Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Thursday, December 01, 2016

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - 1/12/2016- 6 படங்கள் முன்னோட்டப் பார்வை

1   சைத்தான்
2 மாவீரன் கிட்டு
3 அழகென்ற சொல்லுக்கு அமுதா
4 பழைய வண்ணாரப்பேட்டை
5  3 DAYS TO KILL

6 UNDER WORLD 5 - BLOOD WAR


1   சைத்தான்

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'சைத்தான்' படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படம் ஜுலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'பிச்சைக்காரன்' படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் 'சைத்தான்' திரைப்படம் வெளிவரவுள்ளது. இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

அருந்ததி நாயர், கிட்டி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தில், சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜோ டி க்ரூஸ் நடிகராக அறிமுகமாகிறார்.

விஜய் ஆண்டனி இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, ஒடிசா உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. படத்தின் இறுதி கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 'சைத்தான்' படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஆரா சினிமாஸ் வெளியிடுகிறது. விஜய் ஆண்டனி படங்களில் இந்தப் படமே அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


பட ரிலீஸ் தள்ளிப் போவதால் 'சைத்தான்' பட டீம் ரசிகர்களைக் கவர்வதற்காக ஒரு ஐடியா செய்திருக்கிறது. இதற்கு முன்பு ராஜதந்திரம் படத்தின் 2ம் பாகத்துக்கான முதல் ஆறு நிமிடங்களை வெளியிட்டிருந்தார்கள்.

அதே உத்தியை 'சைத்தான்' படத்துக்கும் செய்திருக்கிறார்கள் படக் குழுவினர். 'சைத்தான்' படத்தின் முதல் ஐந்து நிமிடக் காட்சியை யூ-ட்யூபில் வெளியிட்டிருக்கிறார்கள். அதோடு சேர்த்து படத்தில் இடம் பெறும் ஜெயலக்‌ஷ்மி பாடலையும் வெளியிட்டிருக்கிறார்கள். 

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்த ஐந்து நிமிடக் காட்சியும், ஜெயலக்‌ஷ்மி பாடலும் திரையிடப்பட்டது குறிப்ப்பிடத்தக்கது. இதன் மூலம் டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கும் 'சைத்தான்' படத்துக்கான எதிர்பார்ப்பை தக்க வைக்கலாம் என்ற திட்டத்திலிருக்கிறார்கள்.

இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி கூறியது...
யாரு சைத்தான்? 
நீங்க கேட்ட கேள்வியில் தான் கதையே இருக்கு. விஜய் ஆண்டனி தான் இந்தப் படத்துல சைத்தான், ஆனா பாஸிட்டிவ் ரோல் தான். ஐடி கம்பெனியில் வேலை செய்யும் விஜய் ஆண்டனிக்கு வரும் பிரச்னை என்ன, அதனால் ஏற்படும் விளைவுகள் தான் சைத்தான் படத்தோட ஒன் லைன். படத்துல திரைக்கதை தான் ரொம்ப வலிமையா இருக்கும்.  இடைவேளி வரை ஒரு பேட்டன்லையும், இடைவேளிக்குப் பிறகு இன்னொரு கலர்லையும் படம் நகரும். அதான் இந்தப் படத்தோட ஸ்பெஷல்.  
சைத்தான் எந்தமாதிரியான ஜானர்? 

 சோறு, ஐடி காட்டுனு நம்ம கொத்தடிமையா நடத்தும் கங்காணி தான் ஐடி வேலைகள். அங்கிருந்து தான் ஐடியாவைப் பிடித்தேன். அங்க நடக்குற விஷயங்கள் தான் கதை. இதில் ப்ளாக் மேக்ஜிக்கோ, சைக்கோவோ, சீரியல் கில்லர் படம் மாதிரியோ கிடையாது. ஆனால் திரைக்கதை சைக்கலாஜிக்கள் ஆக்‌ஷன் ட்ராமாவா இருக்கும். கமர்ஷியல் படம் தான், இருந்தாலும் கொஞ்சம் வெரைட்டியா இருக்கும். நான், சலீம் மாதிரி விஜய் ஆண்டனிக்கு பொருந்தும் ஒரு கதாபாத்திரம் தான் சைத்தான். எந்த ஜானருக்குள்ளும் இந்தப் படத்தை அடக்க முடியாது

2 மாவீரன் கிட்டு
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாவீரன் கிட்டு' திரைப்படம், டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி உள்ளிட்ட பலர் நடிக்க சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'மாவீரன் கிட்டு'. வசனம் மற்றும் பாடல்களை யுகபாரதி எழுதி இருக்கிறார். 45 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டது.
இப்படத்தில் 4 கெட்டப்களில் நடித்திருக்கிறார் விஷ்ணு. சில காட்சிகளைத் தவிர, மீதமுள்ள மொத்த படப்பிடிப்பையும் ஒரே கட்டமாக முடித்தது படக்குழு.
அதனைத் தொடர்ந்து மீதமுள்ள காட்சிகளையும் முடித்துவிட்டு, படப்பிடிப்பு நிறைவுற்றதாக படக்குழு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து படத்தின் இதர இறுதிகட்ட பணிகளைத் துரிதப்படுத்தியது படக்குழு.
தற்போது டிசம்பர் 1ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. மேலும், தற்போது தணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறது படக்குழு.
'மாவீரன் கிட்டு' படத்தைத் தொடர்ந்து சந்தீப் கிஷன் - விக்ராந்த் நடிக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் சுசீந்திரன்


3 அழகென்ற சொல்லுக்கு அமுதா

ரால்ப் புரொடக்‌ஷன்ஸ், ரபேல் சல்தானா  தயாரிக்கும் நாகராஜன் இயக்கும்  படம் “அழகென்ற சொல்லுக்கு அமுதா”
ஒரு இளைஞனுடைய காதலில்  நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படமே “அழகென்ற சொல்லுக்கு அமுதா”.
ரிஜன் நாயகனாகவும், அர்ஷிதா  நாயகியாகவும்  நடிக்க, உடன் பட்டிமன்றம் ராஜா, ரேகாசுரேஷ், சுவாமிநாதன், சதுரங்கவேட்டை  வளவன்,  மகாந்தி சங்கர், கலை, நிப்பு இயக்குனர் சரவணசக்தி,  மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்,
கதை, திரைக்கதை, வசனம், எழுதி  நாகராஜன் இயக்குகிறார், இவர் இயக்குனர் சுசீந்திரனிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
இசை: ரஜின்மகாதேவ்
ஒளிப்பதிவு: ஜே.கே. கல்யாணராம்
கலை: ஜேகே
படத்தொகுப்பு: கோபிகிருஷ்ணா
ஸ்டண்ட்: ஓம்பிரகாஷ்,
பாடல்கள்: கவிஞர் சிநேகன், ல்லிதானந்த், பா. முகிலன், மதுரகவி
சென்னை வியாசர்பாடி, பெரம்பூர், தண்டையார்பேட்டை, மற்றும் எண்ணூர் போன்ற பகுதிகளில் படபிடிப்பு 


4 பழைய வண்ணாரப்பேட்டை

தொகுப்பாளராக இருந்து ரசிகர்களை கவர்ந்தவர் பிரஜின். இவர் கதாநாயகனாக ‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்னும் படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக அஸ்மிதா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ரிச்சர்ட், நிஷாந்த், கருணாஸ், ரோபா சங்கர், லொள்ளு சபா ஷேஷூ ஆகியோர் நடித்துள்ளார்கள்.
ஜி.மோகன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜூபின் இசையமைத்துள்ளார். ஸ்ரீ கிருஷ்ணா டாக்கிஸ் பட நிறுவனம் மூலம் பிரகாஷ் இப்படத்தை தயாரித்திருக்கிறார். வட சென்னையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் நீண்ட நாட்களுக்கு முன்பு முடிந்தும் படம் வெளியாகாமல் இருந்தது. பல காரணங்களால் இப்படம் வெளியாவதில் சிக்கல் இருந்து வந்தது.
இந்நிலையில், அனாமிகா பிட்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிட இருக்கிறது. இந்நிறுவனம் வெளியிடும் முதல் படம் இது. இந்நிறுவனத்தின் அறிமுக விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரகனி, இயக்குனர் விஜய் மில்டன், தாமிரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
இதில் தாணு பேசும்போது, ‘இந்த படத்திற்கும் எனக்கும் நிறைய சம்மந்தம் இருக்கிறது. ஏனென்றால், நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் பழைய வண்ணாரப்பேட்டை இடத்தில் தான். அந்த இடத்தை என்னால் மறக்க முடியாது. இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் போது என்னுடைய பழைய ஞாபகங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது. இந்த படம் நிறைய போராடங்களுக்குப் பிறகு வெளியாகிறது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்’ என்றார்.
இயக்குனர் தாமிரா பேசும்போது, ‘காத்திருப்புக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். அந்த வகையில் இப்படம் காத்திருந்து வெளியானாலும் சிறந்த வெற்றி பெறும்’ என்றார்.
இவ்விழாவில் கலந்துக் கொண்ட அனைவரும் படம் வெற்றியடைய வாழ்த்தினார்கள். இப்படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாக இருக்கிறது

5  3 DAYS TO KILL

Dying of brain cancer, a dangerous international spy is determined to give up his high stakes life to finally build a closer relationship with his estranged wife and daughter, whom he's previously kept at arm's length to keep out of danger; but first, he must complete one last mission - even if it means juggling the two toughest assignments yet: hunt down the world's most ruthless terrorist and look after his teenage daughter for the first time in ten years while his wife is out of town. Written by Relativity Media


6 UNDER WORLD 5 - BLOOD WAR

The next installment in the blockbuster franchise, UNDERWORLD: BLOOD WARS follows Vampire death dealer, Selene (Kate Beckinsale) as she fends off brutal attacks from both the Lycan clan and the Vampire faction that betrayed her. With her only allies, David (Theo James) and his father Thomas (Charles Dance), she must stop the eternal war between Lycans and Vampires, even if it means she has to make the ultimate sacrifice.Written by Sony Pictures Entertainment


நன்றி - விகடன் , மாலை மலர் , தினமணி , ஆல் சினி வெப் சைட்ஸ்


Monday, November 23, 2015

ஒரு நாள் இரவில் - திரை விமர்சனம்:

சத்யராஜ் ஒரு குடும்பத் தலை வர். சக கல்லூரி மாணவ னுடன் சகஜமாக பைக்கில் செல்லும் மகளை தவறாகப் புரிந்து கொள்கிறார். மகளின் படிப்பை நிறுத்திவிட்டு திருமணத்துக்கு நாள் குறிக்கிறார். மகள் மீதிருக் கும் கோபத்தில் அன்று இரவு நண்பர்களுடன் மது அருந்துகிறார். எப்போதும் தன்னுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆட்டோ டிரை வரை அழைத்துக்கொண்டு நகரை வலம் வருகிறார். பேருந்து நிறுத் தத்தில் நின்றுகொண்டிருக்கும் பாலியல் தொழிலாளியை (அனுமோள்) கண்டதும் சபலம் ஏற்படுகிறது.
காலியாக இருக்கும் தனது கடைக்கு அவரை அழைத்துவரு கிறார். அது அவரது வீட்டின் காம் பவுண்டை ஒட்டி வரிசையாகக் கட்டப்பட்ட கடைகளில் ஒன்று. அதில் சத்யராஜையும் அனு மோளையும் வைத்துப் பூட்டி விட்டு சாப்பாடு வாங்கிவர வெளியே செல்லும் ஆட்டோ டிரை வர், போலீஸில் மாட்டிக்கொள்ள நிலைமை விபரீதமாகிறது.
கோபத்துடன் வெளியே சென் றவர் திரும்பி வரவில்லையே என்று சத்யராஜின் குடும்பம் பதற, பூட்டிய கடைக்குள் சத்யராஜும் அனுமோளும் ஆட்டோ டிரைவருக் காகக் காத்திருக்க, அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் திரைக்கதை.
ஜாய் மேத்யூ எழுதி இயக் கிய ‘ஷட்டர்’ என்ற மலை யாளப் படத்தின் மறுஆக்கமாக வெளிவந்திருக்கிறது இப்படம். எத்தனை நீளமான படத்தையும் வெட்டித் தள்ளி விறுவிறுப்பாகத் தந்து விடுவார் என்று பெயர் பெற் றிருக்கும் படத் தொகுப்பாளர் ஆன் டனி இயக்குநராக அறிமுகமாகி யிருக்கும் படம். படத் தொகுப் பும் அவரே. 135 நிமிடங்கள் நீளம் கொண்ட மலையாளப் படத்தை 109 நிமிடங்களுக்குத் தமிழில் கொடுத் திருக்கிறார். அப்படியானால் மலை யாளத்தை விட இன்னும் வேகமும் விறுவிறுப்புமாகப் படம் இருக்கும் என்ற எண்ணம் வரலாம். ஆனால் அப்படி இல்லை.
பாலியல் தொழிலாளியுடன் கடைக்குள் மாட்டிக்கொண்ட சத்யராஜ், இது வெளியே தெரிந்தால் தன் குடும்ப கவுரவம் என்னாவது என்று பதறு கிறார். அந்த பெண்ணுக்கும் பெருத்த சங்கடம். இதனால் சத்ய ராஜை கண்டபடி திட்ட ஆரம்பிக் கிறார். அவரை சமாளிக்க வழி தெரியாமல் சத்யராஜ் விழி பிதுங்குகிறது.
இந்த பதற்றமும் தவிப்பும் தான் திரைக்கதையின் அழுத் தத்தை தீர்மானித்திருக்க வேண் டும். ஆனால் துணைக் கதாபாத்திர மான யூகி சேது, பையைத் தவற விட்டுவிட்டு அதைத் தேடி அல்லாடும் பிரச்சினையையும் இதற்கு இணையாகச் சேர்த்துக் கொள்வது திரைக்கதையின் வேகத்தை மட்டுப்படுத்துகிறது. சத்யராஜின் நிலைமை மீது மையம் கொள்ளும் பார்வையாளரின் கவனம் சிதறுகிறது.
இந்த பின்னடைவு, மூலப்படத் திலேயே உண்டு. ஆனாலும், மலையாளத்தில் இருந்த சின்னச் சின்ன அழகான தருணங்கள் இக்குறையை ஈடுகட்டின. அது இப்படத்தில் இல்லாததால், வறண்ட சித்தரிப்பாக மாறிவிட்டது.
டிரைவரால் பகலில் கதவைத் திறக்க முடியாது என்பது புரிகிறது. ஆனால் சத்யராஜின் நீண்ட கால நண்பரான அந்த டிரைவருக்கு, பின்புறம் இருக்கும் ஜன்னல் பற்றி தெரியாதா? அதன் வழியே சாப்பாடு கொடுத்திருக் கலாம். செய்தி பரிமாறிக்கொண் டிருக்கலாம். டிரைவர் மாற்று வழியை யோசிக்காமலேயே இருப்பது நம்பும்படி இல்லை.
கடைசியில் எதிர்பாராத ஒரு திருப்பம் மூலம் சிக்கல் விடுபடுவது பொருத்தமாகவே காட்டப்பட்டுள் ளது. அதன் பின்விளைவுகளும் அழகாகப் படமாக்கப்பட்டுள்ளன.
ஏ.ராஜேஷின் கலை இயக்கம், எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு, நவீன் ஐயரின் இசை ஆகிய அம்சங்கள் படத்துக்குத் தோள் கொடுக்கின்றன.
நட்சத்திரத் தேர்வில் இயக்கு நரின் ஆளுமை பளிச்சிடுகிறது. சேகராக வரும் சத்யராஜ், பாலியல் தொழிலாளியாக வரும் அனு மோள், திரைப்பட இயக்குநராக வரும் யூகி சேது, ஆட்டோ டிரைவ ராக வரும் வருண், சத்யராஜின் மகள் தீக் ஷிதா, மனைவி கல் யாணி என அனைவரும் தங்கள் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்கள். இமேஜ் உள்ள நடிகர்கள் ஏற்கத் தயங் கும் வேடத்தை எவ்வித மனத் தடையுமின்றி சத்யராஜ் ஏற்று நடித்திருப்பது பாராட்டுக்குரியது.
சத்யராஜ் அதிக வசனம் பேசா மல், ஒரு வேகத்தில் ஏற்பட்ட தாபத் தில் பொறியில் சிக்கிய எலியாக பதற்றம், தவிப்பு, பயம், அழுகை எனத் தேவைப்படும் உணர்ச்சி களை மட்டும் அளவாகக் கொட்டி அசத்துகிறார். துளியும் ஆபாசம் வெளிப்படாமல் பாலியல் தொழி லாளியின் நிலையை சித்தரிக் கும் அனுமோள் வசீகரிக்கிறார். வாய்ப்புகள் இல்லாமல் அல்லா டும் விரக்தியின் நடுவே மிச்சமிருக் கும் கொஞ்சம் நம்பிக்கையைக் கால்களில் தேக்கியபடி நடக்கும் யூகி சேதுவின் நடிப்பும் கதா பாத்திரமும் அருமை. ஆனால், திரைக்கதையின் துருத்தலான கதாபாத்திரம் என்பதால் அவர் வெளிப்படுத்தும் அவநம்பிக்கை நம்மை அயர்ச்சியில் தள்ளுகிறது. அதேநேரம், தேவைக்கு அதிக மாக ஒரு வார்த்தைகூட எழுதப் படாத அவரது வசனம் மொத்த படத்துக்கும் பெரிய பலம்.
கதையம்சம், திரைக்கதையில் உருவாகும் பதற்றம், இசை, ஒளிப்பதிவு, நடிப்பு எனப் பல அம்சங்கள் சிறப்பாக இருந்தாலும் திரைக்கதை ஏற்படுத்தும் அயர்ச்சி படம் ஒரு அனுபவமாக மாறுவதைத் தடுத்துவிடுகிறது.


thanx = the hindu

Saturday, November 21, 2015

ஒரு நாள் இரவில் - சத்யராஜ் சிறப்பு


மலையாளத்தில் ஹிட்டடித்த 'ஷட்டர்' படத்தின் ரீமேக், எடிட்டர் ஆண்டனி இயக்கத்தில் உருவான முதல் படம், 'பாகுபலி'க்குப் பிறகு சத்யராஜ் நடிப்பில் வெளியாகும் படம் என்ற இந்த காரணங்களே ஒரு நாள் இரவில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தின.


படம் எப்படி?

கதை: டீன் ஏஜ் மகள் ஒழுக்கத்தில் கறார் காட்டும் அப்பா, ஒரு கட்டத்தில் தானே அந்த ஒழுக்கக்கேடான செயலில் இறங்குகிறார். அது எது? ஏன்? அதற்குப் பிறகு என்ன ஆகிறது? என்பது மீதிக் கதை.


மலையாளத்தில் உருவான 'ஷட்டர்' படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று, விருதும் வென்றிருக்கிறது. அந்தப் படத்தை தமிழில் உருவாக்கி இயக்குநராக புரமோஷன் ஆகியிருக்கும் எடிட்டர் ஆண்டனியை லைக் செய்யலாம்.


த்ரில்லர் படத்தின் ஒட்டுமொத்த பலத்தையும் தன் தோள்களில் சுமந்து மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார் சத்யராஜ்.


கறாரான அப்பா, கண்டிப்பான கணவன், சின்னதாய் தோன்றும் சபல எண்ணத்திலும் மோகம் காட்டாத முகம், பதற்றம், பரிதவிப்பு, குழப்பம், பயம், அழுகை, சந்தேகம், யோசனை என அனைத்து உணர்வுகளையும் கண்முன் நிறுத்துகிறார்.கதாபாத்திரத்தின் தேவையறிந்து அதை உணர்வுபூர்வமாக நடித்துக் கொடுத்திருக்கிறார்.


பாசாங்கு இல்லாத இயல்பான நடிப்பில் அனு மோல் ஈர்க்கிறார். யூகி சேது, ஆட்டோ டிரைவராக வரும் அறிமுக நடிகர் வருண், சத்யராஜ் மகளாக நடித்திருக்கும் தீக்‌ஷிதா கோத்தாரி, சத்யராஜ் மனைவியாக நடித்த கல்யாணி நட்ராஜன் ஆகியோர் பொருத்தமான தேர்வு.
ரெண்டு படிப்பு இருக்கு. பட்டப்படிப்பு... பட்டபின் படிப்பு என்ற யூகி சேதுவின் வசனங்கள் சிம்பிளாய் வசீகரிக்கின்றன.


எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவும், நவீனின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம். பல படங்களுக்கு கத்தரி போடும் ஆண்டனி அந்த ஒரு பாட்டுக்கும் யோசிக்காமல் கத்தரி போட்டிருக்கலாம்.


ஜாய் மேத்யூ கதையை ஆண்டனியின் திரைக்கதை ஆக்கிய விதத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கவேண்டும். சத்யராஜ் புரிதலில் உள்ள பிரச்னை, நண்பர்களின் ரியாக்‌ஷன்கள் தெரிந்தும் அதுகுறித்த ஃபினிஷிங் இல்லாதது குறை. அனு மோல் பின்னணி தெரிந்த பிறகு எந்த பதற்றமும் இல்லாமல், அலட்டாமல் சாதாரணமாக யூகி சேது இருப்பது நெருடல்.


அந்தச் சிக்கலான சூழ்நிலையை சத்யராஜ் எப்படி கடந்து வரப் போகிறார்? என்பதுதான் திரைக்கதையின் மிகப் பெரிய யுத்தி. ஆனால், அதில் எந்த பதற்றத்தையும் பார்வையாளர்களுக்குக் கடத்தவில்லை. இதைத் தவிர்த்துப் பார்த்தால் 'ஒரு நாள் இரவில்' ஒரு முறை பார்க்க வேண்டிய சினிமா

thanks the hindu

Saturday, October 17, 2015

ருத்ரமாதேவி-சினிமாவிமர்சனம்,

ருத்ரமாதேவி


'பாகுபலி'க்குப் பிறகு அனுஷ்கா, ராணா நடிப்பில் வெளியாகும் படம், இளையராஜாவின் இசை, படத்தின் பிரம்மாண்ட வடிவமைப்புக் காட்சிகள், மெகா பட்ஜெட் படம் ஆகியவை 'ருத்ரமாதேவி'யின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தின.
'ருத்ரமாதேவி' எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா?
கதை: அரசன் மகள் அனுஷ்கா ஆண் வாரிசு இல்லாத குறையைப் போக்கும் விதமாக, தன் தந்தையுடன் ஆட்சி செய்கிறார். பகைவர்களால் ஆட்சிக்கு ஆபத்து வருகிறது. அந்த ஆட்சி என்ன ஆகிறது? அனுஷ்கா என்ன செய்கிறார்? ஆபத்துகளை முறியடித்தாரா? துரோகிகள், எதிரிகள் என்ன ஆனார்கள் என்பதே எல்லாம்.
நாயகியை மையப்படுத்திய அரச காலப் படைப்புக்கு நியாயம் செய்ய முயற்சித்திருக்கும் இயக்குநர் குணசேகரனைப் பாராட்டியே ஆக வேண்டும்.
இறுக்கமான உடல்மொழியிலும், கம்பீரமான குரலிலும், பாடல்களில் அழகு இளவரசியாகவும் கவனம் ஈர்க்கிறார் அனுஷ்கா. மற்ற பெண்களைப் போல இருக்க முடியவில்லையே என்ற ஏக்கத்திலும், எல்லாமே என் மக்களுக்காகத்தான் என்று எண்ணி மகிழ்வதிலும் அனுஷ்காவின் நடிப்பில் மெருகு கூடியிருக்கிறது. மதயானையை அடக்கும் காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது. வாள் சண்டை, வேல்சண்டை, குதிரையேற்றம், யானை சவாரி என எல்லாவற்றிலும் பிச்சு உதறுகிறார்.
சண்டி வீரன் கோன கண்ணா ரெட்டியாக, அல்லு அர்ஜூன் மக்களுக்கு நல்லது செய்கிறார். அவரின் இலகுவான வசனங்களுக்கு சிரிப்பு வருகிறது.
படத்தில் மன்னருக்கு எந்த வேலையும் இல்லை. நித்யாமேனனும், கேத்ரின் தெரசாவும் வந்து போயிருக்கிறார்கள். சுமன், ஆதித்யா மேனன் ஆகிய இருவரும் வாரிசைக் கொல்ல வேண்டும் என்று பேசிக் கொண்டேதான் இருக்கின்றனர்.
அரண்மனைகளிலும், போர்க்காட்சிகளிலும் 3டி துல்லியம் தெரிகிறது. முக்கியமாக சர்ப்ப வியூகத்தை கருட வியூகம் சூழும் காட்சி அருமை.
அஜயன் வின்சென்டின் ஒளிப்பதிவு, அரச காலத்தை கண்முன் நிறுத்தியது. ஆனால், நல்ல படத்துக்கு அது மட்டும் போதாதே?
இசையும் பாடல்களும் மனதில் ஒட்டவே இல்லை. க்ளோஸ்-அப் காட்சிகளில் உச்சரிப்புகள் உறுத்துகின்றன.
ராணா, அனுஷ்காவுக்கு இடையிலான காதலை இன்னும் விரிவாகக் காட்டியிருக்கலாம். முக்கிய வில்லனான தேவகிரி இளவரசன் மகாதேவன் (விக்ரம்ஜித் விர்க்) கதாபாத்திரத்தில் அழுத்தம் இல்லை. படத்தில் தெரியும் லாஜிக் ஓட்டைகள், ஆதாரக்கதையை நம்ப வைக்க மறுக்கின்றன. இரண்டாவது பாதியின் திரைக்கதையில் ஏற்படும் தொய்வு படத்தின் வேகத்தை முழுமையாகக் குறைக்கிறது.
'பாகுபலி' மீதான ரசிகர்களின் ஈர்ப்பை சாதகமாக்கிக் கொள்ளும் சூழல் இருந்தது. ஆனால், அந்த ஒப்பீடே ருத்ரமாதேவியை கவிழ்ப்பதற்கான ஆயுதமாகவும் மாறி பாதகத்தை ஏற்படுத்திவிட்டது.
மொத்தத்தில், விஜய் - அஜித் படங்களுக்கு விமர்சனம் எழுதும்போது முடிவில் விமர்சகர்கள் பலரும் சொல்வார்களே... இது அவர்களது ரசிகர்களுக்கான படம் என்று. அதைப் போலவே, 'ருத்ரமாதேவி' அனுஷ்கா ரசிகர்களுக்காக!

நன்றி-தஹிந்து
க.சே. ரமணி பிரபா தேவி

Saturday, October 10, 2015

கத்துக்குட்டி-சினிமாவிமர்சனம்-சீரியஸான ஜாலி சினிமா!

பத்திரிகையாளர் இரா.சரவணன் இயக்கத்தில் வெளியாகும் முதல் படம், பாரதிராஜா, வைகோ, சீமான் ஆகியோரால் பாராட்டப்பட்ட படம், ட்ரெயல்ர் - டீஸர்களில் ஈர்த்த கவனம்... இந்த காரணங்களே 'கத்துக்குட்டி' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
'கத்துக்குட்டி' நிஜத்தில் எந்த மாதிரி?
கதை: நரேன் ஒரு விவசாய ஆர்வலர். வேலை, வெட்டி இல்லாமல் வம்பு செய்பவருக்கு தேர்தலில் நிற்கும் சூழல் ஏற்படுகிறது. அதை ஏற்றுக்கொண்டாரா? அவரைச் சுற்றி என்ன நடக்கிறது? அதற்குப் பிறகு என்ன ஆகிறார்? என்பது ஒன்லைன்.
ஒரு கருத்தை முன் வைக்க எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் படைப்பின் நேர்த்திக்காக உழைப்பது ஆரோக்கியமான விஷயம். மீத்தேன் பிரச்சினையை அழுத்தமாகப் பதிவு செய்த அறிமுக இயக்குநர் இரா.சரவணனுக்கு வெல்கம் பொக்கே கொடுக்கலாம்.
வெட்டியாய் திரிவது, குடித்துவிட்டு சலம்புவது, அப்பாவுக்காக துடிப்பது, விவசாயத்தை தவறாகப் பேசுபவனின் சட்டையைப் பிடித்து உலுக்குவது, காதலில் கிறங்குவது என அறிவழகன் கதாபாத்திரத்துக்கு நரேன் சரியாகப் பொருந்துகிறார். ''பட்டினிச் சாவுங்கிறது விவசாயி பட்டினியால செத்துப்போறது இல்லை. மத்தவங்க பட்டினியை போக்க முடியலைங்கிற வருத்தத்துல செத்துப் போவது'' என வசனம் பேசும்போது கதாபாத்திரத்துக்கு கம்பீரம் கூட்டுகிறார்.
சூரியின் கவுன்டர் வசனங்களுக்கும், ரைமிங் பன்ச்களுக்கும் தியேட்டர் குலுங்குகிறது.
''அவன் ஆடுனது டான்ஸாடா? ஒரு ஃபைட்டயே டான்ஸா மாத்திக்கிட்டு போயிக்கிட்டு இருக்கான்'' என்று சூரி சொல்லும்போது ஆரம்பித்த கை தட்டல் படம் நெடுக நீண்டதுதான் ஆச்சர்யம்.
எறும்புகளை விரட்டுவதற்காக ஸ்ருஷ்டி டாங்கே செய்யும் ஐடியா அசத்தல். கன்னத்தில் குழி விழும் அளவுக்கு சிரிக்கும் ஸ்ருஷ்டி மனதில் நிறைகிறார்.
''செல்போன் டவர் வந்தா கரிச்சான், மைனா, புறான்னு எந்த பறவையும் இங்க இருக்காது'' என்று ஸ்ருஷ்டி பேசும் வசனத்துக்கு அப்ளாஸ் அள்ளுகிறது.
பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் நரேன் அப்பாவாக இதில் அறிமுகம் ஆகியிருக்கிறார். மாவட்ட செயலாளராக வரும் ஞானவேல், ஸ்ருஷ்டியின் அப்பாவாக வரும் ராஜா, துளசி, தேவிப்ரியா ஆகியோர் பொருத்தமான தேர்வு.
சந்தோஷ் ஸ்ரீராம் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம். அருள் தேவின் இசையில் களைக்கட்டு கண்ணால மெனக்கெட்டு பாடல் ரசிக்க வைக்கிறது.
அடிதடி இளைஞன் அரசியலுக்கு வரும்போது என்ன ஆவான்? என்பதை இடைவேளையாக வைப்பது மாஸ்.
விவசாயத் தொழில், கடன் பிரச்சினை, தற்கொலை, பட்டினிச்சாவு, மீத்தேன் பிரச்னை, கூல்டிரிங்ஸ் நச்சு , ஈமுகோழி, ரியல் எஸ்டேட், டாஸ்மாக் என்று கிடைத்த கேப்பில் எல்லாம் சந்து விடாமல் பிரச்சினையின் தீவிரத்தை விதைத்திருக்கிறார் இயக்குநர் சரவணன்.
டிரான்ஸ்பார்மர் இருக்கு... மின்சாரம்தான் இல்லை என்பதை உணர்த்துவதற்காக டிரான்ஸ்பார்மரில் அரிக்கேன் விளக்குகளைத் தொங்கவிட்டிருக்கும் விவசாய பூமியை பதிவு செய்த விதத்தில் கவனம் ஈர்க்கிறார்.
படத்தில் சில காட்சிகள் கோர்வையாக இல்லாமல் அங்கும் இங்குமாக இருக்கின்றன. ஆனால், அதை தஞ்சை மண்ணின் வாழ்வியலாலும், வசனங்களாலும், சூரியாலும் நிரப்பி இருக்கிறார்.
ஹீரோவை வைத்துதான் கிளைமாக்ஸ் வைக்க வேண்டுமா என்ன? அதிலும், வித்தியாசம் காட்டி இருக்கிறார் இயக்குநர்.
மண்ணின் பெருமைக்குக் காரணமான விவசாயிகளின் வலிகளை உணர்த்திய விதத்தில் 'கத்துக்குட்டி' கண்ணியமான சினிமா. நம் காலத்து சமூகப் பிரச்சினைகளை நையாண்டித்தனத்துடன் சுவாரசியமாக ரசிகர்களைக் கட்டிப்போட்ட விதத்தில் இது கெத்துக்குட்டி!


நன்றி-தஹிந்து

Friday, October 09, 2015

கோர்ட் -திரை விமர்சனம்: (மராத்தி)-ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில்

'கோர்ட்' படத்திலிருந்து ஒரு காட்சி
'கோர்ட்' படத்திலிருந்து ஒரு காட்சி
சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்ற மராத்திய மொழி படமான 'கோர்ட்' இந்தியாவின் தேர்வாக ஆஸ்கருக்குப் போட்டியிடவுள்ளது.
ஹாலிவுட்டின் மிக உயரிய விருதான ஆஸ்கரில், மற்ற நாட்டு திரைப்படங்களுக்கென ஒரே ஒரு பிரிவு மட்டுமே உள்ளது. சிறந்த அந்நிய மொழித் திரைப்படம் என்ற அந்தப் பிரிவில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களும் போட்டியிடும். தற்போது இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் ’கோர்ட்’, இறுதிப் பட்டியலில் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மூத்த நடிகரும், இயக்குநருமான அமோல் பலேகர் தலைமையில், 16 பேர் கொண்டு நடுவர் குழு ஒருமனதாக 'கோர்ட்' படத்தை தேர்ந்தெடுத்துள்ளது.
சமூகத்துக்காகப் போராடும் வயதான கவிஞர் ஒருவர் மீது வழக்கு தொடரப்படுகிறது. அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை. இந்திய நீதித்துறையின் செயல்பாடு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பும் 'கோர்ட்', குற்றம் சாட்டப்பட்டவர், அவருக்காக வாதாடும் வக்கீல், அரசு வழக்கறிஞர், அந்த வழக்கை பார்வையிடும் நீதிபதி என பலரின் பார்வையில் விரிகிறது.
இம்முறை இந்தத் தேர்வுக்கு, 'மாசான்', 'பிகே', 'ஹைதர்', 'காக்கா முட்டை', 'பாஹுபலி' உள்ளிட்ட 30 படங்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.


அமைதி.. அமைதி.. கோர்ட் நடக்கிறது
நாராயணன் காம்ளே என்ற மராத்திய கவிஞர் சிறையில் அடைக்கப்படுகிறார்.
குற்றம்: சாக்கடையை சுத்தம் செய்யும் தொழிலாளியைத் தற்கொலைக்கு தூண்டியதாக.
எப்படித் தூண்டினார்?: அவர் மேடையில் பாடல்கள் பாடியதன் மூலமாக. உணர்ச்சிப் பாடல்கள் மூல மாக. ‘இவ்வுலகம் வாழ வழியில் லாதது. சாகத்தான் லாயக்கு’ என்றக் கருத்தைச் சொன்ன தால்.
அவருக்கு வருமானம்: குழந்தை களுக்கு டியூசன் சொல்லிக் கொடுப்பது.
அவர் கைது செய்யப்பட்ட நாளில் சொல்லிக் கொடுத்தது: வண்ணத்துப்பூச்சிகள் பற்றி.
இதில் வரும் வழக்கறிஞர்கள் கூட மாறுபட்ட பாத்திரங்கள்தான்...
அரசாங்க வழக்கறிஞர்: கொஞ்சம் ஏழைதான். சாதாரண வீடு. பையனை பள்ளியில் இருந்து அவரே போய் கூட்டிக் கொண்டு வர வேண்டியிருக்கிறது. பேருந்து, தொடர்வண்டி நெரிசலில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. தேங் காய் மூடி வக்கீல் என்ற பட்டப் பெயரும் உண்டு. பட்டினி இருக்கக் கூட வாய்ப்பு இருக்கிறது. மக்களுடன் அதிக பழக்கம் கொண்டவராக இருக்கிறார். பெண்.
கவிஞருக்காக வாதாடும் வழக் கறிஞர்: கொஞ்சம் வசதியானவர். சாதாரண மக்களுக்கும் அவருக்கும் அதிகம் சம்பந்தம் இல்லை என்பது மாதிரி நடந்து கொள்கிறார். மாலை நேர பார், ஆங்கில பல்கேரியன் நடன நிகழ்ச்சிகளுக்குப் போவார். உயர்ந்த ரக மதுபானம் வாங்குபவர், ஜாஸ் கேட்பவர். சற்றே உயர் சாதிக்காரர். பெயர் வோரா.
இந்த வழக்கு விசாரணைக்கு வரும் நீதிமன்றத்தின் நீதிபதி: ஆங்கிலம் பிடிக்கும். அதேசமயம், ‘கவிதை, கவிஞர்... இதெல்லாம் என்ன?’ என்று எரிச்சல்படுபவர். சாட்சியாக வந்த பெண் - ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் உடை போட்டுக் கொண்டு வந்த காரணத்தால், நீதிமன்றத்துக்கு இந்த டிரஸ் கோடு சரிபட்டுவராது என்று வழக்கை விசாரிக்க மறுத்து ஒத்தி வைப்பவர்.
மாலை நேரத்தில் நாடகங்களுக்குப் போய் நகைச்சுவைகளை ரசிப்பவர். அவ்வப்போது பிக்னிக் என்று போகிறவர். கவிஞரிடம் இருந்து 40 தடை செய்யப்பட்ட புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை ஆச்சரியம் பொங்கக் கேட்பவர்.
கவிஞர் மீதான விசாரணை நடக்கிறது. அவருக்கு வயது 65. ஆனால் வயது உடல் நிலை கருதி அவரது தரப்பு வழக்கறிஞர் ஜாமீன் கேட்டாலும், அரசாங்க பெண் வழக்கறிஞர் மறுக்கிறார். ‘இவர் பலமுறை விதிகளை மீறியவர். ஜாமீன் தரக்கூடாது. இவர் புரட்சிகர கருத்துகளை பாடி மக்களை தொடர்ந்து தற்கொலைக்குத் தூண்டுவார்’ என்கிறார்.
செத்துப் போன துப்புரவு தொழிலாளியின் மனைவியிடம் நீதிபதி விசாரிக்கிறார். அவளுக்கு கணவனின் வயது தெரியவில்லை. கவிஞரின் பாடல் தற்கொலைக்குத் தூண்டித்தான் கணவர் செத்தாரா... தெரியாது. அவர் பாதுகாப்பு முகமூடி, கவசம், உறைகள் அணிய மாட்டார். அதுவும் காரணமாக இருக்கலாம்.
கவிஞருக்கு தற்காலிகமாக ஜாமீன் கிடைத்தாலும் அவர் சிறை, வழக்கு அனுபவங்களை புத்தகமாக்கிக் கொண்டிருக்கும் வேளையில் அச்சகத்தில் மீண்டும் கைது செய்யப்படுகிறார். விசாரணை தொடர்கிறது.
அழுக்கு நீதிமன்றம், நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகள், நெரிசலான இருக்கைகள் எல்லாம் இயல்பாகக் காட்டப்பட்டுள்ளன.
கவிஞர் ஒருவரை முன்வைத்து ஒரு படம் நீளுவது விசேஷமானது, அவர் தலித் கவிஞர். மும்பை புற நகரில் வாழ்கிறவர். மேடையில் பாடும் தோற்றத்தில் கத்தார் போன்ற புரட்சிக் கவிஞரை - பாடகரை நினைவூட்டுகிறார்.
கடைசிக் காட்சியில் நீதிபதி தனது நண்பர்களுடன் பிக்னிக் போகிறார். பயணத்தில்... ஐ.ஐ.டி. படித்து பெரிய தொகையை சம்பாதிக்கும் இளைஞர்கள் பற்றி கவலைப்பட்டுக் கொள்கிறார். தூங்கிப் போகிறார். பையன்களோ கலாட்டா செய்து அவரை எழுப்பிவிடுகிறார்கள். பொறுப்பற்ற இளைஞர்கள் என்று ஒருவனை அறைகிறார். மீண்டும் தூங்க ஆரம்பிக்கிறார். கிண்டல் செய்து விமர்சிக்கும் இளைய தலைமுறை, தூங்கிக் கொண்டிருக்கும் நீதித்துறை என்று இதை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.
வெனிஸ் திரைப்பட விழாவில் பரிசு பெற்றுள்ள இந்தப் படம் மும்பை திரைப்பட விழாவிலும் மூன்று பரிசுகள் வென்றுள்ளது. இதன் இயக்குநர் சைத்தன்ய தம்ஹனா 27 வயது இளைஞர். இதில் நடித்த துப்புரவு தொழிலாளியின் மனைவி அசலானவர்.
உண்மையில் சாக்கடை குழியில் இறந்த போன தொழிலாளி ஒருவரின் மனைவி! மற்ற நடிகர்களும் தொழில் முறை நடிகர்கள் அல்ல, இதற்கென்றே பயிற்சி தரப்பட்டு நடித்தவர்கள். சாதி, அரசியல் அதிகாரம் பற்றிய பல விவாதங்களைக் கொண்டிருக்கும், தூங்கும் யாரையும் தட்டி எழுப்பும் மராத்தி படம்தான் இந்த - ‘கோர்ட்’

thax-thehidu

Monday, September 28, 2015

தற்போதைய ‘மெதட் ஆக்டிங்’-கருந்தேள் ராஜேஷ்

  • ‘காட்ஃபாதர் II’ படத்தில் குரு லீ ஸ்ட்ராஸ்பெர்க்குடன் ராபர்ட் டி நீரோ

    ‘காட்ஃபாதர் II’ படத்தில் குரு லீ ஸ்ட்ராஸ்பெர்க்குடன் ராபர்ட் டி நீரோ
  • பொது நிகழ்வொன்றில் குருவும் சீடரும்

    பொது நிகழ்வொன்றில் குருவும் சீடரும்
சென்ற கட்டுரையில் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த ரஷ்ய நாடகக் கலைஞரான ஸ்டானிஸ்லாவ்ஸ்கி பற்றியும், அவர் வடிவமைத்த மெதட் ஆக்டிங் என்ற நடிப்பு உருவாகக் காரணமாக அமைந்த சூழல் பற்றியும் பார்த்தோம். ஆனால், குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவெனில், தான் ஆராய்ந்து உருவாக்கிய இந்த நடிப்பு முறைமைக்கு ‘system’ என்றே முதலில் பெயரிட்டார் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி. அவர் இந்த முறையை உருவாக்கிப் பல ஆண்டுகள் கழித்துதான் ‘மெதட் ஆக்டிங்’ என்ற பதம் உருவாக்கப்பட்டது.
பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு ஸ்டானிஸ்லாவ்ஸ்கி உருவாக்கிய இந்த முறைமையில் மூன்று செயல்முறைகள் முக்கியமானவை. அவற்றைப் பற்றி இப்போது பார்ப்போம். இவைதான் தற்போதைய ‘மெதட் ஆக்டிங்’குக்குக் காரணிகளாக விளங்குகின்றன.
1. ஒரு நடிகன், ஒரு பாத்திரத்தை ஏற்றுக்கொள்ளும்போது, அந்தப் பாத்திரத்தைப் பற்றிய பல கேள்விகளை மனதில் எழுப்பிக்கொள்ளுதல் வேண்டும். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட சிச்சுவேஷனில் அந்தக் கதாபாத்திரம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற கேள்வி வரும்போது, ‘அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன்?’ என்ற கேள்வி உதவும். இதுபோல், ‘எனக்கு இந்தச் சம்பவம் நிஜ வாழ்க்கையில் நடந்திருந்தால் எனது ரியாக்‌ஷன் என்னவாக இருந்திருக்கும்?’ என்பது இதன் இன்னொரு வடிவம். இதுபோன்ற பல கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு உண்மையான பதில்கள் கிடைத்தால் மட்டுமே அந்தக் கதாபாத்திரத்தை ஒரு நடிகன் சிறப்பாக நடிக்க முடியும்.
2. குறிப்பிட்ட கதாபாத்திரம் அந்த நாடகத்தில் செய்யக்கூடிய செயல்களை அலசி, ஏன் அப்படிப்பட்ட செயல்களை அது செய்கிறது என்று யோசித்தல். இப்படி யோசித்தால், அந்த நாடகத்தில் இருக்கும் சம்பவங்களுக்கு மிகவும் முன்னர், அந்தக் கதாபாத்திரத்தின் ஆரம்ப வருடங்களிலிருந்து அது நடந்துகொண்ட முறைகளைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும். உதாரணத்துக்கு, ஒரு போலீஸ்காரனைக் குத்திக் கொன்றுவிடுகிறாள் கதாநாயகி. ஏன் என்று யோசித்தால், அவளது வாழ்வில் ஒரு கட்டத்தில் போலீஸ்காரர்களால் இன்னல்களை அனுபவித்திருக்கிறாள் என்பது புரியும்.
அதாவது, அந்தக் குறிப்பிட்ட நாடகத்தில் இருக்கும் விஷயங்களை வைத்துக்கொண்டு கதாபாத்திரத்தின் குணங்களை விளக்குதல் (இதற்குப் பெயர்தான் தற்போது ‘கேரக்டர் ஸ்கெட்ச்’ என்று திரைக்கதைகளில் சொல்லப்படுகிறது. இதனை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே ஸ்டானிஸ்லாவ்ஸ்கி விளக்கிவிட்டார்). இப்படி ஒரு கதாபாத்திரத்தைப் பற்றிய முடிவுக்கு வருதல், அந்தக் கதாபாத்திரம் எடுக்கும் முடிவுகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த உதவும்.
3. நாடகத்தின் ஒவ்வொரு காட்சியிலும், குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் நோக்கம் என்ன என்பதை அந்த நடிகர் உணர வேண்டும். நாடகத்தை முழுவதும் பார்த்தால், கடைசியில் அந்தக் கதாபாத்திரத்தின் லட்சியத்தில் அது வெல்கிறதா, தோற்கிறதா என்பது புரிந்துவிடும் (கதாநாயகியை மணந்துகொள்ளுதல், கதாநாயகியோடு தற்கொலை செய்துகொள்ளுதல், கதாநாயகியின் தந்தையைக் கொல்லுதல், கதாநாயகியோடு ஊரை விட்டே ஓடுதல், இத்யாதி…).
ஆனால், அப்படித் தனது இறுதி லட்சியத்தை நிறைவேற்றும் பாதையில் ஒவ்வொரு காட்சியாக அந்தக் கதாபாத்திரம் நடிக்கும்போது, அந்த ஒவ்வொரு காட்சியிலும் அதன் நோக்கம் என்ன என்பதை நடிகர்கள் உணர வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு குறிப்பிட்ட காட்சியின் நோக்கம், பல் தேய்க்க வேண்டும் என்றுகூட இருக்கலாம். ஸ்க்ரிப்டில் அது வெளிப்படையாக இருக்காது. ஆனால், அதனை அந்த நடிகர் உணர வேண்டும். அப்போதுதான் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த முடியும்.
இப்படி உணர்வதற்கு, அந்தக் காட்சியை அந்த நடிகர் உடைத்து, சிறிய பகுதிகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். எப்படியென்றால், பல் தேய்க்க ப்ரஷ்ஷைத் தேடுவதாக, ப்ரஷ் கிடைத்தும் பேஸ்ட்டைத் தேடுவதாக, பேஸ்ட்டைத் தேடும்போது யாராவது வந்து கழுத்தறுப்பதாக, இப்படிப் பல காட்சிகள் ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கலாம். அப்படிப்பட்ட காட்சிகளில் ஒவ்வொரு காட்சிக்கும் என்ன நோக்கம் என்பதை அந்த நடிகர் தெரிந்துகொள்ள வேண்டும். ப்ரஷ் கிடைத்தவுடன் சந்தோஷத்தை வெளிப்படுத்தலாம்.
பேஸ்ட் கிடைத்ததும் உற்சாகம். கழுத்தறுப்பு கேஸ் வந்ததும் கோபம் - ஆனால் அதை வெளிப்படுத்த இயலாத இயலாமை - இப்படி. அதேபோல் வசனங்களைப் பேசுவதிலும், ஒவ்வொரு வரியிலும் ஒளிந்திருக்கும் குணங்களை வெளிப்படுத்தவும் அந்த நடிகர் கற்றுக்கொள்ள வேண்டும். உதாரணம்: கழுத்தறுப்புடன் பேசும்போது நைச்சியமாக அவரை வெளியேற வைத்தல் - அதற்கேற்ற முகபாவம் - இப்படி.
இப்படியாக, நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்றால் அது கான்ஸ்டண்டின் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியே. உண்மையாகவே இலக்கணம் எழுதி அதைத் தொகுத்து வைத்தவர் இவர். ஆனால், இவர் இப்படி இலக்கணம் எழுதிய 1900-களில் மெதட் ஆக்டிங் என்ற விஷயமே இல்லை. இவரது குறிப்புகளிலிருந்து வளர்ந்து, பின்னாட்களில் பலராலும் பின்பற்றப்பட்டு, மெருகூட்டிச் செய்யப்பட்ட விஷயமே இந்த மெதட் ஆக்டிங். எனவே, அதற்கு முழுமுதல் காரணம் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி என்றுதான் சொல்லியாக வேண்டும்.
மெதட் ஆக்டிங் என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கு முன்னர், இன்னும் சில சுவையான தகவல்களையும் கவனிப்போம்.
‘காட்ஃபாதர்- 2’ திரைப்படத்தில் நடித்ததற்காக, ‘சிறந்த துணை நடிகர்’ பிரிவில் இருவர் பரிந்துரைக்கப்பட்டனர். அந்த இருவரில் ஒருவர் குரு. இன்னொருவர் அந்த குருவின் சிஷ்யர். ஒரே சமயத்தில் ஒரே படத்துக்காக நாமினேட் செய்யப்பட்ட இந்த குரு-சிஷ்ய ஜோடியில் பரிசை இறுதியில் வென்றது குருவல்ல. சிஷ்யரே குருவையும் விஞ்சி நடித்தமைக்காக சிறந்த துணை நடிகர் பரிசை வென்றார்.
அந்த சிஷ்யரின் பெயர் - ராபர்ட் டி நீரோ. அவரது குருநாதர், டி நீரோவுக்கு மட்டுமல்லாமல் அல் பசீனோ, மர்லின் மன்ரோ, ஜேம்ஸ் டீன், டஸ்டின் ஹாஃப்மேன், பால் ந்யூமேன் போன்ற ஒரு டஜன் நடிகர்களுக்கு குருவாக விளங்கினார். ‘ஹாலிவுட்டில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்’ என்ற புகழுக்குச் சொந்தக்காரர். மர்லின் மன்றோ இறந்த சமயத்தில், அவரது உயிலின்படி அவரது சொத்துக்களில் 75 சதவீதத்தை இந்த நபருக்கு எழுதி வைத்தார். காரணம் - ‘அவர் எனக்கு ஒரு தந்தையைப் போல. அவரிடம் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நான் புகழின் உச்சியை அடைய முழுமுதல் காரணம் இவர்தான்’ என்று சொல்லியிருக்கிறார் மன்றோ.
அவர்தான் லீ ஸ்ட்ராஸ்பெர்க். எப்படி ரஷ்யாவில் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி நடிகர்களை அவதானித்து அவரது சிஸ்டத்தை உருவாக்கினாரோ, அப்படி ஸ்ட்ராஸ்பெர்க்குக்கு ஸ்டானிஸ்லாவ்ஸ்கி ஒரு கிரியா ஊக்கியாக இருந்தார் என்று அறிகிறோம். ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்டானிஸ்லாவ்ஸ்கி, அமெரிக்காவைச் சேர்ந்த லீ ஸ்ட்ராஸ்பெர்கை பாதித்த பின்னணிக் கதை பரபரப்பான ஒரு திரைக்கதை போன்றது. அதை அடுத்த வாரம் பார்ப்போம்.
தொடர்புக்கு [email protected]

நன்றி-தஹிந்து

Tuesday, July 14, 2015

சினிமா ரசனை 6: சிறந்த இயக்குநர்களின் பாதை!

பெரும்பாலான திரைப்படங்கள், பெரிய ஸ்டூடியோக்களின் வாயிலாகவே தயாரிக்கப்படுகின்றன. அப்படி இல்லாமல், சிறிய பட்ஜெட்டுடன், தனிநபராலோ அல்லது ஒரு சிறிய குழுமத்தாலோ, பெரிய ஸ்டூடியோக்களின் ஆதரவு இல்லாமல் எடுக்கப்படும் படங்களும் வருகின்றன. இன்டிபென்டண்ட் சினிமா’ (Independent Cinema) என்று இப்படங்கள் அழைக்கப்படுகின்றன.
சுருக்கமாக ‘இன்டி ஃபில்ம்ஸ்’ (Indie films). இப்படிப்பட்ட படங்களில் வழக்கமான மசாலாத் தன்மைகள் இருக்காது. மாறாக, இயக்குநரின் நோக்கம், அவரது கதைசொல்லல் முறை ஆகியவைகளுக்கே முக்கியத்துவம் இருக்கும். இந்த ‘இன்டி’ படங்கள் இன்றுவரை பல ஜாம்பவான்களை அளித்திருக்கின்றன. இந்த வகைப் படங்கள் பற்றியும், ஒரு சிறந்த ‘இன்டி’ இயக்குநர் பற்றியும் இந்த வாரம் கவனிக்கலாம்.
கிட்டத்தட்ட நாற்பதுகளிலிருந்தே இந்த ‘இன்டி’ படங்கள் எடுக்கப்பட்டுவந்திருக்கின்றன. குறைந்த பட்ஜெட்டில், சொல்ல விரும்பிய கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, பிற கேளிக்கை அம்சங்கள் திரைப்படத்தைக் கெடுக்காமல், நல்ல நடிகர்களை வைத்து இயக்கப்பட்ட இப்படிப்பட்ட படங்களில் 1953-ல் வெளியான ‘லிட்டில் ஃப்யூஜிட்டிவ்’ (Little Fugitive) முக்கியமானது.
இந்தப் படம் இன்றளவும் பேசப்படும் படங்களில் ஒன்று. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னர் பல குறைந்த பட்ஜெட் படங்கள் எடுக்கப்பட்டன. ‘தி ஃபில்ம்-மேக்கர்ஸ்’ கோஆப்பரேட்டிவ்’ (The Film-Makers' Cooperative) போன்ற சில அமைப்புகளும் நிறுவப்பட்டு, ஸ்டூடியோ முறைக்கு வெளியே, இதுபோன்ற நல்ல படங்களை விநியோகிப்பதற்காகத் துவங்கப்பட்டன.
அறுபதுகளிலும் எழுபதுகளிலும் ‘இன்டி’ படங்கள் பல்வேறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டன. திகில், செக்ஸ், போதை மருந்துகள் ஆகியவற்றை உள்ளடக்கிய கதைகள் வெளியாயின. இந்தச் சமயத்தில்தான் ஃப்ரான்ஸிஸ் ஃபோர்ட் காப்புலா (Francis Ford Coppola), ‘தி ரெய்ன் பீப்புள்’ (The Rain People) மூலம் அறிமுகமாகிறார். இதன் பின்னர் ஜார்ஜ் லூகாஸும் ‘டிஎச்எக்ஸ் 1138’ (THX 1138) படத்தை எடுக்கிறார். இவர்கள் மூலம் ‘இன்டி’ படங்கள் மிகவும் பிரபலம் அடைந்தன.
 s
டேவிட் லிஞ்ச், தனது ‘எரேசர்ஹெட்’ (EraserHead) படம் மூலம் பிரபலம் அடைந்தார். இப்படத்துக்கு ஏராளமான ஆஸ்கர் பரிந்துரைகள் கிடைத்தன. உடனடியாக ஜார்ஜ் லூகாஸ் இவரிடம் வந்து, ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கச் சொல்லிக் கேட்கிறார். ஆனால், சுதந்திரமான இயக்குநராக அறிமுகமாகி, பின்னர் ஹாலிவுட் ஸ்டூடியோக்களிடமே போய் சிக்கிக்கொண்ட ஜார்ஜ் லூகாஸின் அழைப்பை லிஞ்ச் நிராகரித்தார். இனியும் தன்னிஷ்டத்துக்கே படங்கள் எடுக்க வேண்டும் என்பதே டேவிட் லிஞ்ச்சின் விருப்பமாக அப்போது இருந்தது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் அமெரிக்க மக்கள் மீது இந்த ‘இன்டி’ படங்கள் செலுத்திய ஆதிக்கம் மறக்க முடியாதது. ஸ்டூடியோக்களின் மசாலா கலந்த, மிகைப்படுத்தப்பட்ட திரைப்படங்கள் மக்களை எப்போதெல்லாம் அலுப்பாக்கினவோ, அப்போதெல்லாம் ‘இன்டி’ படங்களே நல்ல படங்களை மக்களுக்கு வழங்கியுள்ளன. பல புதிய இயக்குநர்கள் இப்படங்களில் அறிமுகமாகி, இன்றளவும் மிகப் பிரபலமாகவும் விளங்குகின்றனர். அதேசமயம், ஜார்ஜ் லூகாஸ், க்வெண்டின் டாரண்டினோ (Reservoir Dogs) போன்ற ‘இன்டி’ இயக்குநர்களுமே தற்போது ஸ்டுடியோக்களின் பக்கம் சாய்ந்துவிட்டனர்.
இப்போதும் ‘இன்டி’ படங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் சிறந்த இயக்குநர்களில் ஜிம் ஜார்முஷ் (Jim Jarmusch) முக்கியமானவர். 1980-ல் ‘பெர்மனெண்ட் வக்கேஷன்’ (Permanent Vacation) படத்துடன் தனது ‘இன்டி’ வாழ்க்கையை ஆரம்பித்தவர் ஜார்முஷ். இந்தப் படத்தின் பட்ஜெட் வெறும் பனிரண்டாயிரம் டாலர்களே. அந்தப் பணமும், NYU திரைப்படக்கல்லூரியில் இவருக்கு ஸ்காலர்ஷிப்பாகக் கிடைத்த பணம். அதைக் கல்லூரியில் கட்டாமல் அதை வைத்துப் படம் எடுத்துவிட்டார் ஜார்முஷ். இதன்பின்னர் 1984-ல் ‘ஸ்டிரேஞ்சர் தன் பேரடைஸ்’ (Stranger Than Paradise) படத்தை 1,25,000 டாலர்களில் எடுத்து வெளியிட்டார்.
உலகெங்கிலும் உள்ள நல்ல சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்த படம் இது. கான் திரைப்பட விழாவில் Camera d'Or என்ற, சிறந்த முதல் படத்துக்கான விருது இப்படத்துக்குக் கிடைத்தது (காரணம், ‘பெர்மனெண்ட் வெகேஷன்’ படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை). இப்படத்துக்குப் பின்னர் பல படங்களை அவ்வப்போது எடுத்து வெளியிட்டிருக்கிறார் ஜார்முஷ். இவரது படங்களில் டெட் மேன், கோஸ்ட் டாக், காபி அண்ட் சிகரெட்ஸ் ஆகியவை மிகவும் பிரபலமானவை.
குறிப்பாக, ‘காபி அண்ட் சிகரெட்ஸ்’ படம் மிகவும் வித்தியாசமாக எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் மொத்தம் பதினோரு குறும்படங்கள் இடம்பெற்றிருந்தன. கிட்டத்தட்ட இருபது வருடங்களில் அவ்வப்போது ஜார்முஷ் எடுத்த குறும்படங்களின் தொகுப்பு இது. ஆனால் இந்தக் குறும்படங்கள் எல்லாமே, காபியையும் சிகரெட்களையும் மையமாகக் கொண்டே எடுக்கப்பட்டிருந்தன. இவற்றின் கதாபாத்திரங்கள், காபியை அருந்திக்கொண்டே சிகரெட்களைப் புகைத்துக்கொண்டிருப்பார்கள். இவற்றினூடே நடக்கும் பேச்சுகள்தான் படம்.
‘Don't let school get in the way of your education’ என்ற மார்க் ட்வெய்னின் மேற்கோள் ஜார்முஷுக்குப் பிடித்தமான மேற்கோள். 'திரைப்படக் கல்லூரியில் படித்த 70 சதவீத விஷயங்களை நான் மறக்க வேண்டியிருந்தது. அங்கு கற்றுக்கொண்ட 30 சதவீத விஷயங்களே இன்றுவரை எனக்கு உதவுகின்றன' என்று சொல்லியிருக்கிறார். இவரது படங்களைக் கவனித்தால், ஹாலிவுட் போன்று ஒரு குறிப்பிட்ட திரைக்கதையமைப்பை (ஸிட் ஃபீல்ட், ராபர்ட் மெக்கீ, ப்ளேக் ஸ்னைடர் இத்யாதி) பின்பற்றும் படங்களாக இவரது படங்கள் இருக்காது.
அந்தத் திரைக்கதை அமைப்புகள் சொல்லும் ஆரம்பம், நடுப்பகுதி, முடிவு என்பதெல்லாம் அப்படியப்படியே பின்பற்றும் நபரல்ல ஜார்முஷ். அவரைப் பொருத்தவரை, ஒரு இயக்குநராக, தனது உணர்வுகளைத் திரைப்படமாக எடுக்கவே விரும்புகிறார். 'ஆடியன்ஸ் விரும்புவதைக் கொடுப்பது என் வேலை அல்ல' என்பது ஜார்முஷின் கருத்து. இதனாலேயே ஹாலிவுட்டின் மசாலாத்தனம் நிறைந்த படங்களைக் கிண்டல் செய்யும் ஜார்முஷின் பல பேட்டிகளையும் நீங்கள் படிக்கலாம்.
‘இன்டி’ என்று அழைக்கப்படும் சுதந்திரப் படங்கள் அமெரிக்கக் கலாச்சாரத்துடன் ஒன்றிப் பல வருடங்கள் ஆகின்றன. அமெரிக்காவின் சிறந்த இயக்குநர்களில் பலர் இங்கிருந்து வந்தவர்களே. இன்னும் பலரும் இதிலிருந்து அவசியம் தோன்றுவார்கள். யாருக்கும் அஞ்சாமல், வளைந்துகொடுக்காமல் மனதில் தோன்றும் கருத்துகளையும் உணர்வுகளையும் பேசும் ஜிம் ஜார்முஷ் போன்ற இயக்குநர்கள், மசாலா மலிந்த ஹாலிவுட்டுக்கு அவசியம் தேவைதான். அப்போதுதான் எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் அரைத்த மாவு நிரம்பிய குரல்கள் மட்டுப்பட்டு, புதிதான குரல்கள் அங்கே கேட்கத் தொடங்கும். இது உலகம் முழுமைக்குமே பொருந்தக்கூடிய விஷயம்தானே?
தொடர்புக்கு [email protected]

நன்றி -த இந்து

Wednesday, July 08, 2015

பாலக்காட்டு மாதவன் -திரை விமர்சனம்:

கதாநாயகனுடன் இணைந்து நகைச் சுவை; கதையுடன் ஒட்டாத டிராக் நகைச்சுவை என இரண்டில் எதைச் செய்தாலும் அதில் செய்தி சொல்ல விரும்புகிறவர் விவேக். இந்தப் படத்தில் தனக்குப் பொருந்தக்கூடிய நகைச்சுவை நாயகன் பாத்திரம் ஏற்றிருக்கிறார். தவிர தனது பாணியுடன் அம்மா பாசத்தையும் கலந்து கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
மனைவி சோனியா அகர்வாலுடன் ஒரே அலுவலகத்தில் வேலைசெய்யும் விவேக்குக்கு இரு பெண் குழந்தை கள். நடுத்தரக் குடும்பத்தின் தலை வனான அவருக்கு தன்னைவிட மனைவி அதிக சம்பளம் வாங்குவது குறித்து மன உளைச்சல். “உன்னைவிட அதிக மாக சம்பாதித்துக் காட்டுகிறேன் பார்” என்று வீர வசனம் பேசிவிட்டு வேலையை விடுகிறார்.
ஆனால் வேலை கிடைக்காமல் அல்லாடும் அவர், மாதா மாதம் கணிசமான தொகை கைக்குக் கிடைக்கிறது என்பதற்காக முதியோர் இல்லத்திலிருந்து 60 வயது பெண்மணியை (செம்மீன் ஷீலா) அம்மாவாகத் தத்தெடுத்து வீட்டுக்கு அழைத்து வருகிறார். விவேக்கின் பிள்ளைகள் புதிய பாட்டியுடன் பழக வீட்டில் பாசமழை பொழிகிறது. ஆனால் விவேக்கின் நிலை மோசமாகிறது.
தத்தெடுத்த அம்மாவுக்குச் செல வாகும் தொகை அவருக்கு வரும் மாத வருமானத்தை விட அதிகமாக எகிற, வலியப்போய் வலையில் சிக்கிவிட்ட தாக நினைக்கிறார் விவேக். தத்து அம்மாவுக்கு விடை கொடுத்து அனுப்ப முடிவுசெய்கிறார். அவரால் அது முடிந்ததா என்பதுதான் மீதிக் கதை.
விவேக் வீராவேசமாக வேலையை விட்ட பிறகு அமைச்சரின் நேரடி உதவியாளர், எம்.எல்.எம் வணிகம் என்று பணத்துக்காகப் பல வழிகளில் இறங்கிப் படாதபாடு படுகிறார். போலித் தொழிலதிபர் சிங்கமுத்து, இமான் அண்ணாச்சி கூட்டணியுடன் இணைந்து அடிக்கும் எம்.எல்.எம். வணிக லூட்டி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரனை ஒரு வழி பண்ணுவது, செல்முருகனுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு செய்யும் மெசேஜ் நகைச்சுவை என்று விவேக்கின் முத்திரை நகைச்சுவை தொடர்கிறது.
ஆனால் மெதுவாகப் பயணிக்கும் முதல் பாதி திரைக்கதையும், பல படங் களில் பார்த்துச் சலித்த பல நகைச் சுவைக் காட்சிகளையும் கருணையே இல்லாமல் களைந்திருக்க வேண்டும்.
கொஞ்சமும் சுவாரஸ்யமில்லாத பாடல்கள் படத்துக்கு உதவவில்லை. ஆனால் நகைச்சுவை உணர்வைப் பிரதிபலிக்கும் பின்னணி இசையைக் கொடுத்துத் தப்பித்துக்கொள்கிறார் காந்த் தேவா. தனது முத்திரையைத் தொலைத்து விடாத விவேக், நகைச் சுவையோடு தரமான குணச்சித்திரமாக வும் மாற முடியும் என்பதைப் படத்தின் இறுதியில் நிரூபிக்கிறார்.
சோனியா அகர்வால் பொறுப்புள்ள குடும்பத் தலைவி கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக் கிறார். மூன்றாவது முக்கியக் கதாபாத்திரத்தை ஏற்று நடித் திருக்கும் ‘செம்மீன்’ ஷீலாவின் நடிப்பு படத்துக்கு பெரும் பலம். முதியோர் இல்லத்திலிருந்து விவேக் வீட்டுக்கு வந்த பிறகு கண்டிப்பான மாமியாராகவும் பாசமான பாட்டியாகவும் மாறி இவர் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கும் வண்ணம் இருக்கின்றன.
முதியோரை நடத்தும் விதம் பற்றி சமூகத்துக்குச் செய்தி சொல்ல வேண் டும் என்று முனைப்புள்ள ஒரு கதையை நகைச்சுவையுடன் சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குநர் சந்திர மோகன்.
திரைக்கதையில் கோர்வை இல்லாமல் பல காட்சிகள் உதிரிகளாக உள்ளன. காட்சிகளில் சுவாரஸ் யம், திரைக்கதையின் கட்டமைப்பு, லாஜிக் முதலான அம்சங்களில் கவனம் செலுத்தியிருந்தால் ‘பாலக்காட்டு மாத வன்’ பார்வையாளர்களுக்கு இன்னமும் நெருக்கமாக இருந்திருப்பான்.


thanx - the hindu

Tuesday, June 23, 2015

செவன் பவுண்ட்ஸ் - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)

நடிகருக்கும் இயக்குநருமான உறவு தாம்பத்திய உறவைப் போன்றதுதான். ஒரு நடிகருக்கு நல்ல பாத்திரம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அந்த நடிகரைக் கதாபாத்திரமாக மாற்ற இயக்குநர் செய்யும் முயற்சிகள். செவன் பவுண்ட்ஸ் திரைப்படத்தைப் பார்த்தவுடன் இது எனக்குத் தோன்றிய எண்ணம்.
‘பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ்’ வில் ஸ்மித்தின் ஜீவன் மிக்க நடிப்பைக் கொண்டு வந்த படம். கேப்ரியல் மக்கினோ என்ற இயக்குநரின் பெயர் முதல் சில முறைகள் அந்தப் படத்தைப் பார்த்தபோதுகூட மனதில் பதியவில்லை. பிறகுதான் இவரைப் பற்றித் தெரிந்துகொண்டேன், இவர் வில் ஸ்மித்தால் ஹாலிவுட்டுக்கு அழைத்து வரப்பட்ட இத்தாலிய இயக்குநர் என்று. ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாதவர் முதலில் தயங்கியிருக்கிறார். பின் வில் ஸ்மித் மேலுள்ள நம்பிக்கையில் சரி என்று சொல்லியிருக்கிறார். பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ் போலவே இந்தப் படத்திலும் வில் ஸ்மித் பல தயாரிப்பாளர்களில் ஒருவரும்கூட. இவ்விரு படங்களையும் பார்த்தபோது இவர்களின் உறவின் தரம் எளிதில் விளங்குகிறது.
இந்தப் படத்தின் கதை மிகவும் எளிமையானதுதான். சற்று நாடகத்தனமாகக்கூடத் தோன்றலாம். ஆனால் அதைப் படமாக்கிய விதமும் நல்ல நடிப்பும் இதைச் சிறந்த படமாக மாற்றுகிறது. தவிர, கதைக் கரு தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் முக்கியமாகப் பட்டது.
புரட்டிப் போட்ட விபத்து
காதலியுடன் உல்லாசமாக காரில் செல்கையில், வேலை விஷயமாகக் கைபேசியில் அவசரமாகக் குறுந்தகவல் அனுப்ப முயற்சி செய்கையில் அந்த விபத்து நடக்கிறது. பல கார்கள் மோதிய விபத்தில் காதலி உட்பட ஏழு பேரின் மரணத்துக்குக் காரணமாகிறான் டிம்.
குற்ற உணர்ச்சியால் தீவிர மன உளைச்சலுக்கு ஆளான டிம், இரு வருடங்களில் ஒரு முக்கிய முடிவை எடுக்கிறான். ஏழு பேரின் வாழ்க்கைக்கு உதவ வேண்டும் என்பது அது. தன் உறுப்புகளை ஒவ்வொன்றாகத் தானம் செய்ய நினைக்கிறான்.
தான் உதவும் அனைவரும் நல்லவர்களா, கருணை உள்ளம் படைத்தவர்களா, நிஜமாகவே வசதிக் குறைவானவர்களா என்றெல்லாம் துப்பறிந்து ஒவ்வொரு ஆளாய்த் தேர்வு செய்கிறான். நுரையீரல் பாதிக்கப்பட்ட தன் தம்பிக்கு ஒரு நுரையீரல் அளிக்கிறான். அவனின் அரசுத் துறை அடையாள அட்டையை எடுத்து ஆள் மாறாட்டம் செய்துதான் ஆட்களைத் தேர்வு செய்யும் துப்பறியும் வேலையைச் செய்கிறான்.
பார்வையற்ற இசைக் கலைஞன் ஒருவனைத் தேர்வு செய்கிறான் கண் தானத்துக்கு. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணிக்குத் தன் குடலைத் தானம் செய்கிறான். காதலனால் வன்முறைக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் ஒரு பெண்மணிக்கும் அவள் குழந்தைகளுக்கும் தன் வீட்டை எழுதி வைத்துவிட்டு ஓட்டல் அறைக்கு மாறுகிறான். எலும்பு நோயுள்ள ஒரு சிறுவனையும் தேர்வு செய்கிறான்.
உயில் காத்த உயிர்
இடையில் இதய நோய் பாதிப்பில் உள்ள எமிலி என்ற ஓர் இளம் பெண்ணைச் சந்திக்கிறான். அவளுடைய ரத்த வகையும் எளிதில் கிடைக்காதது. சில வாரங்களில் இறக்கும் அவளுக்கு உதவப்போக, இருவரும் நெருக்கமாகிறார்கள். தன் காதலி நினைவில் உயிர் வாழும் டிம்மிற்கு எமிலியின் அன்பை ஏற்க முடியவில்லை.
எனினும் இறக்கும் தறுவாயில் உள்ளவள் என்ற கருணை மெல்ல அன்பாக மாறுவதையும் கவனிக்கத் தவறவில்லை. அவள் தரும் தனி விருந்தில் அவளுடன் காதல் செய்கிறான். அந்த நேரத்தில் டிம்மின் தம்பி, அண்ணனின் முரணான நடவடிக்கைகளைக் கண்டு சந்தேகப்பட்டு அவன் காரையும் அடையாள அட்டையையும் மீட்டுப் போகிறான்.
எமிலி படுக்கையை விட்டு எழுவதற்குள், ஆஸ்பத்திரிக்கு ஓடி அவள் டாக்டரைச் சந்தித்து அவள் பிழைக்க வாய்ப்புள்ளதா என்று பதற்றமாகக் கேட்கிறான். இல்லை என்று தீர்மானமாகத் தெரிந்ததும் தன் இறுதிப் பணியை நிறைவேற்றுகிறான்.
அவன் உயிலின்படி அவன் இதயம் எமிலிக்குப் பொருத்தப்படுகிறது. அவள் பிழைக்கிறாள். டிம்மின் உயில் கடிதங்கள் மூலம் அவன் உதவிய ஏழு பேர் பற்றி அறிகிறாள். மனம் உடைந்துபோகிறாள்.
டிம்மால் பார்வை பெற்ற எர்சா குழந்தைகளுடன் இசை நிகழ்ச்சி நடக்கையில் அவனைச் சென்று சந்திக்கிறாள் எமிலி. டிம்மின் கண்களை எர்சாவிடம் கண்டு கலங்குகிறாள். அவள் அழுகையைக் கண்டவுடன், “நீ எமிலியாகத்தான் இருக்க வேண்டும்!” என்று சொல்ல டிம்மின் நினைவில், நன்றியுணர்வில் இருவரும் அணைத்துக்கொள்கிறார்கள்.
குற்றவுணர்ச்சிக்குப் பிறகு
குற்றவுணர்ச்சி தரும் பாரம் அசாத்தியமானது. சுய மதிப்பை, உறவுகளை, வேலையை, சமூகப் பொறுப்புகளை என எல்லாவற்றையும் களவாடிவிடும். தனக்கு இழைத்துக்கொள்ளும் தண்டனையாய்த் தன் முக்கிய உறவுகளையும் தண்டிக்கும். எந்த தர்க்க விதிகளுக்கும் சிக்காத சிந்தனைகளைக் கொடுக்கும்.
தப்ப முடியாத குற்றவுணர்ச்சிகளால் பாதிக்கப்படுகையில் அதிலிருந்து மீளுதல் மாபெரும் சாதனை. அதற்கும் அடுத்த கட்டமாக அதற்குப் பிராயச்சித்தமாக ஒரு நற்காரியத்தின் தன் சக்திகளையும் நேரத்தையும் நினைவுகளையும் குவிப்பது மிகச் சிறந்த சுய சிகிச்சை. ஏழு பேரைத் தெரியாமல் கொன்றதற்காக ஏழு பேர் வாழ்க்கையை மாற்றத் தன் உயிரைத் தரும் பாத்திரம் பூஜிக்க வேண்டிய குணநலன் கொண்டது.
செய்கின்ற தவறுகளுக்கு நியாயம் கற்பித்தும், பிறர் மீது பழி சுமத்தியும், தன் சுயத்தைக் காப்பாற்றிக்கொள்ள எதையும் செய்யலாம் என்று பெரும்பாலானோர் நினைக்கும் இந்தக் காலகட்டத்தில் தன் தவறுக்கு வருந்தி அதன் மூலம் பிறர் வாழ்க்கையை மாற்றிய நாயகனின் தியாகம் போற்றத்தக்கது.
டைனமைட் எனும் வெடி மருந்தைக் கண்டுபிடித்த ஆல்ஃப்ரெட் நோபல் தனது கண்டுபிடிப்பால் நிகழக்கூடிய அழிவை எண்ணி குற்றவுணர்வு கொண்டார். அந்தக் குற்ற உணர்விலிருந்து மீளத்தான் மனித குலத்துக்குச் சிறப்பு சேர்க்கும் பணிகளுக்கு நோபல் பரிசை நிறுவினார்.
குற்றத்தின் பாதிப்பு எதிராளிக்குப் பல நேரங்களில் ஒரு முறைதான். குற்றம் இழைத்தவனின் குற்றவுணர்ச்சி சம்பந்தப்பட்டவருக்கு வாழ்நாள் முழுதும்கூட நீடிக்கலாம். ஆனால் இந்த உணர்வை ஏற்று, அதிலிருந்து மீண்டு, பின்னர் இயல்பு நிலையில் பிறர் துயர் நீக்கப் பணி புரிதல் என்பது ஒரு அரிய செயல். இந்தப் பட கதாநாயகன்போலத் தன்னை அழித்துக்கூடச் செய்யத் தேவையில்லை. நாம் வாழ்ந்து அதைச் செய்யலாம்.
தன் சுயத்தால் ஒப்புக்கொள்ள முடியாத மன நிலையை மாற்றி அந்த எதிர்மறை சக்தியை, சமூகம் ஒப்புக்கொள்ளும் நேர்மறை சக்தியாக மாற்றுவதை உளவியலில் Sublimation என்பார்கள். அதுதான் மனிதத் துயருக்கான மாமருந்து எனவும் சொல்லலாம்.
தன் துயரிலும் பிறர் நலம் காண வாழ்வதுதான் தெய்வீகம். அந்த ஒரு தெய்வீக அனுபவம் இந்தப் படைப்பைக் காண்கையில் ஏற்படுகிறது.


நன்றி - தஃ இந்து