Showing posts with label ராம்தாஸ். Show all posts
Showing posts with label ராம்தாஸ். Show all posts

Monday, November 19, 2012

பாட்டாளி மக்கள் கட்சி - சுய சரிதை - டாக்டர் ராம்தாஸ்

பாட்டாளி சொந்தங்களே!

மருத்துவர் . ராமதாஸ்

முதலில் நான் ஒரு விவசாயி, இரண்டாவதாக நான் ஒரு மருத்துவர், மூன்றாவதாக ஒரு சமூகப் போராளி, நான்காவதாக எந்த பதவிக்கும் போக விரும்பாத ஒரு அரசியல்வாதி" என்று தொடர்ந்து பதிலளித்து வருபவர் மருத்துவர் . ராமதாஸ்.
சென்னையில் இருந்துகொண்டு அரசியல் செய்துவரும் தலைவர்களுக்கு மத்தியில், கிராமத்திலேயே இருந்துகொண்டு தாம் பிறந்த மண்ணை நேசித்து, மண்ணின் வாசனையோடு மரம், செடி, கொடிகளை உருவாக்கி அவற்றோடு வாழ்ந்து கொண்டே ஒரு கட்சியின் தலைவராக வலம் வருபவர்.
நல்ல படிப்பாளி; சமூகப் போராளி; சமுதாயத்தின் அடித்தளத்தில் இருந்து உருவான இவர், தம் வாழ்க்கை அனுபவங்களை நம் வாசகர் மத்தியில் பகிர்ந்து கொள்கிறார்.
- ஆசிரியர்
நான் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தபோது உறவினர்களிடம் கொஞ்சம் கடன் வாங்கி நுழைவுக் கட்டணம் கட்டி கல்லூரியில் சேர்ந்தேன். அதன்பிறகு எனது உறவினர்களும் அவ்வப்போது உதவி செய்துவந்தார்கள். இரண்டாண்டுகள் எப்படியோ மருத்துவப் படிப்புச் செலவைச் சமாளித்து விட்டேன். இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது என் படிப்பைத் தொடர முடியுமா என்ற அச்சத்தில் தவித்துக்கொண்டிருந்தேன். கல்லூரிக் கட்டணம் கட்டவில்லை என்பதற்காக, அறிவிப்புப் பலகையில் என் பெயரைக் குறிப்பிட்டு குறித்த தேதிக்குள் கட்ட வேண்டுமென்று எழுதிப் போட்டிருந்தார்கள்.

இந்த நிலையில் படிப்பைத் தொடர முடியுமா என்று தத்தளித்துக் கொண்டிருந்த நான், ஒருநாள் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நண்பரைக் காண ரயிலேறி விட்டேன். அவரைச் சந்தித்து என்னுடைய மனக்குமுறலையெல்லாம் கொட்டித் தீர்த்துவிட வேண்டுமென்ற எண்ணத்தில் தஞ்சைக்குப் புறப்பட்டுச் சென்றேன். அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்தார். நானும் அவருடைய அறையில் இரண்டு நாள் தங்கினேன். இரண்டாவது நாள் என்னை விடுதி அறையில் இருக்கச் சொல்லிவிட்டு, கல்லூரிக்குச் சென்று விட்டார்.
நான் அப்பொழுது வெளியில் சென்று வரலாம் என்று மனம் போன திசையில் போய்க் கொண்டிருந்தபோது, காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அப்பொழுது மிகவும் மனக்குழப்பத்தில் இருந்த நான், அந்த வெள்ளத்தில் வீழ்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்றுகூட முடிவெடுத்து விட்டேன். அப்பொழுது என் மனக்கண் முன்னால் என்னை ஆளாக்கிய என்னுடைய தாயும் தந்தையும் வந்ததால் அந்த முடிவிலிருந்து பின்வாங்கினேன்.
இதை என்னுடைய நண்பரிடம் சொல்லியபோது என் மனச்சுமை குறைந்ததாக உணர்ந்தேன். இதை என்னுடைய மைத்துனர், இராமச்சந்திரனுக்கு தந்தி மூலம் நண்பர் தெரிவித்துவிட்டார். என்னுடைய மைத்துனர், பணத்தோடு தஞ்சைக்கு வந்து என்னை மீண்டும் சென்னைக்கு அழைத்துச் சென்று என் படிப்பு தொடர வழிவகை செய்தார். உண்மையில் சொல்லப்போனால் நான் சென்னைக்கு படிக்கவந்தபோது தமிழாசிரியராக வரவேண்டும் என்ற எண்ணத்தில்தான் வந்தேன்.
ஆனால், மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்தது. இது எப்படி நிகழ்ந்தது என்பதை பின்னால் சொல்கிறேன். அதற்கு முன் என் கிராமமான கீழ்சிவிறிக்கு உங்களை அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறேன். ஒருங்கிணைந்த தென்ஆற்காடு மாவட்டம் திண்டிவனத்திலிருந்து 12 கி.மீ தொலைவிலுள்ள கீழ்சிவிறி. அங்கு 25.7.1939 அன்று சஞ்சீவிராய கவுண்டருக்கும் நவநீதம்மாளுக்கும் நான்காவது மகனாகப் பிறந்தேன். எனக்கு இரண்டு சகோதரிகள், மூன்று சகோதரர்கள். ஒரு சகோதரியும் இரண்டு சகோதரர்களும் இறந்து விட்டார்கள்.

கீழ்சிவிறி ஓர் அழகிய சிற்றூர். வெளி உலகத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாத, எந்தப் போக்குவரத்து வசதியும் இல்லாமல் இருந்த ஊர். வெளியூர்களுக்கு பண்டிகை, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டும் என்றாலும் கட்டை (மாட்டு) வண்டியில்தான் பயணம் செய்ய வேண்டும். எங்கள் ஊருக்கு அருகிலுள்ள திண்டிவனத்துக்குப் போக வேண்டும் என்றாலும் எல்லோரும் நடந்துதான் போக வேண்டும். சார்பதிவாளர் அலுவலகம் அங்கே இருந்ததாலே தேவை ஏற்படும் போது அதற்காக மட்டுமே நகரத்துக்குச் செல்வார்கள். பிரசவத்துக்கோ, வைத்தியத்துக்கோ என் ஊர் மக்கள் அங்குச் சென்றதாக எனக்கு நினைவில்லை.
நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும். எல்லா வகை தானியங்களும் விளைந்த ஊர் அது. அந்த ஊர் மாரியம்மன் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை கூழ் ஊற்றி மாரியம்மனுக்குத் திருவிழா செய்வார்கள். 18 நாள் பாரதம் சொல்லி திரௌபதியம்மன் கோயிலுக்கு 10 நாள் கூத்து நடத்தி இறுதியில் தீமிதி திருவிழா நடைபெறும். கூத்து பார்க்க ஒரு பாயைத் தூக்கிக் கொண்டு இடம்பிடிக்கச் செல்வேன். கட்டியங்காரன் வந்ததும் நீட்டிப் படுத்து விடுவேன். சில சமயம் அப்படியே தூங்கிப் போய், மறுநாள் காலை சூரியன் முகத்தில் பட்டதும் எழுந்திருப்பேன்.
ஊரிலுள்ள காமன்கோயில் மிகப் பிரசித்தமான கோயில். காமன் பண்டிகையைக் கூத்து நடத்தி விமரிசையாகக் கொண் டாடுவார்கள். என்னுடைய தந்தையாரும் மன்மதன் வேஷம் போட்டு மன்மதனாகப் பல ஆண்டுகள் நடித்து வந்தார்.

எனது கிராமத்தில் ஒரு ரெட்டியார் வீடும், இரண்டு நாயுடு வீடும், பிற்காலத்தில் ஒரு பிராமணர் வீடும், கூடை பின்னி விற்கின்ற வேட்டைக்காரர்கள் சிலர் வீடும், ஒரு குயவர் வீடும், நாவிதர் வீடும், ஒரு தச்சர், ஒரு கருமார் வீடும், இரண்டு பர்லாங்கு தொலைவில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் ஆதி திராவிடர் காலனியும் தனித்தனியாக இருந்து வந்தன. இங்கு வன்னியர்கள் 100க்கு 90 சதவிகிதம் பேர் வாழ்ந்து வருகின்றனர். கிட்டத்தட்ட எல்லோருமே உறவினர்கள் என்றுகூடச் சொல்லலாம். பல்வேறு சமூகங்கள் வாழ்ந்து வந்தாலும் அவரவர்கள் தங்கள் சமூகக் கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து நடந்து கொண்டதால் கிராமத்தில் நல்லிணக்கம் இருந்தது. ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளும் நல்ல பண்பு இருந்தது.
என்னுடைய தாத்தாக்கள் இருவரும் பெரிய வாத்தியார் எனவும், சின்ன வாத்தியார் எனவும் ஊர் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டனர். அவர்கள் எங்கள் ஊரில் மட்டுமல்ல, எங்கள் ஊரைச் சுற்றியுள்ள 10 கிராமங்களுக்கும் நடுநிலை தவறாமல் பஞ்சாயத்து சொல்லுவார்கள்."

தொடரும் 

 நன்றி - கல்கி 

Tuesday, November 06, 2012

மின்வெட்டு - பொட்டில் அடித்தாற்போன்ற 10 கேள்விகள்- டாக்டர் ராம்தாஸ் டூ ஜெ

சென்னை: நீலம் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.


சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:



தமிழ்நாட்டில் 16 முதல் 18 மணி நேர மின்வெட்டு நிலவுகிறது. தி.மு.க. ஆட்சியில் 8,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆனது. 5 முதல் 7 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. 969 மெகாவாட் மின்சாரம் தான் பற்றாக்குறை இருந்தது. ஆனால் இப்போது 7,500 மெகாவாட் உற்பத்தியாகிறது. 4,000 மெகாவாட் பற்றாக்குறையாக உள்ளது. இதற்கு காரணம் பல மின் நிலையங்களை சரியாக பராமரிக்காததும், எண்ணூர், குத்தாலம் மின் நிலையங்களை மூடியதுதான்.



ஜெயங்கொண்டத்தில் அனல் மின் நிலையம் தொடங்க 15 ஆண்டுகளுக்கு முன்னால் திட்டமிடப்பட்டது. இதுவரை அந்த திட்டம் கிடப்பில் உள்ளது



டெல்லியில் உபரியாக ஒப்படைக்கப்படும் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அது கிடைத்தால் கூட 230 மெகாவாட்தான் பயன்பாட்டுக்கு வரும். பெரும்பான்மையான மின்சாரம் இரவில்தான் ஒப்படைக்கப்படுகிறது. அது நமக்கு பயன்படாது. எனவே இந்த வாதங்கள் எல்லாம் தங்களை திசை திருப்பும் முயற்சியில்தான்.



நிலம் புயலால் டெல்டா மாவட்டங்களில் 5லட்சம் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தீபாவளிக்கு முன்பு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இதே போல் வேலூர் மாவட்டத்தில் வாழை மரங்கள் சேதம் அடைந்த விவசாயிகளுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.



சென்னையில் புயலின் போது தரை தட்டிய கப்பலில் இருந்து குதித்து உயிரிழந்த 6 பேர் குடும்பங்களுக்கு கப்பல் நிறுவனம் சார்பில் தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றார் ராமதாஸ்.





மின்வெட்டு நீங்குவதற்கு பதில் அதிகரித்திருக்கிறதே ஏன்?

1. தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பேசிய முதல்வர், 2011ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் அறிவிக்கபடாத மின்வெட்டே இருக்காது என்றும், சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் மின்வெட்டு நேரம் 2 மணியாக குறைக்கப்படும் என்றார். ஆனால் தற்போது ஒன்றரை ஆண்டாகி விட்ட நிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நீங்குவதற்கு பதில் அதிகரித்திருக்கிறதே ஏன்?




ஒரு மெகாவாட் கூட கூடுதலாக உற்பத்தி செய்யப்படவில்லையே ஏன்?

2. 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டபேரவையில் பேசிய முதல்வர், 2012ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் 5 மின்திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு 2,550 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டு மின்தடை நீக்கப்படும் என்று கூறினார். ஆனால் இன்று வரை ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கூடுதலாக உற்பத்தி செய்யப்படவில்லையே ஏன்?



முன்னுக்குபின் முரணாக பேசுவது ஏன்?

3. மின் திட்டங்கள் செயல்படுவது குறித்து முதல்வர் முன்னுக்குபின் முரணாக பேசுவது ஏன்?


4. மேட்டூர் அனல் மின்திட்டத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டதால் கடந்த மார்ச் மாதம் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று ஏற்கனவே உறுதி அளித்திருந்த முதல்வர், இப்போது அடுத்த மாதம் தான் அங்கு உற்பத்தி தொடங்கும் என்று கூறுவது ஏன்?


ஜெயலலிதாவால் நிரூபிக்க முடியுமா?

5. தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டை நடைமுறைப்படுத்தக் கூடாது. இருக்கும் மின்சாரத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் சமமாக பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் அதை செயல்படுத்த மறுப்பது ஏன்?



6. தமிழ்நாட்டில் சிறுதொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் தொடர்ச்சியாக குறைந்தது 4 மணி நேரம் மின்சாரமும், காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் வரை மின்சாரம் வழங்கப்படுவதாக கூறியிருக்கும் முதல்வரால் அதனை நிரூபிக்க முடியுமா?


58 கடிதம் எழுதிய ஜெ. மின் பிரச்சனைக்கு ஒரு கடிதமும் எழுதாதது ஏன்?

7. சிறு தொழிற்சாலைகளுக்கு 4 மணி நேரம் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதை சாதனையாக கூறும் முதலமைச்சர் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக எத்தனை மணி நேரம் மின்சாரம் வழக்கபடுகிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?



8. தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்குவதில்லை என்று குற்றம்சாட்டும் முதல்வர், இதை சரிசெய்ய எடுத்த நடவடிக்கைகள் என்ன? பிரதமருக்கு இதுவரை 58 முறை கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் இந்த பிரச்சனைக்காக இதுவரை ஒரு கடிதம் கூட எழுதாதது ஏன்?


ஜெயலலிதா அரசியலில் இருந்து விலகத் தயாரா?

9. மின்திட்டங்களை செயல்படுத்துவதிலும், மின்சாரத்தை தமிழகத்திற்கு கொண்டு வருவதிலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக கூறும் ஜெயலலிதா, தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளையும், மக்களையும் திரட்டி தமிழகத்தின் உரிமைகளைப் பெறுவதற்காக மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தாதது ஏன்?



10. தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் போக்குவதாக ஒரு போதும் கூறவில்லை என்று மறுக்கும் முதலமைச்சர், அவ்வாறு கூறியதை ஆதாரங்களுடன் நிரூபித்தால் அரசியலில் இந்து விலகத் தயாரா?



 thanx - thats tamil

Monday, March 12, 2012

அகில உலக ஆரியர் அன்புமணி ராமதாஸ் பேட்டி காமெடி கும்மி பை வம்புமணி


மக்கள் அழைத்தார்கள்... அதனால் வந்தேன்!”

சி.பி - ஹா ஹா , இப்போ மக்கள் போன்னு துரத்துனா போய்டுவீங்களா? அடங்கோ...

அதிரடியான பேச்சுக்களால் அரசியல் அரங்கத்தை அதிரவைக்கிறார் அன்புமணி ராமதாஸ். ''திராவிட இயக்கங்களால் தமிழ்நாட்டுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா, வைகோ... இவர்கள் எவருமே தமிழர்களே இல்லை. தமிழர் தலைவர் ராமதாஸ் மட்டும்தான்'' என்பது இவரது புது குண்டு! 'புதிய அரசியல்... புதிய நம்பிக்கைஎன்பது இவரது புது முழக்கம். என்ன திட்டத்தில் இருக்கிறது பா..? மனம் திறக்கிறார் அன்புமணி ராமதாஸ்.  

சி.பி - ஆனா அதிமுக மடம், ஆகாட்டி திமுக மடம்னு 2 குட்டைலயும் மாறி மாறி விழுந்து சேறு பூசிக்கிட்டு இப்போ 2 பக்கமும் துரத்தி விட்டதும் பேச்சை பாரு.. ஹா ஹா 



1. ''அது என்ன 'புதிய அரசியல்... புதிய நம்பிக்கை’?''
''கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக திராவிடக் கட்சிகள் தமிழகத்தைச் சீரழித்து வருகின்றன. இலவசக் கலாசாரம், சினிமா கலாசாரம், சாராயக் கலாசாரம். இவை மூன்றுதான் தமிழன் கண்ட பலன்கள். போதும்... திராவிடக் கட்சிகளால் மக்கள் அடைந்த பலன்கள் போதும். தமிழகத்தை ஆளும் எல்லாத் தகுதிகளும் பா..-வுக்கு இருக்கின்றன;


சி.பி - அண்ணே, உங்க பாயிண்ட்ஸ் எல்லாம் கரெக்ட் தான்.. ஆனா ஜாதிக்கட்சி இன்னும் ஆபத்தாச்சே.. அதிகாரம் கைல இல்லாதப்பவே உங்கப்பா படப்பெட்டியை தூக்கிட்டு ஓடறது, மரத்தை வெட்டி போடறதுன்னு வன்முறைல இறங்கறாரு.. சி எம் ஆகிட்டா  அவ்ளவ் தான்.. தமிழகம் 2 ஆகிடும்


 எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று மக்களை நோக்கிப் போகிறோம். பா..-வின் இந்தப் புதிய பயணத்துக்குப் பெயர்தான் 'புதிய அரசியல்... புதிய நம்பிக்கை’. இனி, எங்கள் அரசியல் 'சயின்டிஃபிக் பேஸ்டுஅரசியலாக இருக்கும்; 'மைக்ரோ பிளானிங்அரசியலாக இருக்கும். நவீன யுகத்துக்கான அரசியலாக இருக்கும்!''



சி.பி -  மைக்ரோ பிளானிங்அரசியல்னா யார் கண்ணுக்கும் தெரியாத அலவு நுணுக்கமா ஊழல் பண்றதா?சயின்டிஃபிக் பேஸ்டுஅரசியல்னா உங்களை எதிர்க்கறவங்க முகத்துல ஆசிட் ஊற்றுவதா?



2. ''நவீன யுகத்துக்கான அரசியல் என்கிறீர்கள்... ஆனால், உங்களுடைய சாதிய அரசியல் சரிதானா?''

''சாதி வேண்டாம் என்றுதான் நாங்களும் நினைக்கிறோம். சாதியை ஒழிக்க வேண்டும் என்பதுதான் பா..-வின் இலக்கு. ஆனால், சாதி இல்லை என்று யாராவது மறுக்க முடியுமா? இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் சாதிரீதி யாகத்தான் அடிமைப்படுத்தப்பட்டனர். அதனால், சீர்திருத்தத்தை அங்கே இருந்துதான் தொடங்க வேண்டும்.''
''இடையில் கொஞ்ச நாட்கள் பா..-வைச் சாதி அடையாளத்துக்கு அப்பாற்பட்ட கட்சியாக்குவது தொடர்பாகப் பேசினீர்கள். ஆனால், இப்போது கட்சியில் மீண்டும் வன்னியர் முழக்கம் ஓங்கி ஒலிக்கிறது. பா... குழப்பத்தில் இருக்கிறதா?''
''அப்படி எல்லாம் இல்லை. அடிப் படையில் அடித்தட்டு மக்களுக்கான கட்சி பா... தமிழகத்திலேயே அதிகக் குடிசை கள் உள்ள மாவட்டம் விழுப்புரம் மாவட் டம். தமிழகத்தில் மனித வளக் குறியீட்டில் கடைசி ஐந்து இடங்களில் இருக்கும் மாவட்டங்கள் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர். கல்வி வளர்ச்சியில், உள்கட்டமைப்பில்... எல்லாவற்றிலும் வட தமிழகம் பின்தங்கி இருக்கிறது. யார் இங்கு பெரும்பான்மை மக்கள்? வன்னியர்கள். அவர்களுக்காகப் போராடுவது சாதி அரசியல் ஆகாது. அதைச் சமூக நீதி அரசியல் என்றே கொள்ள வேண்டும்!''



சி.பி - ஆல் ஓவர் தமிழ்நாடு உங்க செல்வாக்கு 4 தொகுதில மட்டும் தான்.. அதனால அடக்கி வாசிங்க..  

3. ''பிற கட்சிகளை நீங்கள் குறை கூறுகிறீர்கள். ஆனால், உங்கள் கட்சியும் அதே வாரிசு அரசியல் பாதையில்தானே பயணிக்கிறது?''
''என் அப்பா கஷ்டப்பட்டவர். கடுமையான வறுமையில் வளர்ந்தவர். ஆடு, மாடு மேய்த்து, சாணி பொறுக்கி, மூட்டை தூக்கி... இப்படி எல்லாம் கஷ்டப்பட்டுதான் டாக்டருக்குப் படித்தார். ஆனால், நான் அப்படி எல்லாம் இல்லை. ஏற்காட்டில், ஆங்கிலோ இந்தியன் ஸ்கூலில் படித்தேன். அப்போது என் கனவு பைலட் ஆவது. நான் டாக்டர் ஆனதுகூட அப்பாவுடைய விருப்பம்தான். அப்போது எல்லாம் சாதி, சமுதாயம், கஷ்ட - நஷ்டம் எதுவுமே எனக்குத் தெரியாது.ஸ்கூலிலும் ஹாஸ்டலிலும் ஆங்கிலத்தில் பேசிப் பழகிய எனக்கு, வீட்டுக்கு வரும்போது தமிழ் வார்த்தைகளே புதிதாக இருக்கும். படிப்பு முடிந்ததும்
ஒன்றரை வருஷம் நல்லாழம் கிராமத்தில் பணியாற்றினேன். அப்போதுதான் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்தது. சாதியப் பாகுபாடுகள் புரிய ஆரம்பித்தன. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். குழந்தைகள் பிறந்ததும் அவர்கள் படிப்புக்காக திண்டிவனத்தில் இருந்து சென்னை வந்தேன். கட்டுமானத் தொழிலில் இறங்கினேன். மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது மட்டும் ஓடிக் கொண்டே இருந்தது. என்னைப் பொறுத்த அளவில் 'பசுமைத் தாயகம்அதற்குப் போதுமான தாக இருந்தது. ஆனால், லட்சோப லட்ச மக்களும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் நான் பொறுப்புக்கு வர வேண்டும் என்று அழைத்தபோது... என்னால் தவிர்க்க முடியாமல் போய்விட்டது!''



சி.பி - அண்ணன் கட்சி உறுப்பினர்களைத்தான் மக்கள்னு சொல்றார் போல.. ஹி ஹி 
4. ''அப்படியென்றால், மக்கள் அழைத்ததால்தான் அரசியலுக்கு வந்தீர்களா?''


சி.பி - ஆமா, அவங்க மானமுள்ள கட்சிக்காரங்க, மக்கள் போ அப்டினு டெபாசிட்டை பிடுங்கி துரத்தி விட்டுட்டா சத்தம் போடாம வந்துடுவாங்க.. 

''ஆமாம். அதை இன்றைக்கு நினைத்தாலும் என் கண்கள் கலங்கும். ஒருநாள் மனைவியுடன் காரில் சென்றேன். வழியில் காரை நிறுத்தி என் காருக்கு முத்தமிட்டு, பாசத்தை வெளிக்காட்டினார்கள் மக்கள். என் மனைவியிடம்
கேட்டேன், 'இவர்களுக்கு நான் என்ன செய்யப்போகிறேன்?’ '' (கண் கலங்குகிறார்).

சி.பி - என்னது? காருக்கு முத்தம் இட்டாங்களா? நல்லா விசாரிங்க.. கார் அவங்களுதா இருக்கும்னு நினைக்கறேன்.. அடமானத்துக்கு வந்ததை உங்கப்பா ஆட்டையை போட்டுட்டாரோ என்னவோ?
5. ''உங்கள் தந்தை, 'என் குடும்பத்தினர் அரசியலுக்கு வந்தால், என்னைச் சவுக்கால் அடியுங்கள்என்று அறிவித்தவர். அப்படிப்பட்டவர் உங்களுடைய அரசியல் பிரவேசத்துக்கு எப்படிச் சம்மதித்தார்?''


சி.பி - ஒரு வேளை அன்புமணி தத்துப்பிள்ளையோ என்னவோ?ஏன் சொல்றேன்னா எங்கண்ணன் ராம்தாஸ் அய்யா மானஸ்தர்.. ஒரு வார்த்தை ஒரு சொல் ஒரு நாக்கு அவருக்கு.. கலைஞர் மோசம்னு ஒரு தடவை சொல்லிட்டா மறுபடி அந்த பக்கமே போக மாட்டார். ஜெவை திட்டுனார்னா போயஸ் பக்கமே தல வெச்சு படுக்க மாட்டார்.. 
''ஒரு ரகசியம் சொல்லவா? நாளைக்கு நான் மந்திரி பதவி ஏற்கிறேன் என்றால், இன்றைக்கு இரவுதான் அப்பா சம்மதிக்கிறார். அதுவும் எப்படி? கட்சியின் அத்தனை தலைவர்களும் ஒருமித்த குரலில் 'தம்பியைப் பதவியில் அமர்த்துங்கள்என்று அப்பாவிடம் வலியுறுத்தியபோது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8el8_QO5KvcX_krHs8Rg7G9_SFx7BLRkRRQ198pXmOLmSygEr2K_DcsvfZaosDm_csuANZcnwaO7wNe6XxCyeADC4MscEtedZYLxfzcERTdCHNB1ZRiXKzLf6hWdfIDpBOQ7SAC9iAp39/s1600/resize_20111011204443.jpg


சி.பி - அடங்கப்பா சாமி.. இது உலக மகா நடிப்புடா.. வெட்கம் இல்லாம பதவிக்காக அதுவும் பையன் எம் பி ஆகனும்கறதுக்காக நாய் மாதிரி அலைஞ்சது எல்லாம்  எங்களுக்குத்தெரியாமயா இருக்கு?
இந்தியாவிலேயே 'எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம்என்று சொல்லிவிட்டு, அரசியலுக்கு வந்த ஒரே தலைவர் அப்பா.


சி.பி - அவ்ளவ் யோக்கியமா இருக்கறவர் ஏன் உங்களை களம் இறக்கனும்? ஊர்ல அநாதைகளுக்கா பஞ்சம்? ஒரு தலித் இளைஞரை களம் இறக்கி இருக்கலாமே? நான் என்ன சொல்றேன்னா அட்டூழியம் பண்ணுங்க, அராஜகம் பண்ணுங்க தப்பில்லை, ஏன்னா எல்லாரும் அதைத்தான் பண்றாங்க, ஆனா வெளீல நான் நெம்ப நெம்ப நல்லவன், உலகமகா யோக்கியன்னு சொல்லிட்டு அராஜகம் பண்ணாதீங்க..


 தான் முதல்வர், பிள்ளைகள் துணை முதல்வர், மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என்று குடும்பத்தையே பதவியில் அமர்த்தியவர் அல்ல அவர். இந்த வாக்குறுதியையும் அவர் காப்பாற்றி இருப்பார். கட்சியினரின் வற்புறுத்தலால்தான் மீறினார்.''


சி.பி - அண்ணன் கட்சிக்காக உயிரையே கொடுப்பாரு.. ஆனா பாருங்க யாராவது அவரை எதிர்த்து பேசுனா கட்சியை விட்டுத்தூக்கிடுவாரு.. 
6. ''மது, புகைப் பழக்கத்துக்குத் தடை, டிஸ்கொதே, பப் ஆகியவற்றுக்குக் கட்டுப்பாடு, பிடிக்காத திரைப்படங்கள் ஓடும் திரையரங்குகள் மீது தாக்குதல்... இவை எல்லாம் தமிழகத்தின் 'கலாசாரக் காவலர்களாக உங்களைக் காட்டிக்கொள்ளும் முயற்சியா?''
''அறிவுரை சொன்னால், கேட்கிற நிலையில் இன்றைய தலைமுறை இல்லை. உலகிலேயே நடிகனுக்குப் பால் அபிஷேகமும் பீர் அபிஷேகமும் நடத்தும் ரசிகர் கூட்டம் இங்குதான் இருக்கிறது. நாட்டிலேயே புற்றுநோயாளிகள் அதிகம் உள்ள மாநிலங்களில், தமிழகம் முன்னணியில் இருக்கிறது. உலக சுகாதார மையம் சொல்கிறது, 'அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மது அருந்தாத இளைஞர்களே இருக்க மாட்டார்கள்என்று. அந்த நிலைக்குத் தமிழகம் சென்றுவிட நாங்கள் அனு மதிக்க மாட்டோம்.''

சி.பி - பா ம கவுக்கு கொள்கைன்னு 1 இருந்தா அது இது மட்டும்தான்,, இதை வரவேற்கிறோம்.. 
7. ''உங்களுக்குப் புகை, மதுப் பழக்கம் உண்டா?''
''ம்ஹூம்... தொட்டதே இல்லை.''

சி.பி - ஆமா, அண்ணனுக்கு மதுப்பழக்கம் இல்லை.. ஆனா .. ஹி ஹி 

8. ''தமிழர் என்ற சொல்லுக்கு, பா... புதிய வரையறை வகுக்கிறதா?''
''ஆமாம். தமிழ் பேசுவதாலேயே வந்தேறிகளை எப்படித் தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியும்?

திராவிடர்கள் என்றால் யார்? திராவிடக் கட்சிகள், மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள், தமிழர்கள் எல்லோரும் திராவிடர்கள் என்று சொல்கின்றன. அப்படி என்றால், ஆந்திரத்திலோ, கர்நாடகத்திலோ, கேரளத்திலோ, திராவிட என்ற பெயரில் ஒரு கட்சியாவது இருக்க வேண்டுமே... இருக்கிறதா? கிடையாது. ஆந்திரத்தில் ரெட்டி, நாயுடு தவிர வேறு இனத்தவர்கள் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. கேரளத்தில் நாயர், மேனன் தவிர வேறு இனத்தவர்கள் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. கர்நாடகத்தில் லிங்காயத்துகள், ஒகேலிக்கர்கள் தவிர வேறு இனத்தவர்கள் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. தமிழகத் தில் மட்டும்தான் இந்த அக்கிரமம். காரணம், இங்கு திராவிடர்கள் என்ற பெயரில் ஆட்சி யில் ஒட்டிக்கொள்பவர்கள் எவரும் தமிழர் கள் இல்லை என்பதுதான்.''


சி.பி - தமிழனை 2 வகையா பிரிக்கலாம் 1. யார் என்ன சொன்னாலும் அதை நம்பிடறவன் 2. காலச்சுழற்சியில் அரசியல்வியாதிகள் செய்யும் ஊழலை, அக்கிரமங்களை மறந்துடறவன்
9. ''அடுத்தடுத்த தேர்தல் தோல்விகள் மூலம் என்ன கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள்?''

சி.பி - யாரைப்பார்த்து என்ன வார்த்தை சொல்லீட்டீங்க, எல்லா எலெக்‌ஷன்லயும் அவங்க டெபாசிட் வாங்கியாச்சு.. 



''திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது தவறு. இனி ஒருபோதும் அந்தத் தவறைச் செய்ய மாட்டோம்.''


சி.பி - இது எப்படி இருக்குன்னா ஒரு பணக்காரப்பெண்ணை கல்யாணம் பண்ணீக்கிட்டு எல்லா சொத்துக்களையும் அனுபவிச்சுட்டு அந்த பொண்ணுக்கு ஏதாவது உடம்பு சரி இல்லாம போனதும் நைஸா ஓடி போற மாதிரி இருக்கு.. 
10. ''இதை உறுதியாக எடுத்துக்கொள்ளலாமா?''
''சத்தியமாக!''

சி.பி - சின்ன வயசுல நாங்களும் இப்படித்தாண்ணே.. எதுக்கெடுத்தாலும் சத்தியம் பண்ணுவோம், அப்போ மனசுக்குள்ளே அ அப்படின்னு நினைச்சுக்குவோம் .. அதாவது அசத்தியமா ஹி ஹி . நீங்க வேணா பாருங்க உங்கப்பா கலைஞர் கால்லயோ ஜெ கால்லயோ போய் விழுந்து நாங்கள் இணைவது காலத்தின் கட்டாயம், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை அப்டின்னு வெட்கமில்லாம சொல்லிட்டு நரி மாதிரி நயவஞ்சக சிரிப்போட பேப்பர்ல நியூசா வருவார் பாருங்க.. அப்படி ஒரு சம்பவம் நடக்கலைன்னா நான் கில்மா படம் பார்க்கறதையே விட்டுடறேன். இது நயன் தாராவோட உண்மைக்காதல் மீது சத்தியம் ஹி ஹி 


டிஸ்கி - கேள்விகள் பச்சை நிறத்தில் இருப்பது எதேச்சையானது, பச்சோந்தி கட்சி என்று எங்களை கிண்டல் பண்றாங்க என யாராவது குதித்தால் அதற்கு நிர்வாகம் பருப்பல்ல.. அடச்சே பொறுப்பல்ல..