Showing posts with label பி.சி.ஸ்ரீராம். Show all posts
Showing posts with label பி.சி.ஸ்ரீராம். Show all posts

Sunday, April 12, 2015

ஓ காதல் கண்மணி யில் ரைட்டர் ஜெயமோகனை சேர்க்காததற்கு கடல் டப்பா ஆனதுதான் காரணமா?- மணிரத்னம் ஓப்பன் டாக் பேட்டி

இயக்குநர் மணிரத்னம், படம்: உதயா
இயக்குநர் மணிரத்னம், படம்: உதயா
இந்தியத் திரையுலகின் ஈர்ப்பு சக்தி குறையாத இயக்குநர் மணிரத்னம். ‘கடல்’ படத்தை முடித்துச் சற்றே இளைப்பாறிய மணிரத்னம் மீண்டும் இளமை குறையாமல் ‘ஓ காதல் கண்மணி’ படத்தோடு ரசிகர்களைச் சந்திக்கிறார். இந்தச் சூழலில் அவரைச் சந்தித்தோம்.
‘ஓ காதல் கண்மணி’ படம் ‘அலை பாயுதே’ படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லலாமா?
சொல்லலாம். ஆனால் அதே சமயம் இன்றைய காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால் கதையின் போக்கும், கதாபாத்திரங்களும் வித்தியாசமாக இருக்கும். தற்போது இருக்கும் காலகட்டத்தில் இளைய சமுதாயத்துக்கு மத்தியில் இருக்கும் உறவுகளைப் பற்றி இப்படம் பேசும்.
இந்த படம் முழுக்க மும்பையை பின்னணியாகக் கொண்டது. இப்படத் தில் பாடல்கள் அதிகம். இருப்பினும் கதாபாத்திரங்கள் வாயை அசைத்து பாடும் பாடல்கள் இரண்டுதான். மற்றவை யெல்லாம் படத்தின் பின்னணியோடு இணைந்து வருகிறது. வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் உழைப்பு இதில் அதிகம்.
முன்னணி நடிகர்கள் பலரும் உங் களுடன் பணிபுரிய ஆவலுடன் இருக் கும்போது துல்ஹரை ஏன் இப் படத்தின் நாயகனாக தேர்வு செய்தீர்கள்?
‘வாயை மூடி பேசவும்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் துல்ஹரை முதலில் பார்த்தேன். மிகவும் இளமைத் துடிப்புடன் இருந்தார். அது எனக்கு பிடித்துப் போனது. இப்படத்தின் கதையை எழுதும் போது அவரை அழைத்து பேசினேன். பேசும்போதே மிகவும் எதார்த்தமான இளைஞராக அவர் எனக்கு தெரிந்தார். அதையும் மீறி அவர் ஒரு அற்புதமான நடிகர். இப்படத்தின் படப்பிடிப்பின்போதே ஒலிப்பதிவும் செய்திருக்கிறோம். துல்ஹர், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், லீலா சாம்சன் என அனைவருமே படப்பிடிப்பின்போது பேசியதுதான் படத்தில் இருக்கும். துல்ஹர் சென்னையில் இருந்தவர் என்பது இந்த விஷயத்தில் எங்களுக்கு உதவியது.
இப்படத்தில் நீங்கள் ஒரு கவிஞராகவும் வெளிப்பட்டிருக்கிறீர்களே?
கவிஞர் ஆக வேண்டும் என்பதற் காக இப்படத்தில் நான் பாடல் எழுதவில்லை. அந்தப் பாடலின்போது வைரமுத்து ஊரில் இல்லை. எங்களுக்கோ உடனடியாக ஒரு பாடல் தேவைப்பட்டது. உடனே நானும், ஏ.ஆர்.ரஹ்மானும் அமர்ந்து இப்பாடலை எழுதினோம். அவ்வளவு தான். இதற்கு முன்பே ‘அலைபாயுதே’ படத்தில் ‘என்றென்றும் புன்னகை’ பாடலையும், ‘ராவணன்’ படத்தில் ‘வீரா’ பாடலையும் நாங்கள் இதேபோல் சேர்ந்து எழுதியிருக்கிறோம்.
15 வருடங்களுக்கு பிறகு பி.சி.ஸ்ரீரா முடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் எப்படி இருக்கிறது?
15 வருடங்கள் இணைந்து பணி யாற்றாத உணர்வே இப்படத்தின்போது எங்களுக்கு ஏற்படவில்லை. பி.சி.ஸ்ரீராம் என்னுடைய படங்களுக்கு ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல, ஆலோ சகரும் கூட. அவருடைய எதிர் வினைகளை வைத்து நான் சொன்னது எப்படியிருந்தது என்பதை தெரிந்து கொள்வேன்.
காதல் என் பது தற்போது எப்படி மாறி இருப்பதாக நினைக்கிறீர் கள்?
காதல் அப்படியேதான் இருக்கிறது. ஆட்கள்தான் மாறியிருக்கிறார் கள். அபத்தமான காதல் என்பது பழைய காலத்திலும் இருந்தது, இப்போ தும் இருக்கிறது. அசாதாரணமான காத லும் அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது. அதில் எந்த வித்தியாசமும் இல்லை. காதலை வெளிப்படுத்தும் தன்மை என்பது இப்போது மாறி இருக் கிறது. பழைய காலங்களில் சமுதாயத் தில் இருந்த சூழ்நிலையால் காதலை வெளியே சொல்ல முடியாது. இப்போது அப்படியில்லை. மனதில் தோன்றியதை வெளியே சொல்ல முடிகிறது.
என்னுடைய காலத்தில் என் அப்பா ஒரு வார்த்தைச் சொன்னால் நான் மறு வார்த்தை பேச மாட்டேன். இப்போது குழந்தைகளை சொந்தமாக யோசிக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கிறோம். ஆகையால், அவர்களுக்கு தோன்றும் கருத்துகளை வெளிப்படையாக தெரி விக்கிறார்கள்.
உங்கள் படங்களுக்கு உரிய வர வேற்பு கிடைக்காதபோது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
வரவேற்பு பெறும்போது ஏற்றுக் கொள்வது போல, வரவேற்பைப் பெறாதபோதும் ஏற்கத்தான் வேண்டும். ரசிகர்களுக்கு பிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் படம் பண்ணுகிறோம். ஆனால் அதற்கு நேர்மாறாக படம் தோல்வியடைந்தால் அதை ஒப்புக்கொண்டுதானே ஆகவேண்டும்.
படத்தில் தப்பு இருக்கலாம், ஆனால் நான் என்ன நினைத்தேனோ அதை அடைந்திருக்கிறேனா என்பதுதான் முக் கியம். தப்பு செய்வதற்கு பயப்படாமல் தான் படம் பண்ணுகிறோம். தப்பு பண்ணி னாலும் மீண்டும் எழுந்து நடக்க வேண்டும்.
அனைவருக்குமே இறங்கு முகம் வரும், அதைப் பார்த்து பயப்படாமல் இருக்கவேண்டும். ஒரு படம் சரியாகப் போகவில்லை என்றால், எதனால் என்று கற்றுக் கொண்டு அதை அடுத்த படத்தில் திருத்திக்கொள்வேன் அவ்வளவுதான்.
காதலை மையமாக வைத்து இன்னும் எத்தனை படங்களை எடுக்கப் போகி றீர்கள்?
உலகத்தில் காதல் இல்லாமல் எதுவுமே இல்லை. கணவன் - மனைவி, அம்மா - மகன், அப்பா - மகன் என நிறைய பரிணாமங்களில் காதல் இருக்கிறது. ஆகையால், காதலை படமாக பண்ணுவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது.
‘கடல்’ படத்தில் எழுத்தாளர் ஜெய மோகனோடு பணியாற்றினீர்கள். இந்த படத்தில் அவருடன் ஏன் பணியாற்ற வில்லை?
சில படங்களுக்கு எழுத்தாளர்கள் தேவைப்பட மாட்டார்கள். ‘கடல்’ படம் கடற்கரையோர மக்களின் வாழ்க்கை யைச் சார்ந்த படம். அவர்களின் மொழி எனக்கு பழக்கம் இல்லை என்பதால் அவருடன் இணைந்து அப்படத்தை பண்ணினேன். ‘ஓ காதல் கண்மணி’ எனக்குத் தெரிந்த உலகம். அதனால் எனக்கு மற்றவர் உதவி தேவைப்படவில்லை.
தற்போது சமூக வலைதளத்தில் யார் வேண்டுமானாலும் படங்களை விமர்சனம் செய்யலாம் என்ற சூழ் நிலை வந்துவிட்டதே..?
வலைதளங்களில் வரும் விமர் சனங்களையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதுதான் இன்றைய சமூகம். முன்பு இந்த விமர்சனங்கள் டீக்கடையில் இருந்து வந்தன. ஏன் நானும், பி.சி-யும்கூட ஒரு குட்டிச்சுவரில் அமர்ந்து ‘யாருக்குமே சினிமா எடுக்க தெரியல. நாங்க எடுக்கிறோம்’ என்று பேசியிருக்கிறோம்.
இப்போது அதையே ட்விட்டர் தளத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான். முன்பு கருத்து சொல்வதற்கு எந்த வழிமுறையும் கிடையாது. இப்போது அதற்கு ஒரு தளம் கிடைத்திருக்கிறது.
சில இயக்குநர்கள் ஒரு படத்தின் காட் சியை அப்படியே தனது படத்திலும் உப யோகப்படுத்திக் கொள்கிறார்களே. இதைப் பற்றி தங்களுடைய கருத்து என்ன?
மற்றொரு படத்தின் காட்சிகளை அப்படியே தனது படத்தில் உபயோகிப்பது ஒரு மடத்தனம். ஒரு படத்தை பார்த்து, அப்படியே என் படத்தில் வைத்தால் நான் இதுவரை கற்றதே இல்லை என அர்த்தம்.
சினிமா வியாபாரம் இப்போது நிறைய மாறிவிட்டதே?
சினிமா வியாபாரம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. மாறி வருகிறது. இன்னும் மாறும். கொஞ்சம் கொஞ்சமாக தொழில்முறை மாறும் என தோன்றுகிறது. இன்றைக்கு சினிமா தொழில்நுட்பத்தில் நிறைய மாற் றங்கள் வந்துவிட்டன. அதேபோல தொழில்முறையும் மாறும். நானும், நீங்களும் படம் பார்க்கும் விதம் மாறிக் கொண்டிருக்கிறது. மொபைல் போனில் படம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். திரையரங்குக்கு வந்து படம் பார்க்க சிலர் விருப்பப்படுவதில்லை. இப்போது மக்களிடம் படத்தை எப்படி கொண்டு போய் சேர்ப்பது என்று நாங்கள் கற் றுக் கொள்ள வேண்டும். பெரிய தொழில் முறை மாற்றத்தின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
உங்கள் வீட்டில் இருக்கும் கதா நாயகன் என்ன சொல்கிறார்..?
(சிரித்துக் கொண்டே) ஐயோ வேண்டாம்.. நீங்கள் கேட்பவர் படித்துக் கொண்டிருக்கிறார்.

நன்றி - த  இந்து
ந்

Wednesday, February 11, 2015

ஷமிதாப் மைக் மோகன் -சுரேந்தர் கதையா? - த இந்து விமர்சனம்

வாய் பேச முடியாத டேனிஷ் (தனுஷ்) என்னும் இளைஞ னுக்கு சிறு வயதிலிருந்தே சினிமா மீது தீராத காதல். வாய்ப்பு தேடி மும்பைக்கு வருகிறார். அவரது நடிப்புத் திறமையைப் பார்த்து உதவி இயக்குநர் அக்‌ஷரா (அக்‌ஷரா ஹாசன்) உதவ முன்வருகிறார். ஆனால், பேசமுடியாத நடிகரை பாலிவுட் எப்படி ஏற்றுக்கொள்ளும்?
பேச இயலாதவர் இன்னொருவர் குரலால் ‘பேச’ தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. ஆனால் அதற்கு ஒரு குரல் வேண்டுமே? பல குரல் களைப் பரிசீலித்துத் திருப்தி அடை யாத அக்‌ஷராவும் டேனிஷும் மும்பை கல்லறைத் தோட்டத்தில் முதியவர் அமிதாப் சின்ஹாவின் (அமிதாப் பச்சன்) கம்பீரமான குரலைக் கண்டு பரவசம் அடைகிறார்கள். சினிமா கனவு நிறைவேறாமல் விரக்தியில் குடிகாரனாக அலையும் அமிதாபைச் சம்மதிக்கவைக்கிறார்கள். ஷமிதாப் என்ற பெயருடன் அறிமுகமாகிறார் டேனிஷ். அமிதாபின் கம்பீரக் குரலா லும் தன் நடிப்புத் திறமையாலும், ஒரே படத்தில் பெரிய நட்சத்திரமாகி விடுகிறார் ஷமிதாப்.
மூவரின் திறமையான நாடகத் தால் நிஜ வாழ்விலும் இந்த இரவல் குரல் தொடர்கிறது. வெற்றியும் தொடர் கிறது. கனவு போன்ற இந்த வளர்ச்சிக்குக் குறுக்கே வருகிறது ஈகோ யுத்தம். டேனிஷின் நட்சத்திர அந்தஸ்து தன் குரலால்தான் கிடைத் தது என்று அமிதாப் நினைக்க, தன் திறமையால் தான் எல்லாமே நடக்கிறது என டேனிஷ் மமதை கொள்ள, வெற்றிக் கூட்டணி உடைகிறது. டேனிஷின் நட்சத்திர பிம்பம் சரியத் தொடங்குகிறது. இருவரில் யார் ஈகோ ஜெயித்தது?
திரைக்கதை தனுஷை சுற்றி நகர்ந்தாலும் அமிதாபின் குரல்தான் படத்தின் நிஜக் கதாநாயகன்.
திரையுலகில் இருக்கும் போட்டி, பொறாமை, சுயநலம், நட்சத்திர போதை எனப் பல அம்சங்களையும் இப்படம் கையாள்கிறது.
தனுஷுக்கு அக்‌ஷராவின் உதவி கிடைக்கும் விதம், அவருக்கான மாற்று ஏற்பாடுகள் நடக்கும் வேகம் எல்லாம் மசாலா சினிமாவுக்கே உரிய சுதந்திரங்கள். படத்தின் ஆதார மையத்தை பாதிக்காததால் இவற்றை மன்னித்துவிடலாம். இரவல் குரல் என் னும் ரகசியத்தை மூவரும் காப்பாற்று வதற்கான காட்சிகள் சுவாரஸ்ய மானவை.
‘உன் எடையைவிட என் குரல் கனமானது’ என்று அமிதாப் கெத்து காட்டுவதும் மது, தண்ணீர் ஆகிய வற்றை வைத்துப் பேசும் வசனங் களும் அரங்கை அதிர வைக் கின்றன. டேனிஷுக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்படும் நெருக்கத்தின் போது டேனிஷும் அமிதாபும் பரிமாறிக் கொள்ளும் குறுஞ்செய்திகள் ரகளை. ஈகோ யுத்தம் மெல்ல மெல்ல முறுக் கேறிக்கொண்டே போகும் விதம் நம்பக மாக உள்ளது. இருவரின் பிரிவும் அதனால் இருவரும் படும் அவஸ்தை களும் சரியாகவே சித்தரிக்கப் பட்டுள்ளன.
படத்தின் முதல் பாதி விறுவிறுப் பாக, புத்துணர்ச்சியுடன் நகர்கிறது. இரண்டாம் பாதி திரைக்கதை அலுப்பை ஏற்படுத்துகிறது. உருக்க மான காட்சிகளை அமைப்பதில் வல்லவரான பால்கி தன் முத்தி ரையை முதல் பாதியில் நன்கு பதித் திருக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் உருக்கம் எல்லை மீறி மிகை உணர்ச்சியாகிவிடுகிறது. மனதை கனக்கச் செய்யும் முடிவுதான் நல்ல படத்துக்கு அடையாளம் என்று யார் சொன்னது?
எனினும் அமிதாப், தனுஷ் நடிப்பு, இளையராஜா இசை, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு ஆகியவை இந்த குறை களை மறக்கச் செய்துவிடுகின்றன. ‘சீனி கம்’ படத்தில் அத்தனை பாடல் களுக்கும் தனது பழைய தமிழ் டியூன் களை பயன்படுத்திய ராஜா, இதில் அப்படிச் செய்யவில்லை. இரண்டே நிமிடம் மட்டும் வரும் ‘ஆசைய காத்துல தூது விட்டு’ டியூன் தவிர, மற்ற பாடல்கள் புதுசு.
நடிப்பில் அசத்துகிறார் தனுஷ். உடல் மொழியால் பேசும் கலை அவருக்கு நன்கு வசப்படுகிறது. ஒரு வார்த்தைகூட பேசாமல் உணர்ச்சிகளை உணர்த்தும் காட்சிகள் அவரது நடிப்புத் திறமையைப் பறைசாற்றுகின்றன. அமிதாபை முதலில் சந்திக்கும்போது அவரிடம் நடித்துக் காட்டுவது, அவராலேயே அவமானப்படுவது, அவரைப் பிரிந்த பிறகு உணர்ச்சியைக் கொட்டுவது, உண்மையைச் சொல்லிவிட வேண் டும் என்பதற்கான காரணங்களை அடுக்குவது ஆகிய காட்சிகளில் அபாரம்.
பேசாமல் தனுஷ் ஸ்கோர் செய்ய, பேச்சின் மூலமாகவே அமிதாப் ஸ்கோர் செய்கிறார். தனக்கான அங்கீகாரத்தை எதிர்பார்த்து ஏமாறும் காட்சிகளிலும், தனுஷை சீண்டும் காட்சிகளிலும் பின்னியெடுக்கிறார். தன் குரலுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் தனக்குக் கிடைக்கவில்லையே என்று குமுறும் இடத்தில் மலைபோல உயர்கிறார். கடைசி காட்சியில் பேசாமலேயே நெகிழவைக்கிறார்.
இரண்டு வலிமையான நடிகர்களு டன் அக்‌ஷரா ஹாசன் (அறிமுகம்) தன் இருப்பை திரையில் வெற்றிகரமாகப் பதிவுசெய்திருக்கிறார். படத்தொகுப் பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக் கலாம்.
திரைக்கதைக்கு ஏற்ற நடிகர்களைத் தேர்வு செய்வது, நடிகர்களுக்காகத் திரைக்கதை அமைப்பது என்ற இரண்டு வகைகளில் ஷமிதாப் இரண்டாவது வகை. அபார நடிப்பு, பின்னணி இசை, ஒளிப்பதிவு ஆகியவை தொய்வையும் மிகையான காட்சிகளையும் மீறிப் படத்தை ரசிக்கவைக்கின்றன.

thanx - the hindu

  •  Ramesh Sargam at Deccan Chronicle Holdings Limited 
    வரவேட்கபடவேண்டிய புது முயற்சி. வித்தியாசமான திரை கதை. வாழ்த்துக்கள்.
    Points
    16840
    about 13 hours ago ·   (3) ·   (2) ·  reply (0) · 
       
    • ஹலோ, மைக் 1, மைக் 2, மைக் 3, ஓவர் ஓவர்...
      Points
      2395
      about 14 hours ago ·   (3) ·   (2) ·  reply (0) · 
      • நம்ம மோகன் (மைக்) சார் கத மாதிரிலா இருக்குது
        Points
        360
        about 16 hours ago ·   (5) ·   (1) ·  reply (0) · 
        • அப்படியே மோகன் - சுரேந்தர் விஷயம்.....
          about 18 hours ago ·   (5) ·   (0) ·  reply (0) · 
          • AS  
            நல்ல படம். கண்டிப்பாக.
            about 19 hours ago ·   (1) ·   (2) ·  reply (0) · 
            • Subhash  
              3 ah? Seriously?? Intha padathuku neenga tharalama 4.5 kudukalaam..
              about 22 hours ago ·   (10) ·   (11) ·  reply (0) · 
              • Subhash  
                3 ah? Seriously?? Intha padathuku neenga tharalama 4.5 kudukalaam..

              Sunday, February 16, 2014

              ஷங்கரின் 'ஐ' வெளியீடு - வீடியோ திட்டம்

              ஐ' படத்தினை விளம்பரப்படுத்த இயக்குநர் ஷங்கர் படம் உருவான விதத்தின் வீடியோவே போதுமானது என்று திட்டமிட்டு இருக்கிறார்.
              விக்ரம், ஏமிஜாக்சன், ராம்குமார், சுரேஷ் கோபி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில், தமிழ் சினிமாவில் உருவாகி வரும் மெகா பட்ஜெட் படம் 'ஐ'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய ஷங்கர் இயக்கியிருக்கிறார்.



              படத்தில் விக்ரம் என்ன லுக்கில் வருகிறார் என்பதை கூட ஷங்கர் வெளியிடவில்லை. இப்படத்தினைப் பற்றிய செய்திகள் எல்லாமே மர்மமாகவே இருக்கிறது. இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவிருக்கிறது. பிரம்மாண்ட அரங்கில் பாடல் காட்சி ஒன்றை காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.



              இந்நிலையில், படத்தினை விளம்பரப்படுத்த படம் உருவான வீடியோ பதிவே போதும் என்று திட்டமிட்டு இருக்கிறாராம் ஷங்கர். பேட்டிகள் எல்லாம் கொடுத்துவிட்டு, படம் உருவான விதத்தினை டிவி சேனல்களில் கொடுத்தாலே போதும், மக்கள் ஆச்சர்யப்பட்டு விடுவார்கள் என்று திட்டமிட்டு இருக்கிறாராம்.


              ஏனென்றால், விக்ரமின் உழைப்பு, பாடல்களுக்காக செட்கள் போடப்பட்ட விதம், பாடல்களுக்கு விக்ரமிற்கு போடப்பட்ட மேக்கப், சண்டைக் காட்சிகள் உருவான விதம் என எல்லாவற்றையுமே வீடியோவாக எடுத்திருக்கிறார்கள்.



              இந்த வீடியோ பதிவை பார்த்தாலே வியப்படைந்து விடுவார்கள். ஆகையால் பேட்டி கொடுத்துவிட்டு, இந்த வீடியோவை கொடுத்து விடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம்.

              a





              a


              a










              a