கைல யாருமே தோல்வியை சந்திக்க தயாரா இல்லை

------------------------------
19. அங்கே பார்த்தியாமொத்த சினிமா உலகமே இங்கே தான் இருக்கு.. ஒருத்திக்கு மார்க்கெட் வந்துடக்கூடாதே, டேரா அடிச்சுடுவாங்களே?

----------------------------------

20. சார்  செக் இருக்கு , ஓக்கேவா?

 பாஸ் ஆகுமா?

------------------------------ 

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/01/Oru-Nadigaiyin-Vakku-Moolam-19.jpg

21. என்னைக்கு புரொடக்‌ஷன்   மேனேஜரையே உக்கார வெச்சுட்டாளோ அவ டாப்ல இருக்கான்னு அர்த்தம்

-------------------------------
22. ஏத்தி விட்டவங்களை இறக்கி விட்டு வேடிக்கை பார்க்கறதுதான்யா சினிமா உலகம்

----------------------------------

23.. வந்தோமா, 10 படத்துல நடிச்சு காசை பார்த்தோமா. ஒரு கோடீஸ்வரனை கல்யாணம் பண்ணுனோமா? ன்னு போய்க்கிட்டே இருக்கனும்

--------------------------------------

24. இன்னைக்கு ட்ரெண்ட்ல 4 வது வாரம் போஸ்டர் ஒட்டுனாலே படம் ஹிட்னு அர்த்தம்.. 50 நாள் ஓடி இருக்கு

--------------------------------

25. என் பொண்ணு பெரிய நடிகை ஆகறளோ இல்லையோ, என் மனைவி வாழ்க்கைல பெரிய நடிகை ஆகிட்டா

-------------------------------

26. சான்ஸுக்காக என்னை இழந்திருந்தாலும்  முத முறையா காதலுக்காக என்னை இழந்தேன்
அவன் கூட பழகுன்னு மட்டும் தானே சொன்னேன்..
கெட்டுப்போன்னா சொன்னேன்?

----------------------------------

27. என் மேலே உயிரையே வெச்சிருக்கேன்னியே..?

அதுனாலதான் உனக்கு ஒரு உயிரையே  கொடுத்திருக்கேன்

--------------------------------------------

28. டியர், என்னை நம்பு 2 வருஷம் கழிச்சு உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன்

ஓஹோ2 வருஷம் ஜாமீன் வாங்கிட்டியா?

-------------------------------

29. சினிமால நடிக்க, கிடைச்ச வாய்ப்பை தக்க வெச்சுக்க பல தப்பு செஞ்சிருக்கேன்

========================

30. என் வீட்டுக்க்குள்ளே இருக்கறவங்களுக்கு  என் பணம் தேவைப்பட்டுது, வெளீல இருக்கறவங்களுக்கு என் உடம்பு தேவைப்பட்டுது

------------------------------ 

http://1.bp.blogspot.com/-t47XzlEyI_U/TwiI6vAH_UI/AAAAAAAAdFE/PUtDUz2ufIM/s1600/Nicole.jpg

31.  அவளைப்பாரு.. நீயும் பெத்து வெச்சிருக்கியே அரிசி மூட்டை மாதிரி ஒரு பொண்ணு

 யோவ், நீதான்யா அவளை பெத்தே

-------------------------

32. மந்திரிக்கு ரவுடிங்க தேவைப்பட்டாங்க, அந்த ரவுடிக்கு என் உடம்பு தேவைப்பட்டுது

-----------------------------

33.  எங்கம்மாவும் ஒரு பொண்ணுதானே? ஏன் என்னை ஒரு பொண்ணா பார்க்கலை?

---------------------------

34. எங்களை மாதிரி அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ்க்கு சான்ஸ் கிடைக்கறதே பெரிசு

-------------------------------

35.  இப்பவே குடிக்க ஆரம்பிச்சுட்டாரே..

நீங்க மிச்சம் வெச்சதைத்தானே?

-------------------------

36. டைரக்ட் பண்ண வர்ற எல்லாருமே ஹீரோவா நடிக்க ஆசைப்படறங்களே, ஏன்?

கதை சொல்ல ஹீரோயின் வீட்டுக்கு வரச்சொல்றானுங்க, அங்கே போனா கதையும் கேட்கறதில்லை, ஹீரோயின் பெட்ரூம்ல இருந்து வெளில வர்றதும் இல்லை

-------------------------------

37. ஏற்கனவே உனக்கு கோனை வாய்.. இதுல கொட்டாவி வேற

--------------------------- 

38. அஞ்சலிக்கு அஞ்சலி செஞ்சுட்டு வருவாரு வெயிட் ப்ளீஸ்

------------------------

39. என் பேரை சொன்னதுக்குப்பிறகுமா முடியாதுன்னான்?

அதுக்குப்பிறகுதாங்க அவன் உங்களை மதிக்கவே இல்லை

-------------------------------

40. முடிவுக்கு வர முடியாத விஷயம்னு இந்த உலகத்துல எதுவுமே இல்லை

-------------------------

41. யோவ்,, ஃபேஸை பார்க்காம எங்கேயோ பார்க்கறே?

-------------------------- 


http://www.koodal.com/cinema/cine_interview/images/2011/punnagai-poo-geetha-649.jpg

42. சேட்டு.. ஏன் அப்படி பார்க்கறே?
சேட்டையா?

-------------------------

43. இந்தப்படம் பார்க்கற ஒவ்வொரு ஆடியஃன்சையும் படம் பாதிக்கும்
 
படம் பூரா உக்காந்து எவன் பார்க்கப்போறான்?

-----------------------

44. என் பொண்ணு = 10 அனுஷ்க்கா = 1தமனா

ம்க்கும் திங்க் ஷி = 12 கோவை சரளா

---------------------

45/ உனக்கு 1 தெரியுமா? ராமாயணத்துல ராவணன் வந்த பிறகுதான் கதை சூடு பிடிக்குது

-------------------------------------

46. ஏண்டி வாமிட் எடுக்கறே? வயிற்றுக்கு சேராததை சாப்பிட்டியா?
சேர்ந்ததாலதாம்மா வாமிட்


------------------------

47. ஆதிகாலத்துல இருந்தே அந்தரங்க வாழ்க்கையை தோண்டி பார்க்கறதுல மனிதர்களுக்கு ஆர்வம் அதிகம்

------------------------------

48.  ஒரு ஃப்லோல சொன்னதுக்காக ஃப்ளோர்ல வந்து நின்னு டார்ச்சர் பண்ணக்கூடாது

-----------------------------

49. அய்யரைப்பார்த்து நாள் குறி.. அவ குறிச்சுக்குடுத்ததை வெச்சு

---------------------------

50. உன் ஆட்டத்தை ஆடி முடிச்சிட்டியா?நான் வெறும் பொம்மை தானே?பொம்மலாட்டம் மாதிரி என்னை ஆட்டுவிக்கப்போறியா?

------------------------------ 

http://aniwebtv.com/wp-content/uploads/2012/02/punnaigai-poo-geetha.jpg

51. வார்த்தையால அவன் கிழிச்சான் கேமராவுக்கு முன்னால, வாழ்க்கையையே கிழிச்சே நீ கேமராவுக்குப்பின்னால 

------------------------

52.  அன்னைக்கு வறுமை மட்டும் தான் எனக்கு பிரச்சனையா இருந்தது, இப்போ எல்லாமே எனக்கு பிரச்ச்னைதான்

---------------------------------

53. நடிகைன்னா  மனசுல கர்வமும் உடம்புல திமிரும்  வரனும்

--------------------------

54. உனக்கு புதையல் குறியா தெரியுது, எனக்கு அது புதை குழியா தெரியுது

-------------------------------

55. நீ எல்லாருக்கும் தேவதையா தெரிஞ்சே, ஆனா உனக்கு வரம் தரும் தேவனே உனக்கு எதிரியா மாறிட்டான்

----------------------------

56. மத்தவங்களூக்குக்கூட என் மேல பரிதாபம் வருது, ஆனா என்னைப்பெத்தவங்களுக்கு என் மேல எதுவும் வர்லையே?

-------------------------------