Showing posts with label பேட்டி. Show all posts
Showing posts with label பேட்டி. Show all posts

Saturday, November 28, 2015

ஆண்களுக்கும் இது அரிய வாய்ப்பு!- ‘ரா ஒன்’ /‘இஞ்சி இடுப்பழகி’. கதாசிரியர் கன்னிகா திலோன் பேட்டி

  • கன்னிகா
    கன்னிகா
ஆர்யா மற்றும் அனுஷ்கா நடிப்பில் இன்று வெளியாகும் படம் ‘இஞ்சி இடுப்பழகி’. இந்தப் படத்தின் ட்ரைலரில், உடல் பருமன் கொண்ட பெண்ணாகக் காட்சியளித்து அதிர்ச்சி தருகிறார் அனுஷ்கா. “உடல் எடை கூடுதலாக இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்வைச் சுற்றி நடக்கும் கதை இது.


அவள் எதிர்கொள்ளும் வாழ்க்கை யதார்த்தமும் நகைச்சுவையும் கலந்ததாகத் திரைக்கதையை வடிவமைத்திருக்கிறேன். வாழைப்பழத்தில் ஊசியேற்றும் வித்தை இதில் இருக்கிறது என்று கூறலாம்” என்கிறார் இந்தப் படத்தின் 29 வயது கதாசிரியரான கன்னிகா திலோன். இவர் லேசுபட்ட ஆளில்லை. எந்திரனுக்குப் போட்டியாக ஷாருக் கான் நடித்துத் தயாரித்த ‘ரா ஒன்’ படத்தின் திரைக்கதையில் பணியாற்றியவர். அவரிடம் உரையாடியதிலிருந்து...


திரைக்கதை எழுத்தாளராக உங்கள் பயணம் எப்படித் தொடங்கியது?



இந்திய சினிமாவில், பெண் திரைக்கதை எழுத்தாளர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். நான் பல புத்தகங்கள் வாசிப்பேன். சிறு வயதிலிருந்தே புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. நிறைய படிப்பதால், நிறைய எழுதுவேன். இரண்டு நாவல்கள் எழுதி வெளியிட்ட பின்னர், பாலிவுட்டில் ஷாருக் கான் நடித்த ‘ஓம் சாந்தி ஓம்’ படத்துக்கு இயக்குநர் ஃபரா கான் உதவியாளராகப் பணியாற்றினேன். பின்னர் ‘ரா-ஒன்’ திரைப்படத்துக்குத் திரைக்கதை, வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. திரைத்துறையைப் பற்றிய புரிதலும் ஆர்வமும் இருந்ததால் அங்கு தொடங்கிய பயணம் டோலிவுட்டுக்கும் கோலிவுட்டுக்கும் தொடர்ந்தது. ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்கான திரைக்கதையை எழுதியுள்ளேன்.



இந்தப் படத்தின் முதன்மைக் கதாபாத்திரத்தை உருவாக்க உங்களைத் தூண்டியது எது?



ஸ்வீட்டி (அனுஷ்கா) கதாபாத்திரம் ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு ஏன் நம் வீட்டிலேயே நம்மோடு வாழ்கிற கதாபாத்திரம்தான். நான் சந்தித்த பெண்கள், தோழிகள், குடும்பப் பெண்கள் எனப் பலரும் தங்கள் உடல் எடை கூடுதலாக இருப்பதால் உணவுப் பழக்க வழக்கங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றனர். அவர்களால் நினைப்பதை ருசிக்க முடிவதில்லை. தினந்தோறும் உடற்பயிற்சி, யோகா எனப் பல வழிகளில் உடல் எடை குறைக்க நேரம் செலவிடுகின்றனர். சுற்றி இருப்போரின் நகைச்சுவைக்கு இலக்காக மாறிவிடுகின்றனர்.



நான் பார்த்த, கவனித்த நிகழ்ச்சிகள் அவர்களைத் தாண்டி ஒரு சக பெண்ணாக என்னையும் பாதித்தன. ஒரு பெண் தன்னுடைய தோற்றத்தின் காரணமாக சமுகத்தால் எப்படிக் கையாளப்படுகிறாள் என்பது எனக்குப் புரிந்தது. அதை வைத்தே ஸ்வீட்டி கதாபாத்திரத்தைச் சித்தரித்தேன். மிக யதார்த்தமாகவும், க்யூட்டாகவும், தன் வாழ்க்கை அனுபவங்களை மிக உற்சாகமாகவும் தைரியமாகவும் எதிர்கொள்ளும் கதாபாத்திரமாக அதை அமைத்தேன்.



இந்தக் கதாபாத்திரத்தைத் திரையில் காணும் பெண் பார்வையாளர்கள் மனதில் தாழ்வுணர்ச்சி ஏற்படுமா?


உடல் எடை கூடுதலாக இருக்கும் பெண்கள் படம் பார்க்கும்போது, கண்டிப்பாக அவர்களை இது நெகட்டிவாக பாதிக்காது, புண்படுத்தாது. ஏனெனில், படம் முழுவதும் ஜாலியாகவும் துருதுருப்பாகவும் ஸ்வீட்டி வருவாள். இன்னும் சொல்லப் போனால், படத்தில் உடல் எடை கூடுதலாக இருக்கும் பெண்ணின் பாசிட்டிவ் சித்தரிப்பாக இந்தக் கதாபாத்திரம் இருக்கும்.



படம் பார்த்த பிறகு மிக உற்சாகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் எடை கூடிய ஒவ்வொரு பெண்ணும் தன்னை மேலும் நேசிக்கத் தொடங்குவாள். அப்படியானால் இது எடை கூடிய பெண்களுக்கான படம் மட்டும்தானோ என்று எண்ணிவிடாதீர்கள். இது நம் சமூகத்துக்குத் தேவையான படம். சிரித்துக்கொண்டே கொஞ்சம் சீரியஸாகக் கற்றுக்கொள்ளவும் நேசிக்கவும் தோள் மீது கைபோட்டுச் சொல்லித்தரும் படம்.


அனுஷ்கா கதாபாத்திரத்தைத் திரையில் காண்பிக்க ஸ்பெஷல் மேக் அப் தந்திரங்கள் பயன்படுத்தப்பட்டனவா?


ஹிரோயின் என்றால் ஸ்லிம்மாகவும் மாடர்ன் ஆகவும் சித்தரிக்கப்படும் இந்தக் காலத்தில், இக்கதையைத் தேர்வுசெய்து நடித்த அனுஷ்கா பாராட்டுக்களை அள்ளுவார் என்பதில் சந்தேகமில்லை. ஒரு திரைக்கதை எழுத்தாளராக நான் எதிர்பார்த்த அளவுக்கும் மேலாகவே அனுஷ்கா இந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருந்தி அருமையாக நடித்துள்ளார். அனுஷ்கா இந்தப் படத்தில் தன்னுடைய முழு உழைப்பைத் தந்துள்ளார்.
ஸ்பெஷல் மேக்-அப் ட்ரிக்ஸ் ஒருசில காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றாலும், முகத்தில் எல்லாம் ஸ்பெஷல் மேக் அப் போட்டு சதைப்பிடிப்பான தோற்றத்தைக் கொண்டுவர முடியாது என்பதால் ‘வர்க் அவுட்’ செய்து உடல் எடையை ஏற்றியுள்ளார். நான் கதாபாத்திரத்தைச் சித்தரித்த விதத்தை இயக்குநர் பிரகாஷ் முழுமையாக ஏற்று அதற்கேற்ப படம் இயக்கியுள்ளார்.



படம் பார்த்த பிறகு ஸ்வீட்டி அனுஷ்கா மனதில் நிற்கும் கதாபாத்திரமாக இருப்பார். எடை கூடிய பெண்கள் எவ்வளவு அழகு என்பதைப் புரிந்துகொள்ள ஆண்களுக்கும் இந்தப் படம் ஒரு மயிலிறகு வருடலாக இருக்கும்.

-தஹிந்து

Monday, October 19, 2015

‘அலுங்குறேன் குலுங்குறேன்/புகழ்/ பாடலாசிரியர் மணிஅமுதவன் பேட்டி

‘நெடுஞ்சாலை’ படத்தில் ’இஞ்சாதே’, ‘கோலிசோடா’ படத்தில் ’ஆல் யுவர் பியூட்டி’, ‘சண்டிவீரன்’ படத்தில் ‘அலுங்குறேன் குலுங்குறேன்’ இப்படியான பாடல்களை எழுதி ரசிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் மத்தியில் பேசப்படும் பாடலாசிரியராக உயர்ந்து வருகிறார் மணிஅமுதவன்.
‘‘ரசிகனிடம் எதையும் திணிக்கக் கூடாது. பாடல்களும் அப்படித்தான் இயல்பாக உணரும் வகையில் எழுதப்பட வேண்டும். இணையம், வாட்ஸ் அப் என்று எல்லா இடங்களிலும் தமிழைக் கொண்டாடுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் பாடல் எழுதுவது சுகமாகவே இருக்கிறது’’ என்று பேசத் தொடங்கினார்...
எப்போது பாடலாசிரியராக அறிமுகமானீர்கள்?
என்னோட முதல் படம் பாக்கியராஜ் சார் இயக்கிய ‘சித்து பிளஸ் டூ’. கவிஞர்களின் வேடந்தாங்கல் அவர். அவரிடம் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. ‘சித்து பிளஸ் டூ’ படத்தில் இரண்டு பாடல்கள் எழுதும் வாய்ப்பை வழங்கினார். ஒருமுறை ஏ.டி.எம் மையம் ஒன்றில் இசையமைப்பாளர் சத்யாவைச் சந்தித்தேன்.
அந்த அறிமுகம் அவர் இசையமைத்த ‘நெடுஞ்சாலை’ படத்துக்குப் பாடல் எழுதும் வாய்ப்பைப் பெற்றுத்தந்தது. முதலில் ஒரு பாடலுக்கு வாய்ப்புக் கொடுக்க, ‘இஞ்சாதே’ பாடலை எழுதினேன். அது அவருக்கும் இயக்குநருக்கும் பிடித்துப்போனதால் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதும் வாய்ப்பைக் கொடுத்து என்னைத் திக்குமுக்காட வைத்துவிட்டார்கள். அந்தப் படம் எனக்கு முகவரியாகிவிட்டது.
விரைவில் வெளியாகவிருக்கும் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் பாடல் எழுதியிருக்கிறீர்கள் போலிருக்கிறதே?
ஆமாம்! விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான ‘கோலிசோடா’ படத்தில் ’ஆல் யுவர் பியூட்டி’, ‘ஜனனம்.. ஜனனம்..’ ஆகிய பாடல்களை எழுதினேன். ‘ஜனனம்’ பாடலைக் கேட்டுவிட்டு இயக்குநர் பாலாஜி சக்திவேல் அழைத்துப் பாராட்டினார். என்னை மறுபடியும் கைதூக்கிவிடும்விதமாக ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் இரண்டு பாடல்களை எழுதும் வாய்ப்பை விஜய்மில்டன் தந்தார். ‘சண்டிவீரன்’ படத்துக்கு டெமோ மாதிரி காட்டலாம் என்று இசையமைப்பாளர் அருணகிரியும் நானும் இயக்குநர் சற்குணத்தை சந்தித்தோம்.
நாங்கள் காட்டிய டெமோ அவருக்குப் பிடித்துப்போனதால் எங்களையே படத்தில் பணியாற்ற வைத்தார். ‘அலுங்குறேன்… குலுங்குறேன்’ பாடல் வாய்ப்பும் அப்படித்தான் அமைந்தது. விஜய்மில்டன், சற்குணம் மாதிரியான இயக்குநர்கள் என்னை மிகவும் சிந்திக்கவும் கற்பனை செய்யவும் தூண்டும் இயக்குநர்களாக இருக்கிறார்கள். இது என் அதிர்ஷ்டம்தான்.
சினிமாவுக்குப் பாடல்கள் தேவையா?
பாடல்கள் என்பவை நம் பண்பாட்டின் முக்கியப் பகுதி. நம் மொழிக்கு ஏணி. ஆனால் திரைப் பாடல்கள் கதையோடு பயணிக்க வேண்டும். அப்படிச் செய்தால் அது கதையில் ஒரு பகுதியாகிவிடும். கதையின் வேகத்தைத் தடுப்பதாகவோ, செயற்கையாக சேர்ப்பதாகவோ அமைந்துவிடக் கூடாது. அதேபோல ஒரு திரைப்படத்தின் திரைக்கதையில் எல்லா இடங்களிலும் வசனத்தாலும், காட்சியாலும் சுவை கூட்டிவிட முடியாது.
சில கதாபாத்திரங்கள் வசனத்தால் சொல்ல முடியாத உணர்வைப் பாடல் வரிகள் இலகுவாக வெளிப்படுத்திவிடும். அதேநேரம் பாடல்கள் தேவைப்படாத திரைக்கதைகள் அதிகரிக்கும்போது அங்கே பாடல்களின் இடத்தைப் பின்னணி இசை எடுத்துக் கொள்கிறது. அதுபோன்ற சினிமாக்களும் நம்மிடம் இருக்கிறதே!
சில பாடல்களில் ஆபாசமாக வார்த்தைகள் பயன்படுத்தும் சூழல் தொடர்கிறதே?
நம்மைச் சுற்றி நல்ல விஷயங்களும் இருக்கு. விஷமும் இருக்கு. இதுவும் கடவுள் படைத்ததுதானே என்று நாம் விஷத்தை எடுத்துக் குடித்துவிடுவதில்லை. அது மாதிரி இதையும் தவிர்த்துவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்வது நமக்கு நல்லது. அதேநேரம் இதுபோன்ற பாடல்களைப் பேருந்துகள், தொலைக்காட்சிகளில் போடாமல் இருப்பது நாளைய சமூகத்துக்கு நாம் செய்கிற நன்மை.
நீங்கள் இசையமைக்கவும் செய்வீர்களாமே?
சிறுவயதிலிருந்தே இசையமைக்கும் ஆர்வம் உண்டு. ஏழாம் வகுப்பில் தொடங்கி பாட்டுப்போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்கியிருக்கிறேன். அப்போது கிடைத்த ஊக்கம் தொடர்ந்து என்னை அந்தப் பாதையிலேயே நகர்த்திச் சென்றது. சொந்த ஊர் திருச்சி அருகில் உள்ள திருத்தலையூர் கிராமம். எனக்கு ஐந்து வயதாக இருக்கும்போது அப்பா இறந்துவிட்டார்.
அப்பா இல்லாத தனிமையைப் போக்க நானே ஏதாவது வரிகளை போட்டு பாட்டாக மெட்டமைத்து பாடிக்கொண்டே இருப்பேன். வீட்டில் அம்மா, இரண்டு சகோதரிகள். நான் அவர்களுக்கு சுமையாகிவிடக் கூடாது என்பதற்காகப் பன்னிரெண்டாம் வகுப்புடன் முடித்துக்கொண்டேன். தற்போது முறையாக இசை படித்து வருகிறேன். தனி இசை ஆல்பம் ஒன்றை வெளியிட வேண்டும் என்ற ஆவல் எனக்கும் உண்டு.
தற்போது பணியாற்றும் படங்கள்?
‘உறுமீன்’, ‘இறைவி’, ‘யானும் தீயவன்’, ‘மரகத நாணயம்’, ‘வீர தீர சூரன்’, உள்ளிட்ட பல படங்களுக்கு எழுதி வருகிறேன்.

தஹிந்து

Monday, July 27, 2015

சிவகார்த்திகேயன் + பி.சி.ஸ்ரீராம்+ ரசூல் பூக்குட்டி+அனிருத் = பிரம்மாண்டமான புதுப்படம்

ஆர்.டி.ராஜா
ஆர்.டி.ராஜா
ஹாலிவுட் திரைப்படங்களில் நட்சத்திரங்களுக்கு இணையாக முக்கியத்துவம் பெறுவது திரைக்கதை. அங்கு பிரதான வேலையாக ‘ஸ்க்ரிப்ட் டாக்டர்’ என்ற கதை விவாதப் பணி பின்பற்றப்பட்டு வருகிறது. இது தமிழ் சினிமாவில் முன்பே இருந்ததுதான். இடையில் சில காலம் இதன் முக்கியத்துவம் குறைந்திருந்தது. தற்போது மீண்டும் அது முக்கியத்துவம் பெற்று வருகிறது.
அந்த வகையில் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் படங்களின் படப்பிடிப்புக்கு பின் அதை சரியே முறைப்படுத்துவது, படத்தின் புரோமோஷனுக்கு யோசனைகள் கொடுப்பது என்று பிஸியாக இருந்து வருபவர், ஆர்.டி.ராஜா. இவர் தற்போது சிவகார்த்திகேயனின் அடுத்தப்படத்தின் தயாரிப்பாளராகவும் உருவெடுத்திருக்கிறார்.
பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, ‘ஐ’ பட மேக்கப்மேன் ஸீன் ஃபுட், அனிருத் எனப் பிரமிக்க வைக்கும் கூட்டணியில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ‘24 ஏ.எம். ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கும் ஆர்.டி.ராஜாவை சந்தித்தோம்:
சிவகார்த்திகேயனின் படத்தை தயாரிக்கும் வாய்ப்பு எப்படி அமைந்தது?
‘மெரினா’ படம் முடித்த உடனேயே, “அடுத்த படத்தை நீங்களே தயாரிக்கலாமே” என்று சிவா என்னிடம் கூறினார். அதன் பிறகும் பலமுறை கூறினார். சில காரணங்களால் தள்ளிப்போன அந்த விஷயம் இப்போது கைகூடி வந்திருக்கிறது. சிவகார்த்திகேயனை ஒரு நடிகராக மட்டும் பார்க்க முடியாது. அவர் ஒரு உதவி இயக்குநரும்கூட. திரைக்கு வருவதற்கு முன்பே சின்னத் திரையிலும் பெரிய திரையிலுமாக, பல படைப்புகளில் அவர் உதவி இயக்குநராக வேலை பார்த்திருக் கிறார். அவரை வைத்து ஒரு படம் தயாரிப் பதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
அவர்தான் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் என்றும் ஒரு பேச்சு இருக்கிறதே?
இந்திய அளவில் இன்றைக்கு 90 சதவீத நடிகர்கள் தயாரிப்பாளராக இருக்கிறார்கள். தமிழிலும் தனுஷ், ஆர்யா, விஷால், ஜீவா, விஜய் சேதுபதி என்று நிறைய ஹீரோக்கள் தயாரிப்பாளராக இருக்கிறார்கள். அப்படி யிருக்க சிவாவும் தயாரிப்பாளராக மாறுவதில் தப்பில்லை. ஆனால் அவருக்குத் தயாரிப் பாளராகும் எண்ணமில்லை. சிவா இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்றால் அதை மறைக்க வேண்டிய அவசியமே இல்லை.
பி.சி.ஸ்ரீராம் தொடங்கி ரசூல் பூக்குட்டி வரையிலான பிரமாண்ட கூட்டணியை எப்படி அமைத்தீர்கள்?
பி.சி.ஸ்ரீராமுக்கு நாங்கள் ஸ்க்ரிப்ட் புக்கையே கொடுத்தோம். அவருக்கு கதை மிகவும் பிடித்ததிருந்தால் சம்பளத்தைக்கூட ஒரு பொருட்டாக அவர் நினைக்கவில்லை. ‘இது உங்களோட முதல் படம் ராஜா. நல்ல டீம். அதனால எனக்குப் பெரிய சம்பளம் வேணாம்’ என்று சொன்னார். சிவாவின் மேக்கப் டெஸ்டுக்காக ஆறரை மணிக்கு மேக்கப்மேன் ஸீன் ஃபுட் வருவார் என்றால் பி.சி.சார் அங்கே ஐந்தரைக்கே வந்திடுவார்.
‘மொழிங்கிறது அறிவு கிடையாது. நீ என்ன விரும்பினாலும் என்கிட்ட சொல்லு. நான் மேக்கப்மேனுக்கு அதை இங்கிலீஷ்ல சொல்லிடுறேன்’ன்னு புது இயக்குநர் பாக்யராஜுக்கு தைரியம் கொடுக்குறார். யார் கொடுப்பாங்க இப்படியொரு உற் சாகத்தை இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் பி.சி.சார்.
மும்பைக்குப் போய் ரசூல் பூக்குட்டிக்கு கதை சொன்னோம். ‘இந்தக் கதையில எனக் கான வேலை அதிகம். நிச்சயம் பண்றேன்’ என்று அவர் சொன்னார். மேக்கப் மேன் ஸீன் ஃபுட்டுக்கு மொத்த ஸ்க்ரிப்டையும் மெயில் பண்ணினோம். அவருக்கும் பிடித்திருந்தது. இப்படித்தான் கதைக்கு ஏற்ற டெக்னீஷியன்களை ஒருங்கிணைத்தோம்.
நீங்கள் பல நிறுவனங்களுக்கு ஸ்க்ரிப்ட் டாக்டராகப் பணியாற்றி இருக்கிறீர்கள். எடுத்த படத்தை பிறரிடம் காட்டி சரி செய்யும் இந்த ஹாலிவுட் ஐடியா இப்போது தமிழ்த் திரையுலகுக்கும் வந்துவிட்டதா?
இந்த ஐடியா ஹாலிவுட்டுக்கு எப்போது வந்ததோ தெரியாது. ஆனால், தமிழில் இது பல காலமாகப் பின்பற்றப்பட்ட ஐடியாதான். ஏ.வி.மெய்யப்ப செட்டியார், ஜெமினி ஸ்டூடியோ எஸ்.எஸ்.வாசன், எம்.ஜி.ஆர்., சாண்டோ சின்னப்பா தேவர் போன்ற தயாரிப்பாளர்கள் கதை இலாகாவையே உருவாக்கி வைத்திருந்தார்கள். ஒரு கதையை செய்து பலரும் பலவிதமாக விவாதிச்சு ஓகே செய்த பிறகே படங்களை எடுத்தார்கள். படம் முடிந்த பிறகும் அந்தக் கதை இலாகா வினர் படத்தைப் பார்ப்பார்கள்.
ஒரு ரசிகனின் மனநிலையோடு படத்தை சரிசெய்வார் கள். இடையில் காணாமல்போன அதே வழக்கம்தான் இப்போது மறுபடியும் வந்திருக் கிறது. ரசிகனோட பார்வைக்குப் போகும் கடைசி நிமிடம் வரைக்கும் ஒரு படத்தைச் சரிசெய்ய தொழில்நுட்பம் நிறைய வசதி களைச் செய்து கொடுத்திருக்கிறது. அதனால் மாற்றுப் பார்வைக்கு ஒரு படத்தைக் காட்டுவது தப்பில்லை. நான் நிறைய படங்களை அப்படிப் பார்த்து என் மனதில் பட்ட கருத்துக்களைச் சொல்லி இருக்கிறேன். ஃபாக்ஸ் ஸ்டார், திருப்பதி பிரதர்ஸ், ஸ்டுடியோ க்ரீன், ரெட் ஜெயன்ட், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட், பசங்க புரொடக்சன்ஸ் என பல நிறுவனங்களில் சில ஐடியாக்களுக்காக என்னை அழைத்திருக்கிறார்கள்.
படம் பற்றி கருத்து சொல்வதோடு புரோமோஷன் சம்பந்த மான ஐடியாக்களையும் நிறைய கொடுத்திருக் கிறேன். முறையான அனுபவத்துக்காக அறிவுமதி, செல்வபாரதின்னு பலரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். நிறைய விளம்பரப் படைப்புகள் பண்ணியிருக் கிறேன் ‘மான் கராத்தே’ உள்ளிட்ட படங் களில் பாடல்கள் எழுதி இருக்கிறேன். ஒரு இயக்குநருக்கான எல்லா வேலைகளையும் தெரிந்துகொண்டுதான் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறேன்.
எப்பவுமே திரைக்கதைதான் முதல் ஹீரோ. நல்ல திரைக்கதை எப்போதும் தோற்காது. ஹாலிவுட்டில் இப்பவும் முதலில் ஒரு நாவலைத்தான் தேர்வு செய்கிறார்கள். அதன் பிறகுதான் அதற்கேற்ற நடிகர்களை யும் டெக்னீஷியன்களையும் தேர்வு செய்வார்கள். இந்த முறையை எங்கள் ‘24 ஏ.எம். ஸ்டூடியோஸ்’ நிறுவனம் பின்பற்றும்.
தமிழ் சினிமா மீண்டும் கதாசிரியர்களின் கையில் வரும். அதற்கான சூழ்நிலையை உருவாக்குவோம். என்னுடைய இந்த நிறுவனத்தில் லயோலா கல்லூரிப் பேரா சிரியர் ராஜநாயகம், அண்ணன் அறிவுமதி, இன்னும் சில பத்திரிகை நண்பர்கள் அடங் கிய ஆலோசனைக்குழு இருக்கிறது. இவங் களோட வழிகாட்டலில் சரியான திரைக்கதை கொண்ட சிறந்த படங்களை ‘24 ஏ.எம்.’ நிறுவனம் தேர்ந்தெடுத்து தயாரிக்கும்.

நன்றி - த இந்து

‘ஆரஞ்சு மிட்டாய்’ = அன்பே சிவம் போல் பயணக்கதையா? - விஜய்சேதுபதி பேட்டி

ஆக்‌ஷன் மசாலா படங்களைத் தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டும் கதாநாயகர்கள் அதிகரித்துவரும் தமிழ்சினிமாவில் விஜய்சேதுபதியின் பாதை வேறாக இருக்கிறது. ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற மென்னுணர்வுத் திரைப்படத்தைத் தயாரித்து அதில் 55 வயது முதியவராக ‘கைலாசம்’ என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப் படம், இரண்டு சர்வதேசப் படவிழாக்களுக்குத் தேர்வாகியிருக்கிறது என்ற செய்தியை முதன்முதலாக பகிர்ந்தபடி நம்மிடம் உரையாடினார் விஜய் சேதுபதி…
இந்த ஆண்டு உங்களுக்கு மறக்க முடியாத கதாபாத்திரம் எது?
எமலிங்கம். ரசிகர்கள், இயக்குநர்கள் என இரண்டு தரப்பிலும் ‘புறம்போக்கு’ படத்தைப் பற்றி குறிப்பிட்டுப் பேசுகிறார்கள். ‘புறம்போக்கு’ ஒரு தோல்விப்படம் என்று ஏசி அறையில் உட்கார்ந்துகொண்டு சிலர் தவறாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையை அறிந்துகொள்ளத் திரையரங்குகளுக்குப் பயணம் செய்துவிட்டு வந்தவன் நான். படப்பிடிப்புக்காகச் செல்லும் எல்லா ஊர்களிலும் ‘எமலிங்கம்… எமலிங்கம்’ என்று ரசிகர்கள் என்னைக் கூப்பிட்டுக் கத்துகிறார்கள். எமலிங்கத்துக்கு அவ்வளவு ரீச் கிடைத்திருக்கிறது.
இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்தே ஜனநாதன் சார் என்னைக் கூப்பிடுவார் என்று நினைத்தேன். ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து அவர் எனக்கு இத்தனை பெரிய கதாபாத்திரம் கொடுத்தது எனக்குப் பெரிய கவுரவம் என்று சொல்ல வேண்டும். அவரது அரசியல் அறிவாகட்டும், நடிகனுக்கு அவர் தரும் சுதந்திரமாகட்டும், யார் சொல்வதையும் காதுகொடுத்துக் கேட்பதிலாகட்டும், அவரைப் போன்ற இயக்குநர்கள் நம்மிடம் அபூர்வம். எமலிங்கம் நான் மிகவும் விரும்பி நடித்த கதாபாத்திரம்.
‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறீர்கள்?
படப்பிடிப்பில் நடிக்கும்போது சில வசனங்கள் நம்மையும் அறியாமல் வந்து விழும். இயக்குநரின் அனுமதியோடு, அவருக்கு உவப்பாகவும் காட்சிக்குப் பொருத்தமாகவும் இருந்தால் அதைப் பயன்படுத்துவோம். இது எல்லா நடிகர்களும் செய்வதுதான். ஆனால், இந்தப் படத்தின் காட்சிகளைப் பற்றி இயக்குநரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு என் மீது நம்பிக்கை வந்துவிட்டது.
“நீங்கள் வசனம் எழுதுங்கள் சரியாக வரும்” என்றார், இயக்குநர் பிஜூ சார். வசனம் எழுதுவதற்கான தகுதி இதுவல்ல என்று நான் மறுத்தேன். ஆனால் அவர் என்னை விடுவதாகயில்லை. நாம உட்கார்ந்து ஒவ்வொரு காட்சியாகப் பேசுவோம் என்றார். அப்படித்தான் ஒவ்வொரு காட்சியாகப் பேசினோம். சில காட்சிகளை நடித்துப் பார்த்தோம். அப்படி இந்தப் படத்தில் வருகிற எல்லாக் கதாபாத்திரங்களையும் நான் நடித்துப் பார்த்தேன். காட்சிகளைப் பேசும்போதும் நடிக்கும்போதும் ரெக்கார்ட் செய்தோம். பிறகு அதைப் போட்டுப் பார்த்து வசனம் எழுதினேன். இந்த முறை எல்லாப் படத்துக்கும் அல்லது எல்லாருக்கும் சரியாக வருமா என்று கேட்டீர்கள் என்றால் அதற்கு என்னிடம் பதில் இல்லை.
இந்தப் படத்தின் இயக்குநர் பிஜு. விஸ்வநாத்தை நீங்கள்தான் அழைத்து வந்தீர்களா?
இல்லை. அவருக்கு அறிமுகமே தேவையில்லை. ‘காக்கா முட்டை’ மணிகண்டன் மூலம் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் மீது மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருப்பவன். ‘பீட்சா’ படத்துக்கு முன்பு நாங்கள் சந்தித்துக்கொண்டோம். அவர் தமிழில் படம் பண்ண வேண்டும் என்று விரும்பினார். அப்போது வேறோரு கதையை அவர் இயக்க இருந்தார். தயாரிப்பாளர் கூட முடிவான நிலையில் அந்தப் படம் நடக்காமல் போய்விட்டது. பிறகுதான் ‘ஆரஞ்சு மிட்டாய்’ கதையை அவரிடம் கேட்டு அதை நான் தயாரிக்கிறேன் என்று அழைத்துவந்தேன்.
இயக்குநருக்கு எடிட்டிங் தெரியவில்லை என்றும், படத்தை நீங்கள்தான் எடிட் செய்தீர்கள் என்று செய்தி வெளியானதே?
அப்பட்டமான பொய். பிஜூ சாரின் திறமை, படைப்புக்கு அவர் காட்டும் நேர்மை, முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றின் மீது எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. இந்தப் படத்தை தயாரித்தது, நடித்தது ஆகியவற்றைத் தவிர வேறு எதிலும் நான் மூக்கை நுழைக்கவில்லை. அவர்தான் இந்தப் படத்தை எடிட்செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன். அதுதான் உண்மை.
55 வயது முதியவர் தோற்றத்தை விரும்பி ஏற்க என்ன காரணம்?
‘சூது கவ்வும்’ படத்தில் 40 வயது தோற்றத்தில் நடித்தது தானாக அமைந்த ஒன்று. ரமேஷ் திலக், அசோக் செல்வன், பாபி சிம்ஹா ஆகியோரைவிட எனது கதாபாத்திரம் கொஞ்சம் முதிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நலன் குமாரசாமி விரும்பினார். இந்தப் படத்தில் நான்தான் நடிக்கப்போகிறேன் என்பது முதலில் முடிவாகவில்லை. வசனமெல்லாம் எழுதி முடித்துவிட்டேன்.
முதியவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டிருந்த நடிகர் வேறொரு படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தார். அவர்தான் நடிக்க வேண்டும் என்று நான்தான் அவரை விரும்பி அழைத்தேன். ஆனால், குறித்த காலத்தில் அவரால் வர முடியாத சூழ்நிலை. படத்தையும் உடனே தொடங்கவேண்டும். அதனால் இயக்குநரிடம் நானே நடிக்கட்டுமா, மேக் அப் டெஸ்ட் எடுத்து பார்க்கலாமா என்றேன். அவர் சம்மதித்தார். ஏன் நாமே முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்றுதான் இந்தக் கதாபாத்திரத்தை முயன்றேன். அது சரியாக வந்திருக்கிறது என நம்புகிறேன்.
இந்தப் படம் முதுமையைப் பற்றிப் பேசுகிற படமா?
நிச்சயமாக இல்லை. இதுதான் இந்தப் படத்தின் கதை என்று வரையறுத்துச் சொல்லவே முடியாது. 55 வயது முதியவரின் ‘பேபிஸ் டே அவுட்’. அப்பாவை இழந்து ஒரு மாதமே ஆன ரமேஷ் திலக். அவசரகால அழைப்புக்கு ஆம்புலன்சில் வரும் மருத்துவ உதவியாளர். அவரது அப்பாவைப் போலவே அடம்பிடிக்கும் 55 வயது கைலாசத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வருகிறார். அந்தப் பெரியவரிடம் அவன் மாட்டிக்கொண்டு விழிக்கிறான். அவரை எப்படிச் சமாளிப்பது என்பதே அவனுக்கு சவாலாகிறது. அவர்களுக்குள் உணர்வு ரீதியான இணைப்பும் கிடையாது. ஆனால் அந்தப் பயணத்தில் அந்தக் கதாபாத்திரங்கள் நம் ஒவ்வொருவரையும் நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பார்கள்.
பயணம் நெடுகிலும் கொட்டிக் கிடக்கும் அபத்த நகைச்சுவை ரசிகர்களுக்கு அனுபவமாக இருக்கும். பயணத்தின் முடிவு என்ன என்பதும் இந்தப் படத்துக்கு முக்கியமானது. ரசிகர்களுக்கு அது நிச்சயமாகப் பிடிக்கும். இந்தப் படத்தை என் அம்மாவுக்கு போட்டுக்காட்டினேன். படத்தைப் பார்த்துவிட்டு “உங்க அப்பனைப் பார்க்கிற மாதிரியே இருக்குடா!” என்று சொன்னார். அண்ணன், தங்கை ஆகியோரும் அதையேதான் சொன்னார்கள். கைலாசம் ரசிகர்களுக்கு நெருக்கமான மனிதனாக இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது.


நன்றி- த இந்து

Tuesday, July 14, 2015

முந்தானை முடிச்சு ஊர்வசியின் வீடியோ வெளியானது எப்படி? - ஊர்வசி அதிர்ச்சி பேட்டி

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அம்மாவாக வலம் வந்துகொண்டிருந்த சரண்யா பொன்வண்ணன் எங்கே போனார் என்று தேடிக்கொண்டிருந்த இடைவெளியில் நகைச்சுவை கொப்புளிக்கும் அம்மாவாக அதிரடி கிளப்பிவருகிறார் ஊர்வசி. அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து...
எல்லாப் படங்களிலும் ஒரே மாதிரியான உற்சாகத்துடன் வலம் வரும் ரகசியம் என்ன?
குடும்பமும் எனக்கு அமைந்த சூழ்நிலையும் முக்கியக் காரணம். எனது கணவர் சிவப்பிரசாத் தரும் ஊக்குவிப்பு இதில் முக்கியமானது. அவருக்கும் சினிமாவுக்கும் சம்பந்தமே கிடையாது. அவர் ஒரு ஆர்க்கிடெக்ட். குழந்தை பிறந்த பிறகு நடிப்பதை நிறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். என் மகனுக்கு ஒரு வயது ஆகிறது.
இஷான் பிரஜாபதி என்று சிவபெருமானின் பெயரை வைத்திருக்கிறோம். நீலகண்டன் என்று அழைத்து அவனைக் கொஞ்சிக்கொண்டிருக்கிறோம். அவனை விட்டுவிட்டுப் படப்பிடிப்புகளுக்குச் செல்ல நான் விருப்பமில்லை. மகனையும் படப்பிடிப்புகளுக்கு அழைத்துச் செல்லக் கணவர் அனுமதித்தார். அதன் பிறகு தொடர்ந்து நடித்துவருகிறேன்.
சமீபத்தில் உங்களை ஆச்சரியப்படுத்திய பாராட்டு எது?
உத்தம வில்லன் படத்தில் ஒரு புகழ்பெற்ற நடிகரின் மனைவியாக நடித்தேன். அந்தப் படத்திற்காகப் பாராட்டுகள் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் நேர்மாறாக போகுமிடமெல்லாம் “நீங்க வசந்தோட அம்மாவா கலக்கீட்டிங்க. உங்களாலதான் இதுமாதிரி கேரக்டர்ஸ் பண்ண முடியும்” என்று ஓடிவந்து கைகுலுக்கிப் பாராட்டினார்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள். அப்போதுதான் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் எனது கதாபாத்திரத்தின் வீச்சை உணர்ந்துகொண்டேன்.
அந்தப் படத்தின் கதையைக் கேட்டபோது அதில் வந்த அம்மா கதாபாத்திரம் எனக்குச் சட்டென்று பிடித்துப்போனது. காரணம் அம்மாக்கள் எல்லோருமே பிள்ளைகளுக்காகவே தங்களை அறிவாளிகளாக மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டவர்கள். பொதுவாக சினிமாவில் வரும் அம்மா கதாபாத்திரம் என்பது மகனின் காதலுக்கு ஆதரவு கொடுக்கும்.
ஆனால் இந்தப் படத்தில் அப்படியே தலைகீழ். மகனின் அறிவியல் மூளைக்கு ஈடுகொடுக்கும் அந்தத் தாய் அவனுக்கு இணையாக அறிவியல் வார்த்தைகளையும் விஷயங்களையும் பேசியபோது, “அட! இந்த மாதிரி அம்மாக்கள் எவ்வளவு பேரை நாம பார்க்கிறோம்” என்று எனது கதாபாத்திரத்தை நெருக்கமாக உணர்ந்ததால் கிடைத்த வெற்றி இது.
முந்தானை முடிச்சு படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்து விட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அந்தப் படத்தில் நான் ஏற்ற பரிமளம் கதாபாத்திரம்தான் சினிமாவில் எனது பாதையைத் தீர்மானித்தது. கொஞ்சம் குறும்பு, கொஞ்சம் பொய், கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் அறியாமை, கொஞ்சம் கவர்ச்சி, கொஞ்சம் தியாகம் என்று வயதுக்கு மீறிய உணர்ச்சிகளை வெளிப்படுத்திய கதாபாத்திரம் அது. என்ன வேடம் கொடுத்தாலும் இவர் தாங்குவார் என்ற பெயர் வாங்கிக் கொடுத்தது.
அதுவே ‘ஒருகை ஓசை’ படத்தில் வந்த சோகமான அஸ்வினியாக நான் முதலில் அறிமுகமாகியிருந்தால், முந்தானை முடிச்சு மாதிரி படம் பண்ண எனக்குப் பல ஆண்டுகள் பிடித்திருக்கும். ரசிகர்கள் நம்மை கதாபாத்திரங்களாகவே நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். நான் கிராமப் பகுதிகளுக்கு படப்பிடிப்புக்குச் சென்றால் “பச்சக் குழந்தையைப் போட்டு இப்படித் தாண்டிட்டியேம்மா...!? அந்தக் குழந்தை இப்போ நல்லா இருக்கா? ” என்று 30 வருடங்களுக்குப் பிறகு கேட்டவர்களும் உண்டு.
நீங்கள் ஏற்கும் அம்மா கதாபாத்திரங்கள் மீது நகைச்சுவையின் நிழல் படிந்துவிடுவதற்கு என்ன காரணம்?
நான் மட்டுமே காரணம். ஒரு பெண் நடிகர் நிஜ வாழ்க்கையில் தாயாக மாறிய பிறகு அவளுக்கு சினிமாவில் கிடைக்கும் அதிகபட்ச புரமோஷன் அம்மா கேரக்டர்கள்தான். அக்கா அண்ணி எல்லாம் நடுவில் வரலாம். ஆனால் நிரந்தரமான இடம் என்பது அம்மாதான். அந்த அம்மாவுக்கான பாவம் என்ன என்பதை நமது கலாச்சாரம் ஏற்கனவே சொல்லிக் கொடுத்திருக்கிறது. புருஷனுக்காக அழணும், குழந்தைகளுக்காக உழைக்கணும்.
அவ்வளவுதான். இதிலிருந்து மாறுபடுவதற்கு ஒரே வழி அம்மா கதாபாத்திரத்தில் நகைச்சுவையை இழையோடச் செய்வதுதான் என்று நினைத்தேன். இளம் கதாநாயகியாக நடித்துவந்த காலத்தில் நெருக்கமான காதல் காட்சிகளில் நடிக்க மிகவும் சங்கடப்பட்டேன். அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக கொஞ்சம் நகைச்சுவையைக் கலக்க ஆரம்பித்தேன். அதுவே எனக்கு முத்திரையாகிவிட்டது. அதையே அம்மா கதாபாத்திரங்களுக்கும் இடம்மாற்றினேன்.
இன்றைய அம்மாக்கள் கணவன், குழந்தைகளால் ஏற்படும் மனஅழுத்தம் காரணமாக சிரிப்பதையே மறந்துகொண்டு வருகிறார்கள். எனது கதாபாத்திரங்களாவது சிரிப்பை அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கட்டும் என்றுதான் நான் நகைச்சுவையை விட மறுக்கிறேன்.
25 ஆண்டுகளை சினிமாவில் நிறைவு செய்த பல ஆண் நடிகர்களுக்குப் பாராட்டு விழா நடத்தும்போது உங்களைப் போன்ற பெண் நடிகர்களின் சாதனைகள் கண்டு கொள்ளப்படுவதில்லை என்று நினைத்திருக்கிறீர்களா?
நிச்சயமாக இல்லை. ஏனென்றால் சினிமா தொடங்கியது முதலே ஆண்களின் கையிலிருக்கும் ஒரு கலை. அதில் பெண் என்பவளுக்கு எப்போதுமே இரண்டாவது இடம்தான். சினிமாவில் ஆண்களின் உழைப்பில் பெண்கள் பங்கேற்றுக்கொள்கிறார்கள் அவ்வளவுதான். அதேபோல ஆண்களுடைய விழாக்கள் நடத்தும்போதும் அங்கே அலங்கரிப்புக்காக நிற்கிறவர்கள் பெண்கள். இந்தப் பார்வை எப்போது மாறுகிறதோ அப்போதுதான் பெண்களது சாதனைகள் நினைத்துப் பார்க்கப்படும்.
உங்களை பாதித்த கதாநாயகிகள் என்று யாரைச் சொல்வீர்கள்?
என்னை யாரும் பாதிக்கவில்லை. ஆனால் பலரை மனதார ரசித்திருக்கிறேன். அந்த வரிசையில் சாவித்ரி அம்மாதான் எனக்கு மிகவும் பிடித்தவர். மனோரமா ஆச்சி. சுகுமாரி, ராதிகாவை ஆல்ரவுண்டர் என்ற வகையில் மிகவும் பிடிக்கும், அதேபோல் சரிதா, ஸ்ரீதேவி. பானுப்ரியா, ரேவதி ஆகியோரை தனித்து முத்திரை பதித்தவர்கள் என்பேன்.
உங்கள் முன்னாள் கணவர் மனோஜ் கே. ஜெயனும் நீங்களும் தற்போது நண்பர்களாக இருக்கிறீர்களா?
கிடையவே கிடையாது. கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்த பின்னர் ஒரு கட்டத்துக்குப் பிறகு முன்னாள் கணவனும் மனைவியும் இன்னாள் நண்பர்கள் ஆகிவிடுவது யதார்த்தமானது. ஆனால் எனக்கு அந்த அதிர்ஷ்டம் இதுவரை வாய்க்கவில்லை. என்னை எதிரியாக நினைத்துதான் பிரிய முடிவுசெய்தார். எனக்கு மனதளவில் பெரும் பாதிப்பு உண்டாக்கிய பிறகே என்னைப் பிரிந்தார்.
என் மகளின் நலனுக்காக அவர் மாற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். படப்பிடிப்புக்காக கேரளா செல்லும்போதெல்லாம் என் மகளுடன் தங்குவேன். தினசரி அவளுடன் போனில் பேசாவிட்டால் எனக்கு அந்த நாள் ஓடாது.
சமீபத்தில் உங்களைப் பற்றி வந்த சர்ச்சையான செய்தி மற்றும் வீடியோ பற்றி எதுவும் கூற விரும்புகிறீர்களா?
கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்று ஒப்புக்கொண்ட ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். இரவுபகலாக நடந்த படப்பிடிப்பிலிருந்து அப்படியே அந்த நிகழ்ச்சிக்கு ஓடோடி வந்தேன். கொடுத்த தலைப்பில் சரியாகப் பேசினேன். அந்த நேர்மைக்குக்கூட இன்று மதிப்பில்லை. இதைத் தவிர இப்போதைக்கு நான் எதையும் கூற விரும்பவில்லை.
யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்க விரும்பும் எவரும் தங்கள் வாழ்க்கையில் இருக்கும் அழுக்குகளை முதலில் களைந்துவிட்டு வரட்டும். இது சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கும் பொருந்தும்.


thanx - the hindu

Saturday, May 23, 2015

இன்று நேற்று நாளை’ - ஃபேண்டசி காமெடி த்ரில்லர் - ஜீரோ கிலோமீட்டர்’ இயக்குநர் திருப்பூர் ரவிக்குமார் பேட்டி

இணையத்தில் பிரபலமான குறும்படங்களில் ஒன்று ‘ஜீரோ கிலோமீட்டர்’. அதில், திருப்பூரில் கதவைத் திறக்கும் நாயகன் சென்னையில் இறங்கி நடக்கும் அதிசயம் நடக்கும். அந்தக் குறும்படத்தின் இயக்குநர் ரவிக்குமாருக்கு, கோடம்பாக்கம் தன் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது.
விஷ்ணு, மியா ஜார்ஜ், கருணாகரன் நடிப்பில் ‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கும் அவர் நம்மிடம் பேசியதிலிருந்து...
உங்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்..
திருப்பூரில் நூல் விற்பனை செய்யும் சாதாரண குடும்பத்துப் பையன். பள்ளியில் படிக்கிறப்போ ‘கனவு’ என்ற அமைப்பு நடத்திய குறும்பட விழாவில் படங்களை ரசித்துப் பார்த்தேன். இதேமாதிரி நாமளும் குறும்படம் எடுக்கலாம்ணு தோணுச்சு.
10 நிமிடம் மட்டும் பேட்டரி நிற்கும் ஒரு வீடியோ கேமரா கிடைச்சது. அத வச்சு ‘லீவு’ன்னு ஒரு குறும்படம் பண்ணேன். அதுக்குக் கிடைச்ச கைதட்டல், பாராட்டுனால அதைவிட நல்ல படங்களை எடுக்க முடியும்ணு தோணுச்சு. அப்படித்தான் ‘ஜீரோ கிலோமீட்டர்’ குறும்படத்தை எடுத்தேன். அது என்னை சினிமா வரைக்கும் கொண்டு வந்து நிறுத்திடுச்சு.
நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் எப்படி வாய்ப்பு கிடைத்தது?
‘முண்டாசுப்பட்டி’ பட இயக்குநர் ராம், பால்ய நண்பன். சிறுகதைகளும் நிறைய படிப்பேன். ஒரு சிறுகதையைத் தேர்வு செஞ்சு அதை எழுதின எழுத்தாளரிடம் அனுமதி வாங்கி, குறும்படமா எடுத்து நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கு அனுப்பினேன். என்னோட படத்தைக் காத்திருப்பு பட்டியலில் வச்சுருந்தாங்க. ஆனா, ராம் படம் தேர்வாயிருச்சு. ராமோட நிகழ்ச்சியில பங்கேற்க சென்னை வந்தேன்.
அப்போ 32 படங்கள்தான் நாளைய இயக்குநர்ல திரையிடுவாங்க. என் படத்தைவிட மோசமா எடுத்த படங்களுக்கு திரையிடல்ல இடம் கிடைச்சிருந்தது. அதனால நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கிட்ட பேசினேன். கூடுதலா நான்கு படங்களைத் திரையிட்டாங்க. என்னோடதும் அதுல ஒண்ணு. அப்படியே இறுதிச் சுற்றுவரைக்கும் வந்தோம். என்னோட `ஜீரோ கிலோமீட்டர்’ படம் 3-வது இடத்தைப் பிடிச்சது. முதல் பரிசு கிடைக்கலேன்னாலும் அங்கே நலன் குமரசாமி நட்பு கிடைச்சது.
இடையில் `கனாக் காணும் காலங்கள்’ தொலைக்காட்சி தொடர் இயக்கியது நீங்கள்தானே?
ஆமாம். நாளைய இயக்குநர் நிகழ்ச்சியோட இறுதிச் சுற்றுக்கு சிறப்பு விருந்தினரா வந்திருந்தார் இயக்குநர் பாண்டியராஜ். முதல் மூன்று இடங்களைப் பிடிச்ச யாராவது ஒருவரை உதவி இயக்குநரா சேர்த்துக்கிறதா சொல்லியிருந்தார். அவர் கிட்டப் பேசினேன். அவர் அடுத்த படத்துக்கு கூப்பிடுறதா சொன்னார். அப்போ நலன் குமரசாமி, `கனாக் காணும் காலங்கள்’ வாய்ப்பு இருக்கு போலாமான்னு கேட்டார். ஒப்புகிட்டேன்.
அதுல நான் இணை இயக்குநர். சில நாட்கள்லயே தனியா ஷூட் பண்ண ஆரம்பிச்சேன். நலன் தனியா ஷூட் பண்ணுவார். முதல் நாள் செஞ்ச தப்ப அடுத்த நாள் சரி பண்ணிக்குவோம். அப்புறம் நலன் தொடர்லேர்ந்து வெளியே போயிட்டாரு. நான் தனியா தொடர்ந்தேன். மாசம் முடிஞ்சா கணிசமான சம்பளம் கைக்கு வரும். அதனால் லகான் கட்டின குதிரை மாதிரி மண்டை முழுக்க எபிசோட்கள்தான் ஓடிக்கிட்டு இருக்கும். ஒரு கட்டத்துல எங்க இப்படியே தேங்கிருவோமோன்னு நெனச்சு, அங்க இருந்து வெளியே ஓடியாந்துட்டேன்.
வந்த உடனே வாய்ப்பு கிடைச்சதா?
அதுக்கும் நலன்தான் காரணம். அவர் `சூது கவ்வும்’ படம் பண்ணினப்போ அதுல நான் இணை இயக்குநர். அப்போ அந்தப் படத்தோட தயாரிப்பாளர் சி.வி. குமார் “உங்ககிட்ட கதை இருக்கா”ன்னு” கேட்டார். இருக்கு சார் ஒன்லைன்தான், டெவலப் பண்ணணும் அப்படின்னேன். அவர் “சீக்கிரமா ரெடி பண்ணுங்க”ன்னு உற்சாகப்படுத்தினார். அப்படி உருவான கதைதான் இது.
இது என்ன கதை?
டைம் மெஷின் மூலமா சுதந்திரப் போராட்ட காலத்துக்கும் அதற்கு முந்தைய காலத்துக்கும் செல்லும் விஷ்ணுவும் கருணாகரனும் அடிக்கும் லூட்டிகள்தான் கதை. ஆர்யா சிறப்புத் தோற்றத்தில் நடிச்சிருக்கார். இது ஹியூமர் ஃபேன்டஸி.
முதல் படத்திலேயே ஃபேன்டஸி கதையைக் கையாளுவது கடினமாக இல்லையா?
எனக்கு அது ஈஸியான சப்ஜெக்ட்தான். ஆடியன்ஸும் ஈஸியா புரிஞ்சு ரசிக்கிற மாதிரி திரைக்கதை இருக்கும். என்னோட அடுத்த படமும் ஃபேன்டஸி படம்தான்.
நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்கள்னு உங்களுக்கு விருப்பமான தேர்வை செய்ய முடிஞ்சதா?
இந்தப் படத்தோட மதிப்பு எவ்வளவு, யார் இருந்தா எவ்வளவு ஜெயிக்கும் அப்டின்னுதான் தயாரிப்பாளர் பார்ப்பார். நானும் அறிமுக இயக்குநர்தான். பெரிய நட்சத்திரங்கள், இசையமைப்பாளர், கேமராமேன் அப்படின்னு எடுக்கறதா இருந்தா, பெரிய இயக்குநரை வச்சே படம் எடுத்துருவாங்களே! மற்றபடி, நாம சினிமா எடுக்கணும்னுதான் வந்திருக்கோமே தவிர, குறிப்பிட்ட சிலரை வச்சு சினிமா எடுக்கணும்னு வரலையே.

நன்றி - த இந்து

Monday, May 04, 2015

சிம்பு வின் மூன்றாவது முன்னாள் காதலி பர பரப்புப்பேட்டி

விஜய், சிம்பு, ஜெயம் ரவி என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த உற்சாகத்தில் இருக்கிறார் ஹன்சிகா. இப்போதெல்லாம் ஹன்சிகாவுக்கு நன்றாக தமிழ் பேச வருகிறது. “ஹலோ...நல்லா இருக்கீங்களா?” என்று அழகுத் தமிழில் கைகுலுக்கிவிட்டுப் பேச ஆரம்பித்தார்.
இந்த ஆண்டு வாலு, ரோமியோ ஜூலியட், உயிரே உயிரே, இதயம் முரளி, புலி என்று வரிசையாக உங்களது படங்கள் வெளியாக இருக்கின்றனவே?
நன்றி. ஐந்தாறு வருடங்கள் கழித்தும் இதே மாதிரி பரபரப்பாக நான் இருக்க வேண்டும். ஹன்சிகா நல்ல நடிகை. ஹன்சிகா நடிக்கிற படம் நல்லா இருக்கும் என ரசிகர்கள் நம்ப வேண்டும். இதுதான் என் ஆசை.
கொஞ்சம் கொஞ்சமா தமிழ் பேசக் கற்றுக்கொண்டுவிட்டீர்களே?
ஆமாம். வணக்கம். நன்றி. எப்படி இருக்கீங்க என்பதுபோன்ற வார்த்தைகளைத் தாண்டி நிறைய கற்றுக்கிட்டே இருக்கேன். மேடையில் பேச சின்னதாகத் தயங்குகிறேன். குழந்தைகளிடத்தில் தமிழில் பேசும்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன். தமிழில் எனக்கு அக்கா என்ற வார்த்தை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.
அக்காவா? அப்படி உங்களை யார் அழைக்கிறார்கள்?
நான் தத்தெடுத்து வளர்க்கிற 30 குழந்தைகளும் என்னை அக்கா என்றுதான் அழைக்கிறார்கள். அந்த வார்த்தை எனக்கு மிகவும் அன்பான வார்த்தையாகத் தெரிகிறது.
முப்பது குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதற்கான நோக்கம்?
என் அம்மா ஒரு டாக்டர். காசு கொடுக்க முடியாத ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பார். அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், குடிசைப் பகுதிகள் என எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துச் செல்வார். மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்று அம்மா அடிக்கடி சொல்வார். சின்ன வயதில் இருந்தே அம்மா சொல்லி சொல்லி வளர்த்தது என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
நான் சம்பாதிக்க ஆரம்பித்ததும் என் அம்மா மாதிரி முடிந்த அளவுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நடிகை ஆனதும் எனக்குக் கிடைக்கும் வருமானத்தில் 30 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறேன். இது எனக்கு மிகப்பெரிய திருப்தியையும், மகிழ்ச்சியையும் தருகிறது.
என்ன மாதிரியான உதவிகளைச் செய்கிறீர்கள்?
நான் தத்தெடுத்துக்கொண்ட குழந்தைகளின் கல்விக் கட்டணம், உடைகள், விளையாட்டுப் பொருட்கள், திறமைகளை வளர்ப்பதற்கான பயிற்சிகள் என அனைத்துச் செலவுகளையும் நானே பார்த்துக்கொள்கிறேன். நான் பார்ட்டிகளுக்குச் செல்வதில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் குழந்தைகளுடன் நேரம் செலவிடுகிறேன்.
அவர்கள் என்னைப் பார்த்தவுடன் “ ஹய்.. அக்கா” என்று சந்தோஷமாக கோரஸ் பாடுவதைப் போல அழைப்பார்கள். அவர்கள் அன்பில் நான் கரைகிறேன். பொம்மைகள் வாங்கிக் கொடுத்து நானும் சேர்ந்து விளையாடுகிறேன். தென்னிந்திய உடுப்பி சாப்பாடு என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். என் பிறந்த நாளை அவர்களுடன் கொண்டாடுவதில் அலாதி ஆர்வம் உண்டு.
குழந்தைகளுக்கு மட்டும்தான் உதவி செய்வீர்களா?
அப்படியில்லை. என் சக்திக்கு உட்பட்டு தேவைப்படும் யாருக்கும் உதவத் தயார். கடந்த வருடம் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 30 பெண்களின் மருத்துவச் செலவை ஏற்றுக்கொண்டேன். தற்போது முதியோர்களுக்காக ஒரு இல்லம் கட்ட விரும்புகிறேன். எனது குழந்தைகளுக்காக ஒரு இல்லம் கட்ட வேண்டும் என்ற முயற்சியும் இருக்கிறது.
சினிமாவில் இப்போது என்ன சாதித்திருப்பதாக நினைக்கிறீர்கள்?
10 வயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். இந்தியில் அமிதாப், ஹிருத்திக் ரோஷனோடு நடிப்பு, 15 வயதில் ஹீரோயின் என எனக்கு எல்லாமே நன்றாக அமைந்தன. அரண்மனை படம் என்னை நடிக்கத் தெரிந்த நடிகையாக அடையாளப்படுத்தியது. வாலு படத்தில் ப்ரியா மகாலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
இதில் என் நடிப்பில் இன்னும் முன்னேற்றத்தைப் பார்ப்பீர்கள். ரோமியோ ஜூலியட் படத்தில் சேட்டை செய்யும் குறும்புப் பெண்ணாக நடித்திருக்கிறேன். பத்து வருடங்கள் கழித்தும் ஹன்சிகா நல்ல நடிகை என்று பெயர் எடுக்க வேண்டும். கேமராதான் என் உலகம். ஒரு நடிகையா, ஒரு படத்துக்கு நூறு சதவிகிதம் உண்மையாக நடிப்பதே பெரிய சாதனைதான்.
மீண்டும் இந்திப் படங்களில் நடிப்பீர்களா?
தமிழ், தெலுங்கில் நல்ல நடிகையாக வர வேண்டும். தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக ஜொலிக்க வேண்டும். இதுதான் என் இலக்கு. இந்தி சினிமாவுக்குப் போகும் எண்ணம் இல்லை. தமிழ் சினிமாவின் தரம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இங்கு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். தமிழ் சினிமாவில் நானும் இருப்பது எனக்குப் பெருமை.
படத்துக்குப் படம் அழகாகத் தெரிகிறீர்களே, அந்த ரகசியம் என்ன?
நன்றி. நான் எதற்கும் கவலைப்படுவதில்லை, டென்ஷன் ஆவதில்லை, எனக்குக் கோபமே வராது. திட்டினால்கூட, நான் சிரித்துக்கொண்டேதான் இருப்பேன். என் மனசுக்கு நான் நேர்மையாக இருக்கிறேன்.
உலகிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த பெண் யார்?
என் அம்மாதான். நான், பிரபல நடிகையாக இருப்பதற்கு அவர்தான் காரணம். என்னை இந்த அளவுக்கு வளர்த்தெடுத்தது, நம்பிக்கை கொடுத்தது, சாதிக்கத் தூண்டியது எல்லாம் என் அம்மாதான்.
காதலை முறித்துக் கொண்ட பிறகு வாலு படப் பாடல் காட்சியில் நீங்களும், சிம்புவும் இணைந்து நடித்திருக்கிறீர்களே... (கேள்வியை முடிக்கும் முன்பே)
ஸாரி.. இந்தக் கேள்வியை மறந்திடுங்க. சிம்பு நல்ல நடிகர். அவ்வளவுதான். நன்றி.


நன்றி  - த இந்து

Thursday, April 23, 2015

‘சுப்பிரமணியம் பாஃர் சேல்’,ராஜதந்திரம்-ரெஜினா கஸான்ட்ரா சிறப்புப் பேட்டி

இளம் கதாநாயகி ரெஜினா பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமும் தமிழ்நாடு. அள்ளிச் சூடிக்கொண்டதோ தெலுங்குத் திரையுலகை. தமிழில் ‘ராஜதந்திரம்’ தந்த வெற்றிக் களிப்பு முகத்தில் மின்ன ‘சுப்பிரமணியம் ஃபார் சேல்’ தெலுங்குப் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா புறப்பட்டுக்கொண்டிருந்தவருடன். ஒரு குறும் பேட்டி:
தமிழ்ப் பெண்ணாக இருந்தும் தமிழ் சினிமாவில் நடிக்க பிகு செய்கிறீர்கள் போலத் தெரிகிறது..
திட்டமிட்டு ஒரு வேலையைச் செய்ய எனக்குப் பிடிக்காது. என் அதிர்ஷ்டமோ, என்னவோ இயல்பாக, யதார்த்தமாகத் தொடும் காரியம்தான் எனக்குச் சினிமாவில் நல்ல இடத்தைப் பிடித்துக் கொடுத்திருக்கிறது. தெலுங்கில் கமர்ஷியல் ஃபார்முலா படங்களில் நடித்தால் போதும். நம்ம ஊரில் நல்ல கதை கொண்ட யதார்த்தமான படத்தில் நடித்தால் மட்டும்தான் கவனிப்பாங்க. அதனால்தான் இங்கே நிதானமாகப் படங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
நீங்கள் அறிமுகமான ‘கண்ட நாள் முதல்’ படம் வெளியாகிப் பத்து ஆண்டுகள் ஆகிறதே?
இந்நேரம் தமிழில் ஒரு தனித்த இடத்தைப் பிடித்திருக்க வேண்டாமா என்றுதானே கேட்கவருகிறீர்கள்? ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். ‘கண்ட நாள் முதல்’ படம் வந்தபோது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் பிஸியானாலும் எந்தக் காரணத்திற்காகவும் படிப்பை விடவே இல்லை.
பி.எஸ்.சி. சைக்காலஜி வரைக்கும் தொடர்ந்தேன். அப்படிப் பார்த்தால் கடந்த பத்து ஆண்டுகளில் ஐந்து ஆண்டுகள் எனது படிப்புக்காகவே டெடிகேட் செய்திருக்கிறேன். இந்த இடைவெளியில் நல்ல கதைகளை எப்படித் தேர்வு செய்வது என்ற ரகசியத்தைக் கற்றுக்கொண்டேன்.
‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்துக்குப் பிறகு ‘ராஜதந்திரம்’. இடைவெளி இருந்தாலும் ‘பளிச்’சென இடம்பிடித்துவிட்டீர்களே?
‘ராஜதந்திரம்’ படத்துக்கு நட்சத்திரத் தேர்வு முடிந்து படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில்தான் அந்தக் குழுவினருடன் இணைந்தேன். அவர்கள் திடீரென்று அழைத்த நேரத்தில் தெலுங்கில் ஐந்து படங்களில் ஒப்பந்தமாகியும் இருந்தேன். ஆனால் கதையைக் கேட்ட பிறகு சில தந்திரங்கள் செய்து கால்ஷீட் கொடுத்துவிட்டேன்.
அந்த டீம் என்னைக் கவர்ந்ததும் அதில் நடிக்க முக்கியமான ஒரு காரணம். கேடி பில்லாவுக்குப் பிறகுகூட என்னை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் ஒரு நிஜமான வெற்றிக்குப் பிறகு எல்லோரும் நம்மை எப்படிக் கூர்ந்து கவனிக்கிறார்கள்.
உங்களைப் போலவே தெலுங்கிலிருந்து வந்த ஹன்சிகா தற்போது இங்கே முன்னணி கதாநாயகர்களின் படங்களில் இடம்பிடித்துவிடுகிறாரே?
என் கையில் எதுவும் இல்லை. நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பது மட்டும்தான் என் வேலை. இந்தப் படத்தில் இரண்டாவது ஹீரோயினா, மூன்றாவது ஹீரோயினா என்பதைக்கூட நான் பார்ப்பதில்லை. தேடி வரும் கேரக்டர் புதிதாக இருக்கிறதா என்பதை மட்டும்தான் நான் பார்க்கிறேன். மற்றபடி பெரிய இயக்குநர்கள், முன்னணி நாயகர்கள் படங்கள் எல்லாம் அதுவாக அமைந்தால்தான். பார்க்கலாம்.
ஐஸ்வர்யா ராய், மஞ்சு வாரியார், ஜோதிகா என்று திருமணதுக்குப் பிறகு திரைக்கு மறுபிரவேசம் செய்து கலக்க ஆரம்பித்திருக்கும் முன்னாள் கதாநாயகிகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இன்றைய ஹீரோயின்களுக்கு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள்தான் சினிமா ஆயுள் என்ற நிலை மாறி வருகிறது. திருமணப் பேச்சு தொடங்கியதுமே நடிகைகள் பிரேக் எடுத்துக்கொள்ளும் சூழல் முற்றிலும் மறைந்துவிட்டது. நடிகைகள் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பது, எங்களைப் போன்ற புதிய தலைமுறை நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போனால் என்ன செய்யப்போகிறோம் என்ற கவலையை இல்லாமல் செய்கிறது. குடும்பத்தின் முழுமையான ஆதரவும், சுதந்திரமும் இருக்க வேண்டும். அந்த விதத்தில் இவங்க மூணு பேருமே கொடுத்து வைத்தவர்கள்தான்.
நீங்கள் டிரெக்கிங் ப்ரியையாமே?
ஆமாம். கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் ஏலகிரி மலைப்பகுதிக்குக் கிளம்பிவிடுவேன். இந்த ஆண்டு கோடைகாலம் முழுவதும் அமெரிக்காவில் ‘சுப்பிரமணியம் பாஃர் சேல்’ தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பில் இருக்கப்போகிறேன். அங்கே டிரெக்கிங் செய்ய உகந்த இடத்தைப் பிரவுஸ் செய்து கொண்டிருக்கிறேன். குளிர்ச்சியான இடம் விரைவில் சிக்கும். அப்டேட்டுக்கு என் ட்விட்டரைச் செக் பண்ணுங்கள்.




நன்றி - த இந்து 

Friday, April 10, 2015

புலி போல் பாய்ந்து வரும் வைகைப்புயலின் எலி'- எலி பட இயக்குநர் யுவராஜ் சிறப்பு பேட்டி


'வசமாகச் சிக்கிய எலி'- எலி பட இயக்குநர் யுவராஜ் சிறப்பு பேட்டி

கா. இசக்கிமுத்து

த  இந்து

சென்னையின் பிரம்மாண்டமான பின்னி மில்லில் பதுங்கியிருக்கிறது ‘எலி’. அங்கே அண்ணாந்து பார்க்கவைக்கும் அரங்குகள் அமைத்து, அதில் வடிவேலு நகைச்சுவை நாயகனாக நடித்துவரும் ‘எலி' படத்தைப் படமாக்கிவருகிறார் இயக்குநர் யுவராஜ். ‘தெனாலிராமன்’ படத்தைத் தொடர்ந்து வடிவேலுவுடன் மீண்டும் இணைந்து ஆச்சரியப்படுத்தியிருப்பரைப் படப்பிடிப்பு இடைவேளையில் பிடித்தோம்..
யுவராஜ்
‘எலி' என்ற தலைப்பே கிச்சு கிச்சு மூட்டுகிறதே?
மிக மோசமான ஒரு கொள்ளைக் கூட்டம். அதைப் பிடிக்க அந்தக் கூட்டத்துக்குள் நுழைகிறார் வடிவேலு. கெட்டவர்கள் கூட்டத்துக்குள் ஒரு நல்லவன் நுழைந்துவிட்டால், “இந்தக் கூட்டத்துக்குள்ளே ஒரு எலி இருக்கான்டா. அவனைக் கண்டுபிடிச்சு அடிச்சுக் கொல்லுங்கடா” என்பார்கள்.
அதனால்தான் ‘எலி' என்று தலைப்பு வைத்தேன். கொள்ளைக் கூட்டத்துக்குள் அவர் மாட்டிக்கொண்டு முழிப்பதும், அந்தக் கூட்டத்தைப் பிடித்தாரா, இல்லையா என்பதுதான் கதை. 1960-களில் நடப்பதுபோல் திரைக்கதை அமைத்திருக்கிறேன்.
வடிவேலு ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த ‘தெனாலிராமன்' படத்தை இயக்கினீர்கள். ஆனால் வெற்றி கிடைக்கவில்லையே என்ன காரணம்?
“நீங்கள் கிரிக்கெட் விளையாடி இருப்பீர்கள் என்று நினைத்து வந்தோம். ஆனால் செஸ் விளையாடிக்கொண்டிருந்தீர்கள்” என்று முகநூலில் ஒரு ரசிகர் விமர்சனம் பண்ணியிருந்தார். அந்த வரிகள் எனக்குப் பிடித்திருந்தன. வடிவேலு மறுபடியும் நடிக்க ஆரம்பிக்கிறார், எதிர்பார்ப்பு இருக்கும் என்று எண்ணி ரொம்ப காமெடியாகப் பண்ணவில்லை. சிரிக்கவைத்து, கூத்தடித்து அனுப்பிவிட்டார்கள் என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்ற விஷயத்தில் நானும், வடிவேலும் தெளிவாக இருந்தோம்.
அதனால்தான் ‘தெனாலிராமன்' என்ற ஒரு பாத்திரத்தைக் கனமாக அமைத்தோம். “நல்ல மரியாதையான ஒரு படம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்த காமெடி அதில் இல்லை” என்று படத்தைப் பார்த்த நிறைய குடும்பத்தினர் எங்களுக்குத் தெரிவித்தார்கள். எந்த இடத்தில் தவறு நடந்தது என்றால் ரசிகர்கள் முழுக்க காமெடி படம் என்று நினைத்து வந்துவிட்டார்கள்.
நாங்கள் நல்ல படம் கொடுத்திருந்தோம். ரசிகர்கள் எதிர்பார்த்த படத்தை எடுக்கவில்லை. இப்போது “இதைத்தானே எதிர்பார்த்தீர்கள் இந்தாங்க ‘எலி'” என்று விருந்து கொடுக்கப் போகிறோம். விழுந்து விழுந்து சிரிக்கப் போகிறார்கள்.
ஒரு படம் தோல்வியடைந்தும் மறுபடியும் அதே இயக்குநர் - நடிகர் இணைவது ஆச்சரியமாக இருக்கிறதே?
எங்கள் இருவருக்குள்ளும் நல்லதொரு புரிதல் இருக்கிறது. ‘தெனாலிராமன்' படப்பிடிப்பு நடக்கும்போதே ஒரு காமெடிப் படம் பண்ணலாம் என்று பேசிக்கொண்டுதான் இருந்தோம். அதனால்தான் திரும்பவும் வாய்ப்புக் கொடுத்தார். எங்களுக்குள் கருத்து வேறுபாடு கிடையாது, கருத்துப் பரிமாற்றம் தான் இருக்கிறது.
மூன்றாவது வாய்ப்பு அமைந்தால் என்ன செய்வீர்கள்?
அதில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. இப்போதைக்கு ‘எலி' பண்றோம். அடுத்த படத்துக்கான கதையையும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். இந்தப் படம் முடித்த உடனேயே பண்றோமா, கொஞ்சம் நாட்கள் கழித்து பண்றோமா என்பது அவரது விருப்பம்தான்.
வடிவேலுவை வைத்துப் படம் பண்ணி னால், அவருடைய தலையீடு இருக்கும் என்று ஒரு பேச்சு நிலவுகிறதே?
“தொடர்ச்சியாக இவ்வளவு காமெடி வசனங்கள் அள்ளிக் கொடுக்குறீங்க. நீங்கள் ஏன் இயக்கக் கூடாது” என்று அவரிடமே நான் கேட்டிருக்கிறேன். அப்போது “இல்லை நண்பா. நீ ஒரு காட்சி கொடு. அதில் நான் காமெடி கலந்து சூப்பராகச் சொல்வேன். ஆனால் அடுத்த காட்சி இதுதான் என்று எனக்குத் தெரியாது. நீ என்னிடம் ஒரு விஷயம் சொல்லு, அதை நான் காமெடியாக்கி உன்னைச் சிரிக்க வைக்கிறேன்” என்றார். இதை ஏன் இப்படி எடுக்கக் கூடாது என்றெல்லாம் என்னிடம் கூற மாட்டார்.
முதலில் கதையைச் சொல்லச் சொல்வார். கதையைக் கேட்டவுடன், இந்த இடத்தில் எனக்கு இது சரியாக வருமா என்று கேட்பார். சரியாக வரும் என்று கூறியவுடன், முழுக் கதையையும் மூளையில் ஏற்றிக்கொள்வார். ஒரு வாரத்துக்குள் அந்தப் பாத்திரத்துக்கு என்ன பண்ணலாம், பண்ணக் கூடாது என்று மனதில் முடிவு செய்துவிடுவார். அதற்கு பிறகு நாம் என்ன சொன்னாலும், அதில் தலையிடவே மாட்டார்.
காட்சி இதுதான் என்று கூறியவுடன், வசனத்தில் இப்படிப் பண்ணலாமா என்று நிறைய சாய்ஸ் சொல்லுவார். ஆனால் மறந்தும் கதை, திரைக்கதை ஏரியாவுக்குள் வடிவேலு தலையிடுவதில்லை. ஒரு காட்சி சொன்னால் இதுக்கு முன்னால் என்ன காட்சி, பின்னால் என்ன காட்சி என்று கேட்பார். அதற்குத் தகுந்தவாறு நடிக்க வேண்டும் என்று சொல்வார். அவ்வளவுதான். அந்தக் காட்சிக்குள் அவருடைய விளையாட்டு நடக்கும்.
மறுபடியும் காமெடியனாக களம் இறங்குவது குறித்து வடிவேலு உங்களிடம் எதுவும் கூறியிருக்கிறாரா?
அடுத்த அடுத்த படங்கள் பண்ணுவேன் என்று சொல்வார். யார்கூடப் பண்ணினால் நல்லாயிருக்கும் என்று என்னிடம் கேட்பார். உடனே அதை எப்படி நான் சொல்லுவேன் சார்.. நீங்கதான் சொல்லணும் என்பேன். அவசரப்படாமல் பண்ணுவோம் யுவராஜ், எனக்கு இது பிடித்திருக்கிறது என்பார்.
மக்களை சிரிக்கவைக்கச் சரியான படங்கள் அமைய வேண்டும் என்பார். நிறையப் பேர் அவரிடம் கதை சொல்ல வருகிறார்கள். இப்போதைக்கு வேண்டாம் என்று மறுத்துவிடுவார். ‘எலி' முடியட்டும், முடிந்தவுடன் பேசலாம் என்று கூறியிருக்கிறார்.


நன்றி  - த  இந்து

Saturday, March 28, 2015

கமலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது ஏன்? - சைக்கோ ஸ்பெஷலிஸ்ட் செல்வராகவன் பேட்டி

  • சிம்பு, யுவனுடன்
    சிம்பு, யுவனுடன்
  • படம். எல்.சீனிவாசன்
    படம். எல்.சீனிவாசன்
  • மனைவி கீதாஞ்சலியுடன்..
    மனைவி கீதாஞ்சலியுடன்..
‘‘உண்மை இதுதான். தற்போதைய சினிமாவில் சுதந்திரம் அறவே இல்லை. நான் படம் எடுக்கத் தொடங்கிய 2000-ல் ஒரு ஆரோக்கியமான சூழல் இருந்தது. 100 படங்களில் 99 படங்கள் காமெடிப் படங்கள்தான் விற்கும் என்ற நிலை அப்போது இருந்ததில்லை ’’
ஒவ்வொரு முறையும் வெப்பம் தெறிக்கக் கோபத்தோடு பேட்டிக்குத் தயாராவதுதான் இயக்குநர் செல்வராகவன் ஸ்பெஷல். சிம்புவை வைத்து அடுத்து எடுக்கவிருக்கும் புதிய படத்தின் ஆரம்ப கட்ட வேலைகளில் மூழ்கியிருந்தவர், ‘தி இந்து’வுக்காக அளித்த பேட்டியிலிருந்து...
‘இரண்டாம் உலகம்’ படத்துக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் இடைவெளியை எப்படி உணர்கிறீர்கள்?
தொடர்ந்து படம் பண்ணிக்கொண்டே இருக்க வேண்டுமா என்ன? ஓடிக்கொண்டே இருக்கும்போது நின்று மூச்சு வாங்கிக்கொள்வோம் இல்லையா.. அப்படித்தான் இந்த இடைவெளியை எடுத்துக்கொள்கிறேன்.
‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’ படங்களின் வழியே ஏற்படுத்திய தாக்கத்தை, நீங்கள் புதிய களங்களில் உருவாக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘இரண்டாம் உலகம்’ படங்களில் ஏற்படுத்தவில்லையே?
தொடர்ந்து காதல் படங்களையே கொடுக்க முடியாது. நான் இங்கே காதல் படங்கள் மட்டும் எடுப்பதற்காக வரவில்லை. அப்போது எனக்கு 22, 23 வயது இருக்கும். அதனால் சில படங்கள் அந்த வயது அனுபவத்தில் இருந்திருக்கலாம். அதையே தொடர்ந்தால் பணத்துக்காக மட்டுமே இயங்கும் ஆளாக மாறிவிடுவோம். அதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு ஃபிலிம்மேக்கர் பல வகைப்படங்களைக் கொடுத்தே ஆக வேண்டும்.
உங்கள் படங்களைப் படமாக்கும்போது திரைக்கதையின் முதல் காட்சியில் தொடங்கி வரிசையான முறையில் படமாக்குவீர்கள் என்பது உண்மைதானா?
சில படங்களை அப்படித் தொட்டுத் தொடர்ந்திருக்கிறேன். அதுமாதிரி செய்யும்போது நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. படக்குழுவினர் எல்லோருடைய ஒத்துழைப்பும் அதற்கு முக்கியம். எல்லா தருணங்களிலும் அப்படிச் செய்ய முடியாத சூழலும் உருவாகும். தொடக்கத்தில் 15 முதல் 20 காட்சிகள் வரைக்குமாவது வரிசையாக எடுக்கும்போது கதையோடு நம்மை இணைத்துக்கொள்வது இலகுவாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
படைப்பாளியின் சுதந்திரத்திற்குள் தணிக்கைக் குழு அதிகம் தலையிடுவதாகவும், படத்தை ஆராய்ந்து தேர்ந்த விமர்சனம் வைப்பவர்கள் அங்கே குறைவு என்றும் கூறப்படுவதை எப்படிப் பார்க்கிறீகள்?
என் படங்களுக்கு சென்சாரில் இதுவரை எந்தப் பிரச்சினையும் எழுந்ததில்லை. அவர்கள் முன் வைக்கும் பல கருத்துகள் ஏற்றுக்கொள்ளும்படியாகத்தான் இருக்கும்.
உங்கள் படங்களை மணிரத்னம் தொடர்ந்து பாராட்டிவந்திருக்கிறார். தற்போது அவரும் காதல் கதைக்குத் திரும்பியிருக்கிறார் என்று தெரிகிறதே?
அப்படியெல்லாம் இல்லை. வேறுவேறு மனநிலைகளில் கிரியேட்டர்கள் யோசிக்கத்தான் செய்கிறார்கள். காதல் கதைகளைக் கொடுக்க இது சரியான நேரம்தான். தற்போதைய சூழலில் காதல் படங்கள் எதுவும் இல்லை. காமெடிப் படங்களைத்தான் இழுத்துப்போட்டு இயக்குகிறார்கள். இப்போது காதலைத் தொட்டால் புதிதாகத்தான் இருக்கும்.
கமலின் ‘விஸ்வரூபம்’ படத்தில் பணியாற்ற முடிவெடுத்து படத்தின் ஆரம்ப வேலைகளில் இணைந்திருந்தீர்கள். திடீரென ஒரு கட்டத்தில் விலகியும் விட்டீர்கள். அந்தப் படத்தில் பணியாற்றியிருக்கலாமே என்று எப்போதாவது நினைத்ததுண்டா?
நடக்காததைப் பற்றி நான் எப்போதுமே கவலைப்பட்டதில்லை. சினிமா எல்லோரும் சேர்ந்து பயணிக்கக்கூடிய விஷயம். சரியாக இல்லை என்றால் அதன் உறுதி கம்மியாக இருக்கும். ஒரு விஷயம் நடக்கவில்லை என்றால் அடுத்ததை நோக்கி நகர்வதுதானே சரி.
இனி திரைப்படமே எடுக்க வேண்டாம் என்ற மனநிலையோடு பேட்டி கொடுத்தவர், நீங்கள். அந்த கோபம் எல்லாம் குறைந்துவிட்டதா?
எப்போதுமே என் கோபங்களுக்குச் சரியான காரணம் இருக்கும். இங்கே இருக்கும் சூழ்நிலை மீதுதான் என் கோபம். மும்பையில் சினிமா வேலை செய்யும்போது மரியாதை இருக்கிறது. இங்கே இல்லை. இது பணத்துக்கான தொழில் என்று 90 சதவீதம் ஆட்கள் பார்க்கிறார்கள். பணம் மட்டும்தான் சினிமாவா? பணம் அவசியம்தான். அதுவே முழுக்க அவசியமாகிவிடக் கூடாதே. என் கோபம் இதுதான்.
தனுஷின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பும் இருந்திருக்கிறது. ஒரு அண்ணனாகத் தற்போது அவருடைய ஓட்டத்தை எப்படி கவனிக்கிறீர்கள்?
சின்ன வயதில் இப்படி இருந்தோம், அப்படிச் சுட்டித்தனம் செய்தோம் என்ற ஏக்கங்கள் இருக்கலாம். அதை எல்லாம் கடந்து எல்லோருக்கும் தனித் தனிக் குடும்பம், திசைகள் வந்துவிட்டன. அதைவிட ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் ஒரு எல்லைக்கோடும் உருவாகியுள்ளது. அண்ணன், தம்பி என்பதை எல்லாம் கடந்து தனித் தனி இடம் இரண்டு பேருக்கும் இருக்க வேண்டும்.
சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவிடுகிறீர்களே?
கூட்டமாக இருக்கும் இடத்தில் என்னால் இருக்க முடியாது. சின்ன வயதில் இருந்தே நான் இப்படித்தான். நாலு பேர் சுற்றி நின்றாலே எனக்குப் பிரச்சினை. நான் எனக்கு ஏற்ற மாதிரி வாழ்கிறேன்.
ட்விட்டரில் குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுவது தொடர்பான பதிவுகளையே நிரப்புகிறீர்களே?
அது ஒரு வரம்தான். எவ்வளவு பேர் குழந்தையின் அருமையைப் புரிந்துகொள்கிறோம். பிள்ளைகளின் பொழுதுபோக்கிற்காக நேரத்தை வீணாக்குவது விசேஷமானது. அதை விட்டுவிடக் கூடாது.
அவ்வளவு எளிதாகப் படப்பிடிப்புக்கு அழைத்து வர முடியாதவர் என்று கூறப்படும் சிம்புவை நீங்கள் இயக்க இருப்பதுதான் தற்போது கோடம்பாக்கத்தில் பேச்சாக இருக்கிறது..
‘காதல் கொண்டேன்’ படம் இயக்கிய நாட்களில் இருந்தே சிம்புவைத் தெரியும். என்னையும்கூட, ‘இவன் அப்படி, இப்படி’ என்று கூறுகிறார்கள். சிம்புவையும் அதுமாதிரி ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. நெருக்கமான இரண்டு நண்பர்கள் சேர்ந்து இந்தப் படத்தில் பயணிக்கப்போகிறோம். அவ்வளவுதான்.
‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தினை உங்கள் மனைவி கீதாஞ்சலி இயக்குகிறார். படப்பிடிப்பில் உங்களையும் பார்க்க முடிகிறதே?
நான் ஒரு கதையைத் தயார் செய்து வைத்திருந்தேன். திடீரென ஒரு நாள், ‘நான் படம் இயக்கப்போகிறேன்’ என்று ஒரு டீமோடு வந்து கேட்டாங்க. ‘ஓ தாராளமாக’ என்று கதையைக் கொடுத்துவிட்டேன். திரைக்கதை என்னோடது என்பதால் படப்பிடிப்பில் கதையில் ஏதாவது மாற்றம் வரும்போது நான் அங்கே இருந்துதானே ஆக வேண்டும்?
சிம்புவை வைத்துத் தொடங்கும் படத்தின் கதைதான் என்ன?
ஒவ்வொரு முறை ஒரு படம் செய்யும்போதும் நிறைய யோசிப்பேன். இதைத் தொடுவோம் எனும்போது எனக்கு முதலில் ஆர்வம் ஏற்பட வேண்டும். மீண்டும் ஒரு சோகமான காதல் கதையோ, பாதிக்கப்பட்ட மனதின் கதையோ எடுக்க முடியாது. இந்தப் படத்தில் என்னவெல்லாம் ஈர்க்க முடியும் என்று பார்க்கும்போது என்னோட தேடலும் அதை நோக்கியதாக இருக்கிறது. அப்படி ஒரு படமாகத்தான் இதுவும் வரும்.
விக்ரமை இயக்கப் புறப்பட்டு ‘லடாக்’ வரை படப்பிடிப்புக்கு போய் படத்தைத் தொடர முடியாமல் போனதற்குக் காரணம் என்ன?
கதையை மாற்றிக்கொண்டே போகச் சொன்னார்கள். அது முடியாது என்று சொல்லிவிட்டேன். சிம்பிள். அவ்வளவுதான்.


நன்றி  - த  இந்து