Showing posts with label மருத்துவர். Show all posts
Showing posts with label மருத்துவர். Show all posts

Wednesday, October 28, 2015

பதின் பருவம் புதிர் பருவமா? 6 - புதுப்புது சந்தேகங்கள் முளைக்கும் காலம்

ஓவியம்: முத்து
ஓவியம்: முத்து
‘செக்ஸ்’. இந்த வார்த்தையைக் கேட்டவுடன் காதை பொத்திக்கொண்டு ஓடுபவர்களும், ‘களுக்' என்று வாயை மூடிக்கொண்டு நமுட்டுச் சிரிப்பு சிரிப்பவர்களுமே அதிகம். இதன் காரணமாகவே வளரிளம் பருவத்தினர் 'செக்ஸ்' என்பது பாவமான காரியம் என்றோ அல்லது கேலிக்குரிய செயல் என்றோ குழப்பத்தில் தத்தளிக்கின்றனர்.
உலகில் எத்தனையோ பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் மனிதர்களுக்கு, இன்னும் பல நேரங்களில் புரியாத புதிராய் இருப்பது செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்கள்தான். அதிலும் இந்தியர்களுக்குப் பாலியல் குறித்த சந்தேகங்களும், அதனால் ஏற்படும் மனக்குழப்பங்களும் அதிகம்.
இதைத்தான் மனநலப் பேராசிரியர் ஒருவர் நகைச்சுவையாக இப்படிச் சொன்னார்: "ஆங்கிலேயர்கள் செக்ஸை இனப்பெருக்க உறுப்புகளில் (Genitals) வைத்து முடித்துவிடுவார்கள், ஆனால் இந்தியர்கள் அதை எப்போதும் மனதிலேயே (Mind) வைத்திருப்பார்கள்".
உளவியல் அடிப்படை
‘செக்ஸ் உணர்வு என்பது மனிதர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே உருவாகிவிடுகிறது. ஆனால், அது வெவ்வேறு வழிகளில் வெளிப்படுகிறது' என்று உளப் பகுப்பாய்வின் தந்தை சிக்மண்ட் ஃபிராய்ட் கூறுகிறார். இப்படிச் சொன்ன தற்காகப் பல எதிர்ப்புகளை அவர் சம்பாதித்தார்.
அவருடைய கூற்றுப்படி பாலியல் உணர்வை ஒரு விதைக்குள் இருக்கும் மரத்தோடு ஒப்பிடலாம். ஊன்றப் பட்டதிலிருந்து மண்ணுக்குள்ளிருந்து வெளியே வரும்வரை வெளியில் தெரியாமல் இருக்கும். அந்த விதை செடியாக வளரும் பருவம் போலத்தான், விடலைப் பருவமும். பதிமூன்று வயதில்தான் பாலியல் உணர்வுகள் வெளிப்படையாகத் தோன்ற ஆரம்பிக்கும். சில வருடங்களில் அது தீவிரமடையும், பரிசோதித்துப் பார்க்க முயற்சி செய்யும்.
பாலியல் தேடல்
இந்த ஆர்வத்தில்தான் ‘குழந்தை எப்படிப் பிறக்கிறது?’ என்றும் ‘திருமணமன்று கழுத்தில் தாலி கட்டிவிட்டால் குழந்தை பிறந்துவிடுமா?’ என்றும் ஏடாகூடமான கேள்விகளைச் சில வளர் இளம்பருவத்தினர் பெற்றோரிடமே கேட்டுவிடுவார்கள். கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைக்காதபட்சத்தில், அவர்களுடைய தேடல் ஆரம்பித்துவிடும்.
‘அய்யய்யோ... இந்தப் புள்ள இப்படியெல்லாம் பேசுதே!' ன்று பெற் றோர் கவலைப்படத் தேவையில்லை. மனிதனின் முக்கிய அடிப்படைத் தேவைகள் மூன்று. அந்த வகையில் உணவு, தூக்கத்துக்கு அடுத்துச் செக்ஸுக்கு மூன்றாவது இடம். அதனால்தான் பெரும்பாலான விடலைப் பருவத்தினர் தங்கள் ரகசியக் கேள்விகளுக்கான விடைகளை ராத்திரி 11 மணிக்கு மேல் டிவி சேனல்களிலோ, வலைதளங்களிலோ தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
எதிர்பாலின ஈர்ப்பு
கிட்டத்தட்ட 12 வயதுவரை பெண் குழந்தைகளுடன் உட்கார விரும்பாத ஆண் குழந்தைகள் ‘பதின்பருவ' வயதில் பெண் குழந்தைகளுடன் ஒன்றாக உட்கார ஆசைப்படுவார்கள். அதேபோல, ஆண் குழந்தைகளைப் போட்டியாளர்களாகப் பாவிக்கும் பெண் குழந்தைகள், பதின் பருவத்தில் ஆண் குழந்தைகளின் மீது கரிசனம் காட்டத் தொடங்குவார்கள்.
வளர் இளம்பருவத்தில் எதிர்பாலினத்தவருடன் பழக வேண்டும், நட்புகொள்ள வேண்டும் என்ற ஆசை அரும்புவிட ஆரம்பிக்கும். இதுவும் சமூகப் பழக்கங்களைக் கற்றுக்கொள்ள ஒருவகையில் உதவி செய்யும், இயற்கையின் உந்துதல்தான். இந்த ஈர்ப்பு, வளர் இளம்பருவத்தினர் மத்தி யில் காதலாக மாறவும் வாய்ப்புண்டு.
ஹார்மோன் விளையாட்டு
ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோனும், பெண்களுக்கு ஈஸ்டிரோஜன், புரொஜெஸ்டீரான் என்ற ஹார்மோன்களும் செய்யும் வேலையால் உடலிலும் மனதிலும் பலவிதமான பாலியல் ரீதியான மாற்றங்கள் தோன்ற ஆரம்பிக்கும்.
பையன்களுக்கு மீசை மற்றும் உடலில் ரோம வளர்ச்சியும், பெண் குழந்தைகளுக்கு மார்பக வளர்ச்சி, உடல் வடிவங்களில் மாற்றம் மற்றும் மாதவிடாய் ஆரம்பிப்பதும் இந்தப் பருவத்தில் நுழைவதற்கான லைசென்ஸ் என்றே கருதலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் மட்டுமல்ல, உடல் மற்றும் பாலியல் வளர்ச்சியிலும் முதலிடம் பெண்களுக்குத்தான். ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பின் வளர்ச்சி வேகமடைவதும் விடலைப்பருவம்தான்.
ஒப்பிடுதல்
ஆணுறுப்பு வளரும் இந்த நேரத்தில்தான் பையன்களுக்குப் பல சந்தேகங்கள் வரும். நண்பர்களுடன் அடிக்கடி இதைப் பற்றி பேசுவதால் ஆணுறுப்பின் வளர்ச்சியைக் குறித்த பயம் ஏற்படும். பாலியல் மீதான எதிர்பார்ப்பு கூடுவதற்கு ஏற்ப, ஆணுறுப்பின் வளர்ச்சியையும் எதிர்பார்ப்பார்கள். பள்ளியில் சிறுநீர் கழிக்கும்போது நண்பர்களின் ஆணுறுப்பின் அளவை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக எட்டிப்பார்க்கவும் கூச்சப்பட மாட்டார்கள்.
தங்கள் ஆணுறுப்பு சிறிதாக இருக்கிறது என்று தோன்றுகிற பட்சத்தில், மொத்தப் பாலியல் வாழ்க்கையுமே பாழாகிப்போனது போன்ற கவலை அவர்களைத் தொற்றிக் கொள்ளும். போதாக்குறைக்குப் புத்தகங்களிலும் வலைதளங்களிலும் வரும் ‘இந்தக் கிரீமை உபயோகித்தால் பல சென்டிமீட்டர் அளவுக்குக் கூட்டலாம்’ என்பது போன்ற விளம்பரங்கள் வேறு, அவர்களை அதிகப் பதற்றமடைய வைக்கும். ஆனால், ஆணுறுப்பின் அளவுக்கும் பாலியல் செயல்பாடுகளுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுதான் மருத்துவரீதியில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை.
மார்பக வளர்ச்சி
ஆண்களுக்கு ஆணுறுப்பைப்போல, பெண்களுக்கு மார்பக வளர்ச்சியில் பல சந்தேகங்களும் பயங்களும் தோன்றும். மார்பக வளர்ச்சி குறித்துத் தோழிகளுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்த்துப் பதற்றமடைவதும் இயற்கை. தாயிடம் இருக்கும் நல்ல உறவு, அவர்களுடைய சந்தேகங்களைத் தீர்க்க உதவும்.
மாதவிடாய் குறித்த பயம், அது வரும் நாட்களில் உடல், மனரீதியாக ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆலோசனை பெறுவது மிக அவசியம். சிலருக்கு மாதவிடாய் ஆரம்பிக்கும் முன் ஐந்து நாட்கள் அதிகப் பதற்றம், தூக்கமின்மை, மார்பு கனமாகத் தோன்றுதல், எரிச்சல்தன்மை, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதற்கு premenstrual syndrome என்று பெயர். இதைச் சமாளிக்க ஆரோக்கியமான உணவு, போதிய ஓய்வுடன் சிலநேரம் மாத்திரைகளின் உதவியும் தேவைப்படலாம்.
(அடுத்த முறை: கலக்கம் தரும் திடீர் கனவு)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர் 
தொடர்புக்கு: [email protected]


தஹிந்து

Thursday, March 14, 2013

எம்.ஜி.ஆர் VS மருத்துவர் ச.ராமதாஸ்


காரிலேயே காத்துக் கிடந்தோம்!

மருத்துவர் .ராமதாஸ்

நான் மறக்க முடியாத மற்றொரு போராட்டம் கும்மிடிப்பூண்டி இரயில் மறியல் போராட்டமாகும். 500 பெண்கள் உட்பட 4000 வன்னியர் சங்கத் தொண்டர்கள் அரிசி ஆலையில் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக இரவே தங்க வைக்கப்பட்டிருந்தனர். விடியற்காலை 4 மணிக்கு இரயில் நிறுத்தப் போராட்டம் கும்மிடிப்பூண்டி இரயில் நிலையத்தில் தொடங்கியது


 காலை 7 மணிக்கு இரயில் மறியலில் ஈடுபட்ட வன்னியர் சங்கத் தொண்டர்களைத் தடியால் அடித்தும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கலைக்க முயற்சித்தனர். ஆனால், மக்கள் கலைய மறுத்ததால் துப்பாக்கிச் சூடு நடந்தது. 3 பேருக்கு மேல் குண்டு பாந்து சென்னை பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டியிலிருந்து சூளூர்பேட்டைவரை காலை 4 மணியிலிருந்து 8 1/2 மணிவரை வந்த இரயில்கள் அப்படியே நகரமுடியாமல் நின்று கொண்டிருந்தன. துப்பாக்கிச்சூடு நடந்த பிறகுதான் மக்கள் கலைந்து ஓட இரயில்கள் நகரத் தொடங்கின.
ஒரு வாரம் அந்தப் பகுதியிலுள்ள கிராமங்களில் காவல் துறையினருடைய காட்டு தர்பார் அரங்கேறியது. ஆண்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு, பெண்களையும் அடித்து கையில் வைத்துக் கொண்டிருந்த குழந்தைகளையும் தூக்கி வீசினர். கண்ணில் தென்பட்ட மாடுகளைக்கூட வெறிபிடித்து அடித்து அவர்களுடைய கோபத்தைத் தணித்துக் கொண்டனர். நூற்றுக்கணக்கான ஆண்கள் கைது செய்யப்பட்டு பல்வேறு வழக்குகள் அவர்கள் மீது போடப்பட்டன.

சென்னை பேசின்பிரிட்ஜ் இரயில் நிறுத்தப் போராட்டத்தில் கைதாகி பிறகு ஜாமீனில் நான் வெளிவந்தபோது என்னுடைய வீட்டுக்குக்கூடச் செல்லாமல், நேரே கும்மிடிப்பூண்டிக்குச் சென்று கிராமம் கிராமமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினேன்.
டிசம்பர் 19 போராட்டத்தில் நான் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டபோது என்னை விடுதலை செய்யக் கோரி டிசம்பர் 24 ந்தேதி அன்று கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் இரவு 12 மணியிலிருந்து வன்னியர் சங்கத் தொண்டர்கள் பத்தாயிரம் பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களைக் கலைப்பதற்குக் காலை 11 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் தட்டானோடை செல்வராஜ் என்ற இளைஞருக்கு மார்பில் குண்டு பாய்ந்து கடலூர் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்க வசதி இல்லை என்று சொல்லி சென்னைப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சென்னைப் பொது மருத்துவமனையில் டாக்டர் பஞ்சமூர்த்தி அறுவை சிகிச்சை செய்து குண்டுகளை அகற்றினார். இன்னும் ஒரு குண்டு விலாப் பக்கத்தில் அகற்ற முடியாமல் அதனோடேயே அவர் இன்றும் வாழ்ந்து வருகிறார். மேலும் 3 பேருக்கு கால்களில் குண்டடிபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
செல்வராஜ் சென்னைப் பொது மருத்துவனையில் சிகிச்சை பெற்றபோது 28.12.1986 சென்னை மத்திய சிறைச்சாலையிலிருந்து நான் அவருக்கு எழுதிய ஒரு கடிதத்தை இன்றும் அவர் வைத்துக் கொண்டிருக்கிறார். அந்தக் கடிதத்தை வாசகர்களுடைய பார்வைக்கு வைத்துள்ளேன்.
மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வெளியில் வந்த பிறகு திண்டிவனத்தில் உள்ள என் வீட்டில் ஒரு மாதம் அவரைத் தங்க வைத்து அவருக்கு மேலும் சிகிச்சை அளித்தேன்.
15.3.1986 அன்று வகுப்புவாரி ஒதுக்கீட்டுக் கோரிக்கையை வலியுறுத்தி என் தலைமையில் கல்லூரி மாணவர்களுடன் முதுகிலும், நெஞ்சிலும், நெற்றியிலும் பட்டை நாமம் போட்டுக்கொண்டு கோட்டையை நோக்கி நடந்த பட்டை நாமப் பட்டினிப் போராட்டமும் இட ஒதுக்கீட்டுக்காக நடத்திய போராட்டத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.

1980இல் இருந்து 1987வரை அப்பொழுது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரைச் சந்தித்து மனுக்கள் கொடுப்பதற்கு பலமுறை முயன்றேன். ஆயினும் அவரைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு ஏற்படவில்லை.
ஒரு முதல்வருக்கு, ஒரு நடிகையின் கணவர் மறைவுக்கு அடுத்த மாநிலத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தவும், ஒரு நடிகரின் தாயாரின் மணிவிழாவில் கலந்து கொண்டு வாழ்த்தவும், ஒரு நடிகரின் சொந்தப் படத்தைத் தொடங்கிவைத்து வாழ்த்தவும், ஒரு நடிகையின் மகன் பூணூல் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தவும், ஒரு நடிகரின் தங்கை திருமணத்துக்காகக் கோவை சென்று வாழ்த்தவும், நேரம் இருக்கிறது.
ஆனால், சமுதாயத்தில் பல நூற்றாண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட வெகு மக்களுடைய பிரதிநிதிகளைச் சந்திக்க முதல்வருக்கு நேரம் இல்லைஎன்று அறிக்கைகளும் கருத்துப்படங்களும் தொடர்ந்துகனல்பத்திரிகையில் வெளியிடப்பட்டன.
அப்பொழுது எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இருந்த பண்ருட்டி இராமச்சந்திரனைச் சந்தித்து எம்.ஜி.ஆரைச் சந்தித்துப் பேச ஒரு பத்து நிமிடம் ஏற்பாடு செய்யுங்கள் என்று பலமுறை கூறியும், அவர் செய்கிறேன் என்று சொல்லி சந்திப்பை ஏற்படுத்தத் தவறிவிட்டார். ஒருமுறை பண்ருட்டியார் அவருடைய வீட்டுக்கு என்னை வரச் சொல்லி நானும் தீரனும் காரிலேயே காத்துக் கிடந்தோம். காரிலேயே காத்திருக்க வேண்டும் என்று அவருடைய பணியாளர் எங்களுக்குக் கட்டளையிட காரிலேயே காத்திருந்தோம்.

பார்வையாளர்கள் அனைவரும் அமைச்சரைப் பார்த்துச் சென்ற பிறகே எங்களை பணியாளர் அமைச்சரைப் பார்க்க அழைத்துச் சென்றார். ஏற்கெனவே அமைச்சர் எங்களுக்கு அறிவுறுத்தியதற்கு ஏற்ப எம்.ஜி.ஆரைப் பார்க்கும் பொழுது கொடுக்க வேண்டிய கோரிக்கை மனு எப்படி இருக்க வேண்டும் என்பதை அவரிடம் காட்டினோம்.


 நான், குகுகு பொதுச் செயலாளர் .கே.நடராசன், தீரன் மூன்று பேரும் மெரினா கடற்கரையில் உட்கார்ந்து தயாரித்த அந்தக் கோரிக்கை மனுவை பண்ருட்டியாரிடம் காட்டினோம். அவர்நான் தேதி வாங்கித் தருகிறேன்என்று எங்களுக்கு உறுதி அளித்து வழியனுப்பி வைத்தார். ஆனால் 1987இல் தொடர் சாலை மறியல் நடக்கும்வரை எம்.ஜி.ஆரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை.
இதே பண்ருட்டி இராமச்சந்திரன், தான் அமைச்சராக இருந்தபோது தன்னுடைய தொகுதியான பண்ருட்டிக்குச் செல்லும் வழியில் சாலையோரத்தில் வண்டியை நிறுத்தினார். அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு படிக்காத சிறுவன் ஓடிவந்து, டாக்டர் அய்யா கேட்கிற 20 சதவிகிதத்தைக் கொடுக்க வேண்டியதுதானே" என்று கோபமாகக் கேட்டதாகப் பாட்டாளி மக்கள் கட்சியில் பண்ருட்டியார் சேர்ந்த காலத்தில் கூட்டங்களில் இதுபற்றிச் சொல்ல தவறியதில்லை. அந்த அளவு வன்னியர் சங்கத்தினுடைய இட ஒதுக்கீடு கோரிக்கை மாடு மேய்த்த சிறுவனையும் சென்றடைந்தது.


thanx - kalki