Showing posts with label மக்களவைத் தேர்தல். Show all posts
Showing posts with label மக்களவைத் தேர்தல். Show all posts

Sunday, May 18, 2014

தமிழகத்தில் காங்கிரஸை முந்திய நோட்டா

தமிழகத்தில் முக்கிய எதிர்கட்சியைப் போல ஆனது நோட்டா. மற்ற கட்சிகளை விட அதிக அளவில் வாக்குகளை பெற்று, நோட்டா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 



இந்தியாவில் முதன்முறையாக 'நோட்டா' பொத்தான், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தான் அறிமுகமானது. 



ஆனால் தேர்தல் ஆணையம் எதிர்பார்த்ததை விட அதிமான எண்ணிக்கையில் இந்திய மக்கள் நோட்டாவுக்கு தங்கள் வாக்குகளை வழங்கியுள்ளனர். 



வாக்குப்பதிவு இயந்திரத்தின் கடைசி பொத்தானாக, ’மேலே உள்ள யாரும் இல்லை’ (None Of The Above) என்பதே நோட்டாவாகும். புதிய வாக்காளர்கள், இளைய தலைமுறை, கட்சிகள் மீது பெரிய அளவில் அதிருப்தி கொண்டிருப்பவர்கள் ஆகியோர் வாக்களிக்காமல் இருப்பதை உணர்ந்த தேர்தல் ஆணையம், இந்த பட்டியலில் வரும் மக்களின் சில பகுதியினராவது நோட்டாவை பயன்படுத்துவார்கள் என்ற நோக்கத்தில் இதனை அறிமுகம் செய்தது. 


ஆனால், தேர்தல் ஆணையம் மட்டுமல்ல, அனைத்து தரப்பினரையும் ஆச்சர்யம் அடையச் செய்யும் அளவுக்கு நாடெங்கிலும் நோட்டா பதிவாகியுள்ளது. 


நாட்டில் ஏற்கனவே கட்சிகள் எண்ண முடியாத அளவில் இருக்கும்போது, இந்த பொத்தானுக்கு வேலை இல்லை என்று நினைத்தவர்கள் எல்லாம் வாயடைத்துள்ளனர். மாற்று கட்சி என்று கூறி கொண்டு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகக் கூறிய கட்சிகளை எல்லாம் ஓரம் தள்ளிவிட்டு, பல வாக்காளர்கள் நோட்டாவை தேர்வு செய்துள்ளனர். 



பல தொகுதிகளில், இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகளை விட நோட்டா அதிக வாக்குகள் பெற்றுள்ளது. 


நோட்டாவில் முந்தியது தமிழகம் 

 
நாட்டிலேயே அதிகபட்சமாக நோட்டா பொத்தானை அழுத்தியவர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. பிஹார், தமிழகம், மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களில் நோட்டா பதிவு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. மாநில அளவில் தமிழகத்தின் மொத்த 39 தொகுதிகளில் 31 தொகுதிகளின் மக்கள் நோட்டாவை பயன்படுத்தி உள்ளனர். 



26 தொகுதிகள் கொண்ட குஜராத்தில், 23 தொகுதிகளில் நோட்டா பதிவாகி உள்ளது. 42 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் 32 தொகுதிகளின் நோட்டா பதிவானது. 



இந்த சாதனையில் தமிழகம் தான் முதலிடம் பெற்றுள்ளது. முக்கியமாக நீலகிரி தொகுதியில், வாக்காளர்கள் கட்சிகளை ஒதுக்கிவிட்டு நோட்டாவுக்கு வாக்குகளை பெரிய அளவில் பதிவு செய்துள்ளனர். 



இந்த தொகுதியில் 46,559 பேர் நோட்டாவில் வாக்களித்துள்ளனர். இதேபோல, பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடி போட்டியிட்ட குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் 18,053 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். 


கர்நாடக மாநிலம் பெல்லாரியில் 11,320 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன. 



மேலும், தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுகவுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தை நோட்டா பெற்றது. இதற்கு அடுத்த இடத்தை தான் காங்கிரஸ் கட்சி பெற்றது. 



மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அளவில், நாடெங்கும் உள்ள தொகுதிகளில் புதுச்சேரியில் நோட்டாவுக்கு அதிகபட்சமாக 3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த சதவீத அளவில் நோட்டா, கம்யூனிஸ்ட் கட்சிகளை மிஞ்சியுள்ளது. 



  • balasubramaniqan BALASUBRAMANIAN  from Mumbai
    இன்னும் பல பேருக்கு NOTA பற்றி முழுமையாக தெரியவில்லை .தெரிந்த பிறகு இன்னும் அதிகமானவர் NOTA வில் வாக்களிப்பார்கள்
    about 7 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Pachaimuthu Dakashna  from Mumbai
    நோட்டா விற்கு வாக்களித்தது ஒருபக்கம் இருக்கட்டும். தமிழகத்தில் எல்லா தொகுதியுலுமே சராசரியாக குறைந்தது 500000 பேருக்கு மேல் வாக்களிக்கவே இல்லை. எத்தனையோ வேட்டபாளர்கள் 100000, 50000 என வாக்கு வித்தியாசத்தில் வெற்றியோ தோல்வியோ பெற்றிருக்கிறார்கள் . அப்படியானால் ஓட்டே போடாத இவர்களின் வாக்கு யாருக்கு!!!. இந்த வெற்றியோ தோல்வியோ எது உண்மையானது, நம்பகமானது.. உண்மையான வெற்றியாளர் யார்.. இந்த கேள்விக்கு வாக்களிக்க வராத மெகா அறிவு ஜீவிகள் தான் சொல்ல வேண்டும்.......
    about 17 hours ago ·   (3) ·   (0) ·  reply (1)
    Chinnappan   Up Voted
    • Chinnappan  
      NOTA ஒரு தொகுதியில் ஜெயித்தால் என்ன நடக்கும் என்று தேர்தல் கமிசன் சொல்லட்டும்; இந்த 'மெகா அறிவு ஜீவி'களும் வந்து வாக்களிப்பார்கள்! அடுத்த தேர்தலில் எங்காவது ஒரு இடத்திலாவது NOTA ஜெயித்து இந்த நிலைமை வரத்தான் போகிறது! பொறுத்திருந்து பாருங்கள்!
      about 16 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • Ramesh Sargam at Deccan Chronicle Holdings Limited from Bangalore
    NOTA-வில் விழுந்த வாக்குகளை மற்ற அரசியல் கட்சிகளுக்கு சரிசமமாக பங்கு POTA-ல் என்ன? வாக்குகள் விரயமாகுவதை தவிர்க்கலாமே!
    about 17 hours ago ·   (0) ·   (10) ·  reply (0)
    Chinnappan   Down Voted
  • eral mani  
    அரசியல் பிழைத்தால் வரும் காலம் நோட்டா செயித்தாலும் செயித்து விடும் எச்சரிக்கை . தொடக்கத்திலே இவ்வளவு பேருக்கு இது பற்றி புரிதல் இருக்கையில் வரும் காலம் இதைவிட அதிகம் வாக்கு நோட்டா பெரும். காங்கிரசை நோட்டா செயித்து விட்டதே ..
    about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • saravanan  from Bangalore
    நடுநிலை மக்கள், எல்லா அரசியல் கட்சிகளுக்கும் விடுத்துள்ள பெரிய அறைகூவல் இது. இதுவரை பிற அரசியல் கட்சிகள் எப்படிப்பட்ட வேட்பாளரை நிறுத்துவர் என்று கணக்கு போட்ட கட்சிகளுக்கு நோட்டா மக்கள் விடும் சவால். ஒழுங்கான வேட்பாளரை நிறுத்துங்கள். இல்லை நோட்டா இருக்கவே இருக்கிறது. நோட்டா மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்ரசாதம்
    about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Sundar,  from Hosur
    ஏற்கனவே திரு. ராஜ்நாத்சிங் அவர்கள் வைகோ அவர்களை வெற்றிபெற செய்யுமாறு தேர்தல் பிரச்சாரம் செய்தது பற்றி கீழ்க்கண்டவாறு ." தமிழ்நாட்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் நீண்ட அனுபவமும், அப்பளுக்கட்ற நடத்தையும், சுயவாழ்வில் நல் ஒழுக்கத்தையும் கடைபிடித்து வரும் வைகோ அவர்களின் அருமையை இந்தமுறை விருதுநகர் மக்கள் தேசியத்தலைவர் ராஜ்நாத்சிங் மூலமாவது உணர்ந்துகொண்டால் கண்டிப்பாக ஏற்கனவே அவரைத் தோற்கடித்த தவறுக்கு ஒரு நல்ல பிராயச்சித்தத்தைத் தேடும்வகையில் அவரை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வார்கள். பெருந்தலைவர் காமராஜரை மற்றும் வைகோ அவர்களை தலா ஒருமுறை தோல்வியுறச்செய்து ஏற்கனவே செய்த தவறுக்கு கண்டிப்பாக இது ஒரு பாவ விமோசனமாக இருக்கும்" என்று கருத்தை பதிவு செய்திருந்தேன். ஆனால் யானை தன் தலையில் மண்ணை அள்ளி போட்டுக் கொண்டதுபோல் விருதுநகர் மக்கள் முக்கியமான மத்திய கேபினெட் அமைச்சராகும் வாய்ப்பிருந்த ஒரு திறமையான வேட்பாளரை ராஜ்நாத்சிங் அவர்களே விரும்பிக்கேட்டும் தேர்ந்தடுக்காமல் ஒரு பிரயோஜனமும் இல்லாத நபரை தேர்ந்தெடுத்ததன் பலனை ஐந்து ஆண்டுக்காலம் அனுபவிக்கட்டும்.
    about 20 hours ago ·   (20) ·   (6) ·  reply (1)
    eral mani · A.SESHAGIRI  · vijai   Up Voted
    Raj  · Chinnappan  · raman RAMAN  Down Voted
    • saravanan  from Bangalore
      மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். மக்களை நிந்திக்காதீர்கள். விருதுநகர் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக அவர் இல்லை. நான் மதிக்கும் தலைவர்களில் வைகோவும் ஒருவர். அணுஉலை எதிர்ப்பு-ஸ்பிக் ஆளை எதிர்ப்பு-கேரள எதிர்ப்பு என்று எதிர்ப்பு அரசியலை காட்டினாரே ஒழிய ஆக்கப்பூர்வமான திட்டத்தை அவர் கொண்டுவரவோ-குரல்கொடுக்கவோ இல்லை. அவரை, கம்யூனிஸ்ட் போன்ற போராளியாகத்தான் மக்கள் பார்கிறார்கள். வாழ் நாளில் அவர் விருதுநகர் மக்கள் அவர் ஜெயிக்க வழி இல்லை. அங்குள்ள சில இன மக்கள் அவரை ஜெயிக்க விடமாட்டார்கள். தேனியில் போட்டி இடாமல், விருதுநகரில் போட்டியிட்டது தவறு
      about 18 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
      Chinnappan   Up Voted
  • sadhasivasaravanan  from Salem
    சரியானது தான் நோட்ட பலர்க்கு டாட்டா காட்டிவிட்டது.நீலகிரியில் தான் அதிகம் காரணம் மக்களுக்கு நன்றாக தெரியும் புரியும்.கடந்த ஆட்சியில் இவர்கள் செய்த சாதனைக்கு கிடைத்த பரிசு.
    about 20 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
    Chinnappan   Up Voted
  • Paramasivam Thamaraiselvan at Karaikal, India from Karaikal
    களத்தில் உள்ள நபரையோ கட்சியையோ ஏதோவொரு காரணத்தினால் பிடிக்கவில்லை என்று முடிவுக்கு வந்தவர்கள் தங்களது எதிர்ப்பை வாக்கு சாவடிக்கு வராமல் தவிர்ப்பதன் மூலம்தான் தெரிவிப்பர், ஆனால் இந்த நாட்டின் அரசியல் கட்சிகளின் தவறான மக்கள் விரோத போக்கு, பணம் படைத்த, பெரும்பான்மை சாதியை சார்ந்த மற்றும் குற்றப்பின்னணி உடைய நபர்களை பெரும்பகுதி தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது போன்றவற்றை எதிர்க்கும் மன திண்ணம் கொண்ட ரவுதிரமான போராளிகள்தான் மெனக்கட்டு வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் எதிர்ப்பை நோட்டா மூலம் பதிவு செய்கின்றனர். எனவே இதனை வாக்குச்சாவடிக்கு வராதவர்கள் வரவைத்த திட்டம் என்பதை விட அரசியல் கட்சிகள் தங்களை திரித்திகொள்ள மக்களிடமிருந்தான சமிங்கை என்றே கொள்ளலாம்.
    about 20 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
    Chinnappan   Up Voted
  • Muthu.vadivel  from Salem
    நாடு எங்க போகுதுன்னு தெரில, எப்போ எல்லாம் சரி ஆகும்னு தெரில, ஒரு நாடு நல்ல இருக்கனும்ன நாட்டோட அரசியல்வாதி நல்லவரா இருக்கணும்னு எல்லாரும் சொல்லராங்க, நம்மல எத்தன பேர் நல்ல குடி மக்கள இருக்கொம்ங்கர ஆதங்கம் எனக்குள்ள இருந்து கிட்டே இருந்துச்சு, இப்போ நம்பிக்க வந்துருக்கு என் நாட்டு மக்கள் சிந்திக்க ஆரம்பிச்சுட்டாங்க சிக்கரமே எல்லாம் சரியாயிடும்னு நினைக்கிறன் பாப்போம் என்ன நடக்கும்னு
    about 21 hours ago ·   (4) ·   (0) ·  reply (0)
    Chinnappan   Up Voted
  • Chinnappan  
    ஒரு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் NOTA வில் விழுந்தால் என்ன முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல்கமிசன் தெரிவித்தால் இன்னும் அதிக வாக்குகள் NOTA வில் விழும்!

     நன்றி - த இந்து

Tuesday, May 13, 2014

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் சி.என்.என். - ஐ.பி.என்:

தமிழகத்தில் அதிமுக ஆதிக்கம்: கருத்துக் கணிப்பு தகவல்

தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளில் 22-ல் இருந்து 28 இடங்கள் வரை அதிமுக கைப்பற்றும் என சி.என்.என். - ஐ.பி.என். சேனல் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


9 கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தல் இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை பல்வேறு தொலைக்காட்சி செய்தி சேனல்கள் வெளியிட்டு வருகின்றன. 

சி.என்.என். - ஐ.பி.என். கருத்துக் கணிப்பு முடிவுகள்

 
தமிழகத்தைப் பொறுத்தவரை, மொத்தமுள்ள 39 தொகுதிகளில், முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 22-ல் இருந்து 28 இடங்களைக் கைப்பற்றும் என்று சி.என்.என். - ஐ.பி.என். சேனலின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றன. 

திமுக கூட்டணி 7-ல் இருந்து 11 இடங்களிலும், தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 4-ல் இருந்து 6 இடங்களையும் கைப்பற்றும் என அந்தக் கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கிறது. தனித்துப் போட்டியிட்டுள்ள காங்கிரஸ் ஒரு இடத்தை கூட வெல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக 39 சதவீத வாக்குகளையும், திமுக கூட்டணி 26 சதவீத வாக்குகளையும், பாஜக கூட்டணி 16 சதவீத வாக்குகளையும் பெறும் என்று சி.என்.என். - ஐ.பி.என். கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. 

டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு முடிவுகள்

 
இதனிடையே, டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேனலின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், அதிமுக 31 இடங்களைக் கைப்பற்றும் என்றும், திமுக கூட்டணி 7 இடங்களில் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், பாஜக கூட்டணி ஓர் இடத்தில்கூட வெல்லாது என்றும், காங்கிரஸ் ஓர் இடத்தைக் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் - அட்டவணையில்:
சி.என்.என். - ஐ.பி.என்: 

அதிமுக: 22 - 28
திமுக கூட்டணி: 7 - 11
பாஜக கூட்டணி: 4 - 6
காங்கிரஸ் - 0 

டைம்ஸ் நவ்: 


 
அதிமுக - 31
திமுக கூட்டணி - 7
காங்கிரஸ் - 1
பாஜக - 0
தொடர்புடையவை



நன்றி - த  ஹிந்து
  • sadhasivasaravanan  from Coimbatore
    அதிமுக அதிகம் ஆதிக்கம் செல்லுதி சாதிக்கும்.பிஜிபி மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வாதிக்கும்.பாமக வேறு கட்சி மாறும்.மதிமுக இனி பாடம் கற்கும்.விஜயகாந்த தனித்து சில திணித்து விட படுவர்.நிச்சயம் இது அதனையும் தேர்தல் முடிவு பிறகு நடக்கும்.திமுக கதி பாதி அதன் விதி.தேர்தல் கருத்து கணிப்பு என்பது சில ஊடக,மதவாத அரசியல் கட்சி திணிப்பு.உண்மை என்பது மக்கள் மனசாட்சி மட்டும் தான்
    about 18 hours ago ·   (5) ·   (1) ·  reply (0)
    Subash   Up Voted
  • manikandan Nandhu at Student from Chennai
    யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்துக்கு நன்மை கிடைக்கும் படி நம் நாடாளு மன்ற உறுப்பினர்கல் வேலைசேய வேண்டும் என்பதுதான் நம் விருப்பம்.
    about 19 hours ago ·   (2) ·   (2) ·  reply (0)
    Boopathi   Up Voted
  • manikandan Nandhu at Student from Chennai
    பிஜேபி பார்ட்டி அதிக இடங்களில் வெற்றி பெரும்
    about 19 hours ago ·   (4) ·   (4) ·  reply (0)
  • sivaagori  from Mumbai
    வாழ்க பணநாயகம்
    about 19 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
    T V · Tamilan   Up Voted
  • sivaagori  from Mumbai
    இந்த கருத்துக் கணிப்பு உண்மையானால், பணம்தான் வெற்றியை தீர்மானிக்கும் எனும் கசப்பான உண்மையை அரசியல்வாதிகள் உணர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தலில் பணநாயகத்தை அரங்கேற்றுவார்கள், பாவம் மக்கள் # எங்கள் தொகுதியில் அ.தி.மு.க ஒரு ஓட்டுக்கு 200 ரூபாய் கொடுத்தார்கள்
    about 19 hours ago ·   (3) ·   (1) ·  reply (0)
  • n krishnamoorthy  from Thiruvarur
    தமிழக பி ஜே பி சரியானத் தலைமைல்யில் ஓர் ஆண்டுக்கு முன்பிருந்தே பனி துவக்கி இருந்தால், 8~10 இடங்கள் கிடைத்திருக்கும். 2015 மாநிலத் தேர்தலுக்கு இப்போதிருந்து முனைப்புடன் செயல் பட்டால் பெரிய எய்தி கட்சியாக வைப்பு இருக்கிறது. கோமாளிக் கூட்டணிக் கூடாது.
    about 19 hours ago ·   (1) ·   (1) ·  reply (0)
  • tramakrishnan  from Richmond
    முந்தைய கணிப்பு 20 தொகுதிகளை அதிமுகவுக்குக் கொடுத்தது. இப்போது அவை 22 - 31 தொகுதிகள் என்கின்றன. வாக்குகள் எண்ணப் பட்ட பிறகு கணக்கு 40 க்கு 40 ஆகும். காங்கிரசுக்கு இந்தியா முழுதும் -0- என்பது உண்மை ஆகும். "கூடா நட்பு கேடாய் முடியும்" என்பது திமுக இளவல்களுக்கு மட்டு மன்றி திருவாளர்கள் சிதம்பரம்-வாசனுக்கும் பொருந்தும். திரு. சோ ராமசாமி 'தமிழ் நாட்டுத் தேர்தல்கள் ஈழத் தமிழர் பிரசினையால் பாதிக்கப் படுவதில்லை என்று மீண்டும் அறிக்கை விடுவார். சுப்பிரமணியம் சுவாமி மீண்டும் பாஜக - வை விட்டு விலகி இது வரை சேர்ந்திராத கட்சிக்குத் தாவுவார். அல்லது, புதிய ஒரு நபர் கட்சியை ஆரம்பித்து, தன்னுடைய பழைய ஒரு நபர்க் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து உச்ச நீதி மன்ற வாயில் படியில் அலுவலகம் துவங்குவார். தேர்தல் பண்டிதர்கள் மட்டுமே ஒவ்வொரு முறையும் தப்புக் கணக்குப் போட்டுவிட்டு வாழ் நாள் முழுதும் "தமிழகத் தேர்தல்" ஊக மேதைகள் என்று புகழ் பெறுவர்!
    about 19 hours ago ·   (8) ·   (2) ·  reply (0)
    vijai   Up Voted
  • sugumar  from Bangalore
    டாஸ்மாக் கடையல் இருந்து எழுதினீரா
    about 20 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
    THANGAMANI   Up Voted
  • Senthilkumar Senthilkumar  
    தமிழ் நாட்டில் மோடி அலை இல்லை என்பது இதன் மூலம் உறுதி பட தெரிகிறது..... மோடி... (தமிழகத்தின்) லேடி... (ஸ்டாலின்) டாடி... யார் ஜெயிப்பாங்கன்னு இன்னும் 3 நாள்ல தெரிஞ்சிடும்
    about 20 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
    Subash   Up Voted
  • Senthilkumar Senthilkumar  
    பிந்தைய கருத்து கணிப்பு எவ்வளவு உண்மை என்பது தெரிய வில்லை ஆனால் தமிழகத்தில் மோடி அலை வேலை செய்ய வில்லை என்பது உண்மையாகிறது....... காத்திருந்து பார்போம் இன்னும் 3 நாட்கள் தான் உள்ளது.......
    about 20 hours ago ·   (6) ·   (5) ·  reply (0)
    Subash   Up Voted
    selvakumar Raman  Down Voted
  • Sundaram  
    திமுக காங்கிரஸ் இரண்டுமே இந்த முறை டெல்லி இக்கு போககூடாது என்பதே தமிழ் மக்களின் ஒரு மித்த விருப்பமாகும். தமிழ் இன அழிப்பிற்கு துணை போன அணிகளுக்கு ஒரு போதும் இனி தமிழ் மக்கள் அதரவு நிலைப்பாடு எடுக்க மாட்டார்கள். தளபதி கூட நிதர்சனகளை புரிந்து கொள்ளமால் திமுக வை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்ற பாங்கில் நம்பிக்கொண்டு இருபது வியப்பை தருகிறது .கலைஞர்,தெரிந்தே செய்த வரலாற்று பிழையை, தமிழ் மக்கள் ஒருபோதும் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டார்கள் -இதற்கு ப்ரியாசித்தத்தை தளபதி தேடவேண்டும்! -சுந்தரம்
    about 20 hours ago ·   (17) ·   (17) ·  reply (1)
    vaduvooraan   Down Voted
    • vaduvooraan  from Chennai
      இவ்வளவு ஊழல் செய்து மக்களை ஏமாற்றிய கூட்டம் என்பது தெரிந்தும் இன்னும் அவருடைய பெயரை குறிப்பிடாது 'தளபதி'..'தளபதி' என்று மாய்ந்து போகிறீர்களே, உங்களைப் போன்ற ஆதரவாளர்கள் இருப்பதால்தான் உங்கள் தளபதி நிதர்சனங்களை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார், புரிகிறதா?
      about 19 hours ago ·   (3) ·   (0) ·  reply (0)
  • siva  from Chennai
    எப்படியோ தமிழ் மக்கள் திரு மோடிக்கு 'நல்ல ஆதரவு' கொடுத்து உள்ளனர்..தமிழன் ஏமாறவில்லை..
    about 20 hours ago ·   (3) ·   (3) ·  reply (0)
    n krishnamoorthy  Down Voted
  • haani  
    பணம் ஆதிக்கம் செலுத்துகிறதோ ?
    about 20 hours ago ·   (2) ·   (1) ·  reply (0)
  • Ramesh Sargam at Deccan Chronicle Holdings Limited from Bangalore
    தமிழகத்தில் அதிமுக ஆதிக்கம் தொடரட்டும். கருணாநிதியை விட்டு யாரும் எதிர்க்க மாட்டார்கள். ஆனால் மக்களுக்கு செய்யவேண்டியதை தொடர்ந்து செய்யட்டும்.
    about 20 hours ago ·   (2) ·   (2) ·  reply (0)
    Sundaram   Down Voted
  • SHAN  from Nagapattinam
    விலைவாசி உயர்வு,tasmac,மின்,பஸ் கட்டண உயர்வு மின்சார பற்றாகுறை இவைகளை மீறி aiadmk ஜெயிப்பதற்கு காரணம் கருணா தான் 1.குடும்ப ஆட்சி 2.இலங்கை தமிழர் பிரச்சினை 3.2G
    about 20 hours ago ·   (2) ·   (1) ·  reply (0)
  • Pandiyan Chinnaiyan at South Central Railway-S.C.R 
    ஆக்க பொறுத்த நாம் ஆற பொறுக்கவேண்டும். திராவிட கட்சிகள் பெரும் வெற்றியால் அக்கட்சிகளுக்கு வேண்டுமானால் பலன் பெற கூடும்.தமிழ் நாட்டுக்கு ஏதும் பலன் கிடைக்காமல் போக வாய்ப்பு அதிகம்.மத்தியில் பூரண மெஜாரிட்டியுடன் ஒரு கட்சி ஆட்சி அமைத்து நிலையான அரசாங்கம் தந்தால்தான் மக்களுக்கு நல்லது.எந்த கட்சி ஆட்சியை கைப்பற்றினாலும் மோதல் போக்கை கைக்கொள்ளாமல்,அரசியல் முதிர்ச்சியுடன் அனைத்து மாநிலங்களுடனும் இணைந்து மக்களாட்சியை மக்களுக்காக நடத்தினால் நாடும் நன்றாக இருக்கும்.இந்தியாவின் மதிப்பும் மறுபடியும் பாரத்தின் புகழ் ஓங்கும்.
    about 21 hours ago ·   (2) ·   (1) ·  reply (0)
  • rafi  
    அம்மா உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டு கருத்துக்கணிப்பு நடத்தினார்களா?
    about 21 hours ago ·   (8) ·   (0) ·  reply (0)
    D.Thirumalai kumar · Tamilan   Up Voted
  • selvakumar Raman Scientist (Agricultral Research Service) at Indian council of agricultural research from New Delhi
    கருது கணிப்பு பொய்க்கும்,
    about 21 hours ago ·   (2) ·   (2) ·  reply (0)
    selvakumar Raman  Up Voted
  • sanjeevi  
    50%மக்கள் யாருக்கும் ஆதரவு தராமல் உள்ளனர்.அவர்களின் கருத்தை யாரிடமும் தெரிவிக்கமாட்டார்கள்.
    about 21 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • Premnath Krishnan Managing Partner at BAKM lifestyle from Bangalore
    என்கிட்டே கேக்கவே இல்ல.. அப்புறம் எப்படி முடிவு பண்ணிங்க
    about 21 hours ago ·   (5) ·   (0) ·  reply (0)
  • BGI BGI  
    Great ....admk surely sweeps
    about 21 hours ago ·   (0) ·   (1) ·  reply (0)
    THANGAMANI   Down Voted
  • D.Anandaraj  from Mumbai
    பண நாயகம் வெற்றி அடைவதில் வியப்பு என்ன? நீதிமன்றமே அடிபணியும் போது மக்கள் சலனம் அடைய மாட்டார்களா?
    about 21 hours ago ·   (3) ·   (3) ·  reply (0)
  • Thirumurthy Yogaamurthy Technician at TNEB from Bangalore
    30 அதிமுக வெல்லும்
    about 21 hours ago ·   (5) ·   (5) ·  reply (0)
    THANGAMANI   Down Voted
  • tamil  
    வரவேற்க வேண்டிய தீர்ப்பாய்.. தெரிகிறது...இந்த தேர்தலுக்கு பிந்திய... கணிப்பு....ஆயினும்...திமுக வுக்கு இந்த இடங்களே... அதிகம்...மக்கள்...இன்னும் தெளிவடைய வில்லையோ... என்றே..தோன்றுகிறது...ஏனெனில்..திமுக வுக்கு மக்கள் தரும்.. அங்கீகாரம்...ஒரு போதும் தமிழக நலனுக்கு பயன் படாது.... இதுவே...கசப்பான உண்மை....
    about 21 hours ago ·   (17) ·   (21) ·  reply (0)
    THANGAMANI   Down Voted
  • முகம்மது  
    கணிப்புகள் தவறிவிட்டால் இந்த பத்திரிக்கைகள் என்ன சப்பை கட்டு கட்டுவார்கள்........

Monday, April 28, 2014

2014 -ன் பாரதப்பிரதமர் மோடி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி @ த ஹிந்து

பாஜக அரசு அமைந்தால் அனைவருக்கும் பாதுகாப்பு: மோடி உறுதி

மக்களவைத் தேர்தலில் வெற்றி பாஜக தலைமையிலான அரசு அமைந்தால், மத பேதமின்றி அனைவரின் பாதுகாப்புக்கும் உறுதிபூண்டுள்ளதாக, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி தெரிவித்தார். 

மதவாதம், அதிகாரம் மற்றும் பணம் ஆகியவற்றின் ஆபத்தான கலவையே பாஜகவின் கொள்கைகள் என்றும், இந்தியாவை சொர்க்கமாக்கப் போவதாக மோடி கூறிவருவதாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். 

என்னிடம் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இல்லை...

 
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு மோடி அளித்த பேட்டியில், சோனியாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தவர், "மக்களவைத் தேர்தலில் 100 இடங்களிலாவது கைப்பற்ற மாட்டோமா என்ற விரக்தியில் அவர் இப்படி பேசி வருகிறார். 

இந்தியாவை சொர்க்கமாக்குவேன் என்றும், எல்லா பிரச்சினைகளுக்கும் என்னிடம் தீர்வுகள் இருக்கின்றன என்றும் நான் ஒருபோதும் சொன்னதில்லை. மக்களுடம் என்னிடம் இருந்து இவற்றை எதிர்பார்க்கவில்லை என்றே நம்புகிறேன். ஆனால், மக்கள் விரும்புவதுபோல் உறுதியானதும் நீடித்ததும், உணர்வுப்பூர்வமான அரசைத் தரமுடியும் என்று நம்புகிறேன்." 


சமீபகாலமாக பிரியங்கா காந்தி கடுமையாக சாடி வருவது குறித்து கேட்டதற்கு, "தன் அம்மாவுக்காக ஒரு மகளும், தன் சகோதரனுக்காக ஒரு சகோதரியும் பேசுவது என்பது இயல்பானது. இதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை" என்றார். 


மதசார்பின்மை எது..?

 
தேர்தலுக்குப் பிறகு ஆதரவு தேவைப்படலாம் என்றச் சூழலிலும், மம்தா பானர்ஜி, ஜெயலலிதா மற்றும் மாயாவதி முதலான தலைவர்களுடன் பிரச்சாரக் களத்தில் மோதல் போக்கு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மோடி, "நாங்கள் 25-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து வலுவான நிலையில் இருக்கிறோம். மத்தியில் ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி பெறும் என நம்புகிறேன். அதேவேளையில், நாட்டை வழிநடத்த அனைவரின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்" என்றார். 


இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதியை கடுமையாக விமர்சித்தபோது, "இது கடைசி நேர முயற்சி. முழுக்க முழுக்க வாக்கு வங்கி அரசியல் இது. மதசார்பின்மை என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரஸின் உண்மையான முகம் வெளிப்பட்டுவிட்டது என்றே சொல்வேன்" என்றார் மோடி. 


நாட்டில் தனக்கு ஆதரவான அலையும், காங்கிரஸ் எதிர்ப்பு அலையும் ஒருசேர காணப்படுவதாக குறிப்பிட்ட மோடி, குஜராத் கலவரம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கவில்லை. 


அதேவேளையில், மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கும்போது, தன் மீது ஊழல், நிர்வாகத் திறமையின்மை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஏதுமில்லாத காரணத்தினால்தான் எதிரணியினர் குஜராத் கலவர விவாகரத்தைக் கையிலெடுத்துக் கொள்வதாக குறிப்பிட்டார். 


அனைவருக்கும் பாதுகாப்பு... 


பாஜக ஆட்சி அமைத்தால், நாட்டில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்ற கேள்வியை எதிர்கொண்டவர், "இஸ்லாமியர்களை வாக்கு வங்கிகளாகக் கருதுபவர்கள்தான், அவர்களது முன்னேற்றத்தைப் பற்றி கவலைப்படாமல், பாதுகாப்பு குறித்து தேவையில்லாமல் பேசுகிறார்கள். அதுபோல் இனி அரசியல் செய்ய முடியாது. 


இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் என 125 கோடி இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், முன்னேற்றத்துக்கு வழிவகுக்கவும் நாங்கள் உறுதிபூண்டிருக்கிறோம். 'அனைவரின் ஆதரவுடன், அனைவரின் முன்னேற்றம்' என்பதுதான் எங்களது தாரக மந்திரம்" என்று கூறினார். 


ஊழல் பிரச்சினையை எதிர்கொள்வது குறித்து அவர் கூறும்போது, "தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நாட்டில் ஊழலையும் கிரிமினல் நடவடிக்கைகளையும் ஒழிப்பதற்காக உரிய திட்டங்களை வகுத்திருக்கிறேன். முதலில், குற்ற வழக்குகள் உள்ள எம்.பி.க்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வகை செய்வேன். குற்றம் செய்தவர்கள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்படுவது உறுதி" என்றார். 


தேசப்பற்று... 


கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மோடி, "நான் முதலில் இந்தியன். அப்படித்தான் என்னைப் பார்க்க விரும்புகிறேன். அதன்பின், நம்பிக்கையின் அடிப்படையில் இந்து. இதில் பெருமிதம் கொள்கிறேன். என் தேசத்தை நான் நேசிக்கிறேன். எனவே, நீங்கள் என்னை தேசப்பற்று மிக்கவன் என அழைக்கலாம்" என்றார் மோடி. 


முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, மோடி தன்னை 'இந்து தேசியவாதி' என்று அழைத்துக்கொண்டது நினைவுகூரத்தக்கது. 


ன்றி - ிந்த
 
 
  • கண்டிப்பாக பிஜேபி கூட்டணி இந்த தேர்தலில் 300 எம்பி சீட்கள் பெரும். கடந்த 5 வருடங்களைபோன்ற கேவலமான ஆட்சியை பார்க்கவே முடியாது. அப்படியிருக்கும்போது மக்கள் எப்படி கை சின்னத்திற்கு வோட்டளிப்பார்கள்..? கேரளா, கர்நாடகா, அஸ்ஸாம், அருணாச்சல், ஹிமாச்சல், உத்தர்கண்ட் தவிர வேறெங்கும் அவர்களால் ஜெயிக்க முடியாது..!
    about a month ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • saeramaan nadunilai  from Bry-sur-marne
    நான் முதலில் ஹிந்துத்வா வெறியன் .இந்தியன் என்பது சராசரி ஹிந்துக்களை ஏமாற்ற .
    about a month ago ·   (2) ·   (0) ·  reply (0)
  • A.SAHABUDEEN Abdul Samad Distribution at Canadian University of Dubai from Abu Dhabi
    மோடி ஒரு கேடிதான், மோடியை நம்பினால் இந்தியா இன்னும் கெட்டுப்போகும், மோடியை தவிர இந்தியாவில் வேறு அறிவாளிகள் இல்லையா? குஜராத்தில் மோடி செய்ததாக சொல்லும் சாதனைகள் எல்லாம், பல ஆண்டுகள் காங்கிரஸ் அரசு செய்த சாதனைகளைத்தான் மோடி செய்ததாக சொல்கிறார்கள்.
    about a month ago ·   (0) ·   (2) ·  reply (0)
  • Thiru Moorthy at The Domotics from Coimbatore
    நான் பாஜகவின் தொண்டன் அல்ல .. மோடியின் தீவிர ரசிகனும் அல்ல .. ஆனால் , இந்தியாவை நல்ல வழியில் அரசாள மோடியால் மட்டுமே முடியும் என்பதனை நிச்சயமாய் நம்புகிறவன்.
    about a month ago ·   (3) ·   (0) ·  reply (0)
  • SHAHUL  
    அவநம்பிக்கையை யும் ,அச்சத்தையும் விதைத்து ,இவர் மட்டும் தேசியவாதி போன்றும் தோற்றம் காட்டி வெற்றி பெற முனைகிறார் ,மேலும் அரசியல் ரீதியாக ஐம்பது வருடங்களுக்கு மேலாக காங்கிரசை வெற்றி கொள்ள இயலாமல் ,இளைங்கர்கள் மனதிலே பயங்கரவாதம் தீவிரவாதம் என்று புகட்டி மத பிரிவினையை தூண்டி விட்டு வெற்றி பெற ஆர் எஸ் எஸ் போட்ட கணக்கின் முதல் படி தான் மோடி ,இந்திய தேசியம் கண்டிப்பாக உறுதியாகவும் அமைதியாகவும் இருக்கும் மோடி போன்றவர்கள் இல்லாது வரை
    about a month ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • தீர்ப்பு  from Dubai
    நான் ஒரு இந்து தேசியவாதி என்று சொன்னவர் இப்போது தேர்தல் நடை பெற்று வருவதால் நான் முதலில் ஒரு இந்தியன் என்று மெதுவாக உறுமுகிறார் இந்த ரெட்டை நாக்கு மோடி.என்னமோ இந்த நாட்டில் வாழும் 125 கோடி மக்களும் ஜப்பான் நாட்டை சார்ந்தவர்கள் மாதிரியும் தான் மட்டும் உத்தம புத்திரனை போலவும் நினைக்கிறார் இந்த மோடி மஸ்தான். இவருடைய வண்டவாளத்தில் தன்னுடைய மனைவியை மறைத்ததில் இருந்தே இவர் எப்படி பட்ட பேர்வழி எனபது நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது.
    about a month ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Vasudevan Venugopal  from Chennai
    அறிவுபூர்வமான ஆதர்சனமான காழ்ப்பு உணர்ச்சி அற்ற பதில்கள். பிரதமர் ஆனால் மோதி அவர்கள் நடு நிலையாகவும் ராஜ தர்மம் பிறழாமலும் நடந்துகொள்வார் என எதிர்பார்ப்போம். அவர்மேல் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைகளைக் காப்பாற்றுவார் என நம்புவோம்.
    about a month ago ·   (5) ·   (5) ·  reply (0)
    sb   Up Voted
  • Ahmad  from Jeddah
    ஒரு வேளை முஸ்லிம்கள் குஜராத் கலவரத்துக்காக மோடியை மன்னித்துவிடுவார்கள் என்று வைத்துக் கொண்டாலும்,அவர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக அவர்கள் பிஜேபி ஐ எந்தெந்த விஷயங்களுக்காக கண்டு அஞ்சுகிறார்களோ,அவற்றில் நாங்கள் ஈடுபட மாட்டோம் என்று வாக்குறுதி கொடுக்க வேண்டியது இந்த மோடி?அதை விட்டுவிட்டு மீண்டும் ராமர் கோயில் கட்டுவோம்,பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்று அவர்களை மிரட்டும் மோடி எப்படி அனைவருக்கும் பாதுகாப்பான ஆட்சி அமைப்போம் என்று சொல்லுகிறார்?
    about a month ago ·   (3) ·   (1) ·  reply (0)
  •  SASIKUMAR SASIKUMAR  from Kolkata
    Contradictory statements.... By modi Before Hindu nationalist Now Indian
    about a month ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Natarajan Mohan Business Man at Driving from Riyadh
    தண்ணீரின் நடுவே ஆதரவின்றி தவிப்பனுக்கு கிடைத்த துரும்புதான் மோடி
    about a month ago ·   (1) ·   (1) ·  reply (0)
    sb   Up Voted
    Ahmad   Down Voted
  • இளைய சே  from Riyadh
    சாருக்கு ஒரு ஆஸ்கர் பார்சல்
    about a month ago ·   (1) ·   (1) ·  reply (0)
  • raajaa  from Sharjah
    செய்தியின் தலைப்பில் ஒரு சிறிய திருத்தம், "பா.ஜ.க. அரசு அமைந்தால் பா.ஜ.க.வினர் அனைவருக்கும் பாதுகாப்பு : மோடி உறுதி" என்றிருந்திருக்க வேண்டும்!