Showing posts with label மீனவன். Show all posts
Showing posts with label மீனவன். Show all posts

Wednesday, February 16, 2011

கலைஞருக்கு மீனவன் எழுதும் கடிதம் ( ட்வீட்ஸ்)

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/july/23.07.09/singhalaboat.jpg

1.மீனவன் உயிர் இங்கே ஊசலாடிட்டு இருக்கு...உங்க டி வி ல மானாட மயிலாட ஓடிட்டிருக்கா தலைவரே..


-----------------------------------------------

2.மீன் செத்தா கருவாடு, மீனவன் செத்தா தமிழ்நாடு #கலைஞரின் அடுத்த பட பாட்டுக்கான பல்லவி..?

---------------------------------------------

3.தமிழன் ஒண்ணு தண்ணில மிதக்கிறான் அல்லது பிணமா தண்ணீர்ல மிதக்கிறான் # தமிழ்நாடே சொர்க்கம்டா

----------------------------------

4.
காதலர் தினத்தை நாடே கொண்டாடுது..மீனவன் இறந்த தினத்தை நினைத்து நினைத்து தமிழ்நாடு திண்டாடுது..ஆண்டவா.. மறதியை கொடு

---------------------------------------------
5.சாண்டில்யன் கடல் புறா குடுத்து கலக்குனாரு...கலைஞர் கடல் சுறாக்களுக்கு இரை கொடுத்து கலங்க வைக்கறாரு-விடிவு காலம் எப்போ?
 
 --------------------------------------------
 http://1.bp.blogspot.com/_bnhUKdYMdI4/TUO3jaI5gWI/AAAAAAAAAIM/5i1H43ivJbY/s1600/meena.jpg
6.அரசியல்வாதிகள் சீட்டுக்கு நாய் மாதிரி அலையறான்கள்.மீனவர்கள் நாய் மாதிரி சுடப்படுகிறர்கள்.தமிழ்நாட்டின் தேசிய விலங்கு நாய்?

-----------------------------------------


7. தமிழ்நாட்டைத்தான் ஆண்டவனால காப்பாத்த முடியல.. தமிழக எல்லை கடந்த மீனவர்களையுமா?

------------------------------------------

8.இலங்கைத்தமிழன் செத்தான்.. இப்போ மீனவன் சாகறான். கலைஞர்  டி வி ல கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்படம் பார்த்துட்டு இருப்பாரோ..?

-------------------------------------

9. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு கவலை இல்லை.. ஆனா தமிழன் அநியாயமா மாண்டாலும் கவலை இல்லைன்னு கலைஞர் மாதிரி கமுக்கமா என்னால இருக்க முடியல.


---------------------------------------

10.மக்களுக்காக பாடுபடறேன் பாடுபடறேன்னு சொல்லீட்டு இப்படி மீனவனை பாடாப் படுத்தலாமா? கலைஞரே!

-------------------------------

Monday, January 31, 2011

மீனவ நண்பன்


தலைவா...!

உங்களை கடலில் தூக்கிப்போட்டால்

கட்டுமரமாக மிதப்பீர்களாமே...

ஆனால் நாங்கள் கடலில்

பட்டுப்போன மரமாக

வீசப்படுகிறோம்.

எங்கள் இனங்கள் பிணங்களாய்

மிதக்கின்றன..

நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும்

சுருட்டிக்கொள்ளுங்கள்...

அது அரசியல்வாதிகளின் அடிப்படை உரிமை..

ஆனால்

எங்கள் உரிமைகளுக்கு ஒரு கோடியாவது காண்பியுங்கள்..

கூட்டணிக்கட்சித்தலைவர்களுக்கு

இதயத்தில் இடம் கொடுத்தது போதும்..

எங்கள் உயிர் உடலில் தங்க

ஒரு இடம் கொடுங்கள்..

ஓட்டுக்காக இலவசங்களை அள்ளி

வீசுகிறீர்கள்...

எங்கள் உயிர் எங்கள் வசம் தங்க

ஒரு ஏற்பாடு செய்யுங்கள்..

எம் ஜி ஆர் படத்தில் நடித்தே மீனவ நண்பன் ஆனார்...

நீங்கள் அரசியல் மேடையில் நடித்து

மீனவ எதிரி ஆகி விடாதீர்..

கடைசியாக ஒரு வார்த்தை...

இலங்கைத்தமிழர்களைத்தான் காக்க முடியவில்லை..

இங்கே இருக்கிற தமிழர்களையாவது.........