Showing posts with label மக்கள். Show all posts
Showing posts with label மக்கள். Show all posts

Tuesday, April 02, 2013

வாடகை வீட்டை தேர்ந்தெடுப்பது எப்படி?

வாடகை வீட்டை தேர்ந்தெடுப்பது எப்படி? 
நீரை.மகேந்திரன்,படம்: தே. தீட்ஷித்.
மக்களுக்கு வாடகை வீடுதான் நிரந்தரம் என்றாகிவிட்ட நிலையில்,  பிறப்பு முதல் திருமணம், ஓய்வுக்காலம் என ஆயுட்காலம் வரை வாடகை வீட்டில் வசிக்கும் மக்கள் அதிகரித்து வருகின்றனர். ஆனால், தேவைக்கேற்ற வீடு, சரியான வாடகை, நேர்மையான வீட்டு உரிமையாளர், வசதியான ஏரியா என்பது எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை என்பதுதான் வாடகை வீட்டில் உள்ள நிலைமை.


ஆறு மாதங்களுக்கு முன்பு வாடகை வீடு மாறிய நண்பர், தற்போது அந்த வீடு சரியில்லை, வேறு வீடு பார்க்கவேண்டும் என அலைந்துகொண்டிருக்கிறார். என்ன ஏது என்று விசாரித்தபோது ''அவசர அவசரமாக வந்ததால் அந்த ஏரியா பற்றி தெரிந்துகொள்ளாமல் வந்துவிட்டேன். ஏரியாவில் கழிவு நீர் தேங்கி கொசுத் தொல்லை அதிகமாகிவிட்டது. அதுவும் வீட்டுக்கு அருகிலேயே தேங்குவதால் நாற்றமும் தாங்க முடியவில்லை. அந்த வீட்டுக்குப் போனபோது இந்தச் சிக்கல் இல்லை. தற்போது இதை சகித்துக்கொண்டு இருப்பதைவிட ஏரியா மாறலாம் என இருக்கிறேன்'' என்று வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார்.  


பழைய அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் தளத்தில் மழைக்காலத்தில் வீட்டிற்குள் நீர் கசிவு இருக்கிறது என்று வீடு மாறவேண்டிய நிலை வரலாம். இப்படி வாடகை வீட்டினால் எழும் சிக்கல்கள் ஏராளம் இருக்கிறது. இன்னொருபுறம் சின்ன இடம் கிடைத்தாலும்  நான்கு சுவர்களை எழுப்பி வாடகைக்கு விடுவதும் நடக்கிறது. இதுபோன்ற ஏமாற்றங்களைத் தவிர்க்க வீடு பார்க்கத் திட்டமிடும்போதே ஆராய்ந்து அலசி பார்த்துவிட்டால் பிறகு மீண்டும் மீண்டும் வீடு தேடி அலையவேண்டிய வேலையிருக்காது. ''பொதுவாக வாடகை வீடு தேடுகிறோம் என்றால், எந்த தேவைக்காக என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்'' என்கிறார் ரீமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் முரளி.  வீடு பார்க்கும்போதே இந்தத் தெளிவு இருந்தால் நல்ல வீடாகப் பார்க்க முடியும் என்றவர், அதற்கு கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்கிற செக் லிஸ்ட் கொடுத்தார்.


ஏரியா!
வீடு தேடுவது என்று முடிவாகிவிட்டால் எந்தப் பகுதியைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான் முக்கியம். அதாவது, உங்களது தேவையைப் பொறுத்து தீர்மானிக்க வேண்டும். அலுவலகத் திற்கு பக்கமாகவோ, குழந்தைகள் பள்ளிக்கு அருகாமையிலோ என திட்டமிடலாம். அதாவது, போக்குவரத்துக்கு ஆகும் செலவை, அலுவலகத்துக்கு அருகில் வீடு பார்த்தால் அதற்கு ஈடாக வாடகைக்குக் கொடுக்கலாம்.


மேலும், ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் வீடு பார்க்கலாம் என முடிவு செய்துவிட்டால், அந்த ஏரியாவில் பஸ், ரயில் மற்றும் வேறு பொது போக்குவரத்து வசதிகள் எப்படி உள்ளன என தெரிந்துகொள்ளவேண்டும். உங்களிடம் போக்குவரத்திற்குரிய வாகனங்கள் இருந்தாலும் பொதுபோக்குவரத்து இருக்கும் ஏரியா என்றால் வசதியானது. மேலும், அலுவலக வாகனம், குழந்தைகளின் பள்ளி, கல்லூரி வாகனங்கள் வந்து செல்லும் ஏரியா என்றால் கூடுதல் வசதிதான்.


இடம் அமைந்துள்ள பகுதி!

ஓர் ஏரியாவில் எந்தப் பகுதியில் வீடு பார்க்கப் போகிறோம் என்பதுவும் முக்கியமானது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கும் வாய்ப்புள்ளதா, கழிவுநீர் தேங்கும் இடங்களா என்பதை அறிந்துகொண்டு அதற்கேற்ப இடங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும் கடைகள், மருத்துவமனை, வழிபாட்டுதலங்கள், பள்ளிக்கூடம் போன்றவை இருக்கும் இடமாக இருந்தால் கூடுதல் வசதியாக இருக்கும்.


குறிப்பிட்ட பகுதி நமக்குத் தோதாக இருக்கும் என்று திட்டமிட்டாலும், அந்த ஏரியாவில் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்பதை உறுதி செய்துகொள்வது நல்லது. ஒதுக்குப்புறமான பகுதியா? மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியா? இரவில் தாமதமாகத் திரும்பினால் ரிஸ்க் இருக்குமா? என பார்ப்பது முக்கியம். இதுபோன்ற புற விஷயங்களைக் கவனத்தில்கொண்டு வீடு தேடவேண்டும்

.
வீட்டு உரிமையாளர்!
வாடகைக்குச் செல்லும் வீட்டின் உண்மையான உரிமையாளர் யார் என்பதில் கவனம்வேண்டும். வீடு தொடர்பான ஆவணங்களை வாங்கிப் பார்ப்பதில் தப்பில்லை. ஏற்கெனவே வாடகைக்கு இருக்கும் நபர் நமக்கு உள்வாடகை விட வாய்ப்பு அதிகம். எனவே, வாடகை போடும்போதே வீட்டின் உண்மை குறித்த ஆவணங்களையும் சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.


வீடு அமைப்பு!
சில வீடுகளில் ஃபேன், ஏ/சி, சோபா மற்றும் அலமாரிகளோடு அப்படியே வாடகைக்குக் கிடைக்கும். அதுபோன்ற நிலைமைகளில் அந்தப் பொருட்கள் நல்ல நிலைமைகளில் இருக்கிறதா என்பதைப் பார்ப்பதும், அதற்கு தனியாக எவ்வளவு வாடகை கணக்கிடப்படுகிறது என்பதிலும் தெளிவுவேண்டும். வீட்டு வாடகையோடு ஒப்பிட்டால் அதிகபட்சமாக 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக இதற்கு வாடகை இருந்தால் அதிகம்தான். மேலும், பொருட்களுக்கு விலையில் ஏழு வருடத்திற்கு தேய்மானம் கணக்கிட்டு, அதிலிருந்து ஒரு மாதத்திற்கு எவ்வளவு தொகை கொடுக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இதற்கு வாடகை வசூலித்தால் அந்தப் பொருட்கள் தேவையில்லை என்று தவிர்த்து விடலாம்.



வாடகை!
புதிய வீடா அல்லது பழைய வீடா என்பதைப் பொறுத்து வாடகை வித்தியாசம் இருக்கும். வீட்டின் வசதிக்கு ஏற்ப வாடகை சொன்னாலும், அந்தப் பகுதியில் நிலவும் வாடகை நிலவரங்களோடு ஒத்துப்போவதாக இருக்கவேண்டும். பொதுவாக, வீட்டின் இன்றைய மதிப்பில் 2.5 - 3 சதவிகிதம் ஆண்டு  வாடகை இருந்தால் சரியான வாடகை என்று சொல்லலாம். பழைய வீட்டிற்கும், புது வீட்டிற்குமான வாடகை வித்தியாசம் 30 சதவிகிதத்திற்கு மேல் இருந்தால் வாடகை தொகை அதிகம்தான். பழைய வீடு எனில், எத்தனை வருடம் பழைமையானது, மழைக்காலங்களில் நீர்க்கசிவு இருக்குமா என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். லீசுக்கு எடுக்கும்போது, அந்தத் தொகைக்கு அதிகபட்சமாக 3 சதவிகிதம் வட்டிக் கணக்கிட்டால் எவ்வளவு வருமோ அந்தத் தொகைக்குள் தகுதியான வீடாக இருக்க வேண்டும்.



இதர வசதிகள்!
மின்சாரம் / குடிநீர் போன்ற இதர வசதிகளையும் பார்ப்பது அவசியம். வாடகை வீட்டிற்கு என்று தனி மின் மீட்டர் இருக்கவேண்டும். மின் வாரியம் குறிப்பிடும் கட்டணத்தை, நாமே நேரடியாகச் செலுத்துவதற்கு ஏற்ப மின் கட்டண அட்டை நம்மிடம் கொடுத்துவிட வேண்டும். மேலும், தனி குடிநீர் தொட்டியா? அல்லது இணைப்பா,  கேபிள் இணைப்பு போன்றவை உள்ளதா, அதற்கான டெபாசிட்கள் ஏதேனும் கட்டவேண்டுமா என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும்.  


ஒப்பந்தம்!
வாடகைக்குச் செல்வதாக முடிவெடுத்து விட்டால், வாடகை, முன்பணம், மாதத்தில் எந்த தேதியில் வாடகை கொடுக்கப்படும் என்கிற விவரம், அல்லது லீசுக்குக் கொடுக்கப்படும் தொகை, வாடகைதாரருக்கு உள்ள உரிமைகள், வீட்டை காலி செய்வதற்குரிய நடைமுறை மற்றும் ஒப்பந்தம் எவ்வளவு நாட்களுக்குச் செல்லு படியாகும் என்கிற விவரங்களைக் குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டும்.
என்னதான் பார்த்து பார்த்து வாடகைவீடு பிடித்தாலும், அக்கம்பக்கம் குடியிருப்பவர்கள், சுற்றுச்சூழல் என எல்லாமே ஒத்துப்போனால்தான் வாடகை வீட்டின் வசதிகளை அனுபவிக்க முடியும். இல்லையென்றால், வாடகை வீடு தேடுவதே பெரிய பணிசுமையாகிவிடும்.



பத்தாண்டுகள் ஒரே வீட்டில்!
சரஸ்வதி,
அண்ணா நகர், திருச்சி.


'' நாங்கள் கடந்த 12 வருடமாக ஒரே வீட்டில்தான் தங்கியுள்ளோம். ஆரம்பத்தில் 300 ரூபாய் வாடகைக் கொடுத்தேன். என் பணி காரணமாகவும், எனது குழந்தையின் கல்விக்காகவும் இந்தப் பகுதியைத் தேர்வு செய்தேன். தற்போது 4,500 ரூபாய் வாடகையைச் செலுத்தி வருகிறேன். சொந்த வீடு வாங்கும் அளவிற்கு வசதி இல்லை. அதனால்தான் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். வாடகையை உரிமையாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறேன். கரன்ட் பில்லை தனியாகக் கட்டி விடுகிறேன். பராமரிப்பு வேலைகளை நாங்களே செய்து விடுகிறோம். உரிமையாளர் சிக்கல் இல்லை, அக்கம்பக்கம் பழகிவிட்டோம், ஏரியாவும் சிக்கல் இல்லை என்பதால் வீடு மாறவேண்டிய வேலையே இல்லை.''

thanx - vikatan

Wednesday, March 21, 2012

கூடன்குளம் - ஜெ நடத்திய நாடக காட்சிகள் - ஜூ வி கட்டுரை - ஒரு பார்வை



''உலகில் நடக்கும் வெவ்வேறு விஷயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை என்பது தானே கேயாஸ் தியரி?'' 

சி.பி - ஆமா.. பஸ் கட்டணம் ஏற்ற லேட் ஆச்சுன்னாலும் சரி.. கூடன்குளம் திறக்க லேட் பண்ணாலும் சரி.. இடைத்தேர்தல் இருக்குன்னு அர்த்தம். 

''ஒரு வழியாக கூடங்குளம் அணு மின் திட்டத்துக்குப் பச்சைக் கொடி காட்டி இருக்கிறது தமிழக அரசு. 'கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனே திறக்க வேண்டும்’ என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார் ஜெயலலிதா. இந்த விவகாரத்தில் பெரிய அரசியல் சதுரங்கமே ஆடப்பட்டிருக்கிறது. சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்த சமயத்தில் கூடங்குளம் போராட்டம் வெடிக்க ஆரம்பித்து இருந்தது. தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கத் தொடங்கிய நேரத்தில், 'கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானதுதான்’ என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து அறிக்கை வந்தது. உண்ணாவிரதத்தைக் கைவிடச் சொல்லிய அந்த அறிக்கையைக் கண்டு, போராட்டக் குழுவினர் கொதித்தார்கள். எதிர்ப்பு கடுமையாக இருந்தால், 'கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்கும் வரை அதனைத் திறக்கக் கூடாது’ என்று அடுத்த நாளே ஜெயலலிதா அறிவித்தார்.


சி.பி - பல்டி அடிக்கறது அரசியல் வாதிகளுக்கு கை வந்த கலை ஆச்சே.. என்ன.. ஜெ ரொம்ப ரேரா தான் பல்டி அடிப்பாங்க...
 

 'கூடங்குளம் பாதுகாப்பானதுதான்’ என்று ஜெயலலிதா முதலில் வெளியிட்ட அறிக்கையில் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி சிலவற்றை குறிப்பிட்டு இருந்தார். கிட்டத்தட்ட இப்போது அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு வெளியிட்ட ஜெயலலிதாவின் அறிக்கையில், அதனை அப்படியே வழிமொழிந்திருந்தார். மிகமிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது அறிக்கையை அவரே ஜெராக்ஸ் எடுத்து ஒப்புக்கொண்டு இருக் கிறார்!''

''கூடங்குளத்தைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் ஆரம்பத்தில் இருந்தே ஜெயலலிதா உறுதியாகத்தான் இருந்தார். தீவிரவாதத் தடுப்பு மையம், பட்ஜெட், பெட்ரோல் விலை உயர்வு, ஈழத் தமிழர்கள் விவகாரம், தமிழக அரசுக்கு போதிய நிதி அளிக்கவில்லை என்று மத்திய அரசோடு பல விஷயங் களில் முரண்பட்டார். இவை அனைத்துக்கும் வெளிப்படையாகவே அறிக்கையும்விட்டார். ஆனால்,  கூடங்குளம் விவகாரத்தில் மட்டும் வாய் திறக்காமல் இருந்தார். 'கூடங்குளம் திட்டம் செயல்படுத்தத் தகுதி ஆனதுதான். ஆனால், அந்தப் பகுதி மக்கள் எதிர்க்கும்போது, அவர்களது பேச்சுக்கு செவிமடுக்கத்தானே வேண்டும்’ என்பது ஆரம்பத்தில் அவரது நிலைப்பாடாக இருந்தது.


 சி.பி - அதெல்லாம் சும்மா.. ஆரம்பத்துலயே அவங்க முடிவு எடுத்திருப்பாங்க.. ஆனா தேர்தல், இடைத்தேர்தல்க்காக  வெயிட்டிங்க்..இப்போ எல்லாம் முடிஞ்சது.. அதான் சுய ரூபம் காட்டறாங்க

  'தூத்துக்குடி ஏரியாவில் பலம் பொருந்திய மணல் மனிதர் ஒருவர் கூடங்குளம் அணு உலை வந்தால், தனது தொழில் பாதிக்கும் என்று கருதி காய்களை நகர்த்தி வருகிறார்’ என்று பெயர் குறிப்பிடாமல் தனது கட்சிப் பொதுக்குழுவில் சொன்னார் விஜயகாந்த்.


சி.பி - இதென்ன புதுக்கரடி?  கேப்டன் மப்புல இருக்கறப்ப சொன்னதா? திராணியோட சொன்னதா?


 தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான 'முரசொலி’யிலும் இதுபற்றி வெளிப்படையாகவே பெட்டிச் செய்தி வெளியானது. 'அந்த மணல் மனிதர் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களின் தேர்தல் செலவைப் பார்த்துக்கொண்டவர். அதனால்தான், கூடங்குளத்தை வராமல் ஜெயலலிதா பார்த்துக்கொண்டார்’ என்று எல்லாம் செய்திகளை றெக்கை கட்டின.''


சி.பி - அடப்பாவிகளா?வில்லனா இருந்தாக்கூட மறைமுகமா மக்களுக்கு அந்தாள் நல்லதுதான்யா  பண்ணி இருக்கான்.. ஏதோ கொஞ்ச நாள் தள்ளீப்போட்டிருக்கார்..
''இந்த அரசியல் விமர்சனங்கள் பற்றி ஜெயலலிதா கவலைப்பட்டதைவிட மின் வெட்டுதான் அவருக்கு தீராத தலைவலி ஆனது. 'வேறு வழி இல்லை! கூடங்குளம் திறக்கப்பட்டுத்தான் ஆக வேண்டும்’ என்று முடிவுக்கு வந்தார் ஜெயலலிதா. அதிலும் அரசியல் வித்தைகளை நடத்தியதுதான் ஆச்சரியம். கூடங்குளத்தின் பாதுகாப்பு பற்றி ஆராய மாநில அரசின் சார்பில் போடப்பட்ட வல்லுனர் குழு அறிக்கை கடந்த மாதம் 28-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், அதன் மீது முடிவு எடுக்காமல் கிடப்பில் போட்டார் ஜெயலலிதா.



காரணம், சங்கரன் கோவில் இடைத்தேர்தல். கூடங்குளத்தைத் திறக்க வேண்டும் என்று, ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், 'தமிழக அரசு நியமித்த குழுவின் பரிந்துரைகளை சுட்டிக்காட்டித்தான் கூடங்குளத்தைத் திறக்க வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார். அப்படி முடிவு எடுத்திருந்தால், அந்தக் குழு அறிக்கை கொடுத்த மறுநாளே அறிவித்திருக்கலாம். ஆனால், சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்த அடுத்த நாள் இந்த முடிவை அவர் எடுத்ததற்கு அரசியல் பின்னணிதான் முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது!''


''சங்கரன்கோவில் தேர்தல் முடிந்ததும் கூடங்குளம் திறக்கப்பட்டுவிடும்என்ற நிலை அனைவரும் எதிர்பார்த்ததுதான்


''சங்கரன்கோயில் வாக்குப்பதிவு முடியும் தருவாயில், 'நாளை அமைச்சரவை கூடும்’ என்கிற அறிவிப்பு வந்தது. அப்போதே, பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. 'சங்கரன்கோவில் தேர்தலுக்கு முன்னதாக கூடங்குளத்தைத் திறந்தால் போராட்டக்காரர்களால் ஏதாவது கொந்தளிப்பு ஆகி... சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்து... அது தேர்தல் வெற்றியைப் பாதிக்கலாம்’ என்று நினைத்தாராம் முதல்வர். அதற்குத்தான் தாமதம் காட்டி உள்ளார்!''

 சி.பி - யார் எக்கேடு கெட்டால் என்ன? எனக்கு காரியம் நடந்தா சரி - ஜெ


 கூடங்குளத்தைத் திறக்க வேண்டும் என்கிற அறிவிப்பை ஜெயலலிதா வெளியிடுவதற்கு மூன்று மணி நேரம் முன்பு டெல்லியில் நடந்த சம்பங்கள்தான் தமிழகத்தில் இப்படி அதிர்வலைகளை உண்டாக்கியதாம். டெல்லியிலும் தமிழகத் திலும் நடந்த சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கின்றனவாம். இங்கே அமைச்சரவைக் கூட்டம் நடந்துகொண்டு இருந்தபோது 'இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிக் கும்’ என்று நாடாளுமன்றத்தில் சொல்லிக்கொண்டு இருந்தார் பிரதமர் மன்மோகன் சிங். பிரதமரின் இந்த அறிவிப்பும் அமைச்சரவை முடிவும் வெவ் வேறாக இருந்தாலும் அதற்குள் அரசியல் பின்னணி இருக்கிறது. அதுதான் கேயாஸ் தியரி.’

''15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்ட கூடங்குளத்தை எப்படியும் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் மத்திய அரசு ரொம்ப உறுதியாகவே இருந்தது. ஆனால், மாநில அரசிடம் இருந்து எந்த ஒத்துழைப்பும் இல்லை. அதோடு வேறு விவகாரங்களில் மத்திய அரசோடு முரண்டு பிடித்துக்கொண்டு இருந்தார் ஜெயலலிதா. இந்தப் பின்னணியில்தான் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்கிற குரல்கள் தமிழகத்தில் இருந்து எழுந்தன.


 ஜெயலலிதா இது தொடர்பாக இரண்டு கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதினார். ஆனால், சரியான ரியாக்ஷன் இல்லை. அதற்குப் பதிலாக, 'எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு எதிரான தீர்மானத்தையும் ஆதரிப்பது இல்லை என்பது இந்தியாவின் பொதுவான நிலைப்பாடு’ என்று தீர்மானத்துக்கு எதிராகவே கருத்து சொல்லிவந்தது மத்திய அரசு. 'கூடங்குளத்தைத் திறக்க வேண்டும் என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றுகிறோம். அதற்குப் பதிலாக நீங்கள் என்ன செய்வீர்கள்?’ என்று மத்திய அரசுக்கு செக் வைத்தாராம் ஜெயலலிதா. 'என்ன வேண்டும்?’ என்று கேட்டது மத்திய அரசு. நிதிஉதவி, மின்சாரம் உட்பட மத்திய அரசிடம்  கோரிக்கைகளின் பட்டியல் ஒன்றைக் கொடுத்தாராம் ஜெயலலிதா. அதில் ஒன்றுதான் ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது. அதைத்தான் நிறைவேற்றி இருக்கிறார்கள் என்றும் டெல்லிப் பறவைகள் சொல்கின்றன.''



'' 'இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றினார் ஜெயலலிதா. அதன் மீது எந்த நடவடிக்கையும் இந்தியா எடுக்கவில்லை. இப்போது ஐ.நா. தீர்மானத்தை ஆதரிப்பதாக அறிவித்ததற்கு அவசரம் காட்டியது கூடங்குளத்துக்காகத்தான். மத்திய மாநில அரசுகள் கணக்குப் போட்டு காய்களை நகர்த்தியதன் விளைவு.... கூடங்குளம் பிரச்னையும் தீர்ந்தது. ஐ.நா. தீர்மான விவகாரமும் ஓய்ந்தது. பாம்பும் சாகக் கூடாது கம்பும் உடையக் கூடாது என்கிற கணக்கு சரியாகி இருக்கிறது. இந்த 'மூவ்’களை கடைசி நேரம் கண்டு கோதாவில் திடீரென்று கருணாநிதியும் குதித்தார்.''


''அவர் ஏதோ உண்ணாவிரதம் என்று அறிவிப்பு வெளியிட்டாரே?''

''திங்கள் கிழமை அன்று காலையில் கருணாநிதி யிடம் பிரதமர் பேசினார். 'அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்’ என்று அப்போது சொன்னாராம் பிரதமர். இதை அறிந்துகொண்டுதான், உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று கருணாநிதி அறிவித்தார். பிரதமர் அறிவிப்பு டெல்லியில் இருந்து வந்ததும் கருணாநிதி உண்ணாவிரதத்தை வாபஸ் வாங்கிக்கொண்டார். 'அதாவது கருணாநிதி மிரட்டியதால்தான் மன்மோகன் இந்த முடிவு எடுத்தார்’ என்பதைக் காட்ட நடந்துள்ளன இந்தச் சம்பவங்கள்!''

 சி.பி - நாடகம் போடறதுல கலைஞர் கில்லாடி ஆசே..
''கூடங்குளம் போராட்டக்காரர்களை ஜெயலலிதாவே நேரடியாக அழைத்துப் பேசினாரே!''
''இரண்டு தரப்பையும் அழைத்துப் பேசினோம் என்பதைப் பதியத்தானே வேண்டும்!
கேபினெட் நடந்துகொண்டு இருந்தபோதே கூடங்குளம் பகுதிக்கு போலீஸார் மலையளவு குவிக்கப்பட்டுவிட்டார்கள்.




சங்கரன்கோவில் தேர்தல் பணிகளுக்காக சென்ற போலீஸார் அங்கு திருப்பிவிடப்பட்டார்கள். மாநில அரசு நினைத் தால்தான் கூடங்குளத்தை திறக்க முடியும் என்பதில் மத்திய அரசும் தெளிவாக இருந்தது. எனவே ஜெயலலிதாவையே அவர்கள் முழுமையாக நம்பி இருந்தார்கள். அவர்களது எண்ணத்துக்கு 19-ம் தேதிதான் வந்தார் ஜெயலலிதா!


இதனால் கூடங்குளம் பகுதியில் வன்முறை ஏற் படக்கூடும் என்பதால் முதல் நாளிலேயே, தென்மண்டல ஐ.ஜி-யான ராஜேஸ்தாஸ் தலைமையில் 4,000 போலீஸார் குவிக்கப்பட்ட னர். சங்கரன்கோவில் தேர்தல் பணிக்காக வந்திருந்த எட்டு மாவட்ட எஸ்.பி-க்கள் கூடங்குளம் பகுதிக்குத் திருப்பிவிடப்பட்டனர். நிலைமையைக் கண்காணிக்க கூடுதல் டி.ஜி.பி-யான ஜார்ஜ் வந்து சேர்ந்தார். வன்முறையைக் கட்டுப்படுத்த வஜ்ரா வாகனங்கள், கலவரத் தடுப்புப் படை என கூடங்குளம் அணு உலை முன்பாக பெரும் படையே குவிக்கப்பட்டது.

அணு உலைக்கு எதிரில் வாடகைக் கட்டடத்தில் அமர்ந்து அணு உலையைக் கண்காணித்து வந்த போராட்டக் குழு உறுப்பினர்களான வக்கீல் சிவசுப்பிரமணியன், ராஜலிங்கம் உள்ளிட்ட ஒன்பது பேரை போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். தமிழக அரசின் தீர்மானம் பற்றி அறிந்த இடிந்தகரை மக்கள், ஆலய மணியை அடித்துக் கூட்டத்தை திரட்டினர். அதற்குள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்ததால், இடிந்தகரை பகுதியில் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது.''

''போலீஸை வைத்து இதற்குப் பதில் சொல்வார்களா?''
''போராட்டக்காரர்களை 18-ம் தேதி இரவு நெல்லைக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு மாவட்ட ஆட்சியர் அழைத்தார். 'என்ன விஷயம்?’ எனக் கேட்டதற்கு, 'ஏற்கெனவே நீங்கள் முதல்வருக்கு கொடுத்திருந்த மனு பற்றி பேச வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார்.

'கூடங்குளத்தில் போலீஸாரைக் குவிப்பதையும் எங்களைத் திட்டமிட்டு அழைப்பதையும் சந்தேகத்துடன் பார்க்க வேண்டும். இதனால், நாங்கள் அங்கு செல்ல மறுத்து விட்டோம். 19-ம் தேதி காலையில் மீண்டும் எங்களை அழைத்த அவர், 'ராதாபுரம் வரையாவது வாருங்கள். அங்கு வைத்துப் பேசிக்கொள்ளலாம்’ எனக் கூப்பிட்டார். இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக எங்கள் மக்கள் சந்தேகப்பட்டார்கள்.


அதனால் எங்களைப் போக அவர்கள் அனுமதிக்கவில்லை. நாங்கள் போயிருந்தால் எங்களைக் கைது செய்திருப்பார்கள்’ என்று போராட்டக்காரர்கள் சொல்கிறார்கள். கூடங்குளத்தை அமைதியாகத் திறக்கவிடுவார்களா என்பது இரண்டொரு நாட்களில் தெரிந்துவிடும்''

சி.பி - இந்த தலைமுறை மக்கள் மின்சாரம் பெற வேண்டும் என்பதற்காக கூடங்குளம் அணு உலை திறப்பது நம் எதிர் கால சந்ததிக்கு நாம் செய்யும் துரோகம்.. மக்கள் பெருமளவில் இதை எதிர்க்கக்கூடாது என்பதற்க்காக செயற்கையான 8 மணி நேர மின் வெட்டை ஜெ உருவாக்கினார் என்று சில ர் சொல்றாங்க.. நாளை கூடங்குளத்தில் ஏதாவது விபத்து நடந்து மக்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? மேலும் அங்கே பணீ புரிந்த 147 பேருக்கு புற்று நோய் என்று இந்தியா டு டே கட்டுரை வெளியிட்டு இருக்கு.. அதுக்கெல்லாம் என்ன பண்ணப்போறாங்க?

இப்போ லேட்டஸ்ட் நியூஸ் அந்த ஏரியா மக்களுக்கு தண்ணீர் சப்ளை, , மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் நிறுத்தமாம்/... அட தேவுடா.. ஏழை எளிய மக்களை அடக்குமுறை கொண்டு ஆள ஆங்கிலேயர் என்ன? நம்மாளுங்க என்ன? எல்லாம் ஒரே கேட்டகிரிங்க தான்..

Thursday, November 17, 2011

பஸ், பால், மின் கட்டண உயர்வு - ஜெ அறிவிப்பு # காமெடி கடுப்பு கும்மி

  தமிழக அரசுக்கு மத்திய அரசு உரிய நிதி உதவி வழங்காததால் தமிழகத்தின் பொது துறை நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குகின்றன என்றும், கடந்த கால தி.மு.க., ஆட்சியின் அவலத்தினால் தமிழகம் பெரும் கடன் சுமையை தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும், தமிழகத்தை மின் மிகை மாநிலம் என்பதில் இருந்து மின் பற்றாக்குறை மாநிலமாக உருவாக்கிய பெருமை கருணாநிதிக்கே சேரும் என்றும் பரபரப்பாக பேசினார். இதனை சமாளிக்க பஸ், பால், மின் கட்டண விலையை உயர்த்திட முடிவு செய்திருப்பதாக முதல்வர் ஜெ., இன்று அறிவித்தார். 

இதன் படி கட்டண உயர்வு விவரம் வருமாறு: பஸ் கட்டணம் சென்னை தவிர ஏனைய மாவட்டங்களில் குறைந்த பட்ச பேரூந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதன் படி சென்னையில் 2 முதல் 3 ரூபாய் வரையும், மாநிலத்தில் நகர்ப்புற பஸ்களில் கி.மீட்டருக்கு 28 பைசாவில் இருந்து 42 பைசாவும், வெளியூர் பஸ்களில் கி.மீட்டருக்கு 32 பைசாவில் இருந்து 56 பைசாவாகவும், சூப்பர் டீலக்ஸ்சில் மற்றும் சொகுசு ‌பஸ்களில் கி.மீட்டருக்கு 38 பைசாவில் இருந்து 60 பைசாவாகவும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் 52 பைசாவில் இருந்து 70 பைசாவா உயர்த்தி வசூலிக்கப்படும். நகர பஸ்களில் குறைந்த பட்ச கட்டணம் 3 ரூபாயாகவும், அதிக பட்சம் 13 லிருந்து 16 ஆகவும் இருக்கும். ஆவின் பால் லிட்டருக்கு 17. 75 லிருந்து 24 ஆக ( 6. 25 ) உயர்த்தப்படுகிறது. விவசாய மக்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையும் உயர்த்தி வழங்கப்படுகிறது. ஒரு லிட்டர் பசும்பால் கொள்முதல் விலை ரூ. 18லிருந்து 20 ஆகவும், ஒரு லிட்டர் எருமைப்பால் கொள்முதல் விலை ரூ. 26லிருந்து 28 ஆக உயர்கிறது.



1.ஜெ வின் சின்னம் இரட்டை இலை. அவர் ஆட்சியில் பொருட்கள் எல்லாம் இரட்டை விலை

---------------------------------------

2. மகாஜனங்களே, இன்று ஒரு நாள் மட்டும் விலை ஏற்றத்திற்கு எதிராக ட்வீட் போடுங்க, நம் குரல்கள் கோட்டையை எட்டட்டும் .opp

----------------------------------

3. பஸ் டிக்கெட் விலை ஏற்றத்தால் சசிகலாவின் கணவர் கணவர் மட்டும் அல்ல , நாம் அனைவருமே நடராஜன்கள் ஆகி விட வேண்டும் போல் இருக்கே?

-------------------------------------

4. கலைஞர் - விலையேற்றம் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.. மானம் உள்ள தமிழன் இது பற்றி பேசுவான் # அய்யோ தலைவரே,,அப்போ......

-----------------------------

5. எம் ஜி ஆர்-ன் ஆவி - ஹூம் சினிமால நல்லா ஆடுனாங்க, அரசியல்லயும் செம ஆட்டம் போடறாங்க.அண்ணா என்னை மன்னியுங்கள்

------------------------------------------

6. விலை ஏத்தனும்னு நினைச்சா டாஸ்மாக், சிகரெட், கஞ்சா, மட்டன், சிக்கன் இப்படி ஏத்துங்க மேடம்

------------------------------------

7. மேடம், எதுக்காக இப்படி தமிழர்களை பழி வாங்கறீங்க?

2006-ல என்னை பழி வாங்குனாங்களே? மறக்க முடியுமா? பழிக்குப்பழி

-------------------------------------------

8. டம் டம் மேடம், எதுக்காக எல்லா விலையையும் இப்படி உயர்த்துனீங்க?

தமிழர்கள் சிக்கனமா இருக்கனும்னு உணர்த்த

-----------------------------------------

9. நடிகைஅமலா பால் தனது சம்பளத்தை 32% உயர்த்தினார், மேலும் ஜெ வுக்கு நன்றி சொன்னார் @ இமேஜினேசன்

------------------------------------------

10. ஜெ திருப்பதி மாதிரி இறங்கி வர மாட்டாங்க.. விலையை ஏற்றி விட்டு மக்கள் வயிற்றில் அடிப்பாங்க

------------------------------------

11. அதிகார மமதையில் ஆடாதே..நம்பி வந்த  நடுத்தர மக்களை கை விடாதே

------------------------------

12. ஷாக் அடிக்குது சோனா......நீ துள்ளற வீணா.. ஹார்ட் துடிக்குது தானா.. நீ கோர்ட் பக்கம் போனா

-----------------------------

13. மேடம், சகுனமே சரி இல்லை.. பால் விலையை ஏத்தி நம்ம ஆட்சிக்கு பால் ஊத்திட்டீங்கனு நினைக்கறேன்

----------------------------------

14. எழவு வாசம் இலைவசம், இலவசம் விலை ஏற்றம்

-----------------------------------

15. டாக்டர் பட்டம் கொடுத்தாங்கங்கறதுக்காக இப்படி தமிழக மக்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் குடுக்கனுமா? மேடம்?

---------------------------------------

16. வேலாயுதம் படத்துல விஜய் பால்காரரா நடிச்சப்பவே நினைச்சேன்யா.. இப்படி பால் விலை கன்னா பின்னான்னு ஏறும்னு

---------------------------------------

17. அன்பில்லாத அம்மா! இலங்கைத்தமிழர்களைத்தான் காக்க முடியல.. இங்கே இருக்கும் தமிழனையாவது சாகடிக்காமல் காப்பாற்றவும்

-----------------------------------

18. அதிமுக - அடங்காமல் திமிருடன் முரண்டு பிடிக்கும் கழகம்????

--------------------------------

19. அமாவாசைன்னா  பைத்தியம் முத்தும், அம்மா உங்க ஆசைகளால எங்களுக்கு பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்கே?

---------------------------------

20. ஆட்டமா? விலை ஏற்றமா? ஏத்தமா? உனக்கு இது ஏத்ததா? வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் இருக்குது, செக்‌ஷன் 365

----------------------------------

21.உடன் பிறப்பே!பிசாத்துப்பணம் 1 3/4 லட்சம் கோடிக்காக கழக ஆட்சியை இறக்கி வைத்தாய்.அரக்கியை ஆட்சி பீடத்தில் ஏற்றிவைத்தாய்!அனுபவி தமிழா அனுபவி

-----------------------------------------

22. போஸ்ட் கார்டு விலை50 பைசா தானே? அதை ஏன் ஒரு ரூபாய் ஆக்கிட்டீங்க?

பால் விலை ஏறுன மாதிரி தபால் விலையும் ஏறிடுச்சோ என்னவோ?

-------------------------------------------------

23. வணக்கம் ஜெயா செய்திகள்.. எந்தெந்த பொருள்கள் எல்லாம் விலை ஏறவில்லை என்பது பற்றி ஒரு பார்வை.....

----------------------------------------

24. கார்த்திகை 1 அன்னைக்கு விளக்கேத்தி வைப்பீங்கன்னு பார்த்தா இப்படி விலையை ஏத்தி வைச்சுட்டீங்களே?

--------------------------------------

25.அண்ணே.. டீ இன்னும் வர்லை.. 

டேய். நாயே பாலே இன்னும் வர்ல.. இனி வராது போல.. ஓ சி பேப்பரை படிக்காம எந்திரிச்சிப்போ நாயே

-----------------------------------------------
26. .சசிகலா- அக்கா அக்கா புரட்சி அக்கா. நம்ம ஆட்சி நல்ல ஆட்சி இப்போ ரொம்ப கெட்டுப்போச்சுக்கா, அதை சொன்னா வெக்கக்கேடு, சொல்லாட்டி மானக்கேடு

-----------------------------------------------

27. இன்னைக்கு செத்தா நாளைக்கு மட்டும் இல்ல.. எந்த நாளும் இனி பால் கிடைக்காது போல.

-----------------------------------------