Showing posts with label விஜய்காந்த். Show all posts
Showing posts with label விஜய்காந்த். Show all posts

Saturday, November 10, 2012

கேப்டனுக்கு தமிழருவி மணியனின் பகிரங்க எச்சரிக்கைக்கடிதம்

விவேகம் இழக்கலாமா விஜயகாந்த்..?

ன்பிற்கினிய விஜயகாந்த் அவர்களுக்கு...



வணக்கம் வளர்க நலம்.


நீங்கள் அமைதியாக ஓர் இடத்தில் தனித்திருந்து ஆத்ம​சோதனை நடத்த வேண்டிய நேரம் இது. சிலர் எவ்வளவு முயன்று தேடினாலும் எதுவும் எளிதில் கிடைப்பது இல்லை. சிலருக்கு எளிதாகக் கிடைத்து விட் டாலும், கிடைத்ததை நிரந்தரமாகத் தக்க​வைத்துக் கொள்வதற்குத் தெரிவது இல்லை.



 சிகரத்தை அடைவது சாதனை இல்லை. அங்கேயே நீடித்து நிற்பதுதான் உண்மையில் உயர்ந்த சாதனை. ஒவ்வொரு சிகரத்தின் பக்கத்திலும் பயங்கரமான ஒரு செங்குத்துச் சரிவு இருக்கும். சிறிது நிலை தடுமாறினாலும் பள்ளமே படுக்கையாகிவிடும். நீங்கள் நிலை தடுமாறுவதைக் கண்டு ஏற்பட்ட கவலையில் பிறந்ததுதான் இந்தக் கடிதம்.



உங்கள் கட்சியில் இருக்கும் அனை​வரும் அடக்கத்துடன் கைகட்டி நிற்க வேண்டும் என்று நீங்கள் வெளிப்படை​யாகவே ஆசைப்​படுகிறீர்கள். கட்சிக்கு வெளியே இருப்பவர்களும் உங்கள் விருப்பு வெறுப்புக்கேற்பவே நடந்துகொள்ள வேண்​டும் என்று உள்ளுக்குள் எதிர்பார்க்கிறீர்கள். இந்த எதிர்பார்ப்புத்தான் உங்களுடைய அனைத்துப் பிரச்னைகளுக்கும் அடித்​தளம்.



இராமானுஜருக்கு வடுகநம்பி என்று ஒரு சீடர் இருந்தார். ஒருநாள் இருவரும் காவிரியைக் கடக்கும்போது, இராமானுஜர் வழிபட்ட சிலையையும், இராமானுஜரின் பாத அணிகளையும் ஒரே மூட்டையாகக் கட்டினார் வடுகநம்பி. பதறிப்போன இராமானு​ஜரிடம் சீடர் சொன்னார்: 'உங்கள் பெருமாள் உங்களுக்கு உயர்ந்தவர். என்னுடைய பெருமான் எனக்கு உயர்ந்தவர்’ என்று. இன்றைய அரசியலில் தலைவர்களாக வலம் வரும் நீங்கள் அனைவரும் வடுக நம்பியின் வாரிசுகளைத்தான் வர வேற்கிறீர்கள்!



மதுரையில் செப்டம்பர் 14, 2005 அன்று தே.மு.தி.க-வைத் தொடங்கிய​போது, உங்களை யாரும் பெரிதாகப் பொருட்​படுத்த​வில்லை. கூடிய கூட்டம்கூட உங்களைத் திரையில் பார்த்துக் கைதட்டிய ரசிகர் பட்டாளம் என்றுதான் பலர் கணக்குப் போட்டனர். ஆனால், 2006-சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட் பாளர்களை நிறுத்தி, ஓர் இடத்தில் நீங்கள் வெற்றி பெற்றாலும், உங்கள் கட்சிக்குக் கிடைத்த 10 சதவிகிதம் வாக்குகள் பல அரசியல்வாதிகளின் விழிகளை வியப்பால் விரிய வைத்தன. அடுத்து வந்த நாடா ளுமன்றத் தேர்தலில் உங்கள் கட்சி பெற்ற 10.1 சதவிகிதம் வாக்குகள் தமிழகத்தில் நீங்கள் தவிர்க்க முடியாத ஓர் அரசியல் சக்தி என்பதை அனைவருக்கும் உணர்த்​தியது.




'மக்களோடும் கடவுளோடும் மட்டுமே கூட்டணி’ என்று சலிப்​பில்லாமல் சொல்லிக் கொண்டிருந்த நீங்கள் 2011-சட்ட​மன்றத் தேர்தலில் ஜெயலலிதா​வுடன் சேர்ந்து நின்றபோது, அதை ஒரு சந்தர்ப்ப​வாதம் என்று வாக்காளர்கள் சந்தேகிக்காமல் வரவேற்கவே செய்தனர். அதற்கு ஒரே காரணம், கருணாநிதி பரிவாரத்திடம் இருந்து தமிழகத்தை எப்படியாவது விடுவிக்க வேண்டும் என்று வாக்கா​ளர்களின் தவிப்பும் தாகமும்தான்.



கருணாநிதியின் குடும்ப அரசியல் மீது மக்களுக்கு விளைந்த வெறுப்பும் விரக்தியும்தான் ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்கி, யாரும் எதிர்பாராத நிலையில் உங்களை  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக்கிய முக்கியக் காரணி என்பதை நீங்கள் இருவருமே உணராமற்போனதுதான் அரசியல் சோகம். 'என்னால்தான் நீங்கள் முதல்வரானீர்கள்’ என்று ஜெயலலிதாவைப் பார்த்து நீங்கள் முழங்குவதும், 'என்னால்தான் உங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற ஏற்றம்’ கிடைத்தது என்று ஜெயலலிதா ஏளனம் செய்வதும் முற்றிலும் அர்த்தமற்ற ஆணவத்தின் வெளிப்பாடு.



கூட்டணி அமைப்பதே ஒரு கட்சி இன்னொரு கட்சியால் பயன்பெற வேண்டும் என்பதற்​காகத்தானே? ஜெயலலிதாவுடன் நீங்கள் சேர்ந்திருக்கா விட்டால், நிச்சயம் 29 தொகுதிகளில் உங்கள் கட்சி வென்றிருக்காது. உங்கள் கூட்டணி அமையாமற் போயிருந்தால், வாக்குகள் சிதறியிருக்கும். அ.இ.அ.தி.மு.க. 150 இடங்களை அடைந்திருக்காது. ஆனால், தட்டுத் தடுமாறியாவது அது ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும். அந்த நிலையில் நீங்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றிருக்க முடியாது. இந்த உண்மை உங்களுக்கு ஏன் புரியவில்லை?



ஜெயலலிதாவை முதல்வர் என்ற முறையில் நீங்கள் மதிக்கப் பழகவில்லை. உங்களை எதிர்க் கட்சித் தலைவர் என்ற மரியாதையுடன் நடத்த ஜெய லலிதாவுக்கு மனம் வரவில்லை. விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் முதல்வருக்கு இல்லை. பக்குவமாய் விமர்சிக்கும் பாங்கு உங்களுக்கு வாய்க்கவில்லை. இந்தக் கொடுமைக்கு, உங்கள் இருவருக்கும் வாக் களித்தவர்கள் எங்கேபோய் முட்டிக்கொள்வது? 'நான் எப்படி ஒருவருக்கு அடிமையாக இருக்க முடியாதோ, அதே போன்றுதான் யாருக்கும் எஜ மானராகவும் இருக்கவியலாது’ என்றார் ஆபிரகாம் லிங்கன். ஆனால், நீங்கள் இருவருமே எல்லாருக்கும் எஜமானர்களாகவே இருக்க ஆசைப்படுகிறீர்கள்.



திரைப்பட உலகில் தனக்கென்று ஓர் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள நீங்கள் தொடக்க நிலையில் படத்தயாரிப்பாளர்களிடம் எவ்வளவு பணிவாக நடந்திருப்பீர்கள். 'தூரத்து இடிமுழக்கம்’ நடிக்கும்​போது காட்டிய பணிவு 'கேப்டன் பிரபாகரன்’ வெற்றிக்குப் பிறகும் இருந்திருந்தால் அதுதான் சிறப்பு. அரசியல் வாழ்வில் அடியெடுத்து வைத்தபோது பத்திரிகையாளரிடம் காட்டிய பாசம், எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றம் பெற்ற பிறகும் நீடித்து இருந்தால் அதற்குப் பெயர்தான் தலைமைப்பண்பு.



சென்னை விமான நிலையத்தில் பத்திரிகை​யாளர்கள் அப்படி என்ன கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டு விட் டனர்? ஏன் அந்தப் பதற்றம்? எதற்கு அந்த அனாவசிய ஆவேசம்? அறிவுக்கும் உணர்ச்சிக்கும் இடையில் நடக்கும் போட்டியில் அறிவைத் துறந்து, உணர்ச்சிக்கு ஆட்படுவது அரசியல் தலைமைக்கு அழகல்லவே! ஏகவசனத்தில் உரத்த குரலில் ஓங்கிப் பேசுவது பொதுஇடத்தில் கடைப்பிடிக்கக்கூடிய நயத்தகு நாகரிகமா கேப்டன்?




 'கறுப்பு எம்.ஜி.ஆர்.’ என்று அடைமொழி போட்டுக்கொள்ள ஆசைப்படும் நீங்கள், எம்.ஜி.ஆரிடம் எதையும் கற்கவில்லையே. கூடப்பழகியவர்களுக்கு எம்.ஜி.ஆரின் கோபம் எப்படிப்பட்டது என்று நன்றாகத் தெரியும். இராமா​வரம் தோட்டத்தில் காட்டிய கோபத்தை எம்.ஜி.ஆர். பொதுவிடங்களில் உங்களைப்போல் ஒரு நாளாவது மக்களிடையே காட்டியது உண்டா? உள்ளத்தில் பொங்கும் உணர்வுகளுக்கு ஆடை கட்டாமல் அப்படியே நிர்வாணமாக வெளிப்படுத்துவதை இனியாவது நீங்கள் விட்டுவிட வேண்டும். நீங்கள் கவிஞர் இல்லை; மக்களின் விதி எழுத விரும்பும் ஒரு கட்சியின் தலைவர்.




உங்களுடன் இருந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியின் அரவணைப்பில் ஆதாயம் அடைவதற்கு ஆசைப்பட்டு இடம் மாற முடிவெடுத்து விட்டனர். இதில் அதிர்ச்சி அடைவதற்கோ, ஆச்சர்யப்​படுவதற்கோ என்ன இருக்கிறது? மதுரை சுந்தரராஜனும், மைக்கேல் ராயப்பனும், நடிகர் அருண்பாண்டியனும் காந்தியம் வளர்க்கவா உங்கள் கட்சிக்கு வந்தனர்?



ஏழைக்கும் பாழைக்கும், அனாதைக்கும் அகதிக்கும் வாழ்வில் ஏற்றம் தருவதற்காகவா அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்தார்கள்? உங்களோடு இன்று எஞ்சி இருப்பவர்களில் எத்தனை பேர் நாளை பழுத்த மரம் நோக்கிப் பறக்கப் போகின்றவர்களோ? சித்தாந்த அடிப்படையில் கம்யூனிஸ்ட் ஆனவர்களே கட்சி மாறும் காலமல்லவா இது! பதவி, அதன்மூலம் வந்து சேரும் அதிகாரம், அந்த அதிகாரத்தைக்கொண்டு கொள்ளை​யடிக்கும் கள்ளப்பணம் - இதுதானே இன்று நம் அரசியல்வாதிகளின் ஒரே நோக்கம்! சுயநலம்தானே இவர்களின் மூல மந்திரம்!



அது சரி... நீங்கள் ஏன் கட்சி அரசியலில் கால் பதித்தீர்கள்? கருணா​நிதியிடம் இருந்தும் ஜெயலலிதாவிடம் இருந்தும் தமிழக மக்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்கவா? ஊழலற்ற அரசியல் சமூகத்தை உருவாக்கவா? நேர்மை சார்ந்த நல்லாட்சியை நடைமுறைப்படுத்தவா? இவை​தான் உங்கள் உண்மையான நோக்கமெனில், வேட்பாளர் தேர்வில் எந்த வகையில் நீங்கள் மாறுபட்டீர்கள்?




சுந்தரராஜன், உங்கள் நெடுநாள் நண்பர். அருண்பாண்டியன், உங்களிடம் நட்புப் பாராட்டிய நடிகர். மைக்கேல் ராயப்பன், பணபலம் படைத்த படத் தயாரிப்பாளர். மற்றவர்கள் உங்கள் ரசிகர் மன்றத் தளபதிகள். காமராஜரைப் போல் தன்னலமற்றவர், கக்கனைப் போல் ஊழலற்றவர், ஜீவாவைப் போல் ஏழைகளின் தொண்டர், பெரியாரைப் போல் சமூகப் போராளி என்ற ஒவ்வொருவரையும் தேர்ந்து தெளித்தா தேர்தல் களத்தில் நிறுத்தினீர்கள்? இல்லையே! கருணாநிதியும் ஜெயலலிதாவும் எதைச் செய்கிறார்களோ, அதையேதான் நீங்களும் செய்வீர்கள் என்றால் எங்களுக்கு எதற்கு இன்னொரு தே.மு.தி.க.? யோசியுங்கள் கேப்டன்!




குறைந்தபட்சம் கோபப்படாத மனிதராகவாவது உங்களால் இருக்க முடிகிறதா? சட்டப் பேரவையில் அமைச்சர்களும், ஆளும் கட்சி உறுப்பினர்களும் உங்களிடம் நடந்துகொண்ட விதம் மெச்சத் தகுந்ததாய் அமையவில்லை என்பது உண்மை. அதற்காக நீங்கள் நாக்கைத் துருத்தியது நியாயமா? பத்திரிகையாளரிடம் பகைமையைக் காட்டியது பண்பாடா? தேர்தல் பிரசாரத்தில் சொந்த வேட்​பாளர் தலையில் அடிப்பது அரசியல் நாகரிகமா? 'ஜெயலலிதாவை உங்கள் எம்.எல்.ஏ-க்கள் பார்த்தது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டதற்குப் பதற்றமின்றி அரசியல் ரீதியாக நீங்கள் பதில் சொல்லியிருக்கலாமே.



 கருணாநிதி ஆட்சியில் அனிதா ராதாகிருஷ்ணன்  கட்சி மாறியதால், அ.இ.அ.தி.மு.க. அழிந்து விட்டதா? அதற்குப் பிறகுதானே அது ஆட்சிக்கு வந்தது. ஈரோடு முத்துசாமியும், சேலம் செல்வகணபதியும் இடம் மாறியதால், அ.தி.மு.க-வின் தடம் நகர்ந்து விட்டதா? சந்தர்ப்பவாதிகள் செல்வதால், எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பறிக்க ஆளும் கட்சி நடத்தும் அரசியல் சூழ்ச்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ என்று சொல்லிவிட்டு விமானம் ஏறியிருந்தால், எந்தப் பிரச்னையும் இல்லையே!



'சென்ற முறை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழ் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் குமாரதாஸ், ஈஸ்வரன், ஹக்கீம் ஆகிய மூவரும் அ.தி.மு.க-வில் இணைந்தனர். அவர்கள் 2006- தேர்தலில் மீண்டும் நிற்பதற்குக் கூட ஜெயலலிதா வாய்ப்பு வழங்கவில்லை. இன்று அவர்களுடைய முகவரியை யார் அறிவார்?



 இன்று இங்கிருந்து செல்ல நினைப்பவர்கள் நாளை என்ன ஆவார்கள் என்பதற்கு அந்த மூவரை​ விடவும் சரியான சான்று தேவையா?’ என்று உங்கள் கட்சியில் சபலத்துக்கு உட்பட்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் சொல்லுங்கள். அதைவிட்டுவிட்டு 'டெங்கு’ காய்ச்சல் பற்றிப் பேசுவதால் என்ன பயன்?



தலைமைக்கு வேண்டிய முதல் பண்பு புலனடக்கம். ஆண்டவனை 'ஐந்தவித்தான்’ என்கிறார் வள்ளுவர். இன்று ஆள்பவர்களும், நாளை ஆள்வதற்கு ஆசைப்படுபவர்களும் ஐந்து புலன்களையும் அடக்கியாள முதலில் முயல வேண்டும். மண்ணை வென்ற மாவீரன் அலெக்சாண்டரைவிட, தன்னை வென்ற ஞானி டயோஜனீசிடம் தான் மக்கள் மரியாதை செலுத்தினர். 'உங்களில் பெரியவனாய் இருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாய் இருக்கக் கடவன். தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன்னைத் தாழ்த்துகிறவனே உயர்த்தப்படுவான்’ என்று கர்த்தர் சொன்னதை நீங்கள் உட்பட எந்த அரசியல் தலைவரும் உணர்ந்த​தாகத் தெரியவில்லையே.



இராமானுஜர் திருப்பதி மலையை அடைந்தபோது, அவரை வரவேற்க அவருடைய ஞானகுரு திருமலை பெரியநம்பி நேரில் வந்து வரவேற்றார். 'நீங்கள் ஏன் வந்தீர்கள்? யாராவது ஒரு சிறியவரை அனுப்பி வைத்திருக்கலாமே’ என்று இராமானுஜர் சொன்னபோது, 'என்னைவிட சிறியவன் இந்த மலையில் வேறு யாரும் இல்லையே’ என்றார் பெரியநம்பி. நீங்கள் எப்போது பெரிய நம்பியாக மாறப்போகிறீர்கள்?



சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்​களிடம் 'ருத்ரதாண்டவம்’ நடத்தி விட்டு மதுரைக்குச் சென்ற நீங்கள், இஸ்லாமியரின் தியாகத் திருநாள் விழாவில் தலையில் குல்லாய் தரித்தபடி உரையாற்றிய கோலம் கண்டு  சிரிப்புத்தான் வந்தது. வாக்குகளைப் பெறுவதற்கு எந்த வேடமிட்டும் நடிப்பதில் நம் தலைவர்களில் யாரும் யாருக்கும் சளைத்தவர் இல்லை. நபிகளார் அரேபிய மக்களின் அதிபராக இருந்த போதும், அறுந்துபோன தம் காலணியைத் தாமே சீர்செய்து கொண்டவர்; கந்தலாகி விட்ட கம்பளி ஆடையைத் தாமே தைத்துக் கொண்டவர்;



தமது மண் குடிசையைத் தம் கைகளால் சுத்தம் செய்தவர்; அவரது குடும்பம் பல இரவுகள் பசித்த வயிற்றுடன் படுக்கைக்குப் போகும்படி அவரு​டைய வாழ்க்கையில் வறுமை குடி​கொண்டிருந்தது. அவர் கடைசி மூச்சை விட்டபோது, அவர் அணிந்​திருந்த ஆடையில் பல ஒட்டுகள் போடப்பட்டிருந்தன. தலைமை ஏற்பவர் எளிமையாகவும், ஏழைகளின் பிரதி நிதியாக​வும், அகத்திலும் புறத்திலும் உண்மையாகவும் நேர்மை​யாகவும் நபிக​ளாரைப் போன்று நடக்க​வேண்டும் என்று உணராமல், தலையில் தொப்பி வைப்பதும், நோன்புக் கஞ்சி குடிப்பதும் போலி நாடகம் இல்லையா?



போகட்டும். தூய அன்போடும், நல்ல நட்போடும் உங்களுக்கு ஒன்று சொல்ல விழைகிறேன். நீங்கள் மார்க்ஸைப் போன்று மாபெரும் சிந்தனையாளர் என்றோ, காந்தியைப் போன்று சத்திய சோதனையில் ஈடுபட்டிருப்பவர் என்றோ, பெரியாரைப் போன்று புரட்சியாளர் என்றோ, அம்பேத்கரைப் போன்று அறிவாயுதம் ஏந்தி தாழ்த்தப்பட்ட மக்களின் விடியலுக்காக அல்லும் பகலும் அயராது உழைப்​பவர் என்றோ, தமிழக வாக்காளர்களில் 10 சதவிகிதம் பேர் வாக்களிக்கவில்லை.



 இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தே.மு.தி.க. உங்கள் தலைமையில் மலரும் என்பதுதான் அவர்​களுடைய எதிர்பார்ப்பு. ஆனால் நீங்களோ, உங்கள் தளபதிகளோ, எந்தவகையிலும் மாற்றாக வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் உங்கள் நடைமுறைகள் நிரூபித்து வருகின்றன. தனித்திருந்து யோசியுங்கள். தவறுகள் புலப்படும். இனியாவது புதிய பாதையில் பயணம் புறப்படுங்கள். அதற்கு முன்பு கர்த்தர் சொன்னதைக் கவனத்தில் நிறுத்துங்கள். ''வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது. வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.’



- என்றும் அன்புடன்


தமிழருவி மணியன் 


 நன்றி 0 ஜூ வி 

Sunday, October 28, 2012

கேப்டனை டம்மி ஆக்க மம்மி செய்யும் தகிடுதித்தங்கள்

கோப்புப் படம்:
சட்டசபையில், தே.மு.தி.க., எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்க வேண்டும், அடுத்த ஆண்டு, மே மாதம் நடக்கவுள்ள ராஜ்யசபா எம்.பி., தேர்தலில், ஒரு சீட்டை பிடிக்கும்தே.மு.தி.க.,வின் திட்டத்திற்கும்வேட்டு வைக்க வேண்டும்' என்ற, இரண்டு திட்டங்களின் அடிப்படையில் தே.மு.தி.க.,வில் பிளவை ஏற்படுத்தும் வேலையில், ஆளும் கட்சியான அ.தி.மு.க., மும்முரமாக ஈடுபட்டுள்ளது. நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான அருண் பாண்டியன், மைக்கேல் ராயப்பன் ஆகியோர், நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.




கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட, தே.மு.தி.க., 29 தொகுதிகளில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. கடந்த உள்ளாட்சி தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து, தே.மு.தி.க., போட்டியிட்டது. எதிர்பார்த்த வெற்றி, அக்கூட்டணிக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து நடந்த, சங்கரன்கோவில், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிட்ட தே.மு.தி.க., தோல்வி அடைந்தது. இதன் தொடர்ச்சியாக, மாவட்டவாரியாக நடந்த நலத்திட்டங்கள் வழங்கும் விழாக்களில், விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும், ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்தனர்.



தங்களதுதோழமையால், அதிக எம்.எல்.ஏ.,க்களை பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றதே.மு.தி.க.,வை, தங்களது து@ராகியாக கருதிய அ.தி.மு.க., எதிர்க்கட்சி அந்தஸ்தை தே.மு.தி.க., விடம் இருந்து பறிக்கவேண்டும் என, திட்டமிட்டுள்ளது.அதன் விளைவாக, தே.மு.தி.க., வில் அதிருப்தியாக இருக்கும் எம்.எல்.ஏ., க்களை, கூண்டோடு இழுக்கும், "ஆப்ரேஷன் 10' என்ற, உடைப்பு திட்டத்தை ஆளுங்கட்சி கையில் எடுத்துள்ளது.



முதல் கட்டமாக, விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், தே.மு.தி.க., பொருளாளருமான சுந்தர்ராஜன், திட்டக்குடி தமிழரசனையும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட இழுக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது நாளாக, நேற்று பேராவூரணி எம்.எல்.ஏ.,வும், நடிகருமான அருண் பாண்டியன், ராதாபுரம் எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பன் ஆகியோர், நேற்று முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் சந்தித்து, அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.


"ஆப்ரேஷன் 10' திட்டப்படி, 10 எம்.எல்.ஏ.,க்களை இழுத்தால், தே.மு.தி.க., உடைந்து விடும். தே.மு.தி.க., எதிர்க்கட்சி அந்தஸ்து இழக்க நேரிடும். எதிர்க்கட்சி அந்தஸ்து தி.மு.க.,வுக்கு கிடைத்து விடும்.



அடுத்த ஆண்டு, மே மாதம் நடக்கவுள்ள, ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன், தே.மு.தி.க., ஒரு எம்.பி., சீட்டை கைப்பற்ற திட்டமிட்டிருந்தது. ஒரு எம்.பி., சீட் பெற, 35 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை. அந்த எம்.பி., சீட், தன் மனைவி பிரேமலதா அல்லது மைத்துனர் சுதீஷ் ஆகியோரில் ஒருவருக்கு வழங்கவும், விஜயகாந்த் திட்டமிட்டிருந்தார்.


ஆனால், அத்திட்டத்தை தவிடுபொடியாக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்தாலும், தே.மு.தி.க., வுக்கு எம்.பி., சீட் கிடைக்காத அளவுக்கு, அக்கட்சி எம்,எல்.ஏ., க்களின் எண்ணிக்கையை குறைக்கவும் ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளது.


இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்களில் கூறப்படுவதாவது:அடுத்த ஆண்டு, ஜூலை மாதத்தில், தி.மு.க., வில் கனிமொழி, திருச்சி சிவா, அ.தி.மு.க., வில் மைத்ரேயன், இளவரசன், காங்கிரசில் ஞானதேசிகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் டி.ராஜா ஆகிய ஆறு பேரின் பதவி காலம் முடிவடைகிறது. 


சட்டசபையில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., க்களின் பலத்தின் அடிப்படையில், நான்கு ராஜ்யசபா எம்.பி., க்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மீதமுள்ள இரு எம்.பி.,க்களுக்கு, மற்ற கட்சிகள் மத்தியில் போட்டி உருவாகும் நிலை உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தே.மு.தி.க., வை ஆதரித்தால், அக்கட்சிக்கு ஒரு எம்.பி., கிடைக்கும். இதனால், தே.மு.தி.க., வின் எம்.எல்.ஏ.,க்களின் பலத்தை குறைக்க முயற்சிகள் துவங்கியுள்ளது.


அதேசமயம், தே.மு.தி.க., வை, தி.மு.க., ஆதரிக்குமானால், தே.மு.தி.க., வுக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், தே.மு.தி.க., வை பொறுத்தவரையில், தி.மு.க., வையும் எதிரி கட்சியாக கருதுவதால், தி.மு.க., வின் ஆதரவை நாடுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.தி.மு.க., வை பொறுத்தவரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன், ஒரு எம்.பி., சீட்டை கைப்பற்றவும் திட்டமிட்டுள்ளது. ஆக, மொத்தத்தில், இரு எம்.பி., சீட்டுகளை கைப்பற்றுவதில், ஆளுங்கட்சி மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகள் மத்தியிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு ஆளுங்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

http://www.writermugil.com/wp-content/uploads/2009/03/election-cartoon-11.jpg

திருநெல்வேலி:முதல்வர் ஜெயலலிதாவை, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் வரிசையாக சென்று சந்தித்து வருவதால், தே.மு.தி.க., கட்சியினர் ஆவேசம் அடைந்துள்ளனர். தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பனின் உருவ பொம்மையை எரித்தனர். திசையன்விளை அருகே நந்தன்குளத்தில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் வீட்டில், தே.மு.தி.க.,வினர் கற்களை வீசி தாக்கினர். இதில், வீட்டின் மாடி கண்ணாடிகள் உடைந்தன.


தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்), அருண்பாண்டியன் (பேராவூரணி) ஆகியோர், நேற்று சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். இதற்கு, தே.மு.தி.க.,வில் எதிர்ப்பு கிளம்பயுள்ளது.விஜயகாந்தின் ரசிகர் மன்றம், தே.மு.தி.க., கட்சியாகச் செயல்படத் துவங்கிய காலம் முதல், பல ஆண்டுகளாக உறுப்பனர்களாக இருந்தவர்களுக்கு எம்.எல்.ஏ., “சீட்’ தராமல், திடீரென வந்த சினிமா தயாரிப்பாளரான, மைக்கேல் ராயப்பனுக்கு, “சீட்’ கொடுத்தனர். அவரும் எம்.எல்.ஏ., ஆன பன், சட்டசபையில் பெரிய அளவில் பேசவில்லை.


அவர் தொகுதிக்காக எதுவும் செய்யாமல், கட்சிக்கு துரோகம் இழைத்ததாகக் கூறி, நேற்று அவரது உருவ பொம்மையை, திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட பணகுடியில், மாவட்ட மாணவர் அணி செயலர் சுடர் தலைமையில், தே.மு.தி.க.,வினர் எரித்தனர்.திசையன்விளை அருகே நந்தன்குளத்தில் உள்ள மைக்கேல் ராயப்பன் அலுவலகம் மற்றும் வீட்டில், தே.மு.தி.க.,வினர் கற்களை வீசி தாக்கினர். இதில், வீட்டின் மாடி கண்ணாடிகள் உடைந்தன.


திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை, வள்ளியூர், காவல்கிணறு உள்ளிட்ட இடங்களிலும் மைக்கேல் ராயப்பனின் உருவ பொம்மையை எரிக்க, அக்கட்சியினர் திரண்டனர்.


இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், “ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட திசையன்விளை கடற்கரை பகுதியில், கார்னெட் மணல் அள்ளி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தினர் கோடிக்கணக்கில் முறைகேடு செய்துள்ளனர். அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலத்தின் மண்ணையும் சுரண்டி, கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளனர். இதுகுறித்து, கட்சித் தலைவர் விஜயகாந்த், நாகர்கோவில் கூட்டத்தில் பேசினார். ஆனால், அந்த நிறுவனத்தினருடன் மைக்கேல் ராயப்பனுக்கு இருந்த தொடர்பு காரணமாகவே, தற்போது அவர் அ.தி.மு.க., பக்கம் சாய்ந்துள்ளார்’ என, தெரிவித்தனர்.இன்று, திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தே.மு.தி.க.,வினர், மைக்கேல் ராயப்பனின் உருவ பொம்மையை எரிக்க திட்டமிட்டுள்ளனர்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMn7qmXgCQeALmg7hbKjZ-MOvHXgLktrUPnsvFvZbu5ArjMjtGkSJGjKQ3Yn-U68iwTtFROwZETjOenn_cZKangZJ-c7muDXDLapQWBNwr2Lzemk5A29DZP7fZNcNaYGbCDX3DxIFmiOo/s1600/0.jpg


செய்தியாளர்களுடன் விஜயகாந்த் மோதல்:


தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரை சந்தித்தது குறித்து கேள்வி கேட்டபோது, விஜயகாந்த் செய்தியாளர்களுடன் மோதலில் ஈடுபட்டதால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து நிருபர் ஒருவர் கொடுத்த புகார் மீது, விமான நிலைய போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.


பக்ரீத் பண்டிகைக்கு, குர்பானி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சென்னையில் இருந்து

நேற்று காலை 10:40 மணிக்கு, விமானத்தில் மதுரை சென்றார். காலை 10:20 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் வந்தனர்.விமான நிலையத்தின், உள்நாட்டு முனையத்தில் காரில் இருந்து இறங்கிய விஜயகாந்த், விமான நிலையத்திற்குள் செல்ல முயன்றார். அப்போது, அவரிடம் பேட்டி காண, செய்தியாளர்கள் குவிந்திருந்தனர். செய்தியாளர் பாலு, காரில் இருந்து இறங்கிய விஜயகாந்திடம் சென்று, "செய்தியாளர்கள் உங்களுக்காக காத்திருக்கின்றனர். பேட்டி கொடுங்கள்' என்றுகேட்டார்.


இதற்கு, "நீ யார்? செய்தியாளர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ ஓரமாக போ' என்று, கோபமாக கூறினார். விஜயகாந்த் அருகே வந்த செய்தியாளர்கள், "உங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் முதல்வரை சந்தித்தது குறித்து கருத்து சொல்லுங்கள்' என்று கேட்டனர்.


இதற்கு, "நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. மின்வெட்டால் தமிழகமே இருளில் உள்ளது. டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கெல்லாம் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று ஜெயலலிதாவிடம் சென்று கேளுங்கள்' என்று, கூறினார். தொடர்ந்து விஜயகாந்திடம், செய்தியாளர்கள் கேள்விகளை கேட்க, ஆத்திரமடைந்த விஜயகாந்த், "போங்கய்யா, அங்கே போய் கேளுங்கள்' என்று, கூறிவிட்டு, விமான நிலையத்திற்குள் சென்றார்.
 
 

அப்போது செய்தியாளர் பாலுவை பார்த்து, தகாத வார்த்தைகளால் விஜயகாந்த் பேசினார். தே.மு.தி.க., எம்.எல்.ஏ., அனகை முருகேசன், செய்தியாளர் பாலுவை கீழே பிடித்து தள்ளினார். இதையடுத்து, கட்சி நிர்வாகிகள், விஜயகாந்தை விமான நிலையத்திற்குள் அனுப்பி வைத்தனர். தன்னை தகாத வார்த்தைகளால் பேசிய விஜயகாந்த், கீழே பிடித்து தள்ளிய எம்.எல்.ஏ., ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாலு, விமான நிலைய போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuRHui4kYSRXLEeC9Bzy-iXbSQohHhfngCGvJ93CngNRSMJQyD9MfAl_V42-FplVMptT0OOqhJGNkg_L3XiStO3j9-hcrqQrdq4bzCPWdjBNDa1-AstD0_xU2eSE6b9FjeHdjQYrXYK18/s1600/19ramana.jpg

இந்த நாடகத்தை எப்படி முடிக்கிறேன் பாருங்கள் விஜயகாந்த் ஆவேசம் :



ஒரு நாடகம் நடக்கிறது. அதை எப்படி நான் முடிக்கிறேன் என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்?'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மதுரையில் ஆவேசமாக பேசினார்.பக்ரீத் பண்டிகையையொட்டி, தே.மு.தி.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மதுரையில் நடந்தது. விஜயகாந்த் பேசியதாவது: நான் அனைத்து மதத்தினருக்கும், சேவை செய்துவருகிறேன். தெய்வம், மக்களை நம்பியுள்ளேன். யார் பத்திரிகையாளர்கள் என எனக்குத் தெரியும். வீட்டிற்கு வரச்சொன்னால் தெரிந்துவிடும் என, கோட்டைக்கு வரச்சொல்லி நாடகம் நடத்துகின்றனர். அந்நாடகத்தை, நான் எப்படி முடித்து வைக்கப் போகிறேன் என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.



தே.மு.தி.க., மீது எவ்வளவு பயம் வந்துள்ளது என்பதைகாணும் போது, மகிழ்ச்சியாக உள்ளது. என்னைப் போல் ஊர் ஊராக முதல்வர் ஜெயலலிதாவால் சுற்ற முடியுமா? ஒன்றரை ஆண்டுகளாக செய்யாததை, இனிமேலா செய்யப் போகின்றனர்.மின் தட்டுப்பாட்டை ஓராண்டில் சீர் செய்வேன் என்றார்; அது நிறைவேறவில்லை. பல மணி நேரம் மின்தடை நீடிக்கிறது. 1991 லிருந்து தி.மு.க.,-அ.தி.மு.க.,வினர் மாறி மாறி ஆட்சி புரிகின்றனர். ஆனால், காவிரி நீரை கொண்டு வர நடவடிக்கை இல்லை. இலவசங்களை வழங்கி, மக்களை ஏமாற்றுகின்றனர்.எனக்கு கோபம் வரும். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும். உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன். தி.மு.க.,- அ.தி.மு.க.,விற்கு ஓட்டுப் போடாதீர்கள்.இவ்வாறு அவர் பேசினார்.



பிரேமலதா பேசியதாவது:முகவரி அளித்தவர்களுக்கு, துரோகம் செய்வோர் எந்த நாட்டிற்கும், ஊருக்கும் செல்ல இடமில்லை. 29 எம்.எல்.ஏ.,க்கள் அல்ல; இன்னும் 200 எம்.எல்.ஏ.,க்கள் உருவாகப் போகிறார்கள். உண்மையை பற்றி, ஒரு மணி நேரம் பேசலாம். துரோகம் பற்றி ஒரு நிமிடம் கூட பேசி, நம் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.நான் பேசினால், குடும்ப கட்சி என்பர்.


கடந்த லோக்சபா தேர்தலில், குடும்ப உறுப்பினர்களுக்கு விஜயகாந்த் சீட் வழங்கவில்லை. குற்றவாளிகள், போலிகளுக்கு கட்சியில் இடமில்லை. தொகுதி வளர்ச்சிக்காக செல்கிறோம் என்பவர்கள், சுயநல வாதிகள். தங்களை பாதுகாக்க, வருவாயை பெருக்கச் செல்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiojZkLhJd0WzO_-aZBnLZwvD5mFWJf-AdudNxalF9G-4ORvBghDjPWt83ffvdpnCCawJ8oeYGM-wi0bt0B_bLyZ5QGCX7X5TEKgCrtZhpsrSp12gXF__lPzGAwDKbBeU50VqZBtjr3-lw2/s1600/tamilmakkalkural_blogspot_viji.jpg


மக்கள் கருத்து
M Sekar - Puthukottai,இந்தியா

  ஜெயலலிதா மக்களின் கவனத்தை திசை திருப்ப இந்த நாடகத்தை நிறைவேற்றி உள்ளார். மின் வெட்டு, டெங்க்கு காய்ச்சல் என்று மக்கள் ஆளுங்கட்சி மீது அதிருப்தியுடன் உள்ளனர். இதை சரிக்கட்டவே இந்த நாடகம். ஜெயா புத்திசாலி என்றால் தேதிமுக எம்.எல்.ஏக்களை சந்திப்பதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். கட்சியை உடைக்க ஆரம்பித்தால் விஜயகாந்துக்கு அனுதாபம் உண்டாகும். பார்க்கப்போனால் திமுக ஆட்சியே தேவலை என்று உள்ளது. திமுக ஆட்சியில் ஊழல் இருந்தது உண்மை. கட்சி பிரமுகர்கள் அராஜகம் இருந்ததும் உண்மை. ஆனால் மின் வெட்டு 2 மணி நேரம்தான் இருந்தது. பொருளாதாரம் நன்றாக இருந்தது. அதிமுக ஆட்சியில் எல்லாம் சர்வ நாசம். மந்திரிகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நிர்வாகத்திறன் பூஜ்யம். அம்மாவை பிரதமர் ஆக்குவேன் என்று சொல்லித்திரியும் அதிமுக கட்சிக்காரர்கள் ஒன்றரை ஆண்டுகள் என்ன சாதனை செய்தார்கள்? பின் தங்கிய மானிலமாக இருந்த பீகாரில் கூட முன்னேற்றங்கள் இருக்கிறது என்று செய்தி வருகிறது. முன்னேறிய மானிலமாக இருந்த தமிழகம் அதிமுக கையில் சிக்கி சீரழிகிறது. மீண்டும் காங்கிரஸ் + திமுக கூட்டணி தமிழகத்தில் பாராளு மன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றால் ஆச்சர்யப்பட முடியாது. ஜெயலலிதா கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டார்.

Govind - Delhi,இந்தியா

  ஜெயா செய்யும் மிக பெரிய தவறாக இருக்கும் தி மு தி க வில் விஜயகாந்த்தை தவிர யாரையுமே மகளுக்கு தெரியாது. அப்படி இருக்கையில் அந்த கட்ச்சியை உடைத்து தேவை இல்லாமல் ஒரு பகையை மோசமாக்கி அதனால் மேலும் தனக்கு கெட்ட பெயர் உண்டாக்கி கொண்டால் என்ன செய்வது. அந்த ஒரு MP சீட்டை அவர்கள் ஜெயிபாதால் இவர்களுக்கு எந்த வித நஷ்டமும் இல்லை, தேவை இல்லாமல் பகைவர்களை உண்டாக்குவது மிக பெரிய தீங்கினை உண்டாக்கும். 
 
 thanx - dinamalar

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijtRTfqhT7DycsFP82hXBHcVDp6-7YpjgNMjERb8ggoaMFlhrwqv6fL7kKTuc8WBOk6xoc-B5Jq-xj4N1JOQFfEqyeGcz_s9arXMv1GpPY2VSAs6_lOPFaO4SCCDbJ5p_f7Cg99AgW3-zh/s1600/tamilmakkalkural_blogspot_viji1.jpg

Saturday, February 11, 2012

வீறு கொண்ட விஜய்காந்த்தின் சிவப்பு மல்லி பேட்டி - காமெடி கும்மி

http://moonramkonam.com/wp-content/uploads/2012/02/Vijayakanth-jayalalitha-jokes.jpgசென்னை: மதுரைக்கே மல்லிகைப் பூவா, திருநெல்வேலிக்கே அல்வாவா, தேமுதிகவுக்கே சவாலா?. எங்க கிட்ட சவால் விடாதீங்க, அதுக்கெல்லாம் பயப்படுபவன் இந்த விஜயகாந்த் இல்லை. தகுதியே இல்லாத அதிமுகவுடன் சேர்ந்ததற்காக நான்தான் வெட்கப்படுகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோபாவேசமாக கூறியுள்ளார்.

 சி.பி - வழக்கமா கோபப்படும் நீங்க வெட்கப்படறதைப்பார்த்து நான் துக்கப்படறேன், துயரப்படறேன்.. படறேன்.. றேன்.. 

சட்டசபையிலிருந்து 10 நாள் தடை விதிக்கப்பட்டதத் தொடர்ந்து தனது கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் விஜயகாந்த். அப்போது தனது பாணியில் படு இயல்பாகவும், கோபமாகவும், சாந்தமாகவும், அமைதியாகவும், பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி நீண்ட நேரம் அவர் பேசினார்.

சி.பி - வசனம் எழுதிக்கொடுத்தது லியாகத் அலிகானா?

விஜயகாந்த் பேச்சின் சில துளிகள்...

நாங்களா அதிமுகவுடன் கூட்டணிக்கு அலைந்தோம்.இவர்கள்தான் வந்தார்கள், இவர்கள்தான் கூப்பிட்டார்கள். நாங்கள் இவர்களுக்கு ஆதரவு கொடுத்ததால்தான் இவர்கள் ஜெயித்தார்கள். நாங்கள் மட்டுமில்லை, மக்கள் இவர்களுக்கு ஆதரவு கொடுத்ததால்தான் ஜெயித்தார்கள்.


சி.பி - அண்ணே ஒரு டவுட்.. கூட்டணி உடன்பாடு நடந்தப்ப உங்க வீட்டுக்கு அம்மா வந்தாங்களா? இல்லையே? நீங்க தானே பம்மிக்கிட்டே போயஸ் போனீங்க? 

எங்களைப் பார்த்து திராணி இருந்தால் என்று கேட்கிறார்.இவர் கடந்த ஆட்சியின்போது 13 இடைத்தேர்தலில் ஜெயித்தாரா. 5 தொகுதிகளில் நடந்த தேர்தலில் போட்டியிடப் பயந்து ஓடியவர் இவர்.



சி.பி - அண்ணண் பயமே இல்லாதவர், பாருங்க வெள்ளை சட்டை போட்டிருக்கார், வெள்ளை சட்டை போட்டவர் பயப்பட மாட்டார்.. அண்ணே கேப்டன் அண்ணே  அவ்ளவ் தில் உள்ள ஆள் எதுக்கு கூட்டணி வைச்சீங்க? வழக்கம் போல தண்ணியா நின்னு சாரி தனியா நின்னு டெபாசிட்டை இழந்திருக்கலாமெ?



மதுரைக்கே மல்லிகைப் பூவா என்பார்கள், திருநெல்வேலிக்கே அல்வாவா என்பார்கள். அதுபோல தேமுதிகவுக்கே சவாலா. எங்களைப் பார்த்து சவால் விடாதீர்கள். அதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்.

சி.பி - ஆமா, கேப்டன் சம்சாரத்தை தவிர யாருக்கும் பயப்படமாட்டார்.. யார் கிட்டே?

தனியாக போட்டியிட தயார். நாளைக்கே நாங்க ராஜினாமா செய்கிறோம், நீங்களும் வாங்க, கவர்னர் ஆட்சியில் தேர்தலை சந்திப்போம். ரெடியா. மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் வரும்.

சி.பி - ஹா ஹா இது எப்படி இருக்குன்னா 2 லட்சம் கைல வெச்சிருக்கறவன் 10 கோடி வெச்சிருக்கரவனை பார்த்து நான் என் சொத்தெல்லாம் தானம் பண்றேன், நீ அதே போல் பண்ண தயாரா? என கேட்பது மாதிரி



சட்டசபையில் சபாநாயகர் சொன்னதும் நான் உட்கார்ந்து விட்டேன். ஆனால் எதிர்த் தரப்பிலிருந்து குரல் கொடுத்ததால்தான் நான் எழுந்து நின்றேன். நான் எழுந்து நின்றதை மட்டும் காட்டினார்களே, எதிர்த் தரப்பிலிருந்து குரல் கொடுத்ததை ஏன் காட்டவில்லை. அதையும் காட்டியிருக்க வேண்டுமல்லவா, அதுதானே நியாயம்.

சி.பி - அண்ணே, அவங்க எல்லாம் ஆளுங்கட்சி, எப்படி காட்டுவாங்க, அதுவும் இல்லாம நீங்க தான் செமயா காட்டு காட்டுன்னு காட்டிட்டீங்களே,,,

நியாயத்தைப் பத்தி இவங்க பேசக் கூடாது. 13 நாளில் வாஜ்பாய் அரசைக் கவிழ்த்தியவர் இவர். இவர் நியாயம் பத்திப் பேசலாமா.

 சி.பி - ஆஹா, மாநில அரசியல்ல இருந்து மத்திய அரசியலுக்கு அய்யா குறி வைக்கறாரு.. 

http://www.vikatan.com/news/images/Building.jpg

தேமுதிக சரியில்லை என்று இப்போது சொல்கிறாரே, அதை ஏன் கூட்டணி முடிவானபோது சொல்லவில்லை, தேமுதிக தொகுதிகளை அறிவித்தபோது ஏன் செய்யவில்லை.

சி.பி - ஏன்னா டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கு.. மப்பு இல்லை ஹி ஹி 

நாங்கள் இல்லாவிட்டால் அதிமுக டெபாசிட் இழந்திருக்கும். கூட்டணி இல்லாமல் ஒருபோதாவது அதிமுக போட்டியிட்டுள்ளதா. எம்.ஜிஆர். இருந்தபோதும் கூட கூட்டணி இல்லாமல் அதிமுக போட்டியிட்டதில்லை.


சி.பி - அண்ணே, இதெல்லாம் ரொம்ப ஓவர்,.. அவங்க சர்வீஸ் என்ன? உங்க சர்வீஸ் என்ன?என்னதான் மப்புல உளறுனாலும் பார்த்து அளவா உளறனும்

ஊர் கூடித்தானே தேர் இழுத்தோம். எல்லாக் கூட்டணியும் கூடித்தானே வெற்றி பெற வைத்தோம். சட்டசபையில் நாங்கள் மக்கள் பிரச்சினைகளைத்தானே பேசப் போனோம். கூட்டணி குறித்து பேசப் போகவில்லை.

சி.பி - மக்களுக்கு நீங்க 2 பேரும் தான் பெரிய பிரச்சனை.. 

என்னைப் பார்த்தால் அறுவறுப்பாக உள்ளது என்கிறார். இவரைப் பார்த்தால் கூடத்தான் அறுவறுப்பாக உள்ளது, அசிங்கமாக இருக்கிறது. நாங்கள் பொறுத்துக் கொள்ளவில்லையா. அமைதியாக இருக்கவில்லையா.

சி.பி - ஹா ஹா ஹி ஹி ஹோ ஹோ சகிப்புத்தன்மை ஜாஸ்தி இருக்கு போல 2 பேருக்கும்

பேசுவதை சர்வாதிகாரமாக தடுக்கிறார்கள். பேச வாய்ப்புக் கொடுத்தால்தானே தங்களைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

தானே புயல் நிலவரம் பற்றிப் பேச விடவில்லை, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு குறித்துப் பேச விடவில்லை.

இன்றைய நிலவரம் என்று போர்டு போடுவார்களே அது போல இன்றைய மந்திரிகள் என்ற நிலையில் இந்த ஆட்சி உள்ளது.


சி.பி - மந்திரிங்க ஏதாவது தப்பு பண்ணா அவங்க பதவியை பறிப்பதில் என்ன தப்பு?



தூர்தர்ஷன் ஒரு சார்பாகவே நடக்கிறது. ஜெயா டிவியில் எடிட் செய்து தருவதை போடாதே, எல்லாவற்றையும் போடு.

நீங்க மட்டும்தான் மக்கள் பத்திப் பேசுவீங்களா, மத்தக் கட்சிக்காரன் பேச மாட்டானா. ஆணவத்தில் இருக்கிறார் ஜெயலலிதா, மமதையில் இருக்கிறார்.


சி.பி - மமதையில் ஜெ, போதையில் கேப்டன் எப்படி டைட்டில்? ஹி ஹி 

எங்களுக்கு இறங்குமுகம் என்று நீங்கள் சொல்லக் கூடாது. மக்கள் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆர் மட்டும்தான் தொடர்ந்து ஆட்சி புரிந்தவர். நீங்களும், மத்தக் கட்சியும் மாறி மாறித்தான் ஆள முடிந்தது. இப்போதுதானே விஜயகாந்த் வந்துள்ளான், பொறுத்திருந்து பாருங்கள் என்னை.


சி.பி - ஆமா, அண்ணன் தொடர்ந்து தமிழகத்தை ஆட்சி புரியப்போறார், ஏலேய் சம்முவப்பாண்டி, அப்பாவை எழுப்பி விடு

2005ல் கட்சி ஆரம்பித்து தொடர்ந்து தனியாகத்தானே தேர்தலை சந்தித்தேன். நான் தலை குணிந்தாலும் உங்களைத் தலை குனிய வைக்க மாட்டேன் என்று சேலத்தில் சொல்ல விட்டுத்தான், தொண்டர்களின் விருப்பத்திற்கேற்பத்தானே கூட்டு சேர்ந்தேன்.

இவங்களை பாராட்டிக்கிட்டே இருக்கனும், இதுக்குப் பெயரா ஆட்சி. பாராட்ட மட்டும் டைம் தர்றீங்கள்ள, விமர்சனம் செய்யவும் டைம் தாங்க. புள்ளி விவரம் இருந்தா பேசுங்க என்கிறார்கள். ஊரைக் கொள்ளையடிச்சதுக்கு உங்க கிட்ட புள்ளி விவரம் இருக்கா.

யார் மந்திரி, யார் ஐஏஎஸ், யார் ஐபிஎஸ் என்று இவர்களுக்கேத் தெரியாது. இவங்கதான் தகுதி இல்லாதவர்.

நான் யாருக்கும் பயப்படவில்லை. மக்கள் மனது வைத்தால்தான் யாராக இருந்தாலும். நான்தான் புலி என்றால், ஆட்சிக்கு நாளை நான் வந்தாலும் இப்படிப் பேச முடியும். அப்ப என்ன சொல்வீங்க.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkham2GAdl3N4R6oiRfFzlv-mLNwBaDNr4LgOUfmosyvItKUsjqEP4m-OUXUooTktRinl9p1oEU4pb1EjQK1VUWQWC3QBJUCsZOPC9Od3dEVVRcTaKCa8cdP9Cj6v7jfWk2tmvNw9rGKk/s400/6.jpg

ஜெயலலிதா திருந்தி விட்டார் என நினைத்தேன், இல்லை, பழைய குருடி கதவைத் திருடி கதைதான். ஜெயலலிதா திருந்தவில்லை, ஆணவத்துடன் இருக்கிறார். போன 5 வருடமாக எங்கே போனீர்கள். தேர்தலை சந்திக்கக் கூட திராணி இல்லையே உங்களுக்கு. நான் பயப்படாமல்தான் சந்தித்தேன்.

ஆவுடையப்பன் சபாநாயகராக இருந்தபோது இவரை 1 மணி நேரம் பேச விட்டார்கள். இவர் பேசலாம், நாங்க பேசக் கூடாதா.

எனக்குப் பயமெல்லாம் கிடையாது. மரியாதைக்கு மரியாதை, அன்புக்கு மட்டும்தான் கட்டுப்படுவேன். மிரட்டிப் பணிய வைக்க வைத்தால் அது முடியாது.

தகுதி இல்லை என்கிறார்கள். உங்களுக்குத்தான் தகுதி இல்லை. தகுதியில்லாத உங்களுடன் கூட்டணி வைத்ததை நினைத்து நான்தான் வெட்கப்படுகிறேன்.

நன்றி கெட்டவங்க, எப்படிக் கெஞ்சுனாங்க என்று எனக்குத் தான் தெரியும். பேச நினைத்தால் நான் நிறையப் பேசுவேன். பேசக் கூடாதென்று அமைதியாக இருக்கிறேன்.

கேவலப்பட்ட ஒரு அரசாங்கத்தின் கீழ் மக்களை உட்கார வைத்து விட்டார்கள். அந்தமக்களை தூக்கி நிறுத்தத்தான் நான் இனிமேல் போராடப் போகிறேன்.

இப்போது சொல்கிறேன், என்ன திமிராக சொல்கிறான் என்று தப்பாக நினைக்க வேண்டாம். அடுத்த முறை தேமுதிகதான் ஆட்சியைப் பிடிக்கும். பிடிக்கப் போவதைப் பாருங்கள்.

சி.பி - 2012ல உலகம் அழியும்னு சொன்னாங்க, அப்போ நம்பலை, இப்போ நம்பறேன் 

நாளை முதல் எனது கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குப் போவார்கள். நான் மக்கள் மன்றத்திற்குப் போகப் போகிறேன் என்றார் விஜயகாந்த்.

சி.பி - அப்போ டாஸ்மாக், எலைட் பார் போக மாட்டீங்களா? 

Saturday, September 24, 2011

விஜயகாந்த்தை வளர்த்துவிட்டது என் தப்பு - ஜெ ஆவேசம், கேப்டன் திகைப்பு!!

http://www.envazhi.com/wp-content/uploads/2009/04/news_88483393193.jpg 
 
மிஸ்டர் கழுகு: ''விஜயகாந்த்தை வளர்த்துவிட்டது தப்பு!''

கார்டனில் கர்ஜித்த ஜெ.!
 
 
சி.பி - டைட்டில்லயே பிரச்சனை ஸ்டார்ட்.. அப்போ கேப்டனுக்கு அம்மா வளர்ப்புத்தாயா?
                      

ச்சி வெயில் உலுப்பி எடுப்பதை கழுகார் முகத்தில் பார்க்க முடிந்தது. வந்ததும், ஐஸ் வாட்டரை அருந்துவதற்குப் பதிலாக தலையில் தெளித்துக்கொண்டார். சூட்டைக் குறைக்கும் ஐடியா! 




''கூட்டணிக் கட்சிகள் அனைத்தையும் ஜெய லலிதா கை கழுவுவதைத்தான் தண்ணீர் தெளித்து சிம்பாலிக்காகக் சொல்கிறீரோ?'' என்றோம். அவர், மெள்ளச் சிரித்தபடி,

''அ.தி.மு.க. அணியில் நடப்பதைச் சொல்வதற்கு முன்னால் ஒரு சுவாரஸ்யம்... அதைக் கேட்டுவிடும்!'' என்று பீடிகை போட் டார்!

''தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் விஜயகாந்த் மனம் திறந்து பேசியதை உமது நிருபர் விலாவாரியாக எழுதி இருந்தார். இது கட்சிக்குள் பலத்த சலசலப்பைக் கிளப்பியது. இதையடுத்து, கடந்த 20-ம் தேதி கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார் விஜயகாந்த். 'கூட்டம் நடக்குறது வெளியில் யாருக்கும் தெரியக் கூடாது. யாரும் காரில் வர வேண்டாம். ஆட்டோவில் வாங்க. வரும் எல்லாரும் கூட்டமா வராதீங்க... தனித்தனியா வந்துடுங்க. வெளியில் யாரும் நின்னும் பேசாதீங்க!’ என்று மாவட்டச் செயலாளர்களுக்குச் சொல்லப்பட்டு இருந்ததாம். 

கூட்டத்தில் விஜய்காந்த் பேசும்போது, 'உங்களை காரில் வர வேண்டாம். கூட்டமா நிற்க வேண்டாம் என்றெல்லாம் சொல்லி இருப்பாங்க. எல்லாம் காரணமாகத்தான் சொன்னோம். நம்ம கட்சி ஆபீஸ்ல ஒரு குண்டு ஊசி கீழே விழுந்தாக்கூட, அதைப் பத்திரிகைக்காரங்களுக்கு யாராவதுசொல்றீங்க. 


சி.பி - குண்டு விழுந்தாதான் செய்தி ஆகும், குண்டூசி விழுந்தாலுமா?

நமக்குள் நாம் என்ன வேணும்னாலும் பேசிக்கலாம். அதை சிலர் பத்திரிகைகளுக்கு சொல்லிட்டா, அவங்களும் பரபரப்பா செய்தி வெளியிடுறாங்க. ரகசியக் கூட்டம்னு நடத்திட்டு அதை வெளியில் சொல்றது எப்படி தர்மமாக இருக்கும்? 


சி.பி - அண்ணே, 2 பேர் மட்டும் கலந்துக்கிட்டாதான் அது ரகசியக்கூட்டம்.. மேட்டர் வெளில வராது..   10 பேர் கலந்துக்கறப்ப கறுப்பு ஆட்டை எப்படி கண்டு பிடிப்பீங்க?  



நீங்க இப்படியே பண்ணிட்டு இருந்தீங்கன்னா நிர்வாகிகள் கூட்டம் நடத்துறதையே நான் தவிர்க்க வேண்டி இருக்கும். உள்ளாட்சி தேர்தலில் எதுவும் நடக்கலாம். எதைப்பத்தியும் நீங்க கவலைப்பட வேண்டாம். எல்லோரும் உற்சாகமா வேலைகளைப் பாருங்க. கோவை மாநாட்டில் எல்லா விஷயங்களையும் முடிவு பண்ணிக்கலாம். நான் இப்படி எல்லாம் பேசினேன் என்று அதையும் போய் பத்திரிகைகாரங்ககிட்ட சொல்லிடாதீங்க!’ என்று கர்ஜித்து முடித்தாராம்.''

சி.பி - அண்ணன் தண்ணியை போட்டுட்டு  மப்புல உளர்றதெல்லாம் கர்ஜிக்கற கேட்டகிரில வந்துடுமா? டவுட்டு!




''அதையும் சொல்லீட்டாங்களா?'' என்று நாம் கேட்டதும்... சிரிப்பைச் சிந்தியபடி தொடர்ந்தார் கழுகார்.


''உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி விஷயத்தில் என்ன நடக்கிறது என்கிற கதைக்கு அடுத்து வருகிறேன். விஜயகாந்த் மீது அளவில்லாத கோபத்தில் இருக்கிறார் ஜெயலலிதா. அதைவிட அவரை தே.மு.தி.க-வுடன் கூட்டணி வைத்துத்தான் ஆக வேண்டும் என்று சொன்னவர்கள் மீதும் ஆத்திரத்தைக் கொட்டுகிறார். 'அவருக்கு அவ்வளவு செல்வாக்கு... இவ்வளவு செல்வாக்குனு சொல்லி என்ன ஏமாத்திட்டீங்க... அவரைத் தேவை இல்லாம நாமதான் வளர்த்துவிட்டுட்டோம். அப்பவே அவரைக் கூட்டணியில் வெச்சிருக்கக் கூடாது’ என்றாராம் ஜெயலலிதா.


 சி.பி - சபாஷ்!!! ஜெ பச்சை தமிழச்சி என்பதை நிரூபிச்சிட்டாங்க.. காரியம் ஆகும் வரை காலைப்பிடி, ஆன பின் கழுத்தைப்பிடி!!


'என்னை அவமானப்படுத்துற மாதிரி பேசினார்னு தெரிஞ்சே கூட்டணி வைக்கக் காரணம், கருணாநிதிக்கு எதிரான ஓட்டு சிதறிடக் கூடாதுங்கற ஒரே நோக்கம்தான். ஆனால், ஜெயிச்சு வந்ததும் நம்மை அவர் மதிக்கவே இல்லை. அத்தோட அவமானப்படுத்துற மாதிரி நடந்துக்கிறார்!’ என்றாராம் ஜெயலலிதா. 

 சி.பி - கேப்டன் எங்கேம்மா அவமானப்படுத்துனாரு? ஓ பன்னீர் செல்வம் அளவுக்கு இல்லைன்னாலும் அவரளவுக்கு பம்மிக்கிட்ட்டே தானே இருந்தாரு..?


இந்தக் கோபமே கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் மொத்தமாக ரியாக்ஷன் காட்டுகிறது!''


''என்னதான் பிரச்னை?''

''உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது கணிச மான இடங்களை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ஏகத்துக்கும் அடக்கி வாசித்தது. பரமக்குடி துப்பாக்கிச் சூடு போன்ற விஷயங்களில்கூட சட்டசபையில் பெரிய அளவில் கோபத்தைக் காட்டவில்லை. ஆனால், நிலைமை வேறு மாதிரியாக இருந்தது. உள்ளாட்சித் தேர்தலில் நடக்கும் ஒவ்வொரு 'மூவ்’வும் ஜெயலலிதாவின் ஆலோசனைப்படிதான் நடக்கிறது. 

சி.பி - அம்மா கூட கூட்டணி வைக்கறப்பவே  எடுக்கறது பிச்சை.. இதுல கவுரம் பார்க்கலாமா எச்சை? என மனசை பக்குவப்படுத்திக்கனும் பங்காளீகளா?

அதற்காக தொகுதி பங்கீட்டை முடிவு செய்வதற்காக ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்தார் ஜெயலலிதா. பேருக்குதான் அது குழு. அந்த குழு மூலமாக, கூட்டணிக் கட்சிகளுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்குத் தேவையான தொகுதிகளின் பட்டியலை தயார் செய்து காத்திருந்தார்கள். 

சி.பி - அழைப்பு வரும் அம்மாவிடமிருந்து என காத்திருப்பதும் கடவுள் கண்ணைத்திறந்து நம்மை காப்பாற்றுவார் என நினைப்பதும் பேதமை..
http://www.tribuneindia.com/2008/20080225/nat3.jpg


குழு மூலம் பட்டியலைக் கேட்டு ஜெயலலிதா வாங்கிப் பார்ப்பார்... என்று இலவு காத்த கிளியைப்போல கூட்டணிக் கட்சிகள் காத்துக்கொண்டிருந்த சமயத்தில்தான், அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியலை ரிலீஸ் செய்துகொண்டு இருந்தார் ஜெயலலிதா. சட்டசபைத் தேர்தலில்கூட கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளைத் தவிர்த்துதான் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்போதோ மொத்தத் இடங்களையும் வெளியிட்டு கூட்டணிக் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துவிட்டார்.''

சி.பி - அதிர்ச்சி வைத்தியம் அளித்ததால் இன்று முதல் டகால்டி  டாக்டர் ஜெ என அழைக்கப்படுவார்!!!


''தே.மு.தி.க.வின் நிலைமை?''

சி.பி - தலைல முக்காடு...  இனி போக்கிடம் சுடுகாடு.. 


''மூன்று மேயர்கள், 30 நகராட்சித் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிட நினைத்தது தே.மு.தி.க. ஆனால், மேயர் பதவிகளை தர முடியாது என்று முதலிலேயே கைவிரித்துவிட்டதாம் அ.தி.மு.க. துணை மேயர் பதவிகள் மற்றும் சில நகராட்சித் தலைவர் பதவிகளை வேண்டுமானால் விட்டுக்கொடுப்பதாக சொன்னதாம். இதெல்லாம் அதிகாரப்பூர்வமாகச் சொல்லப்படவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரையில் அதிகாரப் பூர்வமான பேச்சுவார்த்தை தே.மு.தி.க-வுடன் நடத்தவில்லை. 


சி.பி - பேச்சு வார்த்தை நடத்தனுமா? ஆசையைப்பார்த்தியா அண்ணனுக்கு? ஏச்சு கிடைக்காம இருந்தா போதாதா?

பேருக்கு தொகுதி பங்கீட்டுக் குழுவை நியமித்து, பட்டியல்களை எல்லாம் வெளியிட்டு, தேர்தல் தேதியும் அறிவிக்க வைத்து சரியாக காய்களை நகர்த்தி, கடைசி நேரத்தில் கழுத்தை அறுத்துவிட்டார்கள் என்றே நினைக்கிறது தே.மு.தி.க.''


''கம்யூனிஸ்ட்களுக்கு?''

''கம்யூனிஸ்ட்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதிலும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லையாம். திருவொற்றியூர், சிதம்பரம், கோவில்பட்டி ஆகிய நகராட்சிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வசம் இருக்கிறது. அதை வாங்கினாலே போதும் என்று போராடுகிறார்கள். இதே நிலைதான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும். இவர்கள் கதியே இப்படி என்றால்... டாக்டர் கிருஷ்ணசாமி, நடிகர் சரத்குமார் பற்றிச் சொல்லித் தெரியவேண்டியது இல்லை அல்லவா!'' என்று சொல்லி மீண்டும் சிரித்தார் கழுகார்!


''கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஷாக்கானதைத் தானே உம்மிடம் சொன்னேன். இப்போது அ.தி.மு.க-வினர் அதிர்ச்சியைக் கேளும்!''


''சொல்லும்!''

''போயஸ் கார்டனில் இருந்து ரிலீஸ் ஆன வேட்பாளர் பட்டியலைப் பார்த்து, அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்களே அரண்டுபோனார்கள். காரணம், கட்சியின் மா.செ-க்களுக்கும் ஜெ. செக் வைத்திருப்பதுதான். 'நகராட்சித் தொடங்கி ஒன்றிய கவுன்சிலர்கள் வரையிலான பதவிகளுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்துகொடுக்கும்படி கார்டனில் இருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு போடப்பட்டது.

சாதி, செல்வாக்கு உள்ளிட்ட சகல விவரங்களையும் கணக்கிட்டு, தர வாரியான மூன்று நபர்களை வரிசைப்படி ஒவ்வொரு பதவிக்கும் தேர்வு செய்து கொடுக்கும்படி கார்டன் தரப்பு சொல்லி இருந்தது. அதற்கேற்றபடி, தங்களது விசுவாசிகளை முதல் இரண்டு இடங்களிலும், ஆகாத ஆட்களை மூன்றாம் இடத்திலும் குறிப்பிட்டு பட்டியல் அனுப்பினார்கள் மாவட்டச் செயலாளர்கள். 


இந்த விஷயம் அம்மாவுக்கு எப்படித் தெரிந்ததோ... மாவட்டச் செய லாளர்கள் கொடுத்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தவர்களின் பெயர்களை மட்டுமே அவர் டிக் செய்ய, மாவட்டச் செயலாளர்கள் மிரண்டுவிட்டனர். அறிவிப்பு வந்த பிறகு ஆட்களை மாற்றச் சொல்லியும் அம்மாவிடம் பேச முடியாது. அதனால், அம்மாவின் டிக் பட்டியலில் உள்ளவர்கள் தங்களுக்கு ஆகாதவர்களாக இருந் தாலும், அவர்களின் வெற்றிக்காக மா.செ-க்கள் போராட வேண்டிய இக்கட்டு உருவாகிவிட்டது!’ எனச் சொல்லும் சீனியர் நிர்வாகிகள், ஜெயலலிதா இப்படி செய்ததற்கான பின்னணிகளையும் விளக்கினார்கள்...''


''அது என்ன?''

''சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் உள்ளாட்சித் தேர்தலில் தீவிரமாக இருக்கும் என்பதை ஜெயலலிதா தெளிவாக அறிந்து வைத்திருந்தார். சசிகலாவின் உறவினர்கள் கைகாட்டும் ஆட்களுக்குத்தான் மாவட்டச் செயலாளர்கள் முதல் இடம் கொடுத்து இருப்பார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். அதனால்தான், மூன்றாவது இடத்தில் இருந்த ஆட்களைத் தேர்வு செய்து மாவட்டச் செயலாளர்களுக்கு மட்டும் அல்லாது, சசிகலா வகையறாக்களுக்கும் அம்மா செக் வைத்தார் என்கிறார்கள். 

கார்டனில் இருந்து வெளியான பட்டியலில் இப்போது ஒரு சில இடங்களுக்கு மட்டுமே வேட்பாளர்கள் மாற்றப்படுகின்றனர். அம்மாவிடம் வேறு விதமான காரணங்களைச் சொல்லி, மாற்றப்படும் பட்டியலில் உள்ள பலருமே சசிகலா உறவினர்கள்தானாம்!''


''தி.மு.க. விஷயத்துக்கு வாரும்!''

சி.பி - அதானே? விகடனின் டார்கெட்டே திமுக தானே?

''கனிமொழி ஜாமீன்தானே இப்போதைய தி.மு.க. விஷயம்... கனிமொழியும், சரத்குமாரும் ஜாமீன் மனுத் தாக்கல் செய்ததும், அதிக நம்பிக்கையுடன் இருந்தார்கள். இரண்டொரு நாளில் ஜாமீன் கிடைத்துவிடும் என்பதுதான் அவர்களது நினைப்பு. ஆனால், நீதிபதி சைனி, 'இந்த மனுவைப் படிக்க எனக்கு அவகாசம் தேவை. அக்டோபர் 1-ம் தேதி பார்க்கலாம்’ என்று சொல்லிவிட்டு எழுந்து சேம்பருக்குள் சென்றதும், நீதிமன்றத்தில் உட்கார்ந்திருந்த ராஜாத்தி அம்மாள் கலங்கிவிட்டாராம். 

சி.பி - ஜட்ஜ் சைனி நல்லா சைன் பண்ணிட்டார் போல.. 

அவரை ஆசுவாசப்படுத்த கனிமொழியால் முடியவில்லையாம். 'நீ சென்னைக்குப் போம்மா... நான் பார்த்துக்கிறேன்’ என்று மகள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும், தாய்க்கு தாளவில்லையாம். நீதிமன்ற வளாகத்துக்குள் இருக்கும் சிறு செல்லில் வைத்திருந்துவிட்டு... திகார் செல்ல வாகனம் தயாரானதும்தான் கனிமொழியை அழைத்துச் செல்வார்கள். அந்த செல்லுக்குள் உள்ளே நுழையும் வரை கனிமொழியும் தைரியமாகத்தான் இருந்துள்ளார். ஆனால், உள்ளே நடந்து போனவர் தலையைத் திருப்பி ராஜாத்தியைப் பார்த்ததும் கண்கலங்கிவிட்டாராம்.''


''வருத்தம் இருக்கத்தானே செய்யும்!''


''கனிமொழி, சரத்குமார் ஆகிய இருவர் குறித்தும் கவலைப்பட்டு கருணாநிதி வெளியிட்ட அறிக்கை தி.மு.க-விலும், டெல்லியிலும் பலத்த சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. 'ஆ.ராசா உள்ளிட்டவர்களுக்கு ஏதோ ஒரு சம்பந்தம் இருந்தாலும் கனிமொழி, சரத்குமாருக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லையே?’ என்று கருணாநிதி அந்த அறிக்கையில் சொல்லி இருந்தார். 

'ஆ.ராசாவை கருணாநிதி கழற்றிவிடுகிறாரா?’ என்று சிலர் கேட்க ஆரம்பித்துள்ளனர். கருணாநிதியின் இந்த அறிக்கையையே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, சோனியா கவனத்துக்கு டி.ஆர்.பாலு கொண்டுசென்றதாகவும் சொல்கிறார்கள். சோனியா ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று கருணாநிதி நினைக்கிறார். இதற்கிடையே, ஆ.ராசா மீது கருணாநிதிக்கே சில வருத்தங்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்!''


''அது என்ன?''

''செப்டம்பர் 15-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்வதாக நீதிபதி சைனி சொல்லி இருந்தார். அதற்கு மறுநாள் கனிமொழி ஜாமீன் மனுத் தாக்கல் செய்ய தயாராகிக்கொண்டு இருந்தார். ஆனால், அன்று குற்றச்சாட்டு பதிவு செய்யவிடாமல் டிராய் அறிக்கையை முன்வைத்து ஆ.ராசா பேச ஆரம்பிக்க... அதையே மற்றவர்களும் எடுக்க, விவகாரம் நீண்டுகொண்டே போய் அக்டோபரைத் தொட்டுவிட்டது. 

செப்டம்பர் 30-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்ய இருப்பதாக நீதிபதி சொல்லி இருக்கிறார். எனவே கனிமொழி, சரத்குமாருக்கு ஜாமீன் கிடைப்பது வரைக்கும் ஆ.ராசா அமைதியாக இருக்க வேண்டும் என்று கருணாநிதி சொல்லி அனுப்பி உள்ளாராம்!'' என்ற கழுகார் சிறிது இடைவெளிவிட்டு பேசினார்...


''செப்டம்பர் 15-ம் தேதி அன்று, நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.பி.ஆர்.சௌந்திரபாண்டியனாருக்கு பிறந்தநாள் விழா. சென்னை பாண்டிபஜாரில் உள்ள அவரது சிலைக்கு  முக்கியப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். கடந்த மூன்று ஆண்டுகளாக ராஜாத்தி அம்மாள் தவறாமல் வருகை தந்தார். ஆனால், இந்தமுறை ஆப்சென்ட். 'நான் வரலை!’ என்று சொல்லிவிட்டாராம். அவர் டெல்லியிலேயே தங்கி இருப்பது கருணாநிதியை இன்னும் வருத்தமடைய வைத்துள்ளது.


கலைஞர் டி.வி-யின் மேலாளர்கள் மூவர், சமீபத்தில் டெல்லிக்குப்போய் இருந்தார்களாம். திகார் ஜெயிலுக்குப்போய் கனிமொழியைச் சந்தித்துப் பேசினார்களாம். சரத்குமார்தான் டல்லாக காணப்பட்டாராம். கனிமொழி உற்சாகமாய் பேசினாராம். 'இந்த மாத இறுதிக்குள் நான் பெயிலில் வெளியே வந்துவிடுவேன்... அப்பாகிட்ட சொல்லுங்க.' என்று தகவல் சொல்லி அனுப்பினாராம். இது ஒன்றுதான் கருணாநிதிக்கு ஆறுதலான விஷயம்!'' என்று கிளம்பத் தயாரான கழுகார்


''சாதித் தலைவர் ஒருவரை போலீஸ் அதிகாரி சந்தித்ததாக ஒரு செய்தியை உமக்குச் சொல்லி இருந்தேன். அந்த இடத்தில் அப்படி ஒரு சந்திப்பு நடக்கவில்லை என்றும் பரமக்குடி விவகாரத்துக்கும் அந்த அதிகாரிக்கும் அப்படி எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சிலர் அடித்துச் சொல்கிறார்கள்!'' என்றார்.

அவரிடம், ''உள்ளாட்சித் தேர்தல் தேதியைப் பார்த்தோம். அக்டோபர் 17, 19... என்று சோ.அய்யர் அறிவித்திருக்கிறார். ஜெயலலிதா பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகும் அக்டோபர் 20-க்கு முன்னதாக தேர்தல் நடந்துவிடும் என்று சொன்னீர். அது மாதிரியே நடந்துள்ளதே!'' என்றோம்.

அந்தப் பாராட்டை ஏற்றுக்கொண்டவராக வானத்தில் மிதந்தபடி வணக்கம் வைத்தார் கழுகார்!


 1.  நரேந்திர மோடியைப் பாராட்டுவதைப் பார்த்தால்... தமிழகத்தை குஜராத் போல வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்துவிடுவாரா ஜெயலலிதா? 
 
  தமிழகத்தில் தொழில் தொடங்க வந்த இரண்டு முக்கிய மோட்டார் நிறுவனங்கள்  குஜராத்துக்கு தங்கள் ஜாகையை மாற்றிக் கொண்டதற்கு உண்மை யான காரணம் என்ன? இந்த நிலை தொடர்ந்தால் தமிழகம் எப்படி முன்னேற்றத்தில் குஜராத் ஆகும்?

சி.பி - குஜராத் போலா? அப்போ மது விலக்கு கொண்டு வர தில் இருக்கா?


  2.பரஞ்சோதி - கே.என்.நேரு? 


ஒருவர் மீது பாலியல் புகார்!
இன்னொவருவர் மீது கிரிமினல் புகார்!
சபாஷ்... சரியான போட்டி!

 சி.பி - ஆமா, இவங்க 2 பேரும் பெரிய ரஜினி  - கமல்?  கம்பேர் பண்றதுக்கு..

  3.அரக்கோணம் ரயில் விபத்துக்கு உண்மையான காரணத்தைக் கண்டுபிடிப்பதில் ஏன் இத்தனை குழப்பங்கள்?
  சென்னை சென்ட்ரலில் இருந்து ஒரு ரயிலைக் கடத்திச் சென்று விபத்துக்குள்ளாக்கியவன் யார் என்று இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லையே! ஒரு அரசாங்கத்துக்குப் பல்லாயிரம் கோடிப் பணத்தை ஆண்டுதோறும் சம்பாதித்துக் கொடுக்கும் ஒரு துறை எப்படி பொறுப்பில்லாமல் இயங்குகிறது பார்த்தீர்களா?

சி.பி - கண்டு பிடிச்ச எல்லாத்தையும் வெளில சொல்லிட்டு இருக்க முடியுமா?பல கேஸ்ல பல மேட்டர் தெரிஞ்சாலும் சில பல காரணங்களால் வெளில சொல்ல முடியாத நிலைமை இருக்கும்.. 


4. 'பெட்ரோல் விலை உயர்வை நாங்கள் ஏற்கவில்லை’ என்கிறாரே தங்கபாலு? 

  தமிழகத்தில் இருக்கும் 'துணிச்சலான அரசியல்வாதி' என்று தங்கபாலுவை நான் சும்மா சொல்லவில்லை என்பது இப்போதாவது தெரிகிறதா?

 சி.பி - காமெடி பீஸுன்னா ஜோக் மட்டும் தான் சொல்லனும்.. இதெல்லாம் சொல்லப்படாது..


 5. மதச்சார்பின்மையைப் பற்றிப் பேச நரேந்திர மோடிக்கு அருகதை உண்டா? 

  கடந்த காலத் தவறுகளில் இருந்து மோடி பாடம் கற்கக் கூடாதா? பிராயச் சித்தம் தேடுவதற்கு எல்லா மனிதர்களுக்கும் உரிமை உண்டு. ஆனால், அவர் திருந்தி விடக் கூடாது என்று சிலர் நினைப்பதுதான் ஏன் என்று புரியவில்லை!


சி.பி - இந்தக்கேள்விக்கு துக்ளக் சோ நல்லா ஜால்ரா அடிப்பார்.. சாரி. நல்லா பதில் சொல்வார்.

  6.உண்மையான இந்தியர்கள், தூக்குத் தண்டனையை ஆதரிக்கவே செய்வார்கள் என்கிறேன் நான்...?


  தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கால்கோள் நாட்டியவர்களில்  இவரும் ஒருவர். சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்ட அவர் சிறையில் இருந்தபடி தனது அனுபவங்களை எழுதினார். 'சிறையில் தவம்’ என்ற தலைப்பில் அது புத்தகமாக வந்தது. அந்த டைரியில் 21.2.1922-ம் நாளைப் பற்றி அவர் எழுகிறார்..


'அப்பாத்துரை என்ற சமையல்காரரை தூக்கிலிடப் போகிறார்கள். இன்று நான் அதிகாலையில் எழுந்துவிட்டேன். அன்று தூக்கிலிடப்பட இருந்த மனிதனின் நினைவு என்னை முன்னதாக எழுப்பி இருக்க வேண்டும். என் படுக்கையில் உட்கார்ந்தவாறே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். அந்த நிமிஷங்கள் ஒரு யுகம் போலத் தோன்றின. 

அவர்கள், துரதிர்ஷ்டம் பிடித்த அப்பாத்துரையை கைவிலங்கிட்டு அழைத்து வந்தனர். காலடி ஓசையில் இருந்து அவர்கள் வந்ததை உணர்ந்தேன். சில நிமிஷங்களில் தலைமை வார்டர் என் அறையைத் தாண்டிச் சென்றார். அதிலிருந்து அப்பாத்துரையின் வாழ்வு முடிந்தது என்று தெரிந்து கொண்டேன். கடவுள் கொடுத்ததை மனிதன் பகிரங்கமாகப் பறித்துக் கொண்டான். அதைச் சட்டப்படி நியாயம் என்றும் எண்ணிக் கொண்டான்!’


- இப்படி எழுதி இருப்பவர் மூதறிஞர் ராஜாஜி.

 சி.பி - மரண தண்டனை விதிக்கப்பட்டால் எப்போது மரணம் வரும் என்று காத்திருப்பது மரணத்தை விடக்கொடுமையானது..



 7.  யாரையும் கேட்காமல் பட்டியல் வெளியிட்டு விட்டாரே ஜெ.? 

 சி.பி - அவர் எம்ஜியாரையே மதிக்காதவர்.. கறுப்பு எம் ஜி ஆருக்கு அல்வாதான், ஆனா கசக்கும் அல்வா!!


  யாரைக் கேட்க வேண்டும்_ இது ஜெ. வாய் திறந்து சொல்லாத பதில்!


ஒரு உண்மை மட்டும் புரிகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதும் கூட்டணிகளுடன் பேசுவதற்கு முன்னதாக ஒரு பட்டியல் வெளியாகிவிட்டது. 'அம்மாவுக்குத் தெரியாது’ என்று அப்போது சிலர் சொன்னார்கள். இன்று நடப்பதைப் பார்த்தால், அதுவும் 'அம்மாவுக்குத் தெரிந்து நடந்ததுதான்’ என்ற முடிவுக்கு வரவேண்டி உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே தனித்து நிற்கலாம் என்ற ஐடியா அவருக்கு இருந்திருப்பதும் தெரிகிறது.





  8.அடுத்த மாதம் திருமணம் ஆகப் போகும் எனக்கு உங்களது அறிவுரை? 


சி.பி - இப்படி கண்டவங்க கிட்டேயும் கேட்காம மனைவி பேச்சை மட்டும் கேட்டு நடந்துக்கப்பா..

  கேள்வி கழுகாருக்குதானே.! புதுமணத்தம்பதிக்கு புத்திமதி சொல்லாதே என்கிறது சாஸ்திரம். ஆனால், வி.ஸ.காண்டேகர் தனது கதை ஒன்றில் சொன்ன வாசகம் கவனத்துக்கு வருகிறது.

'திருமணம் என்பது ஒரு போர். என்னதான் லாகவமாகச் செயல்பட்டாலும் சேதாரம் இருக்கத் தான் செய்யும்’.

சி.பி - ஆனா சேதாரம்  நாட் டூ தாரம் , ஆல் லாஸ் டூ ஹஸ்”பெண்டு”

 9 முதல் நாள் அணு உலைக்கு ஆதரவு... மறுநாள் எதிர்ப்பு.. என்ன ஆச்சு ஜெயலலிதாவுக்கு? 


  பேரறிவாளன், சாந்தன், முருகன் விவகாரத்திலும் இப்படித்தான் நடந்து கொண்டார். இனிமேல் ஜெயலலிதா எந்தப் பிரச்னை தொடர்பாகவும் முதல் நாள் எழுதும் அறிக்கையை ரிலீஸ் பண்ணாமல் இருந்து... மறுநாள் யோசித்த பிறகு வெளியே விட்டால் நல்லது!

சி.பி - நிலையான முடிவு எடுக்கும் முன் சில தடுமாற்றங்கள் இருக்கத்தான் செய்யும்.. 


  10. ரயில் விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதம் அடைந்தால் முன்பெல்லாம் ரயில்வே மந்திரி பதவி விலகுவார். ஆனால், தற்போதைய மந்திரி, ஆறுதல் மட்டும் கூறிவிட்டு கடமையை முடித்துக் கொள்கிறாரே?


  ஆறுதலாவது சொல்ல வருகிறாரே!  ஆறு மாதங்களுக்கு முன்னால் பீகாரில் ஒரு விபத்து ஏற்பட்டபோது மத்திய மந்திரி போகவே இல்லை. முன்பெல்லாம் எப்பவாவது விபத்து நடக்கும். அது பெரிய விஷயமாகி பதவி விலகுவார். இப்போது மாதம் தோறும் இந்தியாவில் எந்தப் பகுதியிலாவது நடக்கிறது விபத்து. பதவி விலக ஆரம்பித்தால் விலகிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்!

சி.பி - பதவி பெற எவ்வளவு சிரமப்படவேண்டியதா இருக்கு..? கண்டவன் கால்லயும் விழ வேண்டியதா இருக்கு.. உங்களுக்கென்னா ஈசியா சொல்லிடுவீங்க.. அவங்களுக்குத்தானே கஷ்ட நஷ்டம் தெரியும்.. ?

11.  வைகோ இன்னும் எவ்வளவு காலம்தான் மைக் பிடித்துக் கொண்டே இருக்கப் போகிறார்? 


  மைக் இருக்கும் வரை..
 
சி.பி - அவர் ஆட்சியைப்பிடிக்கும் வாய்ப்பு 0.001% கூட இல்லை!!!

நன்றி - ஜூ வி

Wednesday, September 07, 2011

ஜெவைக்கண்டு விஜயகாந்த் பம்முவது ஏன்? விம்முவது ஜூ வி கட்டுரை

விஜயகாந்த்தை கழற்றிவிட நினைக்கிறாரா ஜெ.?

கூட்டணியை உலுக்கும் உள்ளாட்சி நிலவரம்!
ழுகார் நம்முன் ஆஜராகி செய்திச் சிட்டையைப் பிரிப்பதற்கு முன்னதாக, நாம் முந்திக்கொண்டோம். 

'
''புதிய கவர்னர் ரோசய்யாவை, கருணாநிதி திடீரென்று சந்தித்தாரே! ஏதாவது விஷேசம் உண்டா?''

''ரோசய்யாவுக்கும் கருணாநிதிக்கும் சொல்லிக்கொள்வது மாதிரி நட்பெல்லாம் இல்லை. 'நாங்கள் நெடுநாளைய நண்பர்கள்’ என்று கருணாநிதி சொல்லிக்கொள்கிறார். போகட்டும்... மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கருணாநிதி சொன்னாலும், 'கவர்னரை தன் வசம் வைத்துக்கொள்வது நல்லது’ என்று கருணாநிதி நினைத்து, நடந்த காரியபூர்வமான சந்திப்புதான் இது என்கிறார்கள் தி.மு.க-வில். 

 சி.பி - கலைஞர் ஒரு சிறந்த ராஜ தந்திரி, அவரது ஒவ்வொரு மூவ்க்கும் ஒரு அர்த்தம் இருக்கும், ஆதாயம் இல்லாம ஆத்தோட போக மாட்டார்ர்.......



அன்பழகன், துரைமுருகன் ஆகியோருடன்தான் ரோசய்யாவை சந்தித்தார் கருணாநிதி. தான் எழுதிய புத்தகங்களை அவருக்குக் கொடுத்தார். பிறகு துரைமுருகனை வெளியே அனுப்பிவிட்டு இரண்டு நிமிஷம் ரோசய் யாவிடம் தனிமையில் பேசினாராம் கருணாநிதி.''


''அது என்னவாம்?''

சி.பி - யோவ், உமக்கு லொள்ளு ஜாஸ்திய்யா, அதான் தனிமைல பேசுனாருன்னு சொல்றாங்க.. அப்புறம் எப்படி அது தெரியும்? ஆனாலும் இப்போ அண்ணன் அளந்து விடுவார் பாருங்க.. பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே?  
''ஜெயலலிதாவின் சில செயல்பாடுகளைச் சொல்லி, கருணாநிதி வருந்தினாராம். 'நில மோசடின்னு சொல்லி கட்சிக்காரங்களைக் கைது செய்றாங்க. எல்லாரையும் குண்டாஸ்ல போடு றாங்க. என் குடும்பத்தையே பழிவாங்கணும்னு நினைக்கிறாங்க. சமச்சீர்க் கல்வி விஷயத்தில் தப்பான முடிவெடுத்து, உச்ச நீதிமன்றம் கண்டிச்ச பிறகு பின்வாங்கிட்டாங்க’ என்று கடகடவென கருணாநிதி கலங்கிவிட்டதாக தி.மு.க. வட்டாரம் சொல்கிறது. 


முகத்தில் எந்த பாவனையும் காட்டாமல் ரோசய்யா கேட்டுக்கொண்டாராம். 


சி.பி - ஏன் அவரு எந்த பாவனாவையும் காட்டலை.? அடச்சே? எந்த பாவனையையும் காட்டலை? மனசுக்குள்ள ராமராஜன்னு நினப்பா? 

அடுத்து, சொற்ப நிமிடங்களிலேயே வெளியே வந்துவிட்டார் கருணாநிதி!''


''இதுபற்றி என்ன நினைக்கிறாராம் ரோசய்யா!''

''இதெல்லாம் நமக்குத் தேவை இல்லாத விஷயம் என்று நினைப்பார்!

சென்னைக்கு வருவதற்கு முந்தைய நாள், ஆந்திரப் பத்திரிகையாளர் ஒருவர் ரோசய்யாவை சந்தித்துள்ளார். அப்போது, 'நான் அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்வேன். அந்த மாநில அரசுக்கு உதவியாக இருப்பேன். நான் அரசியல்வாதி மாதிரி கருத்துச் சொல்லமாட்டேன். பப்ளிக் ஸ்பீக்கராக இருக்க மாட்டேன்’ என்று சொன்னாராம். இதை வைத்துப்பார்த்தால் ரோசய்யா... அடங்கிய சமர்த்தராகவே காலத்தை ஓட்டிவிடுவார் என்று நினைக்கிறேன். ஆனால், காங்கிரஸ் மேலிடம் என்ன நினைக்கிறதோ...''



சி.பி - காங்கிரஸ் ஃபீமேல் இடம்னு சொல்லுங்க... அப்புறம் கீழே இருக்கற ஃபோட்டோவினைப்பாருங்க.. கேப்டன் மப்புல இருக்காரா?இல்லையா? கண்டுபிடிப்பவர்களுக்கு நயந்தாரா கல்யாண முகூர்த்தம் நேரடி ஒளிபரப்பு வீடியோ லிங்க் அளிக்கப்படும்.. ( ஒன்லி கல்யாண முகூர்த்தம்)

''பர்னாலா உரிய மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்டாரா?''

''புதிய கவர்னர் வரும்போது முந்தைய கவர்னர் இருப்பது மரபு அல்லவாம்! எனவே, ரோசய்யா மாலையில் பதவி ஏற்கும் அன்று காலையில் பர்னாலா, அவரது மனைவி மற்றும் ஒரே ஒரு பாதுகாவலர் - ஆகிய மூவரும் ராஜ்பவனில் இருந்து பறந்துவிட்டனர். மகன்கள் நான்கைந்து நாட்களுக்கு முன்னதாகவே பொருட்களுடன் போய்விட்டனர். படாடோபமாக வழியனுப்பு விழாக்கள் நடக்காததில் பர்னாலா வருத்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள். ஜெயலலிதாவுக்கும், இவருக்கும் நட்பு சரியாக இல்லை என்பதும் விழா நடக்காததற்குக் காரணமாக இருக்கலாம். 'ஒட்டி உறவாடிய தி.மு.க-வாவது சிறு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கலாம்’ என்று பர்னாலா வருந்தியதாக வும் சொல்கிறார்கள்.''


சி.பி - இந்த கழுகார்க்கு, நிருபர்களுக்கு இதே தொழில் போல, சொல்கிறார்கள், நினைத்தார்கள், யோசிக்கிறார்கள்னு இவங்க என்ன மைண்ட் ரீடரா?
''விழா கொண்டாடும் நிலைமையிலா இருக்கிறது தி.மு.க.?''

''அதனால்தான் சண்டிகர் போய் இறங்கிய மறுநாளே அங்கு உள்ள நிருபர்களை அழைத்து பார்ட்டி கொடுத்து பேசினாராம் பர்னாலா. அடுத்து வரப்போகும் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களுள் ஒருவராக பர்னாலா இருக்கப் போகிறாராம். பிரகாஷ் சிங் பாதல் - காங்கிரஸ் ஒரு கூட்டணி அமைக்க, அதற்கு எதிராக பர்னாலா ஒரு கூட்டணியைத் தயார் செய்யத் தொடங்கிவிட்டார். முதல்வர் பாதல், அவரது மகனும் துணை முதல்வருமான சுக்பிர்சிங் பாதல் இருவரும்தான் இனி அவரது இலக்கு! 'இவ்வளவு ஆக்ரோஷமான மனிதர் இங்கே நடந்த பல விஷயங்களைக் கண்டும் காணாமல் மௌனியாக இருந்தது ஏன்?’ என்பதுதான் பலரது கேள்வி. கருணாநிதியுடனான நட்பு என்கிறார்கள் சிலர். பர்னாலாவின் மகனைச் சிலர் காரணம் சொல்கிறார்கள். மொத்தத்தில் பர்னாலா, வெறும் தலையாட்டி பொம்மையாகவே கடந்த ஐந்து ஆண்டுகளைக் கழித்துவிட்டுப் போய்விட்டார்!''

''திடீரென ஸ்டாலின் லண்டன் கிளம்பிவிட்டாரே?''

''மருத்துவ சிகிச்சைக்காக ஆண்டுக்கு ஒரு முறை லண்டன் சென்று வருவதைத் தனது வழக்கமாக வைத்துள்ளார் ஸ்டாலின். லண்டன் செல்வதற்கு முன்னதாக, இங்கு உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று செக்-அப் செய்ததாகவும் சொல்கிறார்கள். எனவே, அவர் லண்டன் செல்வதில் ரகசியம் எதுவும் இல்லை! ஆனால், அதற்காக அவர் தேர்ந்தெடுத்த தேதிதான் தி.மு.க-வினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது!''


''என்ன?''

''சட்டமன்றத்துக்குள் போவதா வேண்டாமா என்று கட்சிக்குள் பெரும் பிரச்னை நடப்பது அனை வருக்கும் தெரியும். முதலில் போக மாட்டேன் என்றார்கள். ஒரு நாள் போனார்கள். மறுபடியும் பாய்காட் பண்ணினார்கள். மீண்டும் 5-ம் தேதி போகப் போவதாக ஸ்டாலின்தான் அறிவித்தார். சட்டமன்ற தி.மு.க. குழுத் தலைவர் அவர்தானே! அன்றைய தினம் அவர் இல்லாமல் லண்டன் போனது சரியா என்பதுதான் சில தி.மு.க. பிரமுகர்களின் கேள்வி!

'5-ம் தேதி, தான் லண்டனில் இருப்போம் என்பது முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அப்படி இருக்கும்போது, அந்த நாளை ஏன் சொல்ல வேண்டும்?’ என்று சிலர் புலம்புகிறார்கள். '

தளபதி இருந்து எங்களை சபைக்கு அழைத்துச் சென்றால்தானே உற்சாகமாக இருக்கும்? சபைக்குள் என்ன முடிவு எடுப்பது என்பதையும் அவர் இருந்தால்தான் உடனடியாகச் சொல்லவும் முடியும்?’ என்பது இவர்களது கருத்து. மேலும், சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள கருணாநிதி விரும்புகிறார். ஆனால், அவரது வீல்சேருக்கு வழி இல்லாததால் அவரும் சைலன்ட் டாக இருக்க வேண்டிய நெருக்கடி. மொத்தத்தில் சபைக்கும் தி.மு.க-வுக்கும் ஒட்டவில்லை!''

''சேலம் தி.மு.க. பொதுக் கூட்டத்திலும் ஏதோ கசகசப்பாமே?''

''இத்தனை ஆண்டுகால தி.மு.க. வரலாற்றில் வீரபாண்டி ஆறுமுகம் இல்லாமல் ஒரு பிரமாண்டமான பொதுக் கூட்டத்தை அவரது எதிரிகள் சேர்ந்து நடத்திக் காட்டிவிட்டார்கள். பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன்தான் இதற்கு ஏற்பாடு. ஸ்டாலினின் முழு ஆசியுடன் நடந்த இந்தக் கூட்டத்துக்காக சேலம் போஸ் மைதானத்தில் எக்கச்சக்கமான கூட்டமாம்! 

இதற்கான ஆலோசனை நடந்தபோதே வீரபாண்டி ஆறுமுகம் ஆதரவு ஆட்கள் கடும் எதிர்ப்பு கிளப்பினார்களாம். 'அண்ணன், அடுத்த வாரம் ஜாமீனில் வெளியே வரப் போகிறார். அவர் வந்ததும் நடத்தலாம்’ என்று வெளிப்படையாகவே சொல்ல... எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் கலைக்கப்பட்டது. சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் கலையமுதன், சென்னை வந்து கருணாநிதியை சந்தித்து, 'தளபதி கலந்துகிடுற தேதியை மாத்தணும்’ என்று சொல்லி... 

வீரபாண்டி ஆறுமுகம் இல்லாத காரணத்தையும் அவர் சொன்னாராம். கடுப்பான கருணாநிதி, 'வீரபாண்டியார் இல்லேன்னா கூட்டமே நடத்தக் கூடாதா? நானே இல்லேன்னாக்கூட கட்சி இருக்கும். கூட்டம் நடக்கும்’ என்றாராம் கருணாநிதி. கலையமுதன் ஓடி வந்துவிட்டார். இதைத் தங்களுக்குக் கிடைத்த வெற்றியாக வீரபாண்டி ஆறுமுகத்தின் எதிர் கோஷ்டி பார்க்கிறது. 'மாவட்டக் கழகத்துக்குள் குழப்பம் ஏற்படுத்தும் இதுபோன்ற காரியங்களுக்கு தளபதி உதவி செய்வது சரியா?’ எனச் சிலர் கேட்க ஆரம்பித்துள்ளார்கள்! அதேபோல்...''

''மாநிலம் முழுவதும் தி.மு.க. பிரமுகர்கள் பல மாவட்டங்களில் கைதாகி வருகிறார்கள். எங்குமே நடக்காத காரியம், விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் நடந்தது. 'பொன்முடியை விடுதலை செய்’ என்று ஆங்காங்கே தி.மு.க-வினர் மறியல் செய்து கைதாவதுதான் அது. கனிமொழி முதல் எத்தனையோ பேர் கைதான போதெல்லாம் இதுபோல் மறியல் நடத்தாத உடன்பிறப்புகள், பொன்முடிக்காக மட்டும் நடத்துவது சரியா?’ என சிலர் கேட்க ஆரம்பித்த நிலையில்... 'விழுப்புரத்தில் நடந்தது மாதிரி எல்லா ஊர்லயும் நடக்கட்டும்’ என்று தூண்டி விடும் காரியத்தையும் ஸ்டாலின் செய்கிறாராம். '


மாநிலத் தலைமையின் அனுமதி இல்லாமல் ஆங்காங்கே ஆர்ப் பாட்டம் நடத்துவது தவறு என்று கண்டிக்காமல் தளபதியே இப்படிச் சொல்வது சரியா?’ என்றும் இவர்கள் கேட்கிறார்கள். மொத்தத்தில் கட்சி கலகலத்துக்கொண்டு இருப்பது தெரிகிறது!''


''உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. அணியில் விஜயகாந்த் இருப்பாரா?''


சி.பி - அண்ணன் பம்பறதே அதுக்குத்தானே? உள்ளாட்சித்தேர்தல் முடிஞ்ச பிறகு பாருங்க சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் ஜெ வை குறை சொல்லி வெளி நடப்பு பண்ணப்போறாரு.. 
''இருக்க வேண்டும் என்றுதான் விஜயகாந்த் நினைக் கிறாராம். 10 மாநகராட்சியில் 4 இடங்களை தே.மு.தி.க. கேட்பதாக அ.தி.மு.க. தலைமைக் கழக வட்டாரத்தில் வலம் வருபவர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளனர். 'ஒரே ஒரு மாநகராட்சியை அம்மா விட்டுக்கொடுக்கலாம்!’ என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.

விஜயகாந்த் இதை ஏற்பாரா எனத் தெரியவில்லை. 'கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியாக ஆக வேண்டும் என்பதற்காக, கூட்டணிக் கட்சிகளுடன் அம்மா சமரசமாகப் போனார். இறங்கிச் சென்று தொகுதி களை விட்டுக்கொடுத்தார். இப்போது ஆளும் கட்சி ஆகிவிட்டதால், அவ்வளவு இறங்கிப் போகமாட்டார்...’ என்றும் அ.தி.மு.க. புள்ளிகள் சொல்கிறார்கள்.''


''விஜயகாந்த் என்ன நினைக்கிறார்?''

''ஜெ. ஆட்சியின் 100-வது நாள் விவாதத்தில் கலந்துகொண்ட பண்ருட்டி ராமச்சந்திரன், ஜெயலலி தாவை புகழ்ந்து தள்ளிவிட்டு, 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணருங்கள்’ என்று சொன்னார்.


சி.பி - யார் யாருக்கு எத்தனை கோடி? நன்மை? 

ஒன்றாக இருப்பதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது என்பது அவரது வாக்கு. இந்த விழா அன்றுகூட சபைக்கு விஜயகாந்த் வராதது, ஜெயலலிதாவுக்கு மனவருத்தம் கொடுத்துள்ளது. 'சபைக்கு வர விஜயகாந்த்துக்கு ஆர்வம் இல்லையா? அல்லது அவாய்ட் பண்ணுகிறாரா?’ என்று குழம்பிப் போயிருக்கிறார் ஜெயலலிதா. 

'எந்த இடத்திலும் ஜெயலலிதாவைப் பாராட்டிப் பேசி கமிட் ஆகிவிடக் கூடாது’ என்று விஜயகாந்த் நினைப்பதாகவும் சொல்கிறார்கள். 


சி.பி - அண்ணன் ஹேங்க் ஓவர்ல , வாமிட் ஆகிடக்கூடாதுன்னு நினைச்சிருப்பாரு.. 





1. மன்னர்களை வீழ்த்தியது எது?  


சி.பி - நோ டவுட். ஒன்லி மண்ணாசை, & பெண்ணாசை
 
அந்தப்புரமும் புத்திர பாசமும்!
அக்பர் இதற்கு நல்ல உதாரணம். பிறந்த பையனின் முகத்தைக் கூடப் பார்க்காமல் போர்க்களத்தில் இருந்தபடியே அக்பரின் பிறந்த நாளைக் கொண்டாடினார் அப்பா ஹுமாயூன். 'இவன் புகழ் கஸ்தூரி மணம் போல உலகம் முழுக்கப் பரவ வேண்டும்’ என்றார். அதைப் போலவே 69 ஆண்டுகள் வாழ்ந்த அக்பர், 49 ஆண்டுகள் மன்னராகவே இருந்தார். அவரை நொந்து நூலாக்கி மரணப்படுக்கையில் தள்ளியது ரெண்டு பேர். ஒருத்தி, அந்தப்புரத்தில் இருந்த மாஹம் அனாகா. தன் மகன் ஆதம்கானை வளர்க்க வேண்டும் என்பதற்காக அசைக்க முடியாத மாவீரனான பைராம்கான் பற்றி பொய்களைப் புனைந்து அக்பரிடம் இருந்து பிரித்தாள்.


இன்னோர் ஆள், அக்பரின் மகன் சலீம். 'அப்பாவின் ஆயுள் நீடிக்கிறதே’ என்று நித்தமும் புலம்பி, தனி அணி கட்டியவர் சலீம். இவர்கள் இருவரையும் சமாளிக்க முடியாமல் அக்பர் படுக்கையில் சரிந்தார். இதுதான் பல மன்னர்களுக்கும் நடந்தது!



2. 'நாங்கள் எதைச் செய்தாலும் அதைச் சீரழிப்பதே தி.மு.க-வின் வேலை’ என்கிறாரே ஜெ.? 

'நாங்கள் எதைச் செய்தாலும் அதைச் சீரழிப்பதே அ.தி.மு.க-வின் வேலை’ என்கிறாரே மு.க. இவர்கள் ரெண்டு பேருக்​குமே வேறு வேலையே இல்லையா?

சி.பி - நாட்டுக்கு விடிவு காலம் பிறக்கனும்னா திமுக , அதிமுக இரண்டுக்கும் ஒரு மாற்று சக்தி வரனும்...



3. இலங்கையில் 30 ஆண்டுகளாக இருந்த அவசரகாலத் தடை சட்டத்தை ராஜபக்ஷே வாபஸ் வாங்கிவிட்டது நல்ல விஷயம்தானே? 

இலங்கையில் அமைதி திரும்பிவிட்டது என்பதைக்காட்ட ராஜபக்ஷே நடத்தும் நாடகம் இது!
மட்டக்களப்பு மாவட்ட எம்.பி-யான சீனித்தம்பி யோகேஸ்வரன் கடந்த வாரம் தமிழகம் வந்திருந்தார். 'அவசர கால தடை சட்டத்தை வாபஸ் வாங்கிவிட்டு, பயங்கரவாத தடை சட்டத்தை ராஜபக்ஷே பலப்படுத்திவிட்டார்!’ என்று சொல்லி​இருக்கிறார். எனவே, சட்டத்தின் பெயர் மட்டுமே மாறியுள்ளது.
அதைவிட யோகேஸ்வரன் சொல்லியிருக்கும் இன்னொரு செய்தி அதிர்ச்சிக்கு உரியது. '50 ஆயிரம் வீடுகள் கட்ட இந்தியா பணம் கொடுத்தது. ஒன்றரை ஆண்டுகளில் ஆயிரம் வீடுகள் கூட கட்டித் தரப்படவில்லை’ என்றும் அவர் சொல்கிறார். இந்தியா இதையாவது தட்டிக்கேட்க வேண்டும்!



'பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட மூவர் குறித்து தமிழக சட்டசபை நிறைவேற்றிய தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது’ என்கிறாரே மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்? 

ஜெயலலிதா முன்மொழிந்து அனைத்துக் கட்சிகளும் வழிமொழிந்த தீர்மானம், குடியரசுத் தலைவருக்குத்தான். எனவே, அது ஏற்கத் தக்கதா இல்லையா என அவர்தான் தீர்மானிக்கவேண்டும். மேலும், ஒரு மாநில சட்டசபை ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை உதாசீனப்படுத்தும் வகையில் ஓர் அமைச்சர், அதுவும் சட்ட அமைச்சர் கருத்துச் சொல்வது அபத்தமானது. ஜெயலலிதா மீதான எரிச்சல் மட்டுமே அவரது வார்த்தைகளில் தெரிகிறது!

சி.பி - கட்டுப்படுத்தாது, ஆனால் கரைக்க , மனம் மாற்ற உதவலாம்..


5.   அண்ணா ஹஜாரே பற்றி, அருந்ததிராய் எழுதிய கட்டுரையைப் படித்தீரா? 

ஊழலுக்கு எதிரான யுத்தம் தொடங்கியவர் என்கிற அடிப்படையில் ஹஜாரே ஏற்கத் தக்கவர்தான். ஆனால், அருந்ததி சொன்னதில் மிக முக்கியமான விமர்சனம் இருக்கிறது.

'அதிகாரம் கீழ்நிலை வரை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பது காந்தியின் கொள்கை. ஆனால், ஹஜாரேயின் ஜன்லோக்பால் சட்டம், முற்றதிகாரம் கொண்ட கொடிய சட்டமாக இருக்கிறது. ஏற்கெனவே அதிகாரம் வாய்ந்த சிறு கும்பல் நாட்டை ஆள்கிறது. ஜன்லோக்பால் குழுவும் இரண்டாவது, அதிகாரம் வாய்ந்த கும்பலாகச் செயல்படப் போகிறது’ என்று குற்றம் சாட்டுகிறார்.


'காந்திய நெறி சார்ந்ததாக இச்சட்டம் வடிவமைக்கப்​படவில்லை!’ என்று அருந்ததி சொல்​வதற்கு அண்ணாவிடமிருந்து இதுவரை பதில் இல்லை!

சி.பி - துக்ளக் சோ கூட அன்னா ஹசாரேவை ஆதரிக்கவில்லை...நமது பதிவுலகில் அண்ணன்  சேட்டைக்காரன் எடுத்து வைக்கும் அன்னா ஹசாரேவுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவானவை.. 

\6. ஸ்டாலின் என்ன செய்துகொண்டு இருக்கிறார்? 


'கடந்த ஐந்தாண்டுகளில் அரசு நிகழ்ச்சிகளுக்குப் போனதுதான் எனது வேலை. இப்போது தி.மு.க. தோழர்களை சிறை சிறையாகப் போய்ப் பார்ப்பதுதான் எனது வேலை’ என்று உங்கள் ஊரில் தான் ஸ்டாலினே ஒப்புக் கொண்டுள்ளாரே!

சி.பி - அழகிரியை ஓரம் கட்டுவது எப்படி? அப்பாவின் மனதில் அவசரமாய் இடம் பிடிப்பது எப்படி? என திங்க்கிங்க்.. 



7. 'தமிழகத்தின் அண்ணா ஹஜாரே!’ என்று நடிகர் விஜய்யை அவரது ரசிகர் மன்றத் தலைவர் 'வேலாயுதம்’ பட இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளாரே! 


நல்லவேளை! இது அண்ணா ஹஜாரேவுக்கு தெரியாது! இதைக் கேள்விப்பட்டு அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது!

சி.பி - அடப்பாவமே?விஜய்க்கு அவ்வளவு வயசாகிடுச்சா?


8. நிலப்பறிப்பு வழக்கு டல் அடிப்பது போல் தெரிகிறதே? 


இதோ அடுத்து வரப்போகிறது, சொத்துக் குவிப்பு வழக்குகள்!

சி.பி - அது வந்தா அம்மாவுக்கும், அய்யாவுக்கும் சேர்ந்தாப்போல் ஆபத்து


9. கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்கும் புதிய சட்டம் வரப் போகிறதாமே? 


ஆமாம்! 'கிரிமினல்கள் இல்லாத அரசியல் _ சட்ட மசோதா’ என்று இதற்குப் பெயர். கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களது வேட்பு மனுக்களை இந்தச் சட்டத்தின் மூலம் தள்ளுபடி செய்து விடுவார்கள். இன்றைய நாடாளுமன்றத்திலேயே 162 எம்.பி-க்கள் மீது குற்றப்புகார்கள் இருக்கின்றன. இதை வைத்துப் பார்த்தால் வரவேற்க வேண்டிய சட்டம் இது. இன்னும் மூன்று வாரத்தில் தாக்கல் ஆகப் போகிறது.


சி.பி - அப்புறம் எலக்‌ஷன்ல நிக்க ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுடுமே?


10. பணமா... குணமா... எது முக்கியம்? 


'பணத்தால் அழகான நாயை விலைக்கு வாங்கலாம். ஆனால், அதன் வாலை பணத்தால் ஆட்டுவிக்க முடியாது’ என்பார்கள். நல்லவர்களைப் பார்த்தால் நாய் வாலை நளினமாக ஆட்டும். திருடர்களைப் பார்த்தால் வால் வெடைக்கும். எது முக்கியம் என்று தெரிகிறதா?

சி.பி - பொண்ணு வீட்டுக்காரங்க மாப்ளைக்கு சொந்த வீடு இருக்கா? சொத்து பத்து இருக்கா?ன்னு விசாரிக்கறாங்க, அதுக்குப்பிறகுதான் அவர் கேரக்டர் எப்படி?ன்னு விசாரிக்கறாங்க.. ஓவரா சொத்து இருந்து கேரக்டர் முன்னே பின்னே இருந்தாக்கூட அட்ஜஸ் பண்ணிக்கறாங்க.. அப்போ பணம்தானே முக்கியம்? குணம் முக்கியம்னு பேச நல்லாருக்கும், நடைமுறைல ஒத்து வர்றதில்லையே? \


11. கேரளாவில் முதலமைச்சரின் குறை தீர்ப்பு கால்சென்டருக்கு நல்ல வரவேற்பாமே? 

  முதல்வர் உம்மன் சாண்டியின் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கால் சென்டரை செப்டம்பர் 1-ம் தேதி திறந்தார்கள். முதல் நாளே 2.25 லட்சம் மக்கள் இந்தச் சேவைக்குள் நுழைந்தார்கள். இதை அரசு எதிர்பார்க்கவில்லை. அன்று மட்டுமே 4 ஆயிரம் புகார்கள் பதிவாகி உள்ளன. எல்லாப் புகார்களுக்கும் ஒரு மாதத்துக்குள்  பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் உம்மன் சாண்டி. ஜெயலலிதாவும் இதை அமல்படுத்தலாம்!


சி.பி - அந்த சட்டம் அமலுக்கு வந்தா அய்யா, அம்மா 2 பேரும் தானே மாட்டுவாங்க.. ஐ ஜாலி.. 



12. அண்ணா ஹஜாரேவின் வாழ்க்கை படமாகிறதாமே? 

வில்லன் யார் மன்மோகன் சிங்கா? ராகுல் காந்தியா?

சி.பி - நோ, 2 பேரும் டம்மி வில்லன்ஸ்.. பாபா ராம்தேவ் தான் மெயின் வில்லன்.. ஹா ஹா , ஏன்னா அவருக்குத்தான் அன்னா மேலே பொறாமை.. எங்கே பொறாமை இருக்கோ அங்கே தான் வில்லத்தனமும் ஜாஸ்தி இருக்கும்.. 

THANX - JU VI 



Saturday, June 04, 2011

வடிவேலு VS விஜய்காந்த் -இனி என்ன ஆகும்? காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhI5p-TWhIPyn7z4Ti6NmHJgzrH3WkdlGgAp6cIX8skQ2iQha6oNMRLXZF-8j-dAMUjhoj_cFt0AwPAZFVzjOCiExM_NdKjeesszWOnTF4gS9mC-cRoMm04IczB_YEGXhqEvBVAVVuGZ60/s1600/Vadivelu-and+Actress-Asin-in-Press-meet+.jpg
தி மனிதனின் அடையாளமான ஹோமோசேப்பியன்ஸை அச்சு அசலாக வார்த்ததுபோல் 'உர்’ரென்று இருக்கிறார் வடிவேலு.

 சி.பி - ஆமாமா.. ஆப்பு அடிக்கப்பட்டவங்க உர்னு தான் இருப்பாங்க.. கிர்னு கீழே விழாம இருக்கறதே பெரிசு..



ஆதம் பாவா இயக்கத்தில் உருவாகும் 'உலகம்’ படத்தில் வடிவேலு ஏற்று நடிக்கும் 25 வேடங்களில், இந்த ஹோமோசேப்பியன்ஸ் வேடமும் ஒன்று. ''எப்படி இருக்கு நம்ம கெட்டப்பு? இப்போ வரைக்கும் ஏழு கெட்டப்பு ரெடியாகி இருக்கு. மற்ற கெட்டப்பும் தயார்னா... தாரைத் தப்பட்டைகள் கிழியப் பயணத்தைத் தொடங்கிர வேண்டியதுதான்!'' - அரசியலில் எத்தகைய சூட்டை ஏற்படுத்தினோம் என்பதை எல்லாம் மறந்துவிட்டு, பகபகவெனச் சிரிக்கிறார் வடிவேலு.

சி.பி - அவர் எங்கேங்கே சூட்டை எழுப்புனாரு?சூடு வாங்கிட்டு வந்து நிக்கறாரு.. மீடியாக்கள் தான் அவரை பெருசாக்குனாங்க.. அவரே சொன்ன படி அவரை டம்மி பீஸாத்தான் மக்கள் நினைச்சிருக்காங்க.. 

 கடந்த சட்டமன்றத் தேர்தலில் திடீர் சூறாவளியாகக் கிளம்பி விஜயகாந்த்தைச் சுளுக்கெடுத்தவர். 'அவரு கேப்டன்னா... நான் டாப் டென்!’ என ஆரம்பித்து, 'தண்ணி’லை விளக்கம் வரை அவருடைய அதிரடிகள் நீள... தி.மு.க. புள்ளிகளே திகைத்துப்போனது உண்மை. ஆனால், தேர்தல் முடிவு வேறு விதமாக அமைய... வடிவேலுவின் காட்டில் மீண்டும் கல் மழை!

சி.பி - டாப் டென் எல்லாம் கிடையாது வேணும்னா டூப் டென்னு சொல்லலாம்
http://www.cinechance.com/forum/tamil-films/jan-01-08/shriya-vadivelu.jpg


1. ''கால்ஷீட் ஒதுக்க நேரம் இல்லாத அளவுக்கு பிஸியா இருந்த நீங்க, திடீர்னு பிரசாரத்தில் குதிக்க என்ன காரணம்?''

சி.பி - எல்லாம் சொந்தப்பிரச்சனைக்கு வஞ்சம் தீர்க்கத்தான்.. பின்னே தமிழ்நாடு நல்லா இருக்கனும்கற அக்கறையா என்ன?

''என் சொந்தப் பிரச்னைக்கோ, சொத்துப் பிரச்னைக்கோ, நான் பிரசாரத்தில் குதிக்கலை. எப்பவுமே யாரோட வம்புதும்புக்கும் போகக் கூடாதுன்னு நினைக்கிறவன் நான். ஆனா, நான் ஒதுங்கிப்போக நினைச்சாலும், அதுக்கு சிலர் வழிவிடலை. குழந்தைங்க முதல் பாட்டி வரை எல்லோரையும் சிரிக்க வைக்க நினைக்கிற எனக்கு இப்படி ஒரு இக்கட்டு. ஒரு புழுவை மிதிச்சாலும் எத்தனை நாளைக்கு அது பொறுத்துக்கிட்டு இருக்கும். அதான் அடக்க முடியாம பொங்கிக் கிளம்பிட்டேன்!''

சி.பி - பொங்குனது ஓக்கே.. ஆனா இப்படி அடிபட்டு கன்னம் வீங்குனது நாட் ஓக்கே.. 



2. ''விஜயகாந்த்துக்கும் உங்களுக்கும் என்னதான் பிரச்னை?''

 சி.பி - ஒரே உறைல 2 கத்தி இருக்க முடியாதும்பாங்க.. ஒரே ஊர்க்காரங்கள்ல 2 பேரும் பெரும் குடிகாரர்கள்னு பேர் எடுத்தா எப்படி? யாரா இருந்தாலும் தனித்து தெரிய தானே ஆசைப்படுவாங்க?




''சில விஷயங்களை விளக்கிச் சொன்னாத்தான் புரியும். 2007-ல் அவரோட படத்துக்காக என்கிட்ட வந்து பேசினாங்க. ஓப்பனிங் ஸாங்கே நான்தான் பாடணும்னு வற்புறுத்தினாங்க. அவர் கட்சி கொடியைப் பிடிச்சுக்கிட்டு நான் பாடுற மாதிரி ஸீனுக்கு ரொம்ப வற்புறுத்தினாங்க.


'அய்யா, ஆளை விடுங்க!’ன்னு விலகிட்டேன். அடுத்தபடியா 'கருப்பு எம்.ஜி.ஆர்-தான் அடுத்த முதல்வர்’னு நான் அவரைப் பார்த்து வசனம் பேசணும்னு சொன்னாங்க. ஒருத்தரைப் புகழ்ந்தா, அடுத்தவங்க கோபப்படுவாங்க. அந்தப் பொல்லாப்பு நமக்கு எதுக்குன்னு தவிர்த்திட்டேன். 'அப்போ நான் முதல்வர் ஆவதில் வடிவேலுவுக்கு விருப்பம் இல்லையா?’ன்னு அவர் வருத்தப்பட்டாராம்.

வருங்கால முதல்வர்னு நான் ஒருத்தன் கூவினா, அவர் முதல்வராகிட முடியுமா? இதுதான்யா ஆரம்பப் பிரச்னை. அதுக்கு அப்புறம் என் வீடு முழுக்கக் கல் எறிஞ்சு அவங்க பண்ணின அடாவடி எல்லோருக்கும் தெரிஞ்சது தான். ஆனாலும், நான் அமைதியா இருந்தேன்.

அடுத்த தடவை நடந்த கல் வீச்சில் என் குழந்தைக்கு மண்டை உடைஞ்சிடுச்சு. நான் தனி மனிதனாத் தவிச்சு அழுதது அன்னிக்குத்தான் தம்பி. பெத்த புள்ளைங்களுக்காகத்தானே நாம சம்பாதிக்கிறோம்; கஷ்டப்படு றோம். அப்படி இருக்க, புள்ளைங்களுக்கு ஒரு இடைஞ்சல் வர்றப்ப எப்படிப் பொறுத்துக்க முடியும்?

வெளியில தெரிஞ்சது இது... சொல்லக் கூசுற அளவுக்கு இந்த ரெண்டு வருஷத்துல நான் படாதபாடு பட்டேன். ஊரையே சிரிக்க வெச்ச ஒருத்தன் பொழப்பு, சிரிப்பா சிரிச்சது யாருக்குத் தெரியும்? 'வடிவேலுவுக்கு இது தேவையா’ன்னு கேட்ட யாருக் காவது என்னைச் சுத்தி நடந்த இத்தனை பிரச்னையும் தெரியுமா?''

சி.பி- நீங்க சொல்றதுல ஏதோ இடிக்குதே? எங்கள் அண்ணா படத்துல தான் அப்படி  ஒரு சம்பவம் நடந்தது..அதுக்குப்பிறகு நீங்க அவர் படத்துல நடிக்கவே இல்லையா என்ன?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLiCta5thfd_4MVJbRIcaAysjeYJy5ThwsfP3uYJZQqaTg3BNnmZ5WDKpc2bQuoi4vK3nB-0FADUAL55p5HLD8smweWJlLi1hLx3or_SWcN_H8am1xT8aq8UEEkAzDCxrHFUfXlg2TyPU/s1600/Vadivelu-and-Actress-Namitha-in-Jegan-Mogini-Tamil-Movie.jpg
3. ''இதனால்தான் பிரசாரத்துக்குப் போனீங்களா? இல்லை, தி.மு.க-வில் இருந்து யாராவது வற்புறுத்தினாங்களா?''


''நான் வான்டடா போன ஆளுய்யா! திடீர்னு ஒருநாள் கோபாலபுரம் போனேன். 'அய்யா, உங்களுக்காக நான் பிரசாரம் பண்றேன்’னு சொன்னேன். கலைஞர், அழகிரி, ஸ்டாலின் எல்லோருக்கும் ஏக சந்தோஷம். அப்போ, 'நான் உங்களுக்கு ஆதரவா மட்டும்தான் பேசுவேன். அந்தம்மாவை நான் தாக்கிப் பேசமாட்டேன்’னு சொல்ல நான் வாயெடுத்தேன்.

நாடி ஜோசியர் மாதிரி என்னைக் கூப்பிட்ட கலைஞர், 'அரசோட திட்டங்களை மட்டும் நீங்க பேசுங்க... அந்த அம்மாவைத் திட்டிப் பேசாதீங்க’ன்னு சொன்னார். எனக்கு வாயடைச்சுப்போச்சு. ஒருத்தனோட மனசுக்குள்ள இருக்கிற விஷயத்தைக்கூட தெளிவாத் தெரிஞ்சு வெச்சிருக்கிற தலைவர்யா அவர். உசுப்பேத்துவாங்கன்னு பார்த்தா, இப்படி ரியலா பேசச் சொல்றாங்களேனு எனக்குத் திகைப்பு தாங்கலை!''

சி.பி - பின்னே நீங்களே ஜெவையும் திட்டிட்டா அப்புறம் கழகக்கண்மணிகளுக்கு,அழகிரிகளுக்கு வேலை வேணாமா? அப்புறம் ஒரு பய அவங்களை மதிக்க மாட்டானே?




4. ''ஓஹோ... விஜயகாந்த்துக்கு எதிரா நா கூசும் அளவுக்குத் தனி மனிதத் தாக்குதல் நடத்தியது நியாயமா?''

சி.பி - என்ன கேனத்தனமான கேள்வியா இருக்கு?மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி.. தனி மனித தாக்குதலில் பி ஹெச் டி வாங்கியவர் கலைஞர்.. அவர் கட்சிக்கு ஆதரவா பேசறவங்க பின்னே எப்படி பேச முடியும்?


''தப்புதான்... நான் தனி மனிதத் தாக்குதல் நடத்தியது தப்புதான். 'அவர் அப்படிப் பண்றார், இப்படிப் பண்றார்’னு நான் பேசினது தப்புதான். தனி மனிதத் தாக்குதல் பற்றி ஆதங்கப்படுறவங்க, அரை மணி நேரம் என் வீட்டு வாசல்ல வந்து நின்னு பாருங்க சார். உங்க காதே கருகிப்போற அளவுக்குத் திட்டுவாங்க. இன்னிக்கும் அப்படித்தான் நடக்குது. அது தப்பு இல்லையா?''

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGeBz-I1YOMWzCbJdHbolwlL1xgc8iwQZDJuDjqujfZXVmZXjRhB_bNZYzPHOS8Xgjgys1wdk6fmWdlcBZOULF_jDh8UlXoMH_P6fFZvEx5QWHZnI0jjuCEdbPlXWhlwNreTSQ8U37u40/s1600/Vadivelu-and-Actress-Tamanna-in-Thillalangati-Tamil-Movie.jpg
5. ''உங்களுடைய பிரசாரத்தையும் மீறி விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவராகவே உட்கார்ந்துட்டார். இனி, உங்களின் நிலைப்பாடு?''


'' 'சின்னக் கவுண்டர்’ பட ஷூட்டிங் நடந்த நேரம்... என்னையப் பார்த்து எந்த ஊர்னு கேட்டார் அந்த ஆள். 'மதுரை’ன்னு சொன்னேன். 'ஒரு நாளைக்கு அம்பது ரூபா சம்பளம் வாங்குற நீ எல்லாம் ஊரப் பார்க்கப் போனா என்னய்யா?’னு கேட்டார்.

அன்னிக்கே என்னை ஊருக்கு அனுப்புற திலேயே குறியா இருந்தார். என்ட்ரியானப்பவே என்னையப் பார்த்து எளக்காரமாக் கேட்ட ஆளு, என்னோட இந்த அளவுக்கான வளர்ச்சியை எப்படிப் பொறுப்பார்?


தேர்தல்ல அவர் ஜெயிச்சிட்டார்னா, ஜெயிக்கவெச்ச மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டியதுதானே? அதை விட்டுட்டு, நாய் வைக்கோல் போரைச் சுத்துற மாதிரி எந்த நேரமும் என் வீட்டையே சுத்திக்கிட்டு இருந்தா எப்படி? என்னைய அடிக்கத்தான் மக்கள் உங்களை ஜெயிக்க வெச்சாங்களா?

'நாங்க அந்தம்மாவோட உருவ பொம்மையவே எரிச்ச ஆளுங்க... எங்க வலிமை தெரிஞ்சு தான் அந்தம்மா எங்களைக் கூட்டணியில் சேர்த்துக்குச்சு. அவங்களுக்கு முன்னால நீ எம்மாத்திரம்? கவர்மென்ட்டே எங்களோடது’னு நைட்டும் பகலும் என் வீட்டுல நின்னு கத்துறாங்க.

அந்தம்மாவுக்கு வீசிய ஆதரவு அலையில ஜெயிச்சிட்டு, இப்படி அபவாதம் பேசலாமாண்ணே... இன்னும் என்ன வேணும்னாலும் பேசட்டும்ணே... நான் இனி பின்வாங்கப்போறது இல்லை. மனசுக்குள்ளகிடக்குற ரணம் இன்னும் ஆறலைண்ணே... அந்த வெறி அடங்கலை. அடக்கவும் மாட்டேன். அவர் சட்டசபைக்கு உள்ளே எதிர்க் கட்சித் தலைவர்னா, வெளியில் அவருக்கு எதிர்க் கட்சித் தலைவர் நான்தான்!''

சி.பி - ரைட்டு.. இனிப்பேசிப்பிரயோஜனம் இல்லை.. ஹி ஹி உதை கன்ஃபர்ம் டி



6. ''பிரசாரத்தில் இறங்கியதால், இப்போ பட வாய்ப்புகளே இல்லாமல் உட்கார்ந்து இருக்கீங்களே... வருத்தமா இல்லையா?''

''மனசு முழுக்க இருந்த ரணத்தைக் கொட்டித் தீர்த்த நிம்மதியில் இருக்கேன். அவரோட அத்தனை அடாவடிகளையும் வெளியே சொல்லாமல் தாங்கி இருந்தா, நெஞ்சு வெடிச்சே செத்திருப்பேன்.

பட வாய்ப்புகள் குறைஞ்சா, எனக்கு வருத்தம் இருக்காது. சிந்திக்கவும் ஓய்வெடுக்கவும் இந்த இடைவெளி எனக்கு அவசியமாப் படுது. கொஞ்ச காலம் ஒதுங்கித்தான் இருப்போமே... வடிவேலுவோட காமெடி தேவைன்னு தோணிச்சுன்னா... மக்களே நம்மளை நடிக்கவைப்பாங்க சார்!''

சி.பி - எங்கே ? சந்தானம் சைக்கிள் கேப்ல சிக்சரா அடிச்சுட்டு இருக்காரு.. சிங்கம் புலி ஒரு பக்கம் கோல்களா போடறாரு.. உங்களுக்கு ரீ எண்ட்ரி கஷ்டம்.. இனி டிஸ்ஸெண்ட்ரி தான்.. 




7. ''வடிவேலுவுக்கு இந்த வீம்பு தேவையான்னு சினிமாக்காரங்களே குரல் எழுப்புறாங்களே?''

''வயித்துப்போக்கும் வாந்தியும் அவன் அவனுக்கு வந்தாத்தானே தெரியும். நியாயமான சினிமாக்காரங்க நிச்சயம் என்னைப்பற்றிப் பேசி இருக்க மாட்டாங்க. ஆட்சிக்குத் தகுந்த மாதிரி நாக்கை மாற்றிப் பேசுறவங்கதான் என்னை வசை பாடி இருப்பாங்க.

நான் பிரசாரம் பண்ணினப்ப கூடின கூட்டத்தைப் பார்த்து மிரண்டவய்ங்க எத்தனை பேர்னு எனக்குத் தெரியும். 'இவனுக்கு ஏன்டா இம்புட்டுக் கூட்டம்?’னு வயிற்றெரிச்சலோட தூக்கம் வராமத் தவிச்சவய்ங்களையும் தெரியும். கூட்டம் கூட்டமா திரண்ட மக்கள்தான் என்னோட சொத்துங்கிறதை இந்தத் தேர்தல் பிரசாரத்தில் பார்த்துட்டேன் சார்!''

சி.பி - யோவ்.. என்னாய்யா பேச்சு ? இது? ஷகீலா ஸ்டேஜ் ஏறுனாக்கூட மாளாத கூட்டம்   வரும்.. அதுக்காக அவருக்கு மக்கள் செல்வாக்கு இருக்குன்னு சொல்லிட முடியுமா?அவர் எலக்‌ஷன்ல நின்னா ஓட்டு போடுவாங்களா?,,,,..
http://sites.google.com/site/cinemaphotogallery/Vadivelu5.jpg

8. '' 'ராணா’ படத்தில் இருந்து நீக்கப்பட்டதால், 'ராணா படமாவது, கானா படமாவது’ என ரஜினியைத் திட்டியது தவறு என உணர்கிறீர்களா?''


''யார் சொன்னா? அவருக்கும் எனக்கும் எப்பவாச்சும் பிரச்னை வந்திருக்கா? மத்தவங்க மாதிரி முதல்வர்னு என்னை முழங்கச் சொன்னாரா... ஆள் அனுப்பினாரா... வம்பு இழுத்தாரா? எதுக்கும் என்னை ரஜினி வற்புறுத்தலை. அப்படியிருக்க ஏன் இப்படி எல்லாம் முடிச்சுப் போடுறாங்க?

கலைஞர் அய்யாவைப் பார்த்துட்டு வெளியே வந்தப்ப, 'ராணா படத் தில் இருந்து உங்களை நீக்கிட்டாங்களாமே?’னு கேட்டாங்க. 'ராணா படமா இருந்தாலும் சரி, கானா படமா இருந்தாலும் சரி... இல்லை என் கேரியரே அவ்வளவுதான்னாலும் சரி... என் பிரசாரத்தைத் தொடரவே செய்வேன்’னு பதில் சொன்னேன். இதில் அவரை நான் எந்த இடத்தில் திட்டுறதா அர்த்தம் வருது?

எனக்குச் சிக்கலை உண்டாக்கணும்னு அவரோட மோதல்னு கிளப்பிவிடுறது நியாயமா? அவரை நான் ரொம்ப மதிக்கிறேன். 'சந்திரமுகி’ பார்த்த ரஜினி ரசிகர்களுக்கு என்னை நல்லாத் தெரியும்!''

சி.பி - அப்போ நீங்க சொல்றதை வெச்சுப்பார்த்தா ஒண்ணு உங்களுக்கு நாவடக்கம் பத்தாது.. இன்னொண்ணு ராணா படம் யார் நடிப்புல உருவாகுதுங்கற மேட்டரையே அப்டேட் பண்ணிக்கல.. ரெண்டும் டேஞ்சர் தான்.. இனி உங்களை புக் பண்ண நினைக்கறவங்க ஏன் வீணா ரஜினி,கேப்டன்,ஜெ இத்தனை பேரை  பகைச்சுக்கனும்னு நினைப்பாங்க..


9. ''அரசியலில் அடுத்த கட்டம்?''

''கல் எறிஞ்சு களைப்பாகிக்கிடக்கிறவங்கதான் அதைத் தீர்மானிக்கணும். அவங்க நடந்துக்கிறதைப் பொறுத்துதான்... என்னோட நடவடிக்கையும் இருக்கும்... ஆமா!''

சி.பி - எனக்கென்ன தோணுதுன்னா நல்ல நாளா பார்த்து ஒரு சால்வை வாங்கிட்டுப்போய் கேப்டனைப்பார்த்து இருவரும் ஒரே தாய் வயிற்றில் பிறக்கவைல்லையே தவிர மற்றபடி அம்மா பாசத்துக்கு ஏங்குபவர்களே.. இருவரும் ஒண்ணா தண்ணி அடிச்சவங்களே..  இருவரும் சினிமாக்காரங்களே அப்டின்னு ஏதையாவது உளறி நைஸா சமாதானம் ஆகிக்குங்க.. தி முக ல வரிசையா எல்லாரும் உள்ளே போய்ட்டு இருக்காங்க.. அவங்களையே காப்பாத்திக்க அவங்களுக்கு நேரம் இருக்காது.. உங்களை எல்லாம் காப்பாத்த நேரமும் இல்லை.. அவங்களுக்கு அது இனி தேவையும் இல்லை..

 நன்றி - விகடன்