Showing posts with label பெண்கள் விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label பெண்கள் விழிப்புணர்வு. Show all posts

Wednesday, May 30, 2012

ஃபேஸ்புக் மூலம் ஏமாற்றப்பட்டு கற்பை இழந்த சேலம் பெண்கள்-ஜூ வி கட்டுரை


ட்பு வட்டங்களுக்குத் தளமாக இருக்கும் ஃபேஸ்புக், சில நேரங்களில் தப்பு வட்டங்களுக் கான களமாகி விடுகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் சேலத்தைச் சேர்ந்த லலிதாவும் கன்னியாகுமரியை சேர்ந்த மேரியும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). பேஸ்புக் மூலமாக அறிமுகம் ஆன நண்பர்களிடம் தங்களையே இழந்து நிற்கிறார்கள் இருவரும்! 


கடந்த 24-ம் தேதி வேலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வந்து புகார் கொடுத்தவர்கள் சார்பில் பேசினார் வழக்கறிஞர் மணிகண்டன். ''லலிதா, மேரி இருவரும் தோழிகள், சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். இருவரும் ஃபேஸ்புக்கில் இருக்கின்றனர். ஃபேஸ்புக் மூலமாக லலிதாவுக்கு வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் பழக்கமானார். சதீஷின் நண்பர் ஆனந்தபாபுவும் லலிதாவிடம் அறிமுகமாக, மேரியும் அவர்களின் நட்பு வட்டத்தில் சேர்ந்துள்ளார்.

 சிவப்புச்சட்டை போட்டு நான் டேஞ்சரான ஆள்னு சொல்லாம சொல்றாரு போல அண்ணன் பார்க்க பாரதிராஜா பையன் மனோஜ் மாதிரி இருக்காரு
அடுத்து செல்போன் பேச்சாக இவர் கள் நட்பு வளர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து, ஜனவரி மாதத்தில் ஒரு நாள் லலிதாவையும் மேரியையும் பார்க்க ராணிப்பேட்டை நண்பர்கள் காரில் சென்னைக்கு வந்தனர். இருவரையும் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் தங்கக் கோயிலுக்குக் கூட்டிச் செல்வதாக அழைத்துப் போனார்கள். 



சி.பி -   ஹா ஹா >>வேலூர் மாவட்டத்தில் இருக்கும் தங்கக் கோயிலுக்குக் கூட்டிச் செல்வதாக>>> 

 தங்கக்கோயிலா? அங்கே போய் தங்கறதுக்கு கோயிலா?


ஆனால் அவர்கள், ராணிப்பேட்டையில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துப் போயி ருக்கிறார்கள். அங்கே ஆனந்த பாபு - மேரி ஓர் அறையிலும், லலிதா - சதீஷ் ஓர் அறையிலும் தங்கி இருக்கின்றனர். காதலிப்பதாகவும் உருக்கமான வார்த்தைகளால் சொல்லி இருக்கிறார்கள். தங்களை நிச்சயமாகத் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எண்ணி, இருவரும் அவர்களிடம் ஏமாந்து போய் இருக்கின்றனர். பிறகு, 'எப்போது திருமணம்?’ என்று பெண்கள் இருவரும் நச்சரித்திருக்கிறார்கள்.


சி.பி - ஏம்மா, அப்பாவிப்பெண்களே! அந்த நச்சரிப்பை மேட்டர்க்கு முன்னாலயே பண்ணி இருந்தா தக்காளிங்க 2ம் ஓடி இருக்குமே?


 ஆள் எஸ் ஜே சூர்யா மாதிரியே இருக்காரு. அப்பவாவது பொண்ணுங்க ஜாக்கிரதையா இருந்திருக்கலாம்
'உங்களிடம் நாங்கள் டைம் பாஸ்க்குத்தான் பழகினோம். உங்களை எங்களால் திருமணம் செய்ய முடியாது. மீறி ஏதாவது பிரச்னை செய்ய நினைத்தால், உங்களின் அந்தரங்கப் புகைப்படங்கள் எங்களிடம் இருக்கிறது, அதை ஃபேஸ்புக்கில் போட்டுவிடுவோம்’ என்று மிரட்டி இருக்கிறார்கள்.



சி.பி - உடனே பொண்ணுங்களும் மிரட்டி இருக்கனும்.. தம்பி.. உன் ஆபாச ஃபோட்டோவும் இருக்கு அதை நாங்க நெட்ல போட எவ்ளவ் நேரம் ஆகும்? எங்க முகத்தை மறைச்சு உன் முகம் தெரியற மாதிரி போட்டுடுவோம்னு மிரட்டி இருக்கலாம் , பய புள்ளங்க பயந்து தெறிச்சிருக்கும்

அவர்களின் நண்பர்களான திலீப், லூயிஸ், ஆனந்த நித்தியானந்தம் ஆகியோரும் இந்தப் பெண் களை மிரட்டவே, தாங்கள் ஏமாற்றப்பட்டதாக வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள் ளார்கள். இப்போது ஆனந்த், சதீஷ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்'' என்றார் கொந்தளிப்பாக.




வேலூர் காவல் துறையினரிடம் விசாரித் தோம். ''சதீஷ் மிகவும் டிப்டாப்பாக இருப்பான். பெண்களை ஏமாற்றுவது சதீஷ§க்கும் அவனது நண்பன் ஆனந்த பாபுவுக்கும் கை வந்த கலை. ஏற்கெனவே சென்னையைச் சேர்ந்த  விஜயலட்சுமியை ஃபேஸ்புக் மூலம் தொடர்புகொண்டு, சதீஷ் ஏமாற்றி உள்ளான். 'உன்னுடைய ஆபாசப் படம் என்னிடம் இருக்கிறது. இரண்டு லட்சம் தர வேண்டும்’ என்று மிரட்டி, 50,000 ரூபாய் வாங்கியுள்ளான். மேலும் மிரட்டவே, விழுப்புரம் மாவட்டத்தில் அந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார். இதுபோன்று நிறையப் பெண்களை ஏமாற்றி இருக்கிறார்கள். எங்களின் கணிப்புப்படி 15-க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாந்திருப்பதாகத் தெரிகிறது'' என்று சொன்னார்கள்.
இந்த விவகாரம் குறித்துப் பேசும் வேலூர் மாவட்டத்தில் யாஸ்காம் இன்டர்நெட் சென்டர் நடத்திவரும் ஆஸாம் இர்பான், ''பெண்கள் ஃபேஸ்புக்கில் எந்தக் காரணம்கொண்டும் யாருக்கும் தொலைபேசி எண்ணைத் தரக்கூடாது. நன்கு அறிமுகமான நபர்களை மட்டுமே தங்களுடைய நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தனது புகைப்படங்களையோ அல்லது குடும்பத்தாரின் புகைப்படங்களையோ ஃபேஸ்புக்கில் வெளியிடக்கூடாது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் சாட் செய்யாதீர்கள்'' என்று ஆலோசனைகள் சொன்னார்.



பெண்களே உஷார்!

Monday, June 06, 2011

ஆண்மை தவறேல் - திரில்லர்+பெண்களுக்கான விழிப்புணர்வுப்படம் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi95aAmKLmokb142npPHA90W84A45vdhgG8C0__bHndTHA9ZdkwzklA_4L-FYahrkamNbUHfTjTlb-y0gOcE_Aoc0CflAXod44Vmr5HycCwhkClNprqNdFl-YEXGK8kAa2T9Hpj4a5Wm4o/s1600/Aanmai-thavarael1.jpg


சிட்டில வேலை செய்யும் பெண்கள், கால் செண்ட்டர்ல ஒர்க் பண்ற லேடீஸ் என பெண்கள் எப்படி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை இவ்வளவு விஸ்தீரணமாக யாரும் படம் எடுத்ததில்லை என சொல்லும் அளவுக்கும், இது ஒர்க்கிங்க் விமனுக்கான முதல் முழு விழிப்புணர்வுப்படம் என்று சொல்லும் அளவுக்கு  தகுதியான படம் தான்.. ஆனால் அதற்காக பிரச்சார தொனி இன்றி ஒரு ஆக்‌ஷன் த்ரில்லருக்கே உரிய விறு விறுப்புடன்  படம் செம ஸ்பீடுடன் செல்கிறது..(முதல் பாதி வரை)

கால் செண்ட்டரில் வேலை செய்யும் ஹீரோயின் டியூட்டி விடிகாலை 4 மணிக்கு முடிகிறது.. அவர் வழக்கமாக காதலனுடன் கடலை போட்டு விட்டு 6 மணிக்கு வீட்டுக்கு போபவர்..ஒரு நாள் திடீர் என மர்ம ஆசாமிகளால் கடத்தப்படுகிறார். அவர்கள் இளம்பெண்களை கடத்தி வெளிநாடுகளில் ஆன்லைனில் ஏலம் விட்டு பணம் சம்பாதிக்கும் கும்பல்.. அவர்களிடம் இருந்து எந்த வித  ஹீரோயிஸமும் இல்லாமல் எப்படி ஹீரோ ஹீரோயினை காப்பாற்றுகிறார் என்பதே கதை..

நேரம் கெட்ட நேரத்துக்கு வீட்டுக்கு வரும் பெண்கள், காதலனுடன் ஊர் சுற்றும் பெண்கள், பணத்துக்காக தன்னையே விற்க துணிபவன் காதலன் என்பதை உணராத பெண்கள் என படம் முழுக்க பெண்களுக்கான விழிப்புணர்வு பாடங்கள் அதிகம்..


படத்துல முக்கிய பாராட்டு ஒளிப்பதிவு.. படம் முழுக்க கேமரா முக்கிய பங்கு ஆற்றி இருக்கிறது,..எடிட்டிங்க் பக்கா.. ஆனால் இடைவேளைக்குப்பிறகு இன்னும் டிரிம் பண்ணி இருக்கலாம்..

ஹீரோ புதுமுகம் த்ருவா.. சுமார் நடிப்பு.. கெஸ்ட் ரோல் சம்பத்.. நல்லா பண்ணி இருக்கார்.. ஹீரோயின் ஸ்ருதி ஓக்கே ரகம்..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhO-VT3eWfM6kaOyocN2ZwqrtC_2HOLuSGgIeDrJi1xdm70uDrY39kQZ-gc5nyIBRCDA_KVSZDp7-el_NimIsvoGC-SW5lALsfGKJHN4k9VCsrN6DxPyu0iRoxiRX4XqM2gqmeAHluQV7E/s640/www.cinekingdom.com-Aanmai-Thavarael-14.jpg

 படத்தில் கலக்கிய வசனங்கள்

1. ஏம்ப்பா.. 3000 கிமீ நிக்காம போகுமா வண்டி?

நீங்க 30,000 கிமீ நிக்காம ஓட்ட முடியும் தானே?

2. ஏண்டி.. எப்பவும் ஏன் நைட் டியூட்டியா பார்த்து போறே?

அம்மா..பகல்ல வேலை செஞ்சா  பல பசங்களோட தூக்கம் கெட்டுப்போயிடுமே?அதான்..

3.ஏண்டா பேய் அடிச்ச மாதிரி இருக்கே?

சரக்கடிச்சுட்டு வந்து எவனோ என்னை மூடு அவுட் பண்ணிட்டான் மாப்ளே..

4. என்னய்யா.. ஏதாவது சொன்னானா அந்த கைதி.. ?

இல்லைங்கய்யா..

அப்போ பெண்டிங்க்ல இருக்கற 4 கேஸையும் அவன் மேல போடு..

5. சார்.. யூ ஆர் மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்க்.. லவ் பண்ற எல்லாரும் அக்யூஸ்ட் கிடையாது.. வேணும்னா  சஸ்பெக்ட்னு சொல்லிக்குங்க..

6. என்னடா லவ் இந்தக்காலத்துல நீங்க பண்றது?

கட்டாயப்படுத்தாம அவங்க சம்மத்தத்தோட கற்பழிப்பீங்க.. அதான் லவ்வா?
http://cineviduppu.com/wp-content/uploads/2011/05/cin2.jpg

7. மும்பைல இருக்கற பொண்ணை கஷ்டப்பட்டு ட்ரேஸ் பண்ணி கூட்டிட்டு வந்தேன்.. காதலன் என்ன சொன்னான் தெரியுமா? அவ ஒரு ********* அப்டின்னு சொல்லி துரத்திட்டான். அவ விஷம் சாப்பிட்டு செத்துட்டா.....லவ் பண்றப்ப கண்னே மணியேங்கறது.. இந்த மாதிரி பிரச்சனைல மாட்டிக்கிட்டா அவளை ******** அப்டின்னு சொல்லிடறது.. இதாண்டா ஆம்பளைங்களோட வழக்கம்..?

8. இந்த நாட்டுல ட்ரக்ஸ்க்கு அடுத்ததா அதிகமா கடத்தப்படறது எது தெரியுமா? பெண்கள் தான்.. மனுஷனுக்காக மனுஷனால மனுஷனையே கடத்தற சோகத்தை என்னன்னு சொல்ல?

9.இப்போ சிட்டில மொத்தமா 6500 ஃபிகருங்க இந்த தொழில்ல இருக்காங்க.. அவங்களை கண்காணீக்க 4500 மாமா பசங்க இருக்காங்க..

10.  என்னது ? வெர்ஜினிட்டி டெஸ்ட்டா? அது எதுக்கு?

பொண்ணுங்களை கடத்துனதும் முதல்ல கன்னித்தன்மையை பரிசோதனை செய்வாங்க.. கை பட்ட ஃபிகரா இருந்தா லோக்கல்லயே வந்த ரேட்டுக்கு தள்ளி விட்ருவாங்க..ஃபிரெஸ் பீசா இருந்தா இண்ட்டர்நெட்ல ஏலம் விட்ருவாங்க..

11. நீங்க பொண்ணா பிறந்தது தான் ஒரே தப்பு.. அதுவும் அழகான பொண்ணா பொறந்தாச்சே.. அதான் இவ்வளவு அவஸ்தை படறீங்க..

12. எவனாவது ஒருத்தியே போதும்னு நினைக்கறானா? புதுசு புதுசா பார்க்கனும்னு ஆசைப்படறதனால தான் இந்த பிஸ்னெஸ் கொடி கட்டிப்பறக்குது...


http://narumugai.com/wp-content/uploads/2010/09/Udhayanidhi-Stalin.jpg



இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. படத்தின் கதை, திரைக்கதை கவர்ச்சியை அனுமதித்தாலும் இயக்குநர் எதையும் மிஸ் யூஸ் பண்ணாமல் கண்ணியமாக காட்சிகளை படம் ஆக்கிய விதம்..

2. சிட்டியில் பெண்கள் எப்படி கடத்தப்படுகிறார்கள் என்பதை ஸ்டெப் பை ஸ்டெப் நேரில் நடப்பது போலவே படம் ஆக்கியது..

3.படகின் மூலம் தப்ப வேண்டிய சூழலில் அங்கே இருக்கும் பணியாள் முரண்டு பிடிக்கிறான் என்பதற்காக பெண் ஒருவரை பலி ஆக்க முன் வரும் காட்சியும், அதை படமாக்கிய விதமும்..

4. காதலனே தன்னை கடத்த உடந்தையாக இருக்கும் அதிர்ச்சியான சீனை நம்பும்படி படம் எடுத்தது..

5.படப்பிடிப்பு நடத்த தேர்வு செய்த இடங்கள் , ஆர்ட் டைரக்‌ஷன், இசை என டெக்னிக் அம்சங்கள் நீட்..

http://boxoffice9.com/gallery/var/albums/Tamil-Movie-Gallery/Tamil-Movie-Stills/Aanmai-Thavarael-Movie-Stills,Photos,Pics/Aanmai%20Thavarael%20Movie%2000-2.jpg?m=1305789829


இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

 1. படத்தில் பல இடங்களில் ஹிந்தி பேசற மாதிரி காட்சிகள் வருது.. அந்த இடங்களில் தமிழில் சப் டைட்டில் போட்டிருக்கலாமே?

2. ஓப்பனிங்க் சீன்ல ஹீரோயின் செல் ஃபோன்ல வீடியோ ஆப்ஷன் ஆன் பண்ணிட்டு படம் எடுக்கறப்ப வில்லனோட ஆளுங்க கடத்தறாங்க. அப்போ அவ செல் ஃபோன் கீழே விழுது.. அந்த ஃபோன் மூலமா அவ கடத்தப்படற  மேட்டர் செல் ஃபோன்ல பதிவாகுது.. அது எப்படி? கீழே விழும் செல் ஃபோன் குப்புற விழும், அல்லது மல்லாக்க விழும்.. கரெக்ட்டா படம் எடுக்கற ஆங்கிள்ள நின்ன வாக்குல இருக்குமா?ஆட்கள் அதை கவனிக்க மாட்டாங்களா?

3. சிட்டில பெண்களை கடத்திட்டு போகும் வேன் எப்படி எந்த செக்கிங்க்கிலும் மாட்டலை?

4. பெண்களை கடத்தும் முன் அவர்கள் பயோடேட்டா பார்த்துட்டு பல நாள் ஃபாலோ பண்ணிட்டு தான் கடத்துவோம் என வில்லன் ஆட்கள் சொல்றாங்க.. ஆனா வழில ஒரு கமிஷனரோட பொண்ணை ஏன் கடத்தறாங்க.. போலீஸ் கமிஷனர் பொண்ணை கடத்துனா டேஞ்சர்னு தெரியாதா?ஊர்ல பொண்ணூங்களுக்கா பஞ்சம்?

5. க்ளைமாக்ஸ்ல ஹீரோயினை ஏலம் எடுக்கும் ஹீரோ அவரை மீட்கப்போறப்ப ஏன் ஃபைட் வருது?ஏலம் எடுக்கறது யாரா இருந்தா என்ன ? அவங்களூக்கு வேண்டியது பணம் தானே?

6. ஜீப் வெடி குண்டு வைத்து தகர்க்கப்பட்டபோது பலி ஆனதாக கருதப்படும் சம்பத் எப்படி திடீர்னு க்ளைமாக்ஸ்ல உயிரோட வர்றார்? ஹீரோ இதே கேள்வியை கேட்கறப்ப “ அதை சொல்லிட்டிருக்க எல்லாம் இப்போ நேரம் இல்லங்கறாரே? அது சமாளிஃபிகேஷன் வசனமா?

7. வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்கும் காட்சிக்கான காமிரா கோணங்கள் இன்னும் கண்ணியமாக வைத்திருந்திருக்கலாமே?

8. படத்துக்கு பெண்மை தவறேல் என டைட்டில் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்குமே?அதே போல் படத்தின் போஸ்டர் டிசைன்கள் அனைத்தும் இது ஆண்களூக்கான படம் என்பது போல் ஒரு மாயையை ஏற்படுத்தியதை தவிர்த்திருக்கலாம்

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/06/pooja-chopra8.jpg


இந்தப்படம் ஏ செண்ட்டர்களில் 30 நாட்கள் , பி செண்ட்டர்களில் 25 நாட்கள்  சி செண்ட்டர்களில் 15 நாட்கள் ஓடலாம்..

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 41

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட்ஸ் - படம் பார்க்கலாம்

இயக்குநர் புது முகம் ,பெயர் குழந்தை வேலப்பன்.இவர் இதற்கு முன் எந்த இயக்குநரிடமும்  உதவி இயக்குநராக பணியாற்றாதவர்..