Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

Tuesday, December 25, 2012

பெண் சுதந்திரம் என்ற பேரில் ஊரைச்சுத்திட்டு இருக்கலாமா? - அமைச்சர் பேச்சு - விவாதங்கள் , சர்ச்சைகள்

ஐதராபாத் :"" நம் நாட்டுக்கு நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது என்பதற்காக, பெண்கள், நள்ளிரவில், இஷ்டத்துக்கு சுற்றித் திரியக் கூடாது,'' என, ஆந்திர மாநில காங்., தலைவர் சத்யநாராயணா கூறியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, தான் பேசியதற்கு, அவர் வருத்தம் தெரிவித்தார்.

ஆந்திர மாநில, காங்., தலைவரும், மாநில போக்குவரத்து அமைச்சருமான, பொஸ்தா சத்யநாராயணா, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:நம் நாட்டுக்கு, நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது உண்மை தான். அதற்காக, நள்ளிரவில், ஊர் சுற்றக் கூடாது. குறிப்பாக, பெண்கள், நள்ளிரவில், வெளியில் சுற்றுவது, ஆபத்தானது. நள்ளிரவு நேரங்களில், தனியார் பஸ்களில் பயணிக்காமல் இருப்பதும், நல்லது தான்.இவ்வாறு சத்யநாராயணா கூறினார்.

இவரின் பேச்சுக்கு, கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, பல்வேறு அரசியல் கட்சியினரும், எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, மாலையில், மீண்டும் செய்தியாளர் கூட்டத்தை கூட்டினார். அப்போது, அவர் கூறியதாவது:நானும், ஒரு தந்தை தான்; எனக்கும், குழந்தைகள் உள்ளன. ஒரு தந்தையாக, என் கோபத்தை வெளிப்படுத்தினேன். 



 டில்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவம், என்னை மிகவும் பாதித்துள்ளது. இது, கண்டனத்துக்குரியது. நாட்டையே, இந்த சம்பவம் உலுக்கியுள்ளது. நான் தெரிவித்த கருத்து, பெண்களின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், அதற்காக வருந்துகிறேன். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, மத்திய, மாநில அரசுகள், நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு சத்யநாராயணா கூறினார்.




மக்கள் கருத்து 


1. இவர் கூறிய கருத்து மிக மிக சரி. பெண் சுதந்திரம் என்று கூறி கொண்டு சும்மா இருக்கும் பெண்களை உசுப்பேற்றி அவர்களை சுதந்திரமாக நடமாட விட்டு அவர்களை ஒரு VULNERABLE SITUATION க்கு தள்ளி விடுவார்கள். சுதந்திரம் சுதந்திரம் என்று பெண்கள் மனதில் ஆழ பதிந்து,, என்ன செய்தால் என்ன எந்த நேரத்தில் யாருடன் எங்கே சுற்றினால் என்ன? போன்ற கேள்விகள் மனதில் தோன்றி இதை போன்ற விஷ பரிட்சைகளில் இறங்கி கடைசியில் மானத்தையும் உயிரையும் கூட இழக்கிறார்கள். 



இனியும் பெண்கள் இதை போன்ற சுதந்திர போக்கை கடைபிடித்து பாதிப்படைந்தால், பாதிக்கப்பட்ட இந்த ஒரு பெண்ணுக்காக இன்று போராடும் மாணவர்கள் கூட திரும்பி பார்க்க மாட்டார்கள். பெண்களே நீங்கள் சுதந்திரமாக இருங்கள் ஆனால் அதற்கு ஒரு நேரம் காலம் வைத்திருங்கள். முடிந்தவரை பெற்றோர்களுடனோ அல்லது கூட பிறந்தவர்களுடனோ மட்டுமே செல்லுங்கள். அவர்கள் தான் உங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் உயிரை கொடுத்தாவது காப்பாற்றுவார்கள். நீங்கள் ஒத்து கொள்கிறீர்களோ இல்லையோ ஆனால் நீங்கள் ஒரு WEAKER SEX . உங்கள் அனுமதி இல்லாமல் உங்களை யார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். 



இது இயற்க்கை பெண்ணினத்திற்கு இழைத்த அநீதி. இதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் என்ன தான் தைரியசாலியாக இருந்தாலும் கயவர்களின் கைகளில் மாட்டும்போது உங்களால் எதுவும் செய்ய இயலாது. சினிமாவில் வேண்டுமானால் கூட இருப்பவன் காப்பாற்ற வருவான். ஆனால் நிஜத்தில் பார்த்தீர்களா?. ஆகவே உங்கள் உண்மை நிலையை புரிந்து கொண்டு பாதுகாப்பாக இருங்கள். 



உங்கள் பாதுகாபிற்க்கு யாரவது இதை போன்ற கருத்தை தெரிவித்தால் அதற்கு எதிர்ப்பு காட்டாதீர்கள். யார் என்ன கூறினாலும் அது உங்கள் நன்மைக்கே என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதை போன்ற கருத்துக்களுக்கு எதிர்ப்பு காட்டுபவர்கள் உங்களுக்கு எந்தவிதத்திலும் நன்மை செய்ய மாட்டார்கள் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கான சுதந்திரம் உங்களுக்கு உண்டு. அதை ஒரு வரைமுறையுடன் பயன்படுத்தி கொள்ளுங்கள். 



2. நேற்று நடந்த டெல்லி போராட்டத்தில் நான் பார்த்த ஒரு வாசகம் "DONT TELL HOW TO DRESS" இந்த மாதிரி பெண்களை என்ன சொல்வது இது இவர்களின் தவறா அல்லது இவர்களின் பெற்றவர்களின் தவறா பெண்ணுரிமை பேசுபவர்கள் கண்ணை மூடிக்கொண்டு பேசக்கூடாது.இந்த அமைச்சர் சொன்னது தப்பு கிடையாது 



3. தப்பு செய்தவன் உயிருடன் நன்றாக இருக்கிறான்.. பாதிக்கப்பட்ட பெண் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறாள்.. அவனுக்கு கடுமையான தண்டனை தரவேண்டும் என்று ஒரு அறிக்கை விட துப்பு இல்லை.. இங்கு சிலர் பெண்களுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று கூட ஐடியா கொடுக்கிறார்கள்.. 


இவர்களை எல்லாம் என்ன சொல்வது? வெறுப்பாக இருக்கிறது.. பிரச்னையை சரியான கோணத்தில் அணுக கூட தெரியாத அளவிற்கு நம்மவகளின் மனது இருக்கிறது.. கேட்டால் கலாசாரம் என்கிறார்கள் இந்த நாடு தான் பெண்களை போற்றுகிறதா என்று சந்தேகமாக இருக்கிறது.. நீங்கள் எங்களை போற்றவும் வேண்டாம் இப்படி தூற்றவும் வேண்டாம் எங்களை உயிரோடு விடுங்கள் அது போதும்.. 



4. பெண்கள் பொதுவாகவே ஆண் வர்க்கத்தை ஈர்க்கும் தன்மை படைத்தவர்கள் .ஆகவே இரவில் தனியாக சுற்றாமல் தகுந்த துணையுடன் சென்றால் பாதுகாப்பானதே என்று சொன்ன அமைச்சரின் வார்த்தையில் தப்பில்லை 



5. அவர் கூறுவது உண்மை தானே. சுதந்திரமாக நள்ளிரவில் ஊர் சுற்றிய பெண்ணுக்கு நடந்த கொடுமை தான் தற்போது வெளிச்சத்திற்கு வந்து எல்லோரும் போராடுகிறார்களே. இனியாவது பெண்கள் சுய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வருமுன் காப்பது தான் சிறந்தது. இன்று இந்த ஒரு பெண்ணுக்காக பல்லாயிரம் மாணவ மாணவிகள் போராடுகிறார்கள். அதை ENCOURAGING ஆக எடுத்து கொண்டு ""நமக்கு ஏதாவது ஒன்று என்றால் மாணவர்கள் போராடுவார்கள்"" என்ற தைரியத்தில் இனியும் பெண்கள் இரவு வேளைகளில் பாதுகாப்பு இல்லாமல் நடமாடினால் விளைவுகள் இன்னமும் மோசாமாக தான் இருக்கும். 



இன்று போராடும் மாணவர்களும் சலித்து போய் இதை போன்ற குற்றங்களை JUST LIKE THAT எடுத்து கொண்டு விடுவார்கள். பிறகு போராட யாரும் வர மாட்டார்கள். ஆகவே பெண்களே, உங்கள் பாதுகாப்பு முக்கியம், உயிர் மற்றும் மானத்தை விட சில மணி நேர உல்லாசம் எந்த விதத்திலும் உயர்ந்தது இல்லை. வாழ்கையை அனுபவியுங்கள். அதை அனுபவிப்பதற்கு உயிர் முக்கியம். உல்லாசதிர்க்காக மானத்தையும் உயிரையும் விடாதீர்கள். பாதுகாப்பாக இருங்கள். உங்களுக்கு நீங்கள் தான் பாதுகாப்பு. 


6. இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெற முக்கியக் காரணமே ஆண்கள் பலர் இரவு நேரங்களில் தெருக்களில் சுற்றிக்கொண்டும், ஆங்காங்கே நின்று அரட்டை அடித்துக்கொண்டிருப்பதும்தான். நேரத்திக்கு அவரவர் வீட்டிற்கு செல்லவேண்டியதுதானே.... சில நேரங்களின் வேலைக்கு சென்றுவிட்டுத் திரும்பும் பெண்கள் அதிக பணிச்சுமை காரணமாகவோ அல்லது பஸ் கிடைக்காமலோ இரவு நேரங்களில் தெருக்களில் வரும்போது இந்த மாதிரி ரோட்சைடு ரோமியோக்களால் நோட்டம் விடப்படுகிறார்கள். பல நேரங்களில் யார் இவர்கள் எந்த ஏரியாவைச் சேர்ந்தவர்கள் என்று கூட தெரியாத அளவுக்கு ஆங்காங்கே கூட்டம்போட்டு அரட்டை அடித்துக்கொண்டும் கிண்டல் செய்துகொண்டும் உள்ளனர். பெண்களுக்கு எப்போதும் துன்பம் இதுபோன்ற ஆண்களால்தான். மொத்தத்தில் இரவு நேரத்தில் ஆணோ பெண்ணோ தேவையில்லாமல் வெளியில் சுற்றுவது தவறுதான். 



ஆண்கள் செய்யும் தவறை ஒப்புக்கொண்டு அதற்க்கு தக்க நடவடிக்கையும் தண்டனையும் கொடுக்க வேண்டும் என்று கூற நினைக்காமல் பல ஆணாதிக்க மனப்பான்மையுடையவர்கள் இங்கே பெண்களுக்கெதிராக வாய்கிழிய வக்கணையாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் தங்களது வீட்டு ஆண் (மகன்)களைக் கட்டுக்குள் (பெண்களுக்கெதிரான வன்முறைகளில் ஈடுபடாமல் - ஈவ் டீசிங், தெருக்களிலும் பேருந்து மற்றும் ரயில் பயணத்தின் போது பாலியல் கொடுமை புரிதல், ஆங்காங்கே தேவையில்லாமல் கூட்டம் போட்டுக்கொண்டு அரட்டை அடித்தல்) கொண்டுவாருங்கள் குற்றங்கள் தாமாகக் குறைகிறதா இல்லையா என்று பாருங்கள். 


மாறாக நாங்கள் அப்படித்தான் இருப்போம், செய்வோம், பெண்கள்தான் அதையெல்லாம் மீறி வேலைக்கும் சென்றுவிட்டு வீட்டுக்குள்ளும் அடங்கி இருக்க வேண்டும் என்பதெல்லாம் சுத்த.... சொல்லக் கேவலமான வார்த்தைகள்தான் உள்ளது. 


7. ஒரு புறத்தில் நமது கலாச்சாரம் பெண்களை போற்றும் சிறப்பு உள்ளது தான். உலகெங்கும் பெண்களை பாலியல் பொருளாக கருதும் போது, நமது கலாச்சாரம் தான் பெண்களுக்கு கடவுளை போன்ற ஒரு தனி இடத்தை அளித்துள்ளது. அழகு போன பின் மனைவியை விவாகரத்து செய்து விட்டு இன்னொரு இளம் பெண்ணை மணக்கும் கொடுமைகள் இந்தியாவில் மிக குறைவு. அது நமது கலாச்சாரத்தின் சிறப்பு அம்சம்தான், அதே சமயம் பெண்களின் சிறகுகளை ஒடித்து கூண்டுக்குள் வைப்பதிலும் நாம் தான் முதல்வர்கள். 


அதற்கு முதலில் பெண் என்று தெரிந்ததும் ஆற்றில் வீசி விடுவோம், தவறி உயிர் பிழைத்து விட்டால், கல்வியை தர மாட்டோம் பின் இல வயதிலேயே திருமணம் செய்து வைத்து ஏழு எட்டு உருப்படிகளுக்கு தாயாக்கி விடுவோம், தப்பி தவறி படித்து விட்டால், திருமணத்தின் போது நாம் போடும் முதல் நிபந்தனையே வேலையை விட வேண்டும் என்பது தான். மேலே கூறிய அனைத்தையும் தவறாமல் செய்பவர்கள் திமுக காரர்கள். 



பொருளாதாரத்துக்கு கணவனை சார்ந்தே இருக்கவேண்டிய நிலையை நமது சமுதாயம் உருவாக்கியது தவறு. வாய்க்கும் கணவர்கள் குடிகாரர்களாய், சூதாட்ட காரர்களாய் இருந்தால் அந்த பெண்ணின் வாழ்வை சற்று நினைத்து பாருங்கள். வெளியிலும் செல்ல முடியாது, உள்ளேயும் புழுங்கி கிடைக்கணும். இதனால் தான் தற்கொலைகள் பெருகுகின்றன. அதில் சில தற்கொலைகள் விவசாயம் பொய்த்ததினால் வந்தது என்று தலைவரும் குடைச்சல் கொடுக்கிறார், இத எங்க போயி சொல்லி ஒப்பாரி வைக்கிறது ??? 


8. அமைச்சர் சொன்னது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து . நான் ஒரு சாமானியன் அதனால் இதை சொல்லமுடியவில்லை. இந்தியாவிலுள்ள கோடிக்கன்னக்கான பெண்கள் இரவில் சுற்றினால் ஒவ்வொரு பெனிற்ற்கும் இரண்டு காவலர்களை நியமிப்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. அமைச்சரின் கூற்றிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவன் இதை உணரவேண்டும். 



மேலும் இதை எதிர்பவர்களை பார்த்து நான் கேட்கிறேன். உன் வீட்டு பெண்களை நீ தனியாக செல்ல அனுமதிப்பாயா? மனதில் உள்ளதை அதுவும் தத்துவத்தை வெளியில் பேசுபவனே மனிதன். இரவில் கேளிக்கை விடுதிக்கு செல்வதையும் திருமணமாவதற்குமுன் மற்ற ஆடவருடன் சுற்றுவதையும் நமது கலாச்சாரம் சரி என்று சொல்வதில்ல. பெண்கள்ளுக்கு சாதகமாக பேசியே அவக்களை கயவர்களின் காமவலையில் சிக்க காரனம்மகாதீர். அ. கோவிந்தராஜ் - துபாய் 



9.ஆந்திர அமைச்சர் பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்காகவும், தானே வலிய போய் இப்படிப்பட்ட சிக்கல்களில் மாட்டிகொள்ளகூடாது என்பதற்காகவும், நல்ல எண்ணத்தில் சொன்னதை கூட sollakoodaadhu என்றால் என்ன சொல்வது. பெண்கள் இயற்கையாகவே மென்மையானவர்களாக படைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள் என கருதுகிறேன் , மறுக்கவும் முடியாது. நடுஇரவில் பெண்கள் தனியே செல்வதை தவிர்க்கவேண்டும் என்று சொல்வதை கூட ஏற்றுகொள்ள முடியாது என்பவர்கள் போலியாக பெண்ணுரிமை பற்றி பேசும் நபர்களாகத்தான் இருக்க முடியும் , அமைச்சர் பெண்கள் நடு இரவில் ஊர் சுற்றகூடாது என்று சொன்னதால் தான் பற்றிக்கொண்டு வருகின்றது போலிருக்கின்றது . நடு இரவில் ஊர் சுற்றகூடாது , என்பதுடன் இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதாவது பையன்களுடன் சேர்ந்து கொட்டமடித்துகொண்டு ஊர்சுற்றகூடாது. இது போன்று இளம்பெண்களை சூறையாடியுள்ள எல்லா குற்றவழக்குகளிலும் ஆழ்ந்து கவனித்தால் தெரியும், அந்த இளம்பெண் , ஒரு இளைஞ்சன், அல்லது சில இளைஞ்சன்களுடன் வந்து இருப்பார். தன் பெற்றோர்களுடன் வந்த பெண்களுக்கு இப்படிப்பட்ட கொடுமைகள் நடந்ததாக அதிகளவில் செய்திகள் இல்லை. நடுஇரவில் பையன்களுடன் ஊர்சுற்றிகொண்டிருக்கும் பெண்ணை பார்த்தமாத்திரத்தில் , அப்பெண்ணின் காரக்டரில் குறைபாடு உள்ளவளாக தெரிகின்றது அவர்கள் கண்களுக்கு. எனவே வம்பு செய்ய தொடங்கிவிடுகின்றனர். 



 அது மட்டுமல்லாமல் , கொஞ்சம் கூட கூச்ச நாச்சமில்லாமல் , நாகரிகம் என்கிற போர்வையில் எந்த அளவுக்கு தன் உடம்பை காட்ட முடியுமோ அந்தளவுக்கு காட்டிக்கொண்டு, வாலிப பசங்களை உசுப்பெற்றிவிடுவதெல்லாம் தவறாகவே தெரியவில்லையா? . டெல்லியில் தான் கற்பழிப்பு குற்றங்கள் அதிகமாக நடக்கின்றது என்றால் அதற்க்கு காரணம் ,நாம் நம் இந்திய பண்பாடைஎல்லாம் மறந்து ,மேலை நாட்டு கலாசாரத்தில் மூழ்கி முத்தெடுப்பதால் தான். 



சென்ற ஏழெட்டு ஆண்டுகளாக சென்னையில் கூட வெளி மாநில பெண்கள் அதிகளவில் வந்து நடமாட துவங்கியதில் இருந்து , தமிழக பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்து வருகின்றதை கண்கூடாக காணலாம் . குற்றவாளிகளுக்கு கடுமையாக தண்டனை கொடுத்தால் மட்டுமே ,குற்றங்கள் குறையும். குற்றம் செய்தபின்பு , குற்றவாளிக்கு மிகவும் கடுமையான தண்டனை கொடுப்பது மட்டுமல்லாமல், குற்றம் நடப்பதை தடுக்க பெண்களும் முன்னெச்சரிக்கையுடன் , பாதுகாப்பில்லாத நேரங்களில் , பாதுகாப்பில்லாத இடங்களில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் . 


10. இன்று நமது கலாச்சாரத்திற்கும் ஓவாத தொழில் அமைப்புகள் உருவாகி விட்டன, பெண்களுக்கு எபொழுது பனி நேரம் என்பது சட்டத்தில் இல்லை, இரவு நீதில் பனி செய்யும் பெண்களுக்கு உத்திரவாதம் என்ன , அரசின் உத்திரவாதம் என்ன, காவ்வல் துறையில் பெண்கள் பனி புரிகிறார்கள், காவல் துறையிலையே சில காவலர்களை பற்றி நாம் அன்றாடம் செய்திகள் படிக்கிறோம்,



 எனிவே பெண்களுக்கு இந்த வேலைகள் எல்லாமே ஒரு சாதனை கல் தான், ஒரு பெண் ஒரு ஆணுடன் சுற்றுவது என்பது தனக்கு பாதுக்காப்பு என்கிற அர்த்தத்திலும் வைத்து கொள்ளலாம், இன்று ஒன்று மட்டும் சொல்லலாம் அந்த பெண்ணும் அந்த ஆன் நண்பரும் ஒன்று மட்டும் நிச்சயம் தங்கள் மனதில் எடுத்து கொள்வார்கள் அன்று மட்டும் அந்த பயணத்தை மட்டு படுத்தி இருக்கலாம் என்று, அது நடக்காத ஒன்று, ஆனால் நடந்து விட்டது, இனி என்ன செய்வது, வாய்ப்புகளை நாம் மற்றவர்களுக்கு தடுத்து விட்டால் குற்றங்கள் இல்லை, 


நம் நாட்டில் பாதிக்கும் நேரத்திற்கும் மேல் மின்சாரம் கிடையாது உதவிக்கு இருட்டில் கூட யாரையும் கூப்பிட முடியாது, பஸ்சில் அயர்ந்து தூங்கி விட்ட சிறுமியை ஒரு கண்டக்டர் தவறு செய்ததை சிறுவயதி ல் படித்து இருக்கலாம், அது அரசு பேருந்து, காரணம் ப்ரெய்வெட் பஸ்களை இரவு நேரத்தில் தடை செய்யலாம் என்று சொல்லாலாம் இரவு பஸ்சில் பெண் போலிசே துப்பாக்கியுடன் நிறுத்தலாம், 


நன்றி - தினமல்ர் 

Saturday, August 18, 2012

பெண் நலம் - பிரசவத்தில்... பொய் வலின்னா என்ன?-மருத்துவம்

A to Z பெண் நலம்

பிரசவத்தில்... பொய் வலின்னா என்ன?

டாக்டர் கீதா அர்ஜூன்

சந்தியாவும் அவள் கணவர் சாரங்கனும் தங்கள் குழந்தையின் வருகையை ஆவலோடு எதிர் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய நீண்ட நாள் கனவு, நனவாகும் சமயம் இது. பிரசவகாலம் நெருங்கிக் கொண்டு இருந்தது. அப்போது அவளுக்குள் பரபரப்பும், படபடப்பும் கலவையாக எழுந்தன. பிரசவம் மற்றும் வேதனை போன்ற சொற்கள் அவளுக்கு கவலையை அளித்தன. பிரசவம் பற்றி அவள் கொஞ்சமாவது தெரிந்துகொண்டால்தான், தம் பயத்தை உதறித் தள்ள முடியும் என்று சந்தியாவுக்குத் தோன்றிற்று.


டாக்டரின் மேஜையை நெருங்கிய உடனேயே, டாக்டர் அவளை அமரச் சொல்லி சைகை செய்யும் முன்னாலேயே, ‘எனக்குக் குழப்பமாய் இருக்கு டாக்டர்!’ என்றாள் சந்தியா. ‘லேபர்-னா என்ன? அதுதான் பிரசவ வேதனையா?’


முதல்ல உட்காருங்க. குழப்பமோ, கவலையோ படாதீங்க. பிரசவத்தின் போது கருப்பை வாய் மெலிந்து விரிவடைகிறது. பத்து சென்டிமீட்டர் வரை முதல் ஸ்டேஜில் விரிவடையும். இரண்டாவது ஸ்டேஜில் குழந்தை பிறப்புப் பாதை வழியே வந்து விடும். அதைத் தொடர்ந்து பிளசன்டா அல்லது தொப்புள்கொடியுடன் சேர்ந்த பாகம் வெளிவருவது மூன்றாவது கட்டம். முதல் ஸ்டேஜ்ல தொடங்குகிற வலிதான் பிரசவ வேதனை."


எல்லாருக்குமே பிரசவ வேதனை, பிரசவமாகிற காலம் ஒரே மாதிரி இருக்குமா?


ஒவ்வொரு பிரசவமும் வித்தியாசமானதுதான். அது எத்தனை நேரம் நீடிக்கிறது, எப்படி முன்னேறுகிறது என்பது, பெண்ணுக்குப் பெண் மாறுபடும். ஆனால் உங்கள் மகப்பேறு மருத்துவருக்குத்தான் அது சரியாக முன்னேறுகிறதா என்று தெரியும். அப்படி முன்னேற்றம் நார்மலாக இல்லையென்றால், மருத்துவ உதவி அல்லது சிசேரியன் தேவைப்படுமா என்பதைத் தீர்மானிப்பார்."


பிரசவத்துக்குப் பத்து மாசம் என்கிறார்களே டாக்டர், அப்போ 300 நாட்கள் காத்திருக்கணுமா?


சாதாரணமாக மனித கர்ப்பம் 280 நாட்கள் அல்லது 40 வாரங்கள் நீடிக்கும். 37 வாரங்கள் முடிந்து விட்டாலே நீங்கள் பிரசவத்துக்குத் தயாராகிவிட்டீர்கள் என்று பொருள். பெரும்பாலான பெண்கள் எதிர்பார்த்த தேதிக்கு ஒரு வாரம் முன்னதாகவோ ஒரு வாரம் பின்னதாகவோ பிரசவிப்பார்கள்.


 ஒருவேளை 37 வாரங்கள் முடிவதற்கு முன்பாகவே பிரசவம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டால், அதைக் குறைமாதப் பேறுபிரிமெச்சூர் பிரசவம்அல்லதுப்ரிடர்ம்’ (Pre-term) பிரசவம்என்று குறிப்பிடுவார்கள். 37ஆவது வாரம் முடிவதற்குள் உங்கள் பிரசவத்துக்கான அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக உங்கள் மருத்துவரை நீங்கள் பார்க்க வேண்டும்."


எது பிரசவ வலியைத் தோற்றுவிக்கிறது?

இதன் காரணம் யாருக்கும் தெரியாது! ஆனால் ஆக்ஸிடாசின், ப்ரோஸ்டாகிளாடின் போன்ற ஹார்மோன்கள்தாம் கருப்பைச் சுவரை மெலிதாக்குகிறது. குழந்தையின் ஹார்மோனும் இயங்குவதால், தாயின் ஹார்மோன்கள் உற்பத்தியாகி வலியை உண்டாக்குகிறது."


பொய் வலி எடுக்குமாமே, டாக்டர்?

சில வேளைகளில் எப்போது பிரசவ வேதனை தொடங்குகிறது என்று கண்டுபிடிப்பது சிரமம். உங்களை மருத்துவ மனையில் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் அந்த வலி தொடரவில்லையானால், கருப்பை வாயில் விரிவடையவில்லை என்றால், வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்! இதுதான் பொய் வலி."

அப்படியானால் உண்மையான வலி?


கருப்பை சுருங்கி, அதன் வாய் மெலிதாகி விரிவடையும்போதுதான் உண்மையான வலி உண்டாகிறது. பெண்களின் உடலில் அதற்கான அறிகுறிகள் தாமாகவே தெரிய ஆரம்பிக்கும். பிறப்புறுப்பிலிருந்து சற்றே ரத்தம் கலந்த சளி வெளியாகும். இது வலி தோன்றுவதற்கு ஒரு நாளோ, ஒரு சில நாட்களோ முன்னால் நிகழும். வலி தொடங்கிவிட்டது என்பதை அறிய, இரண்டு அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.



தொடர்ந்து, இறுக்கமான பிடிப்பு போல் 30 செகண்டுகளுக்கு நீடித்து, கருப்பை வாய் மெலிதாகித் திறக்கும். அல்லது நீர்க்குடம் உடையும்.


இரண்டில் ஒன்று நிகழ்ந்தாலும், உடனே மருத்துவரை அணுகவும்; அல்லது மருத்துவருக்குச் சொல்லவும். வலி தொடங்கிவிட்டது என்பதை உணர்ந்தால், டாக்டர் சொல்லும் வரை, எந்த உணவும் உண்ண வேண்டாம். நீரும் அருந்தாதீர்கள்."


அப்புறம்?

தொடக்ககால பிரசவ வலியில் கருப்பைவாய் மூன்று சென்டிமீட்டர் வரை விரிவடையும். மூன்றிலிருந்து நான்கு சென்டி மீட்டர் வரை விரிவடையும்போது தான் நிஜமான வலி தொடங்குகிறது. அது அடிக்கடியும், இறுக்கமாகவும் இருக்கும். வேகமாகவும் இருக்கும். சராசரி பெண்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு சென்டி மீட்டர் வீதம் விரிவடையும். வலி அதிகமாக இருக்கையில், முன்னரே பிரசவ அனுபவம் இருந்தால் இது இன்னும் வேகமாக இருக்கும். கருப்பை வாய் முழுவதுமாக விரிவடைந்தவுடன், நீங்கள் குழந்தையைப் பிறப்புப்பாதையில் தள்ளிவிட உங்களை முக்கச் சொல்வார்கள். குழந்தை வெளியே வந்தபின், பிளசன் டாவும் வந்துவிடும்."



சிக்கல்கள் ஏதேனும் இருக்குமா, டாக்டர்?


உங்கள் பிரசவம் நார்மலாக இருக்க, உங்கள் மகப்பேறு மருத்துவரின் அனுபவம், திறமை மற்றும் கவனமான கண்காணிப்பு ஆகியவை இருக்க வேண்டும். உங்கள் இயக்கம், கருப்பைச் சுருக்கம், குழந்தையின் இதயத் துடிப்பின் எண்ணிக்கை பிரசவத்தின்போது கவனிக்கப்படும். அப்போதுதான் பிரசவத்தில் சிக்கல் ஏதும் இருந்தால், உடனே தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும்.‘


(பருவம் தொடரும் )
எழுத்தாக்கம் : சாருகேசி

நன்றி - கல்கி, அமிர்தம் சூர்யா, கதிர்பாரதி, புலவர் தருமி

Tuesday, March 20, 2012

புருசன்மார்களிடம் பொண்டாட்டிகள் கேட்க விரும்பும் கேள்விகள்



பொண்டாட்டிகளிடம் புருசன்மார்கள் கேட்க விரும்பும் கேள்விகள்-னு ஒரு பதிவை போட்டாலும் போட்டுத் தொலைச்சேன்..,  மெயிலிலும், போன்லயும் மகளிர் அணிகள் குமுறி எடுத்துட்டாங்க. எப்படி இப்படி ஒரு போஸ்ட் போடலாம்ன்னு. அதை எப்படியோ தெரிஞ்சுக்கிட்ட என் வீட்டம்மாவும், உனக்கு எம்புட்டு தெகிரியம் இருந்தா இப்படி ஒரு போஸ்ட் போடுவே சோறும் கிடையாது, ஒண்ணும் கிடையாது வெளி திண்ணைல போய் படுய்யான்னு சொல்லி வெரட்டி விட்டுட்டாங்க.நான் வீட்டுக்குள்ள போக வேண்டி புருசன்மார்களிடம் பொண்டாட்டிகளிடம் கேட்க விரும்பும் கேள்விகள்ன்னு இந்த போஸ்ட்டை போடுறேன்(அப்பாவி ஆண்கள்லாம் என்னை மன்னிச்சுடுங்க..).

1. கல்யாணம் நிச்சயமான புதுசுல பர்த்டே, லவ்வர்ஸ் டே, வுமன்ஸ் டேன்னு ஏதேதோ சாக்கு சொல்லி வீட்டுக்கு வருவீங்க. ஆனால், கல்யாணம் ஆகிட்டாலோ எங்க பர்த்டே கூட மறந்து போகுதே! நிஜமாவே எங்களைத்தான் பார்க்க வருவீங்களா? இல்லை மச்சினிச்சியை பார்க்க வந்தீங்களா?

2. மீட்டர் 25ரூபாய்க்கு மேல துணி எடுத்து சட்டை போடாத கஞ்சூஸ் நீங்க, மாமனார் துணி எடுக்கும்போது மட்டும் பார்க் அவென்யூ சர்ட்டும், ரேமாண்ட் ஃபேண்டும் தவிர வேறேதும் போடாத மாதிரி சீன் போடுறிங்களே எப்படி?

3.உங்க வீட்டு விசேஷத்துக்கு மட்டும் ஒரு வாரத்துக்கு லீவ் கிடைக்குது. ஆனால், எங்க வீட்டு விசேசத்தன்னிக்கு மட்டும் ஆடிட்டர் வந்துடுறார், இண்டெர்வியூ, மீட்டிங்க் ஏதாவது  வந்துதுடுதே அதெப்படிங்க?

4. உங்க வீட்டு விசேசத்துல வாசல்ல வாழைமரம் கட்டுறது முதற்கொண்டு , மிச்சம் மீதி மளிகை சாமான் வண்டில ஏத்தி வீட்டுக்கு கொண்டு வந்து இறக்கும் வரை மாடா வேலை செய்யும் நீங்கள், எங்க வீட்டு விசேசங்களில் மட்டும்  டீக்கா டிரெஸ் பண்ணிக்கிட்டு கால் மேல் கால் போட்டுக்கிட்டு உக்காந்துக்கிட்டு மாப்பிள்ளை முறுக்கு காட்டுறீங்களே  அது எப்படிங்க?



5. உங்க வீட்டு விசேசங்களுக்கு சீர் செய்ய மட்டும் லோன் போடாம, சீட்டு பணத்தை உடைக்காம 25,000 கூட பணம் வருது. ஆனால், எங்க வீட்டு விசேசத்துக்கு சீர் செய்யறதுக்கு மட்டும், இன்கம் டாக்ஸ், மன்த் எண்ட் வந்து 1001க்கு மேல செய்ய முடியாம போய்டுதே எப்படிங்க ?




6. உங்க அக்கா பிள்ளைங்க, தம்பி பிள்ளைங்க கோடை விடுமுறைக்கு வந்து டி.வி, வாசிங்க் மெசின், ஏசிலாம் ரிப்பேர் செஞ்சு 1000, 2000ன்னு தண்டம் அழுதாலும் குழந்தைங்கன்னா அப்படிதான்மான்னு சொல்லிட்டு, எங்க அக்கா பிள்ளையோ, அண்ணன் பிள்ளையோ வந்து ஒரு 10ரூபாய் பொம்மையை உடைச்சுட்டால்கூட வானரப்படைகள்ன்னு திட்டுறிங்களே எப்படிங்க?

7. கம்மல் வாங்கி தாங்க, செயின் வாங்கி தாங்கன்னு கேட்டால் மட்டும் வானத்துக்கும் பூமிக்கும் எகிறி குதிக்கும் நீங்க வீடு கட்ட, வண்டி வாங்கும்போது பணம் பத்தலை உன் செயினை தாயேன் கொலுசை தாயேன்னு ஒண்ணுமே தெரியாத அப்பாவி போல வந்து நிக்குறிங்களே எப்படி?

8. புடவை எடுக்கும்போது 500 ரூபாய்க்கு மேல புடவை எடுத்தால் முகத்தை தூக்கி எரவானத்துல வச்சுக்கிட்டு, எங்காவது கிளம்பும்போது எங்க ஆபீஸ் மேனேஜர் வீட்டு விசேசம் இப்படியா சாயம் போன சேலை கட்டிக்கிட்டு வருவே...,ன்னு  வழியெல்லாம் திட்டிக்கிட்டே வருவீங்களே. காஸ்ட்லியா புடவை எடுத்துக்குடுக்காத உங்களுக்கு வெட்டி பந்தா மட்டும் ஏங்க?

9. ஒருமணி நேரம் புடவை கட்டி, மேக்கப் போட்டு உங்களோடு வந்தாலும் அழகா இருக்கு, உன் நிறத்துக்கு எடுப்பா இருக்குன்னு சொல்லாத நீங்க பார்த்த பத்து செகண்டுக்குள் இந்த புடவை உங்களுக்காகவே தயாரிச்ச மாதிரி இருக்குங்க. இந்த மயில் டிசைன்  அழகுன்னு டைப்பிஸ்ட்டுக்கிட்ட ஜொள்ளு வழிய வழிய சொல்றிங்களே எப்படிங்க?


10. உங்க வீட்டுல இருந்து யாராவது வந்தால், லீவ் போட்டு ஊரை சுத்தி காட்டி, ஊரு கதை, உலகத்து கதைலாம் பேசறீங்க. ஆனால், எங்க வீட்டுல இருந்து யாராவது வந்தால் மட்டும் ஆபீசுல மீட்டிங்க், எம்டி வந்துட்டான்ன்னு சொல்லி ராப்பிச்சைக்க்காரன்கூட தூங்கினப்பின் வர்றீங்களே அதெப்படிங்க?





11.உங்களுக்கு சின்னதா தலைவலி வந்தால்கூடா ஆ, ஊன்னு கத்தி ஊரையே கூட்டி, பொழுதன்னிக்கும் படுத்து ரெஸ்ட் எடுக்கும் நீங்க..., எங்களுக்கு உடம்பு முடியாதப்ப ஃப்ரெண்ட்சை கூட்டி வந்து ஒரு சாம்பார், ரசம், ஒரு பொறியல், அப்பளம் மட்டும் செஞ்சுடேன். வேற எதும் வேணாம்ன்னு உங்களால் மட்டும் சொல்ல முடியுதே எப்படிங்க.


12. நீங்க ரெண்டு வீட்டுக்கு முன்னாடி வரும்போதே உங்க தொப்பை நம்ம வீட்டு வாசல்ல வந்து நிக்குறதை மறந்து.., எங்க ஆபீஸ் ஸ்டெனோ ஸ்லிம்மா சூப்பரா இருக்கா. நீயும் இருக்கியேன்னு பூசுனாப்புல குஷ்பூ போல இருக்கும் எங்களை கிண்டல் பண்றீங்களே எப்படி?


13. நண்பன் ரொம்ப நாள் கழிச்சு ஊருக்கு வந்திருக்கான் அதுக்கு பார்ட்டின்னு சொல்லி ராத்திரி முச்சூடும் பார்லயே பழியா கிடந்துட்டு, கடைத்தெருவுல காலேஜ் மேட்டை பார்த்து ஹாய் பார்த்து ரொம்ப நாளாச்சுடின்னு சொல்லும் தோழிக்கிட்ட பேசக்கூட விடாம பஸ் போய்டும், கிரிக்கெட் மேட்ச் இருக்குன்னு சொல்றிங்களே எப்படிங்க.


14. பொழுது போகாம சீரியல் பார்க்குற எங்களை குறைச் சொல்லி, ரிமோட்டை பிடுங்கி ஒரு நியூஸ் சேனல் விடாம பார்த்துட்டு, அப்பா இப்போ தமிழக கவர்னர் யார்ப்பா?ன்னு குழந்தை கேட்கும் கேள்விக்கு  ரோசையாவோ? சுர்ஜித் பர்னாலாவோன்னு நினைக்குறேன். எதுக்கும் அம்மாவை கேட்டுக்கோன்னு சொல்றீங்களே, நிஜமாவே நியூஸ்தான் பார்த்தீங்களா? இல்லை நியூஸ் வாசிக்குற லேடீசை பார்த்திங்களா?


15. பொழுதன்னிக்கும் ட்விட்டர், விடியோ சாட், ஆடியோ சாட், ஃபேஸ்புக், பிளாக், பஸ்ன்னு நெட்டுல சுத்திக்கிட்டு...,  ஸ்கூல்ல போய் அஞ்சாவது ஏ  செக்‌ஷன்ல படிக்குற குமாரை பார்க்கனும் சொல்ல பியூன் கூட்டி வரும் பையனை பார்த்து இது என் பையனில்லையேன்னு விழிக்க..  சார் உங்க பையன் பேரு சுகுமார்ன்னு அந்த வழியா வரும் கிளாஸ் டீச்சர் சொல்ற லட்சணத்துல குடும்பம் நடத்திட்டு..., பொண்டாட்டிகள்கிட்ட புருசன்மார்கள் கேட்க விரும்பும் கேள்விகள்ன்னு ஒரு பதிவை மனசாட்சி இல்லாம போட்டீங்களே எப்படிங்க?


http://farm1.staticflickr.com/9/15602667_877f52006a_z.jpg?zz=1

 டிஸ்கி - முதல் பாகம் படிக்காதவர்களுக்காக   http://www.adrasaka.com/2012/02/blog-post_4359.html?m=0

Friday, March 02, 2012

கோடம்பாக்கத்தின் முகமூடியை கிழிக்கும் சோனியா அகர்வால் - வாக்குமூலம்- வசனங்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgokPv0Ixb9CrWOrkkmqvvA7XxtzTcWOkk9bcCiGBAUtxfEawSEpF-ZG3FsaUJAe8ynYNZt-x-4kAHVkZIjuEOEiRNaM8SPadzwl9NxtlrveO1tFB6lF88OGbjh3GuScBxecrBFcAmYbcll/s1600/oru_nadigaiyin_vakkumoolam_posters_095.jpg

1. என்னோட ரிலேசன்ஸ், சுத்தி இருக்கறவங்க எல்லோருமே அவங்கவங்க சுயநலத்துக்காக என்னை யூஸ் பண்ணிக்கிட்டவங்க தான்..

-------------------------------------

2.எல்லாருக்கும் நல்லவனா வாழ யாராலும் முடியாது

-----------------------------------------

3. எல்லோருடைய மனசையும் சந்தோஷப்படுத்த தெரிஞ்ச எனக்கு என் மனசை சந்தோஷப்படுத்த வழி தெரியலையே?

---------------------------------

4. நான் தெரியாமத்தான் கேட்கறேன், ஊர்ல சந்தோஷமா இருக்கற எந்தப்பொண்ணாவது அப்போ அம்மா வீட்டுக்குப்போறாங்களா? ஏதோ புருஷன் போதைல இருக்கறப்ப ஒரு அறைவிட்டுட்டான்னா உடனே அம்மா வீட்டுக்கு ஓடிடறீங்களே? ஏன்?

--------------------------------------

5சினிமால  போராடறது மட்டும்தான் நம்ம பிழைப்பு.. வெள்ளாமையை ஆண்டவன் பார்த்துக்குவான்

---------------------------------------

6. சார்.. எப்படியாவது எனக்கு நடிக்க சான்ஸ் தாங்க சார்..

சாரி மேடம், நாங்க புதுசா யாரையும் யூஸ் பண்றதைல்லை, மீன் அறிமுகப்படுத்தறதில்லை

----------------------------------------------------

7. மேடம்.. ஆல்பம் இருக்கா?
ம்ஹூம்

 அல்பம்

-----------------------------------

8. யோவ் டைரக்டரே,எப்போ படம் ஸ்டார்ட் ஆகுது?

 அது தெரிஞ்சா அவர் சொல்ல மாட்டாரா?

--------------------------------------

9. அவர் 10 படம் ஹிட்ஸ் குடுத்து 2 படம் மட்டும் தான் ஃபிளாப் குடுத்திருக்கார்..

இந்த சினிமா ஃபீல்டு ஒரு படம் ஃபிளாப் குடுத்தாலே ஃபீல்டை விட்டு துரத்தி விட்டுடும்.. 

-------------------------------

10. உன் பேரென்னம்மா?

 அஞ்சலி

அந்த பேர்ல ஆல்ரெடி ஒரு நடிகை இருக்காங்க..

அப்போ நீங்களே வெச்சு விடுங்க

------------------------------------------ 

http://iclienttech.com/news1/1nov42.jpg

11. ஹீரோயின் பேரு ஆர் வர்ற மாதிரி  வெச்சிடலாமா?

நோ நோ அந்த வேலையை பாரதிராஜா குத்தகைக்கு எடுத்துக்கிட்டாரு

------------------------------------------

12. என் கதைக்கு இந்த பொண்ணு சரிப்பட்டு வருமா?

அப்போ உங்க படத்துல கதை இருக்கா?

------------------------------

13. ஏய்யா, ஆரம்பத்துலயே அண்ணா, அப்பான்னு செண்ட்டிமெண்ட்டா போட்டுத்தாக்கறாளுகளே,சரிப்பட்ட்டு வருமா?

ம் ம் ஸ்டார்ட்டிங்க் சரி இல்லை, ஆனா போக போக சரி ஆகிடும்

--------------------------------

14.சார்.. காலைல ஓக்கே சொன்னீங்க, இப்போ நாட் ஓக்கே சொல்றீங்க?

அதுதான்  சினிமா உலகம்..

------------------------------------


15.திர்பார்த்து ஏங்கிப்போறத விட  ஊருக்குப்போய்பொழப்பை பார்க்கலாம்  

 ----------------------------

16. இந்த உலகத்துல ஏதாவது  ஒரு பிளஸை இழந்தாத்தான் நாம நினைச்சதை அடைய முடியும்.. ஆனா சினிமா உலகத்துல மட்டும் நம்மையே இழந்தாத்தான் சான்ஸ்  கிடைக்கும்

------------------------------------------

17.எந்த அம்மாவும் தன் பெண் கிட்டே கேட்கக்கூடாத ஒண்ணை கேட்க வைக்குது இந்த சினிமா உலகம்

------------------------------ 
18. வாழ்க்கைல யாருமே தோல்வியை சந்திக்க தயாரா இல்லை

------------------------------
19. அங்கே பார்த்தியாமொத்த சினிமா உலகமே இங்கே தான் இருக்கு.. ஒருத்திக்கு மார்க்கெட் வந்துடக்கூடாதே, டேரா அடிச்சுடுவாங்களே?

----------------------------------

20. சார்  செக் இருக்கு , ஓக்கேவா?

 பாஸ் ஆகுமா?

------------------------------ 

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/01/Oru-Nadigaiyin-Vakku-Moolam-19.jpg

21. என்னைக்கு புரொடக்‌ஷன்   மேனேஜரையே உக்கார வெச்சுட்டாளோ அவ டாப்ல இருக்கான்னு அர்த்தம்

-------------------------------
22. ஏத்தி விட்டவங்களை இறக்கி விட்டு வேடிக்கை பார்க்கறதுதான்யா சினிமா உலகம்

----------------------------------

23.. வந்தோமா, 10 படத்துல நடிச்சு காசை பார்த்தோமா. ஒரு கோடீஸ்வரனை கல்யாணம் பண்ணுனோமா? ன்னு போய்க்கிட்டே இருக்கனும்

--------------------------------------

24. இன்னைக்கு ட்ரெண்ட்ல 4 வது வாரம் போஸ்டர் ஒட்டுனாலே படம் ஹிட்னு அர்த்தம்.. 50 நாள் ஓடி இருக்கு

--------------------------------

25. என் பொண்ணு பெரிய நடிகை ஆகறளோ இல்லையோ, என் மனைவி வாழ்க்கைல பெரிய நடிகை ஆகிட்டா

-------------------------------

26. சான்ஸுக்காக என்னை இழந்திருந்தாலும்  முத முறையா காதலுக்காக என்னை இழந்தேன்
அவன் கூட பழகுன்னு மட்டும் தானே சொன்னேன்..
கெட்டுப்போன்னா சொன்னேன்?

----------------------------------

27. என் மேலே உயிரையே வெச்சிருக்கேன்னியே..?

அதுனாலதான் உனக்கு ஒரு உயிரையே  கொடுத்திருக்கேன்

--------------------------------------------

28. டியர், என்னை நம்பு 2 வருஷம் கழிச்சு உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன்

ஓஹோ2 வருஷம் ஜாமீன் வாங்கிட்டியா?

-------------------------------

29. சினிமால நடிக்க, கிடைச்ச வாய்ப்பை தக்க வெச்சுக்க பல தப்பு செஞ்சிருக்கேன்

========================

30. என் வீட்டுக்க்குள்ளே இருக்கறவங்களுக்கு  என் பணம் தேவைப்பட்டுது, வெளீல இருக்கறவங்களுக்கு என் உடம்பு தேவைப்பட்டுது

------------------------------ 

http://1.bp.blogspot.com/-t47XzlEyI_U/TwiI6vAH_UI/AAAAAAAAdFE/PUtDUz2ufIM/s1600/Nicole.jpg

31.  அவளைப்பாரு.. நீயும் பெத்து வெச்சிருக்கியே அரிசி மூட்டை மாதிரி ஒரு பொண்ணு

 யோவ், நீதான்யா அவளை பெத்தே

-------------------------

32. மந்திரிக்கு ரவுடிங்க தேவைப்பட்டாங்க, அந்த ரவுடிக்கு என் உடம்பு தேவைப்பட்டுது

-----------------------------

33.  எங்கம்மாவும் ஒரு பொண்ணுதானே? ஏன் என்னை ஒரு பொண்ணா பார்க்கலை?

---------------------------

34. எங்களை மாதிரி அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ்க்கு சான்ஸ் கிடைக்கறதே பெரிசு

-------------------------------

35.  இப்பவே குடிக்க ஆரம்பிச்சுட்டாரே..

நீங்க மிச்சம் வெச்சதைத்தானே?

-------------------------

36. டைரக்ட் பண்ண வர்ற எல்லாருமே ஹீரோவா நடிக்க ஆசைப்படறங்களே, ஏன்?

கதை சொல்ல ஹீரோயின் வீட்டுக்கு வரச்சொல்றானுங்க, அங்கே போனா கதையும் கேட்கறதில்லை, ஹீரோயின் பெட்ரூம்ல இருந்து வெளில வர்றதும் இல்லை

-------------------------------

37. ஏற்கனவே உனக்கு கோனை வாய்.. இதுல கொட்டாவி வேற

--------------------------- 

38. அஞ்சலிக்கு அஞ்சலி செஞ்சுட்டு வருவாரு வெயிட் ப்ளீஸ்

------------------------

39. என் பேரை சொன்னதுக்குப்பிறகுமா முடியாதுன்னான்?

அதுக்குப்பிறகுதாங்க அவன் உங்களை மதிக்கவே இல்லை

-------------------------------

40. முடிவுக்கு வர முடியாத விஷயம்னு இந்த உலகத்துல எதுவுமே இல்லை

-------------------------

41. யோவ்,, ஃபேஸை பார்க்காம எங்கேயோ பார்க்கறே?

-------------------------- 


http://www.koodal.com/cinema/cine_interview/images/2011/punnagai-poo-geetha-649.jpg

42. சேட்டு.. ஏன் அப்படி பார்க்கறே?
சேட்டையா?

-------------------------

43. இந்தப்படம் பார்க்கற ஒவ்வொரு ஆடியஃன்சையும் படம் பாதிக்கும்
 
படம் பூரா உக்காந்து எவன் பார்க்கப்போறான்?

-----------------------

44. என் பொண்ணு = 10 அனுஷ்க்கா = 1தமனா

ம்க்கும் திங்க் ஷி = 12 கோவை சரளா

---------------------

45/ உனக்கு 1 தெரியுமா? ராமாயணத்துல ராவணன் வந்த பிறகுதான் கதை சூடு பிடிக்குது

-------------------------------------

46. ஏண்டி வாமிட் எடுக்கறே? வயிற்றுக்கு சேராததை சாப்பிட்டியா?
சேர்ந்ததாலதாம்மா வாமிட்


------------------------

47. ஆதிகாலத்துல இருந்தே அந்தரங்க வாழ்க்கையை தோண்டி பார்க்கறதுல மனிதர்களுக்கு ஆர்வம் அதிகம்

------------------------------

48.  ஒரு ஃப்லோல சொன்னதுக்காக ஃப்ளோர்ல வந்து நின்னு டார்ச்சர் பண்ணக்கூடாது

-----------------------------

49. அய்யரைப்பார்த்து நாள் குறி.. அவ குறிச்சுக்குடுத்ததை வெச்சு

---------------------------

50. உன் ஆட்டத்தை ஆடி முடிச்சிட்டியா?நான் வெறும் பொம்மை தானே?பொம்மலாட்டம் மாதிரி என்னை ஆட்டுவிக்கப்போறியா?

------------------------------ 

http://aniwebtv.com/wp-content/uploads/2012/02/punnaigai-poo-geetha.jpg

51. வார்த்தையால அவன் கிழிச்சான் கேமராவுக்கு முன்னால, வாழ்க்கையையே கிழிச்சே நீ கேமராவுக்குப்பின்னால 

------------------------

52.  அன்னைக்கு வறுமை மட்டும் தான் எனக்கு பிரச்சனையா இருந்தது, இப்போ எல்லாமே எனக்கு பிரச்ச்னைதான்

---------------------------------

53. நடிகைன்னா  மனசுல கர்வமும் உடம்புல திமிரும்  வரனும்

--------------------------

54. உனக்கு புதையல் குறியா தெரியுது, எனக்கு அது புதை குழியா தெரியுது

-------------------------------

55. நீ எல்லாருக்கும் தேவதையா தெரிஞ்சே, ஆனா உனக்கு வரம் தரும் தேவனே உனக்கு எதிரியா மாறிட்டான்

----------------------------

56. மத்தவங்களூக்குக்கூட என் மேல பரிதாபம் வருது, ஆனா என்னைப்பெத்தவங்களுக்கு என் மேல எதுவும் வர்லையே?

-------------------------------