Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

Thursday, January 09, 2020

தர்பார் - சினிமா விமர்சனம்

tharbar movie के लिए इमेज परिणामரஜினி ஹேட்டர்ஸ்க்கு எல்லாம் ஒண்ணே ஒண்ணு சொல்றேன். 70 வயசுல ஒருத்தர் ஹீரோவா நடிக்க 100 கோடி சம்பளம் வாங்கி அந்தப்படத்தை தன் ஒத்தை ஆள் பர்ஃபார்மெனஸ்ல தூக்கி நிறுத்தறார்னா அது சாதா விஷயம் இல்ல . 70 வயசுல நம்மால சாதாரணமா  நடக்கவே முடியாது , மூன்று முகம் ல அலெகஸ் பாண்டியன்ல காட்டின சுறு சுறுப்பை வேகத்தை  இத்தனை வருசம் கழிச்சும் காட்டி கை தட்டல் வாங்கறார்னா அது தான் ரஜினி மேஜிக்.

சரி, படத்தோட கதை என்ன? வழக்கமான தமிழ் சினிமா டெம்ப்ளேட் கதை தான், ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர் , என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட், மும்பை நகர் ல போதைப்பொருள்  புழக்காட்டம் , பெண்கள் கடத்தல் அதிகமா இருக்கு , அதுக்குக்காரனமான ஆட்களை எல்லாம் போட்டுத்தள்ளறார். வில்லனோட மகனை  பிடிச்சு தந்திரமா தப்பின அவனை  தனது சமயோசிதத்தால் போட்டுத்தள்ளறார்

வில்லன் ஹீரோவை எப்படி ஃபேஸ் பண்றான்? ஹீரோ எப்படி வில்லனை வெல்றார் என்பதே கதை

 ஒரு இயக்குநரா   ஏ ஆர் முருகதாஸ் தனது முந்தைய படங்களான ரமணா , கஜினி, துப்பாக்கியில் காட்டிய திரைக்கதை மேஜிக்கை இதில் காட்ட தவறிட்டார். உதவி இயக்குநர்கள் உஷார் ஆக இருக்காங்க போல , ஆனா ரஜினி மேஜிக்கில் படம் தப்பிக்குது


 ஹீரோவா த ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார்  ரஜினி.அவரு ஸ்டைலா கண்ணாடியை திருப்பிப்போடுவது இன்னும் சலிக்கவே இல்லை , தியேட்டரில்  விசில் பறக்குது. நயனுடனான  லவ்வில் பம்மும் காட்சிகளில் ரஜினியின் அக்மார்க் காமெடி நடிப்பு பளிச். ரயில்வே ஸ்டேஷன் ல போடும் அந்த ஃபைட் சீன் கிட்டத்தட்ட பருத்தி  வீரன் “ ஊரோரம் புளியமரம்’ பாட்டு டைப் ஃபைட்டு . ஆனா அது பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகல . ஹையர் ஆஃபீசரிடம் நக்கல் பண்ணுவது , மனித உரிமை கமிஷன் ஆஃபீசரை மிரட்டுவது எல்லாம் தூள் , ஆனா நடைமுறைல  சாத்தியமே  இல்லை



 ஹீரோயினா  போஸ்டர்ல நயன் தாரா , ஆனா நிஜமா கதைல மகளா வரும் நிவேதா தான். நல்லா  நடிச்சிருக்கு பாப்பா  . அந்த ஹாஸ்பிடல் சீன் ஆக்டிங் எல்லாம் பெண்களைக்கவரும்


  நயன் இதுல கிட்டத்தட்ட தண்டம் தான், கஜினி ல யும் இதே போல், ஏ ஆர் எம் க்கு இவர் மேல் என்ன கோபமோ? ஓப்பனிங் சீனில் புறமுதுகு காட்டும் சீனில் அப்ளாஸ்


யோகி பாபு இன்னொரு தண்டம். ஆனா காமெடியன் இருக்காப்டினு டிஸ்ட்ரிபியூட்டர்ட்ட காட்டிக்க யூஸ் ஆகறாரு

வில்லன்கள் எல்லாம் பெருசா எடுபடலை . எப்பவுமே வில்லனை பவர் ஃபுல்லா காட்டனும். இதுல மெயின் வில்லன் ஒருத்தனைக்கத்தில குத்தும் முன் 50,000 ரூபா ஒர்த் உள்ள சோஃபா செட்டை குத்தி  கூர்மையை டெஸ்ட் பண்றான் , முடில , சுனில் ஷெட்டி நடிப்பு தமிழுக்கு சூட் ஆகலை  வில்லன்கள் எல்லாம் ஆளுங்களும் அவனுங்களும் சகிக்கலை , தலைல கொண்டை போட்டிருக்கானுங்க , குதிரைவால் கொண்ட  வேற

இசை அனிரூத் , இவரோட வைகாசி பொறந்தாச்சு - தண்ணிக்குடம் எடுத்து பாட்டை அட்லீ வேலை பண்ணுனது ஊரே சிரிப்பா சிரிச்சுது, மற்ற பாட்டுகளும் எடுபடலை , அனேகமா ரஜினி படங்கள்ள பாட்டுகள் மொக்கையா ஆனது இதுலதான். பிஜிஎம்ல விட்டதைப்பிடிச்சாலும் பாடல்களை சொதப்பினது  ஓவர்

 ஒளிப்பதிவு  அருமை , ரஜினியை யூத்தா காட்டி இருக்கு கேமரா , எடிட்டிங்  இன்னும் ஷார்ப்பா இருந்திருக்கலாம். ரெண்டே முக்கால் மணி நேரம் ல அரை மணி நேரம் ட்ரிம் பண்ணலாம்

 ரஜினி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து , பொது ரசிகர்களுக்கு ஒரு சராசரி மசாலா படம் , நெட்டிசன்கள் வறுப்பது போல் மொக்கைப்படம் எல்லாம் இல்லை
tharbar movie nayanthara के लिए इमेज परिणाम
நச் வசனங்கள்

1  ஹீரோ வுக்கானஓப்பனிங் பில்டப் பஞ்ச் பைவில்லன்
கேட்டை மூடுடா,எவன் வர்றான்னு பார்ப்போம் #dharbar


மிஸ்டர் ஆதித்யா! அடிக்கறது ரொம்ப தப்பு
அடிக்கறது தப்பா?ஆளுங்களையே தூக்கி இருக்கோம் #dharbar


3 என்ன இவரு கால் இப்படி தந்தி அடிக்குது அவளைப்பார்த்து இதுதான் கால் வைப்ரேஷனா>?


தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

தர்பார் @ ஈரோடு சங்கீதா 11 am show
.. 7 லட்சத்துக்கு எடுத்திருக்காங்க,முதலீடை எடுக்க 10 நாட்கள் ஆகுமாம்.அதுக்குப்பின் வர்றது ல 3 லட்சம் மெயின்ட்டனென்ஸ் செலவு,எப்படியும் 3 லட்சம் லாபம் பார்த்துடலாம்கறார் ஓனர்" த நேம் ஈஸ் ரஜினி !#dharbar

ரஜினியின் ஹையஸ்ட் சம்பளம் தர்பார்லதானாம்,ஒயிட்லயே 100+ கோடியாம் #dharbar


பேட்ட பட ரஜினி ஏஆர் முருகதாஸ்க்கு பிடிச்சிடுச்சு போல,அதே ஸ்டைல்ல ரஜினியை டான்ஸ் ஆட வெச்சிருக்கார்,சும்மா கிழி #dharbar

இந்த டைம் ஏமாளி அசிஸ்டெண்ட் டைரக்டர் யாரும் சிக்கல போல,டைரக்டர் தடுமாறுகிறார்,கமலின் சூரசம்ஹாரம் மாதிரி முதல் பாதி #dharbar

2 கோடி சம்பளம் வாங்கற நயன் வர்றப்ப சீட்ல இருந்து எழுந்து மரியாத தர்றாரு 100+ கோடி சம்பளம் வாங்கற ரஜினி,வாட்டெ..... #dharbar

திடீர் னு கொடி பறக்குது சீன்ஸ் எல்லாம் வருது #dharbar

1992 ல பாக்யா வார இதழில் வந்த ஜோக்கைக்கூட ஞாபகம் வெச்சிருந்து யோகிபாபு சொல்றாரு,அடடே! அபாரம் பரிமளா!மொமெண்ட்
இன்னைக்கு அஷ்டமி,நாளை நவமி நாளான்னைக்கு (நாளை மறுநாள்) கவுதமியா? #dharbar

தங்கப்பதக்கம்ல சிவாஜி தடுமாறி பின் சமாளிக்கும் சீனை எல்லாம் அட்லீ ஒர்க் பண்ற லெவலுக்கு முருகதாஸ் இறங்கீட்டாரு",அடப்பாவமே! #dharbar

9  தியேட்டரில் விசில் பறந்த ஒரு சீன்
சார் புரோட்டாகால் படி நீங்க இப்ப யூனிபார்ம் போடக்கூடாது அது தெரிஞ்சுதான் போட்டுட்டு வந்திருக்கேன் ,போடா... #dharbar






Image



Image


சபாஷ் டைரக்டர்

1  எந்த உதவி இயக்குநர் குடியையும் கெடுக்காம   சொந்தமா யோசிச்சிருப்பார் போல , அதுக்கு ஒரு ஷொட்டு

2   பட ரிலீசை பிளான் பண்ணி பொங்கலுக்கு முன்பே விட்டது. 10 நாட்கள் ல அசலை அள்ளிடலாம்

3  ஹாஸ்பிடலில்   ஐசியூ வில் இருக்கும் பேஷண்ட் தப்பிப்பதும்  வாசலில் சும்மா லேசா காயத்துடன் இருப்பவர் மரணிப்பதும்,  புதுமையான நாட்சி அமைப்பு 

tharbar movie nayanthara के लिए इमेज परिणाम
 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்

லாஜிக் மிஸ்டேக் 1 − என்கவுன்ட்ர்ல
போட்டுத்தள்றப்ப ஆட்களோட பின்மண்டை ,முதுகு இப்டிதான் சுடனும்,ஆனா நம்ம ஆளு நேருக்கு நேர் நின்னு சுடறாரு,ஓட விட்டு சுடலை #dharbar


இன்னும் 2 மணி நேரத்துல நீங்க சாகப்போறீங்க னு பேஷண்ட் கிட்ட ஒரு டாக்டர் சொல்வது தார்மீக முறைப்படி தவறாச்சே? !#dharbar

என்னதான் ஹீரோ ஒரு சூப்பர் ஸ்டாரா இருக்கட்டுமே? அவரோட ஹையர் ஆபீசர் முதல்ல சல்யூட் அடிப்பதும் அதுக்குப்பிறகு ரஜினி சல்யூட் அடிப்பதும் ஓவர் #dharbar

4  வசனங்கள் இன்னும் பல நச் சேர்த்திருக்கலாம், 






 விகடன் மார்க் ( யூகம்)   41

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)  3/5 


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க்    2.5 / 5 ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)


 C.P.S  கமெண்ட்-தர்பார்−முதல் பாதி தனுஷ் பட டைட்டில் போலவே பட்டாஸ்,பின் பாதி தடுமாற்றம்,ஓவர்ஆல் படம் ஓகே தான்,ஆனா பாட்ஷா ,படையப்பா லெவல் இல்ல,பேட்டக்கு ஒரு படி கீழே,காலா,கபாலிக்கு ஒரு படி மேலே,ரஜினி கண்களில் ஒரு வெறி புதுசு,ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் ,விகடன் 41 ரேட்டிங் 2.5 / 5 #dharbar

Thursday, December 18, 2014

'லிங்கா' சுமார் படமா? ஹிட் படமா?

ரஜினிகாந்தின் 'லிங்கா' படத்தை விமர்சிப்பவர்களையும், கதைத் திருட்டு தொடர்பாக வழக்கு தொடர்பவர்களையும் நடிகர் ராதாரவி கடுமையாக தாக்கிப் பேசியிருக்கிறார்.
மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிப்பில் சரத்குமார் இரு வேடங்களில் நடித்து இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான ‘சண்டமாருதம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுடன் சேர்ந்து மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் 'மாரி', 'இது என்ன மாயம்' மற்றும் 'பாம்பு சட்டை' ஆகிய படங்களின் அறிமுக விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் அனைத்து படக்குழுவினரும் கூட்டாக பங்கேற்றார்கள்.
இந்த விழாவில் நடிகர் ராதாரவி பேசியது:
"எனக்கு வாழ வைக்கத்தான் தெரியுமே தவிர, வாழ்த்த தெரியாது. இதில் என்ன தகராறு வரப்போகிறதோ தெரியவில்லை. தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் நான். அனைத்து பக்கங்களிலும் திட்டு வாங்க வேண்டியது இருக்கிறது. ஒரே நேரத்தில் இதே மாதிரி 4 படங்களின் விழா நடித்த வேண்டாம் சரத்குமார். கேசட் வெளியீட்டு விழா எல்லாம் வேண்டாம். இதை பண்ணினாலே யாராவது போய் உடனே நீதிமன்றத்தில் என்னுடைய கதை இது என்று வழக்கு போடுகிறார்கள். பூஜை போடும்போது தெரியவில்லையா இது அவர்களுடைய கதை என்று. முடிவில் தான் தெரியுமா உங்களூக்கு?
படத்தை எடுத்து, விளம்பரங்கள் எல்லாம் சேர்த்து தாலியை அடகு வைத்து பண்ணிக் கொண்டிருக்கிறோம், எவ்வளவு கஷ்டப்பட வேண்டியதிருக்கிறது. திடீரென்று நீதிமன்றத்தில் எப்படி 5 கோடி கட்ட முடியும். சினிமா ஆட்கள் அனைவரும் ஒன்றிணைந்து தலைமை நீதிபதியைப் போய் பார்க்க வேண்டும். 5 கோடி கட்டச் சொன்னால் எப்படி உடனே கட்ட முடியும் என்று கேட்க வேண்டும். ஒரு வாரத்தில் 5 கோடி வசூல் செய்யவே தாலி அந்து போகிறது. எங்கிருந்து போய் 5 கோடி கட்ட முடியும்.
இனிமேல் படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால், வீட்டுப் பத்திரம் எல்லாம் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ரிலீஸ் நேரத்தில் எவனாவது என்னுடைய கதை என்று சொல்லுவார். அவருக்கு ஒரு பதில் சொல்ல வேண்டும். ஜேம்ஸ்பாண்ட் கதையை திருட முடியாது என்று தெரியும். ஆனால், அவருடைய கதையை வேறு ரூபத்தில் திருடி நடித்து ஜேம்ஸ்பாண்ட் என்று ஜெய்சங்கர் பெயர் வாங்கி கொண்டு போய்விட்டார். அவர் மீது யார் வழக்கு போட்டார்கள்.
10 வருடங்களுக்கு சிறு தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே படம் பண்ணினால் பெரிய ஆளாக ஆகிவிடலாம் என்று சிம்ஹாவைப் பார்த்து ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார். அப்படி ஆகவே முடியாது. அப்படி பண்ணினால் சிம்ஹா எப்படி காசு சேர்த்து வீடு வாங்குறது? பெயர் இருக்கும்போது சம்பாதித்தால்தான் உண்டு. ஆறாவது நாளில் காணாமல் போய்விடுகிறோம். இப்போது எல்லாம் 100 நாள் போஸ்டர் அடிக்க வேண்டும் என்றால், 100 எத்தனை சைபர் சார் என்று கேட்கிறான். ஆர்.கே.செல்வமணி பேச்சை எல்லாம் கேட்காத சிம்ஹா, நல்லா சம்பாதிச்சுக்கோ.
கே.எஸ்.ரவிகுமார் டேம் மீது ஏறியும், இறங்கியும் அவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுத்திருக்கிறார். இங்கே படம் சுமார் தான் என்கிறார்கள். இவர்களுக்கு என்ன தெரியும் ரவிகுமார் கஷ்டப்பட்டது. அப்படத்தில் ரஜினி ஒரு சென்டர் ஆஃப் அட்ராக்‌ஷன். படத்திற்கு ஹீரோ தேதிகள் கொடுத்தால்தான் எங்களுக்கு எல்லாம் வேலை. அதைப் பார்த்து விட்டு ஒருத்தர், படம் பரவாயில்லை... படம் தான் கொஞ்சம் நீளம் என்கிறார். கேட்கும் போது எனக்கு வயிறு எரிகிறது.
ரவிகுமார் ரொம்ப திறமைசாலி. முதலில் ரஜினி ரொம்ப யங்காக இருப்பார். அந்த கும்பலோடு என்னைப் போடவில்லை. சுதந்திர போராட்டத்திற்கு முன்பு ஒரு கூட்டத்தை காட்டுவார் பாருங்கள், அதில் போட்டார். இவர் எல்லாம் பழைய ஆள், அந்த லிஸ்ட்ல போடு என்று போட்டார்.
இந்த 4 பட அறிவிப்பு கூட்டத்திலேயே யாராவது ஒருத்தர் இருப்பார். இங்கிருந்து நேரா போய் இது என்னுடைய கதை என்று வழக்கு போட்டு விடுவார். கஷ்டப்பட்டு பணியாற்று இயக்குநர்களை மேலும் கஷ்டப்படுத்தி சாபத்தை வாங்கிக் கொள்ளாதீர்கள். எம்.ஜி.ஆர் காலத்தில் எல்லாம் இப்படி கிடையாது. எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் எல்லாம் இப்படி செய்திருக்க முடியாது. அப்போது எல்லாம் படங்கள் அவ்வளவு அழகாக வந்தது.
படபூஜை போட்டு தொடங்குகிறோம் பாருங்கள் அன்று முதல் இது என்னுடைய கதை என்று சண்டைப் போடுங்கள். எங்களுக்கு நிறைய நேரம் இருக்கும் பேசுவதற்கு. பூசணிக்காய் சுற்றும் போது பேசினால் எப்படி? எந்த படத்திற்கு இனிமேல் பிரச்சினை வந்தாலும், சினிமாக்காரர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்" என்றார் ராதாராவி. 





thanx - the  hindu

Friday, December 12, 2014

லிங்கா - சினிமா விமர்சனம்



ஹீரோ  ஒரு திருடன்.அவரும் , அவர் நண்பர்கள் குழாமும்  செய்யும்  லூட்டிகள் செம  ஜாலியாப்போகுது.


  சோலையூர்  அணையை இஞ்சினியர் செக்  பண்ணி  அணைக்கு ஆபத்து .அந்த ஆபத்தில்  இருந்து அணையைக்காப்பாத்தனும்னா ராஜாவோ அல்லது அவரது  வாரிசான  லிங்காவோ  வந்து தான் அணையைத்திறக்கனும் .ஆனா  லிங்கா   வர மாட்டேங்கறார்


நகைக்கண்காட்சில வைக்கப்பட்ட  மரகத நெக்லசை  ஆட்டையைப்போட  திட்டம் போடும்  இடங்கள்  காதில்  பூச்சுற்றல் என்றாலும்  சுவராஸ்யம். ஹீரோயினை  சோலையூர்  கிராமத்துக்கு கூட்டிட்டு வரவேண்டிய  பணி  ஹீரோயினுக்கு. அதே  ஊரில்  இருக்கும்  கோயிலில்  உள்ள  மரகதச்சிலையை திருட வந்த  ஹீரோ வுக்கு  தன்  தாத்தா  வின்  ஃபிளாஸ்பேக்  கதை  சொல்லப்படுது.  

பிரிட்டிஷ் அரசை எதிர்த்து  தன் கலெக்டர் பதவியை  துறந்து  ஹீரோவின்  தாத்தா  ஊர் மக்களின்  நன்மைக்கு  அணை  கட்டுகிறார். அந்த அணை  கட்ட  ஏகப்பட்ட  தடங்கல்கள்  சதிகள்  சவால்கள் .எல்லாத்தையும்  முறியடிச்சு  சொந்த  செலவில்  எப்படி  அணையைக்கட்டுகிறார்  என்பதே  கதை

ஹீரோவா  த  ஒன் அண்ட்  ஒன்லி சூப்பர் ஸ்டார்  ரஜினி. 4 வருட  இடைவெளிக்குப்பின்  அவர்  காட்டும்  அட்டகாசமான  ஓப்பனிங்  சீன்  கலக்கல் . 60வயது ஆன  பின்னும் அவர்  25  வயது  இளைஞர்  போல்   சுறுசுறுப்பாக  பின்னிப்பெடல்  எடுக்கிறார். பாடல்  காட்சிளில்  தமிழ் நாட்டு  மக்களின் நன்மைக்காகவும் , ரசிகர்களுக்காகவும்  வேண்டா  வெறுப்பா  ரொம்ப  சிரமப்பட்டு  அனுஷ்கா  கூட  சோனாக்சி  சின்ஹா  கூட  டூயட்  பாடி ஆடி  நடிச்சிருக்கார்.




டிவி நிருபராக வரும் அஸ்கா உதட்டழகி  குஸ்கா கன்ன அழகி அஞ்சே  முக்கால் அடி உயர கொழுக் மொழுக்  ரேஸ் குதிரை அழகி அனுஷ்கா தான்  நமக்கெல்லாம்  பூஸ்ட்.பாப்பாவுக்கு  முகத்தில்  கொஞ்சம்  முதிர்ச்சி எட்டிப்பார்க்குது என்றாலும்  தமிழன் முகத்தை அதிகம்  கவனிக்காததால்  தப்பி விடுகிறார்.கண்காட்சியில்  ரஜினியுடன்  நெருக்கமாக  இருக்கும் காட்சி ஆல்ரெடி    பீரோவுக்குள்  கொஞ்சிக்குலாவிய  தூள்  படத்தின்  தழுவல்  காட்சி  தான் ( விக்ரம் -ஜோதிகா)  என்றாலும்  கிளு  கிளு தான்.


மெயின்  ஜோடி  சோனாக்சி சின்ஹா.ஹிந்தில  சோனா  என்றால்  தங்கம்னு அர்த்தம் .அதே  போல்  தங்கம்  போல்  ஜொலிக்கும் அழகி. ஏறு நெற்றி  இவருக்கு  மைனசாவே  தெரியலை.நல்லா பரம பத  மேப்பை  விரிச்சு  வெச்சு  விளையாடும் அளவுக்கு அகலமான  முதுகு அழகி.முதல்  மரியாதை  ராதா  கணக்கா  ஜாக்கெட்  இல்லாம  வர்றார். ( சேலை  கட்டி  இருக்கார் ) கண்ணியமான   கேமரா மேனாக இருந்தாலும்  ஒரு  பாடல்  காட்சியில்  அவரையும் அறியாமல்  கிளாமர்  எட்டிப்பார்க்குது



சந்தானத்தின்  காமெடி  வழக்கம்  போல்  கலக்கல்.இவரது  ஒன் லைனர்கள்  அப்ளாஸ் அள்ளுது. கருணா வும்  கேப்  கிடைக்கும்  இடத்தில்  எல்லாம்  சிரிக்க வைக்கிறார்.நண்பேண்டா  என  அவர்  முழுசாக  சொல்ல  முடியாமல்  வயசு  சீனியாரிட்டி  கருதி நண்பேன்  என  நிறுத்த  ரஜினி  டா என  முடிக்க  தியேட்டரே  கல கல



ஃபிளாஸ்பேக்  காட்சிகள்  ரொம்ப  நீளம் .படத்தின்  மெயின்  கதையே  ஃபிளா   ஸ்பேக் தான்  என்பதுதான்  படத்தின்  பலமும்  பலவீனமும். ரஜினி  படம்  எனில்  பாட்ஷா  படையப்பா  போல்  சவால்  விடும்  கேரக்டரா  பார்த்து  மக்கள்  ட்யூன் ஆகிட்டாங்க .எனவே  இது போல்   பென்னி  குயிக்   அணை  கட்டும்  கதை  எல்லாம்  ரிப்பீட் ஆடியன்சை  வர  வைப்பது  சிரமம்.


வில்லனாக  வரும்  பிரிட்டிஷ்  வில்லன்   ஆள்  நல்ல  பர்சனாலிட்டி  எனில் அவர்  மனைவியாக  வந்து  ரஜினிக்கு  சப்போர்ட்  செய்யும்   கேரக்டர்  நல்ல  கலர் . ஜவஹர்லால்  நேரு  - மவுண்ட்பேட்டன்  பிரபு  சம்சாரம்  கதை தான்  நினைவு  வருது.



இசை  ஏஆர்  ரஹ்மான் . 2 பாட்டு  நல்லாருக்கு . ஆனா  பின்னணி  இசை  சுமார்தான் .


மிகக்குறுகிய  காலத்தில்   பெரிய பிராஜக்ட்டாக  சக்சஸ்ஃபுல்லா  தருவது  சாதா  விஷயம் இல்லை . கே எஸ்  ரவிக்குமார்  தான்  அந்த  மேஜிக் கை  நிகழ்த்திக்காட்டி   இருக்கார்.












மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1. திருடப்போர வீட்டுல யாரும் இல்லயான்னு பாருங்கடான்னா காலிங்பெல் அடிச்சுப் பாக்குறானுவ # சந்தானம்

2. "என்ன ஜோக்கா?


" "ஜோக்கா இருந்தா சிரி...வீக்கா இருந்தா விட்று


3. எந்த தொழில் செஞ்சாலும் தூங்கலாம், ஆனா தூங்காம செய்யுர ஒரே தொழில் திருட்டுத்தொழில் !

4. வாழ்க்கைல எதுவும் ஈஸி இல்லை! முயற்சி பண்ணினா எதுவும் கஷ்டம் இல்லை! - ரஜினிகாந்த்

5. நான் காரியத்துல எறங்கிட்டா முடிக்காம விடமாட்டேன்! முடியாததுல இறங்க மாட்டேன் !

6. ஸ்பெஷல் டீ-ய குடிச்சும் தூக்கம் வருதுன்னா உங்க மூஞ்சிய மூதேவி லீசுக்கு எடுத்துருக்கான்னு அர்த்தம்!!! - சந்தானம்!

7. மனுசன்னா நம்பணும்.. மாசு உள்ள போனா தும்மனும் -/// 

8. "ஆந்திராவுக்கு போடுவோமா , அங்க என் மாமா வேல செய்ராரு" 

"என்ன வேல செய்யுராரு" 

"அதான் சொன்னனே..."

9.சந்தானம் டூ ரஜினி ; நீ வேணாம் வேணாம்னா கூட ஜனங்க விட மாட்டாங்க போல... ஊரே உனக்கு மரியாதை கொடுக்குதே-

10. ஐடியாவும் அப்பளமும் ஒன்னு.. ஆறவிட்டா நமுத்துடும்!!! -சந்தானம் 

11. "மரகத நெக்லஸ்கு 3Cன்னா மரகத சிலைக்கு ஒரு 15C வருமா?" 

சந்தானம் ;"15C, 21C எல்லாம் மந்தவெளி பஸ்டாப்புக்குத்தான் வரும்-/"

12. எதிர்பார்க்காதது நடந்தாதான் அது சுவாரஸ்யம்!

13. ஹாஹா விஜயகுமார் : "அய்யா நான் இந்த சோலையூர் கிராமத்து நாட்டாமைங்க

14. ஒரு வேல சாப்புடலன்னா பிரச்சனை இல்லை..ஒரு வேல கூட சாப்புடலன்னா அது பிரச்சனை!!!

15. I haven't failed .... I just postponed my success

16. ஒரு காரியம் முடியுரதுக்கு நிறைய பேரு உதவியா இருப்பாங்க.. ஆனா அந்த அந்த காரியம் நடக்க எதிரிதான் காரணமா இருப்பான்!

17.இஷ்டப்பட்டது கிடைக்கனும்னா கஸ்டப்பட்டுத்தான் ஆகணும்..!

18.எவ்ளோ உயரத்துல வாழ்ந்தாலும் தூங்குற இடம் நம்ம உயரம்தான்..!

19. வெள்ளக்காரன்; "மிஸ்டர் லிங்கேஸ்வரன், நீ DAM கட்டுர மாதரி தெரியல... இவள வேணா கட்டுவ



20  
பிரம்மானந்தம் = சும்மா ங்கற வார்த்தை என் அகராதிலயே கிடையாது



 சந்தானம் = சம்பளம் மட்டும் சும்மா வாங்கறீங்க?


21
பணம் இருந்தா மரியாதை தானா தேடி வரும்


22
வாழ்க்கைல எதும் ஈசி இல்லை.முயற்சி பண்ணுனா எதும் கஷ்டம் இல்லை


23
இந்த மரகத நெக்லஸ் என்ன விலை?


3 கோடி. அடப்பாவி .சேட்டு 1 1/2 கோடின்னானே


24  
சந்தானம் ஹிட் பஞ்ச் = பறக்காஸ் ( கிளம்புவோம்)


25
அனுஷ்கா = யோவ் கில்லாடி கிங்குய்யா நீ.


 ரஜினி = இப்போ என்னை விட்டேன்னாத்தான் நான் அடுத்த வேலையைப்பார்க்க முடியும்


26 
அனுஷ்கா = யோவ்.உன் பார்ட்ஸ் எல்லாம் எப்டிய்யா இப்டி வேலை செய்யுது? # ரஜினி படம்னா டபுள் மீனிங் கூட சாதாவா ஆகிடுது


27 
சந்தானம் டூ ரஜினி = ஒயின்ஷாப் ல சரக்கு அடிக்கும்போது அப்பாவைப்பாத்த மாதிரி ஏன் பம்முறே?


28   பிரிட்டிஷ்  வில்லன் -
என் முன்னால ஏன் இப்டி நிக்கறே?


 என் முன்னோர்கள் உங்களை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்கல # ரஜினி கலக்கல் டயலாக் டெலிவரி



29
நாம எந்த வேலை செய்யறோம்கறது முக்கியம் இல்லை. செய்யற வேலையை சந்தோசமா செய்யனும் # லிங்கா


30 
அரண்மனை ல இருக்கறவன் எல்லாம் ராஜா இல்லை.எங்கே இருந்தாலும் தன் கிட்டே இருப்பதை இல்லாதவங்களுக்குத்தர்ற எல்லோரும் மனசளவில் ராஜாதான் # லிங்கா


31
நல்லது நடக்கும்போது 1 மேல ஒண்ணா நடக்குது. கெட்டது நடக்கும்போதும் அப்டித்தான்.ஒண்ணு மேல ஒண்ணா நடக்கும் # லிங்கா





படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

1. உஸ்ஸ்.. வானத்தைப்போல படத்துல செந்தில் தன்னை புகழ்ந்து பேசும் பிச்சைக்காரனைவெச்சு பண்ணும் காமெடிய உல்டா பண்ணிருக்காங்கப்பா:-))


2  சூப்பர் ஸ்டாரின்  ஓப்பனிங்தாறுமாறு தக்காளிசேறு பாட்டு சீன்  60 வயசா?30 வயசா?




3
அனுஷ்கா தேவதையை தாவணி ல ரொம்ப சிம்ப்பிளா காட்டறாங்க.அதுலயும் பாப்பா சிறப்பா காட்டுது # அனுஷ்காடா





கால்ல மாட்ட வேண்டிய ரவுண்ட் கொலுசை கட் பண்ணி காதுல தொங்க விட்டிருக்கு அனுஷ்கா





அனுஷ்கா " ஏய்யா என் இடுப்பைப்பிடிக்கறே? ஏய்யா விட்டுட்டே?னு கேட்கும்போது ரஜினி எந்த பதிலுமே சொல்லலையே?




6
மோனா மோனா பாட்டில் ரஜினி கலக்கல்.ஆனா அனுஷ்கா கெட்டப் எடுபடலை.யாரு மேக்கப்விமன்?






7
ARR ரஜினி படத்துக்கு சரியா செட் ஆகலை.பிஜிஎம் சுமார்தான்.தேவா வா இருந்தா செமயா இருந்து இருக்கும்.ஆனா இன்ட்டர்நேசனல் மார்க்கெட்டிங் வேணுமே




8 அனுஷ்கா கால் மேல் கால் போட்டு டயலாக் பேசும் காட்சியில் கெண்டைக்கால் வரை பாரசூட் தேங்காய் எண்ணெய் தடவி மினுமினுப்பை ஏத்திட்டாங்க




9
சந்தானம் மேக்கப்பே இல்லாம செம யூத்தா இருக்கார்.




10
அனுஷ்கா உட்கார்ந்திருக்கும் எல்லா சீன் லயும் கால் மேல கால் போட்டு தெனாவெட்டா உக்காருது.இதுல ஏதாவது குறியீடு இருக்குமோ




11
முதல் 1 மணி நேரம் ஆட்டம் பாட்டம் சந்தானம் காமெடி ரஜினி அலப்பறைனு நல்லா தான் போகுது.இப்போ பிளாஸ்பேக் ஸ்டார்ட்




12 ரஜினி பஞ்ச் = லெட்ஸ் பிகின் # ரயில் பைட்




13
ராஜா காலத்து ரஜினி ஓப்பனிங் சீன் ல THE LEGEND OF ..,னு ஏதோ புக் படிச்ட்டு இருக்கார்.குறியீடு




14

பிளாஸ்பேக் காட்சிகளில் லைட்டா போர் அடிக்க ஆரம்பிக்குது




15
ரஜினி பஞ்ச் = SEE YOU SOON




16
HAPPY BIRTH DAY TO YOU என ரஜினி பிறந்த நாளில் ரிலீஸ் ஆன படத்தில் காட்சி வைத்தது இயக்குநர் டச் .ரசிகர்கள் கை தட்டல் அதிருது தியேட்டர்






17
ரஜினி முன் வில்லன் நிற்கும் காட்சியில் கேமரா கோணம் டாப் ஆங்கிளில் வெச்சிருக்கனும்.லோ ஆங்கிள் ல வெச்சா எடுபடாது.வில்லன் உயரம்




18 
படையப்பா வுடன் ஒப்பிடும்போது அதில் பாதி கூட வர்லை.இடைவேளை. 10மடங்கு னு சொன்ன ஷங்கர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்




19 
சூப்பர் ஸ்டாரின் ஓப்பனிங்தாறுமாறு தக்காளிசேறு பாட்டு சீன் 60 வயசா?30 வயசா?




20 
மக்களுக்காக ஏதாவது செய்யனும்னு ரஜினி 10 நிமிசத்துக்கு ஒரு டைம் சொல்லிட்டே இருக்காரு # தலைவர்டா




21
எஜமான் படத்தில் பட்டாம்பூச்சி பிடிக்கும் காட்சி போல் புயல் காற்றில் பறக்கும் பிளான் மேப் பேப்பர்சை பிடிக்கும் காட்சி




22
சின்னச்சின்ன நட்சத்திரங்கள் பிடிக்க வந்்தாய் .குட் மெலோடி. ஆனால் விஷூவல் டெம்ப்ளேட்்




23
60 வயதைக்கடந்த பின் நடித்த படத்தில் எம் ஜி ஆர் காட்டிய சுறுசுறுப்பை விட அதீத வேகத்தில் ரஜினி.இதுதான் ரஜினி




24
இஞ்சினியர் பில்டிங் கட்ட படும் சிரமங்களைக்காட்டினா அது மருமகன் தனுஷ் படம் ,அணை கட்ட கலெக்டர் படும் சிரமங்களைக்காட்டினா அதுரஜினி படம்




25
தேசியக்கொடியை ரஜினி பிடித்தபடி நிற்கும் காட்சி கலக்கல்.குறியீடு.இருவர் படத்தில் மணிரத்னம் உபயோகித்த டாப் ஆங்கிள் ஷாட் டெக்னிக்




26
பென்னி குயிக் ன் அணை கட்டிய வரலாற்றை சாமார்த்தியமான திரைக்கதையால் தியாக சரித்திரமாய் மாற்றியது அருமை




27
ரஜினி படத்துக்கே உண்டான பர பர சவால் காட்சிகள் நிறைந்த திரைக்கதையை எதிர்பார்க்காமல் பென்னி குயிக் ன் போராட்டக்கதையாகப்பார்க்கனும்







இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்



1   ஆறு  மாத காலத்தில்  பெரிய  விஐபிகள்  கால்ஷீட்டில்   ஒரு  சக்சஸ்  மசாலாப்படம்  எடுப்பது    சாதா  விஷயம்   இல்லை.  பிரமாதமான  நிர்வாகம்.

2  அணைக்கட்டு  செட்டிங்   அட்டகாசமான  ஆர்ட்  டைரக்சன்


3   அருவி  , மலை  என  கேமரா  கண்ணுக்குக்குளிர்ச்சி


4   வசனங்கள்  ரஜினி  ரசிகர்களை  உசுப்பேற்றும்  விதத்தில்  இருப்பது


5 அனுஷ்கா  , சோனாக்சி  சின்ஹா  என  2  நாயகிகள்   இருந்தும்  கண்ணியமாக  கிளாமர் கண்ட்ரோலரா  இருந்தது





இயக்குநரிடம்  சில கேள்விகள் , திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1  ரஜினி படத்துக்கு ஃபிளாஸ்பேக்  ஏன் இவ்வளவு  ஸ்லோவாக   இருக்கனும் ?  கோச்சடையான்  போல்  தீப்பொறி  பறக்கும்னு  பார்த்தா  முத்து   ஃபிளாஸ்பேக்  போல் தத்தித்தத்தி  வருதே?


2  ரயில் ஃபைட்  சீன்  எந்திரன்  ஃபைட்  போலவே   அதீத  கிராஃபிக்ஸ்  சீன் . ஏமாற்றம்  அளிக்கிறது .அதை  இன்னும்  நல்லா  ரியலிஸ்ட்டிக்கா  ரஜினி ஸ்டைலோட  காட்டி  இருக்கலாம்.


3  வில்லன்  பவர்ஃபுல்லா  காட்டப்படலை .அது  பெரிய  பின்னடைவு . பலமான வில்லனை   ஹீரோ  இன்னும் சாமார்த்தியமா  ஜெயிச்சாத்தானே  அதுல ஒரு கெத்து  இருக்கும் ? சோப்ளாங்கி வில்லனை  ஈசியா   ஹீரோ  ஜெயிச்சா  அதுல  எப்படி பாராட்டோ  , அப்ளாசோ அள்ள  முடியும் ?

4  நிலத்தின்  மதிப்பு  போல்  100  மடங்கு  பணம்  தர  ரஜினி ஒத்துக்கொள்கிறார். நிலத்துக்கு சொந்தக்காரர்களான  மக்களுக்கு அதிக  பணம்  தர்றார். இவ்வளவு  சொத்து ஏது ? என்ன தான்  ஜமீனா , ராஜாவா  இருக்கட்டுமே?

5  ஆர்  சுந்தர்ராஜன்   வில்லனாக  மாறி  மக்களுக்கு  ரஜினியை  கெட்டவனாக  காட்டும்  காட்சி அக்மார்க்  டிராமா . இது அந்தக்கால அரதப்பழசான  டெக்னிக்


6  ரஜினி கோபமாகப்பார்க்கும்  மாஸ்   பார்வை  தளபதிக்குப்பின் பெரிதாக  யாரும்  காட்டவில்லை . இந்தப்படத்திலாவது  உபயோகித்து  இருக்கலாம்






சி  பி  கமெண்ட் -
லிங்கா = ரஜினி மேஜிக் ,பென்னிகுயிக் கதை .பாட்ஷா படையப்பா அளவு இல்லை.ஆனா  முத்து  லெவல் ஹிட்  எதிர்பார்க்கலாம். குறுகிய காலத்தயாரிப்பான  பாபா , பாண்டியன்  போல்  பிளாப் ஆகிவிடும் என்ற   பலரது  யூகங்களுக்கு  ஆப்பு  -விகடன் மார்க் =42 ,ரேட்டிங் = 3 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 42



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = ஓக்கே



 ரேட்டிங்  =  3 / 5






டிஸ்கி - வசனம் அப்டேட்டில்  முதல் 19 ம் கருத்து கந்தன்  டி எல்லில் இருந்தது.நன்றி

Thursday, November 13, 2014

'லிங்கா' படம் 'முல்லைவனம் 999' படத்தின் காப்பியா? ரஜினி அதிர்ச்சி


கதைத் திருடப்பட்டதாக 'லிங்கா' படத்துக்குத் தடை கோரும் மனுவுக்கு பதிலளிக்க நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மதுரை - சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்த ரவி ரத்தினம் என்பவர், 'லிங்கா' படத்துக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "பல ஆண்டுகளாக சின்னத்திரை இயக்குநராக இருக்கும் நான், முதன்முறையாக 'முல்லைவனம் 999' என்ற திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளேன். முல்லை பெரியாறு, முல்லை பெரியாறு அணை மற்றும் அந்த அணையைக் கட்டிய பென்னி குக்கின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டது இப்படம்.
எனது படத்துக்கு வேறு யாரும் உரிமை கொண்டாடாமல் இருக்க, இந்தப் படத்தின் கதையை யூடியூப்பில் 24.2.2013-ல் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்தேன். அதன்பின், படபூஜை நடைபெற்றது. கடந்த 10 மாதங்களாக மதுரை, கேரளம், தேனி பகுதிகளில் படத்தின் ட்ரெய்லருக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. 



இந்த நிலையில், எனது கதையை 'லிங்கா' என்ற பெயரில் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பதாகவும், கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவதாகவும், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பதாகவும் அறிந்தேன். 'முல்லைவனம் 999' படத்தின் கதையை யூடியூப்பில் இருந்து திருடி 'லிங்கா'வை தயாரித்துள்ளனர். 


சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த எனது கதையைத் திருடியது சட்டப்படி குற்றமாகும். எனவே, ரஜினிகாந்த் மற்றும் லிங்கா படக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், லிங்கா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் ரவி ரத்தினம் கோரியுள்ளார். 


இந்த மனு இன்று (புதன்கிழமை) நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், லிங்கா படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தனது வாதங்களை முன்வைத்தார்.
இதையடுத்து, எதிர்மனுதாரர்களிடம் கருத்துகளை கேட்காமல் தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, டிஜிபி, தென் மண்டல ஐஜி, மதுரை மாநகர் காவல் ஆணையர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலர், மத்திய அரசு சினிமா பிரிவு முதன்மை தயாரிப்பாளர் மற்றும் லிங்கா படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதாசிரியர் பொன்குமார், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் இம்மாதம் 19-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். 



 thanx -the hindu