Showing posts with label விழா. Show all posts
Showing posts with label விழா. Show all posts

Thursday, October 08, 2015

'தூங்காவனம்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்

'தூங்காவனம்' இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மத்தியில் கமல்ஹாசன் பேசிய போது | படம்: எல்.சீனிவாசன்
'தூங்காவனம்' இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மத்தியில் கமல்ஹாசன் பேசிய போது | படம்: எல்.சீனிவாசன்
கொஞ்சம் திட்டமிட்டால், குறைந்த நாட்களில் முழு திரைப்படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட முடியும் என்று 'தூங்காவனம்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசினார்.
ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் 'தூங்காவனம்' படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பாடலாசிரியர் வைரமுத்து, த்ரிஷா, மதுஷாலினி உள்ளிட்ட படக்குழுவினரோடு தனுஷ், ஸ்ருதிஹாசன், கெளதம் மேனன், பாண்டிராஜ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் கமல்ஹாசன் பேசியது, "'தூங்காவனம்' திரைப்படம் 40 நாட்களில் எடுத்தார்கள், 30 நாட்களில் எடுத்தார்கள் என வெவ்வேறு நம்பர்கள் சொல்லப்படுகின்றன. இரண்டு மொழிகளில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். பல காட்சிகள் இருமுறை செய்யப்படுவதாகவே அமைந்தன. கார் உருளும் காட்சிகள் மற்றும் போலீஸ்காரர்கள் வரும் காட்சி என அனைத்துமே இரண்டு முறை காட்சிப்படுத்தினோம். இப்படி எல்லாமே இரண்டு முறை பண்ணியதால், இது இரண்டு படங்கள் என திண்ணமாக சொல்லலாம்.
இந்த இரண்டு படங்களையும் நாங்கள் முதலில் 52 நாட்களில் முடிக்க தீர்மானித்தோம். எடுத்த படத்தைப் போட்டு பார்த்துவிட்டு சில திருத்தங்கள் செய்ய வேண்டியது இருந்ததால், மேலும் 8 நாட்கள் அதிகமாகின. மொத்தம் 60 நாட்களில் 2 படங்கள். பிரித்துக் கொண்டால் 30 நாட்களில் 1 படம் என்று சொல்லலாம்.
இதை ஏன் பெருமையாக சொல்கிறேன் என்றால் நானே 200 நாட்களுக்கு படம் பண்ணியிருக்கிறேன். கொஞ்சம் திட்டமிட்டால், அவ்வளவு நாட்கள் தேவையில்லை என்பது என் கருத்து. இதைச் சொல்லும் போது, பல்வேறு நபர்கள் இந்தக் காலத்தில் முடியாது என்று சொன்னார்கள். செய்யும் முடியும் என்று தீர்மானித்து, கடந்த 5, 6 வருடங்களாக ஒரு நல்ல அணியை அமைத்திருக்கிறோம்.
அந்த அணியின் வெற்றி தான் இந்தப் படம். நான் சொல்லிவிட்டேன் என்பதால் பண்ணிய படம் அல்ல. இதற்கு முன்பு 'ராஜபார்வை' என்ற படம் 55 நாட்களில் 2 படங்கள் பண்ணினோம். அத்தனை நபர்களும் சேர்ந்து உழைத்தால் கண்டிப்பாக சாத்தியம் தான்.
ஒரு சி.டி மாதிரியான வட்டை கையில் கொடுத்து இதுதான் பாட்டு என்று நிரூபிக்க வேண்டிய காலம் இல்லாமல், இப்போது நான் பேசிக் கொண்டிருக்கும் போது ஐ-டியூன்ஸில் பாடல் வெளியாகிவிட்டது. அந்தளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது" என்று கமல்ஹாசன் பேசினார்.
இவ்விழாவின், இறுதியாக சி.டியை வெளியிட கேட்டார்கள், இல்லை அது வேண்டாம் என்று கமல் மறுத்துவிட்டார்.
'தூங்காவனம்' படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் இருக்கிறது. அப்பாடலை வைரமுத்து எழுத, கமல்ஹாசன் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ehidu
thanx-thehinndu

Tuesday, November 27, 2012

பரதேசி - ஆடியோ விழாவில் பாலா, பாலுமகேந்திரா ,வைரமுத்து பேசியது என்ன?


விக்ரம் - சூர்யாவை விட நான் தான் சிறந்த நடிகன்! - 'பரதேசி' பாலா 

 

'அவன் - இவன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டைரக்டர் பாலா அடுத்து டைரக்ட் செய்து வரும் படம் 'பரதேசி'.


அதர்வா, வேதிகா, தன்ஷிகா மற்றும் பலர் நடித்து வரும் இந்தப் படத்தின் பிரபல இரட்டை டைரக்டர்களில் ஒருவரான ஜெர்ரி இந்தப் படத்தில் கங்காணி என்ற முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.


நேற்று நடந்த இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸை ஒட்டி டைரக்டர் பாலா சிறப்பு பேட்டியளித்தார். அந்தப் பேட்டி இதோ உங்களுக்காக...


கேள்வி : 'பரதேசி' என்ன மாதிரியான கதை?


பரதேசின்னா வேற ஒண்ணுமில்லை. பஞ்சம் பொழைக்கப் போற ஒரு கூட்டம். அவங்களோட கதை, அதுதான்.



கேள்வி : உங்கள் படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் எல்லோருமே சினிமாவில் சீக்கிரம் பாப்புலராகி விடுகிறார்கள், ஆனால் ஹீரோயின்கள் அந்தளவுக்கு பிரபலமாவதில்லையே?



பதில் : ( சில நொடிகள் யோசிப்புக்குப் பின்...) பிதாமகன் படத்துல நடிச்ச சங்கீதா, அவ ஒரு நல்ல நடிகையாத்தானே இருக்கா... நெறைய படங்கள் நடிச்சிருக்கா? ஹிட் கொடுத்திருக்கா...? அப்புறமென்ன..? அந்த லைலா பொண்ணுக்கும் எனக்கு லவ்வுன்னு எழுதியே அந்தப் பொண்ணை வீட்டுக்கு அனுப்பிட்டீங்க, அப்புறம்.., ஆனால் இந்தப் படத்துல நடிச்சிருக்கிற ரெண்டு ஹீரோயின்களுக்கும் கண்டிப்பாக சினிமாவுல நல்ல சான்ஸஸ் இருக்கு.



கேள்வி : இந்தப் படத்துக்காக மலைகளையெல்லாம் சொந்தமா வாங்கி ஷூட்டிங் நடத்தினீங்களாமே..?


பதில் : என்னது மலையா..? அதெல்லாம் இல்லீங்க, ரெண்டாவது மலைகளையெல்லாம் விலைக்கு வாங்க முடியாது, விட்டா திருநீர் மலையையே நான் வாங்கிட்டேன்னு சொன்னாலும் சொல்வீங்க போலிருக்கு. படத்துக்காக சில காட்சிகளை காடுகள்ல எடுக்க வேண்டியிருந்தது, அதுக்கு வனத்துறையினர் ரொம்ப கெடுபிடி பண்றதுனால நானே சொந்தமா ரெண்டு ஏக்கர் நிலத்தை வாங்கி அதுல காடு மாதிரி செட்போட்டு ஷூட்டிங் பண்ணினேன். ஆனால் மரங்களையெல்லாம் வெட்டல. அத ஒரு நியூஸா போட்டு பிரச்சனை பண்ணிடாதீங்க.



கேள்வி : உங்க படங்கள்ல நடிச்ச சூர்யா, விக்ரம், ஆர்யா, அதர்வா இவங்கள்ல யார் சிறந்த நடிகர்ன்னு சொல்வீங்க?



பதில் : விஷாலை விட்டுட்டீங்க...என்றவுடன் ( நிருபர் ஆமாம்.. விஷாலும் என்று சொல்கிறார்) கேள்வியைக் கேட்டு சிரித்தவர் தாடையை தடவிக்கொண்டே.., இவங்கள்ல யாருமே சிறந்த நடிகன் கிடையாது. அவங்களை விட நான் தான் சிறந்த நடிகன்
என்றவுடன் ஒரே சிரிப்புச் சத்தம்.



கேள்வி : விளிம்பு நிலை மனிதர்களோட வாழ்க்கையைப் பத்தி மட்டுமே எப்போதுமே உங்க படங்கள்ல நல்ல கருத்துக்களை சொல்றீங்க? கமர்ஷியல் படம் பண்ணும் எண்ணம் இல்லையா..?



பதில் : கமர்சியல்ன்னா எதைச் சொல்றீங்க? அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. அப்போதைக்கு என்ன தோணுதோ அதைத்தான் நான் படமா எடுப்பேன். இந்தப் படத்தை எடுத்து முடிக்கிறதுக்கே போதும் போதும்னு ஆயிடுச்சி, அடுத்தப் படத்தைப் பத்தி யோசிக்கவே இல்லை.


கேள்வி : இந்தப்படம் 'எரியும் பனிக்காடு'ங்கிற நாவலைத் தழுவி படமா எடுத்திருக்கீங்க, இப்படி நாவலையோ, சிறுகதையையோ படமா எடுக்கிறப்போ இருக்கிற சவுகரியம் எப்படி இருக்கு?



பதில் : ம்... நாமளே ஒரு கதையை சொந்தமான யோசிச்சி அதை படமா பண்றதை விட இது இன்னும் ஈசியா இருக்கு, ரெண்டாவது முழுக்க முழுக்க இது 'எரியும் பனிக்காடு' நாவல் கிடையாது, அதுல எனக்கு பிடிச்ச ஒருபகுதியை எடுத்துக்கிட்டு என்னோட கற்பனையையும் கலந்து படமாக்கியிருக்கேன்.



கேள்வி : நல்ல கலரா, அழகா இருக்கிற ஹீரோயின்களுக்கு கருப்பு சாயத்தை தடவி மேக்கப்பெல்லாம் போட்டு அவங்களை கருப்பா காட்டுறதை விட ஏற்கனவே கருப்பா இருக்கிற ஒரு ஹீரோயினை நடிக்க வெச்சா இன்னும் ஈசியா இருக்கும்ல?



பதில் : யாரு வேதிகாவா..? அந்தப் பொண்ணு கலர்னு சொல்லுங்க, ஆனா அழகுன்னு சொல்லாதீங்க..என்றவுடன் அங்கு சிரிப்பு சத்தம், (அப்போது, இதற்கு என்ன அர்த்தம் என்று வேதிகா பக்கத்தில் இருக்கும் ஒளிப்பதிவாளர் செழியனிடன் ஆங்கிலத்தில் விளக்கம் கேட்டுக் கொள்கிறார்.) இல்லை அப்படின்னு கிடையாது, இந்தப் படத்துல கூட ஒரு கலர் கம்மியான மாலதிங்கிற ஒரு பொண்ணை ஒரு முக்கியமான கேரக்டரில் நான் அறிமுகப்படுத்துகிறேன். கேரக்டருக்கு யார் பொருத்தமா இருப்பாங்களோ அவங்களை நடிக்க வைப்பேன். கலரெல்லாம் பாக்கிறது இல்லை.



கேள்வி : இளையராஜாவை போடாம எதுக்கு ஜி.வி.பிரகாஷை மியூசிக் டைரக்டரா போட்டுருக்கீங்க?



சூர்யா,அடுத்து விக்ரம்,அடுத்து ஆர்யா, அப்புறம் சூர்யா,விக்ரம்ன்னு ஒரே ஆட்களோட வேலை பார்த்துக்கிட்டிருக்கீங்க? புதுப்புது ஆட்களோட வேலை பார்க்க மாட்டீங்களான்னு நீங்க தான் விமர்சனத்துல எழுதுனீங்க...? அதனால தான் இந்தப் பையனை கமிட் பண்ணினேன். ஆனா இப்போ நீங்களே எதுக்கு ஜி.வியை போட்டீங்கன்னு கேட்குறீங்க..


இவ்வாறு டைரக்டர் பாலா கூறினார்.

http://www.thamizhthirai.com/wp-content/gallery/paradesi-first-look/paradesi_first_look_exclusive_stills_01_0.jpg


பாலா என் மூத்த மகன் : பரதேசி ஆடியோ விழாவில் நெகிழ்ந்த பாலுமகேந்திரா!


"பாலா என் வீட்டிலேயே வளர்ந்த என் மூத்த மகன், அவன் தேசிய விருது வாங்கிய போது நான் பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை" என்று டைரக்டர் பாலுமகேந்திரா பேசினார்.

டைரக்டர் பாலா லேட்டஸ்ட்டாக தயாரித்து, டைரக்‌ஷன் செய்து வரும் 'பரதேசி' படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் இன்று சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்டு பேசிய ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான பாலுமகேந்திரா "பாலா என் மூத்த பிள்ளை" என்று நெகிழ்ந்தார்.

தொடர்ந்து பேசிய அவர்.., " என்னுடைய 'வீடு' படத்தின் போது பாலா என்னிடம் வந்து சேர்ந்தான். அவனையும், ராம் என்பவனையும் பாடலாசிரியர் அறிவுமதி என்னிடம் கொண்டு வந்து விட்டுப் போனார். நான் பாலாவை யூனிட்டில் சேர்த்துக் கொள்ளவே இல்லை.

ஆனால் அவன் சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்த நான் “ யாருப்பா..நீ நான் உன்னை பார்த்ததே இல்லையே..? என்று கேட்டேன். அதற்கு அவன் நான் உங்கள் படத்தில் தான் வேலை செய்கிறேன். மதுரையில் படித்து விட்டு உங்களிடம் சேர வேண்டும் என்று வந்து விட்டேன், நீங்கள் தான் என்னை கண்டுகொள்ளவே இல்லை என்றான், அன்றிலிருந்து அவனை நான் என்னிடம் சேர்த்துக் கோண்டேன். அவன் என் வீட்டில் ஒருவனாக வளர்ந்தான்.


பொதுவாக நான் எல்லா படங்களின் ஆடியோ ரிலீஸுக்கும் வருவேன். ஆனால் என் மனைவி வரமாட்டார். ஆனால் இந்த பரதேசி படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷனுக்கு என் மனைவி அகிலாவை கூப்பிட்டபோது அவள் உடனே வந்து விட்டாள். அந்தளவுக்கு அவன் மீது ஒரு தாய் போல அவள் பாசம் வைத்திருக்கிறாள். அதனால் தான் இந்த விழா எனக்கு முக்கிமானது" என்று பேசிய பாலுமகேந்திரா.., தொடர்ந்து.., "பாலாவும் தேசிய விருது வாங்கி விட்டான், என்னுடைய இன்னொரு பிள்ளை வெற்றிமாறனும் தேசியவிருது வாங்கி விட்டான், எனது ரெண்டு பிள்ளைகளும் தேசிய விருது வாங்கியதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். ஒரு அப்பாவுக்கு இதைவிட வேறு என்ன சந்தோஷம் வேண்டும்.


"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்"  என்ற குறளைப் போல நான் மகிழ்கிறேன்" என்றார்.

விழாவில் நடிகர்கள் சூர்யா,விக்ரம், ஒளிப்பதிவாளர் செழியன், கவிப்பேரரசு வைரமுத்து, ஹீரோ அதர்வா,ஹீரோயின்ஸ் வேதிகா, தன்ஷிகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


டைரக்டர் பாலாவின் 'பரதேசி' படத்துக்காக தனது உடல் எடையைக் குறைத்திருக்கிறாராம் நடிகர் அதர்வா.


ஆர்யா-விஷால் இணைந்து நடித்த 'அவன் - இவன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு பாலா சைலண்ட்டாக டைரக்‌ஷன் செய்து வரும் படம் தான் 'பரதேசி'.

அதர்வா ஹீரோவாகவும், வேதிகா ஹீரோயினாகவும் நடித்து வரும் இந்தப் படத்துக்காக தனக்கு பழக்கப்பட்ட ஏரியாவான தேனி,கம்பம் உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார். மேற்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் ஆக்டிங் என்ற பெயரில் நடிகர் அதர்வாவை பிழிந்து எடுத்துக் கொண்டிருக்கிறாராம் பாலா.

அதன் ஒரு பகுதியாக அதர்வாவை சுமார் 10 கிலோ வரை உடல் எடையை குறைக்கச் சொல்லியிருக்கிறார். கேரக்டருக்கு இந்த எடைக்குறைப்பு முக்கியம் என்று பாலா சொன்னதால் அதர்வாவும் வேறு வழியில்லாததால் ரொம்பவும் மெனக்கட்டு தனது உடல் எடையைக் குறைத்தாராம்.

இதுவரை இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா என இசைக் கூட்டணி போட்ட பாலா இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷை மியூசிக் டைரக்டராக கமிட் செய்திருக்கிறார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் இந்த மாதம் 25-ஆம் தேதி படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார் டைரக்டர் பாலா.


என்னமோ போங்க.. எடையைக்குறைக்க அந்த மெடிசின் இந்த மாத்திரைனு டிவில காட்டுறதெல்லாம் வொர்க்கவுட் ஆகுதோ இல்லையோ இந்த பாலா மெடிசின் மட்டும் கரெக்டா வொர்க்கவுட் ஆகுது; சேது விக்ரம், செய்யாத படத்துக்கு அஜீத், இப்பொ அதர்வா என.




http://www.tamil.haihoi.com/news/Dhansika%20Character%20In%20Paradesi_HaiHoi_214.jpeg
நான் பாடல்களை திருத்த அனுமதிப்பதில்லை என்று யாரோ தவறான வதந்தியை பரப்பி விட்டிருப்பதாக கவிஞர் வைரமுத்து கூறினார்.




டைரக்டர் பாலாவின் ’பரதேசி’ படத்தின் எல்லா பாடல்களை எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து ஆடியோ ரிலீஸ் பங்ஷனில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்...



இந்த 'பரதேசி' படம், தமிழ் திரையுலகில் முக்கியமான படமாக இருக்கும். படத்தில், ஒரு விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கை காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. பாலா, ஒரு சராசரி கலைஞன் அல்ல. மனிதர்களின் மறுபக்கத்தைப் பார்க்க பாலா ஆசைப்படுகிறார். இங்கே மாறுபட்டு சிந்திக்கிறவன் தான் எப்போதுமே கவனிக்கப்படுகிறான். அந்த வகையில் இயக்குனர் பாலா மாறுபட்டு சிந்திக்கிறவர்.


வைரமுத்து தனது பாடல்களில் திருத்தங்களை செய்யவிடுவதில்லை என்று என்னைப் பற்றி யாரோ சிலர் வதந்தியை பரப்பியிருக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை., நியாயமான திருத்தங்களை நான் எப்போதும் செய்து வருகிறேன். பொருந்தாத திருத்தங்களை நான் ஏற்றுக்கொள்வதில்லை.


இந்த படத்தில் கூட , ‘கண்ணீர்தானா கண்ணீர்தானா செந்தேனீரில் செம்பாதி கண்ணீர்தானா?’ என்று ஒரு பாடல் எழுதியிருந்தேன். இதை, ‘செந்நீர்தானா செந்நீர்தானா செந்தேனீரில் செம்பாதி கண்ணீர்தானா?’ என்று மாற்றிக் கொள்ளலாமா? என டைரக்டர் பாலா என்னிடம் கேட்டார். பாலாவின் திருத்தம் எனக்கு நியாயமாக இருந்தது. அவருடைய திருத்தத்தை ஏற்றுக் கொண்டேன்.


நான் எல்லா இயக்குனர்களும் சொல்லும் திருத்தங்களையும் நியாயமான காரணமாக இருந்தால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வேன். அப்படித்தான் பெரும்பாலான இயக்குனர்கள் என் பாடல்களை என் அனுமதியோடு திருத்தியிருக்கிறார்கள், ஆனால் பாரதிராஜா மட்டும் தான் என் பாடல்களை இதுவரை திருத்தியதேயில்லை.


அதேபோல எல்லோரும் பாரதிராஜா படங்களில் வரும் நல்ல இனிமையான பாடல்களைப் போல தாருங்கள் என்று கேட்கிறார்கள், அதுதான் சொன்னேன், பாரதிராஜா என் பாடல்களை திருத்துவதிலை அதனால் அந்தப் பாடல்கள் பிரபலமாகி விடுகிறது.


இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

 நன்றி - சவுண்ட் கேமரா ஆக்‌ஷன், நக்கீரன், தினமணி

http://chennaionline.com/images/articles/October2012/7ed70fca-9621-4f3b-bf1e-e4a3043d5445OtherImage.jpg



டிஸ்கி 1 - பரதேசி படத்தின் திரைக்கதை நெட்டில் வெளியானது
டிஸ்கி 2 - பரதேசி - கலக்கல் ட்ரெய்லர்,
டிஸ்கி 3 - பாலாவின் பேட்டி

http://www.adrasaka.com/2012/10/blog-post_7245.html


http://sim.in.com/f4f460a229d5c7e281072787ca350276_ls.jpg 

Wednesday, August 29, 2012

ஓணம் பண்டிகை @ கேரளா - ஒரு பார்வை

http://www.result.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News-Paper_81919062138.jpg 

ஓணம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொண்டாடப்பாடும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும் கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் கொண்டாடப்படுகிறது .


கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதை கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாக கொண்டாடப்படுகிறது. ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளாவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பண்டிகை என (கி.பி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில்) ஓணம் பண்டிகை பற்றிப் பொறிக்கப்பட்டுள்ளது.


ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலெ எழுந்து குளிது வழிபாட்டில் ஈடுபடுவர்.கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவர். வீட்டுப் பெண்கள் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினால் ஆண கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர். நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்து கொண்டாடுகிறார்கள். ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம் , இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும்.

http://tamil.sudarnila.com/wp-content/uploads/2012/08/sabari-300x204.jpg

அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இவ்வுணவினை ஓண சாத்யா என அழைப்பர். ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகை செலுத்துவது இதன் சிறப்பம்சம். ஆறாம் நாள் திருக்கேட்டை(திரிக்கேட்டா) , ஏழாம் நாள் மூலம். எட்டாம் நாள் பூராடம். ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும். பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத்திருவிழா முடிவடைகிறது.



மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். தானம், தருமங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும் போது திருமால் வாமணனாக (குள்ள உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையேக் கொடுத்தான் பலி மகாராஜா.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN7oSt3cE4RS5GjalTbD9xj7-XKxtnpxBldBYvRJT04u67tJvJJMS6hATOzUtesKQSFiGTEVsVQbOFGecVzKp06w1fFVXmiS8fn0MFiPkrlp-Xhpow3MPlmAuRXoZ9-HiSnhkFEbG9BdM/s1600/Onam_Festival_9834_medium.jpg

அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன்தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால். தான் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழும் வரம் வேண்டினான் பலி. அதன்படி, ஒவ்வொரு திருவோணதிருநாள் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகதிற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள் இதனை நினைவு கூர்ந்து, மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்த திருவிழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.


ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும் அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக் கொண்டு வருவர்.



 பூக்கோலத்தில் அதை தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர். முதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருவர்.

http://moonramkonam.com/wp-content/uploads/2012/08/oanam-elephant.jpg

கேரள உணவுகள் என்றதுமே, புட்டு, கிழங்கு, பயறு என்பவை நினைவுக்கு வரும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி ஓண சாத்யா என்ற உணவின் சிறப்பைக் கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சாத்யா" என்ற உணவு தயரிக்கப்படுகிறது.


புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெறுகிறது. இவ்வுணவு எளிதில் செரிமானம் ஆவதற்காக " இஞ்சிக்கறி", "இஞ்சிப்புளி" ஆகியவற்றை உணவுடன் எடுதுக் கொள்வர்.


"புலிக்களி" அல்லது "கடுவக்களி" என்று அழைக்கப்படும் நடனம் ஓணத்திருவிழாவின் நாலாம் ஓணம் எனப்படும் நான்காம் நாளில் கொண்டாடப்படுகிறது. களி என்பது மலையாள மொழியில் நடனத்தைக் குறிக்கும். இந்நாளில் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி வருவர். புலிக்க்ளி நடனம் சுமார் 200 வருடங்களுக்கு முன் கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராம வர்ம சக்தன் தம்புரான் என்ற மன்னனால் ஓனம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டதாகும். இசை ஒலிக்கேற்ப ஒரு வித தாளத்துடன் புலி வேடமிட்டு ஆடுவர்.




ஓணம் பெண்கள் மகிழ்வோடு ஆடும் நடனம் "கைகொட்டுக்களி". கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து பாடல்க்ளைப் பாடியபடி ஆடுவர். பெரும்பாலும் கைகொட்டுக்களி பாடல்கள் மன்னன் மகாபலியைக் குறித்தும் அவரை வரவேற்பதாகவும் அமையும்.




ஒணம் திருவிழாவில் தவறாமல் இடம்பெறும் மற்றொரு சிறப்பு யானைத் திருவிழாவாகும். 10 ஆம் நாளான திருவோணத்தன்று, யானைகளுக்கு விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும் பூ தோரணங்களாலும் அலங்கரித்து அணிவித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். யானைகளுக்கு சிறப்பு உணவுகளும்




ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகள் என 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.


http://www.vikatan.com/news/images/onam.jpg
கேரளாவின் ஓணம் பண்டிகையைப் போன்றே ஒரு பூத்திருவிழா தாய்லாந்து மக்களால் கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள் அணிந்து, வீட்டைப் பூக்களால் அலங்கரித்து பல வகையான உணவு வகைகளை சமைத்து உண்டு மகிழ்வர். பூக்களால் ஆன வண்டிகளில் ஊர்வலம் நடைபெறும்.



நாகர்கோவில்: ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை பூ மார்க்கெட் களைகட்டியுள்ளது.


கேரள மக்கள்  திருவோணம் பண்டிகை கொண்டாடுகின்றனர். ஓணம் அன்று அவர்கள் தங்கள் வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிடுவது வழக்கம். இதனால் ஓணம் என்றாலே பூ விற்பனை சூடுபிடிக்கும். அதிலும் குமரி மாவட்டத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற தோவாளை பூ மார்க்கெட்டில் இருந்து பூ வாங்கிச் செல்ல கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருவார்கள்.



ஓணம் பண்டிகை கொண்டாடவிருப்பதையடுத்து  காலை முதலே தோவாளை பூ மார்க்கெட்டில் திரும்பும் திசையெல்லாம் கேரள வியாபாரிகள் கூட்டம் தான். கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையின்போது தோவாளை மார்க்கெட்டில் பூக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த ஆண்டு அப்படி எதுவும் நடக்காமல் இருக்க தர்மபுரி, சத்தியமங்கலம், ஒசூர் பகுதிகளில் இருந்து ஏராளமான லாரிகளில் பூக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் நேற்று மார்க்கெட்டில் பூக்களுக்கு தட்டுப்பாடில்லாமல் இருந்தது.\

http://tamil.boldsky.com/img/2012/08/28-ela-ada-recipe-300.jpg

கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையின்போது ரூ.2000க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பிச்சிப்பூவின் இன்றைய விலை ரூ.750 ஆகும்.



தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்களின் இன்றைய விலை(1 கிலோ)



மல்லிகைப் பூ - ரூ.700
வாடாமல்லி - ரூ. 50
கேந்தி - ரூ.30
சம்பங்கி - ரூ.200
கோழிப்பூ - ரூ. 25



ஓணம் என்றால் அத்தப்பூக்கோலம் தவிர அறுசுவை விருந்தும் உண்டு. விருந்துக்கு தேவையான காய்கறிகளை கேரள வியாபாரிகள் தமிழகத்தில் இருந்து தான் வாங்கிச் செல்கின்றனர்.



ஓணம் வ்ந்தாலே நாகர்கோவில் அப்டா மார்க்கெட், வடசேரி கனக மூலம் சந்தை, பஞ்சலிங்கபுரம் சந்தை, மார்த்தாண்டம் காய்கறி சந்தை, தக்கலை வாழைத்தார் சந்தை,குலசேகரம் காய்கறி சந்தை ஆகியவற்றில் வியாபாரம் சூடுபிடித்துவிடும். நேற்று காலை முதல் இந்த சந்தைகளுக்கும் கேரள வியாபாரிகள் படையெடுத்தனர்.
http://suriyantv.com/wp-content/uploads/2012/04/4-6-2012-5-the-10-day-annual-festival-of.jpg


கதளி, ரஸ்தாளி, பச்சை வாழை, செவ்வாழை பழத்தார் ஒன்று ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்பனையானது. ஆனால் வாழை இலைக்கு தான் கடும் தட்டுப்பாடாக இருந்தது. அதனால் ஒரு வாழை இலை ரூ.5 முதல் ரூ.10 வரை விற்கப்பட்டது. பண்டிகை அன்று வாழை இலையில் விருந்து உண்பது தான் சிறப்பு என்பதால் அதிக விலை கொடுத்து வாழை இலைகளை வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.



மேலும் வெள்ளரிக்காய், சேனை, பூசணிக்காய், தடியங்காய், சீனி அவரைக்காய், முள்ளங்கி, முட்டைக் கோஸ், காலி பிளவர், உருளைக்கிழங்கு போன்றவையும் இன்று அதிக விலைக்கு விற்கப்பட்டன.


நன்றி - விக்கி பீடியா, கூகுள், அமஸ் மேடம்