Showing posts with label மாணவர்கள். Show all posts
Showing posts with label மாணவர்கள். Show all posts

Sunday, March 31, 2013

கலைஞரைப்போல் ஜெ வும் ஈழ விஷயத்தில் நாடகமாடுகிறாரா?

ஜெயலலிதாவின் நாடகம் ஆரம்பம்!
கொதிக்கும் மாணவர்கள்
மக்களுக்கான மாணவர்களின் போராட்டத்தைத் தேர்வும் விடுமுறையும் மட்டுப்படுத்திவிடும் என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள். அது தவறு என்று உறுதிப்படுத்துகிறது மாணவர்களின் எழுச்சி. 


சென்னை மெரினா தபால் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் பங்குகொண்டு இருந்த மாணவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திவ்யா, ''எக்ஸாம், இன்டர்னல் மார்க், எதிர்காலம் என எங்களை மறைமுகமாக மிரட்டி, போராட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடலாம் என, சில அரசியல் கட்சிகள் நினைக்கின்றன. அவர்கள் கனவு ஒருபோதும் பலிக்காது. நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம்.


 எங்கள் போராட்டம் தொடரும். இது, முழுக்க முழுக்கத் தமிழக மாணவர்களின் உணர்ச்சிப் போராட்டம். 'இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். ராஜபக்ஷேவை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தண்டனை பெற்றுத் தர வேண்டும். வரும் ஜூன் மாதம் ஐ.நா-வில் நடக்கும் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியாவே தீர்மானம் கொண்டுவந்து அங்கு நடந்தது இனப்படுகொலை என அறிவிக்க வேண்டும். இலங்கையில் தனி ஈழம் அமைக்க, பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ - இதுதான் எங்கள் கோரிக்கை.


அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவது ஓட்டு வங்கியை நிரப்புவதற்காக. இவர்கள் நாடகங்களாலும் வார்த்தை ஜாலங்களாலும் ஒரு தலைமுறையே அழிந்துவிட்டது.  தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார் ஜெயலலிதா. தேர்தல் நேரத்தில் கூடங்குளத்துக்குச் சென்று, 'எங்களுக்கு வாக்களித்தால் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் நான் உங்களில் ஒருத்தியாக இருப்பேன்’ என்றார்.


 தேர்தலில் வென்றதும் அந்த மக்களின் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தினார். இது, பச்சைத்துரோகம் இல்லையா? இதே துரோகத்தைத்தான் இலங்கைத் தமிழர் பிரச்னையிலும் செய்கிறார். கருணாநிதியின் கபட நாடகம் முடிந்து இப்போது ஜெயலலிதாவின் நாடகம் ஆரம்பமாகிவிட்டது. இதற்கு முன்னர்தான் இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும் என இதே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். அந்தத் தீர்மானம் என்ன ஆனது?


இலங்கையில் வாழும் நம் மக்கள் மீது ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், 'சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்காவிட்டால், தமிழகத்தில் இருந்து எந்த வரியும் செலுத்த மாட்டோம். மத்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவோம்’ என, மத்திய அரசுக்கு கெடு விதிக்கட்டும்.


 இரண்டு கேரள மீனவர்களைக் கொன்றதற்காகக் கொதிக்கும் பிரதமர் மன்மோகன், தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கையை நட்பு நாடு என்கிறார். தமிழ் மக்களைக் கோமாளிகள் என அரசியல் சக்திகள் நினைக்கின்றன. இலங்கையில் இனப்படுகொலை செய்யப்​பட்டதற்கும் தமிழ்ப் பெண்களின் கற்பு சூறை​யாடப்​பட்டதற்​கும்காரணம், தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிசெய்த கட்சிகளின் துரோகம்தான். தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் செய்தது பச்சை இனத் துரோகம்.


எங்கள் போராட்டம் தொடரும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இனி, போராட்டத்தின் வடிவை மாற்றிக்கொள்வோம். ரயில் நிலையம், பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் துண்டுப் பிரசுரம் கொடுப்போம். சென்னையில் இருந்து கன்னியாகுமரியில் இருக்கும் கடைக்கோடி தமிழன் வரை சென்று ஈழத் தமிழரின் அவலத்தைச் சொல்வோம். '' என்றார் உறுதியான குரலில்.


முதன் முதலில் போராட்டத்தைத் தொடங்கிய சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள், மேலும் எழுச்சியோடு தொடர்ந்து போராடிவருகிறார்கள். அண்ணா நகர் ரவுண்டானாவை முற்றுகையிட்ட அனைத்துக் கல்லூரி மாணவிகளுடன் சேர்ந்து குரல்கொடுக்க ஆரம்பித்த லயோலா மாணவர்களைக் கைதுசெய்து செனாய் நகரில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்துவைத்தது காவல் துறை. மாலையில் விடுதலையாகி வெளியே வந்த செம்பியன், ''மாணவர்கள் தொடங்கிய இந்தப் போ​ராட்டம், இப்போது மக்கள் போராட்டமாக மாறிவருகிறது. எங்கள் போராட்டம் எப்போதும் அற வழியைப் பின்பற்றும். இலங்கையில் விடியல் பிறக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்'' என்றார்.



தொடர்ந்து பேசிய ஜோ.பிரிட்டோ, ''எங்​களுக்குக் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றோ, எங்கள் சொந்த நலனுக்காக​வோ போராடவில்லை. நம் இன மக்களுக்காகப் போராடுகிறோம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி, மாணவர்களின் போராட்டத்தில் வன்முறையைக் கலக்க நினைக்கிறது. திருச்சியில் அத்தனை மீடியாவுக்கும் முன்னால் அரிவாள், கம்பு கட்டை​களுடன் வந்த காங்கிரஸ்காரர்கள் மாணவர்களைக் காட்டுமிராண்டித்தனமாக அடித்தனர். கைகட்டி வேடிக்கை பார்த்தது காவல் துறை. அற வழியில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது வன்​முறையை அவிழ்த்துவிடுவது நியாயமா?'' என்றார் ஆவேசமாக.



மாணவர்களின் தன்னலமற்றப் போராட்​டத்துக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்.


- நா.சிபிச்சக்கரவர்த்தி 

படங்கள்: வி.விஷ்ணு

 readers view"

1. இவர்கள் சொல்வதெல்லாம் உண்மை. ஆனால் மத்திய அரசில் ஆட்சியில் இல்லாத கட்சி, மற்றும் இந்த பிரச்சனையில் எப்போதும் ஒரே கொள்கை உள்ள கட்சிகள், அமைப்புகள் இவற்றின் ஆதரவு தேவை. அவர்கள் ஆதரவின்றி மத்திய அரசுக்கு "அழுத்தம்" தர இயலாது. மொத்த போராட்டமும் இந்த விஷயத்தில் செயலாற்றக் கூடிய மத்திய அரசை நோக்கி மட்டுமே இருக்க வேண்டுமே தவிர அனைத்து தரப்பினரையும் எதிர்த்து தனிமையில் போராடும் நிலை ஏற்பட கூடாது. மாணவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம். 



2.  தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் செய்தது பச்சை இனத் துரோகம்."

இது 100% உண்மை. மாணவர்கள் ரொம்ப தெளிவாகத்தான் இருக்கிறார்கள். இவர்கள் போராட்டத்தால்தான் மத்திய அரசில் இருந்து தி.மு.க வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது. அதேபோல மம்மியையும் சட்ட மன்றத்தில் தீர்மானம் போட வேண்டிய காட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். தாத்தா செய்த துரோகம் வெளிப்படையாக தெரிந்தது. இனிமேல் மம்மி போடும் வேஷமும் ஒன்னு ஒண்ணா தெரியவரும். 



3.  ஜெயலலிதாவின் நாடகம் ஆரம்பமாகிவிட்டது..... நடுநிலை என்று காமிக்கரதுக்க்காக மாணவர்கள் ஜே. பேரையும் இதுல சேர்க்க வேண்டியதா போச்சு. தனி ஈழம் வேண்டும் என்பதை 2009 தேர்தல் அறிக்கைல ஜே. வாக்குருதி குடுத்திருக்காங்க - இது வரைக்கும் எந்த தலைவரும் குடுக்காத வாக்குறுதி. ஆனால் மக்கள் 2009ல துரோக கும்பலுக்கில்ல ஓட்டு போட்டு டெல்லிக்கு அமைச்சு வைச்சாங்க 



4. அனைத்து கல்லூரி மாணவர்களும் ஒரு அமைப்பின் கீழ் வர வேண்டும், அபோதுதான் இந்த போராட்டம் வெற்றி பெரும்....இல்லை என்றால் சிங்கம் 5 மாடு கதைதான் !!1

Saturday, March 30, 2013

மாணவர்கள் இனி என்ன செய்யனும்? - தமிழருவி மணியன் -ன் வழிகாட்டல் கட்டுரை @ ஜூ வி

இன்னொரு போர்க்களம் காத்திருக்கிறது...
மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை நான் தடுக்க வேண்டும் என்று சிலர் வற்புறுத்துகின்றனர். அவர்களுக்கு ஏமாற்றத்தை வழங்குவதற்காக வருந்துகிறேன். உலகம் முழுவதும் மாணவர்கள் போராடுகின்றனர். சீனாவிலும், எகிப்திலும் உருவான தேசிய இயக்கங்களுக்கு மாணவர்கள் தங்கள் பங்களிப்பைத் தந்துள்ளனர். இந்திய மாணவர்களிடம் அந்த உணர்வையே நான் எதிர்பார்க்கிறேன். பள்ளிகளிலிருந்தும் கல்லூரிகளிலிருந்தும் வெளியேறி, அவர்கள் சிறை புகும் துணிவுடன் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்க முன்வர வேண்டும்’ என்றார் மகாத்மா காந்தி. அந்தக் குரலே இப்போதும் எதிரொலிக்கிறது. 


தமிழக மாணவர்களின் போராட்ட வரலாற்றில் முக்கியமான மூன்று திருப்புமுனைகள் உண்டு. அவர்கள் முதலில், இந்தித் திணிப்புக்கு எதிராக 1965 ஜனவரியில் களமிறங்கினர். அவர்​களது சாதனை மகத்​தானது. தமிழக மாணவர்​களின் போராட்​டத்தால்​தான் இந்தி பேசாத மாநில மக்களின் மீது இந்தித் திணிப்பு நிகழ்வது நிறுத்தப்பட்டது; இந்தியோடு ஆங்கிலமும் ஆட்சி மொழியாகத் தொடர்கிறது.


இந்தியை இந்தியாவின் ஒரே தேசிய மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் அரசமைப்புச் சட்டத்தில் அரங்கேற்ற நடந்த முயற்சிகள் அளப்பரியவை. 'சகிப்புத்தன்மையற்ற இந்தப் போக்கு வலிமைமிக்க மத்திய அரசின் கீழ் இந்தி பேசாத மக்களை அடிமைகளாக்கிவிடுமோ என்று அஞ்சுகிறேன். இந்தி மொழி பேசும் நண்பர்களே... உங்களுக்கு முழு இந்தியா வேண்டுமா? அல்லது, இந்தி பேசும் இந்தியா போதுமா என்று முடிவெடுங்கள்’ என்றார் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. சமீபத்தில் மாநிலங்களவையில் அறிவார்ந்த திருச்சி சிவா, மன்மோகன் சிங் அரசைப் பார்த்து, 'உங்களுக்கு இலங்கை வேண்டுமா? தமிழ்நாடு வேண்டுமா?’ என்று கேட்டதற்கு முன்மாதிரியாக அன்று அமைந்தது டி.டி.கே.வின் முழக்கம்.


இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் மாணவர்​கள் தீவிரமாகக் களமாடியபோது லால்பகதூர் சாஸ்திரியின் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சி.சுப்பிரமணியமும், ஓ.வி.அளகேசனும் ராஜினாமா செய்தனர். அவர்களுடைய ராஜினாமாவை ஏற்கும்படி அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர். இராதாகிருஷ்ணனிடம் சாஸ்திரி பரிந்துரைத்தபோது, 'இந்தியாவின் ஓர் அங்கமாகத் தமிழ்நாடு இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?’ என்று நேர்படக் கேட்டார் அந்த மாபெரும் தத்துவ மேதை. அதற்குப் பின்புதான் சாஸ்திரி, 'இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சிமொழியாக நீடிக்கும் என்ற நேருவின் உறுதிமொழி காலவரையறையின்றிக் காக்கப்படும்’ என்று அறிவித்தார்.


பெரியார், திரு.வி.க., மறைமலை அடிகள், அண்ணா, நாவலர் சோம​சுந்தர பாரதியார் போன்றவர்கள் போராடியும், மூவாலூர் ராமாமிர்தம், டாக்டர் தர்மாம்பாள் உட்பட 73 பெண்கள் 32 கைக்குழந்தைகளுடன் சிறை சென்றும், நடராசன் - தாளமுத்து இருவரும் சிறையில் உயிர்​நீத்தும், 1937 முதல் 1965 வரை திராவிட இயக்கங்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் முற்றாக விலக்கப்படாத இந்தித் திணிப்பு, மதுரையில் கொழுந்துவிட்டு மாநிலம் முழுவதும் மாணவர்களால் பெருந்தீயாய் வளர்த்தெடுக்கப்பட்ட பிறகுதான் முடிவுக்கு வந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வெற்றி, மாணவர்களின் மகத்தான சரித்திரச் சாதனை.


மாணவர்கள் தங்கள் இனவுணர்வை 1983-ல் தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் வெளிப்படுத்திய விதம் இன்றளவும் மறக்க முடியாத ஒன்று. இலங்கையில் 13 சிங்கள ராணுவத்தினர் விடுதலைப்புலிகளால் வீழ்த்தப்பட்டதற்கு எதிர்வினையாற்றப் புறப்பட்ட சிங்களர்கள், அரசின் ஆதரவோடு நடத்திய ஊழிக் கூத்தில் 3,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 50 ஆயிரம் தமிழ்க் குடும்பங்கள் கொழும்புவில் அனைத்தும் இழந்து, அகதி முகாம்களில் அடைபட்டனர். இலங்கைத் தமிழர் வாழ்வில் என்றும் மறக்க முடியாத 'கறுப்பு ஜூலை’ மாதத்தில் மாணவர்கள் தன்னெழுச்சியாய் தமிழகத்தில் அணி திரண்டனர்; மக்கள் அவர்​களுடைய போராட்டத்தை ஆசீர்வதித்தனர். 'பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு’ என்ற பாவேந்தரின் இலக்கிய வரிக்கு மாணவர்கள் அன்று இலக்கணமாயினர்.


இப்போது.....

வீரத்தின் விளைநிலம் பிரபாகரனின் 12 வயது பிள்ளை பாலச்சந்திரன் மரணத்தைத் தழுவும் நிலையில் எடுக்கப்பட்ட மூன்று படங்கள் ஒட்டுமொத்த மக்களின் ஆன்​மாவையும் அதிரச்செய்தது. வியட்நாம் போரில் ஒரு சின்னஞ் சிறுமி ஆடையின்றி அழுத விழிகளுடன் ஓடும் கோலத்தை வெளிப்படுத்திய ஒரேயரு நிழற்படம் அமெரிக்காவுக்கு எதிராக உலக மக்களை அணிதிரளச் செய்தது போன்று, குழந்தைமை கலையாத பாலச்சந்திரனின் அழகு முகத்தில் கனத்துக்கிடந்த ஆதரவின்மையும், வேதனை விழுங்கிய வெறித்த பார்வையும், ஐந்து குண்டுகளை மார்பில் தாங்கி மண்ணில் சரிந்துகிடந்த கோலம் தீட்டிய சோகச் சித்திரமும் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிக்கிடந்த தமிழகத்தின் மனச்சான்றை உலுக்கிவிட்டது. மாணவர்கள் மூன்றாவது முறை இனநலன் காக்க அணி திரளத் தொடங்கினர். லயோலா கல்லூரி மாணவர்கள் முன்வந்து ஏற்றிவைத்த இனவிளக்கு இன்று வரை அணையாமல் இருள் கிழித்து ஒளிச்சுடரைப் பரப்பி வருகிறது.



மாணவர்கள் இதுவரை நடத்திய போராட்​டங்களின் பின்புலமாக அரசியல் கட்சிகள் இருந்துவந்தன. அரசியல் தலைவர்களின் பதவி ஆசைக்கும், பழிவாங்கும் போக்குக்கும் மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் பயன்பட்டன. ராஜாஜி 1937-ல் கொண்டுவந்த இந்தியை எதிர்த்துப் பல்வேறு வடிவங்களில் படை நடத்திய பெரியார், 1965-ல் மாண​வர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போரை ஆதரிக்கவில்லை. பள்ளிகளில் இந்தியைப் புகுத்து​வதில் தீவிரம் காட்டிய ராஜாஜி பின்னாளில், 'இந்தியை ஆட்சி மொழியாக அறிவிக்கும் அரச​மைப்புச் சட்டத்தின் 17-வது பகுதியை அரபிக் கடலில் வீசியெறியுங்கள்’ என்று அறைகூவல் விடுத்தார்.


தி.மு.கழகத்தை 1967-க்கு முன்பு பெரியாருக்குப் பிடிக்கவில்லை. அதனால், தி.மு.க-வின் பின்புலத்தில் இயங்கிய மாணவர் போராட்டத்தைப் பெரியார் எதிர்த்தார். ராஜாஜிக்கு நேருவையும், காமராஜரையும், காங்கிரஸையும் பிடிக்கவில்லை. அதற்காக, இந்தியை எதிர்த்த மாணவர் போராட்டத்தை ராஜாஜி ஆதரித்தார். மாணவர் போராட்டத்தைப் பயன்படுத்தி அண்ணா ஆட்சியைக் கைப்பற்றினார். ராஜாஜி, காங்கிரஸ் மீது பழிதீர்த்துக்கொண்டார். இந்தச் சூழல் இப்போது இல்லை. இன்று, மாணவர்​கள் எந்த அரசியல் கட்சியின் வலையிலும் விழவில்லை. இந்தி எதிர்ப்புப் போரில் பெரிதாக உருவெடுத்த வன்முறையின் நிழல் கூடத் தங்கள் மீது படிய அவர்கள் இப்போது அனுமதிக்கவில்லை. அவர்கள் முன்னெடுத்திருப்பது அப்பழுக்கற்ற காந்தியப் போராட்டம்.


மாணவர்களின் மூன்றாம் கட்ட இந்தப் போராட்​டம் மத்திய, மாநில அளவில் மிகப் பெரிய மாற்றங்களைச் சாதித்திருக்கிறது.

1. அமெரிக்கத் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியது. 

2. சுவரில் ஒட்டிய பல்லியைப் போல் கடந்த ஒன்பது ஆண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பசை போட்டு அமர்ந்திருந்த தி.மு.கழகம், இனி காங்கிர​ஸோடு கைகோத்து நின்றால் காலநடையில் காலாவதியாகி விடுவோம் என்ற கலக்கத்தில் பதவி மேனகையின் கவர்ச்சியிலிருந்து விடுபட மன​மில்லாமல் விடுபட்டு, நவீன விசுவாமித்திரனாய் நடுத் தெருவில் நாடகம் போட வந்து நின்றது. 


3. இனப்பற்றோ, மொழியுணர்வோ, சமூகப் பிரக்ஞையோ சிறிதுமின்றிப் பதவிப் பல்லக்கில் அமர்ந்து பவனி வருவதற்காகவே அரசியல் நடத்தும் காங்கிரஸ்காரர்கள் ஆதரிப்பாரின்றி அனாதைகளாக மாறிப்போயினர்.

 4. ஈழத் தமிழர் நலனுக்காக அதிகமாகக் குரல் கொடுப்பது யார் என்ற போட்டியில் இரண்டு கழகங்களையும் இறங்கச் செய்தது.

 5. ஐ.பி.எல் போட்டியில் இலங்கை வீரர்கள் சென்னையில் இடம்பெறாமல் செய்தது. 

6. தமிழீழம் காண ஐ.நா.சபை மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தவும், இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்கவும், இலங்கையை நட்பு நாடென்று கூறாதிருக்கவும் இந்திய அரசை நிர்ப்பந்தித்து நம் சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்றியது. 


7.காமன் வெல்த் நாடுகளின் கூட்டம் இலங்கையில் நடக்கலாகாது என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதும் அளவுக்கு இலங்கை எதிர்ப்பலையை மாநிலம் முழுவதும் சூறாவளியாய் வீசச் செய்தது. இதுபோன்ற சரித்திரச் சாதனைகளை எந்த அரசியல் கட்சியும், எந்த இனவுணர்வாளரும் இன்று வரை சாதிக்கவில்லை.

எல்லாம் சரி. இனி மாணவர்கள் என்ன செய்யப்​போகிறார்கள்? நீர்த்துப் போன அமெரிக்கத் தீர்மானம் ஜெனிவாவில் அரங்கேறிவிட்டது. போர்க் குற்றங்கள், இனப்படுகொலை என்ற பதப் பிரயோகங்கள்கூட இடம்பெறாத அந்தத் தீர்மானத்தால், ஈழத் தமிழருக்கு எந்த நலனும் வாய்க்காது. மாணவர்கள் மிகுந்த புரிந்துணர்வுடன் அமெரிக்கத் தீர்மானத்தை ஆரம்பத்திலேயே புறக்கணித்துவிட்டனர்.


இலக்கு மிகச்சரியானது. ஆனால், அதை அடைவதற்கான பயணம் நீண்டது. 'ரோம் ஒரு நாளில் கட்டப்பட்டது அல்ல’ என்பதுபோல், ஈழம் ஒரே நாளில் சாத்தியமாவது அல்ல. இன்று வளர்த்தெடுக்கப்பட்ட இனவுணர்வு நெருப்பு, சாம்பல் பூத்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்​டும். மனித உரிமைகள் அமைப்பின் கூட்டம் அடுத்த நான்கு மாதங்களுக்குப் பிறகே நடக்கும். காமன்வெல்த் கூட்டம் இலங்கையில் நடக்க இடையில் ஏழு மாதங்களுக்கு மேல் இருக்கின்றன. மாணவர்கள் இந்த இடைவெளியைத் தங்கள் நலனுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


 தேர்வுகள் முடியட்டும். அதன் பிறகு, இந்திய அரசே ஈழத் தமிழர் உரிமை காக்க மனித உரிமை மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரவும், காமன்​வெல்த் மாநாடு இலங்கையில் நடக்காமல் தடுக்க இந்திய அரசு செயற்படவும் அறப் போராட்டம் மூலம் மாணவர்கள் மீண்டும் களமாடலாம். பாசறைக்குப் படை திரும்புவது, களைப்பு நீங்கி முன்னிலும் முனைப்பாகப் போராடுவதற்குத்தான். தொடர்ந்து போரில் ஈடுபட்ட அலெக்சாண்டரையும், நெப்போலியனையும் சோர்வு தழுவிக்கொண்டதை மாணவர்கள் சிந்திக்க வேண்டும். வெற்றி வேண்டுமெனில், வியூகங்கள் முக்கியம்.


இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குப் பின், மாணவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து கை மீறியது. இன்றும் அந்த விபத்து நேர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. போராட்டத்தின் திசை மாறினால், வன்முறை​யாளர்களின் வலையில் விழ நேரிடும். தமிழீழம் கோரிக்கையோடு 'தனித் தமிழ்நாடு’ என்ற கோஷம் கலந்துவிட மாணவர்கள் எந்த நிலையிலும் அனுமதிக்கக் கூடாது. இந்தியத் தமிழராய் இருப்பதுதான் எல்லா வகையிலும் உயர்ந்தது. இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கூட்டணி, தமிழர் நலனுக்கு எதிராகச் செயற்படுவது மறுக்க முடியாத உண்மை. தேர்தல் களத்தில் அதற்குப் பாடம் புகட்ட நம்மிடம் ஜனநாயகம் தந்திருக்​கும் 'வாக்கு’ என்னும் வலிமையான ஆயுதம் இருக்கிறது. அதை 40 இடங்களிலும் நாம் பயன்​படுத்துவோம். இனவுணர்வோடு செயலாற்ற உறுதி ஏற்போரை மட்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைப்போம்.


தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி மற்றும் சுயநிர்ணயம் ஆகியவற்றை அடைவதற்கும், அதற்கான போராட்டத்தைப் பாதுகாப்பதற்கும், முன்னகர்த்துவதற்கும் உரிய உயர்மட்ட ராஜதந்திரத்தைப் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் வகுத்தெடுப்பார்கள். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசுத் துறையினர், கொள்கை நெறியாளர்கள், சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து ஈழம் நோக்கி அறவழியில் பயணிப்பதற்கான பணிகளில் அவர்கள் தொடர்ந்து ஈடுபடுவார்கள். அவர்களுக்கான ஆதரவை இந்திய அரசு வழங்கு​வதற்கான வழிமுறைகளைக் கண்டெடுத்துப் போராடுவதோடு மாணவர்கள் இப்போது நிறை​வடைய வேண்டும்.


இப்போது மாணவர்கள் தன்னெழுச்சியாகத் தெருக்களில் கூடிக் குரல் கொடுப்பது, அவர்​களுடைய அரசியல் விழிப்பு உணர்வை அடையாளப்படுத்துகிறது. சமூகத்தின் சகல தளங்களிலும் ஊடுருவி நிற்கும் ஊழல் பேர்வழிகளுக்கும், மதுக் கடைகளுக்கும் எதிராக இவர்கள் கிளர்ந்தெழ இன்னொரு போர்க்களம் காத்திருக்கிறது. ஈழத்துக்குப் பிறகு, மாணவர்கள் பார்வை இந்தப் பக்கம் திரும்பும்போது பொன்விடியலைத் தமிழகம் சந்திக்கும். இனி மக்களின் மரியாதைக்குரியவர்கள், அரசியல் தலைவர்கள் இல்லை; மாணவர்களே!


நன்றி - ஜூ வி 

Monday, March 11, 2013

புரட்சித்தீ பற்றி எரிகிறது ! ஸ்தம்பித்தது தமிழகம்

இலங்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வெடித்தது! ( படங்கள் ) 
சென்னை: இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் நடந்து வருகிறது.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க கோரியும், உண்ணாவிரதம் இருந்து வந்த சென்னை லயோலா கல்லூரி மாணவர்களின் கைதை கண்டித்தும் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடி அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் 2200 பேர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.




மேலும், இலங்கை உடனான உறவுகளை இந்தியா முறித்து கொள்ள வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.

இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிசுவாமி உருவ பொம்மையை எரி்த்து மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டினர்.

திருச்சி புனித வளனார் கல்லூரி மாணவர்கள் 70 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி எல்.என்.ஜி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 1500 பேர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், லயோலா மாணவர்களை விடுதலை செய்யக் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிவபட்டன், சாயல்ராமன் ஆகியோர் களத்தில் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பொறியியல் கல்லூரி மாணவர்கள் ராஜபக்சேவை கண்டித்து முழக்கப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, லயோலா கல்லூரி மாணவர்கள் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் லயோலா கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வரும் மாணவர் காரல்மார்க்ஸ் மாணவர்களை இன்று சந்தித்து ஆதரவு கேட்டார்.

பின்னர், 100 மாணவர்களை திரட்டி அங்குள்ள அம்பேத்கர் சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார். இதற்கு காவல்துறை அனுமதியளிக்காததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, கண்ணதாசன் மணிமண்டபம் அருகில் உண்ணாவிரதம் இருக்க காவல்துறை அனுமதி அளி்த்தது. இதையடுத்து காரல்மார்க்ஸ் தலைமையில் 4 மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
லயோலா கல்லூரி மாணவர்களை விடுதலை செய்யக் கோரி தூத்துக்குடி காமராஜர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

சென்னை அடையாறில் சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மதுரையி்ல் பாரத ஸ்டேட் வங்கியில் புகுந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் வங்கிக் கதவை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி ஊழியர்கள் பணிகள் செய்ய முடியாமல் தவித்தனர்.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினம் காதர்மொய்தீன் கல்லூரி மாணவர்கள்  3 ஆயிரம் பேர் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 11 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

மக்கள் கருத்து 



1. ஒரு செயலை செய்ய ஆரம்பித்தால் நாலு பேர் நான்கு விதமாக பேசத்தான் செய்வார்கள்!!! துவங்கிவிட்டோம் நல்ல செயல் என்று அதன் முடிவை அறுவடை செய்யும் வரை போராடுவோம்!!! வெற்றி கிடைக்கவில்லையெனினும் பரவாயில்லை!!! முயற்சி செய்த திருப்தியாவது இருக்கும்!!!



2, இது கட்டாயம் தேவையானது. இந்தியாவினால் அழிக்கபட்ட ஈழத்தமிழர் போராட்டமும் அதனான் அடிமையாக்கப்பட்ட ஈழத்தமிழலர் விடுதலை தமிழ் நாட்டு மாணவர்களால் பெற கடவுள் ஆசிர்வதிபாராக.
ஈழத்தமிழன் போராட முடியாது. அங்கே அது அடக்கப்பட்டுவிட்டது. மற்றைய நாடுகளில் எல்லாம் தமிழன் சிறுபாமண்மை. அந்த நாடுகள் தமிழனுக்கு மதிப்பு கொடுப்பதினால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் போராட முடிகிறது. தாய்த்தமிழன் தான்மற்றத்தமிழனை காப்பாற்ற வேண்டும். 




3. மதுரையி்ல் பாரத ஸ்டேட் வங்கியில் புகுந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் வங்கிக் கதவை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி ஊழியர்கள் பணிகள் செய்ய முடியாமல் தவித்தனர்.--- இதெல்லாம் தவறு. உங்கள் வாழ்க்கையை பாதிக்கும். எவனாவது தவறான உசுப்பேத்தலின் பெயரில் விட்டில் பூச்சியாகாமல் ஜாக்கிரதையாக போராடவேண்டும். 



4. இப்போராட்டம் தமிழர்களை ஒன்றுபடுத்தும் போராட்டம்; இதை யாரும் கொச்சை படுத்த வேண்டாம். அனைத்து பிரச்சனைகளிலும் தமிழ்நாட்டின்,தமிழர்களின் நலனுக்கு எதிராக அரசியல் செய்யும் பித்தலாட்ட அரசியல்வாதிகளுக்கு எதிரான போராட்டம்; மத்திய அரசாங்கத்தை உலூக்கும் போராட்டம்; தேவை அமைதியான அதே சமயம் அழுத்தமான , விட்டுக்குடுக்காத போராட்டமாக இருக்கவேண்டும். லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் அடக்கப்பட்டதன் விளைவே இன்று தமிழகம் முழுவதும் போராட்டம். இந்த தருணத்தில் வைகோ போன்ற தலைவர்கள் மக்கள் சக்தியை ஓன்று திரட்டி மொத தமிழகமும் இதில் பங்குபெற செய்யவேண்டும். இப்பொழுது ஒற்றுமை இல்லாவிட்டால் இனிமேல் தமிழ்நாட்டின் எந்த பிரச்சனைக்கும் ஒற்றுமையாக போராடமுடியாது. மக்களே நியமாக போராடும் மாணவர்கள் பின்னால் அணி திரளுங்கள் . 




5.  மனித உரிமை விதிகள் எல்லா கல்லுரிகளுக்கும் அளிக்கப்பட்டிருக்கின்றன.பின் பற்றுமாறு பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.

குழு நிலையில் மனித உரிமைகளாக மக்கள் கருதுவதை அரசுக்கு எடுத்து செல்லலாம்.அதற்குரிய பதில், அரசு விதிகளாக சுட்டப்படும் நிலையில் நாட்டு நடப்பு, அரசுக்கொள்கைகள் பின் பற்றும் சூழல் வரும்.
நாட்டு நடப்பு நிர்வாகம் செய்யும் முதல்வர் மக்களுக்கு போராட்டம் அரசு கொள்கைகளுக்குட்பட்டதல்ல என்பதை வலியுறுத்த வேண்டும்.உண்ணாவிரதம் இருந்தாலும் கோரிக்கையை பெற்று தக்க அரசு விதிகளின் பால் பதில் சொல்லிவிட்டால் , தக்க நடவடிக்கை எடுக்க அரசு யந்திரத்தை அணுகி விட்டால் போராட்டத்தின் நோக்கம் முற்று பெறுகிறந்தென்ற வகையில் அரசுக்கு அதற்கு மேல் பொறுப்பு இல்லை.

காவல்பணி சட்ட ஒழுங்கு துறை தர வேண்டியதில்லை.மொழி, மதம், இனம், சாதி இவற்றினடிப்படையில் எடுக்கப்படும் தீர்வு தனி மனித நம்பிக்கை.பொது நடப்பாகாது.என்பதை முதல்வர் மக்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டவர்.சார்பின்மை அரசுக்கொள்கை.சுயனிர்ணயத்தன்மை, நல்லிணக்கம், ஒற்றுமை இவை அரசுக் கொள்கை என அறிவுறுத்த முதல்வர் கடமைப்பட்டவர்.

அரசு விதிகளின் படி நெறிப்படுத்தப்பட்ட கோரிக்கையை அரச்சு செயலகத்துக்கு தந்து தக்க நடவடிக்கை எடுக்க கோரும் கடமை பெற்றவர்.


சர்வதேச நீதி மன்றத்தில் தன் நிலைப்பாட்டை ஆதரிக்க சொல்லி யாரும் வற்புறுத்த முடியாது.ஆதரவு அல்லது எதிர்ப்பு சர்வதேச அமைப்புகளை பொறுத்தவரை வெறும் வாக்குகளல்ல.அன்னிலைப்பாடு ஏன் என்ற தெளிவு, விளக்கம், தீர்வை முன்னடத்தும் சான்றுகள்.

இது போன்ற நிகழ்வுகள் தரும் அழுத்தம் சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு சிந்திக்க , செயல்பட விடாத அவசர சூழலை தரும்.போராட்டத்தை ஆதரிக்கும் அரசியல் தலைவர்கள் தங்கள் தெளிவான நிலைப்பாட்டை தெரிவித்து கட்சி தொண்டர்களின் ஒப்பம் பெற்று அறிக்கையாக முதல்வரிடம் சமர்ப்பிப்பது அரசு நடை முறை என அறிவுறுத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு பண்டிகை, விழாக்களின் போது தரும் வாழ்த்து செய்திகள் ஏன் நடைமுறையாகவில்லை நஎன்பதை அரசியல் சதலைவர்கள் சிந்திக்க வேண்டும்.சுயனிர்ணயத்தன்மை, சிந்திக்க அனுமதிக்கும் தளம்.கருத்து சுதந்திரம், நெற்ப்படுத்தி அரசுக்கொள்கைகளை ஏற்றுக்கொல்ள தரும் வாய்ப்பு.முதல்வர் பயனாக்குவாரா?.

கட்சி நிலைப்பாடும், தேர்தலும் , முதல்வரையும், மக்கள் பிரதினிதிகளையும் அரசுக்கொள்கைகள் நிறுவ தயங்கும் சூழல் ஏற்படுத்துமெனில், கட்சிகள் மக்கள் நல இயக்கங்களாக அரசால் மாற்றம் கொள்ள செய்வது அவசியம்




லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதம் வாபஸ்! 
சென்னை: இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர், இன்று தங்களது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, முதலில் கல்லூரி அருகேயும், பின்னர் கோயம்பேடு அருகிலும்  உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர், நேற்று இரவு கைது செய்யப்பட்டு, ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை அவர்களை காவல்துறை விடுவித்தது.


இந்நிலையில் அவர்கள் இன்று மாலை  தங்களது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர். லயோலா கல்லூரி முதல்வர் ஜெயராஜ், அவர்களுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.


தங்களது போராட்டம் தமிழகம் முழுவதும் மாணவர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து உண்ணாவிரத்தை கைவிடுவதாக மாணவர்கள் அறிவித்தனர்.

இதனிடையே இதே கோரிக்கையை வலியுறுத்தியும், லயோலா மாணவர்களுக்கு ஆதரவாகவும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி - விகடன் 


 எனது ட்வீட்ஸ்


1. இரட்டை இலைக்கு இரட்டைத்தலைவலி 1 கூடங்குளம் போராட்டம் 2 நாடு தழுவிய மாணவர்கள் பிரம்மாண்டப்போராட்டம்



2. ஒவ்வொரு புரட்சி ந்டக்கும்போதும் எகத்தாளங்களைத்தாண்டியே வந்திருக்கிறது.



3. நாளை - முதல் முறையாக ஒரு அரசியல் கட்சியின் போராட்டம் பின்னுக்குத்தள்ளப்பட்டு மாண்வர் போராட்டம் முன்னிலைப்படுத்தப்படும் நாள்


4. வெற்றி பெறுவதில் மட்டும் வீரம் இல்லை.போராட்டமே ஒரு வெற்றியே!



5. புரட்சித்தீ பற்ற வைக்கப்பட்டு விட்டது.சிலர் தீக்குச்சி தீர்ந்து விட்டது என எள்ளி நகையாடுகின்றனர்.காட்டுத்தீ பரவி விட்டதை அறியாமல்


6. முன்னே பாய்வதற்கு முன் சில அடிகள் பின்னோக்கி போக வேண்டி இருக்கும்.அது பின்னடைவு அல்ல


7. 

Saturday, March 09, 2013

இருப்பாய் தமிழா நெருப்பாய்! - சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் புரட்சி

மாணவர்கள் உண்ணாவிரதம் 2 வது நாளாக நீடிப்பு; வைகோ நேரில் ஆதரவு! ( படங்கள் ) 
 
 
 
 
சென்னை: இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, லயோலா கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இன்று 2 ஆவது நாளாக நீடிக்கும் நிலையில், அவர்களை வைகோ இன்று நேரில் சென்று பார்த்து தனது ஆதரவை தெரிவித்தார்.


ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானத்தினால் பயன் ஏதும் இல்லை. லட்சகணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக சரவதேச விசாரணை வேண்டும்.


இலங்கை தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும். அதே சமயம் இந்த விசாரணையில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் பங்கேற்க கூடாது. இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் எனபது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன்,

 சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 

 சண்முகப்பிரியன், ஜோ.பிரிட்டோ, பால் கெனப், லியோ ஸ்டாலின், திருக்குறள் திலீபன், பிரசாத், அந்தோணி சாஜி, அனிஷ் குமார் ஆகிய  மாணவர்கள் நேற்று காலை லயோலா கல்லூரி அருகில் உள்ள ஏ.ஐ.சி.யு.எப்.எனப்படும் அகில இந்திய கத்தோலிக்க ஃபெடரேசன் அலுவலக வளாகத்திற்குள், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
இந்நிலையில் தங்களது உண்ணாவிரதத்தை சென்னை கோயம்பேடு பகுதிக்கு இடமாற்றம் செய்து, அவர்கள்,  தங்களது உண்ணாவிரதத்தை இன்று 2 ஆவது நாளாக தொடர்ந்தனர்.

முன்னதாக, நுங்கம்பாக்கம் பகுதியில் அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தனர். பிற கல்லூரி மாணவர்கள், அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், நேற்று மாலை தங்களது போராட்டத்தை கோயம்பேட்டுக்கு மாற்றினர்.

லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சென்னை நந்தனம் கல்லூரி, கந்தசாமி கல்லூரி, பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சட்டக் கல்லூரி மாணவர்களும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.



வைகோ ஆதரவு

இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவர்களை இன்று நேரில் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாணவ சமுதாயம் தன்னநலமற்றது என்றும், அவர்கள் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார்.





 மக்கள் கருத்து

1. ஸ்டுடென்ட் பவர் ; சூப்பர் பவர் ". மாணவ தோழர்களே மிகுந்த மகிழ்ச்சி; வாழ்த்துக்கள்; இந்தியாவில் ஒரு அமைதி புரட்சி தோன்றியது போல் உள்ளது; போராட்டம் மாணவர் சமுதாயம் கையில் எடுத்து உள்ளதால் இனிமேல் தமிழ்நாட்டின் அனைத்து மாணவர்களும் , பொதுமக்களும் பங்கேற்று இது மக்கள் போராட்டமாக உருவெடுக்கிறது; இனிமேலும் இலங்கை தப்பிக்கொள்ள அனுமதிக்ககூடாது; இலங்கை பிரச்னையை வைத்து முதலில் தி மு க வும் அ தி மு க வும் அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும். வேண்டும் என்கின்றபோது டெசோ , தேவை இல்லை என்கின்றபோது டெசோ கலைப்பு; செய்தது இதே கருணாநிதி தான். 

இதை வைகோவோ அல்லது வேறு தலைவர்களோ கேட்டால், கேள்வி கேட்பவர் மீது அவர்களுக்கு "பதவி ஆசை -உள்ளே வர " ஆசை என்று கூறி தப்பிக்கிறாய் . கடந்த 60 ஆண்டு காலம் சிங்கள இனம் , (ஒரு கொசுறு நாடு), இந்தியனை , இந்திய தமிழனை , இலங்கை தமிழனை அழிக்கும் முயற்சியை, உங்கள் போராட்டம் ஒடுக்கும். வாழ்த்துக்கள் . அணி திரளுங்கள் "மக்கள் தலைவர்" "மக்கள் சக்தி" "மக்கள் போராளி" வைகோ பின்னால் ;

 2. தமிழகத்தின் கலங்கரை விளக்கே
ஈழத்தமிழர்களின் விடிவெள்ளியே
நேர்மையில் காமராசரே
எளிமையில் கக்கனே
வீரத்தின் நண்பனே
தென்னாட்டு காந்தியே
தொடரட்டும் உன் தமிழர் நலத்தொண்டு

3. 1965-ல் இப்படி ஆரம்பித்த போராட்டம் இந்திய அரசையே ஆட்டம் காண வைத்தது. ஆனால் அதன் பலனோ தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு சென்றது. இந்த முறை மாணவர்கள் தங்கள் போராட்டத்தை "இனப்படுகொலை", "போர்க்குற்றம்" என்ற இரண்டே வார்த்தைகளை முன்னிறுத்தி தீவிரப்படுத்த வேண்டும். இனத் துரோகிகளை அருகே வர அனுமதிக்க கூடாது. 

ட்விட்டர் போராளிகள் ஆதரவுக்குரல்கள்

Tweets Top / All / People you follow

1 new Tweet
  1. தெருவில் போகும் எவனோ போராடுகிறான் என்று நினைக்காமல், தயை செய்து உங்கள் ஆதரவை அந்த இளைஞர்களுக்கு கொடுங்கள்
  2. என்ன உதவியென்றாலும் அதை மதிமுக செய்ய தயாராக இருக்கிறது#கட்சி அலுவலகத்தில் தொண்டர்களோடு உண்மையாக உண்ணாவிரதமிருங்கள்
  3. RT ": ஊடகங்களே உங்களின் இந்த செயல் மாற்று ஊடகத்தை ஊக்கப்படுத்தும் #எச்சரிக்கை "
  4. முத்துகுமார் தீக்குளித்த போதே இதுபோல் ஒன்றுபட்டிருந்தால் ஈழம் அழிந்துபோயிருக்காது..
  5. அரசியல் பிழைப்போர் பதவிக்காக பல்லிளிப்போர். இங்கே மாணவர் நடத்துவது உரிமைக்கான பட்டினிப் போர்
  6. இந்த டேக் பாருங்கள் தல
  7. வெவ்வேறு டாகில் கீச்சும் போது நம் முழுப்பலமும் தெரியாது..
  8. Few Minutes B4 I Talked William eppadiyaavadhu ponum
  9. Loyola என்பது தான் சரி.. தோழர்களே தயவு செய்து ஒரே டாகில் கீச்சவும்..
  10. நிஜ கொலையின் கோரம் பார்த்து கதிகலங்கி போய்,என்ன செய்வது என்று திணறி இருப்பவரா நீங்கள், உங்களுக்காக எட்டு முன்னோடிகள்
  11. முத்துக்குமார் நெருப்பை ஊதி அணைத்ததுபோல் ஆகிவிடக்கூடாது. இம்முறை நெருப்பு பட்டினியில் பற்றவைக்கப் பட்டிருக்கிறது.
  12. மாணவர்களின் இம்முயற்சி பாராட்டத்தக்கது. இளைய சமுதாயத்தில் தக்க விழிப்புணர்வை இது ஏற்படுத்தும். #வரவேற்கிறோம்.
  13. இளைஞர்களின் போராட்டத்துக்கு பணம் தேவையில்லை, வசதி தேவையில்லை. நம்மை போன்றோரின் நல்ல மனம் இருந்தால் போதும்.
  14. As a Tamil, as a student, as a human, I want this hashtag trending everywhere !
  15. ராஜபக்சவுக்கு எதிரான போராட்டம்: கைவிடக்கோரினார் கருணாநிதி -மாணவர்கள் கொந்தளிப்பு
  16. தங்களின் ஆதரவை தெரிவிக்க ஒருங்கினைப்பாளர் வில்லியம்ஸை இந்த நம்பரில் 8148883228 தொடர்பு கொள்ளலாம்
  17. மாணவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும்- கருணாநிதி #அப்போ நீங்க போராடியிருந்தால் இந்த நிலை வந்துருக்காது
  18. இலவச மடிக்கணிணி கேட்டு போராடும் மாணவர்களே இவர்களை பாருங்கள்
  19. RT : பெரியவர்கள் போல் அல்ல. ஒருவன் போராடுகிறான் என்றால் கேள்விகளின்றி களத்தில் இருப்பான் சக மாணவன் "
  20. ஆர்மிக்காரனைப் பார்த்த உடனேயே வயிற்றில் கரைத்த புளிக்கு.. இன்று இந்த 8 பேர் பால் வார்க்கிறார்கள்..
  21. பகையாடி நமை வென்ற பாதகரை வீழ்த்திடு சினம் கொண்டு வா தமிழா..
  22. RT "பல "தலை" கொடுத்தேனும் எடுப்போம் ஒரு விடு"தலை" உணர்த்துகின்றனர் அந்த 8மா(வீரர்கள்)ணவர்கள்
  23. இந்த நேரத்துல சென்னையில் இல்லை என்ற பீலிங்கு வராமல் இல்லை. :-(
  24. "Mudhal vetri " RT : The police tightened the security. Law college students also expressed their support.
  25. We trended a lot of other things. This is not just another thing. Lets trend this !!
  26. planning to go to chennai and sit on fast with students!
  27. The police tightened the security. Law college students also expressed their support.  
  28. The loyola protestors have given a call to students across tamilnadu to join them in protest.  
  29. is the right tag! can you retweet and spread? thanks!!
  30. RT : RajaPaksha who Perpetrated genocide of lakhs of Tamils in is a NeoNazi.
  31. All pls mention and with the tag . They are the only medium to spread it across india.
  32. RT : Dear Ajithians make this tag to trend n India.. pls draw the attention of whole nation...
  33. : We need doctors to the regular BP checkups to be done for the fasting students please contact 9841010231 Pls RT
  34. Chennai Ambedkar Law University Students extend support to
  35. Dear Mr. do you or ur channel know/aware of happening in TN by Loyola college students!?
  36. If not now then when.. if not us then who.. support and spread the word
  37. We want international jurisdiction not for war crime but for
  38. Dear Tweeps please upload this picture as DP
  39. Dear - Kindly shed your Camera Lights on - 8 Brave students on indefinite fast against Srilanka !
  40. “RT: eelam tamils not only killed by weapons of sri-lanka also killed by silence of the world
  41. 0044207 396 4444 This Is Channel 4's Contract Number , anyone please inform ()
  42. Dear 8 Brave Students are on an Indefinite Fast protesting against SriLanka.Where are your Cameras ?
  43. ஆதரிப்போம்.. நிஜத்தில் கலந்து கொள்ள முடியாவிடினும் நிழலாய் இணைத்தில் இணைவோம்